.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 26 September 2013

Flexible டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 3 அக்டோபர் மாதம் அறிமுகம்!




Flexible டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 3 ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்புடன்(limited edition) அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.


சாம்சங் கேலக்ஸி நோட் 3 Flexible டிஸ்ப்ளே அம்சங்கள்



5.7-இன்ச் முழு HD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வருகிறது,
 

168 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது.
 

1.9GHz Octa-core செயலி புரோஸசர்
 

3GB
 

800 குவால்காம் ஸ்னாப்ட்ராகன்
 

13-மெகாபிக்சல் பின்புற கேமரா
 

2-மெகாபிக்சல் ஸ்நாப்பர் முன் கேமரா
 

3,200 Mah பேட்டரி மூலம் இயங்கும்.
 

ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்கும்.


4K தீர்மானம் வீடியோக்களை பதிவு செய்ய திறன் உள்ள LED ஃபிளாஷ் கொண்ட 13-மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. வீடியோ அழைப்புக்கு 2-மெகாபிக்சல் ஸ்நாப்பர் முன் கேமரா உள்ளது.



சாம்சங் கேலக்ஸி நோட் 3,  ஒரு microSD அட்டை வழியாக 64GB வரை விரிவாக்க கூடியது. ROM 16GB, 32GB மற்றும் 64GB சேமிப்பு வகைகளில் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி நோட் 3 Flexible டிஸ்ப்ளே ரூ.49.900 விலையில் இந்தியாவில் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.



திசு சிகிச்சையில் நெற்றியில் மூக்கு!





 சீனாவை சேர்ந்த ஜியோலியன்(22) என்பவருக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு அவர் சரியான சிகிச்சை எடுக்காததால், தொற்று காரணமாக குருத்தெலும்பு முற்றிலும் சேதமடைந்து மூக்கு உருக்குலைந்தது. அதை டாக்டர்களால் சரிசெய்ய முடியவில்லை.


இவருக்கு தோல் திசு வளர்ப்பு சிகிச்சை முறையில் புதிய மூக்கு உருவாக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக இடுப்பெலுப்பில் இருந்து எடுக்கப்பட்ட குறுத்தெலும்பை பயன்படுத்தி, ஜியோலியனின் நெற்றி பகுதியில் புதிய மூக்கு வளர்க்கப்பட்டது. இது தற்போது முழு வளர்ச்சியடைந்துள்ளது. இது விரைவில் அகற்றப்பட்டு ஜியோலியனுக்கு, பொருத்தப்படவுள்ளது.


திசு சிகிச்சையில் நெற்றியில் மூக்கு!





 சீனாவை சேர்ந்த ஜியோலியன்(22) என்பவருக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு அவர் சரியான சிகிச்சை எடுக்காததால், தொற்று காரணமாக குருத்தெலும்பு முற்றிலும் சேதமடைந்து மூக்கு உருக்குலைந்தது. அதை டாக்டர்களால் சரிசெய்ய முடியவில்லை.


இவருக்கு தோல் திசு வளர்ப்பு சிகிச்சை முறையில் புதிய மூக்கு உருவாக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக இடுப்பெலுப்பில் இருந்து எடுக்கப்பட்ட குறுத்தெலும்பை பயன்படுத்தி, ஜியோலியனின் நெற்றி பகுதியில் புதிய மூக்கு வளர்க்கப்பட்டது. இது தற்போது முழு வளர்ச்சியடைந்துள்ளது. இது விரைவில் அகற்றப்பட்டு ஜியோலியனுக்கு, பொருத்தப்படவுள்ளது.


இந்திய விஞ்ஞானி புது கண்டுபிடிப்பு விண்ணில் கருங்குழி மர்மம் நீங்குமா?




 விண்ணில் ‘இறந்த’ நட்சத்திரங்களால் உருவாகும் கருங்குழிகள் பற்றி நீடிக்கும் மர்மத்தை உடைக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் பெங்களூர் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.   அண்டவெளியில் பூமி உட்பட பல கோள்கள் உள்ளன. பல லட்சம் சூரியன்கள், நிலாக்கள், நட்சத்திரங்கள் என்று பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருக்கின்றன. இந்த நட்சத்திரங்கள் எல்லாம் அதன் அணுசக்தியை இழக்கும் போது ‘இறந்த’ நட்சத்திரங்களாகி விடுகின்றன. விண்ணின் பால்வெளி மண்டலத்தில் இப்படி சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் பரவி கிடக்கும் நிலையில், இந்த ‘இறந்த’ நட்சத்திரங்கள் எல்லாம் கருங்குழியாகி விடுகின்றன. இந்த கருங்குழி, பல சூரியன்களின் ஒளியை தன்னுள் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. ஆல்பர்ட் ஈன்ஸ்டின் புவிஈர்ப்பு கோட்பாட்டுக்கும் இந்த கருங்குழிகளுக்கும் ஒரு வகையில் இயற்பியல் ரீதியாக ஒரு ஒற்றுமை இருக்கிறது  என்று இந்தியா உட்பட பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.


கருங்குழி பற்றி முதன்  முதலில் உண்மைகளை கண்டுபிடித்து சொன்னவரே, நம் நாட்டு தமிழ் விஞ்ஞானி சந்திரசேகர் தான். அதற்காகவே அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.   இறந்த நட்சத்திரம் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, கருங்குழியாகவோ ஆகி விடும் என்று முதன் முதலில் கண்டுபிடித்தவர் இவர். இதனால் இந்த கண்டுபிடிப்புக்கு சந்திரசேகர் லிமிட் என்றும் பெயர் வைக்கப்பட்டது.   இந்த நிலையில், கருங்குழி பற்றிய மர்மம் நீடித்து வருகிறது. இந்த குழிகள் சிறியது தானா, அதன் ஆழம் என்ன, அதன் ஈர்ப்பு சக்தி  என்ன? ஒலி, ஒளியை தன்னுள் விழுங்கும் போது நடப்பது  என்ன? பல சூரியன்கள் ஒளியை கொண்டது  என்பது சரியா? என்பது பற்றி எல்லாம் மர்மம் நீடிக்கிறது.   சாதாரண கண்களுக்கு இந்த கருங்குழி தெரியாது. டெலஸ்கோப் மூலமும் கண்டுபிடிப்பது சிரமம் தான். நுணுக்கமாக ஆராய்ந்தால் பால்வெளியில் ஏதோ கரும்புள்ளி போல தான் தெரியுமாம். பெங்களூர் நகரில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ள பானிப்ரத்தா முகோபாத்யை இந்த கருங்குழி ஆய்வில் புதிய உண்மையை கண்டுபிடித்துள்ளார்.  



 இரண்டு ஆண்டாக மேற்கொண்ட ஆய்வில், அண்டவெளியில் உருவாகும் கருங்குழி தன்னை சுற்றிய ஒலி, ஒளி மற்றும் நட்சத்திர துகள்கள் எல்லாவற்றையும் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் சக்தி படைத்தது. இது மட்டுமின்றி, இதை சுற்றிய சுழற்சி, நட்சத்திர எரி துகள்கள் போன்ற பொருட்கள் ஆகியவற்றை வைத்து  குழியின் ஆழம், சுழற்சி வேகத்தை கணக்கிடலாம். மேலும், குழியை சுற்றிய சுழற்சி வலை மற்றும் பொருட்கள் தனியாக இயங்குவதில்லை. ஒன்றுக்கொன்று பிணைந்தது என்பது தான் பானிப்ரத்தாவின் கண்டுபிடிப்பு.  இந்த கண்டுபிடிப்பு மூலம்,  கருங்குழி பற்றிய ஆராய்ச்சிகளில் புதிய தெளிவு கிடைத்துள்ளதாக அமெரிக்க, பிரிட்டன் இயற்பியல் விஞ்ஞானிகள் பாராட்டியுள்ளனர். ‘நட்சத்திரங்கள் எப்படி நொறுங்கி அழிகின்றன, கருங்குழியாகின்றன என்பதற்கு இந்த ஆராய்ச்சி உதவும்’ என்று விஞ்ஞானி பானிப்ரத்தாவுக்கு உதவியாக இருந்த ஆராய்ச்சி மாணவி இந்திராணி பானர்ஜி கூறினார்.



அதென்ன கருங்குழி?


* பூமி, சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்தது தான் இந்த அண்டவெளி. 


* விண்ணில் பரந்து கிடக்கும் பால்வெளியில் உள்ளது தான் சூரியன், நிலா, நட்சத்திரங்கள்.


* இந்த நட்சத்திரங்கள் தன்னுள் உள்ள அணு எரிசக்தியை இழக்கும் போது ‘இறந்ததாக’ கருதப்படுகின்றன.
 

* அப்படி இறந்த பின் அவை என்னவாகின்றன என்பது மர்மமாக இருந்தது.
 

* அவை, கருங்குழியாகிவிடுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.
 

* கருங்குழி ஈர்ப்பு சக்தி கொண்டது. தன்னை சுற்றிய பொருட்களை ஈர்த்துக்கொள்ளும்.
 

* சுழலும் அணு துகள்கள், பொருட்கள் வேகம் பற்றிய ஆய்வு தொடர்ந்து மர்மமானது.
 

* கருங்குழி மர்ம முடிச்சுகள் தொடர்ந்து அவிழ்ந்த வண்ணம் உள்ளது.

குரங்கும்..முதலையும் (நீதிக்கதைகள் )




ஒரு ஊருக்கு வெளியே ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம்.அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு ஒன்று உயிர் வாழ்ந்து வந்தது.


ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து'நாவல் பழம் மிகவும் ருசியானதா?' எனக் கேட்டது.


குரங்கும்.."முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்" என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது.முதலையும் பழத்தை ருசித்து விட்டு..குரங்கிடம் மேலும் சில பழங்களை தன் மனைவிக்கு வாங்கிச் சென்றது.


முதலையின் மனைவி அப்பழங்களை சாப்பிட்டு விட்டு முதலையிடம்..'இப்பழங்கள் இவ்வளவு இனிக்கிறதே..இதே பழத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த குரங்கின் குடல் எவ்வளவு இனிக்கும்! அது எனக்கு வேண்டும்." என்றது.


முதலையும் குரங்கிடம் வந்து நயவஞ்சகமாக..'குரங்கே!..நாவல் பழம் தந்த உனக்கு என் மனைவி விருந்திட விரும்புகிறாள்..வா.." என்றதும்.குரங்கும் மகிழ்ந்து..முதலையின் முதுகில் உட்கார்ந்து ஆற்றில்..முதலையின் இருப்பிடம் செல்லத் தொடங்கியது.
 

பாதி தூரம் வந்ததும்..இனி குரங்கால் நீரில் தனித்து ஓட முடியாது என முதலை..'மட குரங்கே!..உண்மையில் விருந்து உனக்கல்ல. என் மனைவிக்குத் தான்.அவள்தான் உன் குடலை சாப்பிட விரும்புகிறாள்" என்றது.


சற்று நேரம் யோசித்த குரங்கு..'முதலையே அதை முதலிலேயே சொல்லக் கூடாதா..நான் என் குடலை கழட்டி மரத்தில் அல்லவா வைத்திருக்கிறேன்..திரும்ப மரத்திற்கு என்னைக் கொண்டு போ. குடலை எடுத்து மாட்டிக்கொண்டு வருகிறேன்..' என்றது.


முதலையும் யோசிக்காது..குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது


வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு..'முட்டாள் முதலையே. குடலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..நியாயமா? என்று கேட்டது.


முதலையும் ஏமாந்து திரும்பியது.


நாமும் யாரையும் உடன் நம்பக்கூடாது. அவர்கள் நல்லவர்களா..கெட்டவர்களா என நட்பு கொள்ளுமுன் பார்க்க வேண்டும்.


ஆபத்துக் காலத்தில் நம் மூளையை உபயோகித்து..ஆபத்திலிருந்து விடுபட வேண்டும்.
 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top