.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label மென்பொருள்-தந்திரங்கள். Show all posts
Showing posts with label மென்பொருள்-தந்திரங்கள். Show all posts

Wednesday 9 October 2013

உங்கள் பேஸ்புக் Account- ஐ எப்படி பாதுகாப்பாக வைப்பது?


இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரிடமும் இருக்கும் அக்கவுன்ட் எது என்றால் அது பேஸ்புக் தான். சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும். பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். 



மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர். இதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு, உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக் தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர். நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.


பேஸ்புக் பிளேசஸ் இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.

 

பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம்.

யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் (Profile) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர். முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம்.

எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lockஎன்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் (Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ளCustomize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.

அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா?

பேஸ்புக் தளத்தில் விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும்.

பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.

அப்ளிகேஷன்களுக்குத் தடா:

பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applicationsஎன்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.

அணுகுவதற்குத் தடை:

 உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites. C[S Edit your settings. இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.

இறுதி நடவடிக்கை:

பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும். Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும்.

Monday 7 October 2013

விண்டோஸ் 8.1 சிஸ்டம் டிப்ஸ்!





ஸ்டார்ட் ஸ்கிரீன் இல்லாமல் நேராக டெஸ்க்டாப்: 


விண்டோஸ் 8 சிஸ்டத்தில், பலருக்கும் பிடிக்காத விஷயமாகப் பேசப்படுவது, சிஸ்டம் ஸ்டார்ட் ஸ்கிரீனில் தொடங்கும் செயல் பாடாகும். அனைவரும் ஏன் டெஸ்க்டாப்புடன் சிஸ்டம் தொடங்கினால் என்ன? என்று கேட்டனர். இப்படித்தானே, இதுவரை விண்டோஸ் இயங்கியது எனவும் கேள்வி தொடுத்தனர். பெரும்பாலான வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த பின்னூட்டு வந்ததனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், இதனை, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் மாற்றியுள்ளது. நேராக சிஸ்டம், முன்பு போல, டெஸ்க்டாப் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற, ஒரு சின்ன செட்டிங் அமைக்க வேண்டும்.


டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Properties என்பதனைத் தேர்ந்தெடுகக்வும். இங்கு தரப்படும் பல டேப்களில், "When I sign in or close all apps on a screen, go to the desktop instead of Start' என்பதனைத் தேடிக் காணவும். இந்த செட்டிங் மீது ஒரு டிக் அடையாளம் அமைக்கவும். இனி, உங்கள் விண்டோஸ் 8.1 கம்ப்யூட்டர், ஸ்டார்ட் ஸ்கிரீனில் தொடங்காது. இந்த வசதி, ஸ்டார்ட் ஸ்கிரீன் தொடக்கத்தினைப் பார்த்து தயங்குவோருக்கு அருமருந்தாக அமையும். விண்டோஸ் 8.1 வரும் அக்டோபர் 17 முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அப்போது புதிய சிஸ்டத்திற்கு மாறிய பின்னர், இந்த செட்டிங் அமைத்துக் கொள்ளலாம்.


புரோகிராம்களை மாறா நிலையில் அமைக்க: 


நம் கம்ப்யூட்டர்களில், இணையம் தேட பல பிரவுசர்களை அமைக்கிறோம். ஆனால், நாம் ஏதேனும் ஓர் இணைய லிங்க்கில் கிளிக் செய்திடும்போது, மாறா நிலையில் (default) அமைத்திட்ட பிரவுசரில் தான் அது திறக்கப்படும். எடுத்துக் காட்டாக, நீங்கள் குரோம் பிரவுசரைத் திறந்து இணையத் தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், கிடைக்கும் லிங்க்கில் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டரில், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மாறா நிலை பிரவுசராக செட் செய்யப்பட்டிருந்தால், அதில் தான் அந்த குறிப்பிட்ட இணைய தளம் திறக்கப்படும்.


இதே போல் தான், நாம் பல மீடியா பிளேயர்கள், இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் ஆகியவற்றையும் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பதிந்து வைத்து இயக்குகிறோம்.


இவற்றில், நமக்குப் பிடித்த புரோகிராமினை எப்படி மாறா நிலைக்குக் கொண்டு வந்து, அதில் திறக்கக் கூடிய புரோகிராம்களை, குறிப்பிட்ட புரோகிராமில் மட்டுமே திறக்கும்படி அமைப்பது. இதனை விண்டோஸ் 8.1ல் எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம். 


முதலில் சார்ம்ஸ் பாரினைத் (Charms bar) திறக்கவும். இதற்கு Win key + C ஆகிய கீகளை அழுத்தலாம். இங்கு Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Change PC Settings என்பதில் தட்டவும். Search and Apps என்பதில் கிளிக் செய்திடவும். Defaults என்ற வகையின் கீழ், நீங்கள் எந்த புரோகிராமினை மாறா நிலையில் அமைக்க விரும்புகிறீர்களோ, அதனை செட் செய்திடலாம். 


எடுத்துக்காட்டாக, மீடியா பிளேயராக, Windows Media Player என்பதற்குப் பதிலாக, Media Player Classic என்பதனை மாறா நிலையில் அமைக்கலாம். இதே போல குறிப்பிட்ட பைல் வகைகளை எந்த புரோகிராமில் திறக்கலாம் என்பதனையும் அமைக்கலாம். விண்டோஸ் 8.1ல் இதனை புதிய PC Settings அப்ளிகேஷனிலேயே அமைக்கலாம். முன்பு போல, கண்ட்ரோல் பேனல் திறந்து இவற்றை அமைக்க வேண்டியதில்லை.


Click Here

புரோகிராமினை மாற்றுவது எப்படி?



புதிய கம்ப்யூட்டரில் அல்லது விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்த கம்ப்யூட்டரில், நமக்குத் தேவையான புரோகிராமினை, அதன் போல்டரில் உள்ள பைல்களை, அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்தால், ஏன் அவை இயங்குவதில்லை? எனப் பல வாசகர்கள் தங்கள் கடிதங்களில் கேட்பதுண்டு. ஒரு புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்றில் எப்படி தன்னைப் பதித்துக் கொள்கிறது என்பதனை அறிந்தால், இந்த சந்தேகம் நமக்கு வராது. அதனைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.


ஒரு சில புரோகிராம்கள் மட்டும், குறிப்பாக, கேம்ஸ் புரோகிராம்கள், அவை பதியப்பட்டு இயங்கும் போல்டர்களில் இருந்து மொத்தமாக காப்பி செய்து, இன்னொரு கம்ப்யூட்டரில் பேஸ்ட் செய்து, இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றை எடுத்துச் செல்லும் வகையிலான புரோகிராம்கள் ("portable apps') எனக் கூறலாம். மற்றவை அப்படி அல்ல. அவற்றை அதன் மூலக் கோப்பினைக் கொண்டு, இன்ஸ்டால் செய்திட வேண்டும். எனவே காப்பி செய்து, எடுத்துச் சென்று, பதிந்து இயக்க முடியாது.


ஏன் இன்ஸ்டால் செய்திட வேண்டும்? புரோகிராம்களை ஏன் புதிய கம்ப்யூட்டரில், அல்லது விண்டோஸ் மறு பதிவு செய்த பின்னர் இன்ஸ்டால் செய்திட வேண்டும்? விண்டோஸ் சிஸ்டத்தில், புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அது குறிப்பிட்ட சில போல்டர்களில், குறிப்பிட்ட ட்ரைவ்களில் பைல்களைப் பதிக்கும். எடுத்துக்காட்டாக, ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் புரோகிராமினை, விண்டோஸ் சிஸ்டத்தில் பதிந்தால், அது மாற்றப்படாத நிலையில், C:Program Files (x86)>iTunes என்ற இடத்தில் தான் பதியும். எனவே, இதன் இயக்க பைலை இயக்கி இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது மிக எளிதானதாகும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், இன்ஸ்டால் செய்திடும் வேலை அவ்வளவு எளிதாக நடைபெறுவதில்லை. இந்த புரோகிராம்களுக்கான டேட்டா, பல இடங்களில் பரவலாகப் பதியப்படுகின்றன. அந்த இடங்களாவன:
 

1. ரிஜிஸ்ட்ரி செட்டிங்க்ஸ் (Registry Settings):


  பெரும்பாலான புரோகிராம்கள், விண்டோஸ் சிஸ்டத்தின் ரெஜிஸ்ட்ரி என அழைக்கப்படும் பைலில் தங்கள் அமைப்பு மற்றும் செயல்பாடு தொடர்பான தகவல்களைப் பதிகின்றன. இந்த தகவல்கள் registry keys (ரெஜிஸ்ட்ரி குறியீடுகள்) என அழைக்கப்படுகின்றன. இவை விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் ஒரே இடத்தில் பதியப்படும் எனவும் எதிர்பார்க்க முடியாது. இவை பலவகைப்படும். புரோகிராம் கட்டமைப்பிற்கான குறியீடுகள் (program settings), காண்டெக்ஸ்ட் மெனுவிற்கான குறியீடுகள், சில பைல்கள் இயக்க மாறா நிலையில், இந்த புரோகிராமினைய் (default program) அமைக்கும் குறியீடுகள் என இவை அமைகின்றன. இவற்றில் ஏதேனும் இல்லை எனில், புரோகிராம் இயங்குவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
 

2. மற்ற புரோகிராம் போல்டர்கள்:  


சில புரோகிராம்கள் தாங்கள் இயங்க, வேறு சில புரோகிராம்களையும் பதிகின்றன. எடுத்துக் காட்டாக, ஐ ட்யூன்ஸ், தான் பதியப்படுகையில், ஆப்பிள் அப்ளிகேஷன் சப்போர்ட் அப்ளிகேஷனையும் (Apple Application Support application) பதிகிறது. இந்த சப்போர்ட் அப்ளிகேஷன் ஏற்கனவே வேறு ஒரு ஆப்பிள் புரோகிராமிற்காகப் பதியப்பட்டிருந்தால், இது பதியப்படாது. இல்லை எனில், பதியப்படும். இந்த புரோகிராமும், மற்ற புரோகிராமிற்கான ரெஜிஸ்ட்ரி செட்டிங்ஸ் மற்றும் பிற குறியீடுகளையும் அமைத்துக் கொள்ளும்.
 

3. விண்டோஸ் சிஸ்டம் கோப்புகள் (Windows System Files): 


சில புரோகிராம்கள், அவற்றிற்கான டி.எல்.எல். கோப்புகளை (DLL files), விண்டோஸ் சிஸ்டம் பைல்கள் வைக்கப் பட்டிருக்கும் டைரக்டரிகளில், அதிக அளவில் பதிந்துவிடும். இவை இல்லாவிட்டால், அந்த புரோகிராம் இயங்காது.
 

4. சிஸ்டம் சர்வீஸ்: 


 பல புரோகிராம்கள், தங்களுக்குத் தேவையான விண்டோஸ் சிஸ்டம் சர்வீஸ் பைல்களையும் பதிந்து கொள்ளும். எடுத்துக் காட்டாக, அடோப் ப்ளாஷ் ப்ளேயர் புரோகிராமினைப் பதிந்தால், அதனை அப்டேட் செய்வதற்கான புரோகிராமினையும் (Adobe Flash Player Update service) அது பதிந்து வைத்துக் கொள்ளும். இது போன்ற சர்வீஸ் புரோகிராம்கள் இல்லை என்றாலும், சில புரோகிராம்கள் இயங்க மறுக்கும்.
 

5. ஹார்ட்வேர் பிணைப்பு (Hardware Locking): 


சில புரோகிராம்கள், தாங்கள் இயங்கத் தொடங்கும் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் பாகங்களைப் புரிந்து கொண்டு, அவற்றுடன் தங்கள் செயல்பாட்டினை இணையாகப் பதிந்து வைத்துக் கொள்ளும். இந்த புரோகிராம் பைல்களைக் காப்பி செய்து, இன்னொரு கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கினால், நிச்சயமாக அவை இயங்கா.
 

6. பயனாளர் டேட்டா போல்டர்கள்: 


தற்போது வரும் நவீன புரோகிராம்கள், தாங்கள் சேவ் செய்திடும் தகவல்களை, அதன் புரோகிராம் போல்டர்களில் பதிந்து வைப்பதில்லை. ரெஜிஸ்ட்ரியில் பதியப்படாத தகவல்களை, யூசர் டேட்டா போல்டர்களில் பதிகின்றன. புரோகிராம் பைல்களைக் காப்பி செய்து பதிகையில், இந்த டேட்டா போல்டர்களும் பதியப்பட வேண்டும். இல்லை எனில், புரோகிராம்கள் இயங்காது.



எங்கெல்லாம், (registry settings, program files, system files, user data folders), ஒரு புரோகிராமின் தகவல்கள் பதியப்படுகின்றன என்று நாம் அறிந்து கொள்ள முடியும் என்பதனால், அவற்றை எல்லாம், நாம் காப்பி செய்து, புதிய கம்ப்யூட்டர்களிலும், அதே போல பதிக்கலாமே என நீங்கள் எண்ணலாம். அவ்வாறே, போல்டர்களை அடையாளம் கண்டு காப்பி செய்திடலாம். ஆனால், அது அவ்வளவு எளிதான வேலை அல்ல. குறிப்பாக, புதிய கம்ப்யூட்டரில், சரியான இடத்தினைக் கண்டறிந்து அல்லது உருவாக்கிப் பதிவது என்பது அவ்வளவு எளிதாகவும் சரியாகவும், துல்லியமாகவும் செய்திட முடியாது. 



சிறிய தவறு அல்லது இடம் மாற்றம் ஏற்பட்டாலும், புரோகிராம் இயங்கவே இயங்காது. இதற்குப் பதிலாக, மூலக் கோப்பினை எடுத்து, புதிய கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய கட்டளை கொடுத்துவிட்டு, அடுத்து அடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்திக் கொண்டு, அதே நேரத்தில் எதனையாவது கொறித்துக் கொண்டு இருக்கலாம். புரோகிராமுடன் வரும் இன்ஸ்டாலர் புரோகிராம், உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் திறன் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றை அறிந்து, தானே முடிவெடுத்து, அழகாகப் பதிந்துவிடும்.



Click Here

Sunday 6 October 2013

வீட்டிற்கு வரும் இலவச DVD- Updated!!


 
 
 
 
வீட்டிற்கு வரும் இலவச DVD.. நம்பினால் நம்புங்கள்...
நான் பெற்றவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். பதிவு செய்து இரு வாரங்களில் உலகின் எப்பாகத்திற்கும் வீடு தேடி வரும்... இங்கு நான் குறித்த தளங்களின் முகவரியையும் உள்ளடக்கத்தையும் குறிப்பிடுகிறேன்.. நீங்களும் முயன்று பாருங்கள்.. படங்களை பாருங்கள். இவற்றில் சில புதிதாக இணைத்து உள்ளேன்.


  1.  தமிழ் மென்பொருள் கருவி.
இது தமிழ் நாட்டில் இருந்து இலவசமாக அனுப்பபடுகிறது.  9 வகையான தமிழ் மென்பொருட்கள் அடங்கி இருக்கின்றன ( Tamil Fire fox, Thunderbird, open office etc..)



     2. HEART 
இது ஒரு பயிற்சி இறுவட்டாகும். முதலுதவி சம்பந்தமானது.




    3. இலவச பைபிள் பாடம் 


   4.அணு ஆயுத தடுப்பு சம்பந்தமான விவரண படம் 


    5.உள நலம் சம்பந்தமானது ஆவணப்படம்
இலவசமாக பெற உள் நுழைக

   6. 30000 இலவச புத்தகங்கள் PDF
இலவசமாக பெற உள் நுழைக

  7.மனித உரிமை தொடர்பான ஆவண படம் உயர் தரம் (HD Video)
 இலவசமாக பெற உள் நுழைக

  8.குபுண்டு open source os
  இலவசமாக தபாலில் பெற முடியாது. முன்பு வாரி வழங்கினார்கள்.

  9.The Stories of School.
ஆவுஸ்ரேலியா இல் உள்ள கருப்பின மக்களின் வாழ்க்கை, பாடசாலை பற்றிய விவரண காணொளி.

 இலவசமாக பெற உள் நுழைக


இன்னும் இரு வாரங்களில் உங்கள் அஞ்சல் பெட்டி நிறைய போகிறது, இவை அனைத்தும் சட்ட பூர்வமானவை . பயப்பட தேவை இல்லை.

 இவற்றால் என்ன பயன்? ஒன்றும் இல்லை என்று இல்லை .
  1. HD video பார்க்க ஒரு சந்தர்ப்பம்.
  2. ஆங்கிலம் உச்சரிப்பை ஆங்கிலமாகவே  பழகலாம் 


வந்த பின் இங்கு சொல்லுங்கள்............................................
 
 

Saturday 5 October 2013

ஜி மெயிலில் இதுதெரியுமா உங்களுக்கு?



ஒட்டுமொத்த இணையத்தையும் தன் வசப்படுத்த கூகுள் பல செயல்களை செய்து வருகிறது அதில் ஒரு முக்கியமான செயல் தான் ஜி மெயில். கூகுள்  தரும் ஜிமெயிலில் எண்ணற்ற வசதிகள் உள்ளன. அவற்றில் சில வசதிகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம். இங்கு நாம் அதிகம் பயன்படுத்தாத,  சில முக்கிய வசதிகளைக் காணலாம். நாள் தோறும் பல மின்னஞ்சல் செய்திகள் நமக்கு வருகின்றன. இவற்றில் ஒரு சில முக்கியமானவையாக  இருக்கும். ஒரு சிலவற்றிற்கு கட்டாயம் சில நாட்களில் பதில் அனுப்ப திட்டமிடுவோம். மொத்த அஞ்சல்களில் இவற்றை எப்படி விலக்கிப் பார்ப்பது.

இதற்கெனவே, இந்த அஞ்சல்களில் ஸ்டார் அமைத்து குறியிடும் வசதி தரப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸில், செய்தியை அடுத்து இடதுபக்கம் ஸ்டார்  குறியிடும் இடம் தரப்பட்டுள்ளது. அனுப்பியவரின் பெயர் அடுத்து இது காணப்படும். இதில் ஒரு கிளிக் செய்தால், அதில் ஸ்டார் அடையாளம் இடப்பட்டு  தனித்துக் காட்டப்படும். பின் ஒரு நாள் தேடுகையில், இந்த ஸ்டார் அமைந்துள்ள செய்திகளை மட்டும் தேடலாம். சரி, நீங்கள் எழுதும் அஞ்சலை எப்படி  ஸ்டார் அமைப்பது? மெசேஜ் மேலாக இருக்கும் Labels என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Add star என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். முக்கியமானது  என்று நீங்கள் குறிக்க விரும்பும் செய்திகளில் பல தரப்பட்டவை இருக்கலாம்.

சில உங்கள் வேலை சார்ந்ததாக இருக்கலாம். சில உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வந்திருக்கலாம். இவற்றை வேறுபடுத்தி  முக்கியம் எனக் காட்ட, இந்த ஸ்டார்களை வெவ்வேறு வண்ணத்தில் அமைக்கலாம். பல வண்ணங்களில் அமைக்க, முதலில் அவற்றை நீங்கள்  தேர்ந்தெடுத்து உங்கள் பயன்பாட்டிற்கு வைத்திருக்க வேண்டும். இதற்கு, ஜிமெயில் பக்கத்தில், மேல் வலது பக்கத்தில், கியர் ஐகானில் கிளிக்  செய்திடவும். கிடைக்கும் கீழ்விரி பட்டியலில், Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு General என்ற டேப்பில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.  இந்தப் பக்கத்தில் "stars" என்ற பிரிவைத் தேடிக் காணவும். இதில் மஞ்சள் வண்ண ஸ்டார் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும். கீழாக மேலும்  சில வண்ணங்களிலும் ஸ்டார் காட்டப்படும். எவை வேண்டுமோ, அவற்றின் மீது கிளிக் செய்து மேலே, மஞ்சள் ஸ்டார் அருகே வைக்கவும். ஸ்டார்  மட்டும் இன்றி, மேலும் சில குறியீடுகளையும் காணலாம். இவற்றை விரும்பினால், அவற்றையும் அதே போல் இழுத்து மேலே வைக்கவும்.

இதன் பின்னர், கீழாகச் சென்று Save Settings என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி ஜிமெயில் பக்கத்தில் ஒரு செய்தியை ஸ்டார்  செய்திடுகையில் முதலில் மஞ்சள் ஸ்டார் கிடைக்கும். தொடர்ந்து கிளிக் செய்திட, அடுத்தடுத்த வண்ணங்களில் ஸ்டார்கள் காட்டப்படும். எதனை  அமைக்க விருப்பமோ, அது கிடைக்கும்போது கர்சரை எடுத்துவிடலாம். இவ்வாறு ஸ்டார் அமைத்த செய்திகளைத் தேடிப் பெறலாம். குறிப்பிட்ட  வண்ணத்தில் அமைந்த செய்திகளைத் தேடுகையில் "has:" என்பதைப் பயன்படுத்தி தேடலாம். எடுத்துக்காட்டாக, தேடலை "has:yellowstar" என  அமைக்கலாம்.

வீடியோ வழி பேச்சு ஜிமெயில் செய்திகளைக் காண்கையில்,வெளி ஊரில், வெளி நாட்டில் வாழும் உங்கள் நண்பரும் ஜிமெயில் பார்த்துக்  கொண்டிருந்தால், உடனே அவரை அழைத்து, அவர் முகத்தினைப் பார்த்து உங்கள் அன்பைத் தெரிவிக்கலாம். வீடியோ காட்சியாக இது கிடைக்கும்.  இதனை உங்கள் ஜிமெயிலில் செயல்படுத்த Gmail voice and video chat இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும். இதனை எளிதாக, டவுண்லோட் செய்து  பதிந்து கொள்ளலாம்.

லேபில்களில் மின்னஞ்சல்கள் லேபில்கள் ஜிமெயிலில் போல்டர்கள் போலச் செயல்படுகின்றன. முக்கியமான மெயில்களுக்கு நல்ல வண்ணத்தில்  லேபில்களைக் கொடுத்தால், அவற்றை எளிதாகத் தேடிப் பெறலாம். இதில் என்ன விசேஷம் என்றால், ஒரு மின்னஞ்சல் செய்திக்கு ஒன்றுக்கு  மேற்பட்ட லேபிலை வழங்கலாம். நண்பர்கள் "Friends" என்ற லேபிலையும், உடனே பதில் போடு "Reply soon" என்பதற்கான லேபிலையும், ஒரே  செய்திக்கு வழங்கலாம். லேபிலை உருவாக்க, ஜிமெயில் பக்கத்தின் இடது புறத்தில், லேபில் லிஸ்ட் கீழாக உள்ள More என்பதில் கிளிக் செய்திடவும்.  இங்கு Create new label என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் புதிய லேபிலின் பெயரை டைப் செய்து, பின்னர் Create என்பதில் கிளிக்  செய்திடவும்.

லேபில்களில் மின்னஞ்சல்கள் செய்தியை லேபிலில் அமைப்பதற்குப் பல வழிகள் உள்ளன. செய்திகளுக்கு அடுத்து உள்ள செக் பாக்ஸைக் கிளிக்  செய்து, பின் குறிப்பிட்ட லேபிலைக் கிளிக் செய்திடலாம். செய்தியைப் படிக்கும் போது, லேபில் பட்டனில் கிளிக் செய்து, லேபிலை அமைக்கலாம்.  மெசேஜ் எழுதினால், அதனை அனுப்பும் முன் லேபில் பட்டனில் கிளிக் செய்து, லேபிலிடலாம். லேபிலை நீக்க, வண்ணத்தை மாற்ற, அந்த லேபில்  அருகே உள்ள கீழ்நோக்கிய அம்புக் குறியினை கிளிக் செய்திடவும். இங்கு ஒரு மெனு கிடைக்கும். இதில் வண்ணம் மாற்றுதல், பெயர் மாற்றுதல்,  போன்ற பல மாற்றத்தை மேற்கொள்ளலாம். எப்படி போல்டர்களுக்குள், துணை போல்டர்களை உருவாக்குகிறோமோ, அதே போல இங்கு  லேபில்களுக்கும், துணை லேபில்களை உருவாக்கலாம்.

மெயில்களை வடிகட்டுதல் ஜிமெயிலில் நமக்கு வரும் எண்ணற்ற மெயில்களை வடிகட்டிப் பயன்படுத்த, இதற்கான வடிகட்டிகள் (filters) உதவுகின்றன.  இவற்றைப் பயன்படுத்தி, மெயில்கள் தாமாகவே, குறிப்பிட்ட லேபில்களில் இணையும்படி செய்திடலாம்; ஆர்க்கிவ் எனப்படும் இடங்களில்  பாதுகாக்கலாம்; அழிக்கலாம்; ஸ்டார் அமைத்து வேறுபடுத்தலாம் அல்லது மற்றவர்களுக்கு பார்வேர்ட் செய்திடலாம். வடிகட்டிகளை உருவாக்குதல்:  இந்த filter எனப்படும் வடிகட்டியை உருவாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

மெயில்களை வடிகட்டுதல் ஜிமெயில் தளத்தில் உள்ள சர்ச் பாக்ஸ் ஓரமாக உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். உங்களுடைய தேடல்  வகை என்ன என்று பெற்றுக் கொள்ள ஒரு விண்டோ காட்டப்படும். உங்களுடைய தேடல் வகையினை இதில் இடவும். உங்கள் தேடல் சரியாக  அமைக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்திட சர்ச் பட்டனை அழுத்திக் கிடைக்கும் அஞ்சல் தகவல்களைப் பார்த்து உறுதி செய்திடவும்.

சரியாக இருந்தது என்றால், இந்த சர்ச் விண்டோவில் கீழாக உள்ள Create filter with this search என்பதில் கிளிக் செய்திடவும். இனி இந்த வடிகட்டி  மூலம் என்ன செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என்று இங்கு தேர்ந்தெடுக்கவும். பலர், இவற்றை மெயில்கள் தாமாக, குறிப்பிட்ட லேபில் கீழ்  அமையும்படி அமைக்கின்றனர். இதனால், இன்பாக்ஸ் அடைபடாமல், மெயில்கள் தாமாக, தனி லேபில் பெட்டியை அடைகின்றன. நமக்கு நேரம்  கிடைக்கையில் இவற்றைத் திறந்து பார்க்கலாம். இதற்கு Skip the Inbox (Archive it) and Apply the label என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.  இப்படியே பலவேறு வேலைகளுக்கான வடிகட்டிகளை உருவாக்கலாம்.

அடுத்து Create filter என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வடிகட்டி தயார். நீங்கள் வடிகட்டிகளைத் தயார் செய்தவுடன், அதில் செட் செய்ததற்கேற்ற  மெயில்கள் அனைத்தும் வடிகட்டப்பட்டு, அந்த அந்த பிரிவுகளில் ஒதுங்கும். ஏற்கனவே கிடைக்கப்பட்ட மெயில்களும் அந்த வகையில் இருந்தால்,  அவையும் ஒதுக்கப்படும்.

ஆனால், செயல்பாடுகள் பின்னால் வரும் மெயில்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து  வரும் மெயில்களை இன்னொரு மின்னஞ்சல் முகவரிக்கு பார்வேர்ட் செய்யும்படி வடிகட்டி ஒன்று அமைக்கப்பட்டால், அமைக்கப்பட்டதற்குப் பின்னர்  வரும் மெயில்கள் மட்டுமே பார்வேர்ட் செய்யப்படும்.

Thursday 3 October 2013

Smart Phone களுக்கு போடுகின்ற Lock’ஐ கணனியில் போட வேண்டுமா?







Android Phone களுக்கு போடுகின்ற லொக்கை (Lock) எமது கணனியிலும் போடலாம். இந்த Lock ஆனது Android போன்களுக்கான lock ஆகும். அதிகமானோருக்கு இந்த Android Lock பற்றி தெரியும்.


ஆனால் கணனிகளுக்கு இவ்வாறான Lock போடுவது பற்றி அநேகமானோருக்கு தெரியாமல் இருக்கலாம்.


இந்த Lock இல் நிறைய விடயங்கள் இருக்கின்றன. அதை Settings பகுதியில் சரி செய்து கொள்ளலாம். இந்த lock இன் Password ஐ மூன்று தடவை தவறுதலாக கொடுத்ததால் Alarm ( அலாரம் ) அடிக்கும். ஒரு நிமிடத்தின் பின்னர் நின்றுவிடும்.


இதற்கு Key கொடுப்பது எளிது. Key கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தவறுதலாக கொடுங்கள் பின்னர் தானாக License Active ஆகிடும்.



Wednesday 2 October 2013

கணனியில் செய்யப்பட்ட மிகப் பெரிய தவறு! பில்கேட்ஸ் விளக்கம்!





 கணனி வளர்ச்சிக்கு பங்காற்றிய ஜாம்பவான்களில் பில்ஹேட்ஸும் ஒருவர்.
இவர் உருவாக்கிய விண்டோஸ் இயங்குதளத்தில் Ctrl+Alt+Delete எனும் கட்டளை மூலம் லொகின் செய்வதற்கு அல்லது Task Manager இனை பெறும் வசதி தரப்பட்டுள்ளது.


எனினும் அவ்வாறு தரப்பட்டுள்ளமை தவறு என்று தற்போது விளக்கமளித்துள்ளார் பில்ஹேட்ஸ்.


இதற்கு காரணம் இந்த மூன்று விசைச்சாவிகளையும் ஒரே கையினால் பயன்படுத்த முடியாமல் இருப்பதே ஆகும் என தெரிவித்துள்ளார்.


Windows' CTRL-ALT-DEL was a good 'mistake'


Microsoft founder Bill Gates told a group of students at a Harvard fundraiser that making the CTRL-ALT-DEL key combination the centerpiece of Windows was a mistake. The entire interview was posted on YouTube, and it has a lot of people talking.


For many people, those three keys were the first actual computer commands they ever used. Hitting them at the same time would let them log in and/or bring up the almighty task manager. It was kind of like a magic trick, or at least cantrip. A user who knows the the super-secret hand motions can get total control over the machine’s environment. And if nothing else, bringing up the task manager can get users out of a frozen program.


Gates explained that he wanted a single key to accomplish the same function, but the person designing the IBM keyboard for him wouldn't comply, so he eventually gave up and went with the three-button combo. He also tried to explain how it’s a security feature, because it’s not a good idea for a single button to be able to interrupt running programs, which might lead to accidental stoppages. But eventually, Gates just says, "It was a mistake."


The audience laughs and cheers at that revelation, but I don’t know how many of the students attending college now — in the age of mobile computing — grew up with powerful CTRL-ALT-DEL combination, so I suppose they have less nostalgia for it.



For feds, the three-key combination was always problematic, though, because it was not remotely Section 508 compliant, given that it takes two hands to make it work – except for people with very long fingers, or a tiny keyboard, or who like to use their nose as an extra digit. (For users unable to perform the combination, Microsoft offers a way to disable it.)


That's probably why the CTRL-SHIFT-ESC key combination was added, since those keys are aligned along the left side of the keyboard and can be pressed with just one hand. Those three left-side keys still bring up the task manager, and they do it in one fewer step in Windows 7 than the old CTRL-ALT-DEL method. Also, the Windows key (for those who have one) and L will lock a system down -- a nice two-button combination that can be used with one hand, though it's still a bit of a reach on a standard 101-key keyboard.


There is some question as to whether IBM could have successfully added a single new key sign-on button to keyboards anyway. As Arstechnica mentions, at the time IBM's influence had waned, and the companies that were really in control of the market were Dell, Compaq and HP. Also, the article points out that Microsoft's big play to get into government service, the super-secure Windows NT operating system, required a set of keystrokes that tunneled directly into the operating system and could not be spoofed by outside programs. When users hit those keys, dubbed the Secure Attention Key or SAK, they could be sure they were not being spoofed or phished. So in that sense, as a security step, CTRL-ALT-DEL could hardly be called a mistake.


I suppose it's all in the past now, so it doesn't really matter whether it was an accident, a security feature or the result of a stubborn keyboard designer who refused to compromise. CTRL-ALT-DEL has become a cultural icon, and even as its prevalence continues to wane, many of us will still hold this keyboard trinity close to our hearts -- and fingertips

Monday 30 September 2013

உளவு உலோகப் பட்டாம் பூச்சி..!


எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் உள்ள வான்பயண மின்னணுவியல் (Avionics) ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த ‘தக்ஷா‘ என்ற குழுவினர்  ஆட்கள் இல்லாமலேயே பறக்கும் குட்டி விமானம் ஒன்றை  உருவாக்கியுள்ளனர்.

பெயரிடப்படாத இந்த ஆளில்லாத குட்டி விமானம், நிலஅளவீடுகள், விண்வெளி, புவியியல் ஆராய்ச்சி மற்றும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போது, பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1.8 கிலோ எடை கொண்ட இந்த விமானத்தை எளிதாக எந்தப் பகுதிக்கும் தூக்கிச் செல்ல முடியும் என்பது இதன் சிறப்பு. விமானத்தின் அடிப்பாகத்தில் கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளன.

ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த விமானம், வானத்தில் பறந்தபடி எடுக்கும்  படங்கள், வீடியோக்களை லேப் டாப்பில் நாம் நேரடியாகப் பார்த்துக் கொள்ளலாம். ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்ட இது, ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குப் பறந்து படம் பிடிக்கும் திறன் கொண்டது. பார்ப்பதற்கு மெகா சைஸ் பட்டாம் பூச்சி போல் உள்ளது.

2006-ஆம் ஆண்டு இந்த விமானத்தை உருவாக்குகிற முயற்சியில் எங்களுடைய தக்ஷா குழு ஈடுபட ஆரம்பித்தது. விமானத்தை போர்க்காலங்களில் ராணுவத்திற்கு உதவும் வகையில்தான் முதலில் வடிவமைத்தோம். ஆனால், அதன்பிறகு மக்களுக்குப் பயன்படுகிற வகையில் மாற்றி வடிவமைத்தோம். உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆளில்லா குட்டி விமானங்கள் அதிகளவு எடை கொண்டவையாக இருக்கும். ஆனால், நாங்கள் கண்டுபிடித்துள்ள விமானத்தின் எடை மிகவும் குறைவு.

மும்பை தாஜ் ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும்போது, உள்ளே தீவிரவாதிகள் எங்கிருந்து தாக்குதல் நடத்துகின்றனர் என்று தெரியாமல், உள்ளே நுழைந்த நமது காவலர்கள் பலர் தீவிரவாதிகள் சுட்டதில் இறந்து போனார்கள். அதுபோன்ற நெருக்கடியான சமயங்களில் இந்தக் குட்டி விமானம் அபாரமாகக்  கைகொடுக்கும்.  இதன் மூலம் உயிர்ச்சேதத்தைத்  தவிர்க்கலாம்" என்கிறார் இணைப் பேராசிரியர் செந்தில்குமார்.

தக்ஷா குழுவினர் கண்டுபிடித்துள்ள இந்த விமானம் Low Intensity Confict என்ற அப்ளிகேஷன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த விமானத்தை எல்லைப்பகுதி, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகளில் சிறிய பாகங்களாக எடுத்துச் சென்று, அரைமணி நேரத்தில் பொருத்தி குட்டி விமானத்தை உருவாக்கிட முடியும்.

ஆறு வருட கடின உழைப்பில் தக்ஷா குழுவினர் குட்டி விமானத்தை உருவாக்கியிருந்த நிலையில், 2012-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் அங்கமான ‘டார்பா‘ (DARPA – Defense Advanced Research Projects Agency) ஆளில்லாத விமானங்களுக்கான சர்வதேசப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. முதல் சுற்றில் 150 நாடுகளுடன் தக்ஷா குழுவினரும் போட்டியில் பங்குபெற்று, இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

அமெரிக்காவில் நடந்த போட்டிக்காக தயாராகிக் கொண்டிருந்த தக்ஷா குழுவினரில் இரண்டு பேருக்கு மட்டுமே அமெரிக்காவிற்குச் செல்லும் விசா கிடைத்தது. ஐந்து பேர் இருந்த குழுவில் இரண்டு பேர் மட்டுமே, ஐந்து பேர் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய வேண்டிய நிலையில், தன்னம்பிக்கையை இழக்காமல் செந்தில்குமார் தன் குழு ஆராய்ச்சி மாணவர் ஒருவருடன் அமெரிக்கா பறந்தார்.

இறுதிப் போட்டி அமெரிக்காவின்  ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஸ்வார்ட் மிலிட்டரி பேஸில் நடைபெற்றது. இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் கப்பற்படைக் குழு உட்பட மொத்தம் ஆறு நாடுகள் போட்டியில் பங்கு பெற்றன. மற்ற குழுவினர்களிடம் மூன்று முதல் ஐந்து குட்டி ஆளில்லா விமானங்கள் இருந்தன. ஆனால், நாங்கள் ஒரே ஒரு குட்டி விமானத்தைதான் கொண்டு சென்றோம். முதல் சுற்று அடர்ந்த காட்டுக்குள் நடந்தது. 150 அடிக்கு மேலே உயரம் உள்ள  மரங்களுக்கு மேல் பறந்து,  ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலையில் நடக்கும் நிகழ்வுகளை எங்களுடன் இணைக்கப்பட்டிருந்த லேப்டாப்பில் காண்பிக்க வேண்டும்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்துக் குழுவினரின் விமானங்களும் தொழில்நுட்பக் கோளாறினால் அடர்ந்த காட்டுக்குள் விழுந்து நொறுங்கியது. எங்களுடைய விமானம் காட்டுக்குள் நான்கு கிலோ மீட்டர் சென்ற பிறகு, தொடர்பில்லாமல் போனது. எங்களுடைய விமானமும் காட்டுக்குள் விழுந்து நொறுங்கி விட்டது என்று அங்குள்ள ராணுவ அதிகாரிகள் முடிவு செய்துவிட்டனர்.

ஆனால், தொடர்பு இல்லாமல் போனாலும் வானத்தில் மிதக்கும்படி செய்து வைத்திருந்த எங்களுடைய தொழில்நுட்பத்தை, அதிகாரிகளுக்கு விளக்கினோம். சொன்னது போலவே காட்டின் நான்காவது கிலோ மீட்டரில் மிதந்து கொண்டிருந்தது. அதுவே அங்குள்ள அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சார்ஜ் இல்லாமல் போனதால் விமானம் கீழே இறங்கும்போது, தரையில் வீழ்ந்து நொறுங்கியது. மறுநாள் எங்களுடைய விமானத்தை ஓட்டிக் காட்ட இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கையில் நொறுங்கிப் போன விமானத்தின் பாகங்கள் மட்டுமே இருந்தன. மனம் தளராமல் இரவோடு இரவாக 100 மைல் பயணம் செய்து விமானம் சரி செய்யத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சேகரித்து, இரவு முழுக்க உழைத்து சேதமாகியிருந்த விமானத்தை சரி செய்தோம். மறுநாள் காலையில் ராணுவ அதிகாரிகள் சொன்ன இடத்தில் எங்களுடைய விமானம் எந்தத் தடையும் இல்லாமல் சென்று, அங்கு நடக்கின்ற நிகழ்வுகளை போட்டிக் குழுவினருக்குப் படம் பிடித்துக் காட்டியது. அப்போது நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை" என்று சிலிர்ப்புடன்  நினைவு கூர்கிறார் செந்தில்குமார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் ராணுவ நிறுவனமான ‘டார்பா‘விடம் இருந்து உலகின் மிகச்சிறந்த ஆளில்லாத குட்டி உளவு விமானம் என்று சான்றளித்து தக்ஷா குழுவினருக்கு கடிதம் வந்திருக்கிறது. மேலும் தக்ஷா குழுவினரின் விமானத்தை அமெரிக்காவிற்குத் தரும்படி கோரிக்கையும் விடப்பட்டது. ஆனால், இது என் நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று சொல்லி அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துள்ளார் செந்தில்குமார்.

எம்.ஐ.டி. கல்லூரியின் முன்னாள் மாணவரான அப்துல் கலாம், இந்த விமானத்தை இயக்கிப் பார்த்து பாராட்டியுள்ளார், மேலும் நாட்டின் பயன்பாட்டிற்கு விரைவில் இதனை அர்ப்பணிக்கும்படி தக்ஷா குழுவினரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வளர்ந்த நாடான அமெரிக்காவில் UAV-(Unnamed ariel Vechicle ) ஆளில்லாத குட்டி விமானங்களின் பயன்பாடு அதிகமான அளவில் உள்ளது. ஆனால், நம்மூரில் இது போன்ற விமானங்களை உருவாக்குகின்ற முயற்சியில்தான் இருக்கிறோம்.  அதற்குத் தேவையான ஆய்வுக்கூடங்கள், வசதிகள் தமிழகத்தில் ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் சிறந்த கண்டுபிடிப்புகளை நம்மால் உருவாக்க முடியும்" என்கிறார் இணைப் பேராசிரியர் செந்தில்குமார்.


கிரானைட் முறைகேட்டைக் கண்டறிய உதவியது

மதுரை மேலூர் பகுதியில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக கிரானைட் கற்களை அளவிடும் பணி நடந்தது. குவாரியில் உள்ள ஸ்டாக் யார்டு பகுதியில் ஆயிரக்கணக்கில் கற்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிரானைட் கற்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனே மாவட்ட நிர்வாகத்தினால் இந்தக் குட்டி விமானம் வரவழைக்கப்பட்டு, கிரானைட் குவாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த விமானம் குவாரியில் உள்ள கிரானைட் கற்களால் ஆன ரகசிய அறைகள், பதுங்கு குழிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை துல்லியமாகப் படம் பிடித்து அதிகாரிகளின் ஆய்விற்கு மிகவும் உதவியிருக்கிறது.

மேலும் திருவண்ணாமலையில் நடந்த கார்த்திகை தீப திருவிழாவில் மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பரமக்குடியில் நடைபெற்ற இமானுவேல் சேகரன்  நினைவு நாள் விழாவில் வானில் பறந்து பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை வரலாற்றிலேயே காவல்துறைக் கண்காணிப்பில் ஆளில்லா விமானம் ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.



எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

குறிப்பிட்ட அளவு பூச்சிக்கொல்லி மருந்தை விமானத்தில் வைத்து பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட பயிர்கள் மீது பத்து நிமிடங்களில் தெளிக்கலாம். சொட்டுநீர்ப் பாசன முறையில் எந்தப் பகுதியில் தண்ணீர் செல்லவில்லை என்று விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் அறிந்து அதன் மூலம் துல்லியமாக சொட்டுநீர்ப் பாய்ச்சலாம். தீ விபத்து ஏற்படும்போது, ஆட்கள் செல்ல முடியாத இடத்திற்கு, விமானத்தை சற்று உயரமாக பறக்கச் செய்து தீயை அணைக்கும் ரசாயனப் பொடியை விமானத்திலிருந்து தூவி  தீயை முழுமையாக அணைக்க முடியும்.

Saturday 28 September 2013

iphone 5S hack செய்ய முடியுமா! அட கடவுளே!






திருடர்களை விட ஒருபடி மேலேயே யோசிக்கிறாங்களே….



அண்மையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபோன் 5-ல் கைரேகை ஸ்கேனிங்க் மூலம் பாதுகாப்பு வசதி அளித்துள்ளது.



ஐபோனை ஆக்சஸ் செய்வதற்கென கைரேகையை வழங்கினால் மாத்திரம் பயன்படுத்த கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் ஒருசில நாட்களிலேயே இப்பாதுகாப்பு வசதியை தாம் உடைத்துவிட்டதாக தற்போது அறிவித்துள்ளனர் ஜேர்மனிய ஹேக்கர் குழுவினர்.



கைரேகையை படம்பிடித்து அதியுயர் தரத்தில் கிளாஸ் ஒன்றில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அதைக்கொண்டே ஐபோனை இயக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன.


Thursday 26 September 2013

பேஸ்புக் ஷார்ட் கட் கீகள்!


இன்றைய உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படுவது பேஸ்புக் மற்றும் யூடியூப் தான்.


இவற்றிற்கான ஷார்ட் கட் கீகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீகள்


Alt+1 - Facebook Home Page 

Alt+2 - Your Profile Page 


Alt+3 – Friend’s Request 


Alt+4 – Inbox (Message) 


Alt+5 – Notifications 


Alt+6 - My Account 


Alt+7 – Privacy Settings 


Alt+8 – Facebook Fans Page 


Alt+9 - Terms and Conditions 


Alt+0 – Help 



யூடியூப் ஷார்ட்கட் கீகள்


Spacebar – Start/Stop The Video

Left Arrow – Rewind The Video 


Right Arrow – Previous Video 


Up Arrow - Increase Sound 


Down Arrow – Descres Sound 


F key – Full Screen 


Sunday 22 September 2013

பிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.!


புரோகிராம் லாங்குவேஜ் ( Programming Language ) முதல் அனிமேசன் மென்பொருட்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் ஒவ்வொரு மென்பொருட்களிலும் திறமையானவர்களாக நம்மை மாற்ற இலவசமாக பயிற்சி கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.


கணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது.



இணையதள முகவரி :      http://www.good-tutorials.com



CSS, Flash , HTML , Illustrator, JavaJavaScript , Maya ,Photography , Photoshop, PHP , Ruby ,Ruby on Rails , 3ds Max , ஜாவா முதல் பிஎச்பி வரை அனிமேசன் மென்பொருளில் பிஷாஷ்-ல் தொடங்கி மாயா வரை அனைத்து மென்பொருள்களின் பயிற்சியையும் ஆரம்பம் முதல் நம்மை திறமையானவர்களாக மாற்றும் அத்தனை பயிற்சியும் இங்குள்ளது. ஸ்டூடியோ மேக்ஸ் , மாயா போன்ற மென்பொருட்களின் பயிற்சிக்கெல்லாம் சராசரியாக 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை செலவாகிறது , எந்தவிதமான பணச்செலவும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே கற்கலாம், நாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் மென்பொருளின் பயிற்சியை அளிக்க இந்தத்தளம் பலவிதமான பாடங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் முறையாக பயிற்சியை மேற்கொண்டால் எந்த மென்பொருளிலும்  திறமையானவர்களாக மாறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு கணினி படித்தவர்களுக்கும் அனிமேசன் படிக்க விரும்புபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Thursday 19 September 2013

இணையத்தில் நாம் காணும் ஒரு பக்கத்தை pdf ஆக மாற்ற வேண்டுமா?



இன்று நாம் இணையத்தில் ஒரு தளத்தின் பக்கத்தை(page) எவ்வாறு  pdf ஆக மாற்றுவது என்பதை பற்றி பாப்போம் ... 


நாம் சில நேரங்களில் ஒரு தளத்தை படித்துக்கொண்டிருக்கும்போது அந்த பக்கத்தில் தகவல்கள் நிறைய இருந்தால் நாம் உடனடியாக அதை பூக்மார்க் செய்துகொள்வோம் எத்தனை நாள் இப்படி பூக்மார்க் செய்வது ?அப்படி செய்துகொண்டே போனால் நம்முடைய பூக்மார்க் அதிகமாக மாறி நம்மால் குறிப்பிட்ட பக்கத்தை அல்லது ஒரு தளத்தை கண்டுபிடிக்க கஷ்டமாக போய்விடும் ...இக்குறையை தீர்க்க நாம் அந்த பக்கத்தையோ அல்லது ஒரு தளத்தையோ  pdf ஆக மாற்றி கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவே பிறகு தேவைப்படும்போதெல்லாம் அதை பார்த்துக்கொள்ளலாம் இணைய இணைப்பும் தேவை இல்லை ......


இதற்கு நமக்கு எந்த மென்பொருளும் தேவையில்லை இவ்வாறு இணையத்தில் ஒரு பக்கத்தையோ அல்லது ஒரு தளத்தையோ  pdf  ஆக மாற்ற ஒரு தளம் நமக்கு உதவுகிறது அங்கே சென்று நீங்கள் விரும்பிய பக்கத்தின் url நிரலை பேஸ்ட் செய்து convert to pdf என்பதை கிளிக் செய்தால் ஒரு சிலம் நொடிகளில் அந்த பக்கம் உங்களுக்கு pdf ஆக மாறி விடும் அதை நீங்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் ....


அதிலே options என்ற ஒன்றை கிளிக் செய்து நீங்கள் பல தகவல்களை அந்த pdf கோப்பிற்கு தரலாம் உதாரணமாக கடவுச்சொல் தரலாம் அந்த pdf இல் plugins enable செய்யலாம் இன்னும் நிறைய அனால் இந்த செயல்களை டவுன்லோட் செய்யாததற்கு முன்பே செய்துவிடவும் .........பிறகு convert to pdf என்பதை கிளிக் செய்து கன்வெர்ட் ஆனவுடன் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள் ...


சரி தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் 
 


பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள் .....பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை சமூக வலைதளங்களில் ஷேர் செய்யவும் ....

Wednesday 11 September 2013

திருமண ஆல்பம் சுலபமாக தயாரிக்க - Wedding Album Maker!


திருமணம் என்பது ஆயிரம்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். பயிரை பத்திரமாக பாரத்த்துக்கொள்வதுபோல திருமண பந்தத்தையும் நாம் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். நமது திருமணத்திற்கு எடுக்கும் புகைப்படங்களை அழகான டிவிடியாக மாற்ற இந்த Wedding Album Maker Gold என்கின்ற இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. 25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளீக செய்யவும. இதனை இன்ஸ்டால்  செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
 

 
 
 
இதில் நான்கு விதமான விண்டோ கிடைக்கும். இதில் கீழே உள்ள விண்டோவில் உள்ள + பட்டனை கிளிக் செய்து உங்கள் விருப்பமான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.
 


 
 
இதில் Add.,Add All.Delete.90+ Text.Auto Adjust.Background Music.More Options என நிறைய டேப்புகள் இருக்கும். இதில் சில புகைப்படங்கள் vertical மற்றும்  Horizontal போஷிஷனில் ;இருக்கும். இவ்வாறு Vertical போஷிஷனில் இருக்கும் புகைப்டத்தினை நாம் Horizontala மாற்ற இதில் உள்ள 90+ கிளிக் செய்து அட்ஜஸ்ட் செய்யலாம்.மேலும் இதில் உள்ள Test கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 
 
 



 இதில் Transition.Pans& Zoon.Text.Artclips.subtilte process என ஆறுவிதமான டேப்புகள் இருக்கும். இதில் உள்ள Transtion கிளிக் செய்ய உங்களுக்கு வரும் விண்டோவில் புகைப்படங்களுக்கு இடையில் வரும் Transtion Effect தேர்வு செய்யலாம். இதில் உள்ள Transtion Effect களை கீழேகொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்க்ள...


 



 இதில் உள்ள Text கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் வேண்டிய பாண்ட்அளவினையும் எபெக்ட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.


 



இதில் அடுத்துள்ள Art Clips கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 7 வித நிகழ்ச்சிகளுக்கான விதவிதமான ஆர்ட் கிளிப்புகள் இருக்கும் தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.


 
 
 
 
 
அடுத்துள்ள டேப்பில் சப் டைட்டில் இருக்கும் நாம் நமக் குதேவையான சப் டைடிலை தேர் வு செய்துகொள்லாம்.
 
 

 
 
 
சில புகைப்படங்கள் வெளிச்சம் அதிகமாகவும் சில புகைப்படங்கள் வெளிச்சம் குறைவாகவும் இருக்கும. அவ்வாறான புகைப்படங்களுக்கு இதில ;உள்ள பிரைட்,கான்ட்ராஸ்ட் கிளிக் செய்வது மூலம நாம புகைப்படத்தின்  தரத்தினை மேம்படுத்தலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 
 
 
நாம் புகைப்படத்தினை தேர்வு செய்ய வசதியாக இதில வலது புறம் நாம் தேர் வுசெய்த புகைப்படங்கள் வரிசையாக இருக்கும் தேவையானதை கிளிக் செய்து மாற்றங்கள் செய்துகொள்ளலாம்.
 




 
 
 
இந்த அனைத்து பணிகளும் முடிந்தபின் இதில் உள்ள Done அழுத்தவும். பின்னர மெயின் விண்டோவிற்கு வரவும். இதில் Album Photo.Transition & Music.Album Theme என மூன்று டேப்புகள் இருக்கும். இதில் முதலாவதாக உள்ள Album Photo வில் தான் நாம் இவ்வளவு வேலைகளையும் செய்தோம். இனி இரண்டாவதாக உள்ள Transition &Music கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் கம்யூட்டரில் இருந்து தேவையான பாடல்களை தேர்வு செய்யவும். திருமணத்திற்கு ஏற்ற பாடலை தேர்வு செய்யவும்.சோக பாடல்களை தவிர்த்துவிடவும்.பாடலை கட் செய்யும் வசதி உள்ளதால் தேவையான வரிகளை மட்டும் சேர்க்கலாம். 






இப்போது இதில் உள்ள Transition பற்றி பார்க்கலாம் நாம் விரும்பமான எபெக்ட் கொண்டுவந்து அது எவ்வளவு நேரத்தில் மாற வேண்டும் என செகண்ட் களும ;இதில செட் செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


 



இறுதியாக இதில விதவிதமான தீம் கள் உள்ளது. அதில் வரும் கூடுதல் எபெக்ட்களும் நாம் செட் செய்து அதனையும் ப்ரிவியூ பார்க்கும் வசதி உள்ளது. 
 
 
 
இதில் இரண்டாவது டேப்பில் உள்ள Choose Menu கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பபன் ஆகும். இதில் திருமணம் ம்ட்டும் அல்லாமல் பிறந்தநாள் காதுகுத்தல் வேறு விஷேஷங்களுக்கும் நாம் இதில செட் செய்துகொள்ளலாம். இதில் திருமணத்திற்கு என்று 60 க்கும் மேற்பட்ட டிசைன்களை இணைத்துள்ளார்கள்.
 
 
 


வலதுபுற விண்டோவில் விதவிதமான டிசைன்களை உங்களுக்கு கொடுத்துள்ளார்கள் ;தேவையானதை கிளிக் செய்தால் போதும் உங்கள் புகைப்படத்தின் முகப்பில வந்து அந்த டிசைன் அமர்ந்துகொள்ளும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்க்ள.


 




அனைத்துபணிகளும் முடிந்ததும் நாம் இதில் உள்ள ப்ரிவியூவிண்டோவில் நாம் செட் செய்த ஆல்பத்தினை ப்ரிவியூ ஓடவிடலாம். தவறுகள் மாறுதல்கள்இருந்தால் நாம் திருத்திக்கொள்ளலாம்.ஒரு படம் ஓடும் சமயம்தான் அதில் உள்ள நிறை குறைகள் நமக்கு தெரியவரும். நண்பர் அல்லது உறவினர் வைத்துகொண்டு இதில் உள்ள குறை நிறைகளை நாம் கண்டுபிடிக்கலாம்.கீழே உள் ளவிண்டோவில் பாருங்கள்.


 


இறுதியாக இதில் உள்ள Burn Disc கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும் இதில் நாம் நமது வீடியோவினை நமது கம்யூட்டரில் சேமித்துவைக்கலாம். அல்லது டிவிடியாக கூட இதன் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

 






 
 
வீடியோ பார்மெட் வகைகளை கீழே உள்ள விண்டோவில் காணலாம் நாம் வீடியோவினை எங்கு பார்க்கபோகின்றோமோ அதற்கு ஏற்ப வீடியோ பார்மெட்டினை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் இதில் செல்போன்;,யூ டியூப்,ஆன்ட்ராயிட்,வெப் ஆல்பம்,புளு ரே டிஸ்க்.எப்எல்வி மூவி,டிவிக்ஸ் என நமக்கு தேவையான பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.கீழே அவர்கள் கொடுத்துள்ள பார்மெட்டுக்களை பாருங்கள்.
 
 



இறுதியாக இதில் உள்ள Create Now பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கான புகைப்படங்கள் ஆல்பமாக மாற ஆரம்பிக்கும்.. எவ்வளவு நேரம் ஆகும் என்பதனை இதில் உள்ள ஸ்லைடர் மூலம் நாம் எளிதில அறிந்துகொள்ளலாம்.



 

 
 
 
 
இரண்டு மூன்று முறை முயற்சி செய்துபாருங்கள் இறுதியில் அட்டகாசமான வீடியோ உங்களுக்கு கிடைக்கும்.. இதனை நண்பர்கள்.உறவினர்களுக்கும்  பகுதிநேர வேலையாக செய்து கொடுத்து பணம் பெறலாம்.
 
 
 

Monday 9 September 2013

சிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்



கம்ப்யூட்டர் போல்டர்களில், ஒரே பைல் இரண்டுக்கு மேற்பட்ட இடத்தில் இருப்பது நமக்கு எரிச்சலைத் தரும் இடமாகும். காரணங்கள் - தேவையின்றி, இவை ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. அடுத்ததாக, இவற்றைக் கையாள்வது மிகவும் சிரமமான செயலாக அமைகிறது. ஒரு சில போட்டோக்கள், மீண்டும் மீண்டும் வெவ்வேறு போல்டர்களில் இருந்தால், எதனை அழிப்பது, எந்த போல்டரில் வைத்துக் கொள்வது என்பது நமக்கு எரிச்சல் தரும் செயல் தானே. அதிர்ஷ்டவசமாக, நமக்கு சிகிளீனர் புரோகிராம், டூப்ளிகேட் பைல்களை நீக்கும் எளிய வழி ஒன்றைத் தருகிறது.

சிகிளீனர் புரோகிராமினை, நிச்சயமாக அனைவரும் தங்கள் கம்ப்யூட்டரில் வைத்திருப்பார்கள். விண்டோஸ் சிஸ்டத்தில், தேவையற்றவற்றை நீக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ள இந்த புரோகிராமினை நாம் அனைவரும் பயன்படுத்தலாம். தற்காலிக இண்டர்நெட் பைல்கள், விண்டோஸ் சிஸ்டம் ஏற்படுத்தும் தற்காலிக பைல்கள், லாக் இன் சம்பந்தப்பட்ட பைல்கள், குக்கீஸ் என தற்காலிக பைல்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம். இவை எல்லாவற்றையும் தானாக சிகிளீனர் நீக்குகிறது.

அது மட்டுமின்றி, விண்டோஸ் இயங்கும்போது, இயக்கப்படும் புரோகிராம்களை, ஸ்டார்ட் அப் விண்டோவில் சிகிளீனர் சரி செய்கிறது. தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்து நீக்க உதவுகிறது. ரெஜிஸ்ட்ரியில் உள்ள தேவையற்றை வரிகளை, குறியீடுகளை நீக்குகிறது. பைல்களை அழிக்கும் போது, அவற்றின் சுவடு தெரியாமல் முழுமையாக அழிக்கிறது. இதன் மூலம் நமக்கு ஹார்ட் டிஸ்க்கில் இடம் கிடைக்கிறது. 



தற்போது வெளியிடப்பட்டுள்ள சிகிளீனர் புரோகிராம், டூப்ளிகேட் பைல்களை இனம் கண்டு நீக்குகிறது. இதனைச் செயல்படுத்த, சிகிளீனர் புரோகிராமினை இயக்கி, டூல்ஸ் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். டூப்ளிகேட் பைல் அறியும் டூலினைப் பெற, இதன் விண்டோவில், File Finder என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். ஏற்கனவே, சில ஆப்ஷன்கள் நமக்காக, சிகிளீனர் இன்ஸ்டால் செய்திடுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். அவை அப்படியே இருக்கட்டும். ஆனால், மிக முக்கியமாக, Ignore என்னும் வகையில், Modified Date under Match By என்பதிலும், File Size Under என்பதிலும், டிக் அடையாளம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். சிஸ்டம் பைல்ஸ் என்று இருக்கும் இடத்தில் Ignore ஆப்ஷனில் டிக் அடையாளம் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், பல சிஸ்டம் பைல்கள், இரண்டு டைரக்டரிகளில் அல்லது இரண்டு போல்டர்களில் இருக்க வாய்ப்புண்டு. இவை, நீக்கப்பட்டால், சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்படலாம்.

இனி, கம்ப்யூட்டரில் உள்ள டூப்ளிகேட் பைல்களை எப்படி நீக்கலாம் என்பதனைப் பார்க்கலாம். மாறா நிலையில், சிகிளீனர், அனைத்து ட்ரைவ்களையும் தேர்ந்தெடுத்துக் காட்டும். கம்ப்யூட்டரே, சிகிளீனர் மூலம் ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டால், அந்த வேலை அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, டூப்ளிகேட் பைல்கள் உள்ள போல்டர்கள் அல்லது ட்ரைவ்கள் எவை என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். 


போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுக்க, பிரவுஸ் பட்டன் கிளிக் செய்து, வழக்கமான முறையில், போல்டர்களையும் பைல்களையும் தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுத்த பின்னர், Search பட்டனில் கிளிக் செய்தால், ஸ்கேன் தொடங்கப்படும். ஸ்கேனிங் முடிந்த பின்னர், சிகிளீனர், அது கண்டறிந்த டூப்ளிகேட் பைல்களைப் பட்டியலிடும். இரண்டு அல்லது அதற்கும் மேலான இடத்தில் உள்ள பைல்கள் தொடர்ச்சியாக இணைத்தே பட்டியலிடப்படும். எந்த பைலை நீக்க வேண்டுமோ, அவற்றை, அதன் அருகே உள்ள செக் பாக்ஸில், டிக் செய்து தேர்ந்தெடுக்கவும். சிகிளீனர் மீண்டும் ஒருமுறை, உங்களிடம், நீங்கள் தேர்ந்தெடுத்த பைல்களை உறுதியாக நீக்கவா என்றுகேட்கும். சரி என்று சம்மதத்திற்கென கிளிக் செய்தவுடன், டூப்ளிகேட் பைல் நீக்கப்படும்.
Click Here

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top