.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 28 December 2013

அந்த மூன்றாம் நாள்





ஓர் இரவுநேரம் ஒருவன் தன் மூன்று வயது மகன் தூங்கிக்கொண்டிருக்கும் போது தன் மனைவியின் மேல்உள்ள கோபத்தில் அவளைக் கொன்று யாருக்கும் தெரியாமல் பிணத்தை புதைத்து விட்டான்

 மறுநாள் காலை மகன் எழுந்து அம்மாவைப் பற்றி கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்று ஆலோசனை செய்தான்..

ஆனால் மகன் அம்மாவைப்பற்றி கேட்க வில்லை.

இரண்டாம் நாளாவது கேட்பான் என நினைத்தான்.ஆனாலும் கேட்கவில்லை.வழக்கம் போல மகன் சந்தோசமாக இருந்தான்.

மூன்றாம் நாள் மெதுவாக மகனிடம் பேச்சு கொடுத்தான்.

 "உனக்கு நம்ம வீட்ல எதாவது மாற்றம் தெரியுதா? எங்கிட்ட ஏதாவது கேக்கணும் போல இருந்தா கேளு"

மகன் மெல்லக்கேட்டான்:

 "மூணுநாளா அம்மா ஏன் உங்க பின்னாடியே நிக்கிறாங்கப்பா?"

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை





சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை


 காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.


எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,


முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,


எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.


எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.


எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

மோகன்லால் பர்ஸ்ட், விஜய் நெக்ஸ்ட்!




'ஜில்லா' பட டைட்டிலில் மோகன்லால் பெயரை போடுமாறு விட்டுக்கொடுத்துள்ளாராம் விஜய்.   

விஜய், மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘ஜில்லா’ படப்பிடிப்பை நடத்தி, படத்தையும் முடித்துவிட்டார் இயக்குனர் ஆர்.டி.நேசன்.

இப்போது டைட்டில் போடும் நேரத்தில் அவர் முன்னரே எதிர்பார்த்த அந்த தர்மசங்கடமான சூழ்நிலை வந்துவிட்டது.

விஜய் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர். மோகன்லாலோ 35 வருட காலமாக மலையாள சினிமாவின் எவர்கிரீன் ஹீரோ.

முழுப்படத்தையும் இயக்கி முடித்துவிட்ட இயக்குனர் ஆர்.டி.நேசனுக்கு டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்பதில் குழப்பம்.

ஆனால் இயக்குனரின் மனப்போராட்டத்தை புரிந்துகொண்டு, விஜய்யின் பெயரைத்தான் முதலில் போடவேண்டும் என இயக்குனரிடம் முன்பே சொல்லிவிட்டார் மோகன்லால்.

ஆனால் விஜய்யோ, மோகன்லாலின் சீனியாரிட்டிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, டைட்டிலில் மோகன்லால் பெயர்தான் முதலில் வரவேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட ஒருவழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார் இயக்குனர் நேசன்.

சொல்லாதீர்கள்... கவிதை?



எங்களை இல்லாதவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் குறையாத வறுமையை
 வைத்துக்கொண்டிருக்கிறோம் நாங்கள்...!


எங்களை இயலாதவர்கள்
என்று சொல்லாதீர்கள்....
அடுத்தவருக்கு தெரியாமல்
 தனித்து அழமுடியும் எங்களால்..!


எங்களை வீரமற்றவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
பசியை எதிர்த்து போராடும்
 தைரியம் இருக்கிறது எங்களிடம்..!


எங்களை திக்கற்றவர்கள்
 என்று சொல்லாதீர்கள்....
எட்டுத்திக்கும் சூழ்ந்துக்கொண்டிருப்பது
 எங்கள் வறுமை ஜாதிதான்..!


எங்களை பாதுகாப்பில்லாதவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் எங்களுக்கு சூன்யமாய்
 குடைபிடித்துக்கொண்டிருக்கிறது வறுமை கோடு...

மலையாளத்திலும் சந்தானம்





தமிழ் சினிமாவின் தற்போதைய நகைச்சுவை மன்னனாக வலம்வரும் நடிகர் சந்தானம் தற்பொழுது மலையாளத் திரையுலகிலும் நுழைந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

நஸ்ரியா மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் தற்பொழுது உருவாகிவரும் சலாலா மொபைல்ஸ் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடித்துவருவதாகக்
கூறப்படுகிறது. இப்படம் சந்தானம் நடிக்கும் முதல் மலையாளத் திரைப்படமாகும். தமிழில் தவிர்க்க இயலாத நகைச்சுவை நாயகனாக வலம்வரும்
சந்தானம் மலையாளத்திலும் ஜொலிப்பாரா என்பது இப்படம் வெளியானபின்பு தெரியவரும்.

ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இப்படத்தை சரத் ஏ.ஹரிதாசன் இயக்கிவருகிறார். நகைச்சுவையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் இப்படம் வருகிற ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

4000 தடவைகளுக்கும் மேலாக ஒலிபரப்பான பூமி என்ன சுத்துதே பாடல்




கொலவெறி புகழ் அனிருத் இசையில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் எதிர்நீச்சல். இப்படத்தின் “பூமி என்ன சுத்துதே” பாடல் இவ்வாண்டில்
அதிகம் ஒலிபரப்பப்பட்ட பாடலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் எதிர்நீச்சல்.
சிவகார்த்திகேயன் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே மாபெரும் ஹிட்டாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மிகமுக்கியச் செய்தியாக “ பூமி என்ன சுத்துதே” பாடலை நடிகர் தனுஷ் எழுதியிருந்தார். அனிருத் இப்பாடலைப் பாடியிருந்தார் என்பதே. இவர்களின் கூட்டணியில்தான் கடந்த வருடம் வெளியான “ ஒய் திஸ் கொலவெறி” பாடலும் உலகப் புகழ் பெற்றது நினைவிருக்கலாம்.

சென்னையில் உள்ள 7 பண்பலை வானொலி நிலையங்கள் மற்றும் கோவையில் உள்ள 4 பண்பலை வானொலி நிலையங்கள் ஆகியவற்றில் மொத்தமாக இப்பாடல் சுமார் 4028 முறைகள் ஒலிபரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வருகிற 2014 ஆம் ஆண்டும் அனிருத்திற்குச் சிறப்பான ஆண்டாக அமைய பிளஸ் மீடியா வாழ்த்துகிறது

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கான வேலைகள் தொடங்கின ? -




இளைய தளபதி விஜய் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி மாபெரும்
வெற்றி பெற்ற திரைப்படமான துப்பாக்கி திரைப்படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்டது. அதற்கான படப்பிடிப்புத் தளங்களைப் பார்வையிட ஏ.ஆர்.முருகதாஸ் தற்பொழுது கொல்கத்தாவில் முகாமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமின்றி அவருடன் இசையமைப்பாளர் அனிருத், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரும் தற்பொழுது கொல்கத்தாவில் படப்பிடிப்பிற்கான லொகேசன்களைத் தேர்வு செய்துவருவதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கி திரைப்படம் முழுவதும் மும்பை நகரை மையப்படுத்தி
உருவாக்கப்பட்டது நினைவிருக்கலாம். தற்பொழுது கொல்கத்தாவை மையப்படுத்தி அடுத்த திரைப்படம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் அடுத்த ஆண்டு துவக்கம் முதல்
படப்பிடிப்புத் துவங்கவுள்ள இத்திரைப்படம், அடுத்த ஆண்டு தீபாவளி ரிலீசாக
இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இசைஞானி இல்லாமல் கிங் ஆப் கிங்ஸ் 2





                        இசைஞானி இளையராஜா தலைமையில் இன்று கோலாலம்பூர் மெர்டாக்கா மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. கிங் ஆப் கிங்ஸ் 2 என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று இசைஞானி அறிவித்துள்ளார்.

கார்த்திக் ராஜா வழங்கும் கிங் ஆப் கிங்ஸ் 2 இசை நிகழ்ச்சி இன்று கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்சங்கர்ராஜா ஆகியோர் முக்கியக் கலைஞர்களாக இருந்து நிகழ்ச்சியை நடத்துவார்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளையராஜாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு நேற்று இல்லம் திரும்பிய இளையராஜா, தன்னால் இவ்விழாவில் பங்கேற்க இயலாது என்று தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். நெடுந்தூரப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்திருப்பதால் தன்னால் இவ்விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை என்றும், தான் வராததால் ரசிகர்கள் ஏமாற்றமடைய வேண்டாமென்றும் இளையராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

சமையலில் செய்யக்கூடாதவை… செய்ய வேண்டியவை….




சமையலில் செய்யக்கூடாதவை…

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.


செய்ய வேண்டியவை….

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்

வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்...

01. அ. வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.


ஆ. வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.


இ. வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்


ஈ. வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.


உ. வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்


ஊ. வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.


எ. வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.


ஏ. வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்


ஐ. வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்


ஒ. வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.


ஓ. வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.


ஒள. வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்.


02. ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.


03. எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை ! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.


04. கோடை காலத்தில் தனக்கு வேண்டிய உணவை சேகரித்து வைத்துவிட்டு குளிர் காலத்தில் கோடைக்காக பொறுமையுடன் காத்திருக்கிறது எறும்பு உழைப்பாளி மட்டுமல்ல சிறந்த பொறுமைசாலியும் கூட.


05. வாழ்க்கை ஓர் ஓவியம் போன்றது. அது கணிதமல்ல, நிறையப்பேர் வாழ்க்கையை கணிதமாக்கி நாசப்படுத்தியுள்ளார்கள். நீங்களாவது அதை ஓவியமாக்கி சந்தோசமான உலகத்தை உருவாக்குங்கள். எறும்பின் ஞானத்தை பின்பற்றுங்கள்.


06. மோசமான பறவைகள்தான் தனது கூட்டிலேயே எச்சமிடும் என்பதை உணர்ந்து தனது குடும்பத்தை அழிக்காமல் குடும்பத்தோடு மகிழ்வாக வாழ்வை அனுபவிக்க வேண்டும்.


07. விவேகமுள்ளவர்களுக்கு சோதனைகள்தான் மிகச்சிறந்த ஆசான்.

08. உங்களை மாற்றிப் பாருங்கள் இந்த உலகம் எத்தனை சுவாரசியமாக மாறுகிறது என்பதை உணர்வீர்கள்.


09. பிரபஞ்சம் காலம் இரண்டும் முடிவே இல்லாதவை. இதில் நாம் எங்கே இருக்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள். நீங்களே வாழ்க்கைக்கு வீணான வரையறைகளை போட்டுக்கொண்டு அதுதான் விதியென எண்ணி வாழ்வை குழப்பாதீர்கள்.


10. விட்டில் பூச்சி விளக்கொளியில் பலியாகிறது, மனிதனோ தனது கற்பனையால் பலியாகிறான்.


11. உங்கள் போராட்டம் புனிதத் தன்மையோடு அமைய வேண்டும். பலத்தோடு இருப்பதற்காக புனிதத் தன்மையை இழப்பது சிறப்பல்ல.

 பலத்தை புனிதமான வழியில் உபயோகப்படுத்துவதே பலத்திற்கு சிறப்பு. கோழைகளே பலத்தை தவறான வழியிலும், பழி தீர்க்கவும் பயன்படுத்துவர் என்பதை அறிக.


12. உயிரோடு இருக்கும் எலி இறந்துபோன புலியை விட பலமானது.


13. கடினமான வார்த்தைகள் வாழ்வை நாசமாக்கும் கொடிய விஷமாகும்.


14. எல்லாவற்றையும் அரவணைப்பதே அன்பு எதையும் நிராகரிப்பது அன்பல்ல.


15. நேர்மை ஒரு தெய்வீக ஆணை. அந்த நேர்மை பலன் தரும் ஆனால் சிலருக்கு அது போதியதாக தெரிவதில்லை.


16. விவேகமற்ற மனிதர்கள் தங்கள் நிழல்களுடனேயே சண்டை போடுவார்கள்.


17. வில்லில் வீரன் என்பதை வில்லோ அம்போ சொல்லாது அவன் வைக்கும் குறியை அது சரியாக தொடுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வீரம் தீர்மானமாகும்.


18. எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.

19. ஒன்று வழி நடாத்துங்கள் முடியாவிட்டால் வழியைப் பின்பற்றுங்கள், அதுவும் இல்லாவிட்டால் வழியை விட்டு விலகுங்கள்.


20. திறக்கப்படாத புத்தகம் மரத்துண்டுக்கு சமம் !


21. உங்கள் மூளையை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்தால் எல்லா அவமதிப்புக்களையும் இலகுவாக தாண்டிவிடலாம்.


22. மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு அறிவின் அடையாளமல்ல அதுபோல மடமடவென செய்யும் செயல்கள் செயல் திறனின் அடையாளமும் அல்ல.


23. நீங்கள் பேசிய பேச்சு ! தவறவிட்ட சந்தர்ப்பம் ! நீங்கள் இழந்த ஒரு கணம் ! இவை மூன்றும் திரும்பி வரவே வராது.



24. சின்னச் சின்னக் கணங்களின் மொத்தமான கூட்டுத் தொகையே நீண்ட வாழ்க்கை அதுபோல இழந்துவிட்ட சின்னச் சின்னக் கணங்களின் கூட்டுத் தொகையே மரணம்.


25. நன்றாக வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளே வாழ்க்கையை இனியதாக்கும்.


26. தாமதப்படுத்துவது என்பது மூளைச் சோம்பலின் இன்னொரு வடிவம்.


27. சோம்பேறி மனிதன் என்பவன் கடிப்பதற்கோ வாலாட்டுவதற்கோ வலுவற்ற செத்த நாயைப் போன்றவன்.


28. ஒரு கூர்மையான மனது எந்தக் கதவுகளையும் திறக்கும் அதேபோல ஒரு சேம்பேறி மனதிற்கு கதவுகளை மூடத்தான் தெரியும்.


29. உங்கள் சந்தோஷத்திற்கான காரணத்தை மாற்றிப் பாருங்கள் பிறகு என்ன நடக்கிறது என்பதை.


30. மற்றவர்களின் கட்டளைகளை செய்யாதீர்கள், முதலில் நீங்கள் விரும்புவதை செய்யுங்கள், பிறகு அந்தச் செயலை விரும்புங்கள்.

திட்டமிட்டால் திகட்டாத மகிழ்ச்சி!




நிதி நிர்வாகம் என்பது வாழ்வில் முக்கியமான விஷயம். வரவு& செலவு விஷயத்தில் திட்டமிட்டுச் செயல்படுபவர்கள் என்றுமே திண்டாட வேண்டியிருக்காது. அவர்கள் திகட்டாத மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். நிதி விஷயத்தில் நிம்மதியை அனுபவிப்பதற்கான ஆலோசனைகள் உங்களுக்கும்...


கடன்களை ஒழியுங்கள் வாழ்வில் விரைவாக முன்னேற்றம் காண விரும்புபவர் முதலில் செய்ய வேண்டியது, கடன்களை ஒழிப்பதுதான். கடன்களுக்கான வட்டிக்காக நீங்கள் மாதமாதம் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்று கணக்கிட்டாலே போதும். அதிலிருந்து மீள்வதற்கான உத்வேகம் பிறந்துவிடும். கடன்களுக்கான வட்டிகளில் இருந்து உங்கள் வருவாயை மீட்டால், சேமிப்பு உயரும்.


எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக நீங்கள் கடன்களில் இருந்து மீள்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக உங்களின் பொருளாதாரம் நலம் பெறும். கடன்களை உடனே ஒழிக்க முடியாது, ஆனால் பணமும் சேமிக்க வேண்டும் என்றால், முதலில் உங்கள் கடன்களை ஒழுங்குபடுத்துங்கள். அதிக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும் தனிநபர் கடன், கந்துவட்டிக் கடன் போன்ற கடன்களை முதலில் முடித்துவிடுங்கள்.


முடிந்தால், வட்டியில்லா கடன்களுக்கு (உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து பெறுபவை), அல்லது குறைந்த வட்டிக் கடன்களுக்கு அவற்றை மாற்றிக்கொள்ளுங்கள். கடன்களில் இருந்து மீள்வதற்கான ஒரு வழி, ஒரு அவசர கால நிதியை உருவாக்குவது.


இந்த நிதியைப் பயன்படுத்தி ஒன்றி ரண்டு மாதங்களை ஓட்டினால், வரும் வருவாயை கடன்களைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தலாம். நீங்கள் இதுவரை அவசர கால நிதியை வளர்க்கத் தொடங்கவில்லை என்றால், உடனே அதைத் தொடங்குங்கள். தேவைகள் இல்லாத மனிதர்கள் இல்லை.


ஆனால் நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு பொருளாதார பலம் அவசியம். பொருளாதார விஷயத்தில் குறுகியகால இலக்குகள், நீண்டகால இலக்குகள் என்று திட்டமிட்டால் நமது தேவைகளை எளிதில் நிறைவேற்றிவிடலாம்.

நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி ?



நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்...

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புல எண் (Survey Number) :

ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.

1. பதிவுத்துறை
2. வருவாய்த்துறை
அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்

1. பதிவுத்துறை :
நாம் சொத்து வா
ங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

2. வருவாய்த்துறை :

இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.

பட்டா (Patta)
சிட்டா (Chitta)
அடங்கல் (Adangal)
அ' பதிவேடு ('A' Register)
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)

பட்டா (Patta) :

நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும்.

பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு
செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-
1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

சிட்டா (Chitta) :

ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

அடங்கல் (Adangal) :

ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

அ' பதிவேடு ('A' Register) :

இப்பதிவேட்டில்

1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :
நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .

இந்திய வாகனப் பதிவு எண்ணிற்கான குறியீடுக ...



இந்தியாவிலிருக்கும் மாநிலங்களிலும், மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட ஆட்சிப் பகுதிகளிலும் உள்ள போக்குவரத்து வாகனங்களுக்கு வழங்கப்படும் பதிவு எண்களில் அந்தந்த மாநிலம் அல்லது ஆட்சிப்பகுதிக்கான குறியீடு இரண்டு ஆங்கில எழுத்துக்களாக முதலில் இடம் பெறுகிறது. இங்கு ஒவ்வொரு மாநிலம் / ஆட்சிப்பகுதிக்கான குறியீடு தரப்பட்டுள்ளன.



■அருணாசலப் பிரதேசம் - AR

■அஸ்ஸாம் - AS

■ஆந்திரப் பிரதேசம் - AP

■பீகார் - BR

■கோவா - GA

■குஜராத் - GJ

■ஹரியானா - HR

■இமாசலப் பிரதேசம் - HP

■கர்நாடகம் - KA

■கேரளம் - KL

■மத்தியப் பிரதேசம் - MP

■மகாராஷ்டிரம் - MH

■மணிப்பூர் - MN

■மேகாலயா - ML

■மிசோரம் - MZ

■நாகலாந்து - NL

■ஒரிசா - OR

■பஞ்சாப் - PB

■ராஜஸ்தான் - RJ

■சிக்கிம் - SK

■தமிழ்நாடு - TN

■திரிபுரா - TR

■உத்திர பிரதேசம் - UP

■மேற்கு வங்காளம் - WB

■அந்தமான்-நிகோபார் - AN

■சண்டிகர் - CH

■தாத்ரா நாகர்ஹவேலி - DN

■டாமன் - டையூ - DD

■தில்லி - DL

■இலட்சத் தீவுகள் - LD

■பாண்டிச்சேரி - PY.

குண்டலினி ...



அது என்ன குண்டலினி..? யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தவொரு வார்த்தையை உபயோகிக்காமல் இருக்க முடியாது. அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள்.


பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் "சிலை"ப் படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும்போதுதான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும்.


குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும்போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும். குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.


சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. (விரிவாக இதை எழுதினால் மனித உடலியல் பற்றிய கட்டுரையாகிவிடும் என்பதனால் சுருக்கமாக முடித்துவிட்டேன்.)


இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது.


 இவையே ஆற்றல் மையங்கள். (கட்டுரையில் ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒரே பொருளாகக் கருத வேண்டுகிறேன்.) இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்களையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.

இனி இல்லை மன அழுத்தம்!



இந்த விஷயத்தை எப்படிச் சமாளிக்கப்போறேன்னு தெரியலையே?' என்கிற நினைப்புதான் மன அழுத்தத்தின் ஆரம்பம். ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து மீள்வதற்குள், அடுத்தடுத்த பிரச்னைகள் வந்து சுமையாக இறங்கும்போது, 'ஸ்ட்ரெஸ்' என்கிற மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது. இப்படி, தொடர்ந்து மன அழுத்தம் நேரும்போது, உடல் சார்ந்த பல்வேறு நோய்கள் நம்மை வாட்டி எடுக்கத் தொடங்கிவிடும்.



 வேலைக்காக... குடும்பத்தையோ, குடும்பத்துக்காக... வேலையையோ விட்டுக்கொடுக்கவும் முடியாமல், பிரச்னைகளை எதிர்கொள்ளவும் தெரியாமல் மனதைக் குழப்பிக்கொள்பவர்களே இன்று அதிகம்.


இந்த ரீதியில் பார்த்தால், மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை. பள்ளி செல்லும் குழந்தைகளிடம்கூட மன அழுத்தம் புகுந்துவிட்டது என்பதுதான் வேதனை.


மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருக்கத் தெரிந்துகொண்டால், ஆரோக்கியமாக வாழ முடியும். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் நுட்பம் இயற்கையாகவே வந்துவிடாது. அவற்றை நாம் கற்று நம் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப அமைத்துக்கொண்டால் மன அழுத்தத்தை வெல்லலாம்.


'வா‌ய்‌ ‌வி‌ட்டுச் ‌சி‌ரி‌த்தா‌ல், நோ‌ய் ‌வி‌ட்டு‌ப் போகும்' எ‌ன்ற பழமொ‌ழி, மன அழு‌த்த‌த்‌துக்கு மிகச் சரியாகப் பொரு‌ந்து‌ம். மன அழுத்தம் என்றால் என்ன? அது ஏற்படுத்தும் பாதிப்புகள்,  அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றி மனநல மருத்துவர்கள் பி.ஆர்.ராஜேஷ் குமார், ஆவுடையப்பன், பொது மருத்துவர் நாகராஜன் ஆகியோர் இங்கே  பகிர்ந்துகொள்கின்றனர்.
  இனி, எல்லாம் சுகமே! வாழ்த்துக்கள்!

அன்பு எங்கே வாழ்ந்தது?!



அன்பினால் உலகையே வளைத்து விடலாம் என்று நினைத்தேன். கடைசியில் வளைந்தது. என்னவோ நான்தான். அன்பு செலுத்தியதால் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறேன் என்ற புலம்பலைக் கிட்டத்தட்ட எல்லோரிட மும் கேட்க முடிகிறது. நமது துன்பத்துக்கு காரணம் அன்பல்ல.... பற்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 
அன்புக்கும் பற்றுக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு. நந்தவனத்தில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றில் சில மலர்களே இறை வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மீதமுள்ளவை பதில் புன்னகையைக் கூட எதிர்பாராமல் சிரிக்கின்றன. அன்பு எதிர்பார்ப்புகள் அற்றது பற்று, எதிர்பார்ப்புகள் நிறைந்தது. நாம். அன்பு செலுத்துகிறோம் என்ற பெயரில் மூட்டை மூட்டையாக எதிர்பார்ப்புகளையும் சேர்த்துச் செலுத்துகிறோம்.


 அதனால் ஏமாற்றங்களை சந்தித்துத் துவண்டு போகிறோம். அன்பு ஏமாற்றம் அடைவதில்லை. ஏனெனில் அன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆங்காங்கு பயிர்களுக்கும் உயிர்களுக்கும் உயிரூட்டியபடி நகர்ந்து கொண்டிருக்கும் நதியைப் போல அன்பு உடையவனின் வாழ்க்கையும் உயிரோட்டத்துடன் இருக்கிறது. இடையறாது அன்பு செலுத்துதலே தனது இயல்பாகக் கொண்டவனின் எண்ணங்கள் மேன்மையானவையாக இருக்கும். அவனது சொற்களில் தூய்மையும் இனிமையும் ததும்பும் செயல்கள் சமுதாயத்துக்கு நன்மை பயப்பனவாக இருக்கும்.


சிறு வயதில் ஆசையாக மணல் வீடு கட்டி பிறகு காலால் அதை எட்டி உதைத்துவிட்டு வந்தவர்கள்தான், இப்போது பொருட்கள் மீதும் மனிதர்கள் மீதும் பற்று வைத்து கவலைக் கடலில் ஆழ்ந்து கிடக்கின்றனர். தனது காரின் மீது சின்ன கீறல் விழுந்தாலும், தன் உடலிலேயே கீறல் விழுந்தது போல் துடிப்பவர்கள் உண்டு பற்று கொண்டவன் தன்னையும் அறியாமல் பிறரது சுதந்திரத்தில் குறுக்கிட்டு தனது சுதந்திரத்தையும் நிம்மதியையும் சேர்த்து இழக்கிறான். பற்றற்றவனோ, பிறருக்கும் சுதந்திரம் அளித்து தானும் சுதந்திரமாக இருக்கிறான்.


 பறவையின் மீது பற்று கொண்டவன். அதை கூண்டில் அடைக்கிறான். பறவையைப் பாதுகாக்கும் பொறுப்பில் தானும் சிக்கிக் கொள்கிறான். அதே பறவையின் மீது அன்பு செலுத்துபவன் அது ஆகாயத்தில் பறப்பதை ஆனந்தமாக வேடிக்கை பார்க்கிறான். பற்று பந்தப்படுத்துகிறது. அன்பு, விடுதலை அளிக்கிறது பற்று கொண்டவன், தன்னைச் சுற்றி வட்டங்கள் போட்டுக் கொண்டு தானும் அதில் சிக்கிக்கொள்கின்றான்.


அன்பு கொண்டவன். எல்லைகளைக் கடந்தவனாக நிம்மதியை சுவாசிக்கிறான். பற்று குறுகிக் கொள்கிறது அன்பு பரந்து விரிகிறது. வாழ்க்கை என்பது அன்பால் விரியும் வட்டம்! சுவாமி விவேகானந்தரது சிறு வயதில், அவரைப் பெற்றெடுத்த அன்னையும், சில சகோதர, சகோதரிகளும் இருந்தனர். அவரது வட்டம் விரிந்தது. அவர் ராமகிருஷ்ணரின் சீடரானதும் அன்னை சாரதாதேவி அவருக்கு அன்னையானார். ராமகிருஷ்ணரின் பிற சீடர்கள், சகோதரர்கள் ஆனார்கள். வட்டம் விரிந்தது பாரதம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு குமரி முனையில் தவம் செய்தார்.


பாரதத் தாய் அன்னையானாள் பாரத தேசத்தவர் அனைவரும் அவரது சகோதர சகோதரிகள் ஆனார்கள். வட்டம் இன்னும் விரிவடைந்தது. சிகாகோவில் உலக மதங்களின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார் இப்போது உலக அன்னை அவரின் அன்னையானாள். உலக மக்கள் அனைவரும் அவரின் சகோதர சகோதரிகள் ஆனார்கள்.


 ‘அமெரிக்க நாட்டு சகோதர - சகோதரிகளே!’ என்று அவரின் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்த அந்த தூய சொற்கள் பொருளியலில் மூழ்கி, குறுகிய மனம் படைத்தவர்களாக துயரத்தில் ஆழ்ந்திருந்த எண்ணிலடங்கா மக்களுக்கு ஆறுதல் அளித்தது. அன்பில் இருந்து உதித்த அவரது சொற்கள், வாழ்க்கையை பற்றிய விசாலமான பார்வையையும் பாரத நாட்டின் அருளியல் சிந்தனையையும் இன்றும் உணர்த்திக்கொண்டிருக்கிறது. பற்று சுயநலம் மிக்கது அன்பு, சுயநலமற்றது!


ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு திட்டத்துடன் உலகில் பிறந்திருக்கிறான். நமக்குக் குழந்தைகளாகப் பிறந்துவிட்ட காரணத்தாலேயே அவர்கள் மீது நமது கருத்துகளைத் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சின்னஞ்சிறு குழந்தையைப் பார்த்து நீ வைத்தியராகவா பொறியியலாளராகவா என்னவாக விரும்புகிறாய்?’ என்று கேட்கிறோம். அந்தப்பிஞ்சு மனதுக்குள் ஓர் உயர்ந்த கவிஞனோ, ஓவியனோ உறங்கிக்கொண்டிருக்கலாம்.


அவனைத் தட்டி எழுப்ப நமக்குத் தெரிவதே இல்லை. ‘உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வரவில்லை. உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள். கலீல் ஜிப்ரானின் வசீகர வரிகள் இவை! தவறு செய்யும் குழந்தைகளை அல்லது குடும்பத்தினரைக் கண்டிப்பதோ அறிவுறுத்துவதோ தவறு இல்லை. நம் எண்ணப்படி அவர்கள் நடக்கவில்லையே என்று கவலைக்கடலில் ஆழ்வதுதான் தவறு.


மாற்றங்கள் இயல்பாக நிகழும் வரை பொறுமை அவசியம் தானே மலர்ந்த மலருக்கும் நாம் தட்டியதால் வலிக்க வலிக்க இதழ்களை விரித்த மலருக்கும் வித்தியாசம் உண்டு. பற்று, பதட்டத்தில் ஆழ்ந்து புலம்புகிறது. அன்பு, பொறுமையாகச் சிந்தித்துப் புரிந்துகொள்கிறது. அன்பு கொண்டவன், எவரையும் உடைமைப் பொருளாகக் கருதுவது இல்லை. அவன் தனது உடைமைகளின் மீது கூட உரிமை கொண்டாடுவது இல்லை. புகையிரதத்தில் பயணிக்கிறோம்.


ஆறு மணி நேர பயணத்தில் இது எனது இடம்; அது உனது இடம் என்று சண்டை ஓய்வதற்குள் சேருமிடம் வந்துவிடுகிறது. வாழ்க்கையிலும் இப்படித்தான்! வாழும் சிறிது காலத்துக்குள், இது எனது நிலம், அது உனது நிலம் என்று சண்டையிட்டு என்னுடையவர் உன்னுடையவர் என்று பிரிவினை பேசி, துன்பத்தை வளர்த்துக் கொள்கிறோம்.


பற்று கலவாத உண்மையான அன்பு தெய்வீகம் ஆனது. ஆற்றல் மிக்கது அது. உலகையே அரவணைத்துக் கொள்ளும். உலகப் பற்றில் திழைத்திருப்பவனுக்கு கடவுளைப் பற்றிக்கொள்ள நேரமில்லை. கடவுளுக்கென ஒதுக்க அவன் உள்ளத்தில் இடமும் இல்லை! பற்றற்றவன், கடவுளை பற்றிக் கொண்டு கடவுளை எங்கும் காணும் அறிவை அடைந்து அந்தப் பற்றையும் நீக்கி விடுகிறான்.


ஆனந்தத்தில் நிலைத்திருந்து. எங்கும் அன்பை பாய்ச்சுகிறான். அனைத்திலும் பரம்பொருளைக் காண்பதே ஆன்மீகத்தின் அறுதித் தத்துவம். பற்றை நாம் நீக்கத்தான் வேண்டும். இல்லையெனில் பற்றுக்கு உரிய பொருளையோ மனிதரையோ காலம் நம்மிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்துச் சென்றுவிடும். பற்றை துறப்பதே உண்மையான துறவு உலகை வெறுத்து ஒருவன் துறவியாக முடியாது.


அனைத்திலும் தன்னையே கண்டு அந்த ஞானத்தால் பற்றறுத்தவனே உண்மையான துறவி!

திருமணம் முடித்த கையோடு புகுந்த வீட்டில்?

திருமணம் முடித்த கையோடு புகுந்த வீட்டில் கைதட்டல் வாங்க......


திருமண ஷாப்பிங், பியூட்டி பார்லர் என்று குஷியாக இருக்கும் புதுப்பெண்கள், அடுத்த மாதம் முதலே ஒரு குடும்பத்தைக் கட்டி ஆளும் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற்றுவிடுவார்கள். குறிப்பாக முன்பின் அறிமுகமில்லாத வீட்டின் நிதி நிர்வாகம் அவர்கள் கைக்கு வரும். கணவரின் சம்பளம், இன்ஷூரன்ஸ், லோன், வரி என்று அவற்றை ஆரம்பம் முதலே திறம்பட திட்டமிட்டு, புகுந்த வீட்டில் கைதட்டல் வாங்க இங்கே அணிவகுக்கின்றன அத்தியாவசியமான நிதி ஆலோசனைகள்...


தனிக்குடித்தன தயாரிப்புகள்!


திருமணம் முடித்த கையோடு, ஃபர்னிச்சர் முதல் பாத்திரங்கள் வரை வாங்க வேண்டியிருக்கும். தனிக்குடித்தனம் என்றால், இது கட்டாயம். இப்படி வாங்கும்போது, நீண்டகாலத்துக்கு பயன்தரும் வகையில் யோசித்து வாங்குவது நல்லது.


வீட்டுக்கு வந்து போகும் பெற்றோர், உறவினர்களுக்கு ஏற்றபடியும், குழந்தைகள் வளரும்வரை அவர்களின் சேட்டைக்குஈடுகொடுக்கும் விதமாகவும் ஒவ்வொரு பொருளையும் வாங்கினால், 'எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' என்று இடையிடையே காசை விரயமாக்காமல், கொடுக்கும் விலைக்கு ஏற்ற பலனைப் பெறலாம்.

 உதாரணமாக... 

ஃப்ளாட் டி.வி. வாங்கிய பின், 'எல்.சி.டி வாங்கியிருக்கலாம்' என்று அலைபாய்வது வேண்டாம். பிறக்கப் போகும் குழந்தையையும் மனதில் கொண்டு டபுள் பெட்டுக்கு பதிலாக, முன்கூட்டியே டிரிபிள் பெட் என்பதாக கட்டில் வாங்கிவிடலாம்!


குழந்தைக்குப் பின் வேலை..?


வேலைக்குச் செல்லும் பெண்கள், குழந்தை பிறந்த பின், வேலையைத் தொடர்வது அல்லது விடுவது பற்றி முன்கூட்டியே கணவருடன் கலந்து பேசி முடிவெடுங்கள். சில வருடங்கள் மட்டும் வேலைக்கு பிரேக் விட முடிவெடுக்கும் பெண்கள், குழந்தை வளர்ப்பினூடே தங்களின் தகுதியை உயர்த்திக் கொள்ளவும் அந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தலாம்.


சாஃப்ட்வேர் துறை பெண்கள், வளர்ந்து வரும் துறைகளான மொபைல் ஆப்ஸ், க்ளவுட் அப்ளிகேஷன், பிக் டேட்டா போன்ற ஆன்லைன் கோர்ஸ்களைக் கற்கலாம். அக்கவுன்டன்ஸி துறையிலிருப்பவர்கள் வீட்டில் இருந்தபடியே இன்கம்டாக்ஸ் ஃபைல் பண்ணும் வேலையை தெரிந்தவர்களுக்கு செய்து கொடுத்து, வருமானம் பார்க்கலாம். அரசு வேலை, வங்கி வேலைகளில் விருப்பமுள்ளவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்ளலாம்.
எமர்ஜென்ஸி தொகை!


வரவு - செலவு, நீண்டகாலத்துக்கான முதலீடு, சேமிப்பு தவிர, எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கையில் எமர்ஜென்ஸி தொகை எப்போதும் இருப்பது நல்லது. குழந்தை பிறந்த பின் செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்பதால், இந்தத் தொகையை, குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது குழந்தை பிறந்த ஆரம்ப வருடங்களிலேயே தயார் செய்து வைப்பது புத்திசாலித் தனம்.


வருமான வரி விவரங்கள்!


இன்கம்டாக்ஸ் நடைமுறைகள் பற்றி தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அதன் சாதக, பாதகங்களை புரிந்து கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, குழந்தைகள் பெயரில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால் அதில் வரும் லாபத்தை பெற்றோரின் வருமானத்தில் சேர்த்துக் கணக்குக் காட்ட வேண்டும். என்றாலும், ஒரு குழந்தைக்கு 1,500 ரூபாய் வரை என்கிற விகிதத்தில் வருமான வரிவிலக்குக் கோரலாம். முதலீடு செய்யும்போதே, முதலீட்டு ஆலோசகரை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.


எதிர்கால நிதி திட்டமிடல்!


இன்றைய சூழலில், எடுத்த எடுப்பிலேயே வாங்கும் செழிப்பான சம்பளத்தில் 30 வயதுக்குள்ளாகவே வீடு, கார் என்று எல்லாம் சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. எனவே, 'அதுக்குள்ளயா..?' என்று தயங்காமல், அதற்கான முயற்சியை தாமதிக்காமல் முடுக்குங்கள். லேண்ட் லோன், ஹவுஸிங் லோன் பற்றிய விவரங்களை சேகரியுங்கள். காலம் வரும்போது, சட்டென சொந்த வீட்டுக் கனவை நனவாக்குங்கள். அதேசமயம், ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன் ஏரியாக்களில் பெருகிக் கிடக்கும் ஏமாற்று வேலைகளிலும் கவனமாக இருங்கள். இன்னொரு பக்கம், குழந்தையின் பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு, திருமணம் என பிற் காலத்திய செலவுகளை மேலோட்டமாகவாவது திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.


வீண் செலவுகள் வேண்டாம்!


ஒரு குட்டி ஜீவன் வந்த பின், குழந்தைகளுக்கென்று மார்க்கெட்டில் குவிந்து கிடக்கும் பொருட்கள் அனைத்தையும் வீட்டுக்குக் கொண்டு வர மனம் பரபரக்கும். பெரும்பாலும்... குழந்தைகளுக்கான பயன்பாட்டைவிட, பெற்றோரின் ஆசைகளைத் தூண்டும் வித மாகவே அவை தொடர்பான விளம்பரங்களும், பொருட்களும் இருக்கும். எனவே, 'குழந்தைக்காக' என்ற மாயையில், காசைக் கரைக் காதீர்கள். எதை வாங்கினாலும், தேவையானதாக இருக்க வேண்டுமே தவிர, அடுத்தவர்களிடம் நம் ஆடம்பரத்தைக் காட்டுவதற்காக இருக்கக் கூடாது.


மெட்டர்னிடி லீவ் பாலிஸி! 


வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகத்தின் மெட்டர்னிடி லீவ் பாலிஸி பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். பேறுகால விடுப்பு எத்தனை மாதங்கள் என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு, பிரசவத்துக்கு முன், பின் என்று அந்த விடுப்பை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதைத் திட்டமிடுங்கள்.

சிலருக்கு கர்ப்பம் தரித்த ஆரம்ப மாதங்களில் உடம்பு அலுவலகச் சூழலுக்கு ஒத்துழைக்காது போகும். அப்போது எடுக்கும் விடுப்பு, பேறுகால விடுப்பில் சேராது. என்றாலும், அது 'லாஸ் ஆஃப் பே' ஆகிவிடாமல், மெடிக்கல் லீவாக மாற்றிக்கொள்ளும் அனுகூலத்தை ஆராயுங்கள். சில அலுவலகங்களில் அப்பாவாகும் ஆண்களுக்கும் மனைவியின் பேறுகாலத்தில் 'பெட்டர்னிடி லீவ்' (Paternity leave) வழங்குவார்கள்... பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?



ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?


அக்காலத்தில் எல்லாம் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வேண்டுமானால், பெயிண்ட் பிரஷ் தான் பயன்படுத்துவோம். ஆனால் தற்போது மிகவும் எளிமையான முறையில் வீட்டில் பெயிண்ட் அடிக்க ஸ்ப்ரே போன்ற ஒரு கருவி வந்துள்ளது. இப்படி வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால் நல்லதல்ல என்று பலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஏன் என்று தெரியுமா?


அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று வீட்டின் சுவற்றிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால், அது சீக்கிரம் போவதோடு, உடலுக்கு தீங்கையும் விளைவிக்கும். இங்கு அந்த ஸ்ப்ரே பெயிண்ட்டை எதற்கு பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் ஸ்ப்ரே பெயிண்ட் அடிப்பதை தவிர்த்திடுங்கள்.


ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?


* வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால், அதிலிருக்கும் கெமிக்கல்களின் நாற்றம் அவ்வளவு எளிதில் நீங்காமல் இருப்பதோடு, அந்த கெமிக்கல்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சுவாசக் கோளாறை ஏற்படுத்திவிடும்.


* ஸ்ப்ரே பெயிண்ட்டானது, சாதாரண பெயிண்ட்டை விட எளிதில் போகக்கூடியது.


* மேலும் இந்த ஸ்ப்ரே பெயிண்ட் மிகவும் விலை அதிகமானது. அதுமட்டுமின்றி, நம் மக்களின் மனதில் விலை அதிகமான பொருட்கள் நல்ல தரமாக இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்புகின்றனர். அதனால் தான் பலர் இதனைப் பற்றிய உண்மையை சொன்னாலும் கேட்க மறுக்கின்றனர்.


* ஸ்ப்ரே பெயிண்ட் தண்ணீரை அதிகம் உறிஞ்சக்கூடியவை. அதிலும் மழைக்காலங்களாக இருந்தால், இந்த பெயிண்ட் தண்ணீரை உறிஞ்சி வீட்டின் உள்ளே ஆங்காங்கு ஈரப்பதமாக வைத்திருக்கும். அதுமட்டுமின்றி, அந்த ஈரப்பதம் உலர்ந்துவிட்டால், அங்கு திட்டுகளாக காணப்படும்.


* குறிப்பாக ஸ்ப்ரே பெயிண்ட் நுரையீரலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. எனவே தான் ஸ்ப்ரே பெயிண்ட்டை பயன்படுத்த வேண்டாம் என்று பலர் சொல்கின்றனர்.

பெஸ்ட் கன்ட்ரோல் - கரப்பான்பூச்சி, எலி, பல்லி...



பெஸ்ட் கன்ட்ரோல் - கரப்பான்பூச்சி, எலி, பல்லி, எறும்பு...


இல்லத்தரசிகளுக்கு தீராத தலைவலிகள் என்று பெரிய பட்டியலே இருக்கும்...

 அதில் பூச்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டாயம் இடமுண்டு. ஆம்...

கரப்பான்பூச்சி, பல்லி, எலி, எறும்பு, மூட்டைப்பூச்சி என வீட்டில் வாழும் 'ஜீவன்'களின் தொல்லை... தாங்க முடியாத தொல்லையே.

 'அடச்சே...

என்ன செய்தாலும் இதையெல்லாம் ஒழிக்க முடியலையே' என்று புலம்பிக்கொண்டே இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு, அவற்றை விரட்டி
அடிக்கும் வழிகள்...


கெட் அவுட் கரப்பான்பூச்சி!


''பொதுவாக ஈரம், இருட்டுள்ள இடங்களிலும், சமையலறையிலும் கரப்பான்பூச்சியின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பூச்சிக்கொல்லி ஸ்பிரே உள்ளிட்ட ரசாயன பொருட்களை உபயோகித்து விரட்ட முயற்சிக்கும்போது, அந்த ரசாயனங்கள் காற்றில் கலந்து... அரிசி, மாவு, மசாலா பொருட்கள் போன்றவை திறந்திருந்தால், அதில் கலந்துவிட அதிக வாய்ப்பு உண்டு. காற்றை கிரகிக்கும் தன்மையுள்ள மாவுப்பொருட்கள், இந்த ரசாயனங்களின் தன்மையை இழுத்துக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது. எனவே, கரப்பான்பூச்சிகளை அழிக்க... ரசாயன ஸ்பிரேக்கள் வேண்டாம்.


தற்போது புதிய வகை ஜெல், சந்தைக்கு வந்துள்ளது. கரப்பான்பூச்சிகளின் நடமாட்டம் இருக்கும் இடங்களில் இதை பொட்டு போல ஆங்காங்கே வைக்க வேண்டும். நேரம் ஆக ஆக இது இறுகும். உணவு வேட்கையில் வரும் கரப்பான்பூச்சிகளை இந்த ஜெல்லின் நறுமணம் ஈர்க்க, இறுகி இருக்கும் இந்த ஜெல்லை தன் எச்சிலால் அவை இளக்கி சாப்பிட, அந்த நிமிடமே இறந்துபோகும்.


உடைந்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு போன்ற பொருட்களை அரைத்து, ஊசிப்போக வைத்து, அதனுடன் ரசாயனங்களைக் கலந்து உருவாக்கப்படும் இந்த ஜெல், நம் கிச்சன் பொருட்களைப் பாதிக்காது. மேலும், இதை சாப்பிட்ட உடனேயே கரப்பான்பூச்சி இறந்துபோவதால், மற்ற பொருட்களிலும் ரசாயனங்கள் கலந்துவிடுமோ என்கிற கவலையும் இல்லை.


பை பை பல்லி!


கடைகளில் விற்கும் கெமிக்கல் ஸ்பிரேக்களை பல்லியின் மீது அடித்து, அதை அழித்துவிடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அதை உபயோகிக்கும் நுணுக்கம் அறிந்துகொள்வது அவசியம். பல்லியின் மேல் தோலானது, மெழுகு போன்ற தன்மை கொண்டது என்பதால், நாம் அடிக்கும் ஸ்பிரே அதனை பாதிக்காது. மாறாக, பல்லியின் முகத்துக்கு நேராக கெமிக்கல் ஸ்பிரேவை அடிக்கும்போது, பல்லியின் நாக்கில்பட்டு உட்செல்லும்போது, அது இறந்துபோகும்.


ஒழிக எலி!


சுண்டெலி, மளிகைக் கடைகளில் இருக்கும் எலிகள், பெருச்சாளி என்று எலிகளில் மூன்று வகைகள் உள்ளன. இதில் மளிகைக் கடைகளில் இருக்கும் வகையறா எலிகள், குட்டி போடும் சமயத்தில் மட்டும்தான் ஒரே இடத்திலோ... அல்லது வீட்டிலோ இருக்கும். மற்றபடி எந்த ஓர் இடத்திலும் நிரந்தரமாக இருக்காது. சுண்டெலி, எந்த வீட்டில் இருக்கிறதோ அங்கு மட்டும்தான் நிரந்தரமாகக் குடியிருக்கும். அந்த வீட்டின் ஓர் அறையில் இருந்து மற்றோர் அறைக்கு தாவிக்கொண்டே இருக்கும். பெருச்சாளி வீட்டுக்குள் வராது. வீட்டைச் சுற்றி ஓடும் அல்லது சாக்கடைப் பொந்துகளில் குடியிருக்கும்.


வீட்டில் குடியிருக்கும் சுண்டெலியை விரட்ட, 'கம் பேட்' (Gum pad) என்கிற புதுவித பொறி கடைகளில் கிடைக்கிறது. நோட்டுப் புத்தகத்தை விரித்து வைத்ததுபோல இருக்கும் இந்த பேட். அதன் மேல் வெள்ளை நிறத்தில் கம் இருக்கும். எலி நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் இந்த பேடை வைத்துவிடுங்கள். ஓடி வருகிற எலி இதில் கால் வைக்கும்போது, நகர முடியாத அளவுக்கு ஒட்டிக் கொண்டுவிடும். காலையில் அப்படியே தூக்கி வெளியே போட்டுவிடலாம்.


 ஒருவேளை இந்த பேடில் உள்ள கம் கீழே கொட்டிவிட்டால்... கெரசின் கொண்டுதான் துடைத்தெடுக்க முடியும். தப்பித் தவறி இதில் கை, கால் என்று நம்முடைய உடல் பாகங்கள் பட்டாலும் ஒட்டிக்கொள்ளும். அப்படி ஒட்டிக்கொண்டு விட்டால்... நெயில் பாலிஷ் ரிமூவரை பயன்படுத்தி நீக்கிவிடலாம். பிறகு, சோப்பு கொண்டு உடல்பாகத்தை சுத்தமாக கழுவிவிடுவது முக்கியம். இந்த கம் பேட், இரவு நேர உபயோகத்துக்குத்தான் நல்லது. ஆட்கள் அதிகம் நடமாட்டமிருக்காது என்கிற நிலையில், பகலிலும் பயன்படுத்தலாம். என்றாலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் அதைப்பற்றி அறிவித்துவிடுவது நலம்.


அடுத்ததாக, மளிகைக் கடையில் இருக்கும் எலிகள் வீட்டில் இருந்தால், ஸ்பிரிங் எலிப்பொறி (மர எலிப்பொறியைவிட இது சிறந்தது) வைத்துப் பிடிக்கலாம். ஆனால், எலிகளுக்கு ஞாபகசக்தி அதிகம். முதல் நாள் எலிப்பொறியை பார்த்து அதில் மாட்டாமல் தப்பிவிட்டால், மறுநாள் அந்தப் பக்கம் செல்லாது. எனவே, எலிகள் அதிகம் புழங்கும் இடத்தில் ஒன்றுக்கும் அதிகமான எலிப்பொறிகளை வைத்து, அது எந்தப் பக்கம் நகர்ந்தாலும் மாட்டுவது போல ஏற்பாடுகள் பலமாக இருக்க வேண்டும்.


பெருச்சாளிகள் வீட்டுக்குள் வருவது அபூர்வமே. அதேசமயம், கடைகளையட்டி சர்வசாதாரணமாக நடமாடும். பெருச்சாளிகளைப் பொறுத்தவரை எலி பாஷாணம் ஒன்றுதான் தீர்வு. விஷம் தோய்ந்த சின்ன கேக் வடிவத்தில் இது விற்கப்படுகிறது. பெருச்சாளி நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இதை வைத்துவிட்டால்... உணவுப் பொருள் என்று நினைத்து சாப்பிடும் பெருச்சாளிகள், இறந்துவிடும்.

உன்னதமான உறவு!!!



ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் ,ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு .ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும் ,கசப்பையும் ,இனிப்பாக்க வல்லது இவ் உறவு .புது புது உறவுகளை உருவாக்க கூடியது .இதை விட புனிதமான உறவும் இல்லை நெருக்கமான உறவும் இல்லை, இது ஒரு தெய்விகமான உறவு .


இன்றைய காலகட்டத்தில் நமது அறியாமையால், நமக்கு நாமே ஏற்ப்படுத்தி கொள்கின்ற பொருளாதார சிக்கல்களினால், ஆளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளால் , தனது ஆதிக்கமே நடைபெற வேண்டுமென்ற தன்முனைப்பால் உண்மையான உறவுகள் பல உடைந்து போகின்றது .


ஒருவரின் பெருமையை ஒருவர் உணராத சிறுமையால் இன்று பரவலாக பல இல்லங்களில் கணவன் மனைவி உறவு தன் புனிதத்தை இழந்து புழுதியாகிவிட்டது ,இந்த உறவின் வீழ்ச்சியால் தான் உருவாகிறது ,சமூகதின் அத்தனை வீழ்ச்சிகளும் .உடல்களை பகிர்ந்து கொண்ட அளவிற்கு உள்ளங்களை பகிர்ந்து கொள்ளாததே இந்த வீழ்ச்சிக்கு முழுக்காரணம் .


எந்த வீட்டில் ஒரு பெண்ணை அடக்கி ஆண் வெற்றி பெறுகிறானோ ,அங்கே வெல்வது ஒரு மிருகம் ,எந்த வீட்டில் ஆணை அடக்கி பெண் ஜெயிக்கிறாளோ அங்கே ஒரு பிடரி ஜெயித்ததாகப் பொருள் .


தலை தாழ்ந்த பெண்ணும் தலை உயர்த்திய ஆணும் உள்ள இல்லத்தில் இருமனம் இணைந்து அன்பாலும் நம்பிகையாலும் இன்ப துன்பங்களை இணைத்து பகிர்கிறது .

நினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன?



சென்ட்டர் ஃபர் சிஸ்ட்டம்ஸ் நியூராலஜி, பாஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் உள்ளது. அங்கே ஆராய்ச்சி செய்யும் லாங்குயன் லின் மற்றும் ஜோ டிரெய்ன் என்ற இரு நரம்பியல் வல்லுநர்கள், அண்மையில் வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சி முடிவுகள் மூளையில் எப்படி நினைவுகள் பதிவாகின்றன என்பதை ஓரளவுக்கு விளக்குவதாக உள்ளது. நரம்புக்கூட்டத்தின் சமநேர மின்துடிப்பே நினைவுகள்.


நேரடியாக மின் முனைகளை எலிகளின் மூளையில் பதித்து, அவை இயல்பாக நடமாடும்போதே நினைவுகள் எப்படி பதிகின்றன என்பதை நவீன கருவிகள் கொண்டு ஆராய்ந்தனர். தக்க புள்ளியியல் கணக்குகளைப் பயன்படுத்தி தகவல்களை தொகுத்திருக்கின்றனர்.


நரம்பு செல்களின் வழியாகப் பாயும் மின்சார ஒட்டம்தான் நினைவுகள் என்பதை பொதுவாக எல்லோருமே ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின்படி ஒரே சமயத்தில் துடித்து செயல்படும் நரம்பு செல் கூட்டங்களே குறிப்பிட்ட நினைவுகளுக்குக் காரணம் அவற்றில்தான் நினைவுகள் சேமிக்கப்பட்டிருக்கின்றன என்பது முடிவு.


உணர்வுகள்-நினைவுகள்-பயிற்சிகள் ஆகியவை அனைத்தும் வெவ்வேறு நரம்புசெல் கூட்டங்களாக சேமிக்கப்பட்டுள்ளன என்பது நிரூபணமாகியுள்ளது. எப்படி நரம்புக்கூட்டத்தில் நினைவுகள் பதிகின்றன என்பதை இன்னமும் தெளிவாகப் புரிந்துகொண்டால், கைகளைப் பயன்படுத்தாமல் எண்ணங்கள் மூலமாக கருவிகளைக் கட்டுப்படுத்துல், தானாகச் சிந்தித்து செயலாற்றும் ரோபாட்டுகளை (உருபிகள்) உருவாக்குவது, மனத்தில் உள்ளதை குறியீடுகளாக மாற்றி கம்யூட்டரில் இறக்கி சேமித்து வைத்துக்கொள்வது போன்ற தொழில் நுட்பங்கள் வளரும்.


பாஸ்ட்டன் பல்கலை விஞ்ஞானிகள் ஒரு பரிசோதனையில் இரண்டுவித எலிகளைப் பயன்படுத்தினார்கள். ஒன்று மரபியல் மாற்றத்தின் மூலம் கெட்டிக்கார எலியாக மாற்றப்பட்டது. “டூகி” என்பது அதன் பெயர். இதற்கு நேர்மாறாக படுமந்த புத்தியுடைய எலியையும் உருவாக்கி இருக்கிறார்கள். இரண்டையும் வைத்துக்கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.


வாழ்நாளில் எத்தனையோ கோடி காட்சிகளைப் பார்க்கிறோம் பேச்சுகளை கேட்கிறோம், ஆயினும் திடுக்கிடும் நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளத்தைத் தொடும் சம்பவங்கள் மட்டுமே நினைவில் ஆழமாகப் பதிகின்றன. எனவே ஆராய்ச்சி மேற்கொள்ளவிருக்கும் எலிகளுக்கும் மூன்று விதமான திடுக்கிடும் சம்பவங்களை வழங்குகினார்கள்.

உலகில் மிகவும் குட்டியாக இருக்கும் 14?

உலகில் மிகவும் குட்டியாக இருக்கும் 14 உயிரினங்கள்!!!


இந்த பெரிய உலகில் வாழும் நாம், பெரியது முதல் சிறியது வரை நிறைய உயிரினங்களைப் பார்த்திருப்போம். அதிலும் ஒரு சாதாரண அளவில் இருக்க வேண்டிய உயிரினமானது அளவுக்கு அதிகமாக பெரிய உருவத்தில் காணப்பட்டால், உலகில் உள்ளோரால் அதிசயமாக பார்க்கப்படுகின்றனவோ, அதேப் போல் மிகவும் சிறிய அளவில் காணப்பட்டாலும் அதிசயிக்கத்தக்கவையே.


ஆனால் ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால், அப்படி சிறியதாக இருக்கும் உயிரினங்களின் வாழ்நாள் மிகவும் குறைவாகவே இருக்கும். அதுமட்டுமின்றி இப்படி ஒரு சாதாரண உயிரினமானது மிகச்சிறிய அளவில் இருப்பதற்கு காரணம் பிறப்பு குறைப்பாடுகள் தான்.


இங்கு தமிழ் போல்ட் ஸ்கை, வளர்ச்சி குறைபாடு மற்றும் பிறப்பு குறைபாட்டினால் மிகவும் சிறியதாக இருக்கும் சில உயிரினங்களை உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளது. இவை அனைத்தையும் ஒரு கையினால் என்ன, ஒரே விரலால் கூட தூக்கலாம்.


இப்போது உலகில் இருக்கும் மிகச்சிறிய உயிரினங்களைப் பார்ப்போம். மேலும் இவை அனைத்தும் செல்லப் பிராணி போன்று சரியான பராமரிப்புடன் வளர்க்கப்படுகின்றன.

  
பான்டா




இந்த சிறிய பான்டா 51 கிராம் தான் உள்ளது. இது தற்போது சீனாவில் உள்ளது.


பூனை



இந்த அழகான பூனையின் உயரம் 19.2 இன்ச் தான். இது தான் உலகிலேயே மிகவும் சிறிய பூனை. தற்போது இந்த பூனைக்கு 2 வயது இருக்கும்.
  
  
மறிமான் (Antelope)



படத்தில் காட்டப்பட்ட இது ஒரு வகையான மான். இந்த மறிமான் 20 செ.மீ உயரதும், 1.3 கிலோ எடையும் கொண்டது.
  
  
மீன்




படத்தில் காட்டப்பட்ட இந்த மீனானது 7.9 மி.மீ நீளத்தில் தான் இருக்கும். மேலும் இது மலேசியாவில் உள்ள அமில சதுப்பு நீரில் தான் நீந்தும்.
  

தவளை




உலகிலேயே மிகச்சிறிய தவளை என்றால் அது பிரேசிலியன் கோல்டன் தவளை தான். இந்த குட்டித் தவளையின் நீளமே 9.8 மி.மீ. தான். இது ஆப்பிரிக்க காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
  

பறவை




இந்த ரீங்கார பறவை தான் உலகிலேயே மிகவும் சிறிய மற்றும் க்யூட்டான உயிரினம்.
  
  
பாம்பு




பாம்பு குடும்பத்திலேயே மிகவும் சிறிய பாம்பு தான் பார்படாஸ் நூல் பாம்பு. இதன் முழு வளர்ச்சியே 4 இன்ச் தான் இருக்கும்.
  
  
பல்லி




இந்த சிறிய பல்லி 16 மி.மீ. நீளம் தான் இருக்கும்.
  
  
குரங்கு





பிக்மி மார்மோசெட் குரங்கு கூட உலகிலேயே மிகச்சிறிய உயிரினங்களில் ஒன்று தான். இந்த சிறிய குரங்கின் நீளம் சுமார் 16 செ.மீ. இருக்கும். இதன் பிரதான உணவு மரங்களில் இருந்து வெளிவரும் பசை தான்.
  
  
குதிரை




தம்பிலினா குதிரை தான் உலகிலேயே மிகவும் சிறியது. இது ஐரோப்பாவில் உள்ளது. இந்த குதிரையின் உயரம் 17.5 இன்ச் தான் இருக்கும்.
  
  
மாடு


உலகில் உள்ள மிகச்சிறிய மாடு தான் வெச்சுர் மாடு. இந்த மாட்டின் சராசரி உயரம் 30-35 இன்ச் தான் இருக்கும்.
  
  
ஆமை


இது தான் உலகிலேயே மிகவும் சிறிய ஆமை. இது ஒரு நாணயம் அளவில் தான் இருக்கும்.
  
வௌவால்


வௌவால் என்றால் பயப்படுவோம். ஆனால் இந்த வௌவாலை செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். மேலும் இந்த வௌவாலின் நீளம் 20 மி.மீ. தான் இருக்கும்.
  
  
பச்சோந்தி



படத்தில் காட்டப்பட்ட இந்த பச்சோந்தி 1 இன்ச் தான் இருக்கும்.

குளிர்காலத்தில் மரச்சாமான்களில் பூஞ்சை...



குளிர்காலத்தில் மரச்சாமான்களில் பூஞ்சை பிடிக்காமல் இருக்க சில டிப்ஸ்...


குளிர்காலங்களில் ஏற்படும் ஒரு பெரிய தொல்லை தான், மரச்சாமான்களில் பூஞ்சை படிவது. ஆம், இந்த காலங்களில் வீட்டில் அதிகப்படியான ஈரப்பசை இருப்பதால், மரச்சாமான்களில் ஈரமானது தங்கி, பூஞ்சைகளை படிய வைக்கின்றன. இப்படி மரச்சாமான்களில் பூஞ்சை இருந்தால், அது ஆங்காங்கு வெள்ளை வெள்ளையாக காணப்படுவதோடு, மரச்சாமானின் அழகு மற்றும் தரத்தை கெடுத்துவிடுகின்றன. எனவே வீட்டில் மேஜை மற்றும் நாற்காலிகளில் மரத்தால் செய்யப்பட்டதாக இருந்தால், சரியாக பராமரிப்பது அவசியமாகும்.


அதுமட்டுமின்றி, நிபுணர்கள் வீட்டில் மரச்சாமான்கள் ஈரமாக இருந்தால், அவற்றை வெயிலில் நீண்ட நேரம் உலர வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும் மரச்சாமான்களுக்கு போதிய வெயில் கிடைக்காவிட்டால், மீண்டும் பூஞ்சை பிடிக்க ஆரம்பித்துவிடும் என்றும் கூறுகின்றனர்.


குளிர்காலத்தில் மரச்சாமான்களில் பூஞ்சை பிடிக்காமல் இருக்க சில டிப்ஸ்...


ஆகவே மரச்சாமான்களில் பூஞ்சை படியாமல் இருக்கவும், படிந்த பூஞ்சையைப் போக்கவும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கீழே சில வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன் படி செய்து வந்தால், மரச்சாமான்களை சுத்தமாகவும், பளிச்சென்றும் வைத்துக் கொள்ளலாம்.


* மரச்சாமான்களான மேஜை மற்றும் நாற்காலி ஈரமாக இருந்தால், வெளியில் எவ்வளவு நேரம் வைக்க முடியுமோ, அவ்வளவு நேரம் வைக்க வேண்டும். இதனால் மரச்சாமான்களில் பூஞ்சை இருந்தால் காய்ந்துவிடும். பின் அதனை எளிதில் நீக்கிவிடலாம்.


* ஈரமான மரச்சாமான்களில் உள்ள பூஞ்சையை துடைப்பம் கொண்டு நன்கு தேய்த்து, பின் வெயிலில் காய வைக்க வேண்டும்.


* எவ்வளவு தான் பூஞ்சையை துடைப்பம் கொண்டு தேய்த்து நீக்கினாலும், தேய்த்த இடமானது வெள்ளையாக தெரியும். ஆகவே அப்படி தேய்த்த பின்பு, வெள்ளை வினிகரில் நனைத்த ஈரமான துணியைக் கொண்டு ஒருமுறை துடைத்து எடுக்க வேண்டும்.


* வினிகர் கொண்டு துடைத்து எடுத்தப் பின்னர், அதனை வெளியே வெயிலில் குறைந்தது 2 மணிநேரமாவது உலர வைத்து, பின் சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.


* மேற்கூறியவற்றை செய்து முடித்த பின், எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அந்த கலவையை பஞ்சில் நனைத்து, அதனை மரச்சாமான்களின் மேல் ஒரு கோட்டிங் போல் தேய்த்தால், எலுமிச்சையானது மீண்டும் பூஞ்சை வராமல் தடுக்கும்.


* இறுதியில் மீண்டும் மரச்சாமான்களை வெயிலில் 1/2 மணிநேரம் உலர வைத்து எடுத்தால், உங்கள் மேஜை மற்றும் நாற்காலி புதிது போன்று பளிச்சென்று மின்னும்.


இவ்வாறெல்லாம் செய்து வந்தால், நிச்சயம் குளிர்காலங்களில் வீட்டில் இருக்கும் மரச்சாமான்களான மேஜை மற்றும் நாற்காலியை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் இன்னமும் சவாலாகவே இருக்கும் ?



இந்தியாவில் இன்னமும் சவாலாகவே இருக்கும் வரதட்சிணை....


இந்தியாவில் பெண்ணுக்கு சம உரிமை, எல்லா துறைகளிலும் பெண்களின் பங்கு, அரசியலில் பெண்களின் பங்கு என எவ்வளவோ மாறிவிட்டாலும், இன்னமும் வரதட்சிணை என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளதாக இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி ஒன்று கூறியுள்ளது.


இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெண்களை தரம் தாழ்த்தும் வகையிலான வரதட்சிணை இன்னமும் பல பகுதிகளில் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. வரதட்சிணையும், அதனால் இளம் பெண்கள் சந்திக்கும் கொடுமைகளும், இதற்கெல்லாம் ஆணி வேராக பல வீடுகளில் மாமியாரே இருப்பதும் இன்னமும் 50 சதவீதம் அளவுக்கு நடந்து கொண்டுதான் உள்ளது என்கிறது அந்த ஆய்வு. கேரளாவில் தான் ஆண்களை விட பெண்கள் விகிதம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


கேரளாவில் மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் இன்னமும் வரதட்சிணை பிரச்னை உள்ளது. ஆனால், இந்த பாதிப்பு 10 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடும் போது குறைவுதான் என்றாலும், பெண்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதில் வரதட்சிணையும் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.


வரதட்சிணை தொடர்பாக பல பெண்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.


எத்தனை தான் மாறினாலும், இன்னமும் திருமணம் என்ற பேச்சு எழுந்ததும், பெண்ணுக்கு எவ்வளவு போடுவீர்கள் என்றும், பெண்ணுக்கு எவ்வளவு போட்டீர்கள் என்ற கேள்வியும் தானே முன்னிற்கின்றன. இவையும் ஒரு நாள் உடையும் என நம்புவோம்...

சீனாவில் பிரபலமாகும் புதியவகை ஷால்!



சீனாவில் அறிமுகம் ஆகியிருக்கும் புதிவித ஷால் இதுதான்.


 இந்த ஷால் டு இன் ஒன்.


 ஷால் மறைக்க வேண்டியதையும் மறைக்கும்.


அதே நேரத்தில் குழந்தையையும் சுமக்கும்.

இப்போது இந்த ஷால் சீனப்பெண்கள் இடையே மிகவும்பிரபலம் ஆகி
வருகிறது.


இதன் விலை $69


ஆனந்தம் என்பது எது தெரியுமா?



* தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால்
 வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனைஅன்பினால் வெல்ல வேண்டும். இவையே பண்புடையோரின்
 நெறிமுறையாகும்.


 * பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய
 குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும்
 குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த
 முடியாமல் தவிப்பார்கள்.


 * உண்மையில் ஆனந்தம் என்பது எது தெரியுமா? உங்களால்
 இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக்
 கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க
 மாட்டீர்கள்.


 * மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த
 செயலைத் திரும்ப திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன்.
ஆதலால், பாவம் தரும் செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள்.
இல்லாவிட்டால், பழக்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய
 ஆரம்பித்து விடுவீர்கள்.


 * துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும்.
எவ்வித முயற்சியும் இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில்
 காணாமல் போய்விடும். பொறாமை, பேராசை மற்றும் கெட்ட எண்ணம்
 உடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகி விட
 முடியாது.

வெளிநாட்டுக் கல்வி - கொஞ்சம் திட்டமிட்டால் போதும்...


வெளிநாட்டுக் கல்வியானது பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று நினைத்தது அந்தக் காலம். கொஞ்சம் திட்டமிட்டால் போதும்; படிப்பு தகுதிகொண்ட நடுத்தர குடும்பத்து மாணவன்கூட வெளிநாடு சென்று படிக்க முடியும் என்பது இந்தக் காலம். என்றாலும், இந்த உண்மை பலரையும் சென்று சேராததற்கு காரணம், அதுகுறித்த விழிப்பு உணர்வு பரந்த அளவில் மக்களிடம் சென்று சேராததே.


வெளிநாட்டில் கல்வி வாய்ப்புகள் எப்படி உள்ளது? என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?


''இந்தியாவில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருந்தாலும், உலகளவில் டாப் 100 கல்வி நிறுவனங்களில் நம் நாட்டைச் சேர்ந்தவை எதுவும் இல்லை. வேலையுடன் கூடிய கல்வி, உடனடி வேலை வாய்ப்பைத் தரும் கல்வி என்பது இந்தியாவில் குறைவுதான்.


ஆனால், அயர்லாந்து போன்ற மிகச் சிறிய மேற்கத்திய நாடுகளில்கூட கல்வி, வேலை வாய்ப்போடு பிரிக்க முடியாதவாறு உள்ளது. இந்தியாவில் கல்லூரியில் படித்து முடித்தவர்கள் அடுத்ததாக மேற்படிப்போ, ஆராய்ச்சியோ செய்யவேண்டுமெனில், வேறு கல்வி நிறுவனங்களைத்தான் நாடவேண்டும். ஆனால், வெளிநாடுகளில், கல்லூரியில் சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு அவர்களாகவே முன்வந்து மேற்படிப்பு வாய்ப்புகளை வழங்கு கின்றனர்.


உயர்கல்வி படிப்பிற்காக இங்கு செலவிடத்  தயாராக இருக்கும் தொகைக்குள் வெளிநாட்டுப் படிப்பும் சாத்தியம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஜப்பான் போன்ற நாடுகளில், சிறந்த மாணவர்களுக்கு 60-100 சதவிகிதம் வரை ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. நான்கு வருட படிப்பில் முதல் இரண்டு வருடம் வகுப்பறை கல்வி எனில், அடுத்த இரண்டு வருடம் வேலை வாய்ப்புடன் கல்வி என்கிற வகையில், சில பாடத் திட்டங்களை எடுத்தால் கல்விக்கான செலவுகளை நாம் எளிதாக ஈடுகட்டிவிட முடியும்.


திட்டமிடல்!


ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தபிறகு மதிப்பெண் அடிப்படையில் வெளிநாட்டுக் கல்விக்கு திட்டமிடுவதைவிட, ப்ளஸ் டூ முடிப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிடுவது நல்லது. எவ்வளவு மதிப்பெண் வரும் என்கிற எதிர்பார்ப்பு, எந்த கல்வி, எந்த நாடு என்கிற தெளிவு கிடைத்துவிட்டால், விசா நடைமுறைகள் மற்றும் முன்தயாரிப்பு வேலைகளுக்கு எளிதாக இருக்கும். சில கல்வி நிறுவனங்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்கூட மாணவர் களைத் தேர்வு செய்கின்றன.


மேலும், ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை இருக்கும். நம்மூரில் மே - ஜூன் மாதங்கள் என்றால், வெளிநாடுகளில் மார்ச் - ஜூலை, ஜனவரி - செப்டம்பர் என கல்விப் பருவத்துக்கேற்ப மாணவர் சேர்க்கை நடக்கும். எனவே, கொஞ்சம் முன்கூட்டியே திட்டமிட்டால், செலவினங்கள், ஸ்காலர்ஷிப், கல்வி நிறுவனங்கள் தேர்வு போன்றவற்றை எளிதாக செய்ய முடியும்.


கல்வி நிறுவனங்கள் தேர்வு!


குறிப்பிட்ட கல்வி நிறுவனம் எவ்வளவு வருடங்கள் பாரம்பரியம் கொண்டது, சர்வதேச அளவில் அந்தக் கல்வி நிறுவனத்தின் ரேங்க், அந்நிறுவனம் வழங்கும் படிப்புகளுக்கு உள்ள சர்வதேச மதிப்பு, அங்கீகாரம், வெளிநாட்டு மாணவர்களுக்கு அந்நிறுவனம் அளிக்கும் விகிதாசாரம், எவ்வளவு பேர் படிக்கின்றனர் என்பதுபோன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.


இந்த விவரங்கள் அந்தக் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கும் என்றாலும், நமது நாட்டிலிருந்து சென்றிருக்கும் மாணவர்களின் அனுபவங்களைக் கேட்டறிவது, அதே படிப்பு பிற கல்வி நிறுவனங்கள் / நாடுகளில் எப்படி உள்ளது என்று ஒப்பீடு செய்து பார்ப்பது போன்றவற்றின் மூலம் தேர்வு செய்யலாம். சில வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை நேரடியாகவே செய்கின்றன. அதுபோன்ற சேர்க்கை முகாம்களிலும் விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.

தயாராவது!

வெளிநாட்டுக் கல்வி, குறிப்பாக இந்த நாடுதான் என்று முடிவாகிவிட்டால், அதற்குரிய தகுதித் தேர்வு மற்றும் அந்த நாட்டின் மொழியை அறிந்து கொள்வது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்லவேண்டும் எனில் ஆங்கிலம் அவசியம்.


ஜெர்மனியில் படிக்க ஜெர்மன் தெரிந்திருப்பது கட்டாயம். மலேசியா, சிங்கப்பூரில் அந்நாட்டு மொழி தெரிந்திருக்கவேண்டிய கட்டாயமில்லை. ஐ.இ.எல்.டி.எஸ். (International English Language Testing System);டி.ஓ.இ.ஐ.எல் (Test Of English as a Foreign Language) போன்ற தகுதித் தேர்வுகளை முடித்தால்தான் வெளிநாட்டில் படிப்பு சாத்தியம்.


எம்.பி.ஏ. படிப்பிற்கு ஜி-மேட் (Graduate Management Admission Test)தேர்வும், எம்.சி.ஏ. போன்ற தொழில்நுட்ப படிப்புகளுக்கு ஜி.ஆர்.இ. (Graduate Record Examinations)-போன்ற தகுதித் தேர்வுகளும் சில நாடுகளுக்கு அவசியம். எனவே, இதுபோன்ற தகுதித் தேர்வுகளுக்கு தயாராகிக்கொள்ள வேண்டும்.
வேலை வாய்ப்பு!


வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் படித்து முடித்ததும் உடனடியாக வேலை கிடைத்துவிடும் என்றாலும், படிக்கும் காலத்திலேயே அதற்கான சாத்தியங்களும் உள்ளன. சில நாடுகளில் கட்டுப்பாடுகள் இருந்தாலும், பெரும்பாலான நாடுகளில் படித்துகொண்டே வேலைக்குப் போகும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, துபாய் போன்ற நாடுகளில் மாலை நேரம்தான் வகுப்பு என்றால், காலை நேரத்தில் ஃப்ரீ ஜோன் ஏரியாக்களில் மாணவர்கள் பணியாற்ற முடியும். அமெரிக்காவில் வாரத்திற்கு 20 மணிநேரம் பகுதிநேர வேலை பார்க்கலாம்.


இதுதவிர, படிப்போடு சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகளும் உள்ளன. குறிப்பாக, ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் வகுப்பறை பாடமும், மூன்று நாட்கள் பணியிடப் பயிற்சியும் தரப்படும். நான்கு வருட கல்வி என்றால் கடைசி இரண்டு வருடங்கள் நேரடி பயிற்சி வகுப்புகளாகத்தான் இருக்கும். சில நாடுகளில், படித்தபிறகு வேலை தேடிக்கொள்வதற்கு ஏற்ப விசா சலுகைகளும் உள்ளன. இச்சலுகை காலத்திற்குள் வேலை தேடிக்கொண்டால் விசாவை புதுப்பித்துக்கொள்ளும் வசதிகளையும் வழங்குகின்றன.
உதவித் தொகைகள்!


எல்லா வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களும் உதவித் தொகை வழங்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், சிறந்த மாணவர் என்றால் ஸ்காலர்ஷிப் கண்டிப்பாக கிடைக்கும். சில நாடுகளில், வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டும் இதுபோன்ற உதவித் தொகைகள் கிடைக்கும். குறிப்பாக, ஜப்பானில் மாணவரின் தரத்திற்கு ஏற்ப 100 சதவிகிதம்கூட கல்வி உதவித் தொகை கிடைக்கும். குறிப்பிட்ட மாணவர் தொடர்ச்சியாக அக்கல்வி நிறுவனத்தில் படித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தால் அவருக்கு உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி என அனைத்து வாய்ப்புகளையும் வழங்குகின்றன. சில கல்வி நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் உதவித் தொகைகள் வழங்குகின்றன.


தரமான படிப்பு, படித்து முடித்தவுடன் வேலை என பலவிதங்களில் பயனுள்ளதாக அமையும் வெளிநாட்டுப் படிப்பை நீங்களோ, உங்கள் பிள்ளைகளோ ஏன் படிக்கக்கூடாது?

நச்சு எண்ணங்கள்?



ஒரு சில நச்சு எண்ணங்களை சுலபமாக அடையாளம் காண முடியாது.


அவை எங்கும் பரவிக் கிடக்கும்.


மிகச் சாவகாசமாக வேலை செய்யும்.அவற்றுக்கு இரையாகும் மனிதர்கள் அவற்றின் பாதிப்பை உணரும்போது ஏற்கனவே காலம் கடந்து போயிருக்கும்.  அவை......


குமுறல்: 


நாம் சிறுமைப்படுத்தப் பட்டு விட்டதாக எண்ணும் போதும்,நமது உறவு,உடமைகளை ஒருவர் அவமானப் படுத்தியதாக எண்ணும்போதும் நமக்குள் ஏற்படும் எரிச்சல்தான் குமுறல்.குமுறல் நமது உள் மனதில் அடியில் தங்கிப் புற்று நோய் போல வேலை செய்கிறது.


அது படிப்படியாக வளர்ந்து மேற்கொண்டு மனம் புண்படுவதைத் தவிர்க்கவும்,மென்மையான உள்ளங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும்,தன்னிரக்க வடிவெடுத்து நாளாவட்டத்தில் வாழ்க்கையிலிருந்து நம்மை ஒரேயடியாக ஒதுங்கிக் கொள்ளச் செய்யும்.அல்லது படு வேகமாகப் பரவும் குமுறல்,கோபமாகி ,கோபம் தாங்க முடியாத வெறுப்பாகி,வெறுப்பு வன்முறையாகி,சில சமயங்களில் கொலையில் கூட முடியும்.

 
நழுவல் மனோபாவம்: மனதுக்குப் பிடிக்காத யதார்த்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று உள் மனதுக்கு ஏற்படும் விருப்பத்தால், குறிக்கோளை அடைய வேண்டும் என்ற உள் மனதில் முக்கியமான பணி திசை திருப்பப்படுகிறது.அதன் விளைவாகத் தப்பியதே குறிக்கோள் என்று ஆகி விடுகிறது.

நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா...



நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா... குடிக்க இப்படியும் காரணம் சொல்றாங்கய்யா...!


உங்களுக்கு சரக்கு அடிக்க ரொம்ப பிடிக்குமா? அப்படி சரக்கு அடித்த பின்னர் நீங்கள் செய்த அட்டகாசங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இல்லையா.. அப்படியெனில் இந்த கட்டுரையைப் படித்து பாருங்கள்.


பொதுவாக சரக்கு அடித்தவர்களுக்கு, சரக்கு அடித்தப் பின்பு செய்யும் லூட்டிகள் எதுவும் ஞாபகத்தில் இருக்காது. ஆனால் உங்களுக்கு சரக்கு அடித்த பின்னர் ஆண்கள் செய்யும் லூட்டிகள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியானால், தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக சரக்கு அடித்தப் பின்னர், ஆண்கள் செய்யும் சில லூட்டிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்துப் பாருங்கள்.


நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா... குடிக்க இப்படியும் காரணம் சொல்றாங்கய்யா...!


* சில ஆண்கள் சரக்கு அடித்தப் பின்னர் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். அப்போது அவர்கள் வெளிப்படுத்தும் பாசத்திற்கு அளவே இருக்காது. அதுமட்டுமின்றி, அந்நேரத்தில் யாராவது ஒருவர் அவர்களிடம் சிக்கினால் போதும், அவ்வளவு தான். வேறு என்ன இதுவரை எங்கும் பார்த்திராத அளவில் பாச மழையில் நனைவார்கள்.


* சிலருக்கு போதை ஏறிவிட்டால் போதும், சூப்பர் மேன் போல் எதையும் செய்யும் தைரியம் வந்துவிடும். மேலும் அந்நேரத்தில் அவர்கள் இவ்வுலகில் தன்னை ஒரு பெரிய ஹீரோ போன்று பாவித்துக் கொண்டு, சிறு தவறு நடந்தாலே அதைத் தட்டி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.


* ஆண்களிடம் எப்போதும் இரகசியமே நிலைக்காது. ஏனெனில் அவர்கள் ஒரு கட்டிங் போட்டால் போதும், எப்பேற்பட்ட இரகசியத்தையும் ஒரு நொடியில் சொல்லிவிடுவார்கள்.


* சிலர் சரக்கு அடித்தால், காரணமே இல்லாமல் அழ ஆரம்பித்துவிடுவார்கள். அதிலும் சிலரோ பல வருடங்களுக்கு முன்பு இறந்து போன தாத்தா அல்லது பாட்டியை நினைத்து அழுவார்கள்.


* எப்படி அழும் பழக்கம் உள்ளதோ, அதுப்போல சிலருக்கு போதை ஏறிவிட்டால் சிரிக்க ஆரம்பிப்பார்கள்.


இதுப்போன்று பல லூட்டிகளை போதை ஏறிவிட்டால் ஆண்கள் செய்வார்கள். சரி, நீங்க என்ன லூட்டி செய்வீங்கன்னு எங்களோடு பகிர்ந்து கொள்ளலாமே!

சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?



சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?


சின்ன வயசுல, தூக்கத்துல இருக்கும்போது நாம பண்ண சில சேட்டைகளப் (?) பத்தி, அடுத்த நாள் காலையில நம்ம குடும்பத்தாரோ/பள்ளி, கல்லூரியில கூட தங்கியிருந்த பசங்களோ சொல்லி கிண்டல் செய்யும்போது, “ஏய் நான் ஒன்னும் அப்படியெல்லாம் பண்ணல, சும்மா பொய் சொல்லாதீங்கப்பா”ன்னு சொல்றவங்ககிட்ட வாய்ச்சவடால் விட்டு சமாளிச்சிடுவோம் (?).


ஆனா, கொஞ்ச நேரம் கழிச்சி, தனியா நாமளே யோசிச்சுப் பார்த்துட்டு, “ஐய்யீய்ய…..நேத்து தூங்கும்போது, நாம இப்படியா செஞ்சிட்டோம்?!”னு நம்மள நாமே நொந்துக்கிட்ட அனுபவம், கிட்டத்தட்ட நம்ம எல்லாருக்குமே இருக்கும்னு நெனக்கிறேன்?! அது என்ன சேட்டைன்னு கேட்டா, பினாத்துறது, பாட்டு பாடுறது (ரெண்டு பாட்டுமேதான்?!), புறண்டு விழுந்து விடுவது, தூக்கத்துலேயே எழுந்து வெளியே நடந்து போறதுன்னு இப்படி நிறைய சொல்லலாம். (எதாவது விட்டுப் போயிருந்தா மறுமொழியில கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க?!)


மேலே சொன்ன தூங்கும்போது செய்யும் சேட்டைகள்ல, “தூக்கத்துல ஏன் சிலர் நடக்கிறாங்க”ன்னுதான் நாம இன்றைய பதிவுல பார்க்கப்போறோம். ஆனா, மேலே நான் சொல்லாத, ஒரு சுவாரசியமான சேட்டைய, நான் சின்னவயசுல தூங்கும்போது பண்ணியிருக்கேன். அது என்னன்னு பதிவுச்செய்தியோட முடிவுல சொல்றேன். இப்போ நாம பதிவுச் செய்திக்குப் போகலாமா…..


சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி, அடிப்படையில தூக்கத்தில் எத்தனை வகை இருக்கு, தூக்கத்தில் நடப்பதுன்னா என்னங்கிற ரெண்டு முக்கியமான விஷயங்கள நாம தெரிஞ்சிக்கிறது அவசியம்னு நான் நெனக்கிறேன்.


தூக்கத்தில் எத்தனை வகை இருக்கிறது?


தூக்கம் பற்றிய ஆய்வுலகில் மொத்தம் மூன்று நிலைகள் இருக்கிறது.


1. விழிப்பு நிலை (wakefulness)


2. அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை {(non-REM (rapid eye movement)}


3. அதிவேக விழி அசைவு தூக்க நிலை (REM sleep)- இது பெரும்பாலும் கனவுகளுடன் தொடர்புடைய நிலை!


தூக்கத்தில் நடப்பது என்றால் என்ன?


தூக்கத்தில் நடப்பது அப்படீங்கிறது, “மனிதர்களின் ஒருவகையான தூண்டப்பட்ட, குழப்பமான மனநிலை”ன்னு சொல்றாரு இதுபற்றிய ஆய்வு செய்த முனைவர் விசேஷ் கபூர். அதாவது, (அறிவியல்பூர்வமா சொல்லனும்னா) தூக்கத்தில் நடப்பது விழிப்பு நிலை மற்றும் அதிவேக விழி அசைகளில்லாத தூக்க நிலை அப்படீன்னு அர்த்தம்!


சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?


உண்மையச் சொல்லனும்னா, சிலர் மட்டும் ஏன் தூக்கத்தில் நடக்கிறாங்க மத்தவங்க ஏன் நடக்கிறதில்லைங்கிற இந்த கேள்விக்கு இன்னும் திட்டவட்டமான/தெளிவான பதில் தெரியலைங்கிறதுதான் நிதர்சன உண்மை! இருந்தாலும், மாங்கு மாங்கு ஆராய்ச்சி செஞ்சிட்டு, இப்படித் தெரியலைன்னு, கூச்சப்படாம உதட்டப் பிதுக்கினா இந்த உலகம் நம்மள கொஞ்சங்கூட மதிக்காதுங்கிறதுனால, (மக்களே….இதெல்லாம் மேலிருப்பானோட தற்குறிப்பேற்ற அணிதான் சரிஙகளா?!) செஞ்ச ஆய்வைப் பத்தின ஆய்வறிக்கையில திரு. விசேஷ் கபூர் என்ன சொல்லியிருக்காருன்னா…….


பொதுவா தூக்கத்தில் நடப்பதற்க்கு, குடும்ப மரபனுவியல் சம்பந்தமான காரணங்கள்கூட இருக்கலாமாம்?! ஆனா, பெரியவங்கள விட, குழந்தைங்கதான் பெரும்பாலும் தூக்கத்துல நடப்பாங்களாம். அதுக்கு காரணம், குழந்தைங்க தூங்கும்போது, மெதுவான அலை தூக்கம் (low-wave sleep), அதாவது “ஆழமான அதிவேக விழி அசைவுகளில்லாத தூக்க நிலை” அப்படீங்கிற நிலையில்தான் இருப்பாங்களாம். இந்த நிலையிலதான் தூக்கத்துல நடக்கிற செயலே தொடங்குகிறது என்கிறது ஆய்வு?!

வீதி விபத்துக்கள் ஏற்படும் முக்கிய காரணங்கள் ?



1. மது அருந்துதல்


எத்தனையோ அப்பாவி உயிர்கள் பல கொடிய மது அருந்திகளால் தங்கள் இரத்தத்தைத் தானம் செய்கிறார்கள். குடி போதையில் கண்ணு முன்னு தெரியாமல் வண்டியை ஓட்டுகிறார்கள். இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன எனவும் உங்களுக்கும் தெரியும்.


சரி இப்படியும் சொன்னால் உங்களுக்கு விளங்கவில்லை என்றால் "தல" சொன்ன மாதிரி


"Light ஐ போட்டு வண்டி ஒட்டு'

Light ஆக போட்டு வண்டி ஓட்டாதே..."


சரி இந்தப் பதிவை வாசிக்கும் நீங்கள் மது அருந்தியாகவிருந்தால் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


அடுத்ததாக பெண்கள் வீதிகளில் குட்டைப் பாவாடை அணிந்து செல்வதை வாயைப் பிளந்து பார்க்கும் ஆண்கள் (ஒரு சில ஆண்கள்) . நான் ஆண்களையும் குறை சொல்ல மாட்டேன் , பெண்களையும் குறை சொல்ல மாட்டேன்...


வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கவனமாக பார்த்து வண்டி ஓட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இப்பொது நான் கூறுவது எனது சொந்த அனுபவம் ...


நீங்கள்  motor cycle  ஓட்டும் போது எதிரில் வருபவர் முன் உங்கள்  headlight ஐ சற்று டிம் பண்ணுங்க... அப்பிடி டிம் பண்ணாம வந்த ஒருத்தரோட நான் மோதியிருக்கேன் நல்ல வேளை இப்போ உயிரோட இருக்கேன்... so நான் சொன்னது விளங்கியிருக்கும்......


அடுத்து வீதி ஒழுங்குகளை பேணி பாதையில் இருக்கும் சமிஞ்ஞை விளக்குகளைக் கருத்திட் கொண்டு உங்கள் வாகன சாகசங்களை தொடர்ந்து மேட்கொள்ளுமாறு கூறி பதிவை நிறைவு செய்கிறேன்.

பிறந்தவுடன் குழந்தைகள் எதற்காக அழுகிறது?



இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு உண்மையான காரணம் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள்
அழுகிறது காரணங்கள் என்ன?


இதோ தெரிந்து கொள்ளுங்கள்.


ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.


இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத்துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால் தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம். அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக் கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

டோங்கிரியா கோண்ட் பழங்குடியினரின் போராட்டமும் வெற்றியும்!!!





 ஒடிஷா மாநிலத்தில் நியமகிரி மலைப்பகுதியில் வாழும் டோங்கிரியா கோண்ட் (Dongria Kondh) பழங்குடியினர் தங்கள் மலைகளில் வேதாந்தா நிறுவனம் பாக்சைட் தாதுவினை வெட்டி எடுக்க திறந்தவெளி சுரங்கம் அமைக்கக்கூடாது என்று பல வருடங்களாகப் போராடி வருகின்றனர். இந்திய உச்ச நீதி மன்றம் டோங்கிரியா கோண்ட் கிராம சபைகளின் சம்மதமும் அனுமதியும் இல்லாமல் வேதாந்தா தன் சுரங்கத்தை அமைக்க முடியாது என்று இந்த வருடம்  ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்பிற்கும் பாராட்டுக்கும் உரியது; இந்திய பழங்குடிகளுக்கு இயற்கை வளங்களின் மேல் உள்ள பாரம்பரிய உரிமைகளுக்கு வலு சேர்க்கக்கூடியது; கிராமசபை போன்ற அடிமட்ட ஜனநாயக அமைப்புகளின் மேலாண்மையை உறுதிப்படுத்துவது; இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான மக்கள் மைய வழிகாட்டுதலை வழங்கக்கூடியது. டோங்கிரியா கோண்ட் பழங்குடியினரின் போராட்டத்துக்கு ஆதரவான உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு அவ்வளவு எளிதாக இந்த எளிய மக்களுக்குக் கிடைத்துவிடவில்லை. 


திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியினை பேசும் டோங்கிரியா கோண்ட் பழங்குடியினர்  நுட்பம் மிகுந்த பல கலைகளை தங்கள் பாரம்பரியமாகக் கொண்டவர்கள். கழுத்தை நிறைக்கும் உலோக அணிகலன்கள், காதுகளிலும் மூக்கிலும் பல வளையங்கள், நுட்பமான கை வேலைப்பாடு நிறைந்த துணிகள், திரைச் சீலைகள், சுவரோவியங்கள் நிரம்பிய மண் வீடுகள் ஆகியன டோங்கரியா கோண்ட் பழங்குடியினரை எளிதில் அடையாளம் காட்டக்கூடியவை.


நியமகிரி மலைச்சரிவுகளில் உள்ள காடுகளில்,  ராயகாடா, காளஹண்டி, கோராபுட் ஆகிய மாவட்டங்களில் வாழும் டோங்கிரியா கோண்ட் பழங்குடியினர் எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்கள். 2001 இல் எடுக்கப்பட்ட மக்கள் கணக்கெடுப்பின்படி டோங்கிரியா கோண்ட் மக்களின் எண்ணிக்கை 7952 மட்டுமே. அவர்கள் முற்றிலும் அழிந்துவிடக்கூடிய அபாயம் இருப்பதினால் இந்திய அரசியல் சாசனத்தின் ஐந்தாவது ஷெட்யூலின் ஷரத்துக்களின்படி  டோங்கிரியா கோண்ட் பழங்குடியினர் பாதுக்காக்கப்பட வேண்டியவர்கள்.


டோங்கிரியா கோண்ட் மக்கள் நியமகிரி மலைகளையும் அவற்றிலிருந்து உற்பத்தியாகி ஓடிச் செல்லும் நீரோடைகளையும் தங்கள் கடவுளர்களாகக் கருதுவதே அவர்கள் வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான முக்கிய காரணமாகும். நியமகிரி மலைகளை ‘நியமராஜா’, ‘ஆதி சட்டங்களை இயற்றியவர்’ என்றும் பூமியை ‘தாரிணிப் பெண்’ என்றும் அவர்கள் வழிபடுகின்றனர். நியமகிரி மலைகள் இருக்கும் வரையே தங்கள் இனமும் உயிரோடு இருக்கும் என்று உறுதியாக நம்பும் டோங்கிரியா கோண்ட் மக்களின் தலைவர் லாடு சிகாகா “ எங்கள் கடவுள்கள் திறந்த வெளியில் இருப்பவர்கள்; அவர்கள் உங்கள் கடவுள்களைப் போல அறைக்குள் பூட்டி வைக்கப் படுபவர்கள் அல்ல” என்று குறிப்பிட்டார்.


வேதாந்தாவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அமைதியான அகிம்சை வழியில் நடத்திச் சென்ற லாடு சிகாகாவும் நியமகிரி மலைகளின் உச்சியில் வாழும் பன்னிரெண்டு கிராம மக்களும் சர்வதேச கவனத்தையும் கவர்ந்தனர். சர்வைவல் இண்டெர்னேஷனல் என்ற நிறுவனம் டோங்கிரியா கோண்ட் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நிதியும் அறிவுஜீவிகளின் ஆதரவையும் கோரி பிரச்சாரம் மேற்கொண்டது. ஹாலிவுட்டின் புகழ் பெற்ற படமான ‘அவதார்‘ படத்தின் கதையைப் போன்றதே டோங்கிரியா கோண்ட் மக்களின் வேதாந்தாவுக்கு எதிரான போராட்டம் என்ற பிரச்சாரம் பல வகைகளிலும் இந்த மக்கள் போராட்டத்தினை பிரசித்தி பெறச் செய்தது.


 ‘அவதார்‘ பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரனுக்கு டோங்கிரியா கோண்ட் மக்கள் சார்பில் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு மனு அனுப்பப்பட்டது. எழுத்தாளர் அருந்ததி ராய், நடிகை யோஹன்னா லும்லெ, நடிகர் மைக்கேல் பாலின் ஆகியோர் டோங்கிரியா கோண்ட் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். பிரிட்டிஷ் நாளிதழான ‘தி கார்டியன்’ நியமகிரி மலை போராட்டங்களைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டது.


பாக்சைட்டைத் தோண்டி எடுப்பதற்கு எந்தவிதமான முன் அனுமதியும் பெறாமலேயே அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை ஒடிஷாவிலுள்ள லஞ்சிகாரில் அமைத்ததிலிருந்தே வேதாந்தா பல விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதாகப் பலரும் குற்றஞ் சாட்டி வருகின்றனர். ஒடிஷா மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தாவின் லஞ்சிகார் ஆலை சுற்றுச் சூழலை அசுத்தப்படுத்துவதாக கண்டித்தது.


 அம்னெஸ்டி இண்டெர்நேஷனல் வேதாந்தாவின் ஆலையிலிருந்து வெளிவரும் தூசு மக்களின் உடைகளில், பயிர்களில், உணவுகளில் படிவதாகவும் இது மனித உரிமை மீறல் பிரச்சினை என்றும் குற்றம் சாட்டியது. சுற்றுச் சூழல் ஆய்வாளர்களால் வேதாந்தா ஆலை பரிசோதிக்கப்பட்டபோது அதன் லஞ்சிகார் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு வம்ஷதாரா நதியினை கடுமையாக மாசு படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.


2010 ஆம் ஆண்டு நியமகிரி மலையில் பாக்சைட் அகழ்ந்தெடுப்பதற்கான திறந்தவெளி சுரங்கம் அமைப்பதற்கான அனுமதி கேட்டு வேதாந்தா ஸ்டெர்லைட் தொழில் நிறுவனங்களோடு சேர்ந்து விண்ணப்பித்தபோது அது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் நிராகரிக்கப்பட்டது. மக்களின் ஆதரவினை வேண்டி பல பிரச்சாரங்களை மேற்கொண்ட வேதாந்தா டோங்கிரியா கோண்ட் பழங்குடியினரின் கிராமங்களில் குழந்தைகள் நல காப்பகங்கள் அமைப்பதாக விளம்பர பேனர்களை அமைத்தது. அந்த பேனர்களெல்லாம் இன்று துருப்பிடித்துக் கிடக்கின்றன.


2013 ஏப்ரல் மாத உச்ச நீதி மன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து வேதாந்தா சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பன்னிரெண்டு டோங்கிரியா கோண்ட் கிராமங்களிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசாங்கம், மாவோஸ்டுகளினால் வன்முறை நடந்தேறக்கூடும் என்று அச்சம் தெரிவித்து, ஏராளமான போலீஸ் படையையும்  துணை ராணுவப் படையினரையும் நியமகிரி மலைகள் முழுக்கக் குவித்தது. எந்த நேரமும் கலவரம் வெடிக்ககூடும், துப்பாக்கிச்சூடு நிகழக்கூடும் என்ற சூழலில் வாக்களித்த டோங்கிரியா கோண்ட் மக்கள் நூறு சதவீதம் வேதாந்தா பாக்சைட் சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.


வாக்கெடுப்பு நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டாலும் பயமும் பீதியும் நியமகிரி மலைகளில் தொடர்வதாக பங்கஜா சேதி என்ற ஆய்வாளர் எழுதியுள்ளார். டோங்கிரியா கோண்ட் மக்களின் துணிகளிலுள்ள கதையாடல்களையும் கைவேலைப்பாடுகளையும் ஆராய்ச்சி செய்து வரும் பங்கஜா சேதி டோங்கிரியா கோண்ட் மக்களின் நியமகிரி மலை நம்பிக்கைகள் அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் கலந்து நிற்பதால் அவை மாறவே மாறாது என்றும் நம்பிக்கையூட்டுகின்றார்.


இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்குக்காக, இந்திய கார்ப்பரேட் சாம்ராஜ்யங்களின் உருவாக்கத்திற்காக இந்தியத் துணைக்கண்டத்தின் பழங்குடியினர் பெரும் விலை கொடுத்திருக்கின்றனர். அணைகள் அமைப்பதற்காக, கனிமச் சுரங்கங்கள் தோண்டுவதற்காக, மின்சாரம் தயாரிப்பதற்காக தங்கள் காடுகளை, மலைகளை, வசிப்பிடங்களை, பாரம்பரிய உரிமைகளை இழந்து பழங்குடியினர் துரத்தப்பட்டிருக்கின்றனர். தங்கள் மொழிகளை இழந்து, பண்பாட்டு வளங்களை இழந்து தாங்கள் அரசர்களாக ஆண்ட பகுதிக்கு வெகு அருகாமையிலேயே தரித்திரர்களாக இந்தியா முழுவதும் பழங்குடியினர் இன்று வாழ்ந்துவருகின்றனர்.


டோங்கிரியா கோண்ட் மக்களின் போராட்ட வெற்றியும் அதற்கு வழி செய்த உச்ச நீதி மன்ற தீர்ப்பும் இந்தியப் பழங்குடியினர் தங்கள் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கும், மீட்டெடுப்பதற்குமான முதல் படிகளாகும்.

சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை?




கேஸ் (gas) திறந்து பற்ற வைத்த உடனே அடுப்பு நமது உபயோகத்துக்கு தயாராகிவிடுகிறது. வெளியே வரும் கேஸ் மட்டும் ஏன் எரிகிறது?


சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை?


நாம் சமையலுக்கு உபயோகிக்கும் கேஸ் என்-பியூட்டேன் (N-BUTANE) என்ற எரிபொருள். எந்த ஒரு எரிபொருளாக இருந்தாலும், அது எரிய வேண்டுமானால் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.


ஒன்று அந்த எரிபொருள் தான் பற்றிக்கொள்ளும் வெப்பநிலையை (Ignition point) அடைய வேண்டும்.இரண்டு எரிவதற்குத் தேவையான பிராண வாயு, ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்க வேண்டும்.


நமது கேஸ் அடுப்பில் என்ன நிகழ்கிறது? சமையல் வாயு பற்றிக்கொள்ளும் வெப்பநிலை 360 oC ஆகும். சிலிண்டர் வால்வைத் திறந்ததும் கேஸ் வெளியேறி அடுப்பின் பர்னர் பகுதியை வந்தடைகிறது. அப்போது ஒரு தீக்குச்சியால் அல்லது லைட்டரால் பற்ற வைக்கும்போது சமையல் வாயு 360 oC வெப்பத்தை அடைந்து பற்றிக் கொள்கிறது அடுப்பைச் சுற்றிலும் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதால் தொடர்ந்து எரிகிறது.


சிலிண்டரின் உள்ளே உள்ள கேஸ் பற்றிக் கொள்ள வெப்பமும் , ஆக்சிஜனும் சிலிண்டரின் உள்ளே செல்ல வேண்டும். பர்னர் பகுதியிலிருந்து வெப்பம் ரப்பர் டியூப்களைத் தாண்டி சிலிண்டரின் வாய் பகுதியை அடைந்து உள்ளே பரவ வேண்டும். இது முற்றிலும் சாத்தியமில்லை.சிலிண்டரின் உள்ளே உள்ள கேஸ் மிக மிக உயர்ந்த அழுத்தத்துடன் உள்ளே அடைக்கப்பட்டுள்ளது.


எனவே சிலிண்டரின் உள்ளே இருக்கும் அழுத்தம் வெளியிலுள்ள சுற்றுப்புற அழுத்தத்தை (Athmospheric Pressure) பல மடங்கு அதிகம். எனவே வெளியிலிருந்து அழுத்தம் குறைந்த ஆக்சிஜன் அழுத்தம் அதிகம் உள்ள சிலிண்டரின் உள்ளே நுழைவது சாத்தியமில்லை.


இந்த இரு காரணங்களால் சிலிண்டரின் உள்ளே இருக்கும் எரிபொருள் பற்றிக்கொள்ளும் வாய்ப்பே இல்லை.

வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனிரூ.26 கட்!



வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனி ரூ.26 கட்!


வேறு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.


பெங்களூருவில் சமீபத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த வங்கி பெண் அதிகாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து ஏ.டி.எம்.களில் பாதுகாப்பை பலப் படுத்த போலீசார் உத்தர விட்டுள்ளனர்.


வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனி ரூ.26 கட்! தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள், ஏ.எம்.டி.களில் பாதுகாப்பை செய்ய கால அவகாசத்துடன் ‘கெடு' விதித்துள்ளன. இதனால் காவலாளியை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இது வங்கிகளுக்கு கூடுதல் செலவாகும். இந்த கூடுதல் வாடிக்கையாளர்கள் தலையில் கட்ட தீர்மானித்துள்ளனர்.


தற்போது வேறொரு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவையே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். அதன்பிறகு பணம் எடுத்தால் ஒவ்வொரு தடவையும் ரூ.20 பிடித்தம் செய்யப்படுகிறது. ஏ.டி.எம்.களில் காவலாளியை நியமிக்க வேண்டியதிருப்பதால் அந்த பிடித்தம் கட்டணத்தை மேலும் ரூ.6 அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இனி மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்து விடுவார்கள்.


 இதற்கிடையே மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.

ஜாதி சான்றிதழ் வாங்குவது எப்படி...?



சாதிகள் இல்லையடி பாப்பா என்போம், ஆனால்... சாதி சான்றிதழ் கேட்போம்....
வருமானச் சான்றிதழ் போலவே சாதிச் சான்றிதழும் பெரும்பாலும் மாணவர்களுக்கும், அரசுப் பணியில் சேர்பவர்களுக்கும் மட்டுமே நடைமுறையில் தேவைப்படுகிறது.


இச் சான்றிதழும் ஒரு தற்காலிகச் சான்றிதழே ஆகும். எவரும் சாதியை மாற்றிக்கொள்ள முடியாது என்ற போதிலும், வகுப்பு என்பது மாற வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ஒருவர் பிற்பட்ட வகுப்பில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர், தனது மதத்தை மாற்றிக்கொண்டால், வேறு வகுப்பிற்குச் சென்றுவிடுவார்.


இச்சான்றிதழ் தமிழில் வகுப்புச் சான்றிதழ் என்றுதான் அழைக்கப்படவேண்டும். ஆனால், சாதிச் சான்றிதழ் என்றே அழைக்கப்படுகிறது. எனவே, சாதியை மாற்றமுடியாவிட்டாலும், வகுப்பு என்பது நிலையானது அல்ல. எனவே, சாதிச் சான்றிதழும் ஒரு நிலையான சான்றிதழ் அல்ல.


இருப்பினும் மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக ஒருமுறை இச்சான்றிதழைப் பெற்றால், அதைப் பல வருடங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். எனினும், மாணவர்களின் பெற்றோர் இடையில் தங்களது மதத்தை மாற்றிக்கொண்டால், அதை முறைப்படி தெரிவித்து, தங்களது சாதிச் சான்றிதழையும் மாற்றிக்கொள்ளவேண்டும்.


கல்விக் காரணங்களைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக இச் சான்றிதழ் வேண்டுமென்றால், உதாரணமாக இரண்டு பெண் குழந்தைகள் நலத் திட்டத்திற்கு இச்சான்றிதழ் வேண்டுமென்றால், அதற்கு வழங்கப்படும் சான்றிதழ் ஒரு முறை மட்டும் குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டும் பயன்படுத்தும்படியே வழங்கப்படும்.


வழக்கம் போல், இச் சான்றிதழும் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளும் ஒரு சான்றிதழே ஆகும். இச் சான்றிதழுக்கான விண்ணப்பம் இந்த முகவரியில் கிடைக்கும்.

http://www.tn.gov.in/appforms/cert-community.pdf


 (இந்த விண்ணப்பத்தில், எண் 5, 6, மற்றும் 7 ஆகியவை குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று உள்ளிட்டவைகளைக் கேட்கின்றன. இருப்பினும் இவை எதுவும் இல்லாத பொழுது, இவற்றைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.)


இச் சான்றிதழ் தேவைப்படுவோர், தங்களது குடும்ப அட்டையின் நகலை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். வேறு ஆவணங்கள் ஏதாவது இருப்பின் கூடுதலாக அளிக்கலாம்; ஆனால் கட்டாயமில்லை. பொதுவாக மனுவுடன் கூடுதல் ஆவணங்களை/ சான்றுகளை இணைப்பது எதற்கென்றால், வட்டாட்சியரின் பணிகளில் ஒரு எளிமையை கொண்டுவந்து, சான்றிதழை விரைவாகப் பெறுவது ஒன்றுதான் காரணம்.


சாதிச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் பொழுது, குடும்ப அட்டை கூட இருந்தால் மட்டுமே அளிக்க வேண்டும்.


ஒருவருக்குக் குடும்ப அட்டையே இல்லை; எனவே அவருக்குச் சாதிச் சான்றிதழே வாங்க முடியாது என்பதெல்லாம் தவறு. மனுதாரர் தன்னிடம் வேறு சான்று/ஆவணங்கள் எவையும் இல்லையென்றால், மனுவை மட்டும் உரிய முறையில் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது.


இப்படி மனு அளிக்கும் பொழுது, சான்றிதழ் பெற இரண்டு அல்லது மூன்று நாள்கள் கூடுதலாக எடுத்துக்கொள்ளப்படும். எனினும் சான்றிதழ் வழங்குவதற்குத் தேவையற்ற கால தாமதத்தை வட்டாட்சியர் அலுவலகம் ஏற்படுத்த முடியாது.


ஏனென்றால், வட்டாட்சியர் அலுவலகம் தான் அடிப்படைச் சான்றுகளை அளிக்கும் ஒரு அலுவலகமாகும். அவர்களே பொது மக்களிடம் ஏதாவது சான்று கொடுத்தால் தான் பொது மக்கள் கேட்க்கும் சான்றினை வழங்க முடியும் என்று கேட்பது முறையல்ல. எந்த ஆவணமும் இணைக்கப்பட முடியாத பொழுது, பொது மக்கள் தங்களுக்குத் தேவையான சான்று பெற, வட்டாட்சியருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது ஒரு கூடுதல் தேவை.


அதாவது தங்களது கோரிக்கைக்கு வலுவூட்டும் காரணிகளை அளித்தல் உள்ளிட்ட சில கூடுதல் பணிகளைச் செய்யலாம். இதுவும் கட்டாயமல்ல. ஒரு வட்டாட்சியருக்கு, எவ்வகையிலும் விசாரித்து எந்த உண்மையையும் கொண்டுவரத் தேவையான அனைத்து அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆவணங்கள் இருந்தால் அளிக்கலாம்; இல்லாவிட்டால் வட்டாட்சியரே சரியான சான்று வழங்குவார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top