.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 30 December 2013

தொடர்ந்து பத்து ஆண்டுகளாக முதலிடம் : சாதனை பாடலாசிரியர் நா.முத்துக்குமார்..!




தொடர்ந்து பத்து ஆண்டுகளாக முதலிடம் :
சாதனை பாடலாசிரியர் நா.முத்துக்குமார்!

பத்து ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கிறார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.  பத்தாவது ஆண்டாக ‘2013’ம் ஆண்டிலும் அதிக படங்கள், அதிக பாடல்கள் எழுதியிருக்கிறார். 2013 ம் ஆண்டு 34 படங்களில் 106 பாடல்கள் எழுதியுள்ளார். இவற்றில் 10 படங்களுக்கு அனைத்து பாடல்களும் எழுதியுள்ளார்.

 2014 ம் ஆண்டிலும் அவர்தான் முதலிடத்தில் இருப்பார் போலிருக்கிறது.  97  படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்.

2013ம் ஆண்டில் நா.முத்துக்குமார் எழுதிய பாடல்களும் - அப்பாடல்கள் இடம்பெற்ற படங்களும்:

படங்கள் :

1. தலைவா (அனைத்து பாடல்கள்)
2. தங்க மீன்கள் (அனைத்து பாடல்கள்)
3. ராஜா ராணி
4. வணக்கம் சென்னை
5. கேடி ரங்கா கில்லாடி பில்லா
6. உதயம் என்.எச் 4
7. ஆதலால் காதல் செய்வீர்
8. சமர் (அனைத்து பாடல்கள்)
9. பட்டத்து யானை
10. ஐந்து ஐந்து ஐந்து (அனைத்து பாடல்கள்)
11. இவன் வேற மாதிரி
12. ஆல் இன் ஆல் அழகுராஜா (அனைத்து பாடல்கள்)
13. சேட்டை
14. ஒன்பதுல குரு.
15. குட்டிப்புலி
16. தில்லு முல்லு – 2
17. வத்திக்குச்சி
18. சொன்னாப் புரியாது
19. புத்தகம்
20. யாருடா மகேஷ் (அனைத்து பாடல்கள்)
21. மூன்று பேர் மூன்று காதல் (அனைத்து பாடல்கள்)
22. மத்தாப்ப10
23. சுண்டாட்டம்
24. சும்மா நச்சுன்னு இருக்கு
25. நிர்ணயம் (அனைத்து பாடல்கள்)
26. துள்ளி விளையாடு
27. நேரம்
28. அழகன் அழகி
29. கல்லாப் பெட்டி
30. நாகராஜ சோழன் ஆ.யு ஆ.டு.யு(அனைத்து பாடல்கள்)
31. சோக்காலி
32. மாசாணி
33. வெள்ளச்சி (அனைத்து பாடல்கள்)
34. சென்னையில் ஒரு நாள்

 ஹிட்டான பாடல்களில் சில…
1. வாங்கண்ணா வணக்கங்கன்னா (தலைவா)
2. யார் இந்த சாலை ஓரம் (தலைவா)
3. தலைவா தலைவா (தலைவா)
4. தழிழ்ப்பசங்க (தலைவா)
5. ஆனந்த யாழை மீட்டுகிறாய் (தங்க மீன்கள்)
6. ஃபர்ஸ்ட்டு லாஸ்ட்டு (தங்க மீன்கள்)
7. நதி வெள்ளம் மேலே (தங்க மீன்கள்)
8. ஹே பேபி (ராஜா ராணி)
9. சில்லென ஒரு மழைத்துளி (ராஜா ராணி)
10. ஏ பெண்ணே பெண்ணே (வணக்கம் சென்னை)
11. காற்றில் ஏதோ (வணக்கம் சென்னை)
12. ஒரு பொறம்போக்கு (கேடி கில்லா கில்லாடி ரங்கா)
13. யாரோ இவன் யாரோ இவன் (உதயம் என்.எச்.4)
14. அழகோ அழகு (சமர்)
15. விழகளிலே (ஐந்து ஐந்து ஐந்து)
16. முதல் மழைக்காலம் (ஐந்து ஐந்து ஐந்து)
17. என்ன ஒரு என்ன ஒரு அழகியடா (பட்டத்து யானை)
18. என்ன மறந்தேன் (இவன் வேற மாதிரி)
19. யாருக்கும் சொல்லாம (ஆல் இன் ஆல் அழகுராஜா)
20. உன்னை பார்த்த நேரம் (ஆல் இன் ஆல் அழகுராஜா)
21. சித்ரா தேவிப்பிரியா (ஆல் இன் ஆல் அழகுராஜா)
22. வா மச்சி வா மச்சி (ஒன்பதுல குரு)
23. குறு குறு கண்ணாலே (வத்திக்குச்சி)
24. ஆஹா காதல் (மூன்று பேர் மூன்று காதல்)
25. ஸ்டாப் த பாட்டு (மூன்று பேர் மூன்று காதல்)

தற்போது எழுதிக் கொண்டிருக்கும் படங்கள்:

1. தரமணி (அனைத்து பாடல்கள்)
2. ஈட்டி
3. நான் சிகப்பு மனிதன் (அனைத்து பாடல்கள்)
4. பிரம்மன்
5. சைவம் (அனைத்து பாடல்கள்)
6. சிப்பாய்
7. ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை
8. அரிமா நம்பி
9. தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்
10. காவியத்தலைவன்
11. ராமானுஜம்
12. வாலு
13. அஞ்சல
14. மாலினி பாளையங்கோட்டை-22 (அனைத்து பாடல்கள்)
15. தொட்டால் தொடரும்
16. அதிதி
17. அழகுக்குட்டி செல்லம் (அனைத்து பாடல்கள்)
18. ஆள்
19. டமால் டுமீல்
20. ஓம் சாந்தி ஓம் (அனைத்து பாடல்கள்)
21. பென்சில் (அனைத்து பாடல்கள்)
22. அடித்தளம் (அனைத்து பாடல்கள்)
23. அது வேற இது வேற (அனைத்து பாடல்கள்)
24. சுவாசமே (அனைத்து பாடல்கள்)
25. படம் பேசும்
26. இருவர் உள்ளம் (அனைத்து பாடல்கள்)
27. ஆவிகுமார் (அனைத்து பாடல்கள்)
28. மேகா
29. நாடிதுடிக்குதடி
30. வேல்முருகன் போர்வெல்ஸ்
31. துணை முதல்வர்
32. நான்தான் பாலா
33. பனிவிழும் நிலவு
34. ஞானக்கிறுக்கன்
35. புன்னகை பயணக்குழு
36. 54321 (அனைத்து பாடல்கள்)
37. என்னதான் பேசுவதோ (அனைத்து பாடல்கள்)
38. ஜமாய்
39. சோம்ப்பப்டி
40. எங்க காட்டுல மழை
41. புளியமரம் (அனைத்து பாடல்கள்)
42. மனதில் மாயம் செய்தாய் (அனைத்து பாடல்கள்)
43. கணிதன்
44. வாலிப ராஜா
45. கலக்குற மாப்ளே
46. போர்க்களத்தில் ஒரு ப10
47. வெண்ணிற இரவுகள் (அனைத்து பாடல்கள்)
48. திறப்பு விழா
49. தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்
50. மைதானம்
51. ரெண்டாம் படம்
52. நீங்காத எண்ணம் (அனைத்து பாடல்கள்)
53. ஏன் என்னை மயக்கினாய்
54. வதம்
55. என் காதல் புதிது
56. வீரவாஞ்சி
57. ஓம்காரம் (அனைத்து பாடல்கள்)
58. திருப்பங்கள் (அனைத்து பாடல்கள்)
59. படித்துறை
60. காட்டுமல்லி (அனைத்து பாடல்கள்)
61. வெயிலோடு உறவாடி
62. கதைகேளு கதைகேளு
63. உயிர்மொழி (அனைத்து பாடல்கள்)
64. அர்ஜீன்
65. விரட்டு
66. சாரல்
67. பள்ளிக்கூடம் போகாமலே
68. பரிமளா திரையரங்கம்
69. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (அனைத்து பாடல்கள்)
70. பாடும் வானம் பாடி
71. கருவாச்சி
72. நகர்ப்புறம்
73. தாண்டவக்கோனே
74. கருப்பர் நகரம்
75. ராஜகோபுரம்
76. அழகானவர் (அனைத்து பாடல்கள்)
77. பரமர்
78. நீ எல்லாம் நல்லா வருவடா
79. விஞ்ஞானி
80. ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஜீவா நடிக்கும் படம் (அனைத்து பாடல்கள்)
81. நாலு பேரும் ரொம் நல்லவங்க
82. இயக்குனர் மனோபாலா தயாரிக்கும் படம் (அனைத்து பாடல்கள்)
83. யாவரும் கேளீர் (அனைத்து பாடல்கள்)
84. உனக்குள் பாதி
85. சரவணப் பொய்கை
86. ஆதியும் அந்தமும்
87. கொடைக்கானலில் ஊட்டி
88. மாப்பிள்ளை விநாயகர் (அனைத்து பாடல்கள்)
89. கோவலனின் காதலி
90. பணக்காரன்
91. மன்னவா
92. அழகிய பாண்டிபுரம்
93. குறுநில மன்னன் (அனைத்து பாடல்கள்)
94. சாரல்
95. அவலாஞ்சி (அனைத்து பாடல்கள்)
96. கபடம்
97. கனா காணுங்கள் (அனைத்து பாடல்கள்)

முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி?




வெறுமையான கூடுகள் போல் காணப்படுகின்றன, சில வீடுகள்! அங்கு பிள்ளைகளும் இல்லை. பேரக்குழந்தைகளும் இல்லை. விளையாட்டும் இல்லை. சிரிப்பும் இல்லை. ஜாலியும், சந்தோஷமும் நிரம்பி வழிந்த அப்படிப்பட்ட பல வீடுகளில் இப்போது ஒரு சில முதியோர்கள் மட்டும் வசிக்கிறார்கள்.

முதியோர்கள் குடும்பத்திற்கு பாரமாக, ஆரோக்கியமும், மன நிம்மதியும் இன்றி, ‘கண்ணும் தெரியவில்லை. காதுகளும் கேட்கவில்லை. யாரும் தன்னை மதிப்பதில்லை’ என்ற விரக்தியோடுதான் மீதி காலத்தை கழிக்கவேண்டுமா? – இல்லை. அவர்கள் முதுமையிலும் இனிமையாக வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

எப்படி? இதோ சொல்கிறேன்.. 1960-ம் ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுள் 42 வயது. தற்போது பெண்களுக்கு 67-ம், ஆண்களுக்கு 64-ம் சராசரி வயதாக இருக்கிறது. அதனால் நாமெல்லாம் எதிர்காலத்தில் 80, 90-வது பிறந்த நாளைக்கூட கொண்டாடலாம்!

அப்படி கொண்டாட வேண்டும் என்றால் முதுமையை வரவேற்று அதனோடு வாழ பழகிக்கொள்ளவேண்டும். நம்மை படைக்கும்போதே கடவுள் நமது உடலில் எந்த பிரச்சினை எதிர்காலத்தில் வந்தாலும் தாக்குப்பிடித்து வாழ வசதியாக முக்கியமான ஒவ்வொரு உறுப்பிலும் இலவச இணைப்புபோல் அதிகப்படியான அளவை, அதிகப்படியான சக்தியை கொடுத்திருக்கிறார்.

கிட்னியில் இன்னொன்று, ஈரலில் 80 சதவீதம் தேவைக்கு அதிகமாக, கல்லீரலில் 60 சதவீதம் கூடுதலாக..! இப்படி ஒவ்வொன்றிலும் கடவுளின் கருணை தெரிகிறது. அதனால்தான் இளமையில் ஆடாத ஆட்டம் ஆடினாலும் அடிக்கடி நோய்வாய்ப்படாமல் தப்பித்துவிடுகிறோம். ஆனால் முதுமை அப்படி அல்ல.

‘மார்ஜின் ஆப் எர்ரர்’ என்று குறிப்பிடும் அந்த சக்தி இயல்பாகவே முதுமையில் குறைந்துவிடுகிறது. உடலின் எல்லா பகுதிக்கும் முதுமையில் ரத்த ஓட்டம் குறையும்.  மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறையும்போது ‘மைனர் ஸ்ட்ரோக்’ எனப்படும், வெளிக்கு தெரியாத பக்கவாத பாதிப்புகள் தோன்றும்.

அதனால்தான் சிலர் ஐந்தாறு தடவை அழைத்த பின்பு தான் சுதாரித்துக்கொண்டு ‘என்னையா அழைத்தீர்கள்?’ என்று கேட்பார்கள். ஆஸ்டியோபோராசிஸ் என்ற எலும்பு அடர்த்திக்குறைபாட்டு நோய் முதுமையில் தென்படும். பெண்களுக்கு மாதவிலக்கு நின்று ‘மனோபாஸ்’ ஆகும் காலகட்டத்திலே இந்த தொந்தரவு தோன்றி விடும்.

இதில் குறிப்பிடத்தக்க பிரச்சினை என்னவென்றால், கீழே இனிமையாக வாழ்வது எப்படி? வெறுமையான கூடுகள் போல் காணப்படுகின் அவர்கள் விழுந்தால் எளிதாக எலும்பு முறியும். சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் விரைவாக பலன் கிடைக்காது.

மூட்டுத் தேய்மானமும் முதுமையில் உருவாகி, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிலருக்கு தேவைப்படும். அறுபது வயதுக்கு பிறகு முதியவர்கள் உடலில் ஒவ்வொரு நோயாக வந்து ஒட்டிக்கொள்ளப் பார்க்கும். சர்க்கரை நோய் தாக்கி இருந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது? என்பதைவிட, அவரது உடலில் சர்க்கரை நோய் எவ்வளவு காலமாக இருக்கிறது என்பது கவனிக்கத் தகுந்தது.

ஏன்என்றால் நீண்ட காலமாக அந்த நோய் தாக்கி இருந்தால் கண், கிட்னி, இதயம் போன்றவை பாதிக்கப்படக்கூடும். ஈரல், கிட்னி ஆகிய இரண்டு உறுப்புகளும் நாம் இளைஞராக இருக்கும்போது, சாப்பிடும் மாத்திரையில் இருக்கும் தேவையற்ற வைகளை அப்படியே பிரித்தெடுத்து ரத்தத்தில் கலக்கவிடாமல் வெளியேற்றிவிடும்.

முதுமையில் அந்த இரண்டு உறுப்புகளின் செயல்பாடும் மந்தமடைவதால் நோய்களுக்காக சாப்பிடும் மாத்திரைகளில் இருக்கும் தேவையற்றவைகளும் பிரித்தெடுக்கப்படாமல் அப்படியே ரத்தத்தில் கலந்துவிடும். அதனால்தான் முதுமையில் நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகளால் அதிக பக்கவிளைவுகள் சிலருக்கு தோன்றுகின்றன.

நோயாளிக்கு டாக்டர்கள் மாத்திரைகள் பரிந்துரைக்கும்போது, ‘மிகக் குறைந்த அளவு’, ‘அதிகபட்ச அளவு’ என்ற இரு எல்லைகளை கையாண்டு அதற்கு தக்கபடி மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய அளவை நிர்ணயிப்பார்கள். இதை ‘தெரபூயிட்டிக் வின்டோ’ என்போம்.

அந்த இடைவெளியை முதுமையில் மிக கவனமாக கண்காணித்து மாத்திரைகள் வழங்கவேண்டும். தேவைக்கு அதிகமான ‘டோஸ்’ கொடுத்துவிட்டால், பக்க விளைவுகள் அதிகரித்துவிடும். எல்லா வியாதிகளுக்கும் அறிகுறிகள் உண்டு.

இளமையில் உடலில் அதிக சக்தி இருக்கும்போது அறிகுறிகளை எளிதாக கண்டு சிகிச்சையை உடனே தொடங்கிவிடலாம். முதியவர்களுக்கு உடலில் சக்தி குறைவதால் உள்ளே நோயின் பாதிப்பு அதிகம் இருந்தாலும், அறிகுறிகளை அவ்வளவு எளிதாக கண்டறிய முடியாது. சிறுநீர் பாதை அருகில் ‘ப்ரோஸ்டேட் சுரப்பி‘ உள்ளது.

முதுமையில் அந்த சுரப்பி வீங்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். முழுமையாக வெளியேறவும் செய்யாது. திடீரென்று சிறுநீர் வெளியேறாமல் தொந்தரவு செய்வதும் உண்டு. உடல் இயக்கம் குறைவதால் தூக்கமின்மையும் முதியோர்களை அதிகம் தொந்தரவு செய்கிறது.

பற்கள் விழுந்துவிடுவதால் மென்று அவர்களால் சாப்பிட முடியாது. அதனால் உணவு உண்பதில் பிரச்சினையும், ஜீரணக்கோளாறும் தோன்றுகிறது. புற்றுநோயும் முதியோர்களை அதிக அளவில் தாக்கி நிலைகுலையச் செய்கிறது.

கட்டி, ஆறாத புண்கள் தோன்றினாலோ இருமலில், வாந்தியில், சிறுநீர் மற்றும் மலத்தில் ரத்தம் வெளிப்பட்டாலோ டாக்டரிடம் சென்றுவிடவேண்டும். பெண்களைப் பொறுத்தவரையில் அதிக ரத்தப் போக்கு உடனடியாக கவனிக்கத் தகுந்தது. இதுபோன்ற ஏராளமான உடல்பிரச்சினைகள் மட்டுமின்றி, மனப் பிரச்சினைகளாலும் முதியோர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வணக்கம் வைப்பது தீண்டாமையா...?







இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்துவது தான் தமிழர்களின் பண்பாடு.  ஆனால் இப்படி வணக்கம் செலுத்துவதில் ஒரு வகையான தீண்டாமை இருக்கிறது என்றும், அதனால் ஐரோப்பிய முறைப்படி கைகுலுக்கி, கொள்வதே சிறந்த மரபு என்றும் சில தமிழ் அறிஞர்கள் பேசுவதை கேட்கும் போது மனதிற்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.


   ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறா என்ற ஒளி வட்டம் தனித்தனியாக உள்ளது.  இதனை நவீன கேமராக்கள், படம் எடுத்தும் உள்ளன.  விஞ்ஞானமும் அதை ஒத்து கொள்கிறது.


 இந்த ஆறா என்பது வேறொரு மனிதனை தொடும் போது மற்றவர்களின் ஆறாவால் சற்று சலனம் படுகிறது.

  இது சம்பந்தப்பட்ட இருவருக்குமே நல்லது என்று சொல்ல முடியாது.  இதை முற்றிலுமாக உணர்ந்த நமது முன்னோர்கள் வணக்கம் செலுத்தும் முறையை கொண்டு வந்தார்கள்.

  இதில் தீண்டாமை இருப்பதாக அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

  காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு என கண்ணதாசன் சொல்வது போல் குதர்க்கமான பார்வையாளர்களுக்கு எல்லாமே குதர்க்கமாகப் படுகிறது.


மேல்நாட்டு முறையில் கை குலுக்கி கொள்வது தீண்டாமையை விரட்டுகிறது என்றால் ஐரோப்பியர்கள் போலவே கட்டிபிடித்து முத்தம் கொடுத்து அறிமுகம் படுத்தி கொள்வதற்கு இந்த அறிஞர்களுக்கு துணிச்சல் உள்ளதா என கேட்க விரும்புகிறேன்.

 இவையெல்லாம் இருக்கட்டும் இனி வணக்கம் செலுத்தும் முறைக்கு வருவோம்.  இரு கைகளையும் தலைக்கு மேலே கூப்பி உயர்த்தி வணங்குவது கடவுளை வணங்கும் முறை.

 நெற்றிக்கு நேராக கை கூப்புவது ஆசியரை வணங்கும் முறை.

  உதடுகளுக்கு நேராக கைகளை குவிப்பது தந்தையையும், அரசரையும் வணங்கும் முறை.


   மார்புக்கு நேராக வணங்குவது உள்ளத்தாலும் அறிவாலும் உயர்ந்த சான்றோரை வணங்கும் முறை.

   தொப்புள் கொடி உறவை தந்த தாயை வயிற்றுக்கு நேர் கை கூப்பி வணங்க வேண்டும்.


   இதயத்தில் கை வைத்து நம்மை விட சிறியவர்களை வணங்க வேண்டும்.  இது தான் இந்திய மரபு.

    இதில் தீண்டாமை என்பது இல்லவே இல்லை.

செல்போன் விபரீதம் பெண்கள் ஜாக்கிரதை...??





நாணயத்துக்கு இருபக்கம் இருப்பது போல் தொழில்நுட்பத்துக்கும் உண்டு. அதற்கு உதாரணம் செல்போன். கூலித் தொழிலாளி முதல் தொழிலதிபர் வரை இன்று அனைவரின் கையிலும் தவழ்கிறது செல்போன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மகள் சாப்பிட்டாளா? தாத்தாவுக்கு உடம்பு எப்படி இருக்கு? சரக்கு டெலிவரி ஆகிவிட்டதா?என்று பேச, ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிறிதும் தாமதிக்காமல் உதவிட என்று அனைத்து தரப்பினருக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கிறது.


ஆனாலும் இந்த செல்போன்கள் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாகப் பெண்கள் தான்.


 எம்.எம்.எஸ், அறிவியலின் அற்புத தொழில்நுட்பம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால், சில விஷமிகள் தோழிகளாக பழகும் பெண்களை ஆபாச படம் பிடிக்கவும், பயமுறுத்தவும் இதைப் பயன்படுத்துகின்றனர். இதனால், பல பெண்களின் வாழ்க்கைச் சீரழிவது தொழில் நுட்பக் கொடுமை.
ஆண்களை விட இளம் பெண்கள் அதிகம் செல்லின் வசம் அடிமையாகிக் கிடக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.


ஓயாத செல் பேச்சு, எந்நேரமும் மெசேஜ் எனத் திரியும் பெண்கள் அதனாலே பல தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். ‘ஹாய்‘ என்று ஒரு சின்னஞ்சிறு குறுஞ்செய்தியில் ஆரம்பிக்கும் ஆண் பெண் தொடர்பு தற்கொலை, கொலை போன்ற அசாதாரண சம்பவங்களில் முடிவதில் பெரும்பங்கு செல்லுக்குத் தான். செல்லில் இருக்கும் மிஸ்டு காலை பார்த்து பேச ஆரம்பித்து பிறகு அந்த அறிமுகம் இல்லாத நபரிடமிருந்து தொடர் குறுஞ்செய்திகள், போன்கால்கள் என வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள் பல பெண்கள். பெற்றோர்கள் கவனமின்மையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.


  செல்லில்பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயன்று ரயில் மோதி உயிரிழந்த சம்பவங்கள் தினமும் தொடர்கதையாகவே உள்ளது. பம்பர் லாட்டரி, பரிசு,  என்று வரும் மெசேஜைப் பார்த்து ஏமாந்து பணத்தை பறிகொடுத்துவிட்டு, கமிஷனர் அலுவலகம் வரும் அப்பாவிகள் ஏராளம்.
அதீத செல்போன் பழக்கத்தினால் தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் ஆளாகின்றனர். அளவுக்கதிகமான செல்போன் பயன்படுத்தும் பழக்கம் கேன்சரில் முடிவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


பெண்களை ஏமாற்ற இத்தகைய செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை தடுக்க அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் அது மட்டும் போதாது எந்நேரமும் அரசாங்கம் பெண்கள் பின்னே நிற்க முடியாது என்பதால் இதுகுறித்து பெண்களிடையே மிகுந்த விழிப்புணர்ச்சி ஏற்படுவது தான் இதற்கான சிறந்த தீர்வாக இருக்கமுடியும்.


பெற்றோரின் கண்காணிப்பின்றி நகரங்களில் தங்கி படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் தான் செல்லால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


குடும்பத்திற்கு தெரியாமல் ரகசிய செய்கைகளில் ஈடுபடுவது அவர்களை ஆபத்திற்குள்ளாக்கும் என்பதை பெண்கள் உணரவேண்டும். அதனால், தேவையற்ற நபர்களின் எஸ்.எம்.எஸ்க்குப் பதில் அளிக்காதீர்கள். காதலன் தானே, பாய்பிரண்ட் தானே என்று அலட்சியப்பேச்சும் வேண்டாம். உங்களுக்குள் பிரிவு ஏற்படும் போது அது உங்களை படுகுழியில் தள்ளிவிடும். பெண்களுக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கும் இத்தகைய பேச்சுகளை பெண்கள் தவிர்க்கவேண்டும்.


அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்கள் செல்போன் எண்ணை பகிர்ந்துகொள்வதை தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்கள் அறவே வேண்டாம். அறிமுகம் இல்லாத, அவ்வளவாக பழக்கமில்லாத நபர்களிடம் சொந்த தகவல்களை பகிர்வது, வீட்டுக்குள் அனுமதிப்பது போன்ற செயல்களையும் பெண்கள் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள்.


 விக்கிறவனுக்கு ஒரு கண் போதும், வாங்குகிறவனுக்குத் தான் ஆயிரம் கண்கள் வேண்டும் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. அது போல ஆண்களை விட பெண்கள் எப்போதும் ஒரு படி மேலே ஜாக்கிரதை உணர்வோடு செயல்பட்டால் இது போன்ற சுய கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் நிலைமையிருந்தும், சமூக நெருக்கடிகளில் இருந்தும், பல இழப்புகளிலிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

எல் சால்வடாரில் எரிமலை வெடித்தது: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்




மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் கொந்தளிப்பாக உள்ள ஒரு எரிமலை வெடித்து, கடும் வெப்பத்துடன் சாம்பலை கக்கியதால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடல் மட்டத்தில் இருந்து 2330 மீட்டர் உயரத்தில் உள்ள அந்த எரிமலை நேற்று கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. வானத்தையே மறைக்கும் அளவுக்கு 5000 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு புகை மூட்டம் இருந்ததால் அப்பகுதியில் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட துகள்கள் 10 கி.மீ. சுற்றளவுக்கு பரவியுள்ளன.  இதன் காரணமாக யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. அண்டை நாடான ஹோண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பாவுக்கும் இந்த எரிமலையின் சாம்பல் காற்றின்மூலம் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள எல் சால்வடார், நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நியூ இயர் கொண்டாட்டமா? கவனமா இருங்க...




உலகம் முழுதும் சாதி, மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் ஒரே ஸ்பெஷல் தினம் நியூ இயர். எந்த ஒரு பண்டிகைக்கும் இல்லாத சிறப்பு புத்தாண்டுக்கு உண்டு. ஏதோ... புதிய வாழ்க்கை தொடங்குவது போல ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு இனம்புரியாத குதூகலம் பிறக்கும்.


வருடத்தின் முதல் நாள் சந்தோஷமாக இருந்தால் வருடம் முழுதும் சந்தோஷமாக இருப்போம் என்ற சென்டிமெண்ட் தான் இதற்கு காரணம். அந்த மகிழ்ச்சிக்கு இதோ... இன்னும் மூன்றே நாள் தான் 2013 முடிந்து 2014 புத்தாண்டு பிறப்பதற்கு. இந்த புத்தாண்டில் இன்னுமொரு சிறப்பு 67 ஆண்டுகள் கழித்து, 1947க்குப் பிறகு 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும் கிழமைகளையும் கொண்டுள்ளது.  புத்தாண்டு தினத்தில் கோயில்களில் சிறப்பு பூஜை, சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை, மசூதிகளில் சிறப்பு தொழுகை என அனைத்து ஏற்பாடுகளும் களைகட்டி வருகிறது. சென்னையை பொறுத்த வரையில், புத்தாண்டு என்றாலே யூத்களுக்கு தனி குஷிதான்.


புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு மெரினா, பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் பீச்களிலும், கடற்கரை சாலைகளிலும் கூட்டம் அலைமோதும். புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் வாண வேடிக்கைகள் வெடித்தல், பலூன்களை பறக்கவிடுதல், ஓட்டல்களில் கேக்வெட்டுதல் என புத்தாண்டு களைகட்டும். முகம் தெரியாத நபர்களையும் நண்பர்களாக பாவித்து கேக் கொடுத்து ‘ஹேப்பி நியூ இயர்‘ என கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.  புத்தாண்டை பெரியவர்கள் கொண்டாடினால் போதுமா சிறுவர் சிறுமியருக்கான நியூஇயர் பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. டின்னருடன் பாட்டு, டான்ஸ் மேஜிக் ஷோ என குழந்தைகளுக்கான தனிக்கொண்டாட்டமாக இப்போது துவங்கியிருக்கிறது.


விபத்தை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடு


சென்னையின் ஒட்டுமொத்த கூட்டமும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் நள்ளிரவிலும், புத்தாண்டு அன்றும் பீச், ஈசிஆர் மற்றும் முக்கிய சாலைகளிலும் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்தாண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் மக்கள் கொண்டாட வேண்டுமென்பதில் போலீசார் அதிக அக்கறை எடுத்துள்ளனர். அதனால்  சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, யாரும் கடலில் குளிக்காதவாறு கண்காணிக்கப்படும். 


இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், சென்ற ஆண்டைப்போல் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். சென்னையின் பல்வேறு இடங்கலில் சுமார் 20 ஆயிரம் போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மெரினாவில் மட்டும் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி, மெரினா கடற்கரை பகுதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.


மக்கள் கூம்பு வடிவ ரேடியோ பயன்படுத்தக்கூடாது என்றும், நீச்சல் குளம் அருகில் மது விருந்து நடத்தக்கூடாது என்று ஓட்டல் நிர்வாகத்தினரிடம் எச்சரித்துள்ளோம். விதிமுறைகளை மீறும் ஹோட்டல் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் சாலை விபத்துகளும் தவிர்க்க முடியாதவை. போதையில் வாகனம் ஓட்டுவதாலும், அதிவேகமாக செல்வதாலும் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. இம்முறை அதற்காக நிறைய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க, போதையில் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு, அதிவேகமாக வாகனம் ஓட்டினால் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். நகர் முழுதும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்படும்.


புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.



இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். புத்தாண்டு கொண்டாட பீச்சுக்கோ, ஈசிஆருக்கோ, பொழுதுபோக்கு தளங்களுக்கோ எங்கு செல்வதாக இருந்தாலும், ஜாலியாக கொண்டாடுங்கள். ஆனால் அதே சமயம் போதையில் செல்வதோ, ரேஷ் டிரைவிங்கோ வேண்டாம். விதியை மீறினால் புத்தாண்டு தினம் மகிழ்ச்சிக்கு பதிலாக உங்களை சங்கடத்தில் கொண்டு சேர்த்து விடும். கவனமா இருங்க! புத்தாண்டை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் பிறருக்கு இடையூறு செய்யாதபடியும் கொண்டாடினால் எல்லா நாளும் புத்தாண்டுதான்.


விடிய விடிய சிறப்பு பஸ்கள்


புத்தாண்டு தினத்தில் கோயில்களுக்கும், தேவாலயங்களுக்கும் நிறைய பேர் செல்வார்கள் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 31ந்தேதி பகல் 12 மணி முதல் 1ந்தேதி மாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மெரினா, பெசன்ட் நகர், தாம்பரம், கோவளம், வண்டலூர், எம்.ஜி.எம், வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.


குறிப்பாக இரவு நேரத்தில் தேவையான பகுதிகளுக்கு விடிய விடிய மாநகர பஸ்கள் இயக்கப்படும். அதிகாலையில் குன்றத்தூர், மாங்காடு, மயிலை கபாலீஸ்வரர் கோவில், பார்த்தசாரதி கோவில், திருவேற்காடு, வடபழனி முருகன் கோவில், திருநீர்மலை மற்றும் சந்தோம், பெசனட் நகர் சர்ச் உள்ளிட்ட தலங்களுக்கு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதே போல, அவசர காலங்களில் உதவிக்காக 108 ஆம்புலன்ஸ்களும் அதிகளவில் தயாராக இருக்கும்.

தவறாக புரிந்து கொண்டுள்ள ஏழு அறிவியல் உண்மைகள்!







என்னதான் அறிவியல் வளர்ந்தாலும், மக்கள் சில விடயங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.


வைரம்

வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா, ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.

ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும்.

அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.

ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும்.

வௌவால்

வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம், இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான்.

ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது.

சுத்தமான தண்ணீர்


சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது. ஆனால் தண்ணீரில் நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால் மின்சாரம் பய்கிறதே அது ஏன் என்று கேட்கலாம்.

பொதுவாக தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால் அதில் மின்சாரம் பாய்கிறது.

ஆனால் சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.

மருக்கள்

மனிதனின் மருக்கள் உருவாகக் காரணம் தவளைகள் மற்றும் தேரைகள் என்று பலரும் கருதுகின்றனர் இது தவறான கூற்றாகும்.

இதற்கு காரணம் தேரைகள் அல்ல, மனிதர்கள் தான், மருக்கள் இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக் குலுக்கினால் இவ்வாறான மருக்கள் தோன்றும் என்று அறிவியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.

தீக்கோழி

தீக்கோழியை யாராவது அச்சுறுத்தினால் அவற்றின் தலையை மணலில் புதைத்துக்கொள்ளும் என்று சிலர் கூறுவார்கள்.

ஆனால் அவற்றினை அச்சுறுத்தினால் அவைகள் இறந்தவைகளைப் போல செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.

மனித இரத்தம்

மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது.

ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.

கனவுகளை நிறைவேற்றித்தரும் இணையதள‌ம்....!




எல்லோருக்கும் கனவுகள் உண்டு.ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றலோ வாய்ப்போ எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை.


சின்ன கனவோ பெரிய கனவோ அவற்றை நிரைவேற்றித்தர யாராவது உறுதி அளித்து உதவி செய்தால் எப்படி இருக்கும்?அற்புதமாக தான் இருக்கும் ஆனால் அத்தகைய நல்லிதயங்களை எங்கே தேடுவது என்று கேட்கிறீர்களா?


கவலையை விடுங்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்றித்தரக்கூடிய நல்ல மனிதர்களை கண்டு பிடித்து தரும் இணைய‌தளம் ஒன்று உதயமாகியிருக்கிறது. ஸ்பியின் நாட்டில் குடியேறியுள்ள கொலம்பியா நாட்டைச்சேர்ந்த கட்டிட கலை நிபுணர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் உங்கள் கனவுகளை சொல்லுங்கள் அதனை நிறைவேற்றித்தருகிறோம் என்று உத்வேகம் அளிக்கிறது.


அதாவது சமூக வலைப்பின்னல் வகையைச்சேர்ந்த இந்த தள‌த்தில் எவர் ஒருவரும் தங்கள் கனவை குறிப்பிட்டால் சக உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து அதனை நிறைவேற்றித்தருகின்றனர்.ஆனால் அதற்கு முன் நாமும் பதிலுக்கு இப்படி முன்று உறுப்பினர்களின் கனவுகள் நிரைவேற உதவுவதாக வாக்கு தர வேண்டும்.


அது தான் இந்த தள‌த்தின் சிற‌ப்பம்சம்.நம்முடைய கணவு மற்றவர்கள் உஅதவியால் உண்மையாவதோடு நாமும் மற்றவர்களின் கனவு பூர்த்தியாக கைகொடுக்கிறோம்.இப்படி சங்கிலித்தொடராக கணவுகள் நிறைவேறிக்கொண்டே இருக்கும். சமூக வலைப்பின்னல் கருத்தாக்கத்தை நன்மை எல்லோருக்கும் நன்மை செய்யும் நோக்கத்தோடு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.


லாபாப்பயா என்னும் பெயரில் பிலிப் வேலாகியூஸ் இதனை உருவாக்கியுள்ளார். மனிதர் கொலம்பியாவில் வெற்றிகரமான கட்டிட கலை நிபுணராக திகழ்ந்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் தொழில் மீது வெறுப்பு வந்திருக்கிறது.அதாவது வீடுகளை வாங்கி வசிக்கும் மக்களின் நலனில் அக்கரை செலுத்தும் வகையில் தனது தொழில் அமையவில்லை என அவர் உணர்ந்திருக்கிறார்.


இதனையடுத்து கொலம்பியாவில் இருந்து ஸ்பெயின் நாட்டில் குடியேறி எல்லோருக்கும் நன்மை பய்க்கும் நோக்கத்தொடு லாப்பபயா இணையதளத்தை நிறுவினார்.


கொலம்பியாவில் அதிகம் காணப்படும் பப்பாளியின் ஆங்கில பெயரிலேயே தளத்தை அமைத்துள்ளார்.பப்பாளி விதைகளை போல இந்த தளம் மூலம் பலரது கணவுகள் நிறைவேறி மேலும் பலரது கணவுகள் நிறைவேற வேண்டும் என்று அவர் கனவு காண்கிறார்.


இப்போது உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு நிலவும் பொது சக மனிதர்கள் கை கொடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் அவர் நம்புகிறார்.


உதவி செய்ய வேண்டும் என்பது தொற்று வியாதியைப்போல் இண்டெந்ர்நெட் முலம் பரவ வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.தனி மனிதர்களின் கணவுகளை நினைவாக்க வேண்டும் என்ப்தே இந்த முயற்சியின் நோக்கம் என்கிறார் அவர்.


நகரச‌பைகளோடு இணைந்து பெரிய அளவிலான மக்கள் நலத்திட்டங்களுக்கும் கைகொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

http://lapapaya.org/home/

மரபை மீறும் மரபணு மாற்றம்.. அச்சத்தில் விவசாயிகள்..!




மரபை மீறும் மரபணு மாற்றம்.. அச்சத்தில் விவசாயிகள்..!

1980களில், ஒரே இனத்தைச் சேர்ந்த இரு தாவரங்களின் மரபணுவை சேர்த்து ஒட்டுமுறை தாவரம் உருவாக்கப்பட்டு வந்தது. ஒரு எலுமிச்சையின் மரபணுவை மற்றொரு எலுமிச்சை ரகத்துடன் சேர்த்து உருவாக்குவது ஒட்டுமுறை. ஆனால், அதே எலுமிச்சையை அதற்கு தொடர்பில்லாத வேறொரு தாவரம் அல்லது உயிரினத்துடன் இணைத்து உருவக்கப்படுவதே மரபணு மாற்றப் பயிர். இது சம்பந்தப்பட்ட தாவரத்தின் இயல்பையே மாற்றிவிடும்.

பருத்தி, கத்தரிக்காய் என தொடங்கி அனைத்து தாவரங்களும் மரபணு மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டால், அவற்றை விளைவிக்கும் நிலங்களுக்கும் உட்கொள்ளும் மனிதர்களுக்கும் பெரும் பாதிப்புகள் உருவாகும் என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, ஆரஞ்சுப் பழத்திற்கு தவளையின் மரபணுவை இணைத்து பளபளப்பை கூட்டுவதாகவும் குற்றச்சாட்டு உண்டு.

இதுகுறித்து முறையாக பரிசோதிக்கப்பட்டதாக பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்கள் கூறினாலும், அத்தகைய ஆய்வுகள் குறித்து வெளிப்படையாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதைகளை விற்பதன் மூலம் அதன் மொத்த சந்தையும் அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனத்திடம் சென்றுவிடும் என குற்றம்சாட்டப்படுகிறது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான உயிரி தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய வரைவு மசோதாவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மரபணு மாற்றப் பயிர்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதன் மூலம் தேசிய அளவில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த மசோதாவில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

உயிரித் தொழில்நுட்ப ஒழுக்காற்று ஆணைய சட்ட மசோதாவை நிறைவேற்ற கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கடந்த 22ஆம் தேதி மக்களவையில் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி, இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி வாசுதேவ் ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

உணவுப் பொருள் தேவை அதிகரிப்பதை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த மசோதா, மரபணு மாற்ற பயிர்களை இந்தியாவில் அனுமதிப்பது குறித்த விதிமுறைகளை உள்ளடக்கியது. குறிப்பாக மரபணு மாற்ற பயிர்களை அனுமதித்தல், அதன் தன்மைகளை ஆய்வு செய்தல், பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை கண்காணிக்க உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம் உருவாக்கப்படும். இந்த ஆணையம், மரபணு மாற்ற பயிர்கள் குறித்த அனைத்து விவகாரங்களையும் கையாளும். உடல்நல பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் முடிவெடுக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.

நீதிமன்றத்தை அணுக முடியாது!

மரபணு மாற்ற பயிர்களால் பாதிப்பு ஏற்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. பிரச்னை எதுவாயினும் உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையத்திடம் தான் முறையிட முடியும். அதேநேரத்தில் மரபணு மாற்ற பயிரால் பாதிப்பு ஏற்பட்டால், 2 ஆண்டுகளுக்குள் ஆணையத்திடம் முறையிட வேண்டும். அதன்பிறகு பாதிப்பு ஏற்பட்டதாக கூறினால் அந்த கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது. மரபணு மாற்ற தொழில்நுட்ப பிரச்னையில் நாட்டிலுள்ள எந்த நீதிமன்றமும் தண்டனை வழங்க முடியாது. ஆணையம் அளிக்கும் தீர்ப்பை ரத்து செய்யவும் நீதிமன்றங்களுக்கு அதிகாரமில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழும் தகவல்களைப் பெற முடியாது.

விவசாயம், வனம், மீன்வளம், உடல்நலம், கால்நடை, சுற்றுச்சூழல் என தனித்தனி துறைகளில் ஒழுங்காற்றுப் பிரிவுகளை அமைக்க இந்த மசோதா வழி செய்கிறது. மரபணு மாற்றப் பயிர்களால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே ஆராய தனி குழு ஒன்றும் ஏற்படுத்தப்படும் என சட்ட மசோதா கூறுகிறது.

மரபணு மாற்ற பயிர்களை அனுமதிக்கும் இந்த மசோதா, முழுக்க முழுக்க அறிவியல் தொழில்நுட்பத்துறையை சார்ந்தது. இதில் வேளாண்துறைக்கோ, சுற்றுச்சூழல் துறைக்கோ எந்த தொடர்பும் இல்லை. தற்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த உயிரித்தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய மசோதா மீது விவாதம் நடத்தப்படும். அப்போது உறுப்பினர்கள் தெரிவிக்கும் திருத்தங்களை கருத்தில்கொண்டு, மசோதா திருத்தப்படும். பின்னர் அதனை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்படும்.

உணவே மருந்து என்றார் திருமூலர். ஆனால் இன்று உணவை விஷமாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக கலக்கத்துடன் குற்றஞ்சாட்டுகின்றனர் விவசாயிகள்.

விவசாயிகள் குரல் ஓங்கி ஒலிக்குமா, மத்திய அரசு செவி சாய்க்குமா, நமக்கும் நம் சந்ததிகளுக்கும் உணவு உணவாகவே கிடைக்குமா இல்லை ஆரஞ்சு தோற்றத்தில் இருக்கும் தவளையை நாம் எதிர்காலத்தில் உண்ண வேண்டியிருக்குமா?!................ மரபணு மாற்றம் வரமா? சாபமா? இப்படி கேள்விகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

பேஸ்புக்கில் பிளாஸ்டிக் ஜாரில் பூனை படம் போட்ட பெண் மீது வழக்கு!







சேட்டை செய்த பூனையை பிளாஸ்டிக் ஜாரில் போட்டு அடைத்து தண்டனை கொடுத்த தைவான் பெண் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான அபராதமும் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் கிடைக்கும்.


தைவானை சேர்ந்தவர் கிக்கி லின். பீஜிங்கின் டாய்சங் பல்கலைக் கழக மாணவி. சமீபத்தில் இவர் தனது பேஸ்புக்கில் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். பூனை ஒன்று பிளாஸ்டிக் ஜாரில் அடைக்கப்பட்டிருந்த படம் அது.


சேட்டை செய்ததால் இந்த தண்டனை என விளக்கமும் கொடுத்திருந்தார். இதைப் பார்த்த பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பலத்த எதிர்ப்பு கிளம்பியதும், Ôஎனக்கு என் செல்ல பூனை மீது கொள்ளை பாசம். அதனால்தான் அதை போகும் இடத்துக்கு எல்லாம் எடுத்துச் செல்வேன்.


4 கிலோ பூனையை பையில் போட்டு எடுத்துச் செல்வது கஷ்டமாக இருந்ததால் ஜாரில் போட்டு வெளியே எடுத்துச் சென்றேன். அது தப்பா…Õ என விளக்கம் கொடுத்தார் லின். பின்னர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த லின், மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.


போலீசார் லின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். லின் காட்டிய ஜாரில் காற்று போவதற்காக துளைகள் போடப்பட்டிருந்தது. ஆனால் பேஸ்புக்கில் இருந்த படத்தில் துளைகள் இல்லை.இதையடுத்து அவர் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தந்தை பெரியார் - வாழ்க்கை வரலாறு




1. இளமைப் பருவம்

காவும் கழனியும் நிறைந்த காவிரி ஆற்றின் அரவணைப்பில் அமைந்திள்ள ஊர் ஈரோடு. மஞ்சளும், மாவும் செழித்த நகரம் ஈரோடு. யாரோடும் வம்பு பேச்மல் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தார் வெங்கட்ட நாயக்கர்.

வெங்கட்ட நாயக்கர் இளம் வயதிலேயே அப்பாவை இழந்தார். வசதியற்ற குடும்பம். எனவே, அவர் தனது பன்னிரண்டு வயதிலேயே கூலி வேலை பார்த்தார். கூலி பெற்றுத்தான் கூழ்கூடிக்க வேண்டிய நிலை. அவ்வளவு வறுமை. பதினெட்டு வயதில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் சின்னத்தாயம்மை.

வெங்கட்ட நாயக்கர் – சின்னத்தாயம்மை வாழ்க்கை வண்டி ஓடிற்று. வண்டிமாடு வைத்துப் பிழைத்தார். நிலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. வண்டி மாட்டை விற்றார். அந்தப் பணத்தைக்கொண்டு சிறிய அளவில் பலசரக்குக் கடையொன்றைத் துவக்கினார். கணவருடன் சேர்ந்து அவரது மனைவி சின்னத்தாயம்மையும் உழைத்துப் பாடுபட்டார். நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்தார். உளுந்து, துவரை போன்ற பருப்பு வகைகள் உடைத்துக் கொடுத்தார். ஆமணக்கு விதையினின்று எண்ணெய் எடுத்து அதைக் காசாக்கினார். தம்பதிகள் இருவருமே சோம்பல் இன்றிப் பாடுபட்டார்கள். ஓய்வு இன்றி உழைத்தார்கள். நாளடைவில் கொடிகட்டிப் பறந்தார். சூரியனைக்கண்ட பனி விலகுவதுபோல் வறுமை அவர்களை விட்டு அகன்றது. செல்வமும் செழிப்பும் சேர்ந்தது.

உழைப்பினால் உயர்ந்த உன்னத தம்பதிகள் அவர்கள்.

வணிகப் பெருந்தகை வைணவ மத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டார். பக்திப் பெருக்கினால் இராமாயணம், பாகவதம் போன்ற கதைகளைக் கேட்டு மகிழ்ந்தார். தமது இல்லத்திலேயே பாகவதர்களுக்கும், சாதுக்களுக்கும் விருந்து அளித்து அவர்களை வணங்கி மகிழ்ந்தார்.

திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. அதன் பின்னர் பத்து ஆண்டுகள் அவர்களுக்குக் குழந்தைபேறு கிட்டவில்லை. கோயில்களுக்குச் சென்று இறைவனைக் கும்பிட்டார்கள். இருவரும் விரதங்கள் மேற்கொண்டார்கள். அவர்களது பக்தி மேலும் வளரலாயிற்று.

இந்தச் சூழலில் 1877 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ஓர் ஆண் மகவு பிறந்தது. கிருஷ்ணசாமி என்று பெயரிட்டு அகமகிழ்ந்தார்கள். அதன் பிறகு 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி இரண்டாவது மகன் பிறந்தான். அந்த மகனுக்கு இராமசாமி என்று பெயர் சூட்டி கொண்டாடினார்கள்.

இராமசாமிக்கு இரண்டு தங்கைகள் உண்டு. அவர்கள் பொன்னுத்தாய -ம்மாள், கண்ணம்மாள் ஆவார்கள்.

இராமசாமி சின்னபாட்டி வீட்டில் வளர்ந்தான். பாட்டி அவனை தத்துப்பிள்ளையாக தந்துவிடுமாறு வெங்கட்ட நாயக்கரிடம் கேட்டார். அவர் தர மறுத்துவிட்டார். என்றாலும் இராமசாமி அந்தப் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தான்.

பாட்டி வீட்டில் இராமசாமி அடித்த லூட்டிகள் ஏராளம். பாட்டி கண்டிப்புடன் வளர்க்காமல் கனிவுடன் மட்டுமே வளர்த்தார்கள். தாய்ப்பால் கிடையாது. தினமும் இராமசாமி ஆட்டுப்பால் குடித்து வளர்ந்தான். பாட்டி வீட்டில் பெரும்பாலும் பழையதும், சுண்டக்கறியும்தான். உணவாக்க் கிடைத்தது. தின்பண்டம் வாங்கித்தின்பதற்கு வழி போதாது.

இராமசாமிக்கு ஆறுவயது நிரம்பியது. பாட்டியின் வீட்டில் வாழ்ந்த பையன் கட்டுப்பாடின்றி ஊர் சுற்றித் திரிந்தான். யாருக்கும் அடங்காதவனாக மாறினான். பெற்றோர்கள் மனம் வருந்தினர். எனவே இராமசாமியை சின்னப்பாட்டி வீட்டினின்று அழைத்து வந்துவிட்டார்கள்.

இராமசாமியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார்கள். பள்ளிக்கூடத்தில் அவன் போக்கிரி, குறும்புக்காரன் என்று பெயரெடுத்தான். படிப்பு அவனுக்கு வேப்பங்காயாய்க் கசந்தது. மற்ற பையன்களுடன் சண்டையிடுவான். சட்டென்று கோபத்தில் அவர்களை அடித்தும் விடுவான். அடிபட்ட மாணவன் ஆசிரியரிடம் முறையிடுவான்.

இராமசாமியைத் திருத்தும் நோக்கத்துடன் ஆசிரியர் அவனிடம்,

“இனி பிள்ளைகளை அடிப்பதில்லை” என்று ஆயிரம் தடவை எழுதிவா என்று தண்டனை வழங்குவார். இப்படி ஒன்றல்ல… இரண்டல்ல நூற்றுக்கணக்கான தடவைகள். இராமசாமி தண்ட எழுத்து வேலை (இம்போசிசன்) எழுதியது உண்டு.

இராமசாமி பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது இடைவேளையின் போது தண்ணீர் குடிப்பதற்காக ஆசிரியர் வீட்டுக்கு போவதுண்டு. அவர்கள் வீட்டில் தண்ணீரை அண்ணாந்து குடிக்கச் சொல்வார்கள். அப்படிக் குடிக்கும்போது மூக்கில் தண்ணீர் சிந்தி இருமல் வந்துவிடும். சட்டை முழுவதும் நனைந்துவிடும். அதுமட்டுமல்ல, அவன் தண்ணீர் குடித்த தம்ளரை கழுவி எடுத்துச் செல்வார்கள். அது அவனுக்குப் பிடிக்கவில்லை. அப்புறம் அவன் ஆசிரியர் வீட்டில் தண்ணீர் குடிக்கச் செல்வதில்லை.

பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடித்தான் சிறுவன் இராமசாமி.

பெற்றோர்கள் ஆசிரியர்கள் வீட்டில் மட்டும்தான் தண்ணீர் குடிக்கச் சொல்லியிருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் மட்டும்தான் சைவ உணவு சாப்பிடுபவர்கள். மற்றவர்கள் மாமிச உணவு சாப்பிடுபவர்கள். எனவே அங்கு தண்ணீர் வாங்கிக் குடிக்கத் தடை போட்டிருந்தனர் பெற்றோர். முஸ்லீம், கிறிஸ்தவ நண்பர்களின் வீட்டில் தண்ணீர் குடித்தது அவன் வீட்டாருக்குத் தெரிந்துவிட்டது. அதுமட்டுமல்ல, அவர்கள் கொடுத்த திண்பண்டங்களையும் அவன் வாங்கிச் சாப்பிட்டுவிட்டான்.

செய்தி அப்பா, அம்மாவுக்கு தெரிந்துவிட்டது. செந்தேளை கொட்டியதுபோல் அவர்கள் துடித்துப் போனார்கள். கோபத்தால் முகம் சிவந்து போனார்கள். சிறுவன் இராமசாமியை அடித்தார்கள். மேலும் கடுமையாக தண்டனை வழங்கினார்கள்.

இரண்டு கால்களிலும் விலங்குக்கட்டை போடப்பட்டது. இரண்டு தோள்களிலும் இரண்டு விலங்குகள் பூட்டப்பட்டன. இதைத் தூக்கிச் சுமந்து அவன் பள்ளி செல்ல வேண்டும். இப்படி பதினைந்து நாட்கள் விலங்கு பூட்டப்பட்டு துன்பத்திற்கு ஆளானான் இராமசாமி.

இராமசாமி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்று ஆண்டுகள் படித்தான். பின்னர் இரண்டு ஆண்டுகள் ஆங்கிலப் பள்ளியில் படித்தான். படிப்பறிவு வளரவில்லை; பகுத்தறிவு வளர்ந்தது.

பத்தாவது வயதிலேயே பகவானைப் பணிபவர்களைப் பார்த்து பரிகசிக்கத் தொடங்கினான் அவன். ஆனால், தந்தையைப் போல் தொழிலில் நாட்டம் இருந்தது. பார்த்தார் தந்தை; சிந்தித்தார். பிறகு சிறுவனின் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவனைத் தொழிலில் பழக்கினார். பன்னிரண்டாவது வயதிலேயே ‘தரகு’ வர்த்தகத்தில் அவன் தலைசிறந்து விளங்கினான்.

கடையில் அவன் சுறுசுறுப்பாக வேலை செய்தான்.

மூட்டைகளுக்கு விலாசம் போடிவது, சரக்குகள் ஏலம் போடிவது இவைதான் இராமசாமி செய்த வேலை ஆகும்.

சிறுவன் பேச்சில் குறிப்பாக வியாபாரப்பேச்சில் கெட்டிக்காரன். யாரிடமும் விவாதம் செய்து வெற்றி பெறுவான். அவன் வீட்டில் எப்போதும் சாமியார்கள், புராணக்கதை சொலுபவர்கள். பிராமணர்கள், சமயப் புலவர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் மகிழும் வண்ணம் விருந்து தடபுடளாக நடந்துகொண்டேயிருக்கும. இது சிறுவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை. காரணமில்லாமல் அவர்கள்மீது வெறுப்பு வளர்ந்தது. அதன் காரணமாக கடவுள்மீது வெறுப்பும், கசப்பும் வளர்ந்தது. கடவுள் இல்லை. ஆனால் இந்தக் கூட்டம் கடவுள் இருப்பதாகக் கற்பனை செய்து, வயிறு வளர்த்து வருகிறார்கள் என்று எண்ணினான்.

எல்லாம் கடவுள் செயல். தலைவிதிப்படிதான் நடக்கும் என்பதை அவன் எதிர்த்தான். அப்படிச் சொல்பவர்களைப் பார்த்து கிண்டல் செய்வது அவன் வழக்கமாயிற்று.

இராமசாமி தன் கடைக்குச் செல்லும் வழியில் இராமநாத ஐயர் என்பவர் ஒரு கடை வைத்திருந்தார். அவர் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பதில் தீவிர நம்பிக்கைகொண்டவர். இராமசாமி அவரை மடக்க எண்ணினான். ஒரு நாள் அவர் கடையின் முன்பக்கம் நிழலுக்காகப் போடப்பட்டிருந்த தட்டியின் மூங்கில் காலைத் தட்டிவிட்டான். மூங்கில் தட்டி ஐயரின் தலையில் விழுந்துவிட்டது.

“ஏன் இப்படி செய்தாய்?” என்று இராமநாத ஐயர் கோபித்துக் கொண்டார்.

இராமசாமி புன்னகை செய்தான். தலைவிதிப்படி நடந்துள்ளது, எனவே தட்டி உங்கள் தலையில் விழுந்துவிட்டது. அப்புறம் “என்னை ஏன் திட்டுகிறீர்கள்” என்று சொல்லிவிட்டு சிட்டாய்ப் பறந்துவிட்டான் பன்னிரண்டு வயது சிறுவன் இராமசாமி.

பள்ளியில் படிக்கும்போது பிற மத்த்தினர் வீட்டில் தண்ணீர் குடித்ததற்காகவும், தின்பண்டங்கள் சாப்பிட்டதற்காகவும் கைவிலங்கு, கால்விலங்கு போடப்பட்ட அந்தச் சிறுவன்தான் பின்னாளில் சுயமரியாதைச் சுடராக, பகுத்தறிவு பகலவனாக விளங்கினார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் விலங்குகளை ஒடுப்பதற்காக அன்று அந்தச் சிறுவயதில் விலங்கு பூட்டப்பட்டாரோ என்னவோ?

எப்போதும் பஜனையும், பக்திப் பாடல்களும், ஆழ்வரார் பாசுரங்களும், கதா காலட்சேபங்களும் நிறைந்த இல்லத்தில் இருந்து கேள்விகள் கேட்டுக்கேட்டு மக்களை சிந்திக்கச் செய்த சமூக சீர்திருத்தவாதியாக அந்தச் சிறுவன் பரிணாமித்தான்.

அந்தச் சிறுவன்தான் ‘வெண்தாடி வேந்தர்’ என்று போற்றப்பட்டவர். விவேகமும், வீரமும் ஒருங்கே அமையப்பெற்றவர்.

தேரோடும் வீதிகளில் சுற்றித் திரிந்த அந்தப் பையன்தான்
ஊரோடு ஒத்துப்போகாமல், உயரிய சிந்தனைகளை
முன்வைத்து தமிழர்களின் தலைவராய்
உயர்த்தான் – அவர்தான் பெரியார்; ஈவெ.ரா. பெரியார்.

பள்ளி வாழ்க்கையைப் போல் அவரது பகுத்தறிவு வாழ்க்கையும் சுவையானது.

2. இல்லற வாழ்கை



“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பார்கள். பன்னிரண்டு வயதுச் சிறுவன் இராமசாமியின் வாழ்க்கையில் அது உண்மையாயிற்று.

பள்ளிப்படிப்பு ஏறவில்லை. எனவே கடையில் வேலை செய்யப் பழக்கினார் தந்தை. அங்கு தனது பேச்சுத்திறத்தால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தான் இராமசாமி. அவனது உற்சாகமான வார்த்தைகளால் வந்தவர்கள் வியப்படைந்தார்கள். ஐந்து ரூபாய் பொருளை எட்டு ரூபாய்வரை விலை ஏற்றி விற்கும் சாமர்த்தியம் இராமசாமிக்கு கைவந்த கலையாயிற்று.

“சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது”
என்ற குறளுக்கு ஏற்ப இராமசாமியின் வாதத்திறமை வருவோரை வாயடைக்கச் செய்தது.

வீட்டில் பாகவதர்கள், சங்கீத வித்வான்கள், பண்டிதர்கள், வேத பிராமணர்கள் என எப்போதும் கூட்டம் நிரம்பிக் காணப்படும். அவர்கள் சொல்லும் இராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கேட்பார். தர்க்கம் செய்வார். அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு பதிலை சொல்லி சமாளிப்பார்கள். அப்பொழுதிலிருந்தே இராமசாமிக்கு இந்துமதப் புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள் இவற்றின்மீது வெறுப்பு உண்டாயிற்று. அதன் காரணமாக அவர் கடவுள் இல்லை, கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்றும் உறுதியாக நம்பினார்.

வணிகத்தில் அவரது பேச்சுத்தன்மையால் வியாபாரம் பெருகிற்று.

கடைக்கு கணக்கு எழுதவும் தந்தையார் கற்றுக் கொடுத்தார். கடைக்கு வருபவர்களிடமும் தர்க்கம் செய்வதில் அவருக்கு நிகர் அவரே. அந்த இளம்வயதிலேயே அவரது பேச்சுத்திறன் குறிப்பாக தர்க்கம் செய்யும் ஆற்றல் தடையின்றி வளர்ந்தது. பின்னாளில் அவரது அழுத்தந் திருத்தமாக அரசியல் சொற்பொழிவுகளுக்கு அதுவே காரணமாயிற்று.

வியாபார நேரம்போக, ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் ஊர்சுற்றத் தொடங்கினார். காவிரி ஆற்றுப் படுகையில் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்து களித்தார். பெற்றவர்கள் கவலைப்பட்டார்கள்.

விளையாட்டாய்க் காலம் ஓடிற்று. இராமசாமிக்கு வயது பத்தொன்பதாயிற்று. திருமணம் செய்து வைத்துவிட்டால் பொறுப்பு வந்துவிடும் என்று பெற்றோர்கள் எண்ணினர்.

இராமசாமிக்கு பெண் பார்க்கத் தொடங்கினார்கள். இராமசாமி தனது உறவுக்காரப் பெண் நாகம்மையை மணக்க விரும்பினார். சிறுவயது முதலே நாகம்மையுடன் ஓடி ஆடி விளையாடி மகிழ்ந்தவர். எனவே, அவர் அந்தப் பெண்ணைத்தான் மணப்பேன் என்று பிடிவாதம் செய்தார்.

பெற்றோர்கள் சொல்லுக்கு எதிர்சொல் சொல்லாத கடுமையான காலம் அது. அவர்கள் பார்த்துப் பேசும் பழக்கமும் கிடையாது. அந்தச் சூழ்நிலையில் இராமசாமி தன் விருப்பத்தில் உறுதியாக நின்றார். புரட்சியின் வேர்கள் அப்போதே முளைவிடத் தொடங்கின.

நாகம்மைக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தெடங்கினர். இராமசாமி படிக்காதவர்; ஊர் சூற்றித்திரிபவர்; எனவே அவருக்குத் திருமணம் செய்து வைக்க நாகம்மை வீட்டில் சம்மதிக்கவில்லை.

நாகம்மையின் வயது 13. ஆனால், அவருக்குப் பார்த்த மாப்பிள்ளையின் வயதோ 50க்கு மேல். அதுவும் இரண்டு முறை திருமணம் ஆகி மனைவியை இழந்தவர். எனவே இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் நாகம்மை.

“மணந்தால் இராமசாமியைத்தான் மணப்பேன். இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன்” என்று நாகம்மையார் தன் அப்பா, அம்மாவிடம் தெளிவாக்க் கூறிவிட்டார்.

வேறு வழி இன்று நாகம்மையின் பெற்றோர் இராமசாமிக்கே தங்கள் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதித்தனர்.

போராட்டமே வாழ்க்கை நியதியாக்க் கொண்டவர் தந்தை பெரியார். இளமையில் திருமணம்கூட போராட்டங்களுக்கும், புகைச்சல்களுக்கும் இடையெதான் நடைபெற்றது.

அன்றைய நாளில் இளம் வயது திருமணம் நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இராமசாமியை இனி நாமும் மரியாதையுடன் பெரியார் என்றே அழைப்போம். திருமணம் நடந்து விட்டாலே பெரிய ஆள்தானே!

பெரியார் – நாகம்மையார் இல்லறம் பிறர்க்கு எடுத்துக்காட்டாகவே அமைந்தது எனலாம்.

கணவரின் குணம் அறிந்து அதற்கு ஏற்ப தன்னையும் மாற்றிக்கொண்டார் நாகம்மையார்.

பெரியார் வீட்டில் யாரும் மாமிச உணவு சாப்பிடமாட்டார்கள். ஆனால், பெரியாரோ மட்டன் பிரியாணி என்றால் மட்டற்ற மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார். அவருக்கு சைவ உணவு பிடிக்காது. எனவே கணவருக்காகத் தனியாக அசைவ உணவு சமைப்பார் நாகம்மையார்; நாகம்மையார் வெள்ளிக்கிழமை விரதம் இருப்பார். சைவ உணவுதான் சாப்பிடுவார். பெரியாருக்கு விரதம் இருப்பதெல்லாம் கட்டோடு பிடிக்காது.

ஒருமுறை நாகம்மையார் சமைத்து வைத்திருந்த சைவ உணவில் அவர் அறியாதவாறு ஒரு எலும்புத்துண்டை மறைந்து வைத்துவிட்டார் பெரியார். நாகம்மையார் பூஜை முடித்து சாப்பிட உட்கார்ந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே எலும்புத்துண்டு தலை நீட்டியது. நாகம்மையார் பதறிப்போனார். இது தன் கணவன் வேலை எனபதையும் உணர்ந்து கொண்டாள்.

அன்றோடு நாகம்மையின் விரதம் போயிற்று. சைவ உணவு சாப்பிடும் வழக்கமும் மறைந்துவிட்டது.

பெரியார் கொஞ்சம் கொஞ்சமாக தன் இல்லத்தரசியாரை தன் கொள்கைகளுக்கு மாறச் செய்தார். தனது தந்திரமிக்க நடவடிக்கைகளால் நாகம்மையார் கோயிலுக்குச் செல்வதையும் அறவே தடுத்து நிறுத்திவிட்டார்.

நண்பர்களுடன் ஆற்றங்கரையில் அமர்ந்து, அரட்டை அடிப்பது மட்டும் ஓயவில்லை. அங்கேயிருந்துகொண்டே சாப்பாடு தயார் செந்து கொடுத்துவிடு என்று நாகம்மையாருக்குச் சொல்லிவிடுவார். நாகம்மையாரும் ருசியாக சமைத்து பாத்திரங்களில் நிரப்பி சாப்பாடு கொடுத்து அனுப்புவார். இப்படி செய்வது மாமனார், மாமியாருக்குப் பிடிக்காது என்றாலும் அவர்களுக்குத் தெரியாமல் சாப்பாடு கொடுத்து விடுவார். இவ்வாறு பெரியாரின் விருப்பங்களுக்கு ஏற்ப சிறந்த மனைவியாக அவர் வாழ்ந்து வந்தார்.

பெரியார் மிகுத்த சிக்கனவாதி; காசை எண்ணி எண்ணிதான் செலவழிப்பார். வீட்டில் சமையலிலும் சிக்கனம் வேண்டும் என்று எண்ணுவார். தேவையில்லாமல் இரண்டு காய்கள் வைத்தால் கோபித்துக்கொள்வார். காபிக்குப் பால் அதிகம் ஊற்றினால், பாலை ஏன் இப்படி வீணாக்குகிறாய்? சிறிது பால் ஊற்றினாலே போதுமே என்பார்.

சில வேளைகளில் “பாலைவிட மோரே உடம்புக்கு நல்லது” என்றுகூட சொல்லுவார்.

நாகம்மையார் பெரியாரின் எல்லாக் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டார். ஆனால், இந்த உணவில் சிக்கனத்தை மட்டும் கடைபிடிக்க தயக்கம் காட்டினார். வீட்டிற்கு வருபவர்களுக்கு வயிறார உணவு பரிமாறி உபசரித்தார். அதே சமயம் வேண்டுமென்றே பெரியாருக்கு சிறிதளவே காய்கறிகள் வைப்பார். இதனால் நாளடைவிலை நாகம்மையார் செய்யும் சமையலில் மட்டும் அவ்வளவாக தலையிடுவதில்லை.

இரவு பன்னிரண்டு மணிக்கு வந்தாலும், நாகம்மையார் சுடச்சுட உணவு தயாரித்து விருந்தளித்து விடுவார். அவரது விருந்தோம்பல் பணியைப் பாராட்டாத தமிழ்நாட்டுத் தலைவர்கள் இல்லையென்றே சொல்லிவிடலாம்.!

பெரியாரின் பொதுவாழ்விலும் நாகம்மையார் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அவர் மேற்கொண்ட எல்லாப் பராட்டங்களிலும் கலந்துகொண்டார். பெரியார் அவர்களின் பொது வாழ்வின் வெற்றிக்கு அவர் பெரிதும் உதவினார்.

திருமணம் ஆன இரண்டாண்டுக்குப் பின் நாகம்மையார் அழகான பெண் குழந்தைக்குத் தாயானார். ஆனால், அந்தக் குழந்தை ஐந்து மாதங்களில் இறந்துவிட்டது. பெரியார் மனைவிக்கு ஆறுதல் சொன்னார். ஆனாலும் ஒருநாள் -

வாழ்க்கையில் வெறுப்புற்று, பெரியார் வீட்டைவிட்டு வெளியேறினார். யாரிடமும் சொல்லாமல்கொள்ளாமல் ஊர் விட்டுப் புறப்பட்டார்.

பெரியார் துறவியானார்!

இந்நிகழ்ச்சியை வேடிக்கை என்பதா? வேதனை என்பதா?

எந்தக் குறையும் இல்லை.

செல்வமும் செழிப்பும் செறிந்த வாழ்க்கை …

சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல்-2’ ஜோடி அமலாபால்!




சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மான் கராத்தே’ படத்திற்கு பிறகு ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.


 வழக்கம்போல் நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் இப்படத்திற்கு வழக்கம்போல் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அனேகமாக ‘எதிர்நீச்சல்-2’ என பெயர் வைக்கப்படலாம்


 மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறாராம். ஹன்சிகாவுடன் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், மீண்டும் முன்னணி நடிகையான அமலாபாலுடன் ஜோடி சேர்ந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இப்படம் முழுக்க முழுக்க ஆக்சனை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் வருகிறாராம்.


 இப்படத்தில் நடைபெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக குங்பூ என்ற தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள இருக்கிறாராம். வில்லன் ஒரு குங்பூ வீரன் என்பதால் அவருடன் சண்டை போடுவதற்காக இந்த பயிற்சியை பெறுகிறாராம்.

தனுஷ்,சிம்பு,அனிருத் - கலக்கவிருக்கும் மூவர் கூட்டணி



   

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இளைய தலைமுறைக் கலைஞர்களான தனுஷ், சிம்பு மற்றும் அனிருத் ஆகிய மூவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளதாக வதந்திகள் பரவிவருகின்றன.


சமீபமாக இம்மூவரும் தங்களது விடுமுறையைக் கொண்டாடுவதற்காக லண்டன் சென்றிருந்தனர். ஆனால் இவர்கள் விடுமுறைக் கொண்டாட்டங்களுக்குப் போகவில்லை என்றும், தங்களது புதிய படத்தினைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தவே சென்றார்கள் என்றும் வதந்திகள் பரவியுள்ளன.


தனுஷ் மற்றும் சிம்பு இணைந்து நடித்தால் அது மிகப்பெரும் வெற்றிக்கு வித்தாகும் என்பது திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.


ஏற்கெனவே அஜித் மற்றும் விஜய் இணைந்து நடிப்பார்கள் என்றும் கிசுகிசுக்கள் பரவி வரும் நேரத்தில் இந்த வதந்தியும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. மேலும் அனிருத்தும் இவர்களின் படத்தில் இணைந்தால் அது இளைஞர்களுக்கு மாபெரும் விருந்து அளிப்பதாகவும் இருக்கும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.


சிம்பு தற்பொழுது பாண்டிராஜ் இயக்கும் படத்திலும், கௌதம் மேனன் இயக்கும் படத்திலும் நடித்துவருகிறார். தனுஷ் தற்பொழுது கே.வி.ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் நடித்துவருகிறார். மேலும் வேலையில்லாப் பட்டதாரி என்ற படத்திலும் நடித்துவருகிறார்.

2014ல் வெளியாகுமா சிம்புவின் லவ் ஆந்தம் ?




லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் லவ் ஆந்தம் டீசர் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 27ல் வெளியாகிப் பிரபலமானது. சுமார் 96 மொழிகளில் சிம்பு பாடியிருக்கும் இப்பாடல் ஆல்பத்தின் வெளியீடு எப்பொழுது என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் அமெரிக்க ஹிப் ஹாப் பாடகரான ஏகன் கடந்த மே மாதத்தில் சென்னை வந்திருந்தார். சிம்புவின் லவ் ஆந்தம் இசை ஆல்பத்தில் அவரும் பாடவிருப்பது ஏற்கெனவே அறிந்ததே. எனவே சிம்புவின் இசை ஆல்பம் விரைவில் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சர்வதேசப் பிரபலப் பாடகரான ஏகனுடன் சிம்பு பாடியிருக்கும் இந்த ஆல்பத்தின் உருவாக்கத்தில் ட்ரேக்டிகல் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் பெரும்பங்காற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.


இந்த ஆல்பத்தைப் பற்றி சிம்பு குறிப்பிடுகையில் “ மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பும், விருப்பமும் என்னை மிகப்பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபலப் பாடகரான ஏகனுடன் பாடியது மிகவும் இனிமையாக அமைந்தது. இதைச் சாத்தியமாக்கிய ட்ரேக்டிகல் எண்டெர்டெயின்மெண்டிற்கு நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். அடுத்த ஆண்டு இந்த இசை ஆல்பம் மிகப் பெரிய அளவில் வெளியிடப்படும் “ என்று குறிப்பிட்டுள்ளார்.


உலக அமைதிக்காக சுமார் 96 மொழிகளில் சிம்பு பாடியுள்ள இந்த இசை ஆல்பத்தின் ட்ரெய்லர் யூடியூபில் சுமார் 23 லட்சம் ஹிட்டுகளுக்கும் மேலாகப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சவூதி இளவரசருக்கு மரண தண்டனை?


 
 

சவூதி அரேபியாவில் கொடிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது வாடிக்கை. இந்த ஆண்டில், கடந்த மே மாதம் வரையில் அங்கு 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பொதுவாக மன்னர் குடும்பத்தில் யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் சவூதி இளவரசர் ஒருவருக்கு விரைவில் மரணத் தண்டனை அளிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


சவூதி இளவரசர் ஒருவர் தன்னுடன் தங்கியிருந்த சக சவூதி அரேபியர் ஒருவரை கொலை செய்துவிட்டார். அங்கு, கொலையாளி சார்பில், கொலை செய்யப்பட்டவர் குடும்பத்துக்கு ஒரு பெருந்தொகையை கொடுத்து விட்டால் அவர்கள் மன்னித்து விடுவார்கள். கொலையாளி தண்டனையில் இருந்து தப்பி விட முடியும்.


ஆனால் இந்த வழக்கை பொறுத்தமட்டில் இளவரசர் தரப்பில் தரக்கூடிய தொகையை பெற்றுக்கொண்டு, மன்னிப்பு வழங்க கொலை செய்யப்பட்டவர் குடும்பம் முன்வரவில்லை. இதையடுத்து சவூதி இளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நிலை உருவாகி உள்ளது. இதற்கான அனுமதியை சவூதி பட்டத்து இளவரசர் சல்மான் வழங்கி விட்டதாக பத்திரிகை தகவல்கள் கூறுகின்றன.


உள்துறை மந்திரி முகமது பின் நயீப்புக்கு பட்டத்து இளவரசர் சல்மான் அனுப்பியுள்ள தகவல் அறிக்கையில், “ஷரியத் சட்டம் (இஸ்லாமிய சட்டம்) எந்தவித விதிவிலக்குமின்றி அனைவருக்கும் பொருந்தும். பெரியவர், சிறியவர், பணக்காரர், ஏழை என்று வித்தியாசம் எல்லாம் கிடையாது. நீதித்துறை தீர்ப்பில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அதுதான் இந்த நாட்டின் பாரம்பரியம். ஷரியத் சட்டத்தை நாம் அனைவரும் பின்பற்றித்தான் ஆக வேண்டும்” என கூறி உள்ளார்.

இதையடுத்து சவூதி இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீன் பிரியாணி - ரெடி!!!




மீன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

மீன் - 1/4 கிலோ

அரிசி - 2 ஆழாக்கு


வெங்காயம் - 150 கிராம்


தக்காளி - 150 கிராம்


இஞ்சி, பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்


புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு


மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்


தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன்



மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்


தயிர் - 1 கப்


உப்பு - தேவையான அளவு


எண்ணெய் - 1/2 குழிக் கரண்டி



செய்முறை:


* மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.

* ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

* வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

* தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

* பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் "தம்" சேர்த்து (ஆவி போகாமல் மூடி வைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.

* குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.

* சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.

வடிவேலுவின் இடைத்தைப் பிடிப்பாரா சூரி ?




வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காட்சியின் மூலம் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் பட்டியில் இடம்பிடித்த நடிகர் சூரி தற்சமயம் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார்.


நாகேஷ் நகைச்சுவை நடிகராக இருந்த காலத்திலிருந்தே நகைச்சுவை நடிகர்களுக்கென்று சில காலகட்டங்கள் பொற்காலமாக அமைந்திருந்தது.



குறிப்பிடத்தக்கது.கடந்த தொண்ணூறுகளில் தொடங்கி பல ஆண்டுகள் கவுண்டமணி - செந்தில் நகைச்சுவைக் காட்சிகள் பிரபலமாக இருந்துவந்தன. கவுண்டமணி - செந்தில் நகைச்சுவைக் காட்சிகள் குறைந்து வந்த காலங்களில் விவேக் மற்றும் வடிவேலு ஆகியோர் கொடிகட்டிப் பறந்தனர். குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவைகள் தமிழர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.


வடிவேலு நடிக்கும் திரைப்படங்கள் கடந்த சில வருடங்களாக அதிகமாக இல்லாததாலும், சந்தானத்தின் புதிய முறை நகைச்சுவைகளாலும் தமிழ் சினிமாவில் ஏற்கெனவே சந்தானம் மிக முக்கிய நகைச்சுவை நடிகராக வலம்வருகிறார்.


அந்த வகையில் தற்பொழுது அதிகப் படங்கள் நடிக்கும் நகைச்சுவை நடிகருக்கான பட்டியலில் “பரோட்டா” சூரியும் இடம்பெற்றுள்ளார். இவரது நடிப்பில் இவ்வாண்டில் வெளியான “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “தேசிங்கு ராஜா” முதலான படங்கள் பெரும் வாய்ப்புகளைத் தேடித்தந்தன.


இவர் நடிப்பில் வருகிற 2014ல் இளைய தளபதி விஜயின் “ஜில்லா”, சிவகார்த்திகேயனின்” மான் கராத்தே”, ஜெயம் ரவியின்  “ நிமிர்ந்து நில்” மற்றும் விஜய் சேதிபதியின் “ ரம்மி” மற்றும் அனேக திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

20 கோடியைத் தொட்ட சிவகார்த்திகேயன்...!!!




கோலிவுட்டின் மற்றொரு நம்பகமான ஹீரோவாக உருவெடுத்து வரும் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெருவெற்றியடைந்து வசூலை வாரிக் குவித்தது. இவர் தற்பொழுது “மான் கராத்தே” என்னும் படத்தில் நடித்து வருகிறார்.


மான் கராத்தே திரைப்படம் தற்பொழுதுதான் உருவாகிவரும் சூழலில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமைகள் ஏற்கெனவே 20 கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்டிருப்பதாக கிசுகிசுக்கள் பரவியிருக்கின்றன. பெரும்பாலும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள்தான் ரிலீசிற்கும் முன்பாகவே இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்படும். அத்தகைய சாதனையை சிவகார்த்திகேயன் மிகக் குறைந்த காலத்திலேயே, மிகக் குறைந்த படங்களில் மட்டுமே நடித்துப் பெற்றிருக்கிறார்.


மான் கராத்தே திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனத்தில், அவரது முன்னால் உதவி இயக்குனரான திருக்குமரனால் இயக்கப்பட்டு வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத் தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை சுமார் 35 கோடி பட்ஜெட்டில் தயாரித்துவருகிறது.


ஹன்சிகா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

400 கோடிகளைக் குவித்துள்ள தூம் 3




அமீர்கான், கத்ரீனா கைஃப் , அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா நடிப்பில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த டிசம்பர் 20ல் வெளியான தூம் 3 திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய்கள் வரை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.



தூம் படவரிசையான தூம் 3 திரைப்படம் கடந்த டிசம்பர் 20ல் வெளியானது. விஜய் கிருஷ்ண ஆச்சார்யா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். தூம் படவரிசைகளான தூம் மற்றும் தூம் 2 ஆகிய படங்களின் வசூலை விட அமீர்கான் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளதாகப் பாராட்டப்படுகிறது.



இந்தியாவில் மட்டும் இப்படம் சுமார் 250 கோடிகள் வரை வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் இந்தி வெர்சன் 200 கோடிகளுக்கும் மேலாகவும் இதர மொழிகளில் சுமார் 20 கோடிகள் வரையிலும் வசூலித்து சாதனை படைத்துள்ளது.



இப்படத்தின் இந்த பிரம்மாண்ட வெற்றியினை அமீர்கான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் விக்ரம் பிரபிவின் அரிமா நம்பி





விக்ரம் பிரபு மற்றும் பிரியா ஆனந்த் இணைந்து நடித்துவரும் அரிமா நம்பி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.


கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த ஆனந்த ஷங்கர் இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது.


விக்ரம் பிரபு நடிப்பில் சமீபமாக வெளியான “இவன் வேற மாதிரி” திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததுடன், சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவன் வேற மாதிரி திரைப்படத்தை எங்கேயும் எப்போதும் திரைப்பட இயக்குனர் சரவணன் இயக்கியிருந்தார்.


விக்ரம் பிரபு தற்பொழுது சிகரம் தொடு மற்றும் தலப்பாக்கட்டை முதலான படங்களில் நடித்துவருகிறார். பிரியா ஆனந்த் தற்பொழுது வை ராஜா வை,
பொடியன், இரும்புக் குதிரை முதலான படங்களில் நடித்துவருகிறார்.

நாளை மாலை வெளியாகிறது வேலையில்லாப் பட்டதாரி டீசர்!




அறிமுக இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துவரும் தனுஷின் இருப்பத்து ஐந்தாவது படமான வேலையில்லாப் பட்டதாரி படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்படத்தின் இயக்குனர் தனுஷின் நடிப்பில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், 3 மற்றும் நைய்யாண்டி ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவராவார். தனுஷ் கேட்டுக்கொண்டதன் பேரில் இவர் இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.


வேலையில்லாப் பட்டதாரி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துவருகிறார். மேலும் இப்படத்தின் பாடல்களை தனுஷே எழுதியிருக்கிறார். 


மூன்று படத்தின் மெஹாஹிட் பாடலான ஒய் திஸ் கொலவெறி மற்றும் எதிர் நீச்சல் படத்தின் “பூமி என்ன சுத்துதே” போன்ற பாடல்கள் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தணிக்கைக்கு அனுப்பட்டது ஜில்லா..?





இளைய தளபதி விஜய், மோகன்லால் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வருகிற ஜனவரி 10ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஜில்லா திரைப்படம் இன்று தணிக்கைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


ஜில்லா படத்தின் தயாரிப்பாளார் ஆர்.பி.சௌத்ரி ஜில்லா படத்தினை இன்று தணிக்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், ஜில்லா திரைப்படம் நாளை அல்லது ஜனவரி 2ல் தணிக்கை செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுவருகிறது.


இதற்கிடையில் ஜில்லா படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் நாளை வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருப்பதால், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் இன்று தணிக்கை செய்யப்படலாம் என்றும், முழு திரைப்படம் நாளை தணிக்கை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


ஜில்லா திரைப்படத்துடன் ரிலீசாகவிருக்கும் அஜித்தின் வீரம் திரைப்படம் ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்டு U சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


ஜில்லா திரைப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், நேசன் இயக்கத்தில், இமான் இசையில் உருவாகியுள்ளது.

புதுச்சேரி அருகே ஆழ்கடலில் புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்!




சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’ என்று பெயரிட்டேன்” என்றார்.

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.

‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம்.

மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.

ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.

புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.

எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.

மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.

நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சிகள் முறையாக செய்தால் இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டி வரலாம்..!

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..




தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!


அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.



1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.



இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.



 கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

வாழ்வின் ரகசியம் !!!




வாழ்வின் ரகசியம் !!!


"வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன் . ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.


நான் என்ன செய்யட்டும்?" என்றான் குருவிடம் சீடன்.


"தம்பி- நீ வாழ்க்கையில் என்னவாக இருக்க விரும்புகிறாய் ? எருமையாகவா,கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.


"புரியல குருவே.." என்றான்.


"எருமை பின்னால் தட்டினால், எதையும் கண்டு கொள்ளாது. கழுதை, தட்டியவரை எட்டி உதைக்கும். ஆனால் குதிரை முன்னால் பாய்ந்து செல்லும்.


புரிந்ததா...நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். இது தான் வாழ்வின் ரகசியம் என்றார்.

உடல் எடையை குறைக்க உதவும் 9 சிறந்த வைட்டமின்கள் !!!!




உடல் எடையை குறைக்க, கடுமையான உடல் எடை குறையும் முறையை கையாள வேண்டும். அதற்காக தீவிரமான உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உண்ண வேண்டும். இவைகள் மட்டும் போதுமா? வேறு வழிகள் ஒன்றும் இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது! உடல் எடையை குறைத்து, ஆற்றல் திறனை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைத்து, கொழுப்பை எரித்து, செரிமானத்தை சீராக்க என பல உதவிகளைப் புரிகிறது வைட்டமின்கள்.

ஆனால் அதற்காக உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் விட்டு விட வேண்டும் என்றில்லை. அதனுடன் சேர்த்து முக்கிய வைட்டமின்களையும் சேர்த்துக் கொண்டால், எடையை குறைக்க முயலும் போது சுலபமாக இருக்கும். இதோ உடல் எடையை குறைக்க உதவும் 9 வைட்டமின்கள் பற்றிய ஒரு பார்வை. இதில் ஒருசில கனிமங்களும் அடங்கும்.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்


வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் என்பது 8 வகை வைட்டமின் பி-க்களை கொண்டுள்ளதாகும். இது நம் உடலில் பல வகைகளில் வேலை செய்கிறது. உடல் எடையை குறைக்க, அவை தீவிரமாக உதவி புரிகிறது. அதற்கு காரணம் உடல் கார்போஹைட்ரேட்டை ஆற்றல் திறனாக மாற்ற இது உதவி புரிகிறது. மேலும் ஈரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, செரிமானத்திற்கு துணை புரிந்து கொழுப்பை குறைக்கவும் இது உதவும். அதிகமாக உண்ணுவதால் ஏற்படும் மன அழுத்தத்தை நீக்கவும் இது துணை நிற்கும். ஆகவே கீரைகளை அதிகம் உட்கொண்டால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாட்டில் இருந்து விடுபடலாம்.

வைட்டமின் டி

உடல் எடை குறைப்பு ஆய்வுகளில் பங்கேற்றவர்களில் ஆறுதல் மருந்து எடுத்துக் கொண்டவர்களை விட, வைட்டமின் டி கொண்ட உணவுகளை எடுத்து கொண்டவர்கள் தான் அதிக எடையை இழந்தனர். அதே போல் வைட்டமின் டி-யை குறைவாக எடுத்தவர்களை விட அதிகமாக எடுத்தவர்கள் தான் அதிக அளவில் எடை குறைந்துள்ளனர். வைட்டமின் டி கால்சிய ஈர்ப்பை அதிகரிப்பதால், அது உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. வைட்டமின் டி சத்தானது மீன், காளான் போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் சி

உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையும். அதனுடன் சேர்ந்து வைட்டமின் சி-யும் அதற்கு துணை புரியும். அதனால் ஆற்றல் திறன் அதிகரித்து, கலோரிகள் எரிக்க உதவும். அதே சமயம் வைட்டமின் சி-யை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியாது என்று விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் கூறுகிறது. இருப்பினும் வைட்டமின் சி குறைபாடு இருந்தால், அது மெட்டபாலிச செயல்பாட்டை குறைத்து, உடல் எடையை அதிகரித்துவிடும். சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன.

கால்சியம்

கால்சியத்திற்கும் உடல் எடை குறைவுக்கும் சம்பந்தம் உள்ளது என்று ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளது. இதில் சில முரண்பாடுகள் இருந்த போதிலும், கால்சியம் மற்றும் கால்சியம் அடங்கிய பொருட்கள் உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது. மேலும் கொழுப்புகளை உடைத்து அதை சேமித்து வைப்பதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். கால்சியம் சத்தைப் பெற பால் பொருட்களை அதிகம் உட்கொண்டால், கால்சியம் குறைபாடு நீங்கிவிடும்.


குரோமியம்

உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை செயல் நிறுத்த உதவி புரிவதால், உடல் எடை குறைப்புக்கு குரோமியம் கண்டிப்பாக தேவைப்படுகிறது. மேலும் அது இன்சுலினுடன் சேர்ந்து குளுக்கோஸ் மற்றும் ஆற்றல் திறன் உற்பத்திக்கு உதவி புரிகிறது. இத்தகைய குரோமியம் சோளத்தில் அதிகம் நிறைந்துள்ளது.

கோலின்

கோலின் என்பது ஒரு வைட்டமின் கிடையாது. ஆனால் இந்த அதிமுக்கிய ஊட்டச்சத்து வைட்டமின் பி-யுடன் சேர்க்கப்பட்டிருக்கும். கொழுப்புகளை செயலற்றதாக மாற்ற இது உதவுவதால் உடல் எடை குறைவதற்கும் இது உதவும். இது இல்லையென்றால், கல்லீரலில் கொழுப்புகள் தேங்கி, மெட்டபாலிச செயல்பாடு தடைபட்டு போகும். சோயாவில் கோலின் என்னும் சத்தானது அதிகம் நிறைந்துள்ளதால், அதனை உட்கொள்வது நல்லது.

ஜிங்க்

தைராய்டு மற்றும் இன்சுலின் சீரமைப்பு திறம்பட செயல்படுவதற்கு ஜிங்க் அவசியமான ஒன்றாக விளங்குகிறது. இவை இரண்டில் ஏதாவது ஒன்று சரிவர செயல்படவில்லை என்றால் கூட போதும், மெட்டபாலிச செயல்பாடு வெகுவாக தடைபட்டுவிடும். அதனால் ஜிங்க் குறைபாட்டை தவிர்த்தால், தேவையற்ற உடல் எடையை குறைக்கலாம்.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

இந்திய விளம்பரங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டது என்னென்ன...?




1. கத்ரினாவுக்கு பொடுகு, தலைமுடி பிரச்சினை இருக்கிறது..., ஷில்பாவுக்கு தலைமுடி உதிர்கிறது.

2. மனைவி இருப்பவன், பக்கத்து வீட்டுக்காரன் டியோடரணட் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

3. உங்கள் தகுதிகளை விட, உங்கள் நிறம் முக்கியத்துவம் வாய்ந்தது.

4. சமையலறையில் உப்பு இல்லையா, கவலை வேண்டாம். டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம் !

5. ஒவ்வொரு பற்பசை பிராண்டும் நமபர் 1 பிராண்ட்தான், எல்லாமே இந்திய பல்மருத்துவர்கள் அனைவராலும் பரிந்துரை செய்யப்படுபவைதான்!!!

6. உங்கள் மகள் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தால் நகைக்கடைக்கோ அல்லது துணிக்கடைக்கோ அழைத்துச் செல்லுங்கள்.

7. ஆண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவதன் ஒரே காரணம் பெண்களைக் கவர்வதற்கே.

8. கோலா பானங்கள் அனைத்துமே எல்லாவகையான பயங்களையும் போக்கிவிடும். தொடர்ந்து பருகி வந்தால் நீங்களும் சூப்பர்மேன் ஆகிவிடுவீர்கள்!!

9. சூப்பர்ஸ்டார்கள் எல்லாருமே பாவம், ரொம்பவும் ஏழைகள். 10 ரூபாய் கொடுத்து கோலா வாங்க இயலாமல் உயிரையே பணயம் வைக்கவும் தயங்க மாட்டார்கள்.

10. ஷாம்பு விளம்பரங்களில் வரும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அவதார் திரைப்பட ஸ்பெஷல் எஃபக்ட்சைவிட அதி உன்னதமானவை.

11. ஷாம்பு அல்லது சோப்பில் இருக்கும் பழப்பொருட்களின் விகிதம், 99% பழச்சாறுகளில் இருக்கும் விகிதத்தை விட அதிகமானது.

12. அமுல் நிறுவனத்தில் நல்ல பால்பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய திறமைசாலிகளைவிட கார்ட்டூன் வரையும் திறமைசாலிகள் அதிகமாக இருக்கிறார்கள்.

13. சாலைகளின் நிலை மோசமாக இருப்பதைக் குறைகூறம் பெரும்பாலான மக்கள், அதே சாலைகளில் ஓட்டுவதற்காகத் தான் வாகனங்களை வாங்குகிறார்கள்.

14. டயரி மில்க் சில்க்- கை மூஞ்சிமுழுக்க அப்பிக்கொள்ளாமல் சாப்பிடவே முடியாது.

15. மோட்டார் பைக் வாங்குவோர் எவரும் பயணம் செய்வதற்காக அல்ல, பெண்களை பிக் அப் செய்யவே வாங்குகிறார்கள்.

16. எல்லா சோப்புகளுமே 99.9% கிருமிகளைக் கொன்று விடும்.

17. பகார்டி சிடிக்கள் தயாரிக்கிறது, கிங் பிஷர் மினரல்வாட்டர் தயாரிக்கிறது என்றே எல்லாரும் நம்புகிறார்கள்.

18. தாயும் மகளும் பேசிக்கொள்கிற ஒரே நேரம், ஹேர் ஆயில் பற்றிப் பேசும்போது மட்டும்தான்.

19. எந்தத்துறை வல்லுநராக இருந்தாலும் சரி, அவர் எப்போதும் வெள்ளைக் கோட் அணிந்திருப்பார்.

ரூ.1 கோடி சம்பளத்தை உதறி ஆம் ஆத்மியில் இணைந்தார் லால்பகதூர் சாஸ்திரி பேரன்!



ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை உதறி தள்ளிவிட்டு முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.


காங்கிரஸ் தலைவர் அனில் சாஸ்திரியின் மகன் ஆதர்ஷ் சாஸ்திரி, அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார்.


இந்நிலையில், தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, ஆம் ஆத்மி கட்சியில் ஆதர்ஷ் சாஸ்திரி நேற்று இணைந்துள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில், ஆம் ஆத்மியின் கொள்கைகள் தன்னை கவர்ந்ததால் தான் அக்கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


மேலும், 2014ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி விரும்பினால் போட்டியிடத் தயார் என்று ஆதர்ஷ் சாஸ்திரி கூறினார்.

முகேஷ் அம்பானி - வாழ்க்கை வரலாறு!




முகேஷ் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘முகேஷ் திருபாய் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் வணிகத்தில் ஈடுபட்ட அவர், மிக விரைவில் ஒரு தொழிலதிபராக வளர்ச்சிப் பெற்றார். ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானியின்’ மகன் ஆவார்.


‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் முகேஷின் பங்களிப்பு முக்கியமானது. இவர், ஃபார்சூன் குளோபல் 500 பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆவார். 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘உலகின் பணக்கார விளையாட்டு உரிமையாளராக’ ஃபோர்ப்ஸ் அமெரிக்க இதழ், இவரது பெயரைப் பட்டியலில் வெளியிட்டது. மேலும் இவர், ஆசியாவின் இரண்டாவது பணக்கார மனிதராகவும், உலகின் 19 வது பணக்கார மனிதராகவும் கணிக்கப்பட்டு, அப்பட்டியலில் இடம்பெற்றார்.



அதுமட்டுமல்லாமல், இவர் அமெரிக்க கார்ப்பரேஷன் வங்கியின் இயக்குனர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகவும், சர்வதேச வெளியுறவு ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். திருபாய் அம்பானிக்குப் பிறகு ரிலையன்ஸின் இன்னொரு முகமாகவே தன்னை வெளிப்படுத்தி, உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தன் பெயரை பதிவு செய்து, தற்பொழுது, இந்தியத் தனியார் தொழில்துறையில் மாபெரும் சக்ரவர்த்தியாக விளங்கும் முகேஷ் அம்பானி அவர்களின், வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஏப்ரல் 19, 1957

பிறப்பிடம்: மும்பை மாநிலம், இந்தியா

பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

முகேஷ் அம்பானி அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள “மும்பையில்”, இந்தியாவின் ‘வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றாப்படும் திருபாய் அம்பானிக்கும் (இந்தியாவின் தனியார்துறை நிறுவனங்களில் மிகவும் பெரிய நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்)’, கோகிலாபென் அம்பானிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு அனில் அம்பானி என்ற சகோதரரும், தீப்தி சல்கோன்கர் மற்றும் நீனா கோத்தாரி என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இவருடைய சொந்த ஊர் ஜீனாகட் மாவட்டத்திலுள்ள சோர்வாட் ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய ஆரம்பக் கல்வியை மும்பையுள்ள அபே மொரிச்சா பள்ளியில் தொடங்கி இவர், பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் துறையில் பி.இ பட்டம் பெற்றார். அதன் பிறகு, இரண்டு ஆண்டு எம்.பி.ஏ படிக்க அமெரிக்கா பயணமான முகேஷ் அவர்கள், கலிஃபோர்னியாவில் உள்ள இஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். ஆனால் ஒரு ஆண்டு மட்டுமே நிறைவடைந்த நிலையில் 1980 -இல் தன்னுடைய படிப்பைக் கைவிட்டு இந்தியா திரும்பினார்.


வணிகத்தில் ஈடுபடக் காரணம்


இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில், பாலிஸ்டர் இழை நூல் உற்பத்தியில் தனியார் துறைகளை ஊக்குவித்தது. அப்பொழுது இவருடைய தந்தை திருபாய் அம்பானி அவர்கள், பாலிஸ்டர் இழை நூல் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். மேலும், இவருடன் டாட்டா, பிர்லா என இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்தனர்.


இப்படிப்பட்ட கடுமையான போட்டிக்கு மத்தியில் இவருடைய தந்தை திருபாய் அம்பானிக்கு அந்த உரிமம் வழங்கப்பட்டது. இதனால், தந்தையின் பொறுப்புகள் அதிகமானதால், தன்னுடைய எம்.பி.ஏ படிப்பை ஓராண்டோடு முடித்துக்கொண்டு, தந்தைக்கு உதவியாக ரிலையன்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் பொறுப்புகளை ஏற்றார்.


தொழில் வளர்ச்சியில் மேற்கொண்ட சாதனைகள்


ரிலையன்ஸ்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி எனத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1981 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு பெட்ரோலிய சுத்திகரிப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு ஆராய்ச்சி என மேலும் பல தொழில் அமைப்புகளைத் தொடங்கி தன்னுடைய வர்த்தகத்தை விரிவுபடுத்தினார்.


அதுமட்டுமல்லாமல், உலகில் மிகப்பெரிய மற்றும் பல பாகங்களைக் கொண்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளைக் கொண்ட ‘இன்ஃபோகாம் நிறுவனத்தை’ (தற்பொழுது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்) நிறுவினார். பின்னர், அடித்தள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனத்தை ஜாம்நகரில் நிறுவி, அதன் உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகப்படுத்தினார். மேலும், இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பெட்ரோகெமிக்கல், மின் உற்பத்தி, துறைமுகம் மற்றும் உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகளின் நிர்வாக இயக்குனராகவும், அதனை வழிநடத்துபவராகவும் செயல்பட்டார்.


ரிலையன்ஸ் நிறுவனம் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட இடைஞ்சல்கள், அரசியல் சவால்கள் எனப் பல தடைகளை சமாளித்து தன்னுடைய தந்தைக்கு பக்கபலமாக இருந்த இவர்,  தந்தை திருபாய் அம்பானியின் இறப்பிற்குப் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தை முகேஷ் அம்பானிதான் ஆளப்போகிறவர் என்று அனைவரும் நினைத்திருந்த தருணத்தில், அவருடைய சகோதரர் அனில் அம்பானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவருடைய குடும்பம் இரண்டாகப் பிரிந்தது. இதனால், அம்பானியின் குடும்பச் சொத்துக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோகெமிக்கஸ் நிறுவனம் முகேஷிடமும், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ஆகிய நிறுவனங்கள் அனில் அம்பானியிடமும் பிரித்துக்கொடுக்கப்படது.


தனிப்பட்ட வாழ்க்கை


முகேஷ் அம்பானி அவர்கள், நீதா அம்பானி என்ற பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இஷா என்ற மகளும், ஆனந்த் மற்றும் ஆகாஷ் என்ற மகன்களும் உள்ளனர். இவர்கள் மும்பையில் அண்டிலியா என்று பெயரிடப்பட்ட 27 மாடி கட்டிடம் கொண்ட மிகவும் விலையுயர்ந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மதிப்பு அமெரிக்க டாலரில் 2 பில்லியன்கள் ஆகும்.


விருதுகளும், மரியாதைகளும்


    2010 – ஆசியா பொதுநல ஸ்தாபன அமைப்பின் மூலம் பிரதான விருந்தில் ‘குளோபல் விஷன் விருது’.


    என்.டி.டி.வி (இந்தியா) மூலம் 2010 ஆம் ஆண்டின் ‘சிறந்த வர்த்தக தலைவர் விருது’.

    பைனான்சியல் குரோனிக்கிள் அமைப்பின் மூலம் 2010 ஆம் ஆண்டின் ‘தொழிலதிபர் விருது’.

    2010 – ஐ.எம்.சி அமைப்பின் மூலம் 2009 ஆம் ஆண்டிற்கான ‘ஜுரான் தர பதக்கம்’.

    2010 – பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூலம் ‘பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக பள்ளித்தலைவர் பதக்கம்’.

    அமெரிக்க இந்திய வர்த்தக ஆலோசனை சபை மூலம் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவர் விருது’.

    குஜராத் அரசிடம் இருந்து 2007 ஆம் ஆண்டிற்கான ‘சித்திரலேகா நபர் விருது’.

 முகேஷ் அம்பானியின் தொழில் வளர்ச்சிக்கு முன்னால், இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானி’ என்னும் மிகப்பெரிய தொழில் பின்னணி இருந்தாலும், தன்னுடைய திறமையான வர்த்தகச் சிந்தனையால், லாபம் தரும் பல தொழில் அமைப்புகளை உருவாக்கி, இந்தியாவின் நவீனத் தொழில்நுட்பத் துறையின் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார்.


 2007 ஆம் ஆண்டு இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட மதிப்புயர்வு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் மதிப்பும் அதிகரித்ததின் காரணமாக இவர், ‘உலக பணக்கார மனிதர்’ எனவும் அறியப்படுகிறார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top