.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 9 October 2013

இந்திய சினிமா நூற்றாண்டு தபால் முத்திரைகள் - படத்தொகுப்பு!

இந்திய சினிமா நூற்றாண்டு தபால் முத்திரைகள் - படத்தொகுப்பு


 



 



 








 







 

 


அழகு ராணி - குட்டிக்கதைகள்!



Image hosted by Photobucket.com

ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன.

ஆனாலும் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும். ஒவ்வொன்றும் தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும். முயல் மட்டும் மவுனமாக இருக்கும்.

``நம் நால்வரில் நான் தான் மிக அழகு! மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான் தோன்றியதாகச் சொல்வார்கள்!'' குதித்து குதித்து நடன மாடியபடி சொல்லியது குரங்கு.


``நாங்கள் மனிதர்களின் வீட்டுக்குள்ளே புத்திசாலித்தனமாக ஒளிந்தும் வாழ்கிறோம்! எங்களிடம் அழகும் அறிவும் இருக்கிறது. எனவே நான்தான் அழகு தேவதை!'' என்றது எலி.

``மனிதர்கள் திட்டும் போது குரங்கு முகம், எலி முகம் என்று கூட உங்களைப் பற்றிக் கூறுவார்கள்! நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில் அதைப் போன்றே அழகாக இருக்கிறேன்!'' பெருமிதம் பொங்கக் கூறியது வெட்டுக்கிளி.

``நான் இந்த அழகுப் போட்டிக்கே வர வில்லை!'' முயல் சொல்ல, மூன்றும் சேர்ந்து சிரித்தன. முயல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றது.

``என்ன இருந்தாலும் வெள்ளை வெளேரென்று முயல் ஓடி வரும் அழகே தனிதான்!'' குரங்கு சொல்லியது.

``ஆமாம்... ஆமாம்...!'' ஒப்புக் கொண்டது வெட்டுக்கிளி.

``நிறமும் அழகும் மட்டும் இருந்தால் போதுமா? அறிவு, புத்திசாலித்தனம் எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அழகியாக ஏற்றுக் கொள்ள முடியும்'' என்றது எலி.

``எனக்கொரு யோசனை தோன்றுகிறது! நமக்குள்ளே ஓர் அழகிப் போட்டி நடத்தினால் என்ன?'' கேட்டது வெட்டுக்கிளி.

``போட்டி நடத்தலாம். ஆனால் நடுவர் யார்?'' சந்தேகம் எழுப்பியது எலி.

``நடுவராக நானிருக்கிறேன்!'' திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. அனைத்தும் மேலே பார்க்க, மரத்தின் மீது ஒரு காகம் இருந்தது.

``நீங்கள் எப்படி?'' ஆச் சரியப்பட்டது குரங்கு.

``நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். முயலை யும் அழைத்துக் கொண்டு நாளை என் இருப்பிடம் தேடி வாருங்கள். ஆனால் நான் தேர்ந்தெடுப்பவரை அழகு ராணியாக அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!'' என்று காகம் தன் முகவரி கூறியது.

``அப்படியே செய்கிறோம்...'' அனைத் தும் சேர்ந்து குரல் கொடுத்தன.

மறுநாள் அனைத்தும் அழகிய அழகுராணி கனவில் மிதந்து காகத்தைத் தேடி போய்க் கொண்டு இருந்தன.

அப்பொழுது குருவி ஒன்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது. அதன் கால்களில் காயம் தெரிந்தது.

``எனக்கு யாராவது ஒருவர் உதவி செய்யுங்களேன். ஒரு சிறுவன் கல்லெடுத்து எறிந்து காலில் காயப்படுத்தி விட்டான்!'' குருவி பல கீனமாக உதவி கேட்டது.

``நாங்கள் அழகிப் போட்டிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அபசகுனமாக பேசாதே!'' கடுமையாக கூறியது குரங்கு.

குருவியைப் பார்த்த எலியும், வெட்டுக்கிளியும் முகம் திருப்பி சென்று விட்டன. முயல் குருவி அருகே தயங்கி நின்றது. பின்னர் அவசர அவசரமாக மருந்து தேடிக் காலில் வைத்து விட்டு அழகிப்போட்டிக்கு சென்றது.

அழகிப் போட்டி தொடங்கியது. குறித்த நேரத்திற்கு முயல் மட்டும் செல்லவில்லை. மீதி மூன்றும் மனசுக்குள் மகிழத் தொடங்கின.

``அழகுக்கும் அறிவுக்கும் மதிப்பெண் போட்டு விட்டேன். இனி உங்கள் நல்ல குணம் பார்த்து மதிப்பெண்கள் கொடுப்பேன்! இதற்குத்தான் அதிக மதிப்பெண்கள் ஒதுக்கி இருக்கிறேன்!'' காகம் கூறியதும் குருவிக்கு உதவாத மூன்றும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.

அப்பொழுது அரக்கப் பரக்க முயல் ஓடி வந்தது.

``முயல்தான் அழகு ராணி! இதை அழகுராணியாகத் தேர்வு செய்வதற்காக நான் பெருமைப் படுகிறேன்! குருவி என் நண்பன்தான்! ஒரு ஆபத்திலிருந்து முயல் காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி கூறியது. அப்பொழுது மூவரும் உதவாமல் சென்றது பற்றியும் சொல்லி வருத்தப்பட்டது! உதவும் நல்ல மனசு உள்ளவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்!'' காகம் கூறியதும் எலி, வெட்டுக்கிளி, குரங்கு ஆகியவற்றின் முகங்கள் அஷ்டகோணலாகின.
 
 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் வரலாறு!




திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன.

துப்பாக்கித் தொழிற்சாலையும், பொன்மலை இரயில்வே பணிமனையும், பொறியியல் கல்லூரியும் இந்நகரின் பிரமாண்டமான சிறப்புகள், தாயுமானவர் வாழ்ந்த பூமி இது.

தென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும் குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது. சேர, சோழ, பாண்டியர்களாலும், விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின.

1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

சுற்றுலாத் தலங்கள்

மலைக்கோட்டை
ஸ்ரீரங்கம்
திருவானைக்கோவில்
முக்கொம்பு
கல்லணை
வயலூர் முருகன் கோயில்
கங்கை கொண்ட சோழபுரம்

திருத்தலங்கள்

அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில், திருச்சி மலைக் கோட்டை, திருச்சி
அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்
அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்
அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருவானைக்கா
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வயலூர்
அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில், உறையூர்
அருள்மிகு ஆம்ரனேஸ்வர சுவாமி திருக்கோயில் மாந்துறை
அருள்மிகு உத்தமர் கோயில்
அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் குணசீலம்

வேதியியல் துறையில் 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு!


















வேதியியலுக்கான நோபல் பரிசு 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் மார்டின் கார்பிளஸ், மைக்கேல் லெவிட், ஏரி வால்ஷெல் ஆவார்கள். ரூ.7.75 கோடி ரொக்கப்பரிசை 3 பேரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.மூலக்கூறு வடிவமைப்பு மாதிரி ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக நோபல் பரிசு வழங்குகிற ராயல் சுவிடிஸ் அறிவியல் அகாடமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘‘மார்டின் கார்பிளஸ், மைக்கேல் லெவிட், ஏரி வால்ஷெல் ஆகிய 3 விஞ்ஞானிகளும் ரசாயன செயல்பாடுகளை புரிந்து கொள்ளவும், யூகிக்கவும் பயன்படுகிற விதத்தில் கணினிகளை மேம்படுத்த அஸ்திவாரம் போட்டுள்ளனர்; நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கிற கணினி மாதிரிகள், ரசாயன துறையில் முன்னேற்றங்கள் காண்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன’’ என கூறப்பட்டுள்ளது.

ஆண்மையும், மாரடைப்பும்...












ரு ஆணுக்கு ஆண்மையை கொடுக்கும் ஹார்மோன் டெஸ்ட்ரோஜன். அவனுக்கு உடல் வலிமையையும் அதுதான் கொடுக்கிறது. மிகுந்த உடல் வலிமை, நீண்ட காலம் வரை இனப்பெருக்கம் செய்யும் திறன் ஆகியவை ஆண்களுக்கு கிடைத்த பலம். பெண்களுக்கு அவை இல்லை.


ஆனால் குறைந்த ஆயுள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியவை ஆண்களின் 2 பெரிய பலவீனங்கள். டெஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் ஆணுக்கு உடல் வலிமையை கொடுக்கும் அதே நேரம் இருதயத்துக்கு வந்து செல்லும் அனைத்து ரத்தக்குழாய்களிலும் அடைப்பை ஏற்படுத்தும் ஒரு பொருளை உருவாக்கி விடுகிறது.


எச்.டி.எல். என்ற அதிக திறனுடைய லிப்போ புரதம், கொழுப்பு பொருட்களை கட்டுப்படுத்தி ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து கல்லீரலையும் நல்ல நிலையில் வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.
மனித ரத்தத்தில் இந்த லிப்போ புரதத்தை உண்டாக்க உதவும் ஒரு தூண்டு சக்தி டெஸ்ட்ரோஜனுக்கு இல்லை. மாறாக இந்த தூண்டும் திறன் பெண்களுக்கு பெண்மையைத்தரும் ஈஸ்ட்ரோஜனுக்கு உண்டு. இதனால்தான் மாரடைப்பு என்ற பேரிழப்பு ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதிக ரத்த அழுத்தமும், கொழுப்பினால் ஏற்படும் மாரடைப்பும் பெண்களுக்கு மிகவும் குறைவு.


உடல் வலிமை என்பதும் எதிர்ப்பு சக்தி என்பதும் வேறுபட்டவை. வலிமை என்பது ஆண்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி என்பது பெண்களுக்கும் இயற்கையாகவே அமைந்த வரப்பிரசாதம்.


தற்போது உடல் உழைப்பு குறைந்துவிட்ட காரணத்தினால் கொழுப்பு சக்தி அதிகமாக உடலில் சேர்ந்து மாரடைப்பு வருவதற்காக வாய்ப்பை அதிகரிக்கிறது.


மாரடைப்பு வரும் வாய்ப்பு இயற்கையாகவே ஆண்களுக்கு அதிகம் இருப்பதால்தான், நாள்தோறும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அத்துடன் காலை உணவை எந்த காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. இது மாரடைப்பில் இருந்து ஓரளவு நம்மைக் காப்பாற்றும்.

‘நய்யாண்டி’ படத்தில் இருந்து ‘டூப்’ நடிகை நடித்த 3 காட்சிகள் நீக்கம்!















‘நய்யாண்டி’ படத்தில், டூப் நடிகை நடித்த 3 காட்சிகள் நீக்கப்பட்டதைத்தொடர்ந்து அந்த படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்ததாக நடிகை நஸ்ரியா கூறினார்.


புகார்
தனுஷ்–நஸ்ரியா நடித்து, ஏ.சற்குணம் டைரக்டு செய்த ‘நய்யாண்டி’ படத்தை கதிரேசன் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில், படுகவர்ச்சியான சில சீன்கள் வைக்கப்பட்டு இருந்ததால், அதில் நடிப்பதற்கு மறுத்ததாகவும், அந்த காட்சிகளில் ஒரு ‘டூப்’ நடிகையை நடிக்க வைத்து, படத்தில் இணைத்து இருப்பதாகவும் டைரக்டர் சற்குணம் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நஸ்ரியா புகார் செய்தார்.

 
தான் நடிக்காத காட்சிகளை நடித்தது போல் காட்டுவது மிகப்பெரிய மோசடி என்று அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்காவிட்டால், வழக்கு தொடரப்போவதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர், போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.


டூப் நடிகை


புகார் மனுவில், ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், ‘நய்யாண்டி’ படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என்றும், என் ரசிகர்களும், குடும்பத்தினரும் படுகவர்ச்சியான காட்சிகள் இடம் பெறுவதை விரும்பவில்லை என்றும் நஸ்ரியா குறிப்பிட்டு இருந்தார். பின்னர் அவர் ஒரு மலையாள படப்பிடிப்புக்காக கேரளா புறப்பட்டு சென்றார்.


‘நய்யாண்டி’ படம், நஸ்ரியாவின் வக்கீல்களுக்காக நேற்று காலை சென்னை போர் ப்ரேம் தியேட்டரில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. வக்கீல்களுடன் நஸ்ரியாவின் தந்தை நசீம் அமர்ந்து படம் பார்த்தார். அப்போது, மூன்று காட்சிகளுக்கு அவர் ஆட்சேபம் தெரிவித்தார். அந்த காட்சிகளில் நஸ்ரியா நடிக்கவில்லை என்று அவர் கூறினார்.


3 காட்சிகள் நீக்கம்


முதல் இரவு அறையில் படுத்தபடி, தனுஷ் கால்களுடன் நஸ்ரியாவின் கால்கள் பின்னிப் பிணைவது போல் ஒரு காட்சி, நஸ்ரியாவின் முதுகில் வியர்வை துளிகள் படர்ந்திருப்பது போல் ஒரு காட்சி, தனுஷ் மடியில் நஸ்ரியா தலை வைத்து படுத்திருப்பது போல் ஒரு காட்சி இந்த மூன்று காட்சிகளிலும் நஸ்ரியா நடிக்கவில்லை என்றும், ‘டூப்’ நடிகையை பயன்படுத்தி அந்த காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதால்,  அந்த மூன்று காட்சிகளையும் நீக்க வேண்டும் என்றும் நசீம் குறிப்பிட்டார். அந்த காட்சிகளை நீக்குவதற்கு தயாரிப்பாளர் கதிரேசன் சம்மதித்தார்.


அதைத்தொடர்ந்து வக்கீல்களும், நஸ்ரியாவின் தந்தை நசீமும் எடிட்டிங் அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் முன்னிலையில், அந்த காட்சிகள் நீக்கப்பட்டன.


போலீஸ் புகாரில் கூறியிருந்த 3 காட்சிகளும் நீக்கப்பட்டதால், ‘நய்யாண்டி’ படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்ததாக நஸ்ரியா கூறினார்.

ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனேவுக்கு டப்பிங் குரல்!

 ரஜினிகாந்த் கதாநாயகனாகவும், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாகவும் நடித்து தயாராகி வரும் படம் 'கோச்சடையான்'.




ரஜினிகாந்தின் இளையமகளான சவுந்தர்யா இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் சென்னை, ஹாங்காங், லண்டன் என மூன்று இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகளால் மெருகேற்றப்பட்டு வருகிறது.  இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்கள் ரஜினி காந்த் நடித்து வருகிறார்.



ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 -ல் இப்படத்தை வெளியிடத் திட்டமிடபட்டு உள்ளது. இப்படத்தில் நடித்து உள்ள தீபிகா படுகோனேவுக்கு இந்தபடத்தில் டப்பிங் குரல் கொடுக்கபட்டு உள்ளது. தீபிகா படுகோனே பெங்களூரை சேர்ந்தவர் அவருக்கு கன்னடம் சரளமாக வரும் ஆனால் தமிழ் சரியாக வராது அதனால் இப்படத்தில் தீபிகாவுக்கு சவீதா ரெட்டி டப்பிங் குரல் கொடுக்கிறார்.


கடந்த காலங்களில் சவிதா  ஜெனிலியா தேஷ்முக் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் போன்ற ஹிந்தி திரைப்பட நடிகைகளுகு டப்பிங் கொடுத்து உள்ளார். சவீதா முதன் முதலில்  ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாராய்க்கு குரல் கொடுத்தார். "


இது குறித்து இயக்குனரும் ரஜினிகாந்தின் மகளுமான சவுந்தர்யா  அஸ்வின் கூறியதாவது:- தீபிகாவிற்க்ய் தமிழ் டப்பிங் செய்ய சவிதா  சரியான தேர்வு.அவரது குரல் ஒரு மிக விரிவான தொனியில் உள்ளது. அவர் தனது திறமையை வெளிப்படுத்துவார்.தீபிகா கதாபாத்திரம் கருணை மற்றும் சீரிய பண்பு உடையவராக காட்டபடுகிறது.இதற்கு சவிதா ஒரு சரியான தேர்வு இவ்வாறு அவர் கூறினார்.

மல்டி கலரில் அறிமுகமாகிறது வாக்காளர் அடையாள அட்டை!




 புதுவையில் புதிதாக சேர்க்கப்படும் வாக்காளர்களுக்கு மல்டி கலரில் அச்சிடப்பட்ட அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது. 


புதுவை கூடுதல் தேர்தல் தலைமை அதிகாரி பங்கஜ்குமார் ஜா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதுவையில் நாளை(10ம் தேதி) முதல் அடுத்த மாதம் 1ம் தேதி வரை வாக்காளரை சேர்த்தல், நீக்குதல் பணி நடக்கிறது. புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் உள்பட 30 தொகுதிகளில் நடக்கிறது. மாநிலம் முழுக்க உள்ள 875 வார்டுகளிலும் தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டு பணியை மேற்கொள்வார்.


புதிய வாக்காளர்களுக்கு பிளாஸ்டிக் கார்டில் மல்டி கலரில் அச்சிடப்பட்ட வாக்காளர் அட்டை வழங்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அனைத்து மாநிலத்திலும் இந்த பணி நடந்து வரும் நிலையில் புதுவையில் இதற்காக பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது புதிய அட்டை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



எக்ஸ்ட்ரா தகவல்



தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வாக்காளரின் போட்டோவுடன் கூடிய அடையாளம் அட்டை வழங்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் 1993ல் தொடங்கியது.

நோபல் நாயகர்கள்: அவிழ்ந்தது மூலக்கூறுகளின் மர்மம்!

ராண்டி டபிள்யு. ஷெக்மேன்
ராண்டி டபிள்யு. ஷெக்மேன்
தாமஸ் சி. சுதோப்
தாமஸ் சி. சுதோப்
ஜேம்ஸ் இ. ராத்மேன்
ஜேம்ஸ் இ. ராத்மேன்



உடலில் உள்ள செல்கள் எப்படி மூலக்கூறுகளை உரிய இடங்களுக்கு, உரிய நேரத்துக்கு அனுப்பிவைக்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக மூன்று அமெரிக்கர்களுக்கு உடல்இயக்கவியல் மருத்துவத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருக்கிறது. 



யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் இ. ராத்மேன் (62), கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராண்டி டபிள்யு. ஷெக்மேன் (64), ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் சி. சுதோப் (57) ஆகியோர் விருது பெறுகின்றனர். 


ஒரு செல்லில் அதன் மூலக்கூறு கள் சிறு பொதிகளாகச் சுற்றிக்கொண்டே யிருக்கின்றன. அதை வெசிகிள்கள் என்று அழைப்பர். உரிய நேரத்தில், உரிய இடங்களுக்கு இந்த மூலக்கூறுகளை எது, எப்படிக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது என்பதை இந்த மூவரும் வெவ்வேறு நிலைகளில் ஆராய்ந்தனர். 



உதாரணத்துக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் இன்சுலினைக் கணையம் சுரக்கிறது. அந்த இன்சுலின் உரிய அளவில், உரிய நேரத்தில் ரத்தத்தில் சேர்க்கப்படுகிறது. ஆனால், இந்தப் போக்குவரத்து எளிதானதல்ல. மிகப் பெரிய நகரங்களின் நெரிசல் நேரத்தில் சாலைகளில் காணப்படும் வாகன நெரிசலுக்குச் சற்றும் குறைந்ததல்ல இந்த நெரிசல். அப்படியும் விபத்து ஏதும் இல்லாமல் போக்குவரத்து நடக்கிறது என்பதுதான் வியப்பு. 



மனிதர்கள் நடக்கவும் பேசவும் பாடவும் சூடான அடுப்பின்மீது தெரியாமல் வைத்து விட்ட கையைச் சட்டென்று எடுக்கவும் தான் சொல்ல விரும்பியதை எடுத்துச் சொல்லவும் ரசாயன அல்லது வேதியியல் சமிக்ஞைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ‘நியூரோ-டிரான்ஸ்மிட்டர்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த சமிக்ஞைகள் ஒரு நரம்பு செல்லிலிருந்து இன்னொரு நரம்பு செல்லுக்கு இந்த சமிக்ஞைகளை அனுப்பி இந்தச் செயல்களைச் செய்யவைக்கின்றன. 



வெசிகிள்கள் போக்குவரத்துக்குக் குறிப்பிட்ட சில மரபணுக்கள்தான் காரணம் என்பதை டாக்டர் ஷெக்மேன் கண்டு பிடித்தார். தங்களுடைய இலக்குகளுடன் வெசிகிள்கள் சேர்வதற்கு உதவும் புரதச் செயல்பாட்டை டாக்டர் ராத்மேன் கண்டுபிடித்தார். வெசிகிள்கள் தங்க ளுடைய சரக்குகளை உரிய இடங்களில் கொண்டுபோய்ச் சேர்க்க சமிக்ஞைகள் எப்படித் தரப்படுகின்றன என்பதை டாக்டர் சுதோப் வெளிப்படுத்தினார். 



இந்த வெசிகிள்கள் என்பவை மிகச் சிறியவை. அவற்றின் மீது சவ்வுபோன்ற படலம் மூடியிருக்கிறது. வெவ்வேறு அறை களுக்குப் புரதச் சரக்குகளை இவைதான் கொண்டுசேர்க்கின்றன. அல்லது பிற சவ்வுகளுடன் இணைந்துவிடுகின்றன. இதில் தவறு அல்லது குழப்பம் நேரிட்டால்தான் நரம்புக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி, நீரிழிவு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் போன்றவை ஏற்படுகின்றன. எனவே, இந்தக் கண்டுபிடிப்பு பல்வேறு நோய்களைத் தடுக்கவும் நோய் வந்தால் சிகிச்சை தரவும் மிகவும் உதவியாக இருக்கும். 


டாக்டர் ஷெக்மேன் 

 
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில், செயின்ட்பால் என்ற ஊரில் பிறந்த டாக்டர் ஷெக்மேன் 1970-களில் தன்னுடைய சோதனைகளைத் தொடங்கிய போது, ஒருசெல் ஈஸ்ட்டுகளைத்தான் ஆய்வுக்குப் பயன்படுத்தினார். ஒவ்வொரு செல்லின் ஒரு பகுதியிலும் வெசிகிள்கள் அப்படியே குவிந்துவிடுகின்றன. அப்படி அவை சேர்ந்து நெரிசல் ஏற்படக் காரணம், மரபுதான் என்று கண்டுபிடித்தார். 


பிறகு, செல்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத் தும் மூன்று வகை மரபணுக்களை அடையாளம் காணும் ஆய்வுகளைத் தொடர்ந்தார். கலிபோர்னியா, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்த அவர் 1974-ல் டாக்டர் பட்டம் பெற்றார். பெர்க்லி பல்கலைக்கழகத்தில் 1976-ல் ஆய்வுப் பணியில் சேர்ந்தார். 


அவருடைய ஆய்வுகள் உயிரித் தொழில்நுட்பத் தொழில்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இன்சுலின், ஹெபடைடிஸ்-பி தடுப்பு மருந்து ஆகியவற்றைத் தயாரிக்க அவர் ஈஸ்ட்டில் செய்த ஆராய்ச்சிகள் பெரிதும் கைகொடுத்தன. 



டாக்டர் ராத்மேன் 

 
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் ஹேவர்ஹில் நகரில் பிறந்தார் டாக்டர் ராத்மேன். 1980-கள், 1990-களிலேயே பாலூட்டிகளின் செல்களில் நடந்த வெசிகிள்கள் போக்குவரத்து குறித்து ஆராயத் தொடங்கினார். ஒருவிதப் புரதக் கூட்டுப்பொருள்தான், வெசிகிள்கள் தங்களுடைய இலக்கான சவ்வுகளை அடையாளம் கண்டு சரக்குகளை இறக்கிவிடவும் சேர்ந்துகொள்ளவும் காரணமாக இருக்கிறது என்று அவர் கண்டுபிடித்தார். ஒரு ஜிப்பில் இரண்டு உலோகப் பகுதியும் ஒன்றோடொன்று பொருந்துவதைப் போல இவை பொருந்துகின்றன என்பதையும் கண்டுபிடித்துக் கூறினார்.



புரதங்கள் பலவாக இருந்தாலும், குறிப்பிட்ட அளவிலான கூட்டுப்பொருள் அதே அளவிலான தேவையுள்ள இடத்துக்குச் சென்றுசேர்கிறது என்று அறிந்தார். இதனால்தான் குழப்பம் ஏற்படுவதில்லை. இதே அடிப்படையில் தான் செல்லுக்கு உள்ளேயும் இயக்கங்கள் நடைபெறுகின்றன. ஒரு செல்லின் வெளியில் உள்ள சவ்வுடன் வெசிகிள் இணையும்போதும் இது நடக்கிறது. 



டாக்டர் ராத்மேன், ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியிலிருந்து 1976-ல் டாக்டர் பட்டம் பெற்றார். மசாசுசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்துக்குப் பிந்தைய பட்டத்துக் கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1978-ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்துக்கு மாறினார். அங்குதான் வெசிகிள் செல்கள் மீதான ஆராய்ச்சியை மேற்கொண்டார். கொலம்பியா பல்கலைக்கழகம், ஸ்லோவன்-கெட்டரிங் புற்றுநோய் மையம் ஆகியவற்றிலும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் அவர் பணியாற்றியிருக்கிறார். 2008-ல் யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு செல் உயிரியல் துறையின் தலைவராக இப்போது பதவி வகிக்கிறார். 


டாக்டர் சுதோப் 

 
அமெரிக்கக் குடிமகனான டாக்டர் சுதோப், மேற்கு ஜெர்மனியில் உள்ள கோடிங்கென் நகரில் பிறந்தார். நரம்பில் உள்ள செல்கள் மூளையில் உள்ள செல்களுடன் எப்படித் தகவல்தொடர்பு வைத்துள்ளன என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மூலக்கூறுகளின் செயல்பாடுகள் என்னவென்று அவர் கண்டுபிடித்தது பல புதிர்களை விடுவித்தன. நரம்பியல் நடவடிக்கைகளில் சாதாரணமானது முதல் மிகவும் சிக்கலானது வரை பலவற்றை அடையாளம் காண அவருடைய ஆய்வுகள் உதவின. 


ஜெர்மனியின் கோடிங்கென் நகர ஜார்ஜ் ஆகஸ்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர் பிறகு, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். டல்லஸில் உள்ள மருத்துவ மையத்தில் 1983-ல் பணியில் சேர்ந்தார். ஹோவார்ட் ஹியூஸ் மருத்துவக் கழகத்தில் ஆராய்ச்சி நிபுணராக 1991-ல் வேலையில் சேர்ந்தார். பிறகு, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு செல்லுலர் உடல்இயக்கவியல் துறைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 


ரஜினி கலந்து கொள்வது சந்தேகமே : IFFI

 
 
 


மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள இருப்பதால் சர்வதேச திரைப்படவிழாவில் ரஜினி கலந்து கொள்வது சந்தேகம் தான் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. 


கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவினைத் துவக்கிவைக்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
2004 முதல் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் துவக்க விழாவில் முன்னணி நடிகர் ஒருவர் கலந்துகொண்டு துவக்கிவைப்பார். 


இந்தாண்டு இவ்விழாவினைத் துவக்கி வைக்க ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் விழா தொடங்கும் காலத்தில் ரஜினி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவிருப்பதால் விழாவைத் துவக்கி வைப்பது சந்தேகமே என்று அவ்விழாக் குழுவைச் சேர்ந்த விஷ்ணு வாக் கூறியுள்ளார். 


மேலும் இம்முறை நடைபெறும் திரைப்பட விழாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் இருந்து மசாலா படங்களை திரையிடப் போவதில்லை. பலதரப்பட்ட மக்களும் இதையே விரும்புவதால் இம்முடிவினை எடுத்திருக்கோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். 


வில்லன் அவதாரத்தில் உலகநாயன்!


உத்தம வில்லன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் உலகநாயகன்.
விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு கமல் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கு உத்தம வில்லன் என்று பெயரிடப்பட்டுள்ளது.


லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடித்தாலும், நல்ல வில்லனாகத்தான் வருகிறாராம்.


ஆரம்பத்தில் இந்தப் படத்தை கமலே இயக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் அந்த வாய்ப்பை தன் நண்பரான ரமேஷ் அர்விந்துக்கு தந்துவிட்டார்.


இதை கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும்விட்டார்.


இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் கூறுகையில், கமல் நடிக்கும் படத்தை இயக்குவது மகிழ்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது.
ஏற்கனவே கமலை வைத்து கன்னடத்தில் சதிலீலாவதி படத்தை ரீமேக் செய்து இயக்கினேன். தற்போது லிங்குசாமி தயாரிப்பில் கமலை வைத்து இயக்குகிறேன்.


மேலும் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என்றும் கொமடி, பொழுதுபோக்கு அம்சங்கள், ஆக்ஷன் என கலந்து உருவாகவிருக்கும் இப்படத்தில் கமலின் கதாபாத்திரம் ரசிகர்களை ரொம்ப கவரும் விதமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

துரியோதனன் வேடத்தில் கலக்கும் ரஜினி!


கோச்சடையான் படத்தில் துரியோதன கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் ரஜினி.

ரஜினி நடிப்பில் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் படம், கோச்சடையான்.


செளந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் மூன்று வேடங்களில் தோன்றுகிறார் ரஜினி. அப்பா, மகன்கள் இருவர் ஆகியவை தான் அந்த மூன்று வேடங்கள்.


இவற்றில், அப்பா வேடம் மிகவும் அப்பாவியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாம். இரு மகன்களில் ஒருவர் அர்ஜூனன் புத்தி கொண்ட நல்லவராகவும், இன்னொருவர் துரியோதனன் குணாதிசயம் கொண்ட வில்லனாகவும் இருப்பார்களாம்.



மற்ற இரண்டு கதாபாத்திரங்களைவிட துரியோதன வேடத்தில் தூள் கிளப்பி இருக்கிறாராம்.


வில்லனாக இருந்தாலும் ரசிகர்கள் கொண்டாடும் கதாபாத்திரமாக இந்த வேடம்தான் இருக்கும் என்கிறார்கள்.


அப்பா ரஜினிக்கு ஷோபனாவும், நல்ல புத்தி கொண்ட மகன் ரஜினிக்கு தீபிகா படுகோனும் ஜோடியாம்.


வில்லன் ரஜினிக்கு ஜோடி உண்டா, இல்லையா என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்.

இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட இந்திய தலைவர் மோடி- கூகுள் தகவல்!


இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட இந்திய அரசியல் தலைவர்கள் பற்றிய ஆய்வை கூகுள் நிறுவனம் சமீபத்தில் நடத்தியது. இதில் மோடி முதலிடம் பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது. மோடியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா, மன்மோகன் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உள்ளனர்.


9 - modi mini

 


கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய தலைவர்களில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களை பின்னுக்குத் தள்ளி இந்த ஆய்வில் மோடி முதலிடத்தில் உள்ளார்.மேலும் இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட அரசியல் கட்சியும் பா.ஜ., தான். பா.ஜ.,வை தொடர்ந்தே காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சிவசேனா ஆகிய கட்சிகள் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.


2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 160 இடங்களின் வெற்றியை சமூக வலைதளங்கள் தான் தீர்மானிக்கும் எனவும் கூகுளின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இது குறித்து கூகுள் இணையதள ஆய்வாளர் நமான் புகாலியா தனது டுவிட்டர் பகுதியில் கூறுகையில், சமூக வலைதளங்கள் சிறிய அளவு பங்கு பெற்றாலும் மிக முக்கியமான பங்கினை லோக்சபா தேர்தலில் செய்ய உள்ளது என தெரிவித்துள்ளார். சமூக தளங்கள் மூலம் விவாதிக்கப்படும் விஷயங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருப்பதே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 



37 சதவீதம் நகர்புற வாக்காளர்கள் ஆன்லைன் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். மேலும் 45 சதவீத வாக்காளர்கள், யாருக்க ஓட்டளிப்பது என்பது குறித்த விபரங்களை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். 42 சதவீதம் நகர்புற வாக்காளர்கள் ஓட்டளிப்பதில் குழப்பமான நிலையிலேயே இருந்து வருகின்றனர். நகர்புற வாக்காளர்கள் ஓட்டளிப்பதை தவிர்த்து வருவதாக நிலவும் கருத்திற்கு மாறாக கடந்த தேர்தலில் ஆன்லைன் பயன்படுத்தும் நகர்புற வாக்காளர்கள் 85 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டுள்ளனர். இவ்வாறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.



Google survey says Narendra Modi most searched politician in India

************************************ 

Bharatiya Janata Party’s prime ministerial candidate Narendra Modi is the most Google-searched politician in India, followed by Congress vice-president Rahul Gandhi, a survey by Google India and research agency TNS released on Tuesday said. Sonia Gandhi, Manmohan Singh and anti-corruption campaigner, Arvind Kejriwal, follow Rahul. 

Galaxy Note 10.1:Samsung புதிய அறிமுகம்!










Samsung  நிறுவனமானது Galaxy Note 10.1 எனும் தனது புதிய டேப்லட்டினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.


10.1 அங்குல அளவு மற்றும் 2560 x 1600 Pixel Resolution தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட்டில் 1.9GHz வேகம் கொண்ட Quad Core Samsung Exynos 5420 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியன காணப்படுகின்றது.


மேலும் இவற்றின் சேமிப்பு நினைவகமாக 16GB மற்றும் 32GB கொள்ளளவு தரப்பட்டுள்ளதுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களுக்கான 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

அவசர புத்தி (நீதிக்கதை)




ஒரு ஊரில் ஒர் அரசன் இருந்தான்.அவன் நல்லாட்சியால் மக்கள் மகிழ்ச்சியாய் இருந்தனர்.

ஒரு நாள்..அவனது அமைச்சர் அவனிடம் ' அரசே..உங்களுக்கு வைரம் என்றால் ஆசை என்று அறிவேன்.நம் நாட்டில் மருதன் என்னும் வியாபாரியிடம் விலை மதிபற்ற வைரம் இருக்கிறது' என்றான்.

உடன் அரசனும் மருதனுக்கு...அவனிடம் உள்ள வைரத்தை தனக்குக் கொடுக்குமாறும் அதற்குரிய விலையை கொடுத்து விடுவதாகவும் ஒரு கடிதம் எழுதி சேவகனிடம் கொடுத்து அனுப்பினான்.

மருதனிடம் உண்மையாக வைரம் இல்லை.அதை தெரியப்படுத்த...ஒரு கடிதம் எழுதத் தொடங்கினான்.

" அரசே என்னிடம் அப்படி ஏதும் வைரம் இல்லை....அப்படியே இருந்திருந்தாற் கூட ....' என்று எழுதிக் கொண்டிருந்தபோது ...வேறு வேலை ஒன்று வரவே எழுந்திருந்துச் சென்றான்.

சென்ற மருதன் திரும்ப நேரமானதால் சேவகர்கள் அவன் முற்றுப்பெறாமல் எழுதியிருந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு அரசனிடம் விரைந்தனர்.

அரசன் அக்கடிதத்தைப் படித்து ...முற்றுப் பெறாத அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கக்கூடும் என அமைச்சரைக் கேட்டான்.

அரசே....அக்கடிதத்தில் 'என்னிடம் அப்படி ஏதும் வைரம் இல்லை...அப்படியே இருந்திருந்தாற் கூட...என எழுதிய மருதன்....'இருந்திருந்தாற் கூட உங்களுக்குத் தர விருப்பமில்லை' என எழுதியிருப்பான் என்றான்.

உடனே அரசன் மருதனை அழைத்து கோபமாகக் கேட்டான்.

உடன் மருதன் ' அரசே ...இருந்திருந்தாற் கூட....உங்களிடம் எந்த விலையும் எதிர்பாராது இலவசமாக தந்துவிடுவேன் 'என்றே எழுத நினைத்தேன் என்றான்.

அமைச்சரின் அவசர புத்தியால் மருதனை கோபப்பட்டோமே என அரசன் எண்ணி வருந்தினான்.

நாமும் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் நன்கு ஆலோசித்தபின்னரே சரியான முடிவு எடுக்கவேண்டும்.
 

இணையதளங்களை கண்காணிக்க 20 லட்சம் சைபர் கிரைம் போலீசார் சீனா அதிரடி முடிவு!



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


சீனாவில் அரசுக்கு எதிராக இணையதளங்களில் ஏராளமானோர் கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர். மேலும், அரசு வெப்சைட்களில் ஊடுருவி ரகசியங்களை திருடுகின்றனர். இந்நிலையில், சீனாவில் ஆளும் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார குழு சார்பில் இணையதளங்கள் மற்றும் ஊடகங் களை கண்காணிக்க 20 லட்சம் சைபர் கிரைம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து பிரசார குழு தலைவர் கூறுகையில், மக்கள் மத்தியில் நடத்திய கருத்து கணிப்பின் அடிப்படையிலும், தொடர் ந்து சீன இணையதளங்களில் நடைபெறும் ஊடுருவல்களை தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாள்தோறும் இணையதளங்களில் பதிவு செய்யப்படும் பிளாக்கர்களின் செய்திகளை ஆய்வு செய்வது, டுவிட்டர், சீனாவெய்போ போன்ற சமூக இணையதளங்களை கண்காணிப்பது ஆகிய பணிகளில் ஈடுபடுவர். மேலும் அவற்றில் பதிவு செய்யப்படும் கருத்துகளையும், செய்திகளையும் ஆய்வு செய்து அது குறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்புவர் என்றார்.



இதன் மூலம் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்பவர்களை கண்டறிந்து கண்காணிக்க முடியும்.  சீனாவின் முக்கிய தகவல்கள் வெளிநாடுகளுக்கு பரவாமல் தடுக்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபடுவார்கள். சீன இணையதளங்களை ஊடுருவி தகவல்களை திரட்டியதாக அமெரிக்க உளவு நிறுவனம் எப்பிஐ.யின் முன்னாள் அதிகாரி ஸ்நோடென் வெளியிட்ட தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஏழைகள்தான் 90 வயது வரை வாழ்கிறார்கள்- லேட்டஸ்ட் சர்வே ரிசல்ட்!


நெதர்லாந்து நாட்டில் உள்ள லேடன் பகுதியில் முதுமை, உயிர் வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதில் ஹெர்பர்ட் கிளேடன் தலைமையிலான குழு கடந்த சில ஆண்டாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. பல ஆண்டாக பேசப்பட்டு வரும், அதிக நாள் உயிர் வாழ பணம் போதும் என்பது பற்றி ஒரு சர்வேயை இந்த குழு எடுத்தது.


9 - rich vs poor.2. MINI
 


இதில் வியப்பான ஒரு முடிவு கிடைத்தது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வயதானவர்களில் 80 வயதை நெருங்க முடியாமல் இறந்தவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டால் பணக்காரர்கள் தான் அதிகம் என்று தெரியவந்துள்ளது. அதே சமயம், ஏழைகள் பலரும் 90 வயதை தாண்டி வாழ்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த தகவல், இந்த ஆராய்ச்சி குழுவுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. 1950 ல் இருந்து 2008 வரை அமெரிக்கா, பிரிட்டன் , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் உட்பட 19 நாடுகளில் உள்ள இறப்பு சதவீதம் 70 , 74 வயதுள்ளவர்கள் 0.45 சதவீதம் அதிகரித்து இருந்தது தெரியவந்தது. 




இதேபோல, இந்தியா போன்ற வேறு சில மொத்த உற்பத்தி திறன் சதவீதம் குறைவாக உள்ள வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களில் இதே வயதினர் இறப்பு சதவீதம் மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்ல, 90 வயது வரை வாழ்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது தெரியவந்தது. 



இப்படி வாழ்நாள், முதுமை விஷயங்களில் ஆராய்ச்சி செய்த நிபுணர்களுக்கு , நாட்டின் மொத்த உற்பத்தி மற்றும் வாழ்நாள் நீடிப்பு ஆகிய இரண்டும் எந்த வகையில் ஒத்துப்போகின்றன. வாழ்நாளை ஒரு நாட்டின் உற்பத்தி திறன் எந்த வகையில் முடிவு செய்கிறது என்பதற்கு மட்டும் உறுதியான காரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை; இது தொடர்பாக ஆராய்ச்சி நீடிக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

எல்ஜி ஜி பேட் 8.3 புதிய டேப்லெட் முக்கிய அம்சங்கள்!




எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஜி பேட் 8.3 என்ற புதிய டேப்லெட்  அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த வாரம் முதல் தென் கொரியாவில் $ 510 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 30 நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும்.


இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிப்படும், மற்றும் அதன் விலை யிடும் போது அறிவிக்கப்படும். 1.7GHz Quad-core CPU உடன் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 600 பிராசசர் கொண்டுள்ளது. இதுவரை இந்த டேப்லெட்டில் 3G பதிப்பு இல்லை. ஜி பேட் 8.3 கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ணங்களில் வரும்.



ஜி பேட் 8.3 முக்கிய அம்சங்கள்:

• பிராசசர்: 1.7GHz Quad-core குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 600 பிராசசர்
 

• டிஸ்ப்ளே: 8.3-இன்ச் WUXGA (1920 x 1200 பிக்சல்கள் / 273 பிபிஐ)
 

• நினைவகம்: 16GB eMMC
 

• ராம்: 2GB
 

• கேமரா: பின்புற 5.0MP / முன்னணி 1.3MP
 

• பேட்டரி: 4,600 Mah
 

• ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2.2
 

• அளவு: 216,8 x 126.5 x 8.3mm
 

• எடை: 338g
 

• நிறங்கள்: கருப்பு / வெள்ளை


கூகுள் ஜெம் ஸ்மார்ட்வாட்ச் அக்டோபர் 31-ம் தேதி வெளியீடு!

கருத்துகள்

 
 
 
சாம்சங் கேலக்ஸி கியர் மற்றும் சோனியின் ஸ்மார்ட்வாட்ச் 2 அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கூகுள் நெக்சஸ் ஸ்மார்ட்வாட்ச் என்று முன்பு அழைக்கப்பட்ட ஸ்மார்ட்வாட்ச் இந்த மாதம் அக்டோபர் 31-ம் தேதி ஜெம் ஸ்மார்ட்வாட்ச் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
 
 
இந்த புதிய ஜெம் ஸ்மார்ட்வாட்ச் அண்ட்ராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் உடன் இணைந்து வரும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஜெம் ஸ்மார்ட்வாட்ச் மியூசிக், ஃபோன் கால்கள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை கையாள முடியும். ஜெம் ஸ்மார்ட்வாட்ச் நான்காவது காலாண்டில் wearable கம்ப்யூட்டிங் உடன் வெளியிடப்பட்டு விற்பனை தொடங்கப்பட உள்ளது என்றும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான வளைந்த பட்டரிகள் அறிமுகம்!





LG நிறுவனமானது மீள்தன்மை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளமை தெரிந்த செய்தியே.



இந்நிலையில் அவ்வாறான கைப்பேசிகளுக்கான வளைந்த பட்டரிகளையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது. 



இவை LG நிறுவனத்தின் பட்டரிகளை உற்பத்தி செய்யும் பிரிவான LG Chem இனால் வெளியிடப்பட்டுள்ளது. 



இந்த பட்டரிகள் LG G2 ஸ்மார்ட் கைப்பேசியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


உங்கள் பேஸ்புக் Account- ஐ எப்படி பாதுகாப்பாக வைப்பது?


இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரிடமும் இருக்கும் அக்கவுன்ட் எது என்றால் அது பேஸ்புக் தான். சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும். பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். 



மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர். இதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு, உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக் தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர். நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.


பேஸ்புக் பிளேசஸ் இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.

 

பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம்.

யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் (Profile) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர். முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம்.

எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lockஎன்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் (Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ளCustomize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.

அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா?

பேஸ்புக் தளத்தில் விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும்.

பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.

அப்ளிகேஷன்களுக்குத் தடா:

பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applicationsஎன்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.

அணுகுவதற்குத் தடை:

 உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites. C[S Edit your settings. இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.

இறுதி நடவடிக்கை:

பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும். Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top