.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 18 September 2013

ஜி.எஸ்.எல்.வி. டி- 5 ராக்கெட் டிசம்பர் மாத மத்தியில் ஏவப்படும்: இஸ்ரோ விஞ்ஞானி பிரசாத் பேட்டி

ஜி.எஸ்.எல்.வி. டி- 5 ராக்கெட் டிசம்பர் மாத மத்தியில் ஏவப்படும்: இஸ்ரோ விஞ்ஞானி பிரசாத் பேட்டி

 

திரவ எரிபொருள் கசிவால் விண்ணில் செலுத்துவது ரத்து செய்யப்பட்ட ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் டிசம்பர் மாத மத்தியில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானி பிரசாத் தெரிவித்தார். 



முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜனிக் என்ஜின் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் கடந்த மாதம் 19-ந்தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படுவதாக இருந்தது. 



இந்த ராக்கெட் மூலம் ஜிசாட்-14 என்ற தகவல் தொடர்பு செயற்கை கோளும் இந்தியாவில் தகவல் சேவை வழங்குவதற்காக 6 கே.யூ.பேண்ட் டிரான்ஸ்பான்டர்களும், 6 விரிவுபடுத்தப்பட்ட சி பேண்ட் டிரான்ஸ்பான்டர்களும் செலுத்தப்படஇருந்தன. 



விண்ணில் செலுத்தும் கடைசி நேரத்தில் ராக்கெட்டின் 2-வது நிலையில் உள்ள என்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று திரவ எரிபொருள் கசிந்தது. அதனால் ராக்கெட் செலுத்துவது ரத்து செய்யப்பட்டது.



இந்த கசிவு சரிசெய்யப்பட்டு பின்னர் ஒரு நாளில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.



இந்த நிலையில் நேற்று சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் வருடாந்திர தொழில்நுட்ப விழா நடைபெற்றது. அந்த விழாவை இஸ்ரோ விஞ்ஞானி எம்.ஒய்.எஸ்.பிரசாத் தொடங்கி வைத்தார். 



அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



கடந்த மாதம் 19-ந்தேதி நிறுத்தி ராக்கெட் ஏவுவது தள்ளிவைக்கப்பட்டபிறகு அதில் உள்ள ஜிசாட்-14 என்ற செயற்கை கோள், ராக்கெட்டில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. கசிந்த 2-வது நிலை எரிபொருள் பகுதி ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



முதல் நிலை எரிபொருள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ராக்கெட் ஏவுவதற்கு உரிய அனைத்து பணிகள் முடிவடைந்து, நிறுத்தி வைக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் டிசம்பர் மாத மத்தியில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு விஞ்ஞானி பிரசாத் தெரிவித்தார்.

புலி...குரங்கு...மனிதன்.(நீதிக்கதை)


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlkKhPjswGXl0cXCmVCopSHn8HT5kfiC3AJajKxDKcWqZtCKH4DDPnThVGsAmeesMQrZeZudfA5xaTdFwwf9Ph_KWl1dunw6XtWeXa9gl6ltqhNx-5PGdF_0kMyJaRZvF8x4hTZGDVmoQr/s1600/tiger+2.bmp


 
அருண் ஒரு நாள் காட்டு வழியே நடந்து கொண்டிருந்தான்.கிட்டதட்ட இருட்டும் சமயம்.
 


அந்த சமயம் புலி ஒன்று அவனை பார்த்து துரத்த ஆரம்பித்தது...


அவன் உடனே அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிக் கொண்டான்.வந்தவனுக்கு அந்த மரத்தில் வசித்த குரங்கு ஒன்று இடமளித்து..அவன் பசியையும் தீர்க்க
பழங்களைப் பறித்து கொடுத்தது.
 


மரத்தின் கீழே பசியோடு இருந்த புலி குரங்கிடம் ' குரங்கே அந்த மனிதனை நீ கீழே தள்ளு ...எனக்கு பசி ' என்றது.
 


ஆனால் குரங்கோ ..'இவன் என்னை நம்பி வந்தவன்.அதனால் தள்ள மாட்டேன்.நம்மை நம்பியவர்க்கு துரோகம் செய்யக்கூடாது' என மறுத்தது.
 


பிறகு குரங்கு தூங்க ஆரம்பித்தது...அப்போது புலி..'மனிதனே...எவ்வளவு நேரமானாலும் நான் இங்கிருந்து போகமாட்டேன் ..எனக்கு கொள்ளைப் பசி.
 

அந்த குரங்கையாவது தள்ளி விடு ..நான் சாப்பிட்டுவிட்டு செல்கிறேன் ' என்றது.


உடனே அருண் .. தூங்கும் குரங்கை தள்ளி விட ..புலி அதை தின்று விட்டு மறைந்தது.


தன்னை நம்பியவனை காப்பாற்றியது குரங்கு ..தனக்கு உதவிய குரங்கை தன்னை காத்துக்கொள்ள தள்ளிவிட்டு ..நம்பிக்கை துரோகம் செய்தான் அருண்.


நாம்..இந்த கதை மூலம் தெரிந்துகொள்ளவேண்டியது - நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது.ஆபத்துக்கு நமக்கு உதவியவர்களின் நற்செயலை மறக்கக் கூடாது. 
 

Tuesday 17 September 2013

அளவிற்கு மிஞ்சக் கூடாது.- நீதிக்கதைகள்



 
 
மதன் வீட்டில் ஒரு வாய் குறுகலான ஜாடி ஒன்றில் அவனது அம்மா பாதாம் பருப்புகளை போட்டு வைத்திருந்தார்.

 
ஒரு நாள் அம்மா வெளியே செல்லும் போது மதனைப் பார்த்து ..மதன்..உனக்கு பசித்தால்..ஜாடியிலிருந்து கொஞ்சம் பாதாம்பருப்பை எடுத்து சாப்பிடு..',நான் வெளியே
போய் விட்டு சீக்கிரம் வந்து விடுவேன் 'என்று சொல்லிச் சென்றாள்.


பின் மதனும் ஜாடியினுள் கை விட்டு கையில் எவ்வளவு பாதம் பருப்பை எடுக்க முடியுமோ அதை எடுத்து ஜாடியினுள்ளிருந்து தன் கையை வெளியே எடுக்கப் பார்த்தான்.
ஜாடியின் வாய் குறுகலாக இருந்ததால் ..அவனால் கையை வெளியே எடுக்க முடியவில்லை...


கையில் இருக்கும் பாதாம் பருப்பை ஜாடியில் போட மனமில்லாமல் ...கையை வெளியே எடுக்கவும் முடியாமல் கண்ணீர் விட்டு புலம்பி அழுதான்...


அதற்குள் அவன் அம்மா வந்துவிட்டார்...அவர்..'மதன் உன் கையில் வைத்திருக்கும் பாதாம் பருப்பில் பாதியை ஜாடியில் போட்டுவிடு ..மீதி கொஞ்சம் பாதாம் பருப்புடன் கை சுலபத்தில்
வெளியே வந்துவிடும்' என்றார்.


எதையும் ஒரே சமயத்தில் அளவிற்கு அதிகமாக அடைய முயலக்கூடாது என்பதை உணர்ந்தான் மதன்.
 
 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - Idharkuthaane Aasaipattai Balakumara First Look Teaser HD new)





 ஆக்ரோஷமான கதாநாயகன், காதல் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளுக்காக மட்டுமே படத்தில் ஒரு கதாநாயகி என இருந்த தமிழ் சினிமாவின் போக்கு சமீப காலமாக சற்று அதிலிருந்து விலக ஆரம்பித்துள்ளது.


வழக்கமான கதை, கதைக்களம், காட்சிகளை மறுத்து புது ரூட்டில் பயணிக்கும் இளைஞர்களை தமிழ் சினிமாவில் காணக்கூடியதாக உள்ளது.



தமிழில் தயாராகும் படங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இவர்களின் படங்கள் மிக சொற்பம்தான். அட்டகத்தி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களை சொல்லலாம். அந்த வரிசையில் சூதுகவ்வும், யாருடா மகேஷ் படங்கள் தயாராகியுள்ளன. அதே ப்ளேவரில் தயாராகும் இன்னொரு படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.



 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...


விஜய் சேதுபதி தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். "சூது கவ்வும்" வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம் 'ரௌத்திரம்' இயக்குனர் கோகுல் இயக்கும் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா". 


நம் அன்றாட வாழ்வில் நிகழும் நகைச்சுவையின் பின் பலம் அதைவிட நகைச்சுவையானது. அதை முழு நீள நகைச்சுவையாக முன்னெடுக்கிறது இப்படம் என்றார் கோகுல்.



விஜய் சேதுபதி ஜோடியாக சுப்ரமணியபுரம் ஸ்வாதியும், அட்டக்கத்தி நந்திதாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பரோட்டா சூரியும் நடிக்கிறார். 



'சுமார் மூஞ்சி குமார்' என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிக்கும் பசுபதியின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறதாம். 



மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விப்பின் இசையமைக்கிறார். நடனம் ராஜூசுந்தரம். மதன்கார்கி வசனம் எழுதுகிறார்.

வணக்கம் சென்னை (2013) டிரெய்லர் - Vanakkam Chennai Movie Trailer new)








தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.




'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' தயாரிக்கும் இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும் பிரியாஆனந்த் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சந்தானம், மனோபாலா, ஊர்வசி, ரேணுகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.


காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில், சென்னையில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும், நாயகியும் சென்னையின் வாழ்க்கை நெருக்கடிகளுக்கு இடையில் எப்படி காதலிக்கிறார்கள் என்பதுதான் கதை.



அனிருத் இசையமைக்க நா.முத்துக்குமார், மதன் கார்க்கி & விக்னேஷ் சிவன் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.



 
 
 
 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top