.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 19 October 2013

சோழரின் கலைப்பொக்கிஷங்கள் - சுற்றுலாத்தலங்கள்!

    சோழரின் கலைப்பொக்கிஷங்கள்
 
 

சோழரின் கலைப்பொக்கிஷங்கள்
 
சொக்க வைக்கும் கட்டடக்கலைக்கு சொந்தக்காரர்களில் சோழமன்னர்கள் முக்கியமானவர்கள். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் ஆகியவை சோழரின் கலைப்பொக்கிஷங்களாக இன்றளவும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. மூன்றுமே உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டிருப்பது உலகளாவிய பெருமை.
 
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்:
 
தஞ்சைப் பெரிய கோவில், தஞ்சைப் பெருவுடையார் கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். கட்டிய புதிதில் ராஜ ராஜேஸ்வரம் என்றும், பின்னர் வந்த நாயக்கர்கள் காலத்தில் பெருவுடையார் கோவில் என்றும் மராட்டிய மன்னர்கள் காலத்தில் பெரிய கோவில் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
 
பரந்த விரிந்து கிடந்த சோழப்பேரரசுக்கு கிடைத்துக் கொண்டிருந்த தாரளமான வருவாய், ஆள்பலம், ராஜ ராஜனின் தீவிர சிவபக்தி போன்றவையே கோவில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்பதற்கு முக்கிய காரணங்களாகும். இதன் கட்டுமானப்பணி கி.பி.1003-ம் ஆண்டில் தொடங்கி கி.பி.1010-ம் ஆண்டில் ஏழு ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளது.
 
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரதான கோவில் தவிர சண்டிகேஸ்வரர், அம்மன், சுப்பிரமணியர், கணபதி, கருவூர்த்தேவர் கோவில்களும் இங்குள்ளன. கோபுரத்தின் மீதுள்ள மிகப்பெரிய விமானமும், 14மீட்டர் உயரம், 7மீட்டர் நீளம், 3மீட்டர் அகலம் கொண்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட நந்தியும் இன்றளவும் நீடிக்கும் ஆச்சரியங்கள். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
 
கோவிலைக் கட்டி முடித்த பிறகும் தனி அக்கறை செலுத்திய ராஜராஜன், கோவிலின் அன்றாடப் பணிகளுக்காக ஏராளமான பூசகர்கள், ஓதுவார்கள், பணியாளர்களை நியமித்துள்ளான். 50ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோவிலில் இருந்ததாக கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன.
 
கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவில்:
 
இது ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோவிலாகும். தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ளது. தஞ்சைப் பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் இது கட்டப்பட்டதாம். தஞ்சைப் பெரிய கோவில் மிடுக்கு என்றால் இது நளினம். அழகும், ஆச்சரியமும் கலந்த புதினம்.
 
கோவில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் நகரத்தின் பின்னணியும் சுவாரஸ்யம் நிறைந்தது. கங்கை உள்பட இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதி முழுவதையும் வென்ற ராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழன் என அழைக்கப்பட்டான். அதன் நினைவாகவே கங்கைகொண்ட சோழபுரம் என இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் சிவன் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனுக்கு பிறகு கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகராகவும் திகழ்ந்துள்ளது.
 
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்:
 
கும்பகோணம் அருகே தாராசுரம் என்ற ஊரில் ஐராவதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் என்றாலும் அவனது முன்னோர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பின்பற்றிய மகேஸ்வர சிவம் (பெரும் கடவுள் சிவனே) என்ற தத்துவம் இங்கு காணப்பட-வில்லை.

மாறாக, பெண்ணின் பெருமையை உணர்த்தும் வகையில் அமைக்கப்-பட்டுள்ளது. இங்கு அம்மனுக்காக தனி சன்னதி உள்ளது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கோவிலின் மேற்கூரைகளிலும், சுவர்-களிலும் நடன மங்கைகளின் சிற்பங்கள் காணப்-படுகின்றன.

 தஞ்சைப் பெரிய கோவில் 1987ம் ஆண்டிலும், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் மற்றும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்கள் 2004ம் ஆண்டிலும் யுனெஸ்கோ சார்பில் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு, இன்றும் வாழும் பெருங்கோவில்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளன.
 
எப்படிப் போகலாம்?
 
சென்னையில் இருந்து தஞ்சாவூர் சுமார் 350 கி.மீ தூரம். முக்கிய நகரங்களில் இருந்து தஞ்சாவூருக்கு நல்ல சாலை வசதி உண்டு. ரயில்நிலையம் அமைந்துள்ளது. திருச்சியில்

சோனி நிறுவனம் எக்ஸ்பெரிய சி ஸ்மார்ட்போன் ரூ.21.490 விலையில் அறிமுகம்!




சோனி நிறுவனம் இந்திய சந்தையில் அதன் சமீபத்திய phablet, எக்ஸ்பெரிய சி ரூ.21.490 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனத்தின் எக்ஸ்பெரிய சி வாங்கிய தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு ஆக்சிடென்டல் டேமேஜ் கவர் உடன் வருகிறது என்று தெரிவித்துள்ளது.


எக்ஸ்பெரிய சி ஸ்மார்ட்போன் வாங்கியதை தொடர்ந்து முதல் இரண்டு மாதங்களுக்கு, 1GB இலவச தரவு அணுகல்(data access) ஏர்டெல் உடன்-இணைந்து சோனி வழங்குகின்றது. இந்த மாத தொடக்கத்தில், சாதனம் சில ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் ரூ.20.490 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளன.


எக்ஸ்பெரிய சி அம்சங்கள், மீடியா டெக் MTK6589 Quad-core செயலி, 1.2GHz, 5 அங்குல டிஎஃப்டி எல்சிடி qHD (540x960 பிக்சல்) காட்சி மற்றும் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. இது 1GB ரேம் மற்றும் 4GB உள்ளக சேமிப்பு கொண்டுள்ளது. இது மேலும், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது.


சோனி எக்ஸ்பெரிய சி டூயல் சிம் ஸ்மார்ட்போன் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) உள்ளது. எக்ஸ்பெரிய சி Exmor R சென்சார் உடன் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. இந்த கேமராவில் முகம் கண்டறிதல்(face detection) மற்றும் ஸ்வீப் பனோரமா(Sweep Panorama) போன்ற அம்சங்களுடன் வருகிறது, மேலும் முழு எச்.டி. (1080) முறையில் படப்பிடிப்பு வீடியோ திறன் கொண்டுள்ளது.


0.3-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இணைப்பு விருப்பங்களான 3G, Wi-Fi,, DLNA, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜி.பி. எஸ் ஆகியவை உள்ளன. இந்த ஸ்மார்ட்போன், வெள்ளை, கருப்பு மற்றும் ஊதா வண்ண விருப்பங்களில் கிடைக்கும். மேலும், சோனி எக்ஸ்பெரிய சி எஃப்எம் ரேடியோ உடன் ஆர்டிஎஸ்,  வாக்மேன் அப்ளிக்கேஷன் மற்றும் 'திரை பிரதிபலிப்பு(screen mirroring)' ஆகியவை இருக்கும். இந்த சாதனத்தில் 2330mAh பேட்டரி கொண்டுள்ளது.


சோனி எக்ஸ்பெரிய சி முக்கிய குறிப்புகள்:



5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட QHD (540x960 பிக்சல்) டிஸ்ப்ளே
1.2 GHz Quad-core மீடியா டெக் MT6589 ப்ராசசர்
1GB ரேம்
32GB வரை விரிவாக்க கூடிய 4GB உள்ளக சேமிப்பு,
எல்இடி பிளாஷ், Exmor R சென்சார் கொண்ட 8-மெகாபிக்சல் பின்புற கேமரா
0.3-மெகாபிக்சல் முன் கேமரா
microUSB 2.0,
2G,
3G,
Wi-Fi,
DLNA,
ப்ளூடூத் 4.0,
டூயல் சிம் (3G + 2G)
அண்ட்ராய்டு 4.2 (ஜெல்லி பீன்)

Kobo நிறுவனம் இந்தியாவில் இ வாசகர் டேப்லட் அறிமுகம்!





கனடா-தலைமையிடமாக கொண்ட மின் வாசிப்பு சேவை நிறுவனமான Kobo இந்திய சந்தையில் மின்னணு(electronic) வாசிக்க உகந்ததாக நான்கு புதிய டேப்லட் சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 





இந்த சாதனங்கள் ரூ.14,000 முதல் ரூ.8,000 வரை விலையுடையதாக இருக்கும். மேலும், mobi மற்றும் இ பப்ளிஷிங் உட்பட அனைத்து முக்கிய இ புக்ஸ் ஃபார்மேட்ஸ்(formats)-க்கும் ஆதரவு அளிக்கும். நிறுவனம் இந்த புதிய சாதனங்களை நாடு முழுவதும் விற்பனை செய்ய Crossword, WHSmith மற்றும் Croma உடன் இணைந்துள்ளது. 





Kobo Touch, Kobo Glo, Kobo Arc மற்றும் Kobo Aura  HD என்று பெயரிடப்பட்டுள்ளது புதிய சாதனங்களில் Wi-Fi மட்டுமே துணைபுரியும், இதில் மொபைல் நெட்வொர்க் துணைபுரிவதில்லை. இந்த சாதனங்கள் மின் வாசிப்பதற்க்காக மட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. Kobo Aura HD ரூ.13.999 விலையிலும், Kobo Touch, ரூ.7.999 விலையிலும் கிடைக்கும் என்று இந்திய நாட்டின் இயக்குனர் ஹாஜா ஷெரீஃப் கூறியுள்ளார்.

நுரையீரல் புற்று நோய் : டீடெய்ல் ரிப்போர்ட்!

நாய் நன்றியுள்ள பிராணி, செல்ல பிராணி, மோப்பம் பிடிக்கும், குற்றவாளிகளை அடையாளம் காட்டும், வேலை செய்யும், வீட்டை காக்கும் இப்படிதான் சொல்கின்றனர். ஆனால், மனிதர்களின் மூச்சுக்காற்றை வைத்து நுரையீரல் புற்றுநோயை கூட கண்டுபிடித்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும?


நாய்களை வைத்து ஜெர்மனியில் உள்ள சில்லர்ஹோகி மருத்துவமனை விஞ்ஞானிகள் பல ஆண்டாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மனிதர்களை பாதிக்கும் நோய்களை மருத்துவக் கருவிகள் மூலம் கண்டறிவது போல், நாய்கள் மூலம் நோய் பாதிப்பை கண்டறிய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்த போது மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத வாசனையை கூட மோப்ப ஆற்றலால் நாய்கள் கண்டுபிடிக்கின்றன. சரியான பயிற்சி அளித்தால் மனிதர்களின் நோய் பாதிப்பை கூட ஆரம்பத்திலேயே நாய்கள் கண்டுபிடித்து விடும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.


18 -Lung-Cancer-Symptoms


 


குறிப்பாக புற்றுநோயை நாய்கள் துல்லியமாக கண்டுபிடிக்கின்றன. புற்றுநோய் பாதித்த மனிதர்களின் மூச்சுக் காற்றுக்கும், ஆரோக்கியமான மனிதர்களின் மூச்சுக் காற்றுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. புற்றுநோய் பாதித்தவர்களின் மூச்சு காற்றில் உள்ள ரசாயன வாசனையை வைத்து மோப்ப நாய்கள் நோயாளியை கண்டுபிடிக்கின்றன என்று தெரிய வந்தது. 


இதற்கிடையில் புற்று நோய் வகைகளை நாம் அறிந்து கொள்ளும் முன் நுரையீரலின் அனாடமி எப்படி செயல்படுகிறது போன்றவை பற்றி அறிதல் முக்கியம்.


நுரையீரல் உடலுக்கு சக்தியை தரும் ஆக்சிஜனை எடுத்துக் கொள்வதிலும் கரியமிலவாயுவை வெளியேற்றுவதிலும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22 ஆயிரம் முறை மூச்சு விடும் நாம், கிட்டத்தட்ட 9 ஆயிரம் முறை காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.


மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும காற்று, காற்று குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. காற்றுக் குழாய் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது.


இரண்டாக பிரியும் பிரான்கியல் குழாய்கள் பல நுண் கிளைகளாக பிரிந்து அல்வியோல் எனப்படும் காற்றுப் பைகளில் முடியும். பல நுண்ணுயிர்க்குழாய்களாக பிரிந்து இருக்கும். அல்வியோலை எனப்படும் காற்றுப் பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டது.


இதில் பல நுண்ணிய ரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமணி மூலமாக வந்த கரியமிலவாயு நிறைந்த ரத்தத்தில் உள்ள கரியமிலவாயு வெளியேறி, ஆக்சிஜனை ஏற்றுக் கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது.


பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற திரவம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக் குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற நாம் அறியாமலே அவற்றை விழுங்கி விடுகிறோம்.


உடல்நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கிலேயே உள்ள ரோமம் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் ஆகியவை நீக்குதலிலும் ஈடுபடும்.


புற்றுநோய்க்கான புற காரணிகள்:-


காற்றில் உள்ள தூசு, இயந்திரங்கள் வெளியேற்றும் புகை, சிகரெட் புகை ஆகியவை ஆச்பெச்டாஸ் போன்றவை நுரையீரல் புற்றுநோய் வர முக்கிய காரணிகளாக இருக்கின்றன.


சில வீடுகளில் புகை நிறைந்த எரிபொருள் சமைக்க பயன்படுத்துவது காற்றினை மாசுபடுத்துகிறது. குளிர் காலத்தில் இதுபோன்ற புகை வீட்டிற்குள்ளேயே சுற்றுவதால் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்த வரையில் என் வீட்டிலேயே பலவகை எரிபொருட்களை பயன்படுத்தி இருக்கிறோம். (காகிதம், மரத்தூள், விறகு, வரட்டி பின் கெராசின் என்று பல பொருட்களை பயன்படுத்தி இருக்கிறோம்) இன்னும் சில பெண்கள் புகையை ஊதுகுழலை வைத்து ஊதி கண்சிவக்க இருமுவதையும், புகையை உள்ளிழுப்பதையும காணலாம்.



இதற்கு அடுத்தப்படியாக கட்டிடங்கள் கட்டிய பின்வரும் தூசிகள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை துணுக்கள் என்று பலவும் உடல்நலத்தை பாதிக்கிறது. வீடுகளில் உள்ள காற்றில் கலந்திருக்கும் பொருட்களில் கார்பன் டை ஆக்சைடு, பார்மால்டிஹைட், நைட்ரஜன் பெராக்சைடு, கார்பன் மோனோ ஆக்சைடு, ரேடான் எனப்படும் ரேடியோ கதிர்வீச்சு, பாசி, என்னும் நுண்ணுயிர் கிருமிகளின் முட்டைகள் என்பன சில முக்கியமானவை ஆகும்.


ஒருவர் புகை பிடிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் காற்றின் விளைவால் வருடத்திற்கு 1,50,000 குழந்தைகள் முற்றிய நுரையீரல் நோயால் பாதிக்கப்படுவதோடு ஆண்டொன்றுக்கு 3 ஆயிரம் குழந்தைகள் இறக்கிறார்கள்.


உலகளவில் இது இன்னமும் அதிர்ச்சியூட்டும் எண்களை தரலாம். புகை பிடிப்பவரின் அருகில் இருப்போருக்கு கண் எரிச்சலும், இருமலும் ஏற்படுகிறது. இவர்களையும் மருத்துவ உலகு அழைக்கிறது.


இதற்கிடையில் நுரையீரல் புற்று நோய்க்கு காற்று மாசுபடுவதே காரணம் என தற்போது உலக சுகாதார மையம் அறிவித்துள்ளதும இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகி விட்டது. அதாவது நுரையீரல் புற்று நோயினால் ஆண்டுக்கு 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்ற தகவல் 2010–ம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. எனவே சர்வதேச புற்று நோய் ஆராய்ச்சி கழகம் இந்த நோய் எதனால் ஏற்படுகிறது. என கண்டறிய சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.


அதன் ஆய்வறிக்கை 5 கண்டங்களை சேர்ந்த 1000 நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் பெரும்பாலானவை காற்று மாசுபடுவதே நுரையீல் புற்று நோய் வர காரணம் என தெரிவித்துள்ளது.


தற்போது தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. அதில் இருந்து வெளியாகும் ரசாயன நச்சு கழிவுகள் காற்றில் கலக்கின்றன. அவற்றை சுவாசிப்பதன் மூலம் நுரையீரல் புற்று நோய் ஏற்படுகிறது.


காற்றில் பரவியுள்ள மாசுவே இந்த புற்று நோய் ஏற்பட தூண்டுகோலாக உள்ளது. காற்றின் மாசு நுரையீரலை மட்டுல்ல இருதயத்தையும் பாதித்து அங்கும் பலவித நோய்களை உருவாக்குகிறது.


தொழிற்சாலைகள் பெருகி வரும் நாடுகளில் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் நுரையீரல் புற்று நோய் ஏற்பட காற்று மாசுபடுவதே காரணம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.புகையிலை மற்றும் அல்ட்ரா நீல கதிர்களாலும் நுரையீரல் புற்று நோய் உருவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாட் பல்பை எரிய விட்டால் இன்டர்நெட் கனெக்சன்! -சீன கண்டுபிடிப்பு!

இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பலப்’ மூல்ம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.


19 - tec bulb internet

 


ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.
விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த ‘லைபை’ குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் நவம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்த ‘லைபை’ அறிமுகம் செய்யப்படுகிறது. 


வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது. மலிவு விலை பொருட்களை கண்டுபிடி த்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் ‘லைபை’ கண்டுபிடிப் பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது. 



சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ‘வைபை’யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான ‘லைபை’க்கு மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா. 


A light bulb could be your next wireless router
 

 Beijing: Chinese scientists have successfully developed a cheaper way of getting connected to internet by using signals sent through light bulbs instead of radio frequencies as in ‘Wi-Fi’, a move expected to radically change process of online connectivity.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top