.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label உலக செஸ் சாம்பியன்ஷிப்!. Show all posts
Showing posts with label உலக செஸ் சாம்பியன்ஷிப்!. Show all posts

Wednesday 27 November 2013

கின்னஸ் ரிக்கார்ட் விக்கிபீடியா புகைப்பட போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சை கோவில்!

உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளவிக்கிபீடியா நடத்திய “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டியில் “சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தின் எம்.டெக். மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார்.

nov 27 -wikki _AWARD_photo

கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிபீடியா உலகம் முழுவதும் 300 மொழிகளை தன் சேவையை வழங்கி வருகிறது.


விக்கிபீடியா என்பது ஏதாவது ஒரு தகவலை அறியும் இடம் என பெரும்பாலானவர்கள் நினைத்து கொண்டு இருக்கலாம்.


 இது உண்மை என்றாலும் விக்கி பீடியாவில் மேலும் பயனுள்ள வசதிகளும் அடங்கி உள்ளது. அவைகள் என்னென்ன எப்படி உபயோகிப்பது என கொஞ்சம் பார்க்கலாம்.

1. விக்சனரி:

நாம் தற்பொழுது பேசும் தமிழில் தமிழை விட ஆங்கிலமே அதிகம் வருகிறது. ஆங்கில சொற்களுக்கு விளக்கத்தை தேடிய காலம் போய் தமிழ் சொற்களுக்கே சரியான பொருள் தெரியாத நிலையில் உள்ளோம்.

நம்மை போன்றவர்களுக்கு பயன்படும் நோக்கில் ஆரம்பிக்கப்பட் சேவை தான் இந்த விக்சனரி. விக்கி + டிக்சனரி என்பதன் சுருக்கமே விக்சனரி.

இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு பொருள் அறிய விரும்பும் பெயரை டைப் செய்து என்டர் கொடுத்தால் அந்த வார்த்தைக்கான அர்த்தம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வரும் மற்றும் அந்த வார்த்தையை வாக்கியத்தில் எப்படி பயன்படுத்துவது போன்ற பல தகவல்கள் இதில் கிடைக்கிறது.

இந்த தளத்திற்கு செல்ல

 – http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

2. விக்கியினங்கள்

இந்த தளத்திற்கு செல்ல

 -http://species.wikimedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D


விலங்கினம், தாவரஇனம், பூஞ்சையினம், பாக்டீரியங்கள், ஆர்க்கீயா, புரோடிஸ்டா போன்றவைகளை பற்றி விரிவாகவும் அழகு தமிழிலும் அறிய ஏற்ப்படுதப்பட்ட சேவை இந்த விக்கியினங்கள் என்ற சேவை. மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். இப்பொழுது தமிழில் கட்டுரைகள் காணப்படவில்லை கூடிய விரைவில் பகிரப்படும்.
ஆனால் உயிரினங்களை பற்றி ஆங்கிலத்தில் 3 லட்சம் கட்டுரைகள் உள்ளன.



3. விக்கி நூல்கள்

விக்கிபீடியாவில் உள்ள மற்றொரு பயனுள்ள சேவை விக்கி நூல்கள். தமிழ் நூல்கள் குறைந்த அளவே உள்ளன. இருந்தாலும் வாசகர்களிடமும், ஆஸ்ரியர்களிடமும், மாணவர்களிடமும் நூல்களை பதிவேற்ற உதவி கோருகிறது விக்கிபீடியா. அனைவரும் கைகொடுத்தால் எண்ணற்ற தமிழ் நூல்களை இங்கு காண முடியும். அனைவரும் உதவினால் தமிழ் நூல்களை அழிவில் இருந்து காப்பாற்றலாம்.

தேவை என்றால் புத்தகங்களை PDF கோப்பில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.



இந்த தளத்திற்கு செல்ல

 – http://ta.wikibooks.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D 

4. விக்கிமேற்கோள் (Quotes)

அறிஞர்கள், தத்துவ ஞானிகள், பிரபல நபர்கள் போன்றவர்கள் தங்கள் அனுபவங்களில் இருந்து கற்றதை சுருக்கமாக கூறுவது தான் மேற்கோள்கள். இந்த மேற்கோள்களை அழகு தமிழில் வழங்கியவர் பெயருடன் அளிப்பது தான் விக்கிமேற்கோள் சேவை.

இதற்கான தளத்திற்கு செல்ல

:http://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

இதற்கிடையில்தான் “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டி ஒன்றையும் ஆண்டு தோறும் நடத்துகிறது. இவ்வருடம் இந்தப் போட்டிக்கு 11,786 புகைப்படங்கள் சென்றன. இதில், கார்முகில்வண்ணன் எடுத்த இந்தப் பரிசுக்குரிய புகைப்படம், புகழ்பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் முழுத் தோற்றத்தையும் அழகாக பிரதிபலிக்கும்படியாக எடுக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியாவின் இந்தப் போட்டி பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள், பன்னாட்டு நடுவர்களால் தேர்வு செய்யப்படுகிறது.

பல நாடுகளிலிருந்து வெற்றி பெறுபவர்கள் லண்டனில் ஆகஸ்ட் 2014-ல் நடைபெறும் விக்கிமீடியன் மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்தப் போட்டி உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday 19 November 2013

Quick draw in game 8 of FIDE World Championship!

 

The eighth game of the FIDE World Championship Match, sponsored by Tamil Nadu state and currently ongoing in Chennai, finished in draw after 33 moves of play.

The challenger and world’s top rated player Magnus Carlsen changed his opening strategy and went for 1.e4 this time. The defending champion Viswanathan Anand echoed Carlsen’s repertoire and defended with Berlin Ruy Lopez, to the surprise of everyone in the press room here in Chennai.

Carlsen does not like to enter the Berlin endgame often with white pieces, and instead played the less frequent 5.Re1. The resulting pawn structure is symmetrical but with more pieces on the board.

Only two months ago Carlsen had a similar position with black against Hikaru Nakamura in Saint Louis. In 2010 Carlsen and Anand already tested the system, with same colours, in Kristiansund and Nanjing. All these games were drawn.

After the massive exchanges on the open e-file, the game ended in a draw on 33rd move. Carlsen spent only 20 minutes for the whole game. The current score is 5-3 in favour of the challenger.


The players were subjected to doping test after the eighth game and that accounted for a mild delay in the arrival at the media hall. The tests were done by Dr Jana Bellin. FIDE to be part of the International Olympic Committee initiated doping tests from the Bled Olympiad of 2002.

In the Bled 2002 Olympiad, Chennai’s women grandmaster Meenakshi was tested for doping after a random pick.

Source:http://chennai2013.fide.com

Monday 18 November 2013

இன்னும் 6 சுற்றுகள்; என்ன செய்யப் போகிறார் ஆனந்த்?

 

அடுத்தடுத்த சுற்றுகளில் தோல்வி அடைந்ததன் மூலம் கார்ல்ஸெனை விட 2 புள்ளிகள் பின் தங்கி உள்ளார் ஆனந்த். இன்னும் 6 சுற்றுகள் மட்டுமே மீதி உள்ளது. அதனால், அனுபவம் வாய்ந்த ஆனந்த் எத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற ஆவல் மேலோங்கி உள்ளது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) நடத்தும் இத்தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இதுவரை முடிந்த 6 சுற்றுக்களின் முடிவில், நார்வேயின் கார்ல்ஸென் 4 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 5-வது மற்றும் 6-வது சுற்றுக்களில் அடுத்தடுத்து அவர் 2 வெற்றிகள் பெற்றதே இதற்கு காரணம்.

இத்தொடரில் 6.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். தரவரிசையில் முதல் இடத்திலுள்ள கார்ல்ஸென் இன்னும் 2.5 புள்ளிகள் பெற்றால், உலக சாம்பியனாகி விடுவார்.

ஓய்வுக்குப்பின் திங்கள்கிழமை 7-வது சுற்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆனந்த் தன் திறமையை நிரூபித்தாக வேண்டும். இந்த தொடர் தொடங்கும் முன், ஆனந்த் இவ்வளவு எளிதில் சரணடைவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல் நான்கு சுற்றுகள் டிராவில் முடிந்தபோது நம்பிக்கையுடன் இருந்த ஆனந்த், அடுத்தடுத்த தோல்வியால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். 6-வது சுற்றின் முடிவில் இது கண்கூடாகத் தெரிந்தது.

5-வது சுற்றின் தோல்வி, 6-வது சுற்று ஆட்டத்தில் எதிரொலித்தது என்று ஆனந்த் தெரிவித்திருந்தார்.

அடுத்தடுத்த தோல்விகளைக் கையாளும் விதம் குறித்து நார்வே பத்திரிகையாளர் ஒருவர் ஆனந்திடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆனந்த், ""இன்னும் திறமையாக செயல்பட வேண்டும்'' என்றார்.

பதிலை விரிவாகத் தெரிவிக்குமாறு அந்த நிருபர் வலியுறுத்தினார். அதற்கு ஆனந்த், ""திறமையாக செயல்பட வேண்டும் என்பதற்கு அர்த்தம் திறமையாக செயல்பட வேண்டும் என்பதே. இந்த ஆங்கிலம் ஏன் உங்களுக்குப் புரியவில்லை எனத் தெரியவில்லை'' என்றார்.

இதற்கு முன்பும் தோல்விக்குப் பின் பத்திரிகையாளர்கள் இதுபோல ஆனந்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், ஆனந்த் அப்போதெல்லாம் நிதானம் இழக்கவில்லை.

7-வது சுற்றில் ஆனந்த் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாட உள்ளார். கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறக் காய்களிலும் கார்ல்ஸென் திறமையை நிரூபித்து விட்டார். குறிப்பாக, கருப்பு நிறக் காய்களுடன் காரோ கான் மற்றும் பெர்லின் தடுப்பு முறைகளில் ஆனந்துக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தார்.

புள்ளிகள் பட்டியல்

சுற்று ஆனந்த் கார்ல்ஸென்

1               0.5     0.5

2               0.5     0.5

3               0.5     0.5

4                0.5    0.5

5                    0      1

6                     0     1

* டிராவானால் தலா 0.5 புள்ளிகள்.

* வெற்றி பெற்றால் 1 புள்ளி.

Friday 15 November 2013

உலக செஸ் சாம்பியன்ஷிப் 5-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தினார் மேக்னஸ் கார்ல்சன்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 5-ம் சுற்றுப் போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.



ஐந்தரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்த போட்டியில் 58வது நகர்த்தலில் கார்ல்சன் வெற்றி அடைந்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 26ம் தேதி வரை 12 சுற்றுகளாக நடைபெறுகிறது.

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 5-வது சுற்றில் ஆனந்துக்கு சவால்


 


உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 5-வது சுற்று வெள்ளிக்கிழமை துவங்குகிறது. இதுவரை நடந்த சுற்றுக்கள் டிராவில் முடிந்த நிலையில், 6-வது மற்றும் 7-வது சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாட உள்ள ஆனந்துக்கு 5-வது சுற்றில் சவால் காத்திருக்கிறது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்தும், உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இதில், இந்தியாவின் ஆனந்த், நார்வேயின் கார்ல்ùஸன் மோதுகின்றனர். இதுவரை நடந்த நான்கு சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன. இதனால் இருவரும் தலா 2 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் சமநிலையில் உள்ளனர்.

முதல் சுற்றில் ஆனந்த் சுதாரித்தார். இரண்டாவது சுற்றில் கார்ல்ùஸன் எழுச்சி பெற்றார். 3-வது சுற்றில் ஆனந்த், கார்ல்ùஸனுக்கு நெருக்கடி கொடுத்தார். 4-வது சுற்றில் மீண்டும் கார்ல்ùஸன் சுதாரித்துக் கொண்டார்.

வியாழக்கிழமை ஓய்வுக்குப் பின்,5-வது சுற்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதில் ஆனந்த் கறுப்பு நிறக் காய்களுடனும், கார்ல்ùஸன் வெள்ளை நிறக் காய்களுடன் ஆட உள்ளனர். விதிப்படி, 6-வது மற்றும் 7-வது சுற்றுக்களில் ஆனந்த் வெள்ளை நிறக்காய்களுடன் ஆட உள்ளார்.

வெள்ளை நிறுக் காய்களுடன் விளையாடியபோது இருவரும் திறமையாக செயல்பட்டனர். எனவே, 5-வது சுற்றில் கறுப்புக் காய்களுடன் விளையாடும் ஆனந்துக்கு நெருக்கடி ஏற்படும். 2-வது சுற்றில் காரோ கான் முறையில் அசத்திய கார்ல்ùஸன் அடுத்தடுத்த சுற்றுகளில் பெர்லின், சிசிலியன் மற்றும் ஃபிரெஞ்ச் முறைகளின் மூலம் ஆனந்துக்கு சவால் அளிக்க காத்திருக்கிறார்.

Thursday 14 November 2013

உலக சதுரங்கம் (செஸ்) - கார்ல்செனின் கை சற்று(4–வது சுற்று) ஓங்கி இருந்தது!

சென்னையில் நடந்து வரும் உலக சதுரங்க (செஸ்) போட்டியில் ஆனந்த்–கார்ல்சென் இடையிலான 4–வது சுற்றும் ‘டிரா’வில் முடிந்தது.

                                            
உலக சதுரங்கம்
தமிழக அரசின் ஆதரவுடன் நடப்பு சாம்பியன் விசுவநாதன் ஆனந்த் (இந்தியா), உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) இடையேயான உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. 12 சுற்று கொண்ட இந்த போட்டியில் 6.5 புள்ளியை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை பெறுவர்.

இதில் முதல் 3 சுற்று ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இந்த நிலையில் 4–வது சுற்று ஆட்டம் நடந்தது. ஆனந்த் வெள்ளை நிற காய்களுடன் ஆட்டத்தை தொடங்கினார். ராஜாவின் முன்னால் உள்ள சிப்பாயை 2 கட்டம் நகர்த்தி ஆட்டத்தை தொடங்கினார். அதாவது ‘ரய் லோபஸ்’ முறையில் ஆனந்த் ஆட்டத்தை ஆரம்பித்தார். அதே பாணியைத்தான் கார்ல்செனும் கடைபிடித்தார்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடி காட்டினர். 6–வது நகர்த்தலில் ஆனந்த், எதிராளியின் குதிரையை வெட்டி தனது இரண்டு மந்திரிகளில் ஒன்றை விட்டுக்கொடுத்தார். 8–வது நகர்தலில் ராணியையும் (குயின்) அடிக்கு அடி என்று வெளியேற்றினர்.

18–வது நகர்த்தலில் ஒரு சிப்பாயை விட்டுக்கொடுத்து கார்ல்செனின் மந்திரியை கைப்பற்ற ஆனந்த் முயற்சித்தார். ஆனால் கார்ல்சென் ஆனந்தின் சிப்பாயை விழுங்கியதோடு, சாதுர்யமாக தனது மந்திரியையும் காப்பாற்றிக் கொண்டார். ஆனந்திடம் ஒரு சிப்பாய் குறைவாக இருந்ததால் கார்ல்செனின் கை சற்று ஓங்கியது.

டிரா ஆனது

இதனால் ஆனந்த் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட போதிலும், அதில் இருந்து தனது அனுபவத்தின் மூலம் சிறப்பாக மீண்டார். கார்ல்செனின் யுக்திகள் அனைத்தையும் முறியடித்தார். இறுதியில் 64–வது நகர்த்தலில் ஆட்டம் டிரா ஆனது. அப்போது ஆனந்திடம் ராஜாவுடன் ஒரு யானையும், கார்ல்செனிடம் ராஜாவுடன் யானை, சிப்பாயும் எஞ்சி இருந்தன. ஏறக்குறைய 6 மணி நேரம் போட்டி நீடித்த போதிலும் இந்த முறையும் முடிவு கிடைக்கவில்லை. டிரா ஆனதால் இருவருக்கும் அரை புள்ளி வீதம் வழங்கப்பட்டது. இருவரும் தற்போது தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கிறார்கள்.

Saturday 9 November 2013

முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் டிரா!

உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் டிரா

இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்– நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் மோதும் உலக செஸ் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது. அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வரும் இப்போட்டியில், விஸ்வநாதன் ஆனந்த் கருப்பு காய்களுடனும், கார்ல்சென் வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.

மொத்தம் 12 சுற்றுகளை கொண்ட இப்போட்டியில், இன்று நடைபெற்ற முதல் சுற்று டிரா ஆனது. ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த சுற்றில் இரண்டு வீரர்களும் தலா 16 நகர்த்தல்களுக்குப் பிறகு போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற போட்டியுடன், விஸ்வநாதன் ஆனந்தும் கார்ல்செனும் 29 முறை மோதியுள்ளனர். இதில் வெற்றி கணக்கில் 6-3 என ஆனந்த் முன்னிலையில் இருக்கிறார். 20 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top