.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label பேஸ்புக். Show all posts
Showing posts with label பேஸ்புக். Show all posts

Sunday 5 January 2014

Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி..?



உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி!!
நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.

சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code
இல் புதிய Window மூலம் Open ஆகும்.
அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.
அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும்.
இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3" இருக்கும் list கிடைக்கும்.

உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code
அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2" இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது

சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம?
புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை
paste பண்ணவும்
இதுமாதிரி [ www.facebook.com/1000011345400]
இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.

நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்பதை அறியட்டும்........

சமூக சேவை செய்பவர்களுக்காக பேஸ்புக் வழங்கும் புதிய வசதி...




சமூக வலைத்தளங்களின் வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் தளமானது பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

 இதன் அடிப்படையில் தற்போது “Share” மற்றும் “Like” பொத்தான்களைப் போன்று “Donate Now” எனும் பொத்தானை தற்போது அறிமுகப்படுத்துகின்றது. எதிர்காலத்தில் நண்பர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ நன்கொடைகள் வழங்க விரும்புபவர்கள் இவ்வசதியினை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 4 January 2014

சூரியின் பெயரில் போலி முகவரி..?



நகைச்சுவை நடிகர் சூரியின் பெயரில் ட்விட்டரில் தொடங்கப்பட்டிருப்பது போலி ஐடி என்று செய்திகள் பரவிவருகின்றன.

பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை நேராகத் தனது ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் சேர்ப்பதற்கு சமீபகாலங்களில் சமூக வலைத்தளங்கள்
பெருமளவில் உதவிபுரிகின்றன. பெரும்பாலான பிரபலங்கள் இச்சமூக வலைத்தளங்களில் இணைந்து தங்களது கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் எவ்வாறு பிரபலங்களுக்குத் தங்களின் கருத்துக்களைப் பகிர உதவுகின்றனவோ அதைப் போலவே அவர்களின் பெயரில் போலி உருவாக்கப்படும் போலி அக்கவுண்ட்களால் பிரச்னைகளாகவும் உருவெடுத்துவருகின்றன.

ட்விட்டர் மற்றும் பேஸ்புக் சமூக ஊடகங்களில் பிரபலங்களின் பெயரில் அனேக போலி ஐடிக்கள் தொடங்கப்படுகின்றன. இதன்மூலம் அதிக பாலோவர்களைப் பெறலாம் என்ற ஆசையே இந்த போலி அக்கவுண்ட் தொடங்குபவர்களின் நோக்கமா இருக்கிறது. அந்த வகையில் நடிகர் சூரியின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள @im_actor_soori என்ற டிவிட்டர் ஐடியும் போலி என்று சமீபமாகத் தெரியவந்துள்ளது. இது குறித்து சூரி விளக்கமளித்தால் மக்கள் ஏமாறமாட்டார்கள்.

Monday 30 December 2013

பேஸ்புக்கில் பிளாஸ்டிக் ஜாரில் பூனை படம் போட்ட பெண் மீது வழக்கு!







சேட்டை செய்த பூனையை பிளாஸ்டிக் ஜாரில் போட்டு அடைத்து தண்டனை கொடுத்த தைவான் பெண் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான அபராதமும் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் கிடைக்கும்.


தைவானை சேர்ந்தவர் கிக்கி லின். பீஜிங்கின் டாய்சங் பல்கலைக் கழக மாணவி. சமீபத்தில் இவர் தனது பேஸ்புக்கில் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். பூனை ஒன்று பிளாஸ்டிக் ஜாரில் அடைக்கப்பட்டிருந்த படம் அது.


சேட்டை செய்ததால் இந்த தண்டனை என விளக்கமும் கொடுத்திருந்தார். இதைப் பார்த்த பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பலத்த எதிர்ப்பு கிளம்பியதும், Ôஎனக்கு என் செல்ல பூனை மீது கொள்ளை பாசம். அதனால்தான் அதை போகும் இடத்துக்கு எல்லாம் எடுத்துச் செல்வேன்.


4 கிலோ பூனையை பையில் போட்டு எடுத்துச் செல்வது கஷ்டமாக இருந்ததால் ஜாரில் போட்டு வெளியே எடுத்துச் சென்றேன். அது தப்பா…Õ என விளக்கம் கொடுத்தார் லின். பின்னர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த லின், மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.


போலீசார் லின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். லின் காட்டிய ஜாரில் காற்று போவதற்காக துளைகள் போடப்பட்டிருந்தது. ஆனால் பேஸ்புக்கில் இருந்த படத்தில் துளைகள் இல்லை.இதையடுத்து அவர் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Monday 16 December 2013

பேஸ்புக்கே கதி என்ற நிலைப்பாட்டை மாற்றுவதற்கு.....!



பேஸ்புக்கே கதி என்ற நிலைப்பாட்டை மாற்றுவதற்கு.....!

சில பெற்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவும் என்று இதை பிரசுரிக்கின்றேன்

 குறித்த கணணியில் பேஸ்புக் இணையத்தளத்தை தடைசெய்வதற்கு

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் அதன்பயனாளர்களுக்கு சிலவழிகளில் நன்மை தருகின்ற போதிலும், வேறுவிதத்தில் தீமை விளைவிக்கக்கூடியதாக உள்ளது.

எனவே பாடசாலைகள் போன்ற இடங்களிலும் இத்தளத்தை முடக்குவது கட்டாயமானதாக காணப்படலாம்.

இவ்வாறு பேஸ்புக்தளத்தை முடக்குவதற்கு FB Limiter எனும் மென்பொருள் காணப்படுகின்றது.

இம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து குறித்த கணணியில் நிறுவியபின் ஒரேஒரு கிளிக்மூலம் பேஸ்புக்தளத்தை முடக்க முடியும்.

இது தவிர கடவுச் சொற்களைக்கொடுத்து முடக்கும் வசதியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Block Facebook by using following features:

 DOWNLOAD:- http://www.facebooklimiter.com

Friday 13 December 2013

பேஸ்புக்கில் புதிதாக “Unfollow” பட்டன்!





குறிப்பிட்ட நண்பர்களிடமிருந்து வரும் இடுகைகளையும், தகவல்களையும் தடை செய்வதற்கு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த “Hide All” என்ற பொத்தானுக்குப் பதிலாக இன்னும் வசதியாக “Unfollow” என்ற பொத்தானை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் வலைத்தளம்.


இந்த “Unfollow” பொத்தானை பயன்படுத்துவதன் மூலம், சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே அவர்களது இடுகைகள் மற்றும் தகவல்களை தடை செய்யலாம்.


இதன் மூலம், எப்போதும் போல் அவர்களுடன் நட்பு வட்டத்தில் இருக்கலாம். அதேநேரத்தில் அவர்களின் இடுகைகள் உங்களது “News Feed” பக்கத்தில் வராத வண்ணம் தடுத்து வைக்கலாம். தங்களது ”News Feed” பக்கத்தில் தேவையில்லாத விஷயங்களை படிப்பதைத் தவிர்க்க இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த “Unfollow” என்ற பட்டன், பேஸ்புக் பக்கத்தில் மேற்புறத்தில், “Following”, “Like” ஆகிய பட்டன்களுக்கு அருகில் இருக்கும் என்றும், இதன் மூலம் குறிப்பிட்ட இடுகைகளை தடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday 8 December 2013

பேஸ்புக்கில் உங்கள் Profile ஐ யார் யார் பார்த்தார்கள் என அறிய வேண்டுமா..??



என்ன நண்பர்களே...!! தலைப்பைப் பார்த்துவிட்டு வியக்காதீர்கள்.. இப்படி ஒரு வசதி இருக்கிறது எனப் பலர் நம்பி தமது பேஸ்புக் கணக்கையே இழந்திருக்கிரார்கலாம்.


ஏனெனில் இப்படிப் பட்ட apps கள் இருக்கிறதென ஒரு இணையத்தளம் போட்டுவிட்டால்... உடனே வேறு என்ன... வேறு வேறு இணையதளங்களும் copy செய்து... வாசிக்க வரும் மக்களை உசுப்பேத்துவது.


உடனே.. அவர்களும் நம்பி அந்த app ஐ பயன்படுத்துவார்கள். ஆனால் ஒன்றும் வராது பதிலாக அவர்களது account hack செய்யப்படும்.


ஆம்,நண்பர்களே...!! இது போன்ற apps அனைத்துமே hacker களால் உருவாக்கப்படுபவை.


DoorBellஎன்ற app இருக்கிறது ஆனால் அதுவும் உண்மையானதானாதாக இல்லையாம். அதை வேண்டுமானால் நீங்கள் பாவிக்கலாம்... ஆனால்..


Unfaced.comஎன்ற app இருக்கிறது அது John Arrow என்பவரால் உருவாக்கப்பட்டது. அதை பேஸ்புக் தடைசெய்துவிட்டதாம். ஏன் என்றால் அது பேஸ்புக்கின் rules க்கு தகுந்ததாக இருக்கவில்லை. அதை உங்கள் profile ல் பாவனை செய்தாலும் பாவிக்கப்படாது. இருந்தபோதிலும் அதைப் பாவித்தால் உங்கள் கணக்கு முடிவுக்கு வந்து விடும். அதாவது hack செய்யப்பட்டு விடும்.


பேஸ்புக் ஒரு நாளுமே தனது condition களுக்கு எதிராக இருக்கும் app ஐ உள்ளேடுக்காது. அப்படி இருந்து யாராவது அதனை பாவித்தாலும் அவர்களது கணக்கு முற்றாக நீக்கப்படும்.


அதிகமான Track செய்யும் app கள் போலியானவை. எனவே, இப்படியான Track செய்யும் app களிலிருந்து தள்ளியிருப்பது உங்கள் கணக்குக்குப் பாதுகாப்பு என்பதை கூறி இவளவு நேரமும் வாசித்த உங்களுக்கு நன்றி...!!


நண்பர்களுடன் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்...

Saturday 30 November 2013

‘மித்’ என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் எது?

 

முகநூல் எனத் தமிழ் எழுத்தாளர்களால் வழங்கப்படும் ஃபேஸ்புக்கில் தமிழ் சார்ந்த விவாதங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. முகநூலில் பெரும்பாலும் வேடிக்கை பார்ப்பவனாகவே பங்குபெறும் எனக்கு ஒரு சில விஷயங்களில் மட்டும் நேரடியாகப் பங்குபெறுவதற்கான உந்துதல் ஏற்படும். மொழி சார்ந்த விவாதங்கள் அவற்றில் ஒன்று. ஒருநாள் காலையில் தொன்மம் என்னும் சொல் குறித்துக் கவிஞர் பெருந்தேவி போட்டிருந்த பதிவு என் கவனத்தைக் கவர்ந்தது.

“ ‘மித்’(myth) என்கிற சொல்லுக்கு இணையான வார்த்தை தமிழில் இல்லை / உருவாக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்” என்று தொடங்கும் அந்தப் பதிவைச் சற்றே சுருக்கி இங்கே தருகிறேன்.

“தொன்மம் என்கிற மொழிபெயர்ப்பில் நிச்சயம் பிரச்சினை இருக்கிறது. ‘தொல்’, அது சுட்டும் பழமை, வரலாற்றுக்கும் ‘மித்’துக்குமான இடைவெளியை அழித்து, இரண்டையும் ஒன்றாக்கிவிடக்கூடிய தவறான, அபாயமான சாத்தியத்தை வலுப்படுத்துகிறது. ‘பழமை’ என்ற சுட்டுதல், ஒருவகையில் மரபுபோன்ற அதன் அதிகாரப் பிடிமானத்தைக் குறித்தாலும்கூட, ‘பழமை’ என்கிற கருத்தாக்கம் ‘இன்றைக்கு’ சமூக, பண்பாட்டு அறிவுப்புலத்தில் கொண்டிருக்கும் பொருண்மையான மதிப்பை அதிலிருந்து அந்நியப்படுத்திவிடுகிறது. மேலும், காலப்போக்கில் ‘மித்’தின் சொல்லாடலில் நேர்ந்திருக்கக்கூடிய மாற்றங்களைக் கணக்கில்கொள்ள மறுக்கிறது. ‘புனைவு’ என்று மொழிபெயர்க்கலாம். ஆனால், அந்த மொழிபெயர்ப்பு தட்டையாக, ‘மித்’கொள்ளும் பண்பாட்டு, சமூகத் தள அதிகார இயங்கியல் பரிமாணத்தைக் குறைத்துவிடுகிறது” என்றார் பெருந்தேவி.

இதற்குக் கருத்துத் தெரிவித்திருந்த ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன், “மிதோஸ் என்பதையும் வைத்துப் பார்க்கலாம். இதற்கு ஆக்யானம் என்னும் சொல்லும் ஒப்புமைக்கு வரும். ‘தொன்மம்’ சரியில்லைதான். ஏனெனில், நவீன கால ‘மித்’கள் நமக்கு நிறைய இருக்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தார். “ஆக்யானம், சம்ஸ்கிருதத்தில் இருக்கலாம். தமிழில் நான் தேடுகிறேன்” என்று பெருந்தேவி பதிலிட்டிருந்தார். “மாயை என்று சொல்லலாமா?” என்று ராம்ஜி யாஹூ என்பவர் கேட்டிருந்தார்.

“‘மித்’ என்பதற்கு யதார்த்தத்தை மீறிய, மரபுவழிவந்த, தொல்கதை (traditional, ancient story) என்று அர்த்தம் கொள்கிறேன். அப்படியென்றால், அதற்கு ஈடான சொல்லாக ‘புராணம்’ என்பது சரியாக வரலாம் என விக்கி பக்கம் சொல்கிறது” என்று ஜ்யோவ்ராம் சுந்தர் கூறினார். “மொழிபெயர்க்கும்போது முழுமையான ஒப்புதல் இல்லாமல் நான் பயன்படுத்துகிற சொற்களில் இந்த ‘தொன்ம’மும் ஒன்று” என்பது மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமியின் வாக்குமூலம். “ ‘மித்’ என்பதை ‘புனைவில் பொதியப்பட்ட உண்மை’ என்பதாக எடுத்துக்கொள்கிறேன்” என அகநாழிகை பொன். வாசுதேவன் குறிப்பிட்டார்.

“காதை என்ற ஒரு சொல் இருக்கிறது. அதற்குக் கதை என்ற பொருள் இருந்தாலும், நவீன ‘மித்’களை நவீன காதைகள் என்று சொல்லலாம் (modern myths then can be called)” என்று வெங்கடேஷ் சக்கரவர்த்தி குறிப்பிட்டார். இவற்றுக்கு எதிர்வினையாற்றிய பெருந்தேவி, “தமிழ் எழுத்துச் சூழலில் ‘தொன்மம்’ என்கிற மொழிபெயர்ப்பு எப்போதிலிருந்து புழக்கத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆவல். கதிர்மகாதேவனின் ‘தொன்மம்’புத்தகத்தைப் படித்திருக்கிறேன். அதில் இச்சொல்லின் வரலாறு பற்றிக் குறிப்பிட்டிருப்பதாக ஞாபகத்தில் இல்லை. நண்பர் பொ.வேலுசாமி அவர்களுக்கு இவ்வார்த்தையின் பயன்பாடு குறித்துத் தெரிந்திருக்கலாம் என நினைக்கிறேன்” எனக் கூறினார்.

இந்த உரையாடலில் நானும் கலந்துகொண்டேன். எதிர்பார்த்ததைவிடவும் சற்றே நீளமாகிவிட்ட அந்தப் பதிவை இங்கே தருகிறேன்:

“தவறான கருத்து என்னும் பொருளில் மித் பயன்படுத்தப்படும்போது மாயை அல்லது பொய் என்னும் எளிய சொற்களே போதும். ஆனால், புராணிகப் படிமங்கள், கருத்தாக்கங்கள், நம்பிக்கைகளைக் குறிப்பிடும்போது, புராணிகம் என்னும் சொல் பொருத்தமாக இருக்கும். இந்துப் புராணிகம், கிரேக்கப் புராணிகம் என்று இந்தச் சொல்லாக்கத்தைப் பல பின்புலங்களிலும் பயன்படுத்தலாம். இங்கே இதிகாசங்களையும் புராணங்களாகவே கொள்ள வேண்டும். புராண, இதிகாச எல்லைகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் பொது/ஆழ்மன வெளியில் ஊறிப்போன புராணிகப் படிமங்கள், கருத்தாக்கங்கள், நம்பிக்கைகளைக் குறிப்பிடும்போதும் இச்சொல்லைப் பயன்படுத்தலாம்.

“ஒரு சொல் கலைச்சொல்லாகத் தொழிற்படும் போது, அது அச்சொல்லின் வேர்ச்சொல் மற்றும் நேரடிப் பொருளின் எல்லைகளைத் தாண்டிய பொருளைத் தரக்கூடியது என்பது தெரிந்ததுதானே. எனவே, புராணிகம் என்னும் சொல்லாக்கம் மித் என்னும் சொல்லுக்கு நெருக்கமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

“இச்சொல் வடமொழிச் சொல் என்பதை வைத்து இதைத் தவிர்க்க வேண்டியதில்லை. தொனி, நவ, தரிசனம் என்பன போன்ற பல வடமொழிச் சொற்கள் தமிழ் இலக்கியச் சொல்லாடல்களில் இயல்பாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. தமிழில்தான் வேண்டும் என்றால், தொன்மம் என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். புராணிக என்பதும் தொல் என்பதும் பழைய என்று பொருள்படும் சொற்களே. தொன்மம் என்னும் சொல்லின் போதாமைகள் பற்றி நீங்கள் சொன்னது சரிதான். ஆனால், ‘மித்’என்னும் சொல்லுக்கு ‘தொன்மம்’தான் தமிழில் இணைச்சொல் என்று முடிவுசெய்து பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், அந்தப் பயன்பாடே அச்சொல்லின் வலிமையைக் காலப்போக்கில் கூட்டிவிடும். சொல்லின் பொருள் என்பது முற்றிலும் புறவயமானது அல்லவே. காலம், இடம், பண்பாடு ஆகிய காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டும் விஸ்தரிக்கப்பட்டும் உருக்கொள்ளும்/ உருமாறும் சங்கதிதானே. பொருள் என்பது மிகுதியும் பொருள்கொள்ளுதல் என்பதாகவே உள்ளது. விவாதங்களில் ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைவிட, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே முக்கியம். பொருளுக்கும் பொருள்கொள்ளுதலுக்கும் இடையே உள்ள தொடர்பை இதன் மூலம் அறியலாம்.”

இதற்குப் பதிலளித்த பெருந்தேவி, “உங்கள் கூற்றில் அர்த்தமிருக்கிறது என்றாலும் ‘ஆதர்சமான’ வாசகர்/உரையாடுபவர் குழுமத்தை நீங்கள் எண்ணத்தில் கொண்டு பேசுவதாகத் தோன்றுகிறது. ஏற்கெனவே ‘மித்’என்பதும் ‘வரலாறு’என்பதும் ஒன்றையொன்று ‘அபாயகரமாக’பதிலீடுசெய்து உயிர், உடைமை விரயங்களை, வன்முறையை ஏற்படுத்தும் சூழலில், தொன்மம் என்கிற மொழிபெயர்ப்பு இத்தகைய பதிலீடுகளின் சாத்தியத்தை இன்னும் வலுப்படுத்தும் என்பதே என் புரிதல்” என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்த நான், “செட் தோசை 30 ரூபாய் என்று சொல்லும்போது, செட் என்னும் சொல் எதைக் குறிக்கிறது என்பது சராசரி வாடிக்கையாளருக்குப் புரியவே செய்கிறது. மைசூர்பாகுக்கும் மைசூருக்கும் தொடர்பில்லை என்பதையும் அவர் புரிந்துகொள்கிறார். எனவே, கலைச்சொல்லாக்கத்தில் சொல்லின் நேர்ப்பொருள் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அவற்றின் வாசகர்கள் குறித்து நாம் சில அனுமானங்களைக் கொள்ளத்தான் வேண்டும்.

“என்னைப் பொறுத்தவரை புராணிகம் என்னும் சொல்லும் தொன்மம் என்னும் சொல்லும் நீங்கள் எழுப்பும் பெரும்பாலான கேள்விகளின் சோதனைகளைக் கடந்து நிற்கின்றன என்றே தோன்றுகிறது” என்று குறிப்பிட்டேன்.

முகநூல் உரையாடல் இத்துடன் தற்காலிகமாக முடிவுபெற்றது.

Sunday 24 November 2013

பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை உருப்பெருக்கம் (Zoom) செய்ய உதவும் நீட்சி!

 

சமூக வலைத்தளங்களின் வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக்கினை அடிப்படையாகக் கொண்டு ஏற்கனவே பல நீட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் தொடர்சியாக இப்பொழுது Facebook Photo Zoom எனும் நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,


இந்த நீட்சியின் உதவியுடன் பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் புகைப்படங்களை நேரடியாகவே உருப்பெருக்கம் செய்ய முடியும்.

கூகுள் குரோம் மற்றும் பையர்பொக்ஸ் உலாவிகளுக்காக இந்த நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



தரவிறக்கச் சுட்டி
Chrome

Friday 22 November 2013

பேஸ்புக் நண்பர்களுடன் இலவசமாக பேச ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

 

உலகில் அதிகம் பயன்படுத்தபடுத்தப்படும் முக்கியமான சமூக இணையதளம் ஒன்று உண்டென்றால் அது பேஸ்புக் தளமாகத்தான் இருக்கும். அவ்வாறு பலரும் பயன்படுத்த காரணம் அத்தளத்தில் உள்ள வசதிகள், மற்றும் எளிமையாக பயன்படுத்தும் வழிமுறைகளே காரணமாக உள்ளது. பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதும்,மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டதுமான பேஸ்புக் தளத்திலிருந்து இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

பேஸ்புக் நண்பர்களுடன் இலவசமாக பேச

உங்கள் பேஸ்புக் நண்பர்களுடன் இலவசமாக உங்கள் மொபைலிலிருந்து அழைத்துப் பேச பயன்படுகிறது ஓனஜ் என்ற   ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் பயன்படுகிறது. நீங்கள் Android, Apple iPad, iPod touch என எந்த வகை மொபைல்களைப் பயன்படுத்தினாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி எளிதான உங்களுடைய நண்பர்களுடன் உரையாடல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இந்த பேஸ்புக் அப்ளிகேஷன் முற்றிலும் இலவசமே. இதைப் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ள உங்கள் நண்பரும் அவருடைய ஆண்ட்ராய்ட் அல்லது ஐபோன் போன்ற சாதனங்களில் இந்த அப்ளிகேஷனை நிறுவியிருக்க வேண்டும்.

உலகில் எந்த ஒரு மூலையில் உங்கள் உறவினர் நண்பர்கள் இருந்தாலும் உடனடியாக அவரைத் தொடர்புகொண்டு பேச முடியும் என்பதே இந்த அப்ளிகேஷனின் சிறப்பு. இந்த அப்ளிகேஷன் ஐபோன், ஆண்ட்ராய்ட், ஐபோட், ஐபேட் ஆகிய சாதனங்களில் தொழிற்படுகிறது.

இந்த அப்ளிகேஷனை ஐடியூன் ஸ்டோர் (iTunes Store), ஆண்ட்ராய்ட் மார்க்கெட் (Android market), வோனஜ் பேஸ்புக் பேன் பேஜ் (Vonage Facebook FanPage)ஆகியவற்றில் கிடைக்கிறது. தற்பொழுது அனைத்து நாடுகளிலும் கிட்டதட்ட 3ஜி, 4ஜி மற்றும் வைபை தொழில்நுட்பம் (3G, 4G, WiFi) இயங்குவதால் அனைத்து நாடுகளில் உள்ளவர்களும் இந்த பேஸ்புக் அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம்.


பேஸ்புக் வோனஸ் மொபைல் அப்ளிகேஷன் இயங்கும் விதம்:


இந்த அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து, முதன் முதலில் இயககும்பொழுது உங்களுடைய கடவுச் சொல், பயனர் பெயர் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.


உடனேயே இந்த அப்ளிகேஷன் , உங்கள் பேஸ்புக் நண்பர்களை இரு குழுக்களாக பிரித்து காண்பிக்கும். வோனஜ் அப்ளிகேஷன்களை பயன்படுத்தி இலவச அழைப்புகளை மேற்கொள்பவர்களை ஒரு பிரிவாகவும், மற்றொரு பிரிவில் இன்ஸ்டன்ஸ் மேசேஜ் (Instant Message) சேவையை பயன்படுத்துபவர்களாகவும் காட்டும்.


பேச வேண்டிய நபர்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துபவர்களாக இருப்பவராயின் உடனடியாக அவர்களை நீங்கள் தொடர்புகொண்டு அழைக்கலாம். நீங்கள் அழைத்தவுடன் உங்களுடைய நண்பரின் முகப்பு படமும் அவரது ஸ்டேடஸ் செய்தியும் திரையில் தோன்றும். இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும்பொழுதும், உங்கள் நண்பர்கள் உங்களை அழைக்கும்பொழுது உங்களுக்கு அழைப்புச் சத்தம் கேட்கும்.


மிகச்சிறந்த இலவசமான இந்த அப்ளிகேஷன்களை நீங்கள் பின்வரும் வழிமுறைகளில் பெறலாம். 



1. ஐடியூன் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும். (இது iPhone, iPod touch பயன்படுத்துவபர்களுக்கு) CLICK


2. ஓனஜ் அப்ளிகேஷன் ஆன்ட்ராய்ட் லிப் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும் (இது ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு)  CLICK


குறிப்பு: இந்த அப்ளிகேஷன் மூலம் பேசுவது மட்டுமின்றி, எழுத்துகள், படங்கள் ஆகியவற்றையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். 


Tuesday 19 November 2013

பேஸ்புக் & தமிழன்? ஒப்பீடு!

பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கி உள்ளார் !!!!

ஆதாரம்:

1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய்
 செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய
 முறையை பின்பற்றி "லைக்" செய்யும்
 முறையை அறிமுக படுத்தியுள்ளார்.

2. மகிழ்ச்சி, தளர்ச்சி, குறைகளை மற்றவர்ககளிடம்
பகிர்ந்து கொள்ள "share" செய்யும் முறை!

3. திண்ணை யில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்போருக்கான "comment" "chat" செய்தல் முறை.

4. சும்மா இருப்பவனைத் தூண்டி விட்டு வம்பளக்க
 வைக்கும் தமிழரின்(திராவிட) சிறப்பை உணர்த்தும்
"poke" (உசுப்பி விடுதல்) பட்டன்.

5. கூட்டமாக சென்று வம்பு செய்ய "group"

 6. சுய தம்பட்டம் அடிக்க "profile"

 7. கோர்த்து விட்டு கூத்து பார்க்க "Add tag"

 8. "நான் செத்தாலும் என்னை பார்க்க வராதே"
என்னும் வீராப்பு பார்ட்டி களுக்காக "Unfriend"
 "Block this person"

 9. புரளிகள் பரப்ப , கிசுகிசு பேச "messages"

 10. திக்குத் தெரியாத முட்டுச் சந்தில்
 வைத்து அடிக்க, துண்டு போர்த்தி அடிக்க "fake id"

இப்படி தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கிய "மார்க்" அவர்களை அமெரிக்க சனாதிபதி ஆக்க பரிந்துரை செய்யுமாறு தமிழர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..

Friday 15 November 2013

தற்கொலையைத் தடுக்க உதவிய ஃபேஸ்புக்!



எதையுமே ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்வது இளம் தலைமுறைக்கு வழக்கமாக இருக்கிறது. இதனால் சில நேரங்களில் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்றாலும், சில நேரங்களில் எதிர்பாராத விதமாக நல்ல பலனும் உண்டாகலாம். இதற்கு அழகான உதாரணமாக, அமெரிக்காவில் தற்கொலை மனநிலையில் இருந்த இளைஞர் ஒருவரை காவலர்கள் ஃபேஸ்புக் மூலம் காப்பாற்றியுள்ளனர்.

18 வயதான அந்த இளைஞர், நியூஜெர்சியில் உள்ள வாஷிங்டன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதனுடன் பாலம் அமைந்துள்ள ஹட்சன் நதி படத்தையும் இணைத்திருந்தார்.

இந்தச் செய்தியை பார்த்து பதறிய ஃபேஸ்புக் நண்பர் ஒருவர், நியூஜெர்சி காவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் துறைமுக ஆணைய காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

துறைமுக ஆணைய காவலர்கள் குறிப்பிட்ட அந்த இளைஞரின் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்து, அவர் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு பாலத்தில் தேடிப்பார்த்தனர். பின்னர் வாலிபரின் செல்போன் மூலமும் தேடினர். ஆனால் பயனில்லை. உடனே காவல் துறை அதிகாரி மைகேல்ஸ், ஃபேஸ்புக் வழியே அந்த இளைஞரைத் தொடர்பு கொண்டார். நண்பர்கள் யாரையாவது தொடர்பு கொள்ளவும் எனும் அவரது வேண்டுகோளுக்கு பதில் இல்லை.

இதையடுத்து அதிகாரி மைக்கேல்ஸை அழைக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நல்ல வேளையாக கொஞ்ச நேரம் கழித்து அந்த இளைஞர், அதிகாரி மைக்கேல்சை செல்போனில் தொடர்பு கொண்டார். பஸ் ஒன்றில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். வீட்டில் பிரச்சினை என்றும் கூறியிருக்கிறார். மைக்கேல்ஸ் அவரிடம் ஆறுதலாகப் பேசி தன்னை நேரில் சந்திக்க வைத்தார். அதன் பிறகு அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆலோசனை பெற வைத்தார்.

தற்கொலை என்பதே அந்த கணத்தின் தடுமாற்றம் தானே. சரியான நேரத்தில் தலையிட்டதால் அந்த இளைஞர் தற்கொலைக்கு முயல்வது தடுக்கப்பட்டது.

கடந்த 2010 ம் ஆண்டு டைலர் கிலமண்டி எனும் இளைஞர் ,ஃபேஸ்புக் பக்கத்தில் வாஷிங்டன் பாலத்தில் இருந்து குதிக்கப்போகிறேன் என்று தெரிவித்து விட்டு, சொன்னதைப் போலவே தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இந்த முறை ஃபேஸ்புக் மூலம் தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ளது.

சூறாவளிக்கு நேசக்கரம்

ஃபேஸ்புக் தொடர்பான மற்றொரு செய்தி. பிலிப்பைன்சில் பயங்கர சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிதி அளிக்கும் வசதியை ஃபேஸ்புக் ஏற்படுத்தித் தந்துள்ளது. சூறாவளி பாதித்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் செஞ்சிலுவை சங்கத்திற்கு நிதி அளியுங்கள் எனும் வேண்டுகோளை ஃபேஸ்புக் பயனாளிகளின் டைம்லைன் பகுதி மீது இடம் பெற வைத்துள்ளது. ஃபேஸ்புக் இப்படி நிதி திரட்ட வேண்டுகோள் விடுப்படுது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. பயர்பாக்ஸ் (firefox) உலாவியில் அதன் தேடல் கட்டம் அருகே பிலிப்பைன்சுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உதவுங்கள் எனும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விலகும் இளசுகள்

ஃபேஸ்புக் பற்றி மற்றொரு செய்தி, அதன் இளைய பயனாளிகள் பலரும் வாட்ஸ் அப் (whats app) போன்ற குறுஞ்செய்தி செயலி சேவைகளுக்கு மாறிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. பிரிட்டன் பயனாளிகள் மத்தியில் இந்த மாற்றம் நிகழ்ந்து வருகிறது. ஃபேஸ்புக்கில் பெரியவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது மற்றும் வாட்ஸ் அப் போன்ற சேவைகளில் நண்பர்களுடன் அந்தரங்கமாக உரையாட முடிவது போன்றவை இதற்கான காரணமாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ,இளைஞர்கள் மத்தியில் பிரபலமான தளம் எனும் பெருமையை ஃபேஸ்புக்கிடம் இருந்து வீடியோ பகிர்வு தளமான யூடியுப் தட்டிபறித்துள்ளதாகவும் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Monday 11 November 2013

பேஸ்புக் லைக் வசதியில் மாற்றம்!

தற்போது இணையத்தளங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் தம்மை பிரபலப்படுத்திக்கொள்வதற்காக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்தி வருகின்றமை மறுக்க முடியாத ஒன்றாகும்.


இதற்காக பேஸ்புக் ஆனது லைக் பேஜ் வசதியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வசதியில் இதுவரை காலமும் காணப்பட்ட கைவிரல் அடையாளம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.


நாள்தோறும் சுமார் 22 பில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் இந்த கைவிரல் அடைய பொத்தானை கிளிக் செய்து வந்ததோடு, 7.5 மில்லியன் வரையான இணையத்தளங்களில் இவை இணைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Sunday 10 November 2013

ஃபேஸ்புக்கில் இணைந்த ஷங்கர்!

 

தன் இணைய தளத்தினைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் பேஸ்ஃபுக் தளத்தில் இணைந்திருக்கிறார்.

எந்தொரு படத்தினை இயக்கி வந்தாலும், அப்படத்தினைப் பற்றிய செய்தியை தனது இணையத்தில் (http://www.directorshankaronline.com/) அவ்வப்போது செய்தியாகவும், புகைப்படமாகவும் வெளியிட்டு வந்தார் இயக்குநர் ஷங்கர்.

தற்போது அந்த இணையத்தினைத் தொடர்ந்து, பேஸ்ஃபுக் தளத்திலும் இணைந்திருக்கிறார். அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/shankarofficial
தனது ஃபேஸ்புக் இணையத்தில், “ஃபேஸ்புக்கி இணையலாம் என்று முடிவெடுத்து இணைந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது, தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். எனது பெயரில் நிறையப் பேர் போலியாக இயங்கி வருகிறார்கள். இதுவே எனது அதிகாரப்பூர்வ பக்கம்.

'ஆரம்பம்' படம் பார்த்தேன். முழுமையான பொழுதுபோக்குப் படம்! அஜித் மிகவும் அழகாக இருக்கிறார். யுவனின் பின்னணி இசை சிறப்பாக இருந்தது. ஏ.எம்.ரத்னம் சாரை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படக்குழுவிற்கு எனது பாராட்டுக்கள்.” என தெரிவித்துள்ளார்.

Friday 8 November 2013

சமூக வலைப்பின்னல் தளங்களின் வரலாறு!

பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் இளம் தலைமுறையிடம் பிரபலமாக இருப்பதோடு சமூக ஊடகங்களாக உருவெடுத்துள்ளன. பேஸ்புக் இல்லாமல் நான் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பலரும் இந்த சேவைக்கு அடிமையாகி இருக்கின்றனர். பேஸ்புக் பதிவுகள் இன்று ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை கூட நிரனயிக்கின்றன. செய்தி சார்ந்த விவாதத்தை உருவாக்குகின்றன. பேஸ்புக்கிற்கு நிகராக கூகுலின் ஜிபிளஸ் சேவையும் பிரபலமாகி இருக்கிறது. சமீபத்தில் ஜிபிளஸ் தினசரி நூறு கோடி லாக் இன் எனும் மைல் கல்லை தொட்டிருக்கிறது.

இந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதும் நடந்து வந்தாலும் இவை தகவல் பகிர்வில் புரட்சியை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. சாமான்யர்களின் கைகளில் ஊடகத்தை இந்த வலைப்பின்னல் தளங்கள் கொண்டு வந்திருக்கின்றன. இவை எதிர்காலத்தில் எந்த வகையான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்று வியப்புடனும் கவலையுடனும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

பேஸ்புக் போன்ற தளங்கள் நவீன வாழ்க்கையில் செலுத்தும் ஆதிக்கம் ஒரு புறம் இருக்கட்டும், இந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் எப்படி உருவாயின என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

இணையத்தை தொடர்ந்து பின்பற்றி வருபவர்களுக்கு கூட இந்த தளங்கள் திடிரென எங்கிருந்து முளைத்தன என்பது போல நினைக்கத்தோன்றலாம். ஆனால் சமூக வலைப்பின்னல் தளங்கள் திடிரென தோன்றிவிடவில்லை. அவற்றுகென ஒரு வரலாறு இருக்கிறது.

ஆறுகோணங்களில் ஆரம்பம்.

ஆறுமுகம் தெரியும்.ஆறு கோணங்கள் தெரியுமா? இந்த ஆறு கோணங்களில் (SixDegrees.com  )  இருந்து தான் வலைப்பின்னல் யுகம் ஆரம்பமாகிறது . 1997ல் இந்த தளம் அமைகப்பட்டது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த தளம் மூடப்பட்டுவிட்டது என்றாலும் இது துவக்கி வைத்த சமூக வலைப்பின்னல் யுகத்திற்கான அடித்தளமாக இது அமைந்திருக்கிறது.

ஆறு கோண வேறுபாடு என்று மிகவும் பிரபலமான சமூக கோட்பாடு ஒன்று உண்டு. உலகில் உள்ள எவருமே இன்னொருவரிடம் இருந்து ஆறு மட்டங்களில் தான் வேறுபட்டவர் என்னும் கருத்து தான் இதன் அடிப்படை. அதாவது உலகில் உள்ள எந்த மனிதரும் வேறு எந்த மனிதருடனும் ஆறு அடிகளில் தொடர்பு கொண்டு விடலாம்.  எங்கோ அமெரிக்கா அல்லது ஆப்பிரிக்காவில் உள்ள அறிமுகம் இல்லாவதர் கூட உங்களுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம்.  அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவருக்கும் உங்களுக்குமான ஆறு தொடர்புகளை கண்டுபிடிப்பது தான் என்று இந்த கோட்பாடு சொல்கிறது.

இந்த கருத்து முதலில் குழப்பத்தை தரலாம். ஆனால் இதன் பின்னே இருக்கும் உறவு சங்கிலி தொடர்பு முறையை தெரிந்து கொண்டால் எளிதாக புரிந்து கொள்ளலாம். உங்களுக்கு ஒருவரை தெரிந்திருக்கலாம். அவருக்கு தெரிந்திருக்கும் ஒருவர் உங்களுக்கும் தெரிந்தவர் தானே. அவருக்கு தெரிந்த இன்னொருவரையும் அவர் மூலமாக நீங்கள் அறிமுகம் செய்து கொள்ளலாம் தானே. இப்படி ஒவ்வொரு தொடர்பாக கண்டுபடித்தால் ஆறே அடியில் யாருடன் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு விடலாம்.

இந்த கோட்பாட்டை வைத்து பலவிட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நாடகம் திரைப்படம் போன்றவையும் எடுக்கப்பட்டன.

 இணைய யுகத்தில் இந்த கோட்பாட்டிற்கு உயிர் கொடுப்பதற்காக 1997ல் சிக்ஸ் டிகிரிஸ் .காம் இணையதளம் அமைக்கப்பட்டது. இந்த தளம் உறுப்பினர்கள் தங்கள் உறவிவர்கள் ,நண்பர்களை எல்லாம் பட்டியலிட வைத்து ஒவ்வொருவரும் ஒருவரிடம் இருந்த எத்தனை கட்டங்களில் வேறுப்பட்டிருக்கின்றனர் என்று பார்க்க வைத்தது.
பிறந்தது பிரண்ட்ஸ்டர்.

சிக்ஸ்டிகிரிஸ் தளம் 2001ல் மூடப்பட்டு விட ,2002 ல் இதே கருத்தாக்கத்தின் அடிப்படையில் பிர்ண்ட்ஸ்டர் தளம் உருவாக்கப்பட்டது. கண்டா நாட்டை சேர்ந்த ஜோனாதன் ஆபிரகாம் எனும் வாலிபர் இந்த தளத்தை அமைத்தார். ஆறு கோணங்கள் கோட்பாட்டை நட்பின் அடிப்படையில் இந்த தளம் முன் வைத்தது. அதாவது உங்கள் நண்பரின் நண்பர் உங்களுக்கும் நண்பர் தானே. இப்படி நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என்று நட்பு வட்டத்தை விரிவாக்கி கொள்ள இந்த சேவை வழி செய்தது.

நண்பர்கள் மூலம் புதிய நண்பர்களை தேடிக்கொள்ள வழி செய்யும் இந்த கருத்தாக்கம் புதுமையாக இருந்ததால் இணையவாசிகளை கவர்ந்து மிகவும் பிரபலமானது. அப்போதே பத்து லட்சம் உறுப்பினர்களுக்கு மேல் ஈர்த்து பரபர்ப்ப ஏற்படுத்தியது.

வந்தது பேஸ்புக்.

பிரண்ட்ஸ்டர் கருத்தாக்கம் சுவாரஸ்யமானதாக இருந்ததே தவிர அதனால் என்ன பயன் என்று தெரியாமல் இருந்தது. நண்பரகள் மூலம் மேலு புதிய நண்பர்களை பெற்று நட்பு வலையை பெரிதாக்கி கொண்டே செல்வதால் என்ன பயன் என்னும் கேள்விக்கு இந்த தளத்தில் பதில் இல்லை.

இந்த பதிலோடு வந்து சேர்ந்த தளம் தான் பேஸ்புக். முதலில் அமெரிக்க கல்லூரி மாணவர்களுக்கான சேவையாக அறிமுகமான பேஸ்புக், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் மூலமாக ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தி கொண்டு சகல விதமான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என வழிகாட்டி வலைப்பின்னல் யுகத்திற்கு வித்திட்டது. 2004 ம் ஆண்டு அமெரிக்காவின் ஹாவர்டு பலகலை மாணவர்களுக்காக என்று உருவாக்கப்பட்ட இந்த சேவையை மார்க் ஜக்கர்பர்க் உருவாக்கினார். பின்னர் மற்ற கல்லூரிகளுக்கும் விரிவாகி அமெரிக்காவுக்கு வெளியேவும் அறிமுகமாயிற்று.

இன்று ஸ்டேடஸ் அப்டேட் மூலம் நண்பர்களின் நடவடிக்கைகளை அறிந்து கொள்வதும், அவர்கள் மூலமாகவே புதியவர்களின் அறிமுகத்தை பெறுவதும் சர்வ சக்ஜமாக இருக்கிறது. நண்பர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் அல்லாமல் ,திரைப்பட விமர்சனம், சமூக கண்ணோட்டம் , செய்திகள் விளையாட்டு தகவல்கள் பரிந்துரைகள் என் எல்லா வகையான தகவல்களுக் பேஸ்புக் மூலம் சாத்தியமாகிறது. இளைஞர்கள் மட்டும் அல்லாமல் திரைபப்ட நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் ,எழுத்தாளர்கள் என பலரும் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.

மைஸ்பேஸ் முதலில்.

பேஸ்புக்கிற்கு பிறகு மேலும் பல சமூக வலைப்பின்னல் தளங்கள் அறிமுகமாகி உள்ளன. கூகுல் ஜிபிளஸ் சேவையை அறிமுகம் செய்தூள்ளது. ஆனால் பேஸ்புக்கிற்கு முன்னரே மைஸ்பேஸ் வலைப்பின்னல் சேவையாக அறிமுகமாகி பிரபலமானது பலருக்கு தெரியாது. 2003 ம் ஆண்டு துவக்கப்பட்ட மைஸ்பேஸ் அமெரிக்கர்கள் மட்தியில் பிரபலமாக இருந்தது. பிரதானமாக இசை சார்த பகிர்வுக்கு பயன்பட்ட இந்த சேவை இசை கலைஞர்கள் ரசிகர்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும் வழி செயதது. ஆனால் பேஸ்புக் அலையில் மைஸ்பேஸ் பிந்தங்கிவிட்டது. ஏறக்குறைய இதே காலத்தில் கூகுலின் ஆர்குட் வலைப்பின்னல் சேவையும் பிரபலமாக இருந்தது.

மைஸ்பேசுக்கு முன்பாகவே லின்க்ட் இன் வலைப்பின்னல் சேவை அறிமுகமானது. 2001 ல் அறிமுகமான இந்த சேவை முற்றிலும் தொழில் முறையிலானது. வேலையில் இருப்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் தங்கள் துறையில் உள்ளவர்களோடு தொழில் முறையில் தொடர்பு கொள்ள இந்த தளம் கைகொடுத்தது. இன்றளவும் தொழில் முறையிலான உறவை வளர்த்து கொள்ள லின்க்ட் இன் சேவையே பிரபலமாக இருக்கிறது.

என்றாலும் இவை எல்லாவற்றின் அடிப்படை ஆறு கோணங்கள் கோபாடு தான். இந்த கோட்பாட்டில் இருந்து உருவான நண்பர்களின் நண்பர்கள் கருத்தாக்கமே இன்றைய சமூக வலைப்பின்னல் யுகத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது.

பேஸ் புக் செய்திகள் பற்றிய ஓர் ஆய்வு!

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் பயன்படுத்துவது என்பது இளைஞர்களின் லேட்டஸ்ட் பேஷனாகவே மாறி விட்டது பஸ் புக்கை ஒரு நாள் அதை பயன்படுத்தாவிட்டாலும் அவர்கள் நிலை தடுமாறிதான் போய் விடுகிறார்கள் அந்த அளவுக்க மக்களை இந்த பேஸ்புக் தனக்கு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. இதற்கிடையில் பேஸ்புக் அனைத்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு போனிலும் பேஸ்புக் (Facebook for every phone) என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றை, பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டு இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


சென்ற ஆண்டைக் காட்டிலும் 54 சதவீதம் பேர் கூடுதலாக பேஸ்புக் இணைய தளத்தைப் பயன்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாதந்தோறும் மொபைல் போன்கள் வழியாக இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்க்ள் எண்ணிக்கை 75 கோடியே 10 லட்சம் பேர். உலக அளவில் பேஸ்புக் வாடிக்கையாளர் எண்ணிக்கை தற்போது 110 கோடி என்கிறார்கள்.

nov 8 - online media


இந்த நிலையில் பேஸ்புக் வலைத்தளத்துக்கு வரும் எவரும் சுடச் சுட செய்திகளை தெரிந்து கொள்வதற்காக வருவதில்லை. என்றாம், செய்திகளை கொண்டு சேர்ப்பதில் பேஸ்புக்கும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.அதே சமயம் பிச்புக்கில் பல தகவல்கள் பொய்யாக பரப்பப் படுகிறது என்றும் ஆய்வில் தெரிய வருகிறது
சமீபத்தில் தி பியூ ஆரய்ச்சி மையம் (The Pew Research Center) ஆய்வின்படி, பேஸ்புக் பயனாளர்களில் 47% பேர், செய்திகளை பேஸ்புக் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் தங்கள் நண்பர்கள் ஸ்டேடஸ் வாயிலாகவோ அல்லது தாங்கள் பின்பற்றும் வேறு சில செய்தி நிறுவனங்கள் வாயிலாகவோ அறிந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.


ஆனால் இவர்களில் 4% பேர் மட்டுமே பேஸ்புக் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு முக்கிய வழியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், பேஸ்புக் பயன்படுத்தும் 73% பேர் பொழுதுபோக்கு செய்திகள்தான் மிகவும் பிரபலமடைவதாக தெரிவித்துள்ளனர்.மேலும் சில தகவல்கள் பொய்யாக பரப்பப்படுவதாக குறிப்பிட்டனர்.


அதிலும் செய்திக்காக பேஸ்புக்கை நாடும் நபர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் அவர்களில் மூன்றில் ஒரு சதவீதத்தினர் வழக்கமான செய்திகள் பக்கம் தலை காட்டுவதில்லை என்கிறது அந்த ஆய்வு.இது குறித்து பியூ ஆரய்ச்சி மையத்தின் இயக்குனர் ஏமி மிட்செல் கூறுகையில், “செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஃபேஸ்புக் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான அனுகுமுறையை முன்னிலைப்படுத்துகிறது.



இந்த ஆராய்ச்சிக்காக 5,173 பேரிடம் கருத்துக்களைப் பெற்றபோது, நாம் செய்தியை மெனக்கிட்டு தேடாதபோதும் நாம் செய்தியை அறிந்து கொள்ள ஃபேஸ்புக் சிறந்தத் தளம் என ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார்.
பேஸ்புக் வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து கணிசமான அளவில் செய்திகளை பகிரும் செய்தி நிறுவனங்களின் இணையதளத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு வாசகர்கள் வட்டம் அதிகரிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


எந்த மாதிரியான செய்திகள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் வர வேண்டும் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவினாலும், மேலோட்டமாக செய்திகள் தங்களது பேஸ்புக் முகப்புப் பக்கத்தில் வந்து சேர்வதை அனைவரும் விரும்புவதாகவே ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது..

Wednesday 6 November 2013

மங்கள்யான் தகவல்களை அபடேட்டாக அறிய பேஸ்புக் பேஜ் தொடங்கியது இஸ்ரோ!

மங்கள்யான்’ விண்கலத்தின் பயணம் மற்றும் ஆய்வுகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கும் வகையில் இஸ்ரோ (ISRO’s Mars Orbiter Mission) என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

                          nov 6 -= tec isro

செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆராய மங்கள்யான் செயற்கைக் கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இது திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் இணைந்துள்ளது. சிக்கலான மங்கள்யான் திட்டம் சரியான பாதையில் செல்கிறது என்று தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் மங்கள்யான்’ விண்கலத்தின் பயணம் மற்றும் ஆய்வுகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கும் வகையில் இஸ்ரோ (ISRO’s Mars Orbiter Mission) என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபற்றி அவர் கூறும்போது ‘மங்கள்யான்’ விண்கலம்,அடுத்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அன்றிலிருந்து 6 மாதங்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளவுள்ள பல்வேறு ஆராய்ச்சிகள் குறித்த தகவல்கள் மார்ஸ் மிஷன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் என்றார்.
இந்த ஃபேஸ்புக் பக்கத்தில், 2 மணி நேர இடைவெளியில் புதுப்புது தகவல்கள் பதிவு செய்யப்படும். ஃபோட்டோக்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும் என்றார். பொதுமக்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூரவ் இணையதளமான www.isro.gov.in – வாயிலாக மார்ஸ் மிஷன் ஃபேஸ்புக் பக்கத்திற்கு செல்லலாம் என்றார்.


லிங்க் ::https://www.facebook.com/pages/ISROs-Mars-Orbiter-Mission/1384015488503058

Sunday 27 October 2013

பேஸ்புக் பயன்படுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!

facebook_laptop_generic_295 

பேஸ்புக் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தும் திகைக்க வைக்கும் சம்பவம் இது. பேஸ்புக பயன்படுத்த பெற்றோர் தடை விதித்தால் 17 வயதான அந்த இளம்பெண் தனது வாழ்க்கையையே முடித்து கொண்டிருக்கிறார். இந்த சோக சம்பவம் நிகழ்ந்திருப்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்.

மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி எனும் இடத்தை சேர்ந்த ஐஸ்வர்யா தஹிவால், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. புதன் கிழமை இரவு பேஸ்புக் பயன்படுத்த ஐஸ்வர்யா பெற்றோர் அனுமதி கேட்டிருக்கிறார். பெற்றோரோ , அவர் பேஸ்புக்கிலும் ,போனிலும் நேரத்தை வீணடித்து படிப்பை கவனிக்கவில்லை என்று கடிந்து கொண்டுள்ளனர். பேஸ்புக் பயன்பாட்டிற்கும் அனுமதி மறுத்துள்ளனர்.

மறுநாள் ஐஸ்வர்யா பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பேஸ்புக்கை பயன்படுத்த முடியததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். “ பேஸ்புக் என்ன அத்தனை மோசமானதா? இது போன்ற கட்டுப்பாடு உள்ள வீட்டில் என்னால் இருக்க முடியாது.பேஸ்புக் இல்லாமல் என்னால் வாழ முடியாது’ என்று அவர் தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகளின் இந்த விபரீத முடிவால் ஐஸ்வர்யா பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ’ இதை எங்களால நம்ப முடியவில்லை. இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவளை படிப்பில் கவனம் செலுத்த தான் சொன்னோம்.  இப்படி ஒரு விபரீத முடிவு எடுப்பாள் என நினைத்து கூட பார்க்கவில்லை’ என ஐஸ்வர்யா தந்தை சுனில் தஹிவால் வேதனையோடு கூறியுள்ளார்.

பேஸ்புக் பழக்கம் மோகமாக மாறுவதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இது பல விபரீதங்களுக்கு வித்திடலாம் என்பதற்கான வேதனையான உதாரணம் இந்த சம்பவம்.

பேஸ்புக் பயன்பாட்டில் பெற்றோர் கட்டுப்பாட்டைவிட சுயகட்டுப்பாடே சிறந்தது என்பதை பயனாளிகள் உணர்ந்து கொண்டால் நல்லது.

Monday 14 October 2013

பேஸ்புக்கிலிருந்து காணாமற் போகும் தேடல் வசதி!

உலகின் முன்னணி சமூகவலைத்தளமாக திகழும் பேஸ்புக் ஆனது தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வந்தது.


இருந்தும் சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில அம்சங்களை நீக்கிவிடுவதுண்டு. 


இதன் ஒரு அங்கமாக கடந்த டிசம்பர் மாதம் நண்பர்களை தேடும்போது அவர்களின் புரபைல் பெயர்களை காட்டாதவாறு மாற்றம் செய்யும் வசதியை நிறுத்தியிருந்தது. 


அதே போல தற்போது இந்த வசதியினை (Search Privacy Setting) முற்றிலுமாக நிறுத்தப்போவதாக கடந்த வியாழக்கிழமை பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.


Wednesday 9 October 2013

உங்கள் பேஸ்புக் Account- ஐ எப்படி பாதுகாப்பாக வைப்பது?


இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரிடமும் இருக்கும் அக்கவுன்ட் எது என்றால் அது பேஸ்புக் தான். சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும். பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். 



மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர். இதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு, உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக் தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர். நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.


பேஸ்புக் பிளேசஸ் இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.

 

பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம்.

யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் (Profile) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர். முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம்.

எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lockஎன்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் (Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ளCustomize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.

அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா?

பேஸ்புக் தளத்தில் விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும்.

பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.

அப்ளிகேஷன்களுக்குத் தடா:

பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applicationsஎன்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.

அணுகுவதற்குத் தடை:

 உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites. C[S Edit your settings. இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.

இறுதி நடவடிக்கை:

பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும். Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top