.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label அரசியல்!. Show all posts
Showing posts with label அரசியல்!. Show all posts

Thursday 16 January 2014

ராஜீவ்காந்தியை துப்பாக்கியால் தாக்கிய சிங்கள வீரர்....




ராஜீவ்காந்தியை துப்பாக்கியால் தாக்கிய சிங்கள வீரர் ராஜபக்சே கட்சியில் சேர்ந்தார். 1987–ம் ஆண்டு இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர். அதன் பிறகு ராஜீவ்காந்திக்கு சிங்கள ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படடது.

அப்போது 22 வயது சிங்கள வீரர் திடீர்....

தொடர்ந்து இங்கே படிக்கலாம்....

ராஜீவ்காந்தியை துப்பாக்கியால் தாக்கிய சிங்கள வீரர்....

Saturday 4 January 2014

பொது நலம் Vs சுயநலம் – ஜெயலலிதா விளக்கம்!




“பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங் குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப் படுகின்றது. ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப் படுகிறது. சுயநலம் உள்ள மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள். “என்று குன்னூரில் நடந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்ட விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.


நீலகிரி மாவட்டம் குன்னூரில், பொங்கலுக்காக இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைத்துப் பேசிய முதல்வர்:ஜெயலலிதா பேசும்போது, ”தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை ஒட்டி, ஆண்டுதோறும் வழங்கப்படும் வேட்டி சேலை திட்டத்தையும்; பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில் வழங்கப்படும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தினை இன்று நான் துவக்கி வைக்க உள்ளேன்.
3 கோடியே 45 லட்சத்து 29 ஆயிரம் பேர் பயனடையக் கூடிய வேட்டி-சேலைத் திட்டத்தினை இன்று நான் துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


வரும் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் என்ற சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.


தமிழகத்தின் நிதி நிலைமையையும் பொருட்படுத்தாமல் 281 கோடி ரூபாய் செலவில் இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை நான் வழங்கி உள்ளேன். ஏனெனில், பொங்கல் திருநாளை தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பது எனது அவா. என்னைப் பொறுத்தவரை, நேரம் பார்த்து தேவை அறிந்து முழுமையான உதவி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். இது போன்ற உதவிகளை நான் செய்து வருவதால் தான் மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். மக்கள் பக்கம் நான் இருக்கிறேன். அதனால் தான் உங்களுக்கு உதவி செய்யக் கூடிய இடத்திலே நீங்கள் என்னை வைத்து இருக்கிறீர்கள்.


அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த வேளையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆபிரகாம் லிங்கன் அப்போது ஜனாதிபதியாக இருந்தார். சிக்கல் மிகுந்த அந்த வேளையில் ஒரு மூதாட்டி, ஆபிரகாம் லிங்கனை அணுகி அவருக்கு ஆறுதல் கூறுவதாக நினைத்து ஒன்றைச் சொன்னார். “ஜனாதிபதி அவர்களே, எதற்கும் கவலைப்படாதீர்கள், கடவுள் நம் பக்கம் இருக்கிறார். அவர் நம்மைக் காப்பாற்றுவார்” என்று சொன்னார்.


இதற்கு பதில் அளித்த ஆபிரகாம் லிங்கன், “தாயே உங்கள் அன்பு மொழிக்கு நன்றி. நம்மைக் கடவுள் காப்பாற்றுவார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அது அவருடைய கடமை. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்பதை விட கடவுளின் பக்கம் நாம் இருக்கிறோமா என்பது தான் எப்போதும் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது” என்று ஆபிரகாம் லிங்கன் சொன்னாராம்.


இதைப் போல, எனது அரசின் மீது அவதூறுகளைப் பரப்பி, பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு, மக்களை தங்கள் பக்கம் வரவழைத்து விடலாம் என்று சிலர் பகல் கனவு கண்டு கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில், மக்களின் பக்கம் நாம் இருக்கிறோமா என்று நினைத்தே எனது அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் அமைந்துள்ளன. மக்களும் எனது அரசிற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு என்னென்ன வழிகளில் எல்லாம் நன்மை செய்ய இயலுமோ, அந்த வழிகளைப் பற்றியே நான் சதா சர்வ காலமும் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன்.


பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங்குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப் படுகின்றது. ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப் படுகிறது. சுயநலம் உள்ள மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஒரே நலம் தான் இருக்கிறது. அது தமிழக மக்களின் நலம். அதனால் தான் என் அன்புக்குரிய மக்களாகிய நீங்கள் எப்பொழுதும் என் பக்கம் இருக்கிறீர்கள். நானும் உங்கள் பக்கம் இருக்கிறேன்.


தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் இன்னும் நிறைய செய்ய வேண்டிய பணிகள் கடமைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால் இந்திய அளவில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். உங்கள் உறுதுணையோடு அத்தகைய மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.

Thursday 2 January 2014

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி!!!




டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது.

சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் வெற்றி பெற்று, தமது அரசின் பெரும்பான்மையை நிரூபித்தார், ஆம் ஆத்மியின் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்.

மொத்தம் உள்ள 70 உறுப்பினர்களில், ஆம் ஆத்மி அரசுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 36 வாக்குகள் கிடைத்தது. ஆம் ஆத்மி கட்சியின் 28 உறுப்பினர்களும், காங்கிரஸின் 8 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். பாஜகவின் 31 உறுப்பினர்கள், ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் மனீஷ் சிசோதியா நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

ஆம் ஆத்மி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்துக்கு காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்தது. பாஜக எதிர்த்து வாக்களித்தது. முடிவில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது.

வாக்கெடுப்புக்கு முன் நடந்த விவாதத்தின்போது, மக்களுக்காக ஆம் ஆத்மி நல்லாட்சி செய்தால், ஆட்சி காலம் முழுவதும் ஆதரவு நீடிக்கும் என காங்கிரஸ் உறுதி அளித்தது.

அதேவேளையில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சியமைப்பதைக் கடுமையாக விமர்சித்த பாஜக, ஊழல் கட்சி என விமர்சித்துவிட்டு, அதன் ஆதரவுடன் அரசு அமைப்பதன் கட்டாயம் என்ன? என்று கேள்வி எழுப்பியது.

இறுதியாக பேசிய முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், நாட்டில் ஊழல் அரசியலை துடைப்பதற்கான முதல் படியை டெல்லி மக்கள் எடுத்து வைத்துள்ளனர் என்றார்.

முந்தைய காங்கிரஸ், பாஜக நகராட்சி நிர்வாகத்திலோ, எங்களது அரசிலோ ஊழல் புரிந்தவர்கள், ஊழலில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபட கூறினார்.

முன்னதாக, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா 31 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும் வென்றன. காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையில் இல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்தது.

ராம் லீலா மைதானத்தில் 28ம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் பெரும்பான்மைக்கு 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 28 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஆம் ஆத்மிக்கு 8 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் ஆதரவு தருவதாக ஏற்கெனவே உறுதி அளித்திருந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். சபாநாயகர் தேர்தலில் ஆம் ஆத்மியின் மணீந்தர் சிங் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சபாநாயகர் பதவிக்கு ஜெகதீஷ் முகி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, டெல்லி சட்டசபையின் முதல்கூட்டம் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. இதில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் உள்பட அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

Tuesday 31 December 2013

முதல் பெண் நீதிபதி நியமனம் -பாகிஸ்தானின் புரட்சி..!



பாகிஸ்தானில் இஸ்லாமிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் ஷரியா நீதிமன்றம் கடந்த 1980 ஆம் வருடம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளராக இருந்த ஜெனரல் ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானிய நிறுவனங்களை இஸ்லாமிய திட்டங்களுக்கு மாற்றும் விதமாக இந்த நீதிமன்றத்தை தோற்றுவித்தார். குற்றவியல் சட்டங்களுக்கு இணையாக இஸ்லாமிய மதத்தில் காணப்படும் ஹுடூட் விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நீதிமன்றம் இயங்கி வருகின்றது.

நேற்று இந்த நீதிமன்றத்திற்கு புதிய பெண் நீதிபதி நியமிக்கப்பட்டார்.

தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணி புரிந்துவந்த அஷ்ரப் ஜெஹான்(56) கராச்சியில் உள்ள இந்த நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

கடந்த 33 வருடங்களில் இஸ்லாமிய நீதிமன்றத்திற்கு ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். பத்திரிகையாளர்களிடம் அரிதாகவே பேசும் ஷரியத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஆகா ரபிக் அஹமது இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்விற்காக தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

திறமையான பெண்ணான அஷ்ரப் இஸ்லாமிய நீதிமன்றத்தில் இணைந்துள்ளார். ஆண், பெண் என்ற பிரிவினை இஸ்லாமிய சட்டத்தில் இல்லை. அதனால் ஒரு பெண் நீதிபதி இங்கு செயல்படுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தான் இதற்கான முதல் முயற்சியை எடுத்து உலகம் முழுமைக்கும் தங்களது முற்போக்கான எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும், தங்கள் நாட்டினரைப் பற்றிய பல தவறான கருத்துகள் இந்த நடவடிக்கை மூலம் மாறக்கூடும் என்றும் அவர் கூறினார்.

Monday 16 December 2013

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ஏன் இந்த பிடிவாதம்?




இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) சஸ்பெண்ட் செய்யப்பட்டு சரியாக ஓராண்டைக் கடந்துவிட்டபோதிலும், அது தொடர்பான பிரச்சினை இன்னுக்கு முடிவுக்கு வந்தபாடில்லை. சவ்வாக இழுத்துக் கொண்டே போகிறது. இன்னும் எவ்வளவு நாள்கள் இந்த பிரச்சினை ஓடும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான சஸ்பெண்ட் எப்போது நீக்கப்படும் என்பது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களோ நமக்கு விடிவுகாலம் பிறக்காதா என காத்திருக்கிறார்கள்.

காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்பது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி அந்த சங்கத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி சஸ்பெண்ட் செய்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி), இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதித்தது.

ஐஓஏ மீதான தற்காலிக முடக்கத்தை நீக்குவதற்காக தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும் அதிலிருக்கும் முட்டுக்கட்டைகள் இன்னும் தகர்ந்தபாடில்லை. இதற்கு யார் காரணம் என்றால், அது ஐஓஏதான் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் ஐஓஏ நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது ஐஓசி.

நல்ல விஷயம்தானே அப்படியொரு திருத்தத்தைக் கொண்டு வருவதில் என்ன பிரச்சினை என தோன்றலாம். ஆனால், அப்படியொரு திருத்தம் கொண்டு வரப்பட்டால் இந்திய விளையாட்டுத் துறையில் நிர்வாகிகளாக இருக்கும் பெரும்பாலான பெரிய மனிதர்கள் வீட்டுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான் அந்தத் திருத்தத்தை செய்யாமல் இன்று வரை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள்.

ஐஓசி எச்சரிக்கை 

கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற ஐஓஏவின் செயற்குழு கூட்டத்தில் சட்டத்திருத்தம் தொடர்பான கருத்துரு தயாரிக்கப்பட்டு ஐஓசிக்கு அனுப்பப்பட்டது. அதில் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்றும், அதற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஐஓஏவின் நீதி நெறிக்குழு முடிவு செய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதை உடனடியாக நிராகரித்த ஐஓசி, தாங்கள் கூறியபடி சட்டத்திருத்தம் செய்யப்படாவிட்டால் ஐஓஏவின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தது.

இதையடுத்து வேறு வழியில்லாமல் கடந்த 8-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஐஓஏ கூட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. அப்போதே ஐஓஏ தேர்தல் தேதியும் (பிப்ரவரி 9) அறிவிக்கப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான லலித் பனோட் மற்றும் அபய் சிங் சௌதாலா ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

அப்போது “இந்திய வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஐஓஏ தேர்தலில் போட்டியிடுவதில்லை என நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்” என சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான அபய் சிங் சௌதாலாவும், பொதுச் செயலரான லலித் பனோட்டும் தியாகிகளாகப் பேசிக் கொண்டார்கள். ஐஓசியின் கிடுக்கிப் பிடியில் இருந்து தப்பிக்க வழியின்றிதான் இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என கூறினார்களே தவிர, விளையாட்டு வீரர்களின் நலனுக்காக அல்ல என்பது உலகறிந்த விஷயம்.

குளிர்கால ஒலிம்பிக் 

இதனிடையே ஐஓஏவின் சட்டத்திருத்தத்தால் மகிழ்ச்சியடைந்த ஐஓசி தலைவர் தாமஸ் பேச், “ரஷியாவின் சோச்சியில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கொடியின் கீழ்தான் பங்கேற்க வேண்டும். ஒருவேளை அதற்கு முன்னதாக ஐஓஏ தேர்தல் நடைபெற்றுவிட்டால், அதன் மீதான சஸ்பெண்ட் நீக்கப்படுவதோடு, இந்தியர்கள் அவர்களின் தாய் நாட்டு தேசியக் கொடியின் கீழ் பங்கேற்க அனுமதிக்கப்படும்” என அறிவித்தார்.

பிப்ரவரி 9-க்கு முன்னதாக ஐஓஏ தேர்தல் நடைபெறும் பட்சத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக ஐஓஏ மீதான தடை நீக்கப்பட்டுவிடும் என எதிர்பா்க்கப்பட்ட நிலையில் அடுத்த பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. கடந்த 8-ம் தேதி சட்டத்திருத்தம் செய்யப்பட்டதில் ஒரு ஓட்டை இருப்பதை கண்டுபிடித்திருக்கிறது ஐஓசி. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சட்டம் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், அது தொடர்பாக ஐஓஏவின் நீதி நெறிக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பதுதான் அந்த ஓட்டை. இந்த ஓட்டை தெரியாமல் விழுந்ததல்ல, ஊழல்வாதிகள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் மீண்டும் நுழைவதற்காக திட்டமிட்டு போடப்பட்டதாகவே கருதப்படுகிறது.

தடை நீக்கப்படாது 

இதனால் கோபமடைந்துள்ள ஐஓசி, உங்களின் சட்டத்திருத்தம் முழு மகிழ்ச்சியளிக்கவில்லை. பிப்ரவரி 9-ம் தேதி இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக நாங்கள் கூறியதுபோல் முழுமையான சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். அப்படியொரு திருத்தம் கொண்டு வராத வரையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான தடை நீக்கப்படாது என எச்சரித்திருக்கிறது.

சட்டத்திருத்தத்தில் தேவையில்லாத ஊகங்களையும், சந்தேகத்திற்குரிய விளக்கங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள ஐஓசி, “ஐஓஏ நிர்வாகியாக இருக்கும் ஒருவர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்போது அவர் தானாகவே ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில் அவர் சஸ்பெண்ட் செய்யப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும். நீதிமன்றம் நிரபராதி என தீர்ப்பளிக்கும் வரையில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஐஓஏவுக்குள் நுழைய முடியாது. ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவோ, அவரை மீண்டும் பதவியில் அமர்த்தவோ ஐஓஏ நீதி நெறிக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது” என தெளிவாகக் கூறியிருக்கிறது.

சிலர் 30 முதல் 40 ஆண்டுகள் வரை பதவியில் இருந்துவிட்டபோதும் கூட அங்கிருந்து வெளி யேற அவர்களுக்கு மனமில்லை. தங்களின் பதவியைப் பயன்படுத்தி பல ஆண்டுகள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துவிட்டதோடு, பல்வேறு வெளிநாடுகளையும் இலவசமாக சுற்றிப்பார்த்து விட்டனர். ஒருவேளை அவர்கள் பதவியில் இருந்து விலகினாலும், தங்களின் பிள்ளைகளையோ, பினாமிகளையோதான் அந்தப் பதவியில் அமர்த்த வழி பார்ப்பார்கள். இதுதான் ஆண்டாண்டு காலமாக இந்திய விளையாட்டுத் துறையில் நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசும், மாநில அரசுகளும் விளையாட்டுத் துறைக்கு பணத்தை ஒதுக்கிவிட்டு, இந்தத் திட்டத்துக்கு இத்தனைக் கோடி ஒதுக்கியிருக்கிறோம் என்று விளம்பரப் படுத்துவதோடு தங்களின் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கின்றன. கடந்த காலங்களில் விளையாட்டை மேம்படுத்துவதற்கும், விளையாட்டுச் சங்கங்களை முறைப்படுத்தவும் மத்திய அமைச்சர்கள் மேற்கொண்ட முயற்சிகள்கூட ஊழல்பேர் வழிகளின் நெருக்கடியால் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன.

தாய் நாட்டுக் கொடி 

இந்திய அரசு செய்யாத நல்ல காரியத்தை இப்போது ஐஓசி செய்திருக்கிருக்கிறது. ஐஓசியின் பிடி இறுகியதால் ஐஓஏவுக்கு நெருக்கடி முற்றியிருக்கிறது.

இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது. ஊழல்பேர்வழிகளை வெளியேற்றி நேர்மையானவர்களையும், முன்னாள் விளையாட்டு வீரர்களையும் ஐஓஏவுக்கு நிர்வாகிகளாக் கொண்டு வரவேண்டும். இந்திய வீரர்கள் தங்கள் தாய்நாட்டின் தேசியக் கொடியுடன் சர்வதேசப் போட்டிகளில் தலைநிமிர்ந்து பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டிய நேரமிது.

விளையாட்டுத் துறையில் ஊழல்பேர்வழிகள் இல்லாத நிலையை 5 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்திருந்தால் காமன்வெல்த் ஊழல் என்ற கறை இந்தியாவின் மீது படிந்திருக்காது. இந்தியாவுக்கும் சர்வதேச அரங்கில் தலைக்குனிவு ஏற்பட்டிருக்காது!

Sunday 15 December 2013

பா.ஜ.வில் சேர்ந்தால் அமைச்சர் பதவி: கங்குலிக்கு மோடி அழைப்பு!




 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை பா.ஜனதாவில் சேருமாறு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.


அவ்வாறு கட்சியில் சேர்ந்தால் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவதாகவும் அக்கட்சி, கங்குலியிடம் தெரிவித்துள்ளது.


இதனிடையே மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி தருவதாக, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இந்நிலையில் கங்குலியிடம் இதுகுறித்து கேட்டபோது, தமக்கு பா.ஜ.வில் சேருமாறு அழைப்பு வந்துள்ளது உண்மைதான் என்றும், ஆனால் தாம் அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், விரைவில் இது குறித்த தனது முடிவை தாம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

  
சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து அவரது ரசிகர்களை ஈர்க்க காங்கிரஸ் முயற்சித்தாக பா.ஜனதா குற்றம் சாட்டிய நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சிக்கு பதிலடியாக தங்கள் கட்சியில்  கங்குலியை சேர்க்க அக்கட்சி முயற்சிப்பதாக தெரிகிறது.

Sunday 8 December 2013

குற்றவாளிகளும் கோடீஸ்வரர்களும் நிறைந்த மாநிலங்களவை!



மாநிலங்களவை உறுப்பினர்களில் 38 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 15 பேர் கொடூர குற்றங்களுக்கான வழக்குகள் உள்ளது என்றும் இதில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனவும் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் நியமன உறுப்பினர்கள். 6 இடங்கள் காலியாக உள்ளன. எஞ்சியுள்ள 227 எம்பிக்களின் சொத்து மதிப்பு மற்றும் குற்ற பின்னணி குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 227 எம்பிக்களில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 20 கோடி. காங்கிரஸ் எம்பிக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 16.74 கோடி. இதற்கு அடுத்தபடியாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்களின் சராசரி மதிப்பு ரூ. 13.82 கோடி.


பாஜ எம்பிக்களின் சொத்து மதிப்பு ரூ. 8.51 கோடி. ராஜ்யசபா எம்பிக்களில் மிகப்பெரும் செல்வந்தராக இருப்பவர் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த மகேந்திர பிரசாத். இவருக்கு ரூ. 683 கோடி மதிப்புக்கு சொத்து உள்ளது. இவருக்கு அடுத்தபடியாக கர்நாடகாவை சேர்ந்த சுயேட்சை எம்பி விஜய் மல்லய்யாவுக்கு ரூ. 615 கோடி சொத்து உள்ளது. சமாஜ்வாடி உறுப்பினரும் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சனுக்கு ரூ. 493 கோடி சொத்து இருக்கிறது. 38 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 15 பேர் கொடூர குற்றங்களுக்கான வழக்குகள் உள்ளது.

Friday 29 November 2013

குஜராத்தில் போலீசார் கண்காணித்த இளம்பெண்ணை மோடி சந்தித்த படங்கள் வெளியானதால் பரபரப்பு!

 

குஜராத்தில் அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின்படி, கண்காணிக்கப்பட்டதாக கூறப்படும் இளம்பெண், முதல்வர் மோடியை சந்தித்த படங்கள் இணையதளத்தில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் முதல்வர் மோடிக்கு நெருக்கமான அமைச்சர் அமித் ஷா. இவர், போலீஸ் அதிகாரி ஜிங்காலை தொடர்பு கொண்டு இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமைச்சரும் அதிகாரியும் பேசிய தொலைபேசி உரையாடல்களும் வெளியானது.

இதை அந்த பெண்ணின் தந்தை மறுத்தார். இந்நிலையில், போலீஸ் அதிகாரி சிங்கால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அமித் ஷாவை மட்டுமன்றி 2005ம் ஆண்டு முதல் நரேந்திர மோடியுடனும் அந்த பெண்ணுக்கு அறிமுகம் உள்ளதாக புலனாய்வு இணையதளம் குலைல் அம்பலப்படுத்தி உள்ளது.

 கடந்த 2005ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகரில் நடந்த விழாவின் போது முதல்வர் மோடியை சர்ச்சைக்குரிய அந்த பெண் சந்தித்து பேசுவது போன்ற புகைப்படங்கள் அந்த இணையதளத்தில்  வெளியாகி உள்ளன.  பெண்ணின் பெயர் மாதுரி என்று குறிப்பிடப்பட்டு, முகம் மறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த புகைப்படங்களில் ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மாவும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதீப் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மலைத்தோட்ட திட்ட விவகாரம் தொடர்பாக, அப்போது நான் கலெக்டராக இருந்த போது மோடியை அந்த பெண் சந்திக்க ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளார். அதன்பிறகு அந்த பெண்ணுடன் மோடி இமெயில் தகவல்களை தொடர்ந்து பரிமாறி வந்ததாகவும் அதில் தெரிவித்துள்ளார்.


அந்த பெண்ணை போலீசார் கண்காணித்தது தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கடந்த வாரம் பிரதீப் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சர்ச்சைகளுக்கு மத்தியில் மோடியை பெண் சந்தித்த புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியானதால் குஜராத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Thursday 28 November 2013

மோடி அமர்ந்த நாற்காலி ரூ.4 லட்சத்துக்கு ஏலம் போனது!

 nov 28 -modi chair

மோடி எங்கி போனாலும் சர்ச்சைக்கு பந்ஜ்சமில்லை .ஆனால் இந்த முறை அவரது பேச்சால் மட்டுமின்றி அவர் உட்கார்ந்து சென்ற நாற்காலியால் கூட சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் பா.ஜ. பேரணி நடந்தது. இதில், கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதில், மோடி அமர்வதற்காக ஆக்ரா நகராட்சி மன்ற பாஜ கவுன்சிலர், வித்தியாசமான நாற்காலியை உருவாக்கினார்.கூட்டம் முடிந்ததும் மோடி அமர்ந்த நாற்காலியை ஏலம் விடும்படி, கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜ நிர்வாகிகள் சிலர் கூறினர். ஒருவர் ஸி2 ஆயிரம் ஏலம் கொடுப்பதாக கூறியதும் போட்டி ஏற்பட்டது. மற்ற பாஜ.வினரும் அதை போட்டிப் போட்டு ஏலம் கேட்க, அன்றைய தினமே ஸி1.25 லட்சத்துக்கு ஏலம் எட்டியது.

இதையடுத்து அப்போது, நாற்காலியை ஏலம் விடாமல், மோடியின் நினைவாக அதை தானே வைத்து கொள்வதாக கூறி கவுன்சிலர் எடுத்துச் சென்று விட்டார். ஆனால், ஏலம் கேட்பது மட்டும் நின்றபாடில்லை. நேற்று இந்த நாற்காலியை உள்ளூர் பாஜ தலைவர் ஒருவர் ரூ.4.21 லட்சத்துக்கு ஏலம் கேட்டதாக கவுன்சிலர் தெரிவித்தார்.

பின்னர் இந்த ஏல விவகாரம் பற்றி பா.ஜ. தலைவர் புருசோத்தம் கந்தல்வால் கூறுகையில், ‘‘தலைவர்கள் அமர்ந்த நாற்காலிகளை ஏலம் விடுவது கட்சியின் கலாசாரத்துக்கு விரோதமானது. இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்தி விட்டது’’ என்று குற்றம்சாட்டினார்.

Monday 25 November 2013

இந்திய அரசிடம் நேதாஜியின் இருபது ரகசிய ஃபைல்கள் – தொடரும் மர்மம்..!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்னும் மனிதர் 1945க்கு பிறகு வெறும் மர்ம்மாகி போனார் – இதற்கிடையில் அவரை பற்றி இந்திய அரசு வைத்திருக்கும் 20 கோப்புகளை மறைக்கும் ரகசியம் – உண்மையில் நடந்தது என்ன?

nov 25 - nethaji

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இருபது கோப்புகளை இந்தியா வைத்திருக்கிறது. இதனை பொதுமக்களுக்கு ஏன் கூறவில்லை? இதன் கோப்புகளை பற்றி அரசு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதெல்லாம் மவுனம் சாதிப்பது ஏன்? இதனை பற்றி ஜனாதிபதி மாளிகையின் வட்டாரத்தில் விசாரித்தால் இந்த கோப்புகள் வெளியானால் இந்தியாவின் நட்புறவு பல நாடுகளை பாதிக்கும் என சில குற்றச்சாட்டுகாளை முன் வைக்கின்றனர் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை பற்றி.

அதில் முதல் குற்றச்சாட்டு இந்தியாவுக்கு எதிராய் சதி செய்தார் நேதாஜி – ஜப்பான் இரண்டாம் உலகப்போரின் போது நார்த் ஈஸ்ட் ஃப்ரிரன்டியரில் பல இடங்களை போரிட்டு பிரிட்டிஷ் ஆர்மியிடம் இருந்து கைப்பற்றிய போது அதில் பலர் சுபாஷுடன் சேர்ந்து “இந்தியன் நேஷனல் ஆர்மி” என்ற தனி இயக்கத்தை சுபாஷ் ஜப்பானுடன் சேர்ந்து செய்தார் என்பது ஒன்று.

இரண்டு -1941 ஆம் ஆண்டு சுபாஷை கைது செய்ய நினைத்த பிரிட்டிஷ் ஆர்மி படை அவரை வீட்டு காவலில் கொல்கத்தாவில் வைத்திருந்த போது அவர் அப்போது அங்கிருந்து வெளியாகி யாருக்கும் தெரியாமல் ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்கு சென்று ஹிட்லரிடம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்க உதவி கோரினார். இதன் பிறகு அங்கிருந்து டோக்யோவுக்கு சென்று ஜப்பான் அரசின ஆதரவோடு இந்தியன் நேஷனல் ஆர்மியை உருவாக்கியதாகவும், அங்கு பல பயிற்ச்சிக்கு பிறகு அங்கிருந்து போர்ப்படைகளை திரட்டி தரை மார்க்கமாக மியான்மார்(பர்மா) வழியாக வரும்போது நார்த் ஈஸ்ட்டில் ஒரு முக்கிய இடத்தை கைப்பற்றிய இடம் தான் தற்ப்போதய மணிப்பூர்.

பின்பு அங்கிருந்தபடியே தன் இந்தியன் நேஷனல் ஆர்மியை வளப்படுத்திய சமயம் 1945 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ரகசியமாக கவுன்ட்டர் அட்டாக்கை கொடுத்த போது தான் நேதாஜி டைஹோக்கு விமான நிலையம் வழியாக தப்பித்தார் என்பதே கடைசி வரை உறுதியான தகவல். அதன் பிறகு எல்லாமே மர்ம்மா போச்சி.

இந்நிலையில் சிலர் அவர் விமான விபத்தில் இறந்ததாகவும், சிலர் அவரி புத்த பிட்சுவாக இந்தியாவுக்கு ஊடுருவினார் என்றும் சிலர் சைபீரியாவில் அரசியல் கைதியாக இருந்தார் என்று பல தகவல்கள் வந்தாலும் உறுதியான தகவல் ஏதும் இன்று வரை இல்லை.

இந்தியாவில் சுதந்திரம் அடைந்த பிறகு பல விசாரனை கமிஷன்கள் வைத்து அவரை பற்றி உளவு செய்தும் பார்த்தும் இன்று வரை சரியான தகவல்கள் ஏதும் இல்லை. இந்தியாவுக்கு எதிராய் ஹிட்லரிடம் கை கோர்த்த பல பயிற்ச்சி படங்கள் அந்த கோப்புகளில் உள்ளது என்றும் இந்தியாவிலும் ஹிட்லர் படை இருந்ததாகவும் பல விஷயங்கள் இன்று உலக நாடுகளுக்கு சலாம் போடும் இந்தியாவின் வெளியுறவு கொள்கை பாதிக்கபடும் என அந்த பைல்களை கிளாஸ்ஃபைடு ஆக்கி அதை ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் ஆட்களும் பாதுகாப்பாய் ரகசியம் காத்து வருகின்றனராம்.

Saturday 23 November 2013

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு:


சுருக்கமாக: அகிம்சை முறையில்
 போராடி கொண்டு இருந்த
 காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார்.

அகிம்சை முறையில் போராடினால்
 பல ஆண்டுகளாக இந்த போராட்டம்
 இழுத்து கொண்டே போகும்.
கோடிகணக்கான
 இந்தியர்களை வெறும் இருபதாயிரம்
 வெள்ளையனைக் கொண்ட ராணுவம்
 அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது.

ஏன் அந்த
 ராணுவத்தை அடித்து விரட்ட
 கூடாது. அவர்களை நான் ஆயுத
 ரீதியாக எதிர்கொள்ள திட்ட
 மிட்டு இருக்கிறேன். உங்களின்
 கருத்து என்ன என்று காந்தியிடம்
 கேட்ட
 போது அகிம்சையை போதிக்கும் நான்
 இதை ஒருநாளும் ஏற்று கொள்ள
 மாட்டேன் என்று சொன்னார்.
இருவருக்கும் நிறைய கருத்து மோதல்
 வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள்
 தனித்து போராட தயாராகினார்.
முதல் கட்டமாக
 தமிழ்நாடுக்கு வந்தார்.

வந்து துடிப்பான
 இளைஞ்சர்களை சந்தித்து.
வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக
 தான் எதிர்கொள்ள வேண்டும்
 அதற்காக நாம் ராணுவ
 கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
என்று இளைஞர்களிடம் பிரச்சாரம்
 செய்தார்.
பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில்
 மற்ற மாநிலங்களுக்கும்
 சென்று இளைஞ்சர்களின்
 ஆதரவை திரட்டினார்.

ஆனால்
 அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும்
 ஆயுதம் எடுத்து போராட முன்
 வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த
 போது தமிழகத்தில் உள்ள ஆயிர
 கணக்கான இளைஞர்கள் சுபாஷ் சந்திர
 போஸ் அவர்களின்
 போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள்.

அந்த இளைஞர்களுக் கெல்லாம்
 மறைமுகமாக
 பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் காந்தியின்
 ஆதரவாளர்கள்
 எண்ணிக்கை நாளுக்குநாள்
 குறைந்து கொண்டே போனது.
தமிழர்கள் சுபாஷ் சந்திரபோசின்
 போராட்டத்தில்
 நம்பிக்கை கொண்டு ராணுவத்தில்
 இணைய ஆரம்பித்தார்கள்.
அப்போது சுபாஷ் சந்திரபோஸ்
 தலைமையில் ஆயுத
 புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள்
 என்று வெள்ளையர்களுக்கு தெரியவர,
இவர்களை எல்லாம் வெள்ளையர்கள்
 வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள்.


சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும்
 தமிழ் இளைஞர்கள்
 இணைந்து கொண்டதை அறிந்த
 காந்தியின் ஆதரவாளர்கள். சுபாஷ்
 சந்திரபோசை காட்டி கொடுக்கவும்
 ஆரம்பித்தார்கள். அதனால் அவரால்
 இந்தியாவில்
 இருந்துகொண்டு செயல்பட
 முடியாமல் போனது.
வெள்ளையர்களிடம்
 இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ்
 வெளிநாடுக்கு சென்றார்.
சில
 வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின்
 ஆதரவை திரட்டினார்.

ஒவ்வொரு நாடாக சென்று போருக்கான
 ஆயுத தளவாடங்களை ஹிட்லர்
 மூலம் சேகரித்தார். எல்லாம் தாயாரான
 பின்பு இந்தியாவில் இருக்கும்
 வெள்ளையர்களின் ராணுவ
 முகாம்களின்
 எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர்
 இருக்கிறார்கள்
 என்று உளவு பார்த்து தகவல்
 அறிந்து கொண்ட பின்னர்.

தமிழ் நாட்டில் இருக்கும் அவரின்
 ஆதரவாளர்களுக்கு தகவல்
 அனுப்பினார். நான் வெளிநாட்டில்
 மிகப்பெரிய ராணுவ
 கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன்.
இந்த ராணுவத்தில்
 இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக
 ஆயுதம் எடுத்து போராட
 விரும்புபவர்கள். என்னுடன்
 இணைந்து கொள்ளலாம் என்று தகவல்
 அனுப்பி இருந்தார்.


இந்தியா முழுவதும் இந்த தகவல்
 பரவியது. இதை அறிந்த தமிழக தேச
 பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான
 இளைஞர்கள் படகு மூலம்
 வெளிநாட்டுக்கு செல்ல
 ஆரம்பிதார்கள்.
அங்கே எல்லோருக்கும் போர்ப்
 பயற்சி அளிக்கப்பட்டது.
அப்போது போராளிகளிடம்
 சுபாஷ்சந்திரபோஸ் பேசினார் .
எமது தேசத்தில் வெறும்
 இருபது ஆயிரம் வெள்ளையனின்
 ராணுவம் இருக்கிறது. நாம்
 இங்கு மிகப்பெரிய ராணுவ
 கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம்.


அவர்களை நாம் கப்பல் மூலம்
 சென்று டெல்லி வரை தாக்க
 போகிறோம் டெல்லியில் தான்
 வெள்ளையனின் முழு பலமும்
 இருக்கிறது எனவே டெல்லி வரை நாம்
 சென்று தாக்க போகிறோம்
 என்று சொன்னார். ஆனால் இந்த
 ராணுவத்தில் பெரும்பாலானோர்
 தமிழர்கள் என்பது குறிப்பிட
 தக்கது .


ஒரு பக்கம் காந்தியின்
 அகிம்சை போராட்டம்
 நடந்து கொண்டிருந்தது.
சுபாஷ்சந்திரபோஸ்
 திட்டமிட்டபடி யுத்த ஆயுத
 கப்பல்கள் மூலம்
 சென்று டெல்லி வரை வெள்ளையர்களின்
 ராணுவத்தை அடித்தார்கள்.
அப்போது வெள்ளையர்கள் பாரிய
 உயிரிழப்புக்களை சந்தித்தார்கள்.
வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில்
 இருந்து வரும் ஆயுத
 உதவிகளை தடுத்தார்கள்
 முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ்
 சந்திர போஸின் கட்டுபாட்டுக்குள்
 வந்தது. அதனால்
 தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம்
 செய்யஇயலாமல் ஆயுத
 பற்றாகுறை வந்தது.

பொருளாதார
 பிரச்சனையும் அவர்களுக்கு வந்தது.
தொடர்ந்து அவர்கள் இந்தியாவில்
 இருப்பது பற்றி கேள்விகுறியானது.
சுபாஷ்சந்திரபோஸ்
 ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும்
 சண்டையில் வெள்ளையர்கள்
 தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள்.
இந்த தோல்வியை அவர்களால்
 ஒப்பு கொள்ள முடியவில்லை.
அதனால் வெள்ளையர்கள்
 இந்தியாவை விட்டு வெளியேற
 முடிவு செய்தார்கள்.

ஆனால்
 இந்தியா முழுவதும்
 சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின்
 ராணுவ போராட்டம் தெரியவந்தது .
அதனால் காந்தி வழியில்
 போராடி கொண்டிருந்தவர்களுள்
 பெரும்பாலானோர் சந்திரபோஸ்
 அவர்களின் பின்னால் செல்ல
 ஆரம்பித்தார்கள். இதனால்
 வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்க
 முடியாத நிலைமை ஏற்ப்பட்டது.
ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள்
 கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ்
 சந்திர போஸ் மக்களை தவறான
 வழியில் கொண்டு செல்கிறார்
 என்றும் கூறி வந்தார்.


காந்தியின் ஆதரவாளர்களால்
 சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க
 பட்டார்.
அவரை கைது செய்து சிறையில்
 அடைத்தார்கள் வெள்ளையர்கள்.
ஆனால் சிறையில்
 வேலை செய்தவர்களின் உதவியுடன்
 சுபாஷ் சந்திர போஸ்
 தப்பித்து வந்தார். அதன்
 பிறகு ஆயுத போராட்டம் கடும்
 தீவிரம்
 அடைந்து வந்தது வெள்ளையர்கள்
 வெளியேறும் நிலைமையும் வந்தது.
ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக
 தோற்கடித்து இந்தியாவில்
 விரட்டியடிக்க பட்டோம்
 என்று வந்து விடக்
 கூடாது என்பதற்காக.

அப்படி ஒரு அவமானம் வந்து விட
 கூடாது என்பதற்காக
 காந்தியை நாடினார்கள்
 வெள்ளையர்கள்.
வெள்ளையர்கள் அகிம்சை ரீதியாக
 போராடும்
 காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள்
 அகிம்சை போராட்டத்தால்
 உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க
 போகிறோம் நாங்கள்
 இந்தியாவை விட்டு போக
 போகிறோம் என்று சொன்னார்கள்.
காந்தியின்
 அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன்
 இந்தியாவிற்கு சுதந்திரம்
 கொடுத்து விட்டு வெளியேறினான்.
ஆனால் தற்போது இந்திய
 அரசாங்கமும் இந்திய மக்களும்
 சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள்.

அவரின்
 மகத்தான போராட்ட வரலாற்றை திட்ட
 மிட்டு மறைத்து விட்டார்கள். காரணம்
 காந்தியின் அகிம்சை போராட்டம்
 பாதித்து விடும் இந்த
 வரலாறு மறைந்து விடும்
 என்பதற்காக.

Wednesday 20 November 2013

மோடிக்கு நோ விசா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீ்ர்மானம்!

 nov 20 - modi u s
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா தொடர வேண்டுமென்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இதற்கான தீர்மானத்தை எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ளனர். மதசுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மோடிக்கு விசா மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்று அந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. குஜராத் கலவரத்தை சுட்டிக்காட்டியுள்ள அந்த தீர்மானம் அதில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தங்களுக்கு நீதி கோரி வருவதையும் குறிப்பிட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 2002–ம் ஆண்டு கலவரம் நடந்தது. அதில் ஏராளமானவர்கள் பலியானார்கள். அப்போது குஜராத் முதல் – மந்திரியாக நரேந்திரமோடி பதவி வகித்தார்.

இதையடுத்து மத சுதந்திரத்தின் விதிமுறையை மீறியதாக கூறி இவருக்கு ‘விசா’ வழங்க அமெரிக்கா மறுத்தது. அதை தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெறும் வர்த்தக மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நேரில் பங்கேற்காமல் வீடியோ, கான்பரன்சிங் (வாணொலி காட்சி) மூலம் அவர் பேசி வந்தார்.

இந்த நிலையில், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து எதிர்காலத்தில் அவர் பிரதமராகும் பட்சத்தில் அவருடன் அமெரிக்கா சுமூக உறவு மேற்கொள்ளும் என அமெரிக்கா அறிவித்தது.

எனவே, தடைகள் நீக்கப்பட்டு நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு ‘விசா’ மறுப்பு நீடிக்கப்படுகிறது.அதற்கான தீர்மானம் அமெரிக்கா பாராளு மன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மைனாரிட்டிகளின் உரிமைகள் மற்றும் மத சுதந்திரங்களை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த தீர்மானத்தை ஆளும் குடியரசு கட்சியின் கெய்த் எல்லிசன், எதிர் கட்சியின் குடியரசு கட்சியின் ஜோபிட்ஸ் மற்றும் 25–க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ளனர்.

Tuesday 19 November 2013

ஐ என் எஸ் விக்ரமாதித்யா – கொஞ்சம் நதி மூலம் + ரிஷி மூலம்!



 ஐ என் எஸ் விக்ரமாதித்யா - என்னும் மாபெரும் விமான தாங்கி போர்க்கப்பலை இந்தியா பத்தாண்டுகளுக்கு முன் வாங்கியது நினைவிருக்கலாம். ஆனால் அது இன்னும் சில நாட்களில் இந்தியக்கடல் எல்லைக்குள் வந்து சேரும். இது ஒரு 9 வருட சமாச்சாரம். இது முதலில் புதுக்கப்பல் அல்ல இது ஒரு 26 வருட கப்பல். இதை ரஷியா கட்டியது 1987 ஆம் ஆண்டு. பின்பு இதை 9 வருஷத்திலே மூட்டை கட்டி விட்டனர் ரஷிய மிலிட்டிரி. ஏன் இதனை இயக்கும் செலவு அப்போதைய ர்ஷிய பட்ஜெட்டில் பெரிய ஓட்டை போட்டதன் காரணம் தான், பின்பு இது கடலோர குப்பையாய் இருந்த இதை பல ஆண்டு பேசி ஒரு வழியாய் 2004 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வாங்கப்பட்டது.


அதாவது டீல் எப்படி – கப்பல் இலவசம். அதை 800 மில்லியன் பராமரிப்பு செலவை இந்தியா ரஷியாவுக்கு கொடுக்க வேண்டும். அது போக 1 பில்லியன் – 100 கோடி டாலர்கள் புது விமானமும் ரேடார்கள் மற்றூம் ரன்வே பராமரிப்புக்காக ஒதுக்கபட்டு 3 வருடத்துக்குள் இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கபட்ட இந்த கப்பல் பல பிரச்சினைகளை சந்தித்தது.2008 ஆம் ஆண்டு ரிட்டையர் ஆக வேண்டிய ஐ என் எஸ் விராட் இந்த டிலே பிரச்சினையால் 2012 வரை உழைக்க கட்டளையிடப்பட்டது.

1960ல் இருந்து இந்தியாவில் விமானம் தாங்கிய கப்பல் கொண்ட இந்திய ரானுவம் 2008 முதல் இன்று வரை விமானம் தாங்கிய கப்பல் இல்லாமல் இருந்த ரிஸ்க் காலம் இது தான். விராட் குற்றூயிரும் கொலையுருமாய் பட்டி பார்த்து அதை 2012 வரை வைத்து கடந்த ஒரு வருட கால இந்திய நேவியின் ரிஸ்க் இன்னும் யாருக்கு எடுத்துரைக்கவே இல்லை. இது இந்தியாவுக்கு பெரிய ரிஸ்க் ஆகும். பிரச்சினை என்ன? பரமாரிப்புக்காக 800 மில்லியன் டாலர் என ஒத்து கொண்ட இந்தியா வருடா வருடம் டிலே என்பதால் பட்ஜெட் எகிறி கொண்டு போனது.

கேபிள் வேலை மட்டும் டபுள் ஆகியது. கடைசியில் இந்தியா 2009 ஆம் ஆண்டு இன்னும் 120 கோடி டாலர் தருகிறேன் என்று கூறி பணிந்த காரணம் ரஷியா 2008 ஆம் ஆண்டு இந்த பிராஜக்ட்டை ஸ்கிராப் செய்வதாய் மிரட்டியது. இதனால் சி ஏ ஜி எனப்படும் இந்தியன் அரசாங்க ஆடிட்டர்ஸ் ஒரு பழைய கப்பலுக்கு ஏன் 235 கோடி டாலர் என கேட்டு இதற்க்கு புதுசு வாங்கியிருக்கலாம் என கூறிய போது இந்திய ரானுவ செகர்ட்டிரியோ நான் வேண்டுமானல் உடனே 200 கோடி செக் தருகிறேன் ஒரு கப்பலை வாங்கி காட்டுங்கள் என கூறி இந்த பிரச்சினைக்கு முற்றூபுள்ளி வைத்தாலும் 2010 ஆம் ஆண்டு தொடங்கிய சோதனை போன வாரம் தான் டெலிவரி கொடுக்கும் கட்டத்துக்கு வந்தது – இல்லை வைக்கப்பட்டது. 340 கோடி டாலர் தான் இதன் கடைசி விலை என 2008ல் மிரட்டிய ரஷியாவை மாற்றீயது 2010 ஆம் ர்ஷிய பிரதமரின் வருகை ஒரு வழியாய் 235 கோடி டாலருக்கு முடிவு செய்தமைக்கு முக்கிய காரணம் பிஜேபியின் சி ஏ ஜியின் அழுத்தம் தான்.

இந்த டிலே ஏன் என்று ஆராய்ந்த போது 2010ல் இதிலும் ஒரு பெரிய ஊழல் இந்தியா செய்கிறது என அலர்ட் செய்த ரஷிய அட்மிரல் கோர்கோஷெவ். இதனால் இதன் பிராஜக்ட் இயக்குனராய் இருந்த சுக்ஜிந்தர் சிங் இதன் பொறூப்புகளில் இருந்து விடுவிக்கபட்டார். அப்படி இப்படின்னு பல டிரையல் முடிச்சு 16 நவம்பர் இதனை கமிஷன் செய்த போது சிறப்பு விருந்திரனாய் இந்திய ராணுவ அமைச்சர் அந்தோனி இந்தியா சார்பில் சென்றார். இந்திய மற்றும் ரஷிய ராணுவ அதிகாரிகள் மூலம் இந்தியாவுக்கு 320 நாட் வேகத்தில் வரும் இந்த கப்பலில் மொத்தம் நீலம் கால் கிலோமீட்டருக்கு மேல் அதாவது 283..5 மீட்டர் அகலம் 59.8 மீட்டர் 1400 முதல் 2000 பேர் இருக்கும் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம். இதில் 34 விமானங்கள் – மிக் 29 மற்றூம் ஹெலிகாப்டர்களும் அடக்கம். இதில் இந்தியாவின் துருவ்ம கூட அடக்கம்.

இது இந்திய ராணுவத்துக்கு பெரிய மேட்டர் இதன் ரேஞ் 13,000 கிலோமீட்டர்கள். ஒரு வழியாய் இந்தியாவின் எலக்ஷனுக்கு முன்னாடி வரலைனா காங்கிரஸ் டவுசர் அவுந்திரும்னு அவசர கதியில வரும் கப்பலை . இதற்க்கு நடுவே முந்தா நாள் நேட்டோ விமானம் வெகு அருகில் கண்காணிக்க வட்டமடித்து நிறைய புகைப்படங்களை எடுத்தது. அது போக விமானத்தின் அக்வுஸ்டிக் ஒலியை கண்காணிக்க விமானம் அருகே ஒரு டுரோனையும் இறக்கிய புகைப்படத்தை ராணுவம் வெளியே சொல்லுமா இதன் பிரத்யோகப்படங்கள் உங்களுக்கே. நேட்டோவுக்கு போட்டோ ஆதாரத்துடன் அனுப்பிய கேள்விக்கு இன்னும் மவுனம் மட்டுமே பதிலாக தந்துள்ளது. வாஜ்பாய் என்னும் மாமனிதரின் 10 வருட கனவு இன்னும் சில நாட்களில் இந்தியாவில் காணலாம்.

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதில் அரசியல்?-தேர்தல் ஆணையத்திடம் புகார்!



இந்திய கிரிகெட் சாதனையாளரான சச்சின் கடந்த சனிக்கிழமை அன்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதே தினத்தில் அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்காக பாரத ரத்னா விருதின் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டதாக தெரிகிறது.மேலும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதால், பல்வேறு கட்சிகள் தங்களது தலைவர்களுக்கும் பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஜெய பாசிஸ் என்பவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.

இவர் அனுப்பிய புகார் கடிதத்தில் , “காங்கிரஸ் கட்சியால் சச்சின் ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இவருக்கு தற்போது பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சச்சினை பொறுத்தவரை அவருக்கு பல மாநிலங்களில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. தற்போது தேர்தல் நடக்கவிருக்கும் ராஜஸ்தான், டில்லி, மிசோராம், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலத்திலும் ரசிகர்கள் உண்டு. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் சச்சினுக்கு விருது வழங்கி கவவுரவத்திருப்பது சில ரசிகர்கள் மனதில் சற்று மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. எனவே விருது அறிவித்தது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.” என்று தெரிவித்துள்ளார்

RTI activist moves EC against Sachin Tendulkar getting Bharat Ratna

 *******************************************************

 An RTI activist Debashish Bhattacharya has written to the Election Commission of India (ECI) stating that granting of Bharat Ratna to Sachin Tendulkar is a violation of model code of conduct.

Tuesday 12 November 2013

நேருவிற்கும் பட்டேலுக்கும் இடையே விருப்பும் வெறுப்பும் கலந்த உறவே இருந்து வந்தது.

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் பற்றி சமீப காலமாக பரவலாக பேசப்படுகிறது. படேலின் கொள்கைகளுக்கு உண்மையான வாரிசு யார் என்ற விவாதத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு அரசியல் மற்றும் மதவாத கோஷங்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. உண்மையில் நேருவும் படேலும் வெவ்வேறு தனித்தனியான கொள்கைகளை, தன்மைகளை, கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாடு அடிப்படையானது.

                                  

நவீன இந்தியாவை உருவாக்க காங்கிரசை கட்டுப்பாடுள்ள ஜனநாயக அமைப்பாக மாற்ற வேண்டியது அவசியம் என்று படேல் விரும்பினார். அதன் முதல் கட்டமாக தனியாக உறுப்பினர்கள் கட்சி அமைப்பு மற்றும் திட்டம் கொண்டிருப்பவர்களை காங்கிஸ் கட்சியின் உறுப்பினர்களாக அனுமதிக்கும் இரட்டை உறுப்பினர் கொள்கையை எதிர்த்தார். இந்த இரட்டை உறுப்பினர் முறையைத் தடை செய்யும் தீர்மானத்தை 1948ல் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் நிறைவேற்ச் செய்தார் படேல். இதனால் காங்கிரசின் ஒரு அங்கமாக இருந்து வந்த காங்கிரஸ் சோசலிச கட்சி காங்கிரசிலிருந்து விலக நேர்ந்தது. இது நேருவிற்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இதனால் கட்சியை மீண்டும் பலப்படுத்த நேரு தொடர்ந்து முயற்சித்தார்.

1950ல் பட்டேலின் மரணத்திற்கு முன் காங்கிரஸ் தலைமை பொறுப்பை கைப்பற்ற கட்சிக்குள் தீவிர போராட்டமே நடைபெற்றது. இதனால் கட்சி தலைவர் பொறுப்பிற்கு நடைபெற்ற தேர்தலில் பட்டேல் ஆதரித்த புருஷோத்தம் தாஸ் தான்டனுக்கு எதிராக ஜெ.பி.கிருபாளினியை தனது தரப்பு வேட்பாளராக நேரு ஒருதலைபட்சமாக அறிவித்தார். தான்டன் விஷயத்தில் நேருவிற்கும், பட்டேலுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு வெளிச்சத்திற்கு வரத் துவங்கியது. இதன் பிறகு தான்டனை நேரு தொடர்ந்து பல்வேறு விதங்களில் விமர்சித்து வந்தார். டில்லியில் நடைபெற்ற அகதிகள் மாநாட்டில் தான்டன் கலந்து கொண்டதையும் நேரு கடுமையாக விமர்சித்தார். நேரு கையாண்ட இந்த போலி மதசார்பின்மை, கட்சியின் கொள்கைகளுக்கும் பண்புக்கும் எதிராக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்படாமல் பல சமயங்களில் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது.

கட்சி தலைவராக தான்டன் தேர்வு செய்யப்பட்டால் தான் காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருந்து விலகி விடப் போவதாகவும் நேரு மிரட்டல் விடுத்தார். இறுதியாக தலைவர் தேர்தலில் தான்டன் 1306 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நேரு நிறுத்திய கிருபாளினியால் 1092 ஓட்டுக்கள் மட்டுமே பெற முடிந்தது. சொன்னபடி நேருவும் கட்சியில் இருந்து விலகவில்லை.

பட்டேலின் மரணத்திற்கு பின் கட்சிக்குள் இருந்த ஜனநாயக கட்டுப்பாடு காணாமல் போனது. நேருவின் ஆதரவாளரான எஸ்.கே.சின்கா பீகாரின் முதல்வராக்கப்பட்டு காங்கிரஸ் காரிய கமிட்டியிலும் இணைந்தார். பின்னர் நேருவின் நிர்பந்தத்தால் லோக்சபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தான்டனுக்கு எதிராக சக்ரவியூகத்தை நேரு கையாண்டார். அதன் விளைவாக காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருந்து விலக தான்டனுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது. இறுதியாக தான்டன் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார். ஆனால் பல்வேறு எதிர்ப்புக்களையும் மீறி தொடர்ந்து 4 ஆண்டுகள் தலைவர் பதவியில் தான்டன் தொடர்ந்தார்.

நேருவிற்கும் பட்டேலுக்கும் இடையே விருப்பும் வெறுப்பும் கலந்த உறவே இருந்து வந்தது. அஜ்மீர் வகுப்புவாத கலவரம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளின் மூலம் நிரூபணமாகி உள்ளது. ஷங்கர் பிரசாத்தை தலைமை செயலராக நியமிக்க பட்டேல் உறுதியுடன் இருந்தார். ஆனால் நேரு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன் பின்னர் ஹச்.வி.ஆர்.ஐயங்காரை தற்காலிக செயலாளராக நியமித்தார். இதுவே இவர்கள் இருவருக்கிடையேயான கொள்கைகளுக்கிடையே மோதலாக உருவானது. சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்காக சட்ட ஒழுங்கை பற்றி கவலைப்படாமல் சிறுபான்மையினருக்கு அதிக சலுகை வழங்க வேண்டும் என நேரு வலியுறுத்தினார். மதக்கலவரங்களின் போது பயங்கரவாதிகள் என சிறுபான்மையினரை கைது செய்ய நேர்ந்தால் அவர்களுக்கு இணையாக இந்துக்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் நேரு தெரிவித்தார். இதனை பட்டேல் ஏற்றுக் கொள்ளவில்லை. இவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மகாத்மா காந்தியிடம் ராஜினாமாவை அளித்தனர். ஆனால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் வேறு வழியின்றி இருவேறு கொள்கைகளைக் கொண்ட இருவரும் ஒரு விசித்திர கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தினர்.

இந்திய வரலாற்று புத்தகங்களிலும், வரலாற்று குறிப்புகளிலும் இதுபோன்ற வேற்றுமைகள் மறைக்கப்பட்டும், புறம்தள்ளப்பட்டும் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரே குடியுரிமை உள்ள ஒரே நாடாக இந்தியாவை உருவாக்குவோம் என்று அரசியல் நிர்ணயசபை உறுதி அளித்திருந்தது. ஆனால் நேருவின் குறுகிய நோக்கத்தால் அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. அவர் தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் சிறுபான்மையினர்-பெரும்பான்மையினர் என்ற வாத அடிப்படையில் ஓரங்கட்டினார். இத்தகைய போலி மதசார்பின்மை கொள்கை காங்கிரசில் புதிய தலைவர்கள் உருவாவதை தடுத்தது. இந்த போக்கு குறித்து அன்றைய காங்கிரஸ்காரர் டி.பி.மிஸ்ரா கூறுகையில், “களிமண்ணில் இருந்து தலைவர்களை உருவாக்கினார் காந்திஜி; ஆனால் நேருவின் தலைமையோ அந்த தலைவர்களை வெறும் ஜடங்கள் ஆக்கிவிட்டது” என தெரிவித்துள்ளார்.

Saturday 9 November 2013

காமன்வெல்த் மாநாடு : சல்மான் குர்ஷித் பங்கேற்பு


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்றும், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போவதாகவும் வெளியுறவுத் துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழீழ இனப் படுகொலைக்கு காரணமாக இருந்த ராஜபட்சவை காப்பாற்றுவதற்காக இலங்கையில் நடத்தப்படும் இந்தக் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது என்றும், காமன்வெல்த் மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆனால், இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், யாழ்ப்பாணத்துக்கு இந்தியக் குழுவை வழி நடத்திச் செல்வது குறித்தும் அமைச்சகத்திடம் இருந்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

முன்னதாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்கு தமிழகத்தில் எழுந்துள்ள உணர்ச்சிபூர்வ போராட்டங்களை எடுத்துச் சொல்லி, இதனைத் தவிர்க்குமாறு தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் வற்புறுத்தினர். தேர்தல் வருவதை ஒட்டி, தமிழகத்தில் கூட்டணி அமைப்பதில் எந்தவித பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூறினர். 
 
ஆனால், வெளியுறவு அமைச்சகம், இந்தியா, இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்றால், அது, சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இன்னும் அதிக இடம் அளித்ததாகிவிடும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கக் காரணம் ஆகிவிடும், எனவே அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.

Thursday 7 November 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்::ஏனிந்த அவசரம்- அது என்ன ரகசியம்..?

தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அவசரமாக திறக்கப்பட்டுள்ளது. என்ன நடத்தென்றால்…..இப்படி ஒரு விழாவே நடத்தக்கூடாது. இப்படி ஒரு நினைவு சின்னமே கூடாது என்பது சோனியா கும்பளின் கனவு, நினைவு. அதன் பேரில் மத்திய உளவு நிறுவனம் ‘நிறைய’ வேலைகளை செய்தது. ஒட்டுகேட்பும் நடந்தது. இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பழ.நெடுமாறன் ஐயா நீதிமன்றத்தை நாடினார். அதன் பேரில் விழாவை நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. கூடவே இதில் மத்திய அரசின் கருத்து என்ன எனவும் கேட்டிருந்தது.(அந்த சயின்களிடம் என்ன கருத்து கேட்க வேண்டியுள்ளது)


nov 7 - mullai vayal


இந்த நிலையில் மத்திய உளவு நிறுவன உயர் அதிகாரிகள், இங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும், தலைமை செயலக அதிகாரிகளுக்கும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாயாக சுற்றினார்கள்.


நேற்று உயர்நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதி மன்றத்திற்கு போகும் முடிவை போலீஸ் எடுத்தது. அதன் பேரில் ‘மேற்கொண்டு எந்த வேலையையும் செய்யாதீர்கள். மேல்முறையீட்டிற்கு போகிறோம்’ என சொல்லாமல் வேறு வேறு காரணங்களை கூறி அங்கு நடக்கும் வேலைகளை நிறுத்த முனைந்தார்கள்.


முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட உள்ள அந்த நிலத்தில் ஒரு பிரச்சனை என்று, வேறு போலி நபர்களின் பேயரில் ஒரு மனுவைகொடுத்து, அதன் மூலம் தடுத்து நிறுத்தும் வேலை நடத்தது. இன்னும் சிலதை இங்கே சொல்ல முடியாது. நடப்பவை அனைத்தையும் ‘அறிந்து’கொண்டு அதிரடியாக களத்தில் இறங்கினார்கள். பின்னிரவு நேரத்திற்குள்ளாக தகவலை ரகசியமாககொண்டுசென்று, அருகில் இருந்த முக்கிய நபர்களையும், அனைத்துகட்சி நிர்வாகிகளையும் ‘முக்கிய கூட்டம்’ என்ற பெயரில் வரவழைத்துவிட்டார்கள்.


நேற்று நீதிமன்ற உத்தரவு பெற்ற விஷயமாக இருக்கும் என்று அங்கே சுற்றியிருந்த மத்திய உளவு நிறுவன ஆட்களும், ஒட்டு கேட்புகளும் சாதாரணமாக இருந்துள்ளனர். இப்படியாக….அவசரக்கூட்டம் என்றுகூடி, அங்கேயே விஷயத்தை போட்டுடைத்து பட்டென்று திறப்பு விழா என நடத்தி முடித்துவிட்டார்கள்.


எல்லாமும் சரி. மத்திய சோனியா அரசுக்கு ஏன் இவ்வளவு வேகம். ஒன்றுமில்லை. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதற்கு முன்பாக இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பது சரியில்லை. சர்ச்சையை உருவாக்கும். அதுவரை தடுக்க வேண்டும். அல்லது தாமதப்படுத்த வேண்டும் என சிங்கள அரசு வேண்டிக்கொண்டது. வேண்டுதல் என்ன? மிரட்டியது. அதை சோனியா கும்பல் நிறைவேற்ற பார்த்தது. இதுதான் ரகசிய விளையாட்டு.
இப்போதைக்கு இது போதும். மற்றபடி 8,9,10.தேதிகளில் நடக்கும் வழக்கமான நிகழ்ச்சி நடக்கும்…

“அம்மா இன்னும் நெருக்கம்” .- கமல் நேர்காணல்!

நடிகர் கமல்ஹாசனின் திரையுலக ஐம்பதாம் ஆண்டு 2009-ல் கொண்டாடப்பட்டபோது அவரை நானும் நண்பர் சுந்தரபுத்தனும் செப்டம்பர் மாதத்தில் சந்தித்து அப்போது பணிபுரிந்த த சண்டே இந்தியன் இதழுக்காக ஒரு நீண்ட பேட்டி எடுத்தோம். இரண்டுநாட்கள் தொடர்ந்து அவரை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்துப்பேசினோம். சாதாரண பேட்டி என்றுதான் நேரம் வாங்கியிருந்தோம்.நேரில் சந்தித்தவுடன் இது உங்கள் ஐம்பதாவது கலையுலக ஆண்டு என்பதால் உங்களிடம் ஐம்பது கேள்விகள் கேட்கவிரும்புகிறேன் என்றபோது ஒப்புக்கொண்டு எங்கள் கேள்விகளை சச்சின் போல எதிர்கொண்டார். அப்பேட்டியிலிருந்து சில பகுதிகள் கமல் பிறந்தநாளை ஒட்டி இங்கே வெளியிடப்படுகின்றன.பிறந்தநாள் வாழ்த்துக்கள் டியர் கமல்!

nov 7 - kamal.2

எவ்வளவோ விருதுகள் வாங்கியிருக்கிறீர்கள்? இன்னும் நீங்கள் ஆசைப்படும் விருது ஏதேனும் உள்ளதா?

இந்த விருதுகளும்கூட நடிகர்கள்மாதிரிதான். புது நடிகர்கள் வேண்டாமா என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்களோ அதைத்தான் நானும் சொல்வேன். புது இயக்குநர்கள் வேண்டாமா? பார்வையாளர்களுக்கு எப்படி புதிது புதிதாக வேண்டுமோ அப்படித்தான்.

உங்களுக்கு கிடைக்காத விருதுகள் பற்றி.. ஏதாவது குறிப்பிட்டுப் பெயர் சொல்லமுடியுமா?

விருதுகள் எனக்கு கிடைக்காததில் வருத்தமே இல்லை. எனக்கு கிடைக்காததிலும் ரஹ்மானுக்குக் கிடைத்ததிலும் எந்தவிதமான வருத்தமும் இல்லை. என்ஜினியரிங்பட்டம் எனக்குக் கிடைக்கலை என்று கோபித்துக்கொண்டது மாதிரி. நான் அதற்கு படித்திருந்தால்தானே. ஆக, அங்கே போய் அவர்களின் படத்துக்கு வேலை செய்து அதுக்கு வாங்குகிற விருதுதான். சத்யஜித்ரேவுக்கு கொடுத்தது மாதிரி,சாவதற்கு முன்போ அல்லது சாவதற்குப் பிறகோ கொடுத்தால் சந்தோஷமாக என்
பிள்ளைகள் வாங்கிக்கொள்வார்கள். என்ன நடக்குது என்று எனக்குத் தெரியாது.

சில நடிகர்கள் மற்றவர்களை விட சிறப்பாக நடிக்கிறார்கள். ஏன் எப்படி?

அது அவர்களின் விருப்பம். அவ்வளவுதான். மற்றவர்களால் முடியாததை செய்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் அந்த வழி வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். அவ்வளவுதானே தவிர. நஸ்ருதின்ஷா பரதநாட்டியம் கற்றுக்கொண்டால் வராது என்பதெல்லாம் இல்லை. வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்கள்.

உங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது யார்?

என்னுடைய அடிவானத்தில் எனக்குத் தெரிந்த சூரியன் சிவாஜிகணேசன். நான் பார்த்தது அவரைத்தான். எனக்குத் தெரிந்த சத்யம். அதிலிருந்துதான் கிரகனாதி கிரகணங்கள் என்னவென்று புரிந்துகொண்டேன். சோலார் சிஸ்டத்தை புரிந்துகொள்வதற்கு காரணமே அந்த சூரியன்தான். அதைப் புரிந்ததற்குப் பிறகு வேறொரு சூரியனும் இருப்பது தெரிந்தது. அதுவரையில் எனக்கு ஒரு சூரியன்.

ஒரு வழிபாடுதான் இருந்தது. சோலாரை புரிந்தபிறகு ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு சூரியன் என்பது புரிய ஆரம்பித்தது. இந்த பரிமாண வளர்ச்சிக்கு முதல் படி சிவாஜிதான்.

இயக்கம், நடிப்பு இந்த இரண்டில் எது கடினம்?

கண்டிப்பாக, இயக்கம் என்பது பல்முனை பரிமாணம். வெவ்வேறு பரிமாணம்.நடிகர்களையும் கவனிக்கவேண்டும். ஒரு நடிகன் தன்னை மட்டும் கவனித்துக்கொண்டால் போதுமானது. தன் பாத்திரம், தன் வேலை. இயக்குநருக்கு ஒரு குடும்பத் தலைவருக்கான பொறுப்பு. மொத்தத்தில் குடும்பம் நல்லா இருக்கணும்.

சிகர்களை வைத்து நீங்கள் ஏன் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றநினைக்கவில்லை. அப்படி கைப்பற்றுகிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதுவொரு வழி. ஹிட்லர் செய்த மாதிரி. இல்லை கோயபல்ஸ் செய்த மாதிரி இருக்கலாம். இத்தாலியில் மாஜினி முயற்சி செய்து வந்ததும் ஒரு வழிதான்.அரசியலில் வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதி¢ல் பெஸ்ட்பேட்டர்ன் சக்சஸ் என்று பார்த்தது கோயபல்ஸ் பிரசாரம். கோயபல்ஸின்திறமையான பிரசாரத்தை வைத்துக்கொண்டுதான் அமெரிக்கா ரஷ்யாவுடனான போட்டியில் வென்றது. ஜெர்மன் டெக்னாலஜி எப்போதுமே கொஞ்சம் கெட்டிக்காரத்தனமாகவே இருக்கும். அதை வாங்கி அமெரிக்கர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். எனவே, அதுமாதிரி சினிமா ஒரு கருவி. ஒரு மேடை.இப்போது டிவி. அதனால்தான் ஒவ்வொரு கட்சியும் ஒரு டிவியைக் கைப்பற்றி இருக்கின்றன. மக்களைப் போய்ச் சேர்கிற எந்த ஊடகமாக இருந்தாலும், அது

அரசியலுக்கு உபயோகமாக இருக்கிறது. அதுவே கேடயமாகவும் சில சமயம் ஆயுதமாகவும் பயன்படுகிறது. விளையாட்டில் எனக்கு விருப்பமில்லை.நாடாளுமன்றம் என்கிற பச்சைக் கிணற்றில் இருந்தால்தான் சமூக சேவையோ அல்லது அரசியலோ பழகமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அது வெளியில் இருக்கிற தவளையாகக்கூட இருக்கலாம்.

அரசியல் சூழல் அமைப்பில்
கிணற்றுக்குள் இருக்கிற தவளை மட்டும்தான் பயன்படும் என்று நம்ப வேண்டியதில்லை. ஏரிக்கரையில் இருக்கலாம். காட்டுக்குள் இருக்கலாம்.தவளையின் வடிவம் என்பது ஒப்பீடு செய்து பார்க்கும்போதுதான் தெரியும். தன் கூட்டத்தில் அது பெரிய தவளை மாதிரி இருக்கலாம். இன்னும் பெரிய இடத்தில் பெரிய தவளைகள் இருக்கும். பெரிய தவளை தன்னையொரு சிறு தவளை என்று நினைத்துக் கொண்டிருக்கும். பெரியாரெல்லாம் அந்தமாதிரி தவளைதான். தன்னை சின்ன தவளை என்று நினைத்துக்கொண்டிருந்தார். சத்தம் மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தார். மற்றவர்களுடன் வைத்துப்பார்க்கும்போதுதான் அவர் எவ்வளவு பெரிய தவளை என்று புரிந்தது. அதை விழுங்குவதற்கு பாம்பே கிடைக்கவில்லை.

நீங்கள் பார்த்தவரையில் எந்தக் காலத்தை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று
சொல்வீர்கள்?


பொன் முக்கியமான உலோகமா என்பதை முதலில் நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.பிளாட்டினம் காலத்தை நோக்கிய போய்க்கொண்டிருக்கிற ஆளாக இருந்தால் அல்லது வைரத்தை மதிக்கும் வர்த்தக மிருகமாக இருந்தால். வெறும் பேப்பர்லதான மதிப்பு. கரன்சி காலம். தங்கத்தைவிட இப்போது பிளாஸ்டிக்குக்கு மதிப்பு அதிகம். பழைய ஞாபகமாகத்தான் தங்கமும் பிளாட்டினமும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

பிளாஸ்டிக் கார்டுதான். அதற்குப் பெயர் பிளாட்டினம், கோல்டு கார்டு என்று சொல்கிறோம். இது பிற்காலத்தில் பிளாஸ்டிக் யுகம் என்று பேசப்படும். என்னுடைய பொற்காலம் என¢பது எனக்கு பயன்பாடாக இருந்திருக்கும். மறுமலர்ச்சிக்காலம்தான் பொற்காலமா?ஏறிவரும்போது அந்த மேடை நன்றாக இருந்தது. அச்சு இயந்திரம், லுத்தரன் சர்ச்சில் நடந்த மாற்றம், கல்வி, மதம் மற்றும் அறிவியல் என எல்லாம் ஒன்றாக கலந்து தீவிரமாக இயங்கத்தொடங்கின. அதுவொரு நல்ல காலம். அதுமாதிரி நல்ல காலம் நடந்து கொண்டிருக்கிறதோ என்னவோ. நாம் உணராமல் இருக்கலாம்.

இந்திய சினிமாவில் மேக்கப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிற படங்களில் நீங்கள்தான் அதிகம் நடித்திருக்கிறீர்கள். ஏன் மற்றவர்கள் அதைச் செய்வதில்லை. அதனால் சிரமங்கள் இருக்கிறதா?

சிரமம் இருக்கிறது. ஆனால் மேக்கப் என்பது ஒரு கருவிதானே. ஏன் மற்றவர்கள்கலர் சினிமா எடுக்கவில்லை என்று சொல்கிற மாதிரிதான். கலர்சினிமாகூடநியாயமானது கிடையாது. சில தொழில்நுட்பம். கிரேன் வைத்து எடுப்பதே இல்லை.ஒருவேளை அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு நம்பிக்கை இ¢ல்லாமல் இருக்கலாம். அந்தமாதிரி கிரேனெல்லாம் எனக்கு வேண்டாம். தரையோட வைத்து எடுக்கிற மாதிரிபுவிஈர்ப்பு சம்பந்தமான படம்தான். றெக்கைக் கட்டி பறக்கமாட்டேன் என்று சொல்லலாம்.

ஹெலிகாப்டர் ஷாட் வேண்டாம் என்று சொல்லலாம். அது அவரவர் விருப்பம். ஹெலிகாப்டர் ஷாட் வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார் ஸ்பீல்பெர்க். டர்காவ்ஸ்கி ஹெலிகாப்டரை சும்மா காற்றடிப்பதற்காக பயன்படுத்தினார். மேக்கப் ஒரு கருவி. மேஜிக்கை
செய்வதற்கு தொப்பிக்குள்ளிருந்து புறா எடுக்கணும் என்பார்கள். சிலர் பெட்டிக்குள்ளிருந்து எடுப்பார்கள். தொப்பி இல்லாத ஊரில் கூடைக்குள்ளிருந்து எடுப்பார்கள்.

நீங்கள் நடிக்க விரும்புகிற ஹாலிவுட், பாலிவுட் ஸ்டார்கள் யாராவது இருக்கிறார்களா?

சிலது கேட்டால் நடக்காது. இருக்கும்போது அனுபவித்துவிட்டேன். சிவாஜியுடன் இன்னொரு படம் செய்யவேண்டும் என்று நினைத்தேன். அது நடக்காமலேயே போய்விட்டது. நாகேஷுடன் எத்தனை படம் வேண்டுமானாலும் நடிக்கலாம்.திலிப்குமாருடன் நடிக்கவேண்டும் என்பது ரொம்ப ஆசை. அது நடக்கவேயில்லை.கிட்டத்தட்ட நான் கேட்டதெல்லாம் நடந்துவிட்டது. நஸ்ரூதின் ஷாவுடன் நடிக்க ஆசைப்பட்டேன்.


என் படத்திலேயே காந்தியாக நடித்தார், இன்னும் பேர் சொல்லாத நிறைய பேர் இருக்கிறார்கள்.ஹாலிவுட்டில் எல்லோருமே தனிப்பட்ட திறமையாளர்கள். ஆஸ்கரும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்ற உட்பி ஆலன். நடிகர் என்று மட்டும் அவரை சொல்லமுடியாது. பஸ்டர் கிட்டன், பிராண்டோ. என்னுடைய காலகட்டத்தைச்சேர்ந்த அதிகம் பெயர் பெறாமேலே போய்விட் வில்லியம் ஹெர்ட், டீ நீரோ. ஏதோ இடையில் வந்து சிக்ஸராக அடித்துக்கொண்டிருக்கிறார் கிளிண்ட் ஈஸ்ட்வுட்.இந்தக் கலைஞர்களை வெறும் நடிகர் என்று மட்டும் சொல்லமுடியாது.


ஏனென்றால் நான¢ நடிகர் மட்டுமல்ல. எனக்கு எல்லோரையும் பிடிக்கிறது. மியுசிக் டைரக்டரைப் பார்த்தால் பிடிக்கிறது. எனியோ மார்கனியைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது. ஹாலிவுட்டுக்கு வெள்¤யே இருந்துகொண்டே ஹாலிவுட்டை தாக்கக்கூடிய ஓர் ஆள் அவர். தாக்கம் ஏற்படுத்தக்கூடியவர்.


உலகம் முழுவதும் நம்மையும் சேர்த்து அமெரிக்க சினிமாவை பின்பற்றக்கூடிய போக்கு இருக்கிறது. பிரெஞ்சு சினிமா, ஈரானிய சினிமாவை பின்பற்றுவதில்லை.பிரெஞ்சு சினிமா நண்பர்கள் இதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் யுகே டிவி தொடர்களை எழுபதுகள் எண்பதுகளில் பார்த்தீர்களானால்,இன¢றைய அமெரிக்க டிவி தொடர்களின் உத்வேகம் முழுவதும் அங்கிருந்து வந்ததுதான் என்று தெரியும்.


 பிரெஞ்சு சினிமாவிலிருந்து அவர்கள் அடிக்கிற காப்பிக்கு பஞ்சமே கிடையாது. எப்படி நாம் பெங்கால் இலக்கியத்திலிருந்து எப்படி மலையாள படங்களில் ரீமேக் செய்துகொண்டிருந்தோமோ அப்படி. ட்ரூ லைஸ் படத்தை ஒரிஜினல் அமெரிக்க படம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது லா டோ தால் என்கிற பிரெஞ்சு படம். நாங்கள் வெட்னஸ்டேதான் உன்னைப்போல ஒருவன் என்று சொல்லி எடு¢க்கிறோம். அப்படியெல்லாம் சொல்லாமல் இவர்கள் கண்டுபிடித்ததுமாதிரி எடுத்திருக்கிறார்கள். யுரேகா என்று வேறுகத்துகிறார்கள். புரியவில்லை. அமெரிக்காவே அப்படித்தானே.

ஆக்கிரமிப்பை தன்னுடைய பூமியாக மாற்றிக்கொண்டவர்கள்தான் அவர்கள். அது அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது. எல்லாவற்றையும் தனது என்று நினைக்கிறவர்கள். அது ஒரு வகையான மெக்காவாக ஆகிவிட்டது. நான¢ வருத்தப்படவில்லை. நாம் ஒரு நாடு,நாம் ஒரு கலாச்சாரம் என்று சொல்லும்போது எது நம் கலாச்சாரம் என்று சொல்லும்போது கோபித்துக்கொள்ளமுடியாது அல்லவா? இந்து என்று சொல்வதற்கு அர்த்தமே எனக்குப் புரியவில்லை.


கண்ணதாசன் எனக்குப் பிடித்த மனிதர்.அர்த்தமுள்ள இந்துமதம் என்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். இந்து மதம் என்று ஒன்று கிடையாது என்று நினைக்கிறவன் நான். அது என¢னுடைய தனிப்பட்ட கருத்து. சிலர் கோபி¢த்துக்கொள்வார்கள். அதை வைத்து பெரிய கூட்டமாக அரசியலில் ஒட்டுக்களைப் வாங்கிக்கொண்டிருக்கிறவர்கள் இந்த வாதத்தை ம்ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது என் கருத்து. எப்படி எனக்கு
கடவுள் தேவையில்லை என்று சொல்கிறேனோ அப்படி. இல்லை என்று சொல்வதுகூட முக்கியமாகத் தெரியவில்லை. எனக்குத் தேவையில்லை என்பதே போதுமானது.


அக்ரஹாரத்திலிருந்து பெரியார் திடலுக்கு வந்த குழந்தை என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் குழந்தை வளர்ந்துவிட்டதா?


சாகறதுக்கு முன்புதான் தெரியும் வளர்ந்து செத்தோமா வளராமல் செத்தோமா என்பது. டைம் முடிந்துவிட்டது என்று கேள்வித்தாளைக் கேட்கும்போதுதான் தெரியும். எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்தோமா என்று. வளர்ச்சி என்பது எய்தி முடிக்கவேண்டிய நிலையாக எனக்குத் தெரியவில்லை. நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும். வயோதிகத்தையே நான¢ வளர்ச்சியாகத்தான் நினைக்கிறேன்.குன்றலாகவோ அழிதலாகவோ நினைக்கவில்லை.


இதிலிருந்து அதை நோக்கி வளர்தல்,தேய்தல். அப்படிப்பார்த்தால் வளர்ச்சி என்பதே தேய்தல்தான். பிறந்தவுடனே மரணத்தை நோக்கிய பயணம்தானே. விழுந்த பல் முளைப்பதும் முளைத்த பல் விழுவதும் எது வளர்ச்சி என்று எதைச் சொல்வது. பரிணாம வளர்ச்சியில் 23 வயதுக்குப் பிறகு பெரிதாக யாரும் சிந்தனை செய்வதில்லை என்று சொல்கிறார்கள். அதற்குப் பிறகு சிந்தித்து வந்த விஷயங்கள்தான். பெரியார் 23 வயதில் யோசித்ததைவிட நாற்பதுக்குப் பிறகு சொன்னது அதிகம். காந்தியார் அப்படித்தான். கார்ல்மார்க்ஸ அப்படித்தான். முப்பதுக்குப் பிறகு அவர்கள் யோசித்ததுதான் பிரமாதமாக இருக்கிறது. இருபது வரையில் வெறும் ஒத்திகைதான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.


நாத்திகம் என்கிற சுயமனிதத் தேடலுக்கு எப்போது வந்தீர்கள்?


ஞாபகமில்லை. மொழியை எப்போது கற்றுக்கொண்டேன் என்பதுமாதிரிதான் அது. தமிழை எப்போது பேச ஆரம்பித்தீர்கள் என்று குறிப்பிட்ட தேதியை நீங்களோ நானோ சொல்லமுடியாது. அம்மா என்பது தமிழா என்று மொழி ஆராய்ச்சிக்குப் போய்விடுமே தவிர, முழுமையாக ஒரு வார்த்தையை சொல்லவந்தோம் 3 வயதிலேயோ 4 வயதிலேயா என்று தெரியாது. ஒரு புத்தகத்தை எப்படி படிக்க ஆரம்பித்தோம். ஒண்ண£ம் கிளாஸ்ல அது தெரியாது. இரண்டாம் கிளாஸ்ல இது தெரியாது.


மூன்றாம் கிளாஸில் இரண்டாம் கிளாஸில் தெரியாததைத் தெரிந்துகொண்டோம். இப்படித்தான் தெரிந்துகொண்டோம். இன்றுமுதல் இப்படி ஆகக் கடவது என்று பெரியார் காளியாக வந்து என் நாக்கில் எழுதவில்லை. அது அவரால் முடியாது. பெரியார் என்பது…ஸ்பூன் என்பதை நாம் கரண்டி என்று சொல்கிறோம். சீனாவில் ஸ்பூனே கிடையாது.குச்சியால் சாப்பிடுகிறார்கள். ஆக அது ஒரு கருவி. அதற்கான பயன் ஒன்றுதான். அந்தக் கருவிதான் பெரியார். என் மொழியில் எனக்குச் சொல்லவேண்டிய விஷயம். அவர் சமுதாயத் தேவை. அது நிகழ்ந்தே தீரும். அவர் வராமல் அல்லது அவர் வழி தெரியாமல் காணாமல் போயிருந்தால் வேறொருவர் வந்து ஆகவேண்டும். அவர் கொஞ்சம் வேலைகளை சுருக்க முடித்தார். அந்த வேலை முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை. ஆரம்பித்துவைத்தார்.



nov 7 - kamal
 

உங்கள் வாழ்வில் மிக முக்கியமான பெண்மணி யார்?


அந்தமாதிரி சொல்லும்போது இயல்பாக அம்மாதான். நிபந்தனையற்ற அன்பு.ம¦தமுள்ளோர் எல்லோரும் நிபந்தனைகள் விதிப்பவர்கள். அதன்பிறகு நாம் பெற்ற பிள்ளைகளிடம் நிபந்தனைகளற்ற அன்பை வழங்குகிறோம். என்ன தப்பு செய்தாலும் இல்லை என்றாலும் நம்மிடம் மரியாதையாக இருந்தாலும் இல்லை என்றாலும் நிபந்தனையற்ற அன்பை கொடுக்கிறோம். இதை கற்றுக்கொண்டே அம்மா அப்பாக்களிடமிருந்துதான். ஆனால் அம்மா இன்னும் நெருக்கம். அவர்களது உடலின் உறுப்பில் ஒன்றாக இருந்து வெளியே வந்தவர்கள்.


அதுதான் பெஸ்ட்.அதையே உச்சகட்டமாக நினைக்கமுடியாது. எனக்கெல்லாம் அம்மா 24 வயதில் இறந்துவிட்டார்கள். அதை புரியும்போது ரசிக்க நேரமில்லை. அந்த அனுபவத்தை வேறு பெண்கள் மூலம் பெற விரும்புகிறேன். கூட கொஞ்சம் செக்ஸ் குழப்பமாக இருக்கிறது. எல்லா ஆண்களுக்குமே இருக்கு. பிள்ளையார் பற்றிக்கூட ஒரு கதை
சொல்வார்கள். கல்யாணமே ஆகவில்லையே என்னடா பண்றது என்று தலையில் கை வைத்தபோது அந்த மேடு மார்பகம் போல இருந்ததாம். அம்மா ஞாபகம் வந்துவிட்டது என்று சொல்வார்கள். நல்ல கவிஞனின் கற்பனை அது. அந்த மாதிரி தலைவீங்கிய பிள்ளையாக இருந்தால் முக்கால்வாசி ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுவார்கள்.அல்லது ஒதுக்கிவைத்துவிடுவார்கள். நம்மூர்லதான் சாமியாக கும்பிட்டுக்கொண்டு இருக்கிறோம்.


அடுத்த கமல்ஹாசன் என்று யாரையாவது நீங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறீர்களா?


பாவம். அந்த நிலைமைக்கு எந்த நடிகனும் ஆளாகக்கூடாது. அடுத்த சிவாஜிகணேசன் என்று என்னை சொல்வதை நானே விரும்பவில்லை. சிவாஜி சாரும் விரும்பவில்லை.அவர் பெயர் சிவாஜிகணேசன். அவருடைய பரம ரசிகன் நான். அவரும் என்னை ரசிக்க ஆரம்பித்ததுதான் என்னுடைய பெருமை. பிரபுவுக்கு அது சந்தோசமாக இல்லாதபோது,எனக்கு எப்படி சந்தோசமாக இருக்கமுடியும். சிவாஜி சாரை இன்னொரு பி.யூ.சின்னப்பா என்று சொன்னால் ஒப்புக்கொண்டிருப்பாரா? இங்கிருந்து
தள்ளியிருந்து பார்க்கவேண்டும்.


அந்தக் காலத்தில் அதையே பெரும் வாழ்த்தாகத்தான் நினைத்திருப்பார்கள். இன்னொரு பி.யூ.சின்னப்பாவாக வாழக்கடவது என்றுதான் பெரியவர்கள் வாழ்த்தியிருப்பார்கள். அதை அவர் விரும்பியிருக்கவே மாட்டார். சுருதிகிட்ட இன்னொரு கமல்ஹாசனா வரணும்னு சொன்னால் என்ன சொல்றீங்க மீசை வைச்சுக்க சொல்றீங்களான்னுதான் கேட்பாங்க.எனக்கு வேண்டாம். இன்னொரு கமல்ஹாசனை தேடவே கூடாது. வரும் நடிகர்கள்
அவர்களுக்குள் கூட இன்னொரு கமல்ஹாசனை தேடிவிடக்கூடாது. அப்படி தேடினால் அவர்கள் தங்கிவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்.


என்னை விஞ்ச வேண்டியது அடுத்த தலைமுறையின் கடமை. அதை செய்ய அவர்கள் தவறக்கூடாது. அவர்கள் விஞ்சவிடாமல் தடுப்பது துரோகம். அப்படி விஞ்சுவதற்கான எல்லா உதவிகளும் செய்ய வேண்டும். என்னுடைய மரணத்திற்கு முன்போ, தொய்விற்கு முன்போ அதை செய்துபார்க்கவேண்டும்.

அப்போதுதான் என் கடமையை செய்தது ஆகும். பழைய ஸ்போர்ட்ஸ்மேன் கோச்சாக மாறுகிறார்கள். அதுதான் நியாயமாக இருக்கமுடியும்.அடுத்து விளையாடுகிறவர்களை தடுத்துக்கொண்டு வித்தைகளைக்
கற்றுக்கொடுக்காமல் துரோணாச்சாரி கட்டைவிரல் கேட்கும் விஷயமெல்லாம் அரசியல். நல்ல மாணவனாக இருந்தவனால்தான் நல்ல ஆசானாக இருக்கமுடியும்.மாணவனும் ஆசான¢தான். குருவும் சிஷ்யன்தான்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top