.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 16 August 2013

தமிழ் - தமிழ் அகராதி!



தமிழ் - தமிழ் அகராதி




Download;  தமிழ் - தமிழ் அகராதி

தொல்காப்பியம் pdf book download



தொல்காப்பியம் --- ஆசிரியர்- தொல்காப்பியர்




                     Download :  தொல்காப்பியம்

வைஃபைக்கு அடுத்து வைப்பேட்…!



இதுவரை கம்பியில்லா டேட்டா சர்வீஸுக்கு வைஃபை அல்லது வயர்லெஸ் கம்யூனிகேஷன் மூலம் தொடர்பு கொண்ட அத்தனை ஸ்மார்ட் ஃபோன் / கணனி மற்றும் அனைத்து வகை சாதனங்களுக்கும் ஒரே சோதனை அது வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டாலும் ஒரு இடத்தில் வயரால் தான் இணைக்கபட்டிருக்கும் அதுதான் அதற்க்கு தேவையான பவர் எனப்படும் மின்சார சக்திக்காக.


 இதற்கிடையில் இப்போது வாஷிங்டன் பல்கலைகழகம் வயர்லெஸ் மாதிரி வைபேட் என்னும் கம்பியில்லா பேட்டரி சர்வீஸ் டெக்னாலஜியை கண்டு பிடித்திருக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே நம்மை சுற்றி உள்ள ஆர் எஃப் எனப்படும் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ வேவ்களால் எப்படி வயர்லெஸ் டேட்டா பரிமாற்றம் செய்ய முடிகிறதோ அதே மாதிரி பேட்டரி லெஸ் கூட சாத்தியம் என கண்டுபிடித்திருக்கின்றனர்.

 16 - ravi wifi


அது மட்டுமின்றி இதன் மூலம் ஒரு சாதனம் முற்றிலும் கம்பியில்லா சேவையில் 100% இயங்க முடியும். அதாவது அந்த் சாதனத்திற்க்கு தேவையான பேட்டரி கூட இதே ஆர் எஃப் அலைகளால் பெற முடியும் என்பதே இதன் ஆரம்பகால ஆராய்ச்சியின் முடிவுகள். இந்த ஆராய்ச்சி கண்டுபிடிப்பில் நம் இந்தியர் ஷ்யாம் என்பவரும் உள்ளார் என்பது அடிசினல் ஹேப்பி நியூஸ்.



அவர் என்ன கூறுகிறார் என்றால் ”நமக்கு தேவையோ இல்லை தேவையில்லையோ நம்மை சுற்றி மொபைல் / ரேடியோ / டிவி அலைகள் இருக்கின்றன அதனால் அதை வைத்து இந்த வையர்லெஸ் டேட்டா மற்றும் பேட்டரிலெஸ் சாதனமும் சாத்தியமே. அது போக 100% மனிதனே இல்லாமல் இந்த சாதனங்கள் இயங்க முடியும் ஏன் என்றால் இதற்க்கு தேவையான பவர் வெளி சோர்ஸில் இருந்து கிடைப்பதால் இதை வைத்து பல சென்சார்கள் செய்து அதுவே இயங்குமாறு இன்ஸ்டால் செய்தால் வேலை மிச்சம்”.



இதற்கு மேலும் இதன் வெள்ளை அறிக்கை (White Paper) மூலம் நீங்கள் இன்னமும் அதிகமாய் படித்து தெரிந்து கொள்ள விரும்பினால்.


– http://abc.cs.washington.edu/files/comm153-liu.pdf



Battery power from AIR -.



 Washington University researchers claim that the wireless devices will soon go battery free and create a network for information exchange out of thin air. The researchers have developed small battery-free prototype devices that can identify the TV / Cellular signal using antennas and harness them. This technology, the researchers say, will enable forming a network of devices and sensors that can communicate with each other without needing an external power source or human attention. Shyam Gollakota, assistant professor of CS & Engineering says that the researchers were able to repurpose the wireless signals that already exist in the air into both source of power and a communication medium. He expects that the technology will have applications in a number of areas like wearable computing, self-powered sensor networks and smart homes etc. Please read the white paper for more details –

 http://abc.cs.washington.edu/files/comm153-liu.pdf 

Thursday 15 August 2013

இந்திய சுதந்திர தினத்தையொட்டி தொண்டு நிறுவனங்களுக்கு கூகுள் வழங்கும் 3 கோடி ரூபாய்க்கான போட்டி!



          இந்திய சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் போட்டி ஒன்றை நடத்துகிறது. அதன்படி சமூக நலப் பணிகளுக்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த திட்டம் வைத்துள்ள தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவ தாங்கள் வைத்துள்ள திட்டம் பற்றி கூகுள் நிறுவனத்திடம் தெரிவிக்கவேண்டும்.



 15 - google



          அதிலும் இந்தியாவில் முறையே பதிவு செய்யப்பட்டுள்ள என்.ஜி.ஓ. அமைப்புகள் மட்டுமே கூகுள் நிறுவனத்திற்கு தங்கள் திட்டத்தை அனுப்பி வைக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் 4 என்.ஜி.ஓ.க்களுக்கு தலா ரூ.3 கோடியும், தங்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்த தொழில்நுட்ப உதவியும் கூகுள் வழங்கும். இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் என்ஜிஓக்கள் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.


           அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பான 4 திட்டங்களுக்கு தலா 3 கோடி ரூபாயை கூகுள் பரிசாக வழங்குவது தவிர தொண்டு நிறுவனங்களின் திட்டத்தை செயல்வடிவம் பெறவும் கூகுள் நிறுவனம் உதவும். கூகுள் இம்பாக்ட் சேல்லஞ் (Google Impact Challenge) என்ற பெயரிலான இத்திட்டத்தையே இந்திய சுதந்தர தினத்தை முன்னிட்டு செயல்படுத்துவதாக கூகிள் தெரிவித்துள்ளது.இதில் கூகுளை பயன்படுத்தும் இந்தியர்கள் உள்ளிட்ட உலக மக்கள் சமர்பிக்கப்பட்ட திட்டங்களை பரிசீலித்து அதில் 10 சிறந்த திட்டங்களை அக்டோபர் 21ம் தேதி அறிவிப்பார்கள் என்றும் அதன் பிறகு நடுவர் குழு அதில் இருந்து 3 திட்டங்களை தேர்வு செய்வதுடன்.மக்கள் அளிக்கும் வாக்குகளை வைத்து ரசிகர்கள் விருப்ப விருதும் வழங்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

********************************************************************************

Ahead of India’s Independence Day celebrations this week, Google announced to launch “Google Impact Challenge in India,” inviting Indian nonprofits to tell how they would use technology to improve people’s lives. At the end of the challenge, four nonprofits will each receive a Rs 3 crore (around USD500,000) Global Impact Award and technical assistance from Google to bring their projects to life, the California-based tech-giant announced Monday.

தனி மனித ஆற்றலை வெளிக் கொணரச் செய்வதே உண்மையான சுதந்திரம்! – முதல்வர் சுதந்திர தின உரை!


      ”சுதந்திரம் என்பது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி சுதந்திரம், வேலைவாய்ப்பு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சமூக, பொருளாதார காரணிகளால் ஒடுக்கப்படாமல் ஒவ்வொரு தனி மனிதருக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணரச் செய்வதே உண்மையான சுதந்திரத்திற்கான இலக்கணம்.” என்று முதல்வர் ஜெயலலிதா கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை ஆற்றியபோது தெரிவித்தார்.


 தமிழக அரசின் சார்பில் சுதந்திர தின விழா, சென்னை கோட்டையில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சாகச செயல் புரிந்த பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருதை வழங்கினார். நாடு முழுவதும் 67-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா நடந்தது. இதற்காக கோட்டை கொத்தளம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


 15 - t n cm flag


விழாவில் பங்கேற்பதற்காக காலை 8.25 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வீட்டில் இருந்து புறப்பட்டார். அவரை போலீசார் இரு சக்கர வாகனங்களில் அணிவகுத்து அழைத்து வந்தனர். விழா மேடை அருகே வந்த முதல்வரை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வரவேற்றார். அதைத்தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் தலைமை படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் டி.கே.பிள்ளை, கடற்படை பொறுப்பு அதிகாரி கமாண்டர் மகாதேவன், தாம்பரம் விமானப்படை அதிகாரி ஏர் கமோடர் எஸ்.பிரபாகரன், கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பி.ஷர்மா, தமிழக டிஜிபி ராமானுஜம், கூடுதல் டிஜிபி (சட்டம் – ஒழுங்கு) டி.கே.ராஜேந்திரன், சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரை முதல்வர் ஜெயலலிதாவுக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.



     பின்னர் பேசிய அவரது உரையின் போது,”அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்தையும், சுதந்திர தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 67-வது சுதந்திர தின நன்னாளில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்ததில் பெருமிதம் அடைகிறேன். இந்த வாய்ப்பை நல்கிய தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



     சுதந்திரம் என்ற வார்த்தையே நமது மனங்களில் மட்டற்ற மகிழ்ச்சியையும், பெருமித உணர்வையும் ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான சுதந்திரத்தைப் பெற ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழகத்திலிருந்து முதலில் குரல் கொடுத்தவர்கள் பாளையக்காரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவர், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை ஆகியோரின் புரட்சி மகத்தானது. இதுவே சுதந்திரப் போராட்டத்திற்கான முதல் வித்தாக அமைந்தது.



      இந்திய அளவில், சர்தார் வல்லபாய் பட்டேல், பாலகங்காதர திலகர், அண்ணல் அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என பல தலைவர்கள் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டுள்ளனர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்ரமண்ய பாரதியார், திருப்பூர் குமரன், தீரர் சத்தியமூர்த்தி, சுப்ரமண்ய சிவா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அயல்நாட்டு வீராங்கனை அன்னி பெசன்ட் அம்மையார், மாவீரன் வாஞ்சிநாதன் என எண்ணற்ற தலைவர்கள் ரத்தம் சிந்தியும், உயிரைக் கொடுத்தும் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரத்தை நமக்குப் பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்த விடுதலைத் திருநாளில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தியாகிகளுக்கும் என்னுடைய வீர வணக்கத்தினை செலுத்துகிறேன்.



சுதந்திரம் என்பது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி சுதந்திரம், வேலைவாய்ப்பு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சமூக, பொருளாதார காரணிகளால் ஒடுக்கப்படாமல் ஒவ்வொரு தனி மனிதருக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணரச் செய்வதே உண்மையான சுதந்திரத்திற்கான இலக்கணம்.” என்று குறிப்பிட்டார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top