.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 28 September 2013

இது உனக்கு தேவையா!





 இது உனக்கு தேவையா................ 



இதுக்குதான் அதிகமா ஆட்டம் போடக்கூடாதன்னு சொல்றாங்க.....




என்ன புரியுதா தம்பி....




போ..... போ...... போயி....... பொழப்ப பாறு......






 

ஆப்பிள் நிறுவனம் புதிய ios7.0.2 மேம்படுத்தல் வெளியீடு!



ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐ பேட் டச் சாதனத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ios7 அல்லது ios7.0.1 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை மேம்படுத்தப்பட்டு(updates) புதிய ios7.0.2 என்ற புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.


ios7 வெளியீட்டுக்குப் பிறகு லாக் ஸ்கிரீன் சிக்கல்களை மேம்படுத்தப்பட்டு சரி செய்துள்ளது. ஐபோன் 5-ல் 21MB பதிவிறக்கம் செய்யக்கூடியதாக ios7.0.2 மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் போன் லாக் ஸ்கிரீன் சிக்கல்கள் ஏற்படும் போதும் ஐபோன் வாடிக்கையாளர் மற்றொருவர்களுக்கு அழைக்ககூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.



ஐபோன் சாதனத்தில் போன் லாக் ஸ்கிரீன் சிக்கல்கள் இருக்கும் போது கூட எமர்ஜென்சி கால் (emergency call) அழைப்பினை மட்டும் ஏற்கக்கூடியதாக இல்லாமல் சாதனத்தில் இருக்கும் நம்பர்களை அழைக்கக்கூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. NULL dereferences என்ற சிக்கல்களை சரி செய்வதற்காக இந்த புதிய 7.0.2 ஆப்ரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

iphone 5S hack செய்ய முடியுமா! அட கடவுளே!






திருடர்களை விட ஒருபடி மேலேயே யோசிக்கிறாங்களே….



அண்மையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபோன் 5-ல் கைரேகை ஸ்கேனிங்க் மூலம் பாதுகாப்பு வசதி அளித்துள்ளது.



ஐபோனை ஆக்சஸ் செய்வதற்கென கைரேகையை வழங்கினால் மாத்திரம் பயன்படுத்த கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் ஒருசில நாட்களிலேயே இப்பாதுகாப்பு வசதியை தாம் உடைத்துவிட்டதாக தற்போது அறிவித்துள்ளனர் ஜேர்மனிய ஹேக்கர் குழுவினர்.



கைரேகையை படம்பிடித்து அதியுயர் தரத்தில் கிளாஸ் ஒன்றில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அதைக்கொண்டே ஐபோனை இயக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன.


டெல்லி செங்கோட்டை- சுற்றுலாத்தலங்கள்!


      டெல்லி செங்கோட்டை
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
டெல்லி செங்கோட்டை
 
டெல்லி நகரின் இன்னொரு கம்பீரம் 'செங்கோட்டை'. இந்திய சுதந்திரதினத்தன்று பிரதமர் தேசியக்கொடியேற்றி உரையாற்றும் பிரம்மாண்ட இடம். இதை உருவாக்கியவர் மொகலாய மன்னர் ஷாஜஹான்.
 
தனது தலைநகரத்தை ஆக்ராவில் இருந்து ஷாஜஹானா பாத்திற்கு (தற்போதைய பழைய டெல்லி) ஷாஜஹான் மாற்றியபோது செங்கோட்டை உருவானது. இதனைக் கட்டிமுடிக்க 1638-48 வரை பத்தாண்டு ஆனது. செலவிட்ட தொகை அப்போதைய மதிப்புக்கு ஒருகோடி ரூபாயாம்.
 
யமுனை நதிக்கரையில் ஒப்பிலா அழகுடன் எழுந்து நிற்கும் செங்கோட்டை, பாரசீக, ஐரோப்பிய, இந்திய கட்டடக் கலைகளை குழைத்து எழுப்பப்பட்டது. கண்களை மயக்கும் கலைநயம், சவால்விடும் கட்டுமானம், ஆச்சரியப்படுத்தும் தோட்டக்கலை போன்றவை இன்றளவும் போற்றப்படுகிறது. டெல்லிகேட், லாகூர்கேட் என இருபெரும் நுழைவாயில்கள் உள்ளன.
 
கோட்டைக்குள் இருக்கும் அரசவை மண்டபங்களில் மட்டுமின்றி அந்தப்புரங்களிலும்கூட கலைநயம் கண்சிமிட்டுகிறது. 'திவான்- இ- ஆம்' எனப்படும் தர்பார் மண்டபம் பொதுமக்களும் பிரதிநிதிகளும் அமரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே மன்னருக்காக அமைக்கப்பட்டிருக்கும் உப்பரிகையும் கம்பீரமானது.
 
'ஜெனானா' என்றழைக்கப்படும் அந்தப்புரம், மும்தாஜ் மஹால், ரங் மஹால் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள சலவைக்கல் பதிக்கப்பட்ட நீருற்று புதுமையின் பதிப்பு.அவுரங்கசீப்பின் வழிபாட்டுக்காக கட்டப்பட்ட மோத்திமஸ்ஜித் எனப்படும் பியர்ல் மஸ்ஜித் (முத்து மசூதி) முழுவதும் சலவைக்கல் மயமே.

 
இவைதவிர அரச குடியிருப்புகள் அமைந்திருந்த 'நஹ்ர்-இ-பேஹிஸ்ட்' என்ற பகுதி அசத்தல் ரகம். வீடுகளுக்கு உள்ளேயே யமுனை ஆற்றின் நீர் ஓடும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி, கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும்கூட கால்வாய்வெட்டி நனவாக்கிய மொகலாய மன்னர்கள். இதை 'சொர்க்கத்தின் நீரோடை' என்றும் அழைத்து வந்தனர். நீரோடையை இன்றும் காணலாம்.
 
செங்கோட்டையைக் கட்டியவர் ஷாஜஹான் என்றாலும் அவருக்குப் பின்னர் அவுரங்கசீப் உள்ளிட்ட மன்னர்களும் சில மாற்றங்களை செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின்போது கண்டோன்மென்ட்டாக (ராணுவமுகாம் மற்றும் குடியிருப்பு பகுதி) செங்கோட்டை பயன்படுத்தப்பட்டது. அப்போது சில கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய விடுதலைக்குப்பிறகும் ராணுவக்-கட்டுப்பாட்டில் இருந்துவந்த செங்கோட்டை, 2003ம் ஆண்டில் இந்திய சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இங்குள்ள மும்தாஜ் மஹாலில் மொகலாய மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே வரலாற்றுப் பொக்கிஷங்கள். பெருமைக்குரிய டெல்லி செங்கோட்டை, யுனெஸ்கோவால் 2007ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

வேப்பமரமும்...சிறுவனும் (நீதிக்கதை)






வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்து ராமன் அழுது கொண்டிருந்தான்.அதைக் கண்ட மரம் 'தம்பி ஏன் அழறே' என்றது. அதற்கு ராமன் எனக்கு யாரையுமே பிடிக்கவில்லை

.காலையில் எழுந்ததுமே 'முதலில் பல் தேய்த்துவிட்டு வா' என அம்மா அதட்டுகிறாள். பின் அப்பா 'காலை எழுந்ததும் படிப்பு. உன் பள்ளிப் பாடங்களைப் படி' என்று கண்டிக்கிறார்.பின் குளித்து முடித்து 'பசிக்கலை' என்று சொன்னால் அம்மா திட்டி சாதம் சாப்பிடச் சொல்கிறாள்.

பள்ளிக்கு வந்தாலோ 'பாடம் படிக்கலைன்னும்,பாடம் சொல்லிக்கொடுக்கும் போது வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று டீச்சர் திட்டராங்க"

எல்லாருமே நாள் முழுக்க என்னை திட்டிக்கிட்டேயிருக்காங்க. எனக்கு யாரையுமே பிடிக்கலை" என்றான் அழுது கொண்டே.

வேப்பமரம் "என் இலைகளை நீ சாப்பிட்டு இருக்காயா?" என்றது.'ஓ...இலை மட்டுமா உன் இலை,குச்சி எல்லாமே ஒரே கசப்பு.சாப்பிட்டால் வாந்தி வந்துடும் என்றான் ராமன்.

"ஆனால் பல வியாதிகளுக்கு நான் மருந்தாக இருக்கிறேன்.நான் கசந்தாலும் பலர் வாழ்க்கையில் இனிமை உண்டாகக் காரணமாக இருந்திருக்கிறேன்.

அது போல் பெற்றோர்,ஆசிரியர்கள் சொல்வது இப்போது உனக்கு கசப்பாக இருக்கிறது.ஆனால் அந்த கசப்பை ஏற்று அதன் படி நடந்தால் பின் உன்னோட வாழ்க்கை இனிமையாக அமையும் என்றது.

நாமும் நம்முடைய மூத்தவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி நடந்தால் அனைவராலும் விரும்பபப்டுவது அல்லாது மிகவும் சிறந்தவராகவும் ஆவோம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top