.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 9 November 2013

பசங்க, அம்மா பையனா இருந்தா என்ன பிரச்சனை?

இந்த உலகில் அனைவருக்கும் அம்மா என்றால் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவர்கள் தானே இந்த அழகான உலகிற்கு கொண்டு வந்தது. அத்தகைய அம்மாவை ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி மிகவும் பிடிக்கும். இருப்பினும் ஆண்களுக்கு தான் அம்மா என்றால் உயிர். பெண்களுக்கு அப்பா தான் உயிர். வேண்டுமென்றால் அனைத்து வீடுகளிலும் பாருங்கள், பசங்க எல்லோருமே, அவர்களது அம்மாக்களிடமே மிகவும் பாசமாக நடந்து கொள்வார்கள். இவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பசங்களுக்கு திருமணம் ஆனப் பின்பு தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. ஏனெனில் அப்போது மற்றொரு பெண் அவர்களின் வாழ்க்கையில் நுழைவது தான் காரணம். ஆகவே ஆண்கள் அம்மாவின் மீது மிகவும் பாசம் உள்ளவர்களாக இருந்தால், திருமணத்திற்குப் பிறகு என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அனுபவசாலிகள் கூறுவதைப் பார்ப்போமா!!!

ஆண்கள் பெரும்பாலும் காதலில் விழுகிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயம் தங்கள் அம்மாவின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்களாகத் தான் இருக்க வேண்டும். இதை கண்டிப்பாக அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் எப்போது பிரச்சனை வருகிறதென்று தெரியுமா? அது அனைத்தும் ஆண்களால் தான். ஏனென்றால், ஆண்கள் இதுவரை தன் அம்மாவின் செயல்கள் அனைத்தையும் மிகவும் நேசிக்கிறார்கள், ஆகவே அவர்களுக்கு வரும் துணைவியும், தன் அம்மாவைப் போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதனால் அவர்கள் துணையிடம் ஏதேனும் சொல்லப் போக, அதனால் பிரச்சனைகள் வரும்.


உதாரணமாக, மனைவி ஏதேனும் சமைத்தால், அந்த சுவை தன் அம்மாவின் கைமணத்தைப் போல இல்லையென்றால், அந்த நேரத்தில், அவர்கள் "என் அம்மா இப்படி செய்ய மாட்டாங்க. என் அம்மா சமையல் யாருக்குமே வராது." என்றெல்லாம் சொல்வார்கள். இந்த நேரத்தில் அவள் ஆசையாக சமைத்துக் கொடுத்ததைப் பற்றி பேசாமல், புகார் கூறினால் யாருக்கு தாங்க கோபம் வராது? இப்ப சொல்லுங்க, கோபம் வருவது தவறா?

தவறில்லை தான். இருந்தாலும், இந்த நேரத்தில் துணைவிகள், தன் கணவனைப் பற்றி தவறாக எண்ணக் கூடாது. அவர்களுக்கு அம்மாவைப் போல் துணையின் மீதும் அதிகப் பாசம் இருக்கும். சொல்லப் போனால் அவர்களுக்கு இருவருமே, இரண்டு கண்கள் போன்று. எதற்கு அப்படி பேசுகிறார்கள் என்றால், அவர்களுக்கு மனைவியை விட அம்மாவின் மீதே அதிக அன்பு உள்ளது என்பதை தன்னை அறியாமல் வெளிப்படுத்திவிடுகின்றனர். என்ன வேண்டுமென்றால், செல்லமாக ஒரு குட்டி சண்டை போட்டு நிறுத்திக் கொள்ளுங்கள். ஆனால் அந்நேரத்தில் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

  
முக்கியமாக திருமணத்திற்குப் பின் அனைத்து பெண்களும் தங்கள் கணவரிடம் "உங்களுக்கு யார் முக்கியம், அம்மாவா இல்லை நானா?" என்று கேட்கின்றனர். அனைத்து மனைவியும் முதலில் இந்த மாதிரியான கேள்வியை கேட்பதை விட வேண்டும். ஏனெனில் ஆண்களுக்கு அவர்கள் அம்மா தான் முக்கியம், அதற்காக உங்கள் மீது பாசம் இல்லை என்று நினைக்க வேண்டாம்.


 அதிலும் எப்போதெல்லாம், மாமியாருடன் சண்டை வந்தாலும், அப்போது அதனை ஆண்களிடம் சொன்னால், அவர்களால் அந்த நேரத்தில் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஏனெனில் இருவருமே அவர்களுக்கு முக்கியம் தான். ஆகவே அவர்கள் எதுவுமே சொல்லாமல் சென்று விடுவர். ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் மனைவியிடம் சொல்ல நினைப்பது, "என் அம்மாவிற்கு வயதாகிவிட்டது, அவர்கள் ஏதோ ஒரு டென்சனில் அப்படி நடக்கிறார்கள். நீ என் உயிர், நீ இதை புரிந்து கொண்டு நடந்து கொள்வாய் என்று நினைக்கிறேன்" என்பது தான். ஆகவே இவை அனைத்தையும் புரிந்து கொண்டு மனைவி நடந்தால், பிரச்சனையில்லை.

அனைத்து ஆண்களும் ஒரு உணர்ச்சிவயப்பட்டவர்கள். அதிலும் அம்மா பையன் என்றால் சொல்லவே வேண்டாம். இதை அனைத்து அம்மா மற்றும் மனைவிகள் புரிந்து நடந்தால், வாழ்க்கை இனிமையாக செல்லும். ஆனால் ஆண்கள் திருமணத்திற்கு முன்னும் சரி, பின்னும் சரி தன் அம்மாவின் மீது மிகுந்த அன்பை கொண்டிருப்பார்கள்.

இதனை அனைத்து பெண்களான மனைவிகளும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அதில் முக்கியமாக ஆண்கள் அவர்களது அம்மாவை எவ்வளவு நேசிக்கிறார்களோ, அதே அளவு தங்கள் மனைவியையும் நேசிக்கிறார்கள். இதை அனைத்து மனைவிகளும் மனதில் கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து நடந்தால், வாழ்க்கை நன்கு சந்தோஷமாக இருக்கும்.

ஆகவே எப்படி ஆண்களுக்கு இந்த உலகில் தன் அம்மாவை விட உயர்ந்தது எதுவும் இல்லை என்று நினைக்கிறார்களோ, அதேப்போல் தான் தன் மனைவியையும் நினைக்கிறார்கள் என்பதை அனைத்து பெண்களின் மனதிலும் இருக்க வேண்டும்.

முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் டிரா!

உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் டிரா

இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்– நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் மோதும் உலக செஸ் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது. அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வரும் இப்போட்டியில், விஸ்வநாதன் ஆனந்த் கருப்பு காய்களுடனும், கார்ல்சென் வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.

மொத்தம் 12 சுற்றுகளை கொண்ட இப்போட்டியில், இன்று நடைபெற்ற முதல் சுற்று டிரா ஆனது. ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த சுற்றில் இரண்டு வீரர்களும் தலா 16 நகர்த்தல்களுக்குப் பிறகு போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற போட்டியுடன், விஸ்வநாதன் ஆனந்தும் கார்ல்செனும் 29 முறை மோதியுள்ளனர். இதில் வெற்றி கணக்கில் 6-3 என ஆனந்த் முன்னிலையில் இருக்கிறார். 20 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன.

முத்தான முப்பது விஷயங்கள்!

* நமது முன்னோர்கள் கிடைப்பதற்கரிய மற்றும் விலை உயர்ந்த சில அரிய பொருட்களைக் கண்டறிந்து அவைகளைத் திறம்பட பயன்படுத்தி உள்ளனர். அவற்றில் நவரத்தினங்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது. ஒன்பது வகையான விலை உயர்ந்த அரிய மருத்துவத்தன்மை கொண்டது மட்டுமின்றி மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிக்கும் ரத்தினங்களையே நவரத்தினம் என்கிறார்கள். இவற்றில் முத்து என்ற நவரத்தினமும் ஒன்று. மணிகளின் அரசன் என முத்து போற்றப்படுகிறது.

* பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் முத்தின் பயன்களை உணர்ந்து பயன்படுத்தியுள்ளனர். அக்கால இலக்கியங்களிலும், பாடல்களிலும் முத்தின் மதிப்பு மற்றும் முத்துமாலை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* பழங்காலத் தமிழ் மகளிர் முத்து மாலை அணிந்துள்ளனர். முத்துக்கள் நிரப்பப்பட்ட சிலம்புகளையும் அணிந்துள்ளனர்.

* சிப்பிகளினுள் விழும் நீர்த்திவலை அல்லது திடப்பொருளே உறைந்து உருண்டு முத்து ஆக மாறுகிறது. முத்து உருவாகுதலை முத்து விளைகிறது என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

* மெல்லுடலிகள் என்ற பிரிவின் கீழ் வரும் கடல்வாழ் உயிரினங்களில் முத்துக்களை உற்பத்தி செய்யும் திறனுடைய க்வாட்ருலா, யூனியோ, மார்கரிட்டேனே என்ற பெயருடைய சிப்பிகள் உள்ளன.

* கடலில் எல்லா இடங்களிலும் முத்து கிடைப்பதில்லை. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே முத்து கிடைக்கிறது.

* முத்துக்கள் என்பது அரகோனனட் என்றும் ஒரு வகையான சுண்ணாம்புப் (கால்சியம் கார்பனேட்) படிகங்களால் ஆனவையாகும்.

* கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு, சுமார் இருபது மீட்டர் வரை உள்ள ஆழங்களில் சிப்பிகள் படுகைகளாகக் காணப்படுகிறது. மூச்சடக்கிக் கொண்டு கடலுக்குள் மூழ்கி இச்சிப்பிகளை சேகரித்து வருதலே முத்துக் குளித்தல் எனப்படுகிறது.

* தற்போது நவீன முறையில் சிப்பிகள் அள்ளப்படுகின்றன. எல்லா சிப்பிகளிலும் முத்து காணப்படுவதில்லை.

* முத்துக்கள் பல வகைப்படும். ஆழ்கடலில் எடுக்கப்படும் முத்து உயர் ரகமாகும்.

* பத்து நிறங்களில் முத்து கிடைக்கிறது. எனினும் பொதுவாக கிரீம் நிறமாகவோ அல்லது பிங்க் நிறமாகவோதான் இருக்கும்.

* வெள்ளை, நீலம், சாம்பல், பிரவுன் நிறங்களிலும் முத்து காணப்படுகிறது. அந்தமான் தீவுகளில் கருப்புநிற முத்துக்கள் கிடைக்கின்றன.

* பொதுவாகவே முத்துக்கள் உருண்டையாக இருக்கும். ஆனாலும் நீர்த்துளியின் வடிவத்திலோ சற்று ஒழுங்கற்ற உருண்டை வடிவத்திலேயோ முத்து காணப்படலாம்.

* முத்துச் சிப்பிகளின் ஆயுட்காலம் ஐந்தரை ஆண்டுகளாகும். முத்துக்களின் வாழ்நாள் 100 முதல் 300 ஆண்டுகளாகும். சில முத்துக்கள் 500 ஆண்டுகள் வரை இருக்கும், அதன்பின் முத்துக்களின் பளபளப்பு குறைந்து நிறம் மங்குவதுடன் முத்துக்கள் மேல் வெடிப்பு ஏற்படும்.

* முத்துக்களை யார் வேண்டுமானாலும் அணியலாம். முத்து அணிந்தால் முத்து உடலில் பட்டு கரையும். அப்போது உடல்சூடு நீங்குமென மருத்துவர்கள் குறிப்பிடுகின்றன.

* உலக அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஜப்பான் - இந்திய அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஐதராபாத் நகரம். தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் முத்து அதிகம் கிடைக்கின்றது.

* சீனா, ஜப்பான், ஹாங்காய், இலங்கை நாடுகளிலிருந்து முத்துக்கள் நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு மும்பையில் பெருமளவில் விற்பனையாகிறது.

* சந்தைகளில் விற்கப்படும் முத்துக்கள் மீன் வாசனையோடு இருக்கும்.

* சில வகையான ரசாயனக் கரைசலில் முத்துக்களை மூழ்க வைத்து உலர வைக்கும் போதுதான் முத்துக்கள் வெண்மையான நிறத்தைப் பெறுகின்றன.

* உலக அளவில் மன்னர் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் சிறப்பான முத்துக்கள் கிடைக்கின்றன.

* இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலப் பெண்கள்தான் அதிக அளவில் முத்து மாலைகளைச் செய்து அணிந்து கொள்கின்றனர்.

* தற்போது செயற்கையில் சிப்பிகளினுள் திரவத்தைச் செலுத்தி செயற்கை முத்து தயாரிக்கிறார்கள்.

* 12ம் நூற்றாண்டிலேயே சீனர்கள் வளர் முத்துக்களை உருவாக்கியுள்ளனர். செயற்கை முத்துக்களின் தந்தை எனப்படுபவர் மிகிமாட்மோ என்ற ஜப்பானியர் ஆவார். 1893ல் முதல் முறையாக செயற்கை முறையில் முத்தை உருவாக்கினார்.

* முத்துக்களை ஒன்றுடன் ஒன்று உரசாமல் வைக்க வேண்டும். தங்க நகைகளோடோ அல்லது இதர ஆபரணங்களோடோ முத்து நகைகளை வைக்க வேண்டாம்.

* காற்றுப்புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வைக்க வேண்டும். ஸ்பிரே மற்றும் வாசனைப் பொருட்களுடன் முத்து மாலைகள் வைக்க வேண்டாம்.

* முத்து மாலையைப் போடுவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தித் துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.

* காகிதம், சாயம் போகும் துணியில் முத்தை வைக்க வேண்டாம். இவற்றால் முத்தை துடைக்கக் கூடாது.

* அமிலங்கள், இரசாயனப் பொருட்களுக்கு அருகே முத்துக்களை வைக்க வேண்டாம்.

* முத்து சிறந்த மருத்துவப் பொருளாகும். பல்வேறு நோய்களை முத்து தீர்க்கிறது. முத்துக்களை பல்வேறு மூலிகைச் சாறுகள் கலந்து பல்வேறு மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.

* முத்து இளமையைக் காக்கும். அழகு சாதனங்கள் தயாரிக்க முத்து பயன்படுகிறது.

* நெஞ்சு எரிச்சல், மூலநோய், கண் எரிச்சல், தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்த முத்து பயன்படுகிறது.


காமன்வெல்த் மாநாடு : சல்மான் குர்ஷித் பங்கேற்பு


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்றும், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போவதாகவும் வெளியுறவுத் துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழீழ இனப் படுகொலைக்கு காரணமாக இருந்த ராஜபட்சவை காப்பாற்றுவதற்காக இலங்கையில் நடத்தப்படும் இந்தக் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது என்றும், காமன்வெல்த் மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆனால், இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், யாழ்ப்பாணத்துக்கு இந்தியக் குழுவை வழி நடத்திச் செல்வது குறித்தும் அமைச்சகத்திடம் இருந்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

முன்னதாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்கு தமிழகத்தில் எழுந்துள்ள உணர்ச்சிபூர்வ போராட்டங்களை எடுத்துச் சொல்லி, இதனைத் தவிர்க்குமாறு தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் வற்புறுத்தினர். தேர்தல் வருவதை ஒட்டி, தமிழகத்தில் கூட்டணி அமைப்பதில் எந்தவித பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூறினர். 
 
ஆனால், வெளியுறவு அமைச்சகம், இந்தியா, இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்றால், அது, சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இன்னும் அதிக இடம் அளித்ததாகிவிடும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கக் காரணம் ஆகிவிடும், எனவே அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.

24 கரட் தங்கத்தில் ஆப்பிள் தயாரிப்புக்கள்!

கைப்பேசி மற்றும் டேப்லட் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் ஆப்பிள் நிறுவனம் மற்றுமொரு புது முயற்சியில் இறங்கியுள்ளது.


அதாவது 7.9 அங்குல அளவுடைய Retina தொடுதிரையினைக் கொண்ட 24 கரட் தங்கத்தினால் ஆன iPad Mini மற்றும் iPad Air சாதனங்களை தயாரித்து அறிமுகப்படுத்தவுள்ளது.


இச்சாதனங்களின் விலையானது ஏறத்தாழ 1500 யூரோக்களாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேகமாக பரவி வரும் புது வைரஸ்! மக்களுக்கு எச்சரிக்கை...!


இன்றைக்கும் கணனி பயன்படுத்துவோர் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை எது என்றால் அது வைரஸ் தான்.

தற்போதைய நிலையில் பீ போன் என்ற புதிய வைரஸ் ஒன்று மிக வேகமாகப் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது ஏறத்தாழ 20 பெயர்களில் கணனி சிஸ்டத்தில் தங்குகிறது.

இந்தியாவில் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response TeamIndia (CERTIn) என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது ட்ரோஜன் வகை வைரஸ் என்றும், பயனாளரிடம் அவருக்கே தெரியாத வகையில், அவரின் அனுமதி பெற்று மற்ற வைரஸ்களையும் கணனியில் பதிக்கும் தன்மை கொண்டதாக இது உலவுகிறது.

டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக கணனியில் இணைத்து எடுத்து பயன்படுத்தும் ஸ்டோரேஜ் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிகக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள ஆட்டோ ரன் வசதியினை முடக்கி வைப்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும்.

விண்டோஸ் சிஸ்டம் கோப்புகளை அவ்வப்போது மேம்படுத்தப்பட வேண்டும்.

நம்பிக்கைக்கு சந்தேகம் தரும் இணைய தளங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மிக வலுவான பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் இவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

பீ போன் வைரஸுடன் இணைந்து வோப்பஸ்(Vobfus) என்ற வைரஸும் செயல்படுவதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரைன் லாரா இந்தியா வருகை...! கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு...!



            மும்பையில், வரும் 14ம் தேதி தொடங்கும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டல்கர் பங்கேற்கும் 200வது போட்டி, நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறுதியாட்டத்தை காண்பதற்காக, வெஸ்ட் இண்டிஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா இந்தியா வந்துள்ளார்.

           கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்படும் சச்சின் டெண்டல்கர், சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து, தனது 200-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக டெண்டல்கர் ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.
    
           அதன்படி, மஹாராட்டிராவில் உள்ள மும்பையில் வரும் 14ம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டிஸ்ஸிற்கான இரண்டாவது இன்னிங்ஸ், சச்சின் டெண்டல்கர் பங்கேற்கும் 200வது போட்டி என்பதால், கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சொந்த மண்ணில் சச்சின் பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால், 30 ஆயிரம் இருக்கைகள் கொண்ட வாங்டே மைதானம், முழுமையாக நிரம்பும் வகையில், டிக்கெட் விற்பனை வெகு வேகமாக விற்பனையாகி வருகின்றன.

            இந்நிலையில், கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெறவுள்ள சச்சினின் இறுதியாட்டத்தை காணும் ஆர்வத்துடன், வெஸ்ட் இண்டிஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாராவும், விமானம் மூலம் இன்று மும்பை வந்துள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சச்சின் ஆட்டத்தை காண ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.

அம்மா என்னும் மரியாதையே.......!

 “எங்களுடைய மகள் முன்னாடியெல்லாம் ரொம்ப நல்லா இருந்தாள். சொன்ன பேச்சைக் கேப்பாள், ஒழுங்கா படிப்பாள்… யார் கண் பட்டதோ தெரியவில்லை. இப்போதெல்லாம் யாருடைய பேச்சையும் கேட்பதே இல்லை.

 எதுக்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசுகிறார். அப்பா, அம்மா என்னும்  மரியாதையே சுத்தமா இல்லாமற் போச்சு !

என்ன செய்வதென்றே தெரியலை” இப்படி யாராவது பேசினால், உங்கள்   மகளிற்கும் பதின்ம வயதாக இருந்தால் கேளுங்கள். பெரும்பாலும் “ஆமாம்” என்பது தான் பதிலாக இருக்கும். அப்படியானால், இது ஒரு வீட்டின் பிரச்சினையில்லை.

உலகில் இருக்கும் பல கோடிக்கணக்கான பதின் வயதுப் பெண்கள் இருக்கிறார்கள். பெரும்பான்மை ஆசிய நாடுகளில் கலாச்சாரத்தைப் பேணும் அத்தனை வீடுகளிலும் இப்படி பதின்ம வயது பிள்ளைகளை எப்படி வழிநடத்திப் பெரியவர்கள் ஆகும்வரை கொண்டு செல்வது என்பது வீட்டுக்கு வீடு நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்தப் பதின்ம வயதுப் பிரச்சினையைக் கையாள்வதானால் முதலி்ல்  பெற்றோர் கொஞ்சம் பதின்ம வயதுப் பிராயத்துக்கு இறங்கி வரவேண்டும். அதாவது, உங்க மகளினுடைய செயல்களைப் பார்த்து இறுக்கமான நிலையை (Tension)அடையாது, அந்த செயல்களுக்கான காரணம் என்ன என்று பார்க்க வேண்டும்.

அந்தக் காரணம் புரிந்து விட்டால் நீங்கள் உங்கள் மகளுடைய செயல்பாடுகளைப் புரிந்து கொள்வீர்கள். மகளுக்குத் தேவையான அரவணைப்பையும், சுதந்திரத்தையும் கொடுப்பீர்கள் என்பது தான் உண்மை!

பதின்ம வயதுப் பிராயமும் குழந்தைப் பருவத்தின் கூட்டை உடைத்து பெரிய மனிதத்தோரணைக்குள் நுழைகின்ற தருணம். பெற்றோர் என்ன செய்தாலும் அது தப்பாவே தோன்றுகிற பருவம்.

அதற்குக் காரணம் அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை அல்லது வாழ்க்கையின் சில பகுதிகளை தாங்களாகவே உருவாக்கிக் கொள்ள முயல்வது தான்!

இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டியது ரொம்ப அவசியம். இனிமேல் பெற்றோரின் உதவி இல்லாமலேயே என்னால் தனியாக இயங்க முடியும் என பெரும்பாலானபதின்ம வயதுப் பருவத்தினர் முடிவு கட்டி விடுகிறார்கள்.

அதற்கு வலுசேர்க்கும் விதமாக அவர்களுக்கு ஏகப்பட்ட சக்தி கதைகள் நண்பர்களிடமிருந்து கிடைத்து விடுகிறது. பெற்றோரைக் கிண்டலடிப்பது,

அவர்களை ஒன்றும் தெரியாதவர்களாய்ச் சித்தரிப்பதெல்லாம் இந்த காலகட்டத்தில் வெகு சாதாரணம். அதை ரொம்பத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மட்டுமே பெற்றோர் செய்ய வேண்டிய ஒரே விசயம்.

குறிப்பாக பன்னிரண்டு வயதைத் தாண்டும் பருவம் தான் பெண்களுக்கு தங்களைக் குறித்த கவலைகளும், விழிப்பும் ஒருசேர எழும் காலம். அதுவரை அம்மா சொல்லும் ஆடையுடன் பள்ளிக்குப் போவாள். அதன்பின் நண்பர்கள் சொல்லும் நாகரீக ஆடை தேவைப்படும்.

பன்னிரண்டு வயது வரை முகத்திற்கு பொடி(Powder) கூட தேவைப்படாத பெண்ணுக்கு அதன் பிறகு புருவத்துக்கு ஒன்று, கன்னத்துக்கு ஒன்று, உதட்டுக்கு ஒன்று என ஏகப்பட்ட ஒப்பனைச் சாதனப் பொருட்கள் தேவைப்படும் !

அதற்குக் காரணம், அடுத்தவர்களின் விமர்சனங்கள் குறித்தான எதிர்பார்ப்பும், கவலையும் தான். தப்பித் தவறி கூட அவளுடைய அழகு குறித்தோ, உடல் எடை குறித்தோ, அறிவு குறித்தோ எதையேனும் தரக் குறைவாய் பேசவே பேசாதீர்கள்.

இன்னும் குறிப்பாக பிறர் முன்னிலையில் அதைப் பற்றி சிந்திக்கவே செய்யாதீர்கள் என்கின்றனர் உளவியலாளர்கள். எதிர்பாலினரோடான ஈர்ப்பும், எதையேனும் புதிதாய்ச் செய்து பார்க்கும் ஆர்வமும் அவர்களிடம் மேலோங்கியிருக்கும்.

உடல் தரும் வளர்ச்சியும், அது தரும் கிளர்ச்சியும் அவர்களுக்கு பாலியல் பாதையில் புது அனுபவங்களாய் விரிகின்றன. அதற்கான சுதந்திரங்கள் வீடுகளிலிருந்து மறுக்கப்படும் போது எதிர்ப்பு காட்டுகிறார்கள்.

பதின்ம வயது நிறைய சுதந்திரங்களைத் தேடும். தன்னுடைய எல்லைக்குள் பெற்றோர் வரக்கூடாது என விருப்பப்படும். பதின் வயதுப் பிள்ளைகளிடம் கவனமாய் நடந்து கொள்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

பதின்ம வயது “மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள்” போன்றவை அலைக்கழிக்கும் காலம் என்கிறார். அவர்களுடைய உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் வேலைகளைக் கொஞ்சம் ஒத்தியே வையுங்கள் என்பது தான் அவர் தரும் அறிவுரை.

பதின்ம வயதினரை அடிக்கடி பாராட்டுங்கள். ஆடை நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். எதையேனும் சாதித்தால் பாராட்டுங்கள்.

இப்படிப்பட்ட சின்னச் சின்ன விசயங்கள் பெற்றோருக்கும் மகளுக்கும் இடையேயான இடைவெளியை இறுக்குவதுடன், பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையையும் ஊட்டும்.

இந்த வயதில் பெற்றோர் செய்ய வேண்டிய முக்கியமான விசயம், நல்ல விடயங்கள் என்ன என்பதையும் கெட்ட விடயங்கள் என்ன என்பதையும் அவளுக்குச் சொல்லிவிடுவது மட்டுமே.

இந்த புரிதலை குழந்தையாய் இருக்கும்போதே ஊட்டியிருந்தால் ரொம்ப நல்லது. குறிப்பாக புகைத்தல் நல்லதல்ல, மது உடல் நிலையைப் பாதிக்கும் போன்ற விடயங்கள் அவளுக்குச் சொல்லவேண்டும்.

தவறான பாலியல் உறவுகள் என்னென்ன சிக்கல்களைக் கொண்டு வரும் போன்ற விடயங்களையும் அவர்களிடம் சொல்வதே நல்லது. எந்த நட்பு நல்ல நட்பு என்பதைச் செயல்பாடுகளின் மூலமாகச் சொல்லிக் கொடுங்கள்.

"எந்த ஒரு தோழியுடன் கூட சேராதே" என்று சொல்வது உங்கள் மகளை வெறுப்பேற்றும். அதை விடுத்து நல்ல தோழி என்பவள் உனக்குப் பிடிக்காத எதையும் செய்யக் கட்டாயப்படுத்த மாட்டாள்.

தப்பான செயல்களில் ஈடுபடுத்தமாட்டாள் போன்ற செயல்பாட்டு விடயங்களைச் சொல்ல வேண்டும். அதிலிருந்து நல்ல நட்பு எது, தவிர்க்கப்பட வேண்டிய நட்பு எது என்பதை உங்கள் பதின்ம வயது மகள் புரிந்து கொள்வாள் !

இந்த பதின்மவயதிலும் மூன்று வகையான எதிர்ப்பு நிலைகள் உண்டு.

9 முதல் 13 வயது வரை,
13 முதல் 15 வயது வரை,
15 முதல் 19 வயது வரை

என மூன்று படிகளாக உள்ளது.

முதல் நிலையில் “நாங்கள் குழந்தைகள் அல்ல” என்பதை நிறுவுவதும், இரண்டாம் நிலையில் “தங்களை வலிமை வாய்ந்தவர்களாய் காட்டிக் கொள்வதுமே” பிரதானமான செயல்கள். மூன்றாம் நிலை பெரும்பாலும் முதல் இரண்டு நிலைகளிலும் அமைதியாய் இருக்கும் பதின்ம வயதினரின் எதிர்ப்புக் காலம் என்கிறார் இவர்.

எல்லா எதிர்ப்புகளுமே தங்களுடைய அனுமதிக்கப்பட்ட எல்லையை விரிவுபடுத்திக் கொள்ளும் பதின்ம வயதினரின் முனைப்பு என்று சொல்வதில் தவறில்லை. அதில் பெற்றோர் பல விடயங்களை அனுமதிக்கலாம்.

வாரத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒரு பதின்ம வயதுப்பெண் தன் அழகைக் கூட்டும் சமாச்சாரங்கள் குறித்து இணையத்தளங்களில் துழாவுகிறாள்.

இதைத் தவிர பாத்திமா வயதுப்பெண்கள் அதிகமாய் தேடுவது கால அளவீடு
(Dating) தாய்மை, கற்பு (Virginity), குடும்பக் கட்டுப்பாடு, மன நல உதவி என பட்டியல் போடுகிறது அந்த ஆராய்ச்சி.

பதின்ம வயதினரிற்கு ஒத்துப்போகாத விடயங்களில் முதலிடம் இந்த அறிவுரை. காரணம் தன்னை விட அறிவாளிகள் இருக்க முடியாது எனும் அவர்களுடைய எண்ணமாகக் கூட இருக்கலாம்.

எனவே மகள் சொல்வதை நிறைய கேட்டாலே போதும் மகளை நீங்கள் அவள் போக்கில் சென்று வழிகாட்ட முடியும். இந்த காலகட்டத்தில் பெற்றோரின் கடமை இரண்டு தான்.

ஒன்று, மகளின் உடல், உளவியல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வது. இரண்டாவது அவர்களுடைய போக்கிலேயே போய் அவர்களுக்கு ஆதரவு கலந்த வழிகாட்டுதலை வழங்குவது 

எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?

  எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?

பழங்கள்:

திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்

ஆப்பிள்கள் ஒரு மாதம்

சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்

அன்னாசி (முழுசாக) 1 வாரம்

(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்


காய்கறிகள்:

புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்

முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி,

ஓம இலை 1-2 வாரங்கள்

வெள்ளரிக்காய் ஒரு வாரம்

தக்காளி 1-2 நாட்கள்

காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்

காளான் 1-2 நாட்கள்


அசைவ உணவுகள்:

வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்

சமைத்த மீன் 3-4 நாட்கள்

பிரஷ் மீன் 1-2 நாட்கள்

பிறப்பு, இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா?


nov 9 - tec corp chennai

சென்னை மாநகராட்சியின் மூலம் பிறப்பு – இறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. மாநகராட்சியின் இணைய தளத்தில் இந்த சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரிலும் விண்ணபித்து பெற்றுக் கொள்ளலாம்.இதுவரை பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டன. இனிமேல் தமிழிலும் கிடைக்கும் வகையில் மாநகராட்சி புதிய ஏற்பாட்டினை செய்துள்ளது.



பிறப்பு – இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவிறக்கம் செய்யும் வசதியை ரிப்பன் மளிகையில் இன்று மேயர் தொடங்கி வைத்தார்.இனி
http://www.chennaicorporation.gov.in/Tamil/index.htm இணையதளத்தில் இன்று முதல் தமிழ் பிறப்பு – இறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். இதில் பிறந்த மற்றும் இறந்த தேதி மற்றும் நேரமும் குறிப்பிடப்பட்டு இருக்கும் எத்தனை மணிக்கு குழந்தை பிறந்தது என்பதை மருத்துவ அறிக்கையின் அடிப்படைப் பதிவு செய்து வழங்கப்படுகிறது.ஏற்கனவே, உள்ள பிறப்பு– இறப்பு சான்றிதழ்களில் தேதி மட்டுமே இடம் பெறும். நேரம் இடம் பெறாது.

விஐபிக்களின் உறவினர்களுக்கு விருது : வெளிவந்திருக்கும் புதிய பூதம் !

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற பரிந்துரைக்கப்பட்டோரின் பட்டியலில், விஐபிக்களின் உறவினர்கள் பலரும் இடம்பெற்றிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.




பத்ம விருதுகள் பெற முக்கிய பிரமுகர்கள் பலரும் தங்கள் சார்பில் சிலரை விருதுகளுக்கு பரிந்துரை செய்யலாம். அந்த வகையில், சுமார் 1,300 பேரின் பெயர்கள் பத்ம விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், பல்வேறு விஐபிக்கள், தங்களது பிள்ளைகள், உடன்பிறப்புகள், உறவினர்களின் பெயர்களையே பரிந்துரை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, பாரத் ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர், தனது சகோதரி உஷா மங்கேஷ்கர், பின்னணி பாடகர் சுரேஷ் வட்கர், சமூக சேவகர் ராஜ்மால் பரக் ஆகியோரது பெயர்களை பரிந்துரைத்துள்ளார்.

அதே போல, பத்ம விபூஷன் விருது பெற்ற உஸ்தாத் அம்ஜத் அலி, அவரது மகன்கள் அமான், அயான் மற்றும் பாடகர் கௌஷிகி சக்ரபர்தி, தபலா கலைஞர் விஜய் காடே, கலைஞர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி என்கிற நடராஜ கிருஷ்ணமூர்த்தி, சித்தார் கலைஞர் நிலத்ரி குமாரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளார்.

ஒரு சில பிரமுகர்கள் இதுபோல தங்களது உறவினர்கள், நண்பர்களின் பெயர்கள் என 25 பேரைக் கூட பரிந்துரைத்துள்ளனர்.

விருதுகள் என்பது கலைஞர்களையும் கலைகளையும் ஊக்கு விக்கும் வகையில் வழங்கப்பட்டு வந்த காலம் போய், அதிலும் ஊழலும், முறைகேடுகளும் நிறைந்துவிட்டன.

மங்கள்யானின் புவி வட்டப் பாதை 3வது சுற்று அதிகரிப்பு!


 



செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான், புவி வட்டப் பாதையை அதிகரிக்கும் 3வது சுற்றுப் பாதை இன்று காலை துவங்கியது.

40,186 கி.மீ. ஆக இருந்த சுற்றுப்பாதை தற்போது 71,363 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல அடுத்தடுத்து 4 மற்றும் 5வது சுற்றுப் பாதைகள் மூலம், புவி வட்டப் பாதையின் தூரம் அதிகரிக்கப்பட உள்ளது.

ஜிமெயிலில் விளம்பரங்களை தடுப்பது எப்படி!

ஜிமெயிலை பயன்படுத்தும் போது இன்பாக்சில் தோன்றும் விளம்பரங்களை சகித்து கொள்ள வேண்டும் ,அல்லது கண்டும் காணாமல் இருந்தாக வேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லையா? இருக்கிறது!.

ஜிமெயிலில் கூகுலால் தோன்றச்செய்யும் விளம்பரங்களை தடுப்பது சாத்தியம் தான் தெரியுமா? இதற்கு மூன்று சுலபமான வழிகள் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது டெக்ரிசார்ட்ஸ் இணையதளம்.
முதல் வழி மிகவும் சுலபமானது. அதாவது எச்.எடி.எம்.எல் வடிவத்தற்கு மாறிவிடுவது. ஜிமெயிலை எச்.டி.எம்.எல் வடிவில் பார்க்கும் வசதி தொடர்பான குறிப்பை நீங்களே கூட அடிக்கடி பார்த்திருக்கலாம். இண்டெர்நெட் இணைப்பின் வேகம் போதுமானதாக இல்லாத நிலையில், மெயிலின் பக்கங்கள் விரைவாக டவுன்லோடு ஆக, இப்படி எச்.டி.எம்.எல் வடிவத்தை பயன்படுத்தி கொள்ளலாம். வழக்கமான கிராபிக்கஸ் மற்றும் கூடுதல் அம்சங்கள் இல்லாமல் மெயிலின் அடிப்படையான விஷயங்களை மற்றும் எச்.டி.எம்.எல் வடிவில் பார்க்க முடியும்.

இந்த வசதியை எத்தனை பேர் பயன்படுத்தியிருப்போம் என்று தெரியவில்லை. இந்த முறையில் மெயிலை அணுகும் போது எதிர்பாராத இன்னொரு அணுகூலம் இருக்கிறது. ஆம் எச்.டி.எம்.எல் வடிவில் பார்க்கும் போது விளம்பரங்கள் அதில் தோன்றாது. இதற்கான வசதி வலது மூளையில் இருக்கும். இந்த வசதியை தேர்வு செய்து கொண்டால் கூகுல் விளம்பரங்களில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் ஒன்று , அரட்டை வசதி, குறுஞ்செய்தி வசதி போன்றவையும் இருக்காது.

மாறாக, ஜிமெயிலின் எல்லா அம்சங்களும் வேண்டும்,ஆனால் விளம்பரங்களில் இருந்தும் தப்பிக்க வேண்டும் என நினைத்தால் அதற்கும் வழி இருக்கிறது. மெயில் பெட்டியில் விளம்பரங்கள் தோன்றும் போது அதன் அருகிலேயே, ஏன் இந்த விளம்பரம் , என்று ஓய் திஸ் கொலவெறி போல கேட்கப்படுவதை பார்த்திருக்கிறீர்களா ? அதில் கிளிக் செய்தால் விளம்பரங்களுக்கான தேர்வு நிர்வாகம் வரும் .அதில் விளம்பரம் வேண்டாம் என்று கிளிக் செய்தால் விளம்பரங்களை தடுத்து விடலாம். ஆனால் இந்த முறையில் 500 விளம்பரங்கள் வரை தான் தடுக்க முடியும்.

விளம்பரமே முற்றிலும் வேண்டாம் என நினைத்தால், பயர்பாக்ஸ் உலாவியில் உள்ள விளம்பரங்களை தடுப்பதற்கான நீட்சி வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/adblock-plus/

பல்வலிக்கான வீட்டு வைத்தியம்!


நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.

பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும். கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.

எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.

வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும்.

சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள்.

பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம்.

திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும் நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

எரிவாயு இணைப்பு கொடுக்கும்போது கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள் என்ன?

எந்த இடத்தில் எரிவாயு இணைப்பு கொடுக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. கீழ்க்கண்ட முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை சமையலறையில் பின்பற்றினாலே அது எரிவாயுவினால் ஏற்படும் விபத்துகளுக்கான காப்பீடு போலாகும்.


•எரிவாயு சிலிண்டர் வைக்கும் அறை அல்லது சமையலறையில் நல்ல காற்றோட்டம் இருக்கவேண்டும். ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூடியிருக்கும் அறையில் எரிவாயு சிலிண்டரை உபயோகிக்கக்கூடாது

•எரிவாயு சிலிண்டர், அதன் அழுத்தத்தினை சரி செய்யும் நாப் அல்லது பட்டன், எரிவாயு செல்லும் இரப்பர் குழாய் போன்றவற்றை எளிதில் கையாளுமாறு எரிவாயு இணைப்பு அமைக்கப்பட வேண்டும்

•தரைமட்டத்தில் எரிவாயு சிலிண்டர் இருக்குமாறு அமைக்கவேண்டும். ஆனால் தரைமட்டத்திற்கு கீழ் அதாவது தரைக்கு கீழ் இருக்கும் தளங்களில் எரிவாயு சிலிண்டர் இருக்குமாறு அமைக்கக்கூடாது.

•சிலிண்டரை அலமாரியில் வைக்கும்போது அதன் தரைத்தளத்திலும் அதன் மேல்தளத்திலும் காற்றோட்டத்திற்கு துளைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

•சமைக்க உதவும் எரிவாயு அடுப்பை தரையில் வைக்கக்கூடாது. நின்று கொண்டு சமைப்பதற்கு ஏற்ற வகையில் போதுமான உயரத்தில் அடுப்பை வைக்கவேண்டும். மரப்பலகையினை அடுப்பு வைக்க உபயோகிக்கக்கூடாது. மரத்தினால் ஆன பலகையினை அதன் மீது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வைத்து அதன் மீது அடுப்பு வைக்கவேண்டும்.

•ஜன்னலுக்கு நேராக எரிவாயு அடுப்பினை வைக்கக்கூடாது. ஏனெனில் காற்று வேகமாக வீசும் போது, அது தீயை அணைத்துவிடும். இவ்வாறு தீ அணைந்து விட்டால் எரிவாயு அந்த அறை முழுவதும் பரவி எளிதில் தீ பிடித்து விபத்து நேரிட ஏதுவாகும்

•எரிவாயு அடுப்பினை பலகை அல்லது அலமாரியில் வைக்கும் போது அதன் ஒருபகுதி சுவரை ஒட்டி இருக்குமாறு வைக்கவேண்டும். அதாவது அடுப்பின் பின்பகுதி சுவரின் அருகில் இருக்குமாறு வைக்கவேண்டும். அடுப்பினை ஒட்டி காணப்படும் சுவரில், அலமாரி போன்றவை இருத்தல் கூடாது. அவ்வாரு இருந்தால், அதிலிருக்கும் பொருட்களை அடுப்பு எரியும் போது நீங்கள் முயற்சிக்கும் போது, உங்கள் ஆடை தீ பற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது

•ஒரு அறையில் 2 எரிவாயு சிலிண்டர்களுக்கு மேல் வைக்கக்கூடாது. இரண்டு சிலிண்டர்களை வைக்கும்போது சமையலறையின் குறைந்தபட்ச பரப்பளவு 10மீ2 ஆக இருக்கவேண்டும்

•எப்பொழுதும் எரிவாயு சிலிண்டர்களை செங்குத்தாக அதன் வால்வு மேல் பகுதியில் இருக்குமாறு வைக்கவேண்டும. செங்குத்தாக வைக்காமல் படுக்கைவாட்டிலோ அல்லது வேறு மாதிரியாகவோ வைத்தால் எரிவாயு சிலிண்டரிலுள்ள எரிவாயு திறந்த வால்விலிருந்து வெளியேறி அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது

•மின்சார ஓவன், மண்ணென்ணெய் போன்ற எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எரிவாயு அடுப்பிலிருந்து ஒரு மீட்டர் தொலைவில் இருக்குமாறு வைக்கவேண்டும்.

•எரிவாயு சிலிண்டரை வெயில், மழை, வெப்பம், தூசி படியும் இடங்களில் வைக்கக்கூடாது

•சிலிண்டர் மேல் பாத்திரங்களையோ, துணியையோ வைக்கக்கூடாது

•சிலிண்டரின் பாதுகாப்பு மூடியினை சிலிண்டரின் மேல்வளையத்துடன் இணைத்து வைக்கவேண்டும். ஏனெனில் எரிவாயு, வால்வின் வழியாக சிலிண்டரிலிருந்து கசியும்போது இந்த பாதுகாப்பு மூடியினை வால்வின் மேல் வைத்து எரிவாயு கசிவை தடுக்கமுடியும்

•வால்வின் மீது பாதுகாப்பு மூடி போடாமல் காலி அல்லது எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டரை வைக்காதீர்கள்

•அழுத்த ரெகுலேட்டரை உபயோகிக்கும் போது, அதன் மேல் பாகத்தில் கூறிய அறிவுரைகளை பின்பற்ற தயங்காதீர்கள்.

ஆன்டிபயாட்டிக் எடுக்கும் போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா ?


தற்போது ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கையினால், உடல் நிலை சரியில்லாமல் நிறைய பேர் தினமும் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர்.

ொல்லப்போனால் அது ஒரு அழையா விருந்தாளியைப் போல், அனைவரிடமும் வந்துவிடுகிறது. அவ்வாறு உடல் நிலையை தேற்றுவதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, அந்த மருந்து உடலில் நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால், ஒரு சில உணவுகளை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அவ்வாறு சாப்பிட்டால், உடலில் அந்த மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போய்விடும். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளங்களேன்…

ஆல்கஹால்-

மருந்து மாத்திரைகளுக்கு ஆல்கஹால் முற்றிலும் ஒரு எதிரி. ஏனெனில் அந்த ஆல்கஹால், மாத்திரைகளில் உள்ள மருந்துகளின் தன்மையை குறைத்துவிடுகின்றன. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நோய்கள் விரைவில் குணமாவது தடைப்பட்டு, நீண்ட நாட்கள் அந்த நோயை உடலில் வைத்துக் கொள்ள நேரிடும். ஆகவே விரைவில் உடல் நோய் சரியாக வேண்டுமென்றால், இந்த ஆல்கஹால் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்கள்-

பால் பொருட்களான பால், தயிர், சீஸ் போன்றவைகளும், மருந்துகளின் சக்தியை குறைத்து, மேலும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். அதனால் தான் மருத்துவர்கள், ஏதேனும் உடல் நிலை சரியில்லை என்றால், மருந்து சாப்பிடும் போது பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்க சொல்கிறார்கள். ஏன், சில சமயங்களில் வயிற்றுப் போக்கு ஏற்படக்கூட வாய்ப்புள்ளது.

நார்ச்சத்து உணவுகள்-

எப்போது ஆன்டிபயாட்டிக்களை எடுத்துக் கொள்ளும் போதும், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை மருந்துகளில் உள்ள தன்மைகளை முற்றிலும் உறிஞ்சிவிடுகின்றன. மேலும், இவையும் பால் பொருட்களைப் போல் வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

அமிலத் தன்மை உள்ள உணவுகள்-

அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுகளான எலுமிச்சை, தக்காளி மற்றும் மற்ற உணவுகள், எப்படி ரோட்டில் சிக்னல் போட்டால், வண்டிகள் நகர முடியாமல் ஒரே இடத்தில் நிற்கிறதோ, அதேப்போல் இந்த உணவுகளும் உடலில் குணப்படுத்தும் செயலை தடுத்துவிடுகின்றன. மேலும் மருந்துகளில் உள்ள சக்தியை உடல் உறிஞ்சுவதை தடுத்துவிடுகின்றன. ஆகவே இத்தகைய உணவுகளையும் சாப்பிடக் கூடாது.

ஹெவி ஃபுட்-

மாத்திரைகளை சாப்பிடும் போது வாயை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் அவ்வாறு நன்கு சுவையாக உள்ளது என்று எளிதில் செரிமானமாகாத உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் மாத்திரைகளை சாப்பிடும் போது, உடலில் அனைத்து செயல்களும் சரியாக நடைபெற்றால் தான், உடல் விரைவில் சரியாகும். செரிமானமாகாத உணவுகளை சாப்பிட்டால், மருந்துகளில் உள்ள பொருட்களை, உடல் உறிஞ்சி கொள்ளாமல் போகும். ஆகவே விரைவில் செரிமானமாகும் லைட் உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

முக பள்பளப்புக்கும் முதுமையை துரத்துவதற்கும் கூட உதவும் தண்ணீர்!

நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாததாகும்.

 nov 9 - health Water-and-the-body.


எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு உறுப்புகள் பாதுகாப்பட்டு நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடலின் வெப்பமும் சீராக இருக்கும்.மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.


எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆகவே தான், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைத்து மருத்துவர்களும் தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என்று சொல்கின்றனர்.

அதிலும் நம் உடலில் உள்ள தசைகள், தோல், முதலியவற்றின் வளர்ச்சியில் 70 சதவிகிதம் தண்ணீரின் பங்காகும். உடலில் நீர் சத்து குறைந்தால் தோல் வறண்டு போவதோடு உடல் சோர்வடைந்து விடுகிறது. இதனால் அகத்தோற்றம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

வயதாவதை முதலில் உணர்த்துவது தோல்தான். முகத்தில் சிறிது சுருக்கம் விழுந்தாலும் கவலை கொள்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சருமத்தை பாதுகாப்பதற்காக எத்தனையோ கிரீம்களை உபயோகிக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். பளபளப்பாகவும், மிக அழகான தோல் வேண்டும் என்பதற்காகவும், அதனை பாதுகாக்கவும் என்னென்னவோ முயற்சி செய்கின்றனர்.

முகப் பளபளப்பு

அதிக தண்ணீர் குடித்தால் தோல் சுருக்கம் காணாமல் போய்விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தண்ணீர் குடிப்பதன் மூலம் தோலுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதன் மூலம் இளமையான தோற்றம் ஏற்படுகிறதாம்.

இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர்.

வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் தண்ணீராகும். இந்த தண்ணீரில் இருக்கும் சாலிசின் செரித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. பெரும்பாலான சரும பராமரிப்பு கிரீம்களில் சாலிசிலிக் ஆசிடைத்தான் பயன்படுத்துகின்றனர்.

திரும்பிய இளமை

செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாக நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் மறைந்து போகிறது.

இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களை ஆராய்ச்சிக்கு முன்னரும், பின்னரும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆய்விற்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர்.

சாதாரண தண்ணீர் குடித்தவர்களுக்கு தோல் சுருக்கம் 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.

தண்ணீரின் அவசியம்

உஷ்ணபிரதேசங்களில் தண்ணீரின் தேவை முக்கியமானது. தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தாததன் காரணமாக அவர்கள் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சினைக்கும் ஆளாகின்றனர். எனவே உடல் நலத்திற்கு சராசரியாக மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீரை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நோயாளிகள் 4 முதல் 5 லிட்டர் தண்ணீரும், தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 6 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும் பரிந்துரைக்கின்றனர்.

நான்கு லிட்டர் தண்ணீர்

நான்கு லிட்டர் தண்ணீரையும் ஒரே நேரத்தில் அருந்தக்கூடாது என்று கூறும் மருத்துவர்கள் காலையில் ஒன்றரை லிட்டர் தண்ணீரும், காலை மற்றும் மதிய உணவு இடைவேளைக்கு இடையே ஒரு லிட்டரும் குடிக்கவேண்டுமாம். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு இடையே ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்,

சாதாரண உடல் நிலை கொண்டவர்கள் குளிர்ந்த நீர் அருந்துவது வயிற்றுக்கு நல்லது. ஒரு சிலர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவார்கள். எப்போதாவது சுடுநீர் தண்ணீர் அருந்துவது தவறில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அது சரி, இப்போது உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைப் பார்ப்போம்.

* உடலில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். தாகம் என்பது உடலில் தண்ணீர் குறைபாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று.

* வாயானது அடிக்கடி வறட்சியடைந்தால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.

* சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்தால் உடலில் சரியான அளவில் தண்ணீர் உள்ளது என்று அர்த்தம். அதுவே சிறுநீரானது நல்ல அடர் நிறத்தில் கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவந்தால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

* அழும் போது, கண்களில் இருந்து போதிய தண்ணீர் வராவிட்டால் உடல் தண்ணீரின்றி வறட்சியுடன் உள்ளது என்றும் அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.

* உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தியானது இல்லாமல் சோர்வுடன் இருக்கும். இவ்வாறு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது அதிகம் குடிக்க வேண்டும் என்று பொருள்.

* சிலருக்கு உடல் வறட்சி அதிகமாகி, தாகத்தையும் தாண்டி அதிகப்படியான பசியானது ஏற்படும். இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டால் அது உணவு உண்பதற்கான அறிகுறி அல்ல.

மாறாக அது உடலில் வறட்சி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆகவே இந்நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.

* உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு தான் சருமம். இந்த சருமத்திற்கு அதிகப்படியான தண்ணீரானது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், அது சருமத்தில் வறட்சி அல்லது செதில் செதிலான சருமத்தை ஏற்படுத்தி தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்லும்.

* உடலின் வியர்வையானது தண்ணீரால் உருவானது. ஆனால் உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் வியர்வையானது வற்றிவிடும். இதனால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படுவது தடைபட்டு சருமத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமற்றதாக்கிவிடும்.

* உடலில் வறட்சி இருந்தால் தலைவலியுடன் மயக்கமும் உருவாகும். எனவே தேவையில்லாமல் இத்தகைய உணர்வுகள் ஏற்பட்டால் தண்ணீரை அதிகம் பருக ஆரம்பியுங்கள்.

* 70 சதவிகிதம் தண்ணீரால் ஆன தசைகளில் தண்ணீர் குறைவாக இருந்தால் தசைப்பிடிப்பு, தசை வலிகள் போன்றவை உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது செய்த பின்னரோ ஏற்படும்.

* இதயம் கூட தண்ணீரால் ஆனது தான். இத்தகைய இதயத்திற்கு போதிய நீரானது இரத்த ஓட்டத்தின் மூலம் கிடைக்கும்.

* ஆனால் இரத்தத்திற்கே போதிய தண்ணீரானது கிடைக்காவிட்டால், இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவும் குறைந்து அடிக்கடி படபடப்பை ஏற்படுத்திவிடும். எனவே அடிக்கடி இதய படபடப்பு ஏற்படுமாயின் உடலில் போதிய நீர் இல்லை என்று அர்த்தம்.

* உடலில் நீர் வறட்சி இருந்தால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையானது குறைந்துவிடும். மேலும் இதனால் சருமம் முதுமை தோற்றத்தை அடைந்தவாறு வெளிப்படுத்தும். ஆகவே இந்த மாதிரியான நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.

* மலச்சிக்கல் ஏற்படுவதும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே. ஏனெனில் உடலில் போதிய நீர் இல்லாவிட்டால் குடலானது செரிமானமடைந்த உணவை எளிதாக வெளியேற்ற முடியாமல் மலத்தை இறுக்கமடையச் செய்துவிடும்.

* உடலின் வெப்பநிலையானது போதிய அளவில் இல்லாமல் அதிகப்படியான வெப்பத்துடன் இருந்தால் அது உடலில் போதிய தண்ணீர் இல்லாததற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆகவே உடலானது அதிகப்படியான வெப்பத்தில் இருந்தால் தண்ணீர் அதிகம் பருகினால் சரியாகிவிடும்.

* உடலில் நீர் வறட்சி இருந்தால் ஒற்றை தலைவலி ஏற்படும். எனவே அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தால் தண்ணீர் அதிகம் பருகுங்கள்.

எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பின் அறிகுறி அல்ல...

From small children to adults, everyone today is chest pain. View payappatukiromo or other pain, chest pain, if you're dying.
சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று எல்லோருக்கும் நெஞ்சு வலி வருகிறது. மற்ற வலிகளைக் கண்டு பயப்படுகிறோமோ இல்லையோ, நெஞ்சு வலி என்றால் துடித்துப் போகிறோம். காரணம், நெஞ்சுவலியை மக்கள் எப்போதும், மாரடைப்பின் அறிகுறியாகப்  பார்ப்பதுதான். ‘‘எல்லா நெஞ்சு வலிகளும்  மாரடைப்பின் அடையாளமில்லை...’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.

‘‘மாரடைப்பினால் வரும் நெஞ்சு வலியானது, முதலில் நெஞ்சின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கும். மயக்கம், படபடப்பு, அதிக வியர்வை, வலி இடது  கைக்குப் பரவுவது, நெஞ்சைப் பிசைகிற மாதிரியோ, அழுத்துகிற மாதிரியோ வலிப்பது, மூச்சுத் திணறல், அரிதாக சில நேரம் கழுத்திலும் வலி போன்றவை இருக்கும். ஆனால், மற்ற பிரச்னைகளின் காரணமாக வரக்கூடிய நெஞ்சு வலிக்கும், இதயத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நெஞ்சு வலிக்கான முக்கிய காரணங்களில் கழுத்து மற்றும் முதுகெலும்பு பாதிப்பு, தோள்பட்டை வலி, முதுகின் மேல்புற தண்டுவட சவ்வு பாதிப்பு  மற்றும் நெஞ்செலும்பு சந்திப்புகளில் உண்டாகிற தேய்மானம் போன்றவை அடக்கம். தவிர அக்கி எனப்படுகிற இன்ஃபெக்ஷனும் ஒரு காரணமாகலாம்.  வயதானவர்களுக்கு ஏற்படும் முதுகெலும்பு உடைவதன் காரணமாகவும் இந்த வலி வரலாம்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் நாள்பட இருக்கும். மயக்கம், படபடப்பு, மூச்சுத் திணறல் இருக்காது. எனவே வலி வந்ததும், இது ஆபத்தான இதய வலி  இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கல்லீரல் பகுதியில் ஏற்படும் வலிகூட நெஞ்சு வலியாக உணரப்படலாம். எக்ஸ் ரே, எம்.ஆர்.ஐ  ஸ்கேன் மற்றும் மருத்துவ ஆலோசனையின் மூலம் காரணத்தைக் கண்டுபிடித்து, அதற்கேற்ப சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

அக்கி வலியாக இருந்தால், ஒருவித ஊசியின் மூலம் சரிசெய்யலாம். தோள்பட்டை வலியானால், தோள்பட்டை தேய்மானம் மற்றும் வீக்கத்தைக்  குறைக்க, தோள்பட்டை சந்திப்பில் ஊசியின் மூலம் மருந்தைச் செலுத்தி, சில பயிற்சிகளும் பரிந்துரைக்கப்படும். நெஞ்செலும்பு சந்திப்புகளில்  வயதானவர்களுக்கு வரும் வலிக்கு மாத்திரைகளும், பயிற்சிகளுமே தீர்வு. முதுகெலும்பு நொறுங்குவதால் வரும் வலி வயதானவர்களுக்கு சகஜம். 11  மற்றும் 12-வது எலும்புகளே இத்தகைய நொறுங்குதலுக்குக் காரணம்.

இது அடி படுவதாலோ, விபத்தினாலோ ஏற்படாமல், கால்சியம் குறைபாடு காரணமாக வரும். மருந்து, மாத்திரைகள் பெரியளவில் உதவாது.  வெர்ட்டிப்ரோபிளாஸ்டி எனப்படுகிற ஒரு ஊசி, எலும்பைப் பலப்படுத்தும் சிமென்ட் போல செயல்பட்டு, எலும்பை பலப்படுத்தி, வலியைக் குறைக்க  உதவும்.  இதைப் போல ஒவ்வொரு காரணத்துக்கான பின்னணியைக் கண்டறிந்து, சரியான சிகிச்சை கொடுத்தாலே நெஞ்சு வலியிலிருந்து மீண்டு  நிம்மதியாக வாழலாம்...’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.

லெனோவா நிறுவனம் ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 நோட்புக் ரூ.42.250 விலையில் அறிமுகம்!

லெனோவா நிறுவனம் டச்ஸ்கிரீன் கொண்ட ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 நோட்புக் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனத்தின் இந்த புதிய மாடல் 10 புள்ளி மல்டி டச் கொண்ட உலகின் முதல் டூயல் மோட் நோட்புக் ஆகும். இந்த புதிய ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 நோட்புக் விலை ரூ.42.250 ஆகும்.

புதிய மாடல் விண்டோஸ் 8 இயக்கத்தளம் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 300 டிகிரி வரை சுழற்ற முயன்ற டிஸ்ப்ளே கொண்டுள்ளது. புதிய லெனோவா ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 1366x768p தீர்மானம் கொண்ட ஒரு 14 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் நிறுவனத்தின் AccuType கீபோர்டு உடன் வருகிறது.

அதை 4GB ரேம் உடன் நான்காவது தலைமுறையின் இன்டெல் கோர் i3 ப்ராசசர் (வரை i7) உடன் வருகிறது. மற்றும் விருப்பத்தேர்வு 2GB என்விடியா ஜியிபோர்ஸ் ஜிடி 740M கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 நோட்புக் உள்ள இணைப்பு விருப்பங்கள், Wi-Fi, ப்ளூடூத் 4.0, USB 3.0, யுஎஸ்பி 2.0 மற்றும் HDMI போர்ட்டுகள், கார்டு ரீடர் மற்றும் RJ45 ஈதர்நெட் போர்ட் ஆகியவை அடங்கும்.

சாதனத்தில் 720p முன் கேமரா மற்றும் 48Wh பேட்டரி உள்ளது. நோட்புக் மற்ற அம்சங்கள் டால்பி உயர்தர ஆடியோ, லெனோவா கிளவுட் ஸ்டோரேஜ், வாய்ஸ் கன்ட்ரோல் மற்றும் OneKey ரெகவரி உள்ளிட்டவை அடங்கும். இந்த மாடல், வெள்ளி-சாம்பல் விளிம்பு நிறம் கொண்ட கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது, 0.23-இன்ச் திக் மற்றும் 2kg எடையுள்ளதாகவும் இருக்கிறது.

ஐடியாபேட் ஃப்ளெக்ஸ் 2 நோட்புக் அம்சங்கள்:


366x768p தீர்மானம் கொண்ட ஒரு 14 இன்ச் டிஸ்ப்ளே,

4GB ரேம் உடன் நான்காவது தலைமுறையின் இன்டெல் கோர் i3 ப்ராசசர்,

2GB என்விடியா ஜியிபோர்ஸ் ஜிடி 740M கிராபிக்ஸ் கார்டு,

Wi-Fi,

ப்ளூடூத் 4.0,

USB 3.0,

யுஎஸ்பி 2.0,

HDMI போர்ட்டுகள்,

RJ45 ஈதர்நெட் போர்ட்,

720p முன் கேமரா,

48Wh பேட்டரி,

0.23-இன்ச் திக்,

2kg எடை,

விண்டோஸ் 8 இயக்கத்தளம்

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top