.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 12 November 2013

மாரடைப்பு ஏற்படுவதை முன்னரே கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன் தொழில்நுட்பம்!

நாம் நெஞ்சு வலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று நினைக்கும் அளவுக்கே மருந்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கெற்ப உரிய மருந்துக்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.

nov 12 - tec heart

அதை விடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்பு தான் ஏற்பட்டு விட்டாதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.உடல் வலி, அழுத்தம், இறுக்கம், போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன. ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான நெஞ்சு வலி இருக்கும். ஆனால், நோய் தீவரம் அதிகம் இருக்க கூடும்.இந்த நிலையில் மாரடைப்பு வரக்கூடிய நிலையில் ஒருவர் இருக்கிறாரா என்று கண்டுபிடித்து சொல்லக்கூடிய ஒரு வழியை ஏற்கனவே புற்றுநோயைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு ஸ்கேனிங் முறையின் மூலம் தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக எடின்பரோவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கதிரியக்கத்தை வைத்துக் கண்டறியும் இந்த தொழில்நுட்பம், இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஆபத்தான பொருட்கள் அடைந்து கிடந்தால் அவற்றை ஒளிர வைத்து அதிகக் கூர்மையுள்ள ஸ்கான்களின் மூலம் அவைகளை மருத்துவர்கள் பார்க்க உதவுகிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.மாரடைப்பு ஏற்பட்ட 40 பேர்கள் மீது நடத்தப்பட்ட பரிசோதனைகளில் , இந்த ஸ்கேன், 37 நோயாளிகளின் இதயத்தில் சேதம் ஏற்பட்டிருந்ததைக் காட்டியது குறிப்பிடத்தக்கது .

Heart disease health centre

**********************************************


1th November 2013 – University of Edinburgh researchers have developed a new scanning technique that could help identify people who are at a high risk of having a heart attack.A PET- CT scan is used along with a radioactive tracer called 18F- sodium fluoride or 18F-NaF. This is already in use for bone scans, but is now showing promising results for heart patients after a small study.

நேருவிற்கும் பட்டேலுக்கும் இடையே விருப்பும் வெறுப்பும் கலந்த உறவே இருந்து வந்தது.

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் பற்றி சமீப காலமாக பரவலாக பேசப்படுகிறது. படேலின் கொள்கைகளுக்கு உண்மையான வாரிசு யார் என்ற விவாதத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு அரசியல் மற்றும் மதவாத கோஷங்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. உண்மையில் நேருவும் படேலும் வெவ்வேறு தனித்தனியான கொள்கைகளை, தன்மைகளை, கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாடு அடிப்படையானது.

                                  

நவீன இந்தியாவை உருவாக்க காங்கிரசை கட்டுப்பாடுள்ள ஜனநாயக அமைப்பாக மாற்ற வேண்டியது அவசியம் என்று படேல் விரும்பினார். அதன் முதல் கட்டமாக தனியாக உறுப்பினர்கள் கட்சி அமைப்பு மற்றும் திட்டம் கொண்டிருப்பவர்களை காங்கிஸ் கட்சியின் உறுப்பினர்களாக அனுமதிக்கும் இரட்டை உறுப்பினர் கொள்கையை எதிர்த்தார். இந்த இரட்டை உறுப்பினர் முறையைத் தடை செய்யும் தீர்மானத்தை 1948ல் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் நிறைவேற்ச் செய்தார் படேல். இதனால் காங்கிரசின் ஒரு அங்கமாக இருந்து வந்த காங்கிரஸ் சோசலிச கட்சி காங்கிரசிலிருந்து விலக நேர்ந்தது. இது நேருவிற்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இதனால் கட்சியை மீண்டும் பலப்படுத்த நேரு தொடர்ந்து முயற்சித்தார்.

1950ல் பட்டேலின் மரணத்திற்கு முன் காங்கிரஸ் தலைமை பொறுப்பை கைப்பற்ற கட்சிக்குள் தீவிர போராட்டமே நடைபெற்றது. இதனால் கட்சி தலைவர் பொறுப்பிற்கு நடைபெற்ற தேர்தலில் பட்டேல் ஆதரித்த புருஷோத்தம் தாஸ் தான்டனுக்கு எதிராக ஜெ.பி.கிருபாளினியை தனது தரப்பு வேட்பாளராக நேரு ஒருதலைபட்சமாக அறிவித்தார். தான்டன் விஷயத்தில் நேருவிற்கும், பட்டேலுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு வெளிச்சத்திற்கு வரத் துவங்கியது. இதன் பிறகு தான்டனை நேரு தொடர்ந்து பல்வேறு விதங்களில் விமர்சித்து வந்தார். டில்லியில் நடைபெற்ற அகதிகள் மாநாட்டில் தான்டன் கலந்து கொண்டதையும் நேரு கடுமையாக விமர்சித்தார். நேரு கையாண்ட இந்த போலி மதசார்பின்மை, கட்சியின் கொள்கைகளுக்கும் பண்புக்கும் எதிராக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்படாமல் பல சமயங்களில் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது.

கட்சி தலைவராக தான்டன் தேர்வு செய்யப்பட்டால் தான் காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருந்து விலகி விடப் போவதாகவும் நேரு மிரட்டல் விடுத்தார். இறுதியாக தலைவர் தேர்தலில் தான்டன் 1306 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நேரு நிறுத்திய கிருபாளினியால் 1092 ஓட்டுக்கள் மட்டுமே பெற முடிந்தது. சொன்னபடி நேருவும் கட்சியில் இருந்து விலகவில்லை.

பட்டேலின் மரணத்திற்கு பின் கட்சிக்குள் இருந்த ஜனநாயக கட்டுப்பாடு காணாமல் போனது. நேருவின் ஆதரவாளரான எஸ்.கே.சின்கா பீகாரின் முதல்வராக்கப்பட்டு காங்கிரஸ் காரிய கமிட்டியிலும் இணைந்தார். பின்னர் நேருவின் நிர்பந்தத்தால் லோக்சபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தான்டனுக்கு எதிராக சக்ரவியூகத்தை நேரு கையாண்டார். அதன் விளைவாக காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருந்து விலக தான்டனுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது. இறுதியாக தான்டன் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார். ஆனால் பல்வேறு எதிர்ப்புக்களையும் மீறி தொடர்ந்து 4 ஆண்டுகள் தலைவர் பதவியில் தான்டன் தொடர்ந்தார்.

நேருவிற்கும் பட்டேலுக்கும் இடையே விருப்பும் வெறுப்பும் கலந்த உறவே இருந்து வந்தது. அஜ்மீர் வகுப்புவாத கலவரம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளின் மூலம் நிரூபணமாகி உள்ளது. ஷங்கர் பிரசாத்தை தலைமை செயலராக நியமிக்க பட்டேல் உறுதியுடன் இருந்தார். ஆனால் நேரு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன் பின்னர் ஹச்.வி.ஆர்.ஐயங்காரை தற்காலிக செயலாளராக நியமித்தார். இதுவே இவர்கள் இருவருக்கிடையேயான கொள்கைகளுக்கிடையே மோதலாக உருவானது. சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்காக சட்ட ஒழுங்கை பற்றி கவலைப்படாமல் சிறுபான்மையினருக்கு அதிக சலுகை வழங்க வேண்டும் என நேரு வலியுறுத்தினார். மதக்கலவரங்களின் போது பயங்கரவாதிகள் என சிறுபான்மையினரை கைது செய்ய நேர்ந்தால் அவர்களுக்கு இணையாக இந்துக்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் நேரு தெரிவித்தார். இதனை பட்டேல் ஏற்றுக் கொள்ளவில்லை. இவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மகாத்மா காந்தியிடம் ராஜினாமாவை அளித்தனர். ஆனால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் வேறு வழியின்றி இருவேறு கொள்கைகளைக் கொண்ட இருவரும் ஒரு விசித்திர கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தினர்.

இந்திய வரலாற்று புத்தகங்களிலும், வரலாற்று குறிப்புகளிலும் இதுபோன்ற வேற்றுமைகள் மறைக்கப்பட்டும், புறம்தள்ளப்பட்டும் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரே குடியுரிமை உள்ள ஒரே நாடாக இந்தியாவை உருவாக்குவோம் என்று அரசியல் நிர்ணயசபை உறுதி அளித்திருந்தது. ஆனால் நேருவின் குறுகிய நோக்கத்தால் அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. அவர் தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் சிறுபான்மையினர்-பெரும்பான்மையினர் என்ற வாத அடிப்படையில் ஓரங்கட்டினார். இத்தகைய போலி மதசார்பின்மை கொள்கை காங்கிரசில் புதிய தலைவர்கள் உருவாவதை தடுத்தது. இந்த போக்கு குறித்து அன்றைய காங்கிரஸ்காரர் டி.பி.மிஸ்ரா கூறுகையில், “களிமண்ணில் இருந்து தலைவர்களை உருவாக்கினார் காந்திஜி; ஆனால் நேருவின் தலைமையோ அந்த தலைவர்களை வெறும் ஜடங்கள் ஆக்கிவிட்டது” என தெரிவித்துள்ளார்.

‘கொக்கைன்’ மற்றும் ஹோமோ மோகத்தில் வளர்ந்தவர் ஒபாமா!

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அவரது பள்ளித் தோழி மியா மேரி போப் என்பவர் கூறியுள்ளார்.

                              nov 2 - obama

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,”பள்ளியில் படிக்கும் போது தன்னை ஒரு வெளிநாட்டு மாணவனாக வெளிப்படுத்துவதில் ஒபாமா அதிக ஆர்வம் காட்டினார்.அவருக்கு பெண்கள் மீது அதிகமான ஈடுபாடு இருந்தது கிடையாது. மாறாக, தன்னை விட அதிக வயதுடைய வெள்ளை இன ஓரினச் சேர்க்கையாளர்களிடம் அதிக தொடர்பு வைத்திருந்தார்.

அப்போதெல்லாம், கொக்கைன் பழக்கமும் ஒபாமாவுக்கு இருந்தது. வயதான வெள்ளை இன ஓரினச் சேர்க்கையாளர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதன் மூலம் அவரிடம் தாராளமாக கொக்கைன் நடமாடுவதை என்னால் பின்நாட்களில் அறிந்துக் கொள்ள முடிந்தது.”என்று அவர் கூறியுள்ளார்.

Obama Was A Cocaine-Using Gay Hustler, Says Woman Who Claims To Have Been Hawaiian Classmate

*********************************************************
 

A woman who claims to have been a classmate delivered some bizarre claims about President Barack Obama in an interview.As Right Wing Watch first reported, Mia Marie Pope told right-wing preacher James David Manning that she believes that Obama was not only active within the gay community, but also a heavy cocaine user during his years in Hawaii.

தமிழரின் கலைகள் - களரிப் பயிற்று!

முன்னுரை:

சமூக அமைப்பில் பொழுதுபோக்கிற்காகவும் பிறரை மகிழ்விப்பதற்காகவும் தோற்றம் பெற்ற கலைகள் பலவாகும். அவற்றுள் சில உடல்உரத்தையும் வீரத்தையும் வளர்க்கும் வீரக் கலைகளாக வளர்ந்துள்ளன. இவ்வாறு வளர்ந்த வீரக் கலைகள் ”தற்காப்புக் கலைகள்” என்று வழங்கப்படுகின்றன. பண்டைக் காலங்களில் கோயில் திருவிழாக்களில் பிறரை மகிழ்விப்பதற்காகவும் போர்க்காலங்களில் எதிரியைச் சமாளிப்பதற்காகவும் இக்கலைகள் பயன்பட்டன. (க. இரவீந்திரன்: நாட்டுப்புறவியல் ஆய்வுக்கோவை). தற்காப்புக் கலைகளாக குத்து, சுருள், கட்டாரி, களரிப்பயிற்று, சிலம்பம், வர்மம் போன்றவைகள் இடம் பெறுகின்றன. இதில் களரிப்பயிற்று பற்றியும் களரியில் சிலம்பம், வர்மம் ஆகியவற்றின் பங்கு பற்றியும் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

களரிப்பயிற்று:

களரிப்பயிற்று என்ற கலை ”களரி” என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. களரி என்பது போர்ப்பயிற்சி செய்யும் களம் (கழகத் தமிழகராதி) என்றும் பயிற்று என்பது பயிற்றவித்தல் என்னும் பொருளில் அமைந்து ”களரி பயிற்றுவித்தல்” என்று வழங்கப்படுகிறது. களரி பயிற்றுவித்தல்” என்ற தமிழ்ச்சொல் ”களரிப்பயிற்று” என்று மருவி வழங்கப்படுவதாகக் கருதப்படுகிறது. (க.இரவீந்திரன் நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோவை) இது தமிழகத்தின் பழமையான வீரவிளையாட்டுக் கலையாகும். எதிரியைத் தாக்கவும் மடக்கவும் இக்கலை உதவுகிறது.

களரிப்பயிற்றின் வகைகள்:

மக்களிடையே இக்கலை வழங்கப்படும் நோக்கில் இரண்டு வகை, மூன்று வகை, நான்கு வகைப் பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். வடக்கன் களரி, தெக்கன் களரி, என இரண்டு வகைப் பிரிவுகள் உள்ளன. (க.இரவீந்திரன்: நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோவை). வடக்கன் களரி, தெக்கன் களரி, மத்திய களரி என மூன்று வகைப் பிரிவுகள் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர் (கோபுடா எஸ்.கிருஷ்ணமூர்த்தி உலக தற்காப்புக் கலைகள்). வடக்கன் களரி, தெக்கன் களரி, கடத்தநாடன் களரி, துளுநாடன் களரி என நான்கு வகைப் பிரிவுகள் இருப்பதாகக் களப்பணித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் திருவிதாங்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெக்கன் களரி உருவானதாகவும் கேரளாவில் மலபார், கோகர்ணம் போன்ற பகுதிகளில் வடக்கன் களரி உருவானதாகவும் குறிப்பிடுகின்றனர். கோட்டயம், திருச்சூர் போன்ற பகுதிகளில் தெக்கன் களரி மற்றும் வடக்கன் களரி கலந்த பயிற்சி நடைபெறுவதாகத் தெரிகிறது. இதை மத்திய களரி என்று வழங்குகின்றனர். இக்கலையை முற்காலங்களில் சத்திரியர்களும் போர் வீரர்களும் அரச குடும்பத்தினரும் கற்றுள்ளனர். நாளடைவில் சாதி மத அடிப்படை இல்லாமல் அனைத்து மக்களும் கற்று வருகின்றனர்.

களத்தின் அமைப்பு:

களரிக் களமானது 42 அடி நீளமும் 21 அடி அகலமும் சுற்றிலும் 9 அடி உயரத்திற்கு மதில் சுவர் கட்டப்பட்டதாகவும் இருக்கும். 42 அடி நீளமும் 21 அடி அகலமும் கொண்ட களம் தரை மட்டத்திற்குக் கீழ் அமைக்கப்பட்டு மேல் பகுதியில் தென்னங்கீற்றுக் கூரை வேயப்பட்டிருந்தால் அது ”குழிக் களரி” என்று அழைக்கப்படுகிறது. களரிக் களத்தின் தென் மேற்கு மூலையில் (கன்னி மூலை) கால் வட்ட வடிவில் ஏழு படிகள் அமைக்கப்பட்டிருக்கும் ஏழாவது படியில் களரி தெய்வத்தை (சிவன் அல்லது விஷ்ணு) வைத்து பூஜிப்பர். இந்தப் பகுதிக்கு ”பூத்தறை” என்று பெயர். இந்த படிகளின் இரு பக்கங்களிலும் ஆயுதங்களை நிரப்பி வைத்திருக்கின்றனர்.

பயிற்சியின் வகைகள்:

வாய்த்தாரி, மெய்த்தாரி, கோல்த்தாரி, அங்கதாரி, வெறுங்கைப் பிரயோகம் என்னும் பயிற்சி முறைகள் உள்ளன.

வாய்த்தாரி:

வாய்மொழியாகக் குரு பாடலைப் பாட அதற்கேற்றார் போல் சீடர்கள் சுவடுகள் வைத்துப் பயிற்சியினை மேற்கொள்வர். இவ்வாறு வாய்மொழியாகப் பாடும் பாடலை வாய்த்தாரி என்று வழங்குகின்றனர். இப்பாடல் பிறருக்குப் புரியாத அடையாள வார்த்தைகளால் அமைக்கப்பட்டிருக்கும். இதனைக் கீழ் வரும் பாடல் வரிகளால் அறிந்து கொள்ளலாம்.


”தொழுது மாறினு வச்சு வலத்து சவுட்டி
வலந்திரிஞ்நு இடது கொண்டு இடது காலின்றெ வெள்ள தொட்டு
கைநீர்த்தி கைக்கு நோக்கி கை நெற்றிக்கு வச்சு வணங்கியமர்ந்து
வலத்து நேரே மும்பில் சவுட்டி இடத்து கொண்டு
இடது காலின்றெ…..”


மெய்த்தாரி:

மெய்த்தாரி என்பது களரிப்பயிற்சி முறைகளை மிக நன்றாகச் செய்யும் வண்ணம் உடம்பைப் பக்குவப்படுத்துவதற்காகச் செய்யும் சுவடு முறைகளைக் குறிக்கும். இதனைக் கீழ் வரும் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.


”கை தொழுது மாறத்துப் பிடிச்சு வலத்து சவுட்டி
வலபாகம் திரிஞ்நு நீர்ந்து இடது காலின்றெ வெள்ள தொட்டு
தொழுதமர்ந்து முட்டூந்தி கும்பிட்டு……”


அங்கதாரி:

ஆயுதங்கள் வைத்துச் செய்யும் பயிற்சி முறைகளை அங்கதாரி என்று அழைக்கின்றனர். இதனைப் பின்வரும் பாடல் வரிகள் எடுத்துரைக்கின்றன.


”அமர்ந்து அங்கம் தொட்டு வந்திச்சு
அங்கமெடுத்து களரிக்கு வந்நிச்சு கைகூட்டி
நெஞ்சத்து வச்சு வணங்கியமர்ந்து பொங்கி உளவு
மாறி வலத்துளவுட இத்துளவு…….”


கோல்த்தாரி:

கோல்த்தாரி என்பது கம்பு வைத்து செய்யும் பயிற்சி முறையாகும்.

வெறுங்கைப்பிரயோகம்:

கை கால்களை மட்டுமே பயன்படுத்திச் செய்யும் பயிற்சி முறையாகும்.

ஆசனங்கள்:

ஆசனங்கள் என்பவை உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்துவதற்காகச் செய்யும் பயிற்சி முறைகளாகும். ஆசனங்களை யோகாசனங்கள் என்றும் அழைக்கின்றனர். ஆசனங்களின் வகைகளாக பத்மாசனம், சிரசாசனம், உத்கட்டாசனம், பசுமுகாசனம், மயூராசனம், ஏகபாதாசனம், மகராசனம், புஜங்காசனம், மேருதண்டாசனம், சலபாசனம், தனுராசனம், ஹாலாசனம், சர்வாங்காசனம், வஜ்ராசனம், சவாசனம் போன்றவற்றைத் தகவலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயுதங்கள்:

கோல்த்தாரியில் இடம் பெறும் ஒரு சாண் கம்பு, முச்சாண் கம்பு(மூன்று சாண் கம்பு) ஆறு சாண் கம்பு, ஒற்றைக் கம்பு, பன்னிரண்டு சாண் கம்பு மற்றும் சிரமம் என்று அழைக்கப்படும் கம்பு (இது தரையிலிருந்து ஒரு மனிதனின் மூக்கு வரை நீளமுடையது) ஆகியவையும் அங்கதாரியில் வாள், வடிவாள், சுரிகை, உறுமி (சுருட்டுவாள்), கடாரி, கடகோரி (கெட்டுகாரி), வெண்மழு, குந்தம் (ஈட்டி), பரிஜை (கேடயம்), கெதை ஆகிய ஆயுதங்களும் இடம் பெறுகின்றன.

களரியும் வர்மக்கலையும்:

உடலில் மறைந்துள்ள முக்கியமான இடங்களைக் கணித்து அவற்றைத் தாக்கி எதிரியை நிலை குலையச் செய்யும் கலை. நாடி நரம்புகளை அடிப்படையாகக் கொண்டு இக்கலைத் திகழ்கிறது வைத்திய முறைக்கும் பங்களிக்கிறது உடலில் அடிப்பட்ட இடத்தில் வர்மம் கொண்டிருந்தால் அதற்கேற்ப வைத்திய சிகிச்சை முறையை மேற்கொள்வர் இந்த முறையை ”சித்த வர்ம வைத்தியம்” என்ற பெயரால் குறிப்பிடுகின்றனர் (க.இரவீந்திரன்: நாட்டுப்புறவியல் ஆய்வுக்கோவை). இந்த சிகிட்சை முறையை களரி ஆசான்கள் அனைவரும் அறிந்திருக்கின்றனர்.

களரிப்பயிற்றில் சீடர்கள் பயிற்சியின் போது வர்மம் கொள்ள நேர்ந்தால் ஆசான்கள் உடனடியாக சிகிச்சை செய்து அவர்களைக் காப்பாற்றுவர். களரி பயிற்றின் வாரி, ஆனவாரி இவை போன்ற பூட்டுகள் வர்மப் புள்ளிகளைக் குறிவைத்தே செய்யப்படுகின்றன. இந்த வர்மமும் வர்ம வைத்திய முறையும் அகத்திய முனிவரின் தலைமையிலான சித்த முனிவர்களால் எழுதிவைக்கப்பட்டது என்று கருதப்படுகிறது. ஒரு மனிதனின் உடம்பில் 108 வர்மப் புள்ளிகள் காணப்படுகிறது. வர்மப் புள்ளிகளை உடம்பில் கொள்ளச் செய்யும் முறையின் அடிப்படையில் தொடுவர்மம் 96, படுவர்மம் 12 மொத்தம் 108 என்றும், இதே வர்மப் புள்ளிகளை உடம்பின் கண்டங்களின் அடிப்படையில் தலையில் 25, கழுத்து முதல் நாபி வரை 45, நாபி முதல் மூலம் வரை 9, கையில் 14, காலில் 15 மொத்தம் 108 என்றும், தோஷங்களின் அடிப்படையில் வாத வர்மம் 64, பித்த வர்மம் 24, சிலேத்தும வர்மம் (கப வர்மம்) 6, உள் வர்மம் 14 மொத்தம் 108 எனவும் குறிப்பிடுகின்றனர்.

களரியும் சிலம்பும்:

சிலம்பம் என்று அழைக்கப்படும் சிலம்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் களரியில் கோல்த்தாரியில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை ஒத்தது. களரியில் சிரமம் என்று அழைக்கப்படும் கம்பு வைத்து செய்யும் பயிற்சி முறையையே சிலம்பம் என்று வழங்குகின்றனர். சிரமப் பயிற்சி பார்வையாளர்களை எளிதில் ஈர்க்கும் சுவடுகள் அடங்கியது ஆகும். எனவே அதை மட்டும் பயின்று சிலர் அதை ஒரு தனிக்கலையாக உருவாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முடிவுரை:

கலைப் பொக்கிஷங்களின் வரிசையில் களரி என்ற தற்காப்புக் கலை மிகவும் சிறப்பிடம் பெற்றுத் தனித்தன்மை வாய்ந்த கலையாகத் திகழ்கிறது. தவ முனிவர்கள் தந்த இக்கலையை அதன் மகிமையை அறிந்து முற்காலத்தில் பலர் பயின்று தேர்ச்சிப் பெற்ற ஆசான்களாகவும் மிகச் சிறந்த போர் வீரர்களாகவும் திகழ்ந்தனர். தற்போதைய இளைஞர் சமுதாயம் இக்கலையின் பழமையையும், பெருமையையும் அதன் உயிரோட்டமான நயங்களையும் அறியாததால் அதை விரும்பிப் பயில ஆர்வம் காட்டுவதில்லை. இன்றைய விஞ்ஞான யுகத்தல் தாக்குதலுக்குப் பயன்படுத்தக் கூடிய துப்பாக்கியின் குண்டுகளைக் கூட இக்கலையை பயின்று தேர்ச்சிப் பெற்றவர்களால் தடுக்க இயலும். மேலும் மனிதன் தன்னைத் தானே புரிந்து கெண்டு பிறருக்கு உதவிச் செய்யக்கூடிய நல்லுள்ளம் கொண்ட ஒரு முழு மனிதனாக வாழ இந்த கலை உதவிச் செய்கிறது. எனவே இன்றைய இளைஞர்கள் இக்கலையை ஆர்வமுடன் பயின்று அவர்களும் பயன்பெற்று அழிந்து வரும் உயிரோட்டமான இக்கலையை உயிர் பெறச் செய்து சமுதாயத்திற்கும் உகந்த கலையாகப் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை

அழகிய குறிப்புகள்...

 ஆரோக்கியமான உடல், அழகான முகம் இவை இரண்டையும் விரும்பாதவர் யாரேனும் உண்டா?

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, ஒருவரின் உடல் நிலையின் தன்மையும், மன நிலையின் தன்மையும் முகத்தில் தான் தெரியவரும். சில அழகு சாதனப் பொருட்கள் உடல் ஒவ்வாமை அதாவது அலர்ஜியை உண்டாக்கி தோலில் மாறுதல் ஏற்படச் செய்கின்றன. எனவே இயற்கை மூலிகைகளைக் கொண்டு எளிய முறையில் முகத்தின் அழகை மெருகூட்டச் செய்யலாம்.

நெல்லி வற்றலை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்தவுடன் அந்த நீரில் முகம் கழுவி வரவேண்டும். அப்போது முகத்தில் உள்ள வெப்பக் கட்டிகள், பருக்கள், தழும்புகள் வடுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். நாளடைவில் உங்கள் முகம் அழகான தோற்றத்தைப் பெறும்.

உடலும் முகமும் வசீகரம் அடைய சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

· மலச்சிக்கல் இருந்தால் முகத்தின் பொலிவு கெட்டுவிடும். எனவே மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் நல்லது.

· நீர் அருந்த வேண்டும். சீரகம் கலந்து நன்கு காய்ச்சிய கொதிநீரை ஆறவைத்து குடிக்க வேண்டும்.

· இரவு உணவுக்குப்பின் வாழைப்பழம், பழுத்த கொய்யா மற்றும் அந்த அந்த சீசனில் அதிகளவு விளையும் பழங்களைச் சாப்பிடுவது நல்லது. பழங்களில்தான் நார்ச்சத்து மிகுந்துள்ளது.

· கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

· எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

· அதிகம் குளிர்ந்த நீரிலோ அல்லது அதிக சூடான நீரிலோ முகத்தைக் கழுவக் கூடாது.

· முகத்தைத் துடைக்க மென்மையான பருத்தித் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.

· வெள்ளரிப் பிஞ்சை வாங்கி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சாத பசும்பாலில் ஊறவைக்க வேண்டும். அரைமணி நேரம் கழித்து அதை எடுத்து முகத்தின் மீது தடவினால் முகம் பொலிவுறும்.

· முகத்தில் பருக்கள் தோன்றினால் அதைக் கிள்ளக் கூடாது.

· இரவு படுக்கைக்கு முன் முகத்தைக் கழுவி துடைக்க வேண்டும். பின் சுத்தமான சந்தனத்தோடு எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளக்கும்.

· தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அரைத்து எடுத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்கள் செய்துவந்தால் உங்கள் முகமும் கண்ணாடி போல் ஜொலிக்கும் .

· மன அழுத்தம், அடிக்கடி கோபம், பயம், எப்போதும் ஒரே சிந்தனை போன்றவற்றின் தாக்கம் முதலில் முகத்தில்தான் ஆரம்பிக்கும்.

· திருநீற்றுப் பச்சிலையுடன் சிறிது வசம்பு, ஜாதிக்காய் சேர்த்து அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் மாறும்.

· சுத்தமான தேனை முகத்தின் மீது (ரோமங்களில் படாமல்) தடவி வந்தால் முகம் பளபளக்கும்.

· மது, புகை மற்றும் போதைப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

· உணவில் அதிக காரம், உப்பு சேர்க்கக் கூடாது.

· தினமும் யோகா, தியானம், உடற்பயிற்சி செய்வது நல்லது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top