.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 25 September 2013

ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து:: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற ஏற்பாடு!


ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ் இந்திய மக்கள் தங்களை பதிவு செய்வதை ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணையம் கட்டாயம் ஆக்கவில்லை. அரசு திட்டங்களின் பயனாளிகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததையடுத்து ஆதார் அட்டை வழங்கும் ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்கு வகை செய்து பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படுகிறது.


sep 25 -aadhar

 



இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் 12 இலக்க எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்காக நந்தன்நிலகேணியை தலைவராகக் கொண்டு ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் கோடியில் ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.அரசின் சேவைகள், மானியங்கள், சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனால் ஆதார் அடையாள அட்டையைப் பெறுவதற்காக அதற்கான மையங்களில் மக்கள்கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.


இந்த வழக்குகள் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, அரசின் மானியங்கள். சலுகைகள், சேவைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் ஆக்கக்கூடாது என நீதிபதிகள் பி.எஸ். சவுகான், எஸ்.ஏ. பாப்டே உத்தரவிட்டனர். இது மத்திய அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணைய மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஏற்கனவே கடந்த 2010–ம் ஆண்டு ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா, 2010 டிசம்பரில் மேல்–சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பாரதீய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழுவின் (நிதி) பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இந்த நிலையில் பாராளுமன்ற விவகாரங்கள் துறை ராஜாங்க மந்திரி ராஜீவ் சுக்லா, டெல்லியில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ஆதார் அட்டை தொடர்பாக நேற்று சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–வரவுள்ள பாராளுமன்ற குளிர்காலக்கூட்ட தொடரின்போது இந்திய தேசிய அடையாள ஆணைய மசோதா–2010 (ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணைய மசோதா) கொண்டு வருவோம். சில திருத்தங்கள் செய்வதற்காக இந்த மசோதா தற்போது பாராளுமன்ற நிலைக்குழுவால் திட்டக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் விரைவில் அதை மத்திய மந்திரிசபை கூட்டத்தில் வைப்போம். குளிர்காலக்கூட்ட தொடரின்போது அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.


ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ் இந்திய மக்கள் தங்களை பதிவு செய்வதை ஆதார அடையாள அட்டை வழங்கும் ஆணையம் கட்டாயம் ஆக்கவில்லை. அரசு திட்டங்களின் பயனாளிகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும்.ஆதார் அடையாள அட்டை ஒருவரின் அடையாளத்தை காட்டுகிறது. உறைவிட சான்றாக பயன்படுகிறது. ஆதார அடையாள அட்டை பெறுவது தாமாக மேற்கொள்ள வேண்டிய ஒன்றுதான். கட்டாயம் அல்ல”என்று அவர் கூறினார்.


Govt plans to give aadhaar legal weight

*********************************** 

A day after questions were raised in the Supreme Court over the legality of the Aadhaar project, the government on Tuesday fast-tracked a draft bill to give legal backing to the Unique Identification Authority of India (UIDAI) that issues the 12-digit number.The court had said no person should be denied welfare benefits or services for not possessing the unique identification number in what is being seen as set back to the UPA’s showpiece direct transfer cash scheme in an election year.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top