.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 27 November 2013

அப்பா-என் ஒவ்வொரு வயதிலும்!

ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்?

என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

 என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்!

என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்!

என் 12 வயதில் : நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்!

என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி!

என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்துகொள்ளாதவர்!

என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு பேர்வழி

என் 20 வயதில் : எங்கப்பா தொல்லையைத் தாங்கவே முடியல; எப்படித்தான் அம்மா இந்த ஆளோட குப்பை கொட்றாங்களோ?

என் 25 வயதில் : எதைச் சொன்னாலும் மறுக்கிறவர்!

என் 30 வயதில் : என் பையனை கட்டுப்படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசுல இருந்தப்ப எங்க அப்பான்னாலே எனக்கு எவ்வளவு பயம்!

என் 40 வயதில் : என்னை என் அப்பா எவ்வளவு கட்டுப்பாடா வளர்த்தார்! நானும் அப்படித்தான் பையனை வளர்க்கப்போறேன்

என் 45 வயதில் : அப்பா எங்களையெல்லாம் எப்படி வளர்த்தார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது

என் 50 வயதில் : அப்பா எங்களை வளர்க்க எத்தனை கஷ்டங்களைச் சந்தித்தார். எனக்கோ ஒரேயொரு பிள்ளையைக்கூட கட்டுப்படுத்த முடியல

 என் 55 வயதில் : எங்கப்பா எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு எங்களுக்காக எதையும் திட்டமிட்டுச் செய்தார். அவரைப்போல வேற ஒருத்தர் இருக்க முடியாது

என் 60 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

- எந்தப் பிள்ளையும் தன் தந்தையை தன் வாழ்க்கையின் முதல் கட்டத்தில் பார்த்தது போலவே மீண்டும் பார்ப்பதற்கு இப்படி 56 ஆண்டுகள் ஆகிவிடுகிறது! எனவே காலத்தை வீணாக்காதீர்கள், உங்கள் பெற்றோரை மறந்து-விடாதீர்கள்

படித்தது / பிடித்தது ....


நண்பனுடன்
 அவனது
 வீட்டிற்குச்சென்றிருந்தேன்..

வாசலில்
 அவனது பாட்டி
கயிற்றுக்கட்டிலில்
 கிடந்தார்..

நண்பன் உள்ளே
 போய்விட்டான்..

நான் : என்ன பாட்டி
 நல்லா
 இருக்கிங்களா..?

பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..?

நான் : நல்லாருக்கேன் பாட்டி..

இடையே எனது Android
தொலைபேசி அழைத்தது..
பேசி முடித்தேன்..

பாட்டி : என்னாய்யா அது
 டிவி பொட்டி கணக்கா..?

நான் : இதுவா பாட்டி..
இது புதுசா வந்துருக்குற ஃபோனு..
சட்டென்று ஞாபகம் வந்தவனாய்
 அதிலிருந்த Talking Tom-ஐ
 எடுத்துக்காட்டினேன்..
பாட்டி இதுகிட்ட பேசினா
 அத அப்புடியே திரும்ப பேசும்..


பாட்டி : என்ன ராசா சொல்றே..?
Talking Tom :என்ன ராசா சொல்றே..?

நானும், பாட்டியும், Talking Tomமும் சிரித்தோம்..

பிறகு வீட்டினுள்
 சென்றேன்..

எல்லோருடன்
 பேசிவிட்டு வெளியில் வந்தேன்...

வாசலில் பாட்டி..

நான் : போயிட்டு வாரேன் பாட்டி..

பாட்டி : ராசா...

நான் : என்னா பாட்டி..?

பாட்டி : ஏய்யா.. அந்தபூனகுட்டிய
 இங்க உட்டுட்டு போயா..

நான் : என்ன பாட்டி சொல்றிங்க..?

பாட்டி : ஆமாய்யா..
இந்த வயசான காலத்துல இங்க
 எங்கிட்ட யாருமே பேச மாட்றாங்கயா..
நா செத்துபோறப்ப
 அந்த
 பூனகுட்டிகிட்டயாச்சும்
 பேசிட்டே சாவுறேன்யா..

 (வீட்டில் உள்ள முதியோர்களிடம்மூம் பேச நேரம் ஒதுக்குங்கள், அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள்...)

உழைத்தால் சாதிக்கலாம்!

 

 * நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இராதீர்கள். உலக நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள்.

* உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு சக்தியல்ல. நன்மையும் தெய்வபக்தியுமே சக்தி.

* இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

* தனியாக இருந்து கொண்டு பலருடைய பகையை தேடிக் கொள்பவன் அறிவற்ற மூடனைப் போன்றவன்.

* செல்வம் பெருகிய காலத்தில் ஒருவனுக்கு பணிவு வேண்டும். அதே சமயம், செல்வம் குறைந்து வறுமை வரும் காலத்தில் பணியாத துணிவு வேண்டும்.

* கடின உழைப்பு இல்லாமல், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது.

- விவேகானந்தர்

கீழா நெல்லி சூப் - சமையல்!



 என்னென்ன தேவை?

கீழாநெல்லி - 1 கட்டு (தண்டோடு),

தக்காளி - 2,

சின்ன வெங்காயம் - 5,

பூண்டு - 6 பல்,

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப,

சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,

இஞ்சி - ஒரு துண்டு,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?


கீழாநெல்லிக் கீரையை தண்டோடு நன்கு அலசி, நன்கு இடித்து, அதோடு பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு இடிக்கவும். அதோடு சின்ன வெங்காயத்தை நசுக்கிச் சேர்த்து, மிளகுத் தூள், சீரகத் தூள், உப்புப் போட்டு இரு மடங்கு தண்ணீர் ஊற்றி, நான்கு, ஐந்து விசில் வரும் வரை குக்கரில் வைக்கவும்.

பிறகு அதை எடுத்து நன்கு மசித்து, வடிகட்டி அதன் சாற்றைக் குடிக்கவும். தொட்டாலே கையோடு வரும் முடி உதிர்வுப் பிரச்னைக்கு இது மருந்து. உடலும் குளிர்ச்சி அடையும்.

தெரிந்துகொள்ளுங்கள் - 2

மொழி வரலாற்றில் ஒரு சில அறிஞர்கள் உருவாக்கும் சொற்களே நிலை பெற்றுவிடுகின்றன. இமகபமதஉ என்ற ஆங்கிலச்சொல் "கலாசாரம்' என்று மொழி பெயர்க்கப்பட்டது. ஆனால் ரசிகமணி டி.கே.சி. அவர்கள் அது வடமொழி சாயலாக உள்ளதென்று அதைப் "பண்பாடு' என்று மொழி பெயர்த்தார். அதேபோல் "பார்லிமெண்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகப் "பாராளுமன்றம்' என்ற சொல்லை பரிதிமாற் கலைஞர் மொழி பெயர்த்தார்.

நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைப்பது இயலாத காரியம். இன்றைய அறிவியல் உலகம் இதை சாதித்துக் காட்டியுள்ளது. ஆனால் கி.மு. 2 ஆயிரத்திலேயே பாபிலோனில் உள்ள யூப்ரட்டீஸ் நதியின் கீழ் 3,000 அடிக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருந்தது வியப்பூட்டும் செய்தியாகும்.

மிளகாய் என்பது மேலை நாட்டுத் தாவரம். இது வருவதற்கு முன்னால் மிளகைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். மிளகைப் போன்றே காரம் இருந்ததால் தமிழர்கள், அதனை "மிளகுக்காய்' என்றழைத்தார்கள். இதுவே, பின்னாளில் மிளகாய் என்று மாறியது.

பாம்புகளில் நாகப்பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை. வடக்கே கோதுமை நிறமுடைய ஒரு வகை நாகங்கள் உண்டு. இவற்றை யாராவது பிடிக்கவோ, கொல்லவோ நினைத்தால் முடிந்தவரை சீறிப்பார்க்கும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடும். முடியாத பட்சத்தில் கற்களிலோ, பாறைகளிலோ மோதிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளும்.

*  பிஜித் தீவில் உள்ள மக்கள் யாருக்காவது மரியாதை செய்ய விரும்பினாலோ, பாராட்ட நினைத்தாலோ அவர்களுக்கு திமிங்கலத்தின் பல்லை அன்பளிப்பாக அளிப்பார்கள்.

*  முகத்திற்கு வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்வது என்பது தொன்று தொட்டு வந்த நாகரீகமாகும். 3,000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் முகத்திற்கு "ஸ்நோ' வைத்திருக்கின்றனர். துட்டகாமன் என்ற எகிப்திய மன்னனின் கல்லறையில் (பிரமிட்) இம்மாதிரியான முகப்பூச்சு உள்ள பாத்திரங்கள் காணப்படுகின்றன. இன்றும் அவை அபரிமிதமான மணத்துடன் இருப்பதுதான் வியப்பு. 

*  மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய சிகரம் மான்ட் பிளாங்க். பிரான்ஸ், இத்தாலி நாட்டில் அமைந்துள்ள இந்த சிகரத்தின் உயரம் 4,810 மீட்டர் ஆகும்.

*  புகழ்பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கி.பி.1640-ல் கட்டத் தொடங்கி 1653-ல் கட்டி முடித்தனர். 

*  சென்னையில் 1,687-ம் ஆண்டில் நகராண்மைக்கழகம் தோன்றியது. இந்தியாவின் முதல் நகராண்மைக்கழகமும் இதுவே.

*   1786-ல் முதல் தபால்நிலையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

*  சென்னை பல்கலைக்கழகம் 1857-ல் தொடங்கப்பட்டது. 

*   முதன்முதலில் சென்னைக்கு மின்சார விளக்குகள் 1914-ம் ஆண்டு போடப்பட்டது. 

*   1924ம் ஆண்டிலேயே 8,300 மின்சார விளக்குகள் சென்னை நகரெங்கும் ஒளிவீசியது.

*  புகழ்பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கி.பி.1640-ல் கட்டத் தொடங்கி 1653-ல் கட்டி முடித்தனர். 

*  சென்னையில் 1,687-ம் ஆண்டில் நகராண்மைக்கழகம் தோன்றியது. இந்தியாவின் முதல் நகராண்மைக்கழகமும் இதுவே.

*   1786-ல் முதல் தபால்நிலையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

*  சென்னை பல்கலைக்கழகம் 1857-ல் தொடங்கப்பட்டது. 

*   முதன்முதலில் சென்னைக்கு மின்சார விளக்குகள் 1914-ம் ஆண்டு போடப்பட்டது. 

*   1924ம் ஆண்டிலேயே 8,300 மின்சார விளக்குகள் சென்னை நகரெங்கும் ஒளிவீசியது.

<> உலகிலேயே சந்தடி நிறைந்த நகரம் எகிப்தின் தலைநகரான கெய்ரோதான்.<> கொரியாவில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் கப்பல் வடிவத்தில் அமைந்துள்ளது.

<> ஆசியா என்ற சொல்லின் சரியான பொருள் சூரியோதய பூமி என்பதாகும்.

<> அமெரிக்கர்கள் மாதத்தை முதலாகவும் தேதியை இரண்டாவதாகவும் எழுதுவது வழக்கம்.

<> விண்வெளியில் ஒரு மனிதன் பறக்க 15 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது என்று கணக்கிட்டுள்ளனர்.

<> சிங்கப்பூரின் பழைய பெயர் டெமாசத் என்பது. டெமாசத் என்றால் கடல் நகரம் என்று பொருள்.

<> கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் உப்பை "உப்பு' என்றே அழைக்கின்றனர்.

<> வைரத்தைக் குறிப்பிடும் "டயமண்ட்' என்ற ஆங்கிலச்சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்தது. அதற்கு வெல்லப்பட முடியாத பொருள் என்று பெயர்.

<> அமெரிக்காவில் ரோம் என்ற பெயரில் 8 நகரங்கள் உள்ளன.

<> உலகத்தில் அதிக குற்றங்கள் நடைபெறும் நாடு பிரிட்டன்தான். அதற்கு அடுத்த இடத்தில் பிரேசில், தென்அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

* நமது குடலை நேரடியாக எக்ஸ்-ரே எடுக்க முடியாது.

* அமெரிக்க அதிபரை யாரும் கைது செய்ய முடியாது. அவர், "வீட்டோ பவர்' என்னும் அதிகாரம் பெற்றவர்.

* ஆர்டிக் பெருங்கடலில் கப்பல்கள் செல்ல முடியாது.

* பூஜ்ஜியத்தை ரோமன் மொழியில் எழுதமுடியாது. அதற்கு நிகரான பதம் கிடையாது.   
 
* மைசூர் 'தீப நகரம்' என்று அழைக்கப்படுகிறது.

* "இளஞ்சிவப்பு நகரம்' என அழைக்கப்படுவது ஜெய்ப்பூர்.

* "காற்று நகரம்' என்று சிகாகோ அழைக்கப்படுகிறது.

* "வெள்ளை நகரம்' என அழைக்கப்படுவது பெல்கிரேடு.

* "பூங்கா நகரம்' என்று அழைக்கப்படுவது பெங்களூரு.

* குதிக்க முடியாத ஒரே விலங்கு யானை.

* நாம் பிறந்தது முதல் கண்கள் மட்டும்தான் வளராமல் அப்படியே இருக்கும்.

* ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பெண்கள் கண்களை இமைக்கின்றனர்.

* மனிதர்களை விட வேகமாக ஓட கூடியது நீர்யானை.

* ஒரு எறும்பு தன் உடலின் எடையை போல 50 மடங்கு எடையை தூக்கி செல்லும். 30 மடங்கு எடையை இழுத்து செல்லும். மயங்கி விழும்போது எப்போதும் வலது பக்கமாகவே சாய்ந்து விழும்.

•பூனைக்குத் தண்ணீரைக் கண்டால் ஆகாது. அதன் மீது சிறிதளவு தண்ணீர் தெளித்தாலும் அது தலைதெறிக்க ஓடிவிடும்.

•கோலாக் கரடிகள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை யூகலிப்டஸ் இலைகளைச் சாப்பிடும் பொழுதே பெறுகின்றன. அதனால் இவை தண்ணீர் என்று தனியாக எதையும் குடிப்பதில்லை.

•மயில் இறகுகளைச் சுவர்களில் ஒட்டி வைத்தால் பல்லிகளின் தொல்லை இராது.

•மாமிசம் உண்ணும் விலங்குகள் அவை உண்ணும் பிராணிகளின் இறைச்சியிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் உப்புச் சத்தைப் பெறுகின்றன.

•ஒட்டகத்துக்குப் பார்க்கும் சக்தி அதிகம். ஒரு மைலுக்கு அப்பால் தண்ணீர் தேங்கியிருந்தாலும்கூட ஒட்டகம் எளிதில் கண்டுபிடித்து விடும்.

•வானில் குறிப்பிட்ட உயரத்துக்கும் மேல் ஜெட் போன்ற விமானங்கள் விட்டுச் செல்லும் புகை போன்ற வெள்ளைக் கோடுகள் அதன் புகையல்ல, நீர்த்திவலைகள்.

•முதல் உலகப் போரில் ராணுவ வீரர்கள் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து பாட்டிலில் போட்டு அதன் வெளிச்சத்தைப் படிக்க, எழுத பயன்படுத்தினர்.

•முதன்முதலாக பூமியின் சுற்றளவைக் கண்டறிந்தவர் ராத்தோஸ்தனிஸ் என்பவர்.

•ஆசியாவின் முதல் விளையாட்டுக்கான பல்கலைக்கழகம் புனே நகரில் உருவாக்கப்பட்டது.

•இந்தியாவின் தேசிய விலங்காக புலியை 1972-ஆம் ஆண்டு அறிவித்தார்கள்.

•இந்தியாவில் (ஆங்கிலேயர்களின்) கிழக்கு இந்தியக் கம்பெனி துவங்கிய ஆண்டு 1600 ஆகும்.

•ஐ.நா.பல்கலைக்கழகம் டோக்கியோ நகரில் உள்ளது.  

நல்ல நண்பர்கள் ?

இதோ எனக்கு தெரிந்தவை

 நான் அறிந்தவை;;

 நல்ல நண்பர்களே கிடைக்கவில்லை என்றால் பிழை நண்பர்களில் இல்லை. நம்மனதில்தான்இருக்கிறது.நீங்கள் அறிந்த வரையறை பிழையானதாக இருக்கும். நண்பன் என்பவன் ஆபத்தில் உதவும் மூன்றாவது மனிதனாக மட்டுமின்றி, நீங்கள் வீட்டிற்குள் செல்லும்; போது ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொள்ளும் உங்கள் ஜுனியராகவோ, கால்களுக்கிடையே இடையே சுற்றிவரும் பூனைக்குட்டியாகவோ, சொன்னதையே சொல்லிச் சொல்லி இன்பம் தரும் கிளியாகவோ, உங்கள் சந்தோசத்தின் போது வாலையாட்டியும், துக்கத்தின் போது தானும் சாப்பிடாமல் உங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டு நம் கவலையைப் பகிர்ந்து கொள்ளும் நாயாகவோ கூட இருக்கலாம். இவை எல்லாவற்றையும் விட புத்தகங்களை உங்களது நண்பனாக்கிக் கொண்டால் சிறந்த மனிதனாவீர்கள். உங்கள் உள்ளங்கள் பரந்த வெளியாக இருக்கும் போது உங்களைச் சுற்றி நண்பர்கள் மட்டுமே இருப்பர்கள்.

நண்பர்கள் செய்யும் காரியம் ஏற்புடையதென்றால் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்துங்கள். கைகளைத் தட்டுவதால் உங்கள் ரேகைகள் அழிந்து போய்விடாது.  கைகளைத் தட்ட சோம்பல்படும் நண்பர்களிடம் சொல்லுங்கள் ; அமைதியாக வேடிக்கை பாருங்கள் – என்று. வேடிக்கை பார்த்துக் கொண்டே உங்களுக்குப் பள்ளம் வெட்டுபவர்களிடம் சொல்லுங்கள்,ஒரு நண்பனை
அழித்தால் அவன் போல  இன்னும் நூறு நண்பன் கிடைப்பான் என்று.
 
நல்ல நண்பன் தனது நட்பை முதலில் எவ்வித பேரம் பேசலும் இன்றி, முன் நிபந்தனையின்றி விரிந்த மனப்பான்மையுடன் கருமித்தனம் ஏதுமின்றி அள்ளி வழங்கத் தயாராக இருப்பான்.

உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு.

ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையில் நம்பகமான ஆலோசகர் தேவைப்படுகிறார். முக்கியமாக நண்பர்கள் தேவைப்படுகிறார்கள். ஒருவருடைய சிந்தனைகளையும், குணங்களையும் பட்டை தீட்ட, உதவி செய்ய அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகிறார்.

பெற்றோர்கள், மனைவியைவிட நமது துக்கத்திலும், சந்தோஷத்திலும் பங்கு கொள்வதில் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தாயிடமும், மனைவியிடமும், தந்தையிடம்கூட ஆலோசனை செய்ய முடியாத பல விடயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவை, தீர்வை பெறலாம்.

துன்பம் வரும் வேளையில் கடவுளை நினைக்கிறோம். அடுத்ததாக உதவி கேட்க நல்ல நண்பர்களைப் பற்றிய எண்ணம் நம்மையும் அறியாமல் நம் மனதில் உதயமாகிறது.

இதுநாள் வரையிலும், நண்பர்களே எனக்கு இல்லை என்று யாரும் கூறிவிட முடியாது. நட்பு, தோழமை என்பது இருவர் இடையேயோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், பால், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

நல்ல நண்பன் தனது நட்பை முதலில் எவ்வித பேரம் பேசலும் இன்றி, முன் நிபந்தனையின்றி விரிந்த மனப்பான்மையுடன் கருமித்தனம் ஏதுமின்றி அள்ளி வழங்கத் தயாராக இருப்பான்

அப்செட்டில் அனுஷ்கா!

 

இரண்டாம் உலகம்' படத்தின் ரிசல்ட் அப்படத்தில் கடுமையாக உழைத்த அத்தனை பேருக்கும் படு வேதனையைக் கொடுத்திருக்கிறது.

அதிலும் அனுஷ்கா ரொம்பவே அப்செட்.

இந்த படத்தை தெலுங்கில் 'வர்ணா' என்ற பெயரில் வெளியிட்டிருந்தார்கள்.

அங்கேயும் படம் ப்ளாப்.

இத்தனைக்கும் அனுஷ்கா நடிக்கும் 'ருத்ரம்மா தேவி' படத்தை ஆந்திராவே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்த நிலையில் 'வர்ணா', அனுஷ்காவிற்காவது ஓடியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததே வேறு.

'வர்ணா' ரிசல்ட் அனுஷ்கா நடித்து வரும் 'ருத்ரம்மாதேவி'க்கும் அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'பாகுபாலி'க்கும் பெரிய தடைக்கல்லைப் போட்டிருக்கிறது.

'அருந்ததி' என்று பெரிய ஹிட் கொடுத்தார் அனுஷ்கா.

அந்த அளவுக்கு இந்தப் படமும் பேசப்படும் என்று நினைத்துதான், ஆக்ஷன் காட்சிகளில் நம்பிக்கையோடு நடித்தார்.

ஆனால், படத்துக்கு சரியான  ரெஸ்பான்ஸ் இல்லாததால் அப்செட்டில் இருக்கிறார் அனுஷ்கா.

இலங்கைத்தமிழரின் திருமணம்!

இலங்கைத் தமிழர்களிடையே காணப்படும் திருமண முறை பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் என்பது நிரந்தரமானது. அது ஆயிரங்காலத்துப் பயிர் என்று கூறப்பட்டு திருமணத்தின் முன் பல்வேறு விஷயங்கள் நுணுக்கமாக ஆராயப் படுகின்றன. திருமணம் பேசுவதற்கு முன் சாதி, சமயம், அந்தஸ்து ஆகியன ஒன்றாகவுள்ளனவா என்பது பார்க்கப்படும்.

ஏனெனில் ஒரே சூழலில் வாழ்ந்தவர்களுக்கு ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போவது எளிது என்று கருதப்படுகிறது. இதனால் இவற்றில் மாறுபாடுள்ளவர்கள் அதாவது சாதி, சமய, அந்தஸ்து வேறுபாடுகள் கொண்டவர்கள் காதல் வசப்படும் போது அது பெரும்பாலும் முற்றாகவே பெற்றோராலும் சமூகத்தாலும் நிராகரிக்கப்படுகிறது. இந்த மூன்றுடன் குணநலம், குடும்பப் பின்னணி, சாதகப் பொருத்தம், சீதனம் என்பனவற்றின் பொருத்தத்திலேயே திருமணம் தீர்மானிக்கப்படும்.

ஆணுக்கு தொழில், குணம், சுமாரான அழகு என்பன முக்கியமாகக் கவனிக்கப்பட பெண்ணுக்கு வயது, அழகு, குணம், கல்வி, சீதனம் என்பன முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன. ஒரு காலத்தில் ஒரு பெண் திருமணம் செய்வதற்கு A B C D E F என்பன முக்கியமாகத் தேவை என்றும் அப்போது தான் ஆண் G என்று அதாவது good என்று சொல்லி தாலியைக் கட்டுவான் என்றும் வேடிக்கையாகச் சொல்லப்பட்டதுண்டு. அதாவது A-Age, B-Beauty, C-Caste, D-Dowry, E-Education, F-Family status.

இலங்கையில்  திருமண உறுதிப்பபாட்டுக்குப் நிரந்தர வருமானம் முக்கியமாகக் கருதப்பட்டதால் ஆரம்பத்தில் அரச பதவி பெற்றவர்களை நாடி பெண்ணைப் பெற்றவர்கள் ஓடினர். கோழி மேய்த்தாலும் கோறணமேந்தில் மேய்ப்பவருக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதே ஒரு காலத்தில் நியதியாக இருந்தது. தொழில் அடிப்படைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் தொழில் பெறுவது சுலபமாகவும், பெற்ற தொழில் நிரந்தரமானதாகவும் இருந்ததால் திருமணச் சந்தையில் அவர்கள் முன்னிடத்தை வகித்தார்கள்.

அவர்களில் ஒருவரைத் தங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பலர் பண அடிப்படையில் போட்டி போட்டார்கள். அதிக பணம் கொடுக்க வல்லவர்கள் ஒரு வைத்திய கலாநிதியையோ அல்லது பொறியியலாளரையோ பெற்றனர். இதனால் படித்து நல்ல தொழில் பெற்ற இளைஞர்களது பெற்றோர் பெண்ணைப் பெற்றவர்களைத் தம் விருப்பபடி ஆட்டிப்படைக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர்.

மகனைப் படிப்பித்த பணத்தை மட்டுமின்றித் தாம் பெற்ற பெண்களுக்கு வழங்கவுள்ள சீதனப் பணத்தையும் பெண்ணைப் பெற்றவரிடமிருந்து சிலர் கறந்து விடுவார்கள். இதனால் யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில், பணமும் தொழில் அடிப்படையில் கல்வி கற்ற ஆண்பிள்ளைகளும் இல்லாதவர்கள் தமது பெண்களுக்குத் திருமணம் செய்யப் பெரிதும் சிரமப்பட்டனர்.

ஆயினும் பின்னர் நாட்டு நிலையால் பலதரப்பட்ட நிலைகளில் உள்ள இளைஞர்களும் லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா என்று போகத் தொடங்கியதும் நிலமையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. எல்லா நிலைகளிலும் பணம் புழங்கத் தொடங்கியதும் தமது பெண்களுக்குப் பெருமளவு சீதனம் கொடுத்துத் திருமணம் செய்து கொடுக்கப் பலரால் முடிந்தது.

இந்தியாவைப் போலன்றி யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் ஒரு குடும்பச் சொத்தும் வீடும் மகளுக்கு வழங்கப்படுவதே வழக்கம். இதற்கு அடிப்படையில் ஒரு காரணம் உண்டு. பெற்றோர் வயது முதிர்வடையும் போது மகளுடன் வாழச் செல்வது வழக்கம். அவர்கள் வழங்கிய வீட்டாலும் சொத்தாலும் எதுவித மனப்பாதிப்புகளுமமின்றி அவர்கள் உரிமையுடன் அங்கு வாழ முடிந்தது. இந்த நல்ல முறை காலப்போக்கில் மாப்பிள்ளை பகுதியினரின் பேராசையால் பெண்ணைப் பெற்றவரிடம் அதிக பணத்தைப் பலவந்தமாகக் கேட்கும் சீதன முறைக்கு வித்திட்டது எனலாம்.

அடுத்ததாக ஜாதகம் பார்த்தல். ஜாதகம் பார்த்தலே திருமணப் பேச்சில் முதலாவது கட்டமாகக் கருதப்படுகிறது. சாத்திரிகள் ஜாதகப் பொருத்தம் சம்பந்தமாகக் கூறுவது வேத வாக்காகக் கொள்ளப்படுகிறது. சாத்திரத்தைத் தொழிலாகக் கொண்ட பலருக்குப் பெரும்பாலும் திருமணப் பொருத்தம் பார்த்தலே பிரதான வருவாய்க்கு வழி வகுப்பதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் பெரும்பான்மையானவை ஜாதகப் பொருத்தம் பார்க்கப்பட்ட பின்னரே நடைபெறுகின்றன.

திருமணம் செய்யப்படவுள்ள ஆணோ பெண்ணைப் பற்றி வெறும் கேள்வியறிவின் மூலம் முற்றாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் ஜாதக ரீதியாக பெறப்படும் சில தகவல்கள் சரியான முடிவை எடுக்க உதவுவதாக நம்பப்படுகிறது. சிலர் எண் பொருத்தமும் பார்ப்பதுண்டு. ஜாதக, எண் பொருத்தங்களில் உண்மை உண்டோ இல்லையோ, அதிகமாக வந்துள்ள சாதகக் குறிப்புகளில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கேற்ப எண்ணிக்கையை வரையறுப்பதற்கும், அதிகம் விருப்பமில்லாத குடும்பங்களில் இருந்து வந்த சம்பந்தங்களை ஒதுக்குவதற்கும் இப் பொருத்தம் பார்த்தல் பலருக்கு உதவியது எனலாம்.

முந்திய காலத்தில் பெண்களுக்குத் தமக்கு வரவுள்ள கணவனைத் திருமணத்தின் முன் பார்ப்பதற்கும் அவனைப் படித்திருக்கிறதா இல்லையா என்று கூறுவதற்கும் சுதந்திரம் வழங்கப்படவில்லை. ஆயினும் பெண்கள் அதிக அளவில் படித்துப் பட்டங்கள் பெற ஆரம்பித்த பின்னர் பெற்றோர் ஓரளவில் அவர்கள் விருப்பத்திற்கும் மதிப்பளிக்க ஆரம்பித்தனர். ஆயினும் சீதன முறையால் பெண்கள் இந்தச் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. தங்களிடம் உள்ள பொருளாதார வளத்திற்கேற்ப வரும் சம்பந்தங்களில் ஒன்றைத் தம் பெண் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பெற்றோர் ஆளாகினர்.

பெண்ணின் படிப்புக் கூடக்கூட திருமண விஷயத்தில் அவளது சுதந்திரம் குறையலாயிற்று. படித்த பெண்ணுக்குரிய ஒரு படித்த ஆணைத் தேடுவதற்குப் பெற்றோர் அதிக விலை கொடுக்கவேண்டி இருந்தது. ஏனெனில் படித்துப் பட்டம் பெற்ற ஆணுக்குக் கலியாணச் சந்தையில் பெறுமதி அதிகமாகவிருந்தது. படித்த பெண்களுக்கு ஏற்ற வகையில் அதிக சீதனம் கொடுத்து ஒரு படித்த இளைஞனைத் தேடிப்பிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இதன் காரணமாகச் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த படித்த பெண்களின் திருமணம் பெற்றோருக்கு அதிக பிரச்சினைக்கு உரியதொன்றாயிற்று.

இவை இப்படி ஒருபுறம் இருக்க இந்த கல்யாண முறைகளில் பல மாறுதல்களை எம்மக்கள்  கொஞ்சம்  கொஞ்சமாக  கொண்டுவர தொடங்கிவிட்டனர்.

 பெரும்பாலும் புலம்பெயர்ந்த பின் மிகவும் அதிகளவு மாற்றங்களைக் கொண்டது எனலாம். வேற்று இன மக்களின் குறிப்பாக வட இந்திய மக்களின் முறைகளில் நாட்டம் கொண்டு ஒவ்வொருவரும் தமக்கு விரும்பிய படி சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்தினர்.

குறிப்பாக மணமகளின் குஜராத் சேலைகட்டும் முறை, மணமகனின் குருதார் உடை என்பனவற்றிலிருந்து அனைத்துமே மாற்றங்கள் பெறத்தொடங்கிவிட்டது.

இதைவிட வேறு ஊர் சம்பந்தம் ஏற்படும் போது, அவர்களும் ஆளாளுக்கு இது எங்கள் முறை, இது எங்கள் பழக்கம் என்று வாதிட, புதிதாய் சில மாற்றங்கள் தோன்றத்தொடங்கியும் விட்டன.

பல்வேறு கிரியைகளைக் கொண்டு நீண்ட நேரமாகச் செய்யப்பட்டு வந்த சடங்கு இன்று  குறுகிய   நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய வகையில் சுருக்கப்பட்டுள்ளது.

பிள்ளையார் பூசை, காப்புக் கட்டுதல், மணப்பெண்ணை அவளது பெற்றோர் மணமகனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தல், மணமகன் மணமகளுக்குப் புடவை முதலியவற்றைப் பரிசளித்தல், தெய்வம், சபையோர், அக்கினி சாட்சியாகத் தாலி கட்டுதல், அக்கினியை வலம் வருதல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், மாலை மாற்றுதல், பெரியோரிடம் ஆசி பெறுதல் ஆகியன இந்துத் தமிழரது திருமணங்களில் முக்கிய கட்டங்களாகக் கருதப்படுகின்றன. இந்த அடிப்படைக் கிரியைகளை விட வேறும் பல அம்சங்கள் காலத்திற்கும் வசதிக்கும் இடத்திற்கும் ஏற்றவாறு சேர்க்கப் பட்டும், நீக்கப்பட்டும் விட்டது.

இந்து சமயத்தின் படி திருமணம் என்பது ஒரு ஆணையும் பெண்ணையும் உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றுபட வைத்தலாகும். திருமணத்தின் பின் அவர்கள் உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும். கணவனைப் பிரிந்து வாழும் மனைவி நீர் இல்லாத நீரோடையையும் ஆன்மா இல்லாத உடலையும் போன்றவள் என்கிறது இராமாயணம்.

சிலப்பதிகாரத்திலே கோவலன் கண்ணகி திருமணத்திலேயே முதன் முதல் மணமக்கள் தீ வலம் வருதல் குறிப்பிடப்படுகிறது. இந்த வடநாட்டு முறை அந்தக் காலத்திலேயே தமிழ் நாட்டில் அறிமுகமாயிற்று. அக் காலத்திலிருந்து தீயை வலம் வரும் முறை தமிழரது திருமணங்களில் இடம் பெறலாயிற்று. ஆயினும் தீயை வலம் வருவதன் எண்ணிக்கை இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. இலங்கைத் தமிழ் இந்துக்களின் திருமணங்களில் பொதுவாக மூன்று தடவைகள் வலம் வரும் முறையே காணப்படுகிறது.

இந்து சமய மரபின் படி மணமக்கள் ஏழு தடவைகள் தீயை வலம் வருதல் வேண்டும் என்று கூறப்படுகிறது. முதல் நான்கு தடவைகளும் மணமகள் முன் செல்ல மணமகன் பின் தொடர்வான். அப்போது மணமகள் தனது கணவனிடம் ஏழு வேண்டுகோள்களை விடுப்பாள் என்று கூறப்படுகிறது.

    * 1. எந்த நேரத்திலாவது நீங்கள் சமயக் கிரியைகளில் கலந்து கொள்ளவோ அல்லது யாத்திரை செல்லவோ வேண்டியிருப்பின் அதற்கு முன் எனது விருப்பத்தைக் கேட்டு எனது சம்மதத்தைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
  
 * 2. எந்த நேரத்திலாவது நீங்கள் பிதுர்களை வழிபட விரும்பினால் என்னையும் அதில் இணைந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    * 3. எந்த நேரத்திலாவது எனது பெற்றோர் அவமானம், வறுமை, நோய் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரும் போது நீங்கள் எனது கணவன் என்ற முறையில் அவர்களது துன்பத்தை நீக்க உதவ வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

    * 4. எந்த நேரத்திலாவது நீங்கள் எங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதற்கோ அல்லது கோயில் கட்டுவதற்கோ அல்லது சமய சேவை செய்வதற்கோ விரும்பினால் அந்தச் செயற்பாடுகளில் உங்களுடன் இணைந்து கொள்வதற்கு நான் அனுமதிக்கப்பட வேண்டும்.

    * 5. எந்த நேரத்திலாவது நீங்கள் மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேலை விஷயமாகவோ வீட்டை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு போக நேரிட்டால் வீட்டில் எமது நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதி மொழியை உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். அத்துடன் அவ்வாறு போவதன் முன்னர் எனது சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

    * 6. எந்த நேரத்திலாவது நீங்கள் கொடையளிக்க, பொருள்களையோ பணத்தையோ கொடுக்க வாங்க விரும்பினால் அதற்கு முன்னர் எனது சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்,

    * 7. எங்களது வயது முதிர முதிர உங்கள் அன்பும் விருப்பமும் வளர்ந்து முதிர வேண்டும் என்று இப்போது நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மணமகளின் இவ்வேழு கோரிக்கைகளுக்கும் மணமகன் சம்மதம் தெரிவித்த பின்னர் அவன் வழிநடத்த மணமகள் தொடர இருவரும் தீயை வலம் வருவார்கள்.
   
அப்போது மணமகன் மணமகளுக்கு ஐந்து கோரிக்கைகளை முன் வைப்பான்.


    * 1. எங்கள் குடும்பத்தின் கௌரவமான பெயருக்கு ஓரு போதும் களங்கம் ஏற்படாத வகையில் நீ வீட்டிலும் சமூகத்திலும் நடந்து கொள்ள வேண்டும்.
   

* 2. நான் வீட்டில் இல்லாத நேரங்களில் எங்கள் வீட்டுக்கு வரும்
விருந்தாளிகள் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுத்து, எங்கள் தர்மத்தின் படியும், வழிமுறைகளின் படியும், சமுகத்தில் எங்களுக்குள்ள அந்தஸ்த்தின் படியும் நீ அவர்களை உபசரிக்க வேண்டும்.
  

 * 3. எப்போதாவது எங்கள் இருவரிடையேயும் முரண்பாடுகள் தோன்றினால் நீ அவற்றை ஒருபோதும் மனதில் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறான வேறுபாடுகள் ஒவ்வொரு வீட்டிலும் வருவது இயல்பாகும். அவ்வாறான வேறுபாடுகள் எழும் நேரத்தில் நீ வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.நீ அவ்வாறு வெளியேறுவது சமுகத்தில் எனக்கு அவமானத்தையும் அவதூறையும் கொண்டு வரும். அவ்வாறான அவமானமும் அவதூறும் வீட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும். அத்துடன் அது எமக்குள் பிரிவினையை ஏற்படுத்தும். கணவன் மனைவி பிரிதல் என்பது எமது தர்மத்தின் விதிமுறைக்கும் எமது முன்னோரின் குடும்ப வரலாற்றுக்கும் ஒவ்வாதது.
 

  * 4. நீ வீட்டு வேலைகளை நேரம் தவறாது அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் தினமும் செய்யவேண்டும். அவ்வாறாயின் அது என்னை அசௌகரிகங்களுக்கு உள்ளாக்காது. நீ எங்கள் வீட்டின் தெய்வமாவாய்.
   

* 5. இன்று கடவுளின் அருளால் நான் சௌகரிகமான ஒரு வீட்டில் உன்னுடன் வாழலாம் என்று நம்புகிறேன். ஆனால் துன்பங்கள் எமக்கு வருமாயின் விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் நீ என்னுடன் வாழவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். என்னுடைய துன்பம் உன்னுடையதுமாகும். என்னுடைய வசதியின்மை உன்னுடையதுமாகும். என்னுடைய ஏழ்மை உன்னுடையதும் ஆகும். நான் உன்னில் அன்புகொள்ளவும், உன்னை வாஞ்சையுடன் போற்றவும், உனது நன்மைக்காக உழைக்கவும் உறுதி பூண்டுள்ளதைப் போல நீயும் உறுதி பூண வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். எப்போதாவது நோயின் காரணமாக உனது நலன்களுக்காக என்னால் உழைக்க முடியாமற் போனால் அப்போது நீ எனக்கு உதவ வேண்டும்.

மணமகள் இக்கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட பின்னர் அவள் மணமகனின் இடதுபுறத்தில் இடமெடுத்து நிற்பாள். இங்கே குறிப்பிடப்பட்ட 12 கோரிக்கைகளும் இல்லறம் இனிதாக நடைபெறுவதற்காக உருவாக்கப்பட்டவை. இவற்றுள் சில இக்காலத்துக்கு பொருத்தமற்றவையாக காணப்பட்ட போதும் பல காலத்தைக் கடந்து எக்காலத்துக்கும் பொருத்தமானவையாகவே காணப்படுகின்றன. கணவன் மனைவி ஆகிய இருவரும் காரியங்கள் அனைத்திலும் மனம் ஒத்து முடிவு செய்ய வேண்டும் என்பதையும் இருவரும் குடும்ப நலனுக்காக ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் இக் கோரிக்கைகள் காட்டி நிற்கின்றன.

கிறீஸ்தவ திருமணங்களிலும் மணமக்கள் இவ்வாறான வாக்குறுதிகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்.


      இந்நாளிலிருந்து நான் உன்னை எனது மனைவியாக அல்லது கணவனாக ஏற்று, நல்லதிலும் கெட்டதிலும், செல்வத்திலும் வறுமையிலும், நோயிலும் ஆரோக்கியத்திலும், சுகத்திலும் துக்கத்திலும் ஒன்றாக வாழ்ந்து உன்னில் அன்பு பாராட்டி மரணம் எம்மைப் பிரிக்கும் வரை உனது நம்பிக்கைக்கு உரிய வகையில் வாழ்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

என்று மணமக்கள் திருமணத்தன்று உறுதி கொள்கின்றனர். கஷ்டம் வரும் போது ஒருவரையொருவர் தேற்றுதலும், உயரிய இலக்குகளை அடைய ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துதலும், ஒருவர் அழும் போது மற்றவர் அழுவதும் சிரிக்கும் போது சிரித்தலும் எப்போதும் ஒழிவுமறைவின்றி ஒருவருக்கொருவர் உண்மையாயிருத்தலும் இந்த உறுதி மொழிகளில் பொதிந்துள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால் வாழ்விலும் தாழ்விலும் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே அவற்றின் சாராம்சம். எல்லாத் திருமண வாக்குறுதிகளும் மனமொத்த நீண்ட இல்லற வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் சீர்திருத்தக் கலியாணங்கள் சில இடம்பெற்றன. திமுக செல்வாக்கினால் இம்முறை ஏற்பட்டு இருக்காலாம். இந்துக் கலியாணங்களை நடத்தும் பிராமணக் குருக்களும் அவர் நடத்தும் கிரியைகளுமின்றி பெரியவர் ஒருவர் தாலியை எடுத்துக் கொடுக்க அதை மணமகன் மணமகளது கழுத்தில் அணிவிப்பதும் பின் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வதும் அவர்களை திருமணத்துக்கு வந்தோர் வாழ்த்துவதுமே இத் திருமண முறையின் முக்கிய அம்சங்களாகும்.

திருமண வீடுகளில் வழமையாகக் கேட்கும் வாழ்த்துகளில் ஒன்று பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்பதாகும். அப் பதினாறு பேறுகளும் என்னென்ன என்பது பலருக்கும் தெரியாது. அது பதினாறு பிள்ளைகள் என்று கொள்ளப்பட்டு அதனோடு தொடர்பாக சுவையான கேலியும் சிரிப்பும் திருமண வீடுகளில் எழுவதுண்டு. அது ரசனைக்குரியதாக இருந்த போதும் அந்தப் பதினாறு பேறுகளும் என்ன என்று இன்று தெரிந்து கொள்வோம்.

நம் முன்னோர்கள் இல்லறம் மகிழ்ச்சிகரமாக அமைவதற்கு வேண்டிய பதினாறு விஷயங்களை அந்த வாழ்த்தில் பொதிந்து வைத்துள்ளனர். புகழ், கல்வி, உடல் வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லுழ்(a favourable destiny), நுகர்ச்சி(enjoyment), அறிவு,(wisdom) அழகு, பெருமை, இளமை, துணிவு (courage), நோயின்மை (perfect health), நீண்ட வாழ்நாள்.

இந்திய மண்ணில் பிறந்த முக்கிய சமயங்களுள் சமணம் பௌத்தம் ஆகிய இரண்டும் துறவினால் மட்டுமே ஒருவர் இறுதி நிலையை அடைய முடியும் என்று கூற, இந்து சமயம் மனித மனதில் எழும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இல்லற இன்பத்தை முறைப்படி அனுபவித்துப் படிப்படியாக வாழ்க்கை நிலைகளைக் கடந்து இறுதியிலேயே வாழ்வைத் துறத்தல் பற்றிக் குறிப்பிடுகிறது. மனித உணர்வில் காமம் முக்கிய உணர்வு என்பதை ஏற்றுக் கொண்டதால் மட்டுமன்று இல்லறத்தை அது ஏற்றுக் கொண்டது.

சிற்றின்பத்தைக் கட்டுப்பாடான முறையில் அனுபவிப்பதுடன் பல வித தர்மங்களைச் செய்ய இல்லறம் வழிவகுப்பதாலேயே அதனை ஒரு தர்மமாக அது ஏற்றுக்கொண்டது. தெய்வம், இறந்த முன்னோர், பிற மனிதர், விலங்குகள் ஆகியவற்றுக்கு மனிதன் தனது சேவையைச் செய்ய இந்த இல்லறம் வழிவகுக்கிறது. தனது குடும்பத்துடன் சமுகத்திற்குச் செய்ய வேண்டிய சேவையையும் இது உள்ளடக்குகிறது.

திருமணநாளில் மணமகனும் மணமகளும் எடுத்துக் கொள்ளும் தீர்மானங்கள் இவற்றையே குறிக்கின்றன. அத்துடன் தங்கள் சந்ததி வளர்வதற்கு குழந்தைகளைப் பெறுவதும், அவர்களுக்கு வழிகாட்டி முறைப்படி தங்கள் குடும்பப் பெறுமதிகளையும் பண்பாட்டினையும் அவர்கள் தொடர்ந்து பேணுவதை உறுதி செய்வதும் இல்லறத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.

திருமணத்துடன் ஆரம்பமாகும் இல்லறம் ஒருவருக்கு மனித இனத்தை நேசிப்பதற்கான அடிப்படைப் பயிற்சியை வழங்குகிறது. கணவன் மனைவியிடையே ஏற்படும் அன்பு குழந்தைகளில் விரிவடைந்து சமுகம், மனித இனம் என்று விசாலிக்க இல்லறம் உரிய பயிற்சியை வழங்குகிறது. இதனாலேயே இல்லறம் எல்லா தர்மங்களுக்கும் அடிப்படையாக அமைகிறது. கணவனுக்கும் மனைவிக்குமிடையே கருத்தொருமித்த நீடித்த அன்பு ஏற்பட்டாலேயே இவையனைத்தும் சாத்தியமாகும்.

இதனாலேயே இந்து சமயத்தில் திருமணம் என்பது வாழ்வின் முக்கிய கட்டமாகக் கருதப்பட்டது, இன்றும் கருதப்படுகிறது. அதன் காரணமாகவே அந்த உறவு மிக நீண்ட கால உறவாகக் கருதப்பட்டு வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதற்குப் பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நினைத்தவுடன் வந்து நினைத்தவுடன் பிரிந்து போகக்கூடிய உறவாக அது கருதப்படவில்லை.

அது நிரந்தரமானதாக, அதே சமயம் சுமுகமாக ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்புடன் வாழக்கூடிய ஒன்றாகக் கருதப்பட்டது. திருமணம் என்பது இரு மனங்களை மட்டுமன்றி இரு குடும்பங்களை ஒன்றுபடுத்தக்கூடிய வகையில் அமைவதால் அதன் உறுதிப்பாடு நன்கு நிலை நிறுத்தப்படுகிறது.

திருமணத்தின் அடிப்படைக்கரு அப்படியே இருக்கும் பட்சத்தில் சில சின்னச் சின்ன  மாற்றங்கள் ஏற்படுவதை யாரும் பெரிதாக அலட்டிக்கொண்ட மாதிரியும் தெரியவில்லை.

கூகுள் பற்றி நீங்கள் அறியாதவை..

இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரும் முதலில் கற்றுக்கொள்ளுவது கூகுள் பற்றி தான்.கூகுள் நிறுவனத்திற்கு உலகில் உள்ள அனைத்து தகவல்களும் அத்துப்படி. எதனைக் கேட்டாலும் இணையத்திலிருந்து தேடி எடுத்துத் தரும் கூகுள்.

இங்கு கூகுள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பல ருசிகரமான தகவல்களைக் காணலாம்.


1. கூகுள் தேடுதல் தளத்தில் உள்ள சர்ச் இஞ்சினுக்கு, இந்நிறுவனத்தினை நிறுவிய லாரி பேஜ் மற்றும் பிரின் இட்ட பெயர் பேக்ரப் (BackRub).

2. கூகுள் நிறுவனத்தில், முதல் முதலாக நியமிக்கப்பட்ட அலுவலர் பெயர் கிரெய்க் சில்வர்ஸ்டெய்ன் (Craig Silverstein) ஆவார்.

3. கூகுள் நிறுவனத்தின் முதல் அலுவலகம் இன்டெல் நிறுவன மேனேஜர் வீட்டில் இருந்த கார் ஷெட்டில் இயங்கியது.

4. ஓர் இணைய தளத்தின் தரத்தினை அளக்க பேஜ் ரேங்க் (Page Rank)என்ற அலகினை கூகுள் பயன்படுத்துகிறது.

5. ஜிமெயிலை உருவாக்கிய கூகுள் பொறியாளர் பால் புக்ஹெய்ட் (Paul Buchheit). இவர் தான் கூகுள் நிறுவனத்தின் புகழ் பெற்ற "Don't be evil" என்ற வாசகத்தைக் கொண்டு வந்தவர்.

6. கிராண்ட் சென்ட்ரல் (GrandCentral) என்ற நிறுவனத்தினைக் கையகப்படுத்தி, கூகுள், கூகுள் வாய்ஸ் (Google Voice) என்ற சேவையைக் கொண்டு வந்தது.

7. கூகுள் நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டம் Google I/O என அழைக்கப்படுகிறது.

8. இந்த ஆண்டு Google I/O கூட்டத்தின் போது, இதன் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி பிரின், ஸ்கை டைவிங் செய்து, உலகத்தில் உள்ள பத்திரிக்கைகளில் செய்தியாக இடம் பெற்றார்.

தொண்டைச் சளிக்கு ஓமம்!


ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் சுமார் 2 - 2 1/2 மணி நேரத்திற்கு மூக்கிலிருந்து நீராக வடிகிறது. தொண்டையில் கபம் கட்டிக் கொள்கிறது. சீரணமும் தாமதமாகிறது. தும்மலுடன் கபம் வெளியேறுகிறது. இது எதனால்? இது மாற என்ன சாப்பிடலாம்?

சீரகம், பெருஞ்சீரகம், ஓமம், கிராம்பு, ஏலக்காய் விதை இந்த ஐந்தையும், ஒரு தளிர் வெற்றிலையின் நடுநரம்பும், கீழ்ப்பகுதியையும் நீக்கிவிட்டு, அதில் சுருட்டி, ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் வாயில் அடக்கி நன்றாக மென்று சாப்பிடவும்.

சாப்பாட்டுக்குப் பிறகு, கபம் உற்பத்தியாவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைத்ததன்மை போன்ற குணங்கள் நிறைந்த கபம் எனும் தோஷமானது, உணவிற்குப் பிறகு உங்களுக்குக் கூடுவதால், மூக்கிலிருந்து நீராகவும், தொண்டைக் கபம், தும்மல் போன்ற உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. மேற்குறிப்பிட்ட ஐந்தும், வெற்றிலையுடன் சேர, இந்தக் குணங்களுக்கு நேர் எதிராகச் செயல்பட்டு, கபத்தைக் குறைக்கின்றன.

மேலும் இவை அனைத்தும் பசியைத் தூண்டிவிடுவதால் உங்களுடைய செரிமானத்தின் தாமதம் விரைவில் குணமாகிவிடும். இவை மூலம் உட்கொண்ட உணவு செரித்துவிடுவதால் அகம் மலர்கிறது. செரிப்பைத் துண்டுவதாலேயே சீரகத்திற்கு, சீர்அகம் என்று பெயர். சாப்பாட்டுக்குப் பிறகு சீரகம் சாப்பிட்டால் வெகுட்டல், உமட்டல், வயிற்று உப்புசம், உளைச்சல், வயிற்று கனம் முதலிய ஜீரண உபாதைகள் நீங்கும்.

உண்ட களைப்பு நீங்க, வாயில் நீரூற்று நிற்க 5, 6 சோம்பு விதைகளை மென்று சாப்பிடுவது வழக்கம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நுரைத்த கபத்துடன் காணும் இருமல் முதலியவற்றில் இது நன்கு உதவும். வாசனையுடன் கூடிய கார்ப்பும் இனிப்பும் உள்ள விதை.

ஓமம் கபத்தைப் பிரித்து நாட்பட்ட இருமல், மூச்சிரைப்பு, கபம் வெளிவருவதற்காகக் கடுமையாக இருமுவது, இருமி இருமிக் கடைசியில் மிகக் கஷ்டப்பட்டுச் சிறிது கபம் வெளியாவது போன்ற கஷ்டங்களை நீக்கிவிடும். ருசியின்மை, பசி மந்தம், ஜீரண சக்திக் குறைவு, வயிற்று உப்புசம், வயிறு இறுகி கட்டிக் கொள்ளுதல், வயிற்று வலி, கிருமியால் வேதனை போன்றவற்றிற்கு ஓமமும் உப்பும் சேர்த்த சூரணத்தைச் சாப்பிடும் வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் கிராமங்களில் பழக்கத்திலுள்ளது.

பாவபிராகர் எனும் முனிவர் கிராம்பைப் பற்றி வெகுவாகப் புகழ்கிறார். காரமும் சிறிது கசப்பும் நிறைந்த அது, எளிதில் செரிப்பது. கண்களுக்கு நல்லது, குளிர்ச்சியானதாக இருந்தாலும் ருசி, பசியைத் தூண்டிவிட்டு கப பித்த ரத்த உபாதைகளை அகற்றக் கூடியது; மூச்சிரைப்பு, இருமல், விக்கல், க்ஷயரோகங்களை நீக்கக் கூடியது என்று தெரிவிக்கிறார். தன்வந்தரி நிகண்டுவில் இதயத்திற்கு நல்லதும், பித்தத்தைக் குறைப்பதும், விஷத்தை முறிக்கக்கூடியதும், விந்துவை வளர்ப்பதும், மங்களகரமானதும், தலையைச் சார்ந்த உபாதைகளை நீக்கக் கூடியது என்றும் கிராம்புவைப் பற்றி மேலும் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஏலக்காய் ருசி, பசி, ஜீரணச் சக்தி தரும். உடற்சூட்டைப் பாதுகாக்கும். வாயில் நீர் ஊறுதல், நாவறட்சி, வியர்வையுடன் கூடிய தலைவலி, வயிற்றில் கொதிப்பு, மலத்தடை, காற்றுத்தடை, வாந்தி, உமட்டல், சிறுநீர்ச் சுருக்கு, உஷ்ணபேதி, நெஞ்சில் கபக்கட்டு உள்ள போது ஏலத்தின் விதையைச் சுவைக்கலாம்.

வெற்றிலை, உணவிற்குப் பின் வாயின் சுத்தத்திற்கும் ஜீரணத்திற்கும் உதவும், உமிழ்நீர் சுரப்பைக் கட்டுப்படுத்தும். காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி முன்னும் பின்னும் துடைத்துச் சுத்தமாக்கிப் பின் உபயோகிப்பர்.

அதனால் இவற்றை உபயோகித்து நீங்கள் விரைவில் கபத்தின் உபாதையிலிருந்தும், மந்தமான பசியிலிருந்தும் விடுபடலாம்.

விறு விறு வேகத்தில் விக்ரம் பிரபு!

 

அறிமுகமான 'கும்கி' படத்தில் நடித்து ஆஹா என பெயர் வாங்கினார் விக்ரம் பிரபு.

தற்போது விக்ரம் பிரபு நடித்த 'இவன் வேற மாதிரி ' டிசம்பர் 13ல் ரிலீஸ் ஆகிறது. 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணனின் அடுத்த படம் என்பதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்தை அடுத்து விக்ரம் பிரபு இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் 'அரிமா நம்பி' படத்தில் ப்ரியா ஆனந்துடன் நடிக்கிறார்.

'தூங்கா நகரம்' கௌரவ் இயக்கும் 'சிகரம் தொடு' படத்தில் மோனல் கஜ்ஜாருடன் டூயட் பாடிக்கொண்டிருப்பவருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.

'கழுகு', 'சிவப்பு' படங்களை இயக்கிய சத்யசிவா அடுத்து இயக்கும் 'தலப்பாகட்டி' படத்தில் விக்ரம் பிரபுதான் ஹீரோ. 'ஹரிதாஸ்' இயக்குநர் ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கும் அடுத்த படத்திலும், எழில் இயக்கும் அடுத்த படத்திலும் விக்ரம் பிரபு நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் வாய்ப்புகளால் உற்சாகத்தில் இருக்கிறார் விக்ரம் பிரபு. கமிட் ஆன படங்களை சீக்கிரம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதால் விறு விறு வேகத்தில் பயணிக்கிறார்.

தெரிந்துகொள்ளுங்கள் - 1

* இரண்டாம் உலகப் போர் ஆறு ஆண்டுகள் நடைபெற்றது.

*  ஆறு கி.மீ. வேகத்தில் வீசும் காற்றுக்குப் பெயர்தான் தென்றல்.

*  கரடியின் கர்ப்பகாலம் ஆறு மாதங்கள்.

*  வைரத்துக்கு ஆறு பட்டைகள் தீட்டப்படுகின்றன.

*  நீரைவிட ஆறு மடங்கு அடர்த்தி உள்ளது இரத்தம்.

*  கழுகால் ஆறு கி.மீ. தூரம் வரை சிறகுகளை அசைக்காமல் பறக்க முடியும்.
 
*   தமிழ்நாட்டில் முதன்முதலில் பெண்கள் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

*  தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சொந்த ஊர் உத்தமதானபுரம் (தஞ்சை மாவட்டம்).

*  தமிழ்நாட்டில் பத்திரிகை காகித நிறுவனம் உள்ள ஊர் } காகிதபுரம், திருச்சி மாவட்டம்.

*  சென்னை மாவட்டத்தில் முதன்முதலில் பட்டம் பெற்றவர் சி.வி.தாமோதரம் பிள்ளை என்பவர்.

*  டில்லியை ஆண்ட கடைசி மன்னன் பிருதிவிராஜ் சவுஹான்.

*  ஆங்கிலத்தில் பல நாடகக் காவியங்களைப் படைத்த ஷேக்ஸ்பியருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

*  இங்கிலாந்து அரசியின் காருக்கு நம்பர் பிளேட் கிடையாது.

*  ஒட்டகம் பத்து நிமிடத்தில் 100 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

*  உலகிலேயே சினிமா தியேட்டர்கள் இல்லாத நாடு சௌதி அரேபியா.

* உலகிலேயே அதிகமான மக்களால் பேசப்படும் மொழி சீனம். சீனாவின் மக்கள் தொகையே இதற்குக் காரணம் என்றாலும் ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள பல நாடுகளிலும் சீன மொழி பேசும் மக்கள் பரவியிருக்கிறார்கள்.

* இருமொழி தட்டச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் வாதம்ஷோல்ஸ் என்ற அமெரிக்கர் ஆவார். 1867-ம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது.

*   சுறா மீனின் தோலையே உப்புத் தாளாகப் பயன்படுத்தும் தச்சர்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ளனர்.

*  ஆப்பிரிக்க நாட்டு எருமைகள் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.

*  வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டைகளை இடும்.

*  மீனின் இதயத்தில் இரண்டு அறைகள் மட்டுமே இருக்கும்.

*  பறவைகள் சில நேரங்களில் முறிந்த தமது சிறகுகளைத் தாமாகவே சரி செய்து கொள்ளும் திறன் உடையவை.

*  உலகிலேயே உப்புச் சுவை குறைவாக உள்ள கடல் பால்டிக் கடல்தான்.

*  சுறா மீனின் கண்கள் இருட்டில்கூட பளிச்சென்றே இருக்குமாம்.

*  திமிங்கிலம் பாலூட்டி வகையைச் சேர்ந்தது. தன் குட்டிகளுக்கு தாய் திமிங்கிலம் நேரடியாகப் பால் ஊட்டுவதில்லை. கடல் நீரிலேயே பாலைச் சுரந்துவிடும். குட்டிகள் நீரிலிருந்து தாய்ப் பாலை மட்டும் பிரித்து அருந்திப் பசியாறுமாம்.

சுறா மீனின் தோலையே உப்புத் தாளாகப் பயன்படுத்தும் தச்சர்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ளனர்.

* ஆப்பிரிக்க நாட்டு எருமைகள் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.

* வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டைகளை இடும்.

* மீனின் இதயத்தில் இரண்டு அறைகள் மட்டுமே இருக்கும்.

* பறவைகள் சில நேரங்களில் முறிந்த தமது சிறகுகளைத் தாமாகவே சரி செய்து கொள்ளும் திறன் உடையவை.

* உலகிலேயே உப்புச் சுவை குறைவாக உள்ள கடல் பால்டிக் கடல்தான்.

வந்தே விட்டது நமக்கான பேட்டரி ஹெலிக்காப்டர் ! வீடியோ!




வோலோகாப்டர் விசி 200……. கடைசியில் வந்தே விட்டது பேட்டரி ஹெலிக்காப்டர் – குழந்தைங்க விளையாடறது இல்லை உண்மையிலே இரண்டு பேர் போற ஹெலிக்காப்டர். சுத்தமா சத்தமே கேட்காது – புகை மாசு கிடையாது. செங்குத்தாக மேலே எழும்பும் கீழே இறங்கும். இதை வீடியோ கேம் ஜாய் ஸ்டிக் மாதிரி வச்சி ஆப்பரேட் பண்ணினா ஓகே

இபபோதைக்கு 1 மணி நேர சிங்கிள் சார்ஜ்ல போறது போல பண்ணியிருக்காங்க. அடுத்து 6 மணி நேரம் வரை பறக்க வைக்க ரெடி பண்றாங்க.

இதில் அதிக செலவு வைக்கும் பொருட்களும் இல்லை – அதே சமயம் லைட் கார்பன் பாடியில செஞ்ச இது அனேகமா 5 லட்சத்துக்குள்ளத்தான் ஆகும்னு நல்ல தெரிஞ்சவங்க சொல்றாங்க என்ன ஹாட்டு மேட்டர் தானே….. இந்த வீடியோக்களை  பாருங்க…..

பெண்கள் வாயாடிகள் ஆவது நல்லது!

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.

நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பெண்களின் உரையாடல் பெரும்பாலும் வறட்டு உரையாடலாய் இருப்பதில்லை. சிரிப்பும், கேலியும், கிண்டலும், உற்சாகமும் என உலகத்தின் மிக முக்கியமான பணி உரையாடல் என்பது போல அவர்கள் அதில் ஒன்றி விடுவார்கள்.

ஆண்கள் பலருக்கும் இந்த கலை வாய்ப்பதில்லை. “நலமா ?” என ஆரம்பிக்கும் உரையாடல் “நல்லா இருக்கேன்” என்ற பதிலைக் கேட்டபின் எப்படித் தொடர்வது என தெரியாமல் நொண்டியடிக்கும்.

அதனால் எழுகின்ற பொறாமையோ என்னவோ “ இந்தப் பெண்களே இப்படித்தான், யாரையாவது பார்த்தால் போதும் மணிக்கணக்காய் பேச ஆரம்பித்து விடுவார்கள்” என ஆண்கள் அடிக்கடி அலுத்துக் கொள்கிறார்கள்.

இப்படி மனம் விட்டு உரையாடுவதும், நண்பர்களுடன் பேசி மகிழ்வதும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது எனும் புதிய ஆராய்ச்சி ஒன்றை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டு கதை பேசும் பெண்களின் மனதில் இன்னும் கொஞ்சம் இன்பத்துப் பால் வார்த்திருக்கிறார்கள்.

மனித உடலிலுள்ள புரோகெஸ்ட்ரோன் எனும் ஹார்மோன் மன அழுத்தத்தையும், கவலை, பதட்டம் போன்றவற்றையும் குறைக்கக்கூடிய தன்மை உடையது. மனம் விட்டுப் பேசி சிரித்து உரையாடும் பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் அதிக அளவில் இருப்பதாகவும், இதுவே பெண்களின் மன மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவதாகவும் அவர்கள் மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.

இத்தகைய உரையாடல்கள் வெறுமனே பொழுது போக்காக மட்டும் அமைந்து விடாமல் பெண்களுடைய நட்பு இறுக்கத்துக்கும், உதவும் மனப்பான்மைக்கும் கூட துணை செய்கிறதாம்.

ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் தொலைக்காட்சித் தொடர்களில் மாலை நேரம் முழுவதும் செலவிடும் பெண்களுக்கு உரையாடலுக்காய் செலவழிக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது என்பது கண் கூடு. அத்தகைய சற்றும் பயன் தராத தொலைக்காட்சித் தொடர்களை விலக்கி விட்டு ஆரோக்கியமான உரையாடலுக்குப் பெண்கள் திரும்ப இந்த ஆராய்ச்சி அழைப்பு விடுக்கிறது.

ஆர்யாவுக்கு ஜோடியான ஸ்ருதி!


'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இயக்கிய மகிழ்திருமேனி தற்போது புதிய படத்தை இயக்குகிறார். இதில் ஆர்யாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். படத்துக்கு 'வாடி வாசல்' என டைட்டில் வைத்திருக்கிறார்.

'வாடிவாசல்' என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாகும். அதிரடி ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு படமான இப்படம் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்குமாம்.

 ‘நான் அவன் இல்லை’, ‘அஞ்சாதே’, ‘மாப்பிள்ளை’, ‘போடா போடி’ ஆகிய படங்களை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் இப்படத்தைத் தயாரிக்கிறார்.'வாடி வாசல்' படப்பிடிப்பு  விரைவில் கோவாவில் தொடங்க இருக்கிறது.

அன்புக்கு நான் அடிமை - கவிதை!


அன்புக்கு அடிமையாகாத ஜீவன்கள்

 உலகில் எதுவுமே...இல்லை...!

மிருகத்தை மனிதன்

 மிருகமாக பார்க்கிறான்....

மனிதனை மிருகங்கள்...

பல நேரம்...

அன்பாகவே பார்க்கின்றது...!

எந்த உயிரினமும்...

தன்னிடம் அன்பு காட்டும் வரை..

அன்பையையே ..

அதுவும் வெளிப்படுத்துகிறது...!

 

கின்னஸ் ரிக்கார்ட் விக்கிபீடியா புகைப்பட போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சை கோவில்!

உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளவிக்கிபீடியா நடத்திய “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டியில் “சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தின் எம்.டெக். மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார்.

nov 27 -wikki _AWARD_photo

கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிபீடியா உலகம் முழுவதும் 300 மொழிகளை தன் சேவையை வழங்கி வருகிறது.


விக்கிபீடியா என்பது ஏதாவது ஒரு தகவலை அறியும் இடம் என பெரும்பாலானவர்கள் நினைத்து கொண்டு இருக்கலாம்.


 இது உண்மை என்றாலும் விக்கி பீடியாவில் மேலும் பயனுள்ள வசதிகளும் அடங்கி உள்ளது. அவைகள் என்னென்ன எப்படி உபயோகிப்பது என கொஞ்சம் பார்க்கலாம்.

1. விக்சனரி:

நாம் தற்பொழுது பேசும் தமிழில் தமிழை விட ஆங்கிலமே அதிகம் வருகிறது. ஆங்கில சொற்களுக்கு விளக்கத்தை தேடிய காலம் போய் தமிழ் சொற்களுக்கே சரியான பொருள் தெரியாத நிலையில் உள்ளோம்.

நம்மை போன்றவர்களுக்கு பயன்படும் நோக்கில் ஆரம்பிக்கப்பட் சேவை தான் இந்த விக்சனரி. விக்கி + டிக்சனரி என்பதன் சுருக்கமே விக்சனரி.

இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு பொருள் அறிய விரும்பும் பெயரை டைப் செய்து என்டர் கொடுத்தால் அந்த வார்த்தைக்கான அர்த்தம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வரும் மற்றும் அந்த வார்த்தையை வாக்கியத்தில் எப்படி பயன்படுத்துவது போன்ற பல தகவல்கள் இதில் கிடைக்கிறது.

இந்த தளத்திற்கு செல்ல

 – http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

2. விக்கியினங்கள்

இந்த தளத்திற்கு செல்ல

 -http://species.wikimedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D


விலங்கினம், தாவரஇனம், பூஞ்சையினம், பாக்டீரியங்கள், ஆர்க்கீயா, புரோடிஸ்டா போன்றவைகளை பற்றி விரிவாகவும் அழகு தமிழிலும் அறிய ஏற்ப்படுதப்பட்ட சேவை இந்த விக்கியினங்கள் என்ற சேவை. மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். இப்பொழுது தமிழில் கட்டுரைகள் காணப்படவில்லை கூடிய விரைவில் பகிரப்படும்.
ஆனால் உயிரினங்களை பற்றி ஆங்கிலத்தில் 3 லட்சம் கட்டுரைகள் உள்ளன.



3. விக்கி நூல்கள்

விக்கிபீடியாவில் உள்ள மற்றொரு பயனுள்ள சேவை விக்கி நூல்கள். தமிழ் நூல்கள் குறைந்த அளவே உள்ளன. இருந்தாலும் வாசகர்களிடமும், ஆஸ்ரியர்களிடமும், மாணவர்களிடமும் நூல்களை பதிவேற்ற உதவி கோருகிறது விக்கிபீடியா. அனைவரும் கைகொடுத்தால் எண்ணற்ற தமிழ் நூல்களை இங்கு காண முடியும். அனைவரும் உதவினால் தமிழ் நூல்களை அழிவில் இருந்து காப்பாற்றலாம்.

தேவை என்றால் புத்தகங்களை PDF கோப்பில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.



இந்த தளத்திற்கு செல்ல

 – http://ta.wikibooks.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D 

4. விக்கிமேற்கோள் (Quotes)

அறிஞர்கள், தத்துவ ஞானிகள், பிரபல நபர்கள் போன்றவர்கள் தங்கள் அனுபவங்களில் இருந்து கற்றதை சுருக்கமாக கூறுவது தான் மேற்கோள்கள். இந்த மேற்கோள்களை அழகு தமிழில் வழங்கியவர் பெயருடன் அளிப்பது தான் விக்கிமேற்கோள் சேவை.

இதற்கான தளத்திற்கு செல்ல

:http://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

இதற்கிடையில்தான் “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டி ஒன்றையும் ஆண்டு தோறும் நடத்துகிறது. இவ்வருடம் இந்தப் போட்டிக்கு 11,786 புகைப்படங்கள் சென்றன. இதில், கார்முகில்வண்ணன் எடுத்த இந்தப் பரிசுக்குரிய புகைப்படம், புகழ்பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் முழுத் தோற்றத்தையும் அழகாக பிரதிபலிக்கும்படியாக எடுக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியாவின் இந்தப் போட்டி பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள், பன்னாட்டு நடுவர்களால் தேர்வு செய்யப்படுகிறது.

பல நாடுகளிலிருந்து வெற்றி பெறுபவர்கள் லண்டனில் ஆகஸ்ட் 2014-ல் நடைபெறும் விக்கிமீடியன் மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்தப் போட்டி உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்சங்கின் சூப்பர் டெக்னிக்: விழி பிதுங்கிய ஆப்பிள்!


 அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனம் வாதாடியது.

கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிமுறைகளை மீறி விட்டதாகவும் அதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு 100 கோடி டொலர்(6,200 கோடி) அபராதமாக அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த புதன்கிழமை கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்துக்கு 30 லொறிகள் வந்துள்ளது.

இதனை பார்த்த செக்யூரிட்டி முகவரி மாறிவந்துள்ளதாக வாதாடியுள்ளார்.

அதற்கு சரியான முகவரி தான் என்று கூறி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்குக்கு ஒரு போன் வந்துள்ளது.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ குவான் கியூன் பேசினார், உங்களுக்கு தர வேண்டிய நஷ்ட ஈட்டைத்தான் அனுப்பியிருக்கிறோம், பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

அத்தனை லொறிகளிலும் சில்லரை காசுகள் குவிந்திருந்தது, அனைத்தும் 5 சென்ட் நாணயங்கள்.

மொத்தம் 2 ஆயிரம் கோடி காசுகள். ஆப்பிள் நிறுவனத்தின் குடோன்களில் 30 டிப்பர் லாரிகளில் இருந்தும் நாணயங்கள் கொட்டப்பட்டுள்ளன.

இதை எப்படி எண்ணுவது, எங்கே பாதுகாப்பாக வைப்பது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள்.

அகத்திக்கீரை சூப் - சமையல்!




 தேவையான பொருட்கள் :

அகத்திக்கீரை - 1 கட்டு

துவரம் பருப்பு - 2 ஸ்பூன்

 பச்சரிசி - 2 ஸ்பூன்

 பூண்டு - 10 பல்

 சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 2

கிராம்பு - 3

பட்டை - 1 சிறு துண்டு

 உப்பு, சீரகம் - 1/4 ஸ்பூன்

 மிளகுத்தூள் - தேவையான அளவு

 செய்முறை :

• அகத்திக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும்.

• தக்காளியை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• மேலே உள்ள எல்லா பொருட்களையும் (உப்பை தவிர)குக்கரில் போட்டு 4 தம்ளர் தண்ணீர் சேர்த்து 5 முதல் 6 விசில் வரும் வரை வைக்கவும்.

• பிரஷர் அட்ங்கியதும் ஒரு கரண்டியால் நன்றாக மசிக்கவும். பின் மேலும் 2 தம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும்.

• பின் வடிகட்டிய தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

• சூப் பவுலில் சூப்பை நிரப்பி மிளகுத்தூள் தூவி பறிமாறவும்.

நாகரிகம், அநாகரிகம் ஆநாகரிகம்!

 

"நம் திரைப் படங்களிலும் தொலைக்காட்சியிலும், நகைச்சுவை என்ற பெயரில் பின்பக்கத்தில் உதைப்பது, கஷ்கத்தைச் சொறிவது, ஒருவர்மேல் ஒருவர் துப்பிக் கொள்வது போன்ற அநாகரிகமான காட்சிகள் இப்போது மலிந்து வருகின்றன. எமிலிபோஸ்ட் மாதிரி பொதுவாழ்வில் நாகரிக நடைமுறைக்கு வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன
பொது வாழ்வில் நடத்தையை நாகரிகம், அநாகரிகம், ஆநாகரிகம் என மூன்று வகையாகப் பிரித்துக் குறிப்பிட்டிருக்கிறார்


உதாரணம்: 1.பொது இடத்தில் மூக்கை, காதை, பல்லை நோண்டாமல் இருப்பது நாகரிகம். நோண்டுவது அநாகரிகம். நோண்டுவது மட்டுமின்றி, விளைவை உருட்டி ஆராய்வது ஆநாகரிகம்!

2.புருவம், காது, மூக்கு உரோமங்களைச் சீராக வெட்டி வைத்திருப்பது நாகரிகம். வெட்டாமல், காடாக வளர்ப்பது அநாகரிகம். அவற்றை நீளமாக வளர்த்து, சீப்புப் போட்டு வாரிப் பின்னுவது ஆநாகரிகம்.

3.என்னதான் ஜலதோஷமாக இருந்தா லும், பொது இடங்களில் தும்மாமல், சிந்தாமல் கைக்குட்டையில் Ôஸ்க்Õகுவது நாகரிகம். மூக்கில் புல்லாக்கு போல் தொங்கவிடுவது அநாகரிகம். ‘ஹளார்Õ என்று 120 டெஸிபலில் தும்மி, ஜெட் வேகத்தில் பக்கத்தில் இருப்பவர் சட்டையில் சொல்லாமல் துடைத்து விடுவது ஆநாகரிகம்.

4.ஹெர்னியா போன்ற ஆபரேஷன் பற்றிப் பேசாமல் இருப்பது நாகரிகம். ஆபரேஷன் தழும்பைக் காட்டுவது அநாகரிகம். ஆபரேஷனில் நீக்கிய பாகத்தை ஜாடியில் வைத்திருந்து காட்டுவது ஆநாகரிகம்.

5.சுத்தமான சட்டை அணிவது நாகரிகம். கைக்குக் கீழ் வியர்வைக் கறை தெரிய, சட்டை அணிவது அநாகரிகம். அந்த வியர்வையை மற்றவர் எதிரில் பிழிவது ஆநாகரிகம்.

6.ஆபீஸில்... தூங்காமல் இருப்பது நாகரிகம். குறட்டைவிட்டுத் தூங்குவது அநாகரிகம். குறட்டையுடன் ஜொள்ளு விடுவது ஆநாகரிகம்.

7.அடக்கி வைத் திருந்து, வீட்டுக்குப் போய் சிறுநீர் கழிப்பது நாகரிகம். தெருவில் சுவர்மேல் சிறுநீர் கழிப்பது அநாகரிகம். அதில் டிசைன் போடுவது ஆநாகரிகம்.


8.விருந்தில், சாப்பாட்டில் தலைமுடி இருந்தால், பார்க்காமல் நீக்குவது நாகரிகம். எல்லோரும் பார்க்க, அதை எடுத்துப் போடுவது அநாகரிகம். அந்த ரோமம் யாருடையது என்று பெண்களிடம் விசாரிப்பது ஆநாகரிகம்.

9.அடிபட்ட புண் தெரியாமல் உடை அணிவது நாகரிகம். அடிபட்ட புண்ணைக் காட்டுவது அநாகரிகம். அதை வரக் வரக்கென்று சொரிவது ஆநாகரிகம்.

10.சாப்பிடும்போது பேசாமல் இருப்பது நாகரிகம். வாய் நிறைய போண்டா சாப்பிட்டுக்கொண்டே பேசுவது அநாகரிகம். பாதி சாப்பிட்ட போண்டாவை எடுத்து, சற்று நேரம் கையில் வைத்துக்கொண்டு பேசுவது ஆநாகரிகம்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது நாகரிகம். சுட்டிக்காட்டுவது அநாகரிகம். படம் போட்டுக் காட்டுவது ஆநாகரிகம்!

சொத்து ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்!

 

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இருநபர்களுக்கு இடையிலா ன கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் முக்கிய  அளவுகோலாக பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்று விட்டது.
.
எனவேதான், இத்தகைய பரிமாற்றங் களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடு த்து வருகிறது. மன்னராட்சி காலத் தில் இருந்தே சொத்து  பரிமாற்றங்க ளை ஆவணத்படுத்துவது தொடர்பான பணிகள் நடை பெற்றுள்ளன.
.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங் கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும்  மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன. இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண் டு பதிவுத் துறை  ஏற்படுத்தப்பட்டது . 1899 ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறை வேற்றப்பட்டது. இத னை  தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்ற ப்பட்டது. 
.
இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்த டுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப் பட்டு வருகின்றன.
.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண் டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம்  ஆவணங்கள் பதிவுசெய்யபடுகின்றன. இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவண ங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டு கள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே  சார்ந் திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல  மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங் கள் எழுதும் முறையில் பல் வேறு மாற்றங்கள்  ஏற்பட் டுள்ளன.
.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவண ங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும்  விற்பவரும்  முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர் களின் ஆலோசனையாக உள்ளது. இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
.
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த் தைகள் இன்னமும் புரியாதவையாக வே உள் ளன.
.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன் படுத்தப்படும் பட்டா, சிட்டா, அடங்கல், கிராம நத்தம், கிராம தானம், தேவ தானம், இனா ம்தார், விஸ்தீரணம், ஷரத்து, இலாகா, கிரையம், வில்லங்க சான்று, புல எண், இறங்குரிமை, வாரிசுரிமை, தாய் பத்திரம், ஏற்றது ஆற்றுதல், அனு பவ பாத்தியதை, சுவாதீனம் ஒப்படைப்பு, ஜமாபந்தி, நன் செய் நிலம், புன்செய்நிலம், மற்றும் குத்தகை போன்ற வார்த்தைக ளும், அவற்றின் விளக்கங்களும் கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து அவற்றை படித்து தெரிந்து தெளிந்து கொள்ளுங்கள்
.
பட்டா:

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில்  வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
 .
சிட்டா:

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டு பாட்டில்  உள்ளது என்பது தொடர்பா ன விவரங்கள் அடங்கிய வருவாய் த்துறை ஆவணம்.

அடங்கல்:

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத் தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில்  உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
 
கிராம நத்தம்:


ஒவ்வொரு கிராமத்திலும் குடியி ருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப் பட்டுள்ள  நிலம்.
 .
கிராம தானம்:


கிராமத்தின் பொது பயன்பாட்டுக் காக நிலத்தை ஒதுக்குவது.
.
தேவதானம்:

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித் தல்.
 .

இனாம்தார்:


பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன் படுத்தும் சொல்.
 .
விஸ்தீரணம்:

நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
 .
ஷரத்து:

பிரிவு.
 .
இலாகா:

துறை.
 .
கிரையம்:

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவண படுத்துதல்.
 .
வில்லங்க சான்று:

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனைசெய்த அதன் உரிமையா ளர்,  அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்ப னை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
.
புல எண்:

நில அளவை எண்.
 .
இறங்குரிமை:

வாரிசுரிமை.
 .

தாய்பத்திரம்:


ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதை ய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்:


குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
 .

அனுபவ பாத்தியதை:


நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
 .
சுவாதீனம் ஒப்படைப்பு:

நிலத்தின் மீதான உரிமையை ஒப்ப டைத்தல்.
.
ஜமாபந்தி:

வருவாய் தீர்வாயம்.
 .

நன்செய்நிலம்:

அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்:


பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
 .
 
குத்தகை:


ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
.
இந்த வார்த்தைகளின் பயன்பாடு இருந்து வருகிறது.

ஒரு சிகரெட் உங்களிடம் பேசுகிறது!

 

புகையிலைக்கு குட்பை ……

ஒரு சிகரெட் பேசுகிறது

வெளுத்த என் உடல் பார்க்க அழகுதான்,

ஆனால் என் உடல் முழுதும் விஷம்,

வெளியில் தெரியாத விஷ்ம்.

அணுஅணுவாக அழிப்பேன் உங்களை,

அதில் எனக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி,

நானும் ஒல்லி

என்னை நாடுபவனும் ஒல்லியாவான்,

என் நட்பைப் பெற.

நான் முதலில் இன்பத்தைக் கொடுத்து

ஏமாற்றுவேன்,

என் வசமாவான் அவன்.

நானில்லாமல் அவனில்லை

என்ற நிலை வந்ததும்

அவனை வதைக்க ஆரம்பிப்பேன்.

விட்டில் பூச்சி விளக்கில் விழுவதுபோல்

என்னிடம் மாட்டுவார்கள்.

பின் தொலைந்தார்கள்,

புகை புகையாக வெளியே ஆனால்

உள்ளே புதைகிறார்கள் புகைக்குள்,

ஆனால் என்னிடம் ஒரு நல்லகுணம்.

முதலிலேயே.... என்னை நாடாதீர்கள்.

அபாயம்! என்று எச்சரிக்கை

விடுக்கிறேன்.

நல்லவனைக் காப்பாற்ற.

நுரையீரலைக் காப்பாற்ற,

அவனை சாவிலிருந்து காப்பாற்ற,

ஏன் எனக்கும் மனமுண்டே,

ஆனாலும் என் மேல் எல்லோருக்கும்

எத்தனை பாசம்

நூற்றி முப்பது கோடிகள்

என்னுடைய நண்பர்கள்.

ஒல்லியானாலும் எனக்கு எத்தனை வலிமை,

மனிதனே! உன் மன வலிமை விட

என் வலிமை பெரிதல்ல

விடுங்கள் என் நட்பை

பெறுங்கள் ஆரோக்கியத்தை.

ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?

அக்காலத்தில் எல்லாம் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வேண்டுமானால், பெயிண்ட் பிரஷ் தான் பயன்படுத்துவோம். ஆனால் தற்போது மிகவும் எளிமையான முறையில் வீட்டில் பெயிண்ட் அடிக்க ஸ்ப்ரே போன்ற ஒரு கருவி வந்துள்ளது. இப்படி வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால் நல்லதல்ல என்று பலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஏன் என்று தெரியுமா?

அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று வீட்டின் சுவற்றிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால், அது சீக்கிரம் போவதோடு, உடலுக்கு தீங்கையும் விளைவிக்கும். இங்கு அந்த ஸ்ப்ரே பெயிண்ட்டை எதற்கு பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் ஸ்ப்ரே பெயிண்ட் அடிப்பதை தவிர்த்திடுங்கள்.

ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?


* வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால், அதிலிருக்கும் கெமிக்கல்களின் நாற்றம் அவ்வளவு எளிதில் நீங்காமல் இருப்பதோடு, அந்த கெமிக்கல்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சுவாசக் கோளாறை ஏற்படுத்திவிடும்.

* ஸ்ப்ரே பெயிண்ட்டானது, சாதாரண பெயிண்ட்டை விட எளிதில் போகக்கூடியது.

* மேலும் இந்த ஸ்ப்ரே பெயிண்ட் மிகவும் விலை அதிகமானது. அதுமட்டுமின்றி, நம் மக்களின் மனதில் விலை அதிகமான பொருட்கள் நல்ல தரமாக இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்புகின்றனர். அதனால் தான் பலர் இதனைப் பற்றிய உண்மையை சொன்னாலும் கேட்க மறுக்கின்றனர்.

* ஸ்ப்ரே பெயிண்ட் தண்ணீரை அதிகம் உறிஞ்சக்கூடியவை. அதிலும் மழைக்காலங்களாக இருந்தால், இந்த பெயிண்ட் தண்ணீரை உறிஞ்சி வீட்டின் உள்ளே ஆங்காங்கு ஈரப்பதமாக வைத்திருக்கும். அதுமட்டுமின்றி, அந்த ஈரப்பதம் உலர்ந்துவிட்டால், அங்கு திட்டுகளாக காணப்படும்.

* குறிப்பாக ஸ்ப்ரே பெயிண்ட் நுரையீரலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. எனவே தான் ஸ்ப்ரே பெயிண்ட்டை பயன்படுத்த வேண்டாம் என்று பலர் சொல்கின்றனர்.

அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...கவிதை!

அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...

சொந்தம் இன்றி தொலைவில் நின்றாள்..

சொந்தம் கொண்டு தோளில் சாய்ந்தாள்.

பந்தம் தந்து, பாசம் தந்து, நேசமாக மனதில் நின்றாள்.

எந்தன் நெஞ்சை வென்று சென்றாள் - பின்

எதற்கும் இல்லை ஈடு என்றாள்..

என்னை விட்டு நீங்கி செல்லா, பிள்ளை தந்து

 எனக்கும் ஒரு தந்தை என்ற பெயரை தந்தாள்..

எந்தன் உயிர் போகும் வரை
 
 உந்தன் உயிர் நான் தான் என்றாள்.




எந்தன் தாயை நானும் கண்டேன் உந்தன் வடிவில்..

ஏனோ நானும், உந்தன்  தந்தை போல, மாறிவந்தேன்.

 மங்கை உன்னை கண்டபின்பு மாந்தனாக  மாறிவந்தேன்

மண்ணாக மாறிவிட்டேன்..

உன் கண்ணாக ஆகி விட்டேன்...

மாறாத காதல் கொண்டு,

தீராத ஆசைக்கொண்டு மணவாளன் ஆகி விட்டேன்,

பின் உன் உயிராக மாறிவிட்டேன்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top