.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 29 December 2013

கமலுடன் ஜோடி சேர காஜலுக்கு ரூ.2 கோடி...!




உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை காஜல் அகர்வாலுக்கு 2 கோடி ரூபா சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் நயன்தாராவுக்கு இணையாக அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார் காஜல் அகர்வால்.

2004இல் இந்தி திரைப்படமொன்றில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். 2008ஆம் ஆண்டு வரை அவருக்கு பேசிக்கொள்ளும்படி திரைப்படங்கள் அமையவில்லை. 2009இல் மகதீரா (தமிழில் 'மகாவீரன்') தெலுங்கு திரைப்படத்தின் வெற்றி அவருக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை தந்தது.

தமிழில் 'நான் மகான் அல்ல', 'துப்பாக்கி', 'மாற்றான்', 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது விஜய் ஜோடியாக 'ஜில்லா' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

லிங்குசாமி தயாரிப்பில் உலக நாயகன் கமல் ஹாஸன் நடிக்கும் 'உத்தம வில்லன்' திரைப்படத்துக்கு கதாநாயகி தேர்வு நடந்தது. அனுஷ்காவை பரிசீலித்தனர். ஆனால் அவர் தெலுங்கில் தயாராகும் இரண்டு சரித்திர திரைப்படங்களில் பிஸியாக நடிப்பதால் கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டாராம்.

இதனையடுத்து காஜல் அவர்வாலிடம் பேசினர். அவர் இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்ததால் யோசித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரூ.2 கோடி சம்பளம் தருவதாக உறுதி அளிக்கப்பட்டதாகவும் இதையடுத்து 'உத்தமவில்லன்' திரைப்படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

கணவ‌ரிட‌ம் ‌பிடி‌க்காத ‌விஷய‌ம்....?





கணவ‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் ‌சில பழ‌க்க வழ‌க்க‌ங்க‌ள் மனை‌வி‌க்கு‌‌ப் ‌பிடி‌க்காம‌ல் போகலா‌ம். ஆனா‌ல் பெரு‌ம்பாலான மனை‌விகளு‌க்கு‌, த‌ங்களது கணவ‌ரிட‌ம் ‌பிடி‌க்காத ‌விஷய‌ம் எ‌ன்று ஒ‌ன்று இரு‌க்குமானா‌ல் அது எதுவாக இரு‌க்கு‌ம் எ‌ன்று உ‌ங்களா‌ல் க‌ணி‌க்க முடியுமா?


தாய்க்குப் பின் தாரம் எ‌‌ன்று ஒரு பழமொ‌ழி உ‌ள்ளது. இதனை ச‌ரியாக உண‌ர்‌ந்தா‌ல் இ‌ந்த தவறு ச‌ரிசெ‌ய்ய‌ப்படு‌ம். அனைத்து பெண்களுக்குமே கணவரிடம் பிடிக்காத விஷயம் எது தெரியுமா? தன்னுடைய கணவர் அம்மா பிள்ளையாக இருக்கிறார் என்பதுதான்.


பெ‌ற்று, ‌வள‌ர்‌த்து ஆளா‌க்‌கிய தாயை ம‌தி‌ப்பதோ, அவரது சொ‌ல்படி நட‌ப்பதோ ந‌ல்ல ‌விஷய‌ம்தா‌ன். ஆனா‌ல், ‌திருமணமா‌கி த‌ன்னை ந‌ம்‌பி வ‌ந்த பெ‌ண்ணு‌க்கு‌ம் அ‌ந்த அள‌வி‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம் தர வே‌ண்டியது‌ம் அவ‌சியமா‌கிறது. பொதுவாக எதை‌ச் செ‌‌ய்தாலு‌ம் அ‌ம்மா‌வி‌ன் அனும‌தியை‌ப் பெற வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பது தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன ‌விஷய‌ங்களு‌க்கு‌ம் அவரது சொ‌ல்படிதா‌ன் நட‌ப்பே‌ன் எ‌ன்று ‌நீ‌ங்‌க‌ள் ‌நினை‌த்தா‌ல் உ‌ங்களு‌க்கு சுயபு‌த்‌தி‌யி‌ல்லை எ‌ன்று மனை‌வி ‌நினை‌க்க வே‌ண்டி வரு‌ம்.


மேலு‌ம், உ‌ங்க‌ள் இருவரு‌க்கு‌ள் ‌இரு‌க்கு‌ம் ‌சில ‌சி‌ன்ன ‌சி‌ன்ன ‌விஷய‌ங்க‌ளு‌ம், தா‌ய்‌க்கு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டா‌ல், ஒரு சுத‌ந்‌திர மன‌ப்பா‌ன்மையை உ‌ங்க‌ள் மனை‌வி இழ‌க்க வே‌ண்டி வரு‌ம்.


எனவே, எது ச‌ரி, எது தவறு எ‌ன்று முடிவெடு‌த்து அதனை உ‌ங்க‌ள் தா‌யி‌ன் கவன‌த்‌தி‌ற்கு‌ம் கொ‌ண்டு வ‌ந்து ‌நீ‌ங்க‌ள் செ‌ய்வ‌தி‌ல் தவ‌றி‌ல்லை.


ச‌ரி இ‌ப்படி ஒரு ஆ‌ண், தனது தா‌யி‌ன் பே‌ச்சை‌க் கே‌ட்டு நட‌ப்பதை ‌விரு‌ம்பாத பெண், எதிர் காலத்தில் தன்னுடைய மகன் அம்மா பிள்ளையாக இருக்க வேண்டும் என்று ஆசை‌ப்படுவதையு‌ம் நா‌ம் பா‌ர்‌க்க முடி‌கிறது. பெற்றோர் மீது பாசமுள்ள கணவர்தான், மனைவி மீதும் பாசமாக இருப்பார் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


‌திருமணமானது‌ம் எ‌ல்லாமே மனை‌வியாக‌த்தா‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பது‌ம் தவறு, உ‌ங்களது அ‌‌ன்பு, அ‌க்கறை போ‌ன்றவை தா‌ன், ஒரு ஆணு‌க்கு தா‌ய் செ‌ய்ய வே‌ண்டிய கடமைக‌ளி‌ல் ‌சி‌றிது தள‌ர்வை ஏ‌ற்படு‌த்துமே‌த் த‌விர, ‌அ‌திகார‌ம் அ‌ல்ல. எ‌‌ந்த‌ப் பெ‌ண்ணு‌ம் தனது கணவரை தா‌யை ‌வி‌ட்டு‌ப் ‌பி‌ரி‌த்து கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்தா‌ல் முத‌லி‌ல் ‌‌நீ‌ங்க‌ள் இழ‌ப்பது உ‌ங்க‌ள் கணவ‌ரி‌ன் அ‌‌ன்பை‌த்தா‌ன். எனவே எதையு‌ம் உ‌ங்களது அ‌ன்பாலு‌ம், அ‌க்கறையாலு‌ம் ச‌ரி செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.

ஷங்கர் படத்தில் நான்!




“ஓகே சார், நான் ரெடி...” என்றார். நானும் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டேன். ஒருவேளை நான் ஜூஸ் குடித்து முடிப்பதற்காகக் காத்திருந்திருப்பாரோ என்று நினைத்தபடி அவசரமாகக் கடைசி மடக்கைக் குடித்துவிட்டு, வாயைத் துடைத்துக்கொண்டு நானும் ரெடி என்றேன்.

இயக்குனர் ஷங்கரைப் பேட்டி எடுப்பது என்பது எப்போதுமே முக்கியமான விஷயம். பெரும்பாலும் அவர் தரும் ஸ்டில்களும் சொல்லும் தகவல்களும் படு சுவாரஸ்யமாக இருக்கும். முதல் ரசிகனாக நம் பார்வைக்குக் கிடைக்கும் என்பதால் அது எல்லோருக்குமே பிடித்ததாக இருக்கும். அவருடைய பாய்ஸ் படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் பேச சம்மதித்திருந்தார்.

“பேட்டியைத் தொடங்கிடலாமா..?” என்றார். நானும் சோபாவில் வசதியாக அமர்ந்துகொண்டேன். “நான் ரெடி சார்” என்றேன். என் அசைவைப் பார்த்துக்கொண்டிருந்தவர், என் கைகளையே பார்த்தார். கைகளைத் தேய்த்துக்கொண்டேன். “நானும் ரெடி சார்...” என்றேன் மறுபடியும்!

“இல்லே... நான் பதில் சொல்லத் தயாரா இருக்கேன்னு சொல்ல வந்தேன்...” என்றார். நானும் கேள்வியைத் தொடங்கிடுறேன் என்று சொல்லிவிட்டு, “இந்த ப்ராஜெக்ட் தொடங்கறப்பவே ஒரு கல்ச்சுரல் ஃபெஸ்டிவல் மூட்லதான் தொடங்குனீங்க... முடிக்கறப்ப எப்படி இருந்துச்சு?” என்றேன்.

இப்போது அவருடைய பார்வை என் சட்டைப் பை பக்கம் போனது. அவருடைய மனதில் என்ன ஓடுகிறது என்ற எண்ணத்தோடு நான் காத்திருக்க, அவரும் என் முகத்தையே பார்த்துக்கொ|ண்டு அமர்ந்திருந்தார்.

“எதுனா ஸ்டில் வந்திரட்டும்னு வெயிட் பண்றீங்களா சார்?” என்றேன்.

“இல்லே... நீங்க குறிப்பெடுத்துக்க தொடங்கினதும் நான் சொல்லத் தொடங்கிடுவேன்...” என்றார். அப்போதுதான் அவர் என் கைகளையே பார்த்ததற்கும் ரெக்கார்ட் செய்ய மைக்ரோ டேப் எதுவும் வைத்திருப்பேனோ என்று பையைப் பார்த்ததற்கும் பொருள் விளங்கியது.

“இல்லே சார்... நாம பேசத் தொடங்கிடலாம்... ரெக்கார்ட் பண்ணவோ குறிப்பெடுத்துக்கவோ தேவையில்லை... அப்படியே பழகிட்டேன்” என்றேன். அவர் முகத்தில் மொத்த நம்பிக்கையும் போய்விட்டது. “கேள்வியை ரிப்பீட் பண்ணவா சார்?” என்றேன். “வேண்டாம்... ஆனா, குறிப்பெடுத்துக்காம எப்படி எழுதுவீங்க..?” என்றார். பதில் சொல்வதைவிட கேள்வி கேட்பதில் சுவாரஸ்யமாகி விட்டார்.

“அதெல்லாம் நல்லா நினைவுல இருக்கும் சார்... எத்தனை நாள் கழிச்சும்கூட நான் எழுதிருவேன்… அப்படியே பழகிருச்சு…” என்றேன்.

“உங்க முதல் கட்டுரையில் இருந்தே இப்படித்தானா?” என்றார், அவர் பேட்டி பின்னுக்குப் போய்விட்டது. “இல்லே சார்… ஆரம்பத்துல நானும் பல கட்டுரைகளுக்காகப் போறப்ப குறிப்புகளை எழுதியிருக்கேன். பையிலே சின்ன பாக்கெட் டைரி வெச்சிருப்பேன். அதிலே கிட்டத்தட்ட முழு கட்டுரையையுமே எழுதிருவேன். அப்புறம்தான் விட்டுட்டேன்” என்றேன்.

“ஏன் விட்டுட்டீங்க..?” என்றார். “ஏன்னா… என்ன பேசுனோமோ அதை மட்டும் எழுதற மாதிரி ஆகிடுது” என்றேன்.

ஷங்கர் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துவிட்டார். “இதென்ன பதில்? அப்ப சொல்லாததையும் எழுதுவீங்களா..?” என்றார். “அப்படி இல்லை சார்… நாம குறிப்பு எழுத ஆரம்பிச்சதும் பேட்டி கொடுக்கறவங்க கான்ஷியஸ் ஆகிடுவாங்க… பேச்சுல இயல்புத் தன்மை கெட்டுப் போயிரும். நாம குறிப்பு எழுதலைன்னா நம்மோட உரையாடுற இயல்போட பேசுவாங்க…” என்றேன்.

“அப்ப… இப்ப நாம பேசிகிட்டிருக்கறதை உங்களால அப்படியே எழுத முடியுமா?” என்று கேட்டார். “எப்ப வேணா எழுத முடியும் சார்… கூடவே, நீங்க பேசறப்ப லேசா முகத்தை மேல பார்த்து வெச்சுக்கறீங்க… லேசா இடது பக்கம் தலையைச் சாய்ச்சுகிட்டே பேசறீங்க… ரெண்டு கைகளையும் ஒரே ரிதம்ல அசைச்சுகிட்டே பேசறீங்க… சோபாவிலே உட்கார்றப்ப கால்களைக் கொஞ்சம் அகட்டி வெச்சுக்கறீங்க… இதையும் சேர்த்து என்னால எழுத முடியும். அதைச் சேர்த்து சொல்றப்ப பேட்டி இன்னும் சுவாரஸ்யமா ஆகிடும். இதையெல்லாம் பேப்பர்ல எப்படி சார் குறிச்சுக்கறது?” என்றேன்.

நான் சொன்னதை ரசித்தார். ஆனாலும் அவருக்குத் தான் பேசும் விஷயங்கள் முழுமையாகப் பேட்டிக்குள் இடம் பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. கொஞ்சம் கவலையான குரலிலேயே மொத்த பேட்டியையும் பேசினார். புறப்படும் சமயம், “நான் வேணா ஆர்டிஸ்ட் லிஸ்ட், டெக்னீஷியன்ஸ் லிஸ்ட் குடுக்கட்டுமா..?” என்றார். “தேவைப்பட்டா கேட்டுக்கறேன் சார்…” என்றேன்.

அந்த வாரம் ஷங்கர் பேட்டிதான் பத்திரிகையின் ஹைலைட். அதன் பிறகு ஷங்கர் கலந்துகொண்ட ஒரு விழாவுக்கு நானும் கவரேஜுக்காகப் போயிருந்தேன். என்னைப் பார்த்ததும், “வெரிகுட்… என் வார்த்தைகளும் உங்க அப்சர்வேஷனும் அவ்ளோ அழகா பொருந்தியிருந்துச்சு” என்று பாராட்டினார்.

அதன் பிறகு அதே பாய்ஸ் படத்தில் நடித்த பாய்ஸ் பேட்டிக்காக மறுபடியும் ஷங்கர் அலுவலகத்துக்குப் போயிருந்தேன். பத்திரிகைக்காக பல்வேறு கோணங்களில் போட்டோ செஷன் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க, பாய்ஸ் கெட்ட அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த ஷங்கர், “தம்பிகளா… ரிப்போர்ட்டர் கையிலே பேப்பர் இல்லையேன்னு எதையாச்சும் பேசி வைக்காதீங்க… அவர் வேற டைப் ஆளு!” என்றார்.

அந்த சந்திப்பின்போது, நான் மாணவ நிருபராக இருந்த காலத்தில் அவர் தன் முதல் படமான ஜெண்டில்மேனுக்காக எங்கள் ஊருக்கு வந்ததையும் அப்போது அவரை நான் பேட்டி எடுத்ததையும் சொன்ன்னேன். “அப்போதாச்சும் குறிப்பு எழுதுவீங்களா?” என்றார் சிரித்துக்கொண்டே. “ஆமாம்… குறிப்பு எழுதினேன்” என்று சொல்லி விட்டு, “நான் குறிப்பு எழுதாதது உங்களை சங்கடப்படுத்திவிட்டதா?” என்றேன்.

“நீங்க பேசிட்டு போனப்ப பயம் இருந்தது. ஆனா, பேட்டியைப் படிச்சதும் சந்தோஷமாகிடுச்சு… உங்க அப்சர்வேஷன் அந்தக் கட்டுரையை அழகாக்கி இருந்துச்சு… நான் நாடகங்கள்ல நடிச்சுகிட்டிருந்தப்ப ஷோ தொடங்கறதுக்கு முன்னே வாழைப்பழம் சாப்பிடுவேன். அது பதற்றத்தைக் குறைச்சு நிதானமாக்கும். அதை முதல்வன்லகூட பயன்படுத்தியிருப்பேன். அதேபோல, எதையும் கண்ணால குறிச்சுகிட்டு கரெக்டா படைப்புல கொண்டு வர்ற உங்க குணமும் என் கதாபாத்திரங்கள்ல எங்கேயாச்சும் வரும்… அவ்ளோ பாதிச்சுடுச்சு…” என்றார்.

அந்நியன்லயோ சிவாஜியிலேயோ எந்திரன்லயோ நண்பன்லயோ நான் பார்க்கலை..!

‘ஐ’ படத்தில் நான் இருக்கேனான்னு பார்க்கணும்!

கணவன் வாங்கலையோ..கணவன்....?




ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..


அது என்னன்னா...!  

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.


2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும்


இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.


ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..
அப்டியே வெளிய தான் போக முடியும்.  


இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது   



முதல் தளத்துல அறிக்கை பலகைல


 "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு   



இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா



இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல



 "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு    



இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.   



மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல



"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு



அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.



நாலாவது தளத்துல அறிக்கை பலகைல




"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.



வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.
இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?



கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.



ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல

 

 "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.



வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.
அவ்ளோ தான்.....


அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..   


ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

 

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..


இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .


எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...
பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது .

பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும் : ராம் கோபால் வர்மா




பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான 'மை ஒயிஃப் மர்டர்' மற்றும் 'ரான்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர் நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. ‘டிராமா குயின்’ என்ற புத்தகம் ஒன்றிணை எழுதியுள்ளார்.

அப்புத்தகத்தில் ராம் கோபால் வர்மாவை தான் திருமணம் செய்ய விரும்பியதையும், ’என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என தான் அவரிடம் கேட்டதாக சுசித்ரா கூறியுள்ளார்.

அதற்கு ராம் கோபால் வர்மா அளித்த பதிலையும் குறிப்பிட்டுள்ளார். “நீ என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளாய். நாம் இருவருமே வெவ்வேறு குணம் உடையவர்கள். எனக்கு திருமணத்தின் மீது எல்லாம் நம்பிக்கையில்லை.

நான் உறவிற்கு மட்டுமே பெண்களை பயன்படுத்துவேன். எனக்கு பெண்களின் உடல் மட்டுமே பிடிக்கும். அவர்களின் மூளை பிடிக்காது. பெண்களைப் பார்க்கலாம், ஆனால் அவர்கள் சொல்லுவதைக் கேட்க முடியாது.” என்று ராம் கோபால் வர்மா தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராம் கோபால் வர்மாவிடம் அனுமதி பெற்றே இதனை எழுதியதாகவும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்.....?




90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்

ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான்.

தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளதாகக் கூறுகிறார்.

இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்திக்கு உலகம் மாற வேண்டியதன் அவசரமான அவசியம் குறித்து உலகெங்கும் பயணித்து பிரச்சாரம் செய்து வரும் இவர் சென்னை வந்துள்ளார். பல்வேறு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தி வரும் நிருபர்களிடம் பேசுகையில்,

நான் உண்மையில் ஐஸ் மேன் தான், எனது பெரும்பாலான நாட்களை மைனஸ் 73 டிகிரி வெப்பநிலையில் கழித்துவிட்டேன். அந்த வெப்பத்தில் நம் கண்களில் உள்ள நீர் பனிக்கட்டியாகிவிடும், பார்வை தெரியாது. பற்களில் பிளவுகள் ஏற்பட்டுவிடும். சென்னையி்ன் இந்த சூடான வெப்பநிலை எனக்கு புத்துணர்ச்சியைத் தந்துள்ளது.

அண்டார்டிகாவிலும் ஆர்ட்டிக் பகுதிகளில் பனி மலைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதை நான் கண்கூடாகவே பார்த்துள்ளேன். சென்னையில் நீங்கள் ஓட்டும் கார்கள், பைக்குகளில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைட் துருவப் பனியை உருக்குவதை நீ்ங்கள் உணர வேண்டும்.

இந்த பனி உருகலால் உலகின் கடல் மட்டம் வி்ஞ்ஞானிகள் கூறியதை விட மிக வேகமாகவே உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் 2 மீட்டர் உயர்ந்தால் போதும், அது உலகின் பல்வேறு பகுதிகளை நீரி்ல் மூழ்கடித்துவிடும். இது மிக வேகமாகவே நடக்கப் போகிறது என்ற அபாயத்தை உணர்த்தவே நான் பனிப் பகுதிகளை விட்டுவிட்டு உலக நாடுகளை சுற்றி வந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளேன்.

இந்த சுற்றுச்சூழல் பேராபத்தை தவிர்க்க ஒரே வழி சூரிய மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் தான். இல்லாவிட்டால் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து நாம் தயாரிக்கும் எரிசக்தியே நம்மை அழித்துவிடும் என்கிறார்.

தனது 33 வயதிலேயே வட துருவத்தையும் தென் துருவத்தையும் முழுக்க முழுக்க நடந்தே கடந்த மனிதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராபர்ட் சவான் 1984-ம் ஆண்டு தென்துருவத்தில் 70 நாட்கள் 900 மைல் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் தனது துருவப் பகுதி ஆராய்ச்சிக்காக டாக்சி ஓட்டியும், குடோன்களில் வேலைபார்த்தும் பணம் சேர்த்துள்ளார்.

கடும் போராட்டத்துக்குப் பின் ஒரு வழியாக சில சுற்றுச்சூழல் அமைப்புகளும் கைகொடுக்கவே 1984ம் ஆண்டு சதர்ன் குவெஸ்ட் என்ற கப்பலை வாடகைக்கு எடு்த்துக் கொண்டு 3 மாதம் 15,000 மைல்கள் பயணித்து அண்டார்டிகாவை அடைந்துள்ளார். இவருடன் இரு நண்பர்களும் பயணித்தனர்.

அண்டார்டிகாவில் இந்த மூவரும் 1,400 கி.மீ. தூரம் நடந்துள்ளனர். வயர்லெஸ் உதவியோ, அவசரகால உதவியோ இல்லாமல் இவர்கள் 70 நாட்கள் நடந்துள்ளனர்.

இந்தப் பயணத்தின்போது இவர்களின் கண்களின் நிறம் மாறியுள்ளது. இதற்கான காரணத்தை அவர்கள் கண்டறிந்தபோது அதிர்ந்து போயினராம்.

இவர்களது கண்களி்ல் உள்ள நிறமிகள் நிறமிழக்கக் காரணம், அண்டார்டிகா பகுதியின் மேலே வளி மண்டலத்தில் ஓசோன் படத்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக ஊடுருவிய சூரியக் கதி்ர்கள் என்று தெரியவந்ததாம்.

இந்தப் பயணத்துக்குப் பின்னர் ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு 8 நிபுணர்களுடன் பயணித்தார் ஸ்வான். அங்கு 56 நாட்கள் சுமார் 1,000 கி.மீ. நடந்து ஆய்வுகளை மேற்கொண்டபோது பனிக் கட்டிகள் மிக வேகமாக உருகுவதைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.

உலகின் வெப்பமயமாதலுக்கு வளர்ந்த நாடுகள் இதுவரை செய்த தவறுகளே காரணம் என்று கூறும் ஸ்வான், அதே தவறை இந்தியாவும் சீனாவும் செய்துவிடக் கூடாது. வேகமாக பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான எரிசக்தி சூரியனிடமிருந்தும் காற்றாலைகளில் இருந்தும் வந்தால், உலகம் தப்பும் என்கிறார்.


எல்லோரும் வாழ்வோம் !
நன்றாக வாழ்வோம் !!
ஒன்றாக வாழ்வோம் !!!

'ஜில்லா'- நடப்பது என்ன?




'ஜில்லா' படத்தின் சென்சார் டிசமபர்.30-ம் தேதி, டிரெய்லர் டிசம்பர் 31-ம் தேதி என முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

விஜய், மோகன்லால், காஜல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஜில்லா' படத்தினை நேசன் இயக்கியிருக்கிறார். ஆர்.பி.செளத்ரி தயாரிக்க, இமான் இசையமைத்து இருக்கிறார்.

பாடல் வெளியீடு முடிந்தாலும், படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் டீஸர் அல்லது டிரெய்லர் என எதுவுமே வெளியிடாமல் இருந்தது படக்குழு. இதனால், படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகுமா என்ற கேள்வி நிலவியது.

இத்தகவல்கள் குறித்து 'ஜில்லா' படக்குழுவினரைத் தொடர்பு கொண்டபோது, "ஜனவரி 10ம் தேதி 'வீரம்' படத்துடன் 'ஜில்லா' வெளியாவது உறுதி. படத்தின் இறுதிகட்ட பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறோம்.

டிசம்பர் 30-ம் தேதி படத்தினை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்ட இருக்கிறோம். அதற்கு மறுநாள், டிசம்பர் 31ம் தேதி படத்தின் டிரெய்லர் YOUTUBE தளத்தில் வெளியாகும். அதனைத் தொடர்ந்து படத்தினை பிரமாண்ட விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம்" என்றனர்.

படத்தின் டைட்டில் கார்ட்டில் விஜய் பெயருக்கு முன்பாக மோகன்லால் பெயர்தான் காட்ட இருக்கிறார்கள். மோகன்லால் பெயர்தான் முதலில் வர வேண்டும். அவர் மிகப் பெரிய ஸ்டார் என்று விஜய் கூறிவிட்டதால் இம்முடிவை எடுத்திருக்கிறார்கள்

உதடு ஒட்டாத குறள்(கள்) ....?




யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் -341


         ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. (திரு மு.வ உரை)

   
   
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். – 489



         கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும். (திரு மு.வ உரை)

செல்போன் சந்தேகங்களுக்கு தீர்வு தரும் செயலி..?




செல்போன் என்று வாங்கிவிட்டால் அதன் செயல்பாட்டில் அடிக்கடிசந்தேகங்களும் பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். அதிலும் ஸ்மார்ட் போன்கள்என்றால் கேட்கவே வேண்டாம். இது போன்ற நேரங்களில் கைகளை பிசைந்து கொண்டும்நிற்க வேண்டாம். சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு பதில் பெறமுடியாமல் அல்லாடவும் வேண்டாம்.


ஒரே ஒரு குறுஞ்செய்தியில் உங்கள் செல்போன் சார்ந்த பிரச்சனைக்கான தீர்வைஉரிய நிபுணர்களிடம் இருந்து தெரிந்து கொண்டு விடலாம் :டிவைஸ் ஹலெப் செயலிஇந்த நம்பிக்கையை தான் அளிக்கிறது. மும்பையை சேர்ந்த ஹாப்டிக் எனும்நிறுவனத்தால் உருவாகக்ப்பட்டுள்ள செயலி இது. ஆப்பிலின் ஐபோன் மற்றும்ஆண்ட்ய்ராய்டில் செயல்படக்கூடிய இந்த செயலியின் வழியே உங்கள் செல்போன்பிரச்ச்னைகளை குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கலாம். இந்த சந்தேகங்களுக்கானதீர்வுகளை தொடர்புடைய நிபுணர்கள் குறுஞ்செய்தி வழியாகவே வழங்குவார்கள்.


செல்போன்பயன்பாட்டில் கில்லாடிகளாக இருக்கும் நபர்கள் மற்றும் செல்போன்நிறுவனங்களிலேயே பணியாற்றியவர்களை சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும்நிபுணர்களாக இணைத்து கொண்டிருப்பதாக ஹாப்டிக் சொல்கிறது.


செல்போனில்நாம் அதிகம் பயன்படுத்துவது குறுஞ்செய்தி வசதியை தான். ஆனாலும் கூடசெல்போனில் ஒரு பிரச்ச்னை என்றால் யாருக்காவது போன் செய்து அல்லாடவேண்டியிருக்கிறது. இந்த நிலையை மாற்றி செல்போன் சந்தேகங்களுக்குகுறுஞ்செய்தி வடிவிலேயே எளிதான பதில் பெற உதவும் டிவைஸ் ஹெல்ப் செயலியைமுதலில் உருவாக்கியிருப்பதாக ஹாப்டிக் தனது இணையதளத்தில்குறிப்பிட்டுள்ளது. அடுத்த கட்டமாக செயலி மூலமே அனைத்து தொழில்நுட்பஉதவிகளையும் பெற வைக்கும் திட்டம் இருக்கிறதாம். டிவைஸ் ஹெல்ப் ஆர்ம்பம்தான் என்கிறது ஹாப்டிக்.

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்




தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்

 எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.


ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.

கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.

மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.

தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.


பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.

வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.


அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.


இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.

பழைய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.


மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.


சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.

பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.

உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.

ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.

துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.

நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.

தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.

ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.

நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.

மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.

பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.

நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.

தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.

மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.

பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.

மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விட்டு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.

நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.

குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.


நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.

எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

யூடியூப் வழங்கும் புதிய வசதி....? அற்புதம்!




தனிநபர் தொலைகாட்சி பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது வரை யோசிக்கவிட்டாலும் இனி யோசியுங்கள். ஏனெனில் தனிநபர் தொலைகாட்சி நடத்துவது மிகவும் சுலபமானது. அதை நீங்களும் கூட செய்யலாம். எப்படி என்று ஆர்வத்துடன் கேட்கிறீர்களா? பிரபல வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் இதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது.


இணைய உலகில் ஸ்டீரிமிங் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பட்டனை தட்டியதும் குழாயில் இருந்து தண்ணீர் பாய்வது போல ஆடியோ அல்லது விடியோ கோப்புக்கள் கிளிக் செய்ததும் ஒளிபரப்பாகத்துவங்கி விடுவதை தான் ஸ்டீரிமிங் என்கின்றனர். ஸ்டீரிமிங் செய்யப்படும் போது கோப்புகளை டவுண்லோடு செய்யத்தேவையில்லை. ஒரு நிகழ்ச்சி நடக்கும் போதே ஸ்ட்டிர்மிங் செய்யப்பட்டால் அதை நேரடியாகவே பார்த்தோ கேட்டோ ரசிக்கலாம். இதற்கு லைவ் ஸ்டீரிமிங் என்று பெயர். தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்புக்கு நிகரானது.


இப்போது யூடியூப்பிற்கு வருவோம். யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து ரசிப்பது போலவே நாமும் கூ ட அதில் சுலபமாக வீடியோக்களை பதிவேற்றலாம். விரும்பினால் யூடியூப்பில் ஒரு கணக்கு துவங்கி நமக்கான சேனலையும் அமைத்து கொள்ளலாம். இந்த சேனல் வசதியையே கூட நமக்கான தொலைக்காட்சி சேனல் என்று சொல்லலாம். பலர் வெற்றிகரமாக இப்படி யூடியூப்பில் சொந்த சேனை வைத்திருக்கின்றனர். வீடீயோ வலைப்பதிவாளர்களும் கூட இருக்கின்றனர்.


ஆனால் இந்த சேனலில் என்ன பிரச்சனை என்றால் நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க செய்ய முடியாது. ஏற்கனவே ஒளிப்பதிவு செய்த நிகழ்ச்சிகளை வீடியோ கோப்பாக பதிவேற்றி பார்க்க செய்யலாம்.
இதற்கு மாறாக நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க செய்ய முடிந்தால் எப்படி இருக்கும் எனும் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் யூடியூப் சில மாதங்களுக்கு முன் நேரடி ஒளிபரப்பு வசதியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நிகழ்ச்சிகளை அவை நடக்கும் போதே யூடியூப்பில் பார்க்க செய்வது சாத்தியம். முதலில் இந்த வசதி அதிக சந்தாதாரர்களை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு குறைந்தது ஆயிரம் சந்தாதாரர்களாவது இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.


இப்போது யூடியூப்பில் சரி பார்க்கப்பட்ட கணக்கு உள்ள யாரும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, உங்களிடம் யூடியூப் கணக்கு இருந்தால் போதும் நீங்களும் கூட யூடியூப்பில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப துவங்கிவிடலாம். அது மட்டும் அல்ல கூகுல் ஹாங்கவுட்ஸ் சேவையையும் இதில் இணைக்க முடியும். எனவே ஹாங்கவுட்ஸ் பயன்படுத்துவர்கள் அதில் பகிர்ந்து கொள்ளும் வீடியோ தகவலை யூடியூப்பிலும் ஒருங்கிணைக்க முடியும். மேலும் இப்படி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பது போன்ற புள்ளி விவரங்களையும் யூடியூப்பே தருகின்றது.


வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இசைக்குழு போன்றவை இந்த நேரடி ஒளிபரப்பு வசதியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களோடு மேலும் துடிப்பான வழியில் தொடர்பு கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. ஏன் தனிநப்ர்களும் கூட இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
திறமையும் ஆர்வாமும் இருந்தால் நீங்களே நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பவும் செய்யலாம். அது பார்வையாளர்களை காவருமானால் உங்களுக்கான தனிநபர் தொலைகாட்சி தாயாராகிவிட்டது என பொருள். யார் கண்டது யூடியூப்பில் இத்தனை லட்சம் பேர் பார்த்த வீடியோ என்று தானே இப்போது பெசுகிறோம். இனி வரும் காலத்தில் இத்தனை லட்சம் பார்த்து ரசித்த நேரடி நிகழ்ச்சி என்று பேசப்படலாம்.

கூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை




கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது. அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு.


அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.இதன் முதலாளி லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி பன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!)


எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள்.


பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர்.


ஒன்று போட்டு நூறு சைபர்.


எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள்.


 ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

பற்றில்லாத பாஸ்வேர்டு செய்வோம்....?




இந்து மதத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் அதன் பற்றில்லாத தன்மை கொள்கை பாஸ்வேர்டு விஷயத்தில் பின்பற்றத்தக்கது. ஆய்வாளர்கள் அப்படி தான் சொல்கின்றனர். அதாவது பற்றில்லாத தன்மையுடன் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும் என்கின்றனர்.

பாஸ்வேர்டில் என்ன பற்றும் பற்றில்லா தன்மையும் என்று கேட்கலாம். இதற்கு பதில் அறியும் முன் ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு புதிய பாஸ்வேர்டு ஒன்றை உருவாக்க பாருங்கள். நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டு எதுவாக இருதாலும் , அநேகமாக அது ஏதோ ஒரு விதத்தில் உங்களை சார்ந்ததாகவே இருக்கும். ஒன்று உங்கள் பெயர் அல்லது உங்கள் பிறந்த நாள் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களின் பெயர் … இப்படி உங்களை சார்ந்த விஷயங்கள் சார்ந்தே நீங்கள் பாஸ்வேர்டுக்கான எழுத்துக்களை தேர்வு செய்திருப்பீர்கள்.

இது இயல்பானது தான். தேர்வு செய்யப்பட்ட பாஸ்வேர்டு நினைவில் நிற்க பலரும் கையாளும் வழி இது. ஆனால் பாஸ்வேர்டு திருடர்களும் இவற்றை அறிந்திருப்பதா ல் , ஒருவரது தனிப்பட்ட விவரங்களை கொண்டு அவர்கள் பாஸ்வேர்டு என்னவாக இருக்கும் என யூகித்துவிட முடியும்.

இதை தடுக்க எளிய வழி இருக்கிறது. பாஸ்வேர்டுக்காக யோசிக்கும் போது உங்களை மறந்து விடுங்கள் ! உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் நெருக்காமானவர்களின் விவரங்களை மனதில் கொள்ளாமல் யோசித்தீர்கள் என்றால் உருவாகும் பாஸ்வேர்டு உங்களோடு பற்றில்லாததாக இருக்கும். அப்போது அது களவாடப்பட முடியாததாகவும் இருக்கும்.

சும்மாயில்லை, தாக்காளர்கள் களவாடி வெளியிட்ட லட்சக்கணக்கான பாஸ்வேர்டுகளை ஆய்வு செய்து இந்த பற்றில்லாத வழியை கண்டுபிடித்துள்ளனர். பகிரங்கமான பயனாளிகளின் பாஸ்வேர்டுகளை பார்க்கும் போது அவற்றில் பளிச்சிடும் பொதுத்தன்மை அடிப்படையில் , பொதுவாக பாஸ்வேர்டு உருவாக்கத்தில் பெரும்பாலானோர் கடைபிடிக்கும் வழிகளை கண்டறிந்துள்ளனர்.

பெர் தோர்சியம் எனும் ஆய்வாளர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் முன்வைக்கும் பாஸ்வேர்டு பொது தன்மைகள் சில ; ஆண்கள் பாஸ்வேர்டு உருவாக்கத்தில் பரவலான வேறுபாட்டை நாடுகின்றனர். பெண்கள் நீளமான பாஸ்வேர்டை நாடுகின்றனர்.

சிவப்பு முடி கொண்ட பெண்கள் மிகச்சிறந்த பாஸ்வேர்டை உருவாக்குகின்றனர். தாடி வளர்த்த தலைகலைந்த ஆண்கள் மோசமான பாஸ்வேர்டுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர்.

எப்படி இருக்கிறது ஆய்வு !

தெரியுமா உங்களுக்கு?





1. குறுந்தகடு(சி.டி) செயல்படும் விதம்:

சிடிக்கள் என அழைக்கப்படும் காம்பாக்ட் டிஸ்க்குகள் அதில் பதிந்துள்ள தகவல்களை நடு மையத்திலிருந்து படிக்கத் தொடங்கி விளிம்பில் முடிக்கின்றன. இது மியூசிக் ரெகார்டுகளுக்கு எதிரான வழியாகும். மியூசிக் ரெகார்டுகள் விளிம்பிலிருந்து தொடங்கி நடுப்பாகம் செல்கின்றன.


 2. பாராசிடமால் மாத்திரையின் மறுபக்கம்:

மழை, குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சலினால் உடலின் வெப்ப நிலை சராசரிக்கும் மிக அதிகமாகும் போது, "இழுப்பு' போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.காய்ச்சல் வெப்ப நிலையை உடனடியாகக் குறைக்க, பாராசிட்டமால் உதவுகிறது. ஆனால் 18 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அடிக்கடி பாராசிட்டமால் கொடுத்தால் ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது என, லண்டனில் நடந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 6 வயது குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராயும் போது, அவர்களுக்கு ஒன்றரை வயதுக்குள் அதிகளவில் பாராசிட்டமால் கொடுத்திருந்தது தெரிய வந்துள்ளது. குழந்தைகள் நல மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, பாராசிட்டமாலைப் பயன் படுத்த வேண்டும். அவர்கள் நிர்ணயித்த அளவு மட்டுமே தர வேண்டும். பெற்றோர்கள் தன்னிச்சையாக பாராசிட்டமாலை குழந்தை களுக்கு தரக்கூடாது.



 3. கைபேசி தொலைந்தால் கண்டுபிடிக்க:

ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். 



4.குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள்:


இந்தியாவில் ஓராண்டில் பிறக்கும் குழந்தைகளில் 2.5 கோடி பேர் ஏதாவது ஒரு குறையுடன் பிறக்கின்றனர். தமிழகத்தில் ஆண்டுக்கு 11.5 லட்சம் குழந்தைகள் எடைக்குறைவு உட்பட பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கிறது. இந்தியாவில் 5 சதவிகிதம் பேர் டிஸ்லெக்சியா, ஆட்டிசம் போன்ற அரிய வகையிலான குறைகளுடன் பிறக்கின்றனர்.


5. 'ஆண்டி பயாடிக்’ மாத்திரை ஆபத்து!:

'ஆண்டி பயாடிக்’ மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உடலில் உள்ள `பி காம்ப்ளக்ஸ்’ குறைகிறது. அதைத்தொடர்ந்து வாய் நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. தலைவலியிலும், காய்ச்சலிலும் பல வகைகள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டு, அது எந்த வகை என்று தெரியாமல் ஒரே மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவது தவறு. இந்த பழக்கம் அதிகமானால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.


6. அழிவின் விளிம்பில் தேசிய விலங்கு புலி:

இந்தியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை, தினமும் ஒரு புலி வீதம் எங்கோ ஒரு மூலையில் கொல்லப்பட்டது. இந்த வனவிலங்கு கழகம் ஒருமுறை கூட, கூடி சிந்திக்காததால் இதை தடுக்க முடியவில்லை. இவற்றின் தோல் சீனர்களின் வீடுகளை அலங்கரிக்கிறது. எலும்புகள் சீன மருந்துவத்தில் முக்கிய இடத்தை பெறுகின்றன. சீனர்கள் அதிகம் விலை கொடுப்பதால், இந்தியாவில் புலிகளை கொன்று ஏற்றுமதி செய்வது அதிகரித்தது. இப்படி புலிகளின் எண்ணிக்கை மிக குறைந்து போய் கொண்டிருப்பது, இந்திய அரசின் கவனத்திற்கு வந்தது. பின் போர் கால அடிப்படையில் புலிகளை காப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

கம்ப்யூட்டர் மேதைக்கு அரச மன்னிப்பு....?



ஒரு வரலாற்று தவறு அரச மன்னிப்பு மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது. கணிணி யுகத்தின் முன்னோடியும் , இரண்டாம் உலகபோரில் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை காக்க தனது கணிணி திறமை மூலம் உதவியவருமான ஆலன் டியிரிங் மீதான களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர் என் தண்டிக்கப்பட்ட டியூரிங்கிற்கு பிரிட்டன் மகாரணியின் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆலன் டியூரிங் கண்ணி யுகத்தின் முன்னோடி. கணிதப்புலி. அந்த காலத்து தாக்காளர். அப்போதே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைப்பது பற்றி யோசித்தவர். ஆரம்ப கால கப்யூட்டர்களுக்கான நிரல்களை உருவாக்கியவர். இன்று கம்ப்யூட்டர் , சூப்பர் கம்ப்யூட்டர் என்று எல்லாம் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களுக்காக அவருக்கு உலகம் நன்றி கடன் பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஹிட்லரின் கை ஓங்கியிருந்த இரண்டாம் உலகப்போரின் போது அவரது பங்களிப்பே நேச நாடுகளுக்கு வெற்றியை தேடித்தந்ததோடு ஆயிரக்கணக்கானோரின் உயிர்களையும் காப்பாற்றியது. எனியாக் கம்யூட்டர் மூலம் ஹிட்லர் அனுப்பிய ரகசிய செய்திகளை டியூரிங் இடைமறித்து அவற்றின் சங்கேத குறியீடுகளை உடைத்து புரிய வைத்தார். இதற்காக அவர் பாம்ப் ( Bombe) எனும் பெயரில் கம்ப்யூட்டர் குறியீடுகளை புரிந்து கொள்வதற்கான கம்ப்யூட்டரை உருவாக்கினார்.

டியூரிங் அந்த காலத்திலேயே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைத்து செய்றகை மூளையை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இயந்திர அறிவிற்காக அவர் உருவாக்கிய பரிசோதனை  டியூரிங் சோதனை என்று பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. கம்ப்யூட்டர் துறையின் ஈடு இணையில்லாத மேதை என்று கொண்டாடப்படும் டியூரிங் மீது ஒரு களங்கமும் இருந்தது. டியூரிங் ஓரினச்சேர்க்கை பழக்கம் கொண்டிருந்தவர். அவரது காலத்தில் அது குற்றமாக கருதப்பட்டதால் அவர் தண்டிகப்பட்டார். ரசாயணம் மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டார். 1952 ல் இந்த அவமானம் அவருக்கு நேர்ந்தது. இதைவிட மோசமாக அவர் மேற்கொண்டிருந்த ஆய்வில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் மனம் உடைந்து 1954 ல் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

டியூரிங் மறைவுக்கு பிறகு கம்ப்யூட்டர் துறை எங்கேயோ வளர்ந்து வந்துவிட்டது. ஆனால் இந்த வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானது . அவரது மேதமையை கொண்டாடி வருபவர்கள் அவர் மீதான களங்கம் துடைக்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்தனர். 2009 ஆம் ஆண்டு டியூரிங் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு மன்னிப்பு வழஙக்ப்பட வேண்டும் எனும் கோரிக்கை இணைய விண்ணப்பமாக முன் வைக்கப்பட்டது. இதற்கு பல்லாயிரக்கனக்கானோர் ஆதரவு தெரிவித்தனர். அப்போது பிரிட்டன் பிரதமராக இருந்த காடன் பிரவுன் , அர்சு சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொண்டு டியூரிங் தண்டிக்கப்பட்டது தவறு என்று தெரிவித்தார். 2011 ம் ஆண்டு டியூடிங்கிறகு மன்னிப்பு வழங்க கோரி மீண்டும் இணையா கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கும் ஆயிரக்கணக்கில் ஆதரவு குவிந்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது டியூரிங்கிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் கிறிஸ் கிரேலிங் வேண்டுகோளை ஏற்று முறைப்படி இதற்கான உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளது. ஒரு மேதை மீதான சரித்திர களங்கம் துடைக்கப்பட்டுள்ளது.

இமெயில் சந்தாவில் இருந்து வெளியேற எளிய வழி...?




கட்டுரைகளையோ , செய்திகளையோ இமெயில் பெற சம்மதம் தெரிவிப்பது சுலபமானது தான். இப்படி இமெயில் வழியே சந்தாதாரவது தேவையானது தான். இமெயிலேயே தேவையான தகவல் வந்துவிடுவதால் தனியே குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதும் இல்லை. அந்த தளங்களில் புதிய தகவல் அல்லது கட்டுரைகளை தவற விடும் வாய்ப்பும் இல்லை.

இமெயிலில் சந்தாதாரவது சுலபமாகவும் பயனுள்ளதாக இருந்தாலும் சில நேரங்களில் இமெயில்ல் வரும் தகவல்கள் சுமையாகவோ , இடைஞ்சலாகவோ மாறிவிடலாம். திடிரென முகவரி பெட்டியில் மெயில்களாக குவிந்து அவற்றை படிக்க முடியாமல் திண்டாடும் போது இமெயில் சந்தாக்களில் வரும் தகவல்கள் அதிருப்தியை தரலாம்.

ஆனால் நல்ல வேளையாக இமெயிலில் புதிய தகவல்களை பெற சம்மதம் தெரிவிப்பது போலவே, இனி தேவையில்லை என்று சொல்வதும் சுலபமானது தான். இதற்காகவே சந்தா விலக்கல் (அன் சப்ஸ்கிரைப் ) வசதி இருக்கிறது. இமெயில் செய்தியில் எந்த இடத்தில் இந்த வசதிக்கான ஐகான் இருக்கிறது என் பார்த்து கிளிக் செய்தால் மெயில் வரத்து நின்று போகும். இருந்தாலும் பல நேரங்களில் இந்த சந்தா விலக்கல் வசதி எங்கிருக்கிறது என்று தெரியாமலும் திண்டாடலாம். அது மட்டும் அல்லாமால் மெயிலை திறந்து அந்த வசதியை தேர்வு செய்து கிளிக் செய்வதற்கு அலுப்பாக இருக்கலாம். சந்தா சேவையே ஒரு வகையில் சோம்பலுக்கான தீர்வு தானே. அதே சோம்பல் சந்தா வேண்டாம் எனும் வசதியை தேடி கிளிக் செய்யவும் தடையாக இருக்கலாம்.

எது எப்படியோ, இமெயில் சந்தாவில் இருந்து விலகுவதற்கான சுலபமான வழியை ரிமூவ் மீ இணையதளம் வழங்குகிறது. இமெயில் முகவரி பெட்டியை ஒரே கிளிக்கில் தேவையில்லாத மெயில்களில் இருந்து விடுவிக்க வழி செய்வதாக சொல்லும் இந்த தளம், இனியும் வேண்டாம் என நினைக்கும் சந்தாவில் இருந்து விடுபட சுலபமான வழியை முன்வைக்கிறது. அதுவும் எப்படி தெரியுமா? குறிப்பிட்ட அந்த சேவையில் மெயிலை திறக்கமாலேயே ஒரே கிளிக்கில் அதற்கு குட்பை சொல்ல வைக்கிறது. எப்படி என்றால் , முகவரி பெட்டியில் அந்த மெயிலுக்கு அருகிலேயே அதற்கான வசதியை காண்பிக்கப்படுகிறது. அதில் ஒரு கிளிக் ,அவ்வளவு தன இனி அந்த மெயில் வராது.

இமெயில் சந்தாக்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு நிச்சயம் ரிமூவ் மீ பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதற்கு முன் இதை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

சந்தா விலக்க சேவையுடன் , இமெயில் சர்பார்ப்பு சேவையையும் இந்த தளம் வழங்குகிறது . அதாவது குறிப்பிட்ட இமெயில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து தான் வந்திருக்கிறதா இல்லை ஏதேனும் விளம்பர அல்லது ஏமாற்று மெயிலா என்பதை இது உறுதி செய்கிறது.உதாரணமாக பேஸ்புக்கில் இருந்து ஒரு அப்டேட் வந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த மெயிலுக்கு அருகே அந்த நிறுவன லோகோ தோன்றுவதை பார்த்து பேஸ்புக் மெயில் தான் என உறுதி கொள்ளலாம்.

ரிமூவ் மீ சேவையை வழங்குவது பவர் இன்பாக்ஸ் எனும் நிறுவனம். பவர் இன் பாகஸ் நிறுவங்களின் இமெயில் தகவல்களை மேலும் சிறந்த வழியில் பெற வழி செய்கிறது. கிட்டத்தட்ட இதுவும் இமெயிலுக்கான சந்தா சேவை போல் தான். இமெயில் சந்தா சேவை வழங்கும் ஒரு நிறுவனமே சந்தா விடுபடல்சேவை வழங்குவது அழகான முரண் தான். இது ஒருபுறம் இருக்கட்டும், பவர் இன்பாக்ஸ் சேவையை பயன்படுத்தினால் பேஸ்புக் மறும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகளை உங்கள் இமெயில் முகவரி பெட்டியில் இருந்தே இயக்கலாம். அதாவது , பேஸ்புக் அல்லது டிவிட்டர் சேவைக்கான வசதி மெயிலுக்கு அருகே தனியே தோன்றுகிறது. ஆக மெயிலில் இருந்து விலகிச்செல்லாமலேயே பேஸ்புக்கை அப்டேட்டை சரி பார்க்கலாம்.

இணையதள முகவரி; http://ub.powerinbox.com/removeme/

மௌன நாயகனாக நடிக்கும் தனுஷ்




ராஞ்ச்னாவின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த இந்திப் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.பால்கி இயக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடி கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசன்.மேலும், இப்படத்தில் தனுஷுடன் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பும் நடிக்கிறார்.

           காதல் கதைகளை உணர்ச்சிப் பூர்வமாக தரும் பால்கியின் இப்படமும் காதலை அடிப்படையாகக் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம் .மேலும் இப்படத்தில் வாய் பேச முடியாத இளைஞராக தனுஷ் நடிப்பதாகவும், மிகச் சிறந்த நடிகனாக வேண்டும் என கனவு காணும் தனுஷிற்கு நடிகர் அமிதாப் உதவுவதாகவும் கதையோட்டம் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீக்கிரம் தூங்கும் குழந்தை ஸ்லிம்மாக இருக்கும்




பொதுவாக குழந்தைகளை இரவில் தூங்க வைப்பதுதான் பெற்றோரின் மிகக் கடினமான பணியாக இருக்கும். இப்போது அதற்கு இன்னும் ஒரு முக்கியக் காரணம் வந்துவிட்டது. அதாவது, இரவில் சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதில்லை என்கிறது ஒரு ஆய்வு முடிவு.

இரவு 7 மணிக்குள் உணவை முடித்துவிட்டு, சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள். அதே சமயம் இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்து, காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இது எவ்வாறு ஏற்படுகிறது என்றால், இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்தாலும், குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை. அதே சமயம், இரவு உணவு முடிந்த பிறகு அதிக நேரம் கண்விழித்திருக்கும் குழந்தை உறங்கும் முன்பு ஏற்படும் பசி காரணமாக ஏதேனும் ஒரு நொறுக்குத் தீணியை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் காலையில் தாமதமாக எழுவதால், பகல் பொழுதில் இவர்கள் முழித்திருக்கும் நேரம் குறைவதால் விளையாடும் நேரமும் குறைகிறது. இதனால் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதாவது, சீக்கிரம் தூங்கச் சென்று, சீக்கிரமாக எழுந்திருக்கும் குழந்தைகளுக்கும், தாமதமாக தூங்கச் சென்று காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளும் ஒரே அளவில்தான் தூங்குகிறார்கள் என்றாலும், தாமதமாகத் தூங்கச் செல்லும் குழந்தைகளின் உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் உடல் பருமனுக்குக் காரணமாக அமைகிறது.

மேலும், மிகக் குறைவான உறக்கம் உள்ள குழந்தைகளுக்கு ஏராளமான உடல் பிரச்சினைகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டுச் சூழல் தான் குழந்தைகளின் உறக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. பெற்றோர் சரியான நேரத்தில் தூங்கி, அதிகாலையில் எழும் பழக்கத்தைக் கடைபிடித்தால் குழந்தைகளும் சரியான நேரத்தில் தூங்குவார்கள். எனவே குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு உறக்கமும் இன்றியமையாதது என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

நகைச்சுவை எழுத்தாளர் கடுகு....?




புத்தாண்டு என்றதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காலண்டர். அடுத்தது டைரி.. டைரி எழுதும் பழக்கம் இருப்போரும், சில வரவு செலவு கணக்குகளை எழுதுவோரும் டைரியை வாங்கி வைத்துக் கொள்வார்கள். இல்லை என்றால், அலுவலகத்திலோ, நண்பர்களோ டயரியை கொடுப்பார்கள் என்று காத்திருப்பார்கள்.

எல்லோரும் டைரி எழுதினால், இங்கே நகைச்சுவை எழுத்தாளர் கடுகு, டைரி பற்றி ஒரு நகைச்சுவை கட்டுரையே எழுதிவிட்டார்.

டைரியை பற்றி  “கமலாவும்… நானும்’ என்ற நூலில் “டைரியும் நானும்’ என்ற கட்டுரையில் நகைச்சுவை எழுத்தாளர் “கடுகு’ எழுதிய ஒரு சிலவற்றை காணலாம்.

எனக்கு டயரி எழுதும் பழக்கம் கிடையாது. அதற்கு முதல் காரணம் சோம்பேறித்தனம். இரண்டாவது, நாம் மறக்க விரும்பும் விஷயங்களை எழுதித் தொலைப்போம். எப்போதாவது டைரியைப் புரட்டினால் அதுதான் முதலில் கண்ணில் படும்! அந்த விஷயத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடி பாடாய்ப்படுத்தும்!

என்னைக் கேட்டால் டைரிகளில் 80 சதவீதம் புதுக்கருக்கு அழியாமல் இன்னும் பல வருஷங்கள் பலர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும். பத்து சதவீத டைரிகள் முதல் இரண்டு பக்கம் மட்டும் எழுதப்பட்டு (இன்று புத்தாண்டு. புது வருஷம் பிறந்தது!) இருக்கும். மீதி பத்து சதவீத டைரிகள் பால் கணக்கு, தயிர்க் கணக்கு, நோட்டுப் புத்தகமாக உபயோகப்படுத்தப்படும். எல்லாருமா அனந்தரங்கம் பிள்ளை மாதிரியோ, சாமுவேல் பீப்ஸ் மாதிரியோ டைரி எழுத முடியும்?

சாமுவேல் பீப்ஸ் டைரி சுமார் ஒன்பதரை வருடக் குறிப்புகள். கிட்டத்தட்ட 15 லட்சம் வார்த்தைகள்! தனது தனிப்பட்ட எண்ணங்களை யாரும் படித்துவிடக் கூடாது என்று கருதி “டேக்கி கிராஃபி’ என்ற ஏறக்குறைய உலகமே மறந்துவிட்ட சுருக்கெழுத்து முறையில் எழுதியிருந்தார். அப்படியும் 100 வருஷங்களுக்குப் பிறகு பெரும் முயற்சி எடுத்து அதையும் படித்துவிட்டார்கள். எனக்கு டேக்கி கிராஃபி தெரியாது. நான் டைரி எழுதாததற்கு அதுவும் ஒரு காரணம்.

இன்னொரு அல்ப காரணமும் உண்டு. உதாரணமாக டைரியில் குப்புசாமிக்கு இன்று 5 ரூபாய் கடன் கொடுத்தேன் என்று எழுதியிருந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பத்து வருஷம் கழித்து இதைப் பார்த்தால் யார் இந்தக் குப்புசாமி? அவருக்கு எதற்கு 5 ரூபாய் கடன் கொடுத்தேன்? உண்மையிலேயே வெறும் 5 ரூபாய்தானா அல்லது ஐயாயிரம் என்பதைச் சுருக்கி “ஐந்து’ என்று எழுதினேனா? என்பது போன்ற பல கேள்விகளால் தலையைப் பிய்த்துக் கொள்ள நேரிடும்!

இவையெல்லாம் போகட்டும் என்று விட்டுவிட்டால்கூட, கொடுத்த பணத்தை குப்புசாமி திருப்பிக் கொடுத்தானா, மறந்து விட்டோமா? பணம் கோவிந்தாதானா? என்று பல கேள்விகள் மண்டையைக் குடையும்! எதற்கு இத்தனை தொல்லை? டைரி எழுதாவிட்டால் ஒரு வம்பும் இல்லையே! அதனால்தான் நான் டைரி எழுதுவதில்லை! இது ஒரு சமூக சேவை என்று உங்களில் சிலர் சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும்! என முடித்திருந்தார்.

ஜாவாஸ்க்ரிப்ட் மாயாஜாலம் உங்களுக்காக..




n4ʞƃıuıuɐʞ sı sıɥʇ ıɥ இப்படி தலைகீழாக பேர் அடிச்சி பார்க்கனுமா? வாங்க!
பயப்படாதீங்க! பயப்படாதீங்க! உங்க கம்ப்யூட்டரில் வைரஸ் எதுவும் வந்து விடவில்லை.

எல்லாம் ஜாவாஸ்க்ரிப்ட் மாயாஜாலம்.

இந்த வெப்சைட் http://www.sevenwires.com/play/UpsideDownLetters.html போங்க. ஆங்கிலத்தில் நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்களை தலைகீழாக மாற்றி கொடுக்கும்.

Cut and Paste பண்ணிக்குங்க.

சூரியின் பெயரால் சூப்பர் ஸ்டாருக்கு அவதூறு...




டுவிட்டர் கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கொமடி நடிகர் சூரி.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம்பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’.இந்தப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினி ‘நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப் பட வெற்றிக்கு என் வாழ்த்துகள்” என்று மனம் விட்டு பாராட்டி ஒரு வாழ்த்துக் கடிதத்தையும் வெளியிட்டார். இது செய்தியாக பத்திரிக்கைகளின் விளம்பரத்திலும் இடம் பெற்றது.இந்தக்கடிதம் நடிகர் சூரிக்கு தேவையில்லாத பிரச்சனையை கிளப்பிவிட்டுள்ளது. இந்தப்படம் பற்றி டுவிட்டரில், “ஒரு பிரபலம், ஒரு படம் ஆஹா ஓஹோன்னு இருக்குதுன்ன்னு சொன்னாரு அப்படிங்கிற்துக்காக அந்தப்படங்களை பார்க்காதீங்க, சில பேரு மொக்கைப்படங்களுக்கு கூட நல்ல விமர்சனம் கொடுப்பாங்க” என குறிப்பிட்டிருக்கிறாராம்.ரஜினி ‘இவன் வேற மாதிரி’ படத்திற்காக கொடுத்த பாராட்டுக் கடிதத்தைப் பற்றித்தான் சூரி இப்படி எழுதியிருக்கிறார் என சில பேர் அவர்மேல் அம்பு தொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.ஆனால் விசாரித்ததில் சூரிக்கு டுவிட்டர், பேஸ்புக்கில் கணக்கே கிடையாது என்பதுடன் அதை ஆபரேட் செய்யவும் அவருக்கு தெரியாதாம். சூரியின் மேல் வெறுப்பு கொண்ட சிலர் தான் இதனை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதப்படிங்க முதலில்.....!




பி.எஸ்சி. ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி பட்டப் படிப்பு 100% வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் இந்திய உணவு வகைகளுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு அதிகம் இருப்பதால் வெளி நாடுகளில் வேலைவாய்ப்பு நிறையவே உண்டு. இத்

துறைக்கு ஆங்கில மொழித்திறன் அவசியம். கேட்டரிங் படிக்க விரும்புபவர்கள் அவசரப்பட்டு, 10-ம் வகுப்பு முடித்ததும் ஹோட்டல் டிப்ளமோ படிப்பதைவிட பிளஸ் 2 முடித்து, பி.எஸ்சி. ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி படிப்பது சிறந்தது.

தவிர, பி.எஸ்சி. ஆஸ்பிட்டாலிட்டி, ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் என பல்வேறு பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் ஜெனரல் ஆபரேஷன் படிப்பதன் மூலம் நட்சத்திர ஹோட்டலை நிர்வகிக்கலாம். ஃப்ரன்ட் ஆபீஸ் படித்தால் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றலாம்.

 ஃபுட் பேவரேஜ் படிப்பதன் மூலம் உணவுத் தயாரிப்பு, தரக்கட்டுப்பாடு தொடங்கி விநியோகம் வரை நிர்வகிக்கலாம். ஹவுஸ் கீப்பிங் படிப்பவர்கள், ஹோட்டல் பராமரிப்புப் பணிகளை நிர்வகிக்கலாம். சேல்ஸ் அண்டு மார்க்கெட்டிங் படிப்பவர்கள், ஹோட்டல் வளர்ச்சிப் பணிகளை நிர்வகிக்கலாம்.

மணிப்பாலில் வெல்கம் குரூப் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட்டில் 4 ஆண்டு பட்டப் படிப்பு உள்ளது. இதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. தவிர, மாநிலத்தின் ஒவ்வொரு தலைநகரத்திலும் நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. சென்னை தரமணியில் இந் நிறுவனம் இயங்குகிறது. இங்கு சேர அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு உண்டு.

என்.சி.ஹெச்.என்.சி.டி - (ஜே.இ.இ.) இணை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 5-ம் தேதி முதல் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு 2014, ஏப்ரல் 7-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 26-ம் தேதி தேர்வு நடக்கிறது. www. nchnct.org என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வு கணிதம், ரீசனிங் அண்டு லாஜிக்கல், பொது அறிவு ஆகிய பாடங்களில் தலா 30 மதிப்பெண்; ஆங்கிலம் - 60 மதிப்பெண், ஆக்டிடியூட் ஃபார் சர்வீஸ் செக்டார் - 50 மதிப்பெண் என மொத்தம் 200 மதிப்பெண் கொண்டது. பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பம் ரூ. 800; எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பம் ரூ. 400. சென்னையில் இத்தேர்வு நடக்கும்.

ரஜினி பிறந்தநாள்னா ஏன் எங்கிட்ட வர்றீங்க? குஷ்பு ஆவேசம்





ரஜினியின் பிறந்தநாளுக்கு  தமிழகம் முழுவதும் இருக்கிற அவரது ரசிகர்கள் ஆங்காங்கே வினைல் போர்டுகள் வைத்து இனிப்புகள் வழங்கி சந்தோஷத்தில் திளைக்க கிளம்பிவிட்டார்தகள்.
ஆனால் பத்திரிகை நிருபர்கள் சிலர் கடந்த ஒரு வாரமாக அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி சம்பந்தமாக யாரிடம் பேட்டி கேட்டாலும், இப்போ பிஸியா இருக்கேன் என்று கூறியே தப்பிக்கிறார்களாம். ரஜினியோடு ஜோடியாக நடித்த நடிகைகளை மட்டுமாவது தேடிப்பிடித்து பேட்டியெடுத்துவிடலாம் என்று அலைந்து திரிந்த ஒரு நிருபருக்கு நேர்ந்த கதி பரிதாபம்.

ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ராதிகா என்று பலரையும் தேடி தொலைபேசியில் பிடித்துவிட்டார் அவர். இரண்டு வரி ரஜினி சாரை பற்றி சொல்லுங்க என்று கேட்டதுதான் தாமதம். நான் பிஸியா இருக்கேன். நானே கூப்பிடுறேன் என்ற போனை கட் பண்ணியவர்கள்தானாம். அதற்கு பிறகு அவர்களாகவும் அழைக்கவில்லை. இவர் அழைத்தாலும் எடுக்கவில்லை. நடிகை குஷ்பு ஆவேசத்தின் உச்சிக்கே போய்விட்டாராம். ஏன் எப்ப ரஜினியை பற்றி நீங்க எழுத நினைச்சாலும் எனக்கு போன் அடிக்கிறீங்க? அவருக்கு பிறந்த நாள்னா கொண்டாடிட்டு போங்க. ஏன் என்னை தொந்தரவு பண்றீங்க என்று கேட்க, ஸாரி என்று போனை வைக்க வேண்டியதாயிற்று நிருபருக்கு.

சுஹாசினி கேட்ட கேள்வி நியாயமா, அநியாயமா என்று வாசகர்கள்தான் சொல்ல வேண்டும். என் பர்த்டேவுக்கு அவர்கிட்ட வாழ்த்து கேளுங்க. கொடுப்பாரா? பிறகு என்கிட்ட மட்டும் எதுக்கு கேட்கிறீங்க? ஆளை விடுங்க என்றாராம். சரி, யாருமேவா ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லவில்லை? சொன்னார்களே... ஜெயச்சித்ரா, அம்பிகா, ராதா, சீதா இவர்கள் மட்டும். மீனா கூட, பிறகு பேசுறீங்களா என்று போனை வைத்துவிட்டதாக தகவல்.

இப்படியொரு நிலைமையா ரஜினியின் இமேஜுக்கு?

2013 இல் இலங்கை : நிகழ்வுகள், அதிர்வுகள், மாற்றங்களின் தொகுப்பு

2013 இல் இலங்கை : நிகழ்வுகள், அதிர்வுகள், மாற்றங்களின் தொகுப்பு





 ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை, பொதுநலவாய மாநாடுகள், வடக்கு மாகாண தேர்தல், இந்து- இஸ்லாமிய மத மார்க்க ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் என்று இலங்கையின் அரசியல்- ஊடக தளத்தில் தொடர்ந்தும் பரபரப்பும், அதிர்வுகளும், மாற்றங்களும் இடம்பெற்றே வந்திருந்தது. 2013ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் மீது பாரிய அழுத்தங்களை வழங்கியது. அது, சர்வதேச ரீதியில் இதற்கு முன்னர் எதிர்கொள்ளாத அழுத்தமாக இருந்தது. இலங்கை ஊடக பரப்பில் அதிகம் பேசப்பட்ட விடயங்களின் செய்தி தொகுப்பு இது. 4tamilmedia-வுக்காக இலங்கையிலிருந்து சிறப்பு செய்தியாளர்களினால் தொகுக்கப்பட்டது.
ஜனவரி: 09


ரிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய திருகோணமலையின் மூதூரைச் சேர்ந்த ரிஷானா நபீக் கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்நாட்டு நீதித்துறையினால் சிரச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்து 4தமிழ்மீடியாவில் வெளிவந்த சிறப்புப் பதிவு : 'ரிஷானாவை கொன்று எழுதிய தீர்ப்பு : கடவுளிடம் சிரிக்கிறது!'

ஜனவரி: 13

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம்

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பாராளுமன்ற குழுவின் விசாரணைகளை எதிர்கொண்டிருந்த பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்குவதற்காக பத்திரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டார்.
பதிவு : எமது அரசியல் : எமது உரிமை 09

ஜனவரி: 15

புதிய நீதியரசராக மொஹான் பீரிஸ் நியமனம்

பிரதம நீதியரசராக பணியாற்றிய ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவான் மொஹான் பீரிஸ் இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார். சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது.

பெப்ரவரி: 04

இலங்கையின் 65வது சுதந்திர தினம்

சுதந்திரத்தை உண்மையாக அர்த்தப்படுத்தும் வகையில் நாடு அபிவிருத்திப் பாதையில் காலடியெடுத்து வைத்துள்ளது என்று தன்னுடைய சுதந்திர தின உரையின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெப்ரவரி: 12

இலங்கை மீது ஐக்கிய நாடுகள் குற்றச்சாட்டு

இறுதி மோதல்களின் போது பொதுமக்கள் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் இலங்கை நீதியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வெளியிட்ட அறிக்கையொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டது.

பெப்ரவரி: 19

பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக சனல் 4 ஆதாரங்களை வெளியிட்டது

தமிழீழ விடுதலைப் புலிகளின் இளைய மகன் பலாச்சந்திரன் இறுதி மோதல்களின் போது இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாக சனல் 4 ஆதார படங்களை வெளியிட்டது. (அதனை இலங்கை அரசு உடனடியாக நிராகரித்தது)

மார்ச்: 10

ஹலால் தரப்படுத்தல் நிறுத்தம்
பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையில் (இஸ்லாமிய சட்டங்களுக்கு அமைய உணவுகளை தரப்படுத்தப்படும்) ஹலால் முறையை தடை செய்ய வேண்டும் என்ற கோரி போராட்டங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளையடுத்து உள்ளுரில் இனி ஹலால் தரப்படுத்தல் கிடையாது என்று முஸ்லிம் அமைப்புக்கள் அறிவித்தன.

மார்ச்: 18

மத்தள சர்வதேச விமான நிலையம் திறப்பு
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அம்பந்தோட்டையின் மத்தளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

மார்ச்: 21


ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் வருடாந்த மார்ச் மாத கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும், எதிராக 13 நாடுகளும் வாக்களித்தன. (இந்தியா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது)

ஏப்ரல்: 09

இலங்கை தமிழக சினிமாக்களுக்கு தடை வேண்டும்: ராவண சக்தி
இலங்கையில் தமிழகத்திலிருந்து வெளிவரும் சினிமா படங்கள் வெளியிடக்கூடாது என்று ராவண சக்தி என்கிற பௌத்த அடிப்படைவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

ஏப்ரல்: 10

இலங்கையின் ஆயுத மோதல்களுக்கு இந்தியா பொறுப்பு: கோத்தபாய ராஜபக்ஷ

இலங்கையில் 30 வருடங்களாக ஆயுத மோதல்கள் தொடர்ந்தமைக்கு இந்தியாவே பொறுப்பு என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டார். அந்தக் கருத்தை இந்திய மத்திய அமைச்சர் ஒருவர் நிகாரித்திருந்தார்.

ஏப்ரல்: 13

உதயன் அலுவலகம் எரிப்பு

யாழ்ப்பாணத்தின் முன்னணி பத்திரிகையான உதயனின் பிரதான அலுவலகம் இனந்தெரியாத ஆயுத குழுவொன்றினால் எரியூட்டப்பட்டது.

ஏப்ரல்: 22

வலிகாமத்தில் 6000 ஏக்கர் காணி சுவீகரிப்புக்கு அரசு பணிப்பு

நீதிமன்ற உத்தரவுகளை மீறி யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் இராணுவ தேவைகளுக்காக 6000 ஏக்கருக்கும் அதிகமான பொதுமக்களின் காணிகளை அபகரிப்பதற்கான ஆணையை இலங்கை அரசு வழங்கியது. அதனைத் தொடர்ந்தும் மக்களின் வீடுகள், கோவிகள் அழிப்பு அங்கு தொடர்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மே: 10

அசாத் சாலி விடுதலை

ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான கருத்துக்களை முன்வைத்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பொலிஸாரல் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் கொழும்பு மாநாகர சபையின் பிரதி மேயரும், எதிர்த்தரப்பு அரசியல்வாதியுமான அசாத் சாலி 8 நாட்களின் பின் விடுதலையானர்.

மே: 29

பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன மறைவு

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வைத்தியருமான ஜயலத் ஜயவர்த்தன உடல் நலக் குறைபாட்டினால் மரணமடைந்தார்.

ஜூன்: 08

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பிரான்ஷில் வாழ்கிறார்(?) சர்ச்சை

மோதல்கள் உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் கொழும்பில் காணாமற்போயிருந்த முன்னணி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தலையை மொட்டையடித்துக் கொண்டு பிரான்ஸில் மறைந்து வாழ்கிறார் என்று அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார். அத்தோடு, நீதிமன்ற விசாரணைகளையும் எதிர்கொண்டு, இறுதியில் அப்படியில்லை என்று கூறி சர்ச்சைகளை முடித்து வைத்தார்.

ஜூன்: 09

13வது திருத்த சட்டத்தின் மீதான திருத்தங்களுக்கான அரசின் முயற்சி

இலங்கையின் அரசியலமைப்பிலுள்ள 13வது திருத்த சட்டத்தில் திருத்தங்களை செய்யும் அவசரம் அரசாங்கத்தின் காணப்பட்டது. அது, பலத்த சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமே அதை வெளிப்படையாக அறிவித்திருந்தார். பின்னர், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தங்களின் அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது.

ஜூன்: 24

வடக்கு மாகாண சபைத் தேர்தல் திகதி அறிவிப்பு

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் பெரும்பாலும் செப்டம்பர் 21 அல்லது 28ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார். இறுதியில் செப்டம்பர் 21ஆத் திகதியே தேர்தல் நடைபெற்றது.

ஜூலை: 15

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை த.தே.கூ அறிவித்தது

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பொது முதவமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நீண்ட இழுபறிகளுக்குப் பின், கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் அதிகாரபூர்வமான அறிவித்தார்.

ஜூலை: 24

ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணைவு

ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்தார். பின்னர் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு அதில் வெற்றியும் பெற்றிருந்தார்.

ஜூலை: 25

வடக்கு உள்ளிட்ட 3 மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்புமனுக்கள் தாக்கல் ஆரம்பித்தது
 
ஆகஸ்ட்: 01

வெலிவேரிய வன்முறை: இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் மூவர் பலி

கம்பஹா மாவட்டம் வெலிவேரிய பகுதியில் தமது குடிநீர் உரிமையைக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டது. இதன்போது, மூவர் கொல்லப்பட்டதுடன், 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

ஆகஸ்ட்: 13

மஹிந்த ராஜபக்ஷ சிங்கள கடும்போக்குவாதி: லீ குவான் யூ விமர்சனம்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள கடும்போக்கு எண்ணங்களைக் கொண்டவர் என்று சிங்கப்பூரின் தந்தையும், அந்நாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் யூ விமர்சனத்தை முன்வைத்தமை ஊடகங்களில் பரவலாக கவனம் பெற்றிருந்தது.

ஆகஸ்ட்: 25

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வருகை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தார். மோதல்கள் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நேரடியாக பார்வையிடும் நோக்கில் வந்த அவர், இதன்போது அரசாங்க- எதிர்க்கட்சி அரசியல்வாதிகளையும் சந்தித்து பேசினார்.

ஆகஸ்ட்: 31

இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் அவசியம்; நவநீதம்பிள்ளை அறிவிப்பு

இலங்கைக்கான தனது பயண முடிவின் போது நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், இறுதி மோதல்களின் போது என்ன நடந்தது என்பது பற்றி நம்பிக்கைக்குரிய உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளது என்று அறிவித்தார்.

செப்டம்பர்: 02

நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்துக்கள் பக்கச்சார்பானவை; அரசாங்கம் நிராகரிப்பு

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பயணத்தின் இறுதியின் போது இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் பக்கச்சார்பானவை என்று தெரிவித்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவற்றை நிராகரித்தார்.

செப்டம்பர்: 07

காணாமற்போனவர்கள்; கொல்லப்பட்டவர்களே: சரத் பொன்சேகா அறிவிப்பு

இறுதி மோதல்களின்போது காணாமற்போனவர்கள் என்று யாரையும் அடையாளப்படுத்த முடியாது. அப்படி காணாமற்போனவர்கள் என்று கருதப்பட்டால், அவர்கள் கொல்லப்பட்டவர்கள் என்றே உணரப்பட வேண்டும் என்று இறுதி மோதற்காலங்களில் இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர்: 09


சமூக செயற்பாட்டாளர் சுனிலா அபேசேகர மறைவு

சர்வதேச விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரான சுனிலா அபேசேகர காலமானார். சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பில் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் அறிவித்தனர்.

செப்டம்பர்: 15


‘யாழ்தேவி’ கிளிநொச்சி சென்றது

கிளிநொச்சிக்கான யாழ்தேவி ரயிலின் உத்தியோகபூர்வ பயணத்தை வவுனியாவின் ஓமந்தையிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். அத்தோடு, யாழ்தேவியின் கிளிநொச்சிக்கான முதற்பயணியாக தன்னை பதிவு செய்து கொண்டு பயணத்தையும் மேற்கொண்டார்.

செப்டம்பர்: 21

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல்; 80 வீத வாக்குப் பதிவு

மோதல்கள் முடிவுக்கு வந்து, வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்ட பின்னர் வடக்கு மாகாண சபை தன்னுடைய முதலாவது தேர்தலை எதிர்கொண்டது. வடக்கில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு 80 வீதத்துக்கும் அண்மித்த வாக்குகள் பதிவாகின.

செப்டம்பர்: 22

வடக்கு மாகாண சபையை 2/3 பெரும்பான்மையோடு த.தே.கூ கைப்பற்றியது

வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகுளில் 80 வீதத்துக்கும் அண்மித்த அளவில் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருபெற்றி பெற்றது. சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்பது உறுதியானது.

ஒக்டோபர்: 07


வடக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்பு

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசரான சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார்.

ஒக்டோபர்: 08

இந்திய வெளிநாட்டமைச்சர் சல்மான் குர்ஷித் யாழ் விஜயம்

இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்ட இந்திய வெளிநாட்டு அமைச்சர் சல்மான் குர்ஷித் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து பேசினார்.

ஒக்டோபர்: 14

பயங்கரவாத செயற்பாடுகளை அடக்குவது மனித உரிமை மீறல் அல்ல; பிரதம நீதியரசர் அறிவிப்பு

பயங்கரவாத செயற்பாடுகளை அடக்கும் போது மரணங்கள் நிகழ்வதனை தவிர்க்க முடியாது. அப்படியான சந்தர்ப்பங்களை மனித உரிமை மீறல் என்று அர்த்தப்படுத்த வேண்டாம் என்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தான் வழங்கிய தீர்பொன்றில் தெரிவித்தார்.

நவம்பர்: 10

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2013; இணை அமர்வுகள் ஆரம்பம்

இலங்கையில் இம்முறை நடைபெறும் 23வது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப வைபவம் அம்பாந்தோட்டையின் ஆரம்பித்தது.

நவம்பர்: 11


‘சனல் 4’ குழு இலங்கை வருகை

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் செய்தி சேகரிப்பு உள்ளிட்ட ஊடகப் பணிகளில் ஈடுபடுவதற்காக கெலம் மக்ரே தலைமையிலான பிரித்தானியாவின் சனல் 4  தொலைக்காட்சி ஊடகவியலாளர் குழு இலங்கை வந்தது.

நவம்பர்: 15

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கிடையிலான மாநாடு கொழும்பில் ஆரம்பம்

23வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டின் பிரதான அமர்வுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வரவேற்புரையுடன் ஆரம்பித்தது. பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் 29 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் புறத்தணித்தார்.


பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ் விஜயம்

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்து பேசினார்.

நவம்பர்: 16

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை: டேவிட் கமரூன் எச்சரிக்கை

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் இலங்கை நடத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் சர்வதேச விசாரணைகளை எதி்ர்கொள்ள வேண்டி வரும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் எச்சரித்தார்.

நவம்பர்: 17


பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2013: கொழும்பு பிரகடனத்துடன் நிறைவு

இலங்கையின் தலைநகர் கொழும்பில் நவம்பர் 10ஆம் திகதி முதல் நடைபெற்றுவந்த 23வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடுகள் கொழும்பு பிரகாடன வெளியீட்டுடன் நிறைவுக்கு வந்தது.
இச்சம்பவம் குறித்து 4தமிழ்மீடியாவில் வெளிவந்த சிறப்புப் பதிவு : பொதுநலவாய மாநாடு 2013: இலங்கையை பொறுப்புக்கூற பணித்த களம்!
நவம்பர்: 21

2014ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்பித்தார். அதனை, ஐ.தே.க புறக்கணித்தது.

நவம்பர்: 22

நடிகரும், கவிஞருமான வ.ஐ.ச.ஜெயபாலன் மாங்குளத்தில் கைது

வீசா விதிமுறைகளை மீறினால் என்கிற குற்றச்சாட்டில் ஈழத்தின் கவிஞரும், தமிழ்த் திரைப்பட நடிகருமான வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கை இராணுவத்தினரால் மாங்குளத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். சில நாட்கள் விசாரணையின் பின் அவர் நாடு கடத்தப்பட்டார்.

டிசம்பர்: 03

ஐ.நா.களின் விசேட பிரதிநிதி சலோக பெயானி யாழ் விஜயம்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் உள்நாட்டில் இடம்பெயர்தோரின் நலன்சார் விசேட பிரதிநிதி சலோக பெயானி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டார். அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்துபேசினார். இறுதி மோதல்களமான முள்ளிவாய்க்காலையும் பார்வையிட்டார்.

டிசம்பர்: 11

இலங்கையில் 2009இல் இடம்பெற்றது ‘மனித படுகொலைகளே’:  நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்றது, மனித படுகொலைகளே என்று உரோம் நகரை தலைமையகமாகக் கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தன்னுடைய தீர்ப்பொன்றில் தெரிவித்தது.

டிசம்பர்: 14

இன, மத அடையாளங்களை பிரதிபலிக்கும் அடையாள அட்டைகளுக்கு அனுமதி மறுப்பு

இன, மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான படங்களுடன் யாரும் எதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது. அவ்வாறு விண்ணப்பித்தாலும், அவை நிராகரிக்கப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் அறிவுறுத்தியது.

டிசம்பர்: 20

2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்; 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றியது.

டிசம்பர்: 25


கிளிநொச்சியில் இந்திய ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் கைது

வீசா விதிமுறைகளை மீறிய குற்றங்களுக்கான இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் கிளிநொச்சியில் வைத்து இராணுவ சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணைகளை கொழும்பில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட பின் (டிசம்பர் 28) நாடு கடத்தப்பட்டார்.

கிசு கிசுவுக்கும் எனக்கும் என்னதான் சம்பந்தமமோ தெரியவில்லை: டாப்ஸி




2013 இல் சத்தமில்லாமல் சாதனை படைத்த நடிகை யாரென்று கேட்டால், அமலாபால், அனுஷ்கா, நயன்தாரா என்பீர்கள். அதுதான் இல்லை. அந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பவர் டாப்ஸி. “குண்டல்லோ கோதாவரி’ தொடங்கி, “ஷாஸ்மி பட்டூர்”, “ஷேடோ’, “சகாசம்”, தமிழில் “ஆரம்பம்”, “முனி – 3 கங்கா” என்று படங்கள் தொடர்ச்சியாக இருக்கிறது. பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கும் வெள்ளாவி என்ன சொல்கிறார்…

அடிக்கடி, கிசு கிசுக்களில் சிக்கி விடுகிறீர்களே?

கிசு கிசுவுக்கும் எனக்கும் அப்படி என்னதான் சம்பந்தமமோ எனக்கே தெரியவில்லை. அந்தளவிற்கு என்னைப் பற்றிய கிசு கிசுக்கள் வெளியாகி விட்டன. முதலில், இதற்காக வருத்தப்பட்டேன். இப்போது, பழகி விட்டது. என்னைப் பற்றிய கிசு கிசு செய்திகளைப் படிக்கும்போது, எனக்கே, பயங்கர காமெடியாக இருக்கும். விழுந்து விழுந்து சிரிப்பேன்.

எந்த நடிகராவது உங்களிடம் பொய் சொல்லி உங்களைக் கவிழ்த்திருக்கிறாரா?
வேறு யார், ஆர்யாதான். படப்பிடிப்பின்போது, ஏதாவது கதை சொல்வார். ரொம்ப சீரியசாக கேட்பேன். நிஜத்தில் நடந்த சம்பவம் போன்று விவரிப்பார். நானும், அதை நம்பி விடுவேன். சிறிது நேரம் கழித்து, “நான் கூறியதை நம்பி விட்டாயா? அவ்வளவும் பொய்’ என்பார். இதுபோல், நிறைய முறை, ஆர்யாவிடம்  ஏமாந்திருக்கிறேன். ரொம்பவும் நாட்டிபாய்.

சத்தமில்லாமல் நிறைய படங்களில் நடிக்கிறீர்கள் போல?
அப்படியெல்லாம் இல்லை. தமிழில் “ஆரம்பம்’ வரப்போகிறது. “முனி -3 கங்கா’ தமிழ் மற்றும் தெலுங்கில் வர இருக்கிறது. தெலுங்கில் “சகாசம்’ என்ற படம் வெளிவர உள்ளது. செப்டம்பர் இரண்டு புது படம் தொடங்குறேன். அக்டோபரில் என் இரண்டாவது ஹிந்திப்படம் தொடங்க இருக்கிறது. நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் சரியான வாய்ப்புகள்தான் அமையமாட்டேன் என்கிறது. நீங்களாச்சும் தமிழ் டைரக்டர்கிட்ட என்ன பத்தி நல்ல விதமா சொல்லுங்களேன்.

“கங்கா’ எப்படியிருக்கு?

வெரி பவர்புல் படம். பொதுவா நான் தைரியமான, போல்டான பொண்ணு ஆனால் பேய், பிசாசுன்னா கொஞ்சம் பயப்படுவேன்.  தனியாக படம் பார்க்னும்ன்னனா கூடஎனக்குப் பயம்தான். அதுவும் பேய் படம்னா கேட்கவே வேண்டாம். அடிக்கடி பக்கத்துல ஆட்கள் இருக்கிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொள்வேன். அப்படிப்பட்ட பொண்ணு பேய் படத்தில் நடித்தால் எப்படியிருக்கும்? நிறைய சீன்ல நிஜமாவே பயந்திட்டேன். செம திரில்லிங் பா.

தமிழ் நல்லா பேசுறீங்களே?

இது என்ன சில்லி கொஸ்டின். இவ்ளோ நாள் தமிழ் நாட்ல இருக்கேன். இதைக்கூட கத்துக்க மாட்டனா? அப்புறம் ஒன்னு சொல்லட்டா.. தமிழ்ப் பேசறது ரொம்ப ஈஸியா இருக்குப்பா. ஐ லைக் தமிழ்.

ஹன்சிகா உங்க இடத்தைப் பிடிச்சுட்டாங்களே கவனிச்சீங்களா?

அப்படியா…? அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதே. அது குறித்து நான் கவலைப்படவும் இல்லை. ஹன்சிகா, தமிழில் மட்டும்தான், கவனம் செலுத்தி, நடிக்கிறாங்க. நான், அப்படி இல்லை. தமிழ், தெலுங்கு, இந்தி என, மூன்று மொழிகளிலும், பிஸியாக நடிக்கிறேன். எனக்கு வர வேண்டிய படங்கள் எனக்குத் தான் கிடைக்கும். அதை யாரும், தட்டிப் பறிக்க முடியாது. இன்க்குளூடிங் ஹன்சிகா.

தமிழ் சினிமாவில் யாரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கீங்க?

ஒன்லி அஜித்சார். அவர் பழகும் முறை, நடந்துகொள்ளும் விதம், அவர்கூட நடிக்கும்போது எனக்கு அவ்ளோ ஆச்சர்யமா இருந்துச்சு. ஐ லைக் ஹிம்.

உங்களுக்கு ரொம்பப் பிடித்தது டான்ஸாமே?

ஆமாம் எனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். 8 வருஷமா கதக் கத்துட்டு இருக்கேன்.  நிறைய பயிற்சி எடுத்திருக்கேன். இப்ப என்னோட யாரும் டான்ஸýல போட்டி போடலாம். ஐ யம் ரெடி.

 உங்களின் கனவு, ஆசை என்ன?


நான் சினிமாவை விட்டுப் போறதுக்குள்ள, மணிரத்னம் சார் படத்தில நடிக்காம, விடமாட்டேன். நான் இந்திய சினிமாவை விட்டுப் போறதுக்குள்ள இது நடக்கும். எந்த கேரக்டர்னாலும், எந்த மொழின்னாலும், நான் மணிரத்னம் சார் படத்தில நடிச்சே தீரணும். இதான் என் கனவு, ஆசை எல்லாம்.

உங்க பிளஸ் என்ன, மைனஸ் என்ன?

நான் ரொம்ப தைரியமான பொண்ணு. மனசில நினைக்கிறதை அப்படியே சொல்லிடுவேன். ரொம்பப் பேசுவேன். கரெக்டா இருப்பேன். கேமராக்குப் பின்னாடி எப்பவும் நான் நடிக்க மாட்டேன். ஓப்பனா இருக்க நினைப்பேன்.

மைனஸ்னா நிறைய இருக்கு. ஒன்று வேணும்னு நினைச்சா அடுத்த நிமிஷமே எனக்கு அது கிடைக்கணும். எதுக்காகவும் வெயிட் பண்ண மாட்டேன். பொறுமை கொஞ்சம் கம்மிதான். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி கோபம் அப்படி வரும். இப்போதான் கொஞ்சம் குறைச்சி இருக்கேன். அப்புறம் முக்கியமா, எல்லாரையும் ஈஸியா நம்பிடுவேன். என்னை ஈஸியா ஏமாத்திவிடலாம். யாராச்சும் என்கிட்ட வந்து என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவேன். நான் இருக்கும் தொழிலுக்கு இது ரொம்ப டேஞ்சரான விஷயம். உடனே என்னை  இந்த விஷயத்தில் இருந்து மாத்திக்கணும் பார்க்கலாம்.

மனம் திறந்து யாருடன் நட்புடன் இருக்கிறீர்கள்?

இன்டஸ்ட்ரில இப்போ நான் யார் கூடவும் அதிகமா டச் வைச்சிக்கிறதில்லை. நயன்தாரா கூட நடித்ததால் மட்டும் அவருடன் சில விஷயங்களைக் கொஞ்சம் ஷேர் பண்ணிப்பேன். அவ்ளோதான். மத்தபடி யாரிடமும் நான் நட்புடன் இல்லை!

எதிர்கால திட்டம்?
சரியாக 10, 12 வருஷம் நல்ல நல்ல படங்களில் நடிச்சிட்டு, வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிடுனும்னு என்பதில் ரொம்பத் தெளிவான இருக்கேன். நிறைய வருஷம் நடிக்கணும் என்ற ஆசை இல்லை.

திருமணம்?

நான்தான் வீட்டில் பெரியவ. என் பெற்றோர் என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்றாங்க. எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு ஆள் கிடைக்கணுமே. நான் விரும்புறவர், பெண்களை மதிக்கிறவராக இருக்கணும். என் அம்மா, அப்பா, என் தங்கை, என் குடும்பத்தை அவர் குடும்பமா பார்த்துக்கணும். ஹிருத்திக் ரோஷன் அளவிற்கு அழகெல்லாம் தேவை இல்லை. என் அளவுக்கு மேட்ச் ஆனா போதும். வெள்ள கலர், சிக்ஸ் பேக் இதெல்லாம் வேணாம். உண்மையான உணர்வுகளைப் புரிஞ்சுக்கிற, ஒரு நேர்மையான ஆண் கிடைக்கணும். அப்பதான் கல்யாணத்தைப் பற்றி யோசிப்பேன்

மணிகண்டனின் மகர ஜோதி தரிசனம்




எல்லாம் வல்ல சர்வேஸ்வரராக விளங்கும் சிவபிரானுக்கும் மோகினி வடிவம் எடுத்த திருமாலுக்கும் மகனாக அவதரித்தவர் மணிகண்டன்.

கழுத்தில் மணிமாலையுடன் காணப்பட்டதால் மணிகண்டன் என பெயர் பெற்றார். ஹரிக்கும் ஹரனுக்கும் புத்திரராக பிறந்ததால் ஹரிஹரபுத்திரர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் ஐயனுக்கும் அப்பனுக்கும் உதித்ததால் ஐயப்பன் ஆக பெயர் பெற்றார். சபரிமலையில் அமர்ந்து ஞான ஆட்சியுடன் அருளாட்சி புரிந்து மானிடர்களின் பிறவித்துன்பங்களைப் போக்கி அருள் பாலிக்கிறார். சபரிகீரிசன் சாஸ்தாவாக பதினெட்டு படிகளுடன் கூடிய சபரிமலை திருத்தலத்தில் வீற்றிருந்து வேண்டுவார்க்கு விரும்பிய வரம் அருளி எம்மைக் காத்து வருகிறார்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தால் அது குழந்தை, வாரிசு, சந்ததி தழைக்க குடும்பம் உருவாக காரணமாகிறது. ஆனால் ஆணுக்கும் ஆணுக்கும் பிறக்கிற குழந்தை இப்படி ஒரு தெய்வீகக் குழந்தை வடிவில் தேவர் குலத்தைக் காக்க என மணிகண்டனாக ஹரிஹரனாக அவதாரம் எடுத்தார். மும்மூர்த்திகளான சிவனும் பிரமனும் விஷ்ணுவும் கடும்தவம் இருந்து யார் வரத்தைக் கேட்டாலும் மனமிரங்கி அவர் கேட்ட வரத்தை கொடுத்துவிட்டு திண்டாடுவது அவர்களின் வழக்கமான ஒன்று என்று புராணங்கள் வாயிலாக நாம் அறிந்திருக்கிறோம்.

ஆக அன்னை ஆதி பராசக்தியால் கொடிய அரக்கன் மகிஷாசுரன் அழிக்கப்பட, அவனது தங்கை மகிஷி கடும் சினம் அடைந்தாள். தேவர்குலத்தை பூண்டோடு அழிக்கவும் பழிவாங்கும் எண்ணத்திலும் சிருஷ்டிக்கடவுளான பிரம்ம தேவரை நோக்கி அடர்ந்த காட்டில் கருங்கற்பாறையில் அமர்ந்து கடும் தவம் இயற்றினாள். பிரம்மதேவர் அவளை நோக்கி என்னவரம் வேண்டும் எனக்கேட்க மகிஷி கூறினாள், அரிக்கும் அரனுக்கும் மகனாக பிறந்து வேறு ஒருவரிடத்து வளர்ந்த ஒருவனை தவிர ஆயுதங்களாலும் சாதாரண மானிடர்களாலும் எனக்கு மரணம் ஏற்படக்கூடாது. எனது உரோமங்களில் இருந்து என்னைப்போன்று ஆயிரக்கணக்காணோர் உற்பத்தியாகி எதிரிகளை அழிக்க வேண்டும். எனவும் வேண்டுகிறாள்.

பிரம்மரும் வரத்தைக் கொடுத்து விட்டு மறைந்து விட்டார். தேவர்களையும் ரிஷிகளையும் மானிடர்களையும் வருத்த தொடங்கி விட்டாள் அசுரகுலத்து மகிஷி. அவள் படுத்திய துன்பங்களை தாங்க முடியாத தேவர்கள் காத்தற்கடவுளாகிய ஹரியிடம் சென்று முறையிட்டனர். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் பகை. அதோடு வரங்கள் பெறுவதும் அதனால் சாபங்கள் அடையப் பெற்று அல்லல் உறுவதும் இயல்பு. அப்படி முன்னொரு காலவேளையில் தேவர்கள் துர்வாச முனிவரின் சாபம் அடையப் பெற்று உடல் பலவீனம் அடைந்து தளர்ச்சி உற்று முதியவர் நிலையினை அடைய வேண்டிய நிலை ஏற்பட்டு இருந்தது. இதை பயன் படுத்தி மகிஷி துன்புறுத்த தேவர்கள் விஷ்ணுவைச் சரண் அடைந்தனர்.

காத்தற்கடவுளாகிய விஷ்ணு பகவானும் தேவர்கள் மிகுந்த வலிமை பெற திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் உண்டால் சக்தி கிடைக்கும் எனவழியைக் காட்டினார். தேவரும் அசுரரும் திருப்பாற்கடலை கடைந்தனர். அமிர்தம் தோன்றியது. அசுரர்கள் தேவர்களுக்கு அவ்வமுதினை பகிர்ந்தளித்து உண்ண விரும்பாமல் தாமே உண்ண விரும்பி திருவமுதினை பறித்து எடுத்தனர்.

மகாவிஷ்ணு தேவர்களுக்கு அமுதம் கிடைக்க வேண்டி மோகினி வடிவம் தாங்கி அசுரர்களை தன்பால் மோகம் கொள்ள வைத்து அமுதினை பெற்று தேவர்களுக்கு அளிக்கிறார். தேவர்களும் அமிர்தத்தை உண்டு இழந்த சக்தியை மீண்டும் பெற்றனர். இதை அறிந்த ஈசன் மூவுலகமும் மையல் கொள்ளும் வதனத்தை அந்த மோகினி வடிவத்தை காண ஆவலுற்றார். மோகினி வதனத்தை கண்ணுற்ற ஈசன் அவ்வுருவில் மோகித்து மையல் கொண்டார்.

கன்னி உருக்கொண்ட திருமாலுக்கும் பரமசிவனுக்கும் உதித்த குழந்தையை பம்பா நதிக்கரையில் விட்டுசென்று விட பந்தள நாட்டு மகாராஜா எடுத்து அன்போடு வளர்க்கிறார். குழந்தை இல்லாகுறை போக்கிய அக்குழந்தையை மனிகண்டனாக எல்லாக் கலைகளையும் பயிற்றுவித்து வளர்க்கிறார். காலம் கணிந்து வர தேவேந்திரன் ஹரிகரன் காட்டுக்குள் வந்ததையும் அவர் பூர்வீகத்தையும் அறிந்து மகிஷி அரக்கியை அழித்துவிடுமாறு வேண்டிக் கொள்ள தேவர்கள் புடைசூழ அரக்கியை வதம் செய்து அனைவரையும் காக்கிறார்.

 இளம் பாலகனாக பனிரெண்டு வயதிலேயே அரக்கியை அழித்து தேவர்களை காத்த ஸ்ரீ சாஸ்தாவாகிய ஐயன் தன்னை வளர்த்து ஆளாக்கிய அன்னை தலைவலியை போக்க என்னசெய்வது எனஎண்ணம் கொண்டார். தேவர்களின் அரசன் தேவேந்திரனிடம் அன்னை தனது பிணி தீர்க்க புலிப்பால் கொண்டு வர என்னை காட்டுக்கு அனுப்பினார்கள். நான் என் செய்வேன் எனக்கேட்க தேவேந்திரனும் உடனே பெண் புலியாக உருமாறினார். அதன் மீது ஏறி அமர்ந்து மணிகண்டனும் ஏனைய தேவர்களும் புலிக்கூட்டமாக உருமாறி பந்தளநாடு நோக்கி சென்றனர். புலி மீது பாலகனான மணிகண்டனைப் பார்த்து அஞ்சினர்.

மன்னன் இராஐசேகரன் மகனின் துணிவைப் பாராட்டி ஆரத்தழுவினார். அமைச்சர் மனதில் தீய எண்ணங்களுடன் அரசிக்கு அவளின் இளைய மகனுக்கு மூடிசூட்ட ஆசையை வளர்த்து இல்லாத தலைவலியை ஏற்படுத்தியிருந்தார்.

அதனால் மணிகண்டன் புலியுடன் வந்ததும் தவறுக்கு மன்னித்து மண்றாடினர். பன்னிரெண்டு காலம் என்னை வளர்த்து காத்து வந்தீர்கள். நாடாளும் எண்ணம் எனக்கில்லை எனக்கூறி தம்பி இராஜேந்திரனுக்கு முடிசூட்டி இளவரசன் ஆக்குங்கள் இது எனது விருப்பம் ஆகும். பூவுலகில் அவதாரம் எடுத்த எனது நோக்கம் நிறைவேறிவிட்டது வருகிறேன் என்று புறப்பட்டார்.

மன்னன் முதல் அனைவரும் கலங்கி நின்றனர். அன்பு தந்தையே ஆசி கூறுங்கள் சபரி மலைப் பகுதியில் பம்பை நதிக்கரையில் ஒரு அம்பை எய்கிறேன். அந்தச் சரங்குத்தும் இடத்தில் ஆலயம் எழுப்பி என் திரு உருவை பிரதிஸ்டை செய்யுங்கள். என்னை வழிபடும் அடியார்களுக்கு ஆண்டு தோறும் மகர சங்கிராந்தி அன்று நான் ஒளிவடிவில் பொன்னம்பலமேட்டில் திருக்காட்சியளிப்பேன் என்று மறைந்தருளினார்.

ஆலயம் எழுப்பி பதினெட்டு படிகளும் அமைத்து ஐயப்பனை வழிபடுபவர் வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் பெருகும். பகவான் தத்துவாதீனாக விளங்குவதையே இப் பதினெட்டுபடிகளும் உணர்த்துகின்றன. பஞ்சேந்திரியங்கள் என்று சொல்லப்படும் ஐம்புலன்கள் மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐந்தும் தன்மாத்திரைகள் என்று சொல்லப்படும் ஐம்பொறிகள் ஓசை ஊறு ரூபம் சுவை நாற்றம் என்ற ஐந்தும், அந்தக்கரணங்களான மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான்கும். மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றும் ஆன்மாவும் என பதினெட்டு விடயங்களைக் கொண்டுள்ளது.

மேற்குறித்த பதினெட்டு விடயங்களைக் குறித்தே பதினெட்டு படிகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் ஸ்ரீ சாஸ்தாவாக விளங்கும் ஐயப்ப சுவாமி சபரி பீடத்தின் பதினெட்டு படிகளை கடந்து ஸ்ரீ சுவாமி ஐயப்பனின் பேருண்மைத் தத்துவத்தை பெற்று உய்வதோடு, பொன்னம்பல மேட்டில் தை மகர சங்கராந்தி அன்று தோன்றும் மகர ஜோதி தரிசனம் கண்டு எம் பாவங்களை தீர்க்க ஐயப்பனை வணங்குவோம்.

கூடப்பிறக்காத அண்ணண் அஜீத்: மைனா விதார்த் உருக்கம்




வீரம் படத்தில் அஜீத்தின் தம்பியாக மைனாவில் நடித்த விதார்த்.நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு தற்போது   முடிவடைந்துள்ள நிலையில் தனக்கு கூடப்பிறக்காத அண்ணன் அஜித் என்று விதார்த் உருக்கமாக பேசியுள்ளார்.

இது குறித்து விதார்த் கூறுகையில்: அஜீத் சார் படத்துல் நடிக்கவிரும்புகிறீர்காள என்று  டைரக்டர் சிவா சார் என்னை கூப்பிட்டார்.  கரும்பு தின்ன கூலியான்னு மறுநாளே போய் நின்றேன். ஆனால் அவர்கள் கேட்ட தேதி என்னிடம் இல்லை. அய்யோ… தல படத்துல நடிக்க முடியாமல்  போயிடுமேன்னு கலங்கி நின்றேன். அப்போது அஜீத்சாரே நான் நடித்து வரும் படத்தின் டைரக்டர் மீரா கதிரவன்கிட்ட பேசி தேதி ஒதுக்கி கொடுக்கச் சொன்னார்.

பொதுவாக அஜீத் சார் நடிக்கிற படங்ககில்  அவரோட ஓப்பனிங் காட்சி பிரம்மாண்டமாக இருக்கும். ஆனா “என்னோட ஓப்பனிங் சீன் முன்னாடி வளர்ற ஹீரோ விதார்த்துக்கு நிகரான ஓப்பனிங் சீன் வையுங்க”ன்னு அஜீத் சார் சொன்னார். அப்படியேதான் நடந்தது.

ஒரு நாள் போன்ல கூப்பிட்டார் “சுவிட்சர்லாந்து போயிருக்கீங்களா?” என்று  கேட்டார்., இல்லைன்னு நான் சொன்னேன். “அப்ப கிளம்புங்க போகலாம்” என்றார் ஒரே நாளில் விசாவினை தயார் செய்து என்னை அழைத்துக்கொண்டு சென்றார்.. எனக்கு அங்கே ஷூட்டிங் கிடையாது. அவருக்குதான் ஷூட்டிங். ஆனாலும் என்னை அழைச்சிட்டு போய் ஊர் சுற்றி காட்டி, வேண்டியதை வாங்கித் கொடுத்தார். அந்த நாட்களை இப்போ நினைச்சாலும் புல்லரிக்குது.

ஒரு நாள் “பைக்லேயே டூர் போலாமா?”ன்னு கேட்டார் நீங்க எங்க கூப்பிட்டாலும் வருவேன் சார்னு போயி நின்னேன். விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிஸா வரைக்கும் அவரோட பைக் டூர். அவர் ஓட்டிக்கொண்டே செல்ல நான் பின்னால் உட்கார்ந்து போனேன். அந்த பாக்கியம் யாருக்கும் கிடைச்சிருக்காது. சாலையோர கடையில உட்கார்ந்து சாப்பிட்டு, பிளாட்பாரத்துல ரெஸ்ட் எடுத்து… என்ன ஒரு அனுபவம் அது.

சரியா 108 நாள் அவரோட இருந்திருக்கேன். அந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் என்னால மறக்கவே முடியாது. இப்போது மட்டுமல்ல எப்போதும் அவர் எனக்கு கூடப்பிறக்காத அண்ணன் இவ்வாறு உருக்கமாக பேசினார் மைனா விதார்த்.


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top