.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 15 November 2013

துடைக்கும் துண்டு பளிச்சென்று மின்னுவதற்கு, இதோ சில எளிய வழிகள்!!!

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் துண்டு. இத்தகைய துண்டை புதிதாக வாங்கி, ஒரு மாதத்திற்கு பின் பார்த்தால், அதனை எப்போது வாங்கினோம் என்று யோசிக்கும் வகையில் துண்டில் அழுக்கு மற்றும் கறையானது படிந்திருக்கும். இத்தகைய துண்டானது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதிலும் உடலை துடைக்கப் பயன்படுத்தும் துண்டாகட்டும் அல்லது சமையலறையை சுத்தம் செய்ய பயன்படும் துண்டு ஆகட்டும், எதுவானாலும், இவற்றில் படியும் கறைகள் மற்றும் அழுக்குகளைப் போக்குவது என்பது கடினமான ஒன்று.

அதிலும் அத்தகைய கறைகளைப் போக்க பெரும்பாலானோர் பின்பற்றும் ஒரு செயல் தான், சுடு தண்ணீரில் துண்டை ஊற வைத்து, சோப்பு போட்டு பிரஷ் கொண்டு தேய்த்து துவைப்பது. இருப்பினும், சில நேரங்களில் துண்டில் உள்ள கறைகள் அவ்வளவு எளிதில் நீங்காமல் இருக்கும். அதுமட்டுமின்றி, இவ்வாறு தேய்ப்பதால் துண்டில் இருந்து நூலானது வெளிவர ஆரம்பிக்கும்.
ஆகவே துண்டு பாழாகாமல் இருக்கவும், துண்டில் உள்ள கறைகளை எளிதில் போக்கவும் ஒருசில எளிய வழிகளை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன் படி துண்டை சுத்தம் செய்து பாருங்கள்.

சுடுநீர்

சில நேரங்களில் புதிய துண்டு நீரை உறிஞ்சாமல் இருக்கும். அத்தகைய துண்டை சுடுநீரில் 25 நிமிடம் ஊற வைத்து அலசினால், துண்டு தளர்ந்துவிடும். அதுமட்டுமல்லாமல், அழுக்கு அதிகம் உள்ள துண்டாக இருந்தால், சுடுநீரில் நன்கு ஊற வைத்து, கைகளாலேயே தேய்த்து துவைத்தால், அழுக்கு போவதோடு, துண்டும் பாழாகாமல் இருக்கும்.

  
டிடர்ஜெண்ட்

வேண்டுமெனில், சுடு தண்ணீரில் சோப்புத்தூள் போட்டு கலந்து, அக்கலவையில் துண்டை நன்கு 30 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் சோப்பு போட்டு நன்கு துவைத்தால், அழுக்கு நீங்கிவிடும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா கொண்டும் துண்டில் உள்ள கறைகளைப் போக்கலாம். அதிலும் நிறம் மாறி உள்ள வெள்ளை நிறத் துண்டை, பேக்கிங் சோடா பயன்படுத்தி துவைத்தால், வெள்ளை நிறத் துண்டை பளிச்சென்று மாற்றலாம்.

வினிகர்

வினிகர் கூட கறைகளைப் போக்க உதவும் ஒரு சூப்பரான பொருள். அதற்கு நீரில் வினிகரை ஊற்றி, அதில் கறையுள்ள துண்டை ஊற வைத்து துவைக்க வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. அதிலும் சோப்பு நீரில் சிறிது எலுமிச்சை சாற்றினை கலந்து, கறை படிந்த துண்டை ஊற வைத்து துவைத்தால், கறை நீங்குவதோடு, துண்டும் நல்ல மணத்தோடு இருக்கும்.

உப்பு

பெரும்பாலான மக்கள் வெள்ளை நிற துண்டைத் தான் பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக வெள்ளை நிற துண்டில் உள்ள கறைகளைப் போக்குவது என்பது கடினம். ஆனால் அந்த வெள்ளைத் துண்டை உப்பு பயன்படுத்தி துவைத்தால், துண்டில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி துண்டு சுத்தமாக இருக்கும்.

ஃபேப்ரிக் சாஃப்ட்னர்

மேற்கூறியவாறெல்லாம் துண்டை துவைத்தப் பின்னர், துண்டில் நல்ல நறுமணம் இருக்க வேண்டுமெனில், துண்டை துவைத்த பின்பு, நீரில் சிறிது ஃபேப்ரிக் சாஃப்னரை கலந்து, அந்த நீரில் துண்டை நனைத்து பிழிந்தால், துண்டு நன்கு மணத்துடன் இருக்கும்.


0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top