.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 29 October 2013

இணைய தாக்குதலை தடுக்க புதிய வழி!

வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய விவரங்களை இந்த கப்யூட்டர் கொள்ளையர்கள் களவாடி விடும் அபாயமும் இருக்கிறது.பாஸ்வேர்டுகளும் இப்படி பறி போவதுண்டு.


இந்த விபரீதத்தை தடுக்க வங்கிகளில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்படுகளை மிஞ்சும் வகையில் இணைய உலகிலும் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்,மால்வேரோடு மல்லுகட்டும் சாப்ட்வேர் பயர்வால் எனப்படும் பாதுகாப்பு வேலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.


இவற்றின் நோக்கம் எல்லாம் ஒன்று தான்.அத்துமீறி நுழைய முயலும் எந்த கப்யூட்டர் கில்லாடியையும் உள்ளே விடாமல் தடுப்பது தான் இவற்றின் பணி.


ஆனால் இந்த சாப்ட்வேர்களின் கண்ணில் மண்ணை தூவிட்டு தளங்களுக்குள் நுழைந்துவிடும் கில்லாடிக்கு கில்லாடிகளும் இருக்கவே செய்கின்ற‌னர்.


கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிபுணர்களும் புதிய பாதுகாப்பு வழிகளை உருவாக்கி கொண்டே இருக்கின்றனர்.


பொதுவாக இத்தகைய சாப்ட்வேர்களும் பாதுகாப்பு வழிகளும் ஹைடெக்காக இருக்குமே தவிர சுவாரஸ்யமானதாக இருக்க வாய்ப்பில்லை.ஒரு பயர்வால் செயல்ப‌டும் விதம் பற்றி அறிய யாருக்கு ஆட்வம் இருக்கும் சொல்லுங்கள்.


 ஆனால் இதற்கு மாறாக சமீபத்தில் அறிமுகமாகியுள்ள பாதுகாப்பிற்கான புதிய சாப்ட்வேர் கொஞ்ச‌ம சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது.அந்த சாப்ட்வேர் செயல்படும் விதம் அட என வியக்க வைத்து புன்னகைக்கவும் வைக்கிறது.


 பொதுவாக் எல்லா பாதுகாப்பு சாப்ட்வேர்களும் கம்ப்யூட்டர் கொள்ளையர்களை தடுத்து நிறுத்துவதில் கவன்ம் செலுத்துகின்றன என்றால் மைகோனோஸ் என்னும் இந்த புதிய சாப்ட்வேர் கம்ப்யூட்டர் திருடர்களையும் கொள்ளயர்களையும் உள்ளே அழைத்து அதன் பிறகு அவர்களுக்கு போக்கு காட்டி வெறுப்பேற்றி களைப்படைய வைத்து விட்டால் போதும் என புற முதுகிட்டு ஓட வைக்கிறது.


மற்ற சாப்ட்வேர்கள் பூட்டு போல செயல்ப‌டுகின்றன என்றால் இந்த சாப்ட்வேரோ இல்லாத ஒரு கதவை உருவாக்கி அதன் வழியே கம்ப்யூட்டர் திருடர்களை நுழைய வைத்து அவ‌ர்களுக்கு தவறான தகவல்களாக அள்ளிக்கொடுத்து குழப்பி விடுகிறது.


மைகோனோஸ் சாப்ட்வேர் இதனை செய்யும் விதம் கச்சிதமானது.ஒரு விழிபான காவலாளி போல இது திருடர்கள் யாரேனும் அத்துமீறி நுழைய முயல்கின்றனரா என்பதை சரியான நேரத்தில் கண்டு பிடித்து உஷாராகி விடுகிற‌து.


அனால் அதன் பிறகு அவசரப்படாமல் திருடனோடு மல்லுக்கட்ட தயாராகிறது.உடனே அது பொய்யான பாஸ்வேர்டுகளை எடுத்து சம‌ர்பிக்கிறது.மேலும் திருட்டு ஆசாமி தளத்திற்குள் முன்னேறி செல்வது போன்ற உண‌ர்வை ஏற்படுத்தி அங்கும் இங்கும் அல்லாட‌ அவைக்கிறது.
வழக்கமாக ஒரு மணியில் முடிய வேண்டிய வேலையை பல மணி நேரத்திற்கு இழுத்தடிக்கிறது.அதன் பிறகு பார்த்தால எல்லாம் போலியான தகவல்கள் என்ற உண்மை திருடனை வெறுப்பேற்றும்.


இப்படி திருட வந்த கில்லாடியின் உழைப்பை விரையமாக்கி இந்த சாப்ட்வேர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும்.திருடனும் ஒரு கட்டத்தில் வெறுத்து போய் வேறு தளம் பார்க்க சென்று விடுவார்.அதற்குள் ஊடுருவ முயன்ற ஆசாமியின் அடையாளத்தை அறிய உதவக்கூடிய தகவல்களை இந்த சாப்ட்வேர் சேகரித்து விடும்.


கம்ப்யூட்டர் திருடர்களை தடுக்க எவ்வளவு தான் பாதுகாப்பான‌ வ‌ழியை உருவாக்கினாலும் அதனை உடைக்ககூடிய வழியை கண்டுபிடித்து விடும் நிலை இருப்பதால் இந்த புதுமையான சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் மைகோனோஸ் நிறுவன தலைவர் டேவிட் கோயர்ட்ஸ்.


இந்த சாப்ட்வேர் கப்ம்யூட்டர் திருடர்களின் முயற்சியை வீண‌டித்து அந்த செயலுக்கான பயனையே கேள்விக்குள்ளாக்கி விடுவதாகவும் இதுவே சிறந்த வழி என்றும் அவர் கூறுகிறார்.


சாப்ட்வேரும் கூட சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என்பதையும் அவர் சொல்லாமல் சொல்கிறார்.


கம்ப்யூட்டர் சிப்புக்குள் இருக்கும் ஓவியம்!

1415447 


கலை ஆர்வம் எங்கெல்லாம் மறைந்து கிடக்கிறது என தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆம் கம்ப்யூட்டர் சிப்புக்குள்ளும் கலை ஆர்வத்தை காணலாம் தெரியுமா? இது கம்ப்யூட்டர் உலகம் அதிகம் அறிந்திரதா ரகசிய அதிசயம்.

மைக்ரோசிப்பை கம்ப்யூட்டரின் மூளை என்கின்றனர். அந்த சிப்பின் ஏதோ ஒரு மூலையில் தான் சிப் வடிவமைப்பாளர்களின் நுண் ஓவியங்கள் ஒளிந்திருக்கின்றன. அதாவ்து சிப்பில் இருக்கும் சர்க்யூட்டில் வரையப்பட்ட ஓவியங்கள் .

இப்படி சிப்புக்குள் ஓவியம் இருப்பது அநேகமாக யாருக்குமே தெரியாது.ஏன் என்றால் இந்த ஓவியங்களை வெறும் கண்களால் பார்க்க முடியாது.மைக்ராஸ்கோப் எனப்படும் நுண்நோக்கி வழியே மட்டுமே இவற்றை காணலாம். நகக்கணு அளவிலான இடத்தில் சிப் செயல்பாட்டிற்கு தேவையான முழு சர்க்யூட்டையும் உருவாக்கிவிடும் தொழில்நுட்ப கலையில் கைதேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் இதே திறமையை பயன்படுத்தி சிப்பின் பயன்படுத்தப்படாத ஒரு மூலையில் ஒரு சித்திரத்தை வரைந்து வைத்து விடுகின்றனர்.

ஓவியர்கள் தாங்கள் வரைந்த படைப்பின் கீழ் உரிமையுடனும் பெருமித்த்துடனும் கையெழுத்திடுவது போல் சிப் வடிவமைப்பாளர்களும் தங்களது முத்திரையாக மைக்ரோ ஓவியங்களை வரைவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த ஓவியங்கள் எந்த அளவு சிறியவை தெரியுமா? நமது தலை முடி இருக்கிறது அல்லவா? அதன் அகலத்தில் பாதி தான் இவற்றின் அளவு இருக்கும்!

சாதரணமாக சிப்பை பார்க்கும் போது இந்த ஓவியங்கள் இருப்பதே தெரியாது.அதனால் தான் சிப்புக்குள் இருக்கும் இந்த ஓவியங்களும் உலகம் அறியாத ரகசியமாகவே இருந்தன.

யாரும் பார்க்க முடியாத இந்த ஓவியங்களை வடிவமைப்பாளர்கள் வரைந்து வைத்தது ஏன்? இதை ஒரு வித சுய திருப்தி எனலாம். சுய வெளிப்பாடு ஏன்றும் சொல்லலாம்.முழுமையான ஒன்றை உருவாக்கிய மகிழ்ச்சியில் ஒரு படைப்பாளியாக வடிவமைப்பாளர்கள் தங்கள் முத்திரையை பதிக்கும் வழியும் கூட!’

ஆரம்ப காலத்தில் இவற்றிக்கு நடைமுறை பயனும் இருந்தது. சிப் வடிவமைப்பை வேறு ஒரு நிறுவனம் காபி அடித்து விட்டால், அவை எங்களுடையவை என்று அடையாளம் காட்டுவதற்கான வழியாகவும் இந்த ஓவியங்கள் அமைந்திருதன. ஆனால் 1984 ல் அறிமுகமான காப்புரிமை சட்டத்திருத்தம் இந்த பழக்கத்தை தேவையில்லாமல் செய்து விட்டது.
இந்த ஓவியங்களை சிப் கலை, சிலிக்கான் கலை, சிலிக்கான சித்திரம் என்று பல பெயர்களில் குறிப்பிடுகின்றனர். நாம் சிப்போவியம் என்றும் வைத்துக்கொள்ளலாம்.

கம்ப்யூட்டர் சிப் உருவாக்கப்பத்துவங்கிய காலத்தில் இருந்தே இந்த மைரோ ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. அன்றைய மைக்ரோசாப்டான டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட் உருவாக்கிய ஆரம்ப கால சிப்களில் சிப்போவியத்தை காணலாம். பொதுவாக சிப் வடிவமைப்பாளர்கள் தங்களுக்கு பிடித்த கார்ட்ட்டுன் பாத்திரம், செல்லப்பிராணிகள், வாகனங்கள் போன்றவற்றை வரைத்து வைத்துள்ளனர். டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட் நிறுவன வடிவமைப்பாளர்கள் நிலவில் கால் பதித்த சாதனை போன்றவற்றையும் சிப்போவியமாக தீட்டியுள்ளனர்.

இந்த ஓவியங்கள் பெரும்பாலும் சிப் செயல்பாட்டில் குறுக்கிடாதவையாக இருக்கும் என்றாலும் இவற்றால் சிப் செயல்பாட்டில் குழப்பம் ஏற்பட்ட சம்பவங்களும் உண்டு.

வடிவமைப்பாளர்கள் தங்கள் குழுவில் உள்ள சக வடிவமைப்பாளர்களை கேலி செய்யவும் இந்த ஓவியங்களை பயன்படுத்தியதுண்டு. எது எப்படியோ இவற்றை பெரும்பாலும் யாரும் பார்த்து ரசிக்க முடியாது. சிப்பை மேம்படுத்தும் போது இவை வடிவமைப்பாளர்கள் கண்ணில் படலாம். ஒரு சில வடிவமைப்பாளர்கள் இந்த மைக்ரோ ஓவியங்களை பெரிதாக்கி தங்கள் அலுவலகங்களில் மாட்டி வைத்ததும் உண்டு.ஆனால் அவற்றை அலுவலக ஊழியர்கள் மட்டுமே பார்க்க முடியும்.

நவீன குகை ஓவியங்களாக மறைந்திருந்த இவற்றை உலகின் பார்வைக்கு வெளிச்சம் போட்டு காட்டியது மைக்கேல் டேவிட்சன் என்பவர்.

எல்.ஜி. வளைந்த திரையுடன் கூடிய ஜி பிளெக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!



எல்.ஜி. நிறுவனமானது வளைந்த திரையுடன் கூடிய ஜி பிளெக்ஸ் ஸ்மார்ட்போன் தொடர்பான தகவல்களை அறிவித்துள்ளது. இதுவரை உறுதிப்படுத்தப்படாமல் இருந்த எல்.ஜி.யின் வளையக் கூடிய ஸ்மார்ட் போன் தொடர்பான தகவல் தற்போது வெளியிட்டுள்ளது.


இது தொடர்பில் எல்.ஜி. வெளியிட்டுள்ள தகவலின் படி ஜி பிளெக்ஸ் ஸ்மார்ட் போனானது நெகிழ்ச்சியான 6 அங்குல ஓ.எல்.ஈ.டி. திரையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் எ 177 கிராம்கள் என்பதுடன் 2.26GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 800 ப்ராசசர் மூலம் ஜி பிளெக்ஸ் ஸ்மார்ட் போன் இயங்குகின்றது. இதுதவிர 2GBரேம், 13- மெகாபிக்சல் கேமரா போன்ற வசதிகளை இது உள்ளடக்கியுள்ளது.


'மல்டிடாஸ்கிங்' செயற்பாடுகளுக்காக திரையை இரண்டாக பிரிக்கக்கூடிய 'டுவல் விண்டோஸ்' வசதி, வெவ்வேறு விதமாக திரையை அண்லொக் செய்யும் 'சுவிங் லொக் ஸ்கிரீன்' வசதி, போனின் பின்புறத்தில் விழும் சிறு கீறல்களை சில நிமிடங்களில் தானாக போக்கிக்கொள்ளும் 'self-healing' தொழில்நுட்ப வசதி என்பன அவற்றில் சிலவாகும். இந்த ஃபோன் எப்போது சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று எல்.ஜி. நிறுவனம் அறிவிக்கவில்லை.

மசாஜ ஏன்? யார்?எப்போ?எப்படி?பண்ணலாம்!

இன்றைய சூழ்நிலையில் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் முதலில் வருவது மன அழுத்தம என்னும் நோய்தான்.இத்தகைய மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாவிட்டால், உடல் நிலையானது இன்னும் மோசமாகிவிடும். குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்றவையும் சீக்கிரமே வந்துவிடும்.

ஆகவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணிகளில் முக்கியமானது மசாஜ்.மசாஜ்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு இடத்திலும் மசாஜானது வித்தியாசப்படும். பொதுவாக அனைத்து வகையான மசாஜ்களும் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியவைதான்.எனவே மன அழுத்தத்தில் இருந்து விடுபட நினைத்தால் ஒரு சில மசாஜ்களை பின்பற்றி வர வேண்டும்.



29 - massage health




அதிலும் இயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது இந்த மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரீஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மசாஜ், நோய் தீர்க்கும் ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.


மசாஜ் செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பயக்கிறது என்பதை விரிவாக காண்போமா?.


மசாஜ் செய்வதால், தோலில் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மசாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைந்து, உடலில் காணப்படும் தீய கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும். மசாஜ், தசைகளின் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில், “லாக்டிக் ஆசிட்’ சேரும். மசாஜ், தசைகளில் சேரும், “லாக்டிக் ஆசிட்’களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும்.


ரத்த ஓட்டம்:

மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், அவ்வுடல் உறுப்புகளுக்கு அதிகளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும். மசாஜ் செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.

நரம்பு: நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் மசாஜ், நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து, அவற்றை மென்மையாக்கி. சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும்.

செரிமான மண்டலம்:

வயிற்றில் மசாஜ் செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சிறுநீர் மண்டலம்: மசாஜ் செய்வது, சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகின்றன.

இதயம்:

முறையாக செய்யப்படும் மசாஜ், இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன் செயல் திறனை அதிகரிக்கிறது.

பொதுவாக, மசாஜ் செய்வதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும்; ஆனால், உடல் அதிக வறட்சி தன்மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால், ஈரத் துணி அல்லது மருந்து எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ்வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.

மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:
 
* காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் எவ்வித மசாஜும் செய்யக்கூடாது.

* கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.

* வயிற்றுப் போக்கு வாயுப் பிரச்சினை, அப்பென்டிசைட்டிஸ், சிறு குடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்னை உடையவர்கள் வயிற்றில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

* தோல் வியாதி உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்தமற்றது.

தன் கையே தனக்கு பாஸ்வேர்டு.

passwd_x220 

பாஸ்வேர்டு தொடர்பான பரிசோதனை முயற்சிகளில் ஒன்றாக அறிமுகமான டைனாஹான்டு முறை புழக்கத்திற்கு வராமலே காணாமல் போய்விட்டது. இருந்தாலும் இந்த பாஸ்வேர்டு முறையை அறிந்து கொள்வது தப்பில்லை.


டைனாஹான்டு பாஸ்வேர்டு முறை வித்தியாசமானது ,சுவாரஸ்யமானது என்பது மட்டும் இதற்கு காரணமல்ல. சிறந்த பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான தேடல் எத்தனை தீவிரமானதாக இருக்கிறது,எந்த எந்த திசைகளில் எல்லாம் நடந்து வருகிறது இவை எல்லாவற்றையும் மீறி இது எத்தனை சவாலானதாக இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடியது என்பதற்காகவே இந்த முறையை தெரிந்து கொள்ளலாம்.


பாஸ்வேர்டு என்ற பெயரில் ஏதோ சொற்கூட்டத்தை சமர்பிக்கும் தேவை இல்லாமல், ஒருவர் தனது கையெழுத்தையே பாஸ்வேர்டாக பயன்படுத்துவது தான் டைனாஹான்டு முறை. இதில் பயனாளிகள் தங்கள் சொந்த கையெழுத்தை கண்டுபிடித்து அடையாளம் காட்டினால் போதுமானது.


இதற்காக முதலில் பயனாளிகள் தங்களது கையெழுத்து மாதிரிகளை சம‌ர்பிக்க வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் இந்த கையெழுத்தை அலசி ஆராய்ந்து அதன் தனித்தன்மைகளை குறித்து கொள்ளும். அதன் பிறகு கம்ப்யூட்டரில் அல்லது ஏதேனும் இணைய கணக்கில் நுழைய முற்படும் போது பலவிதமான எண்கள் காண்பிக்கப்படும்.அதில் நீங்கள் சம்ர்பித்த கையெழுத்து மாதிரியும் இருக்கும். அதை நீங்கள் சரியாக அடையாளம் காட்டினால் மேற்கொண்டு சேவையை பயன்படுத்தலாம்.


உங்களை கையெழுத்தை நீங்கள் மட்டுமே அடையாளம் காணமுடியும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த முறை உருவாக்கப்பட்டது. சொற்களை விட ஒருவர் எழுத்து எண்களின் மாதிரியே மற்றவர்களால் எளிதில் அடையாளம் காணப்பட முடியாது என்பதால் இந்த முறையில் ஒருவர் எழுதி சம்ர்பிக்கும் எண்களே பயன்படுத்தப்படுகிறது.


பயோமெட்ரிக் உள்ளிட்ட மற்ற பாஸ்வேர்டு முறைகளை காட்டிலும் இது எளிமையானது என்பது இதை உருவாக்கிய ஸ்காட்லாந்து ஆய்வாளர் கரேன் ரெனாடு கருத்து. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் புரிதல் குறைபாடு கொண்டவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் அவர். வங்கி கணக்கி போன்றவ‌ற்றை இயக்க இந்த முறையை பயன்படுத்தாவிட்டாலும் சமூக இணையதளங்களில் இதை பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தார்.
ஏனோ இந்த முறை ஆய்வு நிலையை தாண்டி முன்னேற்வில்லை.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top