.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 7 November 2013

“அம்மா இன்னும் நெருக்கம்” .- கமல் நேர்காணல்!

நடிகர் கமல்ஹாசனின் திரையுலக ஐம்பதாம் ஆண்டு 2009-ல் கொண்டாடப்பட்டபோது அவரை நானும் நண்பர் சுந்தரபுத்தனும் செப்டம்பர் மாதத்தில் சந்தித்து அப்போது பணிபுரிந்த த சண்டே இந்தியன் இதழுக்காக ஒரு நீண்ட பேட்டி எடுத்தோம். இரண்டுநாட்கள் தொடர்ந்து அவரை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்துப்பேசினோம். சாதாரண பேட்டி என்றுதான் நேரம் வாங்கியிருந்தோம்.நேரில் சந்தித்தவுடன் இது உங்கள் ஐம்பதாவது கலையுலக ஆண்டு என்பதால் உங்களிடம் ஐம்பது கேள்விகள் கேட்கவிரும்புகிறேன் என்றபோது ஒப்புக்கொண்டு எங்கள் கேள்விகளை சச்சின் போல எதிர்கொண்டார். அப்பேட்டியிலிருந்து சில பகுதிகள் கமல் பிறந்தநாளை ஒட்டி இங்கே வெளியிடப்படுகின்றன.பிறந்தநாள் வாழ்த்துக்கள் டியர் கமல்!

nov 7 - kamal.2

எவ்வளவோ விருதுகள் வாங்கியிருக்கிறீர்கள்? இன்னும் நீங்கள் ஆசைப்படும் விருது ஏதேனும் உள்ளதா?

இந்த விருதுகளும்கூட நடிகர்கள்மாதிரிதான். புது நடிகர்கள் வேண்டாமா என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்களோ அதைத்தான் நானும் சொல்வேன். புது இயக்குநர்கள் வேண்டாமா? பார்வையாளர்களுக்கு எப்படி புதிது புதிதாக வேண்டுமோ அப்படித்தான்.

உங்களுக்கு கிடைக்காத விருதுகள் பற்றி.. ஏதாவது குறிப்பிட்டுப் பெயர் சொல்லமுடியுமா?

விருதுகள் எனக்கு கிடைக்காததில் வருத்தமே இல்லை. எனக்கு கிடைக்காததிலும் ரஹ்மானுக்குக் கிடைத்ததிலும் எந்தவிதமான வருத்தமும் இல்லை. என்ஜினியரிங்பட்டம் எனக்குக் கிடைக்கலை என்று கோபித்துக்கொண்டது மாதிரி. நான் அதற்கு படித்திருந்தால்தானே. ஆக, அங்கே போய் அவர்களின் படத்துக்கு வேலை செய்து அதுக்கு வாங்குகிற விருதுதான். சத்யஜித்ரேவுக்கு கொடுத்தது மாதிரி,சாவதற்கு முன்போ அல்லது சாவதற்குப் பிறகோ கொடுத்தால் சந்தோஷமாக என்
பிள்ளைகள் வாங்கிக்கொள்வார்கள். என்ன நடக்குது என்று எனக்குத் தெரியாது.

சில நடிகர்கள் மற்றவர்களை விட சிறப்பாக நடிக்கிறார்கள். ஏன் எப்படி?

அது அவர்களின் விருப்பம். அவ்வளவுதான். மற்றவர்களால் முடியாததை செய்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் அந்த வழி வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். அவ்வளவுதானே தவிர. நஸ்ருதின்ஷா பரதநாட்டியம் கற்றுக்கொண்டால் வராது என்பதெல்லாம் இல்லை. வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்கள்.

உங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது யார்?

என்னுடைய அடிவானத்தில் எனக்குத் தெரிந்த சூரியன் சிவாஜிகணேசன். நான் பார்த்தது அவரைத்தான். எனக்குத் தெரிந்த சத்யம். அதிலிருந்துதான் கிரகனாதி கிரகணங்கள் என்னவென்று புரிந்துகொண்டேன். சோலார் சிஸ்டத்தை புரிந்துகொள்வதற்கு காரணமே அந்த சூரியன்தான். அதைப் புரிந்ததற்குப் பிறகு வேறொரு சூரியனும் இருப்பது தெரிந்தது. அதுவரையில் எனக்கு ஒரு சூரியன்.

ஒரு வழிபாடுதான் இருந்தது. சோலாரை புரிந்தபிறகு ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு சூரியன் என்பது புரிய ஆரம்பித்தது. இந்த பரிமாண வளர்ச்சிக்கு முதல் படி சிவாஜிதான்.

இயக்கம், நடிப்பு இந்த இரண்டில் எது கடினம்?

கண்டிப்பாக, இயக்கம் என்பது பல்முனை பரிமாணம். வெவ்வேறு பரிமாணம்.நடிகர்களையும் கவனிக்கவேண்டும். ஒரு நடிகன் தன்னை மட்டும் கவனித்துக்கொண்டால் போதுமானது. தன் பாத்திரம், தன் வேலை. இயக்குநருக்கு ஒரு குடும்பத் தலைவருக்கான பொறுப்பு. மொத்தத்தில் குடும்பம் நல்லா இருக்கணும்.

சிகர்களை வைத்து நீங்கள் ஏன் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றநினைக்கவில்லை. அப்படி கைப்பற்றுகிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதுவொரு வழி. ஹிட்லர் செய்த மாதிரி. இல்லை கோயபல்ஸ் செய்த மாதிரி இருக்கலாம். இத்தாலியில் மாஜினி முயற்சி செய்து வந்ததும் ஒரு வழிதான்.அரசியலில் வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதி¢ல் பெஸ்ட்பேட்டர்ன் சக்சஸ் என்று பார்த்தது கோயபல்ஸ் பிரசாரம். கோயபல்ஸின்திறமையான பிரசாரத்தை வைத்துக்கொண்டுதான் அமெரிக்கா ரஷ்யாவுடனான போட்டியில் வென்றது. ஜெர்மன் டெக்னாலஜி எப்போதுமே கொஞ்சம் கெட்டிக்காரத்தனமாகவே இருக்கும். அதை வாங்கி அமெரிக்கர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். எனவே, அதுமாதிரி சினிமா ஒரு கருவி. ஒரு மேடை.இப்போது டிவி. அதனால்தான் ஒவ்வொரு கட்சியும் ஒரு டிவியைக் கைப்பற்றி இருக்கின்றன. மக்களைப் போய்ச் சேர்கிற எந்த ஊடகமாக இருந்தாலும், அது

அரசியலுக்கு உபயோகமாக இருக்கிறது. அதுவே கேடயமாகவும் சில சமயம் ஆயுதமாகவும் பயன்படுகிறது. விளையாட்டில் எனக்கு விருப்பமில்லை.நாடாளுமன்றம் என்கிற பச்சைக் கிணற்றில் இருந்தால்தான் சமூக சேவையோ அல்லது அரசியலோ பழகமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அது வெளியில் இருக்கிற தவளையாகக்கூட இருக்கலாம்.

அரசியல் சூழல் அமைப்பில்
கிணற்றுக்குள் இருக்கிற தவளை மட்டும்தான் பயன்படும் என்று நம்ப வேண்டியதில்லை. ஏரிக்கரையில் இருக்கலாம். காட்டுக்குள் இருக்கலாம்.தவளையின் வடிவம் என்பது ஒப்பீடு செய்து பார்க்கும்போதுதான் தெரியும். தன் கூட்டத்தில் அது பெரிய தவளை மாதிரி இருக்கலாம். இன்னும் பெரிய இடத்தில் பெரிய தவளைகள் இருக்கும். பெரிய தவளை தன்னையொரு சிறு தவளை என்று நினைத்துக் கொண்டிருக்கும். பெரியாரெல்லாம் அந்தமாதிரி தவளைதான். தன்னை சின்ன தவளை என்று நினைத்துக்கொண்டிருந்தார். சத்தம் மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தார். மற்றவர்களுடன் வைத்துப்பார்க்கும்போதுதான் அவர் எவ்வளவு பெரிய தவளை என்று புரிந்தது. அதை விழுங்குவதற்கு பாம்பே கிடைக்கவில்லை.

நீங்கள் பார்த்தவரையில் எந்தக் காலத்தை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று
சொல்வீர்கள்?


பொன் முக்கியமான உலோகமா என்பதை முதலில் நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.பிளாட்டினம் காலத்தை நோக்கிய போய்க்கொண்டிருக்கிற ஆளாக இருந்தால் அல்லது வைரத்தை மதிக்கும் வர்த்தக மிருகமாக இருந்தால். வெறும் பேப்பர்லதான மதிப்பு. கரன்சி காலம். தங்கத்தைவிட இப்போது பிளாஸ்டிக்குக்கு மதிப்பு அதிகம். பழைய ஞாபகமாகத்தான் தங்கமும் பிளாட்டினமும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

பிளாஸ்டிக் கார்டுதான். அதற்குப் பெயர் பிளாட்டினம், கோல்டு கார்டு என்று சொல்கிறோம். இது பிற்காலத்தில் பிளாஸ்டிக் யுகம் என்று பேசப்படும். என்னுடைய பொற்காலம் என¢பது எனக்கு பயன்பாடாக இருந்திருக்கும். மறுமலர்ச்சிக்காலம்தான் பொற்காலமா?ஏறிவரும்போது அந்த மேடை நன்றாக இருந்தது. அச்சு இயந்திரம், லுத்தரன் சர்ச்சில் நடந்த மாற்றம், கல்வி, மதம் மற்றும் அறிவியல் என எல்லாம் ஒன்றாக கலந்து தீவிரமாக இயங்கத்தொடங்கின. அதுவொரு நல்ல காலம். அதுமாதிரி நல்ல காலம் நடந்து கொண்டிருக்கிறதோ என்னவோ. நாம் உணராமல் இருக்கலாம்.

இந்திய சினிமாவில் மேக்கப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிற படங்களில் நீங்கள்தான் அதிகம் நடித்திருக்கிறீர்கள். ஏன் மற்றவர்கள் அதைச் செய்வதில்லை. அதனால் சிரமங்கள் இருக்கிறதா?

சிரமம் இருக்கிறது. ஆனால் மேக்கப் என்பது ஒரு கருவிதானே. ஏன் மற்றவர்கள்கலர் சினிமா எடுக்கவில்லை என்று சொல்கிற மாதிரிதான். கலர்சினிமாகூடநியாயமானது கிடையாது. சில தொழில்நுட்பம். கிரேன் வைத்து எடுப்பதே இல்லை.ஒருவேளை அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு நம்பிக்கை இ¢ல்லாமல் இருக்கலாம். அந்தமாதிரி கிரேனெல்லாம் எனக்கு வேண்டாம். தரையோட வைத்து எடுக்கிற மாதிரிபுவிஈர்ப்பு சம்பந்தமான படம்தான். றெக்கைக் கட்டி பறக்கமாட்டேன் என்று சொல்லலாம்.

ஹெலிகாப்டர் ஷாட் வேண்டாம் என்று சொல்லலாம். அது அவரவர் விருப்பம். ஹெலிகாப்டர் ஷாட் வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார் ஸ்பீல்பெர்க். டர்காவ்ஸ்கி ஹெலிகாப்டரை சும்மா காற்றடிப்பதற்காக பயன்படுத்தினார். மேக்கப் ஒரு கருவி. மேஜிக்கை
செய்வதற்கு தொப்பிக்குள்ளிருந்து புறா எடுக்கணும் என்பார்கள். சிலர் பெட்டிக்குள்ளிருந்து எடுப்பார்கள். தொப்பி இல்லாத ஊரில் கூடைக்குள்ளிருந்து எடுப்பார்கள்.

நீங்கள் நடிக்க விரும்புகிற ஹாலிவுட், பாலிவுட் ஸ்டார்கள் யாராவது இருக்கிறார்களா?

சிலது கேட்டால் நடக்காது. இருக்கும்போது அனுபவித்துவிட்டேன். சிவாஜியுடன் இன்னொரு படம் செய்யவேண்டும் என்று நினைத்தேன். அது நடக்காமலேயே போய்விட்டது. நாகேஷுடன் எத்தனை படம் வேண்டுமானாலும் நடிக்கலாம்.திலிப்குமாருடன் நடிக்கவேண்டும் என்பது ரொம்ப ஆசை. அது நடக்கவேயில்லை.கிட்டத்தட்ட நான் கேட்டதெல்லாம் நடந்துவிட்டது. நஸ்ரூதின் ஷாவுடன் நடிக்க ஆசைப்பட்டேன்.


என் படத்திலேயே காந்தியாக நடித்தார், இன்னும் பேர் சொல்லாத நிறைய பேர் இருக்கிறார்கள்.ஹாலிவுட்டில் எல்லோருமே தனிப்பட்ட திறமையாளர்கள். ஆஸ்கரும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்ற உட்பி ஆலன். நடிகர் என்று மட்டும் அவரை சொல்லமுடியாது. பஸ்டர் கிட்டன், பிராண்டோ. என்னுடைய காலகட்டத்தைச்சேர்ந்த அதிகம் பெயர் பெறாமேலே போய்விட் வில்லியம் ஹெர்ட், டீ நீரோ. ஏதோ இடையில் வந்து சிக்ஸராக அடித்துக்கொண்டிருக்கிறார் கிளிண்ட் ஈஸ்ட்வுட்.இந்தக் கலைஞர்களை வெறும் நடிகர் என்று மட்டும் சொல்லமுடியாது.


ஏனென்றால் நான¢ நடிகர் மட்டுமல்ல. எனக்கு எல்லோரையும் பிடிக்கிறது. மியுசிக் டைரக்டரைப் பார்த்தால் பிடிக்கிறது. எனியோ மார்கனியைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது. ஹாலிவுட்டுக்கு வெள்¤யே இருந்துகொண்டே ஹாலிவுட்டை தாக்கக்கூடிய ஓர் ஆள் அவர். தாக்கம் ஏற்படுத்தக்கூடியவர்.


உலகம் முழுவதும் நம்மையும் சேர்த்து அமெரிக்க சினிமாவை பின்பற்றக்கூடிய போக்கு இருக்கிறது. பிரெஞ்சு சினிமா, ஈரானிய சினிமாவை பின்பற்றுவதில்லை.பிரெஞ்சு சினிமா நண்பர்கள் இதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் யுகே டிவி தொடர்களை எழுபதுகள் எண்பதுகளில் பார்த்தீர்களானால்,இன¢றைய அமெரிக்க டிவி தொடர்களின் உத்வேகம் முழுவதும் அங்கிருந்து வந்ததுதான் என்று தெரியும்.


 பிரெஞ்சு சினிமாவிலிருந்து அவர்கள் அடிக்கிற காப்பிக்கு பஞ்சமே கிடையாது. எப்படி நாம் பெங்கால் இலக்கியத்திலிருந்து எப்படி மலையாள படங்களில் ரீமேக் செய்துகொண்டிருந்தோமோ அப்படி. ட்ரூ லைஸ் படத்தை ஒரிஜினல் அமெரிக்க படம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது லா டோ தால் என்கிற பிரெஞ்சு படம். நாங்கள் வெட்னஸ்டேதான் உன்னைப்போல ஒருவன் என்று சொல்லி எடு¢க்கிறோம். அப்படியெல்லாம் சொல்லாமல் இவர்கள் கண்டுபிடித்ததுமாதிரி எடுத்திருக்கிறார்கள். யுரேகா என்று வேறுகத்துகிறார்கள். புரியவில்லை. அமெரிக்காவே அப்படித்தானே.

ஆக்கிரமிப்பை தன்னுடைய பூமியாக மாற்றிக்கொண்டவர்கள்தான் அவர்கள். அது அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது. எல்லாவற்றையும் தனது என்று நினைக்கிறவர்கள். அது ஒரு வகையான மெக்காவாக ஆகிவிட்டது. நான¢ வருத்தப்படவில்லை. நாம் ஒரு நாடு,நாம் ஒரு கலாச்சாரம் என்று சொல்லும்போது எது நம் கலாச்சாரம் என்று சொல்லும்போது கோபித்துக்கொள்ளமுடியாது அல்லவா? இந்து என்று சொல்வதற்கு அர்த்தமே எனக்குப் புரியவில்லை.


கண்ணதாசன் எனக்குப் பிடித்த மனிதர்.அர்த்தமுள்ள இந்துமதம் என்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். இந்து மதம் என்று ஒன்று கிடையாது என்று நினைக்கிறவன் நான். அது என¢னுடைய தனிப்பட்ட கருத்து. சிலர் கோபி¢த்துக்கொள்வார்கள். அதை வைத்து பெரிய கூட்டமாக அரசியலில் ஒட்டுக்களைப் வாங்கிக்கொண்டிருக்கிறவர்கள் இந்த வாதத்தை ம்ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது என் கருத்து. எப்படி எனக்கு
கடவுள் தேவையில்லை என்று சொல்கிறேனோ அப்படி. இல்லை என்று சொல்வதுகூட முக்கியமாகத் தெரியவில்லை. எனக்குத் தேவையில்லை என்பதே போதுமானது.


அக்ரஹாரத்திலிருந்து பெரியார் திடலுக்கு வந்த குழந்தை என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் குழந்தை வளர்ந்துவிட்டதா?


சாகறதுக்கு முன்புதான் தெரியும் வளர்ந்து செத்தோமா வளராமல் செத்தோமா என்பது. டைம் முடிந்துவிட்டது என்று கேள்வித்தாளைக் கேட்கும்போதுதான் தெரியும். எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்தோமா என்று. வளர்ச்சி என்பது எய்தி முடிக்கவேண்டிய நிலையாக எனக்குத் தெரியவில்லை. நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும். வயோதிகத்தையே நான¢ வளர்ச்சியாகத்தான் நினைக்கிறேன்.குன்றலாகவோ அழிதலாகவோ நினைக்கவில்லை.


இதிலிருந்து அதை நோக்கி வளர்தல்,தேய்தல். அப்படிப்பார்த்தால் வளர்ச்சி என்பதே தேய்தல்தான். பிறந்தவுடனே மரணத்தை நோக்கிய பயணம்தானே. விழுந்த பல் முளைப்பதும் முளைத்த பல் விழுவதும் எது வளர்ச்சி என்று எதைச் சொல்வது. பரிணாம வளர்ச்சியில் 23 வயதுக்குப் பிறகு பெரிதாக யாரும் சிந்தனை செய்வதில்லை என்று சொல்கிறார்கள். அதற்குப் பிறகு சிந்தித்து வந்த விஷயங்கள்தான். பெரியார் 23 வயதில் யோசித்ததைவிட நாற்பதுக்குப் பிறகு சொன்னது அதிகம். காந்தியார் அப்படித்தான். கார்ல்மார்க்ஸ அப்படித்தான். முப்பதுக்குப் பிறகு அவர்கள் யோசித்ததுதான் பிரமாதமாக இருக்கிறது. இருபது வரையில் வெறும் ஒத்திகைதான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.


நாத்திகம் என்கிற சுயமனிதத் தேடலுக்கு எப்போது வந்தீர்கள்?


ஞாபகமில்லை. மொழியை எப்போது கற்றுக்கொண்டேன் என்பதுமாதிரிதான் அது. தமிழை எப்போது பேச ஆரம்பித்தீர்கள் என்று குறிப்பிட்ட தேதியை நீங்களோ நானோ சொல்லமுடியாது. அம்மா என்பது தமிழா என்று மொழி ஆராய்ச்சிக்குப் போய்விடுமே தவிர, முழுமையாக ஒரு வார்த்தையை சொல்லவந்தோம் 3 வயதிலேயோ 4 வயதிலேயா என்று தெரியாது. ஒரு புத்தகத்தை எப்படி படிக்க ஆரம்பித்தோம். ஒண்ண£ம் கிளாஸ்ல அது தெரியாது. இரண்டாம் கிளாஸ்ல இது தெரியாது.


மூன்றாம் கிளாஸில் இரண்டாம் கிளாஸில் தெரியாததைத் தெரிந்துகொண்டோம். இப்படித்தான் தெரிந்துகொண்டோம். இன்றுமுதல் இப்படி ஆகக் கடவது என்று பெரியார் காளியாக வந்து என் நாக்கில் எழுதவில்லை. அது அவரால் முடியாது. பெரியார் என்பது…ஸ்பூன் என்பதை நாம் கரண்டி என்று சொல்கிறோம். சீனாவில் ஸ்பூனே கிடையாது.குச்சியால் சாப்பிடுகிறார்கள். ஆக அது ஒரு கருவி. அதற்கான பயன் ஒன்றுதான். அந்தக் கருவிதான் பெரியார். என் மொழியில் எனக்குச் சொல்லவேண்டிய விஷயம். அவர் சமுதாயத் தேவை. அது நிகழ்ந்தே தீரும். அவர் வராமல் அல்லது அவர் வழி தெரியாமல் காணாமல் போயிருந்தால் வேறொருவர் வந்து ஆகவேண்டும். அவர் கொஞ்சம் வேலைகளை சுருக்க முடித்தார். அந்த வேலை முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை. ஆரம்பித்துவைத்தார்.



nov 7 - kamal
 

உங்கள் வாழ்வில் மிக முக்கியமான பெண்மணி யார்?


அந்தமாதிரி சொல்லும்போது இயல்பாக அம்மாதான். நிபந்தனையற்ற அன்பு.ம¦தமுள்ளோர் எல்லோரும் நிபந்தனைகள் விதிப்பவர்கள். அதன்பிறகு நாம் பெற்ற பிள்ளைகளிடம் நிபந்தனைகளற்ற அன்பை வழங்குகிறோம். என்ன தப்பு செய்தாலும் இல்லை என்றாலும் நம்மிடம் மரியாதையாக இருந்தாலும் இல்லை என்றாலும் நிபந்தனையற்ற அன்பை கொடுக்கிறோம். இதை கற்றுக்கொண்டே அம்மா அப்பாக்களிடமிருந்துதான். ஆனால் அம்மா இன்னும் நெருக்கம். அவர்களது உடலின் உறுப்பில் ஒன்றாக இருந்து வெளியே வந்தவர்கள்.


அதுதான் பெஸ்ட்.அதையே உச்சகட்டமாக நினைக்கமுடியாது. எனக்கெல்லாம் அம்மா 24 வயதில் இறந்துவிட்டார்கள். அதை புரியும்போது ரசிக்க நேரமில்லை. அந்த அனுபவத்தை வேறு பெண்கள் மூலம் பெற விரும்புகிறேன். கூட கொஞ்சம் செக்ஸ் குழப்பமாக இருக்கிறது. எல்லா ஆண்களுக்குமே இருக்கு. பிள்ளையார் பற்றிக்கூட ஒரு கதை
சொல்வார்கள். கல்யாணமே ஆகவில்லையே என்னடா பண்றது என்று தலையில் கை வைத்தபோது அந்த மேடு மார்பகம் போல இருந்ததாம். அம்மா ஞாபகம் வந்துவிட்டது என்று சொல்வார்கள். நல்ல கவிஞனின் கற்பனை அது. அந்த மாதிரி தலைவீங்கிய பிள்ளையாக இருந்தால் முக்கால்வாசி ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுவார்கள்.அல்லது ஒதுக்கிவைத்துவிடுவார்கள். நம்மூர்லதான் சாமியாக கும்பிட்டுக்கொண்டு இருக்கிறோம்.


அடுத்த கமல்ஹாசன் என்று யாரையாவது நீங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறீர்களா?


பாவம். அந்த நிலைமைக்கு எந்த நடிகனும் ஆளாகக்கூடாது. அடுத்த சிவாஜிகணேசன் என்று என்னை சொல்வதை நானே விரும்பவில்லை. சிவாஜி சாரும் விரும்பவில்லை.அவர் பெயர் சிவாஜிகணேசன். அவருடைய பரம ரசிகன் நான். அவரும் என்னை ரசிக்க ஆரம்பித்ததுதான் என்னுடைய பெருமை. பிரபுவுக்கு அது சந்தோசமாக இல்லாதபோது,எனக்கு எப்படி சந்தோசமாக இருக்கமுடியும். சிவாஜி சாரை இன்னொரு பி.யூ.சின்னப்பா என்று சொன்னால் ஒப்புக்கொண்டிருப்பாரா? இங்கிருந்து
தள்ளியிருந்து பார்க்கவேண்டும்.


அந்தக் காலத்தில் அதையே பெரும் வாழ்த்தாகத்தான் நினைத்திருப்பார்கள். இன்னொரு பி.யூ.சின்னப்பாவாக வாழக்கடவது என்றுதான் பெரியவர்கள் வாழ்த்தியிருப்பார்கள். அதை அவர் விரும்பியிருக்கவே மாட்டார். சுருதிகிட்ட இன்னொரு கமல்ஹாசனா வரணும்னு சொன்னால் என்ன சொல்றீங்க மீசை வைச்சுக்க சொல்றீங்களான்னுதான் கேட்பாங்க.எனக்கு வேண்டாம். இன்னொரு கமல்ஹாசனை தேடவே கூடாது. வரும் நடிகர்கள்
அவர்களுக்குள் கூட இன்னொரு கமல்ஹாசனை தேடிவிடக்கூடாது. அப்படி தேடினால் அவர்கள் தங்கிவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்.


என்னை விஞ்ச வேண்டியது அடுத்த தலைமுறையின் கடமை. அதை செய்ய அவர்கள் தவறக்கூடாது. அவர்கள் விஞ்சவிடாமல் தடுப்பது துரோகம். அப்படி விஞ்சுவதற்கான எல்லா உதவிகளும் செய்ய வேண்டும். என்னுடைய மரணத்திற்கு முன்போ, தொய்விற்கு முன்போ அதை செய்துபார்க்கவேண்டும்.

அப்போதுதான் என் கடமையை செய்தது ஆகும். பழைய ஸ்போர்ட்ஸ்மேன் கோச்சாக மாறுகிறார்கள். அதுதான் நியாயமாக இருக்கமுடியும்.அடுத்து விளையாடுகிறவர்களை தடுத்துக்கொண்டு வித்தைகளைக்
கற்றுக்கொடுக்காமல் துரோணாச்சாரி கட்டைவிரல் கேட்கும் விஷயமெல்லாம் அரசியல். நல்ல மாணவனாக இருந்தவனால்தான் நல்ல ஆசானாக இருக்கமுடியும்.மாணவனும் ஆசான¢தான். குருவும் சிஷ்யன்தான்.

சர்க்கரை நோய்- சில கசப்பான உண்மைகள்!

முன் ஒரு காலத்தில்,’பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை ‘வாழ்க்கைமுறை நோய்’ என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று இல்லை. அப்படியே வந்தாலும் தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொண்டால் சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.


nov 7 - sugar chart.1


தற்போது கிட்டத்தட்ட ஆறரைக் கோடி இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. 7.7 கோடி இந்தியர்கள், சர்க்கரை நோய் வருவதற்கான எல்லைக்கோட்டில் உள்ளனர். 2030-ல் இது 8.7 கோடியாக அதிகரித்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இனியாவது நாம் ஆரோக்கிய வாழ்வை மேற்கொண்டால் சர்க்கரை நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.


சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால், இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்தவகையில் ஆலோசனைகளை அள்ளி வீசுகின்றனர். எதையாவது செய்து நோயைக் குணப்படுத்திவிட வேண்டும் என்று மக்களும் இருக்கின்றனர்.

அது சரி! சர்க்கரை நோயை எப்படிக் கண்டறிவது?எப்படி என்கிறிர்களா?

முதலில் சாதாரண ரத்த பரிசோதனை பற்றி பார்ப்போம்:ஒருவருக்கு ரத்தத்தில் 200 மில்லிகிராம் / டெசி லிட்டர் என்ற அளவில் இருந்தால் – அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று அர்த்தம். 140 – அதற்கு கீழ் இருந்தால் ‘இயல்பான நிலை’ என்று அர்த்தம். ஒருவருக்கு 140-க்கு மேல் சர்க்கரை அளவு செல்லும்போது, அவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மற்றொரு பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படும்.


இதன்படி, சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ரத்தம் பரிசோதனை செய்யப்படும். இதில் 140-க்கும் குறைவாக இருந்தால் அது சராசரி. 200-க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய். இதிலும்குழப்பம் என்றால், அடுத்தக்கட்டப் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படும்.


2 ஹெச்பிஏ1சி (HbA1c)பரிசோதனை:முன்னரே சொன்னது போல் நம்முடைய ரத்தத்தில் ரத்தச் சிவப்பு அணுக்கள் உள்ளன. குளுகோஸானது இந்தச் சிவப்பு அணுவில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். இந்தச் ரத்த சிவப்பு அணுக்கள் எட்டு முதல் 12 வாரங்கள் வரை இருக்கும். அதன் பிறகு அவை அழிக்கப்படும். இந்தச் ரத்த சிவப்பு அணுவைப் பரிசோதனைசெய்வதன் மூலம், எட்டு முதல் 12 வாரங்களில்ல் ஒருவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைக் கண்டறிய முடியும். பரிசோதனை முடிவில் 6.5 சதவிகிதத்துக்கு மேல் என்று வந்தால், அவருக்கு சர்க்கரை நோய். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. 5.7 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தால், அது இயல்பான அளவு (Normal).
                            

சிலர், சர்க்கரை நோய் ரத்தப் பரிசோதனைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இருந்தே சரியான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மேற்கொண்டு சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவருவர். இவர்களுக்கு பரிசோதனை செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக உள்ளதுபோல தோன்றும். இந்த ஹெச்பிஏ1சி பரிசோதனை செய்வதன்- மூலம், மூன்று மாதக் காலத்து சர்க்கரை அளவைக் கணக்கிடலாம்.

nov 7 - sugar chart
 

வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாம்.

சமையலுக்கு பயன்படும் வெங்காயம், சாப்பிட மட்டும் தான் பயன்படுகிறது என்று தான் தெரியும். ஆனால் அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம், அந்த வெங்காயம் ருசிக்கு மட்டுமின்றி சிலவற்றை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. அதிலும் சமையலறையில் இருக்கும் சிலவற்றிற்கே பயன்படுகிறது. ஆகவே மறுமுறை சமைக்கும் போது, தேவையில்லாமல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூக்கிப் போடாமல், வேறு சில செயல்களுக்கும் பயன்படுத்துங்கள். இப்போது அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று பார்ப்போம்

மெட்டல் பொருட்கள்:

சமைக்கப் பயன்படும் வெங்காயம் சாப்பிடமட்டுமல்லாமல், மெட்டல் பொருட்களில் படியும் கறைகள், துரு போன்றவற்றை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே இனிமேல் ஏதாவது மெட்டல் பொருட்களில் துரு அல்லது கறைகள் போகாமல் இருந்தால், அப்போது சிறு துண்டு வெங்காயத்தை எடுத்து அதன்மீது தேய்த்தால், போய்விடும். இதனால் மெட்டல் பொருட்கள் அழகாக மின்னும்.

வாணலி:

பொதுவாக சமைக்கும் போது எண்ணெய் எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? வாணலியில் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று தானே பயன்படுத்துகிறோம். ஆனால், இப்போது அதே பயன்பாட்டிற்கு தான் வெங்காயமும் பயன்படுகிறது. அதாவது வாணலியை அடுப்பில் வைக்கும் முன் சிறிது வெங்காயத்தை எடுத்து தேய்த்து, பின் சமைத்தால், அடிபிடிக்காமல் இருக்கும்.

அடிப்பிடித்தல்:

வெங்காயம் வாணலியில் உள்ள கறைகளை நீக்கவும் பயன்படுகிறது. அதாவது சமைக்கும் போது ஏதேனுமூ அடி பிடித்துவிட்டால், அவை நீண்ட நாட்கள் போகாமல் இருக்கும், அந்த கறை நீங்குவதற்கு, சிறிது வெங்காயத்துண்டுகளை எடுத்து, அந்த வாணலியில் தேய்த்து, 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், கறைகள் நீங்கிவிடும்.

கிரில் மிசின்:

வீட்டில் பயன்படும் சமையல் பொருட்களில் ஒன்றான கிரில் மிசின், தீயில் நீண்ட நேரம் இருப்பதால், அது கருமை நிறத்தில் இருக்கும் வாங்கும் போது தான் புதிதாக பளிச்சென்று இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், அதை இப்போது புதிது போல் மின்னச் செய்ய, அதன் இரு முனைகளிலும் வெங்காயத் துண்டை வைத்து, நன்கு தேய்க்க வேண்டும். இதனால் அந்த கிரில் மிசின் அழகாகக் காணப்படும்.

நாற்றம்:

வீட்டில் இருக்கும் போது திடீரென்று எதாவது ஒரு மூலையிலிருந்து அழுகிய நாற்றம் வரும். அப்போது எவ்வளவு நேரம் தான் மூக்கை மூட முடியும். ஆகவே அப்போது சிறிது வெங்காயத்தை நறுக்கி, நாற்றம் அடிக்கும் இடத்தில் வைத்துவிட்டால், அந்த அழுகிய நாற்றம் போய்விடும்.

வீட்டிலேயே நகைகளை சுத்தம் செய்ய சில குறிப்புகள்!

அம்மோனியா

வைரங்கள் தான் ஒரு பெண்ணின் உற்ற நண்பன். ஆனால் அவை அழுக்காக இருக்கும் போது அல்ல. ஆகவே ஒரு கப் வெந்நீருடன், 1/4 கப் அமோனியாவை கலந்து வைர நகைகளை அதில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், மென்மையான டூத் பிரஷால் மீதம் இருக்கும் அழுக்கை அகற்றவும். குறிப்பாக, அமைப்புகளின் பிளவுகளிலும், வைரத்தின் அடிப்பகுதிகளிலும் நன்றாக தேய்க்கவும்.

வினிகர்

வெள்ளை வினிகர் கொண்டு தங்கம் மற்றும் கற்கள் பதித்த நகைகளை சுத்தம் செய்வது சுலபமானது அல்ல. ஆகவே ஒரு ஜார் வினிகரில் நகைகளை 10-15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். அதுமட்டுமின்றி அவ்வப்பொழுது கலக்க வேண்டும். பின் மென்மையான பிரஷால் தேய்த்து மீதம் இருக்கும் அழுக்கை அகற்றவும்.


ஆன்டாசிட்

ஆன்டாசிட் மாத்திரை வயிற்றை தணிப்பது மட்டுமல்லாது, நகைகளையும் சுத்தம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு வெந்நீரில் 2 ஆன்டாசிட் மாத்திரைகளை போட்டு, அதில் நகைகளை போட்டு, 2 நிமிடங்களுக்கு பிறகு எடுத்து அலச வேண்டும்.

அலுமினியத்தாள்

அலுமினியத்தாள் கொண்டு வெள்ளிப் பாத்திரங்களை சுத்தம் செய்வது போல், வெள்ளி நகைகளையும் சுத்தம் செய்யலாம். ஆகவே ஒரு தட்டில் ஒரு துண்டு அலுமினியம் பாயில் வைத்து, அதன் மேல் நகைகளை வைக்கவும். பின் அதில் சிறிது சமையல் சோடா தெளித்து, வெந்நீர் ஊற்றவும். இது நகைகளில் பட்டு பாயிலுக்கு செல்லும். குறிப்பாக வெந்நீரை ஊற்றும் போது, நகைகளின் எல்லா பக்கமும் படும்படி சுற்றி ஊற்ற வேண்டும். பின்னர் அதனை வெளியே எடுத்து தண்ணீரால் அலச வேண்டும்.


தண்ணீர் மற்றும் சோப்பு

மென்மையான துளைகள் உள்ள முத்து மற்றும் டர்கைஸ் நகைகளை சிறப்பாக சுத்தம் செய்வதற்கு, சோப்பு மற்றும் தண்ணீரை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. எனவே 2 கப் வெந்நீருடன் சிறிது மைல்டு சோப்பு பவுடர் கலந்து, அதில் முத்து மாலையை ஊற வைத்து, பின் ஒவ்வொரு முத்தையும் காய்ந்த மென்மையான காட்டன் துணி கொண்டு துடைத்து, காய வைக்கவும். (முத்து நகைகளை அதிக நாட்கள் உபயோகித்தாலும், அதன் பளபளப்பு எளிதில் குறையாது. அதனால் அணிவதற்கு தயக்கம் வேண்டாம்). டர்கைஸ் நகைகளை சுத்தம் செய்வதற்கு சோப்பு கூட தேவை. இல்லை. மென்மையான பிரஷை வெந்நீரில் ஊற வைத்து கற்களை தேய்த்து, சுத்தமான துணியால் துடைத்து, நீண்ட நேரம் காய வைத்தாலே போதும்.

பீர்

தங்க நகைகள் நன்கு ஜொலிக்க வேண்டுமெனில், தங்க நகைகளை பீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, மென்மையான துணி கொண்டு துடைத்தால், நகைகளில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.


டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட் சில்வர் நகைகளை பளிச்சென்று மின்ன உதவும். அதற்கு டூத் பேஸ்ட்டை சில்வர் நகைகளின் மீது 10 நிமிடம் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

உப்பு

நகைகளில் தங்கியுள்ள மறைந்துள்ள அழுக்குகளையும் உப்பானது நீக்கிவிடும். அதற்கு உப்பை நீரில் கலந்து, அதில் நகைகளைப் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து, பின் மென்மையான பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும். இதனால் உப்பானது நகைகளில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கிவிடும்.


கெட்சப்

என்ன ஆச்சரியாமாக உள்ளதா? ஆம், கெட்சப் கொண்டு கல் பதித்த நகைகளை சுத்தம் செய்தால், கற்கள் நன்கு ஜொலிக்கும். அதற்கு கல் பதித்த நகைகளில் சிறிது கெட்சப்பை தடவி, வட்ட நிலையில் தேய்த்து, பின் சுத்தமான நீரில் அலச வேண்டும்.

குறிப்பு:

மென்மையான கற்களான ஓபல் மற்றும் முத்து நகைகளை, கெமிக்கல் அல்லது கடுமையான சிராய்ப்பான் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. வெறும் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு தான் கழுவ வேண்டும்.

பாசிட்டிவ் & நெகடிவ் எண்ணங்கள் நல்லதுதான் ( எல்லாம் நன்மைக்கே )

பொதுவா ஏதாவதொரு விசயம் நடக்கணும்னு நெனச்சு, ரொம்ப நம்பிக்கையா அதுக்கான முயற்சிகள்ல ஈடுபட்டுகிட்டு இருக்கும்போது, அந்த விசயம் நடக்காதுங்குற மாதிரி யாராவது பேசினா நமக்கு எவ்ளோ கோவம் வரும்Huh?


“ஏய்.. அபசகுனமாப் பேசாதே“னு அவங்கள திட்டுவோம். சகுனம் பாக்குற பழக்கம் தவறுங்குறது பலருடைய கருத்து. ஆனா அப்டி நெனைக்கிறவங்க கூட, அபசகுனமா பேசுறத விரும்புறதில்லை. ஆனா நா இங்க சொல்ல வர்றது என்னனா.. அபசகுனமான எண்ணங்களும் நமக்குள்ள வேணும்குறது தான்.


நமக்குள் பாசிட்டிவான எண்ணங்கள் இருப்பது நல்லதுதான், ஆனா எப்போதும் அதுவே பழக்கமாகிவிடும் பட்சத்துல, நெகடிவ்வாக நடக்கும் சம்பவங்களை ஏற்றுக்கொள்ளும் தைரியம் பலருக்கு இருப்பது கிடையாது. “ஓவர் கான்ஃபிடன்ட், உடம்புக்கு ஆகாது“னு சொல்வாங்க.. அது கிண்டலுக்கு சொல்றதுனு தோணலாம். ஆனா அதுதான் உண்மையும் கூட. அளவுக்கு அதிகமான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு வைக்கும்போது, ஒருவேளை அது ஏமாற்றம் குடுத்துவிட்டால், அதைத் தாங்கும் மன வலிமை நமக்கு ஏற்படுவதில்லை.


அதுக்காக தன்னம்பிக்கை இருக்கக் கூடாதுனு சொல்ல வரல. எந்த விதமான மாற்றத்துக்கும் மனதைப் பழக்கப்படுத்திக்கணும்னு சொல்ல வர்றேன். நமக்குப் பிடிச்சமாதிரியான சூழல்கள்ல மட்டுமே நம்மள பொருத்திப் பாக்குறது தான் மனித நடைமுறை. நமக்குப் பிடிக்காத அல்லது நமக்கு எதிரான ஏதாவது சம்பவம் நடந்துருச்சுனா உடனே.. “எனக்கு மட்டும் ஏன் தான் இப்டி நடக்குதோ“னு நொந்துக்குறது தான் மனுஷங்களோட இயல்பு.


உதாரணத்துக்கு ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு, அந்த வேலை கட்டாயம் தனக்கு கிடைக்கும்னு அபாரமான நம்பிக்கைல, முதல் மாசம் வாங்கப்போற சம்பளத்துல என்னென்ன செலவு பண்ணலாம்குறது வரைக்கும் திட்டம் போட்டு வச்சிருப்பாங்க. சட்டுனு அந்த வேலை அவங்களுக்கு கிடைக்காதுங்குற சூழ்நிலை வரும்போது, அந்த ஏமாற்றத்த அவங்களால தாங்கிக்க முடியிறதில்ல. தனக்கு இனிமே வேலையே கிடைக்கப் போறதில்லையோங்குற மாதிரியான விரக்தி நிலைக்குப் போயிட்றாங்க.


ஒரு விசயம் நடக்கணும்னு நெனைக்கலாம்.. ஆனா அதே விசயம் நடக்கலனா மேற்கொண்டு என்ன பண்றதுன்னும் முன்கூட்டியே யோசிக்கணும். நேர்மறையாவே யூகம் பண்ணிட்டு, ஒருவேளை எதிர்மறையா நடக்கும்போது அந்த நேரத்துல என்ன செய்றதுனு தெரியாம முழிக்க கூடாது.


ஆனா.. அடுத்தவன் ஏதாவது காரியத்துக்கு முயற்சி செஞ்சுகிட்டு இருக்கும்போது லூசு மாதிரி “இதெல்லாம் நடக்காதுடா, விட்டுடு“னு சொல்லி அடி வாங்கிடாதீங்க.. நா சொல்றது உங்களோட தனிப்பட்ட உணர்வுகளப் பத்தி மட்டும் தான்.


இன்னும் தெளிவா சொல்லணும்னா... உதாரணத்துக்கு காதல் விசயத்த எடுத்துக்கலாம். (இப்ப படிப்பீங்களே..). ஒரு பொண்ண சின்சியரா லவ் பண்ணும்போது ரொம்பவே நம்பிக்கையோட அவகிட்ட சொல்லலாம். ஆனா உங்க லவ்வ அந்தப் பொண்ணு ஒருவேளை நிராகரிச்சுட்டா, மனசுடஞ்சு போய்டாம அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கணும்.


மறுபடியும் அவளுக்குப் (பிடிச்ச மாதிரி) புரிய வைக்க முயற்சி பண்ணணும். இல்லனா உருப்படியா வேறு ஏதாவது வேலையிருந்தா போய்ப் பாக்கணும். (லவ் பண்ற பொண்ணு செட் ஆகலனா, அவளோட தங்கச்சிக்கு ரூட் போட்றவங்களப் பத்தி நா பேசல.. நா சொன்னது சின்சியரா ஒரே பொண்ண லவ் பண்றவங்களுக்கு தான்).


காதல், வேலை வாய்ப்புனு மட்டுமில்ல.. நம்மளோட சின்னச் சின்ன விசயத்துல கூட ஏதாவதொரு எதிர்பார்ப்பு இருந்துகிட்டு தான் இருக்கும். குறிப்பிட்ட சம்பவம் நடக்கும்னு நாம எந்தளவு நம்புறோமோ.. அதே அளவு, அந்த சம்பவம் நடக்காமலும் போகலாம்.. அப்ப அடுத்தகட்ட நடவடிக்கையா என்ன பண்றதுணும் யோசிச்சு வைக்கணும். அப்படி எதிர்மறையான விளைவுகளப் பத்தியும் முடிவெடுத்து வைக்கிறது, நம்மல தோல்வியால ஏற்பட்ற பாதிப்புல இருந்து மீட்கும்.


அதுக்காக எப்ப பாத்தாலும், தோத்துடுவோம்னு நெனச்சுகிட்டே எந்த முயற்சியும் பண்ணாம இருக்குறது முட்டாள் தனம். நம்மளால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணணும். அது நடக்காத பட்சத்துல அந்த முடிவ ஏத்துகிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைய எடுக்கணும். அந்த ஏமாற்றத்தோட பாதிப்புலயே மூழ்கிடக் கூடாது.    ஆல் த பெஸ்ட்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top