.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 20 August 2013

ரக்க்ஷா பந்தன் எனும் சகோதர திருநாள்!



ரக்க்ஷா பந்தன் எனும் சகோதர திருநாள்:

  

 
 
ரக்ஷாபந்தன் எனும் சகோதர திருநாள் நம் இந்திய திருநாட்டில் கொண்டாடி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. அதன் அடிப்படையான வரலாற்று செய்தியை நாம் இங்கு காண்போம். நம்  வீடுகளில் சகோதர, சகோதரிகள் இணைந்து பிறக்கிறார்கள். ஆனால், சிலருக்கோ சகோதரரோ, சகோதரியோ இருப்பதில்லை. இது அவர்கள் மனதில் ஒரு ஆதங்கமாகவே இருக்கும். இப்படி ஒரு நிலைமை, விநாயகரின் மகன்களுக்கே இருந்ததாம்.

தமிழகத்தில் நாம் விநாயகரை பிரம்மச்சாரியாகவே காண்கிறோம். வட மாநிலங்களில் சித்தி, புத்தி என்ற தேவியர் அவருக்கு உண்டு. இவர்களுக்கு சுபம், லாபம் என்ற ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஒருமுறை, இவர்கள் தங்கள் சகோதரர்களின் கையில் ரக்ஷா என்னும் கயிறு கட்டும் சகோதரிகளைக் கண்டனர். தங்களுக்கும் சகோதரி வேண்டுமென தந்தையிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையும் நிறைவேறியது. சந்தோஷப்பட்ட சுபமும் லாபமும், தங்கள் தங்கைக்கு "சந்தோஷி' என்று பெயர் சூட்டினர். சந்தோஷிமாதா வழிபாடு வடமாநிலங்களில் பிரசித்தம். இவர்களைக் குடும்பமாக தரிசிக்க வேண்டுமானால், அகமதாபாத்திலுள்ள அம்பாஜி மாதா கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்கே தனி சந்நிதியே இருக்கிறது.

இந்த நிகழ்வின் அடிப்படையில், பெண்கள் யாரை சகோதரர்களாக ஏற்கிறார்களோ, அவர்களுக்கு "ராக்கி' என்னும் கயிறு கட்டுவார்கள். "ரக்ஷ' என்றால் "பாதுகாப்பு தரும் கயிறு'. இதை அணிவிக்கும் தினமே ரக்ஷாபந்தன். ஆவணி பவுர்ணமியன்று இது கொண்டாடப்படுவது வழக்கம். இன்றும், நாளையும் பவுர்ணமி திதி இருப்பதால், இரண்டு நாட்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டலாம். சொந்த சகோதரர்கள் உள்ளவர்களும், அவர்களின் நலன் கருதி இந்தக் கயிறை அணிவிக்கலாம். ரக்ஷா கயிறு கட்டுவதன் மூலம், ஒரு ஆண், குறிப்பிட்ட பெண்ணின் பாதுகாப்பு, எதிர்கால வாழ்வுக்கு துணையாக இருப்பதாக உறுதியளிக்கிறார்.மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வந்த விஷ்ணு, பூலோகம் வந்த போது, அவரைப் பிரிய விரும்பாத லட்சுமியும் பூலோகம் வந்தாள். சாதாரண பெண்ணாக வேடம் தரித்த அவள், ஆவணி பவுர்ணமியன்று மகாபலியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள். மகாபலியைத் தன் சகோதரனாக எண்ணி ரக்ஷா கயிறு கட்டினாள். இதனாலும், இந்த விழா நடப்பதாகச் சொல்வதுண்டு.

கி.பி.1303ல் ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கரை அந்நியப்படைகள் தாக்கும் போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னர்களும் சகோதர உணர்வுடன் ராணியைக் காக்க தங்களின் படையை அனுப்பி உதவி செய்தனர். சகோதரத்துவத்தை பேணும் இந்த திருவிழாவை நாமும் கொண்டாடி மகிழ்வோம்.
 

உத்தரகாண்டில் 11 கிராமங்களை தத்தெடுத்த எல்லைப் பாதுகாப்பு படை!



உத்தரகாண்டில் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 11 கிராமங்களை எல்லைப் பாதுகாப்பு படை தத்தெடுத்தது.


உத்தரகாண்ட் மாநிலம் காளி நதிக் கரையில் அமைந்துள்ள காளிமத், கவில்தா, கோட்மா, சியான்சு, சிலோண்ட், குல்ஜெத்தி, கென்னி, ஜல்டலா, செüமசி, புயுன்கி உள்பட 11 கிராமங்கள் அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டன. இக்கிராமங்களை எல்லைப் பாதுகாப்பு படை தத்தெடுக்க முடிவு செய்துள்ளது.அங்கு சாலைகள்,பாலங்கள் அமைப்பது மட்டுமின்றி கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க எல்லைப் பாதுகாப்பு படை முன்வந்துள்ளது.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் எல்லைப் பாதுகாப்பு படையினர் முகாமிட்டு மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவார்கள்.சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்த பிறகே அவர்கள் அக்கிராமங்களை விட்டு வெளியேறுவார்கள் என்று எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த சிறப்பு பொறியியல் நிபுணர்கள் குழு ஒன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உடைந்த அணைகள்,சாலைகளை சீரமைத்து போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவர்.மழையால் சேதமடைந்துள்ள காளிமத் கோவிலை புதுப்பிக்கும் பணியிலும் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுவர்.ஏற்கனவே துணை ராணுவ படையானது தங்களது ஒரு நாள் சம்பளமான ரூ.16 கோடியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதியாக வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது

. BSF adopts 11 villages in Uttarakhand 

**************************************************

 Delhi: BSF has adopted 11 villages in Uttarakhand and has deployed a contingent of its personnel to provide succour for the locals of the rain ravaged state. The border guarding force has not only created a number of communication infrastructure like bridges and roads, it has also improvised and started a number of civic facilities in flood hit villages of the Kalimath valley.

ஆசிய இளைஞர் விளையாட்டு: ஸ்குவாஸ் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்!



          இரண்டாவது ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அபிஷேக் யாதவ் வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். முதல் நாள் நடந்த போட்டிகளில் இந்தியாவின் எம். கவிதா தேவி சிறுமிகளுக்கான ஜூடோவிலும், டி. லால்சன்ஹிமா சிறுவர்களுக்கான பளுதூக்குதல் போட்டியிலும் தலா ஒரு வெண்கலம் பெற்றது குறிப்பிடத்தக்கது.மேலும் இதுவரை இந்தியாவிற்கு மொத்தம் 4 பதக்கங்கள் கிடைத்து நிலையில் சென்னை இளைஞர் குஷ் குமார் முதல் தங்கத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

         நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒறையர் ஸ்குவாஷ் போட்டியில் சென்னையை சேர்ந்த இளைஞர் குஷ் குமார் 17, மலேசியாவின் முகமது ஸ்யபிக் மோத் கமலுடன் மோதினார்.

        இதில் குஷ் குமார் 11-9 5-11 11-9 11-7 என்ற செட்டுகளில் மலேசியாவின் கமலை வீழ்த்தி தங்கத்தை வென்றார். நடைபெற்றும் வரும் ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் சென்னை இளைஞர் குஷ் குமார் முதல் தங்கத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Squash: Kush Kumar bags first gold for India at Asian Youth Games 2013 


******************************************************************************

17-year-old Kush Kumar, a trainee at the Indian Squash Academy, Chennai, becomes the first Indian to win a gold medal at the second Asian Youth Games 2013 being held in Nanjing, China.[1] Kush Kumar (AOI) beat [2] Syafiq Kamal (Mas) 11/9, 5/11, 11/9, 11/7 in the final- a match that lasted three minutes short of an hour.Kush started off well with an aggressive pace, but was being caught time and again by Shafeeq’s delicate drops and some awesome deceptive play.

Monday 19 August 2013

அதிகம் அறியப்படாத பிரவுசர்கள்!



        இணையத்தை நம்முடன் இணைக்க, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் (சபாரி மற்றும் ஆப்பரா ஆகியவற்றையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.) ஆகிய பிரவுசர்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், ஏறத்தாழ இவை தரும் வசதிகளுடனும், திறனுடனும் இன்னும் சில பிரவுசர்கள் நமக்குக் கிடைக்கின்றன. அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடன் செயல்படும் வகையில் வடிவைக்கப்படவில்லை என்றாலும், இவற்றையும் விரும்பினால் பயன்படுத்திப் பார்க்கலாம்.

1. ஸீ மங்கி (SeaMonkey):

இங்கு தரப்படும் மற்ற பிரவுசர்களைப் போல் இல்லாமல், இது சற்று எளிதில் புரிந்து கொண்டு பயன்படுத்தக் கூடிய பிரவுசரே. இதனைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை சற்று கணிசமானதாகும். இது பிரவுசர் மட்டுமல்ல. இமெயில் பெற்றுத் தரும் கிளையண்ட், பீட் ரீடர், எச்.டி. எம்.எல். எடிட்டர், ஐ.ஆர்.சி. சேட் என இன்னும் பல செயல்பாடுகளை மேற்கொள்ள வழி வகுத்திடும் புரோகிராம் ஆகும். பயர்பாக்ஸ் மற்றும் இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் ஆகியவற்றில் காணப்படும் பல வசதிகளை இதில் காணலாம். Sync, session restore, themes, feed detection, smart location bar, popup blocker, safe mode, find as you type என இன்னும் பல வசதிகள் இதில் உள்ளன. இந்த பிரவுசரின் பதிப்பினைப் பார்க்கையில், இது மிக முந்தையது போலத் தெரியும். இருப்பினும் பல்வேறு வகைப்பட்ட இணைய வசதிகளை ஒரே புரோகிராமில் பெற வேண்டும் என விருப்பப்பட்டால், இந்த பிரவுசரைப் பயன்படுத்தலாம். ஸீ மங்கி பிரவுசர், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும் வண்ணம் கிடைக்கிறது.

2. கே மெலான் (KMeleon):

இது ஒரு ஓப்பன் சோர்ஸ் முறையில் கிடைக்கும் பிரவுசராகும். இந்த பிரவுசரும் Session save, mouse gestures, context menu, keyboard shortcut customization, popup blocker, fast load times, popup search bar, themes, macros என இன்னும் பலவகையான சிறப்பு வசதிகளைத் தருகிறது. இதனுடைய இன்டர்பேஸ், விண்டோஸ் சிஸ்டம் டூல் கிட் அடிப்படையில் இயங்குவதால், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் திறனையும் பயன்படுத்திக் கொள்கிறது. எங்கும் எடுத்துச் செல்லும் வகையில், இந்த பிரவுசரின் போர்ட்டபிள் பதிப்பும் கிடைக்கிறது. ஒரு யு.எஸ்.பியில் எடுத்துச் சென்று, எந்த விண்டோஸ் கம்ப்யூட்டரிலும் இணைத்துப் பயன்படுத்தலாம். இது விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டுமே செயல்படும்.
 
3. பேல் மூன் (Pale Moon):

 விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் வகையில்,
பயர்பாக்ஸ் பிரவுசரினைப் போல இயங்கும் முறையில் வடிவமைக்கப்பட்டது. இது தனிப்பட்ட கட்டமைப்பினைக் கொண்டிராமல், நமக்கு அதிகம் பயன்தரும் வசதிகள் கொண்ட பிரவுசர் அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. வேகம், திறன் ஆகிய இரண்டுமே இதன் முக்கிய அம்சங்களாகும். புதிய ப்ராசசரில் சிறப்பாகச் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. SVG graphics, HTML5/CSS/Advanced DOM supportஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. பயர்பாக்ஸ் பிரவுசர் எடுத்துக் கொள்ளும் மெமரி இடத்தைக் காட்டிலும் சற்றுக் குறைவாகவே இடம் எடுத்துக் கொள்கிறது. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வசதிகளைத் தரும் வகையில், பயர்பாக்ஸ் அடிப்படையில், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பிரவுசர் வேண்டும் எனில், பேல் மூன் பிரவுசரை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

4. லூனாஸ்கேப் (Lunascape):

விண்டோஸ் இயக்கத்தில் மட்டுமே செயல்படும் பிரவுசர். Geko, WebKit, and Trident என மூன்று பிரவுசர் இஞ்சின்களிலும் செயல்படும். இதனால், நமக்கென்ன பிரயோஜனம் என்று எண்ணுகிறீர்களா? பிரவுசர் புரோகிராம் எழுதுபவர்கள், இணைய தளம் வடிவமைப்பவர்கள், இந்த மூன்று இஞ்சின் உள்ள பிரவுசர்களை ஒவ்வொன்றாகச் சோதனை செய்து பார்க்காமல், இதில் மட்டுமே இயக்கிச் சோதித்துப் பார்க்கலாம். நாம் பார்க்க விரும்பும் சில இணைய தளங்களில் சில, பக்கங்களைக் காட்ட இயலாமல் தடுமாறும். இதற்குக் காரணம், இந்த பிரவுசர் இயக்க இஞ்சின்களில், ஒரு சிலவற்றை அந்தப் பக்கங்கள் தங்களின் கட்டமைப்பினில் சேர்த்திருக்காது. அப்படிப்பட்ட நிலைகளில், இந்த பிரவுசர் தானாகவே மாறிக் கொண்டு இயங்கி, பக்கங்களை அழகாகக் காட்டும். Highlight search, engine autoswitch, cascade view, tab lock எனப் பல சிறப்பு வசதிகளையும் இந்த பிரவுசர் தருகிறது.

5. நெட் சர்ப் (NetSurf):

மிகச் சிறியதாக இருந்தாலும், பல்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் திறன் கொண்டது. வேகத்தில் மிகச் சிறப்பானது. சிறியதாக இருப்பதால், அதிக வசதிகளைத் தராது என எண்ண வேண்டாம். நாம் அடிக்கடி பயன்படுத்தும், எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. Web page thumbnailing, local history trees, global history, hotlist manager, URL completion, scale view, searchasyoutype, cookie manager என இன்னும் பல வசதிகளைக் கொண்டுள்ளது. இது இணைய இயக்கத்திற்கான அனைத்து ஸ்டாண்டர்ட்களையும் கொண்டுள்ளது. இதன் போர்ட்டபிள் பார்மட் ஒன்றும் கிடைக்கிறது. Haiku, BeOS, AmigaOS, Atari, Linux, UNIX, RISC OS என இன்னும் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் தன்மை கொண்டது
.
இணையத்தில் கிடைக்கும் அனைத்து இணைய பிரவுசர்களும், சமமான திறனுடனும் வசதிகளுடன் வடிவமைக்கப்படவில்லை. மேலே காட்டப்பட்டுள்ளவற்றுள் சில, பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசர் போன்று சிறப்பான சில வசதிகளைத் தராமல் இருக்கலாம். ஆனால், இவை ஒவ்வொன்றும், தனக்கென ஒரு சில தனிச் சிறப்புகளைக் கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ளன. அதனால், இவை ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு காரணத்திற்காக உங்களை நிச்சயம் கவரும். ஆர்வத்தினைத் தூண்டும். எனவே, ஒருமுறை இன்ஸ்டால் செய்து இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகப் பயன்படுத்திப் பார்க்கவும். இதனால், நீங்கள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிரவுசரின் அதி சிறப்புத் தன்மையையும் உறுதிப் படுத்திக் கொள்ளலாமே!

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்



ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

 
 
நாங்கள் பரிட்சை எழுத 
நீங்கள் அல்லவா படித்தீர்கள் 
நாங்கள் வெற்றிப் பெற 
நீங்கள் அல்லவா உழைத்தீர்கள் 

 
 
கல்லும் உடையாமல் 
சிலையும் சிதறாமல் 
எங்களை செதுக்கிய 
சிற்பி அல்லவா நீங்கள் 

 
 
மழையின் அருமை தெரியாமல் 
மழையை கண்டு ஓடுபவர்போல 
உங்களைக் கண்டு ஓடினோம் 
மழையின் அருமை 
கோடையில் தெரியும் 
உங்களின் அருமை, பெருமை 
இப்போது உணர்கிறேன் !

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top