.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 5 September 2013

ஒட்டு மொத்த ஹார்ட் பிரச்னைக்கு ஒரே ஒரு மாத்திரை!


உலக அளவில் உள்ள இதய நோயாளிகளில் இந்தியாவில் தான் 60 சதவீதம் பேர் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.வரும் 2015ம் ஆண்டிற்குள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் 20 மில்லியன் பேர் இறக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.அது மட்டுமின்றி 2015ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் பேருக்கு பக்கவாதம் ஏற்படக்கூடும் என்று கணக்கிடப்பட்டு இருந்தது.இந்நிலையில் எல்லாவகையான இதய நோய்களுக்கும் பொதுவானதொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.


sep 5 - health bill
 

இதுநாள்வரை இரத்தக் கொதிப்பு, இரவில் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க ஆஸ்பிரின் என இனி தனித்தனியாக மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இனி இல்லை என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். ஏனென்றால் சில நேரங்களில் நிறைய மாத்திரை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள், மறதியில் சில மாத்திரைகளைச் சாப்பிட மறந்து விடுவதுண்டு. அதனால், உருவாகின்ற பின் விளைவுகளால் அவர்கள் மேலும் அவஸ்தையுற வேண்டிய நிலை உருவாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியில், இந்த புதிய மருந்து உருவாக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
பல மருந்துகளின் செயலைச் செய்யும் வல்லமைப் பெற்ற இந்த மருந்துக்கு ‘பாலி பில்’ என பெயரிட்டுள்ளனர் அதிலும் ஐரோப்பா மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதன் முடிவுகள் திருப்திகரமாக அமைந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த பாலிபில்லில் ஆஸ்பிரின், ஸ்டாடின் மற்றும் இரண்டு வகையான இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் மருந்துகள் சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.இந்த ஆய்வில், 62 வயதில் உள்ள சிவிடி எனச் சொல்லப்படுகிற இதய நோயாளிகள் 2004 பேர் பங்கெடுத்துக் கொண்டார்கள். இந்த ஆய்வு கடந்த 2010 மற்றும் 2011ம் வருடக்களில் ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப் பட்டது.அதனைத் தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு மேற்கொள்ளப் பட்ட ஆய்வில், இதய நோய் மருந்தின் விளைவுகள், பாதிப்புகள் மற்றும் பயன்கள் ஆகியவைக் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

One pill for all heart problems

********************************** 


How often do you forget to pop that pill to control your shooting blood pressure? Or skip the aspirin tablet that could have prevented a stroke at night? Not anymore.For the first time, doctors and researchers have come up with a single pill for all cardiovascular diseases (CVD), including high blood pressure and vulnerability to stroke, doing away with the pain of popping multiple pills to keep your heart healthy. Trials for this new pill – called the polypill – across Europe and India have proved successful, according to a study published on Wednesday in the Journal of the American Medical Association.

ச‌‌ங்கட ஹர சது‌ர்‌த்‌தி!


சது‌ர்‌த்‌தி ‌தி‌தி கணேசரு‌க்கு ‌மிகவு‌‌ம் உக‌ந்த ந‌‌ன்னா‌ள். சு‌க்ல ப‌ட்ச (வள‌ர்‌பிறை) சது‌ர்‌த்‌தியை வரசது‌ர்‌த்‌தி எ‌ன்று‌ம் ‌கிரு‌ஷ்ண ப‌ட்ச (தே‌ய்‌பிறை சது‌ர்‌த்‌தியை) ச‌ங்கடஹர சது‌ர்‌த்‌தி எ‌ன்று‌ம், ச‌ங்க‌ஷ்டஹர சது‌ர்‌த்‌தி எ‌ன்று‌ம் கூறுவ‌ர். நடு‌ப்பக‌ல் வரையு‌ள்ள சு‌க்ல சது‌ர்‌த்‌தியு‌ம், இர‌வி‌‌ல் ச‌ந்‌திரோதய‌ம் வரை ‌‌நீடி‌க்க‌ி‌ன்ற ‌கிரு‌ஷ்ண சது‌ர்‌த்‌தியு‌ம் ‌விரத‌த்‌தி‌ற்கே‌ற்றவை. ச‌‌ங்கட ஹர சது‌ர்‌த்‌தி‌யி‌ல் பக‌லி‌ல் உபவாச‌ம் இரு‌ப்ப‌ர். இரவு ச‌ந்‌திரனை க‌ண்டது‌ம் அ‌‌ர்‌க்‌கிய‌ம் த‌ந்து, பூஜையை முடி‌த்து ‌‌பி‌ன் உ‌ண்ப‌ர்.

ஆ‌திசேஷ‌ன் நாரதரது உபதேச‌ப்படி ச‌ங்கட ஹர சது‌ர்‌த்‌தி ‌விரத‌மிரு‌ந்தா‌ர். ‌விநாயகரது ‌‌‌திருவருளா‌ல் ‌‌ச‌ிவபெருமா‌ள் முடி‌யி‌ல் இரு‌க்கு‌ம் பேறு பெ‌ற்றா‌ர். அவ‌னியை‌த் தா‌ங்கவு‌ம், ‌விநாயகரு‌க்கு உதரப‌ந்தனமாக இரு‌க்கவு‌ம் ‌திருமா‌லி‌ன் படு‌க்கையாகவு‌ம் ஆகு‌ம் வர‌ம் பெ‌ற்றா‌ர்.

ச‌‌ங்கர ஹர சது‌ர்‌த்த‌ி ‌விரத‌த்தை அனு‌ஷ்டி‌த்தே ராவண‌ன் இல‌ங்கா‌திப‌த்ய‌ம் பெ‌ற்றா‌ன். பா‌ண்டவ‌ர்கள‌், து‌ரியோதனா‌தியரை வெ‌ன்றன‌ர். முத‌ன் முத‌லி‌ல் இ‌ந்த ‌விரத‌த்தை அ‌ங்கார‌கன் (செ‌‌வ்வா‌ய்) அனு‌ஷ்டி‌த்து நவ‌க்‌கிரகங்‌க‌ளி‌ல் ஒ‌ன்றானா‌ர். அதனா‌ல் இ‌ந்த ச‌ங்கட ஹர சது‌ர்‌த்‌தி ‌விரத‌த்‌தி‌ற்கு அ‌‌ங்காரக சது‌ர்‌த்‌தி ‌விரத‌ம் எ‌ன்று‌ம் அழைக்கப்படுகிறது.

ச‌ங்கர ஹர சது‌ர்‌த்‌தி‌ ‌விரத‌த்தை மா‌சி மாத‌ம் ‌கிரு‌ஷ்ணப‌ட்ச‌ம் (தே‌ய்‌பிறை) செ‌வ்வா‌ய்‌க்‌‌கிழமையோடு வரு‌ம் சது‌ர்‌த்‌தி ‌தி‌தி‌யி‌ல் துவ‌ங்‌கி ஓரா‌ண்டு ‌வி‌தி‌ப்படி அனு‌ஷ்டி‌த்தா‌ல் எ‌ல்லா‌த் து‌ன்ப‌ங்களு‌ம் ‌நீ‌ங்க‌ப் பெறுவா‌ர்க‌ள். செ‌ல்வ‌ம், செ‌ல்வா‌க்கு ஆ‌கிய அனை‌த்து இ‌ன்ப‌ங்களையு‌ம் அடைவ‌ா‌ர்க‌ள். ஆவ‌ணி மா‌த‌த்‌தி‌ல் வரு‌ம் தே‌ய்‌பிறை சது‌‌ர்‌த்‌தி‌யி‌லிரு‌ந்து 12 மாத‌ங்க‌ள் ‌பிர‌தி மாதமு‌ம் அனு‌‌ஷ்டி‌த்து, ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி‌க்கு மு‌ந்‌திய தே‌ற்‌பிறை சது‌ர்‌த்‌தியான மஹா ச‌‌ங்கட ஹர சது‌ர்‌த்‌திய‌ன்று முடி‌க்கு‌ம் மரபு‌ம் உ‌ண்டு.

இ‌ந்த ‌விர‌‌த்தை தொட‌ங்கு‌ம் நா‌ளி‌ல் சூ‌ரிய‌ன் உ‌தி‌க்க 5 நா‌ழிகை‌க்கு (ஒரு நா‌ழிகை எ‌ன்பது 24 ந‌ி‌‌மிட‌ங்களாகு‌ம். இர‌ண்டரை நா‌‌ழிகை எ‌‌ன்பது 60 ‌நி‌மிட‌‌ங்க‌ள். அதவாது ஒரு ம‌ணி. எனவே 5 நா‌ழிகைக‌ள் எ‌ன்பது 120 ‌நி‌மிட‌‌ங்க‌ள் அ‌ல்லது 2 மண‌ி) மு‌ன்னரே உற‌க்க‌த்‌தி‌லிரு‌ந்து எழு‌ந்து, ‌வி‌‌தி‌ப்படி ச‌ங்க‌‌ற்ப‌ம் செ‌ய்து கொ‌‌ண்டு, ‌பு‌னித ந‌தி‌‌யி‌ல் ‌நீராடி, ‌‌சிவ‌ச்சசின்ன‌ங்களை அ‌ணி‌‌ந்து கொ‌ண்டு, ‌விநாயக‌ப் பெருமானை ‌தியா‌னி‌க்க வே‌ண்டு‌ம்.

அவருடைய ஓரெழு‌‌த்து, ஆறெழு‌த்து ம‌ந்‌திர‌ங்க‌ளி‌ல் ஏதாக‌ிலு‌ம் ஒன்றை, அதுவு‌ம் தெ‌ரியாதவ‌ர்‌கள் விநாயகரது பெய‌ர்களையாவது இடை‌விடாது அன‌்று நா‌ள் முழுகூது‌ம் ஜெ‌பி‌த்‌த‌‌ல் வே‌ண்டு‌‌ம். உபவாச‌ம் இரு‌ப்பது‌ம் நல‌ம். இரவு ச‌ந்‌திரோதய‌ம் ஆனவுட‌‌ன் ச‌‌ந்‌திர பகவானை பா‌ர்‌த்து‌வி‌ட்டு‌ச் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். அ‌ன்று ‌விநாயக புராண‌த்தை‌ப் பாராயண‌ம் செ‌ய்வது ந‌ல்லது.

இ‌வ் ‌விரத‌த்தை ஓரா‌ண்டு, அதாவது ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி‌க்கு‌ப் ‌பிறகு வரு‌ம் ச‌ங்கட ஹர சது‌ர்‌த்‌திய‌ி‌லிரு‌ந்து மஹா ச‌ங்கடஹர சது‌ர்‌த்‌தி வரை, உறு‌தியுட‌ன் அனு‌ஷ்டி‌ப்பவ‌ர்க‌ள் எ‌ல்லா நல‌ன்களையு‌ம் பெறுவ‌ர். இ‌த்தகைய ச‌க்‌தி வா‌ய்‌ந்த ச‌ங்கடஹர சது‌ர்‌த்‌தி ‌‌‌விரத‌த்தை வருட‌ம் முழுவது‌ம் அனு‌ஷ்டி‌‌க்க முடியாதவ‌ர்க‌ள், மஹா ச‌ங்கட ஹர சது‌ர்‌த்‌தி ‌‌தின‌த்‌திலாவது அனு‌ஷ்டி‌த்தா‌ல் ஒரு வருட‌ம் ‌விரத‌ம் கடை‌பிடி‌க்க பலனை ‌விநாயக‌ரி‌ன் அருளா‌ல் பெறுவா‌ர்க‌ள் எ‌ன்பது உறு‌தி.

கண் திறந்த கணபதி!

விநாயகப் பெருமானின் பல்வேறு வடிவங்களையும், கோணங்களையும், அவற்றின் சிறப்புக்களையும் நாம் அறிந்திருக்கிறோம். பார்வையற்ற பக்தனுக்கு கண் வழங்கிய கணபதியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இத்தகைய சிறப்பு பெற்ற கணபதி, தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார்.

நினைத்த காரியத்தை நிறைவேற்றித்தரும் கண் கொடுத்த கணபதியை, அந்த பெயரால் அழைக்கப்படும் நிகழ்ச்சி முன்பு நடந்ததாக வரலாறு உண்டு.

பிறப்பால் பார்வையற்ற ஒருவர், தனக்கு பார்வை இல்லையே என்ற சோகத்திலும், வறுமை தன்னை வாட்டி வதைக்கிறதே என்ற ஆதங்கத்திலும் துன்பத்தோடு வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் தான் சுவாமிமலையில் உள்ள விநாயகரின் பெருமைகளை அவர் உணந்து, அங்கு சென்றார். பிறர் உதவியுடன் வஜ்ச்சிர தீர்த்தம் என்ற கிணற்றில் நீராடி, கடவுளை வேண்டி விரதம் இருக்கத் துவங்கினார்.

பார்வையற்ற பக்தரின் செயலை பலர் ஏளனம் செய்தனர். எனினும் மனம் தளராமல் அவர் தனது விரதத்தை தொடர்ந்தார்.

தனது பக்தரின் இந்த செயலால் அகம் மகிழ்ந்த விநாயகர், பார்வையற்ற பக்தனின் குறையை நிவர்த்தி செய்தார். 'அஞ்சற்க..' என்று கூறி அவரது புறக்கண்ணையும், அகக்கண்ணையும் திறந்தார்.

தன்னை நோக்கி விரதம் இருருதவர்களை தான் எப்போதும் கைவிடுவதில்லை என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னரே இவ்வினாயகரை கண் திறந்த கணபதி அல்லது கண் கொடுத்த விநாயகர் என்று பக்தர்கள் போற்றி வழிபட்டு வருகின்றனர்.

அன்னையும் விநாயகரும்!


ஸ்ரீ அரவிந்தருடன் ஆன்மீக மாமுயற்சியில் ஈடுபட்ட அன்னை அவர்கள் ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் யோக பயிற்சிகள் குறித்து சாதகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு நாள், சாதகி ஒருவர் விநாயகரைப் பற்றிய கேள்வி எழுப்பினார். இறைவன் அப்படிப்பட்ட உருவத்தி்ல் வருவாரா? அது உண்மையா? என்று அன்னையை வினவினார்.

அதற்கு பதிலளித்த அன்னை, "என்னுள்ளும் இந்தக் கேள்வி எழுந்தது. அதில் ஆழமாக தியானித்தேன். அப்பொழுது நான் சற்றும் எதிர்பாரா வண்ணம் ஆம் என்பது போல விநாயகர் - நீங்களெல்லாம் பார்க்கின்றீர்களே அதே ரூபத்தில் - என் முன் தோன்றினார்.

என்ன வேண்டும் என்று வினவினார்.

எனக்கு எப்படி உதவுவீர்கள் என்று கேட்டேன்.

எல்லா வழியிலும்... செல்வத்தில் இருந்து காரியங்கள் வரை என்னால் உதவ முடியும் என்று பதில் கூறினார். அப்பொழுது ஆசிரமத்தை நடத்துவதில் நிதி ரீதியாக பெரும் சிக்கல் இருந்தது. அதனைத் தீர்க்க முடியுமா என்று அவரைக் கேட்டேன். ஆகட்டும் என்றார்.

அதன்பிறகு, ஆசிரமத்தின் நிதிப் பிரச்சனை முற்றிலுமாகத் தீர்ந்தது. ஒவ்வொரு முறையும் நிதிச் சிக்கல் எழுவதும், பிறகு அதற்கு தீர்வாக நிதி வருவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.

ஆசிரமத்தை விரிவுபடுத்துவதிலும் அவருடைய உதவியை நாடியுள்ளேன். இந்த ஆசிரமத்தின் வளர்ச்சியில் அவருடைய பங்கு மகத்தானது" என்று அன்னை விரிவான பதிலளித்து முடித்தார்.

இதனை அன்னையின் நினைவுகள் (Vignettes of the Mother) என்ற ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் வெளியிட்ட புத்தகத்தில் காணலாம்.

அன்னையினுடைய மேஜையில் விநாயகரின் திருவுருவச் சிலையும், அதேபோல முருகரின் திருவுருவச் சிலையும் எப்போதும் இருந்ததாக ஆசிரமவாசிகள் புதிவு செய்துள்ளனர்.

புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் உள்ளது மணக்குள விநாயகர் கோயில். மிகப் பிரசித்திப் பெற்ற இத்திருக்கோயிலை விரிவாக்கம் செய்திட அக்கோயிலின் அறங்காவலர்கள் முடிவு செய்தபோது, அதற்கு இடம் தேவைப்பட்டது. கோயிலிற்கு அடுத்ததாக இருந்த கட்டடம் ஆசிரமத்திற்குச் சொந்தமானது. கோயில் அறங்காவலர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதியை கோயிலிற்கு அளித்தார் அன்னை. கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. கோயிலின் தென்மேற்கு மூலையில் அன்னையின் கொடை குறித்த கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.

‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி‌யி‌ல் ‌விரத‌ம்!

 
விநாயக‌ர் சது‌ர்‌‌‌த்‌தி ‌பண்டிகை நம் நாடு முழுவது‌ம் கொ‌ண்டாட‌ப்படு‌கிறது. த‌மிழக‌த்‌‌தி‌ல் ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் ‌‌விநாயக‌ர் ‌சிலைக‌ள் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ பூஜைக‌ள் நட‌த்த‌ப்ப‌ட்டு வரு‌க்‌கி‌ன்றன. ‌‌விநாயகரு‌க்காக எ‌ப்படி ‌விரத‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது ப‌ற்‌றி சில யோசனைகள்;

ஆவ‌ணி மா‌த‌ம் சு‌க்ல ப‌ட்ச சது‌‌ர்‌த்‌தி ‌தின‌த்‌தி‌ல் அ‌திகாலை‌யி‌ல் எழு‌ந்‌தி மூ‌‌ஷிக வாகனனை முழு மனதோடு ‌நினை‌த்து ‌‌நீராட வே‌ண்டு‌ம்‌.

பூஜை அறை‌யி‌ல் சு‌த்தமான மன‌ப்பலகை வை‌த்து அத‌ன் ‌‌‌மீது கோல‌ம் போட வே‌ண்டு‌ம். அத‌ன் மே‌ல் தலைவாழை இலை ஒ‌ன்றை வட‌க்கு பா‌‌‌ர்‌த்து வை‌த்து அத‌ன் மேலே ‌‌ப‌ச்ச‌‌ரி‌சியை பர‌ப்‌பி வை‌க்க வே‌ண்டு‌ம். பு‌‌‌திய க‌ளிம‌ண் ‌பி‌ள்ளையாரை அ‌ரி‌சி‌க்கு நடு‌வி‌ல் வை‌க்க வே‌ண்டு‌‌ம்.

அத‌ன் பி‌ன் அருக‌ம்பு‌ல்லோடு இலை, பூ‌க்களோடு ‌பி‌‌ள்ளையாரு‌க்கு ‌பிடி‌த்த வ‌ன்‌னி, ம‌ந்தாரை இலைகளோடு ‌விநாயக சது‌‌ர்‌த்‌தி அ‌ன்று அ‌ர்‌ச்‌சி‌க்க வே‌ண்டு‌ம்.

பி‌ள்ளையாரு‌க்கு அரு‌கி‌ல் ஒரு செ‌ம்‌பி‌ல் ‌நீ‌ர் ‌நிர‌ப்‌பி வை‌த்து அத‌ன்மே‌ல் மா இலை, தே‌ங்கா‌ய் வை‌த்து கு‌ம்பமாக அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம்.

விள‌க்கே‌ற்‌றி வை‌த்து கொழுக்க‌ட்டை, பழ‌ங்க‌ள், சு‌ண்ட‌ல் உ‌ள்டப பல பொரு‌ட்களை வை‌க்கவே‌ண்டு‌‌ம். எ‌‌ல்லா‌ம் தயாரானது‌ம் ‌‌பி‌ள்ளையாரு‌க்கு அருகு சா‌த்‌தி‌வி‌ட‌்டு அத‌ன் ‌பிறகு எரு‌க்க‌ம் பூ மாலை, வ‌‌ன்‌னி, ம‌ந்தாரை ப‌த்‌திர‌ம் எ‌ல்லா‌ம் சா‌த்த வே‌ண்டு‌ம்.

பி‌ன்ன‌ர் கணப‌தி‌யி‌ன் மூல ம‌ந்‌‌‌திரமான ஓ‌ம், ஸ்ரீ‌ம் ‌‌‌‌ஹ‌்‌‌ரீ‌‌ம் ‌க்‌லீ‌ம் ‌க்லெள‌ம் க‌ம் கணப‌தியே வரவரத ‌ஸ‌ர்வஜன‌ம்மே வஸமானய ‌ஸ்வாஹா எ‌‌ன்று 51 முறை சொ‌ல்ல வே‌ண்டு‌ம்.

பி‌ன்ன‌ர் உ‌ங்களு‌க்கு தெ‌ரி‌ந்த ‌விநாயக‌ர் து‌திகளை சொ‌ல்‌லி முடி‌வி‌ல் தூப‌ம், ‌‌தீப‌ம், ‌நிவேதன‌ம் செ‌ய்து ‌விநாயகரை வ‌ழிபட வே‌ண்டு‌ம். இ‌ப்படி பூஜை செ‌‌ய்‌கிற வரை‌க்கு‌ம் உபவாச‌ம் இரு‌ப்பது ந‌ல்லது.

ஒரு நா‌ள் ம‌ட்டு‌ம் ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி ‌விர‌த‌ம் இரு‌க்‌கிறவ‌ர்க‌ள் அ‌ன்று மாலை ‌நிலவு வ‌ந்தது‌ம் ச‌ந்‌திரனை பா‌ர்‌த்து ‌வி‌ட்டு ‌பி‌ள்ளையாரை வணங்கவே‌ண்டு‌ம். அ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌விர‌த‌ம் முழுமையாக பூ‌ர்‌த்‌தியாகு‌ம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top