.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 19 October 2013

அறிவுத்திறனை அழிக்கும் உணவுகள்! மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!

நம் தினமும் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்தும் நமக்கு போதுமான ஊட்டச்சத்தை அளிக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல முடியும்.


நாம் சாப்பிடும் உணவில் 20-30% உணவு தான் ஊட்டச்சத்து தரக்கூடிய உணவு, மீதி அனைத்தும் நமக்கு தெரியாமல் நமது உடலை அழித்து கொண்டிருக்கும் உணவு வகைகள்.


சுவை நன்றாக இருப்பதால், நாம் சில வகை உணவுகளை விரும்பிக் சாப்பிடுகிறோம். ஆனால், அவ்வகை உணவுகள் நம் உடலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறது.


ஊட்டச்சத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, நாம் எல்லா வகையான உணவுகளையும் குறிப்பிட வேண்டும்.


உதாரணமாக, சில வகையான சிறந்த உணவுகள் நமது எடை குறைப்பிற்கு உதவும், வேறு சில நமது அறிவுத்திறனை ஊக்குவிக்கும் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் உணவுகள்.

 
இதற்கு மாறாக சிலவகை உணவுகள் மூளைச் செயல்பாட்டை அழிக்கும் உணவாகவே இருக்கிறது.


எனவே இவ்வகையான உணவுகளை குறைவாக உட்கொள்வதினால், அதன் கேடு விளைவிக்கும் தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது.


சர்க்கரை உணவுகள்


சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த உணவுகள் எடை குறைப்பை கெடுப்பது மட்டுமல்லாது மூளைச் செயல்பாடையும் கெடுக்கும்.


நீண்ட காலம் சர்க்கரை உட்கொள்வதினால், அது நரம்பியல் பிரச்சனைகளை உருவாக்கும் மற்றும் ஞாபகத்திறனையும் பாதிக்கும்.


அது மட்டுமல்லாது சர்க்கரை உணவுகள் நமது படிப்பாற்றலையும் பாதிக்கும். இதனால் தான் சர்க்கரை அதிகமாக உள்ள உணவு வகைகளான பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஸ்வீட், கான் சிரப் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.


மது


மது உட்கொள்ளுதல் நாளடைவில் நமது கல்லீரலை பாதிக்கும். இதனால் வருவது தான் பிரைன் ஃபாக் எனப்படும் மூளை மூடுபனி
 பிரைன் ஃபாக் என்ற பெயருக்கு ஏற்ப இது மனக்குழப்பத்தை ஏற்படுத்தி சிந்திக்கும் திறனை தாக்குவதோடு நினைவாற்றலையும் தாக்கும்.


இதனால் மது அதிகம் உட்கொண்டால் சில பொருட்களின் பெயர் மறந்து போய்விடும், சில நிகழ்வுகளை நினைவு கூற முடியாது, நாம் கனவுலகில் இருக்கின்றோமா நிஜவுலகில் இருக்கின்றோமா என்று கூட தெரியாத நிலை வந்துவிடும்.


இவை அனைத்தும் மது நமது மூளையின் செயல்பாட்டை பாதிப்பதால் ஏற்படுகிறது. நல்ல வேளையாக, இந்த அறிகுறிகள் அனைத்தும் திரும்புதலால் நாம் மது அருந்துவதை நிறுத்த வேண்டும் அல்லது வாரம் ஒன்று அல்லது இரண்டு தடவை அருந்துவது என கட்டுப்படுத்த வேண்டும்.


ஜங்க் உணவுகள்


சமீபத்தில் மொன்றியல் பல்கலைகழகத்தில் நடந்த ஆராய்ச்சியின் படி, ஜங்க் உணவுகள் நமது மூளையில் உள்ள இரசாயனத்தை மாற்றி, அவை மனஅழுத்தம் மற்றும் கவலை நிலைக்கு ஆளாக்கும்.


அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள் சாப்பிட்டு பழகிவிட்டு, அதனை நிறுத்தும் போதும் இதே போன்ற அறிகுறிகள் ஏற்படும்.


இந்த வகை உணவுகள், டோபமைன் உருவாவதை தடுக்கிறது. டோபமைன் என்பது சந்தோஷம் மற்றும் நல்ல உடல் வளம் பெற உதவி செய்யும் இரசாயனம்.


அதுமட்டுமல்லாது, டோபமைன் அறிவுத்திறன், விழிப்புணர்வு, ஊக்கத்திறன் மற்றும் ஞாபகத்திறன் போன்றவற்றிற்கும் உதவுகிறது.


பொரித்த உணவு


தற்போதுள்ள எல்லா பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் இரசாயனங்கள், சாயப்பொருட்கள், சேர்க்கைப் பொருட்கள், செயற்கை சுவைகள் மற்றும் பதப்பொருட்கள் உள்ளன.


இது அறிவுத்திறனை பாதித்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே அதியியக்கத்தை தூண்டுகிறது. பொரித்த உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மூளையில் உள்ள நரம்பு அணுக்களை அழிகின்றன.


இருப்பினும் சில எண்ணெய்கள் மிகவும் ஆபத்தானவை. அவைகளில் சூரியகாந்தி எண்ணெய் தான் மிகவும் நச்சுத்தன்மை உடையதாகும்.


பதப்படுத்தப்பட்ட உணவு


பொரித்த உணவுகள் போல பதப்படுத்தப்பட்ட உணவுகளும் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கும். மேலும் அல்சைமர் எனப்படும் மூளை சிதைவு நோய் வரும் வாய்ப்புகளும் அதிகமாகும்.


அதிக உப்பு உள்ள உணவு


அதிக உப்பு உள்ள உணவுகள் இரத்த அழுத்தத்தை பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.


மேலும் அது நமது இதயத்திற்கும் கேடு விளைவிக்கும். அதிக உப்பு உள்ள உணவுகள் அறிவுத்திறன் மற்றும் சிந்திக்கும் திறனை பெரிதும் பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வேண்டுமெனில் அது அறிவாற்றலை பாதிக்கும் என்றும் சொல்லலாம்.


உப்பு மற்றும் நிக்கோட்டின் உள்ள பொருட்களை சாப்பிடுவது, ஒருவித போதையை உண்டாக்கும். அதனை கைவிடும் போது, அவற்றின் மேல் தீவிர நாட்டம் அடையத் தூண்டும்.


பதப்படுத்தப்பட்ட புரோட்டீன்


தசை வளர்ச்சிக்கும், உடல் சரிவர செயல்படவும் பெரிதும் உதவியாக இருப்பது புரதமே.


மாமிசம் தான் உயர்தர புரோட்டீன் நிறைந்த உணவு. ஆனால், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான ஹாட் டாக், சலாமி, சாசேஜ் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.


இயற்கையான புரோட்டீன்கள் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. ஆனால் பதப்படுத்தப்பட்ட புரோட்டீன் அதற்கு எதிர்மாறாக செயல்படும்.


ஆகவே இயற்கையான உயர்தர புரோட்டீன் நிறைந்த இயற்கை மீன்கள்(டூனா, சால்மன்), பால் பொருட்கள், வால்நட் மற்றும் விதைகளை சாப்பிடுங்கள்.


கொழுப்புச்சத்துள்ள உணவு


கொழுப்புச்சத்துள்ள உணவுகள் உடலில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிலும் இதயம் தொடர்பான பிரச்சனைகளில் ஆரம்பித்து, அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்பட காரணமாக இருக்கும்.


அவை நமது மூளையையும் பெரிதும் பாதிப்பதனால் பக்கவாதம் வர காரணமாக இருக்கிறது. மேலும் இவ்வகை உணவுகளை நீண்ட காலம் சாப்பிட்டால், அது நமது மூளையை சுருங்கச் செய்யும்.


இதனை தொடர்ந்து, தமனிகள் பாதிக்கக்கூடும். இதனை தடுக்கவும், பக்கவாதம் வராமல் காக்கவும் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை குறைவாகவே சாப்பிட வேண்டும்.


செயற்கை இனிப்புக்கள்


சிலர் ஒரே நாளில் எடை குறைப்பதற்காக சர்க்கரைக்கு பதில் செயற்கை இனிப்புகளை உபயோகிப்பதால் ஸ்லிம் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.


ஆம்! செயற்கை இனிப்புக்களில் மிக குறைவான கலோரிகள் தான் இருக்கின்றன. ஆனால், அவை நன்மை தருவதை விட தீமையை தான் அதிகம் தருகின்றன.


அதிலும் நீண்ட காலம் செயற்கை இனிப்புக்களை உபயோகித்தால், அது மூளையை பாதிக்கும். மேலும் அதிக அளவு செயற்கை இனிப்புக்களை உபயோகித்தால், அது அறிவுத்திறனையும் பாதிக்கும்.


நிக்கோட்டின்


வயதான தோற்றம், மூச்சு காற்றில் துர்நாற்றம், நுரையீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புக்களை உண்டாக்குவதோடு மட்டும் நிக்கோட்டின் நின்று விடுவதில்லை.


இது இரத்தத் தந்துகிகள் எனப்படும் சிறிய இரத்தக் குழாய்களுக்கு இறுக்கம் கொடுத்து, நரம்பியல் அலைப் பரப்பிகளின் உற்பத்தி மற்றும் செயல்பாடுகளை பாதிப்படைய செய்யும்.


குறிப்பாக இரத்தத் தந்துகிகள் தான் மூளை செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே நிக்கோட்டின் உள்ள உணவுப் பொருட்களை அறவே தவிர்ப்பது நல்லது.

Lenovo அறிமுகப்படுத்தும் Windows 8.1 டேப்லட்!

Lenovo நிறுவனம் Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது புதிய வடிவமைப்பான Miix2 எனும் டேப்லட்டினை அறிமுகம் செய்கின்றது.


8 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட்டின் பார்வைக் கோணமானது 178 டிகிரியாக காணப்படுகின்றது. 


மேலும் உயர் ரக கிராபிக்ஸ் மற்றும் வீடியோக்களை இயக்கக்கூடிய தொழில்நுட்பத்தினையும் இந்த டேப்லட கொண்டுள்ளது. 


இவை தவிர சேமிப்பு நினைவகமாக 128 GB கொள்ளளவு, 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன. 


இதன் விலையானது 299 டாலர்கள் ஆகும்.


கரூர் மாவட்டத்தின் வரலாறு!





இது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. வரலாற்று புகழ்பெற்ற பழமையான சோழர்கால நகரம். சோழர்களும், மதுரை நாயக்க மன்னர்களும், கடைசியாக ஆங்கிலேயரும் ஆண்டனர். முற்காலத்தில் கரூர் தங்க நகை வேலைப்பாடுகளுக்கும் வைரம் பட்டை தீட்டுவதற்கும் வர்த்தக மையமாக விளங்கியுள்ளது. அந்த நாட்களில் ரோம் நகரிலிருந்து கரூரில் தங்கம் இறக்குமதியாகியுள்ளது. படைப்புக் கடவுளான பிரம்மா இங்குதான் தனது படைப்புத் தொழிலை தொடங்கினார் என்று ஐதீகம். வடக்கே நாமக்கல், தெற்கு திண்டுக்கல், மேற்கே திருச்சி, கிழக்கே ஈரோடு என பல மாவட்டங்களை எல்லையாகக் கொண்டுள்ளது கரூர்.


2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே வஞ்சி மாநகர் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே கருவூர் என்றழைக்கப்பட்டு கரூர் என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது.


கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கபெற்றுள்ளது. பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது.

சோழரின் கலைப்பொக்கிஷங்கள் - சுற்றுலாத்தலங்கள்!

    சோழரின் கலைப்பொக்கிஷங்கள்
 
 

சோழரின் கலைப்பொக்கிஷங்கள்
 
சொக்க வைக்கும் கட்டடக்கலைக்கு சொந்தக்காரர்களில் சோழமன்னர்கள் முக்கியமானவர்கள். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் ஆகியவை சோழரின் கலைப்பொக்கிஷங்களாக இன்றளவும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. மூன்றுமே உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டிருப்பது உலகளாவிய பெருமை.
 
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்:
 
தஞ்சைப் பெரிய கோவில், தஞ்சைப் பெருவுடையார் கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். கட்டிய புதிதில் ராஜ ராஜேஸ்வரம் என்றும், பின்னர் வந்த நாயக்கர்கள் காலத்தில் பெருவுடையார் கோவில் என்றும் மராட்டிய மன்னர்கள் காலத்தில் பெரிய கோவில் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
 
பரந்த விரிந்து கிடந்த சோழப்பேரரசுக்கு கிடைத்துக் கொண்டிருந்த தாரளமான வருவாய், ஆள்பலம், ராஜ ராஜனின் தீவிர சிவபக்தி போன்றவையே கோவில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்பதற்கு முக்கிய காரணங்களாகும். இதன் கட்டுமானப்பணி கி.பி.1003-ம் ஆண்டில் தொடங்கி கி.பி.1010-ம் ஆண்டில் ஏழு ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளது.
 
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரதான கோவில் தவிர சண்டிகேஸ்வரர், அம்மன், சுப்பிரமணியர், கணபதி, கருவூர்த்தேவர் கோவில்களும் இங்குள்ளன. கோபுரத்தின் மீதுள்ள மிகப்பெரிய விமானமும், 14மீட்டர் உயரம், 7மீட்டர் நீளம், 3மீட்டர் அகலம் கொண்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட நந்தியும் இன்றளவும் நீடிக்கும் ஆச்சரியங்கள். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
 
கோவிலைக் கட்டி முடித்த பிறகும் தனி அக்கறை செலுத்திய ராஜராஜன், கோவிலின் அன்றாடப் பணிகளுக்காக ஏராளமான பூசகர்கள், ஓதுவார்கள், பணியாளர்களை நியமித்துள்ளான். 50ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோவிலில் இருந்ததாக கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன.
 
கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவில்:
 
இது ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோவிலாகும். தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ளது. தஞ்சைப் பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் இது கட்டப்பட்டதாம். தஞ்சைப் பெரிய கோவில் மிடுக்கு என்றால் இது நளினம். அழகும், ஆச்சரியமும் கலந்த புதினம்.
 
கோவில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் நகரத்தின் பின்னணியும் சுவாரஸ்யம் நிறைந்தது. கங்கை உள்பட இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதி முழுவதையும் வென்ற ராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழன் என அழைக்கப்பட்டான். அதன் நினைவாகவே கங்கைகொண்ட சோழபுரம் என இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் சிவன் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனுக்கு பிறகு கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகராகவும் திகழ்ந்துள்ளது.
 
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்:
 
கும்பகோணம் அருகே தாராசுரம் என்ற ஊரில் ஐராவதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் என்றாலும் அவனது முன்னோர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பின்பற்றிய மகேஸ்வர சிவம் (பெரும் கடவுள் சிவனே) என்ற தத்துவம் இங்கு காணப்பட-வில்லை.

மாறாக, பெண்ணின் பெருமையை உணர்த்தும் வகையில் அமைக்கப்-பட்டுள்ளது. இங்கு அம்மனுக்காக தனி சன்னதி உள்ளது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கோவிலின் மேற்கூரைகளிலும், சுவர்-களிலும் நடன மங்கைகளின் சிற்பங்கள் காணப்-படுகின்றன.

 தஞ்சைப் பெரிய கோவில் 1987ம் ஆண்டிலும், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் மற்றும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்கள் 2004ம் ஆண்டிலும் யுனெஸ்கோ சார்பில் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு, இன்றும் வாழும் பெருங்கோவில்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளன.
 
எப்படிப் போகலாம்?
 
சென்னையில் இருந்து தஞ்சாவூர் சுமார் 350 கி.மீ தூரம். முக்கிய நகரங்களில் இருந்து தஞ்சாவூருக்கு நல்ல சாலை வசதி உண்டு. ரயில்நிலையம் அமைந்துள்ளது. திருச்சியில்

சோனி நிறுவனம் எக்ஸ்பெரிய சி ஸ்மார்ட்போன் ரூ.21.490 விலையில் அறிமுகம்!




சோனி நிறுவனம் இந்திய சந்தையில் அதன் சமீபத்திய phablet, எக்ஸ்பெரிய சி ரூ.21.490 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனத்தின் எக்ஸ்பெரிய சி வாங்கிய தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு ஆக்சிடென்டல் டேமேஜ் கவர் உடன் வருகிறது என்று தெரிவித்துள்ளது.


எக்ஸ்பெரிய சி ஸ்மார்ட்போன் வாங்கியதை தொடர்ந்து முதல் இரண்டு மாதங்களுக்கு, 1GB இலவச தரவு அணுகல்(data access) ஏர்டெல் உடன்-இணைந்து சோனி வழங்குகின்றது. இந்த மாத தொடக்கத்தில், சாதனம் சில ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் ரூ.20.490 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளன.


எக்ஸ்பெரிய சி அம்சங்கள், மீடியா டெக் MTK6589 Quad-core செயலி, 1.2GHz, 5 அங்குல டிஎஃப்டி எல்சிடி qHD (540x960 பிக்சல்) காட்சி மற்றும் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. இது 1GB ரேம் மற்றும் 4GB உள்ளக சேமிப்பு கொண்டுள்ளது. இது மேலும், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது.


சோனி எக்ஸ்பெரிய சி டூயல் சிம் ஸ்மார்ட்போன் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) உள்ளது. எக்ஸ்பெரிய சி Exmor R சென்சார் உடன் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. இந்த கேமராவில் முகம் கண்டறிதல்(face detection) மற்றும் ஸ்வீப் பனோரமா(Sweep Panorama) போன்ற அம்சங்களுடன் வருகிறது, மேலும் முழு எச்.டி. (1080) முறையில் படப்பிடிப்பு வீடியோ திறன் கொண்டுள்ளது.


0.3-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இணைப்பு விருப்பங்களான 3G, Wi-Fi,, DLNA, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜி.பி. எஸ் ஆகியவை உள்ளன. இந்த ஸ்மார்ட்போன், வெள்ளை, கருப்பு மற்றும் ஊதா வண்ண விருப்பங்களில் கிடைக்கும். மேலும், சோனி எக்ஸ்பெரிய சி எஃப்எம் ரேடியோ உடன் ஆர்டிஎஸ்,  வாக்மேன் அப்ளிக்கேஷன் மற்றும் 'திரை பிரதிபலிப்பு(screen mirroring)' ஆகியவை இருக்கும். இந்த சாதனத்தில் 2330mAh பேட்டரி கொண்டுள்ளது.


சோனி எக்ஸ்பெரிய சி முக்கிய குறிப்புகள்:



5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட QHD (540x960 பிக்சல்) டிஸ்ப்ளே
1.2 GHz Quad-core மீடியா டெக் MT6589 ப்ராசசர்
1GB ரேம்
32GB வரை விரிவாக்க கூடிய 4GB உள்ளக சேமிப்பு,
எல்இடி பிளாஷ், Exmor R சென்சார் கொண்ட 8-மெகாபிக்சல் பின்புற கேமரா
0.3-மெகாபிக்சல் முன் கேமரா
microUSB 2.0,
2G,
3G,
Wi-Fi,
DLNA,
ப்ளூடூத் 4.0,
டூயல் சிம் (3G + 2G)
அண்ட்ராய்டு 4.2 (ஜெல்லி பீன்)

Kobo நிறுவனம் இந்தியாவில் இ வாசகர் டேப்லட் அறிமுகம்!





கனடா-தலைமையிடமாக கொண்ட மின் வாசிப்பு சேவை நிறுவனமான Kobo இந்திய சந்தையில் மின்னணு(electronic) வாசிக்க உகந்ததாக நான்கு புதிய டேப்லட் சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 





இந்த சாதனங்கள் ரூ.14,000 முதல் ரூ.8,000 வரை விலையுடையதாக இருக்கும். மேலும், mobi மற்றும் இ பப்ளிஷிங் உட்பட அனைத்து முக்கிய இ புக்ஸ் ஃபார்மேட்ஸ்(formats)-க்கும் ஆதரவு அளிக்கும். நிறுவனம் இந்த புதிய சாதனங்களை நாடு முழுவதும் விற்பனை செய்ய Crossword, WHSmith மற்றும் Croma உடன் இணைந்துள்ளது. 





Kobo Touch, Kobo Glo, Kobo Arc மற்றும் Kobo Aura  HD என்று பெயரிடப்பட்டுள்ளது புதிய சாதனங்களில் Wi-Fi மட்டுமே துணைபுரியும், இதில் மொபைல் நெட்வொர்க் துணைபுரிவதில்லை. இந்த சாதனங்கள் மின் வாசிப்பதற்க்காக மட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. Kobo Aura HD ரூ.13.999 விலையிலும், Kobo Touch, ரூ.7.999 விலையிலும் கிடைக்கும் என்று இந்திய நாட்டின் இயக்குனர் ஹாஜா ஷெரீஃப் கூறியுள்ளார்.

நுரையீரல் புற்று நோய் : டீடெய்ல் ரிப்போர்ட்!

நாய் நன்றியுள்ள பிராணி, செல்ல பிராணி, மோப்பம் பிடிக்கும், குற்றவாளிகளை அடையாளம் காட்டும், வேலை செய்யும், வீட்டை காக்கும் இப்படிதான் சொல்கின்றனர். ஆனால், மனிதர்களின் மூச்சுக்காற்றை வைத்து நுரையீரல் புற்றுநோயை கூட கண்டுபிடித்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும?


நாய்களை வைத்து ஜெர்மனியில் உள்ள சில்லர்ஹோகி மருத்துவமனை விஞ்ஞானிகள் பல ஆண்டாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மனிதர்களை பாதிக்கும் நோய்களை மருத்துவக் கருவிகள் மூலம் கண்டறிவது போல், நாய்கள் மூலம் நோய் பாதிப்பை கண்டறிய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்த போது மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத வாசனையை கூட மோப்ப ஆற்றலால் நாய்கள் கண்டுபிடிக்கின்றன. சரியான பயிற்சி அளித்தால் மனிதர்களின் நோய் பாதிப்பை கூட ஆரம்பத்திலேயே நாய்கள் கண்டுபிடித்து விடும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.


18 -Lung-Cancer-Symptoms


 


குறிப்பாக புற்றுநோயை நாய்கள் துல்லியமாக கண்டுபிடிக்கின்றன. புற்றுநோய் பாதித்த மனிதர்களின் மூச்சுக் காற்றுக்கும், ஆரோக்கியமான மனிதர்களின் மூச்சுக் காற்றுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. புற்றுநோய் பாதித்தவர்களின் மூச்சு காற்றில் உள்ள ரசாயன வாசனையை வைத்து மோப்ப நாய்கள் நோயாளியை கண்டுபிடிக்கின்றன என்று தெரிய வந்தது. 


இதற்கிடையில் புற்று நோய் வகைகளை நாம் அறிந்து கொள்ளும் முன் நுரையீரலின் அனாடமி எப்படி செயல்படுகிறது போன்றவை பற்றி அறிதல் முக்கியம்.


நுரையீரல் உடலுக்கு சக்தியை தரும் ஆக்சிஜனை எடுத்துக் கொள்வதிலும் கரியமிலவாயுவை வெளியேற்றுவதிலும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22 ஆயிரம் முறை மூச்சு விடும் நாம், கிட்டத்தட்ட 9 ஆயிரம் முறை காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.


மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும காற்று, காற்று குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. காற்றுக் குழாய் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது.


இரண்டாக பிரியும் பிரான்கியல் குழாய்கள் பல நுண் கிளைகளாக பிரிந்து அல்வியோல் எனப்படும் காற்றுப் பைகளில் முடியும். பல நுண்ணுயிர்க்குழாய்களாக பிரிந்து இருக்கும். அல்வியோலை எனப்படும் காற்றுப் பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டது.


இதில் பல நுண்ணிய ரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமணி மூலமாக வந்த கரியமிலவாயு நிறைந்த ரத்தத்தில் உள்ள கரியமிலவாயு வெளியேறி, ஆக்சிஜனை ஏற்றுக் கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது.


பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற திரவம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக் குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற நாம் அறியாமலே அவற்றை விழுங்கி விடுகிறோம்.


உடல்நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கிலேயே உள்ள ரோமம் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் ஆகியவை நீக்குதலிலும் ஈடுபடும்.


புற்றுநோய்க்கான புற காரணிகள்:-


காற்றில் உள்ள தூசு, இயந்திரங்கள் வெளியேற்றும் புகை, சிகரெட் புகை ஆகியவை ஆச்பெச்டாஸ் போன்றவை நுரையீரல் புற்றுநோய் வர முக்கிய காரணிகளாக இருக்கின்றன.


சில வீடுகளில் புகை நிறைந்த எரிபொருள் சமைக்க பயன்படுத்துவது காற்றினை மாசுபடுத்துகிறது. குளிர் காலத்தில் இதுபோன்ற புகை வீட்டிற்குள்ளேயே சுற்றுவதால் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்த வரையில் என் வீட்டிலேயே பலவகை எரிபொருட்களை பயன்படுத்தி இருக்கிறோம். (காகிதம், மரத்தூள், விறகு, வரட்டி பின் கெராசின் என்று பல பொருட்களை பயன்படுத்தி இருக்கிறோம்) இன்னும் சில பெண்கள் புகையை ஊதுகுழலை வைத்து ஊதி கண்சிவக்க இருமுவதையும், புகையை உள்ளிழுப்பதையும காணலாம்.



இதற்கு அடுத்தப்படியாக கட்டிடங்கள் கட்டிய பின்வரும் தூசிகள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை துணுக்கள் என்று பலவும் உடல்நலத்தை பாதிக்கிறது. வீடுகளில் உள்ள காற்றில் கலந்திருக்கும் பொருட்களில் கார்பன் டை ஆக்சைடு, பார்மால்டிஹைட், நைட்ரஜன் பெராக்சைடு, கார்பன் மோனோ ஆக்சைடு, ரேடான் எனப்படும் ரேடியோ கதிர்வீச்சு, பாசி, என்னும் நுண்ணுயிர் கிருமிகளின் முட்டைகள் என்பன சில முக்கியமானவை ஆகும்.


ஒருவர் புகை பிடிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் காற்றின் விளைவால் வருடத்திற்கு 1,50,000 குழந்தைகள் முற்றிய நுரையீரல் நோயால் பாதிக்கப்படுவதோடு ஆண்டொன்றுக்கு 3 ஆயிரம் குழந்தைகள் இறக்கிறார்கள்.


உலகளவில் இது இன்னமும் அதிர்ச்சியூட்டும் எண்களை தரலாம். புகை பிடிப்பவரின் அருகில் இருப்போருக்கு கண் எரிச்சலும், இருமலும் ஏற்படுகிறது. இவர்களையும் மருத்துவ உலகு அழைக்கிறது.


இதற்கிடையில் நுரையீரல் புற்று நோய்க்கு காற்று மாசுபடுவதே காரணம் என தற்போது உலக சுகாதார மையம் அறிவித்துள்ளதும இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகி விட்டது. அதாவது நுரையீரல் புற்று நோயினால் ஆண்டுக்கு 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்ற தகவல் 2010–ம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. எனவே சர்வதேச புற்று நோய் ஆராய்ச்சி கழகம் இந்த நோய் எதனால் ஏற்படுகிறது. என கண்டறிய சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.


அதன் ஆய்வறிக்கை 5 கண்டங்களை சேர்ந்த 1000 நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் பெரும்பாலானவை காற்று மாசுபடுவதே நுரையீல் புற்று நோய் வர காரணம் என தெரிவித்துள்ளது.


தற்போது தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. அதில் இருந்து வெளியாகும் ரசாயன நச்சு கழிவுகள் காற்றில் கலக்கின்றன. அவற்றை சுவாசிப்பதன் மூலம் நுரையீரல் புற்று நோய் ஏற்படுகிறது.


காற்றில் பரவியுள்ள மாசுவே இந்த புற்று நோய் ஏற்பட தூண்டுகோலாக உள்ளது. காற்றின் மாசு நுரையீரலை மட்டுல்ல இருதயத்தையும் பாதித்து அங்கும் பலவித நோய்களை உருவாக்குகிறது.


தொழிற்சாலைகள் பெருகி வரும் நாடுகளில் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் நுரையீரல் புற்று நோய் ஏற்பட காற்று மாசுபடுவதே காரணம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.புகையிலை மற்றும் அல்ட்ரா நீல கதிர்களாலும் நுரையீரல் புற்று நோய் உருவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாட் பல்பை எரிய விட்டால் இன்டர்நெட் கனெக்சன்! -சீன கண்டுபிடிப்பு!

இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பலப்’ மூல்ம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.


19 - tec bulb internet

 


ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.
விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த ‘லைபை’ குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் நவம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்த ‘லைபை’ அறிமுகம் செய்யப்படுகிறது. 


வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது. மலிவு விலை பொருட்களை கண்டுபிடி த்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் ‘லைபை’ கண்டுபிடிப் பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது. 



சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ‘வைபை’யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான ‘லைபை’க்கு மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா. 


A light bulb could be your next wireless router
 

 Beijing: Chinese scientists have successfully developed a cheaper way of getting connected to internet by using signals sent through light bulbs instead of radio frequencies as in ‘Wi-Fi’, a move expected to radically change process of online connectivity.

நகத்திலேயே தெரியும நம் உடலின் ஆரோக்கியம்!

உலகம் முழுவதும் பலர் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப்பின் வெளிப்பாடுதான். காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் சிலர் இதுபோன்று செய்கின்றனர். இதை மனநல பாதிப்பில் சேர்க்கலாம் என அமெரிக்க மனநல சங்கத்தை சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




19 - health nails.


அதே சமயம் எப்போதாவது நகம் கடிப்பவர்கள் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிவிட முடியாது. இந்த பழக்கத்தால் வலி ஏற்படும் அளவுக்கு ஒருவர் நடந்துகொண்டால் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கருதலாம் என்று தெரிவிகிறார்கள். இது மட்டுமல்லாமல் நகம் கடிப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல், உடல்நிலை பாதிக்கப்படுதல் போன்றவை ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



இன்றும் கூட பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை வ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.



ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது. ஏதேனு‌ம் ஒரு உட‌ல் உபாதை‌க்காக நா‌ம் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்லு‌ம் போது, ‌சில‌ர் ந‌ம் கை ‌விர‌ல்களை ப‌‌ரிசோ‌தி‌ப்பா‌ர்க‌ள். ஏனெ‌னி‌ல் அவ‌ர்க‌ள் ச‌ந்தே‌கி‌க்கு‌ம் நோ‌ய் நம‌க்கு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்‌பி‌ன் அத‌ற்கான ஆதார‌ம் நக‌‌ங்க‌ளி‌ல் தெ‌ரி‌கிறதா எ‌‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள‌த்தா‌ன்.



ம‌ஞ்ச‌ள் காமாலை‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களது நக‌ங்க‌ள் ‌மஞ்ச‌ள் ‌ நிற‌த்‌தி‌ல் இரு‌ப்பதே இத‌ற்கு முத‌ல் உதாரண‌ம். அதுபோல தொட‌ர்‌‌ந்து புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு, அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பை பழு‌ப்பு ‌நிற நக‌ங்க‌ள் வ‌ெ‌ளி‌ப்படு‌த்து‌கி‌ன்றன.உட‌ல்‌நிலை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சில த‌ற்கா‌லிக பா‌தி‌ப்புக‌ளினா‌ல், நக‌ங்க‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி‌யி‌ல் கூட மா‌ற்ற‌‌ங்களை ஏ‌ற்படு‌த்து‌ம்.



நக‌ங்களை சு‌த்தமாகவு‌ம், ச‌ரியான அள‌வி‌ல் வெ‌ட்டி ‌விடுவது‌ம் ஒ‌வ்வொருவரு‌ம் நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்காக செ‌ய்யு‌ம் செயலாகு‌ம். ஒருவரது உட‌லி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து‌க் குறைவாக இரு‌ப்‌பி‌ன், ந‌க‌ங்க‌ள் உடைவது அ‌ல்லது ப‌ட்டையாக ‌வி‌ரி‌ந்து வள‌ர்வத‌ன் மூல‌ம் அ‌றியலா‌ம். ‌சிலரு‌க்கு நக‌ங்க‌ளி‌ல் மேடு ப‌ள்ள‌ங்க‌ள் ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம். இதுவு‌ம் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க் குறைபா‌ட்டையே கா‌ட்டு‌கிறது.



இதற்கிடையில்தான் த‌ன்ன‌ம்‌பி‌க்கை குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் நக‌ம் க‌டி‌க்கு‌ம் பழ‌க்க‌‌ம் உ‌ள்ளவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்‌கிறது ஒரு ஆ‌ய்வு.
‌அதே சமயம் வீ‌ட்டி‌ல் வேலை செ‌ய்யு‌ம் பெ‌ண்களு‌க்கு ந‌க‌ம் வள‌ர்வதே ‌இ‌ல்லை எ‌ன்று எ‌ண்ணு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் அது அ‌ப்படி இ‌ல்லை. வேலை செ‌ய்யு‌ம் போது நக‌ம் தே‌ய்‌ந்து அத‌ன் வள‌ர்‌ச்‌சி ந‌ம் க‌ண்களு‌க்கு‌த் தெ‌ரியாமலேயே‌ப் போ‌ய்‌விடு‌கிறது.



மருதா‌ணி இலைகளை அரை‌த்து வை‌க்க‌ப்படு‌ம் மரு‌தா‌ணி ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ல்ல பயனை அ‌ளி‌க்‌கிறது. அதனை முடி‌ந்தா‌ல் செ‌ய்து வரலா‌ம்.‌சில‌ர் அடி‌க்கடி நக‌ப்பூ‌ச்சை பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு. மாத‌த்‌தி‌ல் ஓ‌ரிரு நா‌ட்களாவது நக‌ங்க‌ள் கா‌ற்றோ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம்.  அ‌ப்போதுதா‌ன் அத‌ன் உ‌ண்மையான த‌ன்மையை நா‌ம் அ‌றிய முடியு‌ம்.



மேலு‌ம், நக‌ங்க‌ள் கா‌ய்‌ந்து வற‌ண்ட த‌‌ன்மையுட‌ன் இரு‌ந்தா‌ல் அத‌ற்காக ந‌ல்ல மா‌ய்‌ச்சுரைஸ‌ர் ‌க்‌ரீ‌ம்களை‌ப் பய‌ன்படு‌த்துவது ‌சிற‌ந்தது.‌சிலரு‌க்கு நக‌ங்களே வளராம‌ல் கு‌ட்டையாகவே இரு‌க்கு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்க‌ள் கை ‌விர‌ல்களு‌க்கு மசா‌ஜ் அ‌ளி‌த்து வ‌ந்தா‌ல், ‌விரை‌‌வி‌ல் நக‌ங்க‌ளி‌ல் வள‌ர்‌ச்‌சி ஏ‌ற்படு‌ம். ‌அழகு ‌நிலைய‌ங்களு‌க்கு‌ச் செ‌ன்று பெடி‌க்யூ‌ர், மெ‌னி‌க்யூ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். இதுவு‌ம் ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.



கை‌விர‌ல் நக‌ங்க‌ள் லேய‌ர் லேயராக உடைவதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இத‌ற்கு ‌வீ‌‌ட்டி‌ல் தூ‌ய்மை‌ப்படு‌த்துவத‌ற்காக பய‌ன்படு‌த்து‌ம் சோ‌ப்பு‌த் த‌ன்மை‌யா‌ல் ‌ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வாமையாக‌க் கூட இரு‌க்கலா‌ம். லேய‌ர்க‌ள் ‌ பி‌ரிவ‌தி‌ல் கூட ‌சில ‌வி‌த்‌தியாச‌ங்க‌ள் உ‌ண்டு. ‌சிலவை ‌நீள வா‌க்‌கி‌ல் ‌ பி‌ரியு‌ம். ‌சிலரு‌க்கு கு‌று‌க்காக ‌பி‌ரியு‌ம். நக‌த்‌தி‌ல் உ‌ள்ள நக‌த்த‌ட்டுகளு‌க்கு‌த் தேவையான ‌நீ‌ர்‌த்த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது‌ம் கூட இத‌ற்கு காரணமாக இரு‌க்கலா‌ம்.


‌நக‌ச்சொ‌த்தை ஏ‌ற்பட, நக‌த்‌தி‌ல் ‌மு‌ன்பு எ‌ப்போதாவது ஏ‌ற்ப‌ட்ட காய‌ம் காரணமாக இரு‌க்கலா‌ம். ‌விர‌லி‌ல் அடிபடுவது, இடு‌க்‌கி‌ல் கை‌விர‌ல் ‌ சி‌க்‌கி‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பா‌ல் நக‌ப்படு‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌க் க‌சிவானது, நக‌த் த‌ட்டு‌க்கு அடி‌யி‌ல் த‌ங்‌கி‌விடு‌ம். இதனா‌ல் நக‌ச் சொ‌‌த்தை ஏ‌ற்படு‌கிறது. ‌இ‌ந்த நக‌ச்சொ‌த்தை தானாக ச‌ரியாகவு‌ம் வா‌ய்‌ப்பு‌ள்ளது. ஆனா‌ல் நக‌‌ச்சொ‌த்தை ‌ தீ‌விரமடை‌ந்து, நக‌ப் பகு‌தி‌யி‌ல் வ‌லி ஏ‌ற்படுமா‌யி‌ன், நக‌த்தை ‌பிடு‌ங்க‌ி‌வி‌ட்டு அ‌ப்பகு‌தியை சு‌த்த‌ம் செ‌ய்ய வே‌ண்டியது அவ‌சியமாகு‌ம்.

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 5...!

பதினைந்தாம் நூற்றாண்டு உலக வரைபடம்:
உலக புகழ் பெற்ற கொலம்பஸ் உலக வரைபடம் கி பி 1490 இல் வரையப்பட்டது. அது வரை கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளின் தொகுப்பாக வரையப்பட்ட புகழ் பெற்ற உலக வரைபடம்.
கி பி 1493 இல் வெளியிடப்பட்ட உலக வரைபடம் ஆசியா,ஆப்ரிக்கா,ஐரோப்பா கண்டங்களை தெளிவாக காணலாம்.
கி பி 1436 இல் Andrea Bianco என்ற இதாலியரால் வெளியிடப்பட்ட உலக வரைபடம்.

கி பி 1482 இல் ஜெர்மனியை சேர்ந்த Johannes de Armsshein என்பவரால் வெளியிடப்பட்ட வரலாற்று புகழ் பெற்ற உலக வரைபடம்.
கி.பி 1448 இல் ஜெர்மானியர்களால் வரையப்பட்ட உலக வரைபடம்

 கி பி 1402 இல் கொரியர்களால்(Korea) வெளியிடப்பட்ட உலக வரைபடம் மேலும் ஆசிய கண்டத்தின் பழமையான வரைபடமாகும்.
கி.பி 1457 இல் இதாலியர்களால் வரையப்பட்ட உலக வரைபடம் 

Macrobian World Map, 1483

Isidore of Seville's tripartite world map,1472
(the first printed map in Europe)

T-O map, circa 1500, Venice (Brown)

T-O map from Jean Mansel's La fleur des histoires
(Lambert of St Omer), 15th century

தொடரும்...

சிங்கமும்,மானும்,முயலும்....(நீதிக்கதை)



 
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.ஒரு நாள் அதற்கு இரை கிடைக்காததால் மிகவும் பசியுடன் இருந்தது.



அப்போது...அருகில் இருந்த புதர் ஒன்றில் முயல் ஒன்று தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தது.அதை பிடித்து உண்ணலாம் என்று நினைத்தபோது ....
 

சிறிது தூரத்தில் கொழுத்த மான் குட்டி மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தது.
உடனே முயலை பிடிப்பதை விட்டுவிட்டு ...மான் குட்டியை பிடிக்க விரைந்தது.முயலும் முழித்துக்கொண்டு நடப்பதைப் பார்த்தது.
 

சிங்கம் ஓடி வந்த சப்தத்தைக்க்கேட்டு மான்குட்டி விரைந்து ஓடியது.
நெடுந்தூரம் ஓடியும் மானை பிடிக்க முடியாத சிங்கம் முயலையாவது சாப்பிடலாம் என எண்ணித் திரும்பியது.
 

முயலோ...சிங்கம் திரும்பி வந்தால் தான் இறப்பது உறுதி என அறிந்து அங்கிருந்து ஓடிவிட்டிருந்தது.


முயலும் போய்...மானும் போய் சிங்கம் பசியால் தவித்தது.
"கைப்பிடியில் இருந்த முயலை விட்டுவிட்டு ...பேராசையால் தூரத்தில் இருக்கும் மானை நாடிச் சென்றதால்....உள்ளதும் பறிபோனது' என வருந்தியது சிங்கம்.


நாமும் நம் கையில் உள்ளதை வைத்து திருப்திக் கொள்ளவேண்டும். கிடைக்காததற்கு ஆசைப்படக்கூடாது.
 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top