.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday 29 December 2013

ஜடமாகவே இருக்கிறேன்...கவிதை!!!




பணம் கிடைத்திருந்தால்
பணக்காரனாக இருந்திருப்பேன்...

நல்ல குரல் வளம் இல்லை
இருந்திருந்தால் பாடகனாக இருந்திருப்பேன்...

நடிக்க தெரியவில்லை
தெரிந்திருந்தால் நடிகனாக இருந்திருப்பேன்...

நல்ல படித்திருந்தால்
சொல்லி இருக்க முடியாது ஆட்சியாளராக இருந்திருப்பேன்...

எனக்கெல்லாம் ஒட்டு கிடைக்காது
கிடைக்குமாயின் மந்திரியாக இருந்திருப்பேன்...

நல்ல நண்பர்கள்
இருந்தால் இன்னும் நல்லவனாக இருந்திருப்பேன்...

விமானம் பார்த்தது கூட இல்லை
பிறகு எதற்கு அந்த வெளிநாட்டு கனவு...

காதலி கிடைக்காததால்
பித்தனாக இருந்திருப்பேன்...

இன்னும் சொல்ல போனால்

மனிதர்களை காணவில்லை
அதனால் மனிதனாக மாறாமல்
ஜடமாகவே இருக்கிறேன்...

Saturday 28 December 2013

சொல்லாதீர்கள்... கவிதை?



எங்களை இல்லாதவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் குறையாத வறுமையை
 வைத்துக்கொண்டிருக்கிறோம் நாங்கள்...!


எங்களை இயலாதவர்கள்
என்று சொல்லாதீர்கள்....
அடுத்தவருக்கு தெரியாமல்
 தனித்து அழமுடியும் எங்களால்..!


எங்களை வீரமற்றவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
பசியை எதிர்த்து போராடும்
 தைரியம் இருக்கிறது எங்களிடம்..!


எங்களை திக்கற்றவர்கள்
 என்று சொல்லாதீர்கள்....
எட்டுத்திக்கும் சூழ்ந்துக்கொண்டிருப்பது
 எங்கள் வறுமை ஜாதிதான்..!


எங்களை பாதுகாப்பில்லாதவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் எங்களுக்கு சூன்யமாய்
 குடைபிடித்துக்கொண்டிருக்கிறது வறுமை கோடு...

Tuesday 24 December 2013

உன்னை இன்றும் அம்மா என்று கூப்பிட ஆசை வருதே ஏன்..?




கால்களை உதைத்து
 கர்ப்பப்பையை
 கிழித்தாகிவிட்டது.

தொப்புள்கொடியை
 யாரோ
அறுத்தனர்.

முதல் பால் அருந்த
 முன்வரிசையில்
 காத்திருந்தேன்.

யாரும் என்னை
 கவனிப்பவராக இல்லை.

விட்டேன் ஒரு
 குவா குவா
 சத்தம்

 சாதம் ரெடி !

ஓ பிள்ளைக்கு
 பசிக்குது
 நீங்களே பால் குடுங்க
 நாங்கள் வெளியில் நிக்கிறோம்.

கண்ணை மூடியிருந்த
 இருட்டிலும்
 ஏதோ கரங்கள் என்னை தூக்கி
 மார்போடு அணைத்தது
 அப்பொழுது எரிந்தது
 என்னிடம் முதல் முறையாக
 அகல் விளக்கு.

பன்னீர்க்குடத்து
 நீரையெல்லாம்
 பகல் இரவாய் குடித்த எனக்கு
 பத்தினியின் முலைமார்பில்
 முதல் விருந்து
 முதல் அமிர்தம்.

யாரப்பா அது
 எனக்கு நீ பால் தர

 எல்லாமே
 இருட்டாயிருக்கே
 எப்படித் தேடுவது அவளை
 என்றிருக்கையில்

 என் செல்லம்
 என் குஞ்சு
 முத்த முத்திரைகளை
 முகமெல்லாம்
 குத்தியவர் யார்

 பஞ்சு விரல்கள் என்
 உடலை வருடி
 தென்றல் காற்றை பிடித்து என்
 தேகமெல்லாம் விட்டது யார்

 பிரசவ வலியென்னும்
 மிச்சமிருக்கையில்
 கொஞ்சிக்கொண்டே
 தாலாட்டு தமிழில் பாடியவர் யார்

 வந்த களைப்பில்
 உறங்கிக் கொண்டிருந்த
 மார்பு யாருடையது.
இலவம் பஞ்சைவிட
 அதுவேன் மென்மையாக
 இருந்தது

 கண்ணை விழிதொருநாள்
 கறுப்பு வெள்ளையில்
 படம் பார்த்தேன்
 பக்கத்தில் நின்றவள்
 ஈன்றவள்
 இவளா என் .. அம்மா

 உன்னை
 இன்றும் அம்மா என்று கூப்பிட
 ஆசை வருதே ஏன்

 உன் முலைப்பாலில்
 முதல் பாலில்
 முழு அன்பையும் கரைத்தது
 உன்னுடைய இரகசியம்

 அதுவே இந்த
 வசியம்.
வாத்தியமாய் இசைக்கிறேன்
 விடியும் வரை
 முடியும் வரை
 அம்மா அம்மா ..

கூகிள் சொல்லாது இறையின் இரகசியம் !





விதைக்குள்
 விருட்சம்
 உறங்கியதெப்படி

 விசித்திர வானில்
 வாழும்
அண்டங்கள் எப்படி

 பூவுக்குள் தேன்
 பிறந்தது எப்படி

 பூமி தன்னையும் சுற்றி
 சூரியனையும்
 சுற்றுவது எப்படி

 பனித்துளி புல்லில்
 அமர்ந்தது எப்படி

 பசுவுக்கு நாளும்
 பால் சுரப்பது எப்படி

 பகலும் இரவும்
 மீன்கள்
 தூங்காதிருப்பது எப்படி

 பாதி நிலவும்
 வளர்வது எப்படி

 பசியும் தாகமும்
 வருவது எப்படி

 எண்ணமும்
 செயலும்
 உருவாகிறதே எப்படி

 உடலுக்குள்
 உயிரும் ஒட்டியிருப்பது எப்படி

 சும்மா கசக்கு
 மூளையை கொஞ்சம்

 கூகிள் சொல்லாது
 இறையின் இரகசியம் !

Sunday 22 December 2013

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம் - முழுசா படிங்க?




ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார்.

எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.

அப்போதுதான் தலையணையி்மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார்.

அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது.

பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது:

அன்புள்ள அப்பா,

மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன்.

உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன்.

டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது. நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், நகைகள் அணிந்திருந்தாலும் அவன் நல்லவன்.

அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை.

டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசமிருந்தாலும் (42 இப்போதெல்லாம் ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது.

டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று எனது வாழ்க்கையில் தனி இடம் கொடுத்திருக்கிறேன். என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்.

டிமோத்திக்கு காட்டுக்கருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது. அங்கு நாங்கள் தங்கியிருப்போம். அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான். அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம். கஞ்சாவை நானும் புகைத்தேன். ரொம்ப சுகமாயிருக்கிறது.

மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து குணமடைவான்.

அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும். எனக்கு பதினைந்து வயதாகிறது. என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக் குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.

உங்கள் அன்பு மகள்,
ஏஞ்சலோ.

அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது.
கடிதத்தின் கீழே “பின் பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது.

துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார்.
அங்கு இவ்வாறு எழுதியிருந்தது:
பின்குறிப்பு; அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை.

நம் வாழ்க்கையில் எவ்வளவு மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறத. இதையெல்லாம் பார்க்கும்போது நான் ஒரு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றுமே கிடையாது. எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் இருக்கிறது. எடுத்து கையெழுத்து போடுங்கள். நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள்.

தற்போது தந்தையின் மனநிலை என்னவாக இருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!!!

காதலின் வயது எது???



வாழ்க்கை என்றால் என்ன என்ப...



தைபுரிந்து கொள்ள இயலாத வயதில் உனக்கு
எதற்கு காதல்!!!


கல்வி கற்கும் வயதில் நீ ஏன் காதலை பற்றி கனவு காண்கிறாய்?
கொஞ்சம் சிந்தி!


முதலில் நீ உன் காலில் நிற்கத்தக்கதகுதியை
பெற்றுக் கொள்...


அதற்கு பின் தாராளமாய் நீ காதலி


அப்போது புரியும் வாழ்க்கை
பயணம் என்பது எத்தனை கரடுமுரடான தென்று.


உங்கள் கருத்துக்கள் வரவேற்கதக்கது...

Thursday 19 December 2013

பிரிவு - கவிதை?



வலி மிகுந்த

 வாழ்க்கை பயணம்...

வழி நெடுக

புதுமுகங்களின் சந்திப்பு...

ஒவ்வொரு முகமும்

 ஒவ்வொரு உறவாக

 மனதில் பதிகின்றன...

ஆனால்...

எந்த உறவும் இறுதி வரை

 உடன் வரபோவதில்லை...

ஏதோ ஒரு நிமிடத்தில்

 பிரிந்தாக வேண்டிய கட்டாயம்...

அந்த நிமிடம் மரணமாகக்

 கூட இருக்கலாம்...

Wednesday 18 December 2013

புதுக்குறள்.....?




                                            ******புதுக்குறள் *******


1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதே மனைவி சுட்ட தோசை...

2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...

3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
 செய்வது அரசியல்வாதிக்கியல்பு...

4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
 சோகாப்பர் hack செய்யப்பட்டு.

5.விரும்பிய மனம் விரும்பா விடின்
 துரும்பா இளைப்பார் தூய காதலர்..

6.ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்...
மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்

7.மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே
 வாயினால் சுட்ட வடை

8.மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது
 அரியவாம் கடலைபோ டுதல்

9.பீடியால் சுட்ட புண் உள்ளாறும்
 ஆறாதே லேடியால் கெட்ட மனம்

10.கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று
 தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு

11.போடுக கடலை போடுக போட்டபின் பில்லுகட்டுக அதற்குத் தக...

தாய் மடியில் தலைவைத்த காலம் வருமா ?



வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !
சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !
சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

வெளி நாட்டு வாழ்க்கை....



வெளி நாட்டு வாழ்க்கை....


தெரியாத ஊர்...

அறியாதமொழி...

புதிதான சூழல்...

புரியாத சுற்றம்...

அனைத்தும் தாண்டி நாம்

 அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே...

முதலில்

 வெளிநாட்டில் வாழ்வோரெல்லாம்

 தகுதியானவர்கள் இல்லை

 பிறர்க்கு வாழ்க்கையை கற்றுகொடுக்கவும்

 தகுதியானவர்கள்...

இங்கே

 முடிந்தால் சாப்பிடுவோமே தவிர

 மூன்றுவேளையும் சாப்பிடுவது இல்லை...

முடிவெட்டினால் கூட

 ஒட்ட வெட்டுவோமே தவிர

 ஒருபோதும் விட்டு வெட்டியதில்லை...

இது

 எங்களின் கஞ்சதனமில்லை

 நான் அசிங்கமானாலும் பரவாயில்லை

 என் குடும்பம் அழகாக இருக்கவேண்டுமென்ற

 அபூர்வ குணமே....

அது போல

 வெளிநாட்டு வாழ்க்கை

 சில பிரிவை தந்தாலும்

 பொருத்துக்கொள்வோம்

 ஏனென்றால் அதுதானே

 நமக்கு பிழைப்பையும்

 தந்திருக்கிறது.

Monday 16 December 2013

என் பெயர் என்ன ???.







என் பெயர் என்ன ???.


நீ அழுத போது
 உன்னை தரதரவென்று
 இழுத்துப் போய்
 பள்ளிக் கூடத்தில்
சேர்த்தேன்
 படித்து பெரிய ஆளாக
 வர வேண்டும் என்ற எண்ணத்தில்

 இன்று நான் அழுகிறேன்
 என்னை இழுத்துப் போய்
 முதியோர் இல்லத்தில் சேர்க்கிறாயே
 அங்கே நான் எதை படிக்க வேண்டுமென்று

 பத்துமாதம் உன்னை வயிற்றில்
 சுமந்தபோது பாரமாக
 நான் நினைக்கவில்லை
 உன் பத்தினி வந்ததும்
 உன் வீட்டில் நான் ஒரு ஓரமாக
 இருப்பதையே நீ பாரமாக நினைக்கிறாயே

 நீ ஓடி ஓடி விளையாடிய போது
 நீ செல்லும் இடமெல்லாம்
 உன் பின்னாலே வந்து
 உனக்கு சோறு ஊட்டி
 உன் வயிறு நிறைந்ததில்
 என் வயிறும் மனமும் நிறைந்தது
 எனக்கு வயிறாற உணவு வேண்டாம்
 ஒரு வேளையானலும் உன் வீட்டு சோறு போதும்

 உன் வருங்காலத்திற்காக
 உன்னை பெற்று வளர்த்து
 படிக்க வைத்து,கல்யாணம் முடித்து
 நீ வாழ்வதற்காக உன்னை ஆளாக்கினேன்
 என் எதிர்காலத்திற்காக
 நான் சாவதற்கு என்னை நீ
 பார்த்துக் கொள்ளக் கூட மறுக்கிறாய்

 பிள்ளையேப் பெறாமல்
 இருந்திருந்தால் மலடியாகிருப்பேன்
 யாருமே இல்லாதிருந்தால்
 அனாதையாகிருப்பேன்
 பிள்ளைகளைப் பெற்றும்
 இன்று நான் முதியோர் இல்லத்தில்

 நான் மலடியா
 நான் அனாதையா
 என் பெயர் என்ன..?


கனா காண்கிறேன் - கவிதை!





பல்லாங்குழி ஆடிய திண்ணை
 பாண்டி ஆடிய தெரு வீதி

 பட்டம் விட்ட மொட்டைமாடி
 பாடித் திரிந்த வயல் வெளி

துரத்திப் பிடித்த தும்பி
 பிடிக்காமல் விட்ட பட்டாம்பூச்சி

 கையில் ஏந்திய ஆட்டுக் குட்டி
 காத்துக் கிடந்த கனமழை

 விழுந்து விழுந்துக் கற்ற மிதிவண்டி
 விரட்டிச் சென்ற டயர் வண்டி

 திருடித் தின்ன மாங்காய் தோப்பு
 திட்டித் தீர்த்த காவல்காரன்

 அசைந்தாடிய ஆலமர ஊஞ்சல்
 ஆற்றைக் கடந்த பரிசல்

 அல்லி பூத்தக் குளம்
 அரசமரத் தடி பிள்ளையார்

 என அத்தனை நினைவுகளையும் சுமந்து சென்ற
 நெஞ்சம் தேடுது, எங்கே தொலைந்தது? நான் பார்த்த ஊர் என..

கனா காண்கிறேன்.....

கணிப்பொறி தமிழா...




கணிப்பொறி தமிழா உன் கண்களை கணணி திரை விட்டு கழட்டு!
ஏ.சி  அறையில் இருந்து எழுந்து வா !

கிளைகளைப் பரப்பும் அவசரத்தில் வேர்களை மண்ணிலிருந்து  வெட்டி விடாதே!

நீ படித்த பழைய பள்ளிக் கூடத்தைப் போய்ப் பார்!
அதன் மேற்கூரையில் உன் பிஞ்சு சிரிப்பு ஒட்டி இருக்கும்!

நீ பிறந்த ஆஸ்பத்திரி எதுவென்று தேடு அதன் வாயிலில் நின்றொரு புகைப் படம் எடுத்து ரசி!

நீ ஓட்டிய முதல் நடைவண்டி இன்சாட் 5 ஐவிட முக்கியமானது அதை பாதுகாத்து வை!

நீ ஆடிய ஊஞ்சல் மரத்தின் தோள்களில் கொஞ்சம் தோழனாய் சாய்ந்து நில்!

நீ ஆனா ஆவன்னா எழுதிய சிலேட்டுப் பலகை கிடைத்ததால் ஆஸ்கார் விருதாய் கருதி
வரவேர்ப்பறையில் மாட்டி வை!

நீ குரங்கு பெடல் போட்ட சைக்கிளை கண்டெடுத்து உன் காருக்கருகில் நிறுத்திக்கொள்!

நீ வாங்கிய முதல் சாக்கு ஓட்டப் பந்தய பரிசை மேருகேற்றிப்பர்!
அது உன் முதல் வெற்றியல்லவா?

நீ படித்த பழைய பள்ளிப் புத்தகங்களை அள்ளி ஆசையோடு தடவு!
அது உன் தாய்ப்பால் மேஜை !

நீ பெற்ற முதல் சம்பளம் இருந்த உறையை பெட்டிக்குள் தேடி எடுத்து வாசம் பார்!
நீ அணிந்த சிறுவயசு ஆடைகளை துப்பறிந்து எடு!
அது உன் பால்ய வயசின் நினைவுச் சின்னம்!

நீ பெற்றோருக்கு எழுதிய கசங்கிய கடிதங்களை எடுத்து அதில் வழியும் பாசத்தில் கண்ணீர் மல்கு!

நீ நெஞ்சுக்குள் புதைத்த சருகு மண்டிய நண்பர்களின் முகவரிகளுக்கு நேரில் போ!
நீ எப்போதும் மறக்க முடியாதென்று நினைத்து மறந்து போன காதலை யோசி!

நீ பழைய நினைவுகளில் மூழ்க மூழ்க புதிய கதவுகள் திறக்கும்!

நீ உணர்ச்சி குவியலுக்குள் ஊற ஊற எந்திர தன்மை பறக்கும்

இரைப்பைக்காக மட்டும் வாழ ஆரம்பித்து விட்டால் இதயம் தேவை இல்லை!
இதயத்திற்காக மட்டும் வாழ்ந்து போகவும் இரைப்பை விடுவதில்லை!

இரண்டையும் சமமாக்கு !
இடைவிடாமல் சந்தோசமாக்கு!

பா.விஜய்

Saturday 14 December 2013

அழுவதுக் கூடச் சுகம் தான் - கவிதை!




அழுவதுக் கூடச் சுகம் தான்
 அழவைத்தவரே அருகில் இருந்து
 சமாதானம் செய்தால்...

காத்திருப்பது கூடச் சுகம் தான்
 காக்கவைத்தவர் அதற்கு தகுதி
உடையவரானால்..

பிரிவு கூடச் சுகம் தான்
 பிருந்திருந்த காலம் அன்பை
 இன்னும் ஆழமாக்கினால்..

சண்டைக் கூடச் சுகம் தான்
 சட்டென முடிக்கு கொண்டு வரும்
 சகிப்புத் தன்மை இருந்துவிட்டால்..

பொய்கள் கூடச் சுகம் தான் கேட்பவர்
 முகத்தில் புன்னகையை மட்டும்
 வரவழைத்தால்..

ஆத்திரம் கூடச் சுகம் தான் உரிமையையும்
 அக்கறையையும் மட்டும்
 வெளிப் படுத்தினால்..

விட்டுக் கொடுப்பது கூடச் சுகம் தான்
 விவாதத்தை விட உயர்ந்தது உறவு
 என்றப் புரிதல் இருந்துவிட்டால்..

துன்பம் கூடச் சுகம் தான்
 உண்மையான அன்புக் கொண்ட நெஞ்சத்தை
 உணர்ந்துக் கொள்ள உதவினால் ..

தோல்விக் கூடச் சுகம் தான்
 முயற்சியின் தீவிரத்தை இன்னும்
 அதிகப் படுத்தினால்..

தவறுக் கூடச் சுகம் தான்
 தவறாமல் தவறிலிருந்து பாடம்
 கற்றுக் கொண்டால்..

மொத்தத்தில் வாழ்வில் எல்லாம் சுகம் தான்
 எதிர்மறையில் இருக்கும் நேர்மறையைத்
 தேடித் தெரிந்து நம்மைத் தேற்றிக் கொண்டால்...

தன்னில் எது சமூக மாற்றம் ? கவிதை!




தன்னில் எது சமூக மாற்றம் ?

தேவைக்கு அதிகமாய்
 எதையும்
 சேர்க்காமல் இருப்பது.


வீட்டில் எது சமூக மாற்றம் ?
அவரவர் வீட்டுக்குப்பையை
 அடுத்தவீட்டு வாசலுக்கு
 தள்ளாதிருப்பது.


வீதியில் எது சமூக மாற்றம் ?
மற்றவர் வைத்த
 மரங்களெனினும்
 பற்றுவைத்து பராமரிப்பது.


சாலையில் எது சமூக மாற்றம் ?
பின்னே ஒலி எழுப்பும்
 வாகனத்திற்கு
 முன்னே செல்ல வழிவிடுவது.


ஊரில் எது சமூக மாற்றம் ?
இன்னொரு இனத்தின்
 இழவிற்கு
 கண்ணீரோடு கலந்துகொள்வது.


மாநிலத்தில் எது சமூக மாற்றம் ?
வீணாய் கடல்சேரும் முன்
 தானாய் மனமுவந்து
 தண்ணீரை திறந்துவிடுவது.


நாட்டில் எது சமூக மாற்றம் ?
மரபணுக்களில் ஊறிப்போன
 ஊழல் தொற்றை
 அறவோடு அழிப்பது.


உலகில் எது சமூக மாற்றம் ?
உரிமைக்காக போராடும்
 உணர்வாளர்களுக்கு
 உண்மையாக குரல்கொடுப்பது.

விருப்பமே ஆசையின் காரணம் - கவிதை!





விருப்பமே ஆசையின் காரணம்


 ஆசையே கடனுக்கு காரணம்


 அன்பே கடமைக்கு காரணம்


 பண்பே உயர்வுக்கு காரணம்


 பணமே உழைப்பிற்கு காரணம்


 பகையே போருக்கு காரணம்


வெற்றியே விருப்பத்திற்கு காரணம்


 அடிமைத்தனமே விடுதலைக்கு காரணம்


 ஆதிவெடிப்பே ஓசையின் காரணம்


 ஓசையே தமிழுக்கு காரணம்


 தமிழே உலகமொழிகளுக்கு காரணம்


 பக்தியே அருளின் காரணம்


 நிறைவே பூரணத்தின் காரணம்


 பிறப்பே தந்தையின் காரணம்


 வாழ்வே தாயின் காரணம்


 முக்தியே இறைவனின் காரணம்


 முடிவே உனது காரணம்.

Friday 13 December 2013

அட அப்பாவி முதலமைச்சரே...!!




எங்களுக்காக எங்கும் கல்விக்
 கூடங்கள் திறந்தாய்...

சீருடைத் திட்டத்தினால்
பள்ளிகளில் ஏழை, பணக்காரன்
 பிள்ளைகள் என்கிற
 பாகுபாடுகள் நீக்கினாய்...

இலவச மதிய உணவுத் தந்தாய்...

அரசு செலவிலேயே ஆசிரியர்
 பயிற்சிகள் அளித்தாய்...

எல்லாக் கிராமங்களிலும் இரவுப்
 பாடசாலைகள் திறந்தாய்...

இன்னும்
 சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் அதில்
 எதிலாவது உனக்கான
 முத்திரையோ,
அடையாளமோ உண்டோ...?

எல்லாக் கல்விகூடங்களிலும் உன்
 படமாவது உண்டா...?

உன்னால் படித்த எங்களை தவிர
 உனக்கு வேறு அடையாளம்
 உண்டா...?

எம் "பச்சை தமிழரே"
பார்த்தீரா இன்றைய
 தலைவர்களை,




இவர்கள் அறிமுகம் படுத்தும்
 ஒவ்வொன்றிலும்
 இவர்களது அடையாளங்களை...

Thursday 12 December 2013

வேதனை!




100 கிலோ அரிசி மூட்டை

 தூக்குபவனுக்கு

 அதை வாங்க

 சக்தி இல்லை.



100 கிலோ அரிசி மூட்டை

வாங்குபவனுக்கு

 அதை தூக்க

 சக்தி இல்லை...!



Tuesday 10 December 2013

அனுபவத்தில் உணர்ந்து கொண்டது...! கவிதை!


காதலியுங்க அது ஒன்னும் தப்பு இல்லை...

காதலுக்காக காத்திருங்க தப்பு இல்லை...

கையை அறுத்துக்குங்க அதுவும்

 தப்பு இல்லை....

ஏன் தற்கொலை கூட பண்ணிக்குங்க அது கூட தப்பில்லை....


ஆனா அதுக்கு நீங்க காதலிக்கிறவங்க


 தகுதியானவங்களா இருக்கணும்...!



தகுதி இல்லாத ஒருத்தங்களுக்காக நீங்க

 உங்களை வருத்திக்கிறதும் காத்திருக்கிறதும்

 முட்டாள் தனம்..

அந்த முட்டாள் தனத்த ஒரு போதும்

 பண்ணாதிங்க...

ஒருத்தர்கொருத்தர் அனுசரிச்சு போகலன்னா அந்த

 காதலே அர்த்தமற்றதாகி விடும்.

அது ஒரு தலை காதலா கூட மாறிடும்.

பரஸ்பரம் ரெண்டுபேருக்கும் பிடிச்சிருந்தா தான்

 காதல்...

ஒருத்தங்களுக்குபிடிச்சிருந்தா அது வெறும் நேசம்

 நேசத்தை காதல்ன்னு நினைச்சு நீங்களே குழப்பிங்காதிங்க.

நேசத்தை காதல்ன்னு நினைச்சு கற்பனை வானில்

 சிறகடிச்சுப் பறக்காம

 நடைமுறைக்கு சாத்தியமானதான்னு எதார்த்தமா சிந்திச்சுப் பாருங்க.

உங்களை பிடிக்காதவங்களுக்காக உங்கள நீங்கள்

 வருத்தி வாழுறத விட உங்கள பிடிச்சவங்களுக்காக

 உங்க தனித்துவத்தோட வாழ்ந்து பாருங்க

 அதுதான் வாழ்க்கையின் சந்தோஷம்...!

அனுபவத்தில் உணர்ந்து கொண்டது...!

சிந்தனை சிதறல்கள்!




மலை இலக்கானால் குருடனும் அம்பு எய்வான்..!

-

மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்கலலாம்

-

மானத்தை விட்டால் மார் முட்ட சோறு!

-

மெத்தப் படித்தவன் பைத்தியக்காரன்.

-

மாடு கிழமானாலும் , பாலின் சுவை மாறுமா..?

-

வயிறு காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்

-

வாழ்ந்தவன் வறியவன் ஆனால், தாழ்ந்தவனும் ஏசுவான்

-

அவன் வாய் வாழைப்பழம், கை கருணைக்கிழங்கு

-

மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது

-

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா!

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top