.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label பேஸ்புக் படங்கள். Show all posts
Showing posts with label பேஸ்புக் படங்கள். Show all posts

Tuesday 31 December 2013

கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!



உறவை உருவாக்குவதாக இருக்கட்டும், உறவை கெடுப்பதாக இருக்கட்டும் சின்னச்சின்ன வார்த்தைகள் தான் காரணமாக இருக்கும். ஆக ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேச வேண்டியது அவசியமாகிறது.


அரட்டை அடிப்பது என்றால் நமக்குள் இயல்பாகவே ஆனந்தம் ஊற்றெடுக்கிறது.


தினமும் புதிய புதிய மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. பணி செய்யும் இடம், நடந்து செல்லும் வழி, பயணம் என ஒவ்வொரு சூழலிலும் பலவிதமான மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அலுவலகங்களிலோ ஆணும், பெண்ணும் இணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது உறவுகள் நீடிக்கவும், உறவுகள் பெருகவும் மென்மையான சின்னச்சின்ன பேச்சுக்கள் அவசியமாகின்றன.


நல்ல முறையில் படித்து, நாகரீகமாக உடை அணிந்து செல்வோர்கூட புதிய மனிதர்களிடம் பேசவும், பழகவும் கூச்சப் படுவது உண்டு. கவுரவக் குறைச்சலாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். பேச்சு கொடுப்பதும், பேசி ஞானத்தை, நட்பை வளர்த்துக் கொள்வதும் நிச்சயமாக ஒரு கலைதான்.


பணிச்சூழலோ, பொது இடமோ கனிவுடன் பேசுபவர்களுக்கு தனி மதிப்பு கிடைக்கும். இதற்கு முதலில் கூச்சத்தை விட்டொழிக்க வேண்டும். புதிய மனிதர்களை சந்திப்பதாக இருந்தால், நான் இங்கு உங்களை அடிக்கடி பார்க்கிறேனே, என் பெயர்... என்று அறிமுகத்துடன் பேச்சைத் தொடங்கலாம். உங்களை சந்தித்ததில் பெருமிதம் கொள்கிறேன், இன்று என்ன சிறப்பு? என்று ஆரம்பிக்கலாம். அலுவலகத்தில் பேசத்தொடங்கும் போது, நீங்கள் எந்தப் பிரிவில் வேலை செய்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள், பயண நேரம் எவ்வளவு? என்று பேச்சுக் கொடுக்கலாம்.


குழுவாக இருக்கும்போது கூச்சப்பட்டு எதுவுமே பேசாமல் இருக்கக்கூடாது. சாதாரணமாக இருந்தாலும் ஒரு சில கேள்விகளை கேட்கலாம். அது மற்றவர்கள் உங்களை கவனிக்க வைக்கும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். அதுபோல உங்களிடம் யாராவது பேச்சுக் கொடுத்தாலும், `ஒன்றுமில்லை' என்று ஒரு வார்த்தையில் பேச்சை முடித்துக் கொள்ளாதீர்கள்.


புதியவர்களுடன் பழக ஆரம்பிக்கும்போது நம்பிக்கை இல்லா தன்மையுடன், அல்லது வேண்டா வெறுப்பாக பேசுவதாக எண்ணிக் கொண்டு சிடுசிடுப்பாகவும், சில விஷயங்களில் பிடிவாதமும் காட்டுவது உங்களைப் பற்றிய தவறான தோற்றத்தை உருவாக்கி விடக்கூடும். அது பின்னால் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். மென்மையாகப் பேசுங்கள். நான் சொல்வது உண்மை என்று நம்ப வைக்கும் முயற்சியில் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கொண்டு இருக்காதீர்கள்.


உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்ளாமலும், நீண்ட லெக்சரும் கொடுக்காமல் சுருக்கமாக தெளிவாக சொல்லுங்கள். அதாவது ஒருவர் உங்களிடம் `உங்கள் பொழுதுபோக்கு என்ன?' என்று கேட்டால், `நான் புத்தகங்கள் படிப்பேன்' என்று முடித்து விடாதீர்கள். `நான் புத்தகங்களை விரும்பி படிப்பேன். நாவல்கள், கவிதைகள், தலைவர்களின் சுயவரலாறுகளை எனக்கு மிகவும் பிடிக்கும்` என்று சொல்லுங்கள்.


அப்படி இருந்தால் தான் அவர் நீங்கள் தாகூரின் கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா, பாரதியின் கவிதைகளை படித்திருக்கிறீர்களா? என்பதுபோல தொடரவும், அவரும் உங்களைப் போன்ற விருப்பம் உடையவராக இருந்தால் உங்களுக்கிடையே நெருங்கிய நட்பு மலரவும் உறுதுணையாக இருக்கும்.


நிகோலஸ் போத்மேன் என்பவர் தன் நூலில், மக்களில் 90 சதவீதத்தினர் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்பதில்லை. ஆனால் அவர்கள் செய்வதையும், எப்போது என்ன செய்வார்கள் என்பதையும் கவனிக்கிறார்கள்' என்கிறார். எனவே ஒருவரது உடல் அசைவுகளும், செய்கைகளும் பேச்சுத் திறமைக்கு மிக முக்கியமானது. நீங்கள் கருத்துச் செறிவுடன் பேசும்போது அங்க அசைவிலும் கவனம் செலுத்துங்கள்.


ஒருவருடன் பேசும்போது அவருக்கு பக்கவாட்டில் நின்றோ அமர்ந்தோ பேசுவதை தவிர்த்து விடுங்கள். நேருக்கு நேராக இருந்து கண்களைப் பார்த்தபடி பேசுங்கள். அப்போதுதான் உங்கள் பேச்சின் பிரதிபலனை உணர முடியும்.


பேச்சினை எப்போது நிறுத்த வேண்டும் என்பதுவும் பேச்சுத்திறமையில் குறிப்பிடத்தக்க விஷயம். வளவளவென்று பேசிக் கொண்டிருந்தால் கேட்பவருக்கு சலிப்பு வந்துவிடும். கேட்டுக் கொண்டிருப்பவர் உங்கள் பேச்சை விரும்புகிறாரா என்பதை சில விஷயங்களை வைத்து கணித்து விடலாம். `ஓ அப்படியா, நன்றாக இருக்கிறது? தொடர்ந்து சொல்லுங்கள்' என்றால் அவர் விருப்பத்துடன் கேட்கிறார் என்று பொருள். சரி..., அப்படியா..., சரி வேற... என்று கூறினால் அவருக்கு உங்கள் பேச்சில் விருப்பமில்லை என்று அர்த்தம்.


அவர் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருப்பதும், கை, மூக்கு, தலையை சொரிந்து கொண்டு இருந்தாலும், நடக்கும்போது கால்களை தரையில் உரசியபடி நடந்து வந்தாலும் உங்கள் பேச்சில் நாட்டமில்லை என்று பொருள்.


எனவே கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!

Monday 11 November 2013

பேஸ்புக் லைக் வசதியில் மாற்றம்!

தற்போது இணையத்தளங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் தம்மை பிரபலப்படுத்திக்கொள்வதற்காக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்தி வருகின்றமை மறுக்க முடியாத ஒன்றாகும்.


இதற்காக பேஸ்புக் ஆனது லைக் பேஜ் வசதியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வசதியில் இதுவரை காலமும் காணப்பட்ட கைவிரல் அடையாளம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.


நாள்தோறும் சுமார் 22 பில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் இந்த கைவிரல் அடைய பொத்தானை கிளிக் செய்து வந்ததோடு, 7.5 மில்லியன் வரையான இணையத்தளங்களில் இவை இணைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Sunday 10 November 2013

ஃபேஸ்புக்கில் இணைந்த ஷங்கர்!

 

தன் இணைய தளத்தினைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் பேஸ்ஃபுக் தளத்தில் இணைந்திருக்கிறார்.

எந்தொரு படத்தினை இயக்கி வந்தாலும், அப்படத்தினைப் பற்றிய செய்தியை தனது இணையத்தில் (http://www.directorshankaronline.com/) அவ்வப்போது செய்தியாகவும், புகைப்படமாகவும் வெளியிட்டு வந்தார் இயக்குநர் ஷங்கர்.

தற்போது அந்த இணையத்தினைத் தொடர்ந்து, பேஸ்ஃபுக் தளத்திலும் இணைந்திருக்கிறார். அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/shankarofficial
தனது ஃபேஸ்புக் இணையத்தில், “ஃபேஸ்புக்கி இணையலாம் என்று முடிவெடுத்து இணைந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது, தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். எனது பெயரில் நிறையப் பேர் போலியாக இயங்கி வருகிறார்கள். இதுவே எனது அதிகாரப்பூர்வ பக்கம்.

'ஆரம்பம்' படம் பார்த்தேன். முழுமையான பொழுதுபோக்குப் படம்! அஜித் மிகவும் அழகாக இருக்கிறார். யுவனின் பின்னணி இசை சிறப்பாக இருந்தது. ஏ.எம்.ரத்னம் சாரை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படக்குழுவிற்கு எனது பாராட்டுக்கள்.” என தெரிவித்துள்ளார்.

Wednesday 6 November 2013

மங்கள்யான் தகவல்களை அபடேட்டாக அறிய பேஸ்புக் பேஜ் தொடங்கியது இஸ்ரோ!

மங்கள்யான்’ விண்கலத்தின் பயணம் மற்றும் ஆய்வுகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கும் வகையில் இஸ்ரோ (ISRO’s Mars Orbiter Mission) என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

                          nov 6 -= tec isro

செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆராய மங்கள்யான் செயற்கைக் கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இது திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் இணைந்துள்ளது. சிக்கலான மங்கள்யான் திட்டம் சரியான பாதையில் செல்கிறது என்று தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் மங்கள்யான்’ விண்கலத்தின் பயணம் மற்றும் ஆய்வுகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கும் வகையில் இஸ்ரோ (ISRO’s Mars Orbiter Mission) என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபற்றி அவர் கூறும்போது ‘மங்கள்யான்’ விண்கலம்,அடுத்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அன்றிலிருந்து 6 மாதங்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளவுள்ள பல்வேறு ஆராய்ச்சிகள் குறித்த தகவல்கள் மார்ஸ் மிஷன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் என்றார்.
இந்த ஃபேஸ்புக் பக்கத்தில், 2 மணி நேர இடைவெளியில் புதுப்புது தகவல்கள் பதிவு செய்யப்படும். ஃபோட்டோக்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும் என்றார். பொதுமக்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூரவ் இணையதளமான www.isro.gov.in – வாயிலாக மார்ஸ் மிஷன் ஃபேஸ்புக் பக்கத்திற்கு செல்லலாம் என்றார்.


லிங்க் ::https://www.facebook.com/pages/ISROs-Mars-Orbiter-Mission/1384015488503058

Monday 14 October 2013

சச்சினை கொண்டாட பத்து இணையதளங்கள்!.

எப்போது? எப்போது? என கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருமே எதிர்பார்த்திருந்த‌து தான்:ஆனால் யாருமே விரும்பாதது நிகழ்ந்திருக்கிறது. 200 வது டெஸ்ட்டுடன் ஓய்வு பெற போவதாக கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அறிவித்திருகிறார்


24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் தான் எல்லாமுமாக இருந்திருக்கிறார். கிரிக்கெட்டுக்கு மட்டுமா, கிரிக்கெட்டை ஒரு மதமாக கருதும் தேசத்தில் அவரது சாதனைகள் ஏமாற்றங்களுக்கும் சோதனைகளுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளன.சச்சின் மைதானத்தில் சுடர்விட்ட நாட்களில் எல்லாம் நூறு கோடி மக்களை கொண்ட தேசமே தனனை மறந்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிற‌து.

13 - sachin god

 


இந்திய கிரிக்கெட்டில் ,ஏன் உலக கிரிக்கெட்டில் வேறு எந்த வீரரையும் விட அதிகமாக சாதித்து அதைவிட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்திய டெண்டுல்கரை கொண்டாடி மகிழும் வகையில் அவரைப்பற்றிய பத்து சிறந்த இணையதளங்களை இங்கே தொகுத்திருக்கிறோம.


1. சச்சின் வாக்கு.( http://www.brainyquote.com/quotes/authors/s/sachin_tendulkar.html)


எண்கள் தான் சச்சனுக்கு நெருக்கமானவை. டெஸ்ட்டிலும் ஒரு நாள் போட்டிகளிலும் அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகளின் எண்ணிக்கை ,சச்சின் எனும் கிரிக்கெட் அற்புதத்துக்கு சாட்சி. ஆனால் சாதனைகளை விட வியப்பை ஏற்படுத்தும் விஷயம் சச்சினின் பணிவு.கிரிக்கெட்டில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு. சச்சினின் வார்த்தைகள் மூல்மே இவை பலமுறை வெளிப்பட்டுள்ளன. பல்வேறு பேட்டிகளில் சச்சின் கூறிய கருத்துக்கள் மேற்கோள்களாக புகழ் பெற்ற பிரைனிகோட்ஸ் தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு இந்த மேற்கோளை பாருங்கள்; “என் வாழ்க்கை முழுவதும்,பள்ளியில் கூட, நான் ஓடுவதற்கு யாரையும் வைத்து கொண்டது இல்லை, காரணம் பந்தை அடிக்கும் போது அது எத்தனை உறுதியாக் செல்லும் ,எங்கே செல்லும் என்று எனக்கு மட்டுமே தெரியும்,ஓடுபவருக்கு தெரியாது”. மேலும் பல சச்சொஇன் மொழிகளை இங்கே படித்து சச்சின் எனும் மனிதரின் மகத்துவத்தை வியந்து போற்றுங்கள்.


2. சச்சின் பற்றி ஒபாமா.


சச்சின் பற்றி பாராட்டாத கிரிக்கெட வீரர்கள்,விமரசகர்களே கிடையாது.மேத்யூ ஹைடன் “நான் கடவுளை பார்த்திருக்கிறேன் அவர் இந்திய அணியில் நான்காவது நிலையில் ஆடுகிறார் ” என கூறியது அவரைப்பற்றிய மேர்கோள்களின் சிகரம். சரி அமெரிக்க அதிபர் ஒபாமா சச்சின் பற்றி கூறியிருக்கிறாரா? இப்படி ஒரு சுவாரஸ்யமான கேள்வி புகழ்பெற்ற கேள்விபதில் தளமான குவோராவில் எழுப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கான பதில் இல்லை என்பதே. குவோராவில் சச்சின் பற்றி கேட்க்ப்பட்டுள்ள மற்றொரு கேள்வி ‘சச்சின் இஸ்லாமியராக இருந்திருந்தால் இந்த அளவுக்கு கொண்டாடப்பட்டிருப்பாரா? என்பது. இந்த கேள்விக்கான பதில் இந்தியாவின் பெருமையை உணர்த்துகிறது. ஆம் என்பதே அந்த பதில் விரிவான பதிலுக்கு பார்க்க… ( http://www.quora.com/If-Sachin-Tendulkar-were-a-Muslim-would-he-get-the-same-adulation)


3.சச்சின் \பிராட்மேன்.


கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் சச்சின் பல மக்த்தான வீரரோடு ஒப்பிட்டு பேசப்பட்டுள்ளார். லாரா, பாண்டிங் என நீளும் இந்த பட்டியலில் அதிக அளவில் இடம் பெறுவது கிரிக்கெட் பிதாமகன் பிராட்மேன் தான். சச்சின்\பிராட்மேனில் யார் சிறந்தவர். இந்த ஒப்பீட்டுக்கு எண்ணிக்கைகளால் பதில் அளிக்கிறது தி ரோர்.காம் கட்டுரை. பிராட்மேனே சிறந்தவர் என புள்ளிவிவர ஒப்பீட்டால் இந்த கட்டுரை நிறுவினாலும் அது ஒரு பகுதி உண்மையே என்பதை இதில் இடம்பெறாத சச்சினின் சாதனைகள் சொல்லும். ( http://www.theroar.com.au/2011/02/28/sachin-tendulkar-and-don-bradman-theres-no-comparison/)


4. யார் இந்த சச்சின்?


சச்சின் யார் என்று யாரேனும் கேட்பார்களா? இன்டெர்ட்டில் கேட்டிருக்கின்றனர். ஆனால் இதில் கோபப்பட ஏதுமில்லை. கிரிக்கெட்டை அதிகம் அறியாதவர் கூட சச்சின் பற்றி கேள்விபடும் நிலை இருப்பதால் , சச்சினை அறியாதவர்களுக்கு அவரை அறிமுகம் செய்வதற்காக இந்த கேள்விகளும் பதில்களும் . ( http://www.ask.com/question/sachin-tendulkar-homepage)


5. சச்சின் சாதனை படங்கள்.


சச்சினின் கம்பீர புகைப்படங்களை பார்த்து ரசிப்பதை வித சச்சின் அபிமானிகளுக்கு உற்சாகம் தரக்கூடியது எது? அல்ஜசிரா சச்சினின் மிகச்சிறந்த புகைபப்டங்களை தொகுத்து தந்திருக்கிறது. ( http://www.aljazeera.com/indepth/inpictures/2013/10/cricket-tendulkar-announces-retirement-20131010135416699995.html)


6. சச்சின் வீடியோ.


சச்சின் பேட் செய்வதை பார்ப்பதை விட பரவ‌சம் ஏது. சச்சின் பற்றிய யூடியூப் வீடியோ தொகுப்பு இந்த பரவசத்தை தருகிறது. (http://www.youtube.com/channel/HCESYF1LiffFய் ) இதே போல் ஒரு நாள் போட்டியில் சச்சின் இரட்டை சதத்தை கண்டு மகிழ‌… http://www.youtube.com/watch?v=aGNSU_Y_5IM


7. என்ன ஒரு வீரர்.


சச்சின் ஓய்வு பெற்றது பற்றி கிரிக்கெட் பிரபலங்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு. (http://www.thatscricket.com/news/2013/10/10/who-said-what-on-sachin-s-retirement-069501.htm )


8. சச்சின் சரிதை.


சச்சின் பற்றி விக்கிபீடியா கட்டுரை விரிவாக இருக்கிற‌து. கிரிகின்போ அறிமுகம் புள்ளிவிவரங்களை துல்லியமாக தடுகிறது. திரைப்பட களஞ்சியமான ஐஎம்டிபியிலும் சச்சின் பற்றிய அறிமுகம் இருக்கிற‌து தெரியுமா? (http://www.imdb.com/name/nm1340094/ )


9. சச்சின் விமர்சிக்கப்படுவது ஏன்?


சச்சின் கொண்டாடப்படுகிறார். ஆனால் அவர் விமர்சனத்திற்கும் ஆளாகியிருக்கிறார். சச்சின் விமர்சிக்கப்படுவது ஏன்? இந்த கேள்விக்கு உளவியல் நோக்கில் பதில் தருகிறது இந்த வலைப்பதிவு. ( http://senantixtwentytwoyards.blogspot.in/2011/10/why-do-people-criticise-sachin.html)


10.சச்சினுக்கு பிறகு?


ஒவ்வொரு கிரிக்கெட ரசிகனும் கேட்கும் கேள்வி தான். இந்த கேள்விக்கான கொஞ்சம் சுவாரஸ்யமான பதில் இதோ… http://cricketwithballs.com/2011/07/23/after-sachin/
சச்சின் பற்றி செயலிகளும் அநேகம் இருக்கின்றன. அவை பற்றி தனிப்பதிவே எழுதலாம்.

Tuesday 8 October 2013

பிரம்மாண்டமாக உருவாகுகிறது Facebook Town!



இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் இல்லை என்றால் எதுவே இல்லை என்று கூறும் அளவுக்கு மக்கள் அடிமையாகி உள்ளனர்.உலகளவில் பிரபலமான சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் முதலிடம் வகிக்கிறது.


இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம், சேன்பிரான்சிஸ்கோவில் உள்ள St.Anton என்ற பில்டிங் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய டவுனை உருவாக்க உள்ளது.


பேஸ்புக்கில் வேலை செய்யும் ஊழியர்களுக்காக இங்கு வீடு கட்டப்படுகிறது.
இதன் மதிப்பு 120 மில்லியன் டொலர் ஆகும். Anton menlo என்ற பெயர் கொண்ட இந்த பிராஜெக்டில் 208 சிங்கிள் பெட் ரூம் அப்பார்ட்மென்ட், 139 டபுள் பெட் ரூம் அப்பார்ட்மென்ட் மற்றும் பேஸ்புக்கில் உள்ள உயர் அதிகாரிகளுக்காக 12 டிரிபுள் பெட் ரூம் அப்பார்ட்மென்ட் கட்டப்பட உள்ளது.


மேலும் 35 ஸ்டூடியோக்கள், ஸ்விம்மிங் பூல், ஸ்பா, காம்பிளக்ஸ்கள் என அனைத்தும் இதில் அடங்கும்.



Thursday 26 September 2013

இந்திய விஞ்ஞானி புது கண்டுபிடிப்பு விண்ணில் கருங்குழி மர்மம் நீங்குமா?




 விண்ணில் ‘இறந்த’ நட்சத்திரங்களால் உருவாகும் கருங்குழிகள் பற்றி நீடிக்கும் மர்மத்தை உடைக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் பெங்களூர் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.   அண்டவெளியில் பூமி உட்பட பல கோள்கள் உள்ளன. பல லட்சம் சூரியன்கள், நிலாக்கள், நட்சத்திரங்கள் என்று பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருக்கின்றன. இந்த நட்சத்திரங்கள் எல்லாம் அதன் அணுசக்தியை இழக்கும் போது ‘இறந்த’ நட்சத்திரங்களாகி விடுகின்றன. விண்ணின் பால்வெளி மண்டலத்தில் இப்படி சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் பரவி கிடக்கும் நிலையில், இந்த ‘இறந்த’ நட்சத்திரங்கள் எல்லாம் கருங்குழியாகி விடுகின்றன. இந்த கருங்குழி, பல சூரியன்களின் ஒளியை தன்னுள் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. ஆல்பர்ட் ஈன்ஸ்டின் புவிஈர்ப்பு கோட்பாட்டுக்கும் இந்த கருங்குழிகளுக்கும் ஒரு வகையில் இயற்பியல் ரீதியாக ஒரு ஒற்றுமை இருக்கிறது  என்று இந்தியா உட்பட பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.


கருங்குழி பற்றி முதன்  முதலில் உண்மைகளை கண்டுபிடித்து சொன்னவரே, நம் நாட்டு தமிழ் விஞ்ஞானி சந்திரசேகர் தான். அதற்காகவே அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.   இறந்த நட்சத்திரம் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, கருங்குழியாகவோ ஆகி விடும் என்று முதன் முதலில் கண்டுபிடித்தவர் இவர். இதனால் இந்த கண்டுபிடிப்புக்கு சந்திரசேகர் லிமிட் என்றும் பெயர் வைக்கப்பட்டது.   இந்த நிலையில், கருங்குழி பற்றிய மர்மம் நீடித்து வருகிறது. இந்த குழிகள் சிறியது தானா, அதன் ஆழம் என்ன, அதன் ஈர்ப்பு சக்தி  என்ன? ஒலி, ஒளியை தன்னுள் விழுங்கும் போது நடப்பது  என்ன? பல சூரியன்கள் ஒளியை கொண்டது  என்பது சரியா? என்பது பற்றி எல்லாம் மர்மம் நீடிக்கிறது.   சாதாரண கண்களுக்கு இந்த கருங்குழி தெரியாது. டெலஸ்கோப் மூலமும் கண்டுபிடிப்பது சிரமம் தான். நுணுக்கமாக ஆராய்ந்தால் பால்வெளியில் ஏதோ கரும்புள்ளி போல தான் தெரியுமாம். பெங்களூர் நகரில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ள பானிப்ரத்தா முகோபாத்யை இந்த கருங்குழி ஆய்வில் புதிய உண்மையை கண்டுபிடித்துள்ளார்.  



 இரண்டு ஆண்டாக மேற்கொண்ட ஆய்வில், அண்டவெளியில் உருவாகும் கருங்குழி தன்னை சுற்றிய ஒலி, ஒளி மற்றும் நட்சத்திர துகள்கள் எல்லாவற்றையும் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் சக்தி படைத்தது. இது மட்டுமின்றி, இதை சுற்றிய சுழற்சி, நட்சத்திர எரி துகள்கள் போன்ற பொருட்கள் ஆகியவற்றை வைத்து  குழியின் ஆழம், சுழற்சி வேகத்தை கணக்கிடலாம். மேலும், குழியை சுற்றிய சுழற்சி வலை மற்றும் பொருட்கள் தனியாக இயங்குவதில்லை. ஒன்றுக்கொன்று பிணைந்தது என்பது தான் பானிப்ரத்தாவின் கண்டுபிடிப்பு.  இந்த கண்டுபிடிப்பு மூலம்,  கருங்குழி பற்றிய ஆராய்ச்சிகளில் புதிய தெளிவு கிடைத்துள்ளதாக அமெரிக்க, பிரிட்டன் இயற்பியல் விஞ்ஞானிகள் பாராட்டியுள்ளனர். ‘நட்சத்திரங்கள் எப்படி நொறுங்கி அழிகின்றன, கருங்குழியாகின்றன என்பதற்கு இந்த ஆராய்ச்சி உதவும்’ என்று விஞ்ஞானி பானிப்ரத்தாவுக்கு உதவியாக இருந்த ஆராய்ச்சி மாணவி இந்திராணி பானர்ஜி கூறினார்.



அதென்ன கருங்குழி?


* பூமி, சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்தது தான் இந்த அண்டவெளி. 


* விண்ணில் பரந்து கிடக்கும் பால்வெளியில் உள்ளது தான் சூரியன், நிலா, நட்சத்திரங்கள்.


* இந்த நட்சத்திரங்கள் தன்னுள் உள்ள அணு எரிசக்தியை இழக்கும் போது ‘இறந்ததாக’ கருதப்படுகின்றன.
 

* அப்படி இறந்த பின் அவை என்னவாகின்றன என்பது மர்மமாக இருந்தது.
 

* அவை, கருங்குழியாகிவிடுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.
 

* கருங்குழி ஈர்ப்பு சக்தி கொண்டது. தன்னை சுற்றிய பொருட்களை ஈர்த்துக்கொள்ளும்.
 

* சுழலும் அணு துகள்கள், பொருட்கள் வேகம் பற்றிய ஆய்வு தொடர்ந்து மர்மமானது.
 

* கருங்குழி மர்ம முடிச்சுகள் தொடர்ந்து அவிழ்ந்த வண்ணம் உள்ளது.

Monday 23 September 2013

டோனியின் புதிய ‘ஹேர் ஸ்டைல்’





 


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் டோனி நேற்றைய போட்டியின் போது வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அவர் இந்திய அணியில் இடம்பெறும் போது நீண்ட தலைமுடியுடன் இருந்தார். இந்த நீண்ட ஹேர் ஸ்டைல் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பையும் கவர்ந்தது. இந்தியா உலக கோப்பையை வென்ற பிறகு டோனி மொட்டை தலையுடன் காட்சி அளித்தார். தற்போது அவர் வெளிநாட்டு பாணியில் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். காதுக்கு மேல் இருபக்கமும் மழித்துவிட்டு நடுவில் மட்டும் கொத்தாக முடி வைத்துள்ளார். நேற்றைய போட்டியில் அவ்வப்போது ஹெல்மெட்டை கழற்றும்போது இந்த புதிய ஹேர் ஸ்டைல் தென்பட்டது.

Friday 31 May 2013

சீறும் சூரியன்: சில புகைப்படங்கள்!!!







சூரியனில் அவ்வப்போது ஏற்படும் தீச்சுவாலை சீற்றங்களை நாஸாவின் விண்வெளி ஓடம் எடுத்த துல்லியமான சில புகைப்படங்களின் தொகுப்பு இது.




மே 12 மற்றும் 14ஆம் தேதிக்கு இடைப்பட்ட மூன்று நாள் காலகட்டத்தில் சூரியனில் நான்கு உக்கிரமான தீச்சுவாலை சீற்றங்கள் காணப்பட்டன. இந்த வருடத்தில் சூரியனில் அவதானிக்கப்படும் மிக மோசமான தீச்சுவாலை சீற்றங்களாக இவை கருதப்படுகின்றன.
 




 இவ்வாறாக தீப்பிழம்பை பீய்ச்சி அடிக்கும் சீற்றம் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மிக அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.






இந்த சீற்றத்தால் சூரியத் துகள்கள் விண்வெளியில் நெடுந்தூரத்துக்கு வீசியெறியப்படுகிறது. இந்தப் படத்தில் வீச்சு எந்த அளவுக்கு பரவுகிறது என்பதைக் காட்டுவதற்காக சூரியனின் விட்டம் வரை கருப்பு தகடிட்டுக் காட்டப்பட்டுள்ளது





 சூரிய தீப்பிழம்பு சீற்றதால் வீசியெறியப்படும் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தை வந்தடையும்போது துருவப் பகுதிகளில் வானில் ஒளிப் பிம்பங்கள் தோன்றுகின்றன.





 சூரியனைப் பார்க்கும்போது அதில் கருப்பு புள்ளிகளாக தோன்றும் இடங்கள் இந்தச் சீற்றத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கின்றன.





 அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் எஸ் டி ஓ என்ற விண்கலம் சக்தி வாய்ந்த காமெராக்களைக் கொண்டு துல்லியமான வீடியோ பதிவுகளை அனுப்புகிறது.






சூரியனின் மேற்பரப்பில் காந்த சக்தியால் ஏற்படும் இந்த வளையங்களும் வண்ணமயமானவை.





எட்டு மணிநேர இடைவெளீயில் இரண்டு படங்களை எடுத்து அதனை ஒரு முப்பரிமாண படமாக மாற்றி இந்த வண்ணமய படங்களை நாஸா விண்கலம் உருவாக்குகிறது.



Thursday 30 May 2013

ராஜ ராஜா உனக்கே வெளிச்சம் !!!




Facebook Share Image - 12









       ஆயிரம் வருடங்களுக்கு முன்னே இப்படித்தானே கட்டி இருப்பார்கள் இதை !



     எத்தனை யானைகள் களத்தில் வேலை செய்திருக்கும் ! 



   இந்த யானைகளை எத்தனை வருடம் பழக்கி இருப்பார்கள் ! 



       எத்தனை மனிதர்கள் வேலை செய்திருப்பார்கள் ! 



       எத்தனை சிற்பிகள் இவற்றை செதுக்கி இருப்பார்கள் !



     மலைகளே இல்லாத தஞ்சையில், இவ்வளவு டன் பாறைகளை எப்படி கொண்டு    வந்திருப்பார்கள் ! 



            இவர்களை யார் கண்காணித்திருப்பார்கள் ! 



    நினைக்கும் போதே தலை சுற்றுகிறதே ! 



ராஜ ராஜா உனக்கே வெளிச்சம் !

உலக பிரபலங்களின் கையெழுத்து!!!




Facebook Share Image - 11







Wednesday 15 May 2013

உலகின் டாப் 10 பொருட்களின் வரலாறு - FACEBOOK SHARE IMAGES - 10

FACEBOOK SHARE IMAGES - 10

     இன்று உலகின் ஜாம்பவானாக இருக்கும் பொருட்களின் சிலவற்றின் முதல் பயணம் இவைகள் எந்த ஆண்டில் இருந்து இயங்குகிறது என்பதை பார்போம்.



முதல் பயணிகள் விமானம்   ஜனவரி 1, 1903.



 முதல் அணுகுண்டு  ஆகஸ்ட் 6, 1945.



 முதல் போர்டு கார்  ஆகஸ்ட் 12, 1908. 



முதல் ஆப்பிள் ப்ராடக்ட்   ஜனவரி 24, 1984. 



முதல் டெலிவிஷன் சேவை   ஜனவரி 1, 1927.



முதல் பென்சிலின் மருந்து  -  ஜனவரி 1, 1928. 



முதல் கைப்பேசி  -  ஏப்ரல் 3, 1973



முதல் விண்வெளி பயணம் -   ஜனவரி 1, 1981. 



முதல் இண்டர்நெட்  -  ஜனவரி 1, 1989. 





முதல் வானொலி சேவை - டிசம்பர் 24, 1906. 



Sunday 12 May 2013

FACEBOOK SHARE IMAGES -9


FACEBOOK SHARE IMAGES -9 




 C.N. Annadurai, M. Karunanidhi, M.G. Ramachandran, E.V. Ramasamy

                      

Saturday 11 May 2013

FACEBOOK SHARE IMAGES -8


FACEBOOK SHARE IMAGES -8 



TAGORE







RABINDRANATH TAGORE & ALBERT EINSTEIN - 1941







GANDHIJI







SWAMI VIVEKANANDA & NARASIMHACHARYA






 SACHIN & KAMBLI





Thursday 2 May 2013

MYSTERIOUS TREE IN NALGONDA - Andra Pradesh



 MYSTERIOUS TREE IN NALGONDA - Andra Pradesh:


       The worlds most Mysterious tree in Nalgonda, which is also known as the " TREE OF LIFE " contains the figures of creatures engraved on the entire tree trunk.






ABSOLUTELY REAL!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


























Share...............

FACEBOOK SHARE IMAGES - 6

FACEBOOK SHARE IMAGES - 6

Hands and Art
































 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top