.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 23 October 2013

மூக்கு குத்துவது..!

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு.

கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.

அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

ஆண்களுக்கு 10 நிமிடத்திலேயே டயர்டாய்டும்.. அது என்ன?


ராம்ஜி - ஆண்களும் பெண்களும் இணைந்து செய்யும் வேலை அது. ஆனால், ஆண்களுக்கு பத்து நிமிடத்திலேயே சோர்வாகிப் போய் விடும். ஆனால் பெண்களுக்கு டைம் ஆக ஆகத்தான் உற்சாகம் கூடும்.. அது என்ன....?


 ராகவி - சீ .. போ.. இது கூடவா தெரியாது....! ராம்ஜி- மண்டு, மண்டு.. அது ஷாப்பிங்.. தப்புத் தப்பாவே நினைக்காதே....!

சென்டிமென்ட்+சுவாரஸ்யம் = பதேபூர் சிக்ரி!

சென்டிமென்ட்+சுவாரஸ்யம் = பதேபூர் சிக்ரி
த்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் பெருமை மிக்க நகரம் பதேபூர் சிக்ரி. இதை உருவாக்கியவர் மொகலாயச் சக்கரவர்த்தி அக்பர். பதேபூர் சிக்ரி 1571- 1585ம் ஆண்டு வரை மொகலாயப் பேரரசின் தலைநகரமாகவும் திகழ்ந்-துள்ளது. இதன் பின்னணி, சென்டிமென்ட் கலந்த சுவாரஸ்யம்.
 
1560ம் ஆண்டு வரை ஆக்ரா கோட்டைதான் மொகலாயப் பேரரசின் தலைநகரம். அப்போது ராஜபுத்திர இளவரசியான இந்துப்பெண் ஹர்கா பாய் என்பவரை மணந்து கொண்டார் அக்பர். ஹர்காபாய்தான் பின்னாளில் மரியம்-உல்- ஷமானி பேகம் (ஜோதாபாய் அக்பர்) ஆனார். 

அக்பர்- மரியம் உல் ஷமானி பேகம் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால் இரண்டும் குழந்தைப்-பருவத்திலேயே இறந்து விட்டன. சோகத்தில் இருந்த அக்பருக்கு சூஃபி ஞானி சலீம் சிஷ்டி என்பவர் ஆறுதல் கூறினார். இன்னொரு குழந்தைக்கு வாய்ப்பு உண்டு என ஆசீர்வதித்தார்.

அவர் சொன்னது போலவே அக்பர் தம்பதிக்கு இன்னொரு குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியிடைந்த அக்பர் அந்த ஞானியின் நினைவாக குழந்தைக்கு நூருதீன் சலீம் ஜஹாங்கீர் என பெயரிட்டார். அந்தக்குழந்தைதான் பின்னாளில் ஜஹாங்கீர் சக்கரவர்த்தி ஆனது.

மேலும் ஞானி சலீமை கவுரவப்படுத்தும் வகையில் சலீம் வசித்து வந்த பதேபூரில், அரண்மனையையும் நகரையும் உருவாக்கினார் அக்பர். புதிய கட்டடங்கள் கலைநயத்துடன் எழுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து மொகலாயப் பேரரசின் தலைநகரையும் பதேபூர் சிக்ரிக்கு மாற்றினார் அக்பர். அக்பரின் அமைச்சரவையில் நவரத்னங்களாகப் போற்றப்பட்ட பீர்பால் உள்ளிட்ட ஒன்பது அமைச்சர்களின் ராஜாங்கமும் இங்குதான் நடந்துள்ளது.

இவற்றையெல்லாம் நினைவு கூறும் வகையில்தான் அழகும், கலைத்திறனும் கூடிய கட்டடங்கள் இன்றளவும் பதேபூர் சிக்ரியில் பளபளத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பொதுமக்களை மன்னர் சந்திக்கும் திவான்-ஐ-ஆம் ஹால், பிரதிநிதிகளை சந்திக்கும் திவான்-ஐ- காஸ் ஹால், பீர்பால் ஹவுஸ், மரியம் உல் ஷமானி (ஜோதா அக்பர்) அரண்மனை, ஐந்தடுக்கு மாளிகையான பஞ்ச் மஹால், ஜும்மா மஸ்ஜித், டாம்ப் ஆப் சலீம் சிஷ்டி, புலந்த் தர்வாஸா போன்ற கட்டடங்கள் முக்கியமானவை. பதேபூர் சிக்ரியை 1986ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ.
 
எப்படிப் போகலாம்?
 
ஆக்ராவில் இருந்து சுமார் 40கி.மீ தொலைவில் பதேபூர் சிக்ரி நகரம் உள்ளது. சாலை மார்க்கமாவும் செல்லலாம். ஆக்ராவில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆக்ராவில் இருந்து ரயிலிலும் போகலாம். ஆக்ராவில் விமான நிலையம் உள்ளது.

'விட்டுக் கொடுக்கும் தன்மை' (நீதிக்கதை)



ஒரு காட்டின் நடுவில் ஒரு நதி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.
 

ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு செல்ல நதியின் மேல் ஒரு குறுகிய பாலம் மட்டுமே இருந்தது.ஒருவர் போனால் ஒருவர் எதிரே வரமுடியாது அந்த அளவு குறுகிய பாலம்.
 

காட்டில் இருந்த விலங்குகள் இந்த பாலத்தைக் கடந்தே நதியைக் கடந்தன.
 

ஒரு நாள் இரண்டு நரிகள்.ஒவ்வொன்றும் வேறு வேறு முனையில் இருந்து நதியைக் கடக்க வந்தன.
 

ஒரு கட்டத்தில் இரண்டும் எதிர் எதிரே நின்று மற்றதை வழி விடச் சொன்னது.
மற்ற நரிக்கு ஒரு நரி வழி விடவேண்டுமென்றால் திரும்பி கிளம்பிய முனைக்கேச் செல்லவேண்டும்.
 

ஆதலால்...இரண்டு நரிகளும் அதற்கு இணங்காமல் ஒன்றுக்கொன்று தங்களுக்குள் போட்டி இட்டு...சண்டை செய்து ...நதியில் விழுந்து மடிந்தன.
 

இவற்றை அடுத்தடுத்த முனைகளில் இருந்த ஆடுகள் பார்த்தன.
 

ஆதலால்....ஒரு ஆடு குரல் கொடுத்து மற்ற முனையிலிருந்த ஆட்டை முதலில் கடந்து வரச்செய்தது.பின்னர் குரல் கொடுத்த ஆடு அடுத்த முனைக்கு கடந்து சென்றது.
 

ஒற்றுமை,விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாததால் நரிகள் உயிர்விட்டன....ஆனால் அந்த தன்மைகள் இருந்ததால் ஆடுகள் உயிர் பிழைத்தன.

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-01

என்னுடைய கடந்த பதிவான பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை பதிவு எழுதிகொண்டிருக்கும் போது பழங்கால இந்திய வரைபடங்கள் பற்றி நான் தேடிய ஒரு தொகுப்பை இந்தியாவின் வரலாற்றுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இப்பதிவை ஆரம்பிக்கிறேன். இனி பயணத்தை தொடர்வோம்.



 


                  இந்தியாவின் வரலாற்றை பார்ப்பதற்கு முன்பு உலகில் இந்தியாவின் அமைவிடம் மற்றும் இந்தியாவில் முதல் மனிதனின் தோற்றம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு பின்னர் இந்திய வரலாற்றுக்கு வருவோம்




 


                    
பிரபஞ்ச வெளியின் வரலாற்றில் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனோ, நாம் வாழும் பூமி என்ற சிறிய கோளோ கிடையாது. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முன்பு அகண்ட வெளியில் சுற்றி திரிந்த தூசுகளும், கொதித்து கொண்டிருந்த கற்களும் ஒன்று சேர்ந்து ஒரு நெருப்புகோலமாக ஒன்று திரண்டது பின்னர் பல லட்சம் ஆண்டுகளை எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல குளிர்ந்து ஒரு திடமான உருண்டையாக உருப்பெற்றது. 




 


பின்னர் சூரிய மண்டலத்தின் தலைவரான சூரியனை சுற்றி வளம் வர ஆரம்பித்தது. பெயரில்லாத அக்கிரகத்தில் அப்போது கடுகளவு உயிரினம் கூட  கிடையாது. சுமார் நூறுகோடி ஆண்டுகளுக்கு பிறகு கடல்கள் உருவாகின.  அநேகமாக 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ ஒரு விசித்திரம் நிகழ்ந்ததில் கடலுக்கடியில் பாக்டீரியாக்கள் உருவாயின கூடவே செடிகள் வளர ஆரம்பித்தன.




 



 உலகில் உயிரனங்கள் வளர வழிவகுத்தது இந்த செடி கொடிகளே. ஆக்சிஜன் இல்லையேல் பூமியில் உயிரினங்கள் இல்லை.  


உலகில் முதன்முதலில் தோண்றிய உருப்படியான உயிரினம் மீன் வகைகளே. இவை தோன்றியது 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு. 




 


பின் பாம்பு, பல் போன்ற ஊர்வன தோன்றின  பின்பு அவை படிப்படியாக  வளர்ந்து டைனோசர்களாக  உருப்பெற்றன  85 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி 6 கோடி ஆண்டு வரை பூமியில் நடைபெற்றது டைனோசர் போன்ற ஊர்வன உயிர்னங்களின் ஆட்சியே. டைனோசர்கள் பார்ப்பதற்கு ஒரு செல் போன் டவர் அளவு உயரம் இருந்தாலும் அவை போட்டது முட்டைகளே.  பின்பு  குட்டி போடு பால் கொடுக்கும் எலி போன்ற உயிரினங்கள் தோன்றின. குட்டி போடு பால் கொடுப்பது என்பது ஒரு ஆச்சரியமான பரிணாம வளர்ச்சியே. 




 


mammals என்றழைக்கபடும் இந்த பாலூட்டிகளின் ஆட்சி சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது இதில் ஒரு உயிரினம் தான் மனிதன். பாலூட்டிகளின் பரிணாம வளர்ச்சியில் குரங்குகளை போல பல விதமான மனிதர்களும் தோன்றினர். அதில் modern man என்றழைக்கபடும் நாம் தோன்றியது 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான். 




 


homo sapien என்றழைக்கபடும்  நாம் முதலில்  தோன்றியது africa காடுகளில் தான். அதுவும் முதலில் தோன்றியது ஒரு ஆண் அல்ல பெண் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை.அதுவும் ஐரோபிய வாழ் வெள்ளைகார பெண் அல்ல africa கருப்பு நிற பெண். ஆகவே விஞ்ஞான அடிப்படையில் பார்த்தாலும் சக்தி இல்லையேல் சிவம் இல்லை. 


                    ஆரம்பத்தில் பல விதமான மனித வகையினர் உலகில் நடமாடினர் காலப்போக்கில் அவை அழிந்து மிச்சம் இருந்தது இரண்டு வகையினரே..


     1. நாம் (kuromeknan)


      2. நியாண்டர்தால்(neandertal) மனிதன் 



 


ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனும், நியாண்டர்தால் மனிதனும் சமமாக காடுகளில் வாழ்ந்து வந்தனர். CRO-MAGNON என்றழைக்கபடும் நாம் பல்கி பெருகியவுடன் நியாண்டர்தால் மனித இனம் அழிய தொடங்கியது. 


சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் இனம் அழிந்தது இதற்கான உண்மை காரணம் தெளிவாக அறிவியலாளர்களால் கூறஇயலவில்லை. நியாண்டர்தால் மனிதனும் நம்மை போலவே உருவ ஒற்றுமையும் சற்று குறைவான புத்தி கூர்மையும்  படைத்திருந்தனர்.




 


           africa காடுகளில் விலங்குகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி கொண்டு ஒரு பயத்துடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து வந்த மனிதன் கும்பல் கும்பலாக வாழ்வதற்கு ஏற்ற இடத்தை தேடி பயணிக்க ஆரம்பித்தனர் இப்பயணத்தில் நியாண்டர்தால் இனமக்களும் இருந்தனர். வழியில் பல புதிய பழங்கள் இல்லை தலைகளை சாப்பிட வேண்டியிருந்தது. சிலவற்றை சாபிட்டு இறந்தவர்களை பார்த்து மற்றவர்கள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற எச்சரிக்கை உணர்வை பெற்றனர். வழியில் வசதியான இடம் வந்தவுடன் ஒரு சிலர் அங்கேயே தங்கினர் மற்றவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். 


 



மனிதன் செல்லும் இடம் எங்கும் அவனை கடல் வலி மறிக்கவில்லை.  இது சற்று விசித்தரமாக தோணலாம். இதை பற்றி முழுமையாக அறிய நாம் ஆதி காலத்தில் உலகம் எப்படி இருந்தது என்பதை பற்றி முதலில் அறியவேண்டும். ஆதி காலத்தில் இருந்த உலகத்திற்கு அறிவியலாளர்கள் இட்ட பெயர் கொண்டவான லேன்ட்(gondwana land). இந்த கொண்டவான லேன்ட் என்பது என்ன? மனிதனின் அடுத்தக்கட்ட பயணம் எங்கே? என்பதை பற்றி அடுத்த தொடரில் விரிவாக பார்ப்போம்.   

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top