.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 3 September 2013

எரிமலை பாறைகளில் இருந்து உயிரினங்கள் உருவாகியிருக்கலாம் – ஆய்வறிக்கை!


 


பூமியில் உயிரினங்களின் தோற்றம் மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி குறித்து விஞ்ஞானிகளிடையே பல விதமானக் கருத்துக்கள் நிலவுகின்றன. லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் பிராசியர் தலைமையிலான குழுவினர் உயிரினங்கள் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வின் முடிவில் மிதக்கும் எரிமலை பாறைகளில் இருந்து ஆதிகால உயிரினங்கள் தோன்றியிருக்கக்கூடும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளன.

சுமார் கடந்த 3,500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரில் மிதக்கும் தன்மையுள்ள எரிமலை பாறைகள் உருவாக்கியிருக்கலாம். அவற்றின் மீது மின்னல் தாக்கியதால் அவை நொறுங்கி பலவித ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம். அதில் இருந்து எண்ணை வடிவிலான ஹைட்ரோ கார்பன்கள் மற்றும் உலோகங்கள் உருவாகி அதன் மூலம் உயிரினங்கள் தோன்றி இருக்கக்கூடும் என பேராசிரியர் மார்ட்டின் பிராசியர் தெரிவித்துள்ளார்.

பிரசவ தழும்புகள் மறையனுமா?


 

                   பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும்.

இந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதால், அதனை போக்குவதற்கு கடைகளில் பல க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. என்ன தான் விலை உயர்வான அந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், அது முற்றிலும் அந்த தழும்புகளை போக்காமல், சில சமயங்களில் அவை சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, வேறு வித சரும பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன.

எனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமல் எளிதில் தழும்புகளைப் போக்க, ஒரு சில இயற்கை பொருட்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம்.

கற்றாழையின் ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால், ஸ்ட்ரெட்ச் மார்க்கின் நிறம் மங்கி, சருமம் அழகாகும். ஏனெனில் அதில் உள்ள வேதிப் பொருட்கள், பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்கி, சருமத்தை ஈரப்பசையுடன் ஆரோக்கியமாக வைக்கிறது.

லாவெண்டர் ஆயில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்க சிறந்த பொருளாக உள்ளது. அதிலும் இதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தினமும் மூன்று முறை தடவி மசாஜ் செய்து வந்தால், புதிய செல்கள் உருவாகி, ஸ்ட்ரெட்ச் மார்க்கை மறைய வைக்கும்.

ஆப்ரிக்காட் பழத்தை வைத்து தழும்பு உள்ள இடத்தில் ஸ்கரப் செய்தால், அது அங்குள்ள சருமத் துளைகளை விரிவடையச் செய்து, அதில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட செல்களை கண்டுபிடித்து, அதன் நிறத்தை மங்க வைத்து, நாளடைவில் படிப்படியாக தழும்புகளை மறைய வைத்துவிடும்.

அவோகேடோ, பாதாம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்தால் நாளடைவில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கிவிடும். அதிலும் இந்த எண்ணெய்களை லாவெண்டருடன் சேர்த்து தடவி மசாஜ் செய்தால், மறுமுறை அந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கும்.
பிரசவத்திற்குப் பின் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுப்பதற்கு கொக்கோ பட்டர் சிறந்ததாக இருக்கும். அதிலும் இதனை கர்ப்பமாக இருக்கும் போதே தடவி மசாஜ் செய்து வந்தால், திசுக்கள் பாதிப்படையாமல், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுககலாம். அதையே மார்க்குகள் வந்த பின்பு செய்தால், அந்த தழும்புகளை மறைய வைக்கலாம்.


அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!


 21-bleeding4-300-1-285x150


                 உடலில் சிறு அடிப்பட்டால் வரும் இரத்தத்தை பார்த்தால் சிலருக்கு மயக்கம் வரும். ஏன் சிலர் உயிரே போனது போல் பயப்படுவார்கள். ஆனால் அது எவ்வளவு பெரிய பயப்படக்கூடிய அளவில் பெரிய ஒரு விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகள் தான் இத்தகைய சிறு காயங்களால் இரத்தம் வரும் அளவிற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அப்போது பெற்றோர்கள் எதற்கும் பதட்டத்தோடு மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக, நம் முன்னோர்களின் வைத்தியமான சில வீட்டு மருந்துகள் இருக்கின்றன.

மேலும் சமையல் செய்யும் போது காய்கறிகளை வெட்டும் போது, கவனக்குறைவால் விரல்களை தெரியாமல் வெட்டிக் கொள்வோம். இத்தகைய நேரங்களில் எல்லாம், என்ன செய்வது என்று பதட்டப்படாமல், பாட்டி வைத்தியமான வீட்டு கிச்சனில் இருக்கும் பொருட்களை வைத்து சரிசெய்யலாம்.

* அடிப்பட்டு இரத்தம் வரும் போது, உடனே அந்த இடத்தை கழுவி விட்டு, வீட்டில் இருக்கும் காப்பி பொடியை, அந்த காயத்தின் மேல் வைக்க வேண்டும். இதனால் காப்பி பொடி இரத்தத்தை உறைய செய்யும்.

* இரத்த வடிதலை சரிசெய்ய மைதா அல்லது கோதுமை மாவை வைத்தால், அடிப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் வடிதல் நின்றுவிடும். இது ஒரு சிறந்த ஹோம் ட்ரீட்மெண்ட்.


* இந்த முறை சற்று வித்தியாசமானது. ஆனால் உண்மையானது. எலக்ட்ரிக்கல் டேப் வைத்து இரத்த வடிதலை தடுக்கலாம். எப்படியெனில், எலக்ட்ரிக்கல் டேப்பை காயம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இறுக்கமாக சிறிது நேரம் கட்ட வேண்டும். இதனால் அந்த இடத்தில் இரத்த ஓட்டம் தடைபடும்.

* சிறுவயதாக இருக்கும் போது, ஏதேனும் அடிப்பட்டால், வீட்டில் இருக்கும் அம்மா உப்பை அந்த இடத்தில் வைப்பார்கள். ஏனெனில் உப்பு மற்றும் உப்பு நீர், காயங்களை மட்டும் சரிசெய்யாமல், இரத்த வடிதலையும் தடுக்கும்.

* காயத்தால் இரத்தம் வரும் போது, சிலந்தி வலைகளை, அதன் மேல் வைத்தால், சிறிது நேரத்தில் இரத்தக் கசிவு நின்றுவிடும். பின் அதனை சுத்தமாக கழுவிட வேண்டும். இந்த சிகிச்சையை நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் சரியாகிவிடும்.


ஆகவே மேற்கூறியவாறு செய்து வந்தால், இரத்தக் கசிவு நீங்கிவிடும். மேலும், வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…
 


Love ஹார்மோன்’-களை அதிகரிக்கும் உணவுகள்!!!


 


தற்போது குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

               இத்தகைய நிலைமை ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. மேலும் அந்த காரணங்களை தெரிந்து கொண்டு அதனை சரிசெய்ய எவ்வளவோ முயற்சிக்கின்றனர். இருப்பினும் அதற்கான சரியான பலன் கிடைக்காமல் சிலர் இருக்கின்றனர். இவ்வாறு குழந்தை பெற முடியாமல் இருப்பதற்கு போதிய சத்துக்கள் உடலில் இல்லாதது, உறவு சரியாக இல்லாதது, இனப்பெருக்க மண்டலம் பலவீனமாக இருப்பது என்று பல உள்ளன.

இத்தகைய பிரச்சனைகள் பெரிதும் ஏற்பட நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் ஒரு காரணம். இவற்றால் உடலில் உள்ள பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தி தடைபடுவதோடு, இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கிறது. சிலருக்கு உறவில் சரியான ஈடுபாடின்றி இருப்பார்கள். இத்தகையவர்கள் வயாகராவை வாங்கி சாப்பிடுவார்கள். வயாகரா என்பது பாலுணர்வைத் தூண்டும் ஒருவித மாத்திரை. இவ்வாறு செயற்கை முறையில் கடைகளில் விற்கும் வயாகராவை வாங்கி போட்டு, உணர்ச்சியை தூண்டுவதற்கு பதில், இயற்கையாக பாலுணர்வைத் தூண்டும் ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிப்பதோடு, உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

இப்போது அந்த வகையான பாலுணர்வைத் தூண்டும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பாலுணர்வைத் தூண்டும் உணவுகள்!!!

தானியங்கள்

முளைகட்டிய தானியங்கள் மற்றும் நவதானியங்களை சாப்பிட்டால், உடலில் உள்ள பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன்கள் நன்கு செயல்படும். ஏனெனில் இவற்றில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ரிலாக்ஸ் செய்து, லிபிடோவை அதிகரிக்கும். ஆகவே இந்த உணவுகளை சாப்பிட்டால், பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

நியாஸின் உணவுகள்

நியாஸின் அல்லது வைட்டமின் பி3 எனப்படும் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள உணவுகளான அவோகேடோ, பரங்கிக்காய் மற்றும் கீரைகளை அதிகம் சாப்பிட்டால், உடலுறவின் போது உணர்ச்சியை அதிகரிக்கும். ஏனெனில் இவற்றில் உள்ள நியாஸின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்கி, செல்களின் செயல்களை அதிகரித்து, உணர்ச்சியை ஊக்குவிக்கும்.

வைட்டமின் ஈ உணவுகள்

வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ள உணவுகளான இனிப்பு உருளைக்கிழங்கு, ராஸ்பெர்ரி, கேரட் மற்றும் நட்ஸ் போன்றவற்றை, உடலுறவு கொள்ளும் 3 மணிநேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். இதனால் ஆண், பெண் இருவருக்குமே உணர்ச்சிகள் அதிகரித்து, அந்த உணர்ச்சிகளை நீண்ட நேரம் நிலைத்திருக்கச் செய்யும்.

சூப்பர் சாலட்

உறவின் போது நல்ல சந்தோஷத்தை அனுபவிக்க ஒரு சில ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இத்தகைய ஃபேட்டி ஆசிட்கள் நட்ஸ், விதைகள், தானியங்கள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றில் உள்ளன. ஆகவே அத்தகைய உணவுகளை சாலட் போல் செய்து அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், அந்த நேரத்தில் மிகுந்த உற்சாகத்தை அடையலாம்.

வைட்டமின் டி உணவுகள்

டயட்டில் இருப்பவர்கள் அனைவருக்கு உண்ணும் உணவில் சேர்க்க வேண்டிய சத்துக்களில் ஒன்று தான் வைட்டமின் டி. இத்தகைய வைட்டமின் டி சத்து, காளான் மற்றும் சிக்கரியில் அதிகம் உள்ளது. ஆகவே இவற்ற சாப்பிட்டால், உடலில் உள்ள செல்களின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, உறவின் போது மனநிலையை ஒழுங்குபடுத்தும்.

முளைகள்

முளைகளை உறவு கொள்ளும் முன்பு ஒரு மணி நேரத்திற்கு முன்பு 3 முதல் 5 அவுன்ஸ் சாப்பிட்டால், உடலில் உள்ள ஹார்மோன்களை நன்கு தூண்டும். அதேப்போல் முளைப்பயிர்கள், கறுப்பு ராஸ்பெர்ரிகளை இரண்டு மணிநேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். இதனாலும் உணர்ச்சிகள் நன்கு தூண்டப்படும்.

ஜிங்க் உணவுகள்

தற்போது அதிக வேலையின் காரணமாக மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே அத்தகையவர்கள் தங்கள் டயட்டில் ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், மன அழுத்தம் குறைந்து, சரியான உறவில் ஈடுபட முடியும். இத்தகைய ஜிங்க் சத்து பச்சை காய்கறிகள், பூசணிக்காய் விதைகளின் முளைகள் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

தர்பூசணி

தர்பூசணி ஒரு புதிய வயாகரா என்று சொல்லலாம். எப்படியெனில் இந்த தர்பூசணியில் 92% தண்ணீரும், 8% உணர்ச்சியைத் தூண்டும் சத்தான சிட்ருலின் என்னும் பொருளும் அடங்கியுள்ளன. இந்த சிட்ருலின் உடலினுள் செல்லும் போது அர்ஜினைன் ஆக மாற்றப்படுகிறது. இந்த அர்ஜினைன், வயாகராவைப் போலவே இரத்தக்குழாய்களை ரிலாக்ஸ் செய்து, லிபிடோவை அதிகரிக்கிறது.

ஒரே மாதத்தில் சர்க்கரைநோயை விரட்டலாம்!


images


சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன், ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.
வரக்கொத்தமல்லி அரை கிலோ, வெந்தயம் கால் கிலோ ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.


கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top