.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label பெண்கள்!. Show all posts
Showing posts with label பெண்கள்!. Show all posts

Thursday 22 March 2018

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்!

1) எந்த ஒரு கடும் கோபத்திலும்
 எல்லை மீறி தகாத வார்த்தைகளை
 வாய் தவறி கூட சொல்லமாட்டார்.

2) உங்களின் மோசமானச்
 சமையலையும் சிரித்துக்
 கொண்டே சாப்பிடுவார்.

3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார்.ஒவ்வொர சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.

4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர
 மாட்டார்.உங்கள் குறைகளை நிறைகளாக்க
 முயற்சிப்பார்.

5) உங்கள் மனதை ஆழமாய்
 நேசிப்பதால் ,எத்தனை அழகான பெண்கள்
 முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு
 அழகாய் தெரிவீர்கள்.

6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில் ,
அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய
 முடியாது.வேறு எந்த வேலையிலும்
 கவனம் செல்லாது .

7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும்
 ஒப்பிட்டுப் பேச மாட்டார்.எந்த ஒரு பெண்ணைப்
 பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.

8)உங்களை தொலைவில் இருந்துப்
 பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள்
 மௌனங்கள் அனைத்தையும் அழகாய்
 மொழி பெயர்ப்பார்.

9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும்
 பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார்.
எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள்
 நடந்துக் கொள்ள உதவுவார்.

10) உங்களை வேலைக்காரியாய் ,
சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு ,
குழந்தையாய் , தோழியாய் , தாரமாய் ,
தாயாய் பார்ப்பார்.

11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு , உங்கள்
 அழுகை பார்த்து அதிகம் வருந்துவார்.நீங்கள்
 சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்....

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்!



இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு  உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.

ஆண்மைக்கு ரோஜா குல்கந்து


 காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் "குல்கந்து" இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

தாது விருத்தி தரும் பூசணிக்காய்


 பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.

இனிமையான உறவுக்கு இலுப்பை பூ


 இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.

குழந்தை வரத்திற்கு ஆலம்பழம்

 சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்

Monday 20 January 2014

கர்ப்ப கால இரத்தப் போக்குக்கான காரணங்கள்!

பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமான கர்ப்ப கால பொழுதை மகிழ்ச்சியுடனும் கவனத்துடனும் அணுக வேண்டும்.நம் பெற்றோர்களும், பாட்டிகளும் கர்ப்ப காலத்தில் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு சொல்லி இருப்பார்கள். அதன்படியும், மருத்துவர் ஆலோசனையின் படியும் நாம் என்ன தான் பார்த்து கொண்டாலும், சில நேரங்களில் இரத்தப்போக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது.

சில பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும். அதற்காக குழந்தைக்கு பாதிப்பு என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொ..............






கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்!

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும்.


கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம். கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன.


நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.


* கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ்,.......


குழந்தைகள் இதய நலம் தாய்மார்கள் கையில்!

குழந்தைகள் இதய நலம் தாய்மார்கள் கையில்

உலகம் எவ்வளவு வேகமாக மாறிவருகிறதோ அதற்கு ஏற்ப வாழ்க்கை முறையும் மாறிவருகிறது. உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த காலத்திலும் நோய்கள் இருந்தன. ஆனால் அவை பெரும்பாலும் இயற்கை வைத்தியத்துக்கு கட்டுப்பட்டன.

தற்போது பலர் செய்யும் வேலையை ஒரு எந்திரமே செய்து விடுகிறது. சிந்திக்கும் விஷயங்களுக்கு கம்ப்யூட்டர் இல்லாமல் காரியம் நடக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. வீடியோ கேம் முன்பு உட்கார்ந்து வீணாகும் நேரம்பற்றி கவலைப்படாமலும் உடல் நலம் பாதிக்கப்படுவது தெரியாமலும் குழந்தைகள் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

குழந்தை நன்றாக சாப்பிடுவதும், கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதும் தான் பெற்றோரின் கடமை என்று நினைக்கிறார்கள். குழந்தையை உடல் நலத்துடன் வளர்க்க வேண்டும் என்பது பற்றி யாரும் சிந்திப்பது இல்லை.

குழந்தை கொழு கொழு என்று இருக்க வேண்டும் என்றால் நன்றாக சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று தான்.........


Sunday 19 January 2014

பனிக்கால சரும பாதுகாப்பு முறைகள்...?


சாதாரண காலத்திலேயே பொடுகு பெரும் பிரச்சனைதான். அதிலும், குளிர் காலத்தில் கேட்கவே வேண்டாம். இதற்கு, மிக முக்கியமான காரணமே, இன்றைய பெண்கள் தலையில் எண்ணெய் வைக்காமல் விடுவதுதான். இதனால் தலைக்குள் இருக்கும் சருமம் வறண்டுவிடும்.


இந்த பிரச்சனை போக்க இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் அரை டீஸ்பூன் மிளகு போட்டுக் காய்ச்சி இறக்கவும். எண்ணெய் இளஞ்சூடாக இருக்கும்போதே, தலையில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்த பின்னர் நன்றாக வாரிக்கொள்ள வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து,..........


பெண்களின் அழகு சாதனப்பொருட்களில் நச்சு! எச்சரிக்கை!

 

இன்றைய  மார்க்கெட்டில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களின் அழகு சாதனப் பொருட்களில் நச்சுப் பொருட்கள் கலந்திருக்கின்றன. எனவே அதை பெண்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தும்போது அவர்களின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.


இம்மையம் நடத்திய ஆய்வில் உலக அளவிலும், தேசிய அளவிலும் புகழ்பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளான முக அழகு க்ரீமில் அதிக அளவு பாதரசமும், சில வகை லிப்ஸ்டிக்கில் எஃகும் கலந்திருப்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளது. இந்த அதிகளவு பாதரசம் ......


Saturday 18 January 2014

அழுத்தமில்லாத மனசு…



உறக்கம் விற்று மெத்தை வாங்கினேன்.
பசியை விற்று உணவு வாங்கினேன்.



என்ற வசனங்களை நாம் பலமுறை கேட்டிருப்போம். இதை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு ஒரே காரணம்தான். பணம், புகழ் என்று கிடைத்தற்கரிய அனைத்தும் இன்று சாத்தியப்பட்டுவிட்டது.


இவற்றிக்கு வெகுமானமாக நாம் வழங்கியிருப்பவை நம் மன அமைதியையும் ஓய்வையும். பரிசாகப் பெற்றிருப்பது மன அழுத்தத்தை. இன்றைய மாணவர்கள் கல்லூரிப் படிப்பு முடித்த கையோடு பட்டத்துடன் சேர்த்து ஏதோ ஒரு நிறுவனத்தின் வேலை நியமன ஆணையையும் வாங்கி விடுகிறார்கள். கை நிறைய சம்பளத்தோடு அவர்களுக்கு மனம் நிறைய அழுத்தமும் இலவசமாக வழங்கப்பட்டு விடுகின்றன. நம்மில் பலருக்கும் இதே நிலைதான். மன அழுத்தம் தீவிரம் அடைகிற போது நம் அலுவலகங்களையும் தாண்டி அவை நம் வீடு வரை பயணித்து விடுகின்றன.


மன அழுத்தத்தை அகற்றி மகிழ்ச்சி காண இதோ சில சக்ஸஸ் டிப்ஸ்:



1. எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தன் கருத்துக்களை பரிமாற இன்று பெரிதும் பயன்படுத்தும் கருவி தொலைபேசி. தொலைபேசியை எடுத்து நீங்கள் அழைக்க வேண்டிய நபரின் எண்ணை அழுத்துகையிலேயே உங்கள்.......


புருவங்களின் அழகுக்கு…

கண்களும் தான். இதில், புருவத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக அழகு கொடுக்க முடியும்.


வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ அழகை புகழ்வர். ஆனால், வில் போன்ற புருவம், எல்லா முகத்திற்கும் பொருத்தமாக இருக்காது. முகத்திற்கு தக்கபடி, புருவம் இருப்பதே சிறப்பு. முகத்தின் அமைப்பு, கண்களின் தன்மை, நெற்றியின் அளவு ஆகியவற்றிற்கு தக்கபடி, புருவத்தை அமைக்க.............



கூந்தலுக்கு வைத்தியம்...?

* தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.


* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும். நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும்........

கூந்தலுக்கு வைத்தியம்

இளநரையை போக்க வழிகள்..?

இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும்.


முதலில் இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு, அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.நரைமுடியை 30 முதல் 40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம்.


ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான........


அழகை தரும் இயற்கை பொடி...!


அழகை விரும்பாத மனிதர்களை நாம் காண முடியாது. இன்று அழகை அதிகரித்துக்கொள்ள பல விதமான ரசாயன கலவைகள் வந்துள்ளன. அவற்றை வாங்கி சிலர் முகத்தில் பூசிக்கொள்கின்றனர்.


பலர் பூசிக்கொள்வதற்காக அழகு நிலையங்களை தேடி படையெடுக்கின்றனர். இதை பயன்படுத்தி பலர் பல விதமான அழகு சாதனப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் விளம்பரப்படுத்துகின்றனர்.


அழகை பாதுகாக்கவும் மேலும் நம்மை அழகாக்கி கொள்ளவும் இயற்கை மூலிகைகள் நம் கைவசம் உள்ளது.. இந்த இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே தயாரிக்கலாம் அழகு சாதன பொருட்களை. எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம்


கிச்சிலிக் கிழங்குபொடி-100கிராம்

உலர்ந்த மகிழம் பூ-200கிராம்

கஸ்தூரி மஞ்சள் பொடி-100கிராம்

கோரைக்கிழங்கு பொடி-100கிராம்

உலர்த்திய சந்தனப்பொடி-150கிராம்



இவை அனைத்.............


Friday 17 January 2014

குளிரிலும் மிளிர வேண்டுமா..?



இந்த ஆண்டு, குளிர் கொஞ்சம் அதிகம் தான். வீடு, அலுவலகம் என்று காலில் சக்கரம் கட்டி, சுற்றிக் கொண் டிருக்கும் பெண்களால், தங்களின் உடல் அழகைப் பராமரிக்க, நேரம் கிடைப்ப தில்லை. கிடைக்கும் நேரத்தில், வீட்டிலேயே அழகைப் பராமரித்து, பொலிவுடன் ஜொலிக்க...

 இதோ சில டிப்ஸ்!

பனிக் காற்று, சருமத்தில் சுருக்கங்களை உருவாக்கும். குறிப்பாக, கண்கள் மற்றும் உதடுகளை சுற்றி சுருக்கம் ஏற்படும். வறண்ட சருமமாக இருந்தால், அதிக திறனுள்ள மாய்சரைசரைப் பயன்படுத்துவது அவசியம். இத சருமத்தில் உள்ள சிறு சிறு ஓட்டைகளை அடைத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங் கள்.

மேக்கப் செய்யும் முன், இதனை, கண் மற்றும் உதடுகளை சுற்றி போடவும். இதனால், நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்கும்.

கண்களைச் சுற்றி சுருக்கம் ஏற்படாமல் இருக்க, சாதாரண பாதாம் எண்ணெயை கண்களைச் சுற்றி தேய்த்து, மோதிர விரலால், ஒரு நிமிடம் மசாஜ் செய்யுங்கள். பின், 15 நிமிடம் கழித்து, மென்மையான பஞ்சுத் துணியால் துடைத்து விடுங்கள்.

 இது, கரு வளையத்தை போக்க உதவும். வெள்ளரி ..................

 தொடர்ந்து இங்கே படிக்கலாம்....

Thursday 16 January 2014

இந்த 10 இருந்தால் இனிக்கும் வாழ்க்கை..!!!




  •  அன்பு செலுத்துங்கள், அக்கறை காட்டுங்கள்.

  •  ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

  • இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

  •  உணர்வுகளை மதிக்கவும்,மரியாதை...........
தொடர்ந்து இங்கே படிக்கலாம்....


2 - ன் 1 முருங்கை சாம்பார் -- சீக்ரெட் ரெசிபி .....!




சீக்ரெட் ரெசிபி

சாம்பார் பொடி

என்னென்ன தேவை?

துவரம்பருப்பு - அரை கப்

கடலைப்பருப்பு - அரை கப்

கொத்தமல்லி (தனியா) - ஒரு கப்

மிளகாய் வற்றல் - 1 கப்

மிளகு - 1 டேபிள்ஸ்பூன்


எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் பெருங்காயத்தை...


தொடர்ந்து இங்கே படிக்கலாம்....




சருமத்தில் ரோமமா..? நீக்கலாம்...! தடுக்கலாம்..!



 நடை, உடை, பாவனை, சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும் ஆண்களைப் போல இருக்க நினைக்கிற பெண்களும் ஒரு விஷயத் தில் அதை  வெறுக்கவே செய்கிறார்கள். அது ஆண்களைப் போல சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்கள்! பெண்மைக்குப்  பெரிய சவாலான இந்தப்  பிரச்னைக்கு, வாக்சிங், திரெடிங், இன்ஸ்டன்ட் கிரீம், லேசர் என எத்தனையோ சிகிச்சைகள் உண்டு .

அழகுத் துறையில். அத்தனையும்  பாதுகாப்பானவையா என்பதுதான் கேள்வியே...

தொடர்ந்து இங்கே படிக்கலாம்....





துணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய சில எளிய வழிகள்..!



சலவை என்று சொல்லும் போது ஒற்றை எளிய வார்த்தையாகத் தான் இருக்கும். ஆனால் உங்கள் துணியை நீங்களே துவைத்து சலவை செய்யும் போது தான் அந்த ஒற்றை வார்த்தையில் இருக்கும் கஷ்டம் உங்களுக்கு தெரியும். துணியை ஊற வைத்தல், துவைத்தல், உலர்த்துதல், மீண்டும் அதனை பயன்படுத்துவதற்கு தயார் படுத்துதல் என இவை அனைத்துமே சலவையின் அங்கமாகும். உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், சலவை செய்யும் வேலை பளு அதிகரிப்பதோடு மட்டுமல்லாது பல விதமான கரைகளுக்கும் துணிகள் ஆளாகும்.

உங்கள் துணிகளை தொழில் ரீதியான சலவைகாரர்களிடம் கொடுத்தும் கூட சலவை செய்யலாம். ஆனால் அதற்கு அதிக அளவில் செலவாகும். ஏன் நீங்களே எளிய முறைகளை பின்பற்றி சலவை செய்து, சலவை செலவுகளை குறைக்க கூடாது? கண்டிப்பாக இதற்கு சற்று நேரத்தை நீங்கள் செலவு செய்து தான் ஆக வேண்டும். ஆனால் வேலை முடிந்து விட்டால் உங்களை நினைத்து நீங்களே பெருமை அடைவீர்கள். மேலும் உங்கள் துணிகளும் கூட தூய்மையாகவும் நற்பதமாகவும் விளங்கும்.

 துடைக்கும் துண்டு பளிச்சென்று மின்னுவதற்கு, இதோ சில எளிய வழிகள்..!!!

இந்த மிகப்பெரிய வேலையை செய்து முடிக்க பல வழிகள் இருக்கிறது. உங்கள் தேவைக்கு எது வசதியாக உள்ளதோ அந்த வழிமுறையை நீங்கள் உங்கள் அனுபவத்தில் தேர்ந்தெடுத்து விடலாம். நாங்கள் இங்கே உங்களுக்கு சொல்லப்போவது ஒன்றும் ராக்கெட் செய்யும் வித்தையல்ல. சொல்லப்போனால், எளிய முறையில் சிறப்பாக சலவை செய்ய சில அடிப்படை வழிகளே இவைகள். சிறப்பாக செயல்படாவிட்டால் எளிய முறையை பின்பற்றி பயந்தான் என்ன?

 வாஷிங் மெஷின் (சலவை இயந்திரம்)

சலவை செய்ய சிறந்த வழிகளில் ஒன்றாக.............


    தொடர்ந்து இங்கே படிக்கலாம்....


ஆண்கள் அவசரக் குடுக்கையர்களாம் – பெண்களே எதையும் நன்கு திட்டமிடுவார்களாம்..!



பல வகையான வேலைகளை ஒரே நேரத்தில் கொடுக்கும் போது அதனை ஆண்களை விட பெண்களே மிகவும் வேகமாக செய்து முடிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது பல வேலைகளை ஒன்றாக கொடுத்து இவற்றை முடியுங்கள் என்று கூறினால், அவற்றை திட்டமிட்டு, எதனை முதல் செய்வது எதனை பின்னர் செய்வது என்று ஒழுங்கு படுத்திச் செய்வதில் ஆண்கள் மிகவும் தாமதமாக இருக்கிறார்கள் என்று பிரிட்டிஷ் உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த விடயத்தில் இப்போது இரு கேள்விகள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். முதலாவது கேள்வி இது ஏன் என்பதாகும். அடுத்தது எந்த வேலையை கொடுத்தாலும் இந்த நிலைமைதானா அல்லது சில வேலைகளில் மாத்திரந்தான் இந்த நிலைமையா என்பதாகும்.

இதற்கான விடைகளை கண்டுபிடிக்கும் போதுதான் வேலைத்தளங்களை எப்படி ஏற்பாடு செய்வது என்பதில் சரியான திட்டங்களைத் தீட்ட முடியும். பல வேலைகளை ஒன்றாக அடுத்தடுத்து முடிப்பது என்பது வேலைத்தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால், அதுதான் எமது வேலை தொடர்ச்சியாக நடப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்துகிறது.

முன்னைய ஆய்வுகள்


முன்னர் இந்த விடயங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெவ்வேறான முடிவுகளைத் தந்துள்ளன. சீனாவில் நடந்த ஒரு ஆய்வில் பெண்கள், ஆண்களை விட பல வேலைகளை ஒன்றாக...............


    தொடர்ந்து இங்கே படிக்கலாம்....




ஆண் குழந்தைகளை பெறும் தாய்மார்களின் ஆயுள் குறைகின்றது..!



அதிக ஆண் குழந்தைகளை பெறும் தாய்மார்களின் ஆயுள் குறையக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிக ஆண் குழந்தைகளை பெறுவதால் தாய்மார்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

 அந்த ஆய்வில் அதிக ஆண் குழந்தைகள்...............


    தொடர்ந்து இங்கே படிக்கலாம்....


உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்..!

உதடு வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுக்கும் இயற்கைப் பொருட்கள்..!!!



ஒருவரின் அழகை அதிகரித்து வெளிப்படுத்துவதில் உதடுகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய உதடானது ஒருசில பருவக் காலத்தில் அதிகம் வறட்சி அடையும். குறிப்பாக குளிர்காலத்தில் தான் அதிகம் ஏற்படும். இவ்வாறு வறட்சி ஏற்படும் போது உதடுகளைச் சுற்றி வெள்ளையாக இருப்பதோடு, உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, சில சமயங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும்.

ஆகவே குளிர்காலத்தில் சருமத்தை மட்டுமின்றி, உதடுகளையும் சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், உதடுகள் அதன் இயற்கை அழகை இழந்து அசிங்கமாக காணப்படும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, குளிர்காலத்தில் உதடுகளில் வறட்சி ஏற்படாமல் இருக்க எந்த பொருட்களைக் கொண்டு உதடுகளை பராமரித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைக் கொண்டு உதடுகளை பராமரித்து, அழகான உதடுகளைப் பெறுங்கள்.

தேங்காய் எண்ணெய்

தேங்யாக் எணணெயை தினமும் பலமுறை உதடுகளில் தடவி வந்தால், உதடுகளில் வறட்சியால் வெடிப்புகள் ...........


    தொடர்ந்து இங்கே படிக்கலாம்....




 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top