.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 6 November 2013

11–12–13 அன்று திருமணம் நடத்த திட்டமிடும் ஜோடிகள்!

உலகில் பல்வேறு அரிய நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கின்றன. ஆனால் அரிய நாள் என்பது அத்தி பூத்தாற்போன்று எப்போதாவதுதான் வரும். அந்த அரிய நாள் வருகிற டிசம்பர் 11–ந்தேதி வருகிறது. 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் அந்த அபூர்வ நாளாக இது கருதப்படுகிறது. அதுதான் 11.12.13 என்றழைக்கப்படும் 11.12.2013 ஆகும்.

nov 6 - 11-12-2013-wedding-packages

இந்த நாளை அதிர்ஷ்ட நாளாக இளைஞர்களும், இளம் பெண்களும் கருதுகின்றனர். அதை தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக விரும்புகின்றனர். எனவே, அன்று தங்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளில் 2,265 ஜோடிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை அமெரிக்காவை சேர்ந்த தனியார் திருமண ஏற்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் வருகிற நவம்பர் 12–ந்தேதி அல்லது டிசம்பர் 11–ந்தேதி திருமணம் செய்ய பெரும்பாலான ஜோடிகள் ஆர்வமாக இருப்பது தெரிய வந்தது. இது கடந்த 2012–ம் ஆண்டில் அன்றைய கால கட்டத்தில் நடந்த திருமணத்தைவிட 72.2 சதவீதம் அதிகம் என கணக்கிட்டுள்ளது.

Wedding rush is on — for Tuesday 11/12/13

Tuesdays usually a big day for weddings — unless the date happens to be 11/12/13.
There’s going to be a rush to the altar next Tuesday, as an estimated 2,265 couples tie the knot on the next-to-last date of the century to feature three sequential numbers, according to David’s Bridal.

தமிழ் மணத்தில் என்ன சிக்கல்?





தமிழ் மணத்தில் என்ன சிக்கல்?





கடந்த சில நாட்களாக பதிவுகளைத்
தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லை....




  தகவல் தெரிந்தவர்கள் இங்கே கருத்துரைக்கலாம்!...................


மகாத்மா காந்தியின் ராட்டை ஒரு கோடிக்கு ஏலம்!

சமீப காலமாகவே மகாத்மா காந்தியின் பழைய செருப்பு, கண்ணாடி, ரத்தக்கறை படிந்த மண் ஆகியவற்றை லண்டனில் உள்ள ஏல நிறுவனங்கள் ஏலத்தில் விட்டு கொழுத்த லாபத்தை சம்பாதித்துள்ளன. அந்த வகையில், வெள்ளையர் ஆட்சி காலத்தின் போது புனே நகரில் உள்ள எர்வாடா சிறையில் காந்தி அடைக்கப்பட்டிருந்த போது அவர் பயன்படுத்திய மடிக்கக்கூடிய ராட்டையை லண்டனில் உள்ள முல்லாக் ஏல நிறுவனம் இன்று ஏலத்தில் விட்ட போது அது ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

nov 6 - gandhi-spinning

இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தி தனது ஆடைகளுக்கான துணியை சொந்த ராட்டையில் தாமாகவே நூலாக திரித்து பின் துணியாக நெய்து, தைத்து உடுத்தி வந்தார்.வெள்ளையர் ஆட்சி காலத்தில் சிறைவாசத்தை அனுபவித்த போதெல்லாம் அவருக்கு துணையாக இருந்தவை புத்தகங்களும், நூல் நூற்பதற்காக பயன்படுத்திய ராட்டையும் மட்டும் தான்
காந்தியின் பழைய செருப்பு, கண்ணாடி, ரத்தக்கறை படிந்த மண் ஆகியவற்றை லண்டனில் உள்ள ஏல நிறுவனங்கள் ஏலத்தில் விட்டு கொழுத்த லாபத்தை சம்பாதித்துள்ளன.அவ்வகையில், வெள்ளையர் ஆட்சி காலத்தின் போது புனே நகரில் உள்ள எர்வாடா சிறையில் காந்தி அடைக்கப்பட்டிருந்த போது அவர் பயன்படுத்திய மடிக்கக்கூடிய ராட்டையை லண்டனில் உள்ள முல்லாக் ஏல நிறுவனம் இன்று ஏலத்தில் விட்டது.
இதற்கான குறைந்தபட்ச ஏலத்தொகை 60 ஆயிரம் பவுண்ட்கள் என முல்லாக் ஏல நிறுவனம் அறிவித்திருந்தது.ஆனால், எதிர்பார்த்ததை விட இருமடங்கு அதிகமாக அந்த ராட்டை ஒரு லட்சத்து 10 ஆயிரம் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 1 கோடியே 8 லட்சத்து 99 ஆயிரத்து 878 ரூபாய்) ஏலம் போனது.
வெள்ளையர் ஆட்சியின்போது அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் மக்களின் நலனுக்காக பாடுபட்ட அமெரிக்க பாதிரியார் ரெவரெண்ட் ஃப்லாயிட் ஏ பஃபர் என்பவருக்கு இந்த ராட்டையை காந்தி அன்பளிப்பாக வழங்கி இருந்தார்.ராட்டையுடன் காந்தி தன் கைப்பட எழுதிய இறுதி உயில், கடிதங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் என அவரது வாழ்க்கையோடு தொடர்புடைய 60 பழங்கால பொருட்களும் ஏலம் விடப்பட்டன.இதில், காந்தியின் இறுதி உயில் மட்டும் 20 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

Mahatma Gandhi’s charkha sold for Rs 1.1 crore at UK auction


***************************************


Mahatma Gandhi’s over eight-decade old ‘charkha’ — spinning wheel — one of his most prized possessions that he used in Yerwada Jail during the ‘Quit India Movement’, was Tuesday auctioned in the UK for a whopping 110,000 pounds (Rs. 1.1 crore), nearly double the expected price.

Read more at: http://indiatoday.intoday.in/story/mahatma-gandhi-gandhi-charkha-gandhi-charkha-auction-yerwada-jail/1/321803.html

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாகும் இந்தியர்?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்டீவ் பாலிமர் விரைவில் இன்னும் ஓராண்டில் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து புதிய சி.இ.ஓ. பதவிக்கு இந்தியர் உட்பட 5 பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.அதில் இந்தியாவின் சத்யா நாதல்லே பெயரும் பரீசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐதராபாத்தைச் சேர்ந்த இவர் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கிளவுட் அண்ட் என்டர்பிரைசஸ் பிரிவின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.



                               nov 6 - vanikam microsoft


உலகின் மிகப்பெரிய சாப்டுவேர் கம்பெனியான மைக்ரோசாப்டுவேரின் தலைவராக அதன் நிறுவனர் பில் கேட்ஸ் இருந்து வருகிறார். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ.) இருந்த ஸ்டீவ் பால்மர் கடந்த வெள்ளிக்கிழமை ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து அப்பதவிக்கான நபரை தேர்வு செய்ய மைக்ரோசாப்டுவேர் நிறுவனம் ஒரு சிறப்புக்குழுவை அமைத்துள்ளது.


மிகப்பெரிய நிறுவனமான இந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் வாரிசாக யாரையும் அறிவிக்கவில்லை. இதன் 38 ஆண்டு கால வரலாற்றில் பால்மர் மற்றும் நிறுவனர் பில் கேட்ஸ் என இரண்டு சி.இ.ஓ-க்களை மட்டுமே அது சந்தித்து இருக்கிறது. இப்பொழுது பால்மர் ஓய்வு பெறுவதாக அறிவித்ததையடுத்து அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் பட்டியலில் இரு இந்தியர்கள் உள்பட 9 பேர் இருக்கின்றனர். இதில் முதலாவது நபராக இந்தியர் சத்யா நாதெல்லா என்பவர் வருகிறார்.


ஐதராபாத்தை சேர்ந்தவரான சத்யா மைக்ரோசாப்டின் கிளவ்டு அண்டு எண்டர்பிரைசசின் தலைவராக இருந்து வருகிறார். இவர் தனது இளங்கலை படிப்பான எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்கை மங்களூர் பல்கலைக்கழகத்தில் பயின்றார். மாஸ்டர் டிகிரியை (கம்ப்யூட்டர் சையின்ஸ்) விஸ்கான்சின் பல்கலைக்கழகத்திலும், எம்.பி.ஏ. மாஸ்டர் டிகிரியை சிகாகோ பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.


இந்நிலையில் சி.இ.ஓ பதவிக்கு போர்ட் நிறுவத்தின் தற்போதைய முதன்மை அதிகாரி ஆலன் முல்லே , நோக்கியா நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ ஸ்டீபன் எலாப் மற்றும் முன்னாள் ஸ்கைப் நிறுவனத்தின் சி.இ.ஓ. டோனி பேட்ஸ் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தெரிய வருகிறது.


Microsoft Finalizing CEO Replacement Shortlist To Include Current Ford Executive Alan Mulally

******************************************


 The company (NASDAQ:MSFT) has whittled down its list of external candidates to around five people, reports Reuters. According to sources familiar with the selection process, the list includes Ford Motor Co.’s current chief Alan Mulally and former Nokia CEO Stephen Elop. The shortlist also includes three internal candidates at the world’s biggest software maker. Former Skype CEO Tony Bates and Staya Nadella are reportedly included as well. (Skype is now a division of Microsoft.) Bates now heads Microsoft’s business development and Nadella serves as the company’s cloud and enterprise chief.

கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி - நாட்டுக்கு தலைவர் யார்? அரசியல்வாதிகளுடன் விவாதம் நடத்த தயார்!

 
 நாட்டுக்கு நான்தான் தலைவர் என அரசியல்வாதி கூறினால் அவருடன் விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன் என்றார் நடிகர் கமல்ஹாசன். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: விஸ்வரூபம் 2ம் பாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் ஏற்கனவே சொன்னதுபோல் நான் நாட்டைவிட்டு வெளியேறுவேன். பொழுதுபோக்குகள் சமுதாயத்தை எப்படி வழிநடத்த உதவுகின்றன என்கிறார்கள். சமூகம்தான் பொழுதுபோக்கை வழிநடத்துகிறது. சமூகத்தில் உள்ளதைதான் பொழுதுபோக்கு அம்சங்கள் பிரதிபலிக்கின்றன.

தென்னிந்திய நடிகர்கள் பலர் அரசியலில் இருப்பதுபோல் கமல்ஹாசன் 2014ம் ஆண்டு அரசியலுக்கு வருவாரா?’ என்று கேட்கிறார்கள். கமல்ஹாசனுக்கு பார்வையாளர்கள் மட்டுமே தேவை. எப்போதுமே நான் வித்தியாசமாக செய்பவன். குறிப்பிட்ட விஷயத்தில் எதற்காக மற்றவர்கள் செய்ததைப்போல் நானும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

5 வருடத்துக்கு ஒருமுறை எனது அரசியல் பணியை செய்துகொண்டுதான் இருக்கிறேன். அது தொழில் ரீதியானதல்ல. ஓட்டு போடும்போது ஒவ்வொருவரும் தங்கள் குரலை உறுதியாக எதிரொலிக்க வேண்டும். அதன்பிறகு, இலவசமாக நாங்கள் சேவை செய்கிறோம் என்று சொல்லும் அரசியல் தொழில் தெரிந்தவர்களிடம் அந்த பொறுப்பை விட்டுவிட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு நாம் நல்ல சம்பளம் தந்துவிட்டு நாட்டை நல்லமுறையில் வழிநடத்திச் செல்ல அவர்களிடம் கேட்க வேண்டும். அவர்கள் நமது பிரதிநிதிகள்தான். தயவுசெய்து அவர்களை தலைவர்கள் என்று எண்ணிவிடாதீர்கள். மக்கள்தான் தலைவர்கள். எந்த அரசியல்வாதியாவது நான்தான் தலைவர் என்றால் அவர்களுடன் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு கமல் கூறினார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top