.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 10 November 2013

டார்க் சொக்லேட்டின் மகத்துவங்கள்!

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று தான் டார்க் சொக்லேட்.

சில சொக்லெட்டில் உலர்ந்த பழங்களும், முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளும் போட்டு தயாரிக்கப்படுகின்றன.

கருப்பு நிறத்தில் சற்றே கசப்பும் இனிப்பும் சேர்ந்த டார்க் சொக்லெட்டை அனைவரும் உண்ண வேண்டும்.

ஏனெனில் அந்த அளவில் சத்துக்களானது இவற்றில் உள்ளன.

இதை உண்பதால் இதய நோய், மூளை நோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவையிலிருந்து எளிதாக விடுதலை பெற முடியும்.

இதயத்திற்கு நல்லது

டார்க் சொக்லெட்டை ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொண்டால், இரத்த அழுத்தத்தை போக்கும் என்று ஆய்வு கூறுகின்றது.

ஏனெனில் இதன் தன்மை இரத்தத்தை பெருக்குவதுடன், இரத்தம் உறைவதையும் தடுக்கும்.

அதிலும் இதை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால், தமனிகள் கடினமாகாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மூளைக்கு நல்லது

டார்க் சொக்லெட் இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, மூளையையும் சிறப்பாக செயல் பட வைக்கின்றது. அதிலும் இவை மூளைக்கு சிந்திக்கும் திறனை வழங்குகின்றன.

மேலும் வலிப்பு வராமல் காக்க டார்க் சொக்லெட் உண்ண வேண்டும். மூளைக்கு நல்ல ஆற்றலை வழங்கவும், சிந்திக்கும் திறனை வளர்க்கவும் உதவுகின்றது.

இதில் PEA உள்ளது. இதனால் காதல் உணர்வு ஏற்படும் போது கிடைக்கும் ஒருவித மகிழ்ச்சியை போன்று இவற்றை உண்ணும் போது அடைய முடியும்.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது

இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் சர்க்கரை நோயின் இரண்டாம் நிலையை போக்கவும் இவை உதவும்.

ஏனெனில் இதில் ஃப்ளேவோனாய்டுகள்(flavonoids) இருப்பதால், இவை செல்களை சீராக செயல்பட உதவுகின்றது.

அதுமட்டுமின்றி, இதில் குறைந்த அளவு க்ளைசீமிக் இண்டெக்ஸ்(glycemic index) இருப்பதாலும், இன்சுலின் அளவை கூட்டி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது.

புற்றுநோயை தடுக்கும்

இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது. இதனால் செல்களுக்கு பாதிப்பு அளிக்கும் ரேடிக்கல்களை(radicals) போக்கி ஆரோக்கியத்தை அளிக்கின்றது.

இந்த ரேடிக்கல்கள் வயதாவதால் தோன்றும். மேலும் இதன் மூலம் புற்றுநோய் வரும் அபாயமும் உள்ளது. ஆனால் இதை டார்க் சொக்லெட் முற்றிலும் குணப்படுத்துகின்றது.

வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்தது

இதில் அதிகளவில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்து இருக்கின்றது. இதனால் உடல் ஆரோக்கியத்தை பெற முடியும்.

அதுமட்டுமல்லாமல் இதில் வேறு சில சத்துக்களும் நிறைந்துள்ளன. அவை பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை ஆகும்.

இதில் பொட்டாசியமும், காப்பரும் இதயத்திற்கு நல்லது. இரத்த சோகை, இரண்டாம் ரக சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவையும் டார்க் சாக்லெட் எடுத்துக் கொள்வதால் குணமாகும்.

பல் பிரச்சனையை போக்கும்

இதில் உள்ள தியோப்ரோமைன் பற்களில் உள்ள எனாமல் தன்மையை பலப்படுத்தும்.

அதவாது மற்ற இனிப்பை போன்று இவை பற்குழியை ஏற்படுத்தாது.

ஆனால் சொக்லெட் சாப்பிட்டவுடன் நன்றாக வாய் கொப்பளித்தால் போதுமானது. குறிப்பாக இந்த தியோப்ரோமைன் சளியையும் குணப்படுத்தும்.

இரண்டாம் உலகில் சந்திக்கும் காதலர்கள்!

இரண்டாம் உலகம் படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை அனுஷ்கா

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் 'இரண்டாம் உலகம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, பி.வி.பி சினிமாஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. நவ. 22ம் தேதி வெளியாகவிருப்பதால் 'இரண்டாம் உலகம்' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தை பற்றி 'இரண்டாம் உலகம்' குழுவினரிடம் விச்சரித்தோம். மது - ரம்யா ரெண்டு பேரும் இந்த பூமியில் அழகான காதலர்கள். அவர்கள் இருவரும் இன்னொரு உலகில் மருவன் - வர்ணா என்கிற பெயரில் இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள். அவர்கள் எப்படி அந்த இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள், அந்த உலகத்துக்கு எப்படி போனார்கள், அவர்களின் அனுபவம் எப்படி இருந்தது என்பதுதான் 'இரண்டாம் உலகம்' படத்தில் செல்வராகவன் சொல்லவரும் கதை.

தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம், பின்னர் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க 'மயக்கம் என்ன' படத்தினை இயக்கினார் செல்வராகவன். அப்படத்தினைத் தொடர்ந்து செல்வராகவன் மீண்டும் கையில் எடுத்த கதைத்தான் 'இரண்டாம் உலகம்'.

இப்படத்தில் தனது வேடத்திற்காக உடலமைப்பை எல்லாம் மாற்றியிருக்கிறார் ஆர்யா. அத்துடன் முதன் முறையாக இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜுடன் கூட்டணி அமைத்து புதியதொரு டீமுடன் களம் இறங்குகிறார் செல்வராகவன். ஒளிப்பதிவிற்கு மட்டும் நெருங்கிய நண்பரான ராம்ஜியை ஒப்பந்தம் செய்தார். முதலில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்ய செல்வராகவன் மற்றும் ராம்ஜி பயணம் செய்தார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத இடங்களைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜார்ஜியாவில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

இதுவரை இந்திய திரையுலகில் எந்தொரு படமும் அங்கு படப்பிடிப்பு நடத்தியதில்லை. ஸ்பாட்டுக்கு போய் சேரவே சில நாட்கள் ஆகும் என்பதால் படக்குழுவில் முக்கியமானவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு சுமார் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. முக்கிய காட்சிகளை அங்கு படமாக்கிய பின் அதன் கிராபிக்ஸ் பணிகள் மும்பையில் நடந்துள்ளது.

ஜனவரி 2014ல் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லரை பார்த்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் செல்வராகவன். தெலுங்கில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், "அவதார் மாதிரியான படங்கள் இந்தியாவில் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கான தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது" என்று அவர் கூற இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் ஒரு பாடலை உஸ்பெகிஸ்தான் நாட்டில் படமாக்கலாம் என்று விசாவிற்கு அப்ளை செய்தார்கள். ஆனால் விசா குழப்பத்தில் திரும்பி விட்டார்கள். கடைசியில் அங்கு படமாக்க இருந்த காட்சிகள் அனைத்தையுமே சென்னையில் ECR பகுதியில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடிப்பதற்குள் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இதர படங்களில் பிஸியாகி விட்டார். இதனால், பின்னணி இசையை மட்டும் அனிருத் அமைத்திருக்கிறார். பின்னணி இசைக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்று அங்குள்ள இசை கலைஞர்களை பயன்படுத்திருக்கிறார் அனிருத்.

தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தவுடன், சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடிப்பதற்குள் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இதர படங்களில் பிஸியாகி விட்டார். இதனால், பின்னணி இசையை மட்டும் அனிருத் அமைத்திருக்கிறார்.

பின்னணி இசைக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்று அங்குள்ள இசை கலைஞர்களை பயன்படுத்திருக்கிறார் அனிருத். தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தவுடன், சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இப்படம் தனக்கு மிகவும் பிடித்துப் போனதால் அதன் சிங்கப்பூர், மலேஷியா உரிமை வாங்கியிருக்கிறார் நடிகர் ஆர்யா.

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை வாசியுங்கள்...

1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/-இலிருந்து 8000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழிமூல பரீட்சையின் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.

4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை.அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன.ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.

5. ஜப்பானில் முதலாம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையான மானவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.

7.ஜப்பான் பாடசாலைகளில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை பரீட்சைகளே இல்லை.கல்வியின் நோக்கம் விடயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்தவல்ல என்கிறார்கள்.

8. ஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.

9.ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் புகையிரதங்கள் தாமதமாக வந்த நேரம் ஆகக் கூடியது சுமார் 7 வினாடிகள் மாத்திரமே.

10. ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள்.அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக சமிபாடு அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணித்தியாலம் ஒதுக்கப்படுகிறது.

கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்!

 homemade-tomato-juice-recipe

கற்றாழை

கற்றாழைச் சாற்றினை முகம், கன்னங்கள் மற்றும் மூக்கு பகுதிகளில் தடவி ஊற வைத்து கழுவினால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.

தக்காளி சாறு

தக்காளிச் சாற்றினை முகத்தில் 20 நிமிடங்களுக்கு ஊற வைத்தால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.

உப்பு நீர்

கருவளையங்கள் வராமல் இருக்க, முகத்தை தினமும் உப்பு நீரால் சுத்தம் செய்யவும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை தினமும் சுத்தம் செய்யவும். இது கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் வராமல் தடுக்கும்.

ஆயில் மசாஜ்

ஆலிவ் எண்ணெயை கொண்டு முகத்தை அடிக்கடி மசாஜ் செய்து வரவும். இது கரும்புள்ளிகள் வராமல் தடுக்க உதவும். அதனால், முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி கரும்புள்ளிகள் வராமல் தடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி, சூடான நீரில் நனைத்த துணியை முகத்தில் மூடி 15 நிமிடங்கள் காய வைக்கவும். இதனால் இந்த வெதுவெதுப்பான துணி சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி, கரும்புள்ளிகளை தளர்வடையச் செய்யும்.

ஆலிவ் ஆயில்

சிறு துளி ஆலிவ் எண்ணெயுடன், எலுமிச்சை சாறு சேர்த்து உபயோகித்தால், அது கரும்புள்ளிகளை நீக்கும். அதற்கு இதனை முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது சில நிமிடங்கள் தடவி காய வைக்கவும். பின்னர் முகத்தை அலம்பவும்.

தயிர்

2 மேஜை கரண்டி தயிருடன், 2 மேஜைகரண்டி ஓட்ஸ் பொடி மற்றும் 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதனை கரும்புள்ளிகள் மீது தடவி 10 நிமிடங்கள் காய விடவும். பின்னர் முகத்தை அலம்பவும். இது நல்ல பலனைத் தரும்.

சர்க்கரை

ஒரு மேஜை கரண்டி சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து, அதனை மூக்கிலும் கன்னத்திலும் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவினால், அவை குறையக்கூடும். அதுமட்டுமின்றி இந்த கலவை சருமத்தை பளிச்சிட செய்யவும் உதவும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவினா,ல் கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமல்லாமல், அதிகப்படியான எண்ணெய்ப் பசை சருமத்தில் இருந்தும் விடுபடலாம்.

உருளைக்கிழங்கு

கரும்புள்ளிகளை நீக்குவதற்கு முதலில் தேவைப்படுவது உருளைக்கிழங்கு தான். அதில் கருப்பு மற்றும் பச்சை நிறப் புள்ளிகள் இல்லாதவாறு இருக்க வேண்டும். பின் உருளைக்கிழங்கை சீவிக் கொள்ளவும். பின்பு அதனை கரும்புள்ளிகள் மீது 10 நிமிடங்கள் தேய்க்கவும். காய்ந்த பின்பு முகத்தை கழுவவும்.

அஜித் குமார் (நடிகர்) - வாழ்க்கை வரலாறு (Biography)

 Ajit

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

 குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார். மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்’, இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்’, மூன்று முறை ‘விஜய் விருதுகளையும்’, இரண்டு முறை ‘தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரு கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார். இத்தகைய சிறப்புமிக்க ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜீத் குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: மே 1, 1971

பிறப்பிடம்: ஹைதராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா

பணி: நடிகர், கார் பந்தய வீரர்

நாட்டுரிமை: இந்தியன்



பிறப்பு


அஜீத் குமார் அவர்கள், இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது அண்ணனான அனூப் குமார் நியூயார்க்கில் பங்குத்தரகராகவும், அவரது தம்பியான அணில் குமார் சியாட்டலில் பணிபுரிகிறார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

என்னதான் பாலக்காடு வழி தந்தைக்கும், சிந்தி தாய்க்கும் மகனாக, ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும், அஜீத் குமார் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் வளர்ந்தார். சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் இருக்கும் ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், படிப்பின் மீது பற்றற்றவராகவே காணப்பட்டார். இதனால், 1986ல் தனது உயர்நிலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே, பெற்றோர்களின் விருப்பத்தையும் எதிர்த்துத் தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.

ஆரம்பகாலப் பணிகள்


தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே கைவிட்ட அவர், ஒரு இரு சக்கர பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார். பைக், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டிய அவர், தானாகவே அவற்றை ஓட்ட கற்றுக்கொண்டு, அதற்கான உரிமத்தையும் பெற்றார். பைக் பந்தயம் தான் தனது தொழில் பாதை என்று தேர்ந்தெடுத்த அவர், அதில் கலந்து கொள்ளப் பணம் வேண்டுமென்பதால், அவ்வப்போது, சிறு சிறு பத்திரிக்கை விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். பைக் பந்தயத்தின் போது ஏற்பட்ட காயத்தினால், அவரைப் பல வணிக முகவர்கள் அச்சு ஊடகங்களின் விளம்பரங்களில் நடிக்க வைக்க அவரைத் தூண்டினர். இதனால், அவருக்குப் பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. ‘பந்தயமா? சினிமாவா?’ என்று வந்த போது, அவர் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால், சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

திரையுலக வாழ்க்கை


1991ல், தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அஜீத் குமார் அவர்கள், அப்படத்தின் இயக்குனர் மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின்னர், ஓர் ஆண்டுகள் கழித்து, 1992ல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும், அப்படம் அவருக்கு ‘சிறந்த புதுமுகத்திற்கான விருதைப்’ பெற்றுத்தந்தது. அதே ஆண்டில், செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே, தமிழ்த் திரையுலகில் அவரது முதல் படமாகும். இதைத் தொடர்ந்து, அவர், ‘பாசமலர்கள்’ (1994), ‘பவித்ரா’ (1994), ‘ராஜாவின் பார்வையிலே’ (1995), ‘ஆசை’ (1995) போன்ற படங்களில் நடித்தார். இதில், 1995ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்த் திரையுலகில், ‘வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத் தந்தது.

தனது இயல்பான மற்றும் இயற்கையான நடிப்பில் ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற அஜீத் குமார் அவர்கள், தொடர்ந்து ‘வான்மதி’ (1996), ‘கல்லூரி வாசல்’ (1996), ‘மைனர் மாப்பிள்ளை’ (1996), ‘காதல் கோட்டை’ (1996), ‘நேசம்’ (1997), ‘ராசி’ (1997), ‘உல்லாசம்’ (1997), ‘பகைவன்’ (1997), ‘ரெட்டை ஜடை வயசு’ (1997), ‘காதல் மன்னன்’ (1998), ‘அவள் வருவாளா’ (1998), ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ (கௌரவ வேடம்) (1998), ‘உயிரோடு உயிராக’ (1998), ‘தொடரும்’ (1999), ‘உன்னை தேடி’ (1999), ‘வாலி’ (1999), ‘ஆனந்த பூங்காற்றே’ (1999), ‘நீ வருவாய் என’ (கௌரவ வேடம்) (1999), ‘அமர்க்களம்’ (1999), ‘முகவரி’ (2000), ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ (2000), ‘உன்னை கொடு என்னை தருவேன்’ (2000), ‘தீனா’ (2001), ‘சிட்டிசன்’ (2001), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘அசோகா’ (கௌரவ வேடம்) (2001), ‘ரெட்’ (2002), ‘ராஜா’ (2002), ‘வில்லன்’ (2002), ‘என்னை தாலாட்ட வருவாளா’ (கௌரவ வேடம்) (2003), ‘ஆஞ்சநேயா’ (2003), ‘ஜனா’ (2004), ‘அட்டகாசம்’ (2004), ‘ஜீ’ (2005), ‘பரமசிவன்’ (2006), ‘திருப்பதி’ (2006), ‘வரலாறு’ (2006), ‘ஆழ்வார்’ (2007), ‘கிரீடம்’ (2007), ‘பில்லா 2007’ (2007), ‘ஏகன்’ (2008), ‘அசல்’ (2010), ‘மங்காத்தா’ (2011), ‘பில்லா 2’ (2012), ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ (2012) போன்ற படங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தைத் தமிழ்த் திரையுலகில் தக்கவைத்துக் கொண்டார்.


பந்தய வாழ்க்கை

தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அவர், மும்பை, சென்னை, தில்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களுள் ஒருவர் என்றும், ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையைப் பெற்றார். ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர், 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இல்லற வாழ்க்கை

1999 ஆம் ஆண்டில், சரணின் ‘அமர்க்களம்’ என்ற படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஷாலினியும் இதற்கு ஒப்புக்கொண்டதால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்களது திருமணத்திற்குப் பின்னர், தனது திரையுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்றார் ஷாலினி. அவர்களுக்கு, ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.

விருதுகள்

•2௦௦1 – தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்திற்காக வென்றார்.

•2006 – தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, ‘வரலாறு’ படத்திற்காக வென்றார்.

•விஜய் விருதுகளை 2௦௦6ல் ‘வரலாறு’, 2011ல் மங்காத்தா படத்திற்காக இரண்டு முறையும் பெற்றார்.

•சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதை’, 1999ல் ‘வாலி’ படத்திற்காகவும், 2௦௦1ல் ‘சிட்டிசன்’ படத்திற்காகவும் வென்றார்.

•சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சென்னை டைம்ஸ் விருதை’, ‘மங்காத்தா’ படத்திற்காக 2011 ஆம் ஆண்டில் பெற்றார்.

•ஃபிலிம்ஃபேர் விருதுகள் 1999ல் ‘வாலி’ படத்திற்காகவும், 2002ல் ‘வில்லன்’ படத்திற்காகவும், 2006ல் ‘வரலாறு’ படத்திற்காகவும், 2௦௦7ல் ‘பில்லா’ படத்திற்காகவும் அவருக்கு வழங்கப்பட்டது.

காலவரிசை

1971: ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், சுப்ரமணியம் என்பவருக்கும், மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார்.

1986: உயர்நிலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே, தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.

1991: தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமானார்.

1992: ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.

1992: செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ என்ற படம் மூலமாகத் தமிழ் திரையுலகில் கால்பதித்தார்.

1999: ‘அமர்க்களம்’ படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார்.

2௦௦௦: இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.

2௦௦1: தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்திற்காக வென்றார்.

2003: ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார்.

2006: தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, ‘வரலாறு’ படத்திற்காக வென்றார்.

2008: ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.

2010: ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்டார்.

‘ஜில்லா’ திரைப்பட ஸ்டில்ஸ்!

    

அறிமுக இயக்குனர் நேசன் இயக்கத்தில் விஜய, மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், பரோட்டா சூரி, என நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ள திரைப்படம் ஜில்லா.


 அரசியல், பஞ்ச் என எதுவும் இல்லாமல் குடும்ப பொழுதுபோக்குப் படமாக உருவாகி வருகிறது.படத்தில் விஜய்க்கு காவல்துறை அதிகாரி வேடம். படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.



இப்படத்துக்காக விஜய், ஸ்ரேயா கோஷலுடன் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார். படத்தின் இசையை டிசம்பரில் ஸ்டார் மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.


மதுரையை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில், பெரும்பாலான காட்சிகளை கிட்டத்தட்ட எடுத்து முடித்துவிட்டார்களாம். பாடல்கள் காட்சிகள் மட்டும் தான் இன்னும் பாக்கி இருக்கிறதாம்.


   


டெக்னாலஜி வில்லனா? நண்பனா?

ஹன்ஸா காஷ்யப் வழக்கறிஞர். அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தில் முதுகலையும், சைபர் லா சட்டமும், காபிரைட் தொடர்பான சட்டத்தில் ஐக்கிய நாடுகள் அகாடமியின் டிப்ளமோவும் பெற்றவர். இசையில் முதுகலை எம்.ஏ., எம்.ஃபில் பட்டதாரியான இவர் ஆன்லைன் இசைப் பகிர்வு பற்றி ஆராய்ந்து வருகிறார்.

- எஸ்.ஹன்ஸா காஷ்யப்

ஆன்லைன் குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பல செக்யூரிடி சாஃப்ட்வேர்கள், அப்ளிகேஷன்கள் வந்துவிட்டன. ஆனால், வெறும் புத்திசாலித்தனத்தை மட்டும் வைத்து எப்படியெல்லாம் நாம் ஏமாற்றப்பட முடியும், நம்மை எப்படியெல்லாம் காத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்த விரும்பியதே இந்தத் தகவல் கைடின் நோக்கம்.

மொபைல் ஃபோன்:

* நான் ஒரு முறை வெளியூருக்குக் கிளம்பினேன். போய்ச் சேர்ந்ததும்தான் தெரிந்தது என் மொபைலை மறந்து விட்டுக் கிளம்பியிருக்கிறேன். என் கணவருக்கு என் மொபைல் எண்ணிலிருந்தே எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். (எப்படி முடியும் என உங்கள் மகனை/மகளைக் கேளுங்கள். சொல்வார்கள்.) கணவர் குழம்பிவிட்டார். உங்களைப் போலவே. (பார்க்க பெட்டிச் செய்தி)

பெட்டிச் செய்தி:

அப்படி அனுப்ப நிறைய சைட்கள் உள்ளன. என் மொபைல் எண்ணை, அந்த சைட்-இல் பதிந்து வைத்தால், அவர்கள் ஒரு பாஸ்வோர்டை என் எண்ணுக்கு அனுப்புவார்கள். எங்கிருந்தாலும், இன்டர்நெட் மூலம், அந்த பாஸ்வோர்டை உபயோகித்து, என் எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியும்.

ஆனால், என் பாஸ்வோர்ட் தெரிந்த மற்றொரு நபரும், என் எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியும் அல்லவா?

உங்கள் மகள், கல்லூரியில் படிக்கிறாள். ஹாஸ்டல் அறைத்தோழி, நம் மகள் மொபைலில் இருந்து பாஸ்வோர்டைத் திருடியோ அல்லது மகளின் எண்ணை அந்த சைட்-ல் பதிந்துவிட்டு, ‘ஒரு நிமிஷம் உன் மொபைலைத் தாடி’ என சொல்லி, அந்த நிமிடம், அவர்கள் அனுப்பும் பாஸ்வோர்டைக் குறித்துக் கொண்டு, அதை மொபைலில் இருந்து அழித்துவிட்டு, உங்கள் மகளின் எண்ணிலிருந்து யாருக்கு வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்ப முடியுமே. இதுபோன்ற சைட்களின் வழியாக வரும் செய்திகளை நாம் புறக்கணிக்கலாம் என்றால், எந்த செய்தி அப்படி வந்தது என அறிய முடியாது. அந்த செய்திகளும், நம் மொபைல் மெசேஜ் சென்டர் வழியாகவே வரும். ஏன்?… உங்கள் எண்ணிலிருந்து கூட உங்கள் மகளுக்கு செய்தி அனுப்ப முடியும். அல்லவா?

* அதற்கும் மேலாக, பிரபல பத்திரிகையின் மொபைல் எண் எனக்குத் தெரியும். பத்திரிகையிலிருந்து, தோழியின் எண்ணுக்கு வாழ்த்துச் செய்தியுடன், கால் வந்தது போல காட்ட முடியும். அவளை ஏமாற்றவும் முடியும். அதற்கும் டெக்னாலஜி துணை போகிறது.

இப்போது சொல்லுங்கள்….

இதற்கு என்ன செய்வது? இதுபோன்ற குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட முடியும்தான். ஆனால் அதற்கு முன்…?

மொபைல் என்பது உங்கள் உள்ளாடையைப் போல மிகமிக பர்சனலானது. அதைப் பகிர்ந்து கொள்ளல் வேண்டாமே. முக்கியமான எஸ்.எம்.எஸ். வரும் போதெல்லாம், தொடர்பு கொண்டு செய்தியைக் கேட்டு விடுவதே நல்லது.

* இரண்டாவது, ஒருவர் தான் அனுப்பிய எஸ்.எம். எஸ்ஸையே, தான் அனுப்பியது அல்ல எனக்கூறி அதை நிரூபிக்கவும் முடியும். அதாவது நான் சொன்ன முதல் திருட்டுத் தனத்தின் எதிர் வடிவம். ஒரு ஈ-மெயிலை அனுப்பிவிட்டு, ஏதும் பிரச்னை வரும்போது, அதை நான் அனுப்பவில்லை, யாரோ, இன்டர்நெட்டைப் பயன்படுத்தி விளையாடி இருக்கிறார்கள், எனச் சொல்ல முடியும்.

* Ways2sms இல், நண்பரின் பிறந்த நாள் தேதியைப் பதிந்து வைத்திருந்தேன். அந்த தேதியில், அவருக்கான என் வாழ்த்து, அந்த தளத்திலிருந்து தானாகவே வருடா வருடம் அனுப்பப்பட்டுவிடும்.

நன்றாகத்தான் இருக்கிறது இந்த வசதி. ஆனால், இதில் என்ன தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது…?

அ. அவருடனான நட்பு நமக்கு மறந்து இருவரும் தூரப்போன பிறகும் நம் வாழ்த்து அவருக்குக் கிடைப்பது நட்பை பலப்படுத்தும்.

ஆ. அவரது பிரிவு, மனக் கசப்பினால் எனில், நம் வாழ்த்தை அவர் வேறுவிதமாகவும் பார்க்கக் கூடும் அல்லவா…? எனில், நாம் மறக்காமல் அந்த வாழ்த்துப் பதிவை நீக்க வேண்டும்.

* ரமாவின் மேனேஜர் அவளிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, அதை குறிப்பிட்ட அக்கௌண்ட்டில், கட்டி விடுமாறு சொன்னார். மறுநாள், அவள் நிச்சயதார்த்தம். லீவு வேறு கேட்டிருந்தாள். மேனேஜர் நாளை மறுநாள் அதைக் கட்டினால்போதும் எனச் சொல்லி விட்டார். ரமாவுக்கு சந்தோஷம். மறுநாள், போலீஸ் அவளைத் திருடிய குற்றத்துக்காகக் கைது செய்தது. பணம் கொடுத்ததை மானேஜர் மறுத்துவிட்டார். அது அவர் பொக்கணக்கு சொல்லி எடுத்த பணம். அவர் தான் கொடுத்தார் என்பதற்கு சாட்சி ஏதும் இல்லை.

அவள் என்ன செய்திருந்திருக்க வேண்டும்? அவர் பணம் கொடுத்ததும், ‘நீங்கள் கொடுத்த ரூபாய் இவ்வளவு பணத்தை நாளை மறுநாள் கட்டிவிடுகிறேன்; லீவு கொடுத்ததற்கு நன்றி’ என ஈ-மெயிலிலும், எஸ்.எம்.எஸ்ஸிலும், லீவுக்கு நன்றி சொல்லும் சாக்கில் சாட்சியங்களை ஏற்படுத்தியிருந்தால், பிரச்னையைச் சமாளிக்க சுலபமாக இருந்திருக்கும். அல்லவா?

பெட்டி செய்தி

‘ஈ-மெயில்களை, மறைக்க, மறுக்க, மாற்ற முடியும் எனும் பட்சத்தில், ரமா ஆதாரம் ஏற்படுத்துவதில், என்ன பிரயோசனம்?’ எனும் கேள்வி எழுகிறதா? ரமாவின் அந்த ஆதாரம், அவளுக்கு உதவியாக இருக்கக் கூடிய பலவற்றில் ஒன்று. ரமா, மானேஜர் இருவரின் மற்ற செயல்பாடுகள், மற்ற ஆதாரங்கள், இவற்றைப் பொறுத்து உண்மை நிரூபிக்கப்படும்.

* கல்லூரியில் படிக்கும் என் தங்கைக்கு எப்போது, தொலைபேசினாலும், ‘நீங்கள் அழைத்த எண்… பிஸி …பிறகு தொடர்பு கொள்ளவும்’ என்றே பதில் வரும். ஒரே நாளில் சுமார், 20 கால்களுக்குப் பிறகு, எனக்கு பொறி தட்டியது… ஆம்…பிஸி எனும் செய்தியையே காலர் ட்யூனாக வைத்துள்ளாள். ‘ஏன்டீ..?’ என்ற கேள்விக்கு அவள் சொன்ன பதில், ‘இல்லக்கா… யாராவது ஃபோன் பண்ணி எடுக்கலைன்னா கோச்சுக்கறாங்க… பிஸி…ன்னு தெரிஞ்சா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நாமளும் முக்கியமான அழைப்புகளை மட்டும் அட்டென்ட் பண்ணிணாபோதும்… அதான்…" என்றாள்.

ஈ-மெயில்:

* உங்கள் நண்பர் நீங்கள் அனுப்பிய ஈ-மெயிலைப் படித்துவிட்டாரா, இன்னும் படிக்கவில்லையா, எனத் தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது, நீங்கள் அனுப்பிய மெயிலைப் படித்துவிட்டு அதன்படி நடக்கப் பிடிக்காமல், ‘இன்னும் படிக்கவில்லை சார்’ எனச் சாக்குப் போக்கு ஸோல்லும் ஊழியரா?

அவர்கள் படித்ததை அவர்களுக்குத் தெரியாமலேயே அறிந்து கொள்ள SPYPIG உதவி செய்கிறது. நீங்கள் அவர்களைக் கண்காணிப்பதை தெரியப்படுத்த விரும்பினால், நீங்கள் படித்தது எனக்குத் தெரியும்" எனும் வாசகம் அவர்கள் படித்ததும் அவர்கள் ஸ்க்ரீனில் இடம் பெறும் படியும் செய்யலாம்.

* இப்போது உங்களுக்கு உங்கள் பாஸ் இதேபோல ஸ்பைபிக் உதவியுடன் ஒற்று வேலை மெயில் அனுப்புகிறார் எனக் கொள்வோம். அதை எப்படிக் கண்டுபிடிப்பது…?

எந்த மெயில் அப்படி இருக்க வாய்ப்புள்ளது என நீங்கள் சந்தேகிக்கிறீர்களோ அந்த மெயிலின் டெக்ஸ்டை காபி செய்யுங்கள். அப்படிச் செய்யும் போது, அந்த காபி செய்த பகுதிகள் எழுத்து உள்ள பகுதிகள் நீல நிறமாகும் அல்லவா..? ஆனால், ஒரு இடத்தில் மட்டும், எழுத்து இல்லாமல், நீல நிற சதுரம் இருக்கும். அப்படி இருந்தால் அந்த மெயிலில் ஒற்று அனுப்பப்பட்டிருக்கிறது எனக் கொள்ளலாம்.

* என் தோழி எனக்கொரு ஈ-மெயில் அனுப்பியிருந்தாள். அவள் பிக்னிக் சென்ற புகைப்படங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. மறுநாள் அதை என் மற்றொரு தோழிக்கு காட்டுவதற்கு தேடினேன். ஈ-மெயில் வந்த தடயமே இல்லை. கால் செய்து கேட்டதும்தான் தெரிந்தது. அந்த ஈ-மெயிலை ஒரு முறைதான் பார்க்க முடியும் என்று. புகைப்படங்கள் இன்டர்நெட்டில் தவறாகப் பதிவிறக்கப்படுவதால், அப்படி செய்ததாகக் கூறினாள் (அதற்கென தனி சாஃப்ட்வேர் அப்ளிகேஷன்ஸ் உண்டு.)

நன்று.

ஆனால், இதே முறையை எப்படியெல்லாம் தவறாக உபயோகிக்க முடியும்? ஈ-மெயிலில் ஒன்றைக் கூறி விட்டு பின் இல்லை என மறுக்கலாமே?

இதற்கு என்ன செய்வது?

முக்கியமான ஈ-மெயில்களைக் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத வேறு பெயரில் ஒரு ஃபோல்டரில் போடலாம்.

(காபி செய்து cut and paste செய்து ஃபைலை வேறெங்காவது வைத்துக் கொள்வதில், தொடர்பு இழக்கப்படும்(continuity miss) என்பதை நாம் அறிய வேண்டும். பிரச்னை ஏதும் வரும்போது, நாம் அதை ஒரு சாட்சியாகப் பயன்படுத்த முடியாது என நாம் அறிந்திருக்க வேண்டும்.)

* ஏன்? ஈ-மெயில் அனுப்பியவர்(தவறானவராக இருக்கும் பட்சத்தில்,) முன்பு சொன்னது போல் "hiding facility’ஐ உபயோகிக்காவிட்டால், தான் அனுப்பிய ஈ-மெயில்களை உங்களிடமிருந்து அழிக்க முயலக்கூடும். அழிக்கவும் முடியும். அப்போது அவர் உங்கள் இன்-பாக்ஸில் தான் கவனம் வைப்பார். அதில்தான் தன் மெயிலைத் தேடுவார்.

* ஒவ்வொரு சிஸ்டத்துக்கும் தோராயமாக… ஒரு (முகவரி போல எனச் சொல்லலாம்) ‘IP Address’ உண்டு. ஒரு ஈ-மெயில் எந்த சிஸ்டத்திலிருந்து வருகிறது என அதை வைத்து சொல்லலாம். ஒரு சிஸ்டமிலிருந்து ‘ஒரு மாதிரியான’ ஈ-மெயில் உங்களுக்கு வருகிறது என்றால் கூட அந்த குறிப்பிட்ட சிஸ்டமிலிருந்து வந்தது என அறியலாம்; ஆனால், பலபேர் உபயோகிக்கும், அந்த சிஸ்டமின் உரிமையாளர் மேல் வேண்டுமானால் குற்றம் சாட்டலாம். எந்த நபர் என நிரூபிப்பது கடினம். அல்லவா? அது தவிர IP Address ஐயும், hack and crack செய்ய முடியும். தவறாகப் பயன்படுத்த முடியும். எனவே, ‘ஜாக்கிரதை’… இதைத் தவிர வேறென்ன சொல்ல?

* வியாபார ஈ-மெயில்களுக்கு ’Certifying Authorities’ உண்டு. அவர்கள் மெயிலின் source-ஐ, அதன் நம்பகத் தன்மையை check செய்து certify செய்து தருவார்கள். ஆனால், இதற்கான செலவு நிறுவனங்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும். உங்களுக்கும், எனக்கும் அல்ல.

* என் வீட்டிலிருக்கும், என் கணினியை, என் மிகமிக நெருங்கிய தோழியைக் கூட தொட விடுவதில்லை என அவளுக்கு வருத்தம்தான். என்ன செய்ய? டெக் உலகம் அப்படி இருக்கிறதே? உங்கள், கணினி ஒரு சில நிமிடங்கள் தவறானவர் கைகளுக்குச் சென்றால்…

ஒரு மென்பொருள் உண்டு. அதை அடுத்தவர் கணினியில் install செய்து விட்டால், அந்த அடுத்த நபர் தன் கணினியில், என்னவெல்லாம் செய்கிறார்… பார்க்கிறார்… என பார்க்க முடியும். அது அவருக்குத் தெரியவே தெரியாது. (remote administration tools)

ஹையோ… என இருக்கிறதா?… சிந்தியுங்கள்.

* என் கணினியில், அடிக்கடி ஒரு விளம்பரம் வரும். கணினியை வைரஸ்ஸிலிருந்து பாதுகாக்க அந்த anti-virus மென்பொருளை வாங்கும்படி சொல்லும் விளம்பரம் அது. தினம் ஏழெட்டு முறையாவது அந்த விளம்பரம் வரும்.

திடீரென்று, என் கணினியில் ஒரு அவசரச் செய்தி… என் கணினி பழுதுபட்டுவிட்ட"தென்று. கணினியை முழு scan செய்து பார்த்தேன். பழுதொன்றுமில்லை. அவசரச் செய்தியின் படபடப்பில், தினம் நான் பார்க்கும், அந்த anti-virus software பதற்றத்தில், உடனே ‘buy / install’ என click செய்து விடுவேன் என அந்த anti – virus software விற்கும் நிறுவனத்தின் கணிப்பு / ஏற்பாடு… ‘எங்கிட்ட மோதாதே’… என நான் தப்பித்தேன்.

* நானென்ன பிஸினெஸ் பெண்ணா? என்னிடம் மொபைலிலும், ஈ-மெயிலிலும் திருட என்ன இருக்கிறது என எண்ணாதீர்கள். உங்களைப்பற்றிய, எந்தத் தகவலும் யாரோ ஒருவருக்குத் தெரிவது கூட, உங்களுக்கு ஊறு விளைவிக்கும். நம்புங்கள். ஈ-மெயில் அனுப்ப, புதிதாக வந்த ஒரு IM-இல் என் பெயர் முகவரியைப் பதிந்தேன். அவ்வளவுதான். என் மொபைல் எண், நான் அதிகம் விரும்பும் தகவல்கள், தேடும் விஷயங்கள்… என என்னைப்பற்றி அத்தனையும் அதில் பார்க்க முடிந்தது.

ஆனால், இதில், என் தவறுதான் அதிகம்.

‘நான் பதிந்த site-இன் related site-களுக்கு என்னைப் பற்றிய தகவல்களைத் தரத் தயார்’- என நான் முழு contract / disclaimer-ஐ சரியாகப் பார்க்காமல் ஒப்புக் கொண்டிருக்கிறேன்.

சரி. இப்படிப் பார்க்கலாம். உங்கள் முழு பெயரையும் url bar – இல் டைப் செய்யுங்கள். உங்களைப் பற்றிய நீங்கள் கணினியில் எங்கெல்லாம் பதிந்திருக்கிறீர்கள்… அத்தனை தகவல்களும் screen-இல் விரியும். இப்போது சொல்லுங்கள் உங்களைப் பற்றிய இத்தனை தகவல்கள் அடுத்தவருக்குத் தெரிவது அவசியமா?

இதற்கு என்ன செய்வது?

Contract / disclaimer களை நன்கு படித்து பின், Accept ஐ click செய்யவும்.

சமூக வலைதளங்கள்.

* நீங்கள் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டே வெவ்வேறு சைட்களைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கொள்வோம். அந்த பல site-களில் ஏதாவது ஒன்று, ஸ்பை சைட்" (ஒற்று வேலை) ஆக இருக்கக் கூடும்.

உதாரணமாக கரன்ட் செய்தி ஒன்று பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்… அன்றைய அரசியல் கிசு கிசு பற்றி…!

அந்தத் தகவல் குறித்த வார்த்தைகளை டைப் செய்து தேடுவீர்கள். அது குறித்த தகவல்களுடன், ஒரு site உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் தகவல்களை…!

இடையே ஃபேஸ்புக் பக்கம் வருவீர்கள். பின் கொஞ்சம் ஆஃபிஸ் வேலை அல்லது வேறெதாவது சைட்.

அதற்குள் அந்த ஸ்பை சைட் தன் வேலையைத் தொடங்கும், பாஸ்வோர்டுடன் உங்களது எந்தப் பக்கமாவது திறந்திருக்கிறதா என நோட்டமிடும். (அதற்கு பாஸ்வோர்ட் கிடைக்காது தான். ஆனால், ஃபேஸ்புக், ஈ-மெயில் போல ஏதோ ஒன்று திறந்திருக்கிறதா என நோட்டமிடும்.)

இப்போது அந்த ‘ஸ்பை சைட்’இன் தலைப்பு உடனே மாறி ஃபேஸ்புக் அல்லது ஈமெயில் என வரும் (உங்களது எந்த பக்கம் ஓபனாகி உள்ளதோ அந்த பக்கத்தின் பெயர் வரும்) ஆனால், அது உங்கள் கவனத்துக்கு வராது.

பல சைட்கள் ஓபனாகி இருக்க எந்த சைட்டின் தலைப்பில் ஃபேஸ்புக்/ஈ-மெயில் என்றிருக்கிறதோ அந்த பக்கத்தை க்ளிக் செய்வீர்கள். (அது ‘ஸ்பை சைட்டாக’ இருக்கலாம்)

அது மறுபடி கேட்கும்…லாக்-இன் செய்யச் சொல்லி…! அவசரத்தில் நாமும் லாக் -இன் செய்ய ஐடி பாஸ்வோர்டை டைப் செய்வோம். முடிந்தது ஜோலி.

இந்த ஐடி பாஸ்வோர்டை அவர்கள் உடனே உபயோகிக்க மாட்டார்கள். அதனால் உங்களுக்கு சந்தேகம் கூட வராது.

* ஒரு ஐந்து நிமிடம், உங்கள் ப்ரபொஃபைல் படத்தைப் போட்டு, உங்கள் பெயரில் அக்கவுன்ட் (ஃபேஸ்புக் போன்ற) ஆரம்பித்து, பின் (உங்கள்) அக்கவுன்டிலிருந்து, தனது அக்கவுன்டுக்கு ‘ஒரு மாதிரி’ டயலாக்குகளை அள்ளிவிட்டு, பின் அந்த இன்பாக்ஸ் மெஸேஜை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து (அந்தப் பக்கத்தை அப்படியே புகைப்படம் போல காப்பி எடுப்பது), பின் அந்த மெஸேஜை ஷேர் பண்ணி.." அவரு (நீங்கள்) இப்படியெல்லாம் அசிங்கமாக பேசறாரு…!" என பொய் சொல்ல முடியும். ஒரு வேளை அந்த மாதிரி பிரச்னை வந்தால், அது பொய் என கண்டுபிடிக்க முடியும் தான். ஆனால், அந்தப் பொய்த் தகவல் நமக்குத் தெரியும் வரை எத்தனை பேருக்குப் பகிரப்பட்டதோ…?

* உங்களுக்கு, இது நீங்களா..?" என்றோ உங்கள் துறை பற்றிய வேலை வாய்ப்புச் செய்திகள்..!" என்றோ உங்களுக்கு ஆசை காட்டும் கேள்விகளுடன் பாப்-அப் வந்தால் அவற்றைத் திறக்க வேண்டாம். அவை உங்கள் நண்பரிடமிருந்து வந்திருந்தாலும்…!

அவை நண்பரிடமிருந்து அவருக்கே தெரியாமல் வந்திருக்கக் கூடும்.

அவற்றைத் திறந்தால், அப்போது முதல் அது ஆக்டிவேட் ஆக ஆரம்பிக்கும். உங்கள் அக்கவுன்டிலிருந்து, செய்திகளைப் படங்களை அனுப்ப ஆரம்பிக்கும். அவை ஒரு ‘மாதிரி’ யானவைகளாகவும் இருக்கக்கூடும். உஷார்!

* ஆன்லைன் செக்யூரிட்டி பற்றி சொன்ன இவை எவையுமே யாரையும் பயப்படுத்த அல்ல…! ரோட்டில் எப்படியெல்லாம் விபத்துக்கு வாய்ப்புள்ளது எனச் சொல்ல மட்டுமே…!

சாலை விதிகளைப் பின்பற்றுங்கள்; ஹெல்மெட் அணியுங்கள்; பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்கிறேன்.

அவ்வளவே…!

முன்பெல்லாம் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் ‘பக்கத்தில் திருடன் இருக்கலாம். ஜாக்கிரதை…’ என போலீஸ் மைக் போட்டு கூவுவார்கள். ஆனால், இப்போது…‘நீ திருட /திருடனாக வாய்ப்பு … இதோ… உன் வீட்டுக்குள்’ எனும் நிலைமை. திருடும் களமே வீட்டினுள். என்ன செய்ய?

ஐரோப்பிய விண்கலம் நாளை பூமியில் விழக்கூடும்: விஞ்ஞானிகள் தகவல்!

 

ஜியோசி எனப்படும் கடல் நீரோட்டத்தை ஆராயும் ஐரோப்பிய செயற்கை கோள் ஒன்று செயல் இழக்க செய்யப்படுகிறது. இன்று அல்லது நாளை அது பூமியில் விழக்கூடும் என விஞானிகள் கருதுகின்றன.

கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடல் நீரோட்ட ஈர்ப்பு பற்றி ஆயவு செய்ய இது விண்ணில் செலுத்தபப்ட்டது. ஆனால் அக்டோபர் 21ம் தேதி எரிபொருள் பிரச்சனையால் பராமரிப்பு இன்றி சக்தி இழந்தது. சுமார் 80 கிலோமீட்டர் உயரத்தில் இந்த விண்கலம் உடைந்து  160 கி.மீ உயரத்தில் இருந்து வெற்றுப்பாதையில் விழக்கூடும் என ஐரோப்பிய விண்வெளி ஏஜென்ஸி தெரிவிகிறது.

அதோடு இந்த விண்கல துண்டுகள் எந்த நேரத்தில் எந்த இடத்தில் விழும் என கணிக்கமுடியாது என்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராச்சியாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் ஒரு மனிதன் விண்கலம் தாக்கி இறந்தான் என்பது இதற்கு முன் நடந்ததில்லை.  மின்னல் தாகுவதை விட விண்கலம் தாக்குவது 65 ஆயிரம் மடங்கு குறைவு.

1997ம் ஆண்டு துல்சா, ஒக்லஹோமாவில் ஒரு பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வில்லியம்ஸ் எனபவர் மீது ஒரு உலோக துண்டு விழுந்து தாக்கியது. அப்போது அது டெல்டா ராக்கெட் துண்டு என உறுதி செய்யப்பட்டதாக உள்ளூர் செய்தி தெரிவித்தது.

இந்த சம்பவத்தில் வில்லியம்ஸ் காயம் அடைந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

“வைக்கோல் குக்கர்” எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து சாதனை!

 vaikool

வைக்கோல் மூலம் வீட்டில் சமையல் எரிபொருளை மிச்சப்படுத்தலாம்” என்கிறார் கோபிச்செட்டிபாளையம், ஸ்ரீ நேஷனல் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து.

”எனக்கு அறிவியல் மீது ஆர்வம் அதிகம். அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை நிறையப் படிப்பேன். ‘அடிக்கடி பெட்ரோல், சிலிண்டர் விலையை ஏத்திடுறாங்க. குடும்பத்தை நடத்துறது பெரிய சவாலா இருக்கு’னு அப்பாவும் அம்மாவும்  பேசிக்குவாங்க. இதுக்கு நாம் ஏதாவது செய்யலாமேனு நினைச்சேன். அப்போ உருவானதுதான் இந்த வைக்கோல் குக்கர்” என்ற ரிஷி சித்து, அதன் செய்முறையை விளக்கினார்.

”சாதம் சமைக்க, பாத்திரத்தில் தண்ணியைக் கொதிக்கவெச்சு, அதில் அரிசியைப் போடுவோம். அது முழுமையா வேகும் வரை காஸ் அடுப்பு எரியும். அப்படி இல்லாமல், ஒரு கொதிவந்ததும் அந்தப் பாத்திரத்தை எடுத்து, வைக்கோல் நிரப்பப்பட்ட அட்டைப் பெட்டியில நடுவில் வைக்கணும். பிறகு, வைக்கோலை அடைச்சு செய்த ஒரு தலையணையால் மூடிடணும். வைக்கோல் என்பது திறன் குறைந்த ஒரு வெப்பக் கடத்தி. அதனால், அது வெப்பம் வெளியே போகாமல் பாதுகாக்கும். அந்த வெப்பத்தில் உள்ளே இருக்கும் அரிசி, நாம குக்கரில் சமைக்கும் நேரத்தில் வெந்துவிடும். இதனால், எரிபொருள் மிச்சம்’ என்றார் ரிஷி.

சாதம் மட்டுமல்ல; பருப்பு, சுண்டல் மற்றும் அனைத்து விதமான காய்கறிகளையும் இப்படி வைக்கோல் குக்கர் மூலம் வேகவைக்கலாம்.

”இதனால், நேரம் மற்றும் எரிபொருள் மிச்சப்படும்;  ஆரோக்கியமானதும்கூட. முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தது. குக்கரில் சமைக்கிறப்போ, கஞ்சி வெளியே போக வாய்ப்பு இல்லாததால் அரிசியோட கலந்துடுது… இது சர்க்கரை நோய்க்குக் காரணமாயிடுது. ஆனா, இந்த முறையில் நாம் கஞ்சியைத் தனியே வடிச்சுக்கலாம். சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும்” என்கிறார்.

ரிஷி சித்துவின் இந்தக் கண்டுபிடிப்பு, டெல்லியில் நடைபெறும் பாலஸ்ரீ விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட 15 சிறந்த கண்டுபிடிப்புகளில்  ஒன்றாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

”விருது கிடைப்பதைவிட, இதைப் பார்த்து நூறு பேர் பயன்படுத்தினாலும் கணிசமான அளவு எரிபொருள் மிச்சப்படுமே. நாட்டுக்கு செய்யும் நல்ல விஷயமா அதை நினைக்கிறேன்” என்று ‘பெரிய மனுஷ’த் தோரணையில் பொதுநல அக்கறையுடன் சொல்கிறார் ரிஷி சித்து.

வாழ்த்துகள் சித்து!

Apple iPhone 6. நவீன வசதிகளுடன் வெளியாகவுள்ளது!

ஆப்பிள் கம்ப்யூட்டர்  உலகின் மிகப்பெரிய கணினி மற்றும்    தகவல் தொடர்பு     சாதனங்களைத் தயாரித்து     வெளியிடும்      நிறுவனம்.

ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் ஆனாலும் சரி,  அதனுடன் தொடர்புடைய மொபைல்கள் போன்ற தகவல்கள் தொடர்பு சாதனங்கள் ஆனாலும் சரி… அதற்கென தனியான iOS ல் இயங்கு கூடிய இயங்குதளங்களைப் பெற்றிருக்கிறது.


ஆப்பிள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல்களின் பாதுகாப்பும் மிக மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டவை. வேறு யாராலும் அதன் கட்டமைப்பைச் சேதப்படுத்தி எளிதில் வைரஸ் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது. அந்த வகையில் வெளியிடப்பட்ட ஒரு அருமையான ஆப்பிள் ஸ்மார்ட்போன் Apple iphone 5s.

 Apple iPhone 5s Smartphone specifications:

•4Inch Retina Display
• Nano SIM
• A6 Quad Core Processor
• 1GB RAM
• 8MP Camera
• Facetime HD Camera
• Bluetooth 4.0
• New Lightning Dock
•SIRI

இப்போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களால் விற்பனை சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. தற்பொழுது உள்ள நிலைமையில் ஆப்பிள் போன் 5s கிட்டதட்ட விற்பனையாகிவிட்டது. இனி புதியதாக தயாரித்து விற்பனைக்கு வெளியிட்டால்தான் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஆப்பிள் தனது புதிய ஸ்மார்ட் போனை வெளியிட உள்ளது. ஆப்பிள் ஐபோன 6 என பெயரிடப்பட்டுள்ள இப்போனில் ஆப்பிள் 5S Smartphone விட பல மடங்கு நவீன வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் உலவுகின்றன.

 அப்படி என்னதான் அதில் இடம்பெற்றுள்ளன என்பதைப் பார்ப்போம்.

•மிகப்பெரிய திரையுடன் கூடிய Retina Display உடன் வெளிவர உள்ளது.

•திரையின் அளவு 4.8 அங்குலம்.

•வயர்லஸ் சார்ஜிங் வசதி…

•சாம்சங் நிறுவனம், எல்.ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள வளைந்த Flexible Screen போன்றதொரு தோற்றத்தையும் ஆப்பிள் ஐபோன் 6 ம் பெற்றிருக்கும் என நம்ப்பபடுகிறது.

இப்போன் அடுத்த ஆண்டு ஜூலை 2014 க்குள் வெளியிடப்படும் என ஆப்பிள் நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5ஜி வலையமைப்புக்கு 600 மில்லியன் முதலீடு!


அடுத்த தலைமுறை வலையமைப்பான 5 ஜி (5th Generation) தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக ஹுவாயி அறிவித்துள்ளது.

தற்போது சில நாடுகளில் மட்டுமே 4ஜி அதாவது 4 ஆம் தலைமுறை வலையமைப்பு பாவனையில் உள்ளது. சில நாடுகளில் பரீட்சாத்தமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் 5ஜி தொழிநுட்ப ஆராய்ச்சிக்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 5ஜி வலையமைப்பானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பாவனைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை தென்கொரிய நிறுவனமான செம்சுங் மின்னல் வேக 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.

இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர் தொலைவினுள் , செக்கனுக்குள் 1 ஜிகா பைட் தரவுப் பரிமாற்ற வேகம் சாத்தியப்பட்டுள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டளவில் இத்தொழில்நுட்பம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுமெனவும் செம்சுங் தெரிவித்திருந்தது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் முப்பரிமாண திரைப்படங்கள், கேம்கள், அல்ட்ரா எச்.டிரியல் டைம் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை எவ்வித தங்கு தடையுமின்றி மேற்கொள்ள முடியுமென செம்சுங் சுட்டிக்காட்டியிருந்தது.

நாம் 100 கோடி இரசிகர்களை வைத்திருக்கிறோம் : கமல்!








 
 




 
ஆறு வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று தனது திரைப் பயணத்தை தொடங்கிய கமல், இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளான பிறகும் அதே மாணவ பருவத்தைப்போன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.

குறிப்பாக விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட்டுக்கு இணையாக இயக்கி நடித்து மாபெரும் பரபரப்பை உண்டு பண்ணினார்.

அப்படம் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை பட்டியலில் இடம்பிடித்தது.

அதனால் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை அதிக புத்துணர்ச்சியுடன் இயக்கிக்கொண்டிருக்கும் கமல், 200 கோடியெல்லாம் ஒரு பெரிய வசூல் இல்லை. அதிகபட்சமாக ஆயிரம் கோடி ரூபாய் வரை நம்மால் வசூலிக்க முடியும் என்கிறார்.

காரணம், நாம் 100 கோடி இரசிகர்களை வைத்திருக்கிறோம். அதனால் அவர்கள் விரும்பும் வகையில் நல்ல படங்களை கொடுத்தால் இது கண்டிப்பாக சாத்தியமாகும். இதை எதிர்காலத்தில் செய்து காட்ட வேண்டும் என்ற ஆர்வமும் எனக்குள் உள்ளது என்கிறார் கமல்.

ஃபேஸ்புக்கில் இணைந்த ஷங்கர்!

 

தன் இணைய தளத்தினைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் பேஸ்ஃபுக் தளத்தில் இணைந்திருக்கிறார்.

எந்தொரு படத்தினை இயக்கி வந்தாலும், அப்படத்தினைப் பற்றிய செய்தியை தனது இணையத்தில் (http://www.directorshankaronline.com/) அவ்வப்போது செய்தியாகவும், புகைப்படமாகவும் வெளியிட்டு வந்தார் இயக்குநர் ஷங்கர்.

தற்போது அந்த இணையத்தினைத் தொடர்ந்து, பேஸ்ஃபுக் தளத்திலும் இணைந்திருக்கிறார். அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/shankarofficial
தனது ஃபேஸ்புக் இணையத்தில், “ஃபேஸ்புக்கி இணையலாம் என்று முடிவெடுத்து இணைந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது, தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். எனது பெயரில் நிறையப் பேர் போலியாக இயங்கி வருகிறார்கள். இதுவே எனது அதிகாரப்பூர்வ பக்கம்.

'ஆரம்பம்' படம் பார்த்தேன். முழுமையான பொழுதுபோக்குப் படம்! அஜித் மிகவும் அழகாக இருக்கிறார். யுவனின் பின்னணி இசை சிறப்பாக இருந்தது. ஏ.எம்.ரத்னம் சாரை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படக்குழுவிற்கு எனது பாராட்டுக்கள்.” என தெரிவித்துள்ளார்.

மொபைலில் கட்டணத் திருட்டை தடுப்பது எப்படி?

மொபைல் போன்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனங்களான ஏர்செல், ஏர்டெல், டாட்டா டோகோமோ, ரிலையன்ஸ் என அனைத்து முன்னணி நிறுவனங்களின் கட்டணத்திருட்டுக்கு முடிவு கிடைத்துள்ளது. இது சாத்தியமா? மேற்படி அனைத்து நிறுவனங்களும் நமக்கு தெரியாமலே, நமக்கு தேவையே இல்லாத ஏதாவது சொத்தை சேவையை ஏக்டிவேட் செய்துவிடுவார்கள். தினசரி 2 ரூபாய், 5 ரூபாயென பிச்சையெடுக்காததுதான் குறை!

இது தொடர்பாக பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் குவியவே, ‘ட்ராய்’ இதற்கு முழுப்பொறுப்பேற்று விடையும் கொண்டுள்ளது. இனிமேல் இந்த அடாவடி திருட்டுகளை நிறுத்த நீங்கள் 155223 என்ற எண்னை பயன்படுத்துங்கள்.

இந்த எண்னானது அனைத்து நெட்வொர்க்குக்கும் பொதுவானதே! இதன் மூலமாக உங்களுக்கு தேவையில்லாத அனைத்து சேவைகளையும் நிறுத்த முடியும். இதனால் உங்களுடைய பணம் திருடப்படாது என்பது ட்ராயின் கருத்து!

அறிவோம் ஆயிரம்!


ஆற்று நீர் வாதம் போக்கும்
அருவி நீர் பித்தம் போக்கும்
சோத்து நீர் இரண்டையும் போக்கும்.....


எம் முன்னோர்களும், தற்காலத்தில் தாயகத்தில் வாழ்வோரும் தங்கள் காலை உணவாக சாப்பிடும் உணவுதான் பழஞ்சோறு. பழஞ்சோற்றுடன் எஞ்சியிருந்த கறிகளையும் சேர்த்து...ப் பிரட்டி சாப்பிடும் போது ஒரு தனி ருசியை உணர்ந்து கொள்ளலாம். கறி இல்லாத விடத்து அதனுடன் வெங்காயம், பச்சமிளகாய், ஊறுகாய், தயிர் என்பனவற்றை சேர்த்து திரணையாகவோ அல்லது நீர் ஆகாரமாகவோ அருந்தி உற்சாகமாகவும், தைரியசாலிகளாகவும், பலகாலம் சுகதேகிகளாக உயிர் வாழ்ந்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி, உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல், எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய. பழஞ்சோறும் தொட்டுக் கொள்ள வெண்காயமும் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி!)

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது புளுங்கல் அரிசி என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.

ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

ஏனைய நாட்களைவிட திருமணவீடுகள், சடங்கு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என எப்போதாவது உங்கள் வீட்டில் விருந்து நடந்தால் எதை மறந்தாலும் மறுநாள் பழஞ்சோற்றை சாப்பிட மட்டும் மறந்து விடாதீர்கள், அங்குதான் பல கறிகளும் நிறைய சோறும் மிஞ்சியிருக்கும், ஆட்களும் அதிகமாக இருப்பார்கள். எல்லோரும் சுற்றிவர இருந்து வெங்காயத்தை கடித்தபடி பழஞ்சோறு சாப்பிடும் அந்த சுவையும் மகிழ்ச்சியும் வார்த்தைகளால் சொல்லி விபரிக்க முடியாதவை.

உலககோப்பை ஹாக்கியை நடத்தும் வாய்ப்பை பெற்றது இந்தியா!

சர்வதேச ஆக்கி சம்மேளனம் 2018–ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் நாடுகளை அறிவித்துள்ளது.இதன்படி உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி 2018–ம் ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை இந்தியாவில் நடைபெறும என்று தெரிவித்துள்ளது.

nov 9 Hockey-World-Cup_

2018ம் ஆண்டுக்கான 14வது உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்த உரிமம் கேட்டு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்து இருந்தன. ஆண்கள் உலக கோப்பை போட்டியை நடத்த வாய்ப்பு கேட்டு ஹாக்கி இந்தியா அனுமதி கோரி இருந்தது.

பல்வேறு நாடுகளின் விண்ணப்பங்களை ஆய்வு செய்த சர்வதேச ஹாக்கி சம்மேளனம் 2018ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்தும் நாடுகளை அறிவித்துள்ளது.

இதன்படி உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி 2018ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. உலக கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டி இங்கிலாந்தில் ஜூலை 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

India to host men`s Hockey World Cup in 2018

**********************************


 India will be hosting the men`s Hockey World Cup for the third time in 2018, the International Hockey Federation (FIH) said

உலகின் பிரபல சுற்றுலா தல பட்டியலில் இடம் பெற்ற கேரளா!

குடும்பத்தினரோடு விடுமுறையை கழிக்க உலகின் தலைசிறந்த 10 இடங்களின் பட்டியலை லோன்லி பிளானட்’ என்ற சுற்றுலா வழிகாட்டி பிரசுர நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இந்த பட்டியலில் நியூ யார்க், டென்மார்க், பராகுவே, ஐஸ்லாந்து, இத்தாலி, ஹவாய் தீவுகளுக்கு அடுத்தபடியாக கேரள மாநிலமும் இடம் பெற்றுள்ளது.பசுமையான இயற்கை சூழலில் அழகிய கடற்கரைகள், நீர் நிலைகள், தேசிய பூங்காக்கள், யானை காப்பகங்கள் போன்றவை இங்கு உள்ளன.மேலும் இந்தியாவின் இதர இடங்களை போல் இல்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாகவும் கேரளா இருப்பதால் 2014-ல் விடுமுறையை கழிக்க தலைசிறந்த 10 இடங்களில் ஒன்றாக கேரளாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேரளா என்றாலும், சுற்றுலா என்றாலும் ஒரே அர்த்தத்தைதான் தரும். ஏனென்றால் கடற்கரைகளில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களையும், அழகும் அமைதியும் நிரம்பிய உப்பங்கழிகளில் மிதக்கும் படகு இல்லங்களையும், எண்ணற்ற கோயில்களையும், ஆயுர்வேதத்தின் அற்புதத்தையும், வளமை குன்றா ஏரிகள் மற்றும் குளங்களையும், கவின் கொஞ்சும் தீவுகளையும் நாம் கேரளாவை தவிர உலகில் வேறெங்கும் பார்த்திட முடியாது. இதன் காரணமாக உலகம் முழுவதிமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு படையெடுத்து வருவதுபோல் வந்து கொண்டே இருக்கின்றனர்.
கேரளா

அதனால்தான் அண்மையில் நேஷனல் ஜாக்ரபிக்கின் ‘டிராவலர்’ பத்திரிக்கையில் ‘உலகின் பத்து அற்புதங்கள்’ , ‘வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 50 சுற்றுலாத் தலங்கள்’ மற்றும் ’21-ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த பயணங்கள்’ ஆகிய தலைப்புகளில் கேரளாவையும் குறிப்பிடப்பட்டு போற்றப்பட்டுள்ளது.இந்நிலையில்தான் ‘லோன்லி பிளானட்’ என்ற சுற்றுலா வழிகாட்டி பிரசுர நிறுவனமும் 2014-ல் விடுமுறையை கழிக்க தலைசிறந்த 10 இடங்களில் ஒன்றாக கேரளாவை சுட்டிக்காட்டியுள்ளது

கேரள மாநிலத்தில் உள்ள மாநகரமாகட்டும், சிறிய கிராமமாகட்டும் அது ‘கடவுளின் சொந்த நாடு’என்ற மணிமகுடத்தை சுமந்துகொண்டு மிடுக்குடன் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

கேரளாவின் பதினான்கு மாவட்டங்களான காசர்கோட், கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திரிசூர், எர்ணாக்குளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் என்று அனைத்துமே தன்னளவிலே அற்புதமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகின்றன.

அதோடு இந்த மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் கண்களுக்கும், உள்ளத்துக்கும் அறுசுவை விருந்து படைக்கும் எண்ணற்ற சுற்றுலா மையங்கள் கொடி போல படர்ந்து வண்ண வண்ணப்பூக்களை சொரிந்துகொண்டிருக்கின்றன.கேரளாவின் மணற்பாங்கான கடற்கரைகளும், பேரின்பத்தை தரும் உப்பங்கழிகளும், இயற்கை எழிலால் போர்த்தப்பட்ட மலைவாசஸ்தலங்களும், பக்திமணம் கமழும் இடங்களும் சுற்றுலாப் பயணிகளை உற்சாகமூட்டி அவர்களின் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத இன்பச் சுமையை சுமக்கச் செய்யும் பேரற்புதங்கள்.

மனதை கொள்ளை கொள்ளும் நீர்பரப்புகள்!

வர்கலா, பேக்கல், கோவளம், மீன்குன்னு, செராய், பய்யம்பலம், ஷங்குமுகம், முழுப்பிலங்காடு உள்ளிட்ட கடற்கரைகள் கேரள பிரதேசத்தை இணையற்ற சுற்றுலா மையமாக திகழச் செய்து கொண்டிருக்கின்றன.

கேரளாவின் மயக்கும் உப்பங்கழிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஆலப்புழா, குமரகம், திருவல்லம், காசர்கோட் போன்ற பகுதிகளில் நீங்கள் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் வாழ்வில் அதுவரை அனுபவவித்திடாத நொடிகளாகவே பேரின்பத்தை வாரி இறைத்து நகர்ந்து செல்லும்.

அதிலும் குறிப்பாக இந்த உப்பங்கழிகளில் மிதக்கும் கெட்டுவல்லங்களும், படகு இல்லங்களும் உங்களுக்குள் உண்டாக்கும் பரவசத்தை போன்று நீங்கள் உலகின் எத்துனை சிறந்த நட்சத்திர ஹோட்டல்களிலும் சுகித்துவிட முடியாது.

அதோடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பாரம்பரிய ‘ஸ்நேக் போட் ரேஸ்’ அல்லது பாம்புப் படகுப் போட்டியில் உப்பங்கழிகளின் சலசலக்கும் நீரலைகளை கிழித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும் படகுகளை மெய்சிலிர்க்க வேடிக்கை பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் எல்லையற்றது.

வேம்பநாடு ஏரி, அஷ்டமுடி ஏரி, பூக்கோட் ஏரி, சாஷ்டாம்கொட்டா ஏரி, வீரன்புழா வெள்ளயாணி ஏரி, பரவூர் காயல், மனச்சிரா போன்ற ஏரிகள் கேரளாவின் வளமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் மிகச் சிறந்த உதாரணங்கள். இதில் வேம்பநாடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

கேரள மலைவாசஸ்தலங்கள் – இயற்கையன்னையின் இணையில்லா படைப்பு!

கேரளாவின் தொன்னலம் வாய்ந்த அற்புத மலைவாசஸ்தலமான மூணார் பிரதேசம் மற்ற தென்னிந்திய மலைப்பிரதேசங்களை போல இதுவரை வணிகமயமாக்கலின் பிடியில் சிக்காமல் அதன் தனித்துவத்தையும், புராதன பேரழகையும் காப்பாற்றிக் கொண்டு வருகிறது.

அதோடு வயநாடு மாவட்டத்துக்கு பிறகு மிகவும் பிரசித்தி பெற்ற தேன் நிலவு ஸ்தலமாக மூணார் மலைப்பிரதேசம் அறிப்படுகிறது. மேலும் கேரளாவில் வாகமன், பொன்முடி, தேக்கடி, பீர்மேடு உள்ளிட்ட கண்கவர் மலைவாசஸ்தலங்கள் ஏராளம் நிறைந்து கிடக்கின்றன.

இதில் தேக்கடி அதன் காட்டுயிர் வாழ்க்கைக்காகவும், சாகச வாய்ப்புகளுக்காகவும் பயணிகள் மத்தியில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. எப்படி பார்த்தாலும் கேரளாவின் மலைவாசஸ்தலங்களின் மடியில் உற்சாகம் பொங்கும் சுற்றுலா அனுபவங்கள் எக்கச்சக்கம் காத்துக்கிடக்கின்றன.

கலாச்சாரம், சமயச் சிறப்பு, உணவு வகைகள் – ஒருங்கிணைந்த அதிசயம்!

இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரங்களிலிருந்து வேறுபட்ட ஒரு கலாச்சாரத்தை கேரள மாநிலம் கொண்டுள்ளது. இதன் பலவகைப்பட்ட கலைவடிவங்களும், உணவு வகைகளும், ஆடை ஆபரணங்களும் கேரள மாநிலத்தை மற்ற இந்திய பகுதிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானதாக காட்சிப்படுத்தி கொண்டிருக்கின்றன.

கேரள மாநிலம் பல்வேறு நடன வடிவங்கள், நாடக வடிவங்கள், நாட்டுப்புறக் கலைகள் என்று கலைமகளின் இருப்பிடமாக திகழ்ந்து வருகிறது. இதில் குறிப்பாக கதக்களியும், மோகினியாட்டமும் உலகப்பிரசித்தம்.

அதோடு பரிசமுட்டு, கூடியாட்டம், கிறிஸ்த்தவர்களின் சவுட்டு நாடகம், இஸ்லாமியர்களின் ஒப்பனா என்பன போன்ற புகழ்பெற்ற நடன மற்றும் நாடக வடிவங்களில் சமயச் சாயம் பூசப்பட்டிருப்பதையும் நீங்கள் பார்க்கலாம். மேலும் முண்டு என்ற பாரம்பரிய உடை உடுத்தும் கேரள மக்கள் கர்நாடக சங்கீதத்திலும் வல்லவர்களாகவே விளங்கி வருகின்றனர்.

புட்டு, இடியாப்பம், உன்னி அப்பம், பாலடை பிரதமன் (ஒரு வகை பாயசம்), நேந்திரம் பழ சிப்ஸ், மீன் உணவுகள், செவ்வரிசி போன்ற பதார்த்தங்கள் கேரளாவுக்கே உரித்தான உணவு வகைகள்.

இங்கு ஆடம்பரமான உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு, வாழை இலையில் பரிமாறப்படும் முறை ‘சத்யா’ என்று பிரபலமாக அறியப்படுகிறது. அதிலும் ஓணம் திருவிழாவின் போது இதே சத்யா பாணி விருந்து ‘ஓணம் சத்யா’ என்ற பெயரில் வெகு விமரிசையாகவும், ஆடம்பரமாகவும் நடத்தப்படும்.

கேரளாவில் ஹிந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்றும் முக்கிய மதங்களாக விளங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஹிந்துக் கடவுளான பகவதி அம்மனுக்கு கேரளா முழுக்க எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன.

இவற்றில் சோட்டாணிக்கரா பகவதி கோயில், ஆட்டுக்கால் பகவதி கோயில், கொடுங்கல்லூர் பகவதி கோயில், மீன்குளத்தி பகவதி கோயில், மங்கோட்டு காவு பகவதி கோயில் உள்ளிட்டவை கேரளாவின் பிரதான மற்றும் பக்தர்கள் அதிகமாக கூடும் பகவதி கோயில்களாகும்.

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோயிலுக்கு உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனர். சபரிமலை அய்யப்பன் கோயிலை பற்றி சொல்லவே தேவையில்லை.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கோயில்களில் சபரிமலை கோயிலுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இவைதவிர திரிசூரில் உள்ள அயிராணிக்குளம் மஹாதேவா கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், திருவல்லா ஸ்ரீவல்லப கோயில் உள்ளிட்டவை கேரளாவின் பிற முக்கிய கோயில்களாக கருதப்படுகின்றன.

இந்தக் கோயில்களில் நடத்தப்படும் திருவிழாக்களில் மாமலை போன்று காட்சியளிக்கும் யானைகள் நன்றாக அலங்கரிக்கப்பட்டு தெய்வ விகரகங்களை சுமந்து கொண்டு வீதிகளில் ஊர்வலம் வரும் காட்சி சுற்றுலாப் பயணிகளின் நினைவுகளில் என்றும் அழியாச் சித்திரமாய் நிலைத்திருக்கும்.

கேரள மாநிலத்தின் சிறப்புகளுக்கெல்லாம் கிரீடம் வைப்பது போன்ற ஒரு செய்தி அத்வைத வேதத்தை தோற்றுவித்த ஆதி சங்கரர் காலடி என்ற கேரள மாநிலத்தின் சிறிய கிராமத்தில் பிறந்தார் என்பதே.

மலயாட்டூர் தேவாலயம், கொச்சி செயின்ட் பிரான்சிஸ் தேவாலயம், போர்ட் கொச்சியில் உள்ள சாண்டா குரூஸ் பெசிலிக்கா, கோட்டயத்தின் செயின்ட் மேரிஸ் போரன்ஸ் தேவாலயம் உள்ளிட்டவை கேரளாவின் பிராதன கிறிஸ்தவ தேவாலயங்களாக கருதப்படுகின்றன.

மேலும் பழயங்காடி மசூதி, மடாயி மசூதி, சேரமான் ஜூம்மா மசூதி, கஞ்சிரமட்டம் மசூதி, மாலிக் தீனர் மசூதி போன்றவை கேரளாவின் முக்கிய இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களாகும்.

கேரளா விடுமுறைகள்
 மலை வாசஸ்தலம்
 தேன்மலா வாகமண் வயநாடு மூணார்
 தேவிகுளம் பீர்மேடு மலப்புரம் இடுக்கி
 பொன்முடி

மாநகரம்


 ஆலப்புழா தலச்சேரி கோட்டயம் புனலூர்
 ஆலுவா திருவனந்தபுரம் கொல்லம் கொச்சி

காட்டுயிர் வாழ்க்கை
 தேக்கடி நீலம்பூர் பாலக்காடு

கடற்கரைகள்

 பய்யோலி கோவளம் பொன்னனி காசர்கோட்
 பூவார் வர்கலா கோழிக்கோடு மாராரிக்குளம்
 பேக்கல் கண்ணூர் கொச்சி

புனித ஸ்தலம்

 பாலக்காடு திருவனந்தபுரம் சோட்டாணிக்கரா கொட்டாரக்கரா
 மலயாட்டூர் திருவல்லா திரிசூர் கல்பெட்டா
 பத்தனம்திட்டா சபரிமலை காலடி கொடுங்கல்லூர்
 அடூர் காஞ்சிரப்பள்ளி குருவாயூர் வர்கலா

புராதனம்
 அடூர் சுல்தான் பத்தேரி

சாகசப் பயணம்
 அதிரப்பள்ளி மலம்புழா குமரகம்

அடி இறக்கம் எனப்படும் கருப்பை தளர்வின் அறிகுறி!

தற்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது.

இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கான அறிகுறிகள் என்னவென்று பார்த்தால்...

இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.

ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.

எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பது.

பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மை

அடிக்கடி ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் புண்

சிலருக்கு இரும்பினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வு

அடிக்கடி சீறுநீர் வெளியேற்றம்

சிறுநீரை அடக்க முடியாத நிலை.

தன்னை அறியாமல் சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் நிலை

மலச்சிக்கல் போன்ற உணர்வு. அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவை கருப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.

இவற்றில் ஒரு சிலவோ, பல அறிகுறிகளோ இருப்பின், அவர்கள் மருத்துவரை அணுகி உரிய பயிற்சிகளைமேற்கொள்வது நல்லது.

தாய்ப்பால் அதிகம் சுரக்க வேண்டுமா?

 

தாய்ப்பால் அதிகம் சுரக்க எந்த வகையான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று குழம்புவது இயல்பு. குழந்தை பிறந்த பின்பு குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் உணவு மற்றும் முக்கிய உணவாக இருப்பது தாய்ப்பால். குறைந்தது 6 மாதக் காலமாவது கண்டிப்பாக தாய்பாலை  கொடுக்க வேண்டும். இதுதான் குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி. இதை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை எனலாம்.

சிலருக்கு தாய்ப்பால் குறைவாக சுரக்கும். மனஅழுத்தம், தூக்கமின்மை, சத்துள்ள ஆகாரம் உட்கொள்ளாதது, உடல் வறட்சி என்று பல காரணங்கள் இருக்கும்.  தாய் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் குழந்தைக்குச் சத்தாக சென்று சேரும். அதனால்  தாய்மார்கள் குழந்தைகளுக்காகவாவது சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு பொருட்கள் ஒரே சமயத்தில் எடுத்துக் கொள்ளலாமல் இடைவெளி விட்டு விட்டு எடுத்து கொள்வது நல்லது.

சில உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வதின் மூலம் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். வாருங்கள் பார்க்கலாம்.

* தினமும் முட்டை, மீண் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம். அசைவம் சாப்பிடதவர்கள் காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் எடுத்து கொள்ளலாம்.

*  பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம்.

* அஸ்வகந்தி இலைத் துளிர்களைப் பறித்து எண்ணெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் பால் சுரக்கும்.

*  பச்சை வேர்கடலை மென்று சாப்பிடலாம்.

* ஆலம் விழுது, துளிர் விதை இவ்விரண்டையும் எடுத்து மைய அரைத்து, 5 கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து  காலையில் மட்டும் உட்கொண்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

*  ஆல்வல்லி கிழங்கு வேக வைக்காமல் பச்சையாக மென்று தின்னலாம்.

* பப்பாளிக் காய்யை தோல் நீக்கி கடலைப் பருப்புடன் சேர்த்துக் கூட்டாகச் சமைத்துண்டால் பால் பெருகும்.

* துளசி இலைகளைப் புட்டு போல் அவித்துக் கசக்கி பிழிந்துச் சாற்றை தினமும் ஒரு ஸ்பூன் அளவு குடித்து வர தாய்ப்பால்  அதிகரிக்கும். இதயமும் பலமடையும்.

* உணவில் பூண்டு, உளுந்து, பெருங்காயம், வெந்தயம், செவ்வாழைப் பழம், உருளைக் கிழங்கு  பயன்படுத்தப் பால் பெருகும்.

*  வெட்டிவேர் சர்பத் அருந்த தாய்ப்பால் பெருகும்.

கர்பிணிகளுக்கு அவசியமாகும் பல் ஆரோக்கியம்!

 

கர்ப்ப கால ஆரோக்கியம் என்பது ஒரு தாயின் ஆரோக்கியத்தை மட்டும் அல்லாமல், அவள் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்தையும் சார்ந்த விஷயமாக இருப்பதால் அதற்கு அதீத கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

முதலில், கர்ப்பமுற்றிருப்பதாக ஒரு பெண்ணுக்குத் தெரிய வந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று உரிய பரிசோதனை செய்து அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மருத்துவர் பரிந்துரைக்கும் சோதனைகளை செய்து கொள்வதும், அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்வதும் அவசியம்.

இது இல்லாமல், ஒரு சில விஷயங்களை கர்பிணிகள் கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும்.

அதாவது, சில மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு முதலில் பல் சோதனை செய்து, ஏதேனும் பிரச்னை இருந்தால், உடனடியாக சிகிச்சை அளிப்பது வழக்கம்.

கர்ப்பிணிகளுக்கும், பல் பிரச்னைக்கும் என்ன சம்பந்தம் என்று பலரும் குழம்புவார்கள். ஆனால் உண்மையில் நிறைய சம்பந்தம் உண்டு. கர்ப்ப காலத்தின் போது ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சிலருக்கு பற்களில் பிரச்னைகள் தோன்ற வாய்ப்பு உள்ளது.

மேலும், ஏற்கனவே பல் சொத்தை இருந்தால் அதனால் வளரும் சிசுவுக்கும் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல் சொத்தையில் இருந்து கிருமிகள் எச்சில் வழியாக உணவில் கலந்து அதனால் வயிற்றில் வளரும் சிசுவை பாதிக்கலாம்.

எனவே தான் கர்ப்பிணிகளுக்கு பல் சோதனையும், சிகிச்சையும் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

கர்ப்பிணிக்கு பற்களில் ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனடியாக அவர் பல் மருத்துவரிடம் சென்று, கர்ப்பமுற்றிருப்பதை முதலில் தெரிவித்துவிட்டு, பல்லுக்கு சிகிச்சை பெறுவது அவசியம்.

இதில்லாமல், ஹார்மோன் மாற்றங்களால் சிலருக்கு ஈறு அழற்சி கர்ப்ப காலத்தில் தோன்றுவதும் உண்டு. இது பொதுவாக கர்ப்ப காலத்தின் 2 அல்லது 3வது மாதத்தில் தொடங்கி, 8வது  மாதத்தில் தீவிரமாகி, 9வது மாதம் குறைய ஆரம்பிக்கும். ஈறுகளில் அழற்சி, வீக்கம், ரத்தம் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகள். சிலருக்கு வீங்கிய ஈறு திசுக்களில் கட்டிகளைப் போன்றும் உருவாகும். ஆனால், அவற்றில் வலியிருக்காது. எனினும், பிரசவத்துக்குப் பிறகு இதன் பாதிப்பு குறையும். சிகிச்சை எடுத்துக் கொண்டால் பூரண குணம் அடையலாம்.

பற்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பின், ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் கர்ப்பிணிகள் பல் தேய்க்க வேண்டும்.

மேலும், கால்சியம் அதிகம் நிறைந்த உணவு பொருட்களான பால், தயிர் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மசக்கை காரணமாக அடிக்கடி வாந்தி எடுக்கும் கர்ப்பிணிகள், ஒவ்வொரு முறையும் வாந்தி எடுத்த பிறகு பற்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

முகம் கழுவுதலில் செய்யும் தவறுகள்!

 

பெண்களுக்கு அழகு என்றாலே அதில் பிரதானம் முக அழகுதான். எனவே, முகத்தை பராமரிக்க பல விதங்களில் முயற்சிப்பர். ஆனால், சில சின்ன சின்ன கவனக்குறைவுகளால் முக அழகு குறையலாம்.

தவறான சோப்புகளைப் பயன்படுத்துதல்..

பொதுவாக பெண்கள் அவர்களது சருமத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என தெரிந்து அதற்கேற்ற சோப்பு அல்லது முகம் கழுவும் க்ரீம்களை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல், வறண்ட சருமம் கொண்டவர்கள், எண்ணெய் பசை சருமத்துக்கு ஏற்ற சோப்புகளைப் பயன்படுத்தினால், சருமம் மேலும் வறண்டு போய்விடும். அதிலும், அதிக ரசாயனம் கலந்த சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.

அடிக்கடி முகம் கழுவக் கூடாது

பொதுவாகவே ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை முகம் கழுவலாம். அதற்கு மேலும் முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதாக நினைத்து முகம் கழுவினால், அது சருமத்தை பாதிக்கும். எனவே, வீட்டில் இருக்கும் போது அல்லது அலுவலகத்துக்கு செல்லும் போதும், அலுவலகத்தை அடைந்த பிறகு, இடைவேளையில் என அடிக்கடி முகம் கருவினால் சருமம் வறண்டு போகும்.

சருமத்துக்கும் ஓய்வு கொடுங்கள்

எப்போதும் முகத்துக்கு மேக்கப் போட்டு வைத்திருந்தாலும், இரவில் படுக்கச் செல்வதற்கு முன்பு, ஈரப் பஞ்சினால் முகத்தில் உள்ள அனைத்து மேக்கப் பூச்சுக்களையும் சுத்தமாக துடைத்து எடுத்துவிடுங்கள். இதனால், சருமத்துக்கு சிறிது ஓய்வு கிடைக்கும்.

வெதுவெதுப்பான தண்ணீர்

முகத்தை கழுவும் போது குளிர்ந்த நீரை விட, வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துங்கள். இதனால், உங்கள் முகத்தில் உள்ள நுண்ணிய துவாரங்கள் திறந்துகொள்ளும். இதனால், அதில் அடைந்துள்ள அழுக்கு மற்றும் மேக்கப் சாதனங்களின் துகள்கள், முகத்தை கழுவும் போது வெளியேறிவிடும். அதே சமயம் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால், நுண்ணிய துளைகள் மூடிக் கொள்ளும். எனவே, முகத்தில் அழுக்கை அகற்றும் வகையில் கழுவ வேண்டும் என்றால் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தலாம்.

காய்கறி தோல்

வீட்டில் பயன்படுத்தும் சில காய்கறிகளின் தோல், தக்காளி, கோதுமை மாவு, அரிசி போன்றவற்றை முகத்தில் போட்டு தேய்த்து முகத்தை கழுவுவதன் மூலம், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றலாம். சோப்பு போட்டு கழுவுவதை விட, இந்த முறை நல்ல பலனை தரும்.

உப்பு  தன்மை அல்லது கடின நீரைக் கொண்டு முகம் கழுவ வேண்டாம். இது முக சருமத்தின் தன்மையையே மாற்றிவிடும். அதுபோலவே, மிகவும் கடினமான துணிகளை வைத்து முகத்தை துடைக்கக் கூடாது. மிருதுவான துணிகளைக் கொண்டு முகத்தை ஒற்றி எடுப்பதே நலம்.

அதேப்போல, ஒருவர் பயன்படுத்திய டவலை மற்றொருவர் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். அதனால் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. சுத்தமாக நன்கு துவைத்து காயவைத்த டவல்களைப் பயன்படுத்துங்கள்.

புதிதாக எந்த க்ரீமையோ அல்லது சோப்பையோ பயன்படுத்தும் போது அதில் உள்ள முக்கியக் குறிப்புகளை படித்துப் பாருங்கள்.

மாய்சுரைஸர்கள் பயன்படுத்துவது நல்லது. மாஸ்சுரைஸர்களைப் பயன்படுத்தும் போது அவை நன்கு சருமத்தில் பரவி காயும் வரை காத்திருந்து பிறகு மேக்கப் சாதனங்களை பயன்படுத்துங்கள்.

முகத்துக்கு பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் இயற்கையான இயற்கைப் பொருட்களால் ஆனவையாக இருப்பதாக பார்த்து வாங்குங்கள்.

முகத்தை சுத்தப்படுத்த வென்று பிரத்யேகமாக உள்ள இயற்கை எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துங்கள். இது சருமத்தில் உள்ள நுண்ணிய துகள்களில் உள்ள அழுக்குகளை அகற்ற உதவும்.

எப்போதும் நிலைக்கும் வேலைகள் எவை!

இருபதாம் நூற்றாண்டு முடிந்து அடுத்த நூற்றாண்டில் நுழைந்த பின்னர் தகவல் தொழில் நுட்ப துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகையே தலைகீழாக புரட்டி போட்டுள்ளன. ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டு வந்த பல்வேறு துறைகள் அறிவியல் தொழில் நுட்ப மற்றும் சமூக காரணங்களுக்காக இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டன.

உதாரணமாக வீடியோ காசட் தொழிலை சொல்லலாம். ஆக இந்த மாற்றங்களின் வீச்சு அதிகரிக்கும் போது பல்வேறு வேலை இழப்பு இருந்தாலும், புதிய புதிய துறைகளின் தோற்றமும், ஏற்கனவே இருக்கும் குறிப்பிட்ட தொழில்களில் அசுர வளர்ச்சியும் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை ஒரு ஊழியர் ஒரே நிறுவனத்தில் பணி புரியும் காலம் சராசரியாக 5 ஆண்டுகளாக உள்ளது.

இது இனியும் குறைவதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன. தொழிலின் தன்மையே மாறும் நிலையில் இதன் தாக்கம் அதிகரிக்கும் என்ற போதும் ஒரே துறையில் பணியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மாற்றங்கள் எவ்வளவு வந்தாலும், சந்தைப் பொருளாதார சிக்கல்களை தாண்டி சில வேலை வாய்ப்புகளுக்கு என்றென்றும் கிராக்கி இருக்கும் என்று இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கருதுகிறார்கள். அப்படிப்பட்ட சில வேலைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

 பினான்சியல் பிளானர்:

நம்மில் பலராலும் நமது நிதி தொடர்பான பணிகளை முழுமையாக நாமே செய்து கொள்வதில் சிரமங்கள் உள்ளன. எவ்வளவு வருவாய் உள்ளது, எவ்வளவு சொத்துக்கள் மற்றும் கடன் உள்ளது, எவ்வளவை சேமிக்க வேண்டும், எவ்வளவை வரியாக செலுத்த வேண்டும், எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பது போன்ற நமது வாழ்க்கைக்கு அத்தியாவசியமாய் இருக்கும் நிதி குறித்த முடிவுகளை உரிய திட்டமிடலுடனும், தெளிவுடனும், சரியாகவும் செய்பவரே பினான்சியல் பிளானர் எனப்படும் நிதித் திட்டமிடுபவர் ஆவார். இது காலத்தால் அழிக்க முடியாத ஒரு வேலை என்று கூறப்படுகிறது.


எழுத்தாளர்:

எழுத்தாளர் என்பது கேட்பதற்கு எளிதாக இருப்பது போல் வாழ்வதற்கு அவ்வளவு எளிதானதல்ல. எழுதுவதற்கான விருப்பம் மட்டும் இருப்பதே ஒரு வெற்றிகரமான எழுத்தாளரை உருவாக்குவதில்லை. முழுமையான அர்ப்பணிப்பு, விருப்பு மற்றும் வேட்கை, மறுதலிப்புகளை பக்குவமாக ஏற்கும் தன்மை, விமர்சனங்களைத் தாங்குதல் போன்ற பல்வேறு குணங்களின் தொகுப்பாக இந்த பணி இருக்கிறது. எவ்வளவுதான் இடர்பாடுகள் வந்தாலும் அவற்றை ஏற்று எதிர் நடை போடும் எழுத்தாளர்களே சிறந்த வெற்றியாளர்களாக இருக்கிறார்கள். டெக்னிகல் ரைட்டர், கண்டெண்ட் ரைட்டர், ஆதர், கோஸ்ட் ரைட்டர் போன்ற பல்வேறு எழுத்தாளர் பணிகள் காலத்துக்கு ஏற்றபடி மாறினாலும் எழுத்தாளர்களுக்கான கிராக்கி எப்போதுமே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

கம்ப்யூட்டர் புரொகிராமர்:

பொருளாதார மந்த நிலை, பொருளாதார வளர்ச்சி நிலை என்ற இரண்டு நிலைகளிலும் பெரிதும் தேடப்படும் பணிகளில் ஒன்றாக கம்ப்யூட்டர் புரொகிராமர் பதவி இருந்து வந்துள்ளது. நிறுவனங்கள் மற்றும் வணிக அரங்கின் செயல்பாடுகளில் கம்ப்யூட்டர் உள்ளவரை பொருளாதார நிலை எப்படி இருந்தாலும் கம்ப்யூட்டர் புரொகிராமர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கத்தான் செய்யும் என்பது இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கருத்தாகும்.

ஆசிரியர்:

மனிதர்களுக்குத் தெரியாத விஷயங்கள் இருக்கும் வரை அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. எனவே தெளிவுபடுத்தும் பணியான ஆசிரியர் வேலைக்கு உலகம் உள்ளவரை நிச்சயமான தேவைகள் இருக்கும் என்பதே வல்லுனர்கள் கருத்தாகும். இந்தப் பணியும் பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்களின் தாக்குதல்களிலிருந்து விடுபட்டு நிரந்தர தேவைக்குரியதாக உள்ளது.

கெமிக்கல் இன்ஜினியர்:

கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் அந்த துறை மட்டுமன்றி மருத்துவம், எரிதி, தொழில் நுட்பம், காஸ்மெடிக்ஸ், பானங்கள் மற்றும் உணவுப் பதார்த்தங்கள் போன்ற மாறுபட்ட துறைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்துறை அதிகம் விரும்பப்படாத துறையாக தற்சமயம் தெரிந்தாலும் சிறந்த ஊதிய விகிதங்கள், ஸ்திரத்தன்மை, வேலைவாய்ப்பு சாத்தியங்கள் ஆகியவற்றால் நிலையான ஒரு பதவியாக மாறும் என்று கணிக்கப்படுகிறது.

சமையற்கலை வல்லுனர்:

நல்ல உணவை உண்பதற்காக பசியோடு காத்திருப்பவர்கள் இருக்கும் வரை சமையற்கலைக்கு அழிவே இல்லை. உலகின் பெரும்பான்மையானோர் உண்பதில் காட்டும் ஆர்வத்தை அவற்றை சமைப்பதில் காட்டுவதில்லை. உணவை சமைப்பதற்கான பொறுமை மற்றும் விருப்பமும் பெரும்பான்மையானவர்களிடம் இருப்பதில்லை. எனவேதான் சமையற்கலை என்பது எக்காலத்திலும் அழிக்க முடியாத மற்றும் சிறந்த வாய்ப்புகளை உள்ளடக்கிய பணியாக கணிக்கப்படுகிறது.

கணிதவியலாளர்:

பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த மனிதனுடன் சேர்ந்தே வளர்ந்து வந்ததுதான் கணிதவியல் துறையாகும். கணிதத்தின் வளர்ச்சியே மனித சமூகத்தின் வளர்ச்சியாக மாறியது என்பதும் வரலாறு காட்டும் உண்மையாகும். வெறும் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்குதல் என்பனவற்றைத் தாண்டிய விரிவான கணித வளர்ச்சிக்கு காலத்தால் அழிவில்லை.

மருந்தியலாளர்:

உடல் நிலை குறித்த ஆராய்ச்சி தேவைப்படும் போது எல்லாம் ஓய்வுடன் சில முக்கிய மருந்துகளும் மனிதனுக்கு தேவைப்படுகின்றன. ஊட்டச் சத்து, விட்டமின்கள், ஆன்டிபயாடிக், வலி மருந்து போன்ற பல்வேறு வகையிலான மருந்துப் பொருட்களை நோயுறும் காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மருத்துவம் இருக்கும் வரை மருந்து பொருட்களும் இருக்கும் என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை. அதே போல் மனிதன் இருக்கும் வரை நோயுறுவதும் நிச்சயம் என்பதால் காலத்தால் அழியாத மற்றுமொரு துறையாக இந்தத் துறை கணிக்கப்படுகிறது. 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top