.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 2 November 2013

நாட்டையே உலுக்கிய இரண்டு சம்பவங்கள்! குற்றவாளிகள் யார் என தெரியாது?

சாதாரண மக்களுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள், அதன் நிர்வாகிகள், மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என, பலருக்கும் அவரை நன்கு தெரிந்திருக்கும்.


சுனிதா நாராயணன்:


உலக நாடுகள் அனைத்திலும், தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளிக்கும் பிரமாண்ட நிறுவனங்களையும் எதிர்த்து நிற்பவர் இவர் என்பதால், அந்த நிறுவனங்கள் இவரைப் பற்றி நன்கு அறிந்திருக்கும்.உதாரணமாக, குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் உள்ள கிருமிகளை அகற்ற, அளவுக்கு அதிகமாக, பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், குளிர்பானங்கள், உயிர்கொல்லி பானங்களாக மாறி விடுகின்றன என, நாட்டுக்கு வெளிப்படுத்தியவர் இவர்.அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஏராளமான ஆய்வுகளில், இவர் சொன்னது சரி தான் என்பது, தெரிய வந்த போதிலும், பூச்சிக்கொல்லி குளிர்பானங்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.அவர், சுனிதா நாராயணன்.டில்லியை சேர்ந்த இவர், 'சென்டர் பார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்' என்ற, அரசுசாரா தொண்டு நிறுவனத்தை, நடத்தி வருகிறார். அதன் மூலம், கண்ணுக்குத் தெரியாத பல, பிரமாண்ட எதிரிகளை சம்பாதித்துள்ளார்.சாதாரண மக்களின் பாதுகாப்பிற்காக, அவர்களின் வாழ்வாதாரத்திற்காக, இவர் மேற்கொள்ளும் முயற்சிகள், இயற்கையாகவே இவருக்கு, பல எதிரிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.இருந்தாலும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்த அவரைக் கொல்ல, இரண்டு வாரங்களுக்கு முன், முயற்சி நடந்தது.

அதை போலீசார், விபத்து என கூறினாலும், இன்னும் எழுந்திருக்க முடியாத வகையில், பலத்த காயம் அடைந்துள்ள சுனிதாவை கொல்ல நடத்தப்பட்ட முயற்சி என்றே, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.ஏனெனில், வாகனங்கள் அதிகம் ஓடாத அந்த காலைப் பொழுதில், வேகமாக வந்த கார் சைக்கிளில், சாலை ஓரம் சென்ற சுனிதா மீது மோதி, துாக்கி எறிந்து சென்றுள்ளது என்றால், அதை விபத்து என கூறுவதா...!

விபத்து என்றால், அதை ஏற்படுத்தியவர் யார் எனத் தெரியவேண்டுமல்லவா...?முகத்திலும், தோள்பட்டையிலும் பல அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. மிகவும் மோசமாக இருந்த அவரின் உடல் நிலை, கடந்த சில நாட்களாக, சற்றே முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால், அவர் மீது மோதிய கார் பற்றிய விவரமும் தெரியவி்ல்லை; விசாரணையில் முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இரண்டாவது சம்பவம், கொலை.மகாராஷ்டிராவின், புனே நகரில், பில்லி சூனிய பேர்வழிகளுக்கு எதிராகவும், மோசடி மந்திரவாதிகளுக்கு எதிராகவும், பல ஆண்டுகளாக போராடி வந்த, நரேந்திர தபோல்கர், கடந்த ஆகஸ்ட் மாதம், மர்ம நபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.அவரை சுட்டுக் கொன்ற கொலைகாரர்கள் பயணம் செய்த இருசக்கர வாகனம், சென்ற வழி எல்லாம், போலீசுக்கு தெரிகிறது; ஆனால், கொலைகாரர்கள் மட்டும், இன்னும் பிடிபடவில்லை.எம்.பி.பி.எஸ்., படித்து, நோயாளிகளின் நோயை போக்கும் முயற்சியில் சக டாக்டர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், நரேந்திர தபோல்கர், சமூகத்தை பிடித்திருந்த, நோயை போக்க முயற்சித்தார். அதனால், அவரின் சக டாக்டர் நண்பர்கள், கோடிகளைக் குவித்த நிலையில், இந்த உலகை விட்டே போய்விட்டார் நரேந்திர தபோல்கர்.மகாராஷ்டிர அந்தராஷ்ரதா
நிர்மூலன் சமதி என்ற பெயரில், ஒரு அமைப்பையே நிறுவி, மூட நம்பிக்கைகளுக்கும், பில்லி, சூனியத்திற்கும் எதிராக போராடிவந்த, நரேந்திரா மறைந்து விட்டார்.அவர் விட்டுச் சென்ற பணியை, அவரின் வாரிசுகள், ஹமித் மற்றும் முக்தா தொடர்கின்றனர்.


சடங்குகள் இல்லாமல்...:


வீடு கட்டுபவர்கள், நல்ல நாளில் வேலைகளைத் துவங்குவர். வீட்டின் அறைகளை, வாஸ்து சாஸ்திரப்படி அமைப்பர். வீட்டுக்கு வெளியே, திருஷ்டி பூசணிக்காயை போட்டு உடைப்பர்.நரேந்திர தபோல்கரும் வீடு கட்டினார்.எவ்வித சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கும் இடம் கொடுக்காமல், வாஸ்து பற்றி கவலைப்படாமல், தன் இஷ்டத்திற்கு வீட்டைக் கட்டினார். திருஷ்டி பூசணிக்காய் கிடையாது; புதுமனை புகுவிழா கிடையாது.எளிமையாக வாழ்ந்து காட்டியவர். எளிமையான முறையில் திருமணம் செய்த அவர், தன் இரு வாரிசுகளுக்கும், மிக எளிமையாக, எவ்விதச் சடங்குகளும் இல்லாமல் திருமணம் நடத்தியவர்.

தீபாவளி லேகியம் செய்வது எப்படி?

தீபாவளி அன்று காலையில் எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு பலகாரங்களை தின்பதால் தொண்டை கட்டு வரும். அதில்லாமல் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி லேகியம் தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த லேகியம் ரெடி பண்ண நேரமில்லாதவ்ர்கள் ஓமம், சுக்கு, வெல்லம் தலா ஒரு கரண்டி எடுத்து பொடி செய்து தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆளுக்கு ஒன்று சாப்பிட தீபாவளி லேகியம் சாப்பிட்ட பலன் கிடைக்கும்.


nov 2 - deepavali lekiyam


இனி தீபாவளி லேகியம் எப்படி செய்வது என்று பார்ப்போமா?


தேவையானவை:


தணியா : 4 கப்

இஞ்சி : 200 கிராம்

ஓமம் : 100 கிராம்


சுக்கு, மிளகு, திப்பிலி : தலா 10 கிராம்

வெல்லம் 100 கிராம்: (துருவிக் கொள்ளவும்)

பொடித்த ஏலக்காய் 5 கிராம்: (விருப்பப்பட்டால்)

நெய் : 1/4 கப்

செய்முறை:

* தணியாவையும், சீரகத்தையும் நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* இளசாக இருக்கும் இஞ்சியாகப் பார்த்து வாங்கவும். இஞ்சியை நன்கு சுத்தம் செய்து தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* மிக்சியில் அல்லது அம்மியில் இஞ்சியை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

* ஊற வைத்த தணியாவையும், சீரகத்தையும் இஞ்சியுடன் சேர்த்து அரைக்கவும்.

* கலவை நன்றாக அரைந்து விழுதாக ஆனதும் அதில் வெல்லத்தை பொடி செய்து கலக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து விழுதை அதில் போட்டு நன்கு கிளறவும்.

* பின்னர் அதில் நெய்யை விட்டு கிளறிக் கொண்டே இருங்கள். லேகியம் பதத்திற்கு வந்ததும் இறக்கி உலர்ந்த பாத்திரத்தில் பத்திரப்படுத்துங்கள்.

* இதனை அனைவரும் சாப்பிடலாம். பலகாரங்களால் வயிற்றுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை இந்த லேகியமே சரி செய்து விடும்.

கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகை ரத்து!


அதிமுக இணையதளத்தை முடக்கிய பாகிஸ்தானியர்!

nov 2 - AIADMK website hacked













அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.aiadmkallindia.org இதனுள் அத்துமீறிய பாகிஸ்தான் இணையதள ஹேக்கர்கள் ஒரு மண்டை ஓட்டின் படத்தை வைத்துவிட்டு அதில் பாகிஸ்தான் கொடியை பறக்கும்படி டிசைன் செய்துள்ளனர்.இந்த இணையதள தாக்குதலுக்குப் பிறகு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தற்காலிகமாக அதன் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுள்ளது.



தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பாகிஸ்தானை சேர்ந்த இணைதள ஹோக்கர்கள் அத்துமீறி நுழைந்து தங்களது ஹேக் தகவலை பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ இணையதளமான www.aiadmkallindia.org – க்குள் அத்துமீறிய பாகிஸ்தான் ஹேக்கர்கள், அதில், இஸ்லாம் ஜிந்தாபாத், இஸ்லாமியர்கள் வாழ்க, பாகிஸ்தான் ஜிந்தாபாத் போன்ற வாசகங்களைப் பதிந்துவிட்டு ஹேக் செய்தது “HACKED BY H4$N4!N H4XOR” என்று குறிப்பிட்டுள்ளனர்.


 தங்களுக்கு நீதியும், அமைதியும் வேண்டும் என்று அ.தி.மு.க. இணையத்தளத்தில் குறிப்பிட்டு Hasnain1337@gmail.com என்ற இ-மெயில் ஐடியை பதிவு செய்துள்ளனர். வலைத்தளத்தில் மண்டை ஓட்டின் படத்தை வைத்துவிட்டு, அதில் பாகிஸ்தான் கொடியை பறக்கும்படி டிசைன் செய்துள்ளனர்.



இந்த தாக்குதலுக்குப் பிறகு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கட்சியின் தொலைக்காட்சி சேனலான www.jayatv.tv என்ற வலைத்தளத்தையும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் அத்துமீறி தாக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது..ஆனால், அது தமது அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலுக்கான வலைத்தளம் அல்ல; jayanewslive.in, jayanetwork.com ஆகியவை அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் என்று ஜெயா டிவி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

பட்டதாரிகளுக்கு HDFC வங்கியில் மேலாளர் பணி வாய்ப்பு!

நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் முன்னணி வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


nov 2 - vazhikatti HDFC_Bank_


பணி:

01. Sales Manager

02. Credit Manager

03. Location manager

04. Retail Assets

05. Asset Desk Manager

06. Collection Manager

07. Relationship Manager

08. Cross Sell Manager

09. Sales Quality Manager

10. Risk Analyst

கல்வித்தகுதி:

பி.காம் முடித்திருக்க வேண்டும் அல்லது நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:

 விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.hdfcbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.hdfcbank.com/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top