.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 19 November 2013

சுக பிரசவத்திற்கு உதவும் நவீன கருவி! -அர்ஜென்டினா கார் மெக்கானிக் அசத்தல்!

 

இப்போதெல்லாம் ஒரு ஆண்டில் பிரசவ நேர சிக்கல்களினால் பிறக்கும் குழந்தைகளில் 56 லட்சம் குழந்தைகள், 2,60,000 பெண்கள் இறக்கிறார்கள்.இந்நிலையில் அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். என்பவர் பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது என்பது விசேஷ் தகவல்.

அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். இவர் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்ட போது ஒயின் பாட்டிலின் உள்ளே கார்க் போய்விட்டது. ஆனால் பந்தயத்திற்காக ஜோர்ஜ் பாட்டிலின் உள்ளே பிளாஸ்டிக் பையை நுழைத்தபின் ஊதிப் பெரிதாக்கியதில் கார்க் பிளாஸ்டிக் பைக்குள் மாட்டிக் கொண்டு, இழுத்ததும் அழகாக வெளியில் வந்துவிட்டது.அன்று இரவு தூக்கத்திலிருந்து திடுமென விழித்த ஜோர்ஜ் தனது மனைவியிடம் சம்பவத்தை விவரித்த பின் குழந்தையை இந்த பிளாஸ்டிக் பை முறையில் வெளியில் எடுப்பது எளிதான பிரசவ முறையாக இருக்கும் என்று கூறினார்.அடுத்தநாள் காலையில் ஜோர்ஜ், அவரது நண்பருடன் ஒரு மகப்பேறு மருத்துவரை சந்தித்து புதிய கருவியை பற்றி கூறினார். அந்த மருத்துவர் ஜோர்ஜின் புதிய கருவி செயல்பாட்டை தனது மருத்துவமனையில் சோதனை செய்துபார்க்க உதவினார்.

இதையடுத்து அந்த மருத்துவர் யூடியூப் இணையதளத்தில் சோதனையை வெளியிட்டு பின் ஜோர்ஜை 2008ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் மகப்பேறு துறையின் தலைவர் டாக்டர் மரியோ மரியால்டி யை சந்தித்து பேசவைத்தார். காப்பி குடிக்கும் நேரத்தில் 10 நமிடங்கள் தன்னை சந்திக்க அனுமதி அளித்த டாக்டர் மரியோ கண்டுபிடிப்பை பார்த்து 2 மணிநேரம் ஜோர்ஜ் உடன் பேசினார்.

இதுகுறித்து டாக்டர் மரியோ கூறும்போது,”மகப்பேறு காலங்களில் பெண்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அவற்றில் ஒன்று பிரசவ நேரத்தில் குழந்தை கருப்பைக்குள் சிக்கிக்கொள்வது. இதனால் குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக வெளியில் எடுக்கப்படுகிறது. இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவர் என்ன பிரச்னை, அதை எப்படி சரிசெய்வது என்று சரியாக முடிவெடுக்கவில்லை என்றால் தாயும் சேயும் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

சிக்கலான பிரசவ நேரத்தில் உபயோகப்படுத்தும் வகையில் எளிய கருவி இருந்தால் மருத்துவர்கள் பிரசவங்களை எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்யமுடியும்.ஓடன் கருவி என்று பெயரிடப்பட்ட இந்த கருவி அர்ஜென்டினாவை சேர்ந்த ஜோர்ஜ் ஓ‘டன் என்ற 59 வயது கார் மெக்கானிக் கண்டுபிடித்தது. இதன்மூலம் எளிதாக பிரசவம் நடக்க கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் உதவ முடியும். இதில் கையால் பிடிக்கும் வகையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பை உள்ளது. உராய்வை குறைக்க லூப்ரிகன்ட் செலுத்தப்பட்ட இந்த பை காற்று நிரப்பும் வகையில் உள்ளது. இதன்மூலம் சிக்கலான பிரசவத்தில் குழந்தை வெளிவராத போது குழந்தையின் தலையை சுற்றி இந்த பிளாஸ்டிக் பையை வைத்து காற்றால் நிரப்பவேண்டும். இதனால் தலையை சுற்றி பிளாஸ்டிக் பை கெட்டியாக பிடித்துக்கொள்ளும், பின்னர் மெதுவாக வெளியில் இழுத்தால் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்படும்.

இதன் மூலம் மிக சிக்கலான பிரசவங்கள் கூட எளிதாக நடைபெறுகிறது.இந்த கருவியை உலக சுகாதார நிறுவனம் அர்ஜென்டினா கர்ப்பிணி பெண்களிடம் சோதித்துப் பார்த்ததில், சுகமான பிரசவம் நடந்துள்ளது. இதனால் சிசேரியன் அறுவை சிகிச்சைகள் குறையும். இந்த முறையை இந்தியா சீனா மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்த உள்ளோம். இதன்மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்ற முடியும். ஒரு ஆண்டில் பிரசவ நேர சிக்கல்களினால் பிறக்கும் குழந்தைகளில் 56 லட்சம் குழந்தைகள், 2,60,000 பெண்கள் இறக்கிறார்கள். இதைத் தயாரிக்க 50 டாலர்கள் ஆகிறது. இந்த கருவியை கனடாவை சேர்ந்த கிரான்ட் சேலஞ்சஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பென்டன் டிக்கின்சன் கம்பெனியுடன் சேர்ந்து தயாரிக்க உள்ளது. ஏழை நாடுகளில் இந்த கருவி அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும்”என்று அவர் தெரிவித்தார்.

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதில் அரசியல்?-தேர்தல் ஆணையத்திடம் புகார்!



இந்திய கிரிகெட் சாதனையாளரான சச்சின் கடந்த சனிக்கிழமை அன்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதே தினத்தில் அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்காக பாரத ரத்னா விருதின் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டதாக தெரிகிறது.மேலும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதால், பல்வேறு கட்சிகள் தங்களது தலைவர்களுக்கும் பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஜெய பாசிஸ் என்பவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.

இவர் அனுப்பிய புகார் கடிதத்தில் , “காங்கிரஸ் கட்சியால் சச்சின் ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இவருக்கு தற்போது பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சச்சினை பொறுத்தவரை அவருக்கு பல மாநிலங்களில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. தற்போது தேர்தல் நடக்கவிருக்கும் ராஜஸ்தான், டில்லி, மிசோராம், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலத்திலும் ரசிகர்கள் உண்டு. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் சச்சினுக்கு விருது வழங்கி கவவுரவத்திருப்பது சில ரசிகர்கள் மனதில் சற்று மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. எனவே விருது அறிவித்தது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.” என்று தெரிவித்துள்ளார்

RTI activist moves EC against Sachin Tendulkar getting Bharat Ratna

 *******************************************************

 An RTI activist Debashish Bhattacharya has written to the Election Commission of India (ECI) stating that granting of Bharat Ratna to Sachin Tendulkar is a violation of model code of conduct.

Quick draw in game 8 of FIDE World Championship!

 

The eighth game of the FIDE World Championship Match, sponsored by Tamil Nadu state and currently ongoing in Chennai, finished in draw after 33 moves of play.

The challenger and world’s top rated player Magnus Carlsen changed his opening strategy and went for 1.e4 this time. The defending champion Viswanathan Anand echoed Carlsen’s repertoire and defended with Berlin Ruy Lopez, to the surprise of everyone in the press room here in Chennai.

Carlsen does not like to enter the Berlin endgame often with white pieces, and instead played the less frequent 5.Re1. The resulting pawn structure is symmetrical but with more pieces on the board.

Only two months ago Carlsen had a similar position with black against Hikaru Nakamura in Saint Louis. In 2010 Carlsen and Anand already tested the system, with same colours, in Kristiansund and Nanjing. All these games were drawn.

After the massive exchanges on the open e-file, the game ended in a draw on 33rd move. Carlsen spent only 20 minutes for the whole game. The current score is 5-3 in favour of the challenger.


The players were subjected to doping test after the eighth game and that accounted for a mild delay in the arrival at the media hall. The tests were done by Dr Jana Bellin. FIDE to be part of the International Olympic Committee initiated doping tests from the Bled Olympiad of 2002.

In the Bled 2002 Olympiad, Chennai’s women grandmaster Meenakshi was tested for doping after a random pick.

Source:http://chennai2013.fide.com

ஆதார் அட்டை பின் விளைவுகள்..!

2020 ஆம் வருடத்தில் இருந்து ஒரு காட்சி..

ஆப்பரேட்டர் : ஹலோ.. பிஸ்ஸா ஹட்..

கஸ்டமர் : என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..?

ஆப்பரேட்டர்: முதல்ல உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..?

கஸ்டமர் :ஒரே நிமிஷம்.. என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610

ஆப்பரேட்டர்: ஸோ.. நீங்கதான் மிஸ்டர் சிங்.. நம்பர் 17 மல்லிகை தெரு காந்தி நகர்ல இருந்து கூப்புடுறீங்க.. உங்க வீட்டு நம்பர் 40942366, ஆஃபீஸ் நம்பர் 76452302 மொபைல் நம்பர் 0142662566. இப்ப நீங்க உங்க மொபைல்ல இருந்து எங்களுக்கு கால் பண்ணி இருக்கீங்க..

கஸ்டமர் : வாவ்.. இத்தனை நம்பரையும் எப்புடி சார் புடிச்சீங்க..? ஆப்பரேட்டர்: நாங்க மெயின் சிஸ்டத்தோட கனெக்ட்டடா இருக்கோம் சார்..

கஸ்டமர்: வெல்.. எனக்கு ஒரு இறால் பிஸ்ஸா ஆர்டர் எடுத்துக்க முடியுமா..?

ஆப்பரேட்டர்: என்னைக் கேட்டா அது வேணாம்னுதான் சொல்லுவேன் சார்..

கஸ்டமர் : வாட்..? எதுக்குங்க..?

ஆப்பரேட்டர்: உங்க மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்படி உங்களுக்கு ஹை பிபி இருக்கு.. அதுவுமில்லாம உங்களோட கொலஸ்ட்ரால் லெவலும் அதிகமா இருக்கு..

கஸ்டமர் : வாட்..? அப்ப நான் என்னதான்ய்யா சாப்புடுறது..?

ஆப்பரேட்டர்: எங்களோட லோ ஃபேட் ஹெக்கியன் மீ பிஸ்ஸாவை ட்ரை பண்ணிப் பாருங்க.. அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

கஸ்டமர் : எனக்கு புடிக்கும்னு உங்களுக்கு எப்புடிப்பா தெரியும்..

ஆப்பரேட்டர்: போன வாரம் நேஷனல் லைப்ரரில இருந்து பாப்புலர் ஹெக்கியன் உணவுகள்ன்ற புத்தகத்தை போன வாரம் நீங்க எடுத்திருக்கீங்க சார்..

கஸ்டமர் : மை காட்.. போதும்ய்யா.. அப்பன்னா நீங்க சொன்னதையே மூணு பிஸ்ஸா ஃபேமிலி சைஸ்ல குடுத்துருங்க..

ஆப்பரேட்டர்: நிச்சயமா சார்.. பத்து பேரு கொண்ட உங்களோட குடும்பத்துக்கு அது நிச்சயமா போதுமானதா இருக்கும்.. பில் அமௌண்ட் 2450 ரூபா சார்..

கஸ்டமர் : என் கார்டுலயே நான் பே பண்ணிறலாமா..?

ஆப்பரேட்டர்: இல்ல சார்.. நீங்க கேஷாத்தான் தர வேண்டி இருக்கும். உங்க கிரெடிட் கார்டு லெவலை நீங்க க்ராஸ் பண்ணிட்டீங்க. அது மட்டும் இல்லாம போன அக்டோபர்ல இருந்து 1,51,748 ரூபா க்ரெடிட் கார்டு பாக்கி வச்சிருக்கீங்க.. அதுல நீங்க கட்டாம விட்ட உங்க ஹவுசிங் லோனை நான் சேக்கலை..

கஸ்டமர் : சரி. அப்பன்னா உங்காளு வர்றதுக்குள்ள நான் பக்கத்துல இருக்குற ஏடிஎம்முக்கு போயி கேஷ் எடுத்து வச்சுர்றேன்..

ஆப்பரேட்டர்: அதுவும் முடியாது சார்.. இந்த ரெக்கார்டுபடி உங்க ஏடிஎம் ஓவர்டிராஃப்பட்ட லெவலையும் நீங்க தாண்டிட்டீங்க..

கஸ்டமர் : ப்ச்.. நான் எப்புடியாவது கேஷ் ரெடி பண்ணி வச்சுர்றேன்.. நீங்க பிஸ்ஸாவை அனுப்புங்க.. எவ்வளவுவ நேரத்துல வரும்..?

ஆப்பரேட்டர்: 45 நிமிஷம் ஆகும்.. அவ்வளவு நேரம் வெய்ட் பண்ண முடியாதுன்னா உங்கக பைக்ல வந்து நீங்களே கூட வாங்கிட்டு போயிறலாம் சார்..

கஸ்டமர் : வாட்..?

ஆப்பரேட்டர்: எங்க சிஸ்டத்துல இருக்குற தகவல்படி உங்ககிட்ட ஒரு பைக் இருக்கு. அதோட நம்பர் 1122 சார்.. கஸ்டமர் : ?? (இந்த படுபாவிக என் பைக் நம்பரை கூட தெரிஞ்சு வச்சிருக்கானுகளே..)

ஆப்பரேட்டர்: வேற எதாவது வேணுமா சார்..?

கஸ்டமர் : ஒண்ணும் வேணாம்ப்பா.. நீங்க விளம்பரத்துல சொன்னா மாதிரி அந்த மூணு ஃப்ரீ கோக் பாட்டிலையும் சேத்து அனுப்பிருவீங்கள்ல..?

ஆப்பரேட்டர்: நார்மலா குடுப்போம் சார்.. ஆனா உங்க மெடிக்கல் ரெக்கார்டுப்படி உங்களுக்கு சுகர் இருக்கு.. அதனால உங்க ஹெல்த்தை மனசுல வச்சு நாங்க அந்த ஆஃபரை உங்களுக்கு தரமுடியாது. சாரி சார்..

கஸ்டமர் : ***%&$%%### You $##$%%@!))) (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை ரீப்ளேஸ் செய்து கொள்க)

ஆப்பரேட்டர்: சார்.. வார்த்தைகளை கவனமா பேசுங்க சார்.. இப்புடிதான் ஒரு போலீஸ்காரரை கெட்ட வார்த்தைல திட்டினதுக்காக 2012 மார்ச்ல உங்களுக்கு ரெண்டு மாச சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் கிடைச்சதுங்குறதை மறந்துறாதீங்க..

கஸ்டமர் : (மயக்கம் போட்டு விழுகிறார்) படித்துப் பாரக்கும்போது இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் ஆதார் அட்டை வினியோகிக்கும் அரசின் உள் நோக்கம் இதுதான்..

ஒரு அப்பாவும், 4 வயது மகனும்!

 

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

 அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..?

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top