.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 27 October 2013

உங்கள் ‘பி.சி’‍ யில் பறவைகள் சங்கீதம் கேட்க!

original 

மணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இடைவிடாம‌ல் வேலை செய்ய வேண்டியிருப்பவர்கள் நடுவே ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுதற்கான இதமான வழியை பேர்ட்சாங்.எபெம் இணையதளம் வழங்குகிறது. எப்போதெல்லாம் கம்ப்யூட்டர் பணி சோர்வில் ஆழ்த்துகிறதோ அப்போதெல்லாம் இந்த தளத்தின் பக்கம் போனால் போதும் பின்னணியில் இனிமையான பறவைகள் சங்கீதத்தை கேட்டு ரசிக்கலாம். அப்படியே அந்த இனிய ஒலிகளை கேட்டு ரசித்தபடி எதோ பசுமையான மரங்கள் அடர்ந்த சூழலில் இருப்பது போன்ற உணர்வில் மிதக்கலாம்.


இந்த உணர்வு தரும் உற்சாகத்தோடு மீண்டும் பணியில் மூழகலாம்.இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியோடு எளிமையாக காட்சி தரும் இந்த தளத்தில் கொஞ்சம் கவனமாக பார்த்தால் கூடுதலாக பல வசதிகள் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.


இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்தால் பறவைகள் ஒலிகளுக்கான பிரத்யேக‌ கூட்டில் இருந்து ஒலிகளை பெற முடியும். இந்த ஒலிகளை எம்பி3 கோப்புகளாகவும் தரவிறக்கம செய்து கொள்ளலாம்.இதே போல ஸ்மார்ட் போன்களுக்கான செயலியாகவும் தரவிறக்கம் செய்யலாம்.
ஐடியூன்ஸ், சவுன்ட் கிளவுட் உள்ளிட்ட சேவைகள் வாயிலாகவும் பறவைகள் சங்கீத்ததை கேட்க முடியும்.அப்படியே நீங்கள் கேட்டு ரசித்த ஒலிகளை பேஸ்புக் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாம்.


பறவைகள் பாடல்களை கேட்டு ரசிக்க: http://birdsong.fm/

இது பேஸ்புக் உலகம:வியக்க வைக்கும் இணையதளம்

faces-of-facebook 

பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே பக்கத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? பேச‌ஸ் ஆப் பேஸ்புக் இணையதளம் இதை தான் செய்கிறது.பேஸ்புக்கின் 120 கோடியே சொச்சத்து உறுப்பினர்களையும் ஒரே இடத்தில் பட்டியலிட்டு காட்டுகிறது இந்த இணையதளம்.அதாவது பேஸ்புக் பயனாளிகள் ஒவ்வொருவரையும் வரிசைப்படுத்தியிருக்கிறது.


இந்த தளத்தில் நுழைந்ததும் அந்த கால டிவியில் தடங்களுக்கு வருதுகிறோம் அறிவிப்பின் போது தோன்றும் கருப்பு வெள்ளை புள்ளிகளாக காட்சி அளிக்கும்.ஆனால் தளத்தில் எந்த இடத்தில் கை (மவுஸ்) வைத்தாலும் அங்கு ஒரு எண்ணிக்கை தோன்றும்.அது அந்த புள்ளிக்கான பேஸ்புக் பயனாளியின் எண்ணிக்கை. மேலும் கிளிக் செய்தால் அந்த பேஸ்புக் பயனாளியின் புகைப்பட மற்றும் பேஸ்புக் அறிமுகத்தை பார்க்கலாம்.


இப்படியாக பேஸ்புக்கின் முதல் நண்பர் ( வேறு யார் அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் ) உட்பட இப்போதைய புதிய உறுப்பினர்கள் வரை அனைவரது பேஸ்புக் அறிமுக விவர்த்தையும் இந்த ஒரு பக்கத்தில் காணலாம்.பேஸ்புக்கில் ஒருவர் இனைந்த நாளின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.பேஸ்புக்கில் இனையும் புதிய உறுப்பினர்களுக்கு ஈடு கொடுத்து இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.


இந்த பட்டியலில் உங்களையும் காணலாம். நீங்களும் உங்கள் நண்பர்களும் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என கண்டுபிடிப்பது சுவார்ஸ்யமான விளையாட்டாக இருக்கும்.


பேஸ்புக்கில் வெளிப்படையாக கிடைக்கும் தக்வல்கள் அடிப்படையிலேயே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதால் அந்தரங்க மீறல் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிற‌து.


எது எப்படியோ நீங்கள் பேஸ்புக் போன்ற தளத்தில் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால் எவரும் உங்களை பார்க்கலாம் என்பது தானே உண்மை.


இந்த தளத்தை பாராட்ட தோன்றினால் அர்ஜன்டைனாவை சேர்ந்த நத்தாலியா ரோஜஸ் என்பவருக்கு ஒரு சபாஷ் போடலாம். அவர தான் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார்.


நத்தாலியா இதே போன்ற சின்ன சின்ன இணைய படைப்புகளை உருவாக்கும் இணைய கலைஞ‌ராக இருக்கிறார். மேலும் விவரங்களுக்கு அவரது இணைய பக்கம்.http://www.nataliarojas.com/ சரி பேஸ்புக்கில் நத்தாலியா இருக்கிறாரா?

இணையத்தில் கண்காணிப்பது யார்?- அடையாளம் காட்டும் லைட்பீம்!


கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன. அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது. 

இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கான எளிய வழியை மொசில்லா (Mozilla) முன் வைத்துள்ளது. பிரபலமான இணைய உலாவியான பயர்பாக்ஸ் பின்னே இருக்கும் மொசில்லா அமைப்பு இதற்காக 'லைட்பீம்' (Light Beam) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

பயர்பாக்ஸ் உலாவிக்கான சேர்க்கையாக (add on) அறிமுகமாகியுள்ள இந்த சேவையை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இணையத்தில் உலாவும்போது எப்படி எல்லாம் உங்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த கண்காணிப்பின் விவரங்களை இந்த சேவை காட்சிரீதியாக தோன்றச் செய்கிறது. 

லைட்பீம் சேவையை உலாவியில் இயக்கியதும், இணையதளத்திற்கு செல்லும் போதெல்லாம் அந்த தளத்தில் இருந்து உங்களைப் பற்றிய விவரங்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பது வரைபட சித்திரமாக காட்டப்படுகிறது. எந்த தளங்கள் எல்லாம் தகவல்களை சேகரிக்கின்றன என்பதை இந்த வரைபடம் உணர்த்தும். முதல் தளத்தில் இருந்து அடுத்த தளத்திற்கு செல்லும் போது அந்த தளத்தில் எப்படி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதும், இந்த தளங்களிடையே உள்ள பரஸ்பர தொடர்பையும் தெரிந்து கொள்ளலாம். 

குறிப்பிட்ட பகுதியில் கிளிக் செய்தால் கண்காணிப்பின் இயல்பு பற்றிய மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த வரைபடத் தோற்றம் தவிர, கடந்த 24 மணி நேரத்தில் எந்த தளங்கள் விவரங்களை சேகரித்தன என்பதையும் தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது. 

இணையத்தில் கண்காணிப்பு எப்படி செயல்படுகிறது, நீங்கள் உலாவும் தளங்கள் எப்படி மற்ற தளங்களுடன் உங்கள் இணைய நடவடிக்கை விவரங்களை பகிர்ந்து கொள்கின்றன போன்ற விஷயங்களை இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். கண்காணிப்பை அடையாளம் காட்டும் இந்த சேவை மூலமான தகவல்கள் எதுவுமே சேகரிக்கப்படுவதில்லை என்கிறது மொசில்லா. ஆனால் நீங்கள் விரும்பினால் இந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முன் வரலாம். கண்காணிப்பு விவரங்களை புரிந்து கொள்வதற்கான பொது கையேட்டிற்கு இதன் மூலம் பங்களிக்கலாம் என்கிறது மொசில்லா.
கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கொல்யூஷன் எனும் வசதியின் நீட்சியாக இந்த லைட்பீம் உருவாகி இருக்கிறது. 

லைட்பீமை தரவிறக்கம் செய்ய https://addons.mozilla.org/en-US/firefox/addon/lightbeam/?src=search

பேஸ்புக் பயன்படுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!

facebook_laptop_generic_295 

பேஸ்புக் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தும் திகைக்க வைக்கும் சம்பவம் இது. பேஸ்புக பயன்படுத்த பெற்றோர் தடை விதித்தால் 17 வயதான அந்த இளம்பெண் தனது வாழ்க்கையையே முடித்து கொண்டிருக்கிறார். இந்த சோக சம்பவம் நிகழ்ந்திருப்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்.

மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி எனும் இடத்தை சேர்ந்த ஐஸ்வர்யா தஹிவால், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. புதன் கிழமை இரவு பேஸ்புக் பயன்படுத்த ஐஸ்வர்யா பெற்றோர் அனுமதி கேட்டிருக்கிறார். பெற்றோரோ , அவர் பேஸ்புக்கிலும் ,போனிலும் நேரத்தை வீணடித்து படிப்பை கவனிக்கவில்லை என்று கடிந்து கொண்டுள்ளனர். பேஸ்புக் பயன்பாட்டிற்கும் அனுமதி மறுத்துள்ளனர்.

மறுநாள் ஐஸ்வர்யா பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பேஸ்புக்கை பயன்படுத்த முடியததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். “ பேஸ்புக் என்ன அத்தனை மோசமானதா? இது போன்ற கட்டுப்பாடு உள்ள வீட்டில் என்னால் இருக்க முடியாது.பேஸ்புக் இல்லாமல் என்னால் வாழ முடியாது’ என்று அவர் தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகளின் இந்த விபரீத முடிவால் ஐஸ்வர்யா பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ’ இதை எங்களால நம்ப முடியவில்லை. இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவளை படிப்பில் கவனம் செலுத்த தான் சொன்னோம்.  இப்படி ஒரு விபரீத முடிவு எடுப்பாள் என நினைத்து கூட பார்க்கவில்லை’ என ஐஸ்வர்யா தந்தை சுனில் தஹிவால் வேதனையோடு கூறியுள்ளார்.

பேஸ்புக் பழக்கம் மோகமாக மாறுவதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இது பல விபரீதங்களுக்கு வித்திடலாம் என்பதற்கான வேதனையான உதாரணம் இந்த சம்பவம்.

பேஸ்புக் பயன்பாட்டில் பெற்றோர் கட்டுப்பாட்டைவிட சுயகட்டுப்பாடே சிறந்தது என்பதை பயனாளிகள் உணர்ந்து கொண்டால் நல்லது.

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


வீரம் படத்துக்குப் பிறகு, நடிகர் அஜித் நடிக்கும் படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஆரம்பம் படம், தீபாவளிக்கு வெளியாகிறது. தற்போது, வீரம் படத்தில் அஜித் நடித்து வருகிறார்.
வீரம் படத்திற்கு பிறகு, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இன்று அஜித் - கெளதம் மேனன் இணையும் படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தினையும் 'ஆரம்பம்' படத்தின் தயாரிப்பாளர்களான ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2014 முதல் துவங்கவிருக்கிறது. நகரத்தில் நடைபெறும் த்ரில்லர் வகை கதையாம். வித்தியாசமான கெட்டப்பில் அஜித் தோன்றுவார் என்று அறிவித்திருக்கிறார்கள்.

'ஆரம்பம்' படத்தின் வியாபாரத்தை மட்டும் வைத்து, ஏ.எம்.ரத்னம் பணச்சிக்கலில் இருந்து மீளமுடியாது என்பதால், கெளதம் மேனன் - ஏ.எம்.ரத்னம் இணையும் படத்தில் அஜித் நடித்து தரவிருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top