.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 31 May 2013

இந்தியாவின் உதவியுடன் எங்களை வளைக்கிறது ஜப்பான்!!!







          இந்தியாவின் உதவியுடன் சீனாவை சுற்றி வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்று சீன தினசரி செய்தி வெளியிட்டு பீதியைக் கிளப்பியுள்ளது.




              இந்தியாவுடன் பல்வேறு வழியிலும் நெருங்கிய நட்பு கொண்டிருக்கும் நாடு ஜப்பான். இது சீனாவின் கண்களை உறுத்த ஆரம்பித்துள்ளது. மேலும் சமீபத்தில் ஜப்பான் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அங்கு பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இது சீனாவை மேலும் டென்ஷனாக்கியுள்ளது. இந்த நிலையில் சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தினசரி ஒன்று இந்தியாவையும், ஜப்பானையும் சேர்த்து அபாண்டமான செய்தி வெளியிட்டு வீம்பு செய்துள்ளது. அதாவது இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்பதுதான் அந்த செய்தியாகும்.




             இதுகுறித்து குளோபல் டைம்ஸ் என்ற அந்த இதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், மன்மோகன் சிங்கின் 3 நாள் ஜப்பான் பயணம் இரு நாட்டு கடலோர பாதுகாப்பு ஒப்பந்தத்தையை முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தது. இந்தியாவின் உதவியுடன் சீனாவை வளைக்கப் பார்க்கிறது ஜப்பான் என்றே தோன்றுகிறது. சிங் வருகைக்கு முன்பு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, மியான்மருக்கு விஜயம் செய்துள்ளார். இது சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. 




               சீனாவை சுற்றி வளைக்கும் முயற்சியே இது. சீனாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளை தன் பக்கம் இழுத்து சீனாவுக்கு நெருக்கடி தர ஜப்பான் முயலுகிறது. ஆனால் இது நிச்சயம் நிறைவேறாது. அப்படிப்பட்ட நினைப்பு காணல் நீராகவே போகும். ஆசியாவில் சீனாவின் தாக்கத்தை தகர்க்கும் அளவுக்கு பலம் வாய்ந்த நாடு அல்ல ஜப்பான் என்று அந்த தலையங்கம் கூறுகிறது.





சீறும் சூரியன்: சில புகைப்படங்கள்!!!







சூரியனில் அவ்வப்போது ஏற்படும் தீச்சுவாலை சீற்றங்களை நாஸாவின் விண்வெளி ஓடம் எடுத்த துல்லியமான சில புகைப்படங்களின் தொகுப்பு இது.




மே 12 மற்றும் 14ஆம் தேதிக்கு இடைப்பட்ட மூன்று நாள் காலகட்டத்தில் சூரியனில் நான்கு உக்கிரமான தீச்சுவாலை சீற்றங்கள் காணப்பட்டன. இந்த வருடத்தில் சூரியனில் அவதானிக்கப்படும் மிக மோசமான தீச்சுவாலை சீற்றங்களாக இவை கருதப்படுகின்றன.
 




 இவ்வாறாக தீப்பிழம்பை பீய்ச்சி அடிக்கும் சீற்றம் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மிக அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.






இந்த சீற்றத்தால் சூரியத் துகள்கள் விண்வெளியில் நெடுந்தூரத்துக்கு வீசியெறியப்படுகிறது. இந்தப் படத்தில் வீச்சு எந்த அளவுக்கு பரவுகிறது என்பதைக் காட்டுவதற்காக சூரியனின் விட்டம் வரை கருப்பு தகடிட்டுக் காட்டப்பட்டுள்ளது





 சூரிய தீப்பிழம்பு சீற்றதால் வீசியெறியப்படும் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தை வந்தடையும்போது துருவப் பகுதிகளில் வானில் ஒளிப் பிம்பங்கள் தோன்றுகின்றன.





 சூரியனைப் பார்க்கும்போது அதில் கருப்பு புள்ளிகளாக தோன்றும் இடங்கள் இந்தச் சீற்றத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கின்றன.





 அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் எஸ் டி ஓ என்ற விண்கலம் சக்தி வாய்ந்த காமெராக்களைக் கொண்டு துல்லியமான வீடியோ பதிவுகளை அனுப்புகிறது.






சூரியனின் மேற்பரப்பில் காந்த சக்தியால் ஏற்படும் இந்த வளையங்களும் வண்ணமயமானவை.





எட்டு மணிநேர இடைவெளீயில் இரண்டு படங்களை எடுத்து அதனை ஒரு முப்பரிமாண படமாக மாற்றி இந்த வண்ணமய படங்களை நாஸா விண்கலம் உருவாக்குகிறது.



பேபி கீப்பர் பேசிக்!! குழந்தையை பராமரிக்க நவீன தொட்டில்!








                 பொதுவாக குழந்தை பிறந்து விட்டால் அதை வளர்த்து ஆளாக்குவதற்குள் பெற்றோர் படும் பாடு சொல்லி மாளாது. கைக் குழந்தையாய் இருந்தால் கண் கொத்தி பாம்பு போல எந்நேரமும் அதன் மீது ஒரு பார்வை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டிலில் இருந்து விழும், தொட்டிலில் இருந்து விழும். தவழும் குழந்தையாக இருந்தால் வீடு முழுக்க ரவுண்ட் அடித்து அலம்பல் பண்ணும். கண்டதையும் எடுத்து வாயில் போட்டு கொள்ளும். தத்தி நடக்கும் குழந்தையாய் இருந்தால் டேபிள், சேர் மீது ஏறி பொருட்களை கீழே தள்ளி விடும். அம்மாக்கள் சமைக்கும் போது வந்து புடவையை இழுக்கும். கொதிக்கும் பாத்திரத்தை தள்ளும். இதில் விபரீதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.




                இந்த பிரச்னைகளை சமாளிக்கதான் நம்ம ஊரில் பல விஷயங்களை அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்ப அம்மாக்கள் கையாண்டு வருகின்றனர். கைக் குழந்தையாக இருந்தால் தொட்டிலில் போடுகின்றனர். அல்லது புடவையில் தூளி கட்டி, குழந்தையை படுக்க வைக்கின்றனர். தவழும் குழந்தையாக இருந்தால் இடுப்பில் கயிறு கட்டி வீட்டில் எங்காவது கட்டி விடுகின்றனர். அல்லது அம்மாக்களே இடுப்பில் குழந்தையை வைத்து கொண்டு ஒரு கையாலேயே வேலை செய்கின்றனர்.





                   இந்த பிரச்னைகளை சமாளிக்க அமெரிக்காவில் பேபி கீப்பர் என்ற பெயரில் பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சியாட்டில் நகரை சேர்ந்த 2 அம்மாக்கள்தான் இந்த நவீன பையை கண்டுபிடித்துள்ளனர். பேபி கீப்பர் பேசிக் என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ள இந்த பையை, மொபைல் தொட்டில் என்று கூறலாம். இந்த பையில் குழந்தையை உட்கார வைத்து அதில் உள்ள கொக்கிகளை சுவரில் மாட்டி விட்டால் போதும். கண்ணெதிரிலேயே குழந்தையை பார்த்தபடியே, கொஞ்சி கொண்டே அனைத்து வேலைகளை யும் முடித்து விடலாம். குழந்தை என்ன செய்கிறதோ என்ற பயம் இல்லை. 






              சியாட்டில் நகரில் வசிக்கும் 4 குழந்தைகளுக்கு தாயான டோன்ஜா கிங் மற்றும் 6 குழந்தைகளுக்கு தாயான எலிசா ஜான்சன் ஆகியோர்தான் இதை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு அம்மாக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குழந்தை பற்றிய டென்ஷன் இல்லாமல் வேலைகளை முடித்து கொள்ளலாம். 35 பவுண்டு எடை வரை உள்ள குழந்தைகளை இந்த பை தாங்கும். எங்கு சென்றாலும் குழந்தையை அதில் உட்கார வைத்து கண்ணெதிரிலேயே மாட்டி வைக்கலாம். எங்கு சென்றாலும் உடன் எடுத்து செல்லலாம் என்று டோன்ஜா வும் எலிசாவும் கூறுகின்றனர். 



Thursday 30 May 2013

"மீண்டும் உயிர் பெற்றது!!- 400 ஆண்டுகளுக்கு முன்பு பனியில் உறைந்து போன தாவரம்"







               கனடாவின் வடக்கு பகுதி வடதுருவத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பனி பகுதியில் கனடாவின் அல்பர்ட்டா பல்கலைகழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அங்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருந்த பனிமலைகள் தற்போது வெப்ப உயர்வு காரணமாக உருகி  தரைப்பகுதி தெரிந்தது.






              அந்த இடத்தில் பாசி போன்ற தாவரங்கள் வளர்ந்திருந்தன. இந்த தாவரங்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு பனி உறைந்தபோது இவையும் உறைந்துபோய் இருந்தன. இதனால் இந்த தாவரங்கள் இறந்துவிட்டதாக கருதப்பட்டது.






             ஆனால் இப்போது பனி விலகியதும் மீண்டும் அந்த தாவரங்கள் உயிர்பெற்றிருக்கின்றன. இது ஆச்சரியமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.




ஒசாமா பின்லேடன் அமெரிக்க சீல் படையினர் சுட்டதால் இறக்கவில்லை ,தற்கொலை செய்துகொண்டு இறந்ததாக தகவல்!!!








அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனின் மரணம் தொடர்பாக உறுதி செய்யப்படாத பல்வேறு வதந்திகள் உலாவரும் நிலையில் மேலும் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு ஒசாமாவின் மெய்காப்பாளர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.




பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அமெரிக்க 'சீல்' படையினர் சுற்றி வளைத்தபோது தனது இடுப்பில் இருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்ததன் மூலம் 'சீல்' படையினர் நெருங்குவதற்குள் ஒசாமா பின்லேடன் தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது மெய்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தா 'கல்ப் நியூஸ்' என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.





ஒசாமா பின்லேடனின் பிரேதம் நடுக்கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்கா கூறி வருவதையும் மறுத்துள்ள இவர், ஒசாமாவின் உடல் பாகத்தை தற்கொலைப்படை தாக்குதலில் சிதைக்கப்பட்டதைப் போல் துண்டு துண்டாக வெட்டி அமெரிக்க படையினர் அடையாளங்களை அழித்து, மறைத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.





ஒசாமாவை அமெரிக்க படையினர் சுற்றி வளைத்த போது நான் அந்த வீட்டில் இல்லை. எனினும், சம்பவத்தை நேரில் கண்ட உறவினர்கள் மூலம் இந்த தகவல் எனக்கு தெரிய வந்தது என்றும் அவர் கூறுகிறார்.






அமெரிக்கர்களிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஒசாமா பின்லேடன் தனது இடுப்பில் நவீனரக வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட 'பெல்ட்'டை எப்போதும் அணிந்திருந்தார் என்றும் நபீல் நயீம் அப்துல் பத்தா கூறினார்.



நன்றி! தமிழ் +

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top