.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 12 September 2013

கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட்!


ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது ‘ தினமும் இணையதள செக்யூரிட்டி
பற்றி பல புத்தகங்கள் வந்தாலும் ஏதுவுமே நடைமுறைக்கு பயன்படாது
என்று முழுமையாக படித்த பின் தான் புரியும். இப்போது இந்த குற்றத்தை
தடுப்பதற்கான சில வழிமுறைகள்.

வழிமுறைகள்:


* ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்களின் வங்கி
கணக்கை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொல்லலாம்.

* இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி
கணக்கு பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு தனி உலாவியும்
மற்றபடி தளங்களை பார்ப்பதற்கு தனி உலாவியும் பயன்படுத்தலாம்.

* Crack செய்து கொடுக்கும் மென்பொருளை ஒரு போதும் தரவிரக்காதீர்கள்
இதனுடன் தற்போது உங்கள் கடவுச்சொல்லை அனுப்பும் ஸ்கிரிப்ட்-மும்
கூடவே வருகின்றது.

*  பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று
ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.

*  கடவுச்சொல் தட்டச்சு செய்யும் போது உலாவியில் ஏதாவது மெசேஸ்
வந்து Ok , close என்று இருந்தால், நீங்கள் Esc பொத்தானை மட்டும்
அழுத்துங்கள் ஏன் என்றால் ok cancel , close எதை அழுத்தினாலும் ஒரே
வேலையைத்தான் செய்யும்.

* உலாவி பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது இடையில் Close அல்லது
Restart ஆனால் கண்டிப்பாக உங்கள் கவனம் உலாவியின் மேல்
இருக்கட்டும்.( தேவைப்பட்டால் உலாவியை uninstall செய்து மறுபடியும்
Install செய்து கொள்ளுங்கள் ).

* கடவுச்சொல்லை ஒரு போதும் உங்கள் கணினியில் சேமித்து வைக்காதீர்கள்.
ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள் நுழையுங்கள்.

* நெட்கஃபே- களில் சென்று பேங்க் Transaction செய்வதை கூடுமானவரை
தவிர்க்க பாருங்கள், பயன்படுத்தியே ஆகவேண்டும் என்றால் Firefox
உலாவியை பயன்படுத்தி Transaction செய்யுங்கள்.

* லாட்ரியில் பரிசு விழுந்திருக்கிறது என்று வரும் இமெயிலில்
ஒருபோதும் உங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை கொடுக்காதீர்கள்.

கோபம் கொண்டால்? - குறுங்கதை!

 
 
 
       ஒரு சிறுவன் சரியான முன் கோபக்காரனாக இருந்தான். அவனை கண்டிக்க நினைத்த அவனது தந்தை அவனை அழைத்து மகனே, இதோ இந்த வெள்ளைச் சுவற்றைப் பார்! நீ ஒவ்வொரு தடவையும் கோபப்படும் போதும் இந்த சுவற்றில் ஒரு ஆணியை அடிக்கப் போகிறேன் என்று சொன்னார். அதிலிருந்து அந்த சிறுவன் ஒவ்வொரு முறை கோபப்ப்படும் போதும் அந்த சுவற்றில் ஆணி அடித்தார் அந்த தந்தை. கொஞ்ச நாளில் அந்த சுவர் முழுசும் ஆணிகளால் நிரம்பியது. அதை பார்த்த சிறுவனுக்கு தனது குற்றம் என்ன என்று புரிந்தது. அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் குற்ற உணர்ச்சியால் கூனிக் குறுகி நின்றான்.
 
 
     அவனாக தந்தையிடம் அப்பா. நான் இனி கோபப்பட மாட்டேன், ஒழுங்காக இருக்கிறேன் என சொன்னான். அவனை பாசத்துடன் அனைத்து நீ கொபப்பட்டதால் நான் சுவற்றில் அறைந்த ஆணிகளை நீயே பிடுங்கி எடுத்து விடு என சொன்னார். அவனும் நாள் முழுசும் கஷ்டப்பட்டு அந்த ஆணிகளை எல்லாம் பிடுங்கினான். ஆனால் அந்த சுவர் முழுசும் அந்த ஆணிகள் அறைந்த தழும்புகள் அப்படியே இருந்தன. அந்த சிறுவன் சுவற்றின் தழும்புகளை தந்தையிடம் காட்டி அழுதான். ஆணிகளை பிடுங்கி விட்டேன். ஆனால் அதன் அடையாளம் இருகிறதே என வருத்தத்துடன் சொன்னான். அவனது தந்தை, கோபமும் இதைப் போல தான் மகனே, கோபத்தை நாம் நிறுத்தி விட்டாலும், அதன் விளைவுகளை நம்மால் அழிக்க முடியாது என்றார். 
 
 
நீதி: கோபத்தின் விளைவுகள் பயங்கரமானது. எனவே கோபம் கொள்ளுதல் கூடாது.

இளமை தோற்றத்தை தக்கவைக்கும் 14 உணவுகள்!


இளமை தோற்றத்தை தக்கவைக்கும் 14 உணவுகள்


உடலுக்கு போதாது. எல்லா வித சத்துக்களும் உடலுக்கு அவசியம். அதில் வைட்டமின் `சி' கண்ணிற்கு நல்லது, ஓமேகா3 இதயத்திற்கு நல்லது என ஒவ்வொரு வைட்டமினும் ஒவ்வொரு சக்தியை உடலுக்கு தந்து, மனதுக்கும், உடலுக்கும் தேவையான பலத்தை அளிக்கின்றது.

எனவே அளவான உணவை தேவையான சத்துக்களுடன் எடுத்துக் கொண்டாலே, ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வாழ முடியும். குறிப்பாக நோய் இல்லாமல் இருந்தாலே, இளமையுடன் காட்சியளிக்க முடியும். சரி, இப்போது உடலில் ஏற்படும் நோய்களைத் தடுத்து, முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும் சில உணவுகள் பற்றிப் பார்ப்போமா!

1.ஆப்பிள்/திராட்சை/செர்ரி/ஸ்ட்ராபெர்ரி :

மேற்கூறியவற்றில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. மேலும் இந்த பழங்களில் எலாஜிக் அமிலங்கள் உள்ளன. இவை புற்றுநோய் வருவதை தடுக்கின்றது.

2.முட்டைக்கோஸ் குடும்பம் :

முட்டைக்கோஸ் குடும்பம் என்று சொல்லப்படும் முட்டைக் கோஸ், காலிஃபிளவர், ப்ராக் கோலி, பிரஸ்ஸல்ஸ் முளைகள் போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. மேலும் இந்த காய்கறிகளில் பீட்டா கரோட்டின், மற்றும் ஐஸோதியோசயனைடுகள் (குறிப்பாக ப்ரோக்கோலியில் காணப்படும்) புற்றுநோயை தடுக்கின்றது.

3.மிளகாய்/மிளகுத்தூள் :

மிளகாய் வயிற்றை சேதப்படுத்தும் என்று கருதப்பட்டது. ஆனால் இப்போது நிபுணர்கள் மிளகாயில் இருக்கும் லேசான எரிச்சல் வயிற்றின் பாதுகாப்பிற்கு உதவுகின்றது என்று கூறுகின்றனர். இந்த காரம் புண் மற்றும் செல் பாதிப்பை தடுக்க உதவும்.

மேலும் இவற்றில் வைட்டமின் `சி' மற்றும் நோயெதிர்ப்பு எதிர்ப்பு சக்தி தரும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அதிலும் குடைமிளகாயின் உள் இருக்கும் ஒரு வித காரம் தரும் பொருளில் ஆக்ஸிஜனேற்றம் தரும் தன்மை உள்ளது என்பதால் இது உடலுக்கு மிகவும் நல்லது.

4.சிட்ரஸ் பழங்கள் :

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் புற்றுநோயை தடுக்க உதவும். இவற்றில் இருக்கும் வைட்டமின் `சி', லிமொனின் போன்றவை புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை பாதித்து அந்நோய் தாக்காமல் காக்கின்றது. மேலும் சருமத்தை பொலிவோடு, இளமையுடன் வைத்துக்கொள்கிறது.

5.பூண்டு மற்றும் வெங்காயக் குடும்பம் :

பூண்டில் உள்ள அல்லிசின், மோசமான கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைத்து, ரத்தத்தின் நல்ல கொழுப்புத் தன்மையை அதிகப்படுத்தி, உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கின்றது. இதனால் இவை ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இது ஆன்டிபயாடிக் பண்புகளை கொண்டுள்ளது. வெங்காயம், வெங்காயத்தாள், சின்ன வெங்காயம் போன்றவற்றில் ஆலியம் என்ற தன்மை உள்ளது. இவை இதயம் மற்றும் கல்லீரலுக்கு மிகவும் நல்லது.

6.க்ரீன் டீ :

க்ரீன் டீயில் புற்றுநோயை எதிர்க்கும் தன்மை உள்ளது. மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனால்கள் புற்றுநோயை தீர்க்க உதவுகின்றது என்று கூறப்படுகின்றது. இது இதயத்திற்கும், கல்லீரலுக்கும் மிகவும் நல்லது.

7.கீரைகள் :

பசலைக் கீரை, வெந்தயக்கீரை, லெட்யூஸ், பார்ஸ்லி, செலரி போன்றவற்றில் உள்ள பீட்டா கரோட்டின் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

8.ஓட்ஸ் :

இதயத்திற்கு ஓட்ஸ் மிகவும் நல்லது. அதற்கு தினமும் ஒரு கப் ஓட்ஸ் எடுத்துக் கொண்டால், சக்கரை அளவை கட்டுப்படுத்தி, இதயத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

9.மீன் :

கானாங்கெளுத்தி, சால்மன், சூரை, மத்தி, கடல் மீன், ஏரி, ட்ரௌட் போன்ற மீன்களில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ரத்த உறைவைப் போக்கும். ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் கீல்வாதம், சரும அழற்சி மற்றும் அல்சரேட்டிவ் கொலிட்டஸ் போன்ற அழற்சி ஏற்படுத்தும் நோய்களில் இருந்து நம்மை காக்கும்.

10.ஆலிவ்/ரேப்சீடு எண்ணெய் :

அதிகமாக எண்ணெய் எடுத்து கொள்வது கெடுதல் தான். ஆனால் பதப்படுத்தப்பட்ட எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது. முக்கியமாக மோனோ அன்சாச்சுரேட்டர் ரக எண்ணெய் மிகவும் நல்லது. இது ஆலிவ் மற்றும் ரேப்சீடு எண்ணெயில் அதிகமாக உள்ளது.

11.பப்பாளி/கேரட் :

மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் நிற காய்கறிகளான பூசணி, மாம்பழம், ஆப்ரிக்காட், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றை விட, பப்பாளி மற்றம் கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது.

12.சோயா பொருட்கள் :

சோயா பீன்ஸ், சோயா மாவு, சோயா பால் மற்றும் டோஃபு உணவானது குறைந்த கொழுப்பு கொண்ட கால்சியம் நிறைந்த உணவாகும். ஜெனிஸ்டின் நிறைந்த சோயா தயாரிப்புகள் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை வாய்ந்தது.

13.தக்காளி :

புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது தக்காளி. லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டு போன்றவை புற்று நோயை எதிர்க்கும் தன்மை கொண்டது. இதில் கவுமாரிக் மற்றும் கோல்ரோஜினிக் அமிலம் அதிகமாக இருப்பதால், இது புற்றுநோயை எதிர்க்கின்றது.

14.தயிர் :

ஆய்வு ஒன்றில் பாக்டீரியா அதிகம் உள்ள தயிரானது செரிமானத்திற்கு மிகவும் நல்லது என்று கூறுகின்றது. அதுமட்டுமின்றி, இதில் கால்சியம் அதிக உள்ளதால், இந்த உணவு ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு எதிராக பயன்படுகின்றது. எனவே மேற்கூறிய அனைத்தையும் உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் நோய்கள் தாக்காமல், சருமமும் நன்கு இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் காணப்படும். 

கேரட்- பீட்ரூட் சூப்!

 கேரட்-  பீட்ரூட் சூப்


தேவையானவை:

பீட்ரூட்  –2
கேரட்  – 2
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கவும்),
வெங்காயம் – ஒன்று
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு,
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.
வெண்ணெய் - தாளிக்க

செய்முறை:

• கேரட், பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

• வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• சீரகத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

• காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்.

• இதனுடன் துருவிய பீட்ரூட், கேரட் சேர்த்து, பாதி வேகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்கவிடவும். பிறகு, இதை ஆற வைத்து வடிகட்டவும்.

• அதில் உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.


ஃப்ரன்ட் அண்ட் சைடு லெக் ரைஸ்!


ஃப்ரன்ட் அண்ட் சைடு லெக் ரைஸ்



சுவருக்கு அருகே நேராக நின்று கொள்ளவும். வலது கையை சுவரில் வைத்துக்கொண்ட இடது கையை இடுப்பில் வைக்கவும். இந்த நிலையில் இடது காலை முடிந்த வரை முன்னால் உயர்த்தவும்.

பின்பு பழைய நிலைக்கு வந்த பின் இடது பக்கம் உயர்த்தவும். இது போல் 15 முறை செய்தவுடன் இடது கையை சுவரிலும் வலது கையை இடுப்பிலும் மாற்றி வைத்து 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். சில விநாடிகள் ரிலாக்ஸ் செய்த பின் மேலும் 2 செட்கள் செய்ய வேண்டும்.

பலன்கள் :

இடுப்புத் தசைகள் வலுவடையும். கோர் மசில்ஸ் எனப்படும் வயிற்றைச் சுற்றியுள்ள அனைத்துத் தசைகளும் வலுப்பெறும். பெண்களுக்கு, அடி வயிற்றுப் பகுதிகள் வலுவடையும். கால்கள் வலுப்பெறும். 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top