.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 24 August 2013

~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~

குறள் :

1:நோக்கக் குழையா நுண்ணலைக் கைபேசி
தாக்காதே தகவல் தரும்.
 

பொருளுரை: நோக்கினாலும் குழையாத நுண்ணலைக் கைபேசி, நுண்ணலைகள் தாக்காதே தகவலைத் தரும்.

2:
காணாது தொலையும் கைபேசி; கண்டபின்னும்
நாணாதே மெல்ல நகும்.

பொருளுரை: எங்கோ தொலத்து விட்டுவிட்டக் கைபேசி கிட்டினாலும் அதற்கென நாணாதே ஒலிக்கும்.

3:
இனிதே மொழி இயம்பினும் நெடண்மை
மெலிதே கொல்லும் செவி.

இனிதே மொழி இயம்பினும் நெடு அண்மை
மெலிதே கொல்லும் செவி.

பொருளுரை: எத்தனை தான் இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியை காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், நாளடைவில் செவி கெடாமல் என்ன செய்யும்?

4:
அன்புசால் மொழியே ஆயினு மோட்டலில்
இன்மை யதுகைபேசி உரை.

அன்புசால் மொழியே ஆயினும்; ஓட்டலில்
இன்மை அது கைபேசி உரை.

பொருளுரை: அன்பொடு பேசும் மொழிதானே என்று ஆகினும் வண்டி ஓட்டுகையில் கைபேசி உரையாடுதலால் நன்மை என்று ஏதுமில்லை; அனைவருக்கும் இன்மையைத் தான், கேட்டைத் தான் விளைவிக்கும்.

5:
தெவிட்டு மொலி தீதே; கைபேசியுரை
செவிட்டுக் குவழி செயின்.

தெவிட்டும் ஒலி தீதே கைபேசி உரை
செவிட்டுக்கு வழி செயின்.

பொருளுரை: கைபேசியால் வரும் அதீத ஒலி காதைச் செவிடாக்கும் வகையில்; தெவிட்டும் அளவில் கொள்ளுதல் காதுக்குச் செவிட்டை மாத்திரம் அல்ல உடல் நலத்தையும், உள நலத்தையும் பாதித்து விடும். அளவிற்கு மீறிய அமிர்தமும் நஞ்சுதானே.

6:
வாட்டும் வருத்தம் வகையறியான்; நலந்தருமோ
காட்டும் கைபேசிச் சினம்?

வாட்டும் வருத்தம் வகை அறியான்; நலம் தருமோ
காட்டும் கைபேசிச் சினம்?

பொருளுரை: வாட்டுகின்ற உரையின் வருத்தத்தின் வகையை, காரணத்தை அறியாதவன், கைபேசியின் மேல் காட்டும் சினம்தான் நலம் தருமோ? கைபேசியும், அவன் பாலுள்ள நலமும் தான் கெடும்.

7:
இறையில்லத் துவிசை நிறுத்தாக் கைபேசி
நிறையல்ல; வசைமிகுக்குங் குறை.

இறை இல்லத்து விசை நிறுத்தாக் கைபேசி
நிறை அல்ல; வசை மிகுக்கும் குறை.

பொருளுரை: இறை இல்லமாகிய தேவால
த்தில்; கோயிலில் நிறுத்தி வைக்கப் படாத கைபேசியால் ஒருவருக்கு எந்த நிறையும் வரப்போவதில்லை; உண்மையில் அஃது பிறரின் வசையைத்தான் மிகுந்து கொடுக்கும் மிகக் குறைபாடான செயல் ஆகும்.

8:
சபையிடைச் சலனம் சதுராடும் கைபேசி
மிகையல்ல மேன்மைக் கிழுக்கு.

சபையிடைச் சலனம் சதுராடும் கைபேசி
மிகை அல்ல; மேன்மைக்கு இழுக்கு.

பொருளுரை: பலர் கூடியிருக்கும் முக்கியச் சபையினில் சலனப்படுத்திச் சதுராடும் கைபேசி குழுமியவரின் முன்னே மேன்மையல்ல; உண்மையில் அஃது ஒருவரின் மேன்மைக்கு இழுக்கு என்றால் அஃது மிகையல்ல. அஃது குழுமிய நேரத்தில் பிறருக்குத் தொந்திரவாக இருப்பதுடன் குழுமிய காரணத்திற்கும் இடைஞ்சலாக அமைந்துவிடும்.

9:
சங்கத்தே சமனித்துச் சாற்றாதே கைபேசியுள்
பங்கமிட்டே இரைவதா பண்பு?

சங்கத்தே சமனித்துச் சாற்றாதே; கைபேசியுள்
பங்கமிட்டே இரைவதா பண்பு?

பொருளுரை: கைபேசியில் அமைதியாகப் பேசுதலே சமூகத்தில் உயரிய சிறந்த பண்பு. இரைந்து கத்துதல் அல்ல என்பதை உணர்வீர்களாக. அவ்வாறு காட்டுக் கத்தாய் கத்திப் பேசுவதா நாகரீகம்?

10:
சந்தையின் கூவலைக் கைபேசிப் பரப்பல்
நிந்தையை நல்குமல்ல பிற.

சந்தையின் கூவலைக் கைபேசிப் பரப்பல்
நிந்தையை நல்கும் அல்ல பிற.

பொருளுரை: சந்தைப் படுத்தும் கூப்பாட்டை; விளம்பரத்தை, அறைகூவலை கைபேசியால் அனைவருக்கும் கூப்பிட்டுப் பரப்புதல் அவர்களின் நிந்தையையே நல்கும்; வேறல்ல. பயனாளிகளுக்குக் கைபேசி வழி சந்தைப் படுத்துதல் உண்மையில் எரிச்சலூட்டும் அணுகுமுறை.

பயனுள்ள இணையதள முகவரிகள்...

1. ஆன்லைன் -ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம்.

http://www.cutmypic.com/

2. வீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி.

http://www.wordia.com/

3. தமிழில் கணினி செய்திகள்

http://tamilcomputertips.blogspot.com/

4. உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்

http://www.fotosketcher.com/PortableFotoSketcher.exe

5. அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.

 http://yttm.tv/

6. ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளம்.

http://classbites.com/ 

7. தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம்.

http://www.helioid.com

8. தொலைக்காட்சியில் இருந்து வீடியோ பயனுள்ள தளம்.

 http://www.8on.tv

9. குழந்தைகள் விரும்பும் கார்டூன் முதல் அத்தனை டி.வி நிகழ்சிகளும் ஒரே இடத்தில் பார்க்க

http://video.kidzui.com

10. வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் இலவச மென்பொருள்.

http://www.lightworksbeta.com

11. பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை கொடுக்கும்  பிரத்யேகமான தளம்.

http://www.freebirthdaymessages.com

12. வலைப்பூவுக்கு அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்க.

http://bgmaker.ventdaval.com

13. வீடியோ மெயில்ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்ப.

http://mailvu.com

கும்மிப்பாடல்களின் அமைப்பு:-

கும்மிப்பாடல்களின் அமைப்பு:-

                ஆதிமனிதன் என்று தோன்றி, அறிவுநிலையில் விளக்கம் பெற்றானோ அன்றே அவனுக்குள் கலை ஆர்வம் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும். கருத்தை உடனே வெளிப்படுத்த உதவும் ஆடலும் பாடலும் அவனுடைய தொடக்கக்காலக் கலைகளாக அமைந்திருக்க வேண்டும். பாடல் இசையை அடிப்படையாகக் கொண்டது. பாடலுக்கேற்ப ஆடும் ஆட்டம் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. மொழி வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்னே தன் உணர்ச்சிப் பெருக்கை ஒலி வடிவங்களாக்கி ஓசையெழுப்பியிருப்பான். அதுவே காலப்போக்கில் வாய்மொழிப்பாடலான நாட்டுப் புறக்கலையாக உருவாகியுள்ளது எனலாம். மொழிச் சிந்தனை எதுவும் இன்றி உணர்ச்சிக் கோலமாக எழுந்த ஒலியமைப்புடைய பாடல்களே நாட்டுப்புறப் பாடல்களின் முதல்நிலை என்று கூறலாம். இவ்வகையான நாட்டுப்புறப் பாடல்களுக்கு மக்களின் மனதைக் கவரும் நயமான தன்மைகள் இயல்பாக அமைந்திருந்தன.
                தொல்காப்பியர் குறிப்பிடும் பண்ணத்தி, பிசி எனும் பாடல் வகைகள் நாட்டுப்புற மக்களின் வாய்மொழிப் பாடல்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்.....என்பர் ஆய்வாளர். பாணர்கள் போர்க்களத்திலும், காதற்களத்திலும் பாடியுள்ள குறிப்புகள் ஏட்டிலக்கியத்தில் காணப்படுகின்றன. போர்ப் பாடல்கள் வீரவுணர்வு மிக்கப் புறப்பாடல்களாகவும், காதற் பாடல்கள் இன்பவுணர்வு கொண்ட அகப் பாடல்களாகவும் தான் இருக்கவேண்டும். இவை இரண்டும் மனிதனின் இயல்பான, உணர்வுகள். இவற்றையே பானர்கள் தங்கள் வாய் மொழிப் பாடல்களில் பாடியிருப்பர். அவற்றைத்தானே புலவர்களும் சங்க இலக்கியப் பாடல்களில் பாடியுள்ளனர். ஏட்டிலக்கியமான சங்கப்பனுவலுக்கு வாய்மொழிப் பாட்டிலக்கியமான பாணர் பாடல்கள் வழிவகுத்துள்ளன என்று கருதுவது பொருத்தமாகும் எழுத்திலக்கியத்தின் நாற்றாங்காலாக வாய்மொழிப் பாடல்கள் அமைகின்றன
 
சிலப்பில் வாய்மொழிப் பாடல் அமைப்புகள்:
                சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுச்சிறந்துள்ள கானல்வரி, வேட்டுவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ்வரி, குன்றக் குரவை, வள்ளைப்பாட்டு, கந்துவரி, முதலியவை வாய் மொழிப்பாடல் அமைப்பை உடையவை. திருவாசகத்தில் வரும் திருப்பொற்சுண்ணம், தெள்ளேணம் கொட்டமோ, திருப்பூவல்லி, திருப்பொன்னூசல் யாவும் வாய்மொழிப்பாடல்களாகப் பாடப்பட்டவை. இடைக்காலத்தில் எழுந்த சிற்றியக்கியங்களான பள்ளு, குறவஞ்சி போன்றவையும் வாய்மொழிப் பாடல் அமைப்புக்கொண்டவை. நாட்டுப்புறப்பாடல்கள் உணர்ச்சிகளை அப்படியே வெளியிட்டு விடுகின்றன. என்றும், நாட்டுப்புறப்பாடல்கள் காலங்கடந்தும் வாழ்வதற்குக் காரணம் மக்கள் நெஞ்சங்களில் பசுமரத்தாணி போல் பதியும் தன்மை அவற்றிற்கு இருப்பதனால் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். பழைய பண்பாட்டின் கருவூலமாய் நாட்டுப் புறப்பாடல்கள் துலங்கும் தன்மையுடையவை.
 
கும்மிப்பாடல்கள்:
                கும்மிப்பாடல்களும் வாய்மொழியாக இருந்து இலக்கிய உருவங்களாக வளர்ந்தவை. தமிழில் அத்தகைய இலக்கிய பண்புகள் நூற்றுக்கும் அதிகமாக உள்ளன. கும்மிப்பாடலைப்பு பாரதி போன்ற பலருக்குப் பாடல்கள் புனைய உதவியுள்ளது. பெண்களுக்குரிய இக்கும்மிப்பாட்டு வகையால் சமுதாயச் சீர் திருத்தக் கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என்பதைத் தெளிவாக உணர்த்தியவர் பாரதியார். பாமர மக்களின் அறியாமையைப் போக்கவும், சமுதாய விழிப்புணர்வை (Social awareness) அளிக்கவும் கும்மிவகைப் பாடல்கள் துணைநின்றன. இத்தகைய பயன்பாட்டு வகைகைச் சார்ந்த மகளிர்கலையாக வளர்ந்துவரும் கும்மிப்பாடல்களின் அமைப்பு முறையே விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
 
கும்மிப்பாட்டின் அமைப்புமுறை:
                ஏதாவது ஒரு இலக்கியப் படைப்பைக் குறிப்பிடத்தக்க ஒரு இலக்கிய இனமாகக் கருத வேண்டுமானால், அதெற்கெனச் சில அமைப்பு முறைகளும் தனித்துவக் கூறுகளும் இருக்கவேண்டும் என்பர் ஆய்வாளர். கும்மிப்பாடல்கள் தனக்கென சில அமைப்பு முறைகளையும் கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளன.
"கும்மியடிப் பெண்கள் கும்மியடி - உங்கள்
கூந்தல் குலுங்கிடக் கும்மியடி
நம்மையாளும் விக்கி னேசுவரன் பாதத்தை
நாடிக் கும்மி யடியுங்கடி - நீங்கள்
கூடிக் கும்மி யடியுங்கடி"
இப்பாடலில் பெண்களைப் பார்த்து கும்மியடி பெண்கள் என்று வேண்டுவதைக் காணலாம். அடுத்து இப்பாட்டால் தெய்வ வணக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதைத் காணமுடிகின்றது. கும்மிப்பாட்டின் ஆசிரியர் பாடுவது கும்மிப்பாட்டு என்பதை உறுதியாக வெளிப்படுத்திவிடுகின்றனர். இது கும்மிப்பாடல்கள் கொண்ட அமைப்பாகும்.
 
சமுதாயச் சீர்திருத்தங்களைக் கும்மிப்பாடல் மூலம் எடுத்துரைத்தல்:
                "கும்மியடி! தமிழ்நாடு முழுதும்
                குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
                நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
                நன்மை கண்டோ மென்று கும்மியடி
                ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
                றெண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்
                வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
                விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்
                பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
                பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்.
                எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண்
                இளைப்பில்லை காணென்று கும்மியடி" (பாரதியார் பாடல்கள் ப.211)
என்ற பாரதியாரின் கும்மிப்பாடல்கள் சமுதாயச் சீர்திருத்தத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு கும்மிப்பாடல்களாக அமைவதைக் காணலாம்.
 
கதை சொல்லும் அமைப்பில் கும்மிப்பாடல்:
                வரலாற்றுச் செய்தியைக் கும்மிக்கேற்ற ஓசை நயத்துடன் கதையாகப் பாடிக்கொண்டே கும்மியடிக்கும் பழக்கம் உண்டு என்பதைச் சிவகங்கைச் சரித்திரக் கும்மியால் அறிய முடிகின்றது.
"இப்படியாக மருதிருவரும் கும்பினைக் கேற்ற
பிள்ளையா யரசாண் டிருந்தார்
அப்படியாக இருக்கையிலே மன்னர்க்
கழிவ வந்தகைச் சொல்லுகிறேன்" (சிவகங்கைச் சரித்திரக்கும்மி, பதி.தி. சந்திரசேகரன் ப.48)
மக்களுடைய பேச்சுமொழியில் எழுதப்பட்ட வாய்மொழி இலக்கியத் தன்மையுடன் அமைவதைக் காணலாம்.
 
அறிவுரை கூறுவதாக அமையும் கும்மிப்பாடல்கள்:
                மக்களை நோக்கி அறிவுரை கூறுவதாக அமையும் கும்மிப்பாடல்கள் சமுதாயத்தில் பண்பாட்டு முன்னேற்ற நோக்கம் கொண்டவை எனலாம்.
"மாதர் நடக்கையைச் சொன்னது மல்லாமல்
வந்திடுந் தீங்கையும் நன்குரைத்தேன்
பாதகி யாசையை நீக்கிச் சிவஸ்துதி
பண்ணுவா யெப்போதும் மானிடனே... (விலைமாதர் கும்மி - பாடல் 44)
விலைமாதர் ஒழிப்பு அவசியம் என்று உரைப்பதைக்காணலாம்
"கற்புள்ள மாதர் குலம் வாழ்க - நிறை
கற்பை யறிந்தவரே வாழ்க
தற்பரனைப் போற்றிக் கும்மியடி - குரு
சிற்பரனைப் போற்றிக் கும்மியடி" (வாலைக் கும்மி - பாடல் 45)
என்ற கும்மிப்பாடல் கற்புள்ள மாதரைப் போற்றுவதாக அமைந்துள்ளது.
 
சந்தவோசையுடைய கும்மிப்பாடல்:
                சந்தவோசை மிக்க கும்மிப் பாடல்கள் மக்களை எளிதில் கவரும் ஆற்றல் உடையவை. வள்ளிவேடனைப் பார்த்துக் கூறுவதாக அமையும்.
"எட்டாத தேனுக் கொரு நொண்டி பண்ணாந்து
கொட்டாவி விட்ட கதைபோல
ஏங்கிக் கணைதாங்கிப் பனைவாங்கி மிகவோங்கி
எதிரென் முன்னே நில்லாதே வேடுவனே" (முருகர் ஒயிற்கும்மி. பாடல் 136)
இப்பாடல் கேட்போரை மகிழச் செய்வதாகும்.
   
வருணனை மிக்க கும்மிப்பாடல்:
                பாண்டவர் வல்லியாற்றுக் கரையைக் கடந்து தெய்வ மலையைக் கண்ணாரக் கண்டார்கள் என்ற செய்தியைச் சொல்ல வந்த ஆசிரியர் அம்மலையையும், மலைசூழ்ந்த சோலையையும் மிக்க நயத்துடன் வருணனை செய்துள்ளார்.
"மாங்கனி தேங்கனி காய்ந்திருக்கு மங்கே
மாதளை மல்லிகை பூத்திருக்கும்
தாங்காத வாழைக் குலைசாயு மங்கே
தாழைமலர் வாசமே பாயும்" (பஞ்சபாண்டவர் வைகுந்தக்கும்மி பாடல் 227)
இவ்வருணனைப் பகுதி கும்மிப்பாடலுக்கு இலக்கிய இன்பத்தைக் கொடுத்து நிற்பதைக் காணலாம்.
 
முடிவுரை:
                கும்மியைத் தமிழருக்கே உரிய கலையாகக் கூற முடியவில்லை. ஆந்திராவிலுள்ள கொப்பியும் கேரளாவிலுள்ள கை கொட்டிக்களி, பிராமணிப்பாட்டு ஆகியவை கும்மிப் பாடலுடன் நெருக்கமான உறவு கொண்டுள்ளன. கன்னட நாட்டிலும் கும்மியைப் போன்று ஒரு ஆடல் நடைபெறுகின்றது. ஆகையினால் கும்மிப்பாட்டை ஒரு திராவிடக் கலை என்று கூறுவதே பொருத்தமாகும். குஜராத் நாட்டில் உள்ள கர்பா நடனமும் ராஜஸ்தானில் நடக்கும் கும்மார ஆட்டமும் கும்மியுடன் தொடர்பு கொண்டதாகத் தோன்றுகின்றன.
                பெண்கள் கலையாக வளர்ந்து வரும் கும்மிப் பாடல்கள் தனக்கென்று சில கூறுகளை அமைத்துக் கொண்டு வளர்ந்து வந்திருப்பதை அறிய முடிகின்றது. கணினி உலகில் வாழும் இக்காலக் கட்டத்திலும் கிராமங்களில் காணும் பொங்கலன்று பெண்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு பொது இடத்தில் கூடி பல்வகைபாடு பொருளுடன் கூடிய கும்மிப் பாடல்களைப் பாடி கும்மியடிப்பது கண்ணுக்கும், கருத்துக்கும் இன்பம் விளைவிப்பதாகும்.

கவிதை_வருத்தம் வேண்டாம் வெற்றியருகே!!!

கவிதை_வருத்தம் வேண்டாம் வெற்றியருகே!!!

பூக்கள் உதிர்ந்து விழும்
என்பதற்காக மரங்கள்
வருத்தப்படுவதில்லை.


தென்றல் நின்று போகும்
என்பதற்காக மலர்கள்
வருத்தப்படுவதில்லை.


நிலவு தேய்ந்து விடும்
என்பதற்காக வானம்
வருத்தப்படுவதில்லை.


பிறகு ஏன் மனிதா!
நீ மட்டும் தோல்வி கண்டு
துவண்டு போகிறாய்?

காலம் இருக்கு கனிவது நிச்சயம்
நேரம் இருக்கு நடப்பது நிச்சயம்
உழைப்பு இருக்கையில் வெற்றி நிச்சயம்!!!

மூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும்!


முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம்.ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாம். சில மூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும் பற்றி கீழே காண்போம்.

அருகம்புல் :
மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்
ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்
ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு
தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு
நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்
நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்
முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்
வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்
அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்
வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்
நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்
நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்
சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்
திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு
அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்
சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு
ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்
வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்
வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்
ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்
செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்
ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்
முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)
திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்
திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்
வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்
கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்
கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம் கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்
கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்
காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்
கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top