.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label தொழில்நுட்பம்-கணினி. Show all posts
Showing posts with label தொழில்நுட்பம்-கணினி. Show all posts

Tuesday 20 March 2018

ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!




ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!

தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை.

நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம். எனவே, கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்று, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்றியமையாத ஒரு மென்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயங்கும் அதிகத் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராமாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் உள்ளன.

நம்மில் பலரும், இந்த புரோகிராம்கள் எப்படி வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிகின்றன, ADVERTISEMENT கம்ப்யூட்டரில் மற்ற சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் செயல்பாட்டில் குறுக்கிடாமல் எவ்வாறு இயங்குகின்றன, ஏன் இவற்றை அப்டேட் செய்திட வேண்டும், இவற்றைக் கொண்டு குறிப்பிட்ட கால அளவில், கம்ப்யூட்டரை சோதனை செய்திட வேண்டுமா என்பது குறித்து எண்ணி இருக்கலாம். இவற்றிற்கான பதில்களைச் சுருக்கமாக இங்கு காணலாம். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் என்பது, பல நிலைகளில் இயங்கும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு வட்டத்தில் ஒரு முக்கிய பகுதி ஆகும். நீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது குறித்து மிக அதிகமாகத் தெரிந்தவராக இருந்தாலும், அதனை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என அறிந்தவராக இருந்தாலும், தற்போது பிரவுசர்களில் காணப்படும், வைரஸ் புரோகிராம்கள் எளிதாகத் தாக்கக் கூடிய தவறான குறியீடுகள், ப்ளக் இன் புரோகிராம்கள், ஏன் vulnerabilities என்று சொல்லக் கூடிய வழுக்கள் பல உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகிய அனைத்தும், செம்மையாகச் செயல்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை உங்களின் அவசியத் தேவையாக மாற்றுகிறது.

நம் கம்ப்யூட்டர் இயங்கும்போது, பின்புலத்தில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். கம்ப்யூட்டரில் திறக்கப்படும் ஒவ்வொரு பைலையும் அது சோதனை செய்திடும். இதனை, உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் தன்மைக் கேற்பப் பல பெயர்களால் அழைக்கின்றனர். அவை - onaccess scanning, background scanning, resident scanning, realtime protection. நீங்கள் ஒரு EXE பைலை இயக்க, அதனை இருமுறை கிளிக் செய்திடுகையில், அது உடனே இயக்கப்படுகிறது என்றுதானே நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் இல்லை. உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் முதலில் அந்த பைலை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் சோதனை செய்கிறது.

ஏற்கனவே அந்த புரோகிராமிற்குத் தெரிந்த வைரஸ் புரோகிராம்கள் மற்றும் பிற வகையான மால்வேர் புரோகிராம்கள் அதில் இணைந்துள்ளதா எனச் சோதனை செய்திடும். இவற்றுடன் தானாக வைரஸை அறிந்து கொள்ளும் சோதனையையும் மேற்கொள்கிறது. இதனை "heuristic" checking என அழைக்கின்றனர். இந்த வகையில், திறக்கப்படும் புரோகிராம் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு எதனையும் மேற்கொள்கிறதா என, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை மேற்கொள்கிறது. இதன் மூலம் அதுவரை அறியப்படாத வைரஸ் இருப்பதனை அறிந்து கொள்கிறது.

இயக்க (EXE) பைல்கள் மட்டுமின்றி, மற்ற வகை பைல்களையும் இது சோதனை செய்கிறது. எடுத்துக்காட்டாக, சுருக்கப்பட்ட .zip archive பைலில், வைரஸ் புரோகிராமும் சேர்ந்தே சுருக்கப்பட்டு இருக்கலாம். அல்லது வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் கெடுதல் விளைவிக்கும் மேக்ரோ ஒன்று பதிந்திருக்கலாம். எனவே, எப்போதெல்லாம் பைல்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அப்போதெல்லாம், ஆண்ட்டி வைரஸ் சோதனை நடத்தப்படும். எடுத்துக் காட்டாக, நீங்கள் ஒரு EXE பைலை டவுண்லோட் செய்தாலோ, அல்லது ப்ளாஷ் ட்ரைவ் போன்றவற்றிலிருந்து மாற்றினாலோ, அதனை நீங்கள் இயக்குவதற்குத் திறக்கும் முன்னரே, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனை சோதனை செய்திடும். இது போன்ற, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றின், எப்போதும் சோதனை செய்திடும் தன்மையை நாம் நிறுத்தி வைக்கலாம். ஆனால், அது சரியல்ல. ஏனென்றால், வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்து, அதன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டால், அதனை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

பாஸ்வேர்டு குறித்த சில விளக்கங்கள்….!



இன்று வீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம்? வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும். அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள்.

மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம். தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற்கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம். இவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது. பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். dubidubi என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே.

இதனை d*uBi(dU(bi என்ற படி இன்னும் நீளமாக அமைக்கலாம். பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவது சற்று கடினமே.

Sunday 19 January 2014

Data Card இன்டர்னெட்டை அன்லாக் செய்வது எப்படி?


நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.


நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது?


முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று


http://www.winte........


Saturday 18 January 2014

“படித்ததும் கிழித்துவிடவும்” வகையிலான கைபேசி மென்பொருட்கள்.

இணையத்தில் நீங்கள் தனிச் செய்தியில் பரிமாறும் படங்கள் , தகவல்கள் போன்றவை எதோ ஒரு செர்வர் கணினியில் சேமித்து வைக்கப்பட்டே இருக்கும். சில மாதங்களுக்கு முன்னர் கூட, முகநூல் தனிச் செய்தியில் அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட படங்களை பயனாளர்கள் அழித்தாலும் , முகநூல் நிறுவனத்தின் கணினிகள் அதை எப்பொழுதும் ஒரு பிரதி எடுத்து வைத்துள்ளது என்பது ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது.


ஆதலால், பல மென்பொருள்கள் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் கவனத்திற்கு வராமல் பயன்படுத்தவோ, சேமிக்கவோ மாட்டோம் எனும் வாக்குறுதியுடன் வெளிவந்தன.


அதில் முதன்மையாகவும், வெற்றியும் பெற்ற நிறுவனங்களைப் பற்றிக் காண்போம்.


டயாஸ்போரா (Diaspora)


நான்கு மென்பொருள் வல்லுனர்கள் சேர்ந்து, முகநூலை விட ஒரு பாதுகாப்பான, மற்றும் உங்களின் தனிப்பட்ட விவரங்களை உங்களுக்கே முழுக் கட்டுப்பாட்டுடன் உருவாக்கித் தருகிறோம். எங்களுக்கு இதற்கு $10,000 செலவாகும் என அறிவித்தனர். ஆனால் ......


எல்லாவற்றையும் சரி ஆக்கும் இணையதளம்.


வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற உணர்வை தரக்கூடிய இணையதளம் இருக்கிறது. மேக் -எவ்ரிதிங் ஓகே எனும் அந்த தளம் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை தருகிறது.


பிரச்சனைகள் வாட்டும் போதோ அல்லது மோசமான மனநிலையில் இருக்கும் போதோ நமக்கு தேவைப்படுவதெல்லாம், ஆறுதல் வார்த்தைகளும், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் தான். இவை இருந்தால்............

 தொடர்ந்து இங்கே படிக்கலாம்....

ஸ்பெஷல் புளூடூத் மவுஸ்...!!



லாஜிடெக் நிறுவனம், தான் வடிவமைக்கும் மவுஸ்களுக்குப் புகழ் பெற்றது. தொடக்கத்திலிருந்து இந்த புகழை இந்நிறுவனம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.


அண்மையில் Logitech Ultrathin Touch Mouse T630 என்ற பெயரில் புதிய மவுஸ் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயரைக்கேற்ற வகையில்,...........



கம்ப்யூட்டரை மாற்றும் புதிய ராம் சிப்கள்...?



புதிய வகை ராம் மெமரி சிப்கள் அறிமுகமாகி, வரும் ஆண்டுகளில் பெர்சனல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பெரும் புரட்சியைக் கொண்டு வர இருக்கின்றன. இப்போதெல்லாம், மெமரி மற்றும் கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் என்பவனவற்றின் இடையே உள்ள மாறுபாடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இது நாம் பெர்சனல் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதனை மாற்றப் போகிறது.


புதிய சிப்கள், தற்போது டேப்ளட்டில் இயங்கும் வகையில், பெர்சனல் கம்ப்யூட்டரிலும் இயங்கும். இதில் MRAM (Magnetoresistive RAM) என்ற வகை மெமரி சிப் புதிய தொழில் நுட்பமான nonvolatile memory technology ஐக் கொண்டிருக்கும். இதே போல resistive RAM — RRAM சிப்களும் சில எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டதாக இருக்கும்.


வழக்கமான DRAM மெமரி சிப்கள், தன் ஒவ்வொரு மெமரி செல்லிலும் எலக்ட்ரிகல் சார்ஜ் பயன்படுத்தி பிட்களை (ones and zeros) ஸ்டோர் செய்திடும். ஆனால், Magnetoresistive RAM (MRAM) காந்த.................



Friday 17 January 2014

பிரவுசர் To பிரவுசர் பேவரிட்ஸ் மாற்றம்..!



இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்களில் பலர், தாங்கள் ஏற்கனவே அமைத்த, தங்களுக்குப் பிடித்தமான இணைய தளங்களின் முகவரிகள் அடங்கிய பேவரிட்ஸ் பட்டியலை எப்படி, தங்களின் புதிய பதிப்பிற்கு மாற்றிக் கொள்வதென வழியைத்தேடுகின்றனர்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மேம்படுத்தப்பட்ட பதிப்பு மட்டுமின்றி, வேறு பிரவுசர்களுக்கும் மாற்றக் கூடிய வழிகளைக் காணலாம்.

1. ஏற்கனவே பேக் அப் செய்து வைத்தவற்றிலிருந்து மாற்றம் செய்திட, "Favorites” பட்டனில் முதலில் கிளிக் செய்திடவும். "Add to Favorites” என்பதன் அருகே உள்ள அம்புக் குறியில் அடுத்து கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில் "Import and Export” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Import /Export Settings விண்டோ தேர்ந்தெடுக்கப்படும்.

2. அடுத்து "Import from a file” என்ற ரேடியோ.................

 தொடர்ந்து இங்கே படிக்கலாம்....



Sunday 5 January 2014

Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி..?



உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி!!
நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.

சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code
இல் புதிய Window மூலம் Open ஆகும்.
அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.
அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும்.
இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3" இருக்கும் list கிடைக்கும்.

உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code
அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2" இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது

சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம?
புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை
paste பண்ணவும்
இதுமாதிரி [ www.facebook.com/1000011345400]
இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.

நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்பதை அறியட்டும்........

கம்ப்யூட்டர் பராமரிப்பு..!




நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் “”தினமும் என்னைக் கவனி” என்று எழுதப் பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோ மொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அது ஓடாத மோட்டார் வாகனமாக மாறிவிடும். அதே போல கம்ப்யூட்டரிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பார்க்கலாமா!

1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பதுதான். இதற்கு சி கிளீனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.

2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாமே. இதற்கென ஓரிரு நிமிடங்கள் தானே ஆகும்.

3. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் (Defrag) செய்வது மிக அவசியம். இதற்கான கால அவகாசம் நீங்கள் புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்வதனைப் பொறுத்துள்ளது. இருப்பினும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்வது நல்லது.

4. சிகிளீனர் போல கிளீன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் மூன்று முறை இதனைப் பயன்படுத்துவார்கள். டெம்பரரி பைல்களை நீக்குகையில் ரீசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.

5.இன்னொரு வழியும் உள்ளது. Start மெனு சென்று அங்கு கிடைக்கும் ரன் பாக்ஸ் (Start>Run) செல்லுங்கள். %temp% என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடுங்கள். உடனே தற்காலிக பைல்கள் உள்ள போல்டர்கள் அனைத்தும் கிடைக்கும். வேறு எந்த தயக்கமும் இன்றி அனைத்தும் டெலீட் செய்திடுங்கள். ஒரு சில பைல்கள் அல்லது போல்டர்கள் அழிக்கப்பட முடியவில்லை என்று செய்திகள் வரலாம். எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவையும் அழித்திடுங்கள்.

6. விண்டோஸ் தரும் ஆட்/ரிமூவ் புரோகிராம் மூலம் புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்தால், அது அந்த புரோகிராம் சார்ந்த பைல்களை முழுமையாக நீக்குவதில்லை. எனவே இதற்கென உள்ள சில புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.http://www.revouninstaller.com/என்ற தளத்தில் இந்த புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.

7. நீங்கள் வைத்து அவ்வப்போது அப்டேட் செய்திடும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சில மால்வேர்கள் மற்றும் ஸ்பை வேர்களை நீக்கக் கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை நீக்குவதற்கென உருவாக்கப்பட்ட புரோகிராம்களை தினந்தோறும் இயக்கவும்.

8. கம்ப்யூட்டரை கிளீன் செய்வதைப் போல அதில் உள்ள டேட்டாவினப் பாதுகாப்பதற்கும் சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். எனவே தினந்தோறும் வேலை முடித்தவுடன் நாம் உருவாக்கிய மற்றும் திருத்திய பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
தினந்தோறும் பேக் அப் செய்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஹார்ட் டிஸ்க் முழுவதையும் ஒரு இமேஜாக உருவாக்கி பேக் அப் டிஸ்க்கில் வைப்பது நல்லது. இந்த இமேஜ் இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இந்த இமேஜ் விண்டோஸ் இயக்கம் முதல் உருவாக்கிய பைல்கள் வரை அனைத்தும் தரும்.

9. ரிஜிஸ்ட்ரி யை கிளீன் செய்திடுங்கள் என்று சில கட்டுரைகளில் படிக்கலாம். கம்ப்யூட்டர் களுக்குப் புதியவரா நீங்கள்? அப்படியானால் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம். என் கம்ப்யூட்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித ரெஜிஸ்ட்ரி கிளீனிங் செய்திடாமல் நன்றாக இயங்கிக் கொண்டு தான் உள்ளது.

Saturday 4 January 2014

Windows 8 பிரச்சினைக்கான தீர்வு...



நண்பரே நீங்க விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்களா?

திடீரென அது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு உங்களுக்கு சிக்கல் தருகிறதா? இந்த சிஸ்டங் களில், இதனை நாமே ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டறியலாம். முதலில் பிரச்னை என்ன எனப் பார்க்க வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்த வுடன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, எப்8 கீயை விட்டுவிட்டு அழுத்தவும். இதனைச் சரியாக செய்தால், உங்களுக்கு ஊதா நிறத்தில் ஒரு திரை காட்டப்படும்.

இதன் தலைப்பு "Choose an option" என இருக்கும். இதில் "Continue", "Troubleshoot" மற்றும் "Turn off your PC." என மூன்று ஆப்ஷன்கள் தரப்படும். இவற்றில், Troubleshoot என்ற ஆப்ஷனைத் தட்டுங்கள்; அல்லது கிளிக் செய்திடுங்கள். அதன் பின்னர், "Advanced options" என்பதில் இதே போல கிளிக் செய்திடுங்கள். இங்கு கிடைக்கும் விண்டோவில் பல டூல்கள் காட்டப்படும்.

இவற்றைப் பயன் படுத்தி, உங்கள் சிஸ்டத்தின் பிரச்னை என்ன வெனச் சரியாகக் கண்டறியலாம்.

ஏற்கனவே, சிஸ்டம் இமேஜ் பைல் உருவாக்கி வைத்திருந் தால், அந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல, இதில் ஆப்ஷன் தரப்பட்டி ருக்கும்.

மேலும் கம்ப்யூட்டரை சேப் மோடுக்குக் கொண்டு செல்லவும் ஆப்ஷன் கிடைக்கும். இவற்றின் மூலம், சிக்கலைத் தீர்த்து, கம்ப்யூட்டரை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்.

Monday 30 December 2013

கனவுகளை நிறைவேற்றித்தரும் இணையதள‌ம்....!




எல்லோருக்கும் கனவுகள் உண்டு.ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றலோ வாய்ப்போ எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை.


சின்ன கனவோ பெரிய கனவோ அவற்றை நிரைவேற்றித்தர யாராவது உறுதி அளித்து உதவி செய்தால் எப்படி இருக்கும்?அற்புதமாக தான் இருக்கும் ஆனால் அத்தகைய நல்லிதயங்களை எங்கே தேடுவது என்று கேட்கிறீர்களா?


கவலையை விடுங்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்றித்தரக்கூடிய நல்ல மனிதர்களை கண்டு பிடித்து தரும் இணைய‌தளம் ஒன்று உதயமாகியிருக்கிறது. ஸ்பியின் நாட்டில் குடியேறியுள்ள கொலம்பியா நாட்டைச்சேர்ந்த கட்டிட கலை நிபுணர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் உங்கள் கனவுகளை சொல்லுங்கள் அதனை நிறைவேற்றித்தருகிறோம் என்று உத்வேகம் அளிக்கிறது.


அதாவது சமூக வலைப்பின்னல் வகையைச்சேர்ந்த இந்த தள‌த்தில் எவர் ஒருவரும் தங்கள் கனவை குறிப்பிட்டால் சக உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து அதனை நிறைவேற்றித்தருகின்றனர்.ஆனால் அதற்கு முன் நாமும் பதிலுக்கு இப்படி முன்று உறுப்பினர்களின் கனவுகள் நிரைவேற உதவுவதாக வாக்கு தர வேண்டும்.


அது தான் இந்த தள‌த்தின் சிற‌ப்பம்சம்.நம்முடைய கணவு மற்றவர்கள் உஅதவியால் உண்மையாவதோடு நாமும் மற்றவர்களின் கனவு பூர்த்தியாக கைகொடுக்கிறோம்.இப்படி சங்கிலித்தொடராக கணவுகள் நிறைவேறிக்கொண்டே இருக்கும். சமூக வலைப்பின்னல் கருத்தாக்கத்தை நன்மை எல்லோருக்கும் நன்மை செய்யும் நோக்கத்தோடு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.


லாபாப்பயா என்னும் பெயரில் பிலிப் வேலாகியூஸ் இதனை உருவாக்கியுள்ளார். மனிதர் கொலம்பியாவில் வெற்றிகரமான கட்டிட கலை நிபுணராக திகழ்ந்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் தொழில் மீது வெறுப்பு வந்திருக்கிறது.அதாவது வீடுகளை வாங்கி வசிக்கும் மக்களின் நலனில் அக்கரை செலுத்தும் வகையில் தனது தொழில் அமையவில்லை என அவர் உணர்ந்திருக்கிறார்.


இதனையடுத்து கொலம்பியாவில் இருந்து ஸ்பெயின் நாட்டில் குடியேறி எல்லோருக்கும் நன்மை பய்க்கும் நோக்கத்தொடு லாப்பபயா இணையதளத்தை நிறுவினார்.


கொலம்பியாவில் அதிகம் காணப்படும் பப்பாளியின் ஆங்கில பெயரிலேயே தளத்தை அமைத்துள்ளார்.பப்பாளி விதைகளை போல இந்த தளம் மூலம் பலரது கணவுகள் நிறைவேறி மேலும் பலரது கணவுகள் நிறைவேற வேண்டும் என்று அவர் கனவு காண்கிறார்.


இப்போது உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு நிலவும் பொது சக மனிதர்கள் கை கொடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் அவர் நம்புகிறார்.


உதவி செய்ய வேண்டும் என்பது தொற்று வியாதியைப்போல் இண்டெந்ர்நெட் முலம் பரவ வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.தனி மனிதர்களின் கணவுகளை நினைவாக்க வேண்டும் என்ப்தே இந்த முயற்சியின் நோக்கம் என்கிறார் அவர்.


நகரச‌பைகளோடு இணைந்து பெரிய அளவிலான மக்கள் நலத்திட்டங்களுக்கும் கைகொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

http://lapapaya.org/home/

Sunday 29 December 2013

செல்போன் சந்தேகங்களுக்கு தீர்வு தரும் செயலி..?




செல்போன் என்று வாங்கிவிட்டால் அதன் செயல்பாட்டில் அடிக்கடிசந்தேகங்களும் பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். அதிலும் ஸ்மார்ட் போன்கள்என்றால் கேட்கவே வேண்டாம். இது போன்ற நேரங்களில் கைகளை பிசைந்து கொண்டும்நிற்க வேண்டாம். சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு பதில் பெறமுடியாமல் அல்லாடவும் வேண்டாம்.


ஒரே ஒரு குறுஞ்செய்தியில் உங்கள் செல்போன் சார்ந்த பிரச்சனைக்கான தீர்வைஉரிய நிபுணர்களிடம் இருந்து தெரிந்து கொண்டு விடலாம் :டிவைஸ் ஹலெப் செயலிஇந்த நம்பிக்கையை தான் அளிக்கிறது. மும்பையை சேர்ந்த ஹாப்டிக் எனும்நிறுவனத்தால் உருவாகக்ப்பட்டுள்ள செயலி இது. ஆப்பிலின் ஐபோன் மற்றும்ஆண்ட்ய்ராய்டில் செயல்படக்கூடிய இந்த செயலியின் வழியே உங்கள் செல்போன்பிரச்ச்னைகளை குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கலாம். இந்த சந்தேகங்களுக்கானதீர்வுகளை தொடர்புடைய நிபுணர்கள் குறுஞ்செய்தி வழியாகவே வழங்குவார்கள்.


செல்போன்பயன்பாட்டில் கில்லாடிகளாக இருக்கும் நபர்கள் மற்றும் செல்போன்நிறுவனங்களிலேயே பணியாற்றியவர்களை சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும்நிபுணர்களாக இணைத்து கொண்டிருப்பதாக ஹாப்டிக் சொல்கிறது.


செல்போனில்நாம் அதிகம் பயன்படுத்துவது குறுஞ்செய்தி வசதியை தான். ஆனாலும் கூடசெல்போனில் ஒரு பிரச்ச்னை என்றால் யாருக்காவது போன் செய்து அல்லாடவேண்டியிருக்கிறது. இந்த நிலையை மாற்றி செல்போன் சந்தேகங்களுக்குகுறுஞ்செய்தி வடிவிலேயே எளிதான பதில் பெற உதவும் டிவைஸ் ஹெல்ப் செயலியைமுதலில் உருவாக்கியிருப்பதாக ஹாப்டிக் தனது இணையதளத்தில்குறிப்பிட்டுள்ளது. அடுத்த கட்டமாக செயலி மூலமே அனைத்து தொழில்நுட்பஉதவிகளையும் பெற வைக்கும் திட்டம் இருக்கிறதாம். டிவைஸ் ஹெல்ப் ஆர்ம்பம்தான் என்கிறது ஹாப்டிக்.

யூடியூப் வழங்கும் புதிய வசதி....? அற்புதம்!




தனிநபர் தொலைகாட்சி பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது வரை யோசிக்கவிட்டாலும் இனி யோசியுங்கள். ஏனெனில் தனிநபர் தொலைகாட்சி நடத்துவது மிகவும் சுலபமானது. அதை நீங்களும் கூட செய்யலாம். எப்படி என்று ஆர்வத்துடன் கேட்கிறீர்களா? பிரபல வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் இதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது.


இணைய உலகில் ஸ்டீரிமிங் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பட்டனை தட்டியதும் குழாயில் இருந்து தண்ணீர் பாய்வது போல ஆடியோ அல்லது விடியோ கோப்புக்கள் கிளிக் செய்ததும் ஒளிபரப்பாகத்துவங்கி விடுவதை தான் ஸ்டீரிமிங் என்கின்றனர். ஸ்டீரிமிங் செய்யப்படும் போது கோப்புகளை டவுண்லோடு செய்யத்தேவையில்லை. ஒரு நிகழ்ச்சி நடக்கும் போதே ஸ்ட்டிர்மிங் செய்யப்பட்டால் அதை நேரடியாகவே பார்த்தோ கேட்டோ ரசிக்கலாம். இதற்கு லைவ் ஸ்டீரிமிங் என்று பெயர். தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்புக்கு நிகரானது.


இப்போது யூடியூப்பிற்கு வருவோம். யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து ரசிப்பது போலவே நாமும் கூ ட அதில் சுலபமாக வீடியோக்களை பதிவேற்றலாம். விரும்பினால் யூடியூப்பில் ஒரு கணக்கு துவங்கி நமக்கான சேனலையும் அமைத்து கொள்ளலாம். இந்த சேனல் வசதியையே கூட நமக்கான தொலைக்காட்சி சேனல் என்று சொல்லலாம். பலர் வெற்றிகரமாக இப்படி யூடியூப்பில் சொந்த சேனை வைத்திருக்கின்றனர். வீடீயோ வலைப்பதிவாளர்களும் கூட இருக்கின்றனர்.


ஆனால் இந்த சேனலில் என்ன பிரச்சனை என்றால் நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க செய்ய முடியாது. ஏற்கனவே ஒளிப்பதிவு செய்த நிகழ்ச்சிகளை வீடியோ கோப்பாக பதிவேற்றி பார்க்க செய்யலாம்.
இதற்கு மாறாக நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க செய்ய முடிந்தால் எப்படி இருக்கும் எனும் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் யூடியூப் சில மாதங்களுக்கு முன் நேரடி ஒளிபரப்பு வசதியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நிகழ்ச்சிகளை அவை நடக்கும் போதே யூடியூப்பில் பார்க்க செய்வது சாத்தியம். முதலில் இந்த வசதி அதிக சந்தாதாரர்களை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு குறைந்தது ஆயிரம் சந்தாதாரர்களாவது இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.


இப்போது யூடியூப்பில் சரி பார்க்கப்பட்ட கணக்கு உள்ள யாரும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, உங்களிடம் யூடியூப் கணக்கு இருந்தால் போதும் நீங்களும் கூட யூடியூப்பில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப துவங்கிவிடலாம். அது மட்டும் அல்ல கூகுல் ஹாங்கவுட்ஸ் சேவையையும் இதில் இணைக்க முடியும். எனவே ஹாங்கவுட்ஸ் பயன்படுத்துவர்கள் அதில் பகிர்ந்து கொள்ளும் வீடியோ தகவலை யூடியூப்பிலும் ஒருங்கிணைக்க முடியும். மேலும் இப்படி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பது போன்ற புள்ளி விவரங்களையும் யூடியூப்பே தருகின்றது.


வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இசைக்குழு போன்றவை இந்த நேரடி ஒளிபரப்பு வசதியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களோடு மேலும் துடிப்பான வழியில் தொடர்பு கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. ஏன் தனிநப்ர்களும் கூட இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
திறமையும் ஆர்வாமும் இருந்தால் நீங்களே நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பவும் செய்யலாம். அது பார்வையாளர்களை காவருமானால் உங்களுக்கான தனிநபர் தொலைகாட்சி தாயாராகிவிட்டது என பொருள். யார் கண்டது யூடியூப்பில் இத்தனை லட்சம் பேர் பார்த்த வீடியோ என்று தானே இப்போது பெசுகிறோம். இனி வரும் காலத்தில் இத்தனை லட்சம் பார்த்து ரசித்த நேரடி நிகழ்ச்சி என்று பேசப்படலாம்.

கம்ப்யூட்டர் மேதைக்கு அரச மன்னிப்பு....?



ஒரு வரலாற்று தவறு அரச மன்னிப்பு மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது. கணிணி யுகத்தின் முன்னோடியும் , இரண்டாம் உலகபோரில் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை காக்க தனது கணிணி திறமை மூலம் உதவியவருமான ஆலன் டியிரிங் மீதான களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர் என் தண்டிக்கப்பட்ட டியூரிங்கிற்கு பிரிட்டன் மகாரணியின் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆலன் டியூரிங் கண்ணி யுகத்தின் முன்னோடி. கணிதப்புலி. அந்த காலத்து தாக்காளர். அப்போதே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைப்பது பற்றி யோசித்தவர். ஆரம்ப கால கப்யூட்டர்களுக்கான நிரல்களை உருவாக்கியவர். இன்று கம்ப்யூட்டர் , சூப்பர் கம்ப்யூட்டர் என்று எல்லாம் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களுக்காக அவருக்கு உலகம் நன்றி கடன் பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஹிட்லரின் கை ஓங்கியிருந்த இரண்டாம் உலகப்போரின் போது அவரது பங்களிப்பே நேச நாடுகளுக்கு வெற்றியை தேடித்தந்ததோடு ஆயிரக்கணக்கானோரின் உயிர்களையும் காப்பாற்றியது. எனியாக் கம்யூட்டர் மூலம் ஹிட்லர் அனுப்பிய ரகசிய செய்திகளை டியூரிங் இடைமறித்து அவற்றின் சங்கேத குறியீடுகளை உடைத்து புரிய வைத்தார். இதற்காக அவர் பாம்ப் ( Bombe) எனும் பெயரில் கம்ப்யூட்டர் குறியீடுகளை புரிந்து கொள்வதற்கான கம்ப்யூட்டரை உருவாக்கினார்.

டியூரிங் அந்த காலத்திலேயே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைத்து செய்றகை மூளையை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இயந்திர அறிவிற்காக அவர் உருவாக்கிய பரிசோதனை  டியூரிங் சோதனை என்று பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. கம்ப்யூட்டர் துறையின் ஈடு இணையில்லாத மேதை என்று கொண்டாடப்படும் டியூரிங் மீது ஒரு களங்கமும் இருந்தது. டியூரிங் ஓரினச்சேர்க்கை பழக்கம் கொண்டிருந்தவர். அவரது காலத்தில் அது குற்றமாக கருதப்பட்டதால் அவர் தண்டிகப்பட்டார். ரசாயணம் மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டார். 1952 ல் இந்த அவமானம் அவருக்கு நேர்ந்தது. இதைவிட மோசமாக அவர் மேற்கொண்டிருந்த ஆய்வில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் மனம் உடைந்து 1954 ல் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

டியூரிங் மறைவுக்கு பிறகு கம்ப்யூட்டர் துறை எங்கேயோ வளர்ந்து வந்துவிட்டது. ஆனால் இந்த வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானது . அவரது மேதமையை கொண்டாடி வருபவர்கள் அவர் மீதான களங்கம் துடைக்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்தனர். 2009 ஆம் ஆண்டு டியூரிங் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு மன்னிப்பு வழஙக்ப்பட வேண்டும் எனும் கோரிக்கை இணைய விண்ணப்பமாக முன் வைக்கப்பட்டது. இதற்கு பல்லாயிரக்கனக்கானோர் ஆதரவு தெரிவித்தனர். அப்போது பிரிட்டன் பிரதமராக இருந்த காடன் பிரவுன் , அர்சு சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொண்டு டியூரிங் தண்டிக்கப்பட்டது தவறு என்று தெரிவித்தார். 2011 ம் ஆண்டு டியூடிங்கிறகு மன்னிப்பு வழங்க கோரி மீண்டும் இணையா கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கும் ஆயிரக்கணக்கில் ஆதரவு குவிந்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது டியூரிங்கிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் கிறிஸ் கிரேலிங் வேண்டுகோளை ஏற்று முறைப்படி இதற்கான உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளது. ஒரு மேதை மீதான சரித்திர களங்கம் துடைக்கப்பட்டுள்ளது.

இமெயில் சந்தாவில் இருந்து வெளியேற எளிய வழி...?




கட்டுரைகளையோ , செய்திகளையோ இமெயில் பெற சம்மதம் தெரிவிப்பது சுலபமானது தான். இப்படி இமெயில் வழியே சந்தாதாரவது தேவையானது தான். இமெயிலேயே தேவையான தகவல் வந்துவிடுவதால் தனியே குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதும் இல்லை. அந்த தளங்களில் புதிய தகவல் அல்லது கட்டுரைகளை தவற விடும் வாய்ப்பும் இல்லை.

இமெயிலில் சந்தாதாரவது சுலபமாகவும் பயனுள்ளதாக இருந்தாலும் சில நேரங்களில் இமெயில்ல் வரும் தகவல்கள் சுமையாகவோ , இடைஞ்சலாகவோ மாறிவிடலாம். திடிரென முகவரி பெட்டியில் மெயில்களாக குவிந்து அவற்றை படிக்க முடியாமல் திண்டாடும் போது இமெயில் சந்தாக்களில் வரும் தகவல்கள் அதிருப்தியை தரலாம்.

ஆனால் நல்ல வேளையாக இமெயிலில் புதிய தகவல்களை பெற சம்மதம் தெரிவிப்பது போலவே, இனி தேவையில்லை என்று சொல்வதும் சுலபமானது தான். இதற்காகவே சந்தா விலக்கல் (அன் சப்ஸ்கிரைப் ) வசதி இருக்கிறது. இமெயில் செய்தியில் எந்த இடத்தில் இந்த வசதிக்கான ஐகான் இருக்கிறது என் பார்த்து கிளிக் செய்தால் மெயில் வரத்து நின்று போகும். இருந்தாலும் பல நேரங்களில் இந்த சந்தா விலக்கல் வசதி எங்கிருக்கிறது என்று தெரியாமலும் திண்டாடலாம். அது மட்டும் அல்லாமால் மெயிலை திறந்து அந்த வசதியை தேர்வு செய்து கிளிக் செய்வதற்கு அலுப்பாக இருக்கலாம். சந்தா சேவையே ஒரு வகையில் சோம்பலுக்கான தீர்வு தானே. அதே சோம்பல் சந்தா வேண்டாம் எனும் வசதியை தேடி கிளிக் செய்யவும் தடையாக இருக்கலாம்.

எது எப்படியோ, இமெயில் சந்தாவில் இருந்து விலகுவதற்கான சுலபமான வழியை ரிமூவ் மீ இணையதளம் வழங்குகிறது. இமெயில் முகவரி பெட்டியை ஒரே கிளிக்கில் தேவையில்லாத மெயில்களில் இருந்து விடுவிக்க வழி செய்வதாக சொல்லும் இந்த தளம், இனியும் வேண்டாம் என நினைக்கும் சந்தாவில் இருந்து விடுபட சுலபமான வழியை முன்வைக்கிறது. அதுவும் எப்படி தெரியுமா? குறிப்பிட்ட அந்த சேவையில் மெயிலை திறக்கமாலேயே ஒரே கிளிக்கில் அதற்கு குட்பை சொல்ல வைக்கிறது. எப்படி என்றால் , முகவரி பெட்டியில் அந்த மெயிலுக்கு அருகிலேயே அதற்கான வசதியை காண்பிக்கப்படுகிறது. அதில் ஒரு கிளிக் ,அவ்வளவு தன இனி அந்த மெயில் வராது.

இமெயில் சந்தாக்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு நிச்சயம் ரிமூவ் மீ பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதற்கு முன் இதை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

சந்தா விலக்க சேவையுடன் , இமெயில் சர்பார்ப்பு சேவையையும் இந்த தளம் வழங்குகிறது . அதாவது குறிப்பிட்ட இமெயில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து தான் வந்திருக்கிறதா இல்லை ஏதேனும் விளம்பர அல்லது ஏமாற்று மெயிலா என்பதை இது உறுதி செய்கிறது.உதாரணமாக பேஸ்புக்கில் இருந்து ஒரு அப்டேட் வந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த மெயிலுக்கு அருகே அந்த நிறுவன லோகோ தோன்றுவதை பார்த்து பேஸ்புக் மெயில் தான் என உறுதி கொள்ளலாம்.

ரிமூவ் மீ சேவையை வழங்குவது பவர் இன்பாக்ஸ் எனும் நிறுவனம். பவர் இன் பாகஸ் நிறுவங்களின் இமெயில் தகவல்களை மேலும் சிறந்த வழியில் பெற வழி செய்கிறது. கிட்டத்தட்ட இதுவும் இமெயிலுக்கான சந்தா சேவை போல் தான். இமெயில் சந்தா சேவை வழங்கும் ஒரு நிறுவனமே சந்தா விடுபடல்சேவை வழங்குவது அழகான முரண் தான். இது ஒருபுறம் இருக்கட்டும், பவர் இன்பாக்ஸ் சேவையை பயன்படுத்தினால் பேஸ்புக் மறும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகளை உங்கள் இமெயில் முகவரி பெட்டியில் இருந்தே இயக்கலாம். அதாவது , பேஸ்புக் அல்லது டிவிட்டர் சேவைக்கான வசதி மெயிலுக்கு அருகே தனியே தோன்றுகிறது. ஆக மெயிலில் இருந்து விலகிச்செல்லாமலேயே பேஸ்புக்கை அப்டேட்டை சரி பார்க்கலாம்.

இணையதள முகவரி; http://ub.powerinbox.com/removeme/

ஜாவாஸ்க்ரிப்ட் மாயாஜாலம் உங்களுக்காக..




n4ʞƃıuıuɐʞ sı sıɥʇ ıɥ இப்படி தலைகீழாக பேர் அடிச்சி பார்க்கனுமா? வாங்க!
பயப்படாதீங்க! பயப்படாதீங்க! உங்க கம்ப்யூட்டரில் வைரஸ் எதுவும் வந்து விடவில்லை.

எல்லாம் ஜாவாஸ்க்ரிப்ட் மாயாஜாலம்.

இந்த வெப்சைட் http://www.sevenwires.com/play/UpsideDownLetters.html போங்க. ஆங்கிலத்தில் நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்களை தலைகீழாக மாற்றி கொடுக்கும்.

Cut and Paste பண்ணிக்குங்க.

இலவசமாக பேஸ்புக்கை பயன்படுத்தலாம்!! ஏர்டெல்லின் அசத்தலான ஆஃபர்...!




இனி இலவசமாக பேஸ்புக்கை பயன்படுத்தலாம்!! ஏர்டெல்லின் அசத்தலான ஆஃபர்...
சமூக வலை தளமான பேஸ்புக் பயன்பாட்டை ஒன்பது மொழிகளில் நாடு முழுதும் உள்ள தன் ப்ரி-பெய்டு வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக வழங்க உள்ளதாக பார்தி ஏர்டெல்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 "இது பேஸ்புக் தளத்தை நாடு முழுதும் உள்ள வாடிக்கையாளர்கள் ஒன்பது மொழிகளில் இலவசமாக பயன்படுத்த வழங்கும்" என அந்நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய மொழிகள்

 மொபைல் போன்களில் பேஸ்புக் உபயோகிப்போர் (ப்ரௌசர் அல்லது நேரடி அப்ளிகேஷன்) இனி ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் இலவசமாக பயன்படுத்தலாம் என வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட கால சலுகை


"ஒரு குறிப்பிட்ட கால சலுகையாக வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 30 எம்பி வரையிலான இந்த இலவச பயன்பாட்டை பெற்று மகிழ ஏர்டெல் அனுமதிக்கும்" என அந்நிறுவன அறிவிப்பு தெரிவிக்கிறது.

மென்பொருள்

 இந்த புதிய சேவை ஜாவா, ஆண்ட்ராயிடு, ஐபோன் மற்றும் விண்டோஸ் முதலியவற்றில் இயங்கும் சாதனங்களுக்குப் பொருந்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொபைல் இண்டர்நெட் சேவை


 ஏர்டெல் நிறுவனம் மொபைல் இண்டர்நெட் சேவையின் முலம் அதிகப்படியான லாபத்தை அடைகிறது. டிராய் எஸ்எம்எஸ் கட்டுப்பாடு விதிகளை விதித்தப் பிறகு எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்தது. இதனால் மொபைல் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்தது. அதன் மூலம் ஏர்டெல் 6 மடங்கு அதிக லாபத்தை அடைந்தது.

டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்!




டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்!

டேட்டா கேபிள் இல்லாமலேயே நீங்கள் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட் மொபைல் போனிலிருந்து தகவல்களை(Data) கணினி, டேப்ளட் பிசி, மற்றும் மற்றவகை மொபைல்போன்களுக்கு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

Soft Data Cable

USB Cable எனப்படும் தகவல்பரிமாற்ற கம்பி இல்லாமேலே உங்கள் ஆன்ட்ராய்ட் மொலைலிருந்து கணினி,மொபைல், டேப்ளட் பிசி (Computer, tablet, android smartphone) போன்ற மற்ற சாதனங்களுக்கு WiFi மூலம் தகவல்களை பரிமாறிகொள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் (Android apps) ஒன்று உதவுகிறது.

இந்த அப்ளிகேசனை(software data cable) நீங்கள் இந்த முகவரியிலிருந்து பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.

Download Link – தரவிறக்கச்சுட்டி

Install Soft Data Cable ( http://goo.gl/0jbJaz )

மேற்கண்ட இணைப்பின் வழிச்சென்று உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்போனில் இந்த பயன்பாட்டு மென்பொருளை நிறுவிடுங்கள்.

அடுத்து அந்த பயன்பாட்டு மென்பொருளை இயக்கி WiFi மூலம் உங்கள் கணினி, டேப்ளட் பிசி, மொபைல் போன்ற சாதனங்களுடன் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலையும் எளிதாக இணைத்துவிடலாம்.

இதன் மூலம் எந்த ஒரு கம்பி இணைப்பு இல்லாமலேயே, கணினிக்கும், மொபைலுக்கும் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் வேண்டிய தகவல்பரிமாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.

இந்த அப்ளிகேஷனின் பயன்கள்: (ஆங்கிலத்தில்)

BENEFITS WITH SOFTWARE DATA CABLE
The fewer cables to carry the better
The computer doesn’t need to have drivers it does need installed
Send photos, music, videos, apps etc. to other phones, tablets or TV anytime, anywhere
Auto-sync photos and other important files to computer or cloud storage (on a daily, weekly basis to backup data)
Extend mobile storage space without any cost

Wednesday 25 December 2013

GPANION" ஒரு பயனுள்ள சேவை....!





கூகிள்  பல இணைய சேவைகள் தந்தாலும் அதில் ஈமெயில் சேவையைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துவோம்.ஈமெயில் மட்டுமில்லாமல் கூகிள் பல பயனுள்ள சேவைகளை இப்பொழுது பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.


ஆனால் கூகிள் தரும் சேவைகள் பெரும்பாலும் “Hidden” சேவைகளாக இருப்பதால், அந்த சேவைகள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.


கூகிள் குழுமம் தரும் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில நாம் ஒருங்கிணைத்து செயல்பட ஒரு நல்ல தளம் இருக்கிறது.அதன் பெயர் " GPANION".
                           
                            தளம் :  GPANION


 இந்த தளத்திருக்கு கூகிள் கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ளுங்கள்.இந்த தளம் உங்கள் கூகிள் கணக்கை இணைத்துவிடும்.இப்பொழுது கூகிள் தரும் அனைத்து  சேவைகளும் டாஷ்போர்டில் தெரியும்.உங்களுக்கு தேவையான சேவையை எளிதாக பயன்படுத்திகொள்ளலாம்.நல்ல பயனுள்ள தளம் பயன்படுத்திபாருங்கள்.
·      

இந்த தளம் பிடித்திருந்தால் புக்மார்க் செய்து பயன்படுதிக்கொள்ளுங்கள்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top