.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 29 August 2013

240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம்......


இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளின் அஞ்சல்

குறியீட்டு எண்ணை வைத்து எந்த நாடு என்பதையும் தெருவின்

பெயரையும் எளிதாக கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்

இந்த சிறப்புப் பதிவு.

அஞ்சல் குறியீட்டு எண் வைத்து நாட்டை கண்டுபிடிக்கலாம் ஒரு

நாட்டு அஞ்சக் குறியீட்டு எண் மட்டும் அல்லாமல் 240 நாடுகளின்



அஞ்சல் குறியீட்டு எண் வைத்து எந்த ஊர் என்று எளிதாக

கண்டுபிடிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

http://www.addressdoctor.com/lookup/default.aspx?lang=en

இந்த முகவரியைச் சொடுக்கி இந்தத்தளத்திற்கு சென்று எந்த நாடு

என்பது தெரிந்திருந்தால் நாட்டை தேர்ந்தெடுக்கவும் தெரியாவிட்டால்

நாடு என்பதில் Worldwide எனபதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

அடுத்து Postal code என்பதில் பின்கோட் ( அஞ்சல் குறியீட்டு எண்)

கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்தவும். உடனடியாக

சில நொடிகளில் நமக்கு எந்த ஊர் என்று காட்டுகிறது. வரும்

முடிவின் வலது பக்கம் இருக்கும் Select  என்பதை சொடுக்கி

மாவட்டம், தாலுகா, தெரு வாரியாக பார்க்கலாம். கண்டிப்பாக இந்தத்

தகவல் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக நாம்

இந்தியாவில் இருக்கும் நம் கிராமத்தின் பின்கோடு முகவரி கொடுத்து

தேடினோம் முடிவு மிகச்சரியாக இருந்தது.

ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்.

ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்.


இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் டிஜிட்டல் கேமிரா முதல்

மொபைல் போன், கம்ப்யூட்டர்,தொலைக்காட்சி,ஏ.சி என்று

பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களின் எலக்ட்ரானிக்ஸ்

பொருட்களின் வழிகாட்டி புத்தகத்தையும் (User Manual) ஒரே

இடத்தில் இருந்து தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



என்னிடம் இப்போது லேட்டஸ்டாக வந்திருக்கும் நோக்கியா மொபைல்

போன் இருக்கிறது ஆனால் அதன் User Manual என்னிடம் இல்லை,

பல இணையத்தில் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று



சொல்லும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக

இருக்கப்போகிறது. புது அலைபேசியின் User Manual மட்டும் அல்லாமல்

பழைய மொபைல் போன் முதல் அனைத்து எலக்ட்ரானிக்ஸ்

பொருட்களின் பயன்பாட்டு புத்தகத்தையும் சில நிமிடங்களில் ஒரே

இடத்தில் இருந்து தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்

உள்ளது.

இணையதள முகவரி : http://www.retrevo.com/samples/index.html

3G போன் முதல் சைனா போன் வரை , பழைய கணினி முதல் இப்போது

லேட்டஸ்டாக வெளிவந்திருக்கும் பாக்கெட் கணினி வரை அனைத்து

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் User Manual – ஐ இந்தத் தளத்தில்

இருந்து எளிதாக தரவிரக்கலாம். User Manuals for Popular Categories

என்பதில் இருந்து நாம் தேட விரும்பும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை

தேர்ந்தெடுத்து அடுத்து வரும் திரையில் எந்த நிறுவனம் என்பதையும்

அதன் மாடல் எண் என்ன என்பதையும் கொடுத்து எளிதாக

தரவிரக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு பயன்பாட்டு புத்தகம்

(User Manual) -ஐ தேடும் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

Hacking அறிந்தும் அறியாமலும்!

.

Key Loggers:-  
 
 கீ லாக்கர்ஸ் என்பவை நீங்கள் கணினி விசைப்பலகையில்  தட்டச்சிடும் விடயங்களை ஒரு கோப்பு வடிவில் மாற்றி,  கீலாக்கர்ஸ்ஸை உங்களுடைய கணினியில் நிறுவியவர் கைகளுக்கு அவற்றை அனுப்பி விடும் வேலையை செய்கின்றன.

அந்தவகையில் நீங்கள் உள்நுழையும் பக்கங்களில் வழங்கும் தகவல்கள். நீங்கள் தட்டச்சிடும் மின்னஞ்சல் செய்திகள் என முக்கியமான பலவற்றுடன் சேர்ந்து அத்தனையும் கீலாக்கர்ஸ்ஸை உங்கள் கணினியில் நிறுவியவர் கைகளுக்கு சென்றுவிடும்.

பொதுவாக key loggers(கீலாக்கர்ஸ்) software key logger/hardware key logger என இரண்டு வகைப்படும். அவற்றைப் பற்றி சிறிது பார்க்கலாம்.

1.software key logger -

இந்த வகை கீலாக்கர்ஸ் ஒரு மென்பொருளாக உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும். இவை நீங்கள் இணைய நடவடிக்கைகளின் போது தட்டச்சிடும் அனைத்து தகவல்களையும் கோப்பாக மாற்றம் செய்து இம்மென்பொருளை நிறுவியவருக்கு மின்னஞ்சல் செய்துவிடுகின்றன.

 இந்த கீலாக்கர்ஸ் மென்பொருட்கள் பிறரால் உங்களின் கணக்கு விபரங்களை அறியும் பொருட்டு உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய கணினியில் நிறுவபடலாம்.

அல்லது நாம் பாதுகாப்பற்ற தளங்களில் தரவிறக்கும் சில இலவச மென்பொருட்களோடு தரவிறங்கி அந்த மென்பொருளோடு சேர்ந்தே  கணினியில் நிறுவப்படலாம்.

2.hardware key logger -

இந்தவகை கீலாக்கர்ஸ் ஒரு  hardware device ஆக உங்கள் கணினியின் விசைப்பலகை தொடுப்பு கேபிள்களில் மிகவும் சூட்சுமமான முறையில் இணைக்கப்பட்டிருக்கும். இவற்றை கணனிகளில் இணைக்க 5 செக்கன்களே போதுமானது. இத்தகைய hardware key loggersஇன் செயற்பாடுகளும் software key loggersகளின் செயற்பாடையொத்தே காணப்படுகிறது. அதாவது இணைய உலவலில் நீங்கள் தட்டச்சிடும் விபரங்கள் அனைத்தையும் இவை  hardware key loggersகளை கணினியில் இணைத்தவர் கைகளுக்கு அனுப்பிவிடுகின்றன.



கீலாக்கர்ஸ் புரோகிராம்கள் எவ்வாறு எம் கணினிகளுக்குள் புகுந்துகொள்கின்றன?

கீலாக்கர்ஸ்கள் பிரதானமாக இரண்டு வழிகளில் எம் கணினிகளுக்குள் உள்நுழைகின்றன. முதலாவது, நாம் பாதுகாப்பற்ற தளங்களில் தரவிறக்கும் சில மென்பொருளோடு மென்பொருளாக சேர்ந்து தரவிறங்கி அம்மென்பொருட்களோடு சேர்ந்தே கணினியில் நிறுவப்படுபவை.

இரண்டாவது, பிறரால் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் கணினியில் தகவல்களை திருடும் நோக்குடன் மென்பொருள் வடிவாக நிறுவப்படுபவை, அல்லது ஹாட்வெயெர் டிவைசாக(Hardware Device) பொருத்தப்படுபவை.

கீலாக்கர்ஸ்ஸின் செயற்பாட்டை கணினியில் இனங்காண்பது எப்படி?

கணினியில் Task Manager ( CTRL+ALT+DEL) சென்று அவதானியுங்கள். எதேனும் சந்தேகத்திற்கிடமான Application கள் இயங்கிக்கொண்டிருந்தால் அவற்றை உடனடியாக End Task செய்துவிடுங்கள். அவை இத்தகைய கெடுதல் விளைவிக்கக்கூடிய புரோகிராம்களாக இருக்கலாம். எனினும் ஹாட்வெயர் ரகத்தைச்சேர்ந்த கீலாக்கர்ஸ்களை இனங்காண இம்முறை உதவாது. அவற்றை நீங்களாக கீபோர்ட் இணைப்பு தொடுப்பிகளில் அவதானித்தால்தான் கண்டுபிடிக்க முடியும்.

பொதுவாக கீலாக்கர்ஸ் புரோகிராம்களை திறந்துகொள்ள ஒரு சில விசைத்தொகுதிகள்(CTRL+ALT+SHIFT+K) பயன்படுத்தப்படுகின்றன. இவ்விசைகளை ஒருங்குசேர அழுத்தும்போது ஏதேனுமொரு புதிய வின்டோ தோன்றி பாஸ்வேர்ட்டை வேண்டி நின்றால்  அது ஒரு கீலாக்கர்ஸ் புரோகிராம்தான் என்பதை உறுதிப்படுத்தமுடியும். எனினும் எல்லாவகையான கீலாக்கர்ஸ் புரோகிராம்களையும் இந்த முறைமூலம் திறந்துகொள்ளமுடியாது.

சந்தையில் இலவசமாக கிடைக்கும் சில Keylogger Scanner (KL-Detector, SnoopFree) மென்பொருட்களைப் பயன்படுத்தியும் கீலாக்கர்ஸ்களின் செயற்பாடுகள் கணினியில் உள்ளதா என்பதை பரிசோதிக்க முடியும்.

கீலாக்கர்ஸ்களிலிருந்து கணினிகளைப் பாதுகாப்பது எப்படி?

ஓரளவு மிகச்சிறந்த ஒரு பாதுகாப்பு முறையென்றால் KeyScrambler  மென்பொருள் பாவனையைக் குறிப்பிடலாம். இதனை கணினியில் நிறுவியிருந்தால் நீங்கள் தட்டச்சிடும் ஒவ்வொரு எழுத்தையும் உடனடியாகவே இது என்கிரிப்ட்(encrypt) செய்துவிடுகிறது. ஆனபடியால் கீலாக்கர்ஸ் மென்பொருட்களால் நீங்கள் தட்டச்சிட்டதன் சரியான வடிவத்தை பெறமுடியாது போகும்.

பொது இடங்களிலுள்ள கணினிகளில் தட்டச்சிடும் போது ON  Screen Keyboard(Start->searchbox->type OSK)அல்லது சில வகையான அன்ரிவைரஸ் மென்பொருட்களில் உள்ள ”Virtual Keyboard” வசதிகளைப் பயன்படுத்துங்கள். எனினும் ஸ்கீரீன் சொட் எடுக்கும் வல்லமையுடைய கீலாக்கர்ஸ்களிடம் இந்த விளையாட்டும் செல்லாது.

மிகச்சிறந்த அன்ரிவைரஸ் மென்பொருட்களை பாவியுங்கள். இவை பெரும்பாலும் கீலாக்கர்ஸ்களின் செயற்பாடுகள் கணினியில் இருந்தால் காட்டிக்கொடுத்துவிடும். அன்ரிவைரஸ் பாவனையோடு மட்டுமல்லாமல் Firewall Softwares                           (I recommend you to use COMODO), Anti-spyware program என்பவற்றை பாவிப்பதும் நல்லது. firewall வசதி இயங்குதளங்களிலும் இருப்பதால் அவற்றை உயிர்ப்பு நிலையில் வைத்திருத்தல் பாதுகாப்பானது. இவற்றிற்கு மேலதிகமாக Anti Keyloggers மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். கீலாக்கர்ஸ் பிரச்சினைக்கு இதுவும் ஒரு தீர்வாக அமையும்.

மேலும் உங்கள் கணினியின் Operating System, Anti Virus, Internet Browser என்பவற்றிற்கு கிடைக்கப்பெறும் புதிய மற்றும் அவசியமான அப்டேட்களை(important updates) ஒதுக்கிவிடாதீர்கள். அத்தோடு நம்பிக்கையற்ற தளங்களிலிருந்து மென்பொருட்களை தரவிறக்கம் செய்வதை இயன்றளவு தவிர்த்துக்கொள்ளுங்கள். கீலாக்கர்ஸ் அபாயங்களும் இவற்றோடேயே கூட வரலாம்.

Social Engineering-

இந்த வகை ஹக்கிங் தாக்குதல் என்றால் என்ன என்பது பற்றி பார்ப்பதற்கு முன்னர், Social Engineering முறையிலமைந்த ஹக்கிங் வழிமுறை மூலம் தனது மின்னஞ்சல் கணக்கை இழந்து கொண்ட அமெரிக்கப்பிரபலம் பற்றிய கதையைப் பார்த்துவிடலாம்.

சாரா பாலின்(Sarah Palin) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அலாஸ்காவின் முன்னாள் அழகி, குடியரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர், அலாஸ்காவின் 11ஆவது ஆளுனர் என்றவாறு பலவற்றையும் அவரைப்பற்றி சொல்லிக்கொண்டுபோகலாம். அந்தளவுக்கு அமெரிக்க அரசியலில் புகழ்வாய்ந்த ஒரு பெண்மணி.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பாக துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரா பாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தல்நேர பரபரப்புகளுக்கு மத்தியில் சாரா பாலின் அம்மையாரின் தனிப்பட்ட ஈமெயில் கணக்கை(gov.sarah@yahoo.com) ஹக் செய்துவிட்டான் 20வயதேயான ஒரு மாணவன். எப்படி சாத்தியமானதென நீங்கள் நினைக்கலாம். ஆனா சிம்பிளா முடிச்சிட்டான் அந்த ஹக்கேர் வாலிபன்.

சாரா பாலின்  ”gov.sarah@yahoo.com” என்ற ஈமெயில் கணக்கைதான் பயன்படுத்துகிறார் என்பதை எப்படியோ அறிந்துள்ளான் அந்த குறும்புக்கார வாலிபன் . பின்னர் அவன் யாகூ மெயிலின் நுழைவுப்பக்கத்தில்(Login Page) சாராபாலினின் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு விட்டு ”Forgot Your Password” என்ற தெரிவினை அழுத்தி அது கேட்கும் ”security question” களுக்கு விடைகூற முற்பட்டிருக்கிறான். அங்கு கேட்கப்பட்ட  ”சாராபாலினின் பிறந்ததினம்”,”அவர் வசிக்கும் இடத்தின் Postal zip code” போன்ற வினாக்களுக்கு கூகுள் தேடல் மூலம் இலகுவாகவே பதில் கண்டுபிடித்துவிட்டான். எனினும் “where did you meet your spouse?” என்ற ஒரு கேள்வி மட்டும் கொஞ்சம் சிக்கலைக் கொடுத்தது. ஆனாலும் இடைவிடாத கூகுள் தேடலின் பின் அதற்கான விடை  “Wasilla high” என்பதை கண்டுபிடித்து விட்டான்.

பின்னர் என்ன எல்லாகேள்விக்கும் சரியாக பதில் அளித்தாகிவிட்டதே, இப்போது சாரா பாலின் அம்மையாரின் பிரத்தியேக ஈமெயில் கணக்கு அந்த குறும்புக்கார வாலிபன் கைகளில், அப்படியே கணக்கின் பாஸ்வேர்ட்டை ”popcorn” என ஒரு வகை களிப்போடு மாற்றி விட்டு உள்ளுக்குள் ஒருமாதிரியாக புகுந்து விளையாடினான் அவன்.

மறுநாள் விக்கிலீக்ஸ் போன்ற பிரபல தளங்களில் சாரா பாலினின் சில குடும்ப படங்களும் சில தனிப்பட்ட மெயில்களும் வெளியாகி செய்தியாக்கப்பட்ட போதுதான் வெளியுலகிற்கு தெரிந்தது. பின்னர் F.B.I ஹக்கேர் வாலிபனை பொறிவைத்துப்பிடித்தது தனிக்கதை.



சரி அதை விடுங்க விடயத்திற்கு வருவோம், இவ்வாறாக ஒருவருடைய கணக்கை மீட்பதற்கான தேவைக்காக வைக்கப்பட்டிருக்கின்ற security questionகளுக்கான விடைகளை உய்த்தறிந்து கொண்டு அவற்றுக்கு சரியாக விடை அளிப்பதன் மூலம் அந்த கணக்கை கைப்பற்றும் வழிமுறையே ”Social Engineering” என்பதாகும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்-

பெரிசா எதுவுமில்ல, ஒரு இணையக்கணக்கை(ஈமெயில்…etc) ஆரம்பிக்கும் போது உங்கள் கணக்கின் பாதுகாப்பு கருதி சில security questionகளை உங்களை தெரிவுசெய்து பதிலளிக்கவும் செய்வார்கள். அதன்போது பிறரால் இலகுவால் உய்தறியமுடியாத வினாக்களாக தெரிவு செய்யவேண்டும்.

 ”படித்த பாடசாலை” “வேலைசெய்யும் இடம்” “அம்மா/அப்பா பெயர்”  போன்ற இலகுவில் பிறரால் உங்களைப்பற்றி உய்த்தறியக்கூடிய வினாக்களை security questions ஆக அமைப்பதை தவிர்ப்பது நலம். ஏனென்றால் இவற்றுக்கான விடைகள் உங்கள் ஒன்லைன் ப்ரொபைல்களில்(Facebook,Google+) எளிதாக பிறருக்கு கிடைத்துவிடும். கூடவே உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களுக்கு பழக்கமானவர்களுக்கும் தெரிந்திருக்கும்.

சரியாகச் சொன்னால் நீங்கள் தெரிவுசெய்யும் Security Questionஇற்கான விடை நீங்கள் மட்டும் அறிந்த விடயமாக இருத்தல் சிறப்பானது.

மேலும் ஏற்கணவே உள்ள security questionகளை தெரிவு செய்வதை விடுத்து ”create your own security question” வசதியைப் பயன்படுத்தி நீங்களாகவே வினாக்களை உருவாக்கி விடையளிக்க முற்படுங்கள். இத்தகைய கேள்விகளுக்கான விடைகளை பிறரால் இலகுவாக உய்த்தறிய முடியாமல் இருக்கும்.

Tap Napping

இறுதியாக இந்த Tap napping தாக்குதல் வழிமுறை பற்றிப் பார்த்துவிடலாம். இது ஒருவகை கடத்தல் செயற்பாடு அதாவது kidnapping மாதிரி இது Tap napping. ஆனா இங்க கடத்துறது ஆட்களயில்ல P: அதாவது நீங்க ப்ரோசிங் செய்யும்போது திறந்து வைத்திருக்கின்ற பல Tapகளில் ஒன்று அதேமாதியான போலியான பக்கத்திற்கு திருப்பப்படுவதே Tap napping ஆகும்.

இதுவும் ஒரு வகையான phishing தாக்குதல்தான், அதாவது நீங்கள் இணையத்தில் உலவும்போது பல Tapகளை திறந்து வைத்துக்கொண்டு உங்கள் வேலைகளை செய்துகொண்டிருப்பீர்கள்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு Tapஇல் பேஸ்புக் கணக்கு இன்னொரு Tapஇல் ஒன்லைன் பாங்கிங், மற்றொரு Tapஇல் ஈமெயில் கணக்கு என ஏகப்பட்ட Taps திறந்து வைத்துக்கொண்டே ப்ரோசிங் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அப்பிடியே நீங்களும் உங்களுக்கு வந்த ஈமெயில்களை ஒரு சில நிமிடம் பார்த்திட்டு திரும்பவும் ஒன்லைன் பாங்கிங் சைட் திறந்துவைத்திருக்கிற Tapஇனை திறக்கிறீர்கள் என வையுங்கள்.

அப்போதுதான் ஆரம்பிக்கிறது Tap napping விளையாட்டு, அதாவது நீங்கள் ஈமெயில் திறந்து வைத்திருக்கின்ற Tapஇல் இருக்கும் போது  ஒன்லைன் பாங்கிங் சைட் திறந்துவைத்திருந்த Tapஇனை ஹக்கேர்ஸ் நீங்கள் அறியாத வகையில் அதேமாதிரியான போலி பக்கத்திற்கு திசைதிருப்பி(Redirect) விடுவார்கள். அத்தோடு நீங்கள் திரும்பவும் லாகின்(Login) செய்யும்படியும் அறிவுறுத்தப்படுவீர்கள்.

என்ன ஏதென்றே தெரியாமல் நீங்களும் அந்த போலிபக்கத்தில்  பயனர்பெயர்,கடவுச்சொல் விபரங்களை உள்ளிட்ட அடுத்தநொடியே  அவை இதனை ஏவிய ஹக்கேர்ஸ் கைகளுக்கு சென்றுவிடும்.

இதுவும் ஒருவகை  phishing தாக்குதல்தான் என்றபடியால், phishing விடயத்தில் மேற்கொள்கின்ற பாதுகாப்பு ஏற்பாடுகளையே இந்த(Tap napping) விடயத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக எந்த ஒரு தளத்திலும் லாகின்(Login) செய்யமுன் அவற்றின் URL Spelling mistake, Secure enabled  வசதி என்பவை அவசியம் அவதானிக்கப்பட வேண்டும்.

இத்தகைய வேறுபல ஹக்கிங் தாக்குதல் வழிமுறைகளும் இருந்தாலும் முக்கியமானவற்றை அதாவது தனிநபர் பாதுகாப்புக்கு சவாலான ஹக்கிங் வழிமுறைகளையும் அவற்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் இந்த தொடர்நெடுகே பார்த்தோம். மீண்டும் இன்னுமொரு சுவாரசியமான தொடருடன் சந்திப்போம்.

USB மூலமாக விண்டோஸ் இயங்குதளத்திற்கு பூட்டு போட .......

USB மூலமாக விண்டோஸ் இயங்குதளத்திற்கு பூட்டு போட

விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டி வைக்க கணினி பயன்பாட்டாளர்கள் பலரும் பயனர் கணக்கிற்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைப்பார்கள். தற்போது வெளிவந்திருக்கு விண்டோஸ் 8 இயங்குதளத்தில் படத்தினை கொண்டு பயனர் கணக்கினை பூட்டி வைக்க முடியும். இதற்கு மேல் விண்டோஸ் இயங்குதளத்தை பூட்ட வேறு வழி இருக்கிறதா என்ற இன்னும் ஒரு சில வழிகள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் USB வழியாக விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டுதல்.






விண்டோஸ் இயங்குதளத்தை பூட்ட சிறந்ததொரு மென்பொருள் VSUsbLogon ஆகும். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி





மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும்.பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் இந்த VSUsbLogon  அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் கணினியில் USB ட்ரைவினை கணினியில் இணைக்கவும்.



பின் நீங்கள் கணினியில் இணைத்த USB ட்ரைவானது அப்ளிகேஷனில் காட்டும். அதை தெரிவு செய்து பின் Assign என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் நம்முடைய விண்டோஸ் பயனர் கணக்கிற்கு என்ன கடவுச்சொல்லை உருவாக்கினமோ அதே கடவுச்சொல்லை இங்கும் உள்ளிடவும். அடுத்து Auto Logon எனும் செக்பாக்சை டிக் செய்து கொள்ளவும். பின் Check Password எனும் பொத்தானை அழுத்தி ஒரு முறை சோதனை செய்து பார்த்துக்கொள்ளவும்.



இதற்கு முன் விண்டோஸ் பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை உருவாக்கி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.



பின் OK பொத்தானை அழுத்தவும். இப்போது உங்கள் பயனர் கணக்கிற்கு USB பூட்டு உருவாக்கப்பட்டுவிட்டதாக செய்தி வரும்.





பின் கணினிக்குள் நீங்கள் உள்நுழையும் போது கடவுச்சொல் கேட்கும் அதற்கு பதிலாக USB ட்ரைவினை கணினியில் பொருத்தினால் போதும் பயனர் கணக்கு தானகவே திறக்கும்.



இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா , ஏழு மற்றும் எட்டு ஆகிய இயங்குதளங்களுக்கு பொருந்தும்.
 

உலகை இயக்கும் மந்திர சக்தி...! - கணினி!

உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்

உலகை இயக்கும் மந்திர சக்தி...! - கணினி

(Computer-The magical power of the world)

கணினி தற்காலத்தில் கைக்குள்ளே உலகத்தை அடக்கிவிட்டது . கையடக்கத் தொலைபேசி இருந்தாலே போதும். உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் பிறரை
தொடர்புகொள்ள முடியும். நமக்குத் தேவையான தகவல்களைப் பெறமுடியும்.

இன்றைய தகவல் தொழிநுட்பம், கணினி வரவின் மூலம் சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால் இதற்கெல்லாம் அடிப்படையான கணினியின் மகத்துவத்தை, உன்னதத்தை யாரேனும் நினைத்துப் பார்க்க கூடிய சூழலில் உள்ளனரா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அந்த கணினியே அவர்களை ஒரு இயந்திரமாக மாற்றி வைத்துவிட்டது.

கணினியும், பயன்பாடும்: 

தற்போதைய சூழலில் கணினி அனைத்து வீடுகளிலுமே ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைப் போல மிக எளிதாக நுழைந்துவிட்டிருக்கிறது. வீட்டில் மட்டுமா?

கணினி அலுவலகம், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், விற்பனை வளாகங்கள், மருத்துவமனைகள், என எந்த ஒரு துறையை எடுத்துக்கொண்டாலும் கணினியே ஆட்சி செய்கின்றது.

கணினி இல்லையெனில் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்றுவிடும் அளவிற்கு கணினி எங்கும் வியாபித்து தன்னை நிலைநிறுத்திக்கொண்டு விட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, நம் கைக்குள்ளே சாதுவாய் ஒரு செல்லப் பிராணியைப் போல் படுத்திருக்கும் இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்பம் எப்படி இருந்தது?

அத்தொழில்நுட்பத்தின் பின்னணி, அதற்காக தூக்கத்தை இழந்து பல வருடகாலமாக உழைத்து இந்நிலையை எட்டிய அவர்களின் உழைப்பு எப்படிப்பட்டது என்பதை பார்க்கும்பொழுது வியப்பிலும் வியப்பு ஏற்படுகிறது.

மென்பொருள் கணினியின் உயிராதாரம். இந்த உயிராதாரம் இருந்தால் மட்டுமே கணினி இயங்கும். மென்பொருள் Software என்பது கணினியை இயக்குவதற்கு எழுதப்படும் புரோகிராம்கள்.  இந்த புரோகிராமிங் செய்பவர்களைத்தான் Computer Programer என்பர்.

தற்பொழுது நான் பயன்படுத்திக்கொண்டிருக்கும் கணினியின் தொடக்க காலத்திற்கு வருவோம். 1790 முதல் 1871 வரை தனது இடைவிடாத உழைப்பால் ஒரு முழுமையான கணினியின் மாதிரியை உருவாக்கியவர் சார்லஸ் பாபேஜ்.

கணிதத்தையும் இயந்திரத்தையும் இணைத்துப் Analytical Engine என்ற முதல்  கணினி கருவியை அவர் உருவாக்கினார்.

கம்ப்யூட்டரை கண்டுபிடித்த மாமேதை.. சார்லஸ் பாபேஜ்..


Charles Babage
சார்லஸ் பாபேஜ்
அவர் உருவாக்கிய கணினி மிகப்பெரிய அறையில் இடம்பிடித்தது. அதன் எடையோ ஆயிரம் கிலோ.. (மயக்கமடைய வேண்டாம்). அத்துடன் தற்பொழுது நாம் இலாகவமாக பயன்படுத்தும் கீபோர்டோ, மௌசோ அதற்கு இல்லை.

அந்த அறைக்குள் பெரிய பெரிய இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கபட்டிருந்தது. ஆனால் தற்போதைய கணினி நம் உள்ளங்கையிலேயே அடக்கும் அளவிற்கு வந்துவிட்டிருக்கிறது என்பதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது.

வெறும் புள்ளிகள், கோடுகள் ஆகியவை இணைந்து செயல்பட்டது. கணினியின் நினைத்திறனும், வேகமும் ந்த்தையை விட குறைவானது. அதாவது இன்றைய கணினியின் வேகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் பத்து இலட்சம் மடங்கு குறைவான வேகம் கொண்டது.



முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்




இந்த கண்டுபிடிப்பில் உடன் இருந்து பணியாற்றியவர் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரின் மகள் அகஸ்டா கிங்.

உலகிலேயே முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் என்று அழைக்கப்படுபவர். ஆம்.. அவர்தான் மிகச்சிறந்த கணித அறிஞராக, இசைக் கலைஞராக இருந்தார். அவரது கணித அறிவைப் பயன்படுத்தி தொடக்க காலத்தில் கணிப்பீட்டு கருவி அனலிட்டிக்கல் என்ஜினுக்கு புரோகிராம்களை எழுதினார்.

World's first computer programmer


சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய அனலிட்டிக்கல் என்ஜின் டிஃபன்ஸ் என்ஜின் ஆகியவற்றின் இயக்க முறைமைகளை நன்றாக புரிந்து கொண்டார். கணினியின் மூலம் இசையமைக்க முடியும் என்பதை அன்றே கண்டறிந்து கூறியவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் 36வது வயதில் இறந்தார். எனினும் இவருடைய பெயர் 2013 ம் ஆண்டு தங்கம்பழனி தளத்தில் கட்டுரையாக எழுதுகிற வரைக்கும் அழியாமல் இருக்கிறது. அவர் செய்த செயல்கள் சாதாரணமானதா என்ன? கணினி உலகம் இருக்கும் வரைக்கும் என்றுமே நிலைத்திருக்க கூடியவர் அவர்.

அவர் நினைவை நிலைநிறுத்தி, புகழ்ந்து போற்றும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு துறை 1980ம் ஆண்டு கணினி நிரல் மொழி ஒன்றிற்கு ADA என்றே பெயர் சூட்டியுள்ளது.

முதல் கணினி உருவாகி, அது செயல்பட ஆரம்பிட்ட அந்த தருணத்தை உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பம், அறிவியல் விஞ்ஞானம் வளர்ச்சிக்கு விதை ஊன்றப்பட்டுவிட்டது.

அதைக்கண்டுபிடித பிராடி வில்லியம்ஸ் அந்த வினாடியைப்போல் என்வாழ்நாளில் வேறெந்த நேரத்தையும் நான் உணர்ந்ததில்லை என்று உணர்வுப் பூர்வமாக கூறியிருக்கிறார்.

டிரான்சிஸ்டர்.. வருகை

டிரான்சிஸ்டர் இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இது வெற்றிடக் குழலுக்கு வேகத்தடை போட்டது. நீ இருந்த வரைக்கும் போதும்.. இனி என்னுடைய ராஜாங்கம்தான்.. என்று அதனுடைய பழைய தொழில்நுட்பத்தை தூக்கி நொறுக்கிவிட்டு, இரண்டாம் தலைமுறைக் கணினிகளில் தன்னை அடக்கிக்கொண்டது.

ஒருங்கிணைச் சுற்றமைப்பு என்று கூறப்படும் Intergerated Cirucuit - IC கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுப்பிடிக்கப்பட்ட ஆண்டு 1958. இந்த கண்டுபிடிப்பின் மூலம் மூன்றாம் தலைமுறைக் கணினிகள் உருவாயின. இந்த கண்டுபிடிப்பின் மிகப்பெரிய பயன் என்னவெனில் ஒரு Chip -ஐப் பயன்படுத்தி பல கணினிகளின் பகுதிகளை இணைக்க முடிந்ததுதான். இதனால் ஒரு Operating System-ஐ பயன்படுத்தி பல நிரல்வரிகளை (Programmes) இயக்குவதற்கான வாய்ப்பு பிரகாசமானது. இதுவே நான்காம் தலைமுறைக் கணினியைக் கண்டுபிடிக்க ஆதாரமாகவும் இருந்தது.

INTEL நிறுவனம்: 

இன்டெல் நிறுவனம் 4004 Chip-ல் Central Processing Unit - CPU, Momory, Input, OutPut Devices, ஆகியவைகள் இடம்பெற்றன. இதன் மூலம் ஒரு கணினி ஒரு முழுமையான வியாபார வடிவத்திற்கு வந்தது.

IBM நிறுவனம்: 

முதன் முதலில் Personal Computer (பர்சனல் கம்ப்யூட்டர் - தனியாள் கணினி) வழங்கியது. 'டைம்ஸ்' இதழ் அந்த ஆண்டின் சிறந்த மனிதனாக இந்த பர்சனல் கம்ப்யூட்டரை தேர்ந்தெடுத்து குறிப்பிடத்தகுந்த விடயம்.

அன்று மட்டும் கணினி என்ற விதையை சார்லா பாபேஜ், பிரட்டி வில்லியம்ஸ், அடா பைரன் லவ்லேஸ் மற்றும் கணினி தொடர்புடைய ஜாம்பவான்கள் விதைக்காமல் இருந்திருந்தால்.. இன்று நாம் காணும் கையடக்கத் தொலைபேசி.. கணினி... டிஷ், சாட்டிலைட்.. இப்படி நிறைய தொழில்நுட்பங்கள் நமக்கு சாத்தியமாகலேயே போயிருக்கலாம்..

ஒரு நிலையான, எதிர்கால வளர்ச்சியை அசுர வேகத்தில் கொண்டுச் செல்லப் பயன்படும் கணினியை உருவாக்கிய அறிஞர்கள் மற்றும் வல்லுநர்களை நினைவு கூர்வோம்..!!!

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top