.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label உலக சாதனை. Show all posts
Showing posts with label உலக சாதனை. Show all posts

Wednesday 9 October 2013

வேதியியல் துறையில் 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு!


















வேதியியலுக்கான நோபல் பரிசு 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் மார்டின் கார்பிளஸ், மைக்கேல் லெவிட், ஏரி வால்ஷெல் ஆவார்கள். ரூ.7.75 கோடி ரொக்கப்பரிசை 3 பேரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.மூலக்கூறு வடிவமைப்பு மாதிரி ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக நோபல் பரிசு வழங்குகிற ராயல் சுவிடிஸ் அறிவியல் அகாடமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘‘மார்டின் கார்பிளஸ், மைக்கேல் லெவிட், ஏரி வால்ஷெல் ஆகிய 3 விஞ்ஞானிகளும் ரசாயன செயல்பாடுகளை புரிந்து கொள்ளவும், யூகிக்கவும் பயன்படுகிற விதத்தில் கணினிகளை மேம்படுத்த அஸ்திவாரம் போட்டுள்ளனர்; நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கிற கணினி மாதிரிகள், ரசாயன துறையில் முன்னேற்றங்கள் காண்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன’’ என கூறப்பட்டுள்ளது.

நோபல் நாயகர்கள்: அவிழ்ந்தது மூலக்கூறுகளின் மர்மம்!

ராண்டி டபிள்யு. ஷெக்மேன்
ராண்டி டபிள்யு. ஷெக்மேன்
தாமஸ் சி. சுதோப்
தாமஸ் சி. சுதோப்
ஜேம்ஸ் இ. ராத்மேன்
ஜேம்ஸ் இ. ராத்மேன்



உடலில் உள்ள செல்கள் எப்படி மூலக்கூறுகளை உரிய இடங்களுக்கு, உரிய நேரத்துக்கு அனுப்பிவைக்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக மூன்று அமெரிக்கர்களுக்கு உடல்இயக்கவியல் மருத்துவத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருக்கிறது. 



யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் இ. ராத்மேன் (62), கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராண்டி டபிள்யு. ஷெக்மேன் (64), ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் சி. சுதோப் (57) ஆகியோர் விருது பெறுகின்றனர். 


ஒரு செல்லில் அதன் மூலக்கூறு கள் சிறு பொதிகளாகச் சுற்றிக்கொண்டே யிருக்கின்றன. அதை வெசிகிள்கள் என்று அழைப்பர். உரிய நேரத்தில், உரிய இடங்களுக்கு இந்த மூலக்கூறுகளை எது, எப்படிக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது என்பதை இந்த மூவரும் வெவ்வேறு நிலைகளில் ஆராய்ந்தனர். 



உதாரணத்துக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் இன்சுலினைக் கணையம் சுரக்கிறது. அந்த இன்சுலின் உரிய அளவில், உரிய நேரத்தில் ரத்தத்தில் சேர்க்கப்படுகிறது. ஆனால், இந்தப் போக்குவரத்து எளிதானதல்ல. மிகப் பெரிய நகரங்களின் நெரிசல் நேரத்தில் சாலைகளில் காணப்படும் வாகன நெரிசலுக்குச் சற்றும் குறைந்ததல்ல இந்த நெரிசல். அப்படியும் விபத்து ஏதும் இல்லாமல் போக்குவரத்து நடக்கிறது என்பதுதான் வியப்பு. 



மனிதர்கள் நடக்கவும் பேசவும் பாடவும் சூடான அடுப்பின்மீது தெரியாமல் வைத்து விட்ட கையைச் சட்டென்று எடுக்கவும் தான் சொல்ல விரும்பியதை எடுத்துச் சொல்லவும் ரசாயன அல்லது வேதியியல் சமிக்ஞைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ‘நியூரோ-டிரான்ஸ்மிட்டர்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த சமிக்ஞைகள் ஒரு நரம்பு செல்லிலிருந்து இன்னொரு நரம்பு செல்லுக்கு இந்த சமிக்ஞைகளை அனுப்பி இந்தச் செயல்களைச் செய்யவைக்கின்றன. 



வெசிகிள்கள் போக்குவரத்துக்குக் குறிப்பிட்ட சில மரபணுக்கள்தான் காரணம் என்பதை டாக்டர் ஷெக்மேன் கண்டு பிடித்தார். தங்களுடைய இலக்குகளுடன் வெசிகிள்கள் சேர்வதற்கு உதவும் புரதச் செயல்பாட்டை டாக்டர் ராத்மேன் கண்டுபிடித்தார். வெசிகிள்கள் தங்க ளுடைய சரக்குகளை உரிய இடங்களில் கொண்டுபோய்ச் சேர்க்க சமிக்ஞைகள் எப்படித் தரப்படுகின்றன என்பதை டாக்டர் சுதோப் வெளிப்படுத்தினார். 



இந்த வெசிகிள்கள் என்பவை மிகச் சிறியவை. அவற்றின் மீது சவ்வுபோன்ற படலம் மூடியிருக்கிறது. வெவ்வேறு அறை களுக்குப் புரதச் சரக்குகளை இவைதான் கொண்டுசேர்க்கின்றன. அல்லது பிற சவ்வுகளுடன் இணைந்துவிடுகின்றன. இதில் தவறு அல்லது குழப்பம் நேரிட்டால்தான் நரம்புக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி, நீரிழிவு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் போன்றவை ஏற்படுகின்றன. எனவே, இந்தக் கண்டுபிடிப்பு பல்வேறு நோய்களைத் தடுக்கவும் நோய் வந்தால் சிகிச்சை தரவும் மிகவும் உதவியாக இருக்கும். 


டாக்டர் ஷெக்மேன் 

 
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில், செயின்ட்பால் என்ற ஊரில் பிறந்த டாக்டர் ஷெக்மேன் 1970-களில் தன்னுடைய சோதனைகளைத் தொடங்கிய போது, ஒருசெல் ஈஸ்ட்டுகளைத்தான் ஆய்வுக்குப் பயன்படுத்தினார். ஒவ்வொரு செல்லின் ஒரு பகுதியிலும் வெசிகிள்கள் அப்படியே குவிந்துவிடுகின்றன. அப்படி அவை சேர்ந்து நெரிசல் ஏற்படக் காரணம், மரபுதான் என்று கண்டுபிடித்தார். 


பிறகு, செல்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத் தும் மூன்று வகை மரபணுக்களை அடையாளம் காணும் ஆய்வுகளைத் தொடர்ந்தார். கலிபோர்னியா, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்த அவர் 1974-ல் டாக்டர் பட்டம் பெற்றார். பெர்க்லி பல்கலைக்கழகத்தில் 1976-ல் ஆய்வுப் பணியில் சேர்ந்தார். 


அவருடைய ஆய்வுகள் உயிரித் தொழில்நுட்பத் தொழில்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இன்சுலின், ஹெபடைடிஸ்-பி தடுப்பு மருந்து ஆகியவற்றைத் தயாரிக்க அவர் ஈஸ்ட்டில் செய்த ஆராய்ச்சிகள் பெரிதும் கைகொடுத்தன. 



டாக்டர் ராத்மேன் 

 
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் ஹேவர்ஹில் நகரில் பிறந்தார் டாக்டர் ராத்மேன். 1980-கள், 1990-களிலேயே பாலூட்டிகளின் செல்களில் நடந்த வெசிகிள்கள் போக்குவரத்து குறித்து ஆராயத் தொடங்கினார். ஒருவிதப் புரதக் கூட்டுப்பொருள்தான், வெசிகிள்கள் தங்களுடைய இலக்கான சவ்வுகளை அடையாளம் கண்டு சரக்குகளை இறக்கிவிடவும் சேர்ந்துகொள்ளவும் காரணமாக இருக்கிறது என்று அவர் கண்டுபிடித்தார். ஒரு ஜிப்பில் இரண்டு உலோகப் பகுதியும் ஒன்றோடொன்று பொருந்துவதைப் போல இவை பொருந்துகின்றன என்பதையும் கண்டுபிடித்துக் கூறினார்.



புரதங்கள் பலவாக இருந்தாலும், குறிப்பிட்ட அளவிலான கூட்டுப்பொருள் அதே அளவிலான தேவையுள்ள இடத்துக்குச் சென்றுசேர்கிறது என்று அறிந்தார். இதனால்தான் குழப்பம் ஏற்படுவதில்லை. இதே அடிப்படையில் தான் செல்லுக்கு உள்ளேயும் இயக்கங்கள் நடைபெறுகின்றன. ஒரு செல்லின் வெளியில் உள்ள சவ்வுடன் வெசிகிள் இணையும்போதும் இது நடக்கிறது. 



டாக்டர் ராத்மேன், ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியிலிருந்து 1976-ல் டாக்டர் பட்டம் பெற்றார். மசாசுசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்துக்குப் பிந்தைய பட்டத்துக் கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1978-ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்துக்கு மாறினார். அங்குதான் வெசிகிள் செல்கள் மீதான ஆராய்ச்சியை மேற்கொண்டார். கொலம்பியா பல்கலைக்கழகம், ஸ்லோவன்-கெட்டரிங் புற்றுநோய் மையம் ஆகியவற்றிலும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் அவர் பணியாற்றியிருக்கிறார். 2008-ல் யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு செல் உயிரியல் துறையின் தலைவராக இப்போது பதவி வகிக்கிறார். 


டாக்டர் சுதோப் 

 
அமெரிக்கக் குடிமகனான டாக்டர் சுதோப், மேற்கு ஜெர்மனியில் உள்ள கோடிங்கென் நகரில் பிறந்தார். நரம்பில் உள்ள செல்கள் மூளையில் உள்ள செல்களுடன் எப்படித் தகவல்தொடர்பு வைத்துள்ளன என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மூலக்கூறுகளின் செயல்பாடுகள் என்னவென்று அவர் கண்டுபிடித்தது பல புதிர்களை விடுவித்தன. நரம்பியல் நடவடிக்கைகளில் சாதாரணமானது முதல் மிகவும் சிக்கலானது வரை பலவற்றை அடையாளம் காண அவருடைய ஆய்வுகள் உதவின. 


ஜெர்மனியின் கோடிங்கென் நகர ஜார்ஜ் ஆகஸ்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர் பிறகு, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். டல்லஸில் உள்ள மருத்துவ மையத்தில் 1983-ல் பணியில் சேர்ந்தார். ஹோவார்ட் ஹியூஸ் மருத்துவக் கழகத்தில் ஆராய்ச்சி நிபுணராக 1991-ல் வேலையில் சேர்ந்தார். பிறகு, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு செல்லுலர் உடல்இயக்கவியல் துறைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 


Tuesday 8 October 2013

இயற்பியலுக்கான நோபல் பரிசு!

'கடவுளின் அணுத்துகள்' ஆய்வுக்காக பீட்டர் ஹிக்ஸ், பிரான்காய்ஸ் எங்லர்ட்டுக்கு இயற்பியலுக்கான நோபல்



'கடவுளின் அணுத்துகள்' ஆய்வுக்காக பீட்டர் ஹிக்ஸ், பிரான்காய்ஸ் எங்லர்ட்டுக்கு இயற்பியலுக்கான நோபல் ஸ்டாக்ஹோம்: இயற்பியலுக்கான நோபல் ஹிக்ஸ் போசான் கொள்கை ஆராய்ச்சிக்காக இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் பிரான்காய்ஸ் எங்லர்ட் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. 
 ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று முதல் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று மருத்துவத்திற்கான பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ரோத்மேன், ரான்டி ஸ்கேமேன் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் சுதோஃப் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 
இந்நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 
இந்த பரிசை ஹிக்ஸ் போசான் கொள்கை ஆராய்ச்சிக்காக இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்த பிரான்காய்ஸ் எங்லர்ட் ஆகியோர் பெற்றனர். 
போசான் துகள்கள் இருப்பதை கணித்துக் கூறியவர் ஹிக்ஸ். பிரபஞ்சத்தின் அடிப்படை மூலக்கூறுகளுக்கு எடை உள்ளதற்கு போசான் துகள்களே காரணம் என்பதையும் அவர் விளக்கிக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே மிக வேகமாக ஓடும் WildCat ரோபோ!




இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட ரோபோட்டுக்களிலேயே தரையில் மிக வேகமாக ஓடும் விதத்தில் உருவாக்கப்பட்ட 4 கால்கள் உடைய WildCat ரோபோட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.


இந்த ரோபோட் பரிசோதிக்கப்பட்ட போது அதிகபட்சமாக 16mph வேகத்தில் ஓடியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். WildCat ரோபோ DARPA இன் M3 செயற்திட்டத்தால் நிதி திரட்டப் பட்டு பாஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரோபோ ஆகும்.


Monday 7 October 2013

2013-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு!


2013-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசை 3 பேர் பெறுகின்றனர். 


ஜேம்ஸ் இ ராத்மேன், ராண்டி டபள்யூ ஸ்கேமேன், தாமஸ் சி சுடஃப் பெறுகின்றனர். 


மனித உடலிலுள்ள செல்களில் இருந்து திரவம் அனுப்பும் முறையை கண்டுபிடித்ததற்கான நோபல் பரிசை பெறுகின்றனர். 


குறிப்பிட்ட செல்கள் உடலுக்கு தேவையான குறிப்பிட்ட திரவங்களை உற்பத்தி செய்கின்றன. 


உற்பத்தி செய்யப்படும் திரவம் உடலில் எங்கு தேவை என்ற தகவல் செல்களுக்கு கிடைக்கும். 


தகவல் கிடைத்ததும் தேவையான பகுதிக்கு செல்லில் இருந்து திரவம் அனுப்பப்படுகின்றது. 

Friday 4 October 2013

செவ்வாய்க் கிரகத்தில் எரிமலைகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு!



செவ்வாய்க் கிரகத்தில் மனிதனை குடியேற்றும் முகமாக நீர் இருப்பதையும், ஏனைய வளங்களையும் கண்டறியும் ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது Supervolcanoes எனப்படும் எரிமலைகள் இருப்பதற்கான ஆதாரப் புகைப்படங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர். 



மேலும் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு செவ்வாயில் இடம்பெற்றிருக்கலாம் என நம்புவதாக Michalski எனும் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.



 




 



 




 



 



Thursday 3 October 2013

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டது!!!





 இம்மாதம் 28ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள செவ்வாய் கிரக ஆய்வு செயற்கைக்கோளான ‘மங்கல்யான்’, பெங்களூரில் இருந்து நேற்று கன்டெய் னர் லாரி மூலம் ஸ்ரீஹரிகோட்டா எடுத்துச் செல்லப்பட்டது. ‘இந்த செயற்கைக்கோள் சிறப்பு கன்டெய்னர் லாரியில் வைத்து அனுப்பப்பட்டது’ என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். செயற்கைக்கோள் எடுத்துச் சென்ற கன்டெய்னரின் முன்னும் பின்னும், பாதுகாப்பு வாகனங்கள் சூழ்ந்து சென்றன.

ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இன்று மாலை அந்த லாரி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால் லாரி மெதுவாக ஓட்டிச் செல்லப்பட்டது. காந்தி ஜெயந்தி பொது விடுமுறை தினம் என்பதால் சாலையில் போக்குவரத்து குறைவாக இருக்கும். எனவே, செயற்கைக்கோளை கொண்டு செல்ல நேற்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் பயன்பாட்டுக்கு ஏற்றதாக உள்ளதாக சமீபத்தில் தேசிய நிபுணர் கமிட்டி ஆய்வு செய்து ஒப்புதல் அளித்திருந்தது. இதையடுத்து வரும் 28ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ உகந்த சூழ்நிலை நிலவுகிறதா, மீத்தேன் வாயு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ள இந்த செயற்கைக்கோள், செவ்வாய்கிரகத்தின் புகைப்படங்க ளையும் எடுத்து பூமிக்கு அனுப்பி வைக்க உள்ளது.
வானிலை ஒத்துழைத் தால் வரும் 28 மாலை 4 மணி 14 நிமிடம், 45 வினாடிகளுக்கு ஸ்ரீஹரிகோட்டா வில் இருந்து பிஎஸ்எல்வி ,சி25 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்ப டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்ட்ரா தகவல்

1,350 கிலோ எடை கொண்ட மங்கல்யான் செயற்கைக்கோள், பூமியில் இருந்து விலகிய பிறகு 10 மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடையும்.

Wednesday 2 October 2013

மனிதனை போன்றே ரோபோட்டுக்கும் மூளை! இந்திய விஞ்ஞானியின் அபார கண்டுபிடிப்பு!




ரோபோவும் மனிதனை போல தன்னிச்சையாக செயல்படக்கூடியவாறு மூளையை அமெரிக்க புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி கண்டுபிடித்துள்ளார்.



மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்ற ஜகன்னாதன், ரோபோக்கள் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார்.


இவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபாட் செயல்பாடுகளை கணக்கிட்டு அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து, தானியங்கி முறையில் மட்டுமின்றி சுயமாக சிந்தித்து குறைந்தபட்ச செயல்பாடுகளை மேற்கொள்ள வைத்தனர்.


இதில் ஜகன்னாதன் வெற்றி கண்டுள்ளார். ரோபாட் சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய அளவில் அதற்கு மனிதர்களுக்கு உள்ளதை போல மூளையை கண்டுபிடித்துள்ளார்.


எல்லா கன்ட்ரோல்களையும் மூளையில் வைத்து மனிதனை போலவே சிந்திக்கும் அளவுக்கு, புரிந்து கொள்ளும் அளவுக்கு ரோபாட்டின் செயல்பாட்டை மாற்றியமைத்துள்ளார்.


சோதனை ரீதியாக ரோபாட்டுக்கு மூளையை பொருத்தி செயல்படுத்தியபோது, ரோபாட்டுக்கு இலக்கை மட்டும் கமாண்ட் செய்து விட்டால் அதை அடைய மனிதனை போல தானாகவே சிந்தித்து, செயல்பட முடியும் என்பதில் ஏறக்குறைய வெற்றி கண்டுள்ளார்.


ரோபாட்டுக்கு அவர் கண்டுபிடித்த மூளையை பொருத்துவதில் படிப்படியாக மேலும் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜகன்னாதன், எதிர்காலத்தில் ரோபாட்டால், மனிதனை போல சிரிக்க முடியும், கோபப்பட முடியும். ஏன் முகபாவத்தை கூட காட்ட முடியும்.


பாலம் கட்டுவது, மேம்பாலம் அமைப்பது போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் பத்து புல்டோசர்களை இயக்க வேண்டும் என்றால் அதில் உள்ள பழுதுகளை கண்டுபிடிக்க வேண்டும், அதை சரி செய்யவும் வேண்டும் என்றால் இந்த மூளையுள்ள ரோபாட்களை பயன்படுத்தலாம், அது தான் என் குறிக்கோள் என்று கூறியுள்ளார்.

Sunday 29 September 2013

மிஸ்.பிலிப்பைன்ஸ் மேகன் யங் உலக அழகியானார்!


இந்தோனேஷிய நாட்டில் நடந்த உலக அழகி 2013ம் ஆண்டுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 23 வயது நிரம்பிய மேகன் யங் இறுதி சுற்றில் வென்று கிரீடம் சூட்டப்பட்டார். இந்தோனேஷியா நாட்டின் பாலி தீவில் 63வது வருட உலக அழகிக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 127 அழகிகள் கலந்து கொண்டனர்.
இறுதி சுற்றுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேகன் யங் தேர்வு செய்யப்பட்டார்.அமெரிக்காவில் பிறந்த யங் தனது 10வது வயதில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு இடம் பெயர்ந்தார். அதன் பின்னர் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராகவும் இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.



Miss World 2013 Final

 



இநதோனேஷியாவில் நடந்த இந்த போட்டிக்கு இஸ்லாமிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். எனவே, போட்டி அமைப்பாளர்கள் பாதுகாப்பினை அதிகரித்து இருந்தனர். இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணி அமைப்பினர் கடந்த சில வாரங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரானது என்றும் உடலை காட்டி நடத்தப்படும் போட்டியினை தடை செய்ய அரசுக்கு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து போட்டி நடத்துபவர்கள், பிகினி உடையில் தோன்றும் நீச்சல் உடை போட்டியினை நடத்த மாட்டோம் என ஒப்புதல் அளித்தனர்.



எனினும் போட்டியை தடை செய்ய தொடர்ந்து எதிர்ப்பு வலு பெற்று வந்தது. இதனால் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து இந்துக்கள் அதிகம் வசிக்கும் பாலி நகரில் இறுதி போட்டி நடைபெறும் என அறிவித்து இருந்தது. இதனை அடுத்து ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் இறுதி போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க அங்கு குவிக்கப்பட்டனர். அழகிய கடற்கரைகள், பிரமிப்பூட்டும் கோவில்கள், இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் கொண்ட பாலி தீவில் களிப்பூட்டும் இந்தக் கோலாகலமான நிகழ்ச்சியின் முடிவில் 127 போட்டியாளர்களை சந்தித்து மேகன் யங் இந்த முதலிடத்தைப் பெற்றுள்ளார். சென்ற வருடத்தின் உலக அழகியான சீனாவின் யூ வென்சியா இவருக்கு உலக அழகியாக முடி சூட்டினார். மிஸ் பிரான்ஸ் அழகியான மரைன் லோர்பலின் முதல் ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார். கானா நாட்டு அழகியான கரன்சார் நா ஒகைலி ஷூட்டார் இரண்டாவது ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார்.


இவர்கள் தவிர பியூட்டி வித் பர்பஸ், மல்டிமீடியா, பீப்பிள்ஸ் சாம்பியன், பீச் பேஷன், ஸ்போர்ட்ஸ் அன்ட் பிட்நெஸ்,டேலன்ட் காம்படிஷன் மற்றும் டாப் மாடல் போன்ற பல பிரிவிலும் அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான நீதிபதிகள் குழுவில் உலக அழகிப் போட்டி அமைப்பின் தலைவி ஜூலியா மோர்லே, இந்தோனேசிய அழகிப் போட்டி அமைப்பின் தலைவி லிலியானா தனோசோடிப்ஜோ, டைம்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் வினீத் ஜெயின் போன்றோர் இடம் பெற்றிருந்தனர்.

Miss Philippines Megan Young crowned Miss World 2013


********************************


 Miss Philippines was crowned Miss World 2013 today in a glittering finale on the Indonesian resort island of Bali amid tight security following weeks of hardline Muslim protests.Megan Young beat five other finalists, including France and Brazil, to win the coveted title in a contest broadcast to more than 180 countries worldwide.

.

Thursday 26 September 2013

ரீவ்ஸ் எனும் நிஜ சூப்பர் மேன்!

'சூப்பர் மேன்' படத்தில் கிறிஸ்டோபர் ரீவ்ஸ்
'சூப்பர் மேன்' படத்தில் கிறிஸ்டோபர் ரீவ்ஸ் 
 
 
 
கிறிஸ்டோபர் ரீவ்ஸ்
கிறிஸ்டோபர் ரீவ்ஸ் 
 

ஒரு சூப்பர் ஹீரோ கதை என்றால் என்னென்ன இருக்கும்? ஹீரோ முதலில் கலக்கி எடுப்பார். பின்னர் தோல்விகள், அதிலிருந்து மீண்டு வருவார்... இதானே? நடுவில் கொஞ்சம் காதல், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் கலந்துவிட்டால் ஒரு சூப்பர் ஹிட் படம் தயார். உண்மையான சூப்பர் ஹீரோவில் ஒருவர் கிறிஸ்டோபர் ரீவ்ஸ். 


சின்ன வயதிலேயே சாகசம் என்றால் மனிதருக்கு ரொம்பவே விருப்பம். அட்டைக்கத்திகள் செய்துகொண்டு சகோதரருடன் சண்டை, பனிச்சறுக்கு, ஒரு குட்டி விமானத்தில் ஏறி ஹாயாக அட்லாண்டிக் கடலின் மீது ஒரு த்ரில் பயணம்... வாழ்க்கையில் புதிதாக எதையாவது செய்ய வேண்டும்... அது தான் மனிதரின் மண்டையில் ஓடிக்கொண்டே இருந்தது.


சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டார். சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க நிறைய பேர் யோசித்தார்கள்; சூப்பர்மேன் வேடத்தில் நடித்த பலர் அகால மரணம் அடைந்திருந்தார்கள். அதற்கு முன் ஜார்ஜ் ரீவ்ஸ் என்பவர் குண்டடிபட்டு இறந்திருந்தார். நம்ம ஹீரோவுக்கு தான் சாகசம் பிடிக்குமே. விண்ணப்பம் போட்டுவிட்டார். சில்வெஸ்டர் ஸ்டால்லோன், கிளின்ட் ஈஸ்ட்வுட் முதலிய


மாபெரும் நாயகர்களை பின்னுக்கு தள்ளி 'சூப்பர் மேன்' வாய்ப்பைப் பெற்றார் நடிப்பில் ஆக்ஷனில் பின்னி எடுப்பார் இவர்; டூப் போடலாமே என்றால், “நோ தேங்க்ஸ்!” என்று திடமாக ஒரு வரியில் பதில் வரும். சூப்பர் மேன் படத்தை இயக்குகிற அளவுக்கு மனிதர் வளர்ந்தார். ஹீரோ வேடம் என்றில்லை, எந்த வேடம் நல்ல தீனி என்று தோன்றினாலும் உடனே நடிக்க ஓகே சொல்லிவிடுவார்.


முதல் திருமணம் முறிந்து போய்விட, ஒரு ஹோட்டலில் பாடிக்கொண்டு இருந்த டானாவிடம் கொஞ்சம் காதல், ஒற்றை ரோஸ், ட்ரேட்மார்க் புன்னகை என்று போய் காதலை சொன்னார். அவரும் ஓகே சொன்னார். இப்படி ஒரு ஜோடி இல்லை என்கிற அளவுக்கு உலா வந்தார்கள்.


சூப்பர் மேன் பட ஷூட்டிங் - இவருக்கு மிகவும் பிடித்த குதிரையேற்ற காட்சி. குதிரை கொஞ்சமாக திணறியது; மனிதர் தலைகுப்புற விழுந்தார். முதுகெலும்பு உடைந்து போய்விட்டது. டாக்டர்கள் கஷ்டப்பட்டு ஓட்ட வைத்தார்கள். நுண்ணிய அறுவை சிகிச்சை. எல்லாம் போய் விட்டது என்று டாக்டர்கள் சொன்னார்கள். காரணம் கழுத்துக்கு கீழே ஒன்றும் அசையாது; சூப்பர் மேன் இப்பொழுது சோக மேன் என்று பத்திரிகைகள் எழுதின. டானா வந்தார்; கரங்களை பற்றிக்கொண்டார். மனிதருக்கு ஒன்றும் உணர முடியாது. கழுத்துக்கு கீழே உணர்ச்சியே இல்லையே. கண்கள் பேசின, “நானிருக்கிறேன் உங்களுக்கு!” என்றது அவரின் பார்வை.


ஒன்பது வருடம் இப்படித்தான் வாழ்க்கை போனது. நடுவில் ஒரு முறை இதயம் ஸ்ட்ரைக் பண்ணி நின்று விட்டது. போராடி மீட்டார்கள் இவரை. அரிதிலும் அரிதான ரத்த குறைபாடு வேறு துரத்திக்கொண்டு இருந்தது. புன்னகை மட்டுமே ரீவ்ஸ் முகத்தில்.. சூப்பர் ஹீரோ பாருங்கள்!


என்ன பண்ணப்போகிறார் மனிதர் என்று பார்த்தால் படம் இயக்க கிளம்பிவிட்டார். 'In the Gloaming' என்ற HBO படத்தை சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே முதன்முதலாக இயக்கினார். எலும்பு மஜ்ஜை குறைபாடு வேறு குடைய ஆரம்பித்த நிலையில் ரீவ் அறக்கட்டளையைத் தொடங்கி ஸ்டெம் செல் ஆய்வுக்கு பல மில்லியன் டாலர்களை திரட்டிக் காண்பித்தார். நம்பிக்கை ஊட்டும் புத்தகங்கள் எழுதினார். தன்னம்பிக்கை பொங்க போகிற இடமெல்லாம் பேசினார், “ஒன்றும் நடக்கவில்லை எனக்கு!” என்று கம்பீரமாக சொல்வார்.


மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் விழா, அதற்குப் பிறகு ஆஸ்கர் விருது வழங்கும் விழா என்று இவரை பேச அழைக்காதே இடமே இல்லை என்கிற சூழல் உருவானது. மாற்றுத் திறனாளிகளுக்கான படத்திற்கு கம்பீரமாக குரல் கொடுத்து எம்மி விருது வென்றார் . தன்னைப் போலவே முடங்கியும் ஜெயித்த ஒரு மனிதனின் கதையை The Brooke Ellison Story எனும் படமாக இயக்கினார். எல்லா


இடத்திலும் டானா கண்டிப்பாக கூட இருந்தார். மாரடைப்பு வந்து இறப்பதற்கு முன் கூட Everyone's Hero என்கிற படத்தை இயக்கிக்கொண்டு இருந்தார்.


“நம்முடைய பெரும்பாலான கனவுகள் ஆரம்பத்தில் நிச்சயம் நிறைவேற முடியாததுபோல் தோன்றும். சற்று முயன்றால் அவை நனவாகலாமே என்று தோன்றும். பின்னர் நம் முழு பலத்தையும், தன்னம்பிக்கையையும், வரவழைத்து முயலும்போது அதே கனவுகள் நனவாக முடியாமல் போகாது என்ற நிலை ஏற்படும்!” என்று சொல்லி சாதித்து காண்பித்த இவர் இப்படி இருக்க காரணமான டானா, இவரின் மரணத்துக்கு பின்னும் இவரின் பணியை தொடர்ந்தார். டானா இவரை விட்டு இக்காலத்தில் நீங்கவே இல்லை. “எது தங்களை செலுத்தியது ?” என்று டானாவிடம் கேட்ட பொழுது, 
“எல்லையில்லா காதல் மற்றும் எதையும் பார்த்துவிடலாம் என்கிற நம்பிக்கை “ என்றார். 

இதுவல்லவோ காதல்!

Monday 16 September 2013

Bharath Rathna M S Subbulakshmi Queen of Music1916 2004) - இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த தினம் இன்று 16.09.2013








இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த தினம் இன்று 16.09.2013


எம். எஸ். சுப்புலட்சுமி என்ற மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்றவர்.



தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் பாடியுள்ள இவர், உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று நிகழ்ச்சிகள் பல நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

மிஸ் அமெரிக்கா அழகி போட்டி: இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தேர்வு!



மிஸ் அமெரிக்கா அழகி போட்டி:
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தேர்வு
    நியூயார்க்கில் நடைபெற்ற மிஸ் அமெரிக்கா அழகி போட்டியில் முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அழகி நீனா டவ்லுரி வயது (24 ) மிஸ் அமெரிக்காவாக தேர்ந்தெடுக்கபட்டார்.



2014-ம் ஆண்டிற்கான மிஸ் அமெரிக்கா அழகி போட்டிகள் அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் அட்லாண்டிக் நகரில் நடந்தது. பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 52 அழகிகள் கலந்து கொண்டனர். இதில் அமெரிக்காவின், மிஸ் நியூயார்க் அழகி , நினா தவுலுரி (24) , ‘மிஸ் அமெரிக்கா’ பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்தார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இதன் மூலம் இப்பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சவாளி அழகி என பெயர் பெற்றுள்ளார்.


Thursday 30 May 2013

அறிய புகைப்படங்கள் - எவரெஸ்ட் சிகரத்தை எட்டி 60 ஆண்டுகள்'!!!







                 நியூசிலாந்தைச் சேர்ந்த மலையேறியான சர். எட்மண்ட் ஹிலாரி அவர்களும் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகிய இருவரும் இந்த உலகின் மிகவும் உயரமான மலைச் சிகரத்தை 1953ஆம் ஆண்டும் மே மாதம் 29ஆம் தேதி அடைந்தார்கள்.






             நியுசிலாந்தில் தேனி வளர்க்கும் தொழிலைச் செய்து வந்த சர் எட்மண்ட் ஹிலாரியும், அவரின் நேபாள ஷெர்பா டென்சிங் நோர்கேயும் அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 8848 மீட்டர் அதாவது 29 ஆயிரம் அடி இருக்கும் இச்சிகரத்தின் மீது ஏறியது மிகப் பெறும் சாதனையாக பார்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசியாக இரண்டாம் எலிசபத் முடிசூட்டப்பட்ட நாளில் இவர்கள் உலகின் உச்சத்தை அடைந்த செய்தி லண்டனை எட்டியது.

 




               அன்று முதல் இன்று வரை எவரெஸ்ட் சிகரத்தில் 5000இற்கும் அதிகமானோர் ஏறியிருக்கிறார்கள். மனித முயற்சிக்கு இயற்கை அளிக்கும் இந்த உயரமான சவாலை எதிர் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதன் பிறகு கணிசமாக அதிகரித்தது. மலையேறுபவர்களுக்கு உதவும் கருவிகள் அறிவியல் முன்னேற்றத்தால் துல்லியமானவையாகவும் – எடை குறைந்தவையாகவும் தற்போது உள்ளன. பருவநிலையையும், மலை மீதுள்ள ஐஸ் நகருவது குறித்தும் தற்போது உறுதியான தகவல்களை உடனுக்குடன் பெறும் வசதி உள்ளது.




               கடந்த 1990 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் ஏற வேண்டும் என்று கிளம்பியவர்களில் 18 சதவீதம்பேர்தான் உச்சியை அடைந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 56 சதமாக உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஒரே நாளில் 234 பேர் எவரெஸ்ட் சிகரத்தின் மீது கால் பதித்தினர். 30 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1983 இல் ஒரே நாளில் அதிக பட்சமாக வெறும் 8 பேரால்தான் எவரெஸ்ட்டை அடையமுடிந்தது.

 



               ஆரம்ப காலத்தில் சாதனை மனப்பாங்கு கொண்ட – அபாயமான சூழ் நிலைகளை எதிர்கொள்ளும் மனோதிடம் கொண்டவர்களே எவரெஸ்ட்டுக்கு செல்ல முடியும் என்று இருந்தது. ஆனால் தற்போது எவரெஸ்ட் மலையேற்றம் என்பது நேபாளத்தில் நான்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாக இருக்கிறது. 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டாலர்கள் வரை கொடுத்து அதற்கேற்ற வசதிகளைப் பெற்றுக் கொண்டு ஒருவர் மேலே ஏறமுடியும். எவரெஸ்ட்டுக்கான வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் – அங்காங்கே உணவு மற்றும் மருத்துவ வசதிகளும் – பணத்துக்கு சுமைகளை சுமந்து வர ஷெர்பாக்களும் இப்போது அதிகரித்துவிட்டனர்.
 



               தற்போது மலையேறுதல் என்பது ஒரு வணிக நடவடிக்கையாக மாறிவிட்டதாகக் கூறும் விமர்சகர்கள், அங்கு அளவுக்கு அதிகமான சனக்கூட்டத்தை குறைப்பதற்காக ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால், அதனை பல மலையேறிகள் மறுக்கிறார்கள்.





உலகின் மிக உயர்ந்த சிகரமான, எவெரெஸ்ட் மீது , 1953 மே 29ம் தேதி, சர் எட்மண்ட் ஹிலாரியும், ஷெர்பா டென்ஸிங் நோர்கேயும் முதலில் ஏறி சாதனை படைத்தனர்.






 மலையின் தெற்குப் புறமாக கடும் முயற்சிக்குப் பின் அவர்கள் உள்ளூர் நேரப்படி காலை 1130 மணிக்கு ஏறினர்






மலையில் பல்வேறு காட்சிகளையும், ஷெர்பா டென்ஸிங் , பிரிட்டன், நேபாளம், இந்தியா மற்றும் ஐ.நா மன்றக் கொடிகளை அசைப்பதையும், படமெடுத்தார் ஹிலாரி





சிகரத்தில் படர்ந்திருந்த பனியில், கடவுளுக்கு பிரசாதமாக, டென்ஸிங் நோர்கே, சில இனிப்புகளையும் ,பிஸ்கட்டுகளையும் புதைத்தார்.






அடித்தள முகாமில் தேவையான வழங்கு பொருட்களை ஷெர்பாக்குழு ஒன்று எடுத்து சென்றது. புகைப்படத்தின் வலது பக்கம், லோ லா மலைச் சரிவு. அதற்கப்பால் கும்பு பனி ஏரியும், திபெத்தும் இருக்கின்றன. லோ லாவின் சரிவுகள் பார்ப்பதற்கு எளிதாக ஏறக்கூடியவை போலத் தெரிந்தாலும், அது சிகர உச்சியிலிருந்து பொழியும் பனிவீழ்ச்சியியால் அடிக்கடிப் பாதிக்கப்படும்




 நூற்றுக்கணக்கான ஷெர்பாக்கள் இந்த மலையேறும் குழுவிற்கு வேண்டிய பொருட்களைச் சுமந்து சென்றனர். இவர்களுக்கு வழிகாட்டவும் ஷெர்பாக்கள் உதவினர்.




எடுத்துச்சென்ற பிராண வாயு குறைய ஆரம்பித்ததால், டென்சிங்கும், ஹிலாரியும், எவெரெஸ்ட் உச்சியில் 15 நிமிட நேரமே இருந்தனர்




அவர்கள் எடுத்துச் சென்ற மலையேறும் கருவிகளில் பல அப்போதுதான் புதிதாக உருவாக்கப்பட்டவை, மேலும் அவை பரீட்சார்த்தமானவையும்கூட
 




 அவர்களது மலையேறும் முயற்சி ஏப்ரல் 12ம்தேதி ஆரம்பமானது. சிகரத்தைத் தொட்ட நல்ல செய்தி ஜுன் 2ம் தேதி, அதாவது, பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு நாளன்று, அறிவிக்கப்பட்டது






இந்த மலையேறும் குழுவினர், அடித்தள முகாம்களுக்கிடையே கம்பியில்லா (ரேடியோ) செய்தி அனுப்பும் தூண்களை ( டவர்கள்) நிலை நிறுத்தினர். இதன் மூலம் அவர்கள் வாக்கி டாக்கி கருவிகளை பயன்படுத்தி செய்திகளை பரிமாறிக்கொண்டனர். பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா குறித்த செய்தி குறித்த வானொலி ஒலிபரப்பையும் அவர்களால் கேட்கமுடிந்தது.







மிக உயர்ந்த சிகரமான எவெரெஸ்டின் மீது ஏறும் முன்னர், அந்த மாதிரியான உயரமான இடத்தில் இருக்க பழகிக்கொள்ள அவர்களுக்கு ஏழு முகாம்கள் எவெரஸ்ட் சிகரத்தின் மீது ஏறும் வழியில் அமைக்கப்பட்டன






1953ல் சென்ற இந்த பிரிட்டிஷ் மௌண்ட் எவெரெஸ்ட் மலையேறும் குழு, இந்த சிகரத்தை அடைய முயல பிரிட்டிஷ் குழுக்களினால் எடுக்கப்பட்ட ஒன்பதாவது முயற்சி. இதுதான் அந்த முயற்சிகளில் வெற்றி கண்ட முதல் முயற்சியும்கூட. 





இந்த பயணத்திற்குத் தலைமை தாங்கியவர் கர்னல் ஜான் ஹண்ட். இதற்கு நிதி உதவி செய்த அமைப்பு, கூட்டு இமாலயக் குழு. அனைத்துப் புகைப்படங்களும் வழங்கிய அமைப்பு ராயல் ஜாக்ரபிக் சொசைட்டி மற்றும் ஐபிஜி


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top