.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Thursday 22 March 2018

பழமொழியில் ரீமிக்ஸ்!! ரீமிக்ஸ்!!


பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க,
பழைய படத்த ரீமேக் பண்றாங்க,
அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்?

அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம்.
அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம்.
ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு ‘cell’ போனாலே சொல் போச்சு’.

பழசு: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
 புதுசு: பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்

 பழசு: இளங்கன்று பயமறியாது
 புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது

 பழசு: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
 புதுசு: கொரியன் செட்டு கதறடிக்கும்

 பழசு: தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு
 புதுசு: தாயும் பிள்ளையும் என்றாலும் போனும் ப்ளூடூத்தும் வேறு

 பழசு: தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்
 புதுசு: பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பினா, பொண்ணு ணிssணீஹ்வே அனுப்பும்

 பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
 புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்

 பழசு: ஆறிலும் சாவு... நூறிலும் சாவு
 புதுசு: ஆறு ரூபாய்க்கும் ரீசார்ஜ், நூறு ரூபாய்க்கும் ரீசார்ஜ்
 பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது
 புதுசு: நெட்வொர்க்காரனை திருத்த முடியாது

 பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு
 புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு

 பழசு: வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு
 புதுசு: செல்போன் ஒண்ணு... சிம்மு ரெண்டு

 பழசு: கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது
 புதுசு: பேசாம இருந்தா, பேலன்ஸ் குறையாது

 பழசு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
 புதுசு: வாயற்ற வாழ்வே குறைவற்ற பேலன்ஸ்

 பழசு: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
 புதுசு: வல்லவனுக்கு செல்லும் ஆயுதம்

 பழசு: குரைக்கிற நாய் கடிக்காது
 புதுசு: கொரியன் போன் உழைக்காது

 பழசு: யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்
 புதுசு: ஆப்பிளுக்கு ஒரு காலம் வந்தா, ஆண்ட்ராய்டுக்கு ஒரு காலம் வரும்

 பழசு: ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது
 புதுசு: டவர் கிடைக்கும் வரை டைம் காத்திருக்காது

 பழசு: கடை தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே
 புதுசு: அடுத்தவன் போன எடுத்து உன் ஆளுகிட்ட பேசாதே

 பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே
 புதுசு: கேமரா இல்லாமல் போனை வாங்காதே

 பழசு: கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
 புதுசு: கேமராவுக்கும் ஆசை, குவாலிட்டிக்கும் ஆசை

 பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்
 புதுசு: போன எடுத்தவன், பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்
 பழசு: பேராசை பெருநஷ்டம்
 புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்

Tuesday 20 March 2018

அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் நியூட்டன்



அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்.
அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப் பார்த்தார்.

'அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கின்றீர்களே அது ஏன்?' என்று நியூட்டனிடம் கேட்டார். அதற்கு நியூட்டன் சொன்னார்: நான் சிறியதும், பெரியதும் என்று இரண்டு பூனைகள் வளர்க்கின்றேன். வீட்டின் அந்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டால் பெரிய துவாரம் வழியாக பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாக சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே இந்த இரண்டு துவாரங்களையும் போட்டிருக்கிறேன்' என்று.

அதற்கு இரண்டு துவாரங்கள் தேவையில்லையே? பெரிய துவரம் வழியாகவே இரண்டு பூனைகளும் வந்து விடலாமே' என்று நண்பர் கூறியதும், விஞ்ஞானி நியூட்டன் திடுக்கிட்டார். 'ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான். எனக்கு இந்த யோசனை தோன்றவில்லையே' என்று கூறியவர் சிறிய துவாரத்தையும் அடைக்கச் சொன்னார்.

Thursday 16 January 2014

இன்று ஒரு தகவல் -- அறிஞர் அண்ணா ...!!



அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்று சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் .அப்பொழுது தான் ஹிந்தி மொழிக்கு எதிராக தமிழகத்தில் பல எதிர்ப்பு போராட்டங்கள் அரங்கேறிய சமயம். அண்ணா அவர்கள் டில்லியில் ஒரு பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்தார் .

அந்த கூட்டத்தில் எல்லோரும் பேசி முடித்த பிறகு அண்ணா அவர்கள் சென்றார் .அந்த இடத்தில் ஹிந்தி மொழிக்கு ஆதரவாக பல ஊடகங்கள் குவிக்க பட்டிருந்தன . அண்ணா பேசும்போது ,அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் அண்ணாவிடம் நீங்கள் பேசுவதை காட்டிலும் எங்களுக்கு பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார் .அண்ணா அவர்களும் பதில் அளிக்க சம்மதித்து இருக்கிறார் .

அப்பொழுது அந்த பத்திரிகையாளர் அண்ணாவிடம் "நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாக்க கூடாது என்று மறுக்கிறீர்கள் " என்று கேட்க அறிஞர் அண்ணாவோ "நீங்கள் எதற்கு ஹிந்தியை ..............

 தொடர்ந்து இங்கே படிக்கலாம்....


Tuesday 7 January 2014

அவசரப்படாதே.! கொஞ்சம் பொறுமையா இரு.!




*ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

" இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. "
" என்ன சொல்றே?
நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?

அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா.

எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது.

கணவர் கப் சிப் ............. ஆகிறார். இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள். அவள் பின்னாடியே ஒரு இளைஞன்.
அப்பா...
என்னம்மா... யார் இந்த பையன்
இவர்தாம்பா அவர்
அவர் ...ன்னா
அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. அவர்தான் இவர். இவரைத்தான் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்.

அப்படியா வாப்பா..உட்கார்.
உட்கார்ந்தான்.
உன் கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா
தாராளாமாய் கேளுங்க. அதுக்காகத்தானே வந்து இருக்கேன்.

இப்போ நீ என்ன செய்துகிட்டு இருக்கே
கடவுளை பற்றி ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

அப்படின்னா... உன் எதிர்காலம் பற்றி என்ன திட்டம் போட்டு வச்சு இருக்கே ?
கடவுள் எல்லாத்தையும் கவனித்து கொள்வார்.

சரி உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்குது. அப்பறம் என்ன செய்வே
அதையும் கடவுள் கவனிச்சுக்குவார்.

சரி போயிட்டு வா .... அவன் நம்பிக்கையோடு புறப்பட்டு போனான்.

அவன் போன பிறகு அம்மா கேட்டாள்.... பையன் எப்படி?

அப்பா சொன்னார். இவனிடம் பணமும் இல்லை. வேலையும் இல்லை. ஆனால் என்னை மட்டும் கடவுளாக நினைத்து கொண்டிருக்கிறான்.

Monday 6 January 2014

அன்புள்ள கணவருக்கு...




ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!

அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம்.

நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்..

ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான்.

அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்..பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே.

அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.

அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்..

இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..?

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்..

ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!!

Wednesday 1 January 2014

வருத்தப்படும் வாலிபர் சங்கம்...!!!!



நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலன்னா, சினிமாவுல இந்த அமெரிக்க மாப்பிள்ளைங்க தொல்ல அதுக்கும் மேல. ஹீரோ கையில மிக்சர் சாப்பிடவே, அமெரிக்காவுல இருந்து பிசினஸ் க்ளாஸ்ல ஃப்ளைட் ஏறி வாரானுங்க இந்த பூம்பழம் ஃபேஸ்காரனுங்க. 7ஓ க்ளாக் பிளேடுல ஷேவ் பண்ணி, ஐஸ்ல வச்ச ஆப்பிள் மாதிரி இருந்தாலும், இந்த ஸ்லீவ்லெஸ் சிங்காரிஸ், அழுகுன அன்னாசி பழம் மாதிரி இருக்குற ஹீரோ மூஞ்சைத்தான் லவ் பண்ணும்னு பைக் பாஸ் போடுறவர்ல இருந்து உள்ள பாப்கார்ன் விக்கிறவர் வரை எல்லோருக்கும் தெரியும்.

ஆனாலும், ஓவர் டைம் பார்த்து சம்பாதிச்ச டாலர்ல இவனுங்க, ஹீரோயினுக்கு டாலர் வச்ச நெக்லஸ் வாங்கிக்கொடுத்து மனச தேத்துறானுங்க. ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட்ல செட் தோசை வாங்கிக் கொடுத்து உடம்பயும் தேத்தி விடுறானுங்க. கல்யாணத்துக்கு பட்டு சேலைல ஆரம்பிச்சு ஃபர்ஸ்ட் நைட்டுக்கு போட் ஹவுஸ் வரை புக்கிங் பண்ணி வச்ச பிறகும் இவனுங்க பண்ற தியாகத்த, தியாகம் பண்றதுல டிகிரி வாங்கின ஏவிஎம் ராஜனும் முத்துராமனும் கூடப் பண்ணியிருக்க மாட்டாங்க. இதுவரை இந்த அமெரிக்க மாப்பிள்ளைகள் செய்யாதது ஒண்ணே ஒண்ணுதான். ஹீரோயினுக்கு குழந்தை பொறந்து மொட்டையடிக்கிறப்ப, மாமான்னு சொல்லி மடில உட்கார வச்சு மொட்டையடிக்காம இருக்கிறதுதான் அது.

பதினெட்டுபட்டில ஒத்த பெட்ரோமாக்ஸ் லைட்ட வச்சிருந்த மகான் கவுண்டமணி கூட அந்த பந்தா காட்டல. ஆனா, இந்த பொண்ண பெத்தவனுங்க காட்டுற பந்தா இருக்கே... அய்யய்யையோ! கல்யாண வயசுல பொண்ணுதானே வச்சிருக்கானுங்க... என்னமோ பத்துப் பதினஞ்சு பெட்ரோல் கிணறு வச்சிருக்கிற ரேஞ்சுல பில்டப் தர்றானுங்க. விவசாயம் பண்ணினா பொண்ணு தர மாட்டாங்களாம், பிரைவேட்ல வேலை செஞ்சா பொண்ணு தர மாட்டாங்களாம், பொண்ணை விட பையன் படிப்பு கம்மியா இருந்தா பொண்ணைத் தரமாட்டாங்களாம். ஏன்யா, அஞ்சாவது படிச்சவங்க அமைச்சராவே ஆகறப்ப, பத்தாவது படிச்சவன் புருஷனாகக் கூடாதா?

பொண்ணே கிடைக்க மாட்டேங்குதுன்னு அவனவன் சாப்பிடாம கிடக்கான்... இதுல மாப்பிள்ளை வீட்டுக்காரனுங்க சில பேரு ஓவர் பத்தா காட்டுறானுங்க. டேய், வாய்க்கு ருசியா சமைக்கிற பொண்ணு வேணும்னு எல்லாம் தேடாதீங்கடா. இப்பல்லாம் பொண்ணுங்க சமைச்சு புருஷனுக்கு எங்க போடுறாங்க? சமைச்சதை போட்டோ எடுத்து பேஸ்புக்லதான் போடுறாங்க. பொண்ணு கண்ணுக்கு லட்சணமா வேணும்ன்னுலாம் வெளிய சொல்லாதீங்கய்யா... திருப்பி பொண்ணுங்களும் அதே மாதிரி ஆசைப்பட்டா நம்ம மரியாதை போயிடும். நானெல்லாம் பொண்ணு பார்க்கப் போனப்ப, பொண்ணுகிட்ட தனியா பேசச் சொன்னாங்க... வேணாம்னுட்டேன். இப்போ அதுக்கும் சேத்து தனியாத்தான் பேசிக்கிட்டு இருக்கேன்.

Monday 30 December 2013

இந்திய விளம்பரங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டது என்னென்ன...?




1. கத்ரினாவுக்கு பொடுகு, தலைமுடி பிரச்சினை இருக்கிறது..., ஷில்பாவுக்கு தலைமுடி உதிர்கிறது.

2. மனைவி இருப்பவன், பக்கத்து வீட்டுக்காரன் டியோடரணட் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

3. உங்கள் தகுதிகளை விட, உங்கள் நிறம் முக்கியத்துவம் வாய்ந்தது.

4. சமையலறையில் உப்பு இல்லையா, கவலை வேண்டாம். டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம் !

5. ஒவ்வொரு பற்பசை பிராண்டும் நமபர் 1 பிராண்ட்தான், எல்லாமே இந்திய பல்மருத்துவர்கள் அனைவராலும் பரிந்துரை செய்யப்படுபவைதான்!!!

6. உங்கள் மகள் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தால் நகைக்கடைக்கோ அல்லது துணிக்கடைக்கோ அழைத்துச் செல்லுங்கள்.

7. ஆண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவதன் ஒரே காரணம் பெண்களைக் கவர்வதற்கே.

8. கோலா பானங்கள் அனைத்துமே எல்லாவகையான பயங்களையும் போக்கிவிடும். தொடர்ந்து பருகி வந்தால் நீங்களும் சூப்பர்மேன் ஆகிவிடுவீர்கள்!!

9. சூப்பர்ஸ்டார்கள் எல்லாருமே பாவம், ரொம்பவும் ஏழைகள். 10 ரூபாய் கொடுத்து கோலா வாங்க இயலாமல் உயிரையே பணயம் வைக்கவும் தயங்க மாட்டார்கள்.

10. ஷாம்பு விளம்பரங்களில் வரும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அவதார் திரைப்பட ஸ்பெஷல் எஃபக்ட்சைவிட அதி உன்னதமானவை.

11. ஷாம்பு அல்லது சோப்பில் இருக்கும் பழப்பொருட்களின் விகிதம், 99% பழச்சாறுகளில் இருக்கும் விகிதத்தை விட அதிகமானது.

12. அமுல் நிறுவனத்தில் நல்ல பால்பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய திறமைசாலிகளைவிட கார்ட்டூன் வரையும் திறமைசாலிகள் அதிகமாக இருக்கிறார்கள்.

13. சாலைகளின் நிலை மோசமாக இருப்பதைக் குறைகூறம் பெரும்பாலான மக்கள், அதே சாலைகளில் ஓட்டுவதற்காகத் தான் வாகனங்களை வாங்குகிறார்கள்.

14. டயரி மில்க் சில்க்- கை மூஞ்சிமுழுக்க அப்பிக்கொள்ளாமல் சாப்பிடவே முடியாது.

15. மோட்டார் பைக் வாங்குவோர் எவரும் பயணம் செய்வதற்காக அல்ல, பெண்களை பிக் அப் செய்யவே வாங்குகிறார்கள்.

16. எல்லா சோப்புகளுமே 99.9% கிருமிகளைக் கொன்று விடும்.

17. பகார்டி சிடிக்கள் தயாரிக்கிறது, கிங் பிஷர் மினரல்வாட்டர் தயாரிக்கிறது என்றே எல்லாரும் நம்புகிறார்கள்.

18. தாயும் மகளும் பேசிக்கொள்கிற ஒரே நேரம், ஹேர் ஆயில் பற்றிப் பேசும்போது மட்டும்தான்.

19. எந்தத்துறை வல்லுநராக இருந்தாலும் சரி, அவர் எப்போதும் வெள்ளைக் கோட் அணிந்திருப்பார்.

Sunday 29 December 2013

உண்மைய சொன்னேன் ..



உண்மைய சொன்னேன் ..

1.ஆஃபீஸ்ல மேனேஜர் லீவு போட்டா நமக்கு வர்ற சந்தோஷம் இருக்கே நாமலே லீவு போட்டா கூட வராது..

2.வேலை தேடுவதை போல் கடினமான வேலை வேறேதும் இல்லை...

3.என்ன தான் நிழல் தந்தாலும் அசைந்து காற்று தராது காங்க்ரீட் சுவர்கள் ..

4.இரு அம்மாகிட்ட சொல்றேன் என்பது பீதிய கெளப்பும் வாசகம் குழந்தைகளுக்கும், அதிமுக எம்.எல்.ஏ களுக்கும்..

5.குடிக்கப்பட்டு கீழே விழுந்துகிடக்கும் பாட்டிலுக்கான மரியாதை கூட, மயங்கி கீழே கிடப்பவனுக்கு கிடைப்பதில்லை..

6.அரிசிக் கஞ்சி குடிச்சா ஏழை , ஓட்ஸ் கஞ்சி குடிச்சா பணக்காரன்...

7.அம்மா உணவகங்களால் பாதிப்பு சரவணபவனுக்கோ வஸந்தபவனுக்கோ அல்ல...ரோட்டோர கையேந்தி பவன்களுக்கு தான்...

8.வெளுத்ததெல்லாம் பாலா இருக்கணும்னு அவசியம் இல்ல பால்டாயிலாவும் இருக்கலாம் ..

Thursday 19 December 2013

10 ரூபாய்க்கு சாப்பாடு - நகைச்சுவை!



தம்பி என்னப்பா அந்த ஓட்டல்ல ஒரே கூட்டமா இருக்கு,



அங்க 10 ரூபாய்க்கு முட்டைவெச்சி சாப்பாடு போடுறாங்களாம்,



என்னது...10 ரூபாய்க்கு முட்டைவெச்சி சாப்பாடு போடுறாங்களா..


அதுசரி வரும்போது ஏன் எல்லாம் மூஞ்சில ரத்தத்தோடு வராங்க,


அவங்க 10 ரூபாய்க்கு  செவுத்துல முட்டவெச்சி

 சாப்பாடு போடுறாங்களாம்.

Wednesday 18 December 2013

புதுக்குறள்.....?




                                            ******புதுக்குறள் *******


1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதே மனைவி சுட்ட தோசை...

2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...

3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
 செய்வது அரசியல்வாதிக்கியல்பு...

4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
 சோகாப்பர் hack செய்யப்பட்டு.

5.விரும்பிய மனம் விரும்பா விடின்
 துரும்பா இளைப்பார் தூய காதலர்..

6.ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்...
மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்

7.மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே
 வாயினால் சுட்ட வடை

8.மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது
 அரியவாம் கடலைபோ டுதல்

9.பீடியால் சுட்ட புண் உள்ளாறும்
 ஆறாதே லேடியால் கெட்ட மனம்

10.கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று
 தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு

11.போடுக கடலை போடுக போட்டபின் பில்லுகட்டுக அதற்குத் தக...

Monday 16 December 2013

புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம்?



நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்...


ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.

பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?

ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன்.

பெண்: நீ என்னை விரும்புகிறாயா?

ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !

பெண்: நீ என்னை மறந்து விடுவாயா?

ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்!

பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா?

ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.

பெண்: நீ என்னை அடிப்பாயா?

ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்

பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா?

திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்...

Tuesday 10 December 2013

தோல்விகளையும் ரொம்ப நேசிக்கிறவர்…நகைச்சுவை!


-
“நாணயமா  நடந்து கொள்ளணும்னு ஆசிரியர்
 சொன்னா  கோபப்படுறியே   ஏன்?”
-
அவர் சொன்ன மாதிரி நடந்தா  சில்லரை  பையன்னு
 கேலி பண்ணுவாங்கடா…!!
-



-
“தோல்விகளை  ரொம்பவும் நேசிக்கிறவரா
“யாரு   இவர்?”
-
டுடோரியல் காலேஜ் பிரின்ஸிபால்…!!
-


-
நாய் படம் வரைஞ்சிட்டு வாய் மட்டும் ஏன் வரையாம
 விட்டு வெச்சிருக்கே?”
-
“சார்! அது வாயில்லா பிராணி சார்!.”
-


-
“நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்விக்கு ‘டான் டான்’ னு
 பதில் சொன்னியாமே…!     அப்படி என்ன கேள்வி
 கேட்டாங்க?”
-
“ஆராய்ச்சி மணி எப்படி அடிக்கும்னு…!!





” புத்தியில்லாமல் வியாபாரம் செஞ்சதால் நஷ்டமா
 போச்சா…ஏண்டி?
-
” கை ரொம்ப நீளமா இருந்த நான்  பூ வியாபாரம்
 செஞ்சு தொலைச்சிட்டேன்…!!

“மலை ஏறுறதுக்கு முக்கியமா என்ன வேணும்?” - நகைச்சுவை!


1. நோயாளி: தலை சுத்துது டாக்டர்…
-
டாக்டர்: என்னோட கண்ணுக்கு அப்படி ஒண்ணும்
 தெரியலையே!
-

-
2. ”சுப்பிரமணிக்கும் மாசிலாமணிக்கும் என்ன தகராறு?”
-
“”ரெண்டு பேர்லயும் இருக்கறது… ரெண்டு பேர்கிட்டயும்
 இல்ல… அதுதான் தகராறு..!
-


-
3. ராமு: உங்க மானேஜர் எதுக்கு, எப்பவும் கையில
 பிளேடு வெச்சுருக்கார்?
-
சேது: யாராவது சரியா வேலை செய்யலைன்னா
 அவங்க சீட்டைக் கிழிச்சுடுவாராம்!
-



4. “”மலை ஏறுறதுக்கு முக்கியமா என்ன வேணும்?”
-
“”ஒரு மலை வேணும் சார்!”
-



5. அப்பா: உனக்கு ஸ்கூல்ல யாரை ரொம்பப் பிடிக்கும்?
-
மகன்: மணியடிக்கிற பியூனை ரொம்பப் பிடிக்கும்பா..!
-



6. “”பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம்
 உனக்கில்லை அப்பா!”

-
“”ஏண்டா அப்படிச் சொல்றே?”

-
“”பின்னே! அவன் அப்பா ஆபீஸிலிருந்து முழு பென்சில்
 கொண்டு வந்து அவனுக்குத் தர்றாரு. நீ துண்டுப்
 பென்சில்களையே தூக்கிக்கிட்டு வர்றே!”

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?



அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?


1 ஏங்க எங்க போறீங்க?

2 யார்கூடப் போறீங்க?

3 ஏன் போறீங்க?

4 எப்படி போறீங்க?

5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?

6 ஏன் நீங்கமட்டும் போறீங்க?

7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?

8 நானும் உங்ககூட வரட்டுமா?

9 எப்ப திரும்ப வருவீங்க?

10 எங்க சாப்பிடுவீஙக?

11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?

13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?

14 பதில் சொல்லுங்க ஏன்?

15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

16 நீங்க என்னை அம்மாவீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா?

17 நான் அனி திரும்ப வரமாடடேன்

18 ஏன் பேசாம இருக்கீங்க ?

19 என்ன தடுத்த நிறுத்தமாட்டீஙகளா?

20 இதுக்கு முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்தமாதிரிபண்ணிருக்கீங்களா?

21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?

22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???


இதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா?????

Monday 9 December 2013

விவசாயி ; படிச்சவன் - நகைச்சுவை!


படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்.., அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கு..


அவனுக்கு ஆச்சரியமா இருக்கு.., பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்…


படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?


விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,


படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?


விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..


படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?


விவசாயி : இதுக்குதான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!


படிச்சவன்: ? ? ? ? ?

Sunday 8 December 2013

தொழில்நுட்ப காதல்..!



பெண் அப்பா நான் லவ் பண்றேன்..


அப்பா : பையன் எந்த ஊரு..


பெண்: UK ல இருக்கான்...


அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி?


பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ...


WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ......


WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ...


அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ...


அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...


ONLINEல ஜாலியா இருங்க...


E - BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க...


G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு...


எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு.... அவ்வுளவுதான்....


பெண் : ???????????

Saturday 7 December 2013

நகைச்சுவை!

ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு 

நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச 

விரும்புகிறேன்…”



இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?”


அவள் : “இல்லை”


இவன் : “கீதா ?”


அவள் : “இல்லை”


இவன் : “உமா ?”


அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு 

ஆசிரியை...!!!

Thursday 5 December 2013

பகிர்ந்துகொள்ள !! - 5

ஒரு ஆங்கிலேயன் , ஒரு புகை வண்டியிலிருந்து வெளியே வந்தான். அவனை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் , அவள் ,” என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் ? “ என்று கவலையோடு கேட்டாள்.


அவன்,” ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன் . அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது,.” என்றான்


அவள் “ நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே. உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ? “


அவன் , “ நான் அப்படித்தான் நினைத்தேன் ஆனால், என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை , நான் யாரிடம் கேட்பது? “ என்றான்

பகிர்ந்துகொள்ள !! - 3


மிகவும் சமத்தான பையன் ஒருவன் நேர்காணலுக்குச் சென்றபோது, அவனை நேர்முகம் செய்தவர் சற்றே கர்வத்துடன் கேட்டார்.


"உனக்கு சுலபமான 10 கேள்விகள் கேட்கலாமா அல்லது கடினமான ஒரே கேள்வி கேட்கலாமா?"


மாணவன் சற்றே கர்வத்துடன் சொன்னான், "கஷ்டமான ஒரே கேள்வி கேளுங்கள்"


"வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன?"


"3000 மில்லியன் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன" என்றான் இமை கொட்டாமல்.


அவர் கேட்டார், "அதெப்படி சொல்கிறாய்? உன்னால் நிரூபிக்க முடியுமா?"


அவன் அமைதியாகச் சொன்னான் "நீங்கள் ஒரே ஒரு கேள்விதானே கேட்க ஒப்புக்கொண்டிர்கள்?"


நேர்முகம் செய்தவர் Huh?Huh???

பகிர்ந்துகொள்ள !! - 1

புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. "இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை" என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.



ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. "சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?" என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.



"என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே" என்று மனைவி கேட்க, "அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி" என்றான் கணவன்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top