.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label ஜோக்ஸ். Show all posts
Showing posts with label ஜோக்ஸ். Show all posts

Thursday 16 January 2014

தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள்..!

  



தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள்..!

"ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?"

"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."...

"எப்ப தூக்கம் வரும்பா?"

"அது சாப்பிட்டவுடன் தூங்கும்..."

"கொசுக்கு வீடு எங்கப்பா?"

"அதுக்கு வீடே இல்லை..."

"ஏம்பா வீடே இல்லை?"

"அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."

"நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு ............



தொடர்ந்து இங்கே படிக்கலாம்....




Wednesday 8 January 2014

அமெரிக்கன் சொன்னான்..




அமெரிக்கன் சொன்னான்..
எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேருந்து கிட்னியை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. அவன் 2 மாசத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுடுவான்...!

ரஷ்யன் சொன்னான்..

எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேயிருந்து பாதி ஈரலை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. ரெண்டு பேருமே 1 மாசத்திலே வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.. தெரியுமா..?

இந்தியன் சொன்னான்..

பூ... இதென்ன பிரமாதம்..? நாங்க ஒண்ணுத்துக்கும்ஆகாத ஒருத்தனை தூக்கி பார்லிமெண்ட்லே வைப்போம்.. உடனே மொத்த இந்தியாவும் அவன் சொல்றபடி வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..! இதுக்கு என்ன சொல்லுறீங்க..?

Monday 30 December 2013

இந்திய விளம்பரங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டது என்னென்ன...?




1. கத்ரினாவுக்கு பொடுகு, தலைமுடி பிரச்சினை இருக்கிறது..., ஷில்பாவுக்கு தலைமுடி உதிர்கிறது.

2. மனைவி இருப்பவன், பக்கத்து வீட்டுக்காரன் டியோடரணட் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

3. உங்கள் தகுதிகளை விட, உங்கள் நிறம் முக்கியத்துவம் வாய்ந்தது.

4. சமையலறையில் உப்பு இல்லையா, கவலை வேண்டாம். டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம் !

5. ஒவ்வொரு பற்பசை பிராண்டும் நமபர் 1 பிராண்ட்தான், எல்லாமே இந்திய பல்மருத்துவர்கள் அனைவராலும் பரிந்துரை செய்யப்படுபவைதான்!!!

6. உங்கள் மகள் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தால் நகைக்கடைக்கோ அல்லது துணிக்கடைக்கோ அழைத்துச் செல்லுங்கள்.

7. ஆண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவதன் ஒரே காரணம் பெண்களைக் கவர்வதற்கே.

8. கோலா பானங்கள் அனைத்துமே எல்லாவகையான பயங்களையும் போக்கிவிடும். தொடர்ந்து பருகி வந்தால் நீங்களும் சூப்பர்மேன் ஆகிவிடுவீர்கள்!!

9. சூப்பர்ஸ்டார்கள் எல்லாருமே பாவம், ரொம்பவும் ஏழைகள். 10 ரூபாய் கொடுத்து கோலா வாங்க இயலாமல் உயிரையே பணயம் வைக்கவும் தயங்க மாட்டார்கள்.

10. ஷாம்பு விளம்பரங்களில் வரும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அவதார் திரைப்பட ஸ்பெஷல் எஃபக்ட்சைவிட அதி உன்னதமானவை.

11. ஷாம்பு அல்லது சோப்பில் இருக்கும் பழப்பொருட்களின் விகிதம், 99% பழச்சாறுகளில் இருக்கும் விகிதத்தை விட அதிகமானது.

12. அமுல் நிறுவனத்தில் நல்ல பால்பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய திறமைசாலிகளைவிட கார்ட்டூன் வரையும் திறமைசாலிகள் அதிகமாக இருக்கிறார்கள்.

13. சாலைகளின் நிலை மோசமாக இருப்பதைக் குறைகூறம் பெரும்பாலான மக்கள், அதே சாலைகளில் ஓட்டுவதற்காகத் தான் வாகனங்களை வாங்குகிறார்கள்.

14. டயரி மில்க் சில்க்- கை மூஞ்சிமுழுக்க அப்பிக்கொள்ளாமல் சாப்பிடவே முடியாது.

15. மோட்டார் பைக் வாங்குவோர் எவரும் பயணம் செய்வதற்காக அல்ல, பெண்களை பிக் அப் செய்யவே வாங்குகிறார்கள்.

16. எல்லா சோப்புகளுமே 99.9% கிருமிகளைக் கொன்று விடும்.

17. பகார்டி சிடிக்கள் தயாரிக்கிறது, கிங் பிஷர் மினரல்வாட்டர் தயாரிக்கிறது என்றே எல்லாரும் நம்புகிறார்கள்.

18. தாயும் மகளும் பேசிக்கொள்கிற ஒரே நேரம், ஹேர் ஆயில் பற்றிப் பேசும்போது மட்டும்தான்.

19. எந்தத்துறை வல்லுநராக இருந்தாலும் சரி, அவர் எப்போதும் வெள்ளைக் கோட் அணிந்திருப்பார்.

Thursday 19 December 2013

10 ரூபாய்க்கு சாப்பாடு - நகைச்சுவை!



தம்பி என்னப்பா அந்த ஓட்டல்ல ஒரே கூட்டமா இருக்கு,



அங்க 10 ரூபாய்க்கு முட்டைவெச்சி சாப்பாடு போடுறாங்களாம்,



என்னது...10 ரூபாய்க்கு முட்டைவெச்சி சாப்பாடு போடுறாங்களா..


அதுசரி வரும்போது ஏன் எல்லாம் மூஞ்சில ரத்தத்தோடு வராங்க,


அவங்க 10 ரூபாய்க்கு  செவுத்துல முட்டவெச்சி

 சாப்பாடு போடுறாங்களாம்.

Tuesday 10 December 2013

தோல்விகளையும் ரொம்ப நேசிக்கிறவர்…நகைச்சுவை!


-
“நாணயமா  நடந்து கொள்ளணும்னு ஆசிரியர்
 சொன்னா  கோபப்படுறியே   ஏன்?”
-
அவர் சொன்ன மாதிரி நடந்தா  சில்லரை  பையன்னு
 கேலி பண்ணுவாங்கடா…!!
-



-
“தோல்விகளை  ரொம்பவும் நேசிக்கிறவரா
“யாரு   இவர்?”
-
டுடோரியல் காலேஜ் பிரின்ஸிபால்…!!
-


-
நாய் படம் வரைஞ்சிட்டு வாய் மட்டும் ஏன் வரையாம
 விட்டு வெச்சிருக்கே?”
-
“சார்! அது வாயில்லா பிராணி சார்!.”
-


-
“நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்விக்கு ‘டான் டான்’ னு
 பதில் சொன்னியாமே…!     அப்படி என்ன கேள்வி
 கேட்டாங்க?”
-
“ஆராய்ச்சி மணி எப்படி அடிக்கும்னு…!!





” புத்தியில்லாமல் வியாபாரம் செஞ்சதால் நஷ்டமா
 போச்சா…ஏண்டி?
-
” கை ரொம்ப நீளமா இருந்த நான்  பூ வியாபாரம்
 செஞ்சு தொலைச்சிட்டேன்…!!

“மலை ஏறுறதுக்கு முக்கியமா என்ன வேணும்?” - நகைச்சுவை!


1. நோயாளி: தலை சுத்துது டாக்டர்…
-
டாக்டர்: என்னோட கண்ணுக்கு அப்படி ஒண்ணும்
 தெரியலையே!
-

-
2. ”சுப்பிரமணிக்கும் மாசிலாமணிக்கும் என்ன தகராறு?”
-
“”ரெண்டு பேர்லயும் இருக்கறது… ரெண்டு பேர்கிட்டயும்
 இல்ல… அதுதான் தகராறு..!
-


-
3. ராமு: உங்க மானேஜர் எதுக்கு, எப்பவும் கையில
 பிளேடு வெச்சுருக்கார்?
-
சேது: யாராவது சரியா வேலை செய்யலைன்னா
 அவங்க சீட்டைக் கிழிச்சுடுவாராம்!
-



4. “”மலை ஏறுறதுக்கு முக்கியமா என்ன வேணும்?”
-
“”ஒரு மலை வேணும் சார்!”
-



5. அப்பா: உனக்கு ஸ்கூல்ல யாரை ரொம்பப் பிடிக்கும்?
-
மகன்: மணியடிக்கிற பியூனை ரொம்பப் பிடிக்கும்பா..!
-



6. “”பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம்
 உனக்கில்லை அப்பா!”

-
“”ஏண்டா அப்படிச் சொல்றே?”

-
“”பின்னே! அவன் அப்பா ஆபீஸிலிருந்து முழு பென்சில்
 கொண்டு வந்து அவனுக்குத் தர்றாரு. நீ துண்டுப்
 பென்சில்களையே தூக்கிக்கிட்டு வர்றே!”

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?



அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?


1 ஏங்க எங்க போறீங்க?

2 யார்கூடப் போறீங்க?

3 ஏன் போறீங்க?

4 எப்படி போறீங்க?

5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?

6 ஏன் நீங்கமட்டும் போறீங்க?

7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?

8 நானும் உங்ககூட வரட்டுமா?

9 எப்ப திரும்ப வருவீங்க?

10 எங்க சாப்பிடுவீஙக?

11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?

13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?

14 பதில் சொல்லுங்க ஏன்?

15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

16 நீங்க என்னை அம்மாவீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா?

17 நான் அனி திரும்ப வரமாடடேன்

18 ஏன் பேசாம இருக்கீங்க ?

19 என்ன தடுத்த நிறுத்தமாட்டீஙகளா?

20 இதுக்கு முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்தமாதிரிபண்ணிருக்கீங்களா?

21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?

22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???


இதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா?????

Monday 9 December 2013

விவசாயி ; படிச்சவன் - நகைச்சுவை!


படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்.., அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கு..


அவனுக்கு ஆச்சரியமா இருக்கு.., பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்…


படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?


விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,


படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?


விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..


படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?


விவசாயி : இதுக்குதான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!


படிச்சவன்: ? ? ? ? ?

Saturday 7 December 2013

நகைச்சுவை!

ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு 

நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச 

விரும்புகிறேன்…”



இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?”


அவள் : “இல்லை”


இவன் : “கீதா ?”


அவள் : “இல்லை”


இவன் : “உமா ?”


அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு 

ஆசிரியை...!!!

Saturday 30 November 2013

வேடிக்கையான வேலை வேண்டாம் கடிதங்கள்.....

Resign என்று கூகிள் இல் தேடிய போது கிடைத்த சில வேடிக்கையான, விதியாசமான வேலை வேண்டாம் கடிதங்கள், சில உங்களின் பார்வைக்கு.....

ஒரு பிளாக்கர்-இன் resignation letter 




ஒரு விமானியின் முயற்சி,




web design இல் வேலை செய்பவரின் முயற்சி


கேக்கில் resignation letter



அமெரிக்க ஜனாதிபதின் resignation letter 






yahoo resignation letter generator 






சில வேடிக்கையான resignation letter 







இதை எல்லாம் விட நமவர்கள் அனுப்பும் சில கடிதங்கள்,

From
நான் தான்
உன் துறை தான்
உன் கம்பெனி தான்

To
நீ தான்
உன் துறை தான்

ஐயா,
நான் இனிமேல பணிக்கு வரமாட்டேன், உன்னால் முடிந்ததை செய்து கொள்

இப்படிக்கு

நான் தான்

Friday 29 November 2013

நகைச்சுவை!


 1) கணவன் : நான் செத்துட்டா நீ எங்கே இருப்பே?

மனைவி: நான் என் தங்கச்சி கூட இருப்பேன்... ஆமா நான் செத்துட்டா நீங்க எங்கே இருப்பீங்க?

கணவன்: நானும் உன் தங்கச்சி கூட இருப்பேன்...

மனைவி: ????

2) மனைவி: நம்ம பையன் ரொம்போ நச்சரிக்கிறான்... ஏதோ ஆப்பிள் போனாம்ல, ஒன்னு வாங்கி கொடுங்க.

கணவன் : “ஆப்பிள் போன விலை ரொம்ப அதிகம்”

மனைவி: “அப்ப ஒரு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுக்க்லாமுல....”

கணவன் :????

3) டீச்சர்: உன்பேருஎன்ன..? -

மாணவி : " சௌமியா"

டீச்சர்: உங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

மாணவி : தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

டீச்சர் : ????

4) டாக்டர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

பேசன்ட் :"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

டாக்டர்: ????

5) மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

மாப்பிள்ளை வீட்டார்:???

6) ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.

மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்.

ஆசிரியர் : ?

7) ஆசிரியர்: இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன?

மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்!

ஆசிரியர் : ???

வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...

சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.

வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?

மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.

வா‌த்‌‌தியா‌ர் : ????

இவைகளெல்லாம் இந்தியாவில் மட்டுமேச் சாத்தியம்....



1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும்.

2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமேத் தெரியும்.

3) நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.

4) தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது.

5) முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி.

6) கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு.

7) வேட்டிக் கட்டுனவங்க படிக்காதவங்க.

8) கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை சுட்ட கதையா இருந்தாலும் 100 மதிப்பெண்.

9) பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை.

10) ஒரு சினிமா வ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து
 அதேபானியில் படம் எடுப்பது.

11) பெத்தவன் பிறந்த நாள் தெரியாதவன் தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.

12) மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே பேருந்து செல்வது .

13) ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே ஒரே நேரத்தில் இரயில் வந்து மோதுவது.

14) கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.

15) அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச தகுதி TV Channel ஆரம்பிப்பது.

16) பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.

17) நகைக் கடைகளுக்கு நடிகைகளை வச்சு மட்டுமே திறப்புவிழா நடத்துவது.

18) இடுப்பு வலி வராத புள்ளத்தாச்சுக்கும் பணத்திற்காக சிசேரியன் செய்வது.

19) பரிட்சை எழுதாதவனுக்கு " பாஸ்" என்று தேர்வு முடிவு வருவது.

20) இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும் தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.

21) Ambulance உம் , காவல் துறையும் அழைத்ததும் வருமோ இல்லையோ pizza வந்திடும்.

22) இலவசமா கிடைக்கற அரிசி புழுவோட இருக்கும்.இலவசமா கிடைக்கற sim card credit (balance) oh da இருக்கும்.

23) கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்.

இன்னும் நமக்கே நமக்குன்னு நிறைய இருக்கு.நான் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

Sunday 24 November 2013

இத சொன்னா என்னைய கேனையன்னு சொல்றனுங்க..


1.சினிமாக் கூத்தாடிகளை கடவுளெனக் கொண்டாடும் தமிழன் இருக்கும்வரை ஒருகோடி ஆண்டுகளானாலும் இச்சமூகம் உருப்படப்போவதில்லை.

2.உங்களுக்குப் பிடிக்காத வரன் வருதா? கம்னு, வாக்காளர் அட்டையிலிருக்கிற படத்தைக் குடுத்தனுப்பிச்சிருங்க. கண்டிப்பா ரிஜக்ட் ஆகிடும்..

3.ஓட்ஸ் சாப்பிட்டா உடம்பு குறையுதாம், எனக்கென்னமோ ஓட்ஸ் தான் குறையர மாதிரி இருக்கு

4.மனைவி எவ்வளவுதான் திட்டி கழுவி கழுவி ஊத்துனாலும், அசையாம கல்லு மாதிரி கணவன் இருப்பதால்தான், "கல்லானாலும் கணவன்"னு சொல்றாங்க

5.டாஸ்மாக்கை நடத்தும் அரசு விவசாயத்தையும் ஏற்று நடத்தலாம்..

6.ரெண்டு வீலுக்கும் MRF டயர் போட்டாலும்... பிரேக் புடிச்சாதான் வண்டி நிற்கும்!!

7.படிச்ச ஃபார்முலா, தியரம் எல்லாம் பார்க்கிற உத்தியோகத்துல யூஸ் பண்ணனும்'னா வாத்தியார் வேலைக்கு தான் போகணும்

8.படைப்பை விமர்சிக்க படைப்பாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, சிறந்த ரசனையாளனாய் இருந்தால் போதும்.

Sunday 17 November 2013

இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா! ! சொன்னா நம்புங்க..

இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா! ! சொன்னா நம்புங்க..

1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப் போடற பொண்ணுங்க


2) சரக்க மோந்துப் பார்த்தாலே மயக்கம் போடற பசங்க


3) கை முறுக்கு சுடத் தெரிந்தப் பாட்டிங்க


4) எவ்ளோ பெரிய சிக்கு கோலத்தையும் அசால்ட்டா போடற அம்மாக்கள்


5)அப்பா ஏதாவது கேட்டா நின்று பொறும பதில் சொல்ற பிள்ளைங்க


6) ஒரே ஒரு மொபைல் ,ஒரே ஒரு சிம்கார்ட் ,  ஒரே ஒரு காதல் இருக்கிற பொண்ணுங்க ,பசங்க


7) மல்லிகைப் பூவையும் கண்ணாடி வளையலையும் நேசிக்கும் பெண்கள்


8) பொண்ணுங்க கிட்ட பேச கூச்சப் படற பசங்க. முறைப் பையன பார்த்தா வெட்கப்படறபொண்ணுங்க.


9) மதிய உணவை ஒன்றாக அமர்ந்துச் சாப்பிடும் குடும்பங்கள்


10)சொந்த மண்ணையும் மொழியையும் மறக்காத மனிதர்கள் என!!


இவங்கலாம் 100 ல 2% தான் இருக்காங்க..

Saturday 16 November 2013

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்!

செய்தியாளர் : உங்களது வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
நடிகை : இப்போது இருப்பவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும்.

***

கோபு : நேத்து ஹோட்டல் வைத்திருப்பவர் வீட்டில் பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?
பாபு : அத ஏன் கேக்குறீங்க.. பொண்ண பாத்துட்டு புடிக்கலன்னு சொன்னதும், குடிச்ச டீக்குக் கூட பில் போட்டு கொடுத்துட்டாங்கண்ணா பாத்துக்கோங்களேன்.

***

ஒரு பொண்ணு போன எடுத்து எடுத்துப் பார்த்தா என்ன அர்த்தம்?
புதுசா காதலிக்கிறான்னு அர்த்தம்
 போன் வரும்போதெல்லாம் கட் பண்ணினா என்ன அர்த்தம்?
காதலன புடிக்கலன்னு அர்த்தம்
 பொண்ணு தலை குனிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்?
போன்ல மெசேஜ் ப்ரீன்னு அர்த்தம்.

***

பொண்ணுங்க போன பத்தி என்னடா நினைக்கிற…
ரூ.20 ஆயிரத்துக்கே போன வாங்கினாலும், அதுல மிஸ்டுகால் மட்டும்தான் கொடுப்பாங்கடா..

***

கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன் பின்னாடி பொண்ணுங்களா அலையுதுன்னு சொல்லி ஏதோ பயங்கரமா பில்டப் கொடுக்கிறீயே.. அதில ஏதாவது 2 பொண்ண பத்தி சொல்லு…
ஒண்ணு எங்க அம்மா.. இன்னொன்னு எங்க பாட்டி.

***

என் பொண்டாட்டின்னா எனக்கு ரொம்ப பயம்.. நீங்க எப்படி?

அட போங்க நான் அவ்ளோ மட்டமில்லை. உங்க பொண்டாட்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.

***

Friday 15 November 2013

கடவுளை மனிதன் கேட்டான் - நகைச்சுவை!


கடவுளை மனிதன் கேட்டான்


"பொண்ணுங்க


 எல்லாம் நல்லா இருக்காங்க. ஆனா


 பெண்டாட்டிகள் மட்டும் ஏன் இப்படி


கொடுமைப்படுத்துறாங்க?"


கடவுள் சொன்னார்,



 "நான்


 பொண்ணுங்களை மட்டுதான் படைத்தேன்.


 அவங்களைக் கட்டிக்கிட்டுப்



 பெண்டாட்டியா ஆக்கிக்கிட்டது


ஆம்பளைகளான  நீங்கதான்."

Tuesday 12 November 2013

எலெக்ஷன் பூத்துக்கும், ஏடி.எம்.பூத்துக்கும் என்ன வித்தியாசம்?

ரயில்ல டிக்கெட் எடுக்காம வந்துட்டு தேவையில்லாததை
 எல்லாம் பேசறான் சார் இவன்…!
-
அப்படி என்ன பேசறான்?
-
ஓட்டல்ல டிபன் சாப்பிட்டு, காசு இல்லேன்னா,
மாவாட்டற மாதிரி, இங்கே டிக்கெட் இல்லாததுக்கு
 ஒரு மணி நேரம் டிரெயின் ஓட்டறேன்னு சொல்றான்…!
-
——————————————————————————-
 -
யோவ்…படம் ஓடிட்டிருக்கும்போது தொண
 தொணன்னு பேசறீங்களே…எதுவும் புரியலே…!
-
இது எங்க பெர்சனல் மேட்டர்…உனக்கு ஏன் புரியணும்..!
-
———————————————————————————

-
எலெக்ஷன் பூத்துக்கும், ஏடி.எம்.பூத்துக்கும் என்ன வித்தியாசம்?
-
எலெக்ஷன் பூத்துல போறதுக்கு முன்னாடி பணம்
 கிடைக்கும், ஏடி.எம்.பூத்துல போன அப்புறமாத்தான்
 பணம் கிடைக்கும்…!

Thursday 31 October 2013

இது நம்ம தலைவர் பத்த வெச்ச ராக்கெட்!

சரக்கு உள்ளே போயிட்டா, தலைவர் பண்ற
 அழிச்சாட்டியம் தாங்க முடியல…
-
என்ன பண்றார்?
-
பட்டாசு கடையில போய்ஊறுகா வெடி
 இருக்கான்னு கேட்குறார்..!
-
——————————————————————–
-
இது நம்ம தலைவர் பத்த வெச்ச ராக்கெட்
 வெடின்னு எப்படிச் சொல்றே?
-
கரெக்டா புறம்போக்கு நிலத்துல போய்
 விழுந்திருக்கே…!
-
——————————————————
-
என்னதான் பட்டாசு கடைக்காரர் தேர்தல்ல நின்னாலும்
 அவருக்கும் வோட்டுதான் விழும், வேட்டு விழாது..!

Wednesday 23 October 2013

ஆண்களுக்கு 10 நிமிடத்திலேயே டயர்டாய்டும்.. அது என்ன?


ராம்ஜி - ஆண்களும் பெண்களும் இணைந்து செய்யும் வேலை அது. ஆனால், ஆண்களுக்கு பத்து நிமிடத்திலேயே சோர்வாகிப் போய் விடும். ஆனால் பெண்களுக்கு டைம் ஆக ஆகத்தான் உற்சாகம் கூடும்.. அது என்ன....?


 ராகவி - சீ .. போ.. இது கூடவா தெரியாது....! ராம்ஜி- மண்டு, மண்டு.. அது ஷாப்பிங்.. தப்புத் தப்பாவே நினைக்காதே....!

Saturday 24 August 2013

தமிழ் ஜோக்ஸ்_பகுதி 2

எனக்கு மொபைல்ல கிரெடிட் ரீசார்ஜ் பண்ணனும்...
மொபைல்ல பண்ண முடியாதுங்க சிம் கார்டுல தான் பண்ண முடியும்...

கழுதைக்கும், மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்...
கழுதை பேப்பரை சாப்பிடுது...
மனுஷன் பேப்பர் ரோஸ்டை சாப்பிடுறான்.

அறிவாளிகள்  என்று யாரைச் சொல்லலாம்...
யாரெல்லாம் பொண்டாட்டி திட்டும் போது சிரிச்சுக்கிட்டே இருக்காங்களோ அவங்க எல்லோரும் தான்..

நான் இருமல் வந்தா உடனே டாக்டர்கிட்டே போய்டுவேன். நீங்க எப்படி?
நான் இருமல் வந்தால், முதல்ல இருமிட்டு அப்புறம் தான் போவேன்.

என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.

அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...

பிள்ளையாரும் முருகனும் கம்ப்யூட்டர் கிளாசுக்கு போனாங்க
பிள்ளையாருக்கும், முருகனுக்கும் மார்க்ஸ் குறைஞ்சு போச்சு
என்னாச்சு...
ஏனென்றால்,முருகனோட கம்ப்யூட்டர் மௌஸ் பிள்ளையாரோட மௌஸ் ரெண்டும் சேர்ந்து விளையாடப் போயிட்டுதுகள்...

அவன் எதுக்கு சுடுகாட்டுக்குப் போகும் போது சோப்பு எடுத்திட்டுப் போறான்..
ஹமாம் இருக்கப் பயமேன்..

நான் எப்போதுமே பணம் எதுவும் கையில் அதிகமாக வெச்சிருக்க மாட்டேன்...
அதெப்படி..வெச்சிருக்கணும் என்று ஆசைப்பட்டாலும் கூட வைஃப்கிட்டே கேட்டு வாங்கிக்கட்டிக்கிறதுக்கு உங்க உடம்புல தான் பலம் கிடையாதே...

போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிறதா சொல்றீங்க, வெயிலைப் பத்தி கவலையே இல்லைங்கறீங்களே, எப்படி?
நான் ஏ.ஸி. ஆச்சே!"

உங்களுக்கு அலர்ஜி நோய் வந்திருக்கு... ஒத்துக்காததை எல்லாம் ஒதுக்கி வைக்கணும்!
அப்படின்னா என் சம்சாரத்தைக் கூடவா டாக்டர்...?

என் மாமியாருக்கு சர்க்கரை வியாதி இருக்கற விஷயம் உனக்கு எப்படித் தெரியும்?
உங்க வீட்ல அடிக்கடி ஸ்வீட் செய்யறதை வச்சுத்தான் சொன்னேன்...!

ஆபீசுக்கு போகும் போது டென்ஷன் படுத்தாதே...
ஏங்க...?அதையே நெனச்சு நெனச்சு, தூக்கமே வர மாட்டேங்குது...!

ஏன் என்னோட கச்சேரிக்கு வராம விட்டுட்டீங்க...
ஸாரி சார்... அன்னைக்கு வீட்லயே தூங்கிட்டேன்!
 
 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top