.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label இந்திய வரைபடங்கள்!. Show all posts
Showing posts with label இந்திய வரைபடங்கள்!. Show all posts

Sunday 27 October 2013

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-06


 குருஷேத்ர போரில் பாண்டவர்களின் படை தளபதிகளுள்  ஒருவரான திருஷ்டகேது சேதி நாட்டை சேர்ந்தவன். மேலும் இவன் சிசுபாலனின் மகன் ஆவான்.



வத்ஷம்:

         இன்றைய உத்திரபிரதேஷ மாநிலத்தின் கோசம் என்ற சிறிய  நகரமே அன்றைய வத்ச நாடு ஆகும். குசம்பி இதன் தலைநகரம்.

        மகாபாரதத்தில் பல இடங்களில் வத்ச பூமி என்று வத்ச நாடு  பற்றி பல குறிப்புகள் வருகின்றன. மகாபாரதம் (I:188) திருச்டதும்ணன் பாஞ்சாலியை பார்த்து அவளை மணக்க காத்திருக்கும் மன்னர்களின் பெயரை வாசிக்கும் பொழுது  ஸ்ருடயு, உலுக, கிட்டவ, சிற்றங்கட மற்றும் சுவங்கட , வத்சராஜா(King of Vatsa Kingdom) என்று குறிப்பிடுகிறான்.


குரு:

      குரு நாடு இன்றைய ஹரியானா, டெல்லி மற்றும் மேற்கு உத்திரபிரதேஷ பகுதிகளை கொண்டது. ரிக்வேதத்தில் உள்ள குறிப்புகளின் படி சப்த சிந்து (ஏழு நதிகளின் பகுதி) பகுதியில்  முதன் முதலில் ஆரியர்கள் குடியேறினர். ஆரியர்கள் முதலில் குடியேறியது குரு நாடு.

        குரு நாட்டின் தலைநகரம் ஹஸ்தினாபுரம். ஒரு சமயம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் ஹஸ்தினாபுரம் அழிந்ததால் அதன் தலைநகரம் கௌஷம்பிக்கு மாற்றப்பட்டது. இதன் காலம் கி.மு 1200–கி.மு800 என வரையருக்கபடுகிறது .

பாஞ்சாலம்:



            பாஞ்சால நாடு இன்றைய  உத்தர்கந்த், உத்திரபிரதேஷ சில பகுதிகளை கொண்டது. இதன் காலம் கி.மு 6 ஆம் நூற்றாண்டு. பாஞ்சால நாடு வேதகாலத்தில் ஒரு சிறப்பான நாகரிக வளர்ச்சி பெற்றிருந்த நாடாகும். கி.மு 4 ஆம் நூற்றாண்டு அளவில் அது மகத நாட்டுடன் இணைக்கப்பட்டது.


மத்சம்:

       மத்ச நாடு இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரம் ஆகும். இதன் தலைநகரம் விரடநகர (இன்றைய பிராத்). மிக சிறந்த தேசமாக விளங்கிய மத்ஸ்ய ராஜ்ஜியம் புத்தரின் மறைவுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அண்டை நாட்டு மன்னர்களால் கைப்பற்றப்பட்டது

சூரசேனம்:


       கி.மு 6 ஆம் நூற்றாண்டில் மகாஜன்பதங்களில் ஒன்று. இன்றைய உத்திரபிரதேஷ மாநிலத்தின் பராஜ் பகுதியை  கொண்டது. மெதோர இதன் தலைநகரம்.


அஷ்மகம்:


 கி.மு 7 ஆம் நூற்றாண்டில் இருந்த ராஜ்ஜியம். கோதாவரி, மஞ்சிற நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியை கொண்டது. 16 மகாஜனபதன்களுள் இது ஒன்றே தென்இந்திய பகுதியை  கொண்டது. விந்திய மலை பகுதியில் இது அமைந்துள்ளது. இன்றைய நிசாமாபாத், அடிலாபாத் பகுதிகள். வானவியல் அறிஞரான ஆரியபட்டா அஷ்மகம் பகுதியில் பிறந்தவர் என கூறப்படுகிறது.




 


அவந்தி:


         அவந்தி இன்றைய மல்வ பகுதியை சேர்ந்தது. மகாபாரத, விஷ்ணு புராணம், பிரமபுராணம் போன்ற பல நூல்களில் அவந்தி  பற்றிய குறிப்புகள் வருகின்றன. மகாபாரதத்தில் அவந்தி சேர்ந்த மக்கள் மிகவும் பலசாலிகள்(மகாவாலா) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


காந்தாரம்:

         இன்றைய வடக்கு பாகிஸ்தான், கிழக்கு ஆப்கானிஸ்தான்  பகுதியில் காந்தாரம் அமைந்திருந்தது. மிகவும் பழமையான நகரமான இதன் காலம் 15,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். புருஷபுரம் (இன்றைய பெஷாவர்) இதன் முக்கிய நகரமாகும்.

         மகாபாரதத்தில் காந்தாரம் பல இடங்களில் வருகிறது கந்தரி ஹஸ்தினபுரத்தின் அரசரான திருதிராச்டிறரை மணக்கிறாள், மேலும் காந்தரத்தை சேர்ந்த சகுனி பாண்டவர்கள் மீது கொண்ட கோபத்தால் கௌரவர்கள் பக்கம் இருந்து பாண்டவர்களை காட்டுக்கு அனுப்பியது நாம் அறிந்ததே.


 


காம்போஜம்:


             காம்போஜம் 16 மகாஜனபதங்களில் ஒன்று. கிழக்கு காந்தரத்தை ஒட்டி உள்ள பகுதி இது. மகாபாரதத்தின் பல இடங்களில் காம்போஜம் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இங்கு இந்தோ ஈரானிய கலாச்சாரம் வளர்ந்த இடம் ஆகும். தற்போது அங்கு ஈரானிய கலாச்சாரமே பெரும்பாலும் உள்ளது.


மகாஜனபதங்களை தொடர்ந்து ஹிந்து மதத்தின் வேறாக கருதப்படும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை பற்றி அடுத்த பதிவில் காண்போம்...

Saturday 26 October 2013

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-05

வேத காலம்
                   உலோக காலத்தை தொடர்ந்து வந்த காலம் வேதகாலம்  என்றழைக்கபடுகிறது. கி.மு1000 லிருந்து  வேதகாலம்  ஆரம்பமாகிறது. நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் நாகரீக வாழ்வை அடைந்ததும் மொழிகள் தோன்ற ஆரம்பித்தன  மொழிகள் தோன்ற ஆரம்பித்ததும் வேதங்களும், புராணங்களும்  தோன்றியது.

                  இப்படி படிப்படியாக முன்னேறிய மனித சமுதாயம் ஒரு சீரிய முன்னேற்றத்தை அடைந்தது வேத காலத்தில் தான். இந்தியாவின் பழமையான வேதங்களாக கருதப்படும் ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்கள், உபநிடதங்கள் இக்காலக்கட்டத்தில்  எழுதப்பட்டன, மேலும் இந்தியாவின் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் ஹிந்து மதம் தோண்டியது, உலகில் மூன்றாவது பெரிய மதம் நம் ஹிந்து மதம் தான், புத்த மதம், சமண மதம் தோன்றியது வேத காலத்தில் தான். இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் நடந்ததும் இயற்றப்பட்டதும் இக்காலகட்டத்தில் தான் .

                   தென்இந்தியாவை பொறுத்தவரை திராவிட மொழி தோன்றியது, மதுரையை தலைநகராக கொண்டு பாண்டியர்கள்  தென்இந்தியாவை ஆண்டு வந்தனர். தமிழ் சங்கம் தொடங்கப்பட்டது மேலும் தமிழின் பழமையான நூலான தொல்காப்பியம் இயற்றப்பட்டது. இனி வேத கால வரலாற்றை பற்றி படிப்படியாக பார்ப்போம்.

                   கி.மு1200 ஆண்டு வாக்கில் சிந்துசமவெளி நாகரிகம் அழிந்த பின்பு வட இந்தியா முழுவதிலும் பல இடங்களில் சிற்றரசுகளும், பேரரசுகளும் தோன்றி வளர ஆரம்பித்தன. இதில் முக்கியமானதாக கருதப்படுவது மகாஜனபதங்கள் என்றழைக்கபடும் 16 பேரரசுகள் அல்லது நாடுகள் ஆகும். இவற்றின் காலம் கி.மு1000 இல் இருந்து கி.மு 400 வரை.



 .

மகாஜனபதங்கள்
                மகாஜனபதங்கள் என்பது பண்டைய இந்தியாவில் காணப்பட்ட பேரரசுகள் அல்லது நாடுகளைக் குறிக்கும். இவை இந்திய உபகண்டத்தின் வடமேற்கிலுள்ள காந்தாரம் முதற்கொண்டு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையிலான பதினாறு அரசுகளாகும். 



1. அங்கம் (anga)

2. கோசலை (kosala)
 
3. காசி (kashi)

4. மகதம் (magadha)

5. வஜ்ஜி (vajji)

6. மல்லம் (malla)

7. சேதி (chedi or cheti)

8. வத்சம் (vatsa or vamsa)

9. குரு (kuru)

10. பாஞ்சாலம் (panchala)

11. மத்சம் (matsya or machcha)

12. சூரசேனம் (surasena)



13. அஸ்மகம் (ashmaka or assaka)

14. அவந்தி (avanti)

15. காந்தாரம் (gandhara)

16. காம்போஜம் (kamboja)

அங்க நாடு

            அங்க நாடு என்பது கி.பி. 6ம் நூற்றாண்டில் இந்திய உபகண்டத்தில் காணப்பட்ட ஒரு ராச்சியமாகும். அதே நூற்றாண்டில் மகதத்தால் ஆக்கிரமிக்கப்படும் வரை மிகவும் சிறப்பான நிலையில் இருந்தது. மேலும் பதினாறு மகாஜனபதங்களில் ஒன்றாக அங்கம் உள்ளது. ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் பல இடங்களிலும் அங்க நாடு வருகிறது.


 

 
மகாபாரதம் (I.104.53-54) மற்றும் புராண இலக்கியங்கள் அங்கம் எனும் பெயர் அதனைத் தோற்றுவித்த இளவரசர் அங்கன் பெயரால் ஏற்பட்டதாகக் கூறுகின்றன.

ராமாயணம், (1.23.14) காமதேவனை எரித்து அவனின் உடல் பாகங்கள் (அங்கம்) சிதறிய இடமே இது எனக் குறிப்பிடுகிறது.


மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அங்க தேசம் என்பது இன்றைய பீகாரிலுள்ள மாவட்டங்களான பகல்பூர், பங்கா, பூர்னியா, மங்கர், கதிகார் மற்றும் ஜமுய் ஆகியவற்றையும், ஜார்க்கண்டிலுள்ள தியோகார், கொட்டா மற்றும் சகேப்கஞ் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு பிரதேசமாகும். பிற்பகுதியில் இதன் எல்லைகள் வங்காளத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன. சம்பா நதி மகதத்தையும் அங்கத்தையும் பிரிக்கும் எல்லைக்கோடாகும். அங்கத்தின் வடபகுதி எல்லையில் கோசி நதி காணப்பட்டது. மகாபாரதத்தின் படி துரியோதனன் கர்ணனை அங்கத்தின் மன்னனாக முடிசூட்டினான். 

மகாபாரதத்தின் சபா பர்வம் (II.44.9) அங்கம் மற்றும் வங்கம் ஆகியன இணைந்து ஒரே தேசமானதாகக் குறிப்பிடுகிறது. கதா சரித சாகரம் எனும் நூலின் படி விதங்கபூர் எனும் கடலோர நகரம் அங்க தேசத்தில் இருந்ததாக அறிய முடிகிறது. எனவே அங்கத்தின் எல்லைகள் கிழக்குப்பகுதியின் கரையோரம் வரை வளர்ந்திருந்ததென அறியலாம்.

                    அங்கத்தின் தலைநகராக சம்பா காணப்பட்டது. மகாபாரதம் மற்றும் ஹரிவம்சத்தின்படி சம்பா என்பது மாலினி என அழைக்கப்பட்டது.. சம்பா நதி கங்கையுடன் கலக்குமிடத்தில் கங்கையின் வலது கரையில் சம்பா அமைந்திருந்தது. இந்த நகரம் மிகவும் வளமான நகராகும். இது பண்டைய இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது.

கோசல நாடு

                  கோசல நாடு என்பது பண்டைய இந்தியாவில் அமைந்திருந்த ஒரு பகுதியாகும். இப்பிரதேசம் இன்றைய இந்தியாவின் உத்திரப்பிரதேசத்திலுள்ள அவாத் பிரதேசத்தில் அமைந்திருந்தது. கி.மு.6ம் நூற்றாண்டில் காணப்பட்ட பதினாறு பெருங் குடியேற்றங்களுள்(மகா ஜனபதங்கள்) இதுவும் ஒன்றாகும். கி.மு. 4ம் நூற்றாண்டளவில் மகதத்தினுள் உள்வாங்கப்பட்டுவிட்டது. கோசல நாட்டில் அயோத்தி, சாகெத், சிராவஸ்தி ஆகிய மூன்று முக்கிய நகரங்கள் காணப்பட்டன.  புராணங்களின் அடிப்படையில், இஷ்வாகு மற்றும் அவரது வழிவந்தோரின் ஆட்சியின்கீழ் கோசலையின் தலைநகரமாக அயோத்தி அமைந்திருந்தது. 

ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் கோசல நாட்டின் ஆட்சியாளர்கள் இஷ்வாகுவின் வழிவந்தவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். புராணங்களில் இஷ்வாகு முதற்கொண்டு பிரசன்னஜித் வரையான இஷ்வாகு வம்ச அரசர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.  மச்சிம நிக்காய என்ற பௌத்த நூல் புத்தரை கோசல நாட்டவர் எனக் குறிப்பிடுவதோடு  சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் கோசலையில் கல்வி போதித்ததாகவும் குறிப்பிடுகின்றது.


காசி நாடு

         காசி ராச்சியம், பிரதிஸ்தனவின் சோமவன்ச குலத்தைச் சேர்ந்த அயுசின் மகனான சேத்திரவிரதனால் உருவாக்கப்பட்டது.

பண்டைய பிராமண வழக்கப்படி காசியின் மன்னர் உணவருந்துவதை எவரும் பார்த்ததில்லை. மேலும் எந்தவொரு மன்னரும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை. இவ்வாறு தமது பிராமணச் சட்டங்களை அம்மன்னர்கள் பேணி வந்தனர்.  





 


         காசியின் மன்னரின் விருந்தினராக பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா, பண்டித ஜவகர்லால் நேரு, ராஜேந்திரப் பிரசாத், இந்திரா காந்தி, இரண்டாம் எலிசபெத், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, கோச்செரில் ராமன் நாராயணன் மற்றும் அவரது பர்மிய மனைவி போன்றோர் சென்றுள்ளனர்.


மகத நாடு

           மகத நாடு மகாஜனபதங்களில் குறிப்பிடப்படும் 16 சிறப்பான நாடுகளுள் ஒன்றாகும். இதன் முதன்மை நிலப்பகுதி கங்கை ஆற்றுக்குத் தெற்கே அமைந்துள்ள பீகாரின் பகுதி ஆகும். இதன் தலைநகரம் ராஜககா (இன்றைய ராஜ்கிர்) என்பதாகும். கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகாரின் பெரும்பகுதி, வங்காளம் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி இது விரிவாக்கப்பட்டது. இராமாயணம்,மகாபாரதம், புராணங்கள் ஆகியவற்றில் மகத நாடு பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பௌத்த, சமண நூல்களிலும் மகதம் பற்றிப் பெருமளவு குறிப்புக்கள் உள்ளன. மகதம் பற்றிய மிகப் பழைய குறிப்புஅதர்வண வேதத்தில் காணப்படுகின்றது.




         கி.மு 684 இல் மகத நாடு  தோற்றுவிக்கப்பட்டது. ப்ரிஹ்றத ராஜ்ஜியம், பிரத்யோட ராஜ்ஜியம், ஹரயங்க ராஜ்யம், சிசுங்க ராஜ்ஜியம் போன்ற பலதரப்பட்ட ராஜ்யதால் கி.மு684 முதல் கி.மு424 வரை ஆளப்பட்டுள்ளது.
          இந்தியாவின் பெரிய சமயங்கள் இரண்டு மகத நாட்டிலேயே உருவாயின. இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு பேரரசுகளான மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு ஆகியவற்றின் மூலமும் இதுவே. இப் பேரரசுகளின் காலத்திலேயே இந்தியா அறிவியல், கணிதம், வானியல், சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் முன்னேற்றங்களைக் கண்டது. இது இந்தியாவின் பொற்காலம் எனக் கருதப்படுகின்றது.


மகாஜனபதங்களில் உள்ள மற்ற ராஜ்ஜியங்களை பற்றியும் வேத காலத்தில் தென் இந்தியாவின் வரலாறு பற்றியும் அடுத்த பதிவில் சிந்திப்போம்...
              அடுத்த பதிவு அடுத்த வெள்ளிக்கிழமை பதிவிடப்படும்,. இனி பிரதி வெள்ளிக்கிழமை பதிவிடப்படும்...

                பதிவு பற்றிய கருத்துக்களும் கேள்விகளும் வரவேற்க்கபடுகின்றன...

Friday 25 October 2013

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-04

புதியகற்காலத்தை அடுத்து வந்த காலம் உலோககாலம்.  உலோக காலம் இந்தியாவில் கி.மு 3300 ஆண்டு வாக்கில் தொடங்கியது. உலோக காலத்தை செம்பு-கற்காலம், இரும்பு காலம் என இரண்டாக வகைபடுத்தலாம்.


செம்பு கற்காலம்:
               கல் ஆயுதங்களுக்கு பதிலாக செம்பு, வெண்கலம் போன்ற பல வகையான உலோகங்களை உருக்கி கருவிகளை செய்தனர்.  உலோகங்களின் வருகையால் பொருளாதாரம், நாகரிகம் சற்று வேகமாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது. சில நுண் கற்கருவிகளும் இக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. உலோகங்களின் பயன்களை அறிந்த மக்கள் உலோகங்களை தேடி நெடுந்தூர பயணம் மேற்கொண்டனர்.



தென்இந்தியாவில் கோதாவரி, காவிரி, துங்கபத்ரா, பென்னாறு நதிகளின் பள்ளதாக்குகளில் குடியானவ சமுதாயங்கள் தோன்றி வளர்ந்தன. கி.மு 2000 ஆண்டு வாக்கில் தென்னிந்தியாவில் உலோகங்கள் பயன்படுதியதர்க்கான சான்றுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் மிக பழமையான நாகரிகமாக கருதப்படும் மேலும் எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்ததாக கருதப்படும் ஹரப்பா நாகரிகம் ஆரம்பமானது செம்பு கற்காலத்தில் தான் .

ஹரப்பா பண்பாடு:

           கி.பி 1856 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கிழக்கிந்திய ரயில்வே கம்பனியை சார்ந்த பொறியாளர்கள்  பிரிட்டிஷ் கால இந்தியாவின் கராச்சி-லாகூர் நகரங்களை  இணைக்க இருப்பு பாதை பணிகள் மேற்கொண்ட பொழுது பூமிக்கடியில் கட்டிடங்களின் தடயங்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதுவே ஹரப்பா என்னும் தொன்மையான  நாகரிகம் வெளிவந்ததற்கான முதல் படி. பின்னர் அரை  நூற்றாண்டுகள் கழித்து 1912 ஆண்டில் ஹரப்பா நாகரிகத்தின்  முழுமையான பெருமைகள் வெளிவர தொடங்கின. கடந்த156 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்ட வண்ணமே  உள்ளனர்.




          1931 ஆம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு வரலாற்று ஆசிரியர்களும் ஹரப்பா நாகரிகத்தின் காலத்தை ஒவ்வொரு விதமாக கணிக்கின்றனர். இவை அனைத்தையும் தொகுத்து  பார்க்கும் பொழுது ஹரப்பா நாகரிகத்தின் காலம் கி.மு 3300 இல்  இருந்து கி.மு 1500. எதிர்காலத்தில் வேறு மாற்றம் கூட வரலாம்.
 .
                 சிந்து பள்ளத்தாக்கின் மேற்கு பஞ்சாப்பிலுள்ள ஹரப்பா மற்றும் சிந்து மாகாணத்திலுள்ள மொகஞ்சதாரோ ஆகிய இரு  இடங்களில் தான் முதன் முதலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது இவ்விரு இடங்களுமே பாகிஸ்தானில் உள்ளன. தொடக்கத்தில் இப்பண்பாடு சிந்து சமவெளி நாகரிகம் என்றழக்கபட்டது. பின்பு சிந்துசமவெளி நாகரிகத்திற்கு அப்பாலும் இந்நாகரிகத்தின் தடயங்கள்  இருந்ததால், முதன்  முதலில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இடத்தை நினைவு  கூறும் விதமாக ஹரப்பா பண்பாடு என்றளைக்கப்படுகிறது .


 உலகின்  மிக பழமையான நாகரிகமாக கருதப்படும் மெசபடோமியா, எகிப்திய நாகரிகத்திற்கு இணையானது ஹரப்பா பண்பாடு.  ஹரப்பா நாகரிகத்திற்கு முந்தய கால மக்களின் தடயங்கள் கிழக்கு பாலுச்தீனத்தில் காணப்படுகின்றன. எனவே ஹரப்பா  நாகரிகம் அங்கிருந்த மக்களின் குடிப்பெயர்தளால்  ஆரம்பித்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.


                சிந்து சமவெளி நாகரிக மக்கள் சிறப்பு வாய்ந்த நாகரீக  வாழ்வை பெற்றிருந்தனர் பெரும்பாலான இடங்களில் செங்கற்களாலான கோட்டைகளும் கட்டிடங்களும்  இருந்துள்ளன. பாதாள சாக்கடை அமைத்து கழிவுநீரை அகற்றும் அளவுக்கு நாகரீக வளர்ச்சியும் பெற்றிருந்தனர். மேலும்  மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட 38 அடி நீளமுள்ள  மாபெரும் குளியல்குலம் அவர்களின் மேம்பட்ட வாழ்க்கையை  பறைசாற்றுகிறது. சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட செரமிக் பொருட்கள் தெற்கு துர்க்மெனிஸ்தானிலும், வடக்கு ஈரானிலும் காணப்பட்ட செரமிக் பாண்டங்களுடன் ஒத்துப்போகின்றன. இதன் மூலம் சிந்துவெளி மக்கள் அப்பகுதிகளுடன் வணிகத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


       
                   ஹரப்பா மக்கள்  சிவா  வழிபாட்டை  மேற்கொண்டிருந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன. சிந்து சமவெளி நாகரிக மக்கள் ஹிந்துக்களே என்ற முடிவுக்கு வரமுடிகிறது. இருப்பினும் வழிபாட்டு கூடங்கள், கோவில்கள்  இருந்ததற்கான சான்றுகள் இன்று வரை ஏதும் இல்லை.


 


         மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின்  படையெடுப்பினால், வறட்சி, புயல், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்திருக்கலாம் என்று  பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும் ஆரியர்களின்  படையெடுப்பிற்கு பின் அங்கிருந்த மக்கள் தென்இந்தியாவை  நோக்கி வந்தனர் எனவே ஹரப்பா மக்கள் பயன்படுத்திய மொழி  தமிழ் என்று கூறும் வரலாற்று ஆசிரியர்களும் உண்டு. இதற்கு சான்றாக நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது.
                        தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

ஹரப்பா பண்பாட்டிற்கு பிறகு ஆரம்பித்த காலம் வேத காலம். இக்காலக்கட்டத்தில் ஆரியர்களின் படையெடுப்பு மற்றும் இந்தோ-ஆரிய கலாச்சாரம் உருவாகியது. இதை பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம்!

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-03


                    இந்தியாவில் மனிதர்களின் நடமாட்டம் ஆரம்பித்த காலத்தை பற்றி எழுத்து வடிவிலான சான்றுகள் ஏதும் இல்லை. கல்வெட்டுக்களோ, குறிப்புக்களோ எழுதும் பழக்கமும் இல்லாமல் இருந்திருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை கொண்டு ஓரளவுக்கு வரலாற்றை படைத்துள்ளனர் தொல்லியல் நிபுணர்கள். இந்தியாவில் சொல்லிகொல்லும்படியாக முதன் முதலில் தோன்றியது சிந்துசமவெளி நாகரிகம். உலகில் முதன் முதலில் தோன்றியதாக கருதப்படும் மெசபடோமியா மற்றும் எகிப்திய கலாசாரத்திற்கு இணையானது நமது சிந்து சமவெளி நாகரிகம். ஆனால் மேசபடோமியர்கள் போல் சிந்து சமவெளி நாகரிகத்தினர் வரலாற்றுக்கு எந்த ஒரு எச்சங்களையும் விட்டு செல்லவில்லை. இதுவே நமது சிந்து சமவெளி நாகரிகம் உலக அளவில் பெருமையாக பேச படைத்ததற்கு ஒரு காரணம் ஆகும். சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தய வரலாற்றை பார்த்தால் அதில் கர்காலமும், உலோக காலமும் அடங்கும். கற்கால மனிதர்களும் இந்தியாவில் வாழ்ந்துள்ளனர் அதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி பார்ப்பதற்கு முன்பு கற்கால மனிதர்கள் பற்றி பார்ப்போம்.
கற்கால மனிதர்களின் வரலாற்றை நான்கு வகையாக பிரிக்கின்றனர்:
1.பழைய கற்காலம்(கி.மு10,000 முன்பு)
2.இடை கற்காலம்(கி.மு10,000- கி.மு6000)
3.புதிய கற்காலம்(கி.மு6000- கி.மு4000)
4.உலோக காலம்
       பள்ளி பருவத்திலிருந்தே வரலாற்றில் இவை பற்றி நிறைய படித்திருக்கிறோம். இருப்பினும் இதுவரை நாம் அறியாத சில தகவல்களுடன் இக்காலகட்டங்களை விரிவாக பார்ப்போம். இன்றைய நாகரீக வளர்ச்சியின் அடித்தளம் அமைக்கப்பட்டது கற்காலத்தில் தான்.முக்கியமாக செய்ய வேண்டியவை எவை செய்ய கூடாதவை எவை என்ற பகுத்தறிவை மனிதன் பெற்றான்.

பழைய கற்காலம்(palaeolithic or old stone age):

             பழைய கற்கால மனிதர்களின் வரலாறு 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தோன்றுகிறது. பழைய கற்கால மனிதர்களை உணவுகளை சேகரிப்போர் என வரலாற்று ஆசிரியர்கள் அழைக்கின்றனர். குரங்குகளை போல பல வகையான் மனித வகையினர் இக்கால கட்டத்தில் வாழ்ந்தனர். மனிதன் கல்லால் ஆன ஆயுதங்களை கண்டுபிடித்தான். குவார்ட்ஸ் போன்ற கடுமையான கற்களை கொண்டு கூர்மையான ஆயுதங்களை செய்து விலங்குகளை வேட்டையாடினர். மாமிசம் பழங்கள் தானியங்கள் இவர்களின்                     முக்கிய உணவாக இருந்தது. மனிதனின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றான நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. வேட்டையாடிய விலங்குகளை நெருப்பில் இட்டு உண்டான் மேலும் இரவு நேரங்களில் குளிரில் இருந்து  தன்னை காத்துக்கொள்ளவும் நெருப்பை பயன்படுத்தினான்.
 இக்காலகட்டத்தில் சில இடங்களில் நியாண்டர்தால் வகை மனிதர்களும், ஹோமோசபியன்(நாம்) மனிதர்களும் இணைந்தும், சில இடங்களில் தனித்தனியாகவும் வாழ்ந்துள்ளனர். கற்கால மனிதர்கள் எந்த மொழியையும் பயன்படுத்தவில்லை மேலும் தகவல் பரிமாற்றம் தொடர்பான விவரங்கள் ஏதும் தெரியவில்லை.

மத்தியபிரதேஷ மாநிலம் bhimbetka என்ற இடத்தில கற்கால மனிதர்களின் 30,000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித நடமாட்டம் இருந்ததை சுட்டிக்காட்டுகிறது. முந்தய பதிவில் பார்த்த மனித இனங்களில் ஒன்றான homo erectus வகை மனிதர்களின் ஓவியம் அவை.

இடை கற்காலம்(Mesolithic or middle stone age):
                    மனித நாகரிகத்தின் அடுத்த கட்ட முனேற்றம் இடை கற்காலம் ஆகும். இடை கற்காலம் கி மு 10,000 இல் இருந்து கி.மு 6,000 வரை உள்ள காலம். இக்காலாகட்டதில் நாடோடிகலாக  திரிந்த மனிதர்கள் குழுக்களாக இணைந்து வசதியான ஓரிடத்தில் வாழ தொடங்கினர். கல் ஆயுதங்களையே பயன்படுத்தினர்.
 நியாண்டர்தால், ஹோமோ எரக்டஸ் போன்ற பல வகையான மனித இனங்கள் படிப்படியாக அழிந்தது இக்காலகட்டத்தில் தான். இடை கற்காலத்திலும் மனிதர்களின் மொழி பற்றி சான்றுகள் ஏதும் இல்லை.  இடை கற்கால எச்சங்கள் குஜராத்தில் Langhanj, மத்திய பிரதேசத்தில் Adamgarh, ராஜஸ்தான், பீகார் போன்ற பகுதிகளில்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதிய கற்காலம்(Neolithic or new stone age):
                       கற்காலத்தின் கடைசி காலம் புதிய கற்காலம் ஆகும். புதிய கற்காலம் கி.மு 6,000 இல் இருந்து கி.மு 4,000 வரை உள்ள காலம் ஆகும். மனித நாகரிகத்தின் குறிப்பிடத்தக்க முனேற்றம் நடைபெற்றது இக்காலகட்டத்தில் தான். இகாலகட்டதில் கால்நடைகளை வீட்டில் வளர்க்க ஆரம்பித்தனர். விவசாயம் செய்தனர். மனிதனின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றான சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவின் பல பகுதிகளில் இக்காலத்திற்கான சான்றுகள் கிடைக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு, பீகாரில் siraant, உத்திர பிரதேசத்தில் பிளான் சமவெளி, தென்இந்தியாவில் கர்நாடகத்தில் Maski, Brahmagiri, Hallur
மற்றும் Kodekal. தமிழ்நாட்டில் payyampalli, ஆந்திரபிரதேசத்தில் utnoor போன்ற பகுதிகளில் புதிய கற்காலத்திற்கான சான்றுகள் கிடைக்கின்றன.

கல் ஆயுதங்களை பயன்படுத்தி வந்த மனிதன் உலோகங்களை கண்டெடுத்தான் பின்பு அவற்றை உருக்கி உலோகத்தினாலான கருவிகளை செய்தான். படிப்படியாக கல் ஆயுதங்களுக்கு விடை கொடுத்து உலோகத்தினாலான ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தான். இது உலோக காலம் ஆகும். கற்காலத்தை தொடர்ந்து வருவது உலோக காலம் ஆகும். உலோக காலத்தை பற்றியும் மனிதர்களின் அடுத்தடுத்த வளர்சிகள் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Thursday 24 October 2013

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும் - 02..!

 

பல 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் ஒரே நிலப்பகுதியாக இருந்திருக்கிறது அப்படி இருந்த அந்த உலகத்திற்கு வரலாற்று ஆசிரியர்கள் இட்ட பெயர் PANGAEA(which means"all lands"). சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு PANGAEA உலகம் இரண்டாக பிரிந்ததில் தெற்கில் கோண்ட்வானா, வடக்கில் LAURASIA என்ற இரு பெரிய கண்டங்கள் உருவாயின. இந்த பிரிதல் நடைபெற்றது உலகில் ஜுராசிக் உயிரினங்களின் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது. இந்த நிகழ்வை ஆங்கிலத்தில் CONTINENTAL DRIFT என்றளைக்கின்றனர்.


 


 கோண்ட்வானா என்பது இந்தியாவில் உள்ள ஒரு ஊரின் பெயர் (எந்த மாநிலம் என தெரியவில்லை தெரிந்தவர்கள் கமெண்ட் இல் சொல்லுங்கள்) உலகில் முதன் முதலில் அந்த ஊரில் தான் கோண்ட்வானா கண்டத்தின் படிமங்கள் கண்டறியப்பட்டன. எனவே அந்த ஊரின் பெயரையே கண்டதுக்கும் சூட்டிவிட்டனர். கோண்ட்வானா கண்டத்தில் அண்டார்டிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஆப்ரிக்கா, மடகஸ்கார், ஆஸ்திரேலியா இணைந்திருந்தன.


 


கோண்ட்வானா கண்டத்தில் இருந்து பிரிந்து வந்தது தான் நமது இந்தியா. ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா பிரியும் பொழுது கூடவே மடகஸ்கார் பிரிந்தது (இந்த நிகழ்வை சுட்டிக்காட்டும் அனிமேஷன் படத்தை மேலே காணலாம்).

 TETHYS கடலில் இந்தியா வடக்கு நோக்கி நகர்ந்து ஆசியாவுடன் இணைந்தது. இந்த மோதலில் ஆசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இமயமலை கிளர்ந்து எழுந்தது. இன்று இமயமலை இருக்கும் இடத்தில அன்று இருந்தது TETHYS கடல் தான். இன்றும் இமயமலையில் கடல் வாழ் உயிரினங்களின் எச்சங்களை  கண்டறிந்த வண்ணமே உள்ளனர். இந்தியா  கோண்ட்வானாவில் பிரிந்து ஆசியாவுடன் இணைந்தது சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு.


 ஆனால் விந்திய மலை தொடரும் தமிழக, கர்நாடக, ஆந்திர நிலப்பகுதிகள் 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளன. வடஇந்தியா மட்டுமே கோண்ட்வானாவில் இருந்து பிரிந்து வந்து தென்இந்தியாவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் இணைந்தது என்று கூறும் வரலாற்று ஆசிரியர்களும் உண்டு.



 

அமெரிக்கா கண்டத்தை பொறுத்த வரை தென்அமெரிக்கா மட்டும் கோண்ட்வானா கண்டதுடன் இருந்தது. கிழக்கு கோண்ட்வானா பகுதியில் இருந்த அண்டார்டிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, மடகஸ்கார் போன்ற பகுதிகள் ஆப்ரிக்காவிலிருந்து பிரிந்தது. தென்அமெரிக்கா ஆப்ரிக்காவிலிருந்து பிரிந்து வட அமெரிக்காவுடன் இணைந்து தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் உருவாகியது. பின்பு ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்து அண்டார்டிக்காவில் இருந்து  பிரிந்தது.


MESOSAURUS 
LYSTROSAURUS 
 

CYNOGNATHUS 

கோண்ட்வான கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் உயிரினங்கள்


 

    மனிதன் உலகெங்கும் பரவ கடவுள் செய்த வழி என்று கூட இதை சொல்லலாம். அன்று கண்டங்கள் அனைத்தும் பல இடங்களில் இணைந்திருந்தன. உலகின் வடக்கில் ஐஸ் இருந்ததால் மனிதனால் வட அமெரிக்காவிலிருந்து ஆசியா வரை நடந்தே செல்ல முடிந்தது. மனிதன் பயணத்தை ஆரம்பித்து உலகம் முழுவதும் பரவி முடிக்கவே ஒரு லட்சம் ஆண்டுகள் ஆயின.

                 60,00 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவை அடைந்த மனிதர்களில் ஒரு பிரிவினர் சீனாவை நோக்கி சென்றனர் இன்னோர் பிரிவினர் இந்தியாவுக்குள் வந்தனர்.

நியாண்டர்தால் இன மக்களும் அதற்கு முந்தய இனமான  homoerectus என்ற இனமும் இந்தியாவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. நியாண்டர்தால் இனமக்களும் வேறு சில இன மக்களும் பயன்படுத்திய ஆயுதங்கள் சென்னைக்கு அருகில் அந்தரம்பாக்கம், கர்நாடகத்தின் சில பகுதிகளில் கிடைத்துள்ளன. நவீன இன மக்களின் வருகைக்கு பின்பு அந்த இனங்கள் அழிந்திருக்கலாம் அல்லது நாமே அளித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


 

இந்தியாவில் ஆரம்பித்த மனிதனின் பயணம் இலங்கை வரை போக 20,000 ஆண்டுகள் பிடித்தன. அது வரை இலங்கை இந்தியாவுடன் தான் இணைந்திருந்தது. 30 கிலோ மீட்டர் நீளமுள்ள (adam's bridge) ஆதாம் பாலம் இந்தியாவையும் இலங்கையையும் இணைத்து இருந்துள்ளது. சமீபத்தில் நாசாவின் சாட்டிலைட் புகைப்படமே கூட இதை உறுதி செய்துள்ளது.


மனிதன் இந்தியாவிற்கு வருவதற்கு 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலும் டைனோசர் நடமாடியிருக்கின்றன . டைனோசர் இருந்த பொழுதே ராட்சச பறவை இனங்களும் இந்தியாவில் இருந்துள்ளன ஒரு விமானம் அளவுக்கு உருவம் உள்ள பறவை இனங்கள் கூட இருந்துள்ளன. மேலும் 17 வகையான யானை வகைகள் இருந்திருக்கின்றன. ஆனால் அதில் இபொழுது இருப்பது வெறும் 2 வகையே ஒன்று இந்திய யானை மற்றொன்று ஆப்ரிக்கா யானை.




 


 


இந்தியாவில் பருவநிலை மாற்றங்கள் சீராக சுமார் 20 லட்சம் ஆண்டுகளாக மாறாமல் நடை பெற்றுகொண்டிருக்கிறது.

நெடிய பயணத்தை முடித்த மனிதர்கள் ஒரு இடத்தில் நிலையாக வசிக்க ஆரம்பித்தனர். உடன் நாகரிகம் தோன்ற ஆரம்பித்தன.
மனித நாகரிகம் முதலில் எங்கு தோன்ற ஆரம்பித்தது அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday 23 October 2013

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-01

என்னுடைய கடந்த பதிவான பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை பதிவு எழுதிகொண்டிருக்கும் போது பழங்கால இந்திய வரைபடங்கள் பற்றி நான் தேடிய ஒரு தொகுப்பை இந்தியாவின் வரலாற்றுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இப்பதிவை ஆரம்பிக்கிறேன். இனி பயணத்தை தொடர்வோம்.



 


                  இந்தியாவின் வரலாற்றை பார்ப்பதற்கு முன்பு உலகில் இந்தியாவின் அமைவிடம் மற்றும் இந்தியாவில் முதல் மனிதனின் தோற்றம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு பின்னர் இந்திய வரலாற்றுக்கு வருவோம்




 


                    
பிரபஞ்ச வெளியின் வரலாற்றில் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனோ, நாம் வாழும் பூமி என்ற சிறிய கோளோ கிடையாது. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முன்பு அகண்ட வெளியில் சுற்றி திரிந்த தூசுகளும், கொதித்து கொண்டிருந்த கற்களும் ஒன்று சேர்ந்து ஒரு நெருப்புகோலமாக ஒன்று திரண்டது பின்னர் பல லட்சம் ஆண்டுகளை எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல குளிர்ந்து ஒரு திடமான உருண்டையாக உருப்பெற்றது. 




 


பின்னர் சூரிய மண்டலத்தின் தலைவரான சூரியனை சுற்றி வளம் வர ஆரம்பித்தது. பெயரில்லாத அக்கிரகத்தில் அப்போது கடுகளவு உயிரினம் கூட  கிடையாது. சுமார் நூறுகோடி ஆண்டுகளுக்கு பிறகு கடல்கள் உருவாகின.  அநேகமாக 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ ஒரு விசித்திரம் நிகழ்ந்ததில் கடலுக்கடியில் பாக்டீரியாக்கள் உருவாயின கூடவே செடிகள் வளர ஆரம்பித்தன.




 



 உலகில் உயிரனங்கள் வளர வழிவகுத்தது இந்த செடி கொடிகளே. ஆக்சிஜன் இல்லையேல் பூமியில் உயிரினங்கள் இல்லை.  


உலகில் முதன்முதலில் தோண்றிய உருப்படியான உயிரினம் மீன் வகைகளே. இவை தோன்றியது 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு. 




 


பின் பாம்பு, பல் போன்ற ஊர்வன தோன்றின  பின்பு அவை படிப்படியாக  வளர்ந்து டைனோசர்களாக  உருப்பெற்றன  85 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி 6 கோடி ஆண்டு வரை பூமியில் நடைபெற்றது டைனோசர் போன்ற ஊர்வன உயிர்னங்களின் ஆட்சியே. டைனோசர்கள் பார்ப்பதற்கு ஒரு செல் போன் டவர் அளவு உயரம் இருந்தாலும் அவை போட்டது முட்டைகளே.  பின்பு  குட்டி போடு பால் கொடுக்கும் எலி போன்ற உயிரினங்கள் தோன்றின. குட்டி போடு பால் கொடுப்பது என்பது ஒரு ஆச்சரியமான பரிணாம வளர்ச்சியே. 




 


mammals என்றழைக்கபடும் இந்த பாலூட்டிகளின் ஆட்சி சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது இதில் ஒரு உயிரினம் தான் மனிதன். பாலூட்டிகளின் பரிணாம வளர்ச்சியில் குரங்குகளை போல பல விதமான மனிதர்களும் தோன்றினர். அதில் modern man என்றழைக்கபடும் நாம் தோன்றியது 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான். 




 


homo sapien என்றழைக்கபடும்  நாம் முதலில்  தோன்றியது africa காடுகளில் தான். அதுவும் முதலில் தோன்றியது ஒரு ஆண் அல்ல பெண் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை.அதுவும் ஐரோபிய வாழ் வெள்ளைகார பெண் அல்ல africa கருப்பு நிற பெண். ஆகவே விஞ்ஞான அடிப்படையில் பார்த்தாலும் சக்தி இல்லையேல் சிவம் இல்லை. 


                    ஆரம்பத்தில் பல விதமான மனித வகையினர் உலகில் நடமாடினர் காலப்போக்கில் அவை அழிந்து மிச்சம் இருந்தது இரண்டு வகையினரே..


     1. நாம் (kuromeknan)


      2. நியாண்டர்தால்(neandertal) மனிதன் 



 


ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனும், நியாண்டர்தால் மனிதனும் சமமாக காடுகளில் வாழ்ந்து வந்தனர். CRO-MAGNON என்றழைக்கபடும் நாம் பல்கி பெருகியவுடன் நியாண்டர்தால் மனித இனம் அழிய தொடங்கியது. 


சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் இனம் அழிந்தது இதற்கான உண்மை காரணம் தெளிவாக அறிவியலாளர்களால் கூறஇயலவில்லை. நியாண்டர்தால் மனிதனும் நம்மை போலவே உருவ ஒற்றுமையும் சற்று குறைவான புத்தி கூர்மையும்  படைத்திருந்தனர்.




 


           africa காடுகளில் விலங்குகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி கொண்டு ஒரு பயத்துடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து வந்த மனிதன் கும்பல் கும்பலாக வாழ்வதற்கு ஏற்ற இடத்தை தேடி பயணிக்க ஆரம்பித்தனர் இப்பயணத்தில் நியாண்டர்தால் இனமக்களும் இருந்தனர். வழியில் பல புதிய பழங்கள் இல்லை தலைகளை சாப்பிட வேண்டியிருந்தது. சிலவற்றை சாபிட்டு இறந்தவர்களை பார்த்து மற்றவர்கள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற எச்சரிக்கை உணர்வை பெற்றனர். வழியில் வசதியான இடம் வந்தவுடன் ஒரு சிலர் அங்கேயே தங்கினர் மற்றவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். 


 



மனிதன் செல்லும் இடம் எங்கும் அவனை கடல் வலி மறிக்கவில்லை.  இது சற்று விசித்தரமாக தோணலாம். இதை பற்றி முழுமையாக அறிய நாம் ஆதி காலத்தில் உலகம் எப்படி இருந்தது என்பதை பற்றி முதலில் அறியவேண்டும். ஆதி காலத்தில் இருந்த உலகத்திற்கு அறிவியலாளர்கள் இட்ட பெயர் கொண்டவான லேன்ட்(gondwana land). இந்த கொண்டவான லேன்ட் என்பது என்ன? மனிதனின் அடுத்தக்கட்ட பயணம் எங்கே? என்பதை பற்றி அடுத்த தொடரில் விரிவாக பார்ப்போம்.   

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top