.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 8 December 2013

உண்ணும் உணவு : ரமண மகரிஷி


முன்பொருமுறை திருமதி பிக்காட் என்கிற ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் ரமணாசரமம் வந்திருந்தார். அங்கு ரமண மகரிஷி சந்தித்து அவரிடம் உணவு முறைகளை பற்றி சில கேள்விகளை எழுப்பினார். அப்போது நடந்த சுவையான உரையாடல் இங்கே, தமிழில்:

பிக்காட்: ஆன்ம ஞானம் பெற விழையும் சாதகனுக்கு எந்த வகையான உணவினை பரிந்துரைக்கிறீர்கள்?

ரமணர்: சாத்வீக உணவு – அதுவும் குறைந்த அளவில்.

பிக்காட்: சாத்வீக உணவு என்றால் என்ன சொல்ல முடியுமா?

ரமணர்: ரொட்டி, பழம், காய், பால் போன்றவை…

பிக்காட்: வட இந்தியாவில் சிலர் மீன்களை உண்கிறார்களே, அது சரியா?
(இந்த கேள்விக்கு பதிலேதும் இல்லை)


பிக்காட்: ஐரோப்பியர்களான எங்களுக்கு எங்கள் ஒருவித உணவு பழகிவிட்டது. அதை மாற்றினால், உடலும் அதனால்
மனமும் சக்தியிழந்து விடுகிறது. உடல் நலம் பேணுவது அவசியம் அல்லவா?

ரமணர்: நிச்சயமாக. உடல் சக்தியிழக்கையில், வைராக்கியம் என்னும் சக்தியை மனம் பெறுகிறதே!

பிக்காட்: ஆனால், நாங்கள் மனவலிமை இழக்கிறோமே?

ரமணர்: மனவலிமை என்று எதைச் சொல்கிறீர்கள்?

பிக்காட்: உலகத்தின் பந்தங்களில் இருந்து விடுபடும் சக்தியினை சொல்கிறேன்.

ரமணர்: உண்ணும் உணவைக் கொண்டே மனம் வளர்கிறது. அதனால் உணவு சாத்வீகமாக இல்லாவிட்டால் அதனால்
மனமும் பாதிக்கப்படுகிறது.

பிக்காட்: நிஜமாகவா, அப்படியென்றால், நாங்கள் எப்படி சாத்வீக உணவுக்கு வழக்கப்படுத்திக்குள்ளது.

ரமணர்: ( அருகில் இருக்கும் இவான்ஸ்-வெண்ட்ஸ் என்பவரைக் காட்டி ) நீங்கள் எங்கள் உணவை உண்ணுவதால், ஏதேனும் சங்கடம் இருக்கிறதா?
இவான்ஸ்-வெண்ட்ஸ்: இல்லை, ஏனெனில் அது எனக்கு பழகிவிட்டது.

பிக்காட்: பழக்கம் இல்லாதவர்களுக்கு என்ன சொல்வீர்கள்?

ரமணர்: பழக்கம் என்பது சூழ்நிலைக்கேற்ப தன்னை தயார் செய்து கொள்வதுதான். இங்கே மனம் தான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது. மனம் சில வகையான உணவுகளை சுவையானதாகவும், நல்ல உணவாகவும் நினைத்துக்
கொண்டு இருக்கிறது.

பிக்காட்: புலால் உணவுக்காக உயிர்கள் கொல்லப்படுகிறதல்லவா?

ரமணர்: யோகிகளுக்கு அஹிம்சையே தலையாய கொள்கை.

பிக்காட்: செடிகளுக்கும், அதில் காய்க்கும் காய், பழங்களுக்கும் உயிர் இருக்கிறது அல்லவா?

ரமணர்: நீங்கள் உட்கார்ந்திருக்கும் மேடைக்கும்தான் உயிர் இருக்கிறது!

பிக்காட்: நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புலால் அற்ற உணவுக்கு பழகிக் கொள்ளலாமா?

ரமணர்: அதுவே வழி.

புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான்.........



ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.


முதல் கைதியின் ஆசை:நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.


இரண்டாவது கைதியின் ஆசைகள் ;நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.


மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.


ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு,பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.


மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான்,''என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,''என்ன சொல்கிறாய்,நீ?அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்! ''கைதி அமைதியாகச் சொன்னான்,''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.

அவசர கால முதலுதவி முறைகள்...!




வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.


மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :



உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.


வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.


தலைவலி :


கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.


வயிற்றுப் பிரச்னைகள் :



தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.


கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.


வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.

பாரதி இதைப் பார்த்திருந்தால்..... கவிதை!


பாரதி இதைப் பார்த்திருந்தால்
 தலைப்பாகையை கழற்றிவிட்டு
 தண்டவாளத்தில் படுத்திருப்பான் !


கோவா கடற்கரை
 அலைகளில் இருக்கும் கேவலம்
மெரினா கடற்கரை
 அலைகளிலும் கலக்கிறதா ?


காதலர் என்ற பெயரில்
 இந்த சதைப் பிராணிகள் சிலது
 தற்கொலை செய்து கொள்கின்றன.
மரணம் இவர்களால்
 அசிங்கப்பட்டுப் போகிறது.


அலைகள் விளையாடி
 ஆனந்தம் நிறைந்த
 மெரினா கடற்கரையா ?
காம விளையாட்டுச்
 சிற்பங்கள் நிறைந்த
 கஜுராஹோ கோயிலா ?


 ' காதாலாகி... கசிந்துருகி...
கண்ணீர் மல்கி'
என்று எழுதியவன்
 எழுதிய விரல்களை
 வெட்டிக் கொள்வான்.

தொழில்நுட்ப காதல்..!



பெண் அப்பா நான் லவ் பண்றேன்..


அப்பா : பையன் எந்த ஊரு..


பெண்: UK ல இருக்கான்...


அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி?


பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ...


WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ......


WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ...


அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ...


அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...


ONLINEல ஜாலியா இருங்க...


E - BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க...


G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு...


எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு.... அவ்வுளவுதான்....


பெண் : ???????????

உங்கள் அக்கவுண்டில் பணம் குறைகிறதா? உஷார்!


முன்பெல்லாம் ரொக்கமாகப் பணத்தை கையில் வைத்துக் கொள்ள பயப்படுவார்கள். ஆனால் இப்போது டெபிட் கார்டுகளை வைத்திருக்கதான் அதிகம் பயப்பட வேண்டிருக்கிறது. காரணம், சமீப காலமாக பலருடைய பேங்க் அக்கவுன்டில் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் பணம் சூறையாடப்பட்டு விடுவதுதான்.


ஏ.டி.எம். கார்டில் இருக்கும் தகவல்களை 'ஸ்கிம்மர்’ எனும் கருவி மூலம் அபகரித்து, அதைக் கொண்டு போலி கார்டுகளை உருவாக்கி, பணத்தை எடுத்து விடுகிறார்கள் சில சமூக விரோத சக்திகள்.


குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் இத்தகைய நவீன கொள்ளைகள் அதிகமாக நடந்து வந்தாலும், மற்ற இடங்களிலும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


அதனால் பணத்தைப் பறிகொடுப்பதற்கு முன்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால்
 இழப்பைச் சந்திக்க வேண்டியதிருக்காது.


கவனிக்க வேண்டியவை :


 *வழக்கத்திற்கு மாறாக ஏ.டி.எம். இயந்திரத்தின் முன்பக்கத்திலிருந்து ஏதாவது வயர்கள் வெளியே செல்வதைப் பார்த்தால் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தாதீர்கள்.


 *பின் நம்பரை டைப் செய்யும்போது, அதை யாரும் பார்க்காதபடி மறைத்துக் கொள்ளுங்கள்.


 *பரிமாற்ற ரசீதுகளை ஏ.டி.எம். இயந்திர அறையிலோ அல்லது அருகிலோ தூக்கி எறியாமல் கையோடு எடுத்துச் செல்லுங்கள்.


 *ஏ.டி.எம். இயந்திரத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு வங்கியைத் தவிர, அறிமுகம் இல்லாத வெளிநபரிடம் எந்த உதவியையும் கோர வேண்டாம்.


 *ஏ.டி.எம். சென்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட மெஷின்கள் இருந்து ஏதாவது ஒன்று வேலை செய்யாமல் இருந்தால், மற்றதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், மற்ற மெஷின்களை தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்து, 'ஸ்கிம்மர்’ கருவி பொருத்தப் பட்ட மெஷினை பயன்படுத்தும் வகையில் சமூக விரோதிகள் நமக்கு வலை விரித்திருக்கலாம்.


 *ஏ.டி.எம். இயந்திரத்தைச் சுற்றி சந்தேகப்படும்படியான விஷயங்கள் அல்லது நடமாட்டங்கள் ஏதேனும் இருந்தாலோ அல்லது உங்களது கணக்கில் நீங்கள் செய்யாத பரிமாற்றங்கள் இருந்தாலோ உங்களது வங்கிக்கும், காவல் துறைக்கும் முதலில் தெரியப்படுத்துங்கள்.


 *ஓட்டல்கள், கடைகள் போன்ற இடங்களில் பில்லை டெபிட் கார்டு மூலம் செலுத்தும் போது ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ஏனெனில், நீங்கள் கார்டை கொடுத்து விட்டு உட்கார்ந்துவிட்டால், அதை ஸ்கிம்மர் பொருத்திய மெஷினில் ஸ்வைப் செய்தாலும் தெரியாமல் போய்விடும். அதன் மூலம் நம் ஏ.டி.எம். கார்டு தொடர்பான விஷயங்கள் நமக்கே தெரியாமல் திருடு போக வாய்ப்பிருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கன்னடப் பாடல்!



நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான ராஜ் பகதூர் நடிக்கும் புதிய கன்னடப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது.


 'பெல்லிடரே பெல்லியபெகு ரஜினிகாந்தரங்கே' என்று தொடங்கும் இந்தப் பாடலில் மற்றவர்கள் மத்தியில் நடிகர் ரஜினி காட்டும் எளிமை, தன்னடக்கம் போன்ற அவரது நற்பண்புகள் போற்றப்பட்டுள்ளன.


ரஜினிகாந்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் இயக்குநர் ருஷியால் எழுதப்பட்டு பிரதீப் ராஜால் இசையமைக்கப்பட்டுள்ளது. விஜயப்பிரகாஷ் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.


இதன் சிறப்பம்சமாக இந்தப் பாடலுக்கு ரஜினிகாந்தின் ரசிகர்கள் 1000 பேர் நடனமாடியுள்ளனர் என்று இயக்குநர் ருஷி தெரிவித்துள்ளார்.


 இந்தப் படத்தில் வரும் 12 முக்கிய கதாபாத்திரங்களில் ஒரு வேடத்தில் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் நடிக்கின்றார்.

ஜீவாவின் ‘யான்’ படத்தின் ஆடியோ டிச.15-ல் வெளியீடு!



பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அவதாரம் எடுக்கும் புதிய படம் ‘யான்’.


இப்படத்தில் ஜீவா-துளசிநாயர் ஆகியோர் நடித்த வருகின்றனர். நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்புகளை நடத்தி முடித்துள்ள இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.


இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர்.


இந்நிலையில், இப்படத்தின் ஆடியோவை வருகிற 15-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.

தமிழில் நடிக்க ஆசைப்படும் அமிதாப் பச்சன்..









பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், மலையாளத்தில் கூட, நடித்து விட்டேன்.


ஆனால், தமிழில் இன்னும் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் உள்ளது.


யாராவது, நல்ல கதை கூறினால், தமிழில் நடிப்பேன் என, கூறியிருந்தார்.


இதோ, இப்போது, அவரின் ஏக்கம் தீரப் போகிறது. ஜீவா, துளசி நடிக்கும், 'யான்' படத்தில், ஒரு முக்கியமான வேடத்தில், அதாவது சிறப்பு தோற்றத்தில், அமிதாப் நடிக்கப் போவதாக, கோடம்பாக்கத்திலிருந்து, செய்திகள் கசிந்துள்ளன.


பாலிவுட்டில், பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவி கே சந்திரன் தான், இந்த படத்தின் இயக்குனர் என்பதால், அவரின் நட்புக்காக, இந்த படத்தில் நடிக்க, அமிதாப், சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டச்சிக்கலில் சிக்கிய சிவகார்த்திகேயன்!



மூன்றெழுத்துப் படத்தில் ஹீரோவாக அறிமுகமான அந்த சின்னத்திரையில் இருந்து வந்த நடிகரின் மார்க்கெட் எக்குத்தப்பாக எகிறிக்கொண்டிருக்கிறது.


அதிலும் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படம் வசூலை வாரி குவித்ததால், இப்போது அவரிடம் கால்சீட் கேட்டு முக்கிய படாதிபதிகளே க்யூவில் நிற்கிற நிலை உருவாகியிருக்கிறது.


அதனால், ஏற்கனவே படத்துக்குப்படம் எகிறிக்கொண்டிருந்த நடிகரின் படக்கூலி தற்போது கேட்போரை தலைசுற்ற வைக்கிற அளவுக்கு உயர்ந்து நிற்கிறதாம்.


இந்த செய்திகளை மேற்படி நடிகரால் டீலில் விடப்படும் படாதிபதிகள் சிலர் லீக்அவுட் செய்து விடுவதும் ஒருபக்கம் நடந்து வருகிறது.


இதனால் நடிகருக்கு தேவையில்லாத சட்டச்சிக்கல் ஏற்படுகிறதாம்.


அதன்காரணமாக, சில நடிகர்கள் வாங்கும் சம்பளத்துக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே தயாரிப்பாளராகி வருவதைத் தொடர்ந்து, இப்போது இந்த இளவட்ட நடிகரும் விரைவில் படம் தயாரிக்கும் முடிவில் இருக்கிறாராம்.

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது !!



இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும் .....!


தெரியாதோர்க்கு....


தமிழக கலாச்சாரங்களில்முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.


விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!


முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.


சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.


ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.

பேஸ்புக்கில் உங்கள் Profile ஐ யார் யார் பார்த்தார்கள் என அறிய வேண்டுமா..??



என்ன நண்பர்களே...!! தலைப்பைப் பார்த்துவிட்டு வியக்காதீர்கள்.. இப்படி ஒரு வசதி இருக்கிறது எனப் பலர் நம்பி தமது பேஸ்புக் கணக்கையே இழந்திருக்கிரார்கலாம்.


ஏனெனில் இப்படிப் பட்ட apps கள் இருக்கிறதென ஒரு இணையத்தளம் போட்டுவிட்டால்... உடனே வேறு என்ன... வேறு வேறு இணையதளங்களும் copy செய்து... வாசிக்க வரும் மக்களை உசுப்பேத்துவது.


உடனே.. அவர்களும் நம்பி அந்த app ஐ பயன்படுத்துவார்கள். ஆனால் ஒன்றும் வராது பதிலாக அவர்களது account hack செய்யப்படும்.


ஆம்,நண்பர்களே...!! இது போன்ற apps அனைத்துமே hacker களால் உருவாக்கப்படுபவை.


DoorBellஎன்ற app இருக்கிறது ஆனால் அதுவும் உண்மையானதானாதாக இல்லையாம். அதை வேண்டுமானால் நீங்கள் பாவிக்கலாம்... ஆனால்..


Unfaced.comஎன்ற app இருக்கிறது அது John Arrow என்பவரால் உருவாக்கப்பட்டது. அதை பேஸ்புக் தடைசெய்துவிட்டதாம். ஏன் என்றால் அது பேஸ்புக்கின் rules க்கு தகுந்ததாக இருக்கவில்லை. அதை உங்கள் profile ல் பாவனை செய்தாலும் பாவிக்கப்படாது. இருந்தபோதிலும் அதைப் பாவித்தால் உங்கள் கணக்கு முடிவுக்கு வந்து விடும். அதாவது hack செய்யப்பட்டு விடும்.


பேஸ்புக் ஒரு நாளுமே தனது condition களுக்கு எதிராக இருக்கும் app ஐ உள்ளேடுக்காது. அப்படி இருந்து யாராவது அதனை பாவித்தாலும் அவர்களது கணக்கு முற்றாக நீக்கப்படும்.


அதிகமான Track செய்யும் app கள் போலியானவை. எனவே, இப்படியான Track செய்யும் app களிலிருந்து தள்ளியிருப்பது உங்கள் கணக்குக்குப் பாதுகாப்பு என்பதை கூறி இவளவு நேரமும் வாசித்த உங்களுக்கு நன்றி...!!


நண்பர்களுடன் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்...

உடல் உறுப்புகள் சண்டையிட்டால்?-ஒரு கற்பனை!



ஒரு நாள் உடல் உறுப்புகளுக்குள் தங்களுள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவைகளுக்குள் நடந்த உரையாடல்.


ஆள் காட்டி விரல்: நான் இல்லன்னா ஒரு மனிதனால் ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ சுட்டிக் காட்ட முடியுமா?


மோதிர விரல்: இது என்ன பெரிய விஷயம்! மனிதன் என்மேல்தான் மோதிரம் போடுகிறான். அதனால் நான் அவனுக்கு அழகைக் கூட்டுகிறேன். மனிதனுக்கே தெரிகிறது, யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று. அதனால் எனக்கு தங்க மோதிரம் மாட்டி அழகு பார்க்கிறான். ஏன் உங்களில் ஒருவருக்கு மோதிர விரல் என்று பெயர் இல்லை?


சுண்டு விரல்: டேய்! மோதிரம் போடுவதெல்லாம் ஒரு பெரிய விஷயமாடா? மனிதனை படைத்தவர் கடவுள். அவரை கை கூப்பி வணங்கும்போது நான்தான் முதலில் இருக்கிறேன். எனவே நான்தான் பெரியவன்.


நடு விரல்: டேய் பொடிப் பசங்களா! விரல்களில் நான்தான் மிக உயரமானவன். அதனால் மனிதன் எந்த செயல் செய்தாலும் நான்தான் உயர தெரிவேன். எனவே உங்களில் உயர்ந்த மனிதன் நான்தான்.


கட்டை விரல்: டேய்! சும்மா வாய மூடுங்கடா! என்னமோ நீங்கதான் பெரியவங்கன்னு அலட்டிக்கிறீங்க? நான் இல்லாம நீங்க நாலுபேரும் வீண். எந்த ஒரு மனிதானாலும் நான் இல்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்யமுடியாது. ஒரு பொருளை பிடித்து எடுக்கக் கூட முடியாது. மேலும் மனிதர்கள் ஒரு போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால் என்னை நிமிர்த்தி மற்ற விரல்களை மடக்கி வெற்றிபெற்றதை குறிக்கிறார்கள். தோல்விபெற்றால் இதேபோன்று தலைகீழாக காட்டுகிறார்கள். மனித வாழ்கையில் வெற்றி தோல்வியைக் குறிக்கப் பயன்படும் நானே பெரியவன்.


கைகள்: உங்களில் யாரும் பெரியவர்கள் அல்ல. நாங்கள் இருவர்தான் பெரியவர்கள். ஐந்து விரல்களையும் எப்படி உபயோகிக்க வேண்டுமோ அப்படி உபயோகித்து மனிதனுக்கு பயன்படுகிறோம். நாங்கள் இல்லாமல் நீங்கள் எப்படி இயங்க முடியும். மனிதன் சாப்பிட மற்றும் பொருட்களை தூக்க உதவுவது நாங்கள்தான்.


கால்கள்: நாங்கள் இல்லையென்றால் மனிதன் ஒரு அசைவற்றை பொருள்போன்றுதான். எங்கும் எழுந்து செல்ல இயலாது. மனிதன் வேலை செய்து சம்பாரிக்க உதவுவதே நாங்கள்தான். எனவே நாங்களே பெரியவர்கள்.


முதுகு: நான்தான் மனிதனுக்கு பிடிப்பைத் தருகிறேன். நான் இல்லையென்றால் மனிதனை எப்படி நடக்க வைப்பாய்? முதுகெலும்புகள் ஒரு மனிதனுக்கு உயிர் நாடி போன்றவை.


கண்கள்: நாங்கள் இல்லையென்றால் மனிதன் எந்த பொருளையும் பார்க்கமுடியாது. வேலை செய்வதும் கடினம். இயற்கை அழகையும் ரசிக்க முடியாது. எனவே நாங்கள்தான் பெரியவர்கள்.


காதுகள்: நாங்கள் மனிதர்களுக்கு கேட்கும் திறனை கொடுக்கவில்லையென்றால் மற்றவர்கள் பேசுவதை கேட்கவே முடியாது.


வாய்: மனிதன் பேசினால்தானே கேட்கமுடியும். நான்தான் பேச உதவுகிறேன். மேலும் மனிதன் உயிர் வாழ தேவை உணவு. அந்த உணவை சாப்பிட உதவுவது நான்தான். எனவே பெரியவனும் நான்தான்.


பற்கள்: நீ என்ன உணவு சாப்பிட ஒரு நுழைவு வாயில் போன்றுதான். அந்த உணவை அரைத்து அவனுக்கு ஆயுளைக் கொடுப்பது நான்தான். ஏனெனில் “நொறுங்கத்தின்றால் நூறு வயது” என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்களே.


நாக்கு: நீ உணவை அரைக்கிறாய், ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அந்த உணவை சரிவர உனக்கு தள்ளிவிடுவது நான்தான். மேலும் “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த உப்பு போன்ற சுவைகளை மனிதனுக்கு புரிய வைப்பது நான்தான். எனவே நான்தான் பெரியவன் என்பதில் துளி கூட சந்தேகமில்லை.


வயிறு: நீங்கள் அனைவரும் உணவு சாப்பிட மட்டுமே பயன்படுகிறீர்கள். ஆனால் அந்த உணவை செரிக்க வைத்து மனிதனுக்குத் தேவையான சக்தியை கொடுப்பது நான்தான். அதனால்தான் மனிதன் உயிர் வாழ்கிறான். எனவே நான்தான் பெரியவன்.


மூக்கு: மனிதன் சாப்பிடவில்லையென்றால் கூட சில நாட்கள் உயிர் வாழ்வான். ஆனால், மூச்சி விடாமல் உயிர் வாழ்வது கடினம். மேலும் நல்ல உணவு அல்லது கெட்டுப்போன உணவு என்பதை என்னை வைத்து முகர்ந்து கண்டுபிடிக்கின்றனர். எனவே நான்தான் பெரியவன்.


தலை: என்னங்கடா அறிவு இல்லாம பேசுகிறீர்கள்? நான் இல்லையென்றால் நீங்கள் வெறும் முண்டம். அதை புரிந்துகொண்டு பேசுங்கள்.


மூளை: நான் உன்னுள் இல்லையென்றால் நீ வெறும் மண்ணுதான். அத தெறிஞ்சிக்கிட்டு பேசு. ஒரு மனிதன் வாழ்கையில் வெற்றி பெற அவன் திறமைசாலியாக இருக்கவேண்டும். அந்த திறமை என்னால்தான் கிடைக்கிறது. ஆறாவது அறிவு இருப்பதால்தான் அவன் மனிதன். நான் இல்லையென்றால் மனிதன் வெறும் மிருகம்தான். உடல் உறுப்புகள் அனைத்தையும் இயக்குவதே நான்தான். எனவே நீங்கள் என் பக்கத்தில் கூட நிற்க முடியாது.


இப்படியாக உடலின் அனைத்து உறுப்புகளும் சண்டையிட்டுக்கொண்டு இருந்தன. இடையில் இதயம் குறுக்கிட்டது.


இதயம்: எல்லாம் ஆளு ஆளுக்கு ஏதேதோ சொன்னீங்க. ஆனா உங்களை உயிரோடு வத்திருப்பதே நான்தான். நான் உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை தூய்மைப்படுத்தி கொடுக்கவில்லையென்றால் நீங்கள் இறந்துவிடுவீர்கள். பிறகு மனிதனும் இருக்கமாட்டான். மேலும் மனிதர்களின் குணம் அவன் இதயம் சம்பந்தப்பட்டது. ஒரு நல்லவனாக இருந்தால் “அவனுக்கு நல்ல மனம் இருக்கிறது” என்று என்னைத்தான் கூறுவார்கள். ஆக மனித வாழ்க்கை என்பது இதயம் சார்ந்தது. நான் துடிப்பதை நிறுத்திவிட்டால் மனிதன் இறந்துவிடுவான்.


இதயம் கூறியது மெய்யான உண்மை என்பதால் “அண்ணே! நீங்கதான் மனித உடம்பில் பெரியவர். நாங்கள் அனைவரும் அதை ஏற்றுக்கொள்கிறோம்.” என்று அனைத்து உறுப்புகளும் கூறின.


இதயம்: அப்படியல்ல. நான் மட்டும் இருந்தால் மனிதன் உயிர் வாழ முடியாது. அனைவரும் முக்கியம்தான். தலையில் அடிபட்டு இறந்தவன் கூட இருக்கிறான், வயிற்றில் கத்தியால் குத்துபட்டு இறந்தவனும் இருக்கிறான் மற்றும் தண்டுவடத்தில் அடிபட்டு இறந்தவன் கூட இருக்கிறான். எனவே நம்மில் நான் பெரியவன் நீ பெரியவன் என்று இருக்கக்கூடாது.


இந்திய மனிதர்களைப் பாருங்கள். தங்களுக்குள் சாதி, மதம், இனம் மற்றும் மொழியால் பிரிந்து கிடக்கிறார்கள். ஆனாலும் எல்லாரும் ஒரே இனம் போன்று வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறார்கள். அப்படிபட்ட மனிதர்களுக்குள் இருக்கும் நாம் சண்டையிட்டுக்கொள்ளலாமா? நாமும் ஒற்றுமையாக இருந்தால்தான் மனிதன் நன்கு வாழ முடியும்?


அனைத்து உறுப்புகள்: ஆமாம் அண்ணே! நாங்கள் செய்தது தவறுதான். இனிமேல் நாங்கள் சண்டையிட்டுக்கொள்ளமாட்டோம்.


இப்போது அனைத்து உறுப்புகளும் ஒற்றுமையாக இருப்போம் என்று சபதம் எடுத்துக்கொண்டுவிட்டன. அவைகளின் சபதத்தை நாமும் ஏற்போம்.

அழித்த மொபைல் டேட்டா திரும்ப வேணுமா?




தற்போது மொபைல் என்பது ஒரு குட்டி கம்பியூட்டர் போலவே இயங்க ஆரம்பித்து விட்டது எனலாம்.


போன், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.


அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?


சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக் கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை.


இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது.


ஸ்மார்ட் போன் கேலரிக்கு
 ஸ்மார்ட் போன் கேலரிக்கு
 இந்த சேவையின் பெயர் Seven. இதனை  http://www.seven.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும்.


இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது.


இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

ஆன்மிகக் கதைகள்!

எதனை நீ அதிகம் நினைக்கின்றாயோ, முடிவில் நீ அதுவே ஆகிவிடுகின்றாய். 


ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள்

ஆர்வத்தோடு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் பாடத்தைக் கவனிக்காது ஏதோ சிந்தனையில் இருந்தான். ஆசிரியர் அவனைக் கண்டார். அவன் ஏதோ கற்பனை உலகத்தில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே அவனை தன்னருகில் வரச் சொன்னார்.

" பாடத்தைக் கவனிக்காமல் அப்படி என்ன சிந்தனையில் ஆழ்ந்திருந்தாய்" எனக்

கேட்டார். அதற்கு அம் மாணவன் தனது வீட்டில் அழகிய காளை ஒன்று

இருப்பதாகவும், அதன் நினைவே தனக்கு எப்போதும் இருப்பதாகவும் கூறினான். ஆசிரியர் அதற்கு அவனிடம்"அதோ எதிரில் தெரியும் குன்றில் அமர்ந்து உன் அழகிய காளையைப் பற்றி எண்ணியபடி இரு" என்று கூறினார்.

அம் மாணவனும் தொடர்ந்து ஏழு நாட்கள் அக்குன்றின் மேல் அமர்ந்து காளையை எண்ணியபடி இருந்தான். சாதாரணமாக இல்லை ஆழ்ந்து அதைப் பற்றியே எண்ணியபடி இருந்தான். அதன் பின் இப்படி இருப்பது அவனுக்கே வேண்டாம் என்று போய்விட மறுபடியும் பள்ளிக்குச் சென்றான்.

பள்ளிக்கு வந்தவன், வகுப்பறையின் வெளியிலேயே நின்று கொண்டிருந்தான்.

ஆசிரியர் அவனிடம் "உன் காளையைப் பற்றிய தியானம் முடிவடைந்து விட்டால் வகுப்பு அறைக்குள் வரலாமே" என்றார். அதற்கு அம் மாணவன் "இனிமேல் நான் குன்றுக்கு போகமாட்டேன், காளையையும் நினைக்கமாட்டேன், ஆனாலும் வகுப்பறைக்குள் என்னால் வரமுடியாது"என்றான். இப்பதிலால் ஆச்சரியம் அடைந்த ஆசிரியர் "ஏன்" எனக் கேட்டார். அதற்கு அவன் " எனது தலையின் இருமருங்கிலும் வளர்ந்துள்ள கொம்புகள் என்னை வகுப்பறைக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றது " என்றான். இடைவிடாது காளையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மாணவனுடைய மனம் அவனையும் காளையாகவே சிந்திக்கத் தூண்டியது.

ஆக, ஒருமுகப்படுத்தப்பட்ட மனதால் முடியாதது எதுவுமேயில்லை. தெய்வத்தின் மீதும், நல்ல எண்ணங்களின் மீதும் மனதை  ஒருமுகப்படுத்துவோமேயானால் நாம் பேரின்பத்தைப் பெறுவோம் என்பது உண்மை. மாறாக தீய எண்ணங்களில் மனதை செலுத்தினால் அழிவு நிச்சயம். எனவே இன்றிலிருந்தே மனதை நல்ல எண்ணங்களின் மீதும் தெய்வத்தின் மீதும் செலுத்தி, நன்மைகளை அடைவோம்.

ஒத்த பழமொழிகள்!

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.


· முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.


· அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும்.


· கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.


· எறும்பூரக் கல்லும் தேயும்.



தூக்கணாங் குருவி கூட்டைப் பார்த்திருப்பீர்கள்.அது ஒரு மரத்திலோ,செடியிலோ அல்லது கிணற்றிலோ தொங்கிக்கொண்டிருக்கும்.அதை அந்த குருவி எப்படி கட்டுகிறது? காற்று அடிக்கும்போது கூடு ஆடும்.ஆனால் விழுந்துவிடாது.அவ்வளவு பலமாக


எப்படி அந்த தூக்கணாங் குருவி கட்டுகிறது?


அது ஒவ்வொரு புல்லாக எடுத்துவந்து மிகவும் நுணுக்கமாக கட்டும்.சிறு பிழை ஏற்பட்டால் கூட அந்த கூடு கீழே விழுந்துவிடும்.மீண்டும் மீண்டும் அந்த கூடு கீழே விழுந்தாலும் குருவி தன் முயற்சியை கைவிடுவதில்லை.அதுவும் மீண்டும் மீண்டும் புற்களை எடுத்து வந்து கூடை கட்ட ஆரம்பிக்கும்.இறுதியில் ஒரு உறுதியான கூடு கிடைக்கும்.


தூக்கணாங் குருவி கூடு


அதை விடுங்கள்.ஒரு பாறையில் விழுந்த ஆல மரத்தின் விதை எப்படி பறையையே பிளந்து,செடியாக முளைத்து பின் மரமாகிறது? அதன் முயற்சிதான் அதன் வாழ்க்கைக்கு துவக்கத்தை தருகிறது.


முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்:



முயற்சி என்னும் தாரக மந்திரத்தை நாள்தோறும் உபயோகிப்பவர்களுக்கு வாழ்கையில் எந்த கஷ்டங்களும் இல்லை என்பதை இந்த பழமொழி அறிவுறுத்துகிறது.


முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை:


‘மனிதனால் முடியாதது ஒன்றும் இல்லை’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.இங்கு 'முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை' என்று இருக்கிறது.அதாவது மனிதன் என்பதே முயற்சியின் மொத்த உருவம் என்பதை இந்த இரண்டு பழமொழிகளையும் ஒப்பிடும்போது தெரிந்துகொள்ளலாம்.


அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும்:


ஒரு அம்மியை உடைப்பது என்பது கடினமான வேலை.அதனைக் கூட நாம் சுத்தியலால் அடி மேல் அடி அடித்தால் அது தகரும்,அதாவது உடையும்.அதேபோல் நாமும் பலமுறை முயற்சி செய்தால் ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்கலாம்.


கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்:


நம்பிக்கையோடு முயற்சி செய்பவர்களால் கல்லையேக் கரைக்க முடியும் என்னும்போது மனிதனால் முடியாதது வேறு ஏதேனும் உண்டோ?


எறும்பூரக் கல்லும் தேயும்:


எறும்புகள் சாரை சாரையாக ஒரு கல்லின் மீதோ அல்லது சுவற்றின் மீதோ செல்லும்போது அவை சென்ற தடம் தெளிவாக தெரியும்.காரணம் அந்த இடம் தேய்ந்து இருக்கும்.எறும்புகள் மறைமுகமாக நமக்கு முயற்சியின் தத்துவத்தை உணர்த்துகின்றன.சாதாரண எறும்புகளே கல்லையே தேய்க்கும்போது மனிதர்கள் முயன்றால் மலையையே சாய்க்கலாம்.
அதனால் வாழ்க்கையில் தோல்விகளை கண்டு துவளாமல் வெற்றியை அடையும்வரை முயலுங்கள்.

இறைவன் கொடுத்த வாழ்க்கை...?

இறைவன் கொடுத்த வாழ்க்கையில் இனிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன அது போன்று கசப்பான சம்பவங்களும் நிகழ்கின்றன. கசப்பும் இனிப்பும் கலந்த வாழ்க்கையை மனிதன் அனுபவிக்கிறான். மனிதன் இதிலிருந்து தப்பிக்க இயலாது. கடவுள் மனிதனை படைக்கிறான். இவற்றில் ஒரு சிலரை ஏழையாகவும், வேறு சிலரை பணக்காரனாகவும், ஒரு சிலரை அழகாகவும், மற்றவரை குரூரமாகவும் என்று பல கோணங்களில் படைக்கிறான். இந்த வாழ்க்கை மனிதனின் வேண்டுகோளின்படி அமையவில்லை. முற்பிறவியில் செய்த கர்மாவின் படி மனிதனுக்கு வாழ்க்கை அமைகிறது.


வாழ்க்கை என்பது போராட்டம். மனிதனும் வாழ்க்கையில் சளைக்காமல் போராடுகின்றான். கடைசி மூச்சு வரை மனிதன் போராட்டங்களை எதிர் கொள்கிறான். இந்த போராட்டங்களைக் கண்டு மனிதன் மனம் தளர்ந்து விடவில்லை. மனிதன் மனப்பக்குவத்தோடு போராட்டத்தை சந்திக்கிறான். இவைகளில் சில போராட்டத்திற்கு தீர்வு காண்கிறான்.


வாழ்க்கை என்பது பந்தயம். இந்தப் பந்தயத்தில் ஜெயிக்கலாம், தோல்வியும் அடையலாம். வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் மாறி மாறி நடக்கின்றன.  மனிதன் செய்யும் வியாபாரத்தில் லாபம் அடையலாம் அல்லது நஷ்டம் ஏற்படலாம். மனிதன் செய்யும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் இருக்கலாம். வாழ்க்கையில் இதுதான் நடக்குமென்று மனிதன் நிர்ணயிக்க முடியாது. வாழ்க்கையில் எந்த சம்பவம் வேண்டுமானாலும் நிகழலாம். ஏதையும் சந்திப்பதற்கு மனிதன் தயாராக இருக்க வேண்டும். வாழ்க்கையில் பல பிரச்சனைகள் தோன்றுகின்றன. அதனை மனப்பக்குவத்தோடு சமாளிக்க வேண்டும்.


மனிதப் பிறவியோடு முடிவாக மரணமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. பிறவியொன்று இருந்தால் அதனோடு எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம் என்கிற நிலையும் இருக்கிறது.  மூச்சிருக்கும் வரை மனிதன் வாழ்கையை வாழ்கிறான். இந்த வாழ்க்கையில் முக்கால் பங்கு கசப்பான சம்பவங்களை அனுபவிக்கிறான். வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறான். ஒரு சிலரோடு உறவையும் வளர்த்துக் கொள்கிறான். இவற்றில் ஒரு சில உறவுகள் நல்ல முறையில் அமைகின்றன.


 மற்றவை கண்ணாடி போல் உடைகின்றன. அப்படி உறவுகள் உடையும் போது அல்லது பிரியும் போது மனம் தவிக்கிறது. கஷ்டங்கள் சரமாரியாக சூழ்ந்து கொள்ளும் போது மனம் வேதனைப் படுகிறது. இப்படி வேதனையும் வலியும் ஏற்படும் மனிதனின் வாழ்க்கை போராட்டத்துடனே போகிறது. ஏதிர்பாராத சம்பவங்களால் வாழ்க்கையோடு போராடிப் போராடி, மனம் துவண்டு சலிப்படைந்து போகிறான். மனிதனுக்கு ஓட்டமும் நடையும் நின்று விடும் போது மனிதனை மரணம் தழுவிக் கொள்கிறது.


இந்த உண்மையான வாழ்க்கையை உணர்ந்து வாழுங்கள், உண்மையான வாழ்க்கையிலும் அதிகபட்சம் கசப்பான சம்பவங்களையே அனுபவிக்கிறான். வாழ்க்கையில் சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வருகின்றன. சந்தோஷமான தருணத்தில் உறவுகள் நம்மோடு சோந்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறது. துக்கமான சமயத்தில் மனிதன் ஒருவனே அனுபவிக்க நேரிடுகிறது. துக்கமான தருணத்தில் மனிதன் மனம் துவளாமல், மிரண்டு போகாமல் வாழ்க்கையை சலிப்பாக்கிக் கொள்ளாமல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.


 தன்னம்பிக்கையை பெருக்கிக் கொள்ள வேண்டும். மனப்பக்குவத்தோடு பிரச்சனையை சந்திக்க வேண்டும். வாழ்க்கையில் பிடிமானத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பயம், பீதி, கெட்ட அதிர்வலைகள் அனைத்தையும் ஒதுக்கி விட்டு இறைவன் கொடுத்த வாழ்க்கையை நம்பிக்கையோடும், மனஉறுதியோடும் வாழ முயற்சி செய்ய வேண்டும். மனிதன் இறைவன் அமைத்த வாழ்க்கையை முழுமனதோடு உணர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சிந்தனை துளிகள்....



01. எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.



02. அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?


03. அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை.


04. ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.


05. கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள்.


06. கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.


07. A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Z
அதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.


08. ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது.


09. மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும்.


10. ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே இல்லை. முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம்.


11. தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள்.


12. காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா.


13. உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று இன்கம்டாக்ஸ்.


14. சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான். ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய் அல்ல.


15. கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும், மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன.


16. நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் நடக்காததால் தான்.


17. சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும். ஆனால் அழகான பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான் தோன்றும். அதான் ரிலேடிவிட்டி.


18. உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள முடிவதுதான்.


19. கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல்.


20. வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்.


21. உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும். அதுவே வழிகாட்ட சிறந்த வழி.


22. நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.


23. நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.


24. எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய் வந்துவிடுகின்றதே.

சாபமாகும் வரங்கள்!



தீயதை நல்லதாக்கிக் கொள்ளவும், நல்லதைத் தீயதாக்கிக் கொள்ளவும் முடிந்த விசேஷத் தன்மை மனிதனுக்கு மட்டுமே உண்டு. எத்தனையோ பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளையும், குறைபாடுகளையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு முன்னேறி சரித்திரம் படைத்த சாதனையாளர்களை நாம் கண்டிருக்கிறோம். அதே போல் எத்தனையோ சாதகமான சூழ்நிலைகளையும், அனுகூலமான அம்சங்களையும் அலட்சியப்படுத்தி வீணடித்து பாழாய்ப் போனவர்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால் தனிப்பட்ட மனிதர்களாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாழாய்ப் போவதைப் பார்க்கிற போது ஏற்படாத பெரும் வருத்தம், ஒரு தலைமுறையில் கணிசமான நபர்கள் சீரழிவதைப் பார்க்க நேர்கிற போது நம்மிடம் ஏற்பட்டுத் தங்கி விடுகிறது.


இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் இணையற்ற அற்புதங்கள் என்று இரண்டைச் சொல்லலாம். ஒன்று இண்டர்நெட் மற்றது செல்போன். இவற்றை வரப்பிரசாதங்கள் என்று கூடச் சொல்லலாம்.
ஒரு காலத்தில் எதைப் பற்றியாவது ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதைப் பற்றித் தெரிந்தவர்கள் என்று நாம் நினைக்கும் நபர்களிடம் போய் கேட்போம். அல்லது நூலகங்களிற்குப் போய் அது சம்பந்தமாய் எழுதப்பட்டிருக்கும் புத்தகங்களையும், அது பற்றி பத்திரிக்கைகளில் வந்திருந்தால் அவற்றையும் தேடிப் படிக்க வேண்டிய நிலை இருந்தது.


அப்படிப் பெறும் அறிவும் சமீபத்திய தகவல்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. நபர்களிடம் கேட்டும், புத்தகங்களில் படித்தும் நாம் அறியும் எத்தனையோ தகவல்கள் பழையனவாக இருக்கக் கூடும். அதற்குப் பின் எத்தனையோ மாற்றங்கள் சம்பந்தப்பட்ட துறையில் நிகழ்ந்திருக்கக் கூடும். எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டு, நாம் கேட்டும் படித்தும் அறிந்து கொள்ளும் விஷயங்களின் உபயோகத்தன்மை காலாவதியாகி விட்டிருக்கவும் கூடும். சில சமயங்களில் சிலவற்றைக் கேட்டறிந்து கொள்ள சரியான ஆட்களும் கிடைக்க மாட்டார்கள், படித்துத் தெரிந்து கொள்ள சரியான புத்தகங்களும் கிடைக்காமல் போய் விடும். அது போன்ற சந்தர்ப்பங்களில் பழைய காலாவதியான அறிவைக் கூட நாம் பெற முடியாமல் போய் விடும்.


இன்று எதையும் அரைகுறையாக அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் இண்டர்நெட்டில் முறையாகத் தேடினால் போதும். முழுவதுமாக ஒருவர் விரும்பியதை அறிந்து கொள்ள முடியும். நாம் அறிய விரும்பும் விஷயங்களை சமீபத்திய மாற்றங்கள் உட்படத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். மனிதனின் அறிவுதாகத்திற்கு இண்டர்நெட் ஒரு ஜீவ நதி என்பதில் சந்தேகம் இல்லை. அது மட்டுமல்லாமல் விரல்நுனியில் உலகத்தை இண்டர்நெட் கொண்டு வந்து தருகிறது. பயணித்து செய்து முடிக்கிற பல காரியங்களை இருந்த இடத்திலேயே முடித்துக் கொள்ளும் மிகப்பெரும் வசதியை மனிதனுக்கு இண்டர்நெட் செய்து தந்திருக்கிறது.


அதே போல் தகவல் தொடர்பு என்பது ஒரு காலத்தில் சுலபமானதாக இருக்கவில்லை. ஒருவர் இறந்து போனால் வெளியூர்களில் இருக்கும் அவருடைய உற்றாரும் உறவினரும் அறிந்து கொள்ள பல மணி நேரங்கள் அல்லது நாட்கள் ஆகி விடும். தந்தி மூலம் தகவல் போய் சேர்ந்து அவர்கள் வருவதற்கு முன் இறந்தவரின் அந்திமக் கிரியைகள் முடிந்து விட்டிருப்பதும் உண்டு. அதே போல் பயணம் போன ஆட்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடியாது. தபாலில் தகவல் வந்தால் தான் உண்டு. அப்படி வருவதும் பழைய தகவலாக இருக்கும். இல்லா விட்டால் பயணம் போன நபரே வந்து சொன்னால் தான் உண்டு.


இன்று செல்போன் தயவால் யாரையும் எப்போதும் உடனடியாகத் தொடர்பு கொள்ளும் சௌகரியம் இருக்கிறது. ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரங்களும் ஒருவரை நாம் உடனே தொடர்பு கொள்ள முடியும். தகவல் தெரிவிப்பதும், பெற்றுக் கொள்வதும் மிக மிக எளிதான விஷயங்களாக மாறி விட்டன. இதனால் எத்தனை டென்ஷன் குறைகிறது, எத்தனை வேகமாகவும், சுலபமாகவும் பல வேலைகள் நடக்கின்றன என்பதைப் பார்க்கும் போது செல்போனும் இன்றைய விஞ்ஞானம் தந்த மிகப் பெரிய வரப் பிரசாதமே.


ஆனால் இத்தனை அருமையான வரப்பிரசாதங்கள் சாபங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது. இண்டர்நெட்டை தகவல் அறியும் சாதனமாய், அறிவூட்டும் நண்பனாய், தங்கள் வேலைகளை சுலபமாக்கிக் கொள்ளும் ஒரு நல்ல ஊடகமாக மட்டும் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்? எத்தனை பேர் அதனைத் தங்கள் முன்னேற்றத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்?


நல்ல விஷயங்களை விட அதிகமாய் கலாச்சாரச் சீரழிவுக்கான விஷயங்களே இண்டர்நெட் மூலம் அதிகம் பார்க்கப்படுவதாகவும், இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் இண்டர்நெட் உபயோகத்திற்கு அடிமையாகிக் கொண்டிருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. இன்றைய இளைஞர்களிடம் கண் முன் உள்ள யதார்த்த உலகத்தில் பங்கு கொள்வது குறைந்து கொண்டு வருகிறது என்பதையும், இண்டர்நெட் மூலமாக மட்டும் உலகைக் காண ஆரம்பிக்கும் போக்கு வளர ஆரம்பித்துள்ளது என்பதையும் பார்க்கும் போது கவலை எழுகிறது.


இது ஒரு நோயாகவே மாறி விட்டிருக்கிறது என்று கூறும் அமெரிக்க உளவியல் கழகம் (American Psychiatric Association) அந்த நோயிற்கு இண்டர்நெட் உபயோக சீர்குலைவு (Internet Use Disorder or IUD) என்று பெயரிட்டிருக்கிறது. இண்டர்நெட் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போவது, இண்டர்நெட் இணைப்பு இல்லாத நேரங்களில் எதையோ இழந்தது போலத் தோன்றுவது, இண்டர்நெட் தடைப்படும் போது மற்றவர்களிடம் கோபித்துக் கொள்வது, ஒழுங்காக மற்ற வேலைகளைப் பார்க்க முடியாமல் அந்த வேலை நேரத்தையும் இண்டர்நெட்டிலேயே செலவழிப்பது, நிஜ மனிதர்களிடம் பழகும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும் கூடப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு இண்டர்நெட்டில் அரட்டை(chatting), விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுவது போன்றவை எல்லாம் அந்த நோய் உள்ளவர்களின் தன்மைகள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.


அதே போல் செல்போன் தகவல் தெரிவிக்கும் சாதனமாய் பயன்படுவது சிலருக்கு மட்டுமே. இன்றைய இளைஞர்களில் மிக அதிகமானோர் வெட்டிப் பேச்சுக்குத் தான் அதை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்தும் டீக்கடையில் அமர்ந்தும் வெட்டிப் பேச்சு பேசிப் பொழுதைக் கழிக்கும் ’பெரிசு’களைப் பலரும் கிண்டல் செய்வதுண்டு. ஆனால் இன்று செல்போனில் அதையே இன்றைய இளைய தலைமுறையினரில் கணிசமான பகுதியினர் செய்வது அவர்களுடைய எதிர்காலம் மட்டுமல்லாமல் அவர்களால் உருவாக்கப் போகும் சமூக எதிர்காலம் குறித்த அச்சத்தையும் அதிகப்படுத்தி வருகிறது.


எந்த அளவில் செல்போன் இளைஞர்களை ஆபத்தில் உள்ளாக்கும் நிலைக்குத் தள்ளி இருக்கிறது என்பதை சமீபத்தில் நேரிலேயே பார்க்கும் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஒரு கல்லூரி மாணவி செல்போனில் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருக்கிறார். இடையே ஒரு சாலையை அவர் கடக்க வேண்டி இருந்த போதும் கூட அவர் சாலையின் இருபக்கமும் பார்க்கும் சிரமத்தைக் கூட மேற்கொள்ளவில்லை. வேகமாய் வந்த ஒரு கால் டாக்ஸிக்காரர் அந்தப் பெண்ணை இடிக்கிற அளவு வந்து வண்டியை நிறுத்தி வசை பாடினார். அதைக் கூட அந்தப் பெண் கவனிக்கவில்லை. தொடர்ந்து பேசிக் கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தார்.


ஒருவேளை அவர் டாக்ஸி அந்தப் பெண்ணை இடித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? யோசித்துப் பாருங்கள். கைகால் முறியவோ, உயிருக்கே ஆபத்தாகவோ கூட வாய்ப்பிருக்கும் ஒரு நிலைக்கு ஆளாகி, அதிலிருந்து தப்பித்து இருக்கிறோம் என்ற அறிவும் கூட இல்லாமல் செல்போனில் பேச்சை நிறுத்த முடியாமல் போய்க் கொண்டே இருந்த அந்த இளம் பெண் போல எத்தனையோ பேர் இருக்கிறார்கள். வாகனத்தை ஓட்டும் போது கூட பலரால் செல்போனில் பேசாமல் இருக்க முடிவதில்லை.


எத்தனையோ விபத்துகள் இதன் காரணமாக தினந்தோறும் நடந்து எத்தனையோ அப்பாவிகள் அநியாயமாக அதில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தும் அலட்சியமாய் நடந்து கொள்வது சிறுமையே அல்லவா?
அறிய வேண்டியவையும் செய்ய வேண்டியவையும் எத்தனையோ இருக்க சதாசர்வ காலம் செல்போனில் பேசிக் கொண்டும், SMS அனுப்பிக்கொண்டும் தங்கள் பொன்னான நேரத்தை இளைய சமுதாயம் இழந்து கொண்டிருப்பது முட்டாள்தனத்தில் முதலிடம் பெறும் தன்மை அல்லவா? நேரடி வெட்டிப் பேச்சுகளில் கூட அந்தப் பேச்சு ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரம் முடிவடைவது உண்டு. அவரவர் வீட்டுக்கு சாப்பிடவோ, உறங்கவோ போகும் நேரம் உண்டு. ஆனால் செல்போனில் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பேசும் வசதி இருப்பதால் இது முடிவிற்கு வருவதும் இல்லை.


இளைஞர்களே இளமைக்காலம் இனிமையானது. இது பொன்னான காலமும் கூட. உங்கள் எதிர்காலத்தை நீங்கள் விதைக்கும் காலமும் அது தான். இந்தக்காலத்தை திருடிக் கொண்டு வீணடிக்க எதையுமே, யாரையுமே நீங்கள் அனுமதிக்காதீர்கள். இண்டர்நெட், செல்போன் வசதிகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்துங்கள். ஆனால் அதன் பயன்பாட்டில் உங்கள் கட்டுப்பாடு இருக்கட்டும். தேவைப்படும் போது வேண்டியதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டிய கருவிகளாக அவற்றை வைத்திருங்கள். மாறாக அவற்றின் கருவிகளாக மாறி, அடிமைப்பட்டு அழிந்து போகாதீர்கள்!

அம்மா-பாசத்தின் தெய்வம் - அவசியம் படிக்கவும்!


இந்த கதை உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

கள்ளிப்பட்டு என்னும் ஊரில் இருந்தது அந்த அரசினர் பள்ளி. அங்கு ஐந்தாம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் சிறப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது “ஐயா” என்று ஒரு குரல் கேட்டது.

பெண்-ஒற்றைக் கண்ணுடன்ஆசிரியர் திரும்பிப் பார்த்தார். வகுப்பறையின் வாசற்படிக்கு அருகே முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளை பார்க்கவே அருவருப்பாக இருந்தது. ஏனெனில் அவளுக்கு ஒரு கண் இல்லை. அவளைப் பார்த்ததும் மாணவர்கள் அனைவரும் பயந்துவிட்டனர். வகுப்பு ஆசிரியர் கூட பயந்தவராய் அவளைப் பார்த்து,

“யாரும்மா நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டார்.


“ஐயா, என் மகன் ராமு மதிய சாப்பாட்டை மறந்து விட்டு வந்து விட்டான். அவனிடம் கொடுக்கத்தான் இந்த சாப்பாடுக் கூடையை எடுத்து வந்துள்ளேன். இதை அவனிடம் கொடுத்துவிட்டு சென்று விடுகிறேன்.” என்றாள்.
“ராமு! உங்க அம்மாகிட்ட போய் அந்த கூடையை வாங்கிட்டு வா.”

ராமு எழுந்து சென்று வாங்கி வந்து ஆசிரியரிடம் நன்றி கூறி அமர்ந்தான். அவனது அம்மாவும் சென்றுவிட்டாள். ஆனால் வகுப்பறையில் உள்ள மாணவர்கள்தான் ராமுவை ஓட்டித்தள்ளிவிட்டனர்.

“ஏய்....... ஒத்த கண்ணு அம்மா!”

“டேய்! அதுதான் உங்க அம்மாவா? பேய் மாதிரி இருக்காங்க...”

“ராமு அம்மா, ஒத்த கண்ணு அம்மா”

என்றெல்லாம் அவனை ஏளனம் செய்தனர். ராமுவிற்கு அழுகையே வந்துவிட்டது. ஆசிரியர் மாணவர்களை அதட்டி அமைதிபடுத்தினார்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற ராமு, தனது புத்தகப்பையை வீட்டினுள் ஒரு மூலையில் தூக்கி எறிந்தான். அவன் அவ்வளவு கடுப்பாக இருப்பதைப் பார்த்த அவன் அம்மா வள்ளி “என்னப்பா ஆச்சு? ஏன் இவ்வளவு கடுப்பா இருக்கே?” என்று கேட்டாள்.

“எல்லாம் உன்னாலதான். நான் எத்தனை முறை சொல்றது, என்ன பார்க்க பள்ளிக்கூடம் வராதேனு? நீ இன்னைக்கு வந்ததால எல்லாரும் என்ன ‘ராமு அம்மாவுக்கு ஒத்த கண்ணு’ அப்படினு எவ்வளவு கேலி கிண்டல் பண்ணினாங்க தெரியுமா? நான் அழுதே விட்டேன்.”

“நீ சாப்பாட்டை மறந்து விட்டு போயிட்டே. சாப்படலனா உடம்பு கெட்டுடும். அதனாலதான் எடுத்துக்கிட்டு வந்தேன்.”

“நான் சாப்பிடாம செத்தா உனக்கு என்ன? என்னையை அசிங்கப்படுதுவதே உனக்கு வேலையாப்போச்சி. நீ இனிமே பள்ளிக்கூடம் வந்த, நான் பள்ளிக்கு போகவே மாட்டேன்.”.

“சரிப்பா, என்ன மன்னிச்சிடு. இனிமே உன்னை நான் தொந்தரவு செய்யமாட்டேன்.” என்று கூறியவள் சாமியறைக்குள் சென்று குமுறிக் குமுறி அழுதாள். தன் மகனே தன்னை கேவலமாக பார்க்கிறானே என்று சாமியிடம் முறையிட்டாள்.

ராமுவின் அப்பா அவன் பிறந்த ஒரு மாதத்திலேயே இறந்துவிட்டார். அவனுடைய ராசிதான் அவரை கொன்றுவிட்டது என்று அனைவரும் கூறினர். ஆனால் அவனது அம்மா வள்ளி, “என் புருஷன் குடிகாரன். குடிச்சி, குடிச்சியே செத்து போய்ட்டான். அதுக்கு என் புள்ள ராசியை தப்பா சொல்லாதீங்க” என்று அவனை மெச்சிக்கொள்வாள். புருஷன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ளாமல், கூலி வேலை செய்து அவனை காப்பாற்றி வருகிறாள்.

ராமு தன் உயர் கல்விக்கு சென்னை செல்லவேண்டிய சூழ்நிலை. அதனால் தன் தாயிடம் விடைபெற்று சென்று அங்கு விடுதியில் தங்கி படித்து வந்தான். அவன் படிக்கும் காலக்கட்டத்தில் விடுமுறைக்கு கூட அவன் அம்மாவை பார்பதற்கென்று வந்தது கிடையாது. இதை நினைத்து வள்ளி வருந்தாத நாளே இல்லை. பெத்த மனம் தன் பிள்ளையை பார்க்க ஏங்கியது. அதனால் அவள் ஒருநாள் ராமுவின் கல்லூரிக்கே சென்றுவிட்டாள். இப்போதும் ராமு தனது அம்மாவை மிகவும் அசிங்கப்படுத்தி அனுப்பினான். அதனால் நொந்துபோய் வீட்டிற்கு சென்ற அவள் ராமுவை பார்க்கச்செல்லாமல் அவனுக்குத் தேவையான பணம் மட்டும் அனுப்பி வந்தாள். ராமுவிடமிருந்து கடிதம் வரும். ஆனால், வள்ளி எப்படி இருக்கிறாள் என்று கேட்டிருக்கமாட்டான். “எனக்கு ஐயிந்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும்” என்று மொட்டையாக இருக்கும். அவளும் தன் மகன் இவ்வளவு கல் நெஞ்சக்காரனாக இருக்கிறானே என்று அழுதுகொண்டே பணத்தை அனுப்புவாள்.

ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அவனிடமிருந்து வரும் கடிதம் கூட வருவதில்லை. தன் மகனுக்கு என்ன ஆயிற்றோ என்று அவன் தன்னை அவமானப்படுத்தினாலும் பரவாயில்லையென்று அவனது கல்லூரிக்குச் சென்று விசாரித்ததில், அவனது படிப்பு முடிந்து வேலை கிடைத்துச் சென்றுவிட்டதாக தெரியவந்தது. அவளும் தன்னை தன் மகன் அடியோடு மறந்துவிட்டானே என்று தினமும் அழுதுகொண்டே இருப்பாள். அதனால் அவளது உடல்நிலை மோசமானது. சில வருடங்கள் கழிந்தன. ராமு நல்ல வேலையில் உள்ளதாகவும், அவனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாகவும், தான் அவனைப் பார்த்ததாகவும் ஒருவர் வந்து வள்ளியிடம் கூறினார். இந்த செய்தி அவளுக்குப் புத்துயிர் அளித்தது.

அவர் மூலம் அவன் விலாசத்தை அறிந்து அவனை பார்க்கச் சென்றாள். சென்னையில் அவனது இருப்பிடத்திற்கு அருகில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் அவன் வீட்டைக் கண்டுபிடித்தாள். அங்கு ராமுவின் பிள்ளைகள் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் தவறவிட்ட பந்து வள்ளிக்கு அருகில் வந்தது. அதை எடுத்துக்கொண்டு தன் பேரப்பிள்ளைகளை கொஞ்ச அவள் சென்றபோது அவளது ஒற்றைக்கண்ணைப் பார்த்து பயந்துபோய் பிள்ளைகள் அழ ஆரம்பித்தன.

குழந்தைகளின் அழுகை சத்தத்தை கேட்டு ராமு வெளியில் வந்தான். அம்மாவை பார்த்த ராமு ஏதோ பிச்சைக்காரியைப்போல் போல் “நீ எதுக்கு இங்க வந்த, நாங்க நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலயா? உன் மூஞ்சிலேயே படக்கூடாதுன்னுதான நான் எங்க இருக்கிறேன்னு சொல்லவேயில்ல, இப்ப என் பிள்ளைகல பயம்புறுத்த வந்துட்டியா? முதல வெளிய போ”, என்றான் ராமு.

“இத்தனை வருடங்கள் கழித்து நான் அவனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால் இவன் நம்மை அம்மா என்று கடுகளவு கூட பாராமல் இப்படி சொல்லிவிட்டானே! இனிமேல் இவனிடம் பாசத்தை எதிபார்ப்பது தவறு” என்று எண்ணிய வள்ளி அங்கிருந்து வந்துவிட்டாள்.

சில நாட்கள் கழித்து ராமுவிற்கு ஒரு கடிதம் வந்தது. அது அவன் அம்மாவின் அண்டை வீட்டுக்காரர் எழுதியது. அதில் “ராமு உங்க அம்மா இறந்துவிட்டார். அவங்க உன்னிடம் தருமாறு கொடுத்தக் கடிதத்தை இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். தயவு செய்து படிக்காமல் விட்டுவிடாதே. இருக்குபோதுதான் அவர்களை மதிக்கவில்லை. இறந்தபிறகாவது இந்த கடிதத்தை படித்து அவருடைய ஆத்துமாவை சாந்தியடைய வை!” என்று இருந்தது. ராமு தன் அம்மா இறந்துவிட்டாளே என்று சிறு கவலைகூட இல்லாமல் இன்னொரு கடிதத்தை எடுத்துப் படித்தான்.

“ராமு! என் மகனே! உன்னைப் பெற்றெடுக்க மறு பிறவி எடுத்தேன். என் ரத்தத்தைப் பாலாக்கி உனக்குக் கொடுத்தேன். என் உடலையே உருக்கி கூலி வேலை செய்து உன்னைப் படிக்கவைத்தேன். ஆனால் அதற்கெல்லாம் நீ கொடுத்த கைமாறு எந்தவொரு தாய்க்கும் கிடைக்கக்கூடாது. சரி, ஏன் என்னை நீ வெறுக்கிறாய்? நான் ஒற்றைக் கண் கொண்டவள் என்பதால்தானே? நீ குழந்தையாய் இருந்தபோது ஒரு விபத்தில் உன்னோட ஒரு கண்ணை இழந்துவிட்டாய். உன்னை ஒரு கண்ணோடு பார்ப்பதற்கு என் இருதயமே நின்றுவிடும் போலிருந்தது. அதனால் என் ஒரு கண்ணை கொடுத்து உன் கண்ணைக் காப்பாற்றினேன், என் அழகை இழந்தேன். ஆனால் எனக்கு அப்போது அது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த விஷயத்தை உனக்கு கூறி வளர்த்திருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்திருந்தால், நீ ஒருவித மன உறுத்தலுடன் வாழ்ந்துவந்திருப்பாய்.” இதைப் படித்தவுடன் ராமுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. மேலும் படித்தான்.

“அழாதே மகனே, எனக்காக அழாதே. உன் பிள்ளைகளுக்காக அழு. அவர்களை வளர்க்கும்போதே நீ படும் கஷ்டங்களை சொல்லி வள. இல்லையென்றால் என் கதிதான் உனக்கும்.”

இதை படித்ததும் ராமு தன் தவறை உணர்ந்தான். அவனது கண்ணில் தாரை தரையாய் நீர் வழிந்தது. தரையில் புரண்டு புரண்டு அழுதான்.

வாழும்போதே தன் தாயின் தியாகத்தை உணராமல், அவள் இறந்தபிறகு அழுது என்ன பிரயோஜனம்?

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு?.

பெற்றோருக்கு....!




1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள்.
 "All work and no play makes Jack a dull boy"

 21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.
சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

23. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

இறைநம்பிக்கையே வாழ்க்கை!

மதமும், மதம் சார்ந்த சிந்தனைகளும் மனித இனத்தில் இன்று, நேற்று உருவானவை அல்ல. மனிதனுடைய கலாச்சார மாற்றத்தினூடாக விளைந்தவையே மதங்களும் அவை சார்ந்த நற்சிந்தனைகளும்.


இன்று சில நாடுகளில் மதங்களைப் பிரதிநிதிப்படுத்துகிறோம். என்று கூறிக் கொண்டு தவறான செய்கைகளில் ஈடுபடும் சில மனிதர்களினால் மதங்களை மிகவும் இழிவாக விமர்சனம் செய்யும் நிகழ்வுகள் தலைதூக்கியுள்ளன.


ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகள் இருபாலருமே மனிதர்கள்தான். அவர்களின் மன உணர்ச்சிகள் சாதாரண மனித உணர்ச்சிகளுக்கு உட்பட்டவையே. அதற்காகத் தவறு செய்யும் மனிதன் சந்தர்ப்பவசத்தால் மதத்தைப் பிரதிநிதிப்படுத்தும் ஒருவராக இருந்து விட்டால் அது அந்த மதத்தின் குற்றமல்ல.


மதங்களின் பெயரைச் சொல்லி ஏமாற்றும் பேர்வழிகள் செய்வது சரி எனபதல்ல நமது நிலைப்பாடு. அத்தகைய சிலரை வைத்துக் கொண்டு இறை நம்பிக்கை கொண்டவர்களை அதுவும் குறிப்பாக ஒரு மதத்தைத் தாக்கிப் பலரின் மனங்களை புண்ணாக்குவது ஒரு மனிதாபிமானமான செயலாக இருக்காது.


உதாரணத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் இருவர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் மணமானவர், மற்றொருவர் மணமாகாதவர் என்றும் வைத்துக் கொள்வோம். மணமாகாத நண்பன், மணமாகிய நண்பனின் மனைவியுடன் தகாத உறவினை வைத்துக் கொண்டால் அது அந்த தனிப்பட்ட மனிதனின் நயவஞ்சகத்தனம் என்று சொல்லுவோமா? அல்லது நட்பு என்பதே வேஷம், உலகில் நட்பு என்று ஒன்றே இல்லை என்று வாதிடுவோமா?


அதேபோலத்தான் தம்மை ஆன்மீகவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் சிலர் இழைக்கும் தவறுகள் ஆன்மீகத்தின் தவறாகாது, அந்த ஆன்மீகத்தைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் தனது மனதின் பலவீனங்களை மறைத்துக் கொள்ளும் திரையாக அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தனிப்பட்ட மனிதனின் தவறேயாகும்.


இந்த உலகில் விளக்க முடியாத பல நிகழ்வுகள் நிகழ்கின்றன. பலருடைய வாழ்வில் ஏன் ஒரு நிகழ்வு அந்த நேரத்தில் தமக்கு நிகழ வேண்டும் என்று புரியாமல் அல்லாடும் பல கணங்கள் உண்டு. படகில் துடுப்பைத் தவற விட்டுத் தவிக்கும் படகோட்டியின் கையில் மிதந்து செல்லும் ஒரு மரக்கட்டை அகப்பட்டால் அதைக் கைப்பற்றி தன்னைக் கரை சேர்க்க அவன் முயற்சிப்பதைப் போல, தமக்கு ஏற்பட்ட துயர நிகழ்வை விளங்கிக் கொள்ள முடியாமல் தத்தளிக்கும் ஒருவனுக்கு ஆன்மீகம் கைகொடுக்கும் போது அவன் அதைத் தன்னைக் கரை சேர்க்கும் துடுப்பாக உபயோகிப்பது எப்படித் தவறாக முடியும் ?


சிந்திக்கும் சுதந்திரம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. தன் சிந்தையில் விளைந்த உணர்வுகளின் அடிப்படையில் அவன் தனது நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்கிறான். அவன் தன் மனதில் வரித்துக் கொண்ட நம்பிக்கைகள் வேறு சிலரின் பார்வையில் மூடக்கொள்கைகளாகத் தோற்றமளிக்கலாம்.


அந்த நம்பிக்கைகளினினால் ஏனைய மனிதர்களுக்கோ, சமூகத்திற்கோ தீங்கு விளைவிக்காமலும், அடுத்தவரின் மனதைப் புண்படுத்தும் வகையில் நடக்காமலும் இருக்கும் வரையிலும் அவனது நம்பிக்கைகளைச் சிதைக்கும் வகையில் அவற்றை இகழ்வது ஒரு சரியான செயலல்ல.


இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்க்கைக்கு சட்டமூலமான விதிகள் கிடையாது. அதற்காக எல்லோரும் எப்படியும் வாழலாம் என்னும் வகையில் வாழ்ந்தால் மிருகங்களுடைய வாழ்விற்கும், மனிதர்களுடைய வாழ்விற்கும் என வித்தியாசம்.


மனிதன் கட்டுப்பாடின்றி வாழ்வதைத் தடுக்கும் வகையில் அவனது செய்கைகளுக்கு ஒரு வரம்பு போடுவதற்காக மதங்களின் வழி சில நற்சிந்தனைகள் போதிக்கப்பட்டன. இவற்றில் எந்த மதத்தின் சிந்தனைகள் சிறந்தவை என்பதல்ல முக்கியம். அனைத்து மதங்களுமே மனிதர்களின் மேம்பட்ட வாழ்க்கை முறைக்குத்தான் வழிவகுத்தன என்பதுவே உண்மை.


மதங்களின் பெயரால் மக்களை இழிவுபடுத்தும் முறையில் பிரித்துக்காட்டும் செய்கை ஆண்டவன் மனிதனுக்கு அளித்த விதிமுறை அல்ல. மதத்தின் பெயரால் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக சுயநலமிக்கோரால் மதத்தின் பெயர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்பதுவே உண்மை.


அப்படிப்பட்ட சில சுயநலவாதிகளின் கட்டுப்பட்டிற்குள் சில மதமும் விழுந்திருக்கிறது என்பதற்காக  அம்மதம் சார்ந்த வழிபாட்டையோ, அம்மதத்தினர் வழிபடும் தெய்வங்களையோ இழித்தும், பழித்தும் பேசுவது ஒரு நாகரீகமான செயலாகாது.


வெங்காயத்தை உரித்துக் கொண்டே போனால் இறுதியில் ஒன்றுமே இருக்காது ஆனால் மனிதாபிமானத்தின் தோலை உரித்துக் கொண்டே போனால் அதன் ஆணிவேராக ஆன்மீக சிந்தனைகள் ஆழப்பதிந்திருப்பதைக் காணலாம்.


குழந்தையிடம் பேசும் போது அது தொடர்ந்து வினாக்களை நம்மிடம் வீசுவதைப் போல பண்பு, மனிதாபிமானம், மானுடநேசம் என்பவற்றைப் பற்றி அடுக்கடுக்காய் வினாக்களைத் தொடுத்துப் பாருங்கள், அது எங்கே எம்மை அழைத்துச் செல்கிறது என்பதைக் கண்டு வியந்து போவோம்.


ஏன் செய்கிறோம், எதற்குச் செய்கிறோம் என்று தெரியாமல் சில விடயங்களை, சிலநேரங்கள் நம்மில் பலர் செய்திருக்கிறோம். அவற்றிற்கான விளக்கங்கள் நமது மனங்களுக்கு கிடைப்பது அவசியம். அதைப் பெறுவதற்கு ஆன்மீகத்தின் துணை அவசியமாகிறது.


இறை நம்பிக்கை நிறைந்த மனம் தெரிந்து செய்த தப்பிற்கும், தெரியாமல் செய்த தவறிற்கும் நிச்சயமாக வருந்தத்தான் செய்கிறது. ஏனெனில் மனமென்னும் தராசிலே செய்கைகள் ஒரு தட்டிலும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் வளர்ந்த சமூகநீதிகள் இன்னொரு தட்டிலும் இருப்பதினாலேயே.


"விதி என்று ஏதுமில்லை, வேதங்கள் வாழ்க்கையில்லை" என்பது வாதத்திற்கு மிகவும் உகந்ததாகத் தெரியலாம். ஆனால் அதன் உள்ளர்த்தத்தை நன்கு துல்லியமாக ஆராய்ந்தால், சோம்பேறித்தனத்தை மூட்டையாகக் கட்டி அதற்கு விதி என்று பெயரிட்டு விடக்கூடது என்பதையும், வேதம் என்னும் பெயரால் அடுத்தவர்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளக் கூடாது என்பதையுமே அது குறிக்கிறது என்பதை நன்கு உணரலாம்.


இதற்கு எதிர்வாதமாக நமக்கு எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதை விட்டு அது ஏன் நடக்கிறது என்னும் ஆராய்ச்சி எதற்கு என்னும் கேள்வி நமக்குள் வரலாம். அப்போது அதை ஆக்கப்பூர்வமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.


மிகவும் எளிதாக நடப்பது அனைத்தையும் ஏற்றுக் கொண்டு விடு என்று கூறிவிடலாம் ஆனால் யதார்த்த வாழ்க்கையில் மனம் நிச்சயமாக நாம் எதிர்பார்க்காத எதிர்மறை நிகழ்வு ஒன்று நிகழும் போது "ஏன் இது எனக்கு?" என்று மனம் ஆராய்ச்சியில் இறங்குவது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை அனுபவத்தில் நம்மில் பலர் உணர்ந்திருப்போம்.


"விடையில்லா வினாக்களை விளங்கிக் கொள்ள, மனம் கொஞ்சம் அமைதியடைய ஆன்மீகம், இறைநம்பிக்கை என்பன துணை வருகின்றன" என்பது ஒரு நிதர்சனமான உண்மை.


மனிதன் புரியும் தவறுகளுக்கு அவன் சார்ந்த மதத்தினை குற்றம் சொல்வதைத் தவிர்த்திடுவோம். மதங்களின் உருவாக்கம் மனிதனின் நல்வழிக்கேயன்றி அவனது மூடவழக்கங்களுக்காக அல்ல என்பதை நம் மனங்களில் ஆழப்பதித்துக் கொள்ளுவோம்.

ஆப்பம் - சமையல்!



 தேவையானவை:


பச்சரிசி - 1 கப்,

புழுங்கலரிசி - 1 கப்,

உளுத்தம்பருப்பு - கால் கப்,

 வெந்தயம் - 1 டீஸ்பூன்,

ஜவ்வரிசி - 3 டீஸ்பூன்,

உப்பு - 1 டீஸ்பூன்,

எண்ணெய் - கல்லில் தடவ தேவையான அளவு,

தேங்காய் (துருவியது) - 1 மூடி,

சர்க்கரை - அரை கப்.


செய்முறை:


அரிசி, பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து ஆட்டி, உப்பு சேர்த்து கலக்கவும்.

பின்னர் ஜவ்வரிசியில் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, ஜவ்வரிசி வேகும்வரை காய்ச்சி, ஆறியதும் மாவுடன் கலந்து வைக்கவும் (12 மணி நேரம்). காலையில் நன்கு மாவை கலக்கி விடவும்.

தேங்காயைத் துருவி, மிக்ஸியில் போட்டு, முதலில் கெட்டிப்பால், பிறகு தண்ணீர்பால் என மொத்தம் இரண்டரை டம்ளர் எடுக்கவும்.

 சர்க்கரை சேர்த்து அதைக் கலந்துகொள்ளவும்.

தோசைக்கல்லில் ஒரு சிறிய துணி கொண்டு, எண்ணெயைத் தொட்டு தடவி பின்னர் ஆப்ப மாவை எடுத்து ஆப்பமாக ஊற்றி எடுத்து, அதில் தேங்காய்ப்பாலை விட்டு பரிமாறவும்.


குறிப்பு:



ஜவ்வரிசி காய்ச்சி ஊற்றுவதற்கு பதில், 1 கைப்பிடி பச்சரிசி சாதம் போட்டும் மாவுடன் ஆட்டலாம். ஆப்ப சோடா சேர்க்கத் தேவையில்லை.

எது பக்குவப்பட்ட சிந்தனை?



உங்களுக்கு, ஒரு உண்மை தெரியுமா? ஒவ்வொரு நாள் விடியலும் உங்களுக்கு இரண்டு விஷயங்களை உணர்த்தும் ஒன்று வயதில் ஒரு நாள் அதிகரிக்கிறது. இரண்டு ஆயுளில் ஒரு நாள் குறைகிறது.


வயதில் ஒரு நாள் அதிகரிப்பதும், ஆயுளில் ஒரு நாள் குறைவதும் மனிதனுக்கு பக்குவத்தையும், பக்குவப்பட்ட சிந்தனையையும் தந்தாக வேண்டும். பக்குவப்பட்ட சிந்தனை என்பது எது?


குடும்பத்திற்காக என்ன செய்திருக்கிaர்கள்? உங்களுக்காக என்ன செய்திருக்கிaர்கள்? என்று சிந்தித்துப் பாருங்கள். குடும்பத்திற்காக செய்ய வேண்டியதை பெரும்பாலானவர்கள் தவறாமல் செய்து விடுகிறார்கள். உழைப்பது, சம்பாதிப்பது, மனைவி, பிள்ளைகளை கவனிப்பது எல்லாமும் குடும்பத்திற்காகச் செய்வது. உங்களுக்காக என்பது உங்கள் மறுபிறப்பின் நலனுக்காக நீங்கள் சமூகத்திற்கு செய்ய வேண்டிய சேவை.


புத்தர் காட்டின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். மக்கள் தன்னை பார்த்துவிட்டால் உணவு படைத்துவிடுவார்கள் என்பதற்காக காட்டுப் பாதையை தேர்ந்தெடுத்தார். உறவுகளை தவிர்த்த அவருக்கு உணவு மீதும் ஆசையில்லை. உடலை பராமரிக்க வேண்டும் என்ற ஆசையும் இல்லை. மாறாக உடலை வருத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்.


நடந்தார்.... மாதக் கணக்கில்... வருடக் கணக்கில்...! போகிற போக்கில் சிறிய நதி ஒன்று குறுக்கிட்டது. நிரஞ்சனா என்பது அதன் பெயர். அதைக் கடக்க வேண்டும். இறங்கினார். குறைந்த அளவே தண்ணீர் ஓடினாலும் புத்தரின் சக்தியற்ற உடலால் தண்ணீரின் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. தடுமாறினார். தண்ணீர் இழுத்துச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக ஒரு கிளையை பற்றிப் பிடித்துக்கொண்டார்.


‘நீங்கள்தான் உயிரைப் பற்றியே கவலைப் படவில்லையே அப்படி இருக்க ஏன் இந்த கிளையை பற்றிப் பிடித்துக்கொண்டு தொங்குகிaர்கள்?’ என்று கேட்டது மனசாட்சி. உடனே கிளையை விட்டுவிட்டு தண்ணீரில் நின்றார். அப்போது அவர் உடலில் சக்தி அதிகரித்தது போல் இருந்தது.


தண்ணீரில் நடந்து.... கடந்து... கரையேறி நேராக போதி மரத்தடிக்குப் போனார். ‘எனக்கு ஞானம் பிறக்க வேண்டும் இல்லையேல் இந்த இடத்திலே நான் மரணமடைய வேண்டும்’ என்று பிடிவாதமக அமர்ந்தார். தன் உடலை பல வழிகளில் வருத்திக் கொண்டிருந்த இவர், மரணத்தை வா என்று அழைத்த மறுவினாடியே ஞானம் பிறந்துவிட்டது. ஆக மரணத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் ஞானம் வந்துவிடுகிறது. மரணமும், ஞானமும் ஞானிகளுக்கு ஒன்றுதானே!


மரணத்தை துச்சமாக நினைக்கிறவர்கள், புதுப் புது சக்திகளைப் பெறுகிறார்கள். மரணத்தை நினைத்து பயம் கொள்கிறவர்கள், இருக்கிற சக்தியையும் இழந்து விடுகிறார்கள்.


மனிதர்கள் தங்கள் சக்திகளை செலவிட்டு இன்பம், துன்பம், சோகம், சுகம் போன்ற பலவற்றையும் அனுபவித்துக்கொண்டே இருக்கிறார்கள். எத்தனையோ விஷயங்களை திரும்பத் திரும்ப பல ஆயிரம் தடவை அனுபவித்தாலும், வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே அனுபவிக்கக் கூடிய ‘த்ரில்’ அனுபவம் மரணம் மட்டும்தான்! ஆனால் பல அனுபவங்களைப் பெற போட்டி போடக்கூடிய மனிதர்கள் இந்த ஒரு த்ரில் அனுபவத்தை மட்டும் பெற விரும்பாமல் தப்பித்து ஓட முயற்சிக்கிறார்கள்.


இந்த உலகத்தில் கோடான கோடி மக்கள் மடிந்திருக்கிறார்கள். காற்றோடு, நீரோடு, மண்ணோடு கலந்திருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள். வாழ்கிறார்கள் இறக்கிறார்கள் அது ஒரு சுழற்சி. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.


கடந்த காலங்களில் மக்கள் இயற்கை விவசாய முறையில் ஈடுபட்டிருந்தார்கள். விளைச்சல் குறைவாக இருந்தது. ஆரோக்கியம் நிறைவாக இருந்தது. செயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால் பெருமளவு விளைச்சல் அதிகரிக்கும். பட்டினி நீங்கும். அதே நேரத்தில் அவைகளை உண்ணும் மக்களுக்கு நோயும் அதிகரிக்கும் என்ற உண்மை முன்னெடுத்து வைக்கப்பட்டது. ‘நோய் அதிகரித்தாலும் பரவாயில்லை. உணவில்லை என்று கையேந்தும் நிலை வந்துவிடக் கூடாது’ என்ற நோக்கத்தில் புகுத்தப்பட்ட செயற்கை உர விவசாயம் நாளுக்கு நாள் அதிகரித்து இன்று உணவே மனிதனுக்கு விஷமாகி, மனிதனை பிரமாண்ட ஆஸ்பத்திரிகள் முன்பு குவியல் குவியலாக கொண்டு போய் சேர்த்துவிட்டது.


நாம் உடலுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறோம்! யாரும் காணமுடியாத அளவுக்கு மூடிவைக்கிறோம். மற்றவர்கள் தொட்டால் துடித்துப் போகிறோம். தொட்டவர்களை துடிக்க வைத்து விடுகிறோம். ஆனால் நோய் என்று வந்துவிட்டால் உயிர் முக்கியம் என்று அந்த உடல் டாக்டரிடம் மனப்பூர்வமாக சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டு விடுகிறது. இறந்துவிட்டால், அந்த உடலை யார் யார் கையிலோ ஒப்படைத்து விடுகிறோம். அளவு கடந்த உரிமை உள்ளவர்கள் என்றாலும் அடுத்து நிற்க முடியாது அந்த உடலுக்கு ஆகவேண்டிய காரியங்களை எல்லாம் முன்பின் அறிமுகமற்ற யாரோ ஒருசிலர்தான் செய்கிறார்கள். அவர்கள் கையில்தான் உடல் ஒப்படைக்கப்படுகிறது. இதுதான் உலகம்... இது தான் உண்மை.


இந்த உண்மைகளை உணர்ந்தால் உடல்கள் மீது இருக்கும் ஆசையும் ஆர்வமும் அடங்கும், இந்த உடலுக்காக வெட்டு குத்து எத்தனை? வேதனை அவமானம் எத்தனை? ஜெயிலில் பெரும் பகுதி இடங்கள் நிரம்பி வழிவதற்கான காரணமும் இதுதானே?!


அன்று ஆலயத்தில் மிக அதிகமான கூட்டம். மக்கள் நீ நான் என போட்டி போட்டுக்கொண்டு கடவுளை காணச் சென்றனர். பூசாரிகள் உள்ளே இருந்தனர். உள்ளே இருந்த இரண்டு கடவுள்களும் வெளியே வந்துவிட்டார்கள்.


* இவர்களில் பலர் பெற்றோர், உறவினர்கள். குடும்பத்தினரிடம் அன்பு செலுத்துவதில்லை. அவர்களை எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. ஆனால் நம்மைப் பார்க்க இங்கே வந்து முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். பெற்று வளர்த்தவர்களிடமே அன்பு காட்டாத இந்த சுயநலவாதிகள் நம்மிடம் எப்படி பக்தி வைப்பார்கள்? இவர்களை நம்பி ஆசீர்வதிக்க முடியவில்லை. அதனால்தான் வெளியே வந்துவிட்டேன்’ என்றார் முதல் கடவுள்.


* அதற்குள் சிலர் கையில் இருந்த பணத்தை வாயிலில் நிற்கிறவரிடம் கொடுத்துவிட்டு நமது அனுக்கிரகங்களைப் பெற குறுக்குவழியில் செல்கிறார்கள். அதனால் நான் உங்களுக்கு முன்பே வெளியே வந்துவிட்டேன் என்றார், அடுத்த கடவுள். நமது கற்பனைக்கு தக்கபடி கடவுளுக்கு உருவங்களை கொடுத்தோம். நமக்கு மகிழ்ச்சி தரும் அளவிற்கு ஆராதனைகளை செய்கிறோம். நம்மை உற்சாகப்படுத்திக் கொள்ள திருவிழாக்களும் நடத்துகிறோம். கடவுளின் சக்தியை அறிந்துகொண்டு, அதற்கு தக்கபடி நம்மை புதுப்பித்துக் கொள்வதற்குப் பதில், கடவுளைச் சுற்றி நடக்கும் விடயங்களில் கவனத்தை செலுத்தி கடவுளோடு சேர்ந்து சக மனிதர்களையும் திண்டாடவைத்துக்கொண்டி ருக்கிறோம்.


கொண்டாட்டங்கள் இல்லாத இடத்தில் கடவுளே இல்லை என்பதுபோல் காட்டிவிட்டார்கள். பக்தியின் அர்த்தம் பாதை மாறிப் போய்விட்டது. அதுபோல்தான் மரணத்தின் அர்த்தமும் மனிதர்களுக்கு தெரியாமலே இருக்கிறது. மரணத்தின் போது மற்றவர்கள் அழும் அழுகையே மனக்கண் முன் நின்று அதை மற்றவர் களுக்கு கொடூரமானதாக உணர்த்திக் கொண்டி ருக்கிறது.


இன்று காலாவதியான மருந்து உணவுப் பொருட் களை எல்லாம் அழிக் கிறார்கள். அவைகளை அழிக்கும்போது மகிழ்கிறோம். ஆனால் காலாவதியாகும் மனிதனை இயற்கையே அழிக்கும்போது அழுகிறோம்... அந்த ஆன்மா மீண்டும் துளிர்க்கும் என்பதை அறியாமலே...!


மறுபிறப்பு ஏன் எப்படி நிகழ்கிறது?



ஒருவர் மரணமடைந்ததும் அவரது ஆன்மா, கண்களுக்கு புலப்படாத சிறிய ஒளிவட்டமாக உடலில் இருந்து வெளியேறுகிறது. பின்பு அது இன்னொரு பெரிய ஒளிவட்டத்திற்குள் ஐக்கியமாகிறது.


ஐக்கியமாகிவிட்ட இந்த ஒளிவட்ட ஆன்மா, இந்த உலகத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கையை சுயமாகவே மதிப்பீடு செய்யும். தான் பிறப்பெடுத்து வாழ்ந்த நோக்கம் என்ன? அந்த நோக்கம் கடந்த கால வாழ்க்கையில் எந்த அளவிற்கு நிறைவேறி இருக்கிறது? தனது கர்மாக்கள் அனைத்தும் தீர்ந்திருக்கிறது? மேலும் தொடர்கிறதா? என்றெல்லாம் ஆராயும்.


இங்கே நாம் வாழும்போது எடுக்கும் முடிவுகளுக்கும் - இறந்து ஆன்மாவான பின்பு எடுக்கும் நிலைப்பாட்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும்.


இங்கே வாழும் வாழ்க்கையில் தவறு செய்தாலும் சூழ்நிலைகளால், தேவைகளால் ‘தான் எந்த தவறும் செய்யவில்லை’ என்று வாதிடும் நிலை ஏற்படலாம். தனது தவறை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபடவும் செய்யலாம். அதே மனிதன் இறந்து ஆன்மாவான பிறகு சுத்தமாகி விடுகிறது. ஆன்மாவிற்கு பொய் இல்லை. அதற்கு உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை. அதனால் மண்ணுலக வாழ்க்கையில் செய்த எல்லா தவறுகளையும் ஆன்மாக்கள் ஒத்துக்கொள்ளும். அதற்கான தண்டனைகளையும் அதுவே தீர்மானித்து, கர்மாக்களாக மாற்றும்.


அந்த கர்மாக்களைத் தீர்க்க மறுபிறப்பெடுக்க வேண்டியதாகிறது. ஏன் என்றால், பூமியில் மனிதரோடு மனிதராக வாழ்ந்துதான் கர்மாக்களை தீர்க்க முடியும்.


கர்மாக்களை தீர்க்க மறுபிறப்பு எடுக்க தீர்மானித்த பிறகு அதற்கு உடல் தேவை. உறவுகள் தேவை. அதனால் அடுத்தகட்ட நிலைக்கு ஆன்மா செல்கிறது. அப்போது அது பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடுகிறது.


மறுபிறப்பு ஏன் எடுக்க வேண்டும்?



மறுபிறப்பில் எப்படிப்பட்ட உட லைப் பெற வேண்டும். ஆணா? பெண்ணா? குண்டு உடலா? ஒல்லி உடலா? எப்படிப்பட்ட நிறம்? (மறுபிறப்பின் நோக்கம் என்னவோ அதற்கு தகுந்த உடல் எடுக்க வேண்டியதாகிறது)


தனக்கான இணை யார் என்று அடையாளம் காண வேண்டியுள்ளது. கர்மாக்களை நிறைவேற்ற கணவனோ, மனைவியோ துணைபுரிய வேண்டும் அல்லவா? அந்த ஜோடி யார்? அவர்கள் எங்கே எப்படி சந்திப்பார்கள்? இன்னும் பல நூறு கேள்விகளுக் கெல்லாம் அந்த ஆன்மா விடைதேடி முடிவெடுக்கிறது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த கொத்தவரங்காய் சாப்பிடுங்க...



பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற மூலிகை செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன்படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள், தன்வந்திரி, மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத் திறனாலும் அனுபவத்தாலும் பல மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில் எழுதிவைத்துள்ளனர். சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் மூலிகை மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.


ஆயுர் வேதமருத்துவத்தில் 341 மருந்துச் செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. தற்போது இது நடைமுறையில் உள்ளது. நம் நாட்டில் சுமார் 2000 முதல் 7000 வகை மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளன. இவற்றில் 700 முதல் 1000 வரை மூலிகைச் செடிகள் நாட்டு மருந்துகள் தயாரிப்பிலும் 100 முதல் 150 மூலிகைகள் ஆங்கில மருத்துவத்திலும் பயன் படுத்தப்படுகின்றன. நம்மிடம் மூலிகை செடியிலிருந்து மூலப்பொருட்களைப் பிரித்தெடுக்க உகந்த மேம்பட்ட தொழில் நுட்பங்கள் இல்லாமையால் மூலிகை மருந்து உற்பத்தியில் நம் நாடு 15வது இடத்தை வகிக்கின்றது.


நமது நாட்டில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், போன்ற தட்ப வெப்ப நிலங்களில் வளரும் மூலிகைகள் உள்ளன. அதனால் ஏற்றுமதியில் முன்னேற்றம் அடைந்துள்ளோம். மூலிகை வளம் கொழிக்கும் நம் நாட்டில் தீராத நோய்களையும் பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்தவும், பிணியின்றி வாழவும் இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்ட தானியங்கள், மூலிகைகள் வாங்கி உபயோகிக்கவும், ஆங்கில மருத்துவத்தை விட மூலிகை மருத்துவப் பணச்செலவு குறைவாக இருப்பதாலும், மேலும் பக்க விளைவுகளும் இல்லை என்பதாலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


கடந்த காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கத்தையும், வைரத்தையும் கொடுத்து விட்டு, அதற்கு மாற்றாக இங்கு விளையும், மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பெற்றுச் சென்றார்களாம். அப்படிப்பட்ட மிளகு முதல் நறுமணமிக்க மஞ்சள் வரை இங்கு கொட்டிக் கிடக்கிறது. நமது நாட்டில் பயன்படும் மூலிகைகளும் மசாலாப் பொருட்களும், நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பனவாகவும், சாப்பிட்ட பின் திருப்தி உணர்வை ஏற்படுத்துவனவாகவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.


எனவே அத்தகைய உடலின் எடையைக் குறைப்பதற்கு உதவுகின்ற சில மூலிகைகளையும், மசாலாப் பொருட்களையும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி, உங்கள் எடையைக் குறைக்கலாம். உடல் எடையைக் குறைப்பதற்கு சிறந்த ஒரு உணவுப்பொருள் இலவங்கப்பட்டை. ஏனெனில், இலவங்கப்பட்டையானது உடலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலை நிறுத்துகிறது. மேலும் நீண்ட நேரத்துக்கு பசியுணர்வு தோன்றா வண்ணம் பார்த்துக் கொள்கிறது. குறிப்பாக கொழுப்பை விரைவாக செரிக்கச் செய்கிறது.


இஞ்சியானது ரத்தத்தை மிகவும் நன்றாக சுத்திகரிக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தில் உணவுப்பொருட்கள் தேங்கிக்கிடக்கா வண்ணம், எளிதில் செரிப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் கொழுப்புகள் தேங்காமல் விரைவில் செரிமானமடைந்து, உடல் எடையும் குறைகிறது. ஏலக்காயானது வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளைத் தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பை எரிக்கும் திறனைக் கூட்டுகிறது.


மஞ்சளுக்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்புத் திசுக்கள் உருவாவதைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு குறைந்து, எடை கூடுவது தடுக்கப்படுகிறது. பிரேசில் நாட்டில் விளையும் ஒருவகை கருமை வண்ண பழம் தான் அகாய் பெர்ரி. நம் ஊரில் நாவற்பழம் போன்றது. பனை வகையைச் சேர்ந்தது. இதன் ஜூஸ் அல்லது இப்பழத்தை உலர வைத்து தயாரிக்கப்படும் பொடிக்கு உடல் எடையைக் குறைக்கும் வல்லமை உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


உடலில் கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கின்றன. உடலுக்கு சக்தியை தரும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் இப்பழத்தில் உள்ளன. ஒருவகை கண்டங்கத்திரி செடியின் இலை போன்றது நெட்டில் இலை. இவ்விலையில் உடலுக்கு சக்தி தரும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது ரத்தத்தை சுத்திகரித்து கொழுப்புகளை எரிக்க உதவுகின்றது.


வர மிளகாயில் கேப்சைசின் என்னும் பொருள் அடங்கியுள்ளது. இது கொழுப்பினை எரித்து, பசியுணர்வை அடக்கி வைக்கிறது. புருடியு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, காய்ந்த மிளகாயானது உடல் எடைக் குறைப்பில் மிக உதவுகிறது. உடலின் வளர்சிதைமாற்ற செயல்பாட்டை ஊக்குவித்து, உடலானது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை தூண்டி உணவுகளை நன்கு செரிப்பதற்கும், உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறவும் சீரகம் உதவுகிறது.


மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டவும் சீரகம் உதவுகிறது. நாம் வழக்கமாக சமையலில் பயன்படுத்தும் கருப்பு மிளகு. இந்த மிளகில் பிப்பரைன் என்னும் பொருள் உள்ளது. இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. நமது செரிமான சக்தியைத் தூண்டி, கொழுப்பை விரைவாக எரிப்பதற்கு உதவுகிறது. ஆளி விதைகள் நமது வயிறு நிறைந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தும். இதனால், நம்மால், அதிகம் சாப்பிட முடியாமல் போகும். இதன் காரணமாக உடல் எடை குறையும்.


கொத்தவரங்காயானது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. நமது உடலின் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது.இது பசியை அடக்கும் திறன் கொண்டது. கொழுப்பு உற்பத்தியாவதையும், கொழுப்பு தங்குவதையும் தடுக்கிறது. உடலின் எடையைக் குறைக்கும் தன்மையை கடுகு கொண்டுள்ளது. உடலின் வளர்சிதை மாற்றத்தினையும் நன்றாகத் தூண்டுகிறது. உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தினை அதிகரித்து, அதிக ஆற்றலை விடுவித்து, அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் திறன் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு.


நம் அசைவ உணவில் அதிகமாக சேர்க்கப்படுவது சோம்பு. இந்த சோம்பு, உணவு செரிப்பதற்கு சிறப்பாக உதவுகிறது. மேலும் பசியுணர்வை சீராக்குவதற்கும், கல்லீரலை தூய்மைப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது. இதனை இசப்பகோல் (isabgol) தூள் என்றும் அழைப்பார்கள். இது மிகவும் பாதுகாப்பான உடல் எடை குறைப்பான் ஆகும்.


அதிலும் இது வயிறு நன்றாக நிறைந்துவிட்ட உணர்வினை மிக நீண்ட நேரத்திற்கு தரும். இந்த வகையில் மிகவும் முக்கியமானது செம்பருத்தி. இதன் பயன்பாடு அதிகம் உள்ளது. குறிப்பாக உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்களான குரோமியம், அஸ்கார்பிக் அமிலம், ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் ஆகியவை நிறைந்தது.

உழைப்புக்கேற்ற; வேலைக்கேற்ற; உங்களுக்கேற்ற; உணவு!






'உடல் ஆரோக்கியத்துக்கு சரிவிகித உணவை, சரியான நேரத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இரவு நேரம் கண் விழித்து வேலை பார்ப்பவர்கள், நீண்ட நேரம் நின்றபடி வேலை பார்ப்பவர்கள், வெப்பம் மிகுந்த இடத்தில் வேலை பார்ப்பவர்கள் என்று பலருக்கும் தங்களுக்கு ஏற்ற உணவு எது என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. இவர்களுக்கான உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து, ஊட்டச் சத்து நிபுணர்களான தாரிணி கிருஷ்ணன் மற்றும் ஷைனி சந்திரன் அளிக்கும் ஆலோசனைகள்.


இரவுநேரப் பணியில் ஈடுபடுபவர்கள்:


இவர்களுக்கு சோர்வு, தூக்கம் தொடர்பான பிரச்னைகள், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். காரணம் இன்றி உடல் எடை அதிகரிப்புதான் இவர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்னை. இரவில் பணிபுரிவதால் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்க, இவர்கள் உணவில் அதிக அளவில் புரதச் சத்தைச் சேர்த்துக்கொண்டு, கார்போஹைட்ரேட் உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். புரதச் சத்து, கவனம் மற்றும் விழிப்புத் தன்மையை (அலர்ட்) அளிக்கிறது. 
 
 
இதேபோல், இனிப்புமிக்க பானங்களைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரைச் சத்துள்ள உணவுப்பொருள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. இருப்பினும், நம் உடலின் சர்க்கரையைக் கையாளும் திறன் இரவு நேரத்தில் குறைவாக இருக்கும். இந்த நேரத்தில், அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்வது உடலைப் பாதிக்கும். இரவு பணியில் உள்ளவர்கள், நொறுக்குத் தீனிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வர். இது தேவையற்ற கலோரிகளைச் சேர்த்து, கொழுப்பாக மாற்றிவிடும். இதைத் தவிர்க்க வேண்டும்.


இரவு நேரத்தில் சப்பாத்தி, இட்லி, பொங்கல் போன்ற ஏதாவது ஒன்றைச் சாப்பிடுவது நல்லது. இரவு ஒரு மணிக்கு 'ஃப்ரூட் சாலட்’ அல்லது ஏதாவது ஒரு 'ஃப்ரெஷ் ஜூஸ்’ குடிக்கலாம். பேரிக்காய், ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழம், மாதுளம்பழம் போன்ற பழங்களையும் சாப்பிடலாம். அதிகாலை மூன்று மணிக்கு நல்ல குளிர்ச்சியான பானங்கள் குடிக்கலாம். பணியின் இடையே பசித்தாலும் முளைகட்டிய பயறு வகைகளை, சாலட் செய்து சாப்பிடுவது நல்லது.


அதிகம் உஷ்ணமான இடங்களில் வேலை செய்பவர்கள்:


இவர்களுக்கு நீரிழப்புதான் மிக முக்கியமான பிரச்னை. நம்முடைய உடலில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது, குளிர்விப்பதற்காக அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. இதனால் உடலில் உள்ள நீரும், தாது உப்புக்களும் வெளியேறுகின்றன. வெப்பமான இடத்தில் வேலை செய்பவர்களுக்கு, சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீர் பற்றாக்குறை உள்ளது என்று அர்த்தம்.
 
 
 
 இதைத் தவிர்க்க 15 முதல் 20 நிமிடங்களுக்கு, ஒரு முறை ஒரு டம்ளர் நீர் அருந்த வேண்டும். வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்னைகளைத் தவிர்க்க, அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிக அளவில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. தினசரி உணவில் இளநீர், மோர் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். ஃப்ரிஜ்ஜில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் அருந்துவதைத் தவிர்த்து, மண் பானைத் தண்ணீர் அருந்தினால் மிகவும் நல்லது.


நீண்ட நேரம் நடந்து/நின்றுகொண்டு வேலை செய்பவர்கள்:



இவர்கள், குறைந்த கலோரி, புரதம் அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடவேண்டும். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1,800 கலோரி உணவு தேவை. வேலை நிமித்தம் பல்வேறு இடங்களுக்கு அலைந்துகொண்டே இருப்பதால், பஜ்ஜி, போண்டா என்று ஆங்காங்கே கிடைக்கும் பொரித்த உணவைச் சாப்பிடுவதையும் இவர்களால் தவிர்க்க முடியாது. இதனால், கலோரியின் அளவும் 2,200-க்கு மேல் அதிகரித்துவிடும். 
 
 
நொறுக்குத் தீனியைத் தவிர்த்து, வேகவைத்த கடலை, பழங்கள் சாப்பிடலாம். காலையில் மிதமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். மதிய வேளையில் ஒன்று முதல் ஒன்றரை கப் அளவு சாதம், அதற்குச் சரிசமமாக காய்கறிகளைச் சேர்க்கவேண்டும். மூன்று மணியளவில் தேநீர் அருந்தலாம். மாலை வேளையில் முளைகட்டிய பயறு வகைகளை வேகவைத்துச் சாப்பிடலாம்.


அமர்ந்தே வேலை செய்யும் அலுவலகப் பணியாளர்கள்:



அதிகம் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை முற்றிலும் தவிர்த்து, எனர்ஜி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மோர், இளநீர், ஜூஸ் தவிர்த்து பழங்கள் சாப்பிடலாம். கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு, கம்பு ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைவான சாதத்துடன், அதிகம் காய்கறிகளைச் சாப்பிடவேண்டும். அலுவலகத்தில் ஒரே இடத்தில் உட்காராமல் ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கும் ஒருமுறை, சிறிது தூரம் நடந்து போய்விட்டு வரலாம். இரவு உணவை எட்டு மணிக்கு முன்னால் முடித்துக்கொள்வது மிகவும் நல்லது.

வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள்!!!



காய்கறிகளே நமது தினசரி உணவுகளில் மிகுதியான அளவில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டத்தையும் இயற்கையான முறையில் தருபவை. காய்கறிகள் எத்தகைய நற்பண்புகளை பெற்றிருந்தாலும் அதில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளதை நாம் மறுக்க முடியாது. சில காய்கறிகள் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அதிக அளவு வாய்வு பிரச்சனையை உண்டாக்கி, கீழ் வயிற்றை உப்பச் செய்கிறது. இதனால் உணவிற்கு பின் வயிறு உப்பிய நிலையில் இருந்து, பின்னர் அடிக்கடி வாய்வை வெளிவரச் செய்கிறது.


சிலருக்கு இத்தகைய வாய்வு பிரச்சனை அதிகமாகும் போது அது வலியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை பல வடிவங்களில் கொண்டுள்ள காய்கறிகள் தேவையான அளவை விட அதிக அளவு வாய்வை உண்டாக்குகின்றன. இராஃபினோஸ், லாக்டோஸ், பிரக்டோஸ் மற்றும் சார்பிட்டால் ஆகியவை சர்க்கரையின் வடிவங்களாகும் மற்றும் இவை அதிக அளவு வாய்வை உண்டாக்கும் பொருட்கள். இராபினோஸ் என்ற சாக்கரை வகை அதிக அளவு உப்புசம் தந்து கீழ் வயிற்றில் வலியை உண்டாக்குகிறது. இது வாய்வுடன் தொடர்புடையதால் தான் இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன. எப்படி இருந்தாலும் ஒருவருடைய உடல் வாகை கொண்டே இதை நாம் உறுதியாக கூற முடியும். ஒருவருக்கு ஒத்துப்போவது மற்றொருவருக்கு சரியாக வராது.


 நல்ல காய்கறி சேர்த்த உணவை உண்ட பின் இத்தகைய இடையூறுகள் வாய்வு தொல்லையால் ஏற்பட்டால் அந்த காய்கறிகளை உட்கொள்ளுவதை குறைத்துக்கொள்வது மிக அவசியமானதாகும். வெங்காயம், கேரட், பிரஸ்ஸல்ஸ், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி மற்றும் தானிய வகைகள் ஆகியவை வயிற்றில் வாய்வு உண்டாக்கும் சில காய்கறிகளாகும். இவைகளை நாம் ஒரேடியாக நிறுத்தி விட முடியாது. ஏனெனில் இவற்றில் சத்துக்களும் மிகுதியாக உள்ளன. ஆகையால் இவ்வகை காய்கறிகளை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்வதும் மற்றும் நீண்ட இடைவெளி விட்டு உண்பதும் நல்லது.


ஆண்களுக்கு அதிக அளவில் கேஸ் உண்டாக்கும் காய்கறிகள் - ஓரு கண்னோட்டம்

 நமது நாட்டில் எந்த இடமாயினும் வெங்காயம் பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம். இது ஒரு அடிப்படை உணவில் கூட கலப்பதை தவிர்க்க முடியாது. வெங்காயங்களை சமைக்கும் பொது தவிர்க்கவும் முடியாது. ஆனால் அதை சிறிதளவு குறைத்துக் கொள்ள முடியும். இதைச் செய்வதன் மூலம் கேஸ் அடைவதிலிருந்தும் மற்றும் கேஸ் உருவாவதிலிருந்தும் தப்பிக்கலாம். வெங்காயத்தில் பல நற்குனங்கள் உள்ளதால், அதனை உணவில் தவிர்ப்பது சரியான செயல் அல்ல.

பிரஸ்ஸல்ஸ்

 முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி ஆகிய தாவர வகையை சார்ந்த பிரஸ்ஸல்ஸ் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்துகள் ஆகிய சத்து வகைகளை கொண்டுள்ளது. இவை சிக்கலான கார்போஹைட்ரேட் ஆகிய ஓலிகோ-சாக்கரைட்ஸ் எனப்படும் ஊட்டத்தை கொண்டவை. இவை அதிக அளவிலான காற்றை செரிமானத்தின் போது வயிற்றில் உருவாக்கும்.

சோளம்

 சோளமும் ஒரு வகை பிரதானமான உணவாகும். அதில் அதிக அளவு சத்துக்களும் மற்றும் சுக்ரோசும் உள்ளது. அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை இதில் இருப்பதால் உணவு செரிக்கப்படும் போது கேஸ் ஏற்படுகிறது. இந்த உணவில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் செரிமானத்தை கடினப்படுத்தி அதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் சாக்கரை கேஸை உருவாக்குகிறது.

ப்ரோக்கோலி

 முட்டைக்கோஸ் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ-கெமிக்கல்கள் ஆகியவை உடலுக்கு ஆரோக்கியம் தருபவையாகும். இதில் பல நற்குணங்கள் இருந்தாலும், குடலில் இது உருவாக்கும் கேஸ் காரணமாக பலர் இதை தவிர்க்கின்றனர். ப்ரோக்கோலியில் உள்ள இராஃபினோஸ் என்ற சர்க்கரையை என்ஸைம்களால் செரிக்க வைக்க முடிவதில்லை. இதனால் கேஸ் உருவாகிறது.

முட்டைக்கோஸ்

 முட்டைக்கோஸ் உடலுக்கு மிகவும் சத்து மிகுந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவாகும். அதே நேரம், இந்த கார்போஹைட்ரேட்களில் ஆலிகோ-சாக்கரைட்ஸ் என்ற சிக்கலான பொருட்களும் உள்ளன. ஆலிகோ-சாக்கரைட்ஸ்களை செரிமானம் செய்யும் போதும் அவற்றிலிருந்து கேஸ் உருவாகிறது.

பீன்ஸ்

 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகளை கொண்ட பீன்ஸில், ஒவ்வொரு வகைகும் ஒரு வகையான பலன்கள் உள்ளன. பீன்ஸில் ஸ்டாசியோஸ் என்ற மூன்று சாக்கரை பொருள், இராஃபினோஸ் என்ற நான்கு சாக்கரை பொருள் மற்றும் வெர்பாஸ்கோஸ் என்ற ஐந்து சர்க்கரைப் பொருள் ஆகியவை இருப்பதால் செரிமாணம் கடினமாகி விடுகிறது. இதை சமாளிக்கும் என்ஸைம்கள் நம் உடலில் இல்லை.

பீட்ரூட்


 சென்சிட்டிவ்வான வயிற்று உறுப்புகள் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய் உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிட்டால், அதிகமான கேஸ் உருவாகி வயிற்று கோளாறுகள் ஏற்படும். அதனால் வயிறு உப்புசமடைதல், கீழ் வயிற்று வலி, கேஸ் பிரச்னை மற்றும் வயிற்று பிடிப்பு ஆகியவை ஏற்படும். பீட்ரூட்டில் உள்ள பாலிசாக்கரைட் என்னும் கார்போஹைட்ரேட் செரிப்பதற்கு கடினமானதாக இருப்பதால் அது கேஸை உருவாக்குகிறது.

துளசி மல்லி கஷாயம்




துளசி மல்லி கஷாயம்

 துளசி - 2 கைப்பிடி,

சுக்கு - 1 துண்டு,

வெள்ளை மிளகு - 20,

ஏலக்காய் - 5,

தனியா - 2 டேபிள்ஸ்பூன்,

காய்ந்த திராட்சை - 20, பனங்கல்கண்டு

 அல்லது பனைவெல்லம் - தேவைக்கேற்ப.


சுக்கு, வெள்ளை மிளகு, தனியாவை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அத்துடன் துளசியும் காய்ந்த திராட்சையும் சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். அது பாதியாக சுண்டியதும், வடிகட்டி, பனங்கல்கண்டோ, பனைவெல்லமோ சேர்த்துப் பரிமாறவும்.

பொதுவாக தூதுவளைதான் கபம் போக்கும். வெயில் காலத்தில் தூதுவளையின் சூட்டைத் தவிர்க்கவே இங்கே துளசி சேர்த்திருக்கிறோம். உணவின் மூலம் ஏற்படும் மந்தம் நீக்கி, தொற்று வராமல் காக்கும் கஷாயம் இது. மாலை 6 முதல் 9 மணிக்குள் குடிக்கலாம். சளி பிடிக்காமல் தடுக்கும்.

குற்றவாளிகளும் கோடீஸ்வரர்களும் நிறைந்த மாநிலங்களவை!



மாநிலங்களவை உறுப்பினர்களில் 38 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 15 பேர் கொடூர குற்றங்களுக்கான வழக்குகள் உள்ளது என்றும் இதில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனவும் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் நியமன உறுப்பினர்கள். 6 இடங்கள் காலியாக உள்ளன. எஞ்சியுள்ள 227 எம்பிக்களின் சொத்து மதிப்பு மற்றும் குற்ற பின்னணி குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 227 எம்பிக்களில் 67 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 20 கோடி. காங்கிரஸ் எம்பிக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 16.74 கோடி. இதற்கு அடுத்தபடியாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்களின் சராசரி மதிப்பு ரூ. 13.82 கோடி.


பாஜ எம்பிக்களின் சொத்து மதிப்பு ரூ. 8.51 கோடி. ராஜ்யசபா எம்பிக்களில் மிகப்பெரும் செல்வந்தராக இருப்பவர் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த மகேந்திர பிரசாத். இவருக்கு ரூ. 683 கோடி மதிப்புக்கு சொத்து உள்ளது. இவருக்கு அடுத்தபடியாக கர்நாடகாவை சேர்ந்த சுயேட்சை எம்பி விஜய் மல்லய்யாவுக்கு ரூ. 615 கோடி சொத்து உள்ளது. சமாஜ்வாடி உறுப்பினரும் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சனுக்கு ரூ. 493 கோடி சொத்து இருக்கிறது. 38 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 15 பேர் கொடூர குற்றங்களுக்கான வழக்குகள் உள்ளது.

பொருளாதாரம் ஈட்டும் பெண்களா? பொழுதை போக்கும் பெண்களா?



பெண்கள் எப்போதும் வினோதமானவர்கள், இயற்கையாய் கடவுள் பெண்களை சற்றே குறைவான உடல் சக்தியுடன் படைத்த காலத்தில் இருந்து சாட்டிலைட்டை இயக்கும் தற்கால பெண்மணிகள் வரை நீங்கள் பார்த்தால் எவ்வளவு பரிணாம மாற்றங்கள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்க்கு என அடக்கி வாசித்த ஆண் வர்க்கம் இதை செய்தது மூன்று காரணங்களுக்காக. பெண்கள் சமைந்த உடன் வெளியே அனுப்பினால் என்னவாகும் என்ற பதபதைப்பு. இரண்டாவது பெண் ஒரு படி பார்க்கும் மாப்பிளையை விட படித்திருந்தால் கல்யாண்ம் அமையாது. மூன்றாவது பெண் படித்து இந்த பெண் என்ன சாதிக்க போகிறாள். அடுப்படி தானே இவளுக்கு நிரந்தரம் என்ற நினைத்தமையால் ஒரு மூன்று நான்கு ஜெனரேஷனில் படிப்பு என்பது ஆரம்ப கல்வியோடு முடிந்து போனது.
 

இதை உடைத்தெறிந்த பல தலைவர்கள் பெண்களுக்கு கல்வி முக்கியம் என ஒரு வழியாக போராடி பெற்று கொடுத்த படிப்பு இன்று பெரும்பாலும் பொருள் ஈட்ட, பொழுது போக்க, புரளி பேச மட்டுமே பயன்படுகிறது என்று நினைக்கையில் வருத்தம் தான் சற்றே ஓங்கியிருக்கிறது.


பெண்களுக்கு கட்டாய‌ கல்வி என்று நினைத்த சில கர்ம வீரர்களின் எண்ணம் வேறு. பெண்கள் படிப்பது வேலைக்கு செல்வதற்க்கு மட்டுமல்ல என்று அவர்களின் உயர்ந்த எண்ணம் அனேக பெண்களுக்கு தெரிவதில்லை. அடிமை சாசனமாய் இருந்த பெண்களுக்கு படிப்பு என்பது ஒரு மூன்றாம் கண் போல.


பெண்களுக்கு அனைத்து தெரிந்திருக்க வேண்டும். சட்டம் தெரிந்திருக்க வேண்டும். குடும்பத்தில் பண்போடு பழகவும், குழந்தைகளுக்கு படிப்பு சொல்லி கொடுக்கவும், குடும்ப வர்த்தகம் என்று ஒன்று இருந்தால் அதிலும் ஞானம் பெறவே இந்த படிப்பறிவுக்கு பாடுபட்டனர்.


என்னை கேட்டால் பெரும்பாலும் பெண்கள் படிக்கும் நோக்கமே தான் சொந்தக்காலில் நிற்க முடியும் என்பதற்க்கே. பத்தாம் வகுப்பு படிக்கும் போதே மனம் சொல்கிறது இந்த குருப் படித்தால் இந்த வேலைக்கு செல்லாம் இந்த மென்பொருள் படித்தால் இந்த நாட்டுக்கு செல்லாம் என்று அதை நோக்கியே பயணித்து 34 வருஷம் சர்வீஸ் போட்ட அப்பாவை விட தற்காலிக பொருளாதாரத்திர்க்கு ஏற்ப அப்பாவை விட முதல் மாததிலே சம்பளம் அதிகம் வாங்கி காட்டின உடன் பெற்றோர்கள் புளங்கிதம் அடைகின்றனர்.


இது கஷ்டப்படும் குடும்பம் என்றல்ல அனைத்து பெற்றோர்களும் கல்வி இருந்தா என் பெண் எப்படியாவது புழைச்சிக்கிடுவான்னு ஒரு நம்பிக்கை. ஆனால் இந்த படிப்பு அவர்களுக்கு ஞானத்தை பெற்று தந்தாலும், கூடவே தனித்துவத்தை தந்து விடுகிறது இது தனியே இருக்கும் வரை ஒரு நல்ல செயல்தான். ஆனால் கல்யாண்ம் என்ற ஒரு புது உறவில் இதுவே பெரும் பிரச்சினையாக வந்து விடுகிறது. பெண் பார்க்கையிலே பெண்ணோடு அப்பா கன்டிஷன் போடுவார் பெண் வேலைக்கு போவா கல்யானத்திர்க்கு பிறகும் என்று ஆரம்பிக்கும் இந்த கண்டிஷன் தான் பலர் வாழ்க்கையில் சத்துரு.


பொருளாதார சூழ் நிலையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இது பொருந்தாது. பெருமைக்காக, பெண் என்ன ஆண்களுக்கு அடிமைபட்ட இனமா? மாமியார் தொல்லை, வீட்டு வேலை அலர்ஜி என்று பல காரணங்களுக்காக வேலைக்கு செல்லும் பெண்கள் இழப்பது ஒன்றல்ல இரண்டல்லா பெரும்பாலும் நிம்மதியற்ற வாழ்க்கை. அநநியோன்யம் மறந்து போகிறது. பிள்ளைகளின் மழலையை ரசிக்க முடியாமல் போகிறது. தான் படித்த படிப்பு தன் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்காமல் தன்னை விட குறைவாய் படித்த ஒரு ஆளிடம் டியூஷன் விடுவது, தன் குடும்பத்துக்கு ஏனோ தானோ என்று சமைக்கும் ஒரு அரை குறை ஆளை வைப்பது என எல்லாவற்றிற்க்கு அவுட் சோர்ஸ் செய்து தான் நிம்மதியாக வெளியே சென்று திரும்ப வரும் ஒரு விஷயத்தை தவிர வேறு எதுவும் இவர்கள் பெற்று விடவில்லை.


ஏன் ரவி உலகத்தில் பெண்கள் வேலைக்கே செல்வதில்லையா, பெண்கள் ப்டித்தால் அதை வீட்டில் தான் செலவிட வேண்டுமா என்று நீங்கள் என்னை பிரான்டும் நேரத்திற்க்குல் சொல்வேன் நீங்கள் வாழ்வது இந்திய சமூகம். இது குடும்பம் குழந்தை என பழகி போன உங்கள் மாமியாரும், மாமனாரும், என்னதான் படித்திருந்தாலும் தன் மனைவி வேலைக்கு செல்வதில் நாட்டமில்லை என்று நினைக்கும் பெரும்பாலான கணவர்களுக்கு நடுவில் இது சக்ஸ்ஸான சாத்தியம் என்று சொல்லுவதற்க்கில்லை.


அப்படி ஒரு [புதுமை பெண்ணாய் நீங்கள் ஜொலிக்க விரும்பினால் இந்த கல்யாண்ம் என்ற அடைப்புக்குறியில் நீங்கள் அடங்கவே முடியாது. இதுவும் வேனும் அதுவும் வேணும் என்று அடம் பிடிக்கும் சிறு குழந்தைத்தனமான எண்ணம் தான் உங்களுக்கு நீங்கள் வைக்கும் வேட்டு.


இதையும் மிஞ்சி வேலைக்கு செல்லும் பெண்கள் கண்டிப்பாய் அவர்கள் சுய நலம் ஒன்றின் காரணமே தவிர வேறு ஒன்றுக்கு இல்லை என்பதே. திருமணம் ஆகி பின்பு பொருளாதார சூழ் நிலையால் சுய தொழில், வேலைக்கு செல்வது என சில முடிவுகள் வரேவேற்க்க தக்கது, வீட்ல ஒரே போருப்பா என ஒரே காரணத்திர்க்காக வெளியே வேலைக்கு செல்வது கண்டிப்பாய அவர்கள் வாழ்வுக்கு அவர்களே வைக்கும் ஆப்பு தான்.


மெத்த படித்த பல பெண்கள் கவுரவத்தோடு இன்று வீட்டில் இருந்து சாதிக்கின்றனர், தன் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்த நற் பண்புகளோடு நல்ல சிட்டிசன்களாய் உருவாக்கும் இவர்கள் தான் உண்மையிலே சக்ஸஸ் பெண்மனிகள். வீட்டுக்கு வெளியே கிளம்பும் போது எடுக்கும் மொபைல் ஃபோன் வீட்டுக்குள் நுழைவதற்க்குள் சில எஸ் எம் எஸ்களையும், சில கால் லிஸ்டில் உள்ள கால்களையும் அழித்து விட்டு வரும் பெண்களும் ஆண்களும் இன்று இந்த குடும்பம் சார்ந்த வாழ்க்கை வாழாதது தான்.


குடும்பம் வேணும் நல்ல குழந்தைகள் வேணும் ஆனாலும் வேலைக்கு சென்று இதை சாதிப்பேன் என்று பெண்களுக்கு – நீங்கள் யாரை ஏமாற்றுகிறேர்கள் என்றே கேட்பேன். இவை அனைத்தையும் தாண்டி நிறைவான குடும்பம் உங்கள் இன் லாஸ் மற்றூம் பொறுப்பு மிகுந்த கணவன் மற்றும் பிள்ளைகளின் மூலம் நீங்கள் அடைந்தால் நீங்கள் வரம் வாங்கியவர்கள் தான் வாழ்த்துக்கள்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top