.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 5 November 2013

விஸ்வநாதன் ஆனந்துக்காக சிறப்பு பதிவு!


anand-1 

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சென்னையில் சந்திக்கிறார். நடப்பு சாம்பியனான ஆனந்தும் உலகின் முதல் நிலை வீரருமான கார்ல்சனும் மோதும் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் துவக்க விழா வரும் 7 ம் தேதி நடைபெறுகிறது. 9 ம் தேதி முதல் சதுரங்க ஆட்டங்கள் ஆரம்பமாகின்றன. 


5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த் 6 வது முறையாக பட்டம் வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். சொந்த மண்ணில் களம் காண்பதால் ஆனந்த் கூடுதலான எதிர்பார்ப்புக்கும் நெருக்கடிக்கும் அளாகி இருக்கிறார்.


43 வயதான ஆனந்துக்கும் 22 வயதான கார்ல்சனுக்கும் இடையிலான இந்த போட்டி அனுபவத்துக்கும் இளைமை துடிப்புக்குமான மோதலாக கருதப்படுகிறது. செஸ் உலகில் கடந்த பத்தாண்டுகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாகவும் இந்த மோதல் வர்ணிக்கப்படுகிறது.
கிரிக்கெட்டை மதமாகவும் சச்சினை கடவுளாகவும் கொண்டாடும் தேசம் இது. செஸ் விளையாட்டில் இந்தியாவை தலைநிமிற வைத்த ஆனந்தை நாம் உரிய முறையில் கொண்டாடியிருக்கிறோமா ? என்பதை எல்லாம் விட்டு விடுவோம். தனது சொந்த மண்ணில் களமிறங்கும் சாம்பியனை கைத்தட்டி ஊக்குவிக்கும் நேரமிது. 


சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை கொண்டாடும் வகையில் இந்த சிறப்பு பதிவு:


chess 

ஆனந்துக்கு வாழ்த்து!

கார்ல்சன் சவாலை ஆனந்த் சமாளிப்பாரா என்று செஸ் உலகமே உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது. ஆனந்தோ அமைதியாக இந்த போட்டிக்கு தயாராகி இருக்கிறார். இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன ? வெல்லுங்கள் என்று வாழ்த்துவது தானே. இதற்காக என்றே பிரத்யேக இணையதளம் விஷ்4விஷி எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனந்தின் நீண்ட கால ஸ்பான்சரான என்.ஐ.ஐ.டி இந்த தளத்தை அமைத்துள்ளது.உங்கள் ஒவ்வொரு வாழ்த்தும் முக்கியம் என அழைக்கும் இந்த தளம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக ஆதரவு குரல் கொடுங்கள் என்கிறது. 


வாழ்த்து செல்வதற்காக என்று உள்ள கட்டத்தில் உங்கள் பெயர், இமெயில் முகவரி, போன் நம்பர் ஆகியவற்றை சமர்பித்து சாம்பியனுக்கான வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொள்ளலாம். வாழ்த்துக்களை டிவிட்டர்,பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் வழியேவும் பகிர்ந்து கொள்ளலாம்.மிகச்சிறந்த வாழ்த்து செய்தி தேர்வு செய்யப்பட்டு, அதற்கு பரிசாக உலக சாம்பியன்ஷிப் போட்டியை காண்பதற்கான டிக்கெட் காத்திருக்கிறது.


போட்டி நடைபெறும் இடம் , போட்டி அட்டவணை ஆகிய விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டி முடிவுகளை தெரிந்து கொள்வதற்கான வசதியும் இருக்கிறது. ஆனந்தை வாழ்த்துவோம்.


போட்டியை நேரில் காண !


சென்னை ஹயத் ஹோட்டலில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நேரில் காணும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனால் ஆர்வம் உள்ளவர்கள் இந்த போட்டியை இணையத்தில் நேரில் காணலாம். அதற்கான வாய்ப்பு உலக சாம்பியன்ஷிப் போட்டிகான அதிகார பூர்வ இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது.


எனும் முகவரியிலான இந்த தளத்தில் போட்டி தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இரு வீரர்கள் பற்றிய அறிமுகம் மற்றும் அவர்கள் ஆட்ட முறை பற்றிய விவரங்களையும் காணலாம். புகைப்படங்கள் ,டிவிட்டர் குறும்பதிவுகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. போட்டியின் முடிவுகளை ஒவ்வொரு சுற்றுக்கும் தெரிந்து கொள்ளலாம். போட்டி இடம் அட்டவணை, அதிகாரிகள் பற்றிய விவரங்களும் உள்ளன. போட்டிக்கான டிக்கெட்டை முன்பதிவும் செய்யலாம்.


ஆனந்த மொழிகள்.


( பாபி) பிஷர் மற்றும் கார்ல்சன் இருவருக்குமே செஸ் விளையாட்டை மிகவும் எளிமையாக்கும் ஆற்றல் இருப்பதாக நினைக்கிறேன்.
இது செஸ் கடவுள் என்று போற்றப்படும் பாபி பிஷர் மற்றும் தற்போதைய இளம் செஸ் மேதையான கார்லசன் இருவரின் அபார திறமையை அங்கீகரித்து ஆனந்த் தெரிவித்த கருத்து. இது போல் ஆனந்த் பல்வேறு தருணங்களில் தெரிவித்த கருத்துக்கள் மேற்கோள்களாக செஸ்கோட்ஸ் தளத்தில் இடம் பெற்றுள்ளன. 


செஸ் என்பது ஒரு மொழி போல ,முன்னணி வீரர்கள் அதில் சரளமாக உள்ளனர். திறமையை வளர்த்தெடுக்கலாம். ஆனால் முதலில் உங்களுக்கு எதில் திறமை அதிகம் என கண்டறிய வேண்டும். இதுவும் ஆனந்த் சொன்ன மொழி தான். 


ஆனந்த் பற்றி மற்ற செஸ் சாம்பியன்களின் மேற்கோள்களும் இந்த தளத்தில் இருக்கிறது. 



டிவிட்டர் பேட்டி.


உலகமே எதிர்பார்க்கும் இந்த மோதலுக்காக ஆனந்த் எப்படி தயாராகி இருக்கிறார் என்று அறிந்து கொள்வதில் எல்லோருக்குமே ஆர்வம் இருக்கிறது. அதிவேக செஸ் பாணியில் ஆனந்திடமே இருந்து இதற்கு பதில் வருவதைவிட விறுவிறுப்பானது எது ? போர்ப்ஸ் இதழ் ஆனந்துடன் டிவிட்டர் மூலம் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. 




anannc 

டிவிட்டரில் ஆனந்த்.


விஸ்வநாதன் ஆனந்தை அவரது ரசிகர்கள் டிவிட்டரில் பின் தொடரலாம். இது ஆனந்தின் டிவிட்டர் முகவரி: 



 பிரபல் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் வரைந்த தனது ஓவியத்தை தான் ஆனந்த் டிவிட்டர் படமாக வைத்திருக்கிறார். தி கிங் என்கிறது அவரது சுயசரிதை குறிப்பு.


உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக ரசிகர்கள் அனுப்பிய ஒவ்வொரு வாழ்த்துமே விஷேசமானது என சதுரங்க ராஜா ஒரு குறுபதிவு மூலம் நன்றி தெரிவுத்துள்ளார்.



 இது ஆனந்தின் பேஸ்புக் பக்கம். 

சதுரங்க போட்டிகள்.

ஆனந்த் ரசிகர்களுக்கு அவரது முக்கியமான செஸ் ஆட்டங்கள் பற்றியும் அதில் மேற்கொள்ளப்பட்ட காய் நகர்வுகள் பற்றியும் தெரிந்து கொள்வதை விட மகிழ்ச்சி அளிக்க கூடியது வேறு என்ன? ஆனந்தின் செஸ் கேம்களை இந்த இணையதளங்களில் பார்க்கலாம்:






தேசமே உங்கள் பின்னால் இருக்கிறது ஆனந்த், வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா எனவும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் ஆயிரத்து 340 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ இன்று வெற்றிகரமாக் அனுப்பியது.


                  nov 5 - tec mars


செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. அது மனிதன் வாழ தகுதியான கிரகம் என்ற தகவலால் ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்க தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள கலத்தில் மாதக்கணக்கில் பயணம் செய்து செவ்வாயில் குடியேற பலர் அட்வான்ஸ் புக் செய்துள்ளனர். இவர்களில் சில ஆயிரம் பேர் இந்தியர்கள்.


இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் இந்திய முயற்சி இன்று நிறைவேற உள்ளது. மங்கல்யான் என்ற விண்கலத்தை ரூ.450 கோடி செலவில் இந்திய விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா, மனிதர்கள் வாழமுடியுமா போன்ற தகவல்களை இந்த ராக்கெட் ஆராயும். இதற்காக இந்த விண்கலத்தில் பல்வேறு கருவிகள் இடம் பெற்றுள்ளன. இது பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.38 மணிக்கு ஏவப்பட்டது.


விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கில் செல்லும் வகையில் நிலைநிறுத்தப்படுவதால் சுமார் 10 நிமிஷங்களுக்கு விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரேடார்கள் மூலம் பார்க்க முடியாமலிருந்தது. மேலும் விண்ணில் தொடர்ந்து தனது பாதையைப் பெரிதாக்கிக்கொண்டே வரும் விண்கலம் டிசம்பர் 1-ம் தேதி நள்ளிரவு செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும்.


தொடர்ந்து 280 முதல் 300 நாள்கள் பயணித்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை விண்கலம் அடையும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

நம் உடலில் இருக்கும் மச்சத்தின் பலன்கள்!

உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….?

நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து

நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு

நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி

மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி

மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்

மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்

மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்

மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்

இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு

வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை

வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்

நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்

கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்

இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்

தலை – பேராசை, பொறாமை குணம்

தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை

தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்

தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்

வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை

அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்

இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்

வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை

விளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது Google!


HTML5 நிரல் மொழியில் எளிமையாகவும் 3D வடிவிலும் விளம்பரப் படங்களை வடிவமைக்க உதவும் புதிய மென் பொருள் ஒன்றை கூகல் வெளியிட்டுள்ளது.



நயன் தாராவுக்கு தோல் நோய். சினிமாவை விட்டு விலக திடீர் முடிவு!

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு வெற்றிகரமாக இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார் நயன்தாரா. ‘ராஜாராணி’, ‘ஆரம்பம்’ என வரிசையாக படங்களில் நடித்து முடித்துவிட்டார். தற்போது உதயநிதியுடன் ‘இது கதிர்வேலன் காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தாலும் தனக்கேற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, சமீபகாலமாக நயன்தரா தோல் சம்பந்தமான பிரச்சினையால் பெரும் அவதிப்பட்டு வருகிறாராம். இதற்கு அதிகமாக மேக்கப் போடுவதுதான் காரணம் என்கிறார்கள். அசைவ உணவு சாப்பிட்டாலே இவரது தோல் அலர்ஜி பிரச்சினை அதிகமாகிவிடுகிறதாம். இதற்காக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறாராம். ஆயுர்வேத மருத்துவர்கள் நயன் தாரா கண்டிப்பாக ஆறு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், அவருடைய தோலில் சில மாதங்கள் சூரிய ஒளிபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். எனவே தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு நயன் தாரா ஆறுமாத காலம் கேரளாவில் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்.

இதேபோல்தான் நடிகை சமந்தாவும் தோல் அலர்ஜி பிரச்சினையால் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை எல்லாம் இழந்து 3 மாதங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்ததானம் பற்றிய சில தகவல்கள்

முதன் முதலில் 1667 - ஆம் ஆண்டு டெனிஸ் என்ற மருத்துவர் 15 வயது சிறுவனுக்கு இரத்தத்தைச் செலுத்தினார். ஆனால், பின்னர் 18 - ஆம் நூற்றாண்டு வரை இரத்ததானம் செய்யப்படவில்லை.


காரணம், இரத்தம் சிறிது நேரத்தில் உறைவதாகும். 1907 - ஆம் ஆண்டு ‘கிரில்’ என்ற மருத்துவர் Operation முறையில் இரத்தம் செலுத்தினார். பின்னர் ‘ஆகோட்’ என்பவர் இரத்தத்துடன் சோடியம் சிட்ரேட் சேர்த்தால் உறையாது எனக் கண்டறிந்தார்.

இறுதியாக, 1923 - ஆம் ஆண்டு ‘ஸ்டோரெர்’ ‘சோடியம் சிட்ரேட்’ சேர்க்காமல், பைப்ரினை நீக்கி இரத்தம் உறைதலைத் தடுக்கலாம் எனக் கண்டறிந்தார்.

இன்று, அறுவைசிகிச்சையின் போதும், விபத்துகளினால் ஏற்படும் அதிகபடியான இரத்தக் கசிவின் போதும் ஈடு செய்ய இரத்தம் செலுத்தப்படுகிறது.

&lsquoA’ இரத்த வகை மனிதனுக்கு, &lsquoB’ இரத்த வகையைத் தவறாக செலுத்தினால் &lsquoA’ இரத்தவகை மனிதனின் இரத்த செல்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு இரத்தம் கட்டியாகி மரணம் ஏற்படும். இதற்கு ‘அக்ளூடினேஷன்’ என்று பெயர்.

&lsquoO’ இரத்த வகையில் A,B ஆன்டிஜென்கள் இல்லை. அதனால், எவ்வகை இரத்த குரூப்பைச் சார்ந்த உடலில் செலுத்தினாலும், இரத்தச் செல்கள் ஒட்டிக் கொள்வதில்லை.


எனவே &lsquoO’ வகை இரத்தத்தை உடையோர் ‘யுனிவெர்செல்டோனர் (Universal Donor) எனப்படுகின்றனர். இவர்கள் எந்தவகை இரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கும் இரத்ததானம் செய்யலாம்.

&lsquoAB’ வகையில் ஆன்டிபாடிகள் கிடையாது. எனவே, அவர்கள் பெறும் இரத்தவகையிலுள்ள ஆன்டிஜென்களுடன் வினைபுரிவதில்லை என்பதால் அவர்கள் ‘யுனிவெர்சல் ரெசிப்பியன்ட்ஸ்’ (Universal Receipients) எனப்படுகின்றனர். இவர்கள் எந்த வகை இரத்தம் உடையவர்களிடமிருந்தும் இரத்தம் பெற்றுக் கொள்ளலாம்.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மங்கள்யான்!



செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தயாரித்துள்ள மங்கள்யான் செயற்கைக் கோள் பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.


செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா எனவும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் ஆயிரத்து 340 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ அனுப்பியுள்ளது.
மொத்தம் ரூ.450 கோடி செலவிலான இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய பெருமை இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது..


ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.


விண்ணில் தொடர்ந்து தனது பாதையைப் பெரிதாக்கிக்கொண்டே வரும் விண்கலம் டிசம்பர் 1-ம் தேதி நள்ளிரவு செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தள்ளனர்.
தொடர்ந்து 280 முதல் 300 நாள்கள் பயணித்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை விண்கலம் அடையும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.


செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய மீத்தேன் சென்சார்கள், அங்குள்ள மேற்பரப்பை படம் பிடிக்கும் கேமரா, கனிம வளத்தை ஆய்வு செய்ய தெர்மல் இன்ஃபிராரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர், வளிமண்டலத்தை ஆய்வு செய்ய லிமான் ஆல்பா போட்டோமீட்டர், கம்போசிஷன் அனலைசர் போன்ற கருவிகள் மங்கள்யான் விண்கலத்தில் அனுப்பப்பட உள்ளன. இதன் மொத்த எடை 1,340 கிலோ ஆகும்.
இந்தியாவின் முதல் வேற்றுக்கிரக திட்டத்தைப் பொருத்தவரை செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக எடுத்துச்சென்றால் அதுவே பெரிய சாதனைதான். உலக அளவில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட 51 திட்டங்களில் 21 திட்டங்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


300 நாள்கள் நீண்ட பயணம்


* பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட்டுக்கான 56 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் நவம்பர் 3-ம் தேதி காலை 6.08 மணிக்கு தொடங்கியது.

* நவம்பர் 5-ஆம் தேதி பிற்பகல் 2.38 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

* டிசம்பர் 1-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை நோக்கி விண்கலம் பயணம்.

* 280 முதல் 300 நாள்கள் வரை இந்த விண்கலம் பயணிக்கும். பின்னர் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் விண்கலம் செலுத்தப்படும்.

இந்திய எல்லையில் ரேடார் நிலையம அமைத்த சீனாவின் தொடரும் அத்துமீறல்!

இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய விமானங்களை கண்காணிக்கும் ரேடார் நிலையம் ஒன்றை சீனா அமைத்து வருவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு அருகே உள்ள தவூலத்பெக்கில் தரையிறங்கும் இந்திய விமானங்களை கண்காணிக்க இந்த ரேடார் நிலையத்தை சீனா அமைத்து வருவதாக கூறப்படுகிறது.




nov 5 - china


எல்லைப் பிரச்சனை தொடர்பாக அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்திய தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது. ஆனால், தாங்கள் அமைத்தது வானிலை மையம் என்று சீனா விளக்கம் அளித்துள்ளது. எனினும், ரேடார் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்தியா கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


China sets up radar stations in Ladakh to spy on Indian warplanes

******************************************************


 With IAF now able to operate C-130 Hercules transport aircraft at high-altitude Daulat Beg Oldie (DBO) sector in Ladakh, China is reported to have built a radar station on its side of the border ostensibly to monitor movement of Indian planes over the area.

மெயில் அனுப்ப போறீங்களா? இதெல்லாம் கவனத்தில் வச்சுக்கோங்க!

இன்றைய உலகில் அனைத்து அலுவலக மற்றும் வெளியுலக செயல்களுக்கு முக்கிய பங்காற்றுவது மின்னஞ்சல் தான்.

மின்னஞ்சல் பயன்பாடு நமக்கு வெளிஉலகை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கடல் தாண்டி உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள்.

தகவல்களை அனுப்புவது எளிதாகிறது, இதனால் உங்கள் வர்த்தகம் மற்றும் தனிநபர் உறவு வலுப்படுகிறது.

ஆனால் சில வேளைகளில் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலால் பிறர் எரிச்சல் அடையவும் கூடும்.

எனவே மின்னஞ்சலை அனுப்பும் முன் சில விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலில் மின்னஞ்சலை பொறுத்தவரை அவற்றை அனுப்பி விட்டால் மீண்டும் பெற முடியாது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
1. பொதுவாக மின்னஞ்சல்களில் எழுத்துப் பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் யாரும் பொருட்படுத்துவதில்லை.

தெரிந்தவர்களுக்கு அனுப்பும் போதுதான் பிழைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் ஒன்றும் தவறில்லை.

முன்பின் தெரியாதவர்களுக்கு அனுப்பும் பொழுது எந்தப் பிழைகளுமின்றி அனுப்புங்கள், இதற்காகவே இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் வேர்டின் ஸ்பெல் செக்கர்கள் போன்று நமக்கு உதவும் வகையில் தங்கள் கிளையண்ட் புரோகிராம்களை அமைத்துள்ளன. எனவே அவற்றை நம் எழுத்துப் பிழைகளைத் திருத்தி அனுப்ப பயன்படுத்தலாம்.

2. மின்னஞ்சலை தயாரித்து முடித்தவுடன் அதைத் திரும்பவும் படியுங்கள். சொல்ல வந்த கருத்துக்கு மாறான கருத்து கொண்ட கடிதம் உங்களிடம் இருந்து சென்று விடக் கூடாது.

புரியாத கருத்து கொண்ட கடிதமும் சென்று விடக் கூடாது. சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் சொற்களில் பிழை இருக்காது. ஆனால் அது வேறொரு பொருள் தருவதாக, அல்லது நேர்மாறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

நீங்கள் ஒரு மூன்றாவது நபர் குறித்து எழுதி இருப்பீர்கள். ஆனால் படிப்பவர் தன்னைப் பற்றி எழுதியதாக எண்ணம் கொள்ளும்படி இருக்கக் கூடாது.
எனவேதான் அனுப்புவதற்கு முன்பு கடிதத்தை மீண்டும் படிக்க வேண்டும். யாருக்குப் பதில் போய் சேர வேண்டுமோ அவருக்கு மட்டும் பதிலை அனுப்பி வையுங்கள். தேவையில்லாமல் Reply All பட்டனை அழுத்தி உங்கள் பதிலை எல்லாருக்கும் அனுப்பி வைக்காதீர்கள்.

3. குறிப்பாக நியூஸ் குரூப், மெயிலிங் லிஸ்ட் போன்றவற்றில் Reply All பட்டனைப் பயன்படுத்தாதீர்கள்.

மின்னஞ்சல் சேவையில் மட்டும் மிக மிக தேவைப்பட்டால் மட்டுமே Reply All பட்டனை அழுத்துங்கள்.

4. கோபத்தில் மின்னஞ்சலை தயாரிக்காதீர்கள். அப்படியே தயாரித்தாலும் உடனே அதை அனுப்பாதீர்கள்.

ஓரிரு நிமிடங்கள் கழித்து கோபம் தணிந்த பின்பு, மின்னஞ்சலை படித்துப் பார்த்து அனுப்புங்கள், புண்படும்படியாக எழுதியவற்றை நீக்கி பின்பு அனுப்புங்கள்.

5. மின்னஞ்சல் என்பது வெறும் டெக்ஸ்ட்டை அடிப்படையாகக் கொண்டது. எனவே நீங்கள் சாதரணமாக அனுப்புகிற ஒன்றை ஒருவர் தவறுதலாக புரிந்து கொள்ள முடியும். இதைத் தவிர்க்க Smileys எனப்படுகிற அடையாளங்களை சேர்த்தால் நன்று.

6. உரியவருக்குதான் அனுப்புகிறீர்களா என்பதை கவனியுங்கள். ஏதோ நினைவில் மின்னஞ்சலைத் தயாரித்து தொடர்பில்லாத ஒருவருக்கு அனுப்புவது மிகவும் தவறாகும்.

ரகசியம், தனிப்பட்ட விஷயங்களை கொண்ட மின்னஞ்சல்கள் போன்றவற்றை அனுப்பும்போது பெறுநருடைய முகவரியைச் சரி பாருங்கள்.

பூசணிக்காயில் உலக சாதனை!


மிகப்பெரிய பூசணிக்காயை துடுப்பு படகாக்கி, 100 மீட்டர் தூரம் கடந்து சென்று, பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். 


270 கிலோ எடையுள்ள ராட்சத பூசணிக்காய்க்குள் அமர்ந்தபடி, இங்கிலாந்தின் போர்ட்ஸ்மோவுத் பகுதியில் உள்ள நீர் நிலையில் இந்த சாதனையை திமித்ரி என்ற இளைஞர் நிகழ்த்தியுள்ளார். 
 
100 மீட்டர் தூரத்தை 2 நிமிடத்தில் கடந்து, புதிய உலக சாதனையை படைத்துள்ளார். 
 
சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ராட்சத பூசணிக்காய் கண்காட்சியில் இந்த பூசணிக்காயை வாங்கியதாக தெரிவித்த திமித்ரி, இதன்மூலம் புதிய சாதனையை நிகழ்த்தியிருப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார். 
 
இதனிடையே, இங்கிலாந்தின் மற்றொரு பகுதியில் விரைவில் தொடங்கவுள்ள ஹாலோவின் திருவிழாவுக்காக, பூசணி பழங்களால் ஆன குடில்கள் மட்டுமின்றி, பயமுறுத்தும் உருவங்களும், வேடிக்கை காட்டும் முகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு வியக்கின்றனர்.

அதுதான் அஜீத்: ஆர்யா பெருமிதம்!



அஜீத், என்னை சொந்த தம்பியை பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொண்டார் என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: அஜீத் எப்போதும் என் பேவரைட். அவரது ஸ்டைலுக்கு நான் தீவிர ஃபேன். அவருடன் நடித்தபோது, சொந்த தம்பியை பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொண்டார். அதே சமயம், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னுடன் அடித்த அரட்டையெல்லாம் ஒரு நல்ல நண்பரை எனக்கு ஆரம்பம் பெற்றுத் தந்துள்ளது.


அஜீத்துக்கு காயம் ஏற்பட்ட போது முழு டீமும் கலங்கிப்போச்சு. டூப் போடாம அஜீத் நடிச்சாரு. எதிர்பாராதவிதமா அந்த விபத்து நடந்துருச்சு. ஆனா ஒண்ணு சொல்லணும் அஜீத்தோட தில் மெய்சிலிர்க்க வச்சுது. படத்தில் என்னுடைய நடிப்பை அஜீத் பாராட்டியது அவருடைய பெருந்தன்மையை காட்டுது.


படத்துல தனக்கு இணையா இன்னொரு ஹீரோ நடிக்கிறது எந்த சூப்பர் ஸ்டாரும் ஏத்துக்க மாட்டாங்க. ஆனா அதை ஏத்துக்கிட்டது மட்டுமில்ல. எனக்கு முழு சப்போர்ட்டும் பண்ணினாரு. பட விளம்பரத்துல தன்னோட பெயரோடு என் பெயரும் வர வச்சாரு. அதுதான் அஜீத் என இவ்வாறு ஆர்யா கூறினார்.

உலக செஸ் சாம்பியன் போட்டி: தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!



இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் நார்வே வீரர் கார்ல்ஸென் ஆகியோர் இடையிலான உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னையில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.


முன்னதாக, செஸ் சாம்பியன் போட்டியை முதல்வர் ஜெயலலிதா வரும் 7 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். போட்டி தொடக்க விழா சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 4 மணியளவில் தொடங்குகிறது. இந்த தொடக்க விழாவை ஒட்டி, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.


உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐந்து நட்சத்திர தனியார் ஹோட்டலான ஹயாத் ரெஜன்சியில் நடைபெறுகிறது. இதற்கென ஹோட்டலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனி அறையில் அவர்கள் இருவரும் விளையாடுவதை கண்ணாடித் தடுப்புகளின் வழியாக பார்ப்பதற்கென ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


சுமார் 400 பேர் வரை போட்டியை பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது. வரும் 28ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 12 சுற்றுகள் கொண்டதாக இருக்கும்.


மிகவும் இளம் வயதுக்காரர்: நார்வே நாட்டின் செஸ் வீரர் கார்ல்ஸெனின் வயது 22. அவர் தன்னை விட 21 வயது அதிகமுள்ள ஆனந்தை எதிர்த்து விளையாடுகிறார். இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக கார்ல்ஸென், திங்கள்கிழமை மாலை சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


போட்டிக்கான பரிசுத் தொகையாக ரூ.14 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு ரூ.29 கோடியை வழங்கியுள்ளது. போட்டியில் பங்கேற்பதற்காக விஸ்வநாதன் ஆனந்த், தனது குடும்பத்தினருடன் கடந்த வெள்ளிக்கிழமை முதலே சென்னையில் முகாமிட்டுள்ளார். இந்தப் போட்டி சென்னை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்லேடன் பற்றி தகவல் கொடுத்தேன்! வெகுமதி தர மறுக்கிறது அமெரிக்கா!

 


 சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த இடம் பற்றி ரகசிய தகவல் அளித்தேன். ஆனால் சொன்னபடி ரூ.150 கோடி வெகுமதி தர அமெரிக்கா மறுக்கிறது என அமெரிக்காவை சேர்ந்த ரத்தினக்கல் வியாபாரி டாம் லீ குறை கூறியுள்ளார்.


அமெரிக்காவின் சிகாகோ பகுதியை சேர்ந்த ரத்தினக்கல் வியாபாரி டாம் லீ(63). இவர் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து ரத்தினக்கல் வியாபாரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டுள்ளார்.


இதனால் அவரது குடும்பத்தினருடன் டாம் லீக்கு நெருக்கம். அப்போது பாகிஸ்தான் வியாபாரியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர், டாம் லீயிடம் கடந்த 2003ம் ஆண்டு ஒரு ரகசிய தகவலை கூறியிருக்கிறார். ‘‘உங்க அமெரிக்கா வலை வீசி தேடும், ஒசாமா பின்லேடன், எங்கிருக்கிறார் தெரியுமா?’’ என கேட்டுள்ளார் அந்த நபர். ‘‘பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என கூறுகிறார்கள்.


ஆனால் அவரது மறைவிடத்தை அமெரிக்க உளவுத்துறை எப்.பி.ஐ.யால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை’’ என்றார் டாம் லீ.  ‘‘இங்குதான் பக்கத்தில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் வசிக்கிறார். அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெஷாவரிலிருந்து அபோதாபாத்துக்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்றதே நான் தான். நான் உங்க எப்.பி.ஐ.,விட பெரிய உளவாளி’’ என பெருமையாக கூறியுள்ளார் அந்த நபர்.


இத்தகவலை டாம் லீ உடனடியாக அமெரிக்க சுங்கத்துறை அதிகாரிகளுக்கும், எப்.பி.ஐ.க்கும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் அபோதாபாத்தில் உள்ள பின்லேடன் வீட்டுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி பின்லேடனை சுட்டுக் கொன்றனர். இது டாம் லீக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. 8 ஆண்டுக்கு முன் நாம் எப்.பி.ஐ.க்கு கூறிய ரகசிய தகவல் மிகச் சரியாக இருந்துள்ளதே. இதற்கு அரசிடம் இருந்து நிச்சயம் வெகுமதியும், பாராட்டும் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தார். பின் லேடன் கொல்லப்பட்ட பிறகும் எப்.பி.ஐ.யிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.


எப்.பி.ஐ டைரக்டருக்கு இது தொடர்பாக பல முறை டாம் லீ கடிதம் எழுதினார். ‘‘நான்தான் பின்லேடன் இருப்பிடம் குறித்து 2003ம் ஆண்டு தகவல் தெரிவித்தேன். எனக்குத்தான் 25 மில்லியன் டாலர் (ரூ.154 கோடி) வெகுமதியை அளிக்க வேண்டும்’’ என டாம் லீ கோரியிருந்தார். எதுவும் பலனளிக்கவில்லை.


சட்டப்படி வெகுமதியை கேட்டுப் பெற டாம் லீ முடிவு செய்தார். இதற்காக சிகாகோவை சேர்ந்த ‘லோவி அண்ட் லோவி’ என்ற சட்ட நிறுவனத்தின் உதவியை நாடினார். அவர்கள் இது தொடர்பாக எப்.பி.ஐ டைரக்டர் ஜேம்ஸ் காமிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். இதற்கும் எப்.பி.ஐ பதில் அளிக்கவில்லை. இதனால் சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் எப்.பி.ஐ குறித்து டாம் லீ புகார் கூறியுள்ளார்.


பின்லேடன் மறைவிடம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ‘‘அபோதாபாத்தில் இருந்த பின்லேடன் வீடு 2005ம் ஆண்டு வரை கட்டப்படவில்லை. 2011ம் ஆண்டு ஏப்ரலில்  பின்லேடன் அங்கு குடியேறியிருக்கலாம் என பாகிஸ் தான் அதிகாரிகள் தெரிவித்தனர்’’ என்கின்றனர்.


எக்ஸ்ட்ரா தகவல்


கடிதம் கொண்டு சென்ற நபர் மூலமாகவும், பின்லேடன் குடும்பத்துக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மூலமாகவும் பின்லேடன் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் முதலில் தகவல்கள் வெளியாயின.

வடக்கு ஆஸ்திரேலியா கடலில் கூன்முதுகு கொண்ட புதிய வகை டால்பின் கண்டுபிடிப்பு!



வடக்கு ஆஸ்திரேலியா கடலில் புதிய வகையான கூன்முதுகு கொண்ட டால்பின் மீன் இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


இந்த டால்பின் மீன் இனத்துக்கு அதிகாரபூர்வமான பெயர் எதுவும் இதுவரை வைக்கப்படவில்லை.


பசிபிக் மற்றும் இந்திய சமுத்திரங்களில் வாழும் நூற்றுக்கணக்கான கூன்முதுகு மீன் இனங்களையும் மீன்களின் மண்டையோடுகள் மற்றும் திசுக்களையும் விஞ்ஞானிகள் ஆய்வுசெய்துவருகின்றனர்.


இந்த ஆய்வுகளின் முடிவிலேயே இந்த டால்பின் மீன் இனத்துக்கு பெயர்வைக்க விஞ்ஞானிகள் எண்ணியுள்ளனர்.


இந்த மீன் இனங்களுக்கு முதுகில் உள்ள துடுப்பு போன்ற சிறகுக்கு கீழே கூன் விழுந்திருக்கும்.


 இதுவரை கண்டறியப்பட்டுள்ள மூன்று டால்பின் இனங்களில் இரண்டு இனங்கள் மீன்பிடி நடவடிக்கைகளாலும் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்களாலும் அழிவடையும் அபாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்யபட்டா டூ மங்கல்யான்!

செவ்வாய் கிரகத்துக்கு இந்திய பயணம் இன்று தொடங்குகிறது



 இந்தியா 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய ’மங்கல்யான்’ விண்கலம் பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன.

அது மனிதன் வாழ தகுதியான கிரகம் என்ற தகவலால் ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்க தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள கலத்தில் மாதக்கணக்கில் பயணம் செய்து  செவ்வாயில் குடியேற பலர் அட்வான்ஸ் புக் செய்துள்ளனர். இவர்களில் சில ஆயிரம் பேர் இந்தியர்கள்.


இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் இந்திய முயற்சி இன்று  நிறைவேற உள்ளது. மங்கல்யான் என்ற விண்கலத்தை  ரூ.450 கோடி செலவில் இந்திய விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா, மனிதர்கள் வாழமுடியுமா போன்ற தகவல்களை இந்த ராக்கெட் ஆராயும். இதற்காக இந்த விண்கலத்தில் பல்வேறு கருவிகள் இடம் பெற்றுள்ளன. இது பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.38 மணிக்கு ஏவப்படுகிறது.  இதற்கான ‘கவுன்ட் டவுன்’ நேற்று முன்தினம் காலை 6.08 மணிக்கு தொடங்கியது.

இந்த ராக்கெட் 44 நிமிடங்களில் 17 ஆயிரத்து 415 கிலோமீட்டர் பயணித்து, பூமியின் நீள் வட்டபாதை யில் நிலை நிறுத்தப்படும். டிசம்பர் 1ம் தேதி நள்ளிரவு தாண்டி 12.42 மணிக்கு செவ்வாய் நோக்கி மங்கல்யான் விண்கலம் செலுத்தப்படும். 300 நாட்கள் பயணித்து 2014  செப்டம்பர் 24ம் தேதி  செவ்வாய் கிரகத்துக்கான சுற்று  பாதை யில் நிலை நிறுத்தப்படும்.

ஆர்யபட்டா டூ மங்கல்யான்

* 1975 ஏப்ரல் 19ம் தேதி ‘ஆர்யபட்டா’ என்ற முதல் செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது. ஆனால் அது சோவியத் யூனியனில் இருந்து ஏவப்பட்டது.

* இரண்டாவதாக பாஸ்கரா என்ற செயற்கை கோள்  1979 ஜூன் 7ம் தேதி மீண்டும் அங்கிருந்து ஏவப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட்  10ம் தேதி  ஆர்டிபி என்ற புதிய செயற்கைகோளை இந்திய மண்ணில் இருந்து ஏவியது.

* இதுவரை 67 செயற்கைகோளை இந்தியா ஏவியுள்ளது. இவற்றில் 25 ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்டன. இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட ஆர்டிபி உட்பட 7 செயற்கைகோள்கள் இலக்கை எட்டவில்லை. 4 முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

* மாணவர்கள் தயாரித்த 4 செயற்கைகோளையும்,  ஜெர்மனி, கொரியா,  பெல்ஜியம், இந்தோனேசியா, இத்தாலி, இஸ்ரேல், கனடா, ஜப்பான், துருக்கி,  சுவிட்சர்லாந்து, அல்ஜீரியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், இங்கிலாந்து நாடுகளுக்காக 35 செயற்கை கோள்களையும் இந்தியா ஏவியுள்ளது.

புன்னகை – நல்லன எல்லாம் தரும்.!

எந்த உயிரினத்திற்கும் இல்லாத அழகான முக வடிவமைப்பை இறைவன் மனித இனத்திற்கு அளித்துள்ளான். அந்த முகத்திற்கு மேலும் மெருகூட்டி பொலிவாக்க புன்னகை என்னும் நகையை அணிந்து கொள்ள வழி செய்துள்ளான். ஆனால், மனிதர்களிடையே காணப்படும் போட்டி, பொறாமை, உறவுகளிடையே காணப்படும் வெறுப்புணர்வு ஆகியவை அந்தப் புன்னகையை மனிதர்களிடமிருந்து காணாமல் போகச் செய்கிறது. ஓவியர் லியொனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட “மோனாலிசா’ ஓவியம் புன்னகையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த ஓவியம்.




                    nov 5 - edit smile


எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் பெண்ணை “புன்னகை அரசி’ என்றும், ஆணை “புன்னகை மன்னன்’ என்றும் கூறி நாம் புன்னகைக்கு மகுடம் சூட்டி மகிழ்கிறோம்.


பெற்றோர்கள் பிள்ளைகளிடம் காட்டும் புன்னகை அவர்களின் எதிர்காலத்திற்கு அஸ்திவாரமாகிறது. பிள்ளைகள் பெற்றோர்களிடம் காட்டும் புன்னகை, வாழ்க்கையை அர்த்தமாக்குகிறது. மருத்துவர் நோயாளிகளிடம் காட்டும் புன்னகை நம்பிக்கைக் கீற்றாக அமைகிறது. வாடிக்கையாளர்களிடம் கடைக்காரர்கள் காட்டும் புன்னகை வியாபாரத்தை அதிகரிக்கிறது.


அதிகாரிகள் அலுவலர்களிடம் காட்டும் புன்னகை ஒற்றுமையை அளிக்கிறது. அரசியல் தலைவர்கள் மக்களிடம் காட்டும் புன்னகை ஜனநாயகத்திற்கு அடித்தளமாகிறது.


“புன்னகை எந்தப் பிரச்னையையும் நேராக்கும் வளைவுக் கோடு’ என்பார்கள். ஒரு நொடிப் பொழுதில் உள்ளத்தில் எழும் மகிழ் உணர்வு புன்னகையாக வெளிப்படுகிறது. நமது மகிழ்ச்சியை இயற்கையாக பிரதிபலிக்கும் ஒரு சக்தியாக புன்னகை விளங்குகிறது. புன்னகை நமது உடலையும் உள்ளத்தையும் இணைத்து மூளைக்குத் தகவல்களை அனுப்பி நம்மை சஞ்சலமற்ற மனதுடன் சந்தோஷத்துடன் இருக்க உதவுகிறது.


நமது மூளையின் புறப்பகுதியின் இடது பாகம் நமது சந்தோஷங்களைப் பதிவு செய்வதற்காகவே உள்ளது. தலைப் பகுதியிலுள்ள தசைகள் மூளையிலிருந்து வரும் சைகையை தாங்கி முகத்தில் உள்ள தசைகளை இயங்கச் செய்து உதட்டில் புன்னகையை தவழச் செய்து உடலை பரவசமாக்குகிறது. நாம் சோகமாக இருக்கும்போது, நாம் முன்பு செய்த நல்ல விஷயங்களை எண்ணிப் பார்த்து புன்னகைத்தால் அது நமது உடம்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தி மீண்டும் சந்தோஷத்தை ஏற்படுத்தும்.


நாம் சந்தோஷமாக இருக்கும்போது நமது உடம்பு நல்ல எண்ண அலைகளை வெளிப்படுத்தி மனதை தூய்மையாக்குகிறது. நாம் வீசும் ஒரு புன்முறுவல் மற்றவர்களையும் புன்னகைக்கச் செய்யும். அதாவது, நாம் சிரித்தால், நம்மைப் பார்த்து உலகம் சிரிக்கும் என்பார்கள். புன்னகை ஒரு தொற்று நோய். நம்மைச் சுற்றி வினோதமான, கோமாளித்தனமான நிகழ்வுகள் நடக்கும் போது நம்மால் புன்னகைக்காமல் இருக்க முடியாது. நமது நண்பர்களையோ உறவினர்களையோ சந்திக்கும்போது அவர்கள் வீசும் புன்னகையால் நம்மை அறியாமைலே நாம் புத்துணர்வு பெறுவோம். அதற்கு மாறாக முகத்தைச் சுளித்து, கடுமையான பார்வையைக் காட்டினாலோ அதனால் எதிர்வினைகள்தான் ஏற்படும்.


நமது மனம் உற்சாகத்திலிருக்கும்போது, உதடு புன்னகைக்கிறது. புன்னகை மனத்தளர்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கிறது. நாம் புன்னகைக்கும்போது நமது உடம்பிலிருந்து எண்டார்பின், செரோடினின் போன்ற இயற்கையான வலி நிவாரணிகள் சுரக்கின்றன.


உடல்வலியைக் கட்டுபடுத்த இறைவன் நமக்கு அளித்த அருமருந்து புன்னகை. அது மன உளைச்சலையும் சோர்வையும் உடல்வலியையும் போக்கும். சிறு புன்னகைதான் பெரும் சிரிப்பை வரவழைக்கும். புன்னகை இல்லாமல் சிரிப்பில்லை. சந்தோஷ சிரிப்பு நம் உடல் நலனை சீராக்குவதுடன், ரத்த ஓட்டத்தையும் சீராக்கி, சீரான தூக்கத்தையும் அளிக்கும்.


எப்போதும் புன்முறுவல் பூத்தவாறு பிறருடன் அன்பாக பழகுபவருக்கு உடல்நலப் பாதிப்பு எப்போதும் ஏற்படுவதில்லை, அதிக அளவில் புன்முறுவல் பூத்து உற்சாகத்துடன் உழைப்பவர்கள் மற்றவர்களை விட ஏழு ஆண்டுகள் இளமையுடன் இருப்பார்கள் என தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
நமது குறுநகை பிறருடைய கவனத்தை இழுக்கும் திறனுள்ளதாக அமையும். அதனால்தான் புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுக்கும்போது நம்மைப் புன்னகைக்கச் சொல்கிறார்கள்?


வேலைப் பளு காரணமாகவோ மன வருத்தம் ஏற்படும்போதோ, அல்லது பிறர் நம்மை வருந்துமாறு பேசினாலோ ஒரு சிறுநகை உதிர்த்தால் மனம் லேசாகி விடும். ஏதேனும் ஒன்றை எதிர்நோக்கியிருக்கும் பேராவல் ஏற்பட்டு அது கிடைக்காமல் போனால் மனம் விசாரம் கொள்ளாமல் இருக்கவும் புன்னகை உதவுகிறது. ஆபத்து வருமோ என்ற கவலையும் மனதிலிருந்து மறைகிறது. பிறரைக் கவர வேண்டுமானால் நமக்கு உயர்ரக ஆடைகளும், அலங்காரங்களும் தேவையில்லை. உதட்டில் புன்னகையை அணிந்தாலோ, அது முன்பின் தெரியாதவர்களையும், ஏன், எதிரியைக்கூட நண்பராக்கும் பாச வலையாகும்.


நாம் புதியதாக வேலை தேடிச் சென்றாலோ அல்லது பணி நிமித்தம் மற்றவர்களை பார்க்கச் போனாலோ நல்ல உடையுடன் சேர்த்து புன்னகையையும் அணிந்து செல்ல வேண்டும். நல்ல உடை மட்டும் ஒருவனைச் சிறந்தவனாகக் காட்டாது. சிடுசிடுப்பான முகத்துடன் உடை பகட்டாக இருந்தால் எந்தவிதமான பயனும் இல்லை. எனவே மற்றவர்கள் மனதில் நாம் பதிய வேண்டுமானால் அழகாக இயற்கையான முகிழ்நகையும் நம்முடன் இருக்க வேண்டும்.


புன்னகையை யாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வழங்கலாம். விலையில்லா புன்னகையால் விளையும் பலன்களோ விலைமதிப்பற்றவை. புன்னகை – நல்லன எல்லாம் தரும்.

மரணத்தைப் பரப்பும் “சூப்பர் பக்’ கிருமிகள்!

நலவாழ்வில் ஒரு தலையாய பிரச்னை, எதிர்ப்பு மருந்துகளுக்கு (ஆண்டிபயாட்டிக்) கட்டுப்படாத தொற்றுநோய்ப் பெருக்கத்தால் ஏற்படும் உயிர் பலிகள் உலகத்தில் ஆண்டுதோறும் உயர்ந்து செல்வது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 30,000 மனிதர்கள் இறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காரணம், எதிர்ப்பு மருந்து உற்பத்தியில் புதிய ஆய்வுகளோ, புதிய கண்டுபிடிப்புகளோ, புதிய முதலீடுகளோ அவ்வளவாக இல்லை.



                nov 5 - health


ஐ.நா. உலக நலவாழ்வு அமைப்பு ஏற்கெனவே இதுகுறித்த எச்சரிக்கையில், “கூட்டு நோய் எதிர்ப்பு மருந்துகளால்கூட வெல்ல முடியாத சூப்பர் பக் பாக்டீரியா நோய்க்கிருமிகளின் ஆதிக்கம் ஓங்கியுள்ளதால், சூப்பர் பக் பாக்டீரியாவை அழிக்கக் கூடிய புதிய நோய் எதிர்ப்பு மருந்துகள் பற்றிய கண்டுபிடிப்புகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய தலையாய பொறுப்பு வடக்கு நாடுகளுக்கு உள்ளது…’ என்று கூறியுள்ளது.


ஆண்டிபயாட்டிக் மருந்துகளின் முக்கிய பயன் நோய்க்கிருமிகளை அழிப்பதுதான். அவை முற்றிலும் அழியாமல் இருந்தாலும் நமது உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மூலம் ஓரளவு பரிகாரம் கிடைக்கிறது. அழியாமல் எஞ்சியுள்ள “சூப்பர் பக்’ என்று கூறப்படும் பாக்டீரியா கிருமிகள் மீண்டும் பன்மடங்கு பலத்துடன் வளர்ந்து எந்த எதிர்ப்பு மருந்துகளுக்கும் கட்டுப்படாமல் மனித மரணத்தை உறுதிப்படுத்தி வருகிறது.


ஐ.டி.எஸ்.ஏ. என்று சொல்லப்படும் அமெரிக்க தொற்றுநோய் எதிர்ப்பு சமூகம் வெளியிட்டுள்ள 2013 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 2009-க்குப் பின் இரண்டே இரண்டு நோய் எதிர்ப்பு மருந்துகளை மட்டும் வெளியிட அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாம், ஏழு நோய் எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாட்டுக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லையாம். அவை ஒப்புதல் பெற்று பயன்பாட்டுக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம். உலகிலேயே மிகப்பெரிய 12 பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் ஒருகாலத்தில் நோய் எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சியிலும் உற்பத்தியிலும் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தன. இன்று காலம் மாறிவிட்டது. நோய் எதிர்ப்பு மருந்து உற்பத்தியில் லாபம் இல்லை.


இன்று நான்கு மருந்து நிறுவனங்கள் மட்டுமே நோய் எதிர்ப்பு மருந்துகளின் ஆராய்ச்சியிலும் உற்பத்தியிலும் ஓரளவுக்கு கவனம் செலுத்தியுள்ளன. அவையாவன: கிளஸ்கோ ஸ்மித் கிளென், பிஃப்சர், ஆஸ்ட்ரா செனகா, மெர்க்.
என்ன காரணத்தினால் மாபெரும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நோய் எதிர்ப்பு மருந்து உற்பத்தியில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு ஹெலன் பவுச்சர் – ஐ.டி.எஸ்.ஏ. வெளியீட்டாளர் பதில் கூறுகையில், “நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பொது மருத்துவப் பயன் என்பதால் அவற்றுக்கு விலை அதிகம் நிர்ணயிக்க முடியாது.


 ஆனால் அதே கவனத்தை உயிர் காக்கும் மருந்து உற்பத்தியில் செலுத்தினால் அதிக லாபம் பெறலாம்’ என்கிறார். உயிர் காக்கும் மருந்து என்பது புற்றுநோய், இதயநோய் போன்ற நோய்களுக்கான மருந்துகளாகும். உதாரணமாக ஆஸ்திரேலியாவில் கடந்த 12 ஆண்டுகளில் மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் 1.4 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் செலவிடப்பட்டு சுமார் 10,000 அணு உயிர்கள் (மாலிக்யூல்ஸ்) கண்டுபிடிக்கப்பட்டன. 2010-இல் பயன்பாட்டுக்கு ஒப்புதல் பெறப்பட்ட மருந்துகளில் சுமார் 3000 மருந்துகள் வெளிவர உள்ளன. அவற்றில் 800 புற்றுநோய் மருந்துகள், 250 இதயநோய் மருந்துகள். இவை தவிர 83 புதிய மருந்துகள் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியுள்ள ஆண்டிபயாடிக்குகள் ஆகும். இதுதான் உலக நிலை.


மருந்து உற்பத்தித் தொழிலில் இந்தியாவின் பங்கு உயர்வானதே. உலகில் தொழில்ரீதியாக மூன்றாவது பெரிய நாடாகத் திகழும் இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனத் தொழில் மதிப்பு சுமார் 21 பில்லியன் டாலர். மதிப்பு அடிப்படையில் 14-ஆவது இடம். வளர்ச்சி 13 சதவீதம். பன்னாட்டு நிறுவனங்களின் பிடிப்பில் இந்திய மருத்துவத் தொழில் வளர்ச்சி பெறுகிறது.


கடந்த ஏப்ரலில் நோவார்ட்டிஸ் என்ற அமெரிக்க நிறுவன வழக்கில், தில்லி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மருந்து உற்பத்தியில் பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளைக்கு ஒரு உதாரணம். ரத்தப் புற்றுநோய்க்குரிய மருந்து கிளீவி என்ற பெயரிலும் கிளைவி என்ற பெயரிலும் விற்கப்படும். அடிப்படை மருந்தான இமாடினிப் மெசிலேட் மருந்துக்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்று இந்திய விற்பனைக்கு ஒப்புதல் பெற்ற ஆண்டு 2002. அன்று முதல் மேற்படி மருந்துகள் ஒரு நபருக்கு ஒரு மாதம் 2500 டாலர் (ரூ.15,000) என்ற அளவில் விற்கப்பட்டன. எனினும் அதே ஆண்டு அதே மருந்தை மாற்றுப் பாதுகாப்பு செய்முறை அடிப்படையில் ஏற்கெனவே காப்புரிமை செய்யப்பட்ட இமாடினி மெசிலேட்டை நாட்கோ என்ற இந்திய நிறுவனம் 10 மடங்கு குறைந்த விலைக்கு (250 டாலர்) விற்பனை செய்தது.


நாட்கோவைப் பின்பற்றி, வேறு பல ஜெனரிக் மருந்து நிறுவனங்கள் (காப்புரிமை செய்யப்பட்ட மருந்தை மாற்றுச் செய்முறையில் தயாரித்து விற்கும் நிறுவனங்கள்) குறைந்த விலைக்கு விற்றன. நோவார்ட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது இந்திய ஜெனரிக் நிறுவனங்கள் சார்பில் புற்றுநோயாளிகள் நுகர்வோர் சங்கமும் வழக்கு போட்டது. நன்கறியப்பட்ட மருத்துவப் பொருளை ஊர்மாற்றிப் பேர்மாற்றி உருமாற்றிக் கருமாற்றிப் புதிதாகப் பெயர் சூட்டி காப்புரிமை பெறுவதை டிரிப்ஸ் (அறிவார்ந்த சொத்துரிமைச் சட்டம்) ஷரத்துக்கள் ஏற்காது என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் நோவார்ட்டிஸ் கேஸ் தோற்றுப் போனது.


எனினும் ரத்தப் புற்றநோய்க்குரிய மருந்தின் ஒரு மாதச் செலவு 150 டாலருக்குள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி நாட்கோ மேலும் விலையைக் குறைத்தது. நோவார்டிஸ் நிறுவனமும் மருந்து விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.



இப்படிப்பட்ட சூழ்நிலையில் 110ஆவது நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில், மருந்து உற்பத்தி மற்றும் விற்பனையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலைப்பாடு முற்றிலும் சரியே. அண்மையில் வெளிவந்த இந்த அறிக்கை, இப்போது இந்தியாவில் இயங்கி வரும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களில் மேலும் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதை தடை செய்ய வேண்டுமென்று மிகவும் வெளிப்படையாகவே எடுத்துரைத்துள்ளது. இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்கள் பெரும்பாலும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகும்.


இத்தகைய நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் டாலர் பலத்தால் கபளீகரம் செய்யத் துடிப்பதெல்லாம் சுயலாபத்திற்கும், வருமானத்திற்கும்தானே தவிர மக்களின் நலனுக்காக அல்ல.
1970களில் இந்தியாவில் 85 சதவீத மருந்துகளை பன்னாட்டு நிறுவனங்களே உற்பத்தி செய்தன. 15 சதவீதம் மட்டுமே தேசிய நிறுவன உற்பத்தி. 1990களில் நிலைமை மாறியது. இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1970 உதவியால் இந்திய தேசிய மருத்துவ நிறுவனங்களின் உற்பத்தியும் விற்பனையும் ஏற்றுமதியும் உயர்ந்து மருந்து உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியாவை உயர்த்தியுள்ளது. இந்திய நிறுவனங்கள் மக்கள் நலனை மனதில் வைத்து, நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி மிகவும் கட்டுப்பாடான விலையில் வழங்குகிறது.


இந்திய தேசிய நலனுக்கு எதிராக கி.பி. 2000 முதல் கடந்த ஆண்டு வரை சுமார் 4392 மில்லியன் டாலர் அந்நிய முதலீடுகள் இந்திய மருத்துவ நிறுவனப் பங்குகளாக வந்துள்ளன. 2010-13 ஆண்டுகளில் 18678.11 கோடி அந்நிய முதலீட்டில் 3 சதவீதம் மட்டுமே மருந்து ஆராய்ச்சி – வளர்ச்சிக்குச் செலவாகியுள்ளது. ஆகவே, அந்நிய நாட்டு மருத்துவ நிறுவனங்களின் இலக்கு தேசிய நிறுவன வளர்ச்சியை சீர்குலைப்பதுதான் என்று தெளிவாகிறது.


 எனினும், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் பயனால் இந்திய மருத்துவ நிறுவனங்கள் கண்டுபிடித்த அணு உயிரிகள் (மாலிக்யூல்ஸ்) சுமார் 80 பில்லியன் டாலர் மதிப்புள்ளவை காப்புரிமையாக்கப்பட்டதால், பன்னாட்டு நிறுவனங்களுடன் சமபலத்துடன் போட்டியில் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் நலவாழ்வுத் துறை மருத்துவக் கழகங்களின் யோசனைகளையும், 110ஆவது நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையையும் புறந்தள்ளிவிட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மைலான் – அஜிலா ஸ்பெஷாலிட்டி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கி பன்னாட்டு மருந்து நிறுவன ஏகபோகங்களின் கைப்பாவையாக மாறி இந்திய தேசிய மருத்துவ நிறுவன வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்.


இன்றைய தலையாய தேவை தொற்றுநோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளின் வழங்கல்தான். தொற்றுநோய் எதிர்ப்பில் புதிய கண்டுபிடிப்புகளின் தேவை புறக்கணிக்கப்பட்டால் மரணத்தைப் பரப்பும் “சூப்பர் பக்’ கிருமிகளால் பொது மருத்துவமனைகளில் தொற்றுநோய்ச் சாவுகள் மேலும் மேலும் உயரலாம். இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இந்திய மருத்துவ விஞ்ஞானிகளிடம் உண்டு. பொதுத் துறையில் ஹிந்துஸ்தான் ஆண்டி பயாட்டிக்ஸ் நிறுவனம் “சூப்பர் பக்’ பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆய்வில் ஈடுபட்டு புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து இந்தியத் தேவையை மட்டுமல்ல. உலகத் தேவையையே நிறைவேற்றும் காலம் விரைவில் வரவேண்டும்.

பெற்றோரே முதல் தெய்வம்..(நீதிக்கதை)




சரவணன்...எப்போதும் காலை எழுந்ததும் தன் பெற்றோர்களுக்குத் தேவையான பணிவிடைகளை செய்த பின்னரே மற்ற வேலைகளைக் கவனிப்பான்.அதே நேரத்தில் அவனுக்கு கடவுள் பக்தியும் அதிகமாக இருந்தது.

ஒரு நாள் இறைவன் அவனுக்குக் காட்சியளித்தார்......

அப்போது அவன் தன் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தான்.அப்பணியை பாதியில் நிறுத்திவிட்டு இறைவனைக் காண விரும்பவில்லை..

' இறைவா....எனக்காக சற்றுநேரம் பொறுங்கள்..பெற்றோர்களுக்கான என் தினசரி கடமையை முடித்துவிட்டு வருகிறேன் என்றார்.

இறைவனும் வீட்டுத் திண்ணையில் அவனுக்காக அமர்ந்திருந்தார்.

பின்னர் அவன் இறைவனிடம் வந்து ' தங்களை தாமதப்படுத்தியதற்கு மன்னியுங்கள் ; என்றான்....

ஆனால் இறைவன் மன மகிழ்ச்சியோடு...'சரவணா...இறைவனே நேரில் வந்தும் ....பெற்றோர்கள் தான் முதல் கடவுள் என அவர்களுக்குப் பணிவிடை செய்த பின்னரே என்னைக் காணவந்த உன்னை பாராட்டுகிறேன்.அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்பதை உணர்ந்தவன் நீ. வாழ்வில் எல்லா செல்வத்தையும் பெற்று வாழ்வாயாக...'என்று வாழ்த்திச் சென்றார்.

இதையே திருவள்ளுவரும் .....

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

              என்றுள்ளார்.
(எழுத்துக்கள் எல்லாவற்றிலும் முதலாக உள்ள எழுத்து ' அ'  அது போல ஒருவனுக்கு உலகில் முதல் முதலான தெய்வங்கள் 'தாய் தந்தையரே' )

நில நடுக்கத்தின் போது செய்யவேண்டிய தற்காப்பு நடவடிக்கை!

நில நடுக்கம் தற்பொழுது தமிழ்நாட்டில் அடிக்கடி நிகழும் சம்பவம் ஆகி விட்டது. ரிக்கடர் அளவில் 6 மேல் ஏற்படும் போது அதிக இழப்பு ஏற்படுகிறது.

நில நடுக்கம் பூகம்பம் வரும் முன் ஏற்படும் ஒரு முதல் அறிகுறியாக இருப்பதால் நில நடுக்கம் குறைந்த அளவாக உணரப்பட்டாலும் அதற்கு முக்கியதுத்துவம் கொடுத்து பாதுகாப்பு இடத்திற்கு செல்வது அவசியம் ஆகிறது.

சில சமயங்களில் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்படுவதுண்டு. பூமிக்கடியில் உள்ள 7 முக்கிய அடுக்குகளில் சில அடுக்குகள் லூசாக நகர்வதுண்டு அதுவே நில நடுக்கமாக உணரப்படுகிறது.


சொல்லாமல் வரும் திடீர் விருந்தினராக வரும் நில நடுக்கம்:



இது எந்த உயிரையையும் கொல்வதில்லை எனபதுதான் உண்மை. பூகம்பத்தை தாக்கு பிடிக்கும் வகையில் கட்டபடாத கட்டிடங்களின் இடிபாடுகள் தான் பல உயிர்களின் இழப்புக்கு காரணமாக இருக்கிறது.

எனவே நில நடுக்கம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பூகம்பத்தை தாக்கும் பிடிக்கும் வகையில்( BIS code) கட்டிடத்தை கட்டவேண்டும்.


நில நடுக்கம் உணர்ந்தவுடன் செய்யவேண்டியது:


1) வீட்டை விட்டு வெளியில் விரைவாக ஒரு நிமிடத்தில் செல்லமுடியும் என்றால் வந்து திறந்த வெளியில் அருகில் எந்த கட்டிடமோ, மரமோ, மின் கம்பம், தொலைபேசி கம்பங்கள் இல்லாத இடத்தில் நிற்கவேண்டும். மேலே மின் கம்பிகள் இல்லாத இடமாகவும் இருக்கவேண்டும்


2) நடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயை பூகம்பமாக மாறி கட்டிடங்கள் இடிபட ஆரம்பித்துவிடும். அந்த சமயத்தில் வெளியேரும் பலரும் இடிபாடுகளில் மாட்டி கொள்கிறார்கள். வீட்டின் உள்ளேயும் தங்கள் விலைமதிப்பான பத்திரபடுத்த ஆங்கேங்கே நடமாடும் ஆசாமிகள் மாட்டிக்கொள்கிறார்கள்.


3) அடுக்கு மாடி கட்டிடத்தில் உள்ளவர்கள் கட்டாயம் வெளியே வருவதை தவிர்க்கவேண்டும். எல்லோரும் ஒன்றாக படிகட்டில் அடைந்து நெரிசலில் பல உயிர்கள் இழப்பு ஏற்படுகிறது. எந்த காரணத்தை கொண்டும் லிஃப்ட் ஐ பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மின் தடை ஏற்பட்டு பாதியில் நின்றுவிடும் வாய்ப்புள்ளது.


4) நில நடுக்கம் உணரப்பட்டதும் விரைவில் வெளியே செல்ல வாய்ப்பு குறைவாக உள்ளவர்கள் தங்கள் வீட்டில் உள்ள வழுவான கட்டில் அல்லது மேஜை அடியில் படுத்துக்கொள்ளவேண்டும். அடியில் பயத்துடன் படுத்திருக்கும் போது நில நடுக்கத்தினால் மேஜை அல்லது கட்டிலோ இடம் பெயர்ந்துவிட்டிற்கும்.

எனவே அதன் கால்களை கெட்டியாக அசையாமல் பிடித்துக் கொள்ளவேண்டும். குடும்ப உறுப்பினர்கள் முன் கூட்டியே யார்யார்க்கு எந்த கட்டில் என்றும் அப்பொழுது நடந்து கொள்ளவேண்டிய முறைகளை பற்றி ஒத்திகை நடத்திருந்தால் மிகவும் சிறப்பு.

கட்டிலின் அடியில் பொதுவாக பலபொருட்களை வைக்கும் பகுதியாக பயன்படுத்துவதை கைவிடவேண்டும்.


5) மேஜை அல்லது கட்டில் கிடைக்காதபோது வீட்டின் உள்ளே உள்ள கதவின் நிலை கால் அடியில் நின்றுகொள்ளவேண்டும். கதவின் வாசற்கால் வைத்திருக்கும் அமைப்பின் மேல் லிண்டல் அமைப்பு காங்கிரிட்டில் இருக்கும். அது இடிபாடுகளின் பகுதிகள் நம் மேல் விழும் பாதிப்பை குறைக்கும்.


6) கதவு குறைவாக இருந்து உறுப்பினர்கள் அதிகமாக இருந்தால் கட்டிடத்தின் மூலை பகுதியில் அட்டைப்போல் ஒட்டிக்கொள்ளவேண்டும். நில நடுக்கத்தின் போது கட்டத்தின் மையபகுதிதான் முதலில் விழும், மேலும் அவைகளின் மூலம் தான் பாதிப்புகள் அதிகம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன்.


7) ஒரு தலையாணையை தலையில் ஐயப்ப பக்தர் போல் வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.


Cool இடிபாட்டில் மாட்டிக்கொண்டால், முதலில் ஆசுவாசபடுத்திக்கொண்டு நீண்ட உள் மூச்சு இழுத்து காற்றை நன்றாக இழுத்துக்கொள்ளவேண்டும். பின்னால் இடிபாடுகள் அதிகமாகி காற்றே கிடைக்காமல் போகலாம்.

இடிப்பாட்டு தூசுகளை மற்றும் புகை மூட்டத்தை தவிர்க்க ஒரு கர்ச்சீப்பை முகத்தில் கட்டிகொள்ளவேண்டும். துகள்கள் மூச்சு திணறலை ஏற்படுத்தலாம்.


9) இடிபாடுகளை உள்ளே இருந்து நீக்கி வெளியே வர முயலக்கூடாது. வெளியா எப்படிப்பட்ட நிலை உள்ளது என தெரியாது. நம்முடைய முயற்சி சரிவை அதிகப் படுத்திவிடும்.


10) இடிபாட்டிற்குள் இருந்து சத்தம் இட்டு அல்லது கூக்குரல் செய்வதை தவிர்க்கவேண்டும். இவைகள் நம்மை எளிதில் பலம் இழக்கசெய்துவிடும்.உதவிக்கு சத்தம் இடுவது கடைசி முயற்சியாமட்டுமே இருக்கவேண்டும்.


11) அருகில் உள்ள சுவரை தட்டுவது, கையில் விசில் வைத்துகொள்ளுதல் வெளிநாட்டில் வழமையாக உள்ளது. நாமும் விசில் ஒன்று வைத்திருந்தால் அதை ஒலிக்கசெய்து காப்பாற்று பணியில் உள்ளவரை நம் பக்கம் ஈர்க்கலாம்.சிறிய டார்ச் லைட் வைத்துகொள்ளுவது கூட உதவி செய்யும்.


12) நில நடுக்கத்தின் போது வெளியில் வந்தபின் நமது இடிபட்ட வீட்டிற்குள் எதேனும் முக்கிய எடுக்கவேண்டும் உள்ளே செல்லக்கூடாது. சில இடிப்பாடுகள் தாமதமாக ஏற்படலாம். மீட்பு குழுவினர் மட்டுமே அப்பணிகளை செய்யவேண்டும்.


13) நிலநடுக்கம் முடிந்த பின் பாதுகாப்பான இடத்திலிருந்து ரேடியோ அல்லது தொலைக்காட்சி மூலம் செய்திகள் கேட்கவேண்டும்.அரசு நில நடுக்கத்தின் ரிக்டர் அளவு, மீண்டும் வரும் எச்சிரிக்கை, பாதுகாப்பு ஆலோசனைகள் கேட்டு அதை கடைப்பிடிக்கவேண்டும்.


14) நிலநடுக்கத்தின் போது கார் ஒட்டி கொண்டிருந்தால் காரை பாதுகாப்பாக மரமோ, மின் கம்பமோ. மின் கம்பிகள் பாதை இல்லாத இடமாக ஓரமாக நிறுத்தி காரின் உள்ளேயே இருக்கவேண்டும். நிலநடுக்கம் நின்று விட்டதை உறுதியாக அறிந்து பின் பாலங்கள் இல்லாத வழியாக தேர்வு செய்து வீடு திரும்பவேண்டும்.

ஏனேன்றால் பாலங்கள் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு கார்செல்லும் போது விபத்து ஏற்படலாம்.

வெளிநாட்டில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் இது போன்ற பேரிடர் போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளை நன்றாக பயின்று அவைகள் மாதம் ஒரு முறை ஒத்திகை பார்த்து தயார்நிலையில் இருப்போம்.

நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் இன்றைக்கே பேரிடர் ஒத்திகை பார்த்துவிடுங்கள், இழப்புகளை குறைத்துக்கொள்ளுவோம்! 

வீட்டு உபயோகப் பொருட்களைப் பார்த்து வாங்க... பக்குவமாகப் பராமரிக்க...

வரவேற்பறையில் ஒரு மூங்கில் சோஃபா செட், பெட்ரூமில் நேர்த்தியான படுக்கை விரிப்புடன் இருக்கும் கட்டில், சமையலறையில் வரிசையில் அமர்ந்திருக்கும் எவர்சில்வர் பாத்திரங்கள், பாத்ரூமில் பேஸ்ட், பிரஷ்களை சுமக்கும் 'மிக்கி' வடிவ குட்டி பிளாஸ்டிக் கூடை..!


ஆம்... இப்படி நம் வீட்டுப் பொருட்கள்தான் நம் பொருளாதார நிலைமை, ஒழுங்கு, ரசனை, விருப்பங்களை நம் வீட்டுக்கு வருபவர்களுக்கு தெரிவிக்கிற கண்ணாடி! அத்தகைய வீட்டு உபயோகப் பொருட்களை தேர்ந்தெடுக்க... பராமரிக்க... டிப்ஸ்களை அடுக்கியுள்ளோம் இங்கே! உங்கள் வீட்டுப் பொருட்களின் அழகும் ஆயுளும் அதிகரிக்கட்டும்!


'ஹவுஸ் கீப்பிங்'-ல் குட் வாங்க..! வீட்டில் உள்ள பொருட்களின் இடைவிடாத பரமாரிப்புதான் நம் சுத்தத்தையும், அழகியலையும் சொல்லாமல் சொல்லும். அதற்கு...



1. வீட்டை அலங்கரிக்கும் 'ஷோ கேஸ்' பொம்மைகள் அல்லது பொருட்களை அடிக்கடி துடைத்துச் சுத்தப்படுத்தினால், அவை எப்போதும் கண்கவர் அழகில் இருக்கும்.



2. ஃப்ளவர்வாஸ் பூக்களை மாதம் ஒருமுறை கொஞ்சம் சோப்புத் தூள் கலந்த தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து நன்கு அலசினால், புதுப்பொலிவுடன் இருக்கும்.



3. திரைச்சீலைகள், குஷன் கவர், சோஃபா கவர், பெட் ஸ்ப்ரெட்... இவற்றை மாதம் இருமுறையாவது மாற்றுவது வீட்டுக்கு அழகை மட்டுமல்ல, வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.



4. வீடு துடைக்கும் 'மாப்'பை பயன்படுத்திய பிறகு, நன்கு அலசி வெயிலில் காய வைத்தால் ஈரவாடை வராது; நீண்ட நாள் உழைக்கும். 'மாப்' தேய்ந்துவிட்டால், அதை மட்டும் மாற்றிக் கொள்ளலாம், ஸ்டிக் மாற்றத் தேவையில்லை.



5. துடைப்பத்தை படுக்க வைக்காமல், அடிப்பாகம் தரையிலும் நுனிப்பகுதி மேல்நோக்கியும் இருக்குமாறு வைத்தால், அது வளையாமல் எப்போதும் நேராக இருந்து சரியாக சுத்தப்படுத்தும். பாத்ரூம்களில் பயன்படுத்தும் தென்னை துடைப்பத்தை பாத்ரூமிலேயே வைக்காமல் அவ்வப்போது வெயிலில் வைத்தால், ஈரத்தினால் பூஞ்சான் தாக்காது; வாடையும் வராது.


 சமையலறை பொருட்கள் பராமரிப்பு...



6. ஒவ்வொரு முறை மளிகைப் பொருட்கள் தீரும்போது, அது இருந்த டப்பாக்களில் உடனே மீண்டும் பொருட்களை நிரப்பாமல், அவற்றையெல்லாம் கழுவிச் சுத்தப்படுத்தி காய வைத்து, பின் கொட்டி வைப்பது நலம். எண்ணெய் கன்டெய்னர்களை மாதம் இருமுறை தேய்த்தால், எண்ணெய்ப் பிசுக்கு சேராது.



7. பாத்திரம் கவிழ்த்து வைக்க எவர்சில்வர் கூடையைப் பயன்படுத்துபவர்கள், கூடையின் அடியில் ஒரு துணியை விரித்து, பின்பு பாத்திரத்தைக் கவிழ்த்தால், கூடை துருப்பிடிக்காமல் நீண்ட நாள் வரும். அவ்வப்போது துணியை மாற்றினால் போதும்.



8. அரிவாள்மனை இப்போதெல்லாம் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மெட்டீரியலில்தான் அதிகம் வருகிறது. இதனை வாங்கும்போது, முனையில் தேங்காய்த் துருவி இல்லாமல் வாங்குவது, நீண்டநாள் உழைக்க உதவும். காரணம்... தேங்காய் துருவும்போது, அந்த ஆட்டத்தால் ஸ்டாண்ட் உறுதி குலைந்துவிடும் என்பதுதான். தேங்காய் துருவியைத் தனியாகக்கூட வாங்கிக் கொள்ளலாம்.
 

சீப்பு, கண்ணாடியைப் பராமரிக்க...




9. அகலமான பற்கள் கொண்ட சீப்பு, நார்மலான சீப்பு, சிக்கெடுக்க, வகிடெடுக்க ஏதுவான 'டெயில் கோம்ப்' எனப்படும் பின்பக்கம் குச்சிபோல் நீண்ட சீப்பு, பேன் சீப்பு, ஆண்களுக்கான வட்ட சீப்பு, குழந்தைகளுக்கான 'சாஃப்ட் பிரஷ்' சீப்பு என்று அனைத்து ரகத்திலும் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம்.



10. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தனித்தனி சீப்பைப் பயன்படுத்தினால் தலைமுடி ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். விருந்தினர்களுக்கு என்று ஒரு சீப்பை ஒதுக்கிவிடுவது இன்னும் நலம், நாகரிகம்.



11. சீப்புகளை வாரம் ஒருமுறை சோப் நீரில் ஊறவைத்து, அதற்கென உள்ள பிரஷ்ஷில் சுத்தம் செய்துவிட்டால், எப்போதும் சீப்பும் தலையும் சுத்தமாக இருக்கும்.



12. வார்ட்ரோப் கண்ணாடி, பீரோ கண்ணாடி, நிலைக் கண்ணாடி என்று எதுவாக இருந்தாலும், அதன்மேல் டால்கம் பவுடரைத் தூவி, ஈரமில்லாத துணியால் துடைக்க, கிரிஸ்டல் கிளியராகும்.

 
'டாய்லெட் செட்'கள் பராமரிப்பு...



13. குளிக்கும் சோப்பை வைக்கும் டப்பா, சோப்பைவிட கொஞ்சம் அளவில் பெரியதாக இருந்தால்தான், எடுக்கவும் வைக்கவும் எளிதாக இருக்கும். சோப் வைக்கும் டப்பாக்களில் ஓட்டைகள் இருப்பதுடன், சற்று உயரமாகவும் இருந்தால்தான் நீர் வடிவது எளிதாக இருக்கும்.



14. துவைக்கும் சோப்பை அதற்கான வலைபோன்ற பையான 'மெஷ்'ஷில் போட்டுப் பயன்படுத்தலாம். இதனால் அது கைகளில் அலர்ஜியை உண்டாக்குவது தவிர்க்கப்படுவதுடன், சோப்பும் அதிகமாக கரையாது.



15. பல் துலுக்கும் பிரஷ்ஷை 3 மாதத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றிவிட வேண்டும். முழுக்கமுழுக்க தேய்ந்தபின்புதான் மாற்றுவேன் என அடம் பிடித்தால், விரைவில் பல்லையும் மாற்ற வேண்டி வரலாம். அதேபோல, பிரஷ், பேஸ்ட் வைக்கும் ஸ்டாண்ட்டையும் அவ்வப்போது வெந்நீரில் கழுவி வைக்கலாம்.



16. வீட்டில் குழந்தைகளுக்கு பிரஷ் வாங்கும்போது வெவ்வெறு நிறங்களில் வாங்கி விட்டால் குழந்தைகள் அடையாளம் கண்டுபிடிக்கத் திணற மாட்டார்கள். 'என் பிரஷ்ஷை அவ எடுத்துட்டா' என காலையிலேயே வீட்டில் கச்சேரி ஆரம்பமாவதையும் தடுக்கலாம். குழந்தைகளுக்கான பிரத்யேக 'பேபி பேஸ்ட்', அதிக மின்ட், காரம் இல்லாதது. குழந்தைகளும் இதை விரும்புவார்கள்.



17. பேஸ்ட்டை உபயோகிக்கும்போது, அடியிலிருந்து அழுத்திக் கொண்டு வந்தால் காற்றுப் புகுந்து அதன் தரம் குறையாது.



18. பித்த வெடிப்புக்கான 'ஃபுட் ஸ்க்ராப்', 'ப்ஃயூமிக் ஸ்டோன்', உடல் தேய்ப்பதற்கான 'பாடி மெஷ்'... இவற்றையெல்லாம் தேவையைப் பொறுத்து பாத்ரூமில் வாங்கி வைக்கலாம்.


பாத்திரங்கள் பத்திரம்!



மண்பாண்டங்களைப் புழங்கினார்கள் நம் பாட்டன், பூட்டன்கள். செம்பு, பித்தளை, அலுமினியம், எவர்சில்வர், காப்பர் கோட்டட் என்று பரிணமித்து, இப்போது பிளாக் மெட்டல் பாத்திரங்கள் வரை வந்துவிட்டோம் நாம். அந்தப் பாத்திரங்களை வாங்குவதற்கும் பராமரிப்பதற்குமான பக்குவங்கள் இங்கே...



19. எவர்சில்வர் பாத்திரங்களை வாங்கும்போது தக்கைபோல் இல்லாமல், நல்ல கனமான பாத்திரங்களாக பார்த்து வாங்க வேண்டும். இல்லையெனில் சீக்கிரமே நெளிந்துவிடும். பாத்திரத்தின்மேல் போடப்பட்டிருக்கும் பாலீஷ், முழுமையாக எல்லா இடங்களிலும் சரியாக போடப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்கினால், வீட்டுக்கு வந்தபின், 'அடக் கடவுளே... என்ன இது? இந்தப் பக்கம் கறுப்பா, மங்கலா இருக்கே' என்று புலம்ப வேண்டியிருக்காது.



20. எவர்சில்வர் பாத்திரங்களை சிலசமயம் பால் காய்ச்ச, உணவை சூடுபடுத்த என்று அவசரத்துக்காக அடுப்பில் வைக்கும்போது, உள்ளே கறை படிந்து கறுப்பாகலாம். அதனைப் போக்க, எலுமிச்சை சாறு கலந்த தண்ணீருடன் பாத்திரத்தை சில நிமிடங்கள் அடுப்பில் வைத்து, பின் தேய்த்தால் கறைகள் நீங்கும்.



21. செம்பு, பித்தளைப் பாத்திரங்களில் அதன் அடிப்பகுதி கனமாக இருக்கிறதா, வார்ப்பு, ஃபினிஷிங் சரியாக உள்ளதா என்றெல்லாம் பார்த்து வாங்குவது புத்திசாலித்தனம். இல்லை- யெனில், இடையில் வார்ப்பு விட்டுப்போய், கையைப் பதம் பார்க்கலாம்.



22. பித்தளைப் பாத்திரங்கள் தண்ணீர், காற்று அதிகம்பட்டுக் கறுத்துப் போய்விடும். அதனைப் போக்க எலுமிச்சை, புளி, புளிச்சக் கீரைத் தண்ணீர் போன்ற புளிப்புத்தன்மை கொண்ட பொருட்களால் துலக்கினால் பளபளக்கும். பித்தளைப் பாத்திரங்களை துலக்குவதற்கென சில பிரத்யேக பவுடர் வகைகளும் மார்கெட்டில் கிடைக்கின்றன.



23. இப்போதெல்லாம் 'பிளாக் மெட்டல் பாத்திரங்கள்' என்று கறுப்பு நிறத்தில் அழகழகான சமையல் பாத்திரங்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவையும், அலுமினியம்தான். ஆனால், வழக்கமான பாணியில் அல்லாமல் வேறு வகையில் அலுமினியத்தை உருக்கித் தயாரிக்கப்படும் பாத்திரங்கள். அழகான கிச்சன் லுக் விரும்பவர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பராமரிப்பும் எளிதுதான்.



24. நான்-ஸ்டிக் பாத்திரங்கள் அடிப்பிடிக்காது என்பதுதான் அதன் ப்ளஸ்! இப்போது இதில் 'டிரிபிள் கோட்டட்' பாத்திரங்கள் வரை வந்துள்ளன. நீண்ட நாள் உழைப்புக்கு இவற்றை நம்பலாம்.



25. நான்-ஸ்டிக் பாத்திரங்களை... உப்பு, எண்ணெய், முட்டைப் பசை போன்றவற்றை தாங்குமா என்பதை உறுதிசெய்து வாங்கலாம். ஸ்க்ராட்ச் ப்ரூஃப் டெஸ்ட், சால்ட் டெஸ்ட், ஆயில் டெஸ்ட், எக் டெஸ்ட் போன்றவற்றின் முடிவுகளையும் சில நிறுவனங்கள் விளக்கக் கையேட்டில் கொடுத்திருப்பார்கள். அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



26. நான்-ஸ்டிக் பாத்திரங்களில் தவா, கடாய், ஆப்பச் சட்டி, பேன், ஃப்ரைபேன் என இவற்றில் அதிக வகைகள் உள்ளன. இவற்றின் விலை அதிகம். எனவே, இஷ்டத்துக்கு எல்லாவற்றையும் வாங்கி அடுக்காமல், தேவையானதை மட்டும் வாங்குங்கள்.



27. நான்-ஸ்டிக் பாத்திரங்களை கரகரப்பான மெட்டல் மற்றும் பிளாஸ்டிக் ஸ்க்ரப் கொண்டு துலக்கினால், அதன் ஒரிஜினாலிட்டி போய்விடும். எனவே, ஸ்பான்ச் ஸ்க்ரப்களால் துலக்குவது நலம். கூடவே நான்-ஸ்டிக் பாத்திரங்களில் எவர்சில்வர் கரண்டிகளைவிட, மரக் கரண்டிகளை பயன்படுத்துவதே பரிந்துரைக்கத்தக்கது என்பது, நாம் அறிந்ததுதானே?!



28. சாதாரணப் பாத்திரங்களைவிட, காப்பர் பாட்டம் பொருத்தப்பட்டவை, நம்முடைய சமையலை விரைவுபடுத்தும். சீக்கிரமாகவே சூடு ஏறுவதுதான் காரணம். அடுப்பிலும் இருக்கட்டும் அக்கறை!



மண்ணெண்ணெய் அடுப்போ, கேஸ் ஸ்டவ்வோ... அதை ஒழுங்காக இயங்க வைப்பதற்கான 'எரிபொருள் டிப்ஸ்'கள் இங்கு...



29. மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் அடியில் அழுக்குப் படிந்து, ஸ்டவ் ஓட்டையாகலாம். அதைத் தவிர்க்க, மண்ணெண்ணெயை ஸ்டவ்வில் ஊற்றும் முன், அதை வடிகட்டி ஊற்றினால் நோ பிராப்ளம்.



30. ஸ்டவ்வை பற்ற வைப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் குச்சியால் மட்டும் அதை பற்ற வைப்பது, ஸ்டவ்வின் ஆயுள் காலத்தை அதிகரிக்கும். மாறாக, தீக்குச்சிகளைப் கொளுத்திப் போட்டு பற்றவைத்தால், அவை உள்ளே அடைத்துக்கொள்ளும்.



31. கண்டிப்பாக செய்யக்கூடாத விஷயம், ஸ்டவ்வை தண்ணீர் விட்டு அணைப்பது. அது திரியையும், ஸ்டவ்வின் மேற்பகுதியையும் சீக்கிரம் கெடுத்துவிடும். பதிலாக, அணைப்பதற்காகவே கொடுக்கப்பட்டுள்ள மூடியைப் பயன்படுத்துங்கள். அதுதான் ஸ்டவ்வுக்கு பாதுகாப்பு.



32. கேஸ் ஸ்டவ்களில் இப்போது இரண்டு மேடைகள், நான்கு பர்னர்கள் உள்ள அடுப்புகள் வரை கிடைக்கின்றன. குடும்பத்தின் தேவையைப் பொறுத்து வாங்கிக் கொள்ளலாம்.



33. பெரும்பாலும் உள்நாட்டுத் தயாரிப்பு ஸ்டவ்களை பயன்படுத்துவது நலம். இம்ப்போர்டட் ஸ்டவ்களில் நாம் உபயோகிப்பதுபோல டியூப் இணைப்பு பக்கவாட்டில் இல்லாமல், நாம் பார்க்கவே முடியாதபடி கீழே இருக்கும். இதற்குப் பழக்கபடாத நாம், அதைக் கையாள்வதில் திணறும்போது எரிவாயு கசியும் ஆபத்து அதிகம்.



34. சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு கேஸை கடத்தும் டியூப், உறுதியான ரப்பர் டியூப்பாக இருந்தால் எலிக்கடி, லீக்கேஜ் பிரச்னைகள் இருக்காது. தரமான பலவகை டியூப்களும் தற்போது கிடைக்கின்றன.



35. வீட்டுக்கு வெளியே சிலிண்டரை வைத்து, அடுப்புக்கு இணைப்பு கொடுத்திருப்பார்கள் சிலர். 'கசிந்தாலும் வீட்டுக்குள் எந்தப் பிரச்னையும் இருக்காது' என்ற நம்பிக்கை அவர்களுக்கு அதிகமாக இருக்கும். ஆனால், சிலிண்டர் மாற்றும்போது ஒயர் இழுக்கப்படுவதால் வீட்டின் உள்ளே ஸ்டவ்வில் பொருத்தப்பட்டிருக்கும் ஒயரின் முனை லூஸாகி, வீட்டுக்குள்ளும் கேஸ் லீக்காகலாம். உஷார்!



36. கேஸ் ஸ்டவ்வை சுத்தப்படுத்துவதற்கு தினமும் அதை சோப் தண்ணீரால் அலச வேண்டிய அவசியம் இல்லை. தினமும் அதை ஈரத் துணியால் அழுந்தத் துடைத்தாலே போதுமானது. சமையலின்போது அதன்மேல் பாலோ, வடிநீரோ பட்டுவிட்டால் உடனே துடைத்து விட, ஈரம் தங்காது. இதனால் பர்னர், ஸ்டாண்ட் துரு பிடிக்காது.



37. ஸ்டவ் ஸ்டாண்டுகளை அவ்வப்போது தேங்காய் எண்ணெய் வைத்துத் துடைத்தால், துரு தூர நிற்கும்.



38. 'இண்டக்ஷன் ஸ்டவ்' எனப்படும் மின்சார ஸ்டவ் தற்போது பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மின்சாரம் அதிக அளவு செலவாவது இல்லை. சாதாரண எவர்சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம் காப்பர் பாட்டம் பாத்திரங்களைத் தவிர்ப்பது நல்லது.


அத்தியாவசியம்... இவை அத்தியாவசியம்! 'இதெல்லாம்கூட இல்லாமலா இத்தன வருஷம் சம்சாரம் பண்ற..?' - இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ளாமல் இருக்க, ஆடம்பரப் பொருட்கள் இல்லாவிட்டாலும் இந்த அத்தியாவசியப் பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்கள்... உங்கள் வீட்டிலும்.


39. பிரம்மச்சாரி என்றாலும், பெருங்குடும்பம் என்றாலும் அந்தக் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு இட்லி பாத்திரம், ஒரு தோசைக்கல், ஒரு சப்பாத்திக்கல் ஆகியவை இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள். சிலர் தோசைக்கல்லிலேயே சப்பாத்தியும் சுடுவார்கள். இதனால் அடுத்து அதில் தோசை சுடும்போது, மாவு திரண்டு திரண்டு நின்று படுத்தி எடுக்கும். எனவே, சப்பாத்திக்கு என்று ஒரு தனி கல் வாங்கித்தான் வையுங்களேன்.



40. மிக்ஸியில் பருப்பு கடைந்தாலும், கீரை மசித்தாலும் அதன் ஒரிஜினல் சுவை கெட்டு விடும். சில நுண்சத்துக்களும் அழிந்துவிடும். எனவே, பருப்பு மத்து ஒன்று எப்போதும் இருக்கட்டும்.



41. என்னதான் மளிகைப் பொருட்களை கடைகளில் சுத்தப்படுத்தி, பாலித்தீன் பைகளில் அடைத்து விற்றாலும் தூசு, தும்பு இருந்தால் புடைக்க ஒரு முறம் வேண்டாமா..? வேண்டும்!



42. 'கரன்ட் கட்' - இன்று தமிழக மக்களைப் படுத்தும் வார்த்தை. அவசரத்துக்கு ரசத்துக்கு பூண்டு நசுக்கக்கூட மிக்ஸியை எதிர்பார்த்திருந்தால், வேலைக்கு ஆகாது. எனவே, பெரிய அம்மிக் கல் வாங்கி வைக்க முடியாவிட்டாலும், சின்ன உரல் கல் ரொம்ப ரொம்ப அவசியம்.



43. எமர்ஜென்ஸி லைட் சேவை இந்தக் கோடை 'கரன்ட் கட்' காலத்தின் அவசியத் தேவை. கூடவே, எப்போதும் அதில் போதுமான சார்ஜ் ஏற்றி வைப்பதும் முக்கியம்.

 

எலெக்ட்ரானிக் பொருட்களின் அதிக ஆயுளுக்கு! இன்று வீட்டு உபயோகப் பொருட்களில் பதிக்குப்பாதி மின்சாரத்தை நம்பித்தான் இருக்கின்றன. அவற்றை வாங்கும்போதும், பராமரிக்கும் போதும் சில விஷயங்களில் கவனமாக இருந்துவிட்டால், காலத்துக்கும் குடைச்சல், எரிச்சல், துன்பம் இல்லை. அதற்காக...


44. மின்சாதனப் பொருட்களை வாங்கினால் நல்ல பிராண்டில், வாரண்டி மற்றும் எளிய சர்வீஸ் வசதிகளுடன் வாங்கவும். 'மின்சாரம் சேமிக்கப்படும்' என்ற உத்திரவாதம் இருந்தால் மிகவும் நல்லது.



45. அனைத்து மின்சாரப் பொருட்களுக்குமான மிகமுக்கியப் பாதுகாப்பு, மின் இணைப்பில் 'எர்த்' கனெக்ஷனைக் கட்டாயம் பயன்படுத்துவதும், சரியான ஸ்டெபிலைஸரை உபயோகப்- படுத்துவதுமே.



46. வீடு முழுவதும் நெருப்புப்பொறி வராத தரமான சுவிட்சுகளையே பயன்படுத்தலாம். அவை விலை அதிகமென்பதால் குறைந்தபட்சம் கிச்சனில் மட்டுமாவது பயன்படுத்தலாம்.


மிக்ஸி:



47. அதிகம் சத்தம் போடாத மிக்ஸிகளே நல்லது, 'சிறந்த விமானம் என்பது குறைந்த ஒலியுடன் வேகமாக பறக்கும்' என்ற அறிவியல் விதி, மிக்ஸிக்கும் பொருந்தும்.



48. அதிகமாக வைப்ரேட்டாகும் மிக்ஸிகள் நல்லவை அல்ல; அந்த வைப்ரேஷனே மிக்ஸியின் ஆயுளைக் குறைத்து விடும்.



49. முன்பெல்லாம் மிக்ஸியின் நடுவே மோட்டாரைப் பொருத்தி இருப்பார்கள். இப்போது அடித்தளத்திலேயே மோட்டார் பொருத்தப்பட்ட வலுவான மிக்ஸிகளும் வந்துவிட்டன. ஆயினும், அந்த மிக்ஸியியை சரியாகப் பயன்படுத்துவதும், பராமரிப்பதும்தான் அதன் ஆயுளை அதிக்கப்படுத்தும்.



50. மிக்ஸியைக் கழுவினால், மோட்டாருக்குள் தண்ணீர் புகுந்து பழுதாகும். எனவே, ஈரத் துணியால் அழுந்தத் துடைத்தாலே போதும். அதேபோல, சரியான பிளேடுகளைப் பயன்படுத்துவதும் முக்கியம்.


கிரைண்டர்:




51. கிரைண்டர் வாங்கும்போது, குடும்பம் பெரியதாக இருந்து அதிக மாவு அரைக்க வேண்டும் என்றால் மட்டும், பழைய ஒற்றைக்கல் கிரண்டரை வாங்கவும். 'டேபிள் டாப்' கிரைண்டர்களே இப்போதைய குறுகலான சமையல் கட்டுகளுக்கு நல்லது, அதனைக் கழுவிப் பராமரிப்பதும் எளிது.



52. கிரைண்டர் வாங்கும்போது அதன் ஆயுளையும் அதிக வேலைத்திறனையும் தீர்மானிக்கும் R.P.M. எனப்படும் அதன் சுற்றும் திறன் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க வேண்டும். பொதுவாக 960 R.P.M-ல் ஆரம்பித்து 1,350 R.M.P. வரையுள்ள கிரைண்டர்கள் மார்கெட்டில் உள்ளன.



53. கல்லின் இயக்கம் கியர் டைப்பா, பெல்ட் டைப்பா என்பதும் முக்கியம். பெல்ட் டைப்பைவிட, கியர் டைப் சிறந்தது. காரணம், பெல்ட் டைப்பில் அரிசியைப் போட்டுவிட்டு ஆன் செய்தால், கல் நகராது. ஓடும்போதுதான் போட வேண்டும். கியர் டைப்... லோ வோல்டேஜிலும் நன்றாக உழைக்கும்.



54. பழைய மாடல்களில் கிரைண்டரின் கீழே வடியும் நீர், நேராக மோட்டாருக்கு சென்று மோட்டார் பழுதாவது நடக்கும். இப்போது மோட்டாருக்கு போகாமல் கீழே வடியும்படி 'டிரைனேஜ்' எனப்படும் வடிகால் அமைப்புகளுடன் கிரைண்டர்கள் வருகின்றன. பார்த்து வாங்கவும்.



55. மாவு அரைத்த உடனேயே கிரைண்டரை கழுவிவைப்பதும், மோட்டாரின் திறனுக்கேற்ற அளவில் மாவு அரைப்பதும், கல்லைப் பொருத்தும்போதும் கவனமாக இருப்பதும் கிரைண்டரின் வாழ்நாளை அதிகரிக்கும்.



எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர்கள்:




56. 'குக்கர் வெடிப்பு' போன்ற பிரச்னைகளை இது தவிர்க்கும். ஆட்டோமேடிக்காக இயங்கும் இதில் அரிசியைப் போடுவது மட்டுமே உங்கள் வேலையாக இருக்கும். வெந்தபின் அதுவே ஆஃப் ஆகிக்கொள்ளும். சில வகைகளில் டைமர்கூட உண்டு. தேவைக்கு ஏற்ப செட் செய்து கொள்ளலாம். கியாரண்டி, சர்வீஸ் போன்றவற்றுடன் 'தரச்சான்று' இருக்கிறதா என்பதையும் கவனித்து வாங்கவும்.

 

ஃபேன்கள்(Fan):



57. இப்போது 'டேபிள் ஃபேன்'கள் குறைந்துவிட்டன. இடுப்புயர ஃபேன்களையும், சீலிங் ஃபேன்களையும்தான் மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். சுற்றிலும் காற்று இருந்து, அதனை ஒரே இடத்தில் குவிக்க வேண்டுமென்றால் இடுப்புயர ஃபேன்கள் பலன் தரும். ஆனால், காற்றை வெளியே இருந்து இழுத்து தர சீலிங் ஃபேன்களே சிறந்தவை.



58. சீலிங் ஃபேன்களை பொதுவான அளவில் வாங்காமல், அறையின் அளவுக்கு ஏற்ற ஃபேனை வாங்கினால்தான் நல்ல காற்றோட்டம் தரும்.



59. சிறிய அறையாக இருந்தாலும், பெரிய பிளேடுகளுடன் கூடிய சீலிங் ஃபேன் இருந்தால் நிறைய காற்று வரும் என்று சிலர் நினைப்பார்கள். இது தவறு. சிறிய அறையில் பெரிய பிளேடுகளுடன் கூடிய ஃபேன்கள், சுற்றுவதற்கே சிரமப்படும். எனவே, சிறிய பிளேடுகள்தான் பொருத்தமாக இருக்கும்.



60. சீலிங் ஃபேன்களை சரியாகப் பொருத்தவும். சுற்ற ஆரம்பித்த உடனேயே 'படக் படக்' என்று சத்தம் வந்தால், சரியாக மாட்டப்படவில்லை என்று அர்த்தம். சரியாக மாட்டப்படாத ஃபேன்கள் பழுதாகும் வாய்ப்புகள் அதிகம்.



61. ஃபேனின் விசிறிகளை அடிக்கடி நன்றாகத் துடைக்கவும். தண்ணீர் தொட்டு துடைத்தால் பெயின்ட் பூத்துப் போய்விடும் என்பதால் எண்ணெய் தொட்டுத் துடைக்கவும்.

 

CFC (Compact Fluorescent Lamp) பல்புகள்:




62. சுற்றுச்சூழலுக்கு அதிக கேடு தராத... மின்சார சிக்கனத்துக்கு மிகவும் ஏற்ற பல்புகள் இவை. நல்ல ஒளியையும் தருகின்றன. மின்சார சிக்கனத்தின் பலனை உணர வீட்டில் ஒரு பல்பை மட்டும் CFC பல்பாக மாற்றினால் முடியாது. எல்லாவற்றையும் மாற்றினால்தான் பலன் தெரியும். சுற்றுச்சூழலின் மீதுள்ள அக்கறையின் வெளிப்பாடாக ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு பல்பையாவது இப்படி மாற்றலாம்.



63. CFC பல்புகளின் ஒளி, குண்டு பல்புகளைப்போல எரிச்சலை உண்டாக்குவதில்லை. எனவே, வெயில் காலங்களில் குண்டு பல்புகளைப் பயன்படுத்தாமல் இவற்றைப் பயன் படுத்தும்போது சூழலின் வெப்பம் பெரிதும் குறையும்.



அயர்ன் பாக்ஸ்:



64. மின்சார சேமிப்பும், அதிக வெப்பத்தில் ஆட்டோமேட்டிக்காக நிற்கும் அமைப்பும் உள்ள சராசரி அயர்ன் பாக்ஸ்கள் வீட்டு உபயோகத்துக்குப் போதுமானவை.



65. அயர்ன் பாக்ஸின் ஒயர் அடிக்கடி பிரிந்து பிரச்னை கொடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்கும் வகையில் அயர்ன்பாக்ஸுடன் ஒயர் இணையும் இடத்தில், பிளாஸ்டிக் குழாய் பொருத்தப்பட்டவையும் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்குவதே சிறப்பு... பாதுகாப்பும்கூட!



66. அயர்ன் பண்ணும்போது தண்ணீரை பயன்படுத்தினால், போர் தண்ணீரை தவிர்ப்பது நலம். நீரில் உப்புத்தன்மை இருந்தால், அயன்பாக்ஸில் துரு ஏறி, கொஞ்சம் கொஞ்சமாக பாக்ஸை பதம் பார்த்துவிடும்.



டி.வி:



67. சேனல் புரோகிராம்ஸ், டி.வி.டி., சி.டி., என்று எந்தப் பயன்பாட்டுக்காக டி.வி. வாங்கப் போகிறோம் என்பதை தெளிவுபடுத்திக்கொண்டு டி.வி. செலக்ஷன் செய்வதே சரியாக இருக்கும்.



68. சேனல் புரொகிராம்ஸ் பார்க்கத்தான் டி.வி. தேவை என்றால், சாதாரண கலர் டி.வி-க்களே போதும்.



69. எப்போதாவது டி.வி.டி-யில் படமும் பார்ப்போம் என்றால், சாதாரண கலர் டி.வி. மற்றும் எல்.சி.டி. டி.வி வாங்கலாம்.



70. நல்ல பிரின்ட்டில் உள்ள டி.வி.டி-களையே பார்க்க விரும்புபவர்கள், L.C.D., ஹெச்.டி. (HD-High Definition) ரக டி.வி-க்களை வாங்குவது பயனுள்ளதாக இருக்கும்.



71. அட்வான்ஸான டி.வி-களை வாங்க நினைப்போருக்கு L.C.D. டி.வி-க்கள் சரியான தேர்வு. இவை ஹெச்.டி. டி.வி-க்களைவிட விலை குறைவு.



72. எல்.சி.டி. டி.வி-களில் மானிடர் திரைமீது கவனமாக இருங்கள். பழைய கலர் டிவி-க்களை போல இவற்றின் மானிடர்களுக்கு நீண்ட கியாரண்டி கிடையாது. பழுதானால் சரிசெய்து ஆயுளை நீட்டிப்பதும் கடினம். அப்படியே மாற்ற வேண்டியதுதான்.



73. இப்போது நேரடியாகவே USB Stick, Data Cable போன்றவற்றை உபயோகிக்கக் கூடிய டி.வி-க்களும் வந்துவிட்டன. விரும்பினால் வாங்கிக் கொள்ளலாம். இவற்றில் டி.வி.டி. பிளேயர் இல்லாமலேயே எம்பி-3 பாடல்களைக் கேட்கலாம்.



74. டி.வி. விற்பனையில் இன்னும் பல தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. எதுவாக இருந்தாலும் தேவையில்லாமல், அதன் பயன்பாடு தெரியாமல் வாங்கும்போது பணம்தான் வீணாகும்! எனவே, பயன்பாட்டை முடிவு செய்துவிட்டு, டி.வி-யை தேடுவதே சிறந்தது.


 
வாக்குவம் கிளீனர்:



75. சோஃபா வாங்குபவர்கள் கூடவே வாக்குவம் கிளீனரையும் வாங்குவது நலம். ஏனென்றால் சோபாவின் அழுக்குகளை முழுமையாக நீக்க, வாக்குவம் கிளீனரால் மட்டுமே முடியும்.



76. வாக்குவம் கிளீனர்கள் விளையாடத் தூண்டும் அமைப்பு உடையவை என்பதால், உபயோகத்துக்குப் பின்பு குழந்தைகளிடமிருந்து மறைத்து வைப்பது நலம்.



77. வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தம் செய்த உடனேயே வாக்குவம் கிளீனரையும் சுத்தம் செய்யவும். வீட்டுக்கு வெளியே இதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

 

வாஷிங்மெஷின்:



78. பொதுவாக 'எக்ஸ்டென்டட் வாரண்டி' உள்ள வாஷிங்மெஷினை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமான முடிவு.



79. உப்பு நீர் பகுதியில் உள்ளவர்கள் 'இன்பில்ட் ஃபில்டர்' உள்ள வாஷிங்மெஷினைத் தேர்ந்தெடுக்கவும்.



80. ஏற்கெனவே வாஷிங்மெஷின் வைத்துள்ளவர்கள், உப்புநீர் உள்ள பகுதிகளுக்கு வீடு மாறினால் ஃபில்டரைப் பொருத்தவும். அளவான துணி, சரியான வாஷிங்பவுடர்... இவையே வாஷிங்மெஷினின் ஆயுளை அதிகரிக்கும்.


ஃப்ரிட்ஜ்:



81. தேவைக்கு சரியான அளவில் ஃப்ரிட்ஜ் வாங்கவும். தரமான பிராண்டும் சர்வீஸும் முக்கியம். மின்சேமிப்பு உத்தரவாதம் இருந்தால் இன்னும் நல்லது.



82. ஃப்ரிட்ஜில் 'இன்ஸ்டன்ட் கூலிங்' போன்ற பல நவீன வசதிகள் இப்போது வந்துள்ளன. ஆனாலும் தேவையில்லாமல் அவற்றை உபயோகித்து மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள வேண்டாம்.



83. நீண்ட நேரம் ஃப்ரிட்ஜில் கதவைத் திறந்தே வைக்கக்கூடாது. திறக்கும் முன்பே எதை எடுக்கப் போகிறோம் என்பதை முடிவுசெய்து, உடனே திறந்து மூடுவது நலம். குட்டீஸ் இருக்கும் வீடுகளில் ஃப்ரிட்ஜை லாக் செய்துவிடுவது நலம்.



84. ஃப்ரிட்ஜை கட்டாயம் சமையல் அறையில் வைக்கக் கூடாது! எரிவாயு கசிந்தால், ஃப்ரிட்ஜிலிருந்து வெளியேறும் வாயுடன் சேர்ந்து வேதிவினை புரிந்து நெருப்புப் பொறிகள் கிளம்பும். இது ஆபத்தை வரவழைக்கும்.



85. ஃப்ரீஸரில் ஐஸ் சேர்ந்தால் அதை வெளியேற்ற, 'டீ-ஃப்ராஸ்ட்' பட்டனை உபயோகிப்பதே சரியான வழி. டீ-ஃப்ராஸ்ட் பட்டன் வேலை செய்யவில்லை என்றால், அதை சர்வீஸ் செய்ய வேண்டுமே தவிர, குச்சி, கரண்டியை வைத்து ஃப்ரீஸரில் குத்தினால் அதற்குள் செல்லும் கனெக்ஷன் பைப்புகள் வெடித்து, ஆபத்தை விளைவுக்கும் ஜாக்கிரதை.




ஃபர்னிச்சர் செலக்ஷன் மற்றும் புரொடெக்ஷன்! வீட்டுக்கு ஆசை ஆசையாக ஃபர்னிச்சர்களை வாங்கிப் போடும்போது, இந்த டிப்ஸ்கள் நினைவில் இருக்கட்டும்!



சோஃபாக்கள்:



86. லெதர் சோஃபாக்கள் அதிக வெப்பத்தை வெளியிடும் தன்மையுடைவை என்பதால், ஏ.சி. ஹால்களில் இதைப் பயன்படுத்தலாம்.



87. லெதர் சோஃபாக்களில் படுத்துத் தூங்குவது நல்லதல்ல. சூடு நம் உடம்புக்கு ஏறி, வியர்த்து சோஃபா நனைவது மட்டுமல்லாமல், உபயமாக இடுப்பு வலியும் கிடைக்கும்.



88. அழகுக்காக ஆசைப்பட்டு, தரையோடு ஒட்டியுள்ள சோஃபாக்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம். காரணம்... அதன் அடியில் சுத்தம் செய்வது கடினம்.



89. அறைக்கு ஏற்ற அளவில் சோஃபாக்களைத் தேர்ந்தெடுத்தால்... அது அலங்காரம். இல்லையென்றால் அது அவஸ்தை. நம் சின்ன ஹாலுக்கு, பிரமாண்ட சோஃபாக்கள் பொருந்தாது தானே! கூடவே, மூன்று பேருக்கான மர சோஃபா அடைக்கும் இடத்தைவிட, ஒன்றரை மடங்கு அதிக இடத்தை அதே கொள்ளளவுள்ள லெதர் சோஃபா அடைத்துக் கொள்ளும் என்பதையும் அதை வாங்கும் முன் ஒருமுறை யோசியுங்கள்.



கட்டில், மெத்தை:



90. சொந்த வீடுகளில் உள்ளவர்கள், நிரந்தரமாக பொருத்தக்கூடிய வலிமையான கட்டில்களை வாங்கலாம். வாடகை வீடுகளில் உள்ளவர்கள், பாகம் பாகமாக கழற்றி மாட்டவல்ல கட்டிலை வாங்கலாம்.



91. 'சோஃபா கம் பெட்' போன்றவற்றை வாங்குவதைவிட, தனி சோஃபா, தனி கட்டிலே சிறப்பானது. 'மல்டி யூஸ்' எனும்போது அவை பழுதாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதோடு மெத்தையைப் போல உடலோடு உறவாட சோஃபாக்களின் பஞ்சுகளால் முடியாது.



92. குழந்தைகள் உள்ள வீடுகளில் உயரம் குறைவான கட்டில்களையே வாங்குங்கள். ஏறவும் எளிது, விழுந்தால் அடிபடுவது பற்றிய பயமும் குறைவு. குழந்தைகளுக்காக தடுப்பு வரம்புகள் அமைக்கப்பட்ட கட்டில்களும் உள்ளன. இவை பாதுகாப்பானவை. ஆனால், விலை அதிகம்.



 93. கட்டிலுக்கு அதிக செலவு செய்துவிட்டு, மெத்தையில் கோட்டை விட்டு விடாதீர்கள். தவறான மெத்தையில் படுப்பதைவிட தரையில் படுப்பதே மேல்! உங்களின் உடல் அமைப்புக்கும், உடல் வெப்ப நிலைக்கும் ஏற்ற மெத்தைகளையே வாங்குங்கள். அதன் உள்ளே உள்ள பஞ்சு, நார், ஃபோம், துணி... இவற்றில் உங்களுக்குச் சரியானது எது என்பதை அறிந்தபின்பே முடிவெடுங்கள். இடுப்பு வலி உள்ளவர்கள் இன்னும் அதிக கவனத்தோடு தேர்வுசெய்ய வேண்டும்.

குழந்தைச்செல்வம் என்பது வரம் தான்... என்பதற்கான காரணங்கள்!!!

தற்போது குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பெற்றோர்களே அதிகம் உள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு குழந்தை செல்வத்தின் மகிமையைப் பற்றி பல பெற்றோர்கள் உணராமல் இருப்பதே காரணம்.

வேலைக்காகவும், பிஸியான சமுதாயத்திற்காகவும், இப்படி பலவித காரணங்களுக்காகவும் குழந்தைகள் வேண்டாம் என்ற முடிவை பெற்றோர்கள் எடுத்து வருகின்றனர். குழந்தைகள் பெற்றுக் கொள்வது அவர்களின் வாழ்க்கை தரத்தை குறைக்கின்றது என்று நம்புகின்றனர். ஆனால் உண்மையில் குழந்தைகள் வாழ்க்கை நிலையை உயர்த்தக் கூடியவர்கள். அதற்கான பல காரணங்களை நம்மால் கொடுக்க முடியும். அப்படிபட்ட முக்கியமானதாகவும், கவனிக்கக்கூடிய சில காரணங்களையும் பார்போமா!!!

பொறுப்புணர்ச்சி

குழந்தைக்கு தாயாகும் முன் நாம் எவ்வாறு இருக்கின்றோம் என்பது முக்கியமில்லை. ஆனால் தாயான பின் பொறுப்புகள் மிக அதிகம். பொறுப்பான அம்மாவாக இருக்கும் பட்சத்தில் அக்கறையுடன் நடந்து கொள்வதை விட, வேறு எந்த வேலையும் முக்கியமில்லை. குழந்தையை கையில் ஏந்தும் தருணத்திலிருந்து பேரப்பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வரை பொறுப்புகள் குறைவதில்லை. இந்த அக்கறை என்னும் பண்பு சிறந்த தாயாக உருவெடுக்க செய்கின்றது.

மகிழ்தல்

குழந்தை தூங்குவதை கண்டு மகிழ்வதென்பது, இது நாள் வரை பார்த்த விஷயங்களிலேயே சிறந்தது என்று கூறுவர். மேலும் அது நம்மை பரவச படுத்தும் காட்சி என்றும் சொல்வார்கள். அத்தகைய குழந்தையை தொடும் பொழுதும், நெஞ்சோடு அணைத்து கொள்ளும் போது ஒருவித அதிர்வை உணர நேரிடும். அதுவே தாங்க முடியாத மகிழ்ச்சி.

குழந்தைப்பருவம்

குழந்தை வளர வளர நாமும் குழந்தையாய் ஆகின்றோம். முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் விஷயம் என்று எதை நினைக்கின்றீர்களோ, அதை குழந்தையுடன் மகிழ்ச்சியாக செய்வோம். குறிப்பாக தலையணை சண்டை, சிறு பிள்ளை விளையாட்டு போன்றவை.

புதிய பந்தம்

குழந்தைக்கும், தாய்க்குமான உறவை போல வேறு எந்த உறவையும் காண முடியாது. இதில் எல்லா வகையான உணர்ச்சிகளை உணர முடியும். குழந்தை வேண்டாம் என்று நினைத்தால், இவை அனைத்தையும் இழக்க நேரிடும்.

 வாழ்க்கையின் புதிய கோணம்

குழந்தையின் சூழ்நிலையை அனுகும் திறனை கொண்டு, இக்கட்டான சூழ்நிலையை கையாளும் திறனை கற்றுக்கொள்ளலாம். அதிலும் இந்த உலகத்தில் எது தேவை, எது தேவையற்றது என்பதை குழந்தைகளின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

மன அழுத்தம்

குழந்தைகள் இருந்தால் தேவையில்லாத டென்ஷன் என்று நம்பும் பெண்கள், தயவு செய்து உங்கள் அம்மாவிடம் கேளுங்கள், குழந்தைகள் எவ்வளவு மகிழ்ச்சியை கொண்டு வரும் என்பதை உணர்வீர்கள். நாள் முழுவதும் வேளையில் அவதிப்பட்டு வீடு திரும்பும் தாய்மார்கள், வீட்டில் குழந்தைகளால் எவ்வளவு மகிழ்ச்சி, புத்துணர்ச்சி அடைகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும் எவ்வளவு டென்ஷன், விரக்தி இருந்தாலும் குழந்தையின் அரவணைப்பில், அனைத்தும் மறந்து போகும் என்பதை உணர முடியும்.

உறவு

குழந்தை செல்வம் கணவருடனான உறவை பலப்படுத்தும். திருமண வாழ்க்கையில் குழந்தை பல அற்புதத்தை நிகழ்த்துகின்றது. குழந்தை பிறந்த உடன் தம்பதியினருடனான அன்பு பலப்படுத்தப்படுகின்றது. மேலும் இடையில் தொலைந்து போன அன்பை திருப்பி தருவது குழந்தை செல்வமே.

முதுமையில் பலம்


வயதானவுடன் உடல் சோர்வடையும் போது, உடல் அளவிலும், மனதளவிலும் ஊன்றுகோளாய் இருப்பது குழந்தைகளே. கவலைகளை கேட்பதற்கும், தோள் சாய்வதற்கும் நம் குழந்தைகள் மட்டுமே இருப்பார்கள்.

நம்பிக்கை


வாழ்க்கையில் பலவித பாதைகளை கடக்கின்றோம். சில வேலைகளையும், சில விஷயங்களையும் நாம் சுமந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் எழுகின்றது. சில வேளைகளில் விழுவதும் உண்டு. ஆகவே குழந்தைகள் இருந்தால் வாழ்க்கையில் முன்னோக்கி செல்லும் ஆற்றல் நமக்கு அதிகமாக கிடைக்கும் என்பது சத்தியம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top