.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 24 November 2013

மூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்?

Drumstick bark, root mukkarattai, umattan leaf, garlic and add equal amounts, grind on joint swelling parrup

முருங்கைப் பட்டை, மூக்கரட்டை வேர், ஊமத்தன் இலை, பூண்டு ஆகியவற்றை சம அளவில் சேர்த்து, அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப்  போட்டால், மூட்டு வீக்கம் கரையும். மூட்டு வலி குறையும். மூட்டு சம்மந்தப்பட்ட வாயு நோய் குணமாகும்.

வாயு தொல்லை நீங்க?
முருங்கைக் கீரையை கைப்பிடி அளவு எடுத்து இடித்து, அத்துடன் மிளகு, கொட்டை நீக்கிய கடுக்காய் பாதி, சீரகம், சேர்த்து, ரசம் வைத்து (சூப் போல)  வடிகட்டி, ஒரு டம்ளர் குடித்து வந்தால் பேதி நின்று விடும். மேலும் மலக்கட்டு, வாயு, வயிறு உப்புசம், உடல் பளு, உடல் உஷ்ணம், உடல் அசதி  ஆகிய பிரச்னைகள் நீங்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க?

முருங்கைக் கீரை, முருங்கைக் காய், முருங்கைப்பூ இம்மூன்றையும் உணவில் சேர்த்து, அடிக்கடி உண்டு வந்தால், நரம்பு தளர்ச்சி நோய் குணம்  ஆகும்.

நரித்தலை வாதம் பிரச்னைக்கு தீர்வு?

நரித்தலை வாதமென்பது கால் மூட்டுகளில் நரித்தலை போன்று வீங்கி வலி எடுக்கும். இந்தநோய்க்கு நரித்தலை வாதம் என்று பெயர் முருங்கைக்  கீரைகளை நீக்கி விட்டு, அதன் ஈர்க்கு மட்டும் எடுத்து கொண்டு, அதில் சிறிது முருங்கைப்பட்டை, மிளகு சேர்த்து அரைத்து, 3 டம்பளர் தண்ணீரில்  கலந்து, அது ஒரு டம்ளராகும் வரை சுண்டக் காய்ச்சி கசாயமாக ஆகும் வரை காய்ச்ச வேண்டும். காலை, மாலை இரு வேலைகளில் 250 மிலி வீதம்  சாப்பிட்டு வந்தால், கால் முட்டுகளில் ஏற்படும், வாதமும், நரித்தலை வாதமும் நீங்கும்.

முழங்கால் வாதம் ?


ஒருசில மனிதர்களுக்கு முழங்காலில் வாதநீர் தங்கியிருந்து தொந்தரவு கொடுக்கும். முழங்கால் வலிக்கிறது என்று கூறுவார்கள். அவர்கள் வாரம்  இருமுறை முருங்கைக்காயைக் சமையல் செய்து, நன்கு மென்று சாப்பிட்டு வந்தால், அவர்களின் முழங்காலில் உள்ள, வாதம் நீங்கும். முழங்காலில்  வாத நீர் தங்காது. காலில் தொந்தரவு இருக்காது.

எலுமிச்சை இலையை வெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து சுளுக்கு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சுளு வலி குறையும். அத்தி காயை நன்கு  அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி வலி குறையும். கால்கள் மிருதுவாகும்.

மூட்டு வலி குறைய விளக்கு எண்ணெய்யை நன்கு காய்ச்சி, ஒரு கப் ஆரஞ்சி பழச்சாற்றில் கலந்து தினமும் காலை யில் சாப்பிட்டு வந்தால் மூட்டு  வலி மறையும். பாதப்படை குறைய வினிகரை வெது வெதுப்பான நீரில் கலந்து பாதத்தை சுத்தம் செய்த பிறகு வினிகர் நீரை பாதத்தில் ஒத்திரம்  கொடுத்து வந்தால் பாதப்படை வராது.

இயற்கை தரும் ஆரோக்கியம்!

  Tontaippun decline: cittarattai take a powder to be demolished. If you eat this powder mixed with honey will tontaippun.

தொண்டைப்புண் குறைய: 

சித்தரத்தை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

தலைவலி குறைய: 


கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

மூட்டு வலிகுறைய: 


கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலிஉள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டுவலி குறையும்.

காதுவலி குறைய: 


கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்று போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்.

கண் உஷ்ணம் குறைய: 

வெள்ளை நத்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.

வாய்ப்புண் குறைய: 

பலா இலையை எடுத்து சிறியதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

அது என்ன குண்டலினி..?


அது என்ன குண்டலினி..? யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தவொரு வார்த்தையை உபயோகிக்காமல் இருக்க முடியாது. அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள்.

பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் "சிலை"ப் படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும்போதுதான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும்போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும். குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.

சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. (விரிவாக இதை எழுதினால் மனித உடலியல் பற்றிய கட்டுரையாகிவிடும் என்பதனால் சுருக்கமாக முடித்துவிட்டேன்.)

இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள். (கட்டுரையில் ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒரே பொருளாகக் கருத வேண்டுகிறேன்.) இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்களையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.

 
முதலில் மூலாதாரம். இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான். இந்த மூலாதாரச் சக்கரம்தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படியான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.


இரண்டாவது சுவாதிஷ்டானம். இது பிறப்புறுப்புக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த் தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.


மூன்றாவது மணிப்பூரகம். இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிக்கிறது.

நான்காவது அனாகதம். இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படைப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது. (அன்பு என்றால் எல்லோரும் ஏன் நெஞ்சைத் தொடுகிறார்கள்? காதலைக் குறிக்க இதயம் ஏன் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது?


ஐந்தாவது விசுக்தி. இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்துவது ஆகும்.

ஆலகால விஷம் அருந்திய சிவன் தொண்டையில் விஷம் தடுத்து நிறுத்தப்பட்டது விசுக்தி உச்ச நிலையில் தூண்டப்பட்டிருப்பதை குறிக்கவோ.

ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை). இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்துள்ளது. ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம்தான்.

இறுதியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்). இது உச்சந்தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம்தான். இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வதைப் போல் சொல்லப்படுகிறது.


(சிவபெருமானின் தலையில் பாம்பு இருப்பது தலையில் உள்ள சஹஸ்ரஹாரம் தூண்டப்பட்ட நிலையைக் குறிக்கவே.) 

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்படுவது இல்லை. பெரும்பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவதுதான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலினியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும்போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.

அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள்தான் யோகாவும் தியானமும். பொதுவாகவே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன்கள், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கொண்டு வரும்போது புலன்கள் தாண்டிய ஓர் அனுபவத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது. இந்தவொரு அனுபவத்தை அடைவதே மனித வாழ்வின் இலட்சியம் என்று விவேகானந்தர் பல இடங்களில் குறிப்பிட்டதுண்டு.


நம் வாழ்வில் எதை அடைவதாயினும் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத்தான் அடைய முடியும். இல்லாத ஒன்றை வைத்து எதையும் அடைய முடியாது. நம்மிடம் என்ன உள்ளது? உடல் உள்ளது, மனம் உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது. இந்த நான்கில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் நாம் எந்தொவொரு செயலும் (கர்மா) செய்ய முடியும்.


உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம். மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம். உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம். உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம்.


இந்த நான்கு யோக முறைகளில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர் சமூத்தோடு இணைத்து இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் இவை நான்கையும் சரியான அளவில் கலந்து பயிற்சி பெறுபவர் சமூகத்தில் இருந்தே யோக நிலையை அடையலாம். இந்த நான்கையும் கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசப்படும். அதற்குதான், "குரு" என்பவர் தேவை. ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத் துறந்தால்தான் அடைய முடியும் என்ற எண்ணம் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம். 

இளையராஜாவுடன் மீண்டும் பணியாற்றுவாரா வைரமுத்து?

 

இளையராஜாவுடன் பணியாற்றுவதற்கு காலம் கடந்து விட்டதாக நினைக்கிறேன் என்று பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார்.

விஜய் டி.வியில் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பாடலாசிரியர் வைரமுத்து கலந்துக் கொண்டார். அப்போது அவரிடம் "மீண்டும் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அக்கேள்விக்கு, "காலம் கடந்து விட்டதாக நினைக்கிறேன். விருப்பங்கள் வேறு, யதார்த்தங்கள் வேறு. இப்போது கூட அவரது இசையை நேசிக்கிறேன். பழைய பாடல் கேட்கிறபோதெல்லாம் நெகிழ்ச்சி ஏற்படுகிறது. பார்த்து பேசலாம் என்று கூட தோன்றுகிறது.

ஆனால், சில சின்னச் சின்ன தடைகள் பெரிய பெரிய சுவர்களை எழுப்புகின்றன. அந்தச் சுவர்கள் இல்லை என்று நான் தீர்மானிக்கிற போது, அது சாத்தியமாகலாம். ஒன்று, அந்த சுவர்கள் இடியலாம். அல்லது சிலர் இடிக்கலாம். அதன் பிறகு உறவுகள் எப்படி சாத்தியமாகிறது என்று பார்ப்போம்.

என்னோடு சேர்ந்து தான் வெற்றி பெற வேண்டும் என்கிற நிலையில் அவர் இல்லை. அவரோடு சேர்ந்து தான் பணியாற்றி ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையிலும் நான் இல்லை. ஆனால், காலம் என்ன சொல்கிறதோ, அதைக் கேட்டு கட்டுப்படுவதற்கு நான் காத்திருப்பது மாதிரியே அவரும் காத்திருந்தால், சாத்தியமாகலாம்.

நாங்கள் இனிமேல் இணைந்து பணியாற்றினால், எண்பதுகளில் நாங்கள் கொடுத்த பாடல்களைப் போல நாங்கள் எழுதிக் கொடுத்து இசையமைத்தால், அது பழைய பாடல் என்று சொல்லுவார்கள் தமிழர்கள். அதை விட்டு விட்டு நவீன பாணியில் அவர் இசையமைத்து, நவீன மொழியில் நான் பாட்டெழுதி, நவீனமான முறையில் படமாக்கப்பட்டால், எங்கே போயிற்று இவர்களின் பழைய ஜீவன் என்று கேட்பார்கள். இந்த இரண்டு பழிகளுக்கு மத்தியில், நாங்கள் தனித்திருப்பதே வெற்றி!’’ என்று கூறியுள்ளார்.

பேஸ்புக் – டுவிட்டர்களை கட்டுபடுத்த சட்டம்!- உளவு துறை யோசனை!

 nov 24 - i b facebook

சமீப காலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வேகம் காரணமாக வீட்டில் இருந்த படியே பல சமூக விரோத செயல்கள் பரப்பப்படுகிறது.நாட்டில் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு ஒரு காரணமாக இருந்து வருவதும், அவதூறு பரப்புவதும், தேவையற்ற சர்ச்சையை கிளப்புவதுமாக நாட்டிற்கு ஒரு அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை , இந்திய சட்ட வரைமுறைக்குள் கொண்டு வரவேண்டும் என உளவுத்துறை பரிந்துரைத்துள்ளது.


இது தொடர்பாக உளவுத்துறை ( ஐ.பி.) பிரதமருக்கு அனுப்பியுள்ள யோசனை குறிப்பில் “பிறநாடுகளில் பின்பற்றப்படும் விதிகள் வகுத்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஐ.பி,. டைரக்டர் ஆசீப் இப்ராகீம் கூறுகையில், “சமீப காலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வேகம் காரணமாக வீட்டில் இருந்த படியே பல சமூக விரோத செயல்கள் பரப்பப்படுகிறது. இது போன்ற சைபர் குற்றங்கள் தடுப்பது, சவால்களை எதிர்கொள்வது குறித்து அனைவரும் கலந்து பேசி ஆராய வேண்டிய நிலையில் உள்ளோம். சமீபத்திய கலவரம் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவியதை பார்த்து இந்திய பாதுகாப்பு துறையினர் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக இருந்தனர்.

இதற்கு வெளிநாட்டு சட்டவிதிமுறைகள் தங்குதடையின்றி பெறும் வகையில் உள்ளது.இது தொடர்பாக இந்தியாவில் இன்னும் சட்டம் உரிய முறையில் வகுக்கப்படவில்லை. இத்தகைய சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்யும் வெளிநாட்டிவரையும் இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவராக கொண்டு வந்தால் மட்டுமே இந்தியாவில் சைபர் குற்றங்கள் கட்டுப்படுத்த முடியும்.” என்று அவர் தெரிவித்தார்.

இந்த யோசனை குறித்து கம்ப்யூட்டர் எமர்ஜன்ஸி ரெஸ்பான்ஸ் டீம் இந்தியா டைரக்டர் ஜெனரல் குல்சன் ராய் “உளவுத்துறை அதிகாரி கூறுவது போல் , சட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்தால், சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவீட்டர் மூலம் கருத்துக்கள் சொல்லும் வெளிநாட்டவர்கள் முதல் அனைத்து வெப்சைட்டுகளும் இந்திய சட்டத்திற்கு பதில் சொல்பவராகவும், பணிய வேண்டியவர்களாகவும் இருப்பர்.” என்று ராய் தெரிவித்தார்.

செல்போனிலுள்ள எண்களைக் கொண்டு தமிழில் தட்டச்சு – புதுகை தமிழர் சாதனை!

தற்போதும் கூ ட சில செல்போன் நிறுவனங்கள் தமிழில் குறுந்தகவல் அனுப்பும் வசதியைச் செய்திருந்தாலும் அதைப் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில் செல்போனில் உள்ள எண் விசைப் பலகையிலேயே தமிழில் தட்டச்சு செய்யும் புதிய முறையை புதுக்கோட்டையைச் சேர்ந்த டி. வாசுதேவன் வடிவமைத்துள்ளார்.

nov 24 - tamil.keyboard

புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் தனது உறவினருடன் சேர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு கைபேசியில் எளிதாக தமிழ் எழுத்துகளை டைப் செய்வதற்கான மென்பொருளை உருவாக்கினார். இதையடுத்து, வெறும் எண்களாலேயே கணினி விசைப்பலகை மற்றும் கைபேசியில் தமிழில் தகவல்களை பாரிமாறி கொள்ளும் மென்பொருளுக்கான காப்புரிமையையும் பெற்றார்.

விரைவில் இந்த சேவையை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ள வாசுதேவன், http://www.easytype.in/ என்ற இணையதளம் மூலம் வரும் ஜனவரி 20-ம் தேதி வரை மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தமிழ் உட்பட மொத்தம் 16 மொழிகளில் பூஜ்யம் முதல் ஒன்பது வரையிலான நியூமரிக் வடிவில்தான் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் தெரிவித்தார்.

தற்போது அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், இந்த மென்பொருளை அதிக செலவில் உருவாக்கியுள்ளதாகவும், இந்த முயற்சிக்கு அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் வாசுதேவன்.

ரூபாய் நோட்டின் பின்புறம் உள்ள படம் என்ன சொல்கிறது?


ரூபாய் 5 - விவசாயத்தின் பெருமை


ரூபாய் 10 - விலங்குகள் பாதுகாப்பு (புலி,  யானை, காண்டாமிருகம்).


ரூபாய் 20 - கடற்கரை அழகு (கோவளம்)


ரூபாய் 50 - அரசியல் பெருமை (இந்திய பாராளுமன்றம்)


ரூபாய் 100 - இயற்கையின் சிறப்பு (இமயமலை)


ரூபாய் 500 - சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)


ரூபாய் 1000 - இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு.




காதலுக்கு மன ஒற்றுமை போதும் - குட்டிக்கதைகள்!


ஒரு தவளைக்கு தன் குளத்தில் அடிக்கடி நீராடி செல்லும் தேவதை மீது காதல் ஏற்பட்டது ,

தன் காதலை அவளிடம் கூறியும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை,

அவளிடம் காரணம் வினாவியது தவளை,
அதற்க்கு அவள் இன வேறுபாடு உள்ளது என்று சொல்லிட்டால்.

இதை கேட்ட தவளை அழுது தவித்தது, கோடை காலம் வந்தது ,
மழையின்றி அனைத்து குளங்களும் வற்றியது, ஆனால் தேவதை நீராடும் குளத்தில் மற்றும் நீர் வற்றவே இல்லை, ஆச்சரியத்தில் இருந்த தேவதை அந்த குளத்தில் உள்ள தாமரையிடம் கேட்டாள்,

அதற்க்கு தாமரை கூறியது, இக்குளத்தில் உள்ளது தண்ணிர் அல்ல
 உன்மேல் காதல் கொண்டதனால் தவளை வடித்த கண்ணீர் என்றது,

தேவதை அப்பொழுதுதான் தவளையின் உண்மை காதலை புரிந்து கொண்டு, காதலுக்கு மன ஒற்றுமை இருந்தால் போதும், இன வேற்றுமை தேவையல்ல என்று உணர்ந்து கொண்டாள்....!

காதலுக்கு மன ஒற்றுமை இருந்தால் போதும், மத வேற்றுமை தேவையல்ல என்பதற்கு இது ஒரு சான்று.

முன்பதிவு அவசியம்... பாஸ்போர்ட் பெற அனைத்து சேவை மையங்களிலும்!

 
சென்னையில் உள்ள மூன்று பாஸ்போர்ட் சேவை மையங்களிலும் முன்பதிவு மூலமே பாஸ்போர்ட்டுக்கு ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் முறை கட்டாயமாகிறது. இந்த புதிய முறை டிசம்பர் 01/12/2013 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

சாலிகிராமம் பாஸ்போர்ட் சேவை மையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே முன்பதிவு செய்யாமல் பாஸ்போர்ட் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும். தாம்பரத்தில் முன்பதிவு செய்யாமலேயே சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பம் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் முறை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இது குறித்து, மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க மூன்று இடங்களில் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் இந்த சேவை மையங்கள் மூலம் நாளொன்றுக்கு ஆயிரத்து 628 விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு பாஸ்போர்ட் பெற ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

அதில், இணையதளத்தில் குறிப்பிட்ட தேதியை முன்பதிவு செய்யாமலேயே பாஸ்போர்ட் மையங்களுக்குச் செல்லும் நடைமுறை சாலிகிராமம் மற்றும் தாம்பரம் மையங்களில் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு நீண்ட நேரம் ஆவதால் முன்பதிவு செய்யாமலேயே பாஸ்போர்ட்டுக்கு ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருதாணியின் மருத்துவக் குணம்!


 சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது.

மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.

சில பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு, வெள்ளைப்பாடு ஆகியவை குணமாக, மருதாணி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து இருவேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டால் விரைவில் குணம் கிடைக்கும்.

ஆனால், இதனை உண்ணும் போது உணவில் புளியை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.

இதேப்போல காலில் ஆணி ஏற்பட்டவர்கள் அந்த இடத்தில் நசுக்கிய பூண்டை வைத்துக் கட்டி வந்தாலும் குணம் கிடைக்கும்.

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?


மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்

60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன.

3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை.

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு.

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.

இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து போக,
எதற்கு இந்த தலைகணம், கோபம், ஆணவம், ஆடம்பரம், கொலை வெறி,கௌரவம், ஜாதி மத சண்டைகள் …???

மனித பிறப்பு மிக அறியப் பிறப்பு ..

அதை வாழும் காலத்தில் அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வோமே!


 சிந்தியுங்கள்!!!

மாமியார் குறுக்கீடு பிடிக்காததால் தனிகுடித்தனம் போகிறார் ஐஸ்!

 

மாமியார் ஜெயா பச்சனின் குறுக்கீடு அதிகரித்துள்ளதால் தனிக் குடித்தனம் செல்ல முடிவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சனை மணந்தபிறகு அவருடன் மும்பையில் உள்ள மாமியார் வீட்டிலேயே வசித்து வருகிறார் ஐஸ்வர்யாராய். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் ஒவ்வொரு விஷயத்திலும் மாமியார் ஜெயா பச்சன் தலையிடுவதாக கூறப்படுகிறது. மாமானார் அமிதாப்பச்சன் தன் வேலை உண்டு, பேத்தி உண்டு என்று மவுனமாக இருப்பதால் அவர் மீது ஐஸ்வர்யாவுக்கு வருத்தம் எதுவும் இல்லையாம்.

சமீபத்தில் விழா ஒன்றுக்கு மாமியார் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த மீடியாக்காரர்கள் ஐஸ்வர்யாவை படம் பிடிக்க போட்டி போட்டனர். வேகமாக சென்ற ஐஸ்வர்யாவை போஸ்தர சொல்வதற்காக, ஐஸ்வர்யா... ஐஸ்வர்யா.. என்று மீடியாக்காரர்கள் குரல் கொடுத்தனர். இதைகேட்டு ஜெயா பச்சன் கோபம் அடைந்தார்.

ஐஸ்வர்யா என்ன உங்க கிளாஸ்மேட்டா என்று மீடியா நபர்களை கடிந்துகொண்டார். இது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லையாம். படங்களில் நடிக்க அழைப்பு வந்தபோதும் அதை ஏற்காமல் தவிர்த்து வருகிறார் ஐஸ். இதற்கும் மாமியார் தலையீடுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து கணவருடன் சீக்கிரமே ஐஸ்வர்யா தனிகுடித்தனம் செல்வார் என்று பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. கட்டுப்பாடுடன் குடும்பத்தை நடத்த விரும்பும் ஜெயாவுக்கு ஐஸ்வர்யாவை அபிஷேக் திருமணம் செய்ததே பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குளிர்காலத்துல இந்த உணவுகளை மறக்காதீங்க...


நவம்பர் மாதம் வந்தாலே, சரியான குளிர்ச்சி இருக்கும். அந்த நேரம் ஸ்வெட்டர், ஸ்கார்ப், கால்களுக்கு சாக்ஸ் மற்றும் கைகளுக்கு க்ளொஸ் போன்றவற்றை அணிந்து கொண்டிருக்கும் நிலையில் இருப்போம். ஏனெனில் அந்த அளவில் குளிர்ச்சியானது இருக்கும். சொல்லப்போனால் வெளியே செல்லக்கூட பயந்து, சிலர் பிடித்த உணவைக் கூட சரியாக சாப்பிடமாட்டோம். அதிலும் சிலர் பழங்கள் சாப்பிட்டால், சளி, ஜலதோஷம் போன்றவை பிடிக்கும் என்று அவற்றை சாப்பிடுவதையே நிறுத்திவிடுவர்.

இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால், உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். ஏனெனில் உடலில் சத்துக்கள் இல்லாவிட்டால், அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாவிட்டால், எவ்வாறு உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே குளிர்காலத்தில் கடைகளுக்கு ஒரு முறை பர்சேஸ் செய்யப் போகும் போதே, எந்த உணவுப் பொருட்களையெல்லாம் மறக்காமல் வாங்க வேண்டும். மேலும் எதற்கு அவற்றை தவிர்க்காமல் நிச்சயம் வாங்கி சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!


ஆரஞ்சு


குளிர்காலத்தில் அதிகமான அளவில் சளி, ஜலதோஷம் போன்றவை அதிகம் பிடிக்கும். ஆகவே அத்தகையவற்றை தடுக்க உடலில் போதிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின் சி அவசியமாகிறது. அத்தகைய சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளன. எனவே இதனை குளிர்காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பசலைக் கீரை

பொதுவாக கீரை வகைகளை அதிகம் சேர்த்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பசலைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து வந்தால், அதில் உள்ள அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து, நோய் தாக்காமல் உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

வேர்க்கடலை


வேர்க்கடலையை குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டும். அது வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது சாதாரணமாகவோ இருந்தாலும், அதை சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பம் சரியான அளவு இருப்பதோடு, புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.

கொய்யாப்பழம்

இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் கொடுப்பதில்லை, இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது. அதிலும் கொய்யாவில் லைகோபைன் என்னும் பொருள் இருப்பதால், அது இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கிறது. ஆகவே குளிர்காலத்தில் பிங்க் மற்றும் சாறுள்ள கொய்யாப்பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும்.

கேரட்

கேரட்டை இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவு இதில் வைட்டமின்களான பி, சி, டி, ஈ மற்றும் கே உள்ளன. மேலும் இதில் உள்ள கரோட்டீன என்னும் பொருள் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாறிவிடுகிறது. எனவே இத்தகைய கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது.

கிவி


இது மற்றொரு சிறப்பான வைட்டமின் சி நிறைந்துள்ள பழம். அதிலும் இந்த பழத்தின் மேல் சிறிது உப்பை தூவி, காலை வேளையில் அல்லது மாலை வேளையில் சாப்பிட்டால், உடலுக்கு சத்து கிடைத்தது போன்றும் இருக்கும், வயிறு நிறைந்தது போன்றும் இருக்கும்.

சிக்கன் சூப்

சூப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் சிக்கன் சூப் சாப்பிட்டால், குளிர்காலத்திற்கு இதமாக இருக்கும்.

கொக்கோ

கொக்கோவை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள அதிகமான ஃப்ளேவோனாய்டுகள், இதய நோய்க்கு வராமல் தடுக்கும். ஆகவே இந்த கொக்கோவை, உணவு உண்ட பின்பு சிறிது குடிப்பது நல்லது.

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்

சாதாரணமான பழங்களை சாப்பிடுவதை விட, உலர் பழங்களை சாப்பிடுவதால், உடலில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். சொல்லப்போனால் நல்ல ஃப்ரஷ்ஷான பழங்களை விட, உலர் பழங்கள் தான் நல்லது. ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை நட்ஸ் உடன் தினமும் சேர்த்து சாப்பிட்டால், முக்கியமாக குளிர்காலத்தில் சாப்பிட்டால், கிருமிகள் எளிதில் உடலைத் தாக்காமல் தடுக்கும்.

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!


குளிர்காலம் என்றாலே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. அந்த நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல்

விட்டுவிட்டால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சட்டென்று வந்து ஒட்டிக்கொண்டு விடுகின்றன.

பொதுவாக, கோடைகாலத்தில் குளிர்பானங்களுக்கு எல்லோருமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காரணம், அப்போது வெயில் காரணமாக உடலில் அதிக அளவில் வியர்வை வெளியாகும், சக்தி இழப்பு உடனே ஏற்படும். இதுதவிர, "அல்கலைன் சிட்ரைட்" என்ற அமிலமும் அதிக அளவில் வெளியாகிறது.

புளிப்பு சுவை கொண்ட மோர், பானகம் உள்ளிட்ட பானங்களை அப்போது அருந்துவதன் மூலம், அந்த அமில இழப்பை சரி செய்து கொள்ளலாம். இதே புளிப்பு சுவை கொண்ட குளிர்பானங்களை குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. மீறி எடுத்துக்கொண்டால், உடலில் உள்ள "அக்கலைன் சிட்ரைட்" அமிலத்தின் அளவு அதிகரித்து சைனஸ், மார்புச்சளி, ஜலதோஷம் போன்ற பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும்.

அதனால், குளிர் காலத்தில் "கூல் டிரிங்ஸ்" மட்டுமின்றி புளிப்பு சுவை கொண்ட பானங்களும் வேண்டவே வேண்டாம். ஏன்... புளிப்பு சுவை கொண்ட வைட்டமின்-சி பழங்களைக்கூட அளவோடுதான் சாப்பிடவேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.

பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை உருப்பெருக்கம் (Zoom) செய்ய உதவும் நீட்சி!

 

சமூக வலைத்தளங்களின் வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக்கினை அடிப்படையாகக் கொண்டு ஏற்கனவே பல நீட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் தொடர்சியாக இப்பொழுது Facebook Photo Zoom எனும் நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,


இந்த நீட்சியின் உதவியுடன் பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் புகைப்படங்களை நேரடியாகவே உருப்பெருக்கம் செய்ய முடியும்.

கூகுள் குரோம் மற்றும் பையர்பொக்ஸ் உலாவிகளுக்காக இந்த நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



தரவிறக்கச் சுட்டி
Chrome

பால்கி டைரக்ஷனில் அக்ஷரா நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது -கமல்ஹாசன்!

 

பால்கி டைரக்ஷனில் அக்ஷரா நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

பேட்டி

கோவாவில் நடந்த சர்வதேச படவிழாவுக்கு வந்த நடிகர் கமல்ஹாசன், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திரையுலகில் என் மூத்த மகள் சுருதிஹாசன் அந்தஸ்து எப்படி அமையும்? என்று நான் கவலைப்பட்ட காலம் முடிந்து விட்டது. இனி, அவரைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. தென்னிந்திய திரையுலகிலும், இந்தி பட உலகிலும் சுருதி பல்வேறு டைரக்டர்களிடம் பணிபுரிந்து இருக்கிறார். 10 படங்களில் நடித்து இருக்கிறார்.

அவர் வேலையை அவர் சிறப்பாக செய்கிறார். சுருதி பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறார்.

அக்ஷரா

பா படத்தின் டைரக்டர் ஆர்.பால்கியின் அடுத்த படத்தில்,  அக்ஷரா நடிப்பது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். (இந்த படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.) அக்ஷராவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுருதி, அக்ஷரா இரண்டு பேரிடமும் என் கருத்துக்களை திணிப்பதில்லை. நடிப்பு, அவர்கள் ரத்தத்தில் இருக்கிறது. அவர்கள் இருவருக்குமே நான் எந்த பயிற்சியும் அளிப்பதில்லை. அவர்களின் வளர்ச்சியில் என் பங்களிப்பு எதுவும் இல்லை.

விஸ்வரூபம்-2

விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிகட்ட வேலைகள் இப்போது நடைபெறுகின்றன. அனைத்து கட்சியினரும் இந்த படத்தை வரவேற்பார்கள். முன்பு நடந்தது போன்ற சம்பவங்கள் எதுவும் இந்த படத்தில் இருக்காது.

விஸ்வரூபம் படத்தின் ஒரு பகுதி அமெரிக்காவில் நடப்பது போல் இருந்தது. அதன் இரண்டாம் பாகம் இந்தியாவில் நடப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள்!

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே'' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’' என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, “கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை தயவுசெய்து உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதே’ என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே “அப்பாக்கிட்ட சொல்லிடு வேன்’ என்று மிரட்டும்.

6.குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்கடீச்சருக்கே ஒண்ணும் தெரியலே’ போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறி னால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

7.குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. ” கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்’ என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8.குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதாஎ ன்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்’ இருக்க வேண்டும். “நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’ என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். “நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடுதான் மேய்க்கலாம்’ என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

இத சொன்னா என்னைய கேனையன்னு சொல்றனுங்க..


1.சினிமாக் கூத்தாடிகளை கடவுளெனக் கொண்டாடும் தமிழன் இருக்கும்வரை ஒருகோடி ஆண்டுகளானாலும் இச்சமூகம் உருப்படப்போவதில்லை.

2.உங்களுக்குப் பிடிக்காத வரன் வருதா? கம்னு, வாக்காளர் அட்டையிலிருக்கிற படத்தைக் குடுத்தனுப்பிச்சிருங்க. கண்டிப்பா ரிஜக்ட் ஆகிடும்..

3.ஓட்ஸ் சாப்பிட்டா உடம்பு குறையுதாம், எனக்கென்னமோ ஓட்ஸ் தான் குறையர மாதிரி இருக்கு

4.மனைவி எவ்வளவுதான் திட்டி கழுவி கழுவி ஊத்துனாலும், அசையாம கல்லு மாதிரி கணவன் இருப்பதால்தான், "கல்லானாலும் கணவன்"னு சொல்றாங்க

5.டாஸ்மாக்கை நடத்தும் அரசு விவசாயத்தையும் ஏற்று நடத்தலாம்..

6.ரெண்டு வீலுக்கும் MRF டயர் போட்டாலும்... பிரேக் புடிச்சாதான் வண்டி நிற்கும்!!

7.படிச்ச ஃபார்முலா, தியரம் எல்லாம் பார்க்கிற உத்தியோகத்துல யூஸ் பண்ணனும்'னா வாத்தியார் வேலைக்கு தான் போகணும்

8.படைப்பை விமர்சிக்க படைப்பாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, சிறந்த ரசனையாளனாய் இருந்தால் போதும்.

16 செல்வங்களும் அவைகளைப் பெரும் வழிகளும்!


 குறிப்பு: இவற்றில் உங்களிடம் எத்தனை செல்வங்கள் இருக்கின்றது என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

இதோ 16 வகையான செல்வங்கள்

1. புகழ் 2. வெற்றி 3. பணம் (பொன்), 4. இரக்கம் 5. அறிவு

6. அழகு 7. கல்வி 8. நோயின்மை 9. வலிமை 10. நல்விதி

11. உணவு 12. நன் மக்கள் 13. பெருமை 14. இனிமை 15. துணிவு 16. நீண்ட ஆயுள்


16 செல்வங்களைப் பெரும் வழிகள்

1. புகழ் :

யாரும் புகழோடு தோன்றுவதில்லை. செய்யும் செயலிலும், நடக்கும் விதங்களிலும், நன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான குணங்களைப் பொறுத்து தான் புகழ் கிடைக்கும்.

2. வெற்றி

 வெற்றி என்பது பிறரை தோற்கடித்து நாம் வெற்றி பெறுவது அல்ல. நம்மை நாமே வெற்றி கொள்வதாகும். இன்றைய நிலையை விட நாளைய நிலைமை உயர்த்துவதற்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

3. பணம் (பொன்)

செழிப்பான வாழ்க்கைக்குத் தேவையானவைகளில் பணமும், பொன்னும் ஆகும்.அவற்றைப் பெறுவதற்குச் சிறந்த வழிகள் தொழில் செய்வது அல்லது நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிப்பது.

4. இரக்கம்
 இருப்பவர்களுக்கு கொடுக்கிற மனமில்லை. மனமிருப்பவர்களுக்கோ கொடுப்பதற்கு ஏதுமில்லை. இது தான் இன்றைய நிலை. அன்பு காட்டுவது, அரவணைப்பிற்கு கூட பணம் கேட்கும் காலம். இருப்பினும் வெகு சிலர் இரக்கம் காட்டி பல ஏழைகளுக்கு உதவி செய்து இறைவனைப்போல் தரிசனம் தந்து கொண்டிருக்கின்றனர்.

5. அறிவு

 கல்வியும், அறிவும் வேறு வேறு என்று உணர வேண்டும். படித்துத் தெரிந்து கொள்வது கல்வி. அறிவோ பார்த்து, கேட்டு, அனுபவப்பட்டு வருவது. அறிவுடையோருக்கு கல்வி குறைவாக இருந்தாலும் எந்த நேரத்தில் என்ன செய்தால் வாழ்க்கை நன்றாக வாழ முடியும் என்பதில் அதிக அறிவு இருக்கும்.

6. அழகு

 பார்த்தவுடன் கவருகின்ற தன்மையை அழகு என்று பெரும்பாலோர் எண்ணிக்கொண்டு சற்று கருப்பாக, குண்டாக இருப்பவர்கள் 'தாங்கள் அழகில்லையே' என்று தாழ்வு மனப்பான்மையோடு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள் பலவகையான அழகுகள் இருப்பதை தெரிந்துகொண்டால் இந்த மாதிரி தாழ்வுமனப்பான்மை எண்ணங்கள் வரவே வராது.சில வகை அழகுகள் இதோ ! குரல் இனிமை, கவரும் பேச்சு, தாளம் போட வைக்கும் பாட்டு, நளினமான நடனம், உடை அழகு, அறிவு, அன்பு, கருணை காட்டுதல் இன்னும் பல.

7. கல்வி

 கல்வி பெரிதாக தேவைபடாவிட்டாலும் அடிப்படை கல்வி மிகமிக அவசியம். அதுவும் படித்து மனப்பாடம் செய்யும் ஏட்டுக் கல்வி வாழ்க்கை வாழ்வதற்கு உதவாது. அதோடு செய்முறை பயிற்சி வளமான துணையோடு கையும் கொடுக்கும். வளமான வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது நல்லது.

8. நோயின்மை

 நல்ல உணவு, சிந்தனை மற்றும் செயல் நோயற்ற வாழ்வுக்கு ஆணிவேராகும். 'நோயின்மை' ஒருவன் வாழ்நாளில் பெற்ற விலைமதிப்பில்லாத பொக்கிசமாகும். எங்கே நோய் இல்லையோ அங்கே மகிழ்ச்சி பொங்கி வழியும்.

9. வலிமை
 உடல் வலிமை பெற உடற்பயிற்சியும், மனவலிமை பெற தியானம் மற்றும் தன்னம்பிக்கை வேண்டும். வலிமை பெற அதிக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. வெறும் 5 முதல் 10 நிமிடங்களே போதுமானது.

10. நல்விதி

 நல்ல எண்ணமும், செயலும் நல்விதிக்கு அடிப்படை காரணமாக விளங்குகின்றது.'விதி' என்பது கஷ்டம் தருவது மட்டுமல்ல. நன்றாக மகிழ்ச்சியோடு இருப்பது கூட விதியாகும். ஆக விதி என்பது உன் கையில் தான் இருக்கின்றது. அதை நமக்கு சாதகமாக ஏற்படுத்திக்கொள்வது நமது புத்திசாலித்தனத்தில் இருக்கின்றது.

11. உணவு

 உடை, இருப்பிடம் முக்கியமானதாக இருந்தாலும் வேளா வேளைக்கு நல்ல உணவு உண்ணுவது அவசியம் வேண்டும். உணவு , உடலும் அருவும் வளர்வதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகும்.

12. நன் மக்கள்

 பொதுவாக குழந்தையாக இருக்கும்போது சூது, வாது ஏதும் தெரிவதில்லை.தீ ஜுவாலை கூட கவர்ச்சி மிக்க பொருளாகத் தெரியும். தீ கங்கு கூட சாப்பிடும் பழமாகத் தெரியும். ஆனால் அவர்களை நன்மக்களாக வளர்ப்பது பெற்றோர் கையிலும், சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள் கையிலும் , அவர்களை நன்றாக உபயோகித்துக் கொள்வது மக்கள் கைகளிலும் இருக்கின்றது.

13. பெருமை

 பிறர் பெருமைபட வாழ்தல் ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் சாதனையாகும். ஆனால் 'தற்பெருமை' என்பது அறவே விரும்பத் தகாததாகும். பெரும்பாலும் தற்பெருமை பேசுபவர்களைச் சுற்றிலும் ஒரு கூட்டம் வெறும் பணத்திற்காகவும், பதவிக்காகவும் வேறு பல எதிர்பார்ப்போடும் இருப்பார்கள். உண்மையான பெருமை என்பது சர்க்கரையைத் தேடி எறும்பு வருவது போல நல்ல செயல்களைச் செய்யும் போது பெருமை தானாக தேடி வரும்.

14. இனிமை

 பேச்சில் இனிமை, நன்மைக்களிடம் பழகுவதில் இனிமை, சொற்களில் இனிமை, எழுதுவதில் இனிமை ஆகியவைகள் என்றுமே நன்மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

15. துணிவு
 துணிவு இல்லையேல் வெற்றி இல்லை. திட்டமிடுதல் துணிவுக்கு அடித்தளம். திட்டம் சரியாக இருந்தால் எந்த செயலையும் துணிவோடு செய்யலாம். வெற்றி பெறலாம்.

16. நீண்ட ஆயுள்

 மேற்கூறிய எல்லா (15) செல்வங்களை பெற்றுவிட்டால் நீண்ட ஆயுளுக்குத் துணையாய் இருக்கும்.

உலகில் விளையாடப்படும் சில விசித்திரமான விளையாட்டுக்கள்!!!

உலகில் எத்தனையோ விளையாட்டுக்கள் உள்ளன. அனைத்து விளையாட்டுக்களுமே ஒரே மாதிரியானதாக இருக்காது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதே சமயம் உலகில் சில விசித்திரமான விளையாட்டுக்களும் உள்ளன. அத்தகைய விளையாட்டுக்களை அனைவரும் விளையாட முடியாது. துணிச்சல் உள்ளவர்கள் தான் விசித்திரமான விளையாட்டுக்களை விளையாட முடியும்.

அப்படி துணிச்சல் இருப்பவர்கள் தான் சாதனைப் படைக்க வேண்டுமென்று பல்வேறு முயற்சிகளை எடுப்பார்கள். சிலருக்கு துணிச்சல் இருந்தும் என்ன செய்வதென்று குழப்பத்தில் இருப்பார்கள். மேலும் சிலர் தம்மிடம் இருக்கும் துணிச்சலால், விசித்திரமான பல விஷயங்களில் ஈடுபடுவார்கள். அப்படி உங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்து, விளையாட்டிலேயே விசித்திரமானதை முயற்சி செய்ய நினைத்தால், தமிழ் போல்ட் ஸ்கை உலகில் உள்ள சில விசித்திரமான விளையாட்டுக்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளது.

எண்ணெய் மல்யுத்தம் (Oil Wrestling)

எண்ணெய் மல்யுத்தம் என்பது, எண்ணெய் தடவிக் கொண்டு வட்டத்தில் நின்று ஒருவரை ஒருவர் பலத்தால் வட்டத்தை விட்டு வெளியே தள்ளுவதாகும். சாதாரணமாக ஒருவரை பிடித்து தள்ளுவதே கஷ்டமாக இருக்கும். இதில் எண்ணெய் தடவிக் கொண்டு எப்படி தள்ள முடியும் என்று யோசித்து பாருங்கள்.

போ ஸ்டிக்ஸ் (Pooh sticks)


இதுவும் விசித்திரமான மற்றும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுப் போல் இருக்கும். இருப்பினும் இதையும் உலகில் உள்ள மக்கள் விளையாடுகின்றனரே! அது என்னவென்றால், இந்த விளையாட்டில் பாலத்தில் நின்று கொண்டு ஒரு குச்சியை கீழே விட வேண்டும். அப்படி நின்று கொண்டு விடும் போது, யாருடையது முதலில் விழுகிறதோ, அவர்கள் தான் வெற்றி பெற்றவராக அர்த்தம்.

பெட் ரேசிங் (Bed Racing)

பெட் ரேசிங் என்பதும் உலகில் விளையாடப்படும் ஒரு வித்தியாசமான விளையாட்டு. இந்த விளையாட்டில் படுக்கையில் ஒரு படுத்திருக்க, அவரை தள்ளிக் கொண்டு ஓட வேண்டும்.

ஜார்ப்பிங் (Zorbing)

இந்த விளையாட்டு எப்படி விளையாட வேண்டுமென்றால், ட்ராண்ஸ்பரண்ட் பிளாஸ்டிக் பந்தின் உள்ளே ஒருவர் உள்ள இருக்க, அவர்களை மேடுகளில் இருந்து கீழே தள்ள வேண்டும். இதில் யார் முதலில் கீழே வருகிறாரோ, அவரே வெற்றி பெற்றவராவார். இது உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமாகவும், வித்தியாசமான அனுபவத்தையும் கொடுக்கும்.

ஜார்ப்பிங் (Zorbing)

இந்த விளையாட்டு எப்படி விளையாட வேண்டுமென்றால், ட்ராண்ஸ்பரண்ட் பிளாஸ்டிக் பந்தின் உள்ளே ஒருவர் உள்ள இருக்க, அவர்களை மேடுகளில் இருந்து கீழே தள்ள வேண்டும். இதில் யார் முதலில் கீழே வருகிறாரோ, அவரே வெற்றி பெற்றவராவார். இது உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமாகவும், வித்தியாசமான அனுபவத்தையும் கொடுக்கும்.

மனைவியை தூக்கிக் கொண்டு ஓடுவது (Wife Carrying)


இந்த விளையாட்டில் மனைவியை தூக்கிக் கொண்டு, பல்வேறு இடங்களில் ஓர வேண்டும். அது வறண்ட இடமாகவோ அல்லது மண் அதிகம் உள்ள இடத்திலோ அல்லது நீர் நிறைந்த இடங்களாகவோ இருக்கலாம். இதுவும் மிகவும் நன்றாக இருக்கும்.

கர்னிங் விளையாட்டு (Gurning Game)

இந்த விளையாட்டு அவ்வளவு பெரிய விசித்திரமானதாக இல்லாவிட்டாலும், அந்த விளையாட்டில் ஒருவர் எந்த அளவில் தனது முகத்தை மிகவும் கேவளமாக வெளிப்படுகிறாரோ, அவரே வெற்றியாளராவார். இந்த விளையாட்டில் வீட்டில் உள்ளோருடன் கூட விளையாடலாம்.

போஸாபால் (Bossaball)


உண்மையிலேயே இது மிகவும் விசித்திரமான மற்றும் கொஞ்சம் கஷ்டமான விளையாட்டும் கூட. ஏனெனில் இந்த ஒரு விளையாட்டில் பல விளையாட்டுக்கள் கலந்திருக்கும். அதில் கைப்பந்து, கால் பந்து, ஜிம்னாஸ்டிக் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆடையில்லாமல் விளையாடுவது (Nude Sports)

இந்த விளையாட்டு ரொம்பவே வித்தியாசம்பா. எப்படியெனில், விளையாடும் போது ஆடையே இல்லாமல் விளையாடுவது. இருப்பினும் இந்த விளையாட்டை உலகில் சில இடங்களில் விளையாடுகின்றனர். ஏனெனில் இப்படி விளையாடுவதால், ஆடையுடன் விளையாடும் போது கிடைக்கும் எனர்ஜியை விட, ஆடையில்லாமல் விளையாடும் போது அதிக அளவில் கிடைக்கிறதாம். 

இந்திய வாகனப் பதிவு எண்ணிற்கான குறியீடுக !

இந்தியாவிலிருக்கும் மாநிலங்களிலும், மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட ஆட்சிப் பகுதிகளிலும் உள்ள போக்குவரத்து வாகனங்களுக்கு வழங்கப்படும் பதிவு எண்களில் அந்தந்த மாநிலம் அல்லது ஆட்சிப்பகுதிக்கான குறியீடு இரண்டு ஆங்கில எழுத்துக்களாக முதலில் இடம் பெறுகிறது. இங்கு ஒவ்வொரு மாநிலம் / ஆட்சிப்பகுதிக்கான குறியீடு தரப்பட்டுள்ளன.

■அருணாசலப் பிரதேசம் - AR

■அஸ்ஸாம் - AS

■ஆந்திரப் பிரதேசம் - AP

■பீகார் - BR

■கோவா - GA

■குஜராத் - GJ

■ஹரியானா - HR

■இமாசலப் பிரதேசம் - HP

■கர்நாடகம் - KA

■கேரளம் - KL

■மத்தியப் பிரதேசம் - MP

■மகாராஷ்டிரம் - MH

■மணிப்பூர் - MN

■மேகாலயா - ML

■மிசோரம் - MZ

■நாகலாந்து - NL

■ஒரிசா - OR

■பஞ்சாப் - PB

■ராஜஸ்தான் - RJ

■சிக்கிம் - SK

■தமிழ்நாடு - TN

■திரிபுரா - TR

■உத்திர பிரதேசம் - UP

■மேற்கு வங்காளம் - WB

■அந்தமான்-நிகோபார் - AN

■சண்டிகர் - CH

■தாத்ரா நாகர்ஹவேலி - DN

■டாமன் - டையூ - DD

■தில்லி - DL

■இலட்சத் தீவுகள் - LD

■பாண்டிச்சேரி - PY.

முழங்கால் கருப்பை நீக்க சில சூப்பர் டிப்ஸ்...

 
உடலை எவ்வளவு தான் அழகாக வைத்திருந்தாலும், அவற்றின் அழகை முழங்கால் மற்றும் முழங்கை கெடுத்துவிடுகின்றன. ஏனெனில் மற்ற

பகுதியை விட இந்த பகுதியானது கருப்பாக காணப்படும். மேலும் உடல் அழகாக காணப்பட வேண்டும் என்பதற்காக எத்தனை பராமரிப்புகளை மேற்கொண்டாலும், அதிலும் கால்களை கவனமாக பராமரித்தாலும் மென்மையாக, முடி இல்லாமல் அழகாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் முழங்கால் மட்டும் கருப்பாக இருந்தால், நாம் செய்யும் அனைத்தும் வீணாகிவிட்டது போல் இருக்கும். ஆகவே அத்தகைய அழகைக் கெடுக்கும் முழங்கால் மற்றும் முழங்கை கருப்பை எளிதில் நீக்க சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது.

இயற்கையான முறையில் முழங்கால் கருப்பை நீக்க சில டிப்ஸ்....

* எலுமிச்சை சாற்றை முழங்காலில் தினமும் இரண்டு முறை தடவ வேண்டும். அதாவது எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, முழங்காலில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமென்றால் இரவில் படுக்கும் முன்பு எலுமிச்சையின் தோலை வைத்து முழங்காலில் 4-5 நிமிடம் தேய்த்து, பின் காலையில் கழுவ வேண்டும். அதுவும் கழுவியதும் உடனே மாய்ஸ்சுரைசரை தடவ கூடாது. அதேப் போல் எலுமிச்சையை தடவுவதற்கு முன்பும் மாய்ஸ்சுரைசரை தடவ கூடாது.

* முழங்கால் அல்லது முழங்கைக்கு தேங்காய் எண்ணெயை தடவி 5-8 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமெனில் தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்தும் செய்யலாம்.

* தயிருடன் சிறிது வினிகரை சேர்த்து கலந்து தடவி வந்தால், முழங்காலில் இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.

* பேக்கிங் சோடாவுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, கருப்பான பகுதியில் தடவி, 3-4 நிமிடம் தேய்த்து, பின் 10-15 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவிட வேண்டும். கழுவியதும், மறக்காமல் பாடி லோசனை தடவ வேண்டும்.

* கடுகு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தொடர்ந்து தடவி வந்தால், முழங்கால் நன்கு வெள்ளையாகிவிடும்.

* பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சர்க்கரை மற்றும் தேனை கலந்து, கருப்பான பகுதியில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

* கருப்பாக இருக்கும் பகுதியில் தயிருடன் எலுமிச்சையை சேர்த்து கலந்து, 10 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை பாலால் ஒரு முறை கழுவி, பின் நீரால் கழுவினால் கருப்பான பகுதி வெள்ளையாகிவிடும்.

* எப்போதும் வெளியே வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும். மேலும் இரவில் படுக்கும் முன், பாடி லோசனை தடவி படுத்தால், சருமம் நன்கு மென்மையாகி, ஈரப்பதத்துடன் இருக்கும்.

* கடுகு எண்ணெயுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து, கருப்பாக இருக்கும் முழங்கை மற்றும் முழங்காலில் தடவி, 5-8 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் கருப்பான இடம் வெள்ளையாகிவிடும்.

ஆகவே மேற்கூறிய சிலவற்றையெல்லாம் உங்கள் வீட்டில் ட்ரை செய்து, உங்கள் முழங்கை மற்றும் முழங்காலை அழகாக வெள்ளையாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது டிப்ஸ் உங்களுக்குத் தெரிந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சர்வதேச ஓபன் சதுரங்கம்: தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்!

 

தமிழக அரசின் ஆதரவுடன் சென்னை கிராண்ட்மாஸ்டர் சர்வதேச ஓபன் சதுரங்க (செஸ்) போட்டித் தொடர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. 26 கிராண்ட்மாஸ்டர்கள், 33 சர்வதேச மாஸ்டர்கள் உள்பட 118 வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் நேற்று கடைசி சுற்றான 11-வது சுற்று நடந்தது.

இதன் முடிவில் இந்திய வீரர் வி.ஆர். அரவிந்த் சிதம்பரம் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடைசி சுற்றில் சக நாட்டவர் விஷ்ணு பிரசன்னாவுடன் டிரா செய்த 14 வயதான அரவிந்த் சிதம்பரம் மதுரையை சேர்ந்தவர்.

தற்போது சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இந்த போட்டியில் 6 கிராண்ட் மாஸ்டர்களுடன் மோதிய இவர் கஜகஸ்தான், ஆர்மேனியா உள்பட 4 கிராண்ட் மாஸ்டர்களை வீழ்த்தியது சிறப்பு அம்சமாகும்.

இது போன்ற சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டிகளில் 14 வயது மாணவர் பட்டம் வெல்வது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அரவிந்த் சிதம்பரம் ஏற்கனவே 11, 13 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தேசிய அளவில் பட்டம் வென்றிருக்கிறார். அவருக்கு ரூ.2 லட்சம் பரிசாக கிடைத்தது.

உக்ரைன் வீரர் நேவ்ரோவ் வாலோரி, இந்தியாவின் எஸ்.பி.சேதுராமன் தலா 8.5 புள்ளிகளுடன் 2&வது இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு வருவாய் நிர்வாகத்துறையின் கூடுதல் செயலாளர் ஸ்ரீதர் பரிசுகளை வழங்கினார். விழாவில் சர்வதேச நடுவர்கள் அனந்த ராமன், திருக்காளத்தி, தமிழ்நாடு சதுரங்க சங்க செயலாளர் ஹரிஹரன், போட்டி ஒருங்கிணைப்பாளர் பால் ஆரோக்கியராஜ், போட்டியின் முதன்மை நடுவர் எப்ரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……


பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……

* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட்காரக் கூடாது.

 * மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான அல்லது தனக்கு உகந்ததல்லாத உடற்பயிற்சி செய்யக் கூடாது.

 * மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும்.

 * அதிக காரம், சூடான வீர்யமுள்ள உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்குப் போதாமல் சாப்பிடக் கூடாது. இவற்றால் சில சமயம் குழந்தை இறக்க நேரிடலாம். அல்லது அகாலத்தில் நழுவலாம்.

 * உடம்பை மூடிக் கொள்ளாமல் படுத்துக் கொண்டாலும், இரவில் சஞ்சாரம் செய்தாலும் சிசுவுக்குச் சித்த பிரமை உண்டாகும்.

 * சண்டை, கலகங்களில் ஈடுபட்டால் சிசுவுக்குக் காக்கை வலிப்பு உண்டாகும்.

 * எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பயப்படும் சுபாவமுள்ள குழந்தை பிறக்கும். இவையனைத்தும் சுகப் பிரசவத்தைக் கெடுக்கும்.

சீன பொம்மைகள், தயாராவதோ இந்தியாவில்…

 

விலை குறைந்த பொம்மைகள் என்றாலே அது சீன தயாரிப்புகள் என்பதில் நமக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் அடுத்த முறை நீங்கள் சீன தயாரிப்பில் உருவான பொம்மையை வாங்கினாலும் அது நிச்சயம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை நம்புங்கள்.

சந்தையில் விற்பனையாகும் பெரும்பாலான பொம்மைகள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சிட்டியில் தயாரானவை என்றால் நம்புவது சிரமம்தான். ஆனால் அதுதான் உண்மை.

பால்ஸ் பிளஷ் இந்தியா எனும் பொம்மை தயாரிப்பு நிறுவனம் சீனாவின் துணை நிறுவனமாகும்.

இந்நிறுவனம் குழந்தைகள் பெரிதும் விரும்பும் கரடி பொம்மை (டெடி பேர்), புலி மற்றும் டிஸ்னி கதாபாத்திரங்களான மிக்கி மௌஸ் மற்றும் டொனால்டு டக் உள்ளிட்ட பொம்மைகளைத் தயாரிக்கிறது.

இங்குள்ள சிறிய உற்பத்தி மையத்தில் இந்த பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களில் 80 சதவீதம் பேர் இப்பகுதிவாழ் கிராமத்து பெண்கள். இந்த தொழிற்சாலைக்கு வந்து பார்த்தால் தெரியும், குழந்தைகளைப் பெரிதும் கவரும் பொம்மைகள் உருவாகும் விதத்தை.

ஆயிரக்கணக்கில் தயாராகும் பொம்மைகள் இங்கிருந்து மெட்டல் டிடெக்டரால் சோதிக்கப்பட்டு சீனாவுக்கு அனுப்பப்படுகிறது. பிறகு அங்கிருந்து சீன தயாரிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

உள்ளூர் மக்களை வைத்து சர்வதேச பொம்மை தயாரிப்பு நிறுவனத்துக்கு பொம்மைகள் தயாரித்துத் தருவது புதிய அனுபவமாக உள்ளது என்று பால்ஸ் பிளஷ் நிறுவனத்தின் இயக்குநர் சீமா நெஹ்ரா கூறினார். இந்த பொம்மைகள் சர்வதேச சங்கிலித் தொடர் நிறுவனங்களான டெஸ்கோ மூலம் பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் பொம்மை வணிகம் இன்னமும் பெரிய நிறுவனங்களால் ஒருங்கிணைந்து நடத்தப்படுவதில்லை. அதற்கான காலம் இன்னமும் கணியவில்லை. இருப்பினும் மதர்கேர், ஷாப்பர்ஸ் ஸ்டாப், லைப்ஸ்டைல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களாக உள்ளதாக நெஹ்ரா கூறினார்.

இங்கு தயாராகும் பொம்மைகள் ஒரு டாலர் முதல் 150 டாலர் விலையிலானவை. பல்வேறு அளவுகளில் இவை தயாராகின்றன. ஒரு பொம்மை தயாரிக்க சிலருக்கு ஒரு மணி நேரமாகும். ஆனால் சிலரோ சில நிமிஷங்களில் தயாரித்து விடுவர் என்று அவர் கூறினார்.

அசோசேம் அறிக்கையின்படி இந்தியாவில் பொம்மைகளுக்கான சந்தை ரூ. 8 ஆயிரம் கோடி. இது அடுத்த மூன்று ஆண்டுகளில் 30 சதவீத வளர்ச்சியை எட்டும் என மதிப்பிட்டுள்ளது. ஸ்ரீ சிட்டியில் அமைந்துள்ள பால்ஸ் பிளஷ் நிறுவனம் ரூ. 10 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் இந்நிறுவன வருமானம் ரூ 48 கோடி. ஒரு நாளைக்கு இங்கு 5 ஆயிரம் பொம்மைகள் தயாராகின்றன. விரைவிலேயே 20 கோடி ரூபாய் முதலீட்டில் மேலும் ஒரு பிரிவைத் தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இன்னும் எளிதாகுமா பத்திரப் பதிவு?

 

முத்திரைத் தீர்வை விற்பனையில் ஆந்திரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஆந்திராவில் வில்லங்கச் சான்றிதழ்கள் வழங்கும் முறையை 1980 ஆம் ஆண்டு முதல் கம்ப்யூட்டர் மயமாக்கிவிட்டார்கள். அத்துடன் 1983ஆம் ஆண்டில் பதிவுத்துறை கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுச் சொத்து தொடர்பான எல்லா விவரங்களும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுவிட்டது. அதைப் போலவே பொதுவான பவர் ஆஃ அட்டர்னி நிலைமையைத் தெரிந்துகொள்ளவும் பதிவுத்துறை இணையதளம் உதவுகிறது. இப்படிப் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், இந்திய அளவில் ஆந்திரப் பத்திரப் பதிவுத்துறை முன்னணியில் உள்ளது.

முத்திரைத் தீர்வை விற்பனையில் இரண்டாமிடத்தில் தமிழகம் இருந்தாலும், ஆந்திராவுடன் ஒப்பிடும்போது பத்திரப்பதிவு இன்னும் எளிமைப்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் வருவாய்த் துறையும், பத்திரப் பதிவுத் துறையும் இணைந்து செயல்படும்பட்சத்தில் சொத்துப்பதிவு மற்றும் நகர்ப்புற வீட்டு மேம்பாட்டு துறையில் தமிழகம் இந்தியாவுக்கு முன்மாதிரியாகத் திகழமுடியும். அதற்குச் சில நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

செய்ய வேண்டிய மேம்பாடுகள் 


#தமிழகத்தில் தற்போது சொத்தை விற்பனை செய்யப் பத்திரப்பதிவுத் துறைக்கு வரும் போது பட்டாவைக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் கோவை உள்பட 9 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. அதைத் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்துவது அவசியம்.

#  குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் சொத்துப் பத்திரத்துடன் சொத்துகளின் (வீடு, நிலம்) புகைப்படங்களையும் இணைப்பது நடைமுறையில் உள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் சொத்தை இன்னொருவர் அபகரிப்பது போன்ற குற்றங்களைத் தடுக்க முடியும். இந்த முறையைத் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தலாம்.

#  பத்திரப் பதிவின்போது சாட்சிக் கையெழுத்துப் போடுபவர்களின் புகைப்படங்களையும் அனைத்து ஆவணங்களிலும் ஒட்டலாம்.

#  பல மாநிலங்களில் முத்திரைத் தீர்வை விற்பவர் மற்றும் வாங்குபவர் இரு தரப்பினரின் டிஜிட்டல் கையெழுத்துகளும் டிஜிட்டல் புகைப்படங்களும் கேட்கப்படுகின்றன. இந்த முறையைத் தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தலாம்.

#  நவம்பர் 2010ஆம் ஆண்டுக்கு முன்பு பவர் ஆஃப் அட்டர்னி விவரங்களைக் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட வில்லங்கச் சான்றிதழில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம்.

#  வில்லங்கம் இருக்கிறதா என்பதை இணையதளம் மூலமாக பார்ப்பதற்கும் ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னியைப் பார்ப்பதற்கும் ஆந்திராவில் வசதி உள்ளது. இதைத் தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும்.

#  இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்குப் புதுச்சேரியில் ஒரு சொத்தின் முந்தைய தாய்ப் பத்திரங்களைப் படிப்படியாக மூலப் பத்திரம்வரை பதிவு எண்கள் வாயிலாகப் பார்ப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த முறையைத் தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும்.

#  மாற்றுத் திறனாளிகளுக்கு முத்திரைத் தீர்வைச் செலவில் குறிப்பிட்ட தள்ளுபடி தர வேண்டும். ராஜஸ்தானில் முத்திரைத் தீர்வையில் உடலில் 40 சதவீதத்திற்கு மேல் ஊனம் உள்ளவர்களுக்கு 1 சதவீதம் தள்ளுபடி தரப்படுகிறது.

பெரிய திரையில் மா.பா.கா. ஆனந்த்!

 


சின்னத்திரையில் இருந்து பல திறமைசாலிகள் பெரியத்திரைக்கு அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

சந்தானம், சிவகார்த்திகேயனை தொடர்ந்து இப்போது மேலும் ஒருவர் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்திருக்கிறார். அவர்தான் மா.பா.கா ஆனந்த். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் மா.பா.கா ஆனந்த் பெரிய திரைக்கு அறிமுகமாகிறார். கிருஷ்ணா வானவராயனாக நடிக்க, மா.பா.கா வல்லவராயனாக அவருக்கு தம்பியாக நடிக்கிறார். அதுதவிர, பஞ்சுமிட்டாய் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஒருவர் அறிமுகம் ஆகிறார்.

சந்தானம், சிவகார்த்திகேயன் பணியாற்றிய அதே தொலைக்காட்சியில் இருந்துதான் தற்போது மா.பா.கா ஆனந்தும் வந்திருக்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...

 

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி

கிடைக்கிறதா?

 ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது
பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு
விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா ?

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.

இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது ,
நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சொயில் பெராக்சிடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்

இதில் சத்துகள் எதுவும் இல்லை
குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

உலகில் பல நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம்
நம் தலைமுறை காப்போம்.


நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .

தலைவலி அடிக்கடி வருதா?

 
 
அனைவரும் இன்றைய நாள் நன்றாக இருக்க வேண்டும், எந்த ஒரு டென்சனும் வந்துவிடக் கூடாது என்று அன்றைய தினத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால் அதை தலைவலி வந்து கெடுத்துவிடும். இந்த தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்திரைகளும் உடலும் பெரும் கெடுதலைத் தான் ஏற்படுத்தும். ஆகவே அத்தகைய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரிசெய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகின்றதென்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு வலியும் நம்மை நெருங்காமல் இருக்கும்.

இப்போது எந்த செயல்கள் நமக்கு தலைவலியை உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி;


ஈரமான கூந்தல்


காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கிவிடும். பின் அவை தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்கும். ஆகவே எப்போதும் தலையை ஈரத்துடன் வைக்காமல் இருந்தால், தலைவலி வருவதைத் தடுக்கலாம். அதற்காக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை கூந்தல் உதிர்தலை உண்டாக்கும்.

அளவுக்கு அதிகமான வெப்பம்

வேலையாக வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும். மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண்டாக்கும். ஆகவே நன்கு சாப்பிட்டு, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது.

வாசனை திரவியங்கள்

உடலில் வியர்த்தால் அதிக துர்நாற்றம் வருகிறதென்று, சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த செண்ட் வாசனை, அதிக தலைவலியை உண்டாக்கும். ஆகவே வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்தாமல், மிதமாக உபயோகிப்பது நல்லது.

கம்ப்யூட்டர் திரை

கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

தொலைக்காட்சி திரை

கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவியின் உள்ளே போய் பார்ப்பது போல், மிகவும் அருகில் உட்கார்ந்து பார்ப்பர். இதனால் கழுத்து வலி ஏற்படும். ஆகவே அவ்வாறு உட்காராமல், சற்று தொலைவில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். மேலும் டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

படுக்கையில் படித்தல்


படுக்கும் போது புத்தகத்தைப் படிப்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம். ஏனெனில் இப்படி படித்தால், கண்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை பார்க்கும். ஆகவே எப்போது படிக்கும் போதும், உட்கார்ந்து படிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் உட்கார்ந்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிக குளிர்ச்சி

அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல்லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பது போல் இருக்கும். ஏனெனில் அவை மூளையை உறைய வைத்துவிடுகிறது. ஆகவே அத்தகைய பொருளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக குளிர்ச்சியே சாப்பிடக் கூடாது என்பதில்லை. ஓரளவு குளிர்ச்சி உள்ள பொருளை, அளவாக சாப்பிட்டால் நல்லது.

ஆல்கஹால்


ஆல்கஹால் பருகுவதால் கூட தலை வலி உண்டாகும். ஏனெனில் சிலர் ஆல்கஹாலை குளிர்ச்சியாக சாப்பிடுவர். சாதாரணமாக ஆல்கல் சாப்பிட்டாலே, மூளை மிகவும் தளர்ந்து இருக்கும். அதில் குளிர்ச்சியுடன் சாப்பிட்டால், தலை வலி தான் அதிகமாகும். அதிலும் அந்த வலி பருகிய மறுநாள் தான் உண்டாகும். ஆகவே குளிர்ச்சியாக சாப்பிடுவதோடு, அதிகமாக பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.

சரியான தூக்கம்
தூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றியமையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

நீண்ட தூர பயணம்
பைக்கில் மிகுந்த வேகத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அதையே குளிர் காலத்தில் செய்தால், களி, ஜலதோஷம், போன்றவை ஏற்படும். அதிலும் காலை மற்றும் இரவு நேரங்களில் செல்வது தான் பெரும் பிரச்சனையை உண்டாக்கும். அவ்வாறு பிரச்சனைகள் வரும் போது, நிச்சயம் வராத வலிகள் அனைத்தும் வந்துவிடும். ஆகவே பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அல்லது ஏதேனும் துணியைக் கொண்டு, வாய் மற்றும் மூக்கை மறைத்துக் கொண்டு ஓட்ட வேண்டும்.

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .


*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

சுகப்பிரசவம் நடக்க சில வழிமுறைகள்!

 

கர்ப்பிணிகள் வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.

ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும். அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும்.

அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும். இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது.

தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும். மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது. அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது.

அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம். ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது. சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால்.

ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும். மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது. தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால் பயம் ஏற்படுகிறது. சிசேரியன்தான் எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top