.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts

Thursday 5 September 2013

குரூப் 2: 1064 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பம் கிடைக்கும்!


வணிகவரித் துறை துணை அலுவலர், சார் பதிவாளர், தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்வுக்கு வியாழக்கிழமை-இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வழக்கம் போன்று, தேர்வாணைய இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in) விண்ணப்பம் செய்யலாம்..

sep 5 - vazhikatti Tnpsc

 


துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1064 காலி பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு நடக்கிறது. இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது. தலைமை செயலக உதவி பிரிவு அதிகாரி, நகராட்சி கமிஷனர், சார் பதிவாளர், துணை வணிக வரி அதிகாரி, சிறை துறை நன்னடத்தை அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2

Sunday 1 September 2013

ESI கழகத்தில் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் பணி!

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ESI -ல் காலியாக உள்ள இந்தி மொழி பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Hindi Translator

காலியிடங்கள்: 62

sep 1 - vazhikatti esi

 


சம்பளம்: ரூ.9,300 – 34,800

வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: இளங்கலை பட்டத்துடன் இந்தி அல்லது ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்து இந்தி அல்லது ஆங்கிலம் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ESI Fund Account No.1, New Delhi என்ற பெயரில் டி.டி.யாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.


விண்ணப்பிக்கும் முறை: 


தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.esic.nic.in/recruitment.php என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும். அல்லது வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Joint Director(Recruitment), E.S.I. Corporation, Panchdeep Bhawan, C.I.G.Marg. New Delhi -110002.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2013

Saturday 31 August 2013

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டெக்னிகல் பணி வாய்ப்பு!




மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் பார்க் (பி.ஏ.ஆர்.சி.,) என்ற பெயரால் நம்மால் அதிகமாக அறியப்படுகிறது. பாபா அடாமிக் ரிசர்ச் சென்டர் சர்வ தேச அளவில் நியூக்ளியர் ரிசர்ச் துறையில் அறியப்படுகிறது. இந்த மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டெக்னிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகளும் காலி இடங்களும்: பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பிளாண்ட் ஆப்பரேட்டர் பிரிவில் 69ம், லேபரட்டரி பிரிவில் 41ம், லைப்ரரி சயின்ஸ் பிரிவில் 4ம், கெமிக்கல் பிளாண்ட் ஆப்பரேட்டர் பிரிவில் 7ம், பிட்டர் பிரிவில் 17ம், மில் ரைட் பிரிவில் 3ம், மெஷினிஸ்ட் பிரிவில் 13ம், வெல்டரில் 9ம், டர்னரில் 4ம், ஏ.சி., மெக்கானிக்கில் 24ம், இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 7ம், எலக்ட்ரிகலில் 61ம், எலக்ட்ரானிக்ஸில் 9ம், மெக்கானிகல் டிராப்ட்ஸ்மேனில் 10ம், சி.என்.சி., ஆபரேட்டரில் 1ம் காலி இடங்கள் உள்ளன.

31 - vazhikatti bhabha


தகுதிகள்: பார்க் நிறுவனத்தின் மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித்தகுதி மாறுபடும் என்ற போதும் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் ப்ளஸ்டூ படிப்பு முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் தொடர்புடைய துறையில் என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற தகுதி தேவைப்படும். எனவே சரியான தேவைகளை இணையதத்திலிருந்து அறியவும். 

இதர அம்சங்கள்: பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இந்தப் பதவிக்கு மாதம் ரு.6 ஆயிரத்து 200 ஸ்டைபண்டாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு அடிப்படையில் இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் பிணைய அடிப்படையில் பணி புரிய வேண்டியிருக்கும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்-லைன் முறையிலேயே தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முதலில் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையான விபரங்களை அறிந்து அதன் பின்னரே விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும். 

விண்ணப்பிக்க இறுதி நாள் : 10.09.2013 

இணையதள முகவரி : http://www.barc.gov.in/

டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வங்கிகளில் கிளார்க் பணிக்கான IBPS வாய்ப்பு!

இந்தியாவில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியில் சேர வேண்டுமானால் INstitute of Banking Personnel Selection (IBPS) நடத்தும் பொது எழுத்துத்தேர்வுக்கான (Common Written Examination) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கிகளில் ஏற்படும் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்யும் அமைப்பாக வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (ஐ.பீ.பி.எஸ்) செயல்படுகிறது. இந்த அமைப்பு முதன் முதலில் பொதுத்துறை வங்கிகளுக்கான பொது எழுத்து தேர்வு நடத்தி வந்தது. கடந்த ஆண்டில் எழுத்து தேர்வுடன் பொது நேர் காணலும் நடத்தியது. ஐ.பீ.பி.எஸ். நடத்தும் பொது எழுத்து தேர்வு முடிவுகளை சில தனியார் வங்கிகளும் பயன்படுத்திக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

30 - vazhikatti IBPS-Clerk-2-Score-Card

 


தகுதிகள்: 1. வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர், வங்கி அமைந்துள்ள மண்டல மொழியில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை www.ibps.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்லான் படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேசியமயமாக்கப்பட்ட எதாவதொரு வங்கியின் கிளைகளில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன், ஆப்லைன் இரு முறைகளில் செலுத்தலாம். கட்டணம் செலுத்திய பின்னரே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய முடியும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2013

ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.09.2013 வரை
செல்லான் படிவம் மூலம் கட்டணம் செலுத்தும் கால அவகாசம்: 12.09.2013 வரை

அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் உத்தேச தேதி: 21.09.2013 – 22.09.2013

மேலும் நேரமுகத் தேர்வு மற்றும் இலவச பயிற்சி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.ibps.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்
.

Friday 30 August 2013

+2 முடித்தவர்களுக்கு ஸ்டெனோகிராபர் பணி வாய்ப்பு!

சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப தகுதியான ஆண், பெண் இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி சப்-இன்ஸ்பெக்டர்(ஸ்டெனோ)

காலியிடங்கள்
: 112

30 vazhikatti  crpf
 
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் குறிப்பெடுக்கவும், அதை கணினியில் ஆங்கிலம் அல்லது இந்தியில் நகலெடுக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு
: 25-க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்து பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை குறுக்கீடு செய்யப்பட்ட அஞ்சல் முத்திரையாக செலுத்தப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் முன்னாள் இராணுவத்தினர், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.cisf.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2013

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top