.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 25 September 2013

ரஜினியின் பன்ஞ் டயலாக் புதிய படத்தின் தலைப்பானது!



ரஜினியின் பன்ஞ் டயலாக் புதிய படம் ஒன்றிற்கு தலைப்பாகிவிட்டது.
ஒரு சமயத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி போன்ற பிரபல நடிகர்கள் நடித்த படங்களின் தலைப்பைதான் அப்படியே புதிய படத்திற்கும் தலைப்பாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது அந்த நிலை மாறி வருகிறது என்று சொல்லலாம். 


ஆமாங்க, அதற்கு பதிலாக முந்தைய படங்களில் வரும் டயலாக்குகளை தேடிப் பிடித்து அதனை புதிய படத்திற்கு தலைப்பாக சூட்டி வருகிறார்கள். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் டிரன்ட். அந்த வகையில் வருத்தப்டாத வாலிபர் சங்கம், நண்பேண்டா, படங்களைத் தொடர்ந்து ரஜினியின் பன்ஞ் டயலாக் புதிய படம் ஒன்றிற்கு தலைப்பாகிவிட்டது. அதாவது, பாபா படத்தில் ரஜினி பேசிய “கதம் கதம்” (முடிஞ்சது முடிஞ்சு போச்சு) என்ற டயலாக்தான் ஒரு படத்துக்கு தலைப்பாகி இருக்கிறது. 


இந்தப் படத்தை பழம்பெரும் தயாரிப்பாளரும், திரைக்கதை வசனகர்த்தாவுமான தூயவனின் மகன் பாபு.தூயவன் இயக்குகிறார். இதில் நந்தா, ஒளிப்பதிவாளர் நடராஜ் இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். ஷாரிகா நாயகி. தாஜ்நூர் இசையமைக்கிறார். ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் தான் இயக்கும் முதல் படத்துக்கு அவருடைய பன்ஞ் டயலாக்கை தலைப்பாக வச்சிருக்கேன் என்கிறார் இயக்குனர்.
 

1 comments:

Manimaran said...

USEFULL INFO..

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top